Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. 🤣 ஆனால் தமிழை முடிந்தளவு எழுத்து பிழை விடாமல் யாழில் தட்டச்சு செய்யத்தெரியும்🤣.
  2. நானும் வீடியோவை பார்க்கவில்லை. இணைத்த @valavan பார்தாரோ அல்லது கவர்சிகரமான தலைப்பை பார்த்து விட்டு பார்காமலே இணைத்தரோ தெரியவில்லை. @குமாரசாமிகு -சா அண்ணை போன கிழமை எனக்கு சொன்னவர் வீடியோவை பார்க்காமல் கருத்து சொல்ல கூடாது என. நான் வீடியோவை ஒட்டி கருத்து சொன்னேன். அதற்கு வீடியோ பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும் பெரிய மனுசன் சொன்னதால் 30 நிமிட வீடியோவை பார்த்து பின் கருத்து எழுதினேன். ஆகவே அவர் கட்டாயம் வீடியோவை ஒரு செக்கனும் விடாமல் பார்த்து விட்டுத்தான் கருத்து எழுதி இருப்பார். ஆனால் நீங்கள் எல்லாரும் ஒரு பெரிய பொயிண்டை மிஸ் பண்ணுவதாக எனக்கு படுகிறது. அது…. டிரம்ப் சொன்னது - அமெரிக்காவில் பிறந்தாலே அமெரிக்க குடியுரிமை கிடைக்கும் என்ற சட்டத்தை மாற்றப் போவதாக. அமெரிக்காவில் பெற்றாருக்கு வதிவிட அனுமதி இருந்தாலும், இல்லாத போதும் பிள்ளை அமேரிக்காவில் பிறப்பின் அது அமேரிக்க குடி என்பது சட்டம். அநேக ( வேறு எந்த -பிழை திருத்தம், கீழே @நிழலி சொன்னதை பார்க்கவும்) மேற்கு நாடுகளில் இப்படி இல்லை. சட்டவிரோத குடியேறிகளின் பிள்ளைகளும் இமிகிராசனை பொறுத்தமட்டில் சட்டவிரோத குடியேறிகளே. அண்மைகாலம் வரை அயர்லாந்திலும் அமெரிக்காவை போல சட்டம் இருந்தது ஆனால் இதை 2005 இல் நீக்கினர். இதைத்தான் டிரம்ப் நீக்குவதாக கூறினார். ஏலவே naturalisation மூலம் அமெரிக்க குடிமக்கள் ஆகிவிட்ட, சுந்தர், நாதெல்லா, போன்ரோரை அல்ல. அவர்கள் சட்டபூர்வமாக அமெரிக்கர்களாக மாறிய தற்போதைய அமேரிக்க பிரசைகள்.விவேக் பிறக்கும் போதே அமெரிக்க பிரசை. இவர்கள் பிரசாஉரிமையை பறிப்பதாக டிரம்ப் கூறவில்லை. அதே போல் இவர்கள் பிள்ளைகளும் பிறக்கும் போதே அமேரிக்கர்தான். இப்போ அமேரிக்காவில் இருக்கும் இந்தியர் கூட, போதுமான வருடங்களை அங்கே சட்டபூர்வமாக கழிக்கின் அவர்களுக் அமேரிக்க பிரசா உரிமைக்கு விண்ணப்பிக்கலாம். இவை எதையும் டிரம் நிறுத்தபோவதாக சொல்லவில்லை. அவர் சொன்னது அமேரிக்காவில் பிறக்கும் குழந்தை எல்லாம் தானியங்கியாக அமேரிக்கன் பிரசை ஆகும் என்ற சட்டத்தை மாற்றுவேன் என்பதை மட்டுமே. ஆனால் இதுக்கு கூட அரசியலமைப்பை மாற்ற வேண்டி வரும். https://oklahomavoice.com/2024/12/10/dc/despite-doubts-on-legality-trump-pledges-to-sign-order-revoking-birthright-citizenship/
  3. இது மேற்குலகின் வெற்றி அல்ல. இது முழுக்க முழுக்க துருக்கியின் வெற்றி. புட்டின், ஆசாத்தின் தோல்வி. இஸ்ரேல் வெளுத்து வாங்குவது, இந்த புதிய சிரிய அரசின் கைக்கு கனரக ஆயுதம் போனால் பின்னாடி தனக்கு அது ஆபத்தை தரும் என்பதால். ஈராக்கில் அமேரிக்க படைகள் புதிய இடைக்கால அரசை உருவாக்கின. இங்கே வெளியார் இல்லாமல் அவர்களே உருவாக்குகிறனர். ஆகவே லிபியாவுடனான ஒப்பீடே அதிக பொருத்தம். உங்களை போலவே, ஈராக், லிபியா போல் சிரியாவும் சின்னாபின்னமாகும் (இப்போதும் ஒன்றும் சிறப்பாக இல்லை) என்பதே என் எதிர்வுகூறலும்.
  4. அதான் சொன்னேனே free at the point of delivery ஐ சுருக்கி free என்கிறார்கள். நிச்சயமாக இது பிழை. வேணும் என்றால் இன்னொரு பகுதிக்கு ரோடு போடாமல் என் அதிகாரத்தை பாவித்து அந்த பணத்தை உங்கள் பகுதிக்கு ரோட்டு போட பாவித்தேன் என சொல்லலாம். இவை எவையும் சரியான பதங்கள் அல்ல. ஆங்கிலத்தில் state-funded என்பார்கள். அரச-செலவில் கல்வி, அரச-செலவில் மருத்துவம் என்பது சரியாக இருக்கும். இப்ப உங்களுக்கு என்ன அண்ணை பிரச்சனை🤣? ஆரம்பத்தில் இவ்வாறான பணம் அறவிடா திட்டங்களே கூடாது என்றீர்கள். இப்போ திட்டம் இருக்கலாம் அதை இலவசம் என்பதுதான் பிழை என்பது போல் எழுதுகிறீர்கள்.
  5. அண்ணை…நாங்களும் national insurance என்று கட்டுகிறோம். ஜேர்மனியில் பிறப்பில் இரெண்டு காலும், கையும் இல்லாத ஒருவரை நீ காப்புறுதி கட்டவில்லை எனவே தெருவில் நில் என்றா விடுவார்கள். இல்லை - உங்களை போன்றோர் கட்டும் காசை வைத்து அவருக்கும் உங்களுக்கும் சேவை வழங்குவார்கள். இங்கே பென்சனுக்கும் வரி அடிப்பார்கள். உழைக்கும் போது வருமான வரி + மேலே சொன்ன காப்புறுதி. உங்கள் boomer generation கட்டியது குறைவு. எங்கள் தலைமுறை எடுக்கும் வருமானத்தில் 30-40 45 வீதம் வரை வரியாக கட்டுகிறோம். மாச கடைசியில் வயிறு ஏரிந்தாலும் ஒரு மேம்பட்ட சமூகத்தில் வாழ கொடுக்கும் விலை என சமாதானம் அடைவதை தவிர வேறு வழியில்லை. பிகு ஜேர்மனியிலும், யூகேயிலும் சோசல் காசில் உழைக்காமல், கொடுப்பனவு, இலவச வீட்டில் வாழ்ந்தவர்களை எனக்கு தெரியும் - ஆகவே இந்த நாடுகளில் இலவசம் இல்லை என்பது சரி அல்ல. வரி கட்டும் எமக்கு இலவசம் இல்லை. நாம் பாவிப்பதை விட அதிகமாக கொடுக்கிறோம். ஆனால் வரி கட்டாதவர்கு இலவசம்.
  6. ஏனைய இலங்கையர் போலவே அவர்களுக்கு கல்வி, மருத்துவம் வழங்கபடுகிறது. இலங்கையில் குடியேற்ற திட்டங்கள், சேரி மாற்று திட்டங்கள் தவிர இலவச வாழிடம் அல்லது வாழிட கொடுப்பனவு எவருக்கும் இல்லை (housing benefit). தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பலர் இருப்பதே தோட்டத்துக்கு சொந்தமான லயன் வீடுகளில். ஆகவே இது ஒருவகை இலவசம்தான். அவர்களுக்கு சம்பளம் போதாது, வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும் என்பது மிக நியாயமான அடிப்படை கோரிக்கை என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் இது இலவசங்களை அதிகரிக்க வேண்டும் என்போர் சொல்ல வேண்டியது. நீங்கள் அல்ல.
  7. கடனை நாடுதான் அடைக்க வேண்டும். ஆகவே மக்களுக்கு தொடர்பு உள்ளது. கடன் இல்லாத நாடுதான் தன் மக்களுக்கு நலத்திட்டங்களை கொடுக்க வேண்டும் என்றால் - ஜேர்மனி உட்பட உலகில் எந்த நாடும் நலதிட்டங்களை செயல்படுத்த முடியாது. உங்களுக்கு வீட்டு, வாகன கடன் இருப்பதால் பிள்ளையளுக்கு நல்ல உடுப்பு வாங்கி கொடாமல் விடுவதில்லைத்தானே? வரியிறுப்பாளருக்கும், வரிகட்டும் வசதி இல்லாதவருக்கும் இலவசம். இல்லாதவருக்கும் சேர்த்து இருப்பவர் வரியாக கட்டுவார். இதுதான் வரி வகுப்பின் அடிப்படையே. மேலே சொன்னது போல் இது இலவசம் அல்ல, சேவை பெறும் தறுவாயில் இலவசம்.
  8. இதை ஆங்கிலத்தில் free at the point of delivery என்பார்கள். அதாவது சேவை வழங்கும் தறுவாயில் இலவசம். ஜேர்மனியிலும், யூகேயிலும் அரச மருத்துவ சேவை இந்த அடிப்படையில்தான் நடக்கிறது. அதாவது தனிமனிதர்களி வரி அல்லது காப்புறுதிவாங்கி, அதை வைத்து தேவைப்படும் சகலருக்கும், சேவை வழங்கும் போது (at the point of delivery) இலவசமாக வழங்கப்படும். இலங்கையிலும் இப்படித்தான். வரிப்பணம்+கடன்+உதவிகள் கொண்டு, at the point of delivery கல்வியும், மருத்துவமும் இலவசமாக கொடுக்கப்படுகிறன.
  9. இல்லை. உங்களுக்கு வாழ்க்கை சுட்டெண் பற்றி தெரிந்திருக்கும். இப்போ இதை மனித முன்னேற்ற சுட்டெண் என்பார்கள். Human Development Index. இதில் முன்னுக்கு நிற்பது பின்லாந்து போன்ற நாடுகள். இலங்கை ஒப்பீட்டளவில் பராவாயில்லை. காரணம்? இலவச கல்வி, இலவச மருத்துவம், இத்யாதிகள். இவை இல்லாவிட்டால் பாகிஸ்தான் போல இருந்திருக்கும் இலங்கை. சுட்டெண் பற்றிய தகவல் கீழே. இதில் தெற்காசியாவில் பச்சை நிறத்தில் உள்ள ஒரே நாடு இலங்கை. மற்றும் மாலதீவு. https://en.m.wikipedia.org/wiki/List_of_countries_by_Human_Development_Index
  10. நீங்கள் இங்கே சொல்வதும் நான் அதற்கு மேலே சொன்னதும் இரெண்டுமே ஜேர்மனி முன்னேறியதன் பின்னால் உள்ள சூழமைவுதான். அதே போல் இலங்கை பின்னடைந்தமைக்கு அரசியல்வாதிகள் பெரும் காரணம். ஆனால் இந்தியா போன்ற நாடுகள் இலங்கையை சின்னாபின்ன படுத்தியமை போல அமெரிக்கா ஜேர்மனியை சின்னாபின்ன படுத்தவில்லை. 2ம் உலக யுத்தத்தின் பின் மேற்கு ஜேர்மனியை நல்வழி படுத்துவதில், தூக்கி விட்டதில் அமெரிக்காவின் பங்கு கணிசமானது. துரதிஸ்டவசமாக அப்படி ஒரு உதவி இலங்கைக்கு கிடைக்கவில்லை. இலங்கை சீரழிந்தமைக்கு இதுவும் ஒரு காரணம். உங்கள் முன்னைய கருத்துக்கு திரும்பி வந்தால் - “இலவசங்கள்” அல்லது “நலத்திட்டங்கள்” வளர்ந்த, வளர்முக நாடுகள் அனைவரும் செய்வதுதான். இதை செய்யும் பணம் எங்கே இருந்து வருகிறது என்பதை வைத்து இந்த திட்டங்கள் ஒழிக்கப்பட வேண்டும் என கூறமுடியாது🙏.
  11. இன்னொரு விசயம் @குமாரசாமி அண்ணை, நீங்கள் மேற்கை போல அல்ல, ரஸ்யா கூட்டாளிகளை கைவிடாது என்ற தொனிப்பட எழுதினீர்கள். 1989 இல் ஆப்கானிஸ்தானில் ரஸ்யா என்ன செய்தது என்பதை மறந்துவிட்டு. ஆனால் இப்போ?
  12. ராணியோ, கூனியோ யூதருக்கு எவரும் பொருட்டல்ல. அவர்களின் இருப்பை தக்க வைப்பதே முதன்மையான கொள்கை. மீதி எல்லாம் இரெண்டாம்பட்சமே.
  13. சிலர் ஊரறிந்த கள்ளர். சிலர் நசுக்கிடா கள்ளர். ஆனால் சூழமைவு என்று ஒன்றும் உள்ளது. எதையும் தனியே வெற்றிடத்தில் வைத்து பார்க்க முடியாது.
  14. நீங்கள் தனியே எழுதுவதோடு மட்டும் நில்லாமல் மற்றையவர் எழுதுபவற்றை வாசிக்கவும் வேண்டும் என்பது என் பணிவான விண்ணப்பம். இங்கே உக்ரேன் ஆதரவாக எழுதும் எவரும் அமெரிக்கா பாசத்தின் உறைவிடம் என்றோ உக்ரேனை எப்போதும் கைவிடாது என்றோ எழுதியதில்லை. நாம் எழுதும் சமயத்தில் அமரிக்கா ஆப்கானை கைகழுவிய ஈரம் கூட காயவில்லை. ஆகவே அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சிக்குவரின் உக்ரேன் பாடு கஸ்டம்தான் என்பதை இங்கே உக்ரேன் ஆதரவாளர்கள் பலரும் பலதடவை எழுதியுள்ளனர். அதுதான் நடக்கிறது. அதே போல் ஆக்டோபர் 2023 இல் காசா போர் ஆரம்பமாக முதலே @வாலி இது மத்திய கிழக்கில் எப்படி எதிரொலிக்கும், என்ன நடக்கலாம் என்பதையும் சொல்லி இருந்தார். அவர் சொன்னது போலவே ஹாமாசின் முதுகெலும்பு உடைக்கப்பட்டுள்ளது. ஹிஸ்புலாவின் பல்லு புடுங்கபட்டுள்ளது, பக்கத்தில் இருந்தும் அசாத்தை காப்பாற்ற முடியாதவாறு ஈரான் முடக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவாவது அறிவித்து விட்டு ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியது, புட்டின் வெட்ககேடாக கையறு நிலையில் சிரியாவில் நிற்கும்படி ஆகியுள்ளது. ஆகவே கண்ணை மூடி கொண்டு உங்கள் மேற்கு வெறுப்பை மந்திர உச்சாடனம் செய்யாமல் - ஏனையோர் எழுதுவதை தயவு செய்து வாசியுங்கள்🙏.
  15. பெயர்தான் வேறு வேறே தவிர வல்லூறு அரசு எப்போதும், எங்கும் வல்லூறு அரசுதான். 90 இல் இப்படிதான் இந்தியா வரதராஜபெருமாளுக்கும் செய்தது. ஆனால் இந்த வல்லூறுகளை அடியோடு பகைக்கவும் முடியாது. அப்பவும் அழிப்பார்கள்.
  16. அசாத் ரஸ்யாவுக்கு எஸ்ஸாகி விட்டார். அவரின் படைகள் எல்லை தாண்டி ஈராக்குக்கு ஓடி விட்டன? ஆனால் அவர்கள் வசமிருந்த பலமான இராணுவ தளபாடங்கள் நாளை இஸ்ரேல் நோக்கி திரும்பினால்? இது மட்டும் அல்ல கோலன் குன்றுகளை தனதென அறிவித்ததோடு சிரியாவின் அதி உயர் மலையான Mount Heron ஐயும் இஸ்ரேல் ஆக்கிரமித்து விட்டது. இதில் இருந்து சிரியா, ஈரான் பக்கம் இருந்து வரும் ஆபத்துகளை கண்காணிக்கலாமாம். டமாஸ்கசும் ஆட்டிலறி எல்லைக்குள் வருமாம்.
  17. அமரிக்க அதிபர் தேர்தல் திரியில், டிரம்ப் வெண்ட பின் நான் எழுதியதை வாசிக்கவும்.
  18. அப்ப இனி பாண் தட்டுப்பாடு என்றால் கேக்கும் சாப்பிடமுடியாது.
  19. இந்த இனத்துக்காக நான் படுற துன்ப துயரங்கள் இருக்கே….🤣
  20. வாழ்த்துக்கள். நீங்கள் மட்டும் அல்ல எல்லா நாடுகளும் இப்படித்தான் ஒரு கூட்டு மனோநிலையில் சிந்திக்கிறன. ஜேர்மனியில் - அரசுக்கு வரும் வருவாயில் மக்களின், ஜேர்மன் நிறுவனங்களின் வரி அதிகம். இலங்கையில் - அரசுக்கு வரும் வருவாயில் அந்த நாட்டு மக்கள், நிறுவனங்கள் கட்டும் வரியும் உள்ளது, ஆனால் ஏழை நாடு என்பதால் இது போதியளவு இல்லை. ஆகவே கடனால் வரும் காசும், வெளிநாட்டு தொழிலாளர் அனுப்பும் காசு என்பனவும் சேர்கிறன. ஜேர்மனியை போலவே இலங்கையும் இந்த பொது கைப்பையில் இருந்து பணத்தை எடுத்து தன் மக்களுக்கு கூட்டு மனோநிலையில் செலவழிக்கிறது. பிகு ஜேர்மனியை போல் இலங்கை ஆபிரிகாவில் காலனிகளை வைத்து கொள்ளை அடிக்கவில்லை. ஜேர்மன் பெருநிறுவனங்கள் போல் உலகயுத்தத்தை வைத்து இலங்கை நிறுவனங்கள் ஏதும் கொழுக்கவில்லை. ஜேர்மனிக்கு அமேரிக்கா இட்ட மார்ஷல் பிளான் உதவி (கடன்? பிச்சை?) போல் மிகபெரிய உதவியை இலங்கைக்கு யாரும் செய்யவில்லை. ஆகவே ஜேர்மனி போல் இலங்கை பொருளாதாரத்தில் வளரவில்லை (இது மட்டுமே காரணம் அல்ல). அதற்காக இலங்கை தன் மக்கள் மீது அக்கறை படாமல் இருக்க முடியாதுதானே.
  21. எப்படி எம்மை சிங்களவரோடு ஒற்றுமையாக்க முடியாதோ, அதே போலத்தான் முஸ்லிம்களையும் எம்மோடு ஒற்றுமையாக்க முடியாது. நான் வாங்கோ ஒண்ணுக்கு இருப்பம் என சொல்லவில்லை. தற்போதைய குடிசன பரம்பல் அடிப்படையில் சுயாட்சி அலகுகளை பிரித்து கொள்வோம் என்கிறேன். அவர்கள் வயிற்றில் இருந்து அதிகமாக விழுவது அவர்கள் கெட்டித்தனம். தேவைப்படும் உடல் உறுப்புகள் அவர்களுக்கு ஆளுக்கு ரெண்டு, ரெண்டு இல்லைத்தானே? மிகுதி உங்கள் கெட்டித்தனம்🤣
  22. இலங்கையில் கொடுப்பது மட்டும் என்ன அனுர, ரணில், மைத்திரி, மகிந்த வீட்டு பணமா? ஜேர்மனி பொருளாதாரத்தில் முன்னேறிய நாடு - அதன் கஜானாவை மக்களின், நிறுவனங்களின் வரிப்பணம் நிரப்புகிறது. அதை எடுத்து மக்கள் நலதிட்டங்களுக்கு ஜேர்மனி செலவழிக்கிறது. இலங்கை பொருளாதாரத்தில் பிந்தங்கிய நாடு - அதன் கஜானவை வெளிநாட்டு கடனும், அந்நிய செலாவணியும், உதவிகளும் நிரப்புகிறன. அதை எடுத்து மக்கள் நலதிட்டங்களுக்கு இலங்கை செலவழிக்கிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.