Everything posted by goshan_che
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
தகவல்களுக்கு நன்றி. சமாதான காலத்தில், பத்திரிகையாளர் ஞானி ஒரு பேட்டியில் சொன்னதை என் மனதில் நான் அடிக்கடி நினைத்துக்கொள்வேன். அது இதுதான். 30 வருடங்களில், அப்பழுக்கற்ற தலைவரான பிரபாகரன் தன் மக்களுக்கு கொடுத்த நற் பெறுபேறுகளை விட, மோசமான ஊழல்வாதியான கருணாநிதி தன் மக்களுக்கு கொடுத்த நற்பெறுபேறுகள் அதிகம். திராவிட நாடு கோரிக்கை கைவிடலை, சொந்த நாட்டு விடுதலை போரில் பங்கெடாமல் ஓடி வந்த நாம் பரிகாசிப்பது ஒரு முரண்நகை என்பதற்கும் அப்பால்…. அதன் பின்னால் உள்ள சிக்கலான அரசியலையும், அந்த கைவிடலை ஏற்று கொண்ட மக்களையும் black or white பார்வையுடய நாம் புரிந்து கொள்ளவில்லை என்பதே உண்மை.
-
ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
தகவல்களுக்கு நன்றி. BYD இங்கேயும் முழு வீச்சில் இறங்கியுள்ளார்கள். 0% உம் உண்டு. ஆனால் எனக்கு ஷேப் பிடிக்கவில்லை. JAECOO என ஒண்டு புதுசா வருது. டெஸ்ட் டிரைவ் கேட்டிருக்கிறேன்.
-
ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
ரணில் காலத்தில் குருநாகலவில் VW ஒரு அசெம்பிள் பண்ணும் ஆலை உருவாக்கியே விட்டது என்றார்கள். அது அப்படியே போய்விட்டது. மிக வினோதமான வாகனசந்தை இலங்கையுடையது. 1988 ஆம் ஆண்டு டொயோட்டா டொல்பின் வான் வாங்கும் காசுக்கு இலண்டனில் 2025 புத்தம் புது Dacia Jogger 7 seater வாங்கலாம். வாகன விலைகளை இந்த சைட்டில் போய் பாருங்கள். https://riyasewana.com
-
ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
இல்லை. இலங்கை காசு 5 மில்லியன் எண்டால் அண்ணளவாக £13,000. யூகேயில் ஒரு யாரிஸ் £23,000 க்கு மேல்தான். ஜப்பானில் கூட ஒரு யாரிஸ் கார் brand new இந்த விலைக்கு வாங்க முடியாது என நினைக்கிறேன். இந்தியாவில் இந்திய சந்தைக்கென தயாரிக்கப்படும் டொயோட்டா கிலன்சா 700,000 இந்திய ரூபாய் (£7000, 2.6 மில்லியன் இலங்கை ரூபாய்). https://www.toyotabharat.com/pricelist/
-
ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
ஒரு இலட்சம் = 100,000 Rs ஒரு கோடி = 100 இலட்சம். ஒரு மில்லியன் = 10 இலட்சம். ஒரு கோடி = 10 மில்லியன் ஒரு கோடி = 100x100,000=10,000,000 Rs ஒரு கோடி 10,000,000 Rs = 100 இலட்சம் = 10 மில்லியன். கணக்கு பிழை எண்டால் @ரசோதரன் அண்ணை திருத்துவார்🤣
-
காஸா: அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியது ஏன்? பாலத்தீனர்களை வெளியேறச் சொல்கிறாரா?
வணக்கம் மஹாராஜா, புது உறவோ நல்வரவு வைப்பம் எண்டு பார்த்தால் 2019 இல் இருந்து யாழில் உள்ளீர்கள். ஆனால் இரெண்டு கருத்து, ஒன்று ஜேசு நாதர் பற்றி மற்றையது இது மட்டும்தான் பதிந்துள்ளீர்கள். மஹாராஜா என்பது சொந்த பெயரோ? மேலும் கருத்துக்களோடு இணைந்திருங்கள். விச செடிகளை முளையிலேயே கிள்ள வேண்டும். இல்லாவிட்டால் வளரும் நிலத்தையே நஞ்சாக்கி போடும்.
-
”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
செய்து தரலாம். ஆனால் உங்கள் target audience 90% க்குமேல் சிட்டுகுருவி அல்ல நீல திமிங்கில லேகியம் கூட பயன்படா வகுப்பினர் 🤣.
-
யாழ். சிறைச்சாலையில் வெற்றிகரமாக நடைபெற்ற மாபெரும் இரத்ததான முகாம்!
நல்ல விடயம். ஆனால் ரத்ததானம் கொடுப்பவர்கள் ஏதும் தொற்று இல்லாதவர் என செக் பண்ணும் வழமை இலங்கையிலும் இருக்கும் என நினைக்கிறேன். ஒருக்கா இப்படித்தான் ரத்தம் கொடுக்க போய், கேள்வி கேட்ட போது டயபடீஸ் இருப்பதாக சொல்ல, அது தொற்றும் நோயல்ல எனிலும் எம் கொள்கைபடி உம்மிடம் எடுக்க முடியாது என திருப்பி அனுப்பிவிட்டார்கள். ரத்தம் கொடாமல் திரும்பி வரும் போது ஏனையோர் என்னை பார்த்த பார்வை இருக்கே🤣 ——— கல்யாணம் ஆகாத 90ஸ் கிட்சை கேட்டால் கன்னிகாதானம் என்கிறார்கள்🤣
-
மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று
அன்ரியோடும், தம்பியோடும் நான் எவ்வளவு தன்மையாக நட்போடு பழகுகிறேன் என்பதும், அவர்கள் கலைக்கபட கூடியவர்கள் அல்ல, கலைக்கபடவும் இல்லை என்பதும் நீங்கள் அறியாததல்ல. ஆனால் - என்னை பொறுத்தமட்டில் வடக்கு, கிழக்கு பிரிவினையை அது எழும் சமயங்களில் எல்லாம் தலையில் ஒரு போடு போட்டே ஆக வேண்டும். அது வடக்கில் இருந்தோ கிழக்கில் இருந்தோ எழுந்தாலும். இதே சாக்கை யாழ் மையவாதிகளுக்கும் பாவித்துள்ளேன். ஆணி வேரை புடுங்கி விட்டு மரம் வளர்க்கமுடியாது. ஒற்றுமையின் பெயரில் பிரிவினைவாதத்தை கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. இதே போல ஒரு ஆபத்துதான் ஈழ/தமிழக தமிழர் இடையே சிண்டு முடிந்து விடுவதும்.
-
மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று
போராட்டத்தின் பின் அவர்களின் செயலற்றதன்மையால் நட்டு கழண்ட அரசு என்ற பதத்தை அவர்களுக்கு கொடுத்தவன் நானே. ஆனால் 2009 க்கு முன் உருத்திரகுமாருக்கு கணிசமான பங்களிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் பேச்சுவார்த்தை குழுவில் இருந்தார், TGTE வரைபை தயாரித் experts இலும் ஒருவர். கார்த்தி 2009 க்கு முன் பங்களிக்கவில்லை, ஆனால் போலிக்காவை இனம் காட்டியதில் மிக பெரிய பங்கை வகித்தார். இங்கே நீங்கள் இரெண்டு விடயத்தில் தவறு விடுகிறீர்கள். இங்கே யாரும் தாமாக பெரியார் புகழ்பாடி திரி திறப்பதில்லை. கருத்து கூட எழுதுவதில்லை. சீமான் எம் பின்னால் ஒழிந்து கொண்டு பெரியாரை, திராவிட கொள்கையை தாக்கும் போது, அது எமக்கு பாதகமானது என்பதால் சீமான் மீது தாக்குதல் நடக்கிறது. இரெண்டாவது கீழே உள்ள பதிலில்.
-
மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று
இதில் ஒரு பின்ணனியையும் நான் காணவில்லை. அப்படி ஏதும் பின்ணனியில் இயங்கினால் பெரியாரை பற்றி சீமான் முதலில் மோசமாக கதைக்க தொடங்கிய போதே எதிர்திருப்பார்கள். காலதாமதமாகவேனும் சீமான் முடிந்து விடும் சிண்டு எமக்கு எவ்வளவு பாதகமானது என்பதை கண்ட பின்பே இப்போ எதிர்கிறார்கள். ஈரோடு கிழக்கில் அல்ல அதற்கு முன்பே சீமான் பெரியாரை எதிர்க்க ஆரம்பித்துவிட்டார்.
-
கனடா மீதான வரி விதிப்பு நிறுத்தி வைப்பு: டிரம்பின் இந்த திடீர் மன மாற்றத்துக்கு என்ன காரணம்?
இது உண்மையில் வேலை செய்யுமா? சிலர் சொல்லிறார்கள் - பெற்றோல் மீளவும் நிரப்பிக்கு போய்விடுமாம், காரின் பெற்றோல் டாங்கில் நிரம்பாதாம். வீண் செலவு மட்டுமே என்று. அதனால் முன்பு குறைந்த விலை எண்டால் நானும் உப்பிடி ஆட்டுவதுண்டு, இப்போ நிறுத்தி விட்டேன்.
-
அமெரிக்க வரி: கனடாவின் அதிர்ஷ்டம்
ஒம்…இப்போதைக்கு இது conspiracy theory தான். சந்தர்ப சாட்சியம் கூட இல்லை. ஆனால் நடக்கும் ஒவ்வொரு விடயமும் இதை confirm பண்ணுவதாகவே என் மனதில் படுகிறது. தனியே நாடுகளை சீண்டுவது மட்டும் அல்ல. 1. காசாவை அமரிக்கா எடுக்கும் என்பது பற்றி இன்று சொன்னது - அமெரிக்க இஸ்லாமிய மோதலை இன்னும் கூர்மையாக்கும் 2. எப் பி ஐ முடக்கம் - பட்டேல் நியமனம் - நேரடியாக அமெரிக்க உள்ளக பாதுகாப்பை முடக்கும் செயல். 3. யூ எஸ் எயிட் முடக்கம் - அமெரிக்காவின் உதவி மூலம் உலக நல்லெண்ணத்தை வாங்கும் செயலுக்கு அடி. இலங்கையில் பல செயல்திட்டங்கள் மூடுவிழா காணும். கோவம் அமெரிக்கா மீதே போகும். உலக அளவில் இது நீண்டகால ராஜதந்திர பின்னடைவை தரும். அடுத்து அரச சேவையில் செலவீன குறைப்பு என ஸ்டேர்ட் டிபார்மெண்ட், சி ஐ ஏ யை முடக்குவார் மஸ்க் என நினைக்கிறேன். அதேபோல் நேட்டோ, ஈயூவை உடைக்கும் அல்லது பலமிழக்க செய்யும் நடவடிக்கைகள். நான் சொல்வதை ஒரு சதி கோட்பாடு என நானே ஏற்கிறேன். 4 வருடத்தில் ரஸ்யாவின் உலக ஆளுமை கூடி இருந்தால் நான் சொல்வது சரி, இல்லை எண்டால் பிழை. பிகு 4 வருடத்தின் பின்னும் பதவியில் தொடர டிரம்ப் விரும்புவார், முயல்வார் எனவும் நான் நினைக்கிறேன்.
-
கனடா மீதான வரி விதிப்பு நிறுத்தி வைப்பு: டிரம்பின் இந்த திடீர் மன மாற்றத்துக்கு என்ன காரணம்?
டிரம்ப்பின் இந்த நடவடிக்கைகள் எல்லாமுமே smokescreen. அவர் அதிரடி காட்டப்போவது ரஸ்யா-ஐரோப்பா விடயத்தில்தான். அதற்கான முனோட்டமே கிரீன்லாந்து, கனடா, மெக்சிகோ மிரட்டல்கள்.
-
அமெரிக்க வரி: கனடாவின் அதிர்ஷ்டம்
அதுதான் அவருக்கு புட்டின் இட்ட கட்டளை.
-
இலங்கையின் மிகப்பெரும் தொழிலதிபர் கந்தையா பாலேந்திரா காலாமானார்
உங்கள் வகுப்பில் மோகன் எனும் ஒரு பிரளிகாரர் படித்தாரா?
-
மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று
இது உண்மை கண்டறியும் வழி என நான் எப்போதும் கூறவில்லையே அண்ணை? முன்பே சொல்லி உள்ளேன் - இங்கே ஒரு அன்ரி வருவா - கருணாவுக்கு ஆதரவாக எழுதுவா - மிச்சம் எல்லாரையும் குறைசொல்லி விட்டு சாக்கோடு சாக்காக கருணாவின் அரசியலை முன் தள்ளுவா - அவவிடமும் அந்த விடயத்தில் சாக்குத்தான் என் பதில், இன்னுமொரு நல்ல தம்பி வருவார் - தேசிக்காய்கள், புரொக்சிகள் என்பார் ஆனால் - பிள்ளையான் கருணாவை முன் நிறுத்துவார் - இந்த விடயத்தில் என் அவர் சார்பான அணுகுமுறை சாக்குத்தான், இந்த இரெண்டு இடத்திலும் நான் எழுதியவை உங்களுக்கு இனித்தது. ஆனால் சீமான் விடயத்தில் அதே அணுகுமுறை கசக்கிறது. ஆனால் என் அணுகுமுறை எப்போதும் ஒன்றேதான். ஈழத்தமிழர்களின் நீண்டகால இருப்புக்கு - ஈழத்தில் வடக்கு, கிழக்கு என எம்மை பிரிப்பதும், இந்தியாவில் தமிழ்நாட்டு மக்களுக்கும் எமக்கும் சண்டையை மூட்டி விடுவதும் மிக ஆபத்தானது. இவ்விரு விடயங்களை யார் செய்தாலும், செய்வதை ஆதரித்தாலும் நானும், சாக்கும் தயாராகவே இருப்போம்.
-
மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று
இது ஒரு டெலிகேற் பொசிசன் அண்ணை… எல்லாரையிம் சாக்கில் போட கூடாது என்பது சரிதான், ஆனால் இதை பயன்படுத்தி கள்ளரும் சாக்கில் இருந்து தப்பி விடுவார்கள். ஆகவே இதற்கு நான் ஒரு பொறிமுறையை கண்டு பிடித்துள்ளேன். அதுதான் விடயம்-சார் அணுகுமுறை. Issue based approach. உதாரணமாக சீமான் ஆதரவு - என்பது விடயம். அதில் யார் சீமான்-ஆதரவு நிலை எடுத்தாலும் - முதலில் விளக்கி பார்ப்பது, இல்லை எண்டால் சாக்கில் போட்டு வெளுக்க வேண்டியதுதான்.
-
மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று
2009 முந்திய விடயங்கள் தவறாக எழுதபட்டால் அவை முடிந்தளவு திருத்தப்பட்டுள்ளன. நீங்களும் “நேரம் மிச்சம்” என லைக் போட்டுள்ளீர்கள். மே 2009 ற்கு பின் எனக்கே யார் கள்ளன், யார் நல்லவன் என தெரியாத நிலை -குறிப்பாக புலத்தின் முன்னைநாள் செயற்பாட்டாளர் இடையே. இதில் எவருக்காகவும் பேச முடியாத நிலையில்தான் என்னை போன்ற பொது மக்கள் உள்ளார்கள்.
-
மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று
எப்படி அதை கண்டு கொள்வது… யார் கள்ளன்…யார் நல்லவன் என தெரியாத அளவுக்கு…. குழப்பியடித்து வைத்துள்ளார்கள்…. ஒரு சிலரை நம்பிக்கையானவர் என நீங்களே எழுதினீர்கள்…பிறகு பார்த்தால் அவர்களே போலிகாவை முன் தள்ளிய கள்வர்கள் என தெரிய வருகிறது…. நீங்கள் முகத்தில் வழிந்த ஒரு லோடு சாணியை வழித்து விட்டு வெள்ளையிம் சொள்ளையுமாக வலம் வருகிறீர்கள். இதே களத்தில் போலிக்கா நேரம் பலர் உங்களையே சந்தேகப்பட்டு எழுதினரா இல்லையா? (நான் இன்றும் நீங்கள் மோசமானவர் என நம்பவில்லை, ஆனால் மிக மோசமாக நம்பி ஏமாறுபவர்). இப்படி ஒரு எவரையும் நம்பமுடியாத நிலையில் - நாம் எப்படி பரிதிக்காகவோ, குருதிக்காகவோ கதைக்க முடியும்? 2009 க்கு முன் நடந்த நிகழ்வுகளை திரித்தால், பொய்யாக எழுதினால் - அதை சுட்டலாம், சுட்டியுள்ளோம்.
-
மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று
யாரை சொல்கிறீர்கள் @கிருபன் ஜியையா? அல்லது என்னையா? அல்லது @island ஐயா? மற்றயவர்கள் தம் நிலையை சொல்லுவார்கள். ஆனால் உங்களை போல் எந்த இயக்கதின் வாலாகவும் நான் எப்போதும் இருந்ததில்லை. புலிகள் இருந்த போது பொது நன்மைக்கு குந்தகம் விளைவிக்க கூடாது என அமைதியாய் இருந்தேன். அவர்கள் அழிந்த பின், அவர்களை சாட்டி கொள்ளை அடித்தவர்கள் புலிகளின் பின்னால் ஒழிந்து கொண்டு அரசியல் செய்ய முற்பட்ட போது, கடந்த கால தவறு மீள நடக்க கூடாது எந்த நோக்கில் புலிகளின் மீதான நியாயமான விமர்சனத்தை முன்வைதேன். இது புலிகளை கழுவி ஊத்துதல் அல்ல. புலிகளுக்கு கொடுத்த அதே leverage ஐ வேறு யாருக்கும் கொடுத்து இன்னொரு முள்ளிவாய்காலை எமது மெளனத்தின் மூலம் உருவாக்கி விட கூடாது என்பதால் எழுந்த கருத்துகள் அவை. இப்போ அவற்றை மீள முன்வைக்க தேவையில்லை 15 வருடங்களில் சகலதும் மாறி விட்டது என்பதால் - இப்போ நடப்பு அரசியல் மீது என் பார்வையை முன்வைக்கிறேன். இன்னும் ஒரு முக்கியமான விடயம், இன்னொரு திரியில் எழுதினேன் வாசிக்கவில்லை போலும். சீமான் தனியே புலிகளை வித்தால் - போய் தொலை சனியனே என விட்டு விடலாம், ஆனால் அவர் கெடுதல் செய்வது ஒட்டு மொத்த ஈழ-தமிழக தமிழர் நல்லுறவுக்கு. இதை புலிகளை ஆதரித்த, நியாயமாக விமர்சித்த, கழுவி ஊத்திய எல்லாரும் கேள்வி கேட்கலாம் - ஈழ தமிழராய் இருந்தால் போதும். கட்டாயம் முதல் வெடிக்கு முதல் ஓடி வந்து, புலத்தில் நிண்டு விலாசம் காட்டி, தன் சந்ததியை வளர்த்து கொண்ட புலிவால்களாக தான் இருக்க வேண்டும் என்பதில்லை. இல்லை இந்த வீணாய் போன புலம்பெயர் புதுநாக்குகள் 13 வருடமாய் சீமானை கண்டிக்காமல் - இப்போதாவது கண்டிக்கிறார்களே என்றுதான் சொல்கிறோம். இவர்கள் எல்லாம் ஒரு சால்வைக்கும், பொன்னாடைக்கும் அலையும் கூட்டம் என்பது தெரிந்ததே.
-
மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று
இதை பொய் என யாரும் மறுக்கவில்லையே? ஏன் அண்ணை தேடுவான்? இந்த கூட்டங்கள் எல்லாம் சீமான் தோண்டி விட்ட பூதங்கள் என்றும். இரெண்டு பக்கத்தையும் இயக்குவது இந்திய மத்திய புலனாய்வு என்றும் அப்போதே நான் யாழில் எழுதி உள்ளேனே? அந்த திரிகளில் @Sasi_varnam கூட கருத்துரைத்த நியாபகம்.
-
”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
AI மூலம் எதிர்காலத்தை அறிய நாடவேண்டிய ஒரே நபர்…… ஜோதிகா…சை…ஜோதிட சிகாமணி… கைரேகை கலாநிதி….. உடான்ஸ் சாமியார் MaMa ( master of astrology master of astronomy). இடம்: கிங்ஸ் கிராஸ் ஸ்டேசன் எதிரில், “வடக்கன்ஸ் குட்கா & பீடா கடை” அருகாமையில்.
-
மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று
அப்போ நீங்கள் ஏன் யாழுக்கு வந்து எழுதுகிறீர்கள்? நீங்கள் நாட்டு கத்தல் கத்துவதாலும் எதுவும் மாறாதுதானே? அல்லது ஒரு சில கள உறவுகள் சொல்லுவதற்கு எதிர் கருத்தை எழுதி அவர்களை சீண்டும் ஒரே காரணத்துக்காக யாழில் எழுதுகிறீர்களோ? நீங்கள் செஞசோன்ஸ், மொரட்டுவ அலும்னி, ஆகவே இப்படியான காரணமாய் இராது என நம்புகிறேன். பிகு எறும்பூர கல் தேயும். சிறு துளிதான் பெரு வெள்ளமாகும். இத்தனை வருடங்களாக நாம் ஒரு நாலு பேர்தான் காட்டு கத்தல் கத்தினோம்….ஆனால் அதுதான் இன்று புலம்பெயர் அமைப்புகள் அறிக்கை விடும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறது. புலம்பெயர் இலக்கியவாதிகள், புலிகளின் நியாத்தை பேசியவர்கள், தமிழகத்தில் அறியப்பட்டவர், தமிழக ஊடகங்களுக்கு உண்மையை சொல்லும் நிலையை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் சீமான்-றோ கூட்டு சதியை முறியடிக்க ஒரு கதவு திறந்துள்ளது. கட்டையில் போகும் போது நமக்கு யாரும் எந்த கொடியையும் போர்த்த போவதில்லை, அதற்கு நாம் தகுதியானவரும் இல்லை…… ஆனால் ஒரு நச்சு விதைதை இனம் காட்ட, நசுக்க எம்மால் முடிந்ததை செய்தோம் என்ற நிம்மதியில் கண்மூடுவோம்.
-
”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
புத்தி ரேகை கிழிஞ்சு தொங்குதாம்🤣