Everything posted by goshan_che
-
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
இதன் மூலம் தமிழரசு இந்த இருவரிடமும் இருந்து விடுபட்டால், ரணில் எமக்கு செய்த ஒரே நல்ல விசயமாக அது இருக்கும்🤣
-
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
கொட்டாப்பட்டி போட்டிருக்காரோ என்னமோ🤣 @valavan இவர்களுக்கு குற்றவியல் தண்டனை கொடுக்க, நியாயமான சந்தேகத்துக்கு அப்பால் குற்றம் நிரூபிக்க படல் வேண்டும். இது மிக கடினம். அப்படி என்றாலும் இலஞ்சமாக அனுமதி கொடுத்த ரணில்தான் முதலில் உள்ளே போவார். மகிந்த, ரணிலை உள்ளே போட்டால் அனுரவுக்கு தில் என்பதை நானும் ஏற்பேன். எம் அரசியல்வாதிகளை பொறுத்தமட்டில் ஓரளவு மக்கள் நம்பும் படி ஆதாரம் வந்தால் - அடுத்த தேர்தலில் வாக்குகள் குறையும். தோற்பார்கள் என சொல்லமுடியாது.
-
கிழக்கு மாகாண அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்களை ஆளுனர் நியமித்தார்.
கிழக்கு மாகாணம் எண்டால் மட்டு நகர் மட்டும் அல்ல….கருணாவை ஒவ்வொரு தேர்தலிலும் ஓட ஓட விரட்டும் பட்டிருப்பு, கல்குடா தொகுதிகளும், பிள்ளையானையும் கருணாவையும் ஒன்று சேர விரட்டும் அம்பாறை, திருகோணமலை தேர்தல் மாவட்டங்களும்தான் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஏதோ மட்டகளப்பு தொகுதியில் மட்டும் தோத்த மாரி எல்லோ கதை அளக்கப்படுகுது. பட்டிருப்பில் எப்பவும் அண்ணனுக்கும் தம்பிக்கும் வெளுவைதானே கிடைத்தது🤣.
-
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா கன்னியுரை
மானிட குல மீட்பருக்கு மொழி ஏது🤣
-
இலங்கை நாடாளுமன்றத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம் - விசேட தேவையுடைய நாடாளுமன்ற உறுப்பினரின் கன்னி உரை!
ஒருமுறை ஒரு இலங்கையர், தென்னாபிரிக்கர், பிரித்தானியர் இடையே யாரின் நாடு பெரியது என்ற சர்ச்சை எழுந்து விட்டதாம். பிரித்தானியர் : ஒரு விழிப்புலனற்ற பிள்ளையை நாம் கற்பித்து எம் நாட்டின் உள்ளக அமைச்சர் ஆக்கினோம் என்றாராம். தென்னாபிரிக்கர்: ஒரு கால் இல்லாதவரை நாம் ஒலிம்பிக்கில் ஓட வைத்தோம் என்றாராம். இலங்கையர்: இதென்ன பிரமாதம்…76 வருடமாக மூளை இல்லாதவர்களை நாம் எம் நாட்டின் தலைவர் நிலைக்கு உயர்த்தி வைத்துள்ளோம் என்றாராம். 76 வருடத்தில் ஒரு தேசியபட்டியல் சீட் கூட கொடுக்கவில்லை.
-
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
பாம்பு சாணாக்ஸ்? முதலை சுமன்? ——— விக்கியர் 1 (மேல் மாகாணத்திலும் இன்னொன்றாம் என கதை ஆனால் அவர் இன்னும் ஒத்து கொள்ளவில்லை) 16 எண்டால் எப்படி ஒத்து கொள்வது? கொஞ்சமாவது மானம் ஈனம் இருக்கும்தானே?
-
கிழக்கு மாகாண அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்களை ஆளுனர் நியமித்தார்.
இப்படி எல்லாம் நீங்கள் ஆரூடம் கூறப்படாது. அனுரவுக்கு ஒரு நாலு வருடம் கொடுத்தால் என்ன குறைந்தா போய் விடுவீர்கள்? மேலும்…. சிங்களவர் எப்போதாவது தமிழர்களை ஒதுக்கி இருக்கிறார்களா, இப்போ ஒதுக்க? எப்போதும் தமிழ், சிங்களம், முஸ்லிம் என பாராது - தகுதி அடிப்படையில் பதவி வழங்கும் மனு நீதிச் சோழர்கள் அல்லவா அவர்கள்? நீங்கள் ஏன் இப்படி இனவாதமாக எழுதுகிறீர்கள்? இப்போ இதை நாம் (கருணா, பிள்ளையான், அவர்களின் அடிப்பொடிகள்) எப்படி பயன்படுத்துவோம் என்பதை இருந்து பாருங்கள்👇. நாம் இனி எப்படி எழுதுவோம் என்றால்…யாழ்பாணத்தவர்/ வடக்கு மக்கள் கெட்டிகாரர் என் பி பிக்கு போட்டு தப்பி கொண்டார்கள், ஆனால் கிழக்கு மக்கள் ஒட்டு மொத்தமாக தமிழரசுக்கு போட்டது முஸ்லிம்களுக்கு கிழக்கில் முதன்மை நிலையை உருவாக்கி விட்டது. இந்த ஆபத்தை தவிர்க்க அடுத்த முறை கிழக்கு மக்கள் பிள்ளையான் கருணாவுக்கு போட வேண்டும். எப்படி இருக்கு இந்த தில்லாலங்கடி அரசியல்?
-
கிழக்கு மாகாண அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்களை ஆளுனர் நியமித்தார்.
அதற்கு மாகாணசபை தேர்தல் நடக்க வேண்டுமே. ——— ஒரு தமிழ் செயலாளர் கூட இல்லை? 1. தமக்கு வாக்களிக்காத கிழக்கு தமிழரை ஜேவிபி பழி தீர்கிறது. 2. அடுத்த முறையாவது வாக்கு போட்டால்தான் சலுகை என மிரட்டுகிறது. 3. முஸ்லிம்களுக்கு பதவி கொடுத்து, தமிழரை புறக்கணித்து இனமுறுகலை வலுப்படுத்தி புள்ளி 2 ஐ மேலும் நிறுவுகிறது. 4. சகோதரயாட்ட ஜெயவேவா
-
சிவஞானம் சிறீதரன் அரசமைப்புக் கவுன்ஸில் உறுப்பினராகத் தெரிவு
🤣 ப்பா…சிலேடை அதிருது வாலி சார்🤣
-
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
1. மேற்கு நாடுகளில் வீதியோர சாராய கடைகள் ரொம்ப சாதாரணம் என்பது உண்மைதான். யூகேயில் தமிழ் வியாபாரிகளில், 90% க்கு மேல் கடை வைத்திருப்போர்தான். இந்த கடைகளில் 90% க்குமேல் off licence எனும் சாராயக்கடைகாரார்தான். அதாவது வாங்கி வீட்டில் போய் குடிப்பவருக்கு விற்பவர்கள். கடையில் வைத்து குடிக்க அனுமதிக்க கூடாது. சாராயத்தை விட கெடுதலான சிகெரெட்டையும் கிட்டதட்ட 100% தமிழர் கடைகளில் விற்பார்கள். 2. நீங்கள் சொன்னது போல் கசிப்பு என்று பாம்பு பல்லி பட்டரியை காய்சி குடிச்சு சாகாமல் - இதை குடிச்சு கொஞ்சம் லேட்டாக சாகலாம்தான். 3. மேலே உள்ள காரணங்கள் ஊரிலும் பார் வைப்பது ஏன் கூடாது என சிந்திக்க வைக்கலாம். ஆனால்… 4. ஊரில் இங்கே போல் அளவாக குடிக்கும் கலாச்சாரம் இல்லை (இதிலும் யூகே, ஐரோப்பிய நாடுகளை விட மோசம்). ஊரில் குடி என்றால், வெறிக்க வெறிக்க குடித்து விட்டு, மனுசியை போட்டு அடிப்பது, குடிக்கு அடிமையாகி பிள்ளைகளை நடுத்தெருவில் விடுவது என்பதே குடிமக்கள் கலாச்சாரம் (அநேகர்). ஆகவே டீச்ச்ண்டாக குடியை அணுகாத ஒரு இடத்தில் கண்டமாதிரி கடையை திறப்பது ஆபத்தே. 5. போதைக்கு தமிழ் இளஞர்களை அடிமைபடுத்தும் ஒரு நூதன யுத்தம் எம்மேல் திணிக்கப்படுவதாக பலர் உணர்கிறனர். இதற்கு குறைந்தது சந்தர்ப சாட்சியமாவது உள்ளது, இந்நிலையில் - போதையை எதிர்த்து வேலை செய்ய வேண்டிய அரசியல்வாதிகளே பார் திறக்க உதவி செய்வது - மிக மோசமான வேலை. 6. தலைவரின் படத்தை பேஸ்புக்கில் போட்டாலே கதவை தட்டும் பொலிஸ், நிச்சயம் கசிப்பை கட்டுப்படுத்த முடியும். 7. நான் மது ஒழிப்பு ஆதரவாளன் அல்ல. அது முடியாதவிடயம். ஆனால் தேவையில்லாமல் மது பாவனையை கூட்டும் வேலைகளை அரசியல் தலைவர்கள் செய்ய கூடாது. அது வியாபாரிகளின் வேலை.
-
சிவஞானம் சிறீதரன் அரசமைப்புக் கவுன்ஸில் உறுப்பினராகத் தெரிவு
அரசியலமைப்பு குழு - புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில், இருக்கும் அரசியலமைப்பில் திருத்தம் செய்வதில் ஈடுபடாது என நினைக்கிறேன். இது சில உயர் அரச பதவிகளை (ஐஜி, பிரதமநீதியரசர்) மேற்கொள்ளும் குழு. https://en.m.wikipedia.org/wiki/Constitutional_Council_(Sri_Lanka) சுமந்திரன் ஒரு போதும் இதன் உறுப்பினராக இருக்கவில்லையாம். ஆனால் கொழும்பு சட்ட பீட முன்னாள் பேரா செல்வகுமாரன் நியமன உறுப்பினராக இருந்துள்ளார். அதுக்கு முதலில் பாரிஸ்டர் ஆகோணுமே🤣. https://www.barcouncil.org.uk
-
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
❤️❤️❤️🙏 அருமை.
-
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
🤣 இந்தியாவில் அரிய வகை ஏழைகள், போல் இலங்கையில் அரிய வகை அபலைகள் உள்ளார்கள் போலும்🤣. அபலைகளை முன்னேற்ற ஆயிரம் வழிகளுண்டு…இன்னொரு பெண்ணின் தாலி அறுக்கும் பார்தான் தேவை எண்டில்லை. இதை பற்றிய என் பார்வையை விரிவாக இரவு எழுதுகிறேன். உங்கள் கருத்தில் உடன்பாடுதான்…ஆனால் வட கிழக்கு சூழமைவு வேற என நினைக்கிறேன்.
-
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா கன்னியுரை
கதைப்பார், நன்றாக🤣
-
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
இது இப்போ வெடித்து கிளம்பி இருந்தாலும் - பலகாலமாக நடப்பதுதான். சந்திரிகா காலத்தில் சுரேஷ் மட்டகளப்பில் ஒரு பார் அனுமதியை வாங்கி கொடுத்தார். அதே போல் எரி பொருள் நிலைய அனுமதிகளிலும் இது நடக்கும். உங்களை போலவே நானும் சிவாஜி ரஜனிகாந்த் போல சில “முதலாளிதுவ நடவடிக்கைகள் மூலம் ஒரு சிலரின் வாழ்வையாவது உயர்த்தலாம் என நம்பி போய், பின் நொந்த ஆள்தான்”. எனது முயற்சிக்கு பார் லைசன்ஸ் தேவைப்படவில்லை, ஆனால் பிரதேச சபை அனுமதி தேவைப்பட்டது. அதை எடுக்கும் சமயம் - குடிவைகளை குடிக்க (எடுத்துப்போக அல்ல) உள்ள லைசன்ஸ் எடுத்து தரலாம் என சிலர் அணுகினர். ஆர்வம் காட்டவில்லை ஆனால் விடயங்களை கேட்டறிந்து கொண்டேன். இதைத்தான் விக்கி தன் நியாயமாக சொல்கிறார். யுத்தத்தில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு கொடுத்ததாக. ஆனால் இதில் ஒத்துகொள்ள மறுத்ததை விட பாரிய பிழைகள் உள்ளன. குறிப்பாக வலிந்து எமது சமூகத்தை போதைக்குள் தள்ளும் சூழலில்.
-
நாட்டில் உப்புக்குத் தட்டுப்பாடு?
ஓம் புலம்பெயர் இலங்கை தமிழர்களிடம் உறைப்பு சாப்பிடுவதை ஏதோ சாதனை போல் நினைக்கும் பழக்கம் உள்ளது. சிலர் உறைப்பு குறைவாக சாப்பிட்டால் தமிழ் தன்மை குறைந்து விட்டது போல் ஒரு லுக்கும் விடுவார்கள். உறைப்பு கூட கூட உப்பும் கூடும். யாழ்ப்பாணதில் கே எவ் சி திறந்த நேரம் அங்கே சிலரை அழைத்துப்போனேன். எனக்கு சிக்கன் கருவாடு சாப்பிட்டத்தை போல அந்தளவு வாயில் வைக்க முடியாத உப்பாக இருந்தது. கூட வந்தவர்கள் உப்பு அளவாக இருப்பதாக கூறினர்.
-
நாமல் ராஜபக்சவின் பெயரை பயன்படுத்தி யாழில் நிதி மோசடி
இது அருச்சுனாவுக்கு தெரியுமா🤣
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
மிக சரியான பார்வை. மாவாட்டும் சபை….மன்னிக்கவும் மாவட்ட சபைதான் கிடைக்கப்போகிறது. அதையே டில்வின் போன்றோர் எதிர்க்க எதிர்க்க, மீட்பர் அனுர பிரான் பெரும் பிரயத்தனப்பட்டு வழங்கினார் என முடிப்பார்கள். எங்க பிரிகேட்டுகளும்…மாவட்டம் தந்த மஹா பிரபு என அனுர காலில் விழுந்து பிரளுவார்கள். தேசிய இனம் என்பதோ, காணி உரிமை என்பதோ எவரும் கேட்காதபடி, ஒரே இலங்கையர் கோசம் காதை பிளக்கும். இப்படி எம்மை மட்டகளப்பு, யாழ்பாணம் தேர்தல் தொகுதிக்குள் அடக்கிய பின், குடியேற்றம் அரச, தனியார் முறைகளில் துரிதப்படுத்த பட்டு, இந்த மாவட்டங்களுக்குள் நாம் முடக்கப்படுவோம். யாரும் எதிர்த்து கேட்டால், இனவாதி, பிரதேசவாதி, Xenophobe .
-
மாவீரர் நாள் குறித்து பொய் தகவல்களை பரப்பிய மொட்டு கட்சியின் முக்கியஸ்தர் கைது
ஓம் அண்ணா நீங்கள் சொல்வதில் மாற்று கருத்து இல்லை. யாழ்கள அனுர படையணி தளபதியின் கருத்தை அறியவே அந்த கேள்வி.
-
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
🤣 இதுவாவது பரவாயில்லை. அங்கால அண்ணன் சீமானை, துரைமுருகனை எல்லாம் தம்பிகளே விமர்சிக்க வெளிக்கிட்டார்கள். இனி யாழில் வந்து “காசி யாத்திரை போகும் முன் கவனிக்க வேண்டிய விடயங்கள்” என்ற வகையில் எழுதினால்தான் பொழைக்க முடியும் போல இருக்கு🤣. 🤣 எல்லாரும் நாட்டாமை எல்லோ…அப்படித்தான் இருக்கும்🤣 ஓம் அண்ணை. இதில் ரணில் போன்ற இனவாதிகளுக்கு இரெட்டை இலாபம். 1. இலஞ்சம் கொடுத்து ஆதரவையும் பெற்றாயிற்று. 2. இனி நாம் பையில் போட்ட எலிகள் போல இதைவைத்தே அடிபடுவோம். கவனித்தேன். ——— நன்றி
-
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
🤣. நாளைக்கு வந்து கட்டாயம் பச்சை குத்துவேன் ஐயா. வேற லெவல் கார்ட்டூன். மாட்டினால் சந்தோசம். அப்போதும் எம்பிகள் பொய்குற்றசாட்டு, வழக்கு போடுவேன் என சொல்லிவிட்டு கடந்து போய்விடுவார்கள். ஏலவே எம்பி ஒருத்தர் இப்படி ஒரு அறிக்கை விட்டு, அதை யாழிலும் ஒருவர் காவித்திரிகிறார். பணபரிமாற்றம் அல்லது குறுஞ்செய்திகள் என தக்க ஆதாரத்தோடு மாட்டினால்தான் உண்டு. இல்லை என்றால் ஆதாரம் இருக்கா? என பழைய டிவி விளம்பரம் மாதிரி எம்மையே திருப்பி கேட்பார்கள்🤣.
-
மாவீரர் நாள் குறித்து பொய் தகவல்களை பரப்பிய மொட்டு கட்சியின் முக்கியஸ்தர் கைது
மாவீரர் நாளுக்காக பயங்கரவாத சட்டத்தில் கைதாகிய இரு தமிழர்கள் மற்றும் இலண்டனில் இருந்து போய் விமான நிலையத்தில் கைதான தமிழர் திரியில் உங்கள் தலை கறுப்பையும் காணவில்லை. இவற்றில் உங்கள் நிலைப்பாடு என்ன?
-
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
செய்யலாம்…ஆனால் பார் உரிமையாளர்கள் ஏன் எம்பியை மாட்டி விட போகிறார்கள்? சிபாரிசு மூலம்தான் பெற்றேன் என சொன்னால் இலஞ்சம் கொடுத்த வகையில் அவர்களுக்கு பிரச்சனை. அதே போல் லைசன்சும் காலியாகும். ஆகவே நான் வழமை போல அப்பிளை பண்ணினேன் கிடைத்தது என்று சொல்வதே அவர்களுக்கு சேப்டி. ஓம்…. இதில் செய்தவன் செய்யாதவன் எல்லாரையும் அடிக்கலாம். அடிக்க முடியாத ஒரே ஆட்கள் முந்தைய 3 ஜேவிபி எம்பிகள் மட்டுமே. ஆகவே இதை ஜேவிபி நல்லா இழுத்து இழுத்து படம் காட்டும். அதே போல் நாமும் எமக்கு விருப்பமில்லாத எம்பியை குற்றம்சாட்டியபடியே எமக்கு விருப்பமான எம்பி, ஆதாரம் கேட்டார் இல்லையாம் என பபா மாதிரி யாழில் எழுதி இன்பம் அடையலாம் 🤣.
-
நாட்டில் உப்புக்குத் தட்டுப்பாடு?
ஆங்கில சொல் salary - லத்தின் சொல்லான salarium த்தில் இருந்து வருகிறது. இந்த லத்தின் சொல்லின் அர்த்தம் மாதாந்த கொடுப்பனவு. Salarium என்பது லத்தின் சொல்லான Sal இல் இருந்து வருகிறது. Sal இன் அர்த்தம் உப்பு. ஒரு காலத்தில் மாதசம்பளமக பணமன்றி உப்பே கொடுக்கப்பட்டதா நம்பபடுகிறது. இதே போல் Sal இற்கு வேலை செய்த வீரகள்தான் Soldiers எனவும் சொல்லப்படுகிறது. உப்பு மனித ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியம். உப்பு அளவாக இல்லாதவிடத்து தசை பிடிப்பு ஏற்படும். இதை பேச்சு வழக்கில் குறண்டல் என்போம், எனக்கு விளையாடும் போது அடிக்கடி வரும். அதே போல் குறை இரத்த அழுத்தம் வந்து ஆளை கவிட்டும் விடும். எல்லாமும் அளவோடு தேவை. உப்பிட்டவரை உள்ளவரை நினை🤣
-
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
கிளிநொச்சி பகுதி பிந்தங்கிய பகுதி என்பதால் 16 பெர்மிட்டை போராடி பெற்றுள்னர் என நினைக்கிறேன்.