Everything posted by goshan_che
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
இலங்கை வம்சாவழி என்பதை வரைவிலக்க்கணப்படுத்த முன்னம், இந்திய வம்சாவழி தமிழர் யார் என்பதை வரைவிலக்கணம் செய்வது அவசியம் என நினைக்கிறேன். 1. இலங்கைக்கு 1815 (ஒன்றுபட்ட இலங்கை ஆங்கிலேய ஆட்சி) இன் பின், இந்தியாவில் இருந்து வந்து, குடியேறி வாழ்பவர்களின் சந்ததிகள் இந்திய வம்சாவழி தமிழர்கள் எனலாம். இவர்கள் இலங்கையின் எந்த பகுதியில் வசித்தாலும் - இவர்களின் அடையாளம் இதுவாகவே இருக்கும். இவர்கள் மலையகத்தில் பெருமளவிலும், மேற்கு மாகாணத்தில் குறிப்பிடத்தக்க அளவிலும், இதர தென்னிலங்கை மாவட்டங்களிலும் வசிக்கிறனர். இவர்களில் சிறிய தொகையினர் இனவன்முறை, நாடு கடத்தலில் தப்பிக்க என வடக்கு கிழக்கில் வந்து வாழ்ந்து, பதிவு அடிப்படையில் அந்த மாகாண வாக்காளர்/மக்கள் என உருமாறிவிட்டனர். எனிலும் இவர்களை சமூக பார்வையில் அவர்களை சூழ இருக்கும் இலங்கை வம்சாவழி தமிழ் சமூகம் இன்றும் இந்திய வம்சாவழி என்றே கருதுகிறது. இந்த இந்திய வம்சாவழி மக்கள் பண்பாட்டில் தற்போதைய தமிழ் நாட்டு மக்களின் கண்ணாடி பிரதிகளாக இருக்கிறனர். குறிப்பாக இவர்களின் குல தெய்வ, சிறு தெய்வ வழிபாட்டை, சாதி பெயர்களை குறிப்பிடலாம். 2. இவர்கள் அல்லாத - 1815 க்கு முன்பிருந்தே மூதாதைகள் இலங்கையில் வாழ்ந்த தமிழர்கள் இலங்கை வம்சாவழி. இவர்கள் பண்பாடும், மத அனுஸ்டானங்களும், உணவுகளும், சாதிய முறைகளும் தமிழ் நாட்டு/ இந்திய வம்சாவழி தமிழர்களை விட பெரிதும் வேறுபட்டும், சில இடங்களில் மலையாளிகளோடு ஒத்தும் இருக்கும். இவர்களைத்தான் 1815 க்கு முன் இலங்கையை ஆண்ட ஒல்லாந்தரும், போத்துகேயரும் தமது பதிவுகளில் மலபாரி வசிப்பாளர் Malabari inhabitants என்றனர். இவர்களின் சந்ததியினரே இலங்கை வம்சாவழி தமிழர். யாழ்பாணம், வன்னி, திருமலை, மட்டு-அம்பாறை என இவர்கள் இருப்பது யாரும் அறிந்ததே. பலர் அறியாத விடயம், முந்தல் போன்ற இடங்களில் இன்றும் உள்ளவர்களும், நீர்கொழும்பு-மன்னார் வரையான கடலோரத்தில் ஒரு காலத்தில் தமிழர்களாக இருந்து இன்று கீழ்நாட்டு சிங்களவராக அடையாளம் மாறிய தமிழரும் இலங்கை வம்சாவழியே (1815 க்கு முன்). ஆகவே இவர்களும் ஒற்றை பண்பாட்டில் உள்ளவர் அல்ல. 3. இந்த பகுப்பு வெறும் மூதாதைகள் இலங்கைக்கு வந்த காலத்தின் அடிப்படையிலானது மட்டுமே. ஆங்கிலத்தின் since records began என்பார்கள் - இந்திய வம்சாவழியினர் இலங்கை வந்தது பதிவுகள் ஆரம்பமான பின். இலங்கை வம்சாவழியினர் பதிவுகள் ஆரம்பிக்கும் போதே (when records began) இந்த மண்ணில் வாழ்கிறார்கள் (குளக்கோட்டன், யாழ்பாண அரசு, வன்னிமைகள்). அவர்கள் இலங்கையில் வரலாற்றுக்கு முந்திய காலம் (time immemorial/ pre historic times) தொட்டு வாழும் பூர்வகுடிகளா என்பது இன்னும் விடை கிடைக்காத கேள்வி. ஆனால் திசமாராம தொல்பொருட்கள் - இப்படி இருக்கலாம் என ஊகிக்க வைக்கிறன.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
15ம் இடம் பல பாடங்களை தரும் என்று பாரதியார் சும்மாவா சொன்னார்🤣 (நான் இணை 3ம் இடமாக்கும்🤣)
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
வணக்கம் கொழும்பான். இப்போ வேலைக்கு வெளிகிடுகிறேன். விரிவாக எழுத வேண்டிய விடயம். பின்னர் எழுதுகிறேன்.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
ப்ரோ, 2015 -2024 இடை பட்ட காலத்தில் கொவிட்டில் மாட்டி, கோமாவில் வெண்டிலேட்டரில் ஏதும் இருந்தீர்களா? 2013 மாகாணசபை தேர்தல் முதல் 2017 வரை இவர்களை ஆதரித்தேன் என்பதும், 2017 இல் இவர்கள் மீதான நம்பிக்கை முற்றாக இழக்கப்பட்டது என்பதை யாழில் எழுதி இனி இவர்கள் அரசியலை எதிர்ப்பேன் என எழுதியதும் அல்லாமல் கடந்த 5 வருடமா எதிர்த்தே எழுதி வருகிறேன் என்பதும் உங்களுக்கு புரியவில்லையா? ஏனைய திரிகளில் சுமன் பற்றி நான் எழுதியதை வாசிதீர்களாயின், அவர் தூக்கி எறியப்படவேண்டும் என நான் எழுதியதும், என் அனுர மீதான விமர்சனத்தின் தாற்பரியமும் புரியும். உங்கள் சிந்தனை 2015 இல் அப்படியே stuck ஆகி விடவில்லைதானே?
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
முனீருக்கு தேசிய ஒருமைப்பாட்டு துறை 🤣. இதை விட மன்னார் அண்ட் கம்பெனியில் மனேஜராக போட்டிருக்கலாம்🤣. ஆனால் அருண் - வெளிநாட்டு துறை பிரதி அமைச்சர். ஹெவியான துறை. ஒரு தமிழர் - அடுத்து வெளிநாட்டு அமைச்சராக வர கடுமையாக உழைத்து, இலங்கை மீதான சகல சர்வதேச அளுத்தங்களையும் தவிடு பொடியாக்குவார் என எதிர்பார்கிறார்கள் போலும்.
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
ஒரு வழியாக, கிழக்கு மாகாணத் தமிழருக்கு ஒரு பிரதி அமைச்சர், மலையகத்தமிழருக்கு இரு கபினெட் அமைச்சர்கள் + ஒரு பிரதி அமைச்சர், முஸ்லிம்களுக்கு ஒரு பிரதி அமைச்சர் + பிரதி சபாநாயகர் கிடைத்துள்ளது. 5 எம்பிகள், 2 தேர்தல் மாவட்டங்களை அள்ளி கொடுத்த வடக்கு மாகாணத்துக்கு - குச் நஹி🤣. அதுவும் 3 எம்பிகளை அள்ளி கொடுத்து, புதிய ஒன்றுபட்ட இலங்கையை வரவேற்ற யாழ்ப்பாண தமிழருக்கு…. சூப்பிய பனங்கொட்டை கூட இல்லையாம்🤣.
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
கபினெட் அந்தஸ்து அமைச்சர். இராஜாங்க அமைச்சர். பிரதி அமைச்சர். இதுதான் ஒழுங்கு. இராஜாங்க அமைச்சர் பொதுவாக தன் கீழ் வரும் துறைக்கு முடிவெடுக்கும் அதிகாரத்தை கொண்டிருப்பார். ஆனால், கபினெட்டில் கூட்டு முடிவு எடுப்பதில் பங்கெடுக்க மாட்டார். பிரதி அமைச்சர் - ஒரு கபினெட் அமைச்சரின் கீழ் வேலை செய்வார், அவருக்கு கபினெட் அமைச்சரின் கீழ் வரும் துறைகளில் ஒன்று ஒதுக்கப்படும், ஆனால் அத்துறையின் முடிவு எடுக்கும் அதிகாரம் கபினெட் அமைச்சர் வசமே இருக்கும். பிகு வாதாவூரன் உங்களுக்கு சொல்லவில்லை. பொதுவாக விளக்கினேன்.
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
நன்றி @ரசோதரன் @வாதவூரான்
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
நிச்சயம். அருண் தமிழரா? அருண் என சிங்கள பெயர் இல்லை.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
https://x.com/NewsWireLK/status/1859506987559682327 அருச்சுனாவின் பாரளுமன்ற சர்ச்சை👆
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
200 புள்ளிக்கு மேல் எண்டாலும் வாய்ப்பில்லை அண்ணை🤣
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
இன்னும் எத்தனை புள்ளிகள் வர இருக்கு கந்தப்பு அண்ணை?
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
பார்க்கலாம்…நான் லூசா…பேயா எண்டு எழுதி போடுவன் அதான் யோசிக்கிறன்🤣
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
29 பிரதி அமைச்சர் பட்டியல் வெளியானது. 1 முஸ்லிம். 1 திருகோனமலை மாவட்ட எம்பி அருண் ஹேமச்சந்திர - இவர் தமிழர் என நினைக்கிறேன். ஹேமச்சந்திரன் என்றால் கூப்பில் உக்கார வைத்திருப்பார்கள். ன் ஐ தூக்கியதால் தப்பித்தார்🤣. @MEERAஇவர் பற்றிய தகவல் ஏதும் ?
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
இதை யாராவது அருச்சுனாவுக்கு வட்சப் பண்ணுங்கப்பா… அருச்சுனாவுக்கு யாழில் ஒரு திறந்த மடல் எழுதலாம் என நினைக்கிறேன்…. ஆனால் என்னை விட @தமிழ் சிறி எழுதினால் பொருத்தமாக இருக்கும். நானும் நிச்சயம் என் கருத்தை எழுதுவேன். அதை சமூகவலை தளங்கள் மூலம் அவர் கருத்துக்கு எடுத்துப்போய் பார்க்கலாம். சுயநலமாக சிந்திக்காமல் மயூரன் போன்றோருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் - சிலதை உரிய வகையில் எடுத்து சொன்னால் மாற்றிகொள்ள கூடும். முயன்றுதான் பார்க்கலாமே.
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
இல்லை…. 1. ஜனாதிபதி 2. பிரதமர் 3. சபாநாயகர் 4. பிரதம நீதி அரசர், எதிர்கட்சித்தலைவர், கபினெட் அந்தஸ்து மந்திரிகள், மத்திய வங்கி ஆளுனர், பீல்டு மார்ஷல்கள் 5. மாகாண ஆளுனர்கள், பிரதி அமைச்சர்கள், பிரதி சபாநாயகர் - இப்படித்தான் இந்த வரிசை போகும். https://en.m.wikipedia.org/wiki/Sri_Lankan_order_of_precedence
- நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
-
புதிய நாடாளுமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம்!
நாட்டின் அடிப்படையையே மாற்றி விடுவார்கள் என நினைக்கிறேன். ஜேவிபி பற்றிய என் கணிப்பு சரியாகின் இப்போ நடந்திருப்பது ஒரு புரட்சி. ஆனால் தேர்தல் மூலம் இதை சாதித்துள்ளனர். First term இல் சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் ஊடுருவி தம்மை நிலை நிறுத்தி கொள்வார்கள். கூடவே நாமல் முதல் ரணில் வரை அனைவரும் கள்ளர் என்பதால் அவர்களை மக்கள் முன் அம்பலபடுத்தி ஒரு மாற்று தலைமை இல்லாமலும் பார்த்து கொள்வார்கள். அதன் பின் இயற்கையாகவே அவர்களை வலுவாக எதிர்க்கும் சக்திகள் இல்லாமல் போகும். இவர்கள் இன்னொரு நீதியான தேர்தல் மூலம் பதவியை விட்டு போவார்கள் என நான் நினைக்கவில்லை. பெளத்த உயர் பீடங்கள் இவர்கள் சிங்கள பெளத்தத்தின் காவலர்கள் என நினைக்கும் வரை, அவர்களை இவர்கள் பகைக்காதவரை இது தொடரும்.
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
நியாயமான கருத்தே. இப்போதைக்கு தேவை முகிழ்திருத்தல் என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் நாம் எமது அடையாளத்தைப்பேணாமல் இதை செய்யமுடியாது. மொழியை, பாரம்பரிய வாழிடத்தை, சுயநிர்ணயத்துக்கான அபிலாசையை நம்மில் இருந்து நீக்கிவிட்டு பாத்தால் - நாம் இந்துச்-சிங்களவரே. 200 வருடத்தில் நீர்கொழும்பு, புத்தள, சிலாபத்தின் முன்னாள்-தமிழர் போல் நாமும் ஆகிவிட்டால் - பின்னர் நாம் தமிழர் என்ற ப்ரக்ஞையே நம்மிடம் இராது. அது இல்லாத போது நாம் எப்படி ஒரு தேசிய இனமாக மீள் எழ முடியும்? இந்தானால்தான் அங்கயன், டக்கிளஸ், பிள்ளையானை விட என் பி பி எம்பிகளும் அவர்களின் காலில் விழும் அரசியலும் நம் இன இருப்புக்கு ஆபத்தானது.
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
அருமையான கருத்து வாலி. கொல பாட்ட இவராய் மள்ளி🤣.
-
ஹைதராபாத்தில் கைது… சென்னை அழைத்து வரப்பட்டார் கஸ்தூரி
ஈழநாதமும் படிக்கோணும், குமுதமும் படிக்கோணும் - Saturday Review வும் படிக்கோணும். இல்லாவிடின் 40, 50 வயசில கஸ்தூரியை கூகிள் பண்ணி பார்க்கும் அவல நிலை ஏற்படும்🤣. அது சரி 1991 ஆம் ஆண்டு புத்தளம் முகாம்களில் ஈழநாதம் கிடைத்ததா? ஆச்சரியமாக உள்ளது.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
புலனின்பங்களில் பார்வையின்பமும் ஒன்றுதானே - சிலருக்கு விடயங்களை செய்வதில் நாட்டம், சிலருக்கு பார்ப்பதில் நாட்டம் - உங்களுக்கு அதுதான் இஸ்டம் என்றால் நாம் தடுக்க முடியாது. இதுக்கு ஏற்பாடு செய்ய முடியுமா🤣 நம்ம ஜி @கிருபன்யவா சொல்றீங்க🤣
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
ஒம் அவர்தான் இப்போ FSP தலைவர் - 2012 வரை இலங்கை அரசுக்கு கூட இவர் யார், வந்து போவது எதுவும் தெரியாது என்கிறனர் ( இடைபட்ட காலத்தில் இலங்கை அரசில் ஜேவிபி பங்காளியாகி, அனுர கபினெட் அமைச்சராக இருந்தார் - ஆனால் கட்சியை இயக்கியது - யார் என்பதே தெரியாத குமார்). பின்னர் உள்வீட்டு குழப்பத்தில் இவரை கட்சியே மாட்டி விட்டது. இதற்கும் இனவாதமே கடைசியில் காரணம் ஆகியது என்பார்கள். இன்னுமொருசாரர் இந்த பிரிவு பொய் நாடகம், இப்போதும் குமார்தார் ஜேவிபியை வழிநடத்துகிறார் என்கிறனர். ஜனாதிபதி தேர்தல் நேரம் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் தனக்கும் குமாருக்கும் எந்தவித உடனடி தொடர்பும் இல்லை என மறுத்தார் அனுர. கட்சியின் பழைய உறுப்பினர் என கேள்விப்பட்டேன் அவ்வளவே என்றார். ஆனால் முன்பு ஒரு தடவை கேகாலையில் குமாரின் வீட்டில் தங்கி அவரின் தாயாரிடம் ஆங்கில கற்றேன் என கூறியது பின்னர் இன்னொரு வீடியோ வடிவில் வெளிவந்தது. ஏனைய கட்சிகள் போல அல்ல, ஒரு வல்லரசின் உளவு நிறுவனம் போல ரகசியமான அமைப்பு ஜேவிபி. எமது மக்களுக்கு இவர்கள் வரலாறு, தன்மை, கொள்கை பற்றி அதிகம் தெரியவாய்பில்லை என நினைக்கிறேன்.
-
நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
ஓம்…அது பெளத்தர்கள் போனால்… ஏனைய மதத்தவர், இனத்தவர் அப்படி செய்யத்தேவையில்லை…இனவாதமற்ற சிங்களவர் அப்படி எதிர்பார்ப்பதும் இல்லை. 1978 க்கு பின் நேற்று அமைந்த அமைச்சரவைதான் முஸ்லிம்கள் இல்லாத அமைச்சரவை. இத்தனை காலத்தில் எந்த முஸ்லிமாவது இப்படி செய்ததுண்டா? இவ்வளவு ஏன் - நான் மேலே பட்டியல் இட்ட பல தமிழ் அமைச்சர்கள் பிக்குகலிடம் மரியாதை நிமித்த சந்திப்புக்களை நிகழ்தியுள்ளனரே? இப்படி நடந்ததுண்டா? இவர்கள் அமைச்சர்கள் கூட இல்லை. வெறும் பின்வரிசை எம்பிகள். நாக விகாரையில் போய் எமது பண்பாட்டின் படி கைகூப்பி அல்லவா வணக்கம் வைக்க வேண்டும்? @குமாரசாமி @zuma நீங்கள் எப்போதாவது ஒரு விடயத்தில் ஒரு பிக்குவை சந்திக்க நேர்ந்தால் காலில் விழுவீர்களா? விழுந்துள்ளீர்களா? எத்தனையோ துறைகளில் அலுவலகத்துக்கு பிக்குகள் வரும் போது தமிழர், முஸ்லிம்கள் மட்டும் காலில் விழாது இருப்பார்கள். நாளைக்கே இவர்களுக்கு எம்பிகள் இப்படி செய்தது ஒரு மறைமுக அளுத்தத்தை தராதா? அடுத்து என்ன… தமிழ் பாடசாலை மாணவர்களை விகாரைகளுக்கு கல்வி சுற்றுலா கூட்டிப்போய் இதையே???? உண்மையில் இதன் பின்னால் உள்ள சூக்கும அரசியல் உங்களுக்கு புரியவில்லையா?
- நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்