Everything posted by goshan_che
-
மசாலா: புற்றுநோய் உண்டாக்கும் என எம்டிஎச், எவரெஸ்ட் தயாரிப்புகளுக்கு சிங்கப்பூர், ஹாங்காங் தடை - என்ன நடந்தது?
என்னையா வாசிக்கிறீங்க? 🤦♂️. உண்மையிலேயே எழுதுவதை கிரகிக்கும் ஆற்றல் இல்லையா அல்லது அப்படி நடிக்கிறீர்களா? அல்லது சிறிதரனுக்கு இன்னொரு திரியில் அடி விழ இங்கே காலை தூக்குகிறீர்களா? எனக்கும் மீராவுக்கும் இடையே கான்சர் ஊக்கிகள் பற்றி ஒரு காத்திரமான உரையாடல் இந்த திரியில் நடைபெற்றது. உறைப்பை பற்றி எழுதியது இன்னொரு கிளைக் கருத்து, அதை பற்றி இன்னும் இரு உறவுகளுடன் இன்னொரு சம்பாசணை போனது. இரெண்டையும் போட்டு குழப்பி அடித்து சாம்பாராக்கி….கடவுளே… இதுக்க ஏதோ நாங்கள்தான் முட்டு கொடுத்து இலங்கையில் இனப்பிரச்சனையை தூண்டுவதாக வேறு ஒரு கற்பனை🤣🤣🤣. ”சாமி, எங்க இருந்து சாமி வாறீங்க”🤣. ஆங்கிலத்தில் unhinged என்பார்கள். நீங்கள் எழுதுவது அப்படியாத்தான் உள்ளது. முன்னமும் பல கருத்தாள்ர்களிடம் ஏறுக்குமாறாக எழுதுவது உங்கள் வழக்கம் எனிலும், நான் கடந்த ஒரு மாதமாக பார்க்கிறேன்….ஏதோ சுவரை பார்த்து கதைக்கும் மனிதர்கள் போல….சம்பந்தமில்லாத விடயங்களை போட்டு குழப்பி, மிகை கற்பனை, மனப்பிராந்தியில் ஏதேதோ தொடர்பே இல்லாமல் எழுதுகிறீர்கள். தயவு செய்து இதில் கொஞ்சம் கவனம் எடுங்கள் (சீரியசாகவே எழுதுகிறேன்). ஏரியும் நெருப்பில் நானும் எண்ணை ஊற்ற விரும்பவில்லை. இனிமேல் முடிந்தளவு விலகி நடக்க் முயற்சிக்கிறேன்🙏.
-
தாய் கழகத்தில் மீண்டும் இணைகிறேன்!'- காங்கிரஸில் இணைவதாக மன்சூர் அலிகான் அறிவிப்பு
உண்மை…உண்மை.
-
தாய் கழகத்தில் மீண்டும் இணைகிறேன்!'- காங்கிரஸில் இணைவதாக மன்சூர் அலிகான் அறிவிப்பு
உண்மைதான். ஆனால் ஏமாற்றப்படுகிறார் என்றே நான் நினைக்கிறேன். நிச்சயமாக தன்நலத்தின் பால் இதை அவர் செய்வதாக நான் நினைக்கவில்லை. அப்படி என்றால் என்றோ செய்திருக்கலாம்.
-
மத்தல விமான நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பு இந்திய, ரஸ்ய நிறுவனங்களிடம்!
டீலின் டீடெய்ல்ஸ், என்ன விலை, விமானநிலையம் எப்படி பாவிக்கப்படும் என்ற டீடெயில் எதுவும் வெளியாகவில்லை. இந்தியாவோடு ரஸ்யாவையும் சேர்த்து இழுத்தது, கட்ட கடன் கொடுத்த சீனாவை திருப்தி செய்யவாக இருக்க கூடும்.
-
தாய் கழகத்தில் மீண்டும் இணைகிறேன்!'- காங்கிரஸில் இணைவதாக மன்சூர் அலிகான் அறிவிப்பு
நெடுமாறன் ஐயா முதலில் காங்கிரசில் இருந்தவர்தான். இந்திரா காந்திக்கு மிக நெருக்கமாக இருந்தார். ஆனால் என்றும் ஈழ ஆதரவு நிலைப்பாட்டை மாற்றியதில்லை. பிஜேபி எதிர்ப்பு என்பது இப்போ தமிழகத்தில் உள்ள மதவாத எதிர்ப்பு சக்திகள் அனைத்துக்கும் வாழ்வா, சாவா போராட்டம். இதில் எங்களுக்கு காங்கிரசை பிடியாது என்பதால் நெடுமாறன் போனோர் இந்தியா கூட்டணியை ஆதரிக்க கூடாது என நாம் நினைப்பது சுயநலமும், தேவையில்லாமல் அவர்கள் வீட்டு விசயத்தில் மூக்கை நுழைக்கும் செயலுமாகும். ஈழ போராட்டம் தமிழ்நாட்டு அரசியலில் தீர்மானிக்கும் விடயம் அல்ல. அவர்கள் தமக்கு முக்கியமான விடயங்களின் அடிப்படையிலேயே விடயங்களை தீர்மானிப்பர். மன்சூரும் ஈழவிடுதலை நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை எனிலும், இவர் காங்கிரசில் சேர்ந்தது சுய இலாபத்துக்கு. நெடுமாறன் ஐயா இந்தியா கூட்டணியை ஆதரிப்பது பிஜேபி வரக்கூடாது என்பதால்.
-
மசாலா: புற்றுநோய் உண்டாக்கும் என எம்டிஎச், எவரெஸ்ட் தயாரிப்புகளுக்கு சிங்கப்பூர், ஹாங்காங் தடை - என்ன நடந்தது?
வயது கூடும் போது வந்த ஞானோதயங்களில் இந்த உறைப்பு குறைப்பும் ஒன்று. தவிரவும் இறைச்சியின் சுவையே தெரியாது - மிளகாய்தூள் கறிக்குள் இறைச்சி துண்டை போட்டு சாப்பிட்டால், மான் ஏது, மரை ஏது - தூளின் சுவைதான் தெரியும்.
-
மசாலா: புற்றுநோய் உண்டாக்கும் என எம்டிஎச், எவரெஸ்ட் தயாரிப்புகளுக்கு சிங்கப்பூர், ஹாங்காங் தடை - என்ன நடந்தது?
நீங்கள் சொல்வதில் முழுவது உடன்பட்டாலும், என்னை பொறுத்தவரை முடிந்தளவு processed food, preservatives, கலரிங், இவற்றை தவிர்த்து உண்ண கூடியதே இயலுமானதென நினைக்கிறேன். இந்த உணவு சங்கிலியின் ஒவ்வொரு படியாக ஆராய்ந்து உண்ணுவது சாத்தியமில்லை. பிரிதானியாவின் நதிகள் அனைத்திலும் மிக மோசமாக மனித கழிவு மட்டும் அல்ல, நாம் எடுக்கும் மருந்துகளும் கலக்கிறன. நதி நீரில் மனிதர் பாவித்த மீதி anti depressant, class A drugs கலப்பதால் - மீன்களின் இனப்பெருக்க நடவடிக்கைகளும், பாலின அடையாளம்களும் மாறி வருவதாக அண்மையில் ஒரு ரெடியோ நிகழ்ச்சியில் கேட்டேன். இதில் வரும் நீரை பயன்படுத்தி வளரும் புல்லைத்தான் ஓர்கானிக் பால் தரும் மாடுகள் உண்கிறன. எல்லாம் ஒரு பலன்ஸ்தான். மின்னுவதெல்லாம் பொன்னல்ல. அந்த தம்பி பொன், இது கவரிங்🤣.
-
மசாலா: புற்றுநோய் உண்டாக்கும் என எம்டிஎச், எவரெஸ்ட் தயாரிப்புகளுக்கு சிங்கப்பூர், ஹாங்காங் தடை - என்ன நடந்தது?
1. தூள்/கோப்பி - அங்கே வியாபாரிகளிடம் வாங்கும் மூலப்பொருட்களை வைத்தே இடிப்பது. ஆகவே பயிர் விளைவிக்கும் போது பாவிக்கப்படும் கெமிக்கல் பாதிப்பு இருக்கவே செய்யும். இந்த முறை போகும் போது பார்க்க நினைத்து முடியாமல் போன விடயம் ஒர்கானிக் தோட்டங்கள். இவை இப்போ கொஞ்சம் கொஞ்சமாக அங்கே வரத்தொடங்கி விட்டன. ஓர்கானிக் தோட்டங்களில் மிளகாய் எடுக்க முடியுமாய் இருக்கும். மல்லி, கோப்பி இப்படி எடுக்க முடியுமா என்பது கேள்விக்குறியே. எனது மகனுக்கு முடிந்தளவு மிளகாய் உறைப்பை பழக்காமல் தவிர்கிறேன். ஒரு காலத்தில் உறைப்பு சாப்பிடுவதை ஏதோ வீர சாகசம் போல நானும் கதைத்து திரிந்தவனே. ஆனால் இந்த பழக்கத்தால் தேவையில்லாமல் குப்பைகளை உண்கிறோம் என்பது காலம் செல்லவே உறைத்தது (pun intended 🤣). தவிரவும் மிளகாய் என்பதே தென்னமரிக்காவில் இருந்து எமக்கு போத்துகேயர் அறிமுகம் செய்ததுதானே. அதில் ஒரு “தமிழேண்டா” பெருமையும் இல்லை. யோசிக்க வேண்டிய கோணம்தான். நாங்கள் ஊரில் இருந்து எடுப்பிக்கலாம் அண்ணை. 1kg வுக்கு சுமைக்கூலி 1000 ரூபா.
-
புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களிடம் சுமந்திரன் விடுத்துள்ள பகிரங்க கோரிக்கை
சுமந்திரன் ஒரு உதாவாக்கரை அரசியல்வாதி. தன்னலம் தவிர வேறு எதையும் கருதாத, தன் திறமை பற்றி அதீத எண்ணம் கொண்ட, தலைமை பண்புகள் எதுவுமற்ற மனிதர். நிற்க, சுமந்திரனை போலவே இன்னொரு உதவாக்கரைதான் சிறிதரன். சுமந்திரனை போல அல்லாது - தனது உறவினர், ஊரவர் வலையமைப்பு மூலம் புலம்பெயர் தேசங்களில் தனக்கென ஒரு கூட்டத்தை சிறிதரன் வைத்துள்ளார். இவர்களில் சிலர் சில்லறை வர்தகர்கள், சிலர் பெரிய வர்தகர்கள். சுருக்கமாக, புலம்பெயர் தேசத்தில், படித்த முட்டாள்கள் சுமந்திரன் பக்கம் எண்டால், படிக்காத முட்டாள்கள் சிறிதரன் பக்கம் (பொதுப்படையாக). படித்த, படிக்காத முட்டாள்கள் அல்லாதோர் இந்த இரு பகுதி அடிப்பொடிகள் பற்றியும் அவதானமாக இருக்க வேண்டும். சுமந்திரனை போன்ற ஒரு ஊத்தைதான் சிறிதரனும்.
-
மசாலா: புற்றுநோய் உண்டாக்கும் என எம்டிஎச், எவரெஸ்ட் தயாரிப்புகளுக்கு சிங்கப்பூர், ஹாங்காங் தடை - என்ன நடந்தது?
புலம்பெயர் தேசத்தில் சில மொக்கு கூட்டம் பிள்ளைகள் உறைப்பு சாப்பிடும் என்பதை ஏதோ பெரிய தகமை போல் கதைத்துகொண்டு திரியும். என்னை கேட்டால் முடிந்தளவு மிளகாய்தூள் பாவனையை பிள்ளைகளுக்கு இல்லாமலே பழக்க வேண்டும். இப்படியான கான்சர் ஊக்கிகள் மட்டும் அல்ல, புலம்பெயர் கடைகளில் ஒரு ஆட்டு கறியை வாங்கி அதை சுடு தண்ணியில் கழுவி பாருங்கள் - சிவப்பாய் கலரிங்கும், எண்ணையும் ஓடும். உறைப்பை கூட்ட, உப்பு கூட்ட சொல்லும், உப்பு கூட உபாதைகள் கூடும். திறமான வழி பண்டைய தமிழர், இன்றைய சிங்களவர் வழி - உறைப்புக்கு மிளகு பாவித்தல். @பெருமாள் # எரியுதடி மாலா
-
மசாலா: புற்றுநோய் உண்டாக்கும் என எம்டிஎச், எவரெஸ்ட் தயாரிப்புகளுக்கு சிங்கப்பூர், ஹாங்காங் தடை - என்ன நடந்தது?
என் inspiration ஆல் இப்படி பல தரவுகளை ஆராய்ந்தமை அதை நான் உட்பட பலருக்கு அறியதந்தமைக்கு நன்றி. என் கட்டுரை வேறு எந்த பலனை தராவிடிலும் - இது ஒன்றே போதும். நான் எப்பவுமே இவற்றை அங்குதான் போய் சாப்பிடுவது. தவிரவும் கோப்பித்தூள், மிளகாய்தூள், எல்லாம் அங்கே இருந்து நேரடியாக அனுப்ப ஏற்பாடு செய்துவிட்டேன்.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
தகமைகளை வளர்த்து கொண்ட ஒருவர் 37 மணி நேரம் செய்து பெறும் சம்பளத்தை தகுந்த தகுதிகளை அடைய முடியாத ஒருவர் 60 மணி நேர உழைப்பில் அடையவேண்டி இருப்பது இயல்பே. இப்பவும் 60 மணத்தியாலம் வேலை செய்துதான் என் தேவையான வரவை அடைய முடியும் என்றால் நிச்சயம் செய்வேன். நீங்கள் வாரம் 60 மணத்தியாலம் வேலை செய்யும் 60+ வயது ஆட்களை காண்பதில்லையா? செக்கூரிட்டி வேலை செய்யும் அரைவாசி பேர் இப்படித்தானே? அங்கே எல்லாம் ஒரு ஷிப்ட் 12 தான். 48 அல்லது 60 தான் வழமை. ———- Gross ஆ take-home ஆ என அந்த வீடியோவிலும் சொல்லவில்லை என நானும் egg இல் hair புடுங்க விரும்பவில்லை.🤣 Take-home ஆகவே இருப்பினும் gross 3380 எனில் take-home 2022/2023 யில் 2700. 20023/2024 இல் 2750. இப்படி பார்த்தாலும் வீடியோவின் 10 இலட்ச கணக்கு சரிதான்.
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
பத்து இலட்சத்தை 400 ஆல் வகித்த £2500. சரிதானா? இது யூகே புலம்பெயர் தமிழ் சமூகத்தில் நிச்சயம் எடுக்கும் சம்பளம்தான். London living wage மணிக்கு £13.15. கிழமைக்கு 60 மணி வேலை எனில் (5x12 hour shift) = 13x60= £780 ஒரு வருடம்= 780x52= £40560 ஒரு மாசம் = 3380. ——— பின்னே? பெற்றாரை பார்க்காமல் வேறு என்ன கடமை இருக்க முடியும்? ஆனால் அங்கே எம் சொத்தை பாதுகாப்பது முதல் பல கடமைகளையும் நாம் outsource பண்ணி விட்டுத்தான் இருக்கிறோம். ஒருவனோ, ஒருத்தியோ தன் வீட்டில், நகரில் இருந்து செய்ய வேண்டிய அத்தனை கடமைகளையும் இன்னொருவர் தலையில்தானே கட்டி உள்ளார்கள் புலம்பெயர்ந்தோர். அதைத்தான் அந்த வீடியோவில் சொல்கிறார்கள்.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
அது எல்லாருக்குமானதல்ல. கொடுக்க வேண்டிய இடத்தில் பலர் இருக்கிறார்கள். அங்கே இருப்பவர்கள் தியாகத்தில் இங்கே வந்து சேர்ந்தோர். அங்கே அக்கா வயதான பெற்றாரை பார்கிறார் என்ற தைரியத்தில் இங்கே மனைவியுடன் டூர் போவபர்கள். எனக்கு தெரியும் ஒரு வயோதிப தம்பதி - பிள்ளைகள் இருவரையும் ஐரோப்பா அனுப்பி விட்டு இன்றும் உடல் உழைப்பில் வாழ்கிறார்கள். பலர் அனுப்பும் பணம் - தாம் அங்கே நின்று செய்ய தவறிய கடமைகளுக்கான விலை. இந்த கொமெண்டை நான் இந்த சூழமைவில்தான் பார்க்கிறேன். 👆🏼👇
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
வெறும் தென்னம் ஈக்குக்களால் கட்டி வைத்துள்ளார்கள் மொக்கு சிங்களவர்+ஹிந்தியர் 🤣. கொசுறு இதில் 50 மாடி பெரிய கட்டிடம் முழுக்க அப்பார்மெண்டாம் என செய்தியில் வாசித்தேன். இதன் அருகில் உள்ள சங்கிரில்லா + கோல்பேஸ் 1 தொகுதி பற்றி எழுதினேன் அல்லவா? அங்கே ஒரு studio flat £350K போகிறது. இது தோராயமாக இலண்டன் புறநகர் (suburb) zone 4/5 இல் ஒரு ஸ்ருடியோவின் விலைக்கு நிகராக வருகிறது. எனது யூனிவர்சல் கிரெடிட் (சோசல்) மிஞ்சும் காசில் ஒன்றை வாங்கி விட யோசிக்கிறேன்🤣🤣🤣.
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
பத்து இலட்சம் சம்பளம் அதில் பத்தாயிரம்தான் தருவோம் என்றல்லவா வருகிறது வீடியோவில்? அதுவும் மாசத்துக்கா வருடத்துக்கா என்று சொல்லவில்லை. எனது கணக்கில் மாச சம்பளம் என எடுத்தால் £30K வருகிறது? இது யூகேயின் median salary க்கு கிட்டத்தானே? (நான் கணக்கில் வீக் என்பதால் எனக்கே குழப்பமாய் உள்ளது🤣). ஆனால் இங்கே எண்ணிக்கை பொருட்டல்ல. பத்தாயிரம்/பத்து இலட்சம் எனும் ratio தான் பொருள் என நினைக்கிறேன். பிகு இந்த வீடியோவும், அண்மைகாலமாக யாழில் ஊர் புதினம் பகுதியில் வெளிவரும் செய்திகளும், பின்னூட்டகளும், புலத்தமிழருக்கும், புலம்பெயர் தமிழரில் உரக்க கத்தும் சிறுபான்மைக்கும் உள்ள இடைவெளி பெரிதாகி வருவதையே காட்டுகிறது என நான் நினைக்கிறேன். இது நல்ல விசயம் அல்ல. ஆனால் புலம்பெயர் தமிழரின் உரக்க கத்தும் குழுவின் ஊர் யதார்த்தபுரிவின்மையே இந்த இடைவெளிக்கு மிக பெரிய காரணி. இதை கண்டு வந்து சொல்பவர்கள் மீதே காண்டாவதில் ஒரு பயனுமில்லை.
-
அரச வருமானம் தொடர்பில் நெருக்கடி நிலை! பணத்தை அச்சிட முடியாத நிலையில் இலங்கை
போன டிசம்பர் மாதம், நாதமுனியோடு சேர்ந்து ஒரு மானஸ்தர், சாட்சிகாரன் காலில் விழுவதை விட சண்டைகாரன் காலில் விழலாம், இலங்கை தமிழ் மக்கள் இனி மேற்கை, இந்தியாவை, யாரையும் நம்பாது - சிங்களவரோடு நேரடியாக பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும் என எழுதினார். அந்த நல்லிணக்க நாயகனை நான் தேடுகிறேன்🤣. அரோ ஹரா!
-
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களின் சாபத்தினால் ராஜபக்ஷர்கள் பதவி விலகினார்கள் - கிரியெல்ல
இந்த மனோநிலை இவரது மட்டும் அல்ல. பெரும்பாலனா சிங்களவர் மனோநிலையும் இதுவே. அறகல நேரம் இந்த மனநிலை மாறுகிறதோ என பலர் யாழில் எழுதினர். அதில் பல தெள்ளிய தமிழ் தேசிய வாதிகள் (அல்லது அப்படி காட்டி கொள்வோரும் அடக்கம்). ஆனால் - அவர்களை பொறுத்தவரை அது இன்றும் மனிதாபிமானப்போர் தான்.
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
வீரத்துடன் போட்டியில் குதித்துள்ள @தமிழ் சிறி. மற்றும் @ஈழப்பிரியன் அண்ணையளுக்கு ஒரு சல்யூட்🤪 பாத்தியளே பெரிசுக்கு குசும்ப🤣. விட்டால், வீரப்பா, நம்பியார், செந்தாமரை, ரகுவரன், பிரகாஷ்ராஜ் எண்டு போடுவார் போல கிடக்கு🤣
-
புலத்தில் இருந்துகொண்டு ஊரில் வாங்கிய காணியை பெயர் மாற்றம் செய்வது எப்படி?
1. சட்டம் மாற முன்பு வெளிநாட்டு பிரசைகளாக இந்த ஆதனத்தை வாங்கி இருக்கலாம். அல்லது… 2. முதலில் இலங்கை பிரசையாக இருந்த போது ஆதனத்தை அவர்கள் பெயரில் வாங்கி விட்டு பின்னர் வெளிநாட்டு பிரஜா உரிமை எடுத்திருக்கலாம். அல்லது 3. நான் சொன்ன 3ம் முறையில் பெற்றாருக்கு பின் சொத்து பெயர் மாறி இருக்கலாம். அல்லது 4. இரெட்டடை குடியுரிமை இருக்கலாம். அநேகமாக 99 வருட லீஸ் ஆக இருக்கவே வாய்ப்பு அதிகம். ஆதனங்களை நான் மேலே சொன்ன லீசிங் அடிப்படையில் அல்லது, கம்பெனி சொத்தாக வைத்திருக்க கூடும். அல்லது சட்டம் மாற முன்பு அவர்கள் வாங்கிய ஆதனமாக இருக்கலாம். இப்போதும் Board of Investment ஊடாக பெருந்தொகை பணத்தை முதலிடும் வெளிநாட்டு கம்பெனிகளுக்கு ஆதனத்தை freehold ஆக வாங்கும் சலுகை உள்ளது என நினைக்கிறேன். நான் மேலே சொன்னது தனி நபர்கள் residential properties, land வாங்கும் நிலை பற்றியது.
-
புலத்தில் இருந்துகொண்டு ஊரில் வாங்கிய காணியை பெயர் மாற்றம் செய்வது எப்படி?
ஓம் இப்படியும் செய்யலாம். அதே போல் மேலே நான் சொன்னவற்றில் கம்பெனிக்கு பதிலாக ஒரு trust ஐ உருவாக்கியும் அதே இறுதிப்பலனை அடையலாம்.
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
பொதுப்படையாக எல்லாரும் என சொல்ல முடியாது. அத்துடன் போத்தல் தண்ணீர் என்பது அங்கேயும் அநேகர் செய்வதுதான். உரக்க கத்தும் சிறுபான்மை என கேள்வி பட்டிருப்பீர்கள். அப்படி, பலர் மரியாதையாக நடந்தாலும், சில அஜினமோட்டோ கேசுகள் அங்கே போய் இப்படிதான் நடக்கிறன. இவர்கள் நடத்தையால் எல்லார் மீதும் இப்படி ஒரு விம்பம் விழுகிறது.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….