Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. தொடருங்கள்🙏. புத்தரின் நான்கு பேருண்மைகளை நான் மிக இலகுவாக, எளிமையாக: 1. துக்கம் உள்ளது 2. துக்கத்தின் வேர் ஆசை 3. ஆசையை துறந்தால் துக்கத்கில் இருந்து விடுபடலாம் 4. 3ஐ அடுத்த கட்டமாகிய கொல்லாமை, காரூண்யம், அன்பு என்பனவற்றுக்கு நகர்தினால் - பிறவி கடலின் சுழற்சியில் இருந்து விடுபட்டு நிர்வாண நிலையை அடையலாம். இந்த புரிதல் சரிதானா? —————- எஸ் போவின் மொழிபெயர்ப்பை கையாள்கிறீர்களா?
  2. அதே 1% தான். தமிழ் நாட்டில், இரு கட்சிகள் அத்தனை சீட்டையும் வெல்ல வேண்டும் என எனக்கு ஒரு நடக்க முடியாத ஆசை உண்டு - அது இரெண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள். தா.பாவை தவிர, பதவிகளில் இருந்தும் - கறை இல்லாத அரசியல் செய்தவர்கள் என்பதால். பிகு இப்பதானே மற்ற ஐடியில் நன்றி வணக்கம் சொல்லி போனீர்கள்😎 ————- @nedukkalapoovan @பாலபத்ர ஓணாண்டி உங்கள் கவனத்துக்கும்.
  3. அதே போல் Wellington Oval, WACA இரெண்டிலும் காற்று வேகமாக அடிப்பதும் - conditions இல் ஒன்றாக விளையாட்டின் அங்கமாக கருதப்படும். Fremantle Doctor பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.
  4. இல்லை - இது கையிருப்பு சம்பந்தமான பிரச்சனை போல தெரியவில்லை. மாறாக விநியோகம் சம்பந்தமானது. வட் வரி செலுத்துவது தொடர்பான பிரச்சனையில் பெற்றோல் விநியோகஸ்தர் - அரசினை நெருக்க, விநியோகத்தை வைத்து blackmail பண்ணுகிறார்கள். நான் அங்கு நிற்கும் போது இது புகைய தொடங்கியது. பெற்றோல் விநியோகத்தை அத்தியாவசிய சேவை என அறிவித்து அரசாணை வெளி வந்தது. 24 மணி நேரம், கியூ 5 கார் அளவுக்கு நீண்டு பின் அடங்கி விட்டது. இதை நான் ஒரு trade union vs govt. பிணக்காகவே பார்க்கிறேன். ஆளை ஆள் மிரட்டி விட்டு பின் ஒரு compromise ற்கு வர வாய்புள்ளது.
  5. என்ன சத்தியம் வேணும்? நான் போராட்டத்தை காட்டி கொடுக்கவில்லை… இந்த சத்தியமா? நிச்சயமாக செய்யலாம். அம்மா உயிரோடு இல்லை - ஆனால் மகன் இருக்கிறார் அவர் மேல் செய்யலாம். போராடாமல் விட்டு விட்டு வந்ததை தவிர போராட்டத்தை எதிர்த்து நான் ஒரு துரும்பைத்தானும் போடவில்லை. ஆனால் போராட்டத்துக்கு சமாந்திரமாக என்னால் முடிந்தவரை தமிழர் மீதான அடக்குமுறைகளை ஜனநாயக வழியிலும், ஊடக பரப்பிலும் ஏனைய பண்பாட்டியல் வழியிலும் - வெளிகொணர முயன்றுள்ளேன். நான் மட்டும் இல்லை, இங்கே 99% வர்கள் இப்படிதான். ———- ஆனால் ஒரு news forumமில் சத்தியத்தை வாங்கினால் அதை வைத்து என்னையோ இன்னொருவரையோ நம்பலாம் என நம்பும் அப்பாவியாக நீங்கள் இருப்பது கொஞ்சம் நெருடலாகவே உள்ளது. நீங்கள் இலகுவில் சீமான் போன்றோரின் கவர்ச்சி பேச்சால் எடுபடுபவர் என்பது தெரியும். ஆனால் இவ்வளவு பச்சை தண்ணியாக இருப்பீர்கள் என எதிர்பார்க்கவில்லை.
  6. இதென்ன லூஸ் தனமான கேள்வி? இந்த கேள்வியே உங்களுக்கு புலிகளின் நடைமுறை பற்றி ஒரு அறுப்பும் தெரியாது என்பதை சொல்லி நிற்கிறது. நான் என்ன பொட்டமானின் அணியிலா இருந்தேன். இந்த ரகசியங்களை எல்லாம் தெரிந்து வைக்க? புலிகள் 1991 க்கு பின் எப்படி தமிழ் நாட்டில் ஒரு பின் தள வலைபின்னலை மீள உருவாக்க கஸ்டப்பட்டனர் என்பது தெரியும். இதை 1998 அளவில் நடுக்கடலில் வைத்து மருந்து, பின்னர் பெற்றோலியம் கைமாற்றும் அளவுக்கு வளர்த்தமையும் இந்த வலையமைப்பை இந்தியா அடிக்கடி உடைப்பதும் கேள்வி பட்டவையே. இதில் பல திக உறுப்பினர், வேல்முருகன் போன்றோர் தொடர்ந்து ரிஸ்க் எடுத்ததும் தெரியும். ஆனால் இந்த வலையமைப்பில் இருந்தோருக்கு கூட இதில் யார் ஈடுபட்டனர் என்ற முழு விபரமும் தெரியாது. அதுதான் புலிகளின் அணுகுமுறை. இந்த ரகசியங்கள் பல அவர்களோடு போய்விட்டன. இப்போ அண்ணன் சீமான 1000 லீட்டர் பெற்றோலை தனது பேண்ட் பக்கெட்டில் வைத்து, ஒரு கையால் பொத்தி கொண்டு போய் வன்னியில் கொடுத்தார் - என்ற ரீதியில் யாரோ உங்களுக்கு கதை சொல்லி இருக்கிறார்கள் என ஊகிக்கிறேன். ஏனைய ரகசிய தகவல்கள் போல் இதையும் எழுதுங்கள் - கேட்டு ரசிப்போம். இது ரொம்ப ஓவர் பையா…. ஈழப்போராட்டம் நடந்த போது நீங்கள் படுக்கையில் உச்சா போகும் வயதினர்…..அதுவும் மிக இள வயதிலேயே டென்மார்க் ஓடி வந்து விட்டீர்கள்…. உண்மை என்வென்றால் போராட்டத்துக்கு துரோகம் செய்யும் இயலுமையோ, வயதோ, வாழ்விடத்திலோ நீங்கள் அப்போ இருக்கவில்லை. அதென்ன “ஈழ ஆதரவு”🤣 - நீங்கள் என்ன தமிழ் நாட்டு காரரரா ஈழ ஆதரவு நிலை எடுக்க? நடந்து முடிந்தது எமது போராட்டம் - அதில் நாம் பங்காளிகள் - ஆதரவு நிலை எடுப்போர் அல்ல.
  7. நான் ஒன்றும் செய்யாமல் இருந்ததே பாரிய நன்மைதான் 🤣. அதை விளங்கியப்படியால்தான் அப்போ நவதுவாரங்களையும் மூடி கொண்டு இருந்தேன் (பகிடி இல்லை). ஆனால் இங்கே நான் கோஷான் குலசாமி, என போராட்ட வரலாறுடன் என்னை பொய்யாக சொருகவில்லை. ஆகவே என்னை பற்றி எழுத வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சம்பந்தமே இல்லாமல் வீரப்பனை போராட்ட வரலாற்றுடன் சொருகி கதை புனைவதால் அது கேள்விக்கு ஆகிறது.
  8. இதற்கு மாறாக நான் எங்கேயும் எழுதவில்லையே? பலர் 5%- 12% சொன்னார்கள். நான் இதுவரை சீட் சுழியம், 39 டெபாசிட் காலி என்றே சொல்லி வந்தேன். இப்போ முதல் முறையாக சதவீத கணிப்பை போட்டுள்ளேன். மீண்டும் நினைவூட்டுகிறேன் 1. நான் தேர்தல் விற்பனர் அல்ல. கணிப்பு என் தொழிலும் அல்ல. உண்மையை சொல்ல போனால் கணக்கில் நான் ரொம்பவே வீக். 2. நான் களத்திலும் இல்லை. ஏனையோரை போல செய்திகள் அடிப்படையிலே என்கருத்தை, கணிப்பை எழுதுகிறேன். 3. IPL போட்டி கணிப்பு போலவே இதுவும். அங்கே - கோஷான் RR வெல்லும் என்றார், ஆனால் KKR வென்று விட்டதே என யாரும் சிறுபிள்ளைதனம் செய்வதில்லையே? அது போலவே இங்கும். 4. இதை எழுத்தில் போட வேண்டி இருப்பது - யாழ் உறவுகளின் maturity ஐ யோசிக்க வைக்கிறது 😆. 5.என் சீமான் எதிர்ப்புக்கும் கணிப்புக்கும் ஒரு சம்பந்தமுமில்லை. அவருக்கு 1% கூட வரக்கூடாது என்பது என் ஆசை. ஆனால் 8% வரை எடுப்பார் என்பது என் கணிப்பு. இரெண்டையும் வேறுபடுத்தி பார்ப்பது அவ்வளவு கஸ்டமான விசயம் இல்லை என நம்புகிறேன்.
  9. அப்படி எந்த பலக்கமும் என்னிடம் இல்லை. ஆனால்….. வீரப்பனை தேவையில்லாமல் எமது போரட்டத்தில் கொண்டு வந்து சொருகினால் - அந்த போராட்டதை மதிக்கும் எவருக்கும் கோபம் வரும். முடிந்தால் வீரப்பனுக்கு எம் போராட்டத்துடன் உள்ள தொடர்பு பற்றி நீங்கள் எழுதுவது சரி என குறைந்தத்கு 5 யாழ்கள உறவுகளை இங்கே வந்து எழுதும்படி கேட்டுப்பாருங்கள். அப்போ தெரியும் எப்படி பட்ட ஒரு பொய்கதையை சீமான் புனைந்துள்ளார் என்பது. 🤣 என்ன திருப்பி கருணாநிதியிடம் போய் விட்டீர்கள். நேற்றே சொல்லி விட்டேனே - அவர்களை பற்றி என்னன்சொன்னாலும் எனக்கு கவலையில்லை. அதற்காக என் பொன்னான நேரத்தினை நான் வீணக்கவும் போவதில்லை இல்லை. அதை மட்டுமா காண்கிறோம்…நாம் எவ்வளவு செய்தோம், எவ்வளவு கொடுத்தோம் என்பதை இன்னொரு நபருக்கு சொல்லி, அதை பொது வெளியில் எழுதி பெருமை கொள்வோரையும் அல்லவா நம் கண் முன்னே பார்கிறோம்!!!
  10. எனக்கும் வீரப்பனுக்கும் என்ன வாய்க்கால் தகறாரா. எமது போராட்டத்துக்கு எதுவும் செய்யாத ஒருவர் அவர். அவரை சூழ்சியாக கொல்ல புலிகள் பெயரை பயன்படுத்தினார் ஜெ. ஆகவே அவரை ஏதோ எமது போராட்டத்தூண் போலவும், இயக்கம் அவரை அழைத்தது என்பது போலவும், எமது போராட்டத்தை பற்றி உண்மைக்கு புறம்பாக எழுதினால் - அதை கேள்வி கேட்டே ஆவேன். எந்த கொம்பனாய் ஆனாலும். காகம் உண்ணி கொத்தி யானைக்கு வலிப்பதில்லை🤣
  11. ஆனால் இப்படி ரகசியங்கள் எல்லாம் உங்களுக்கு மட்டும் தெரியவருவதுதான் ….அப்படியே ஷாக் ஆகி போகும் மேட்டர். மற்றும்படி உங்கள் அறிவின் விஸ்தீரணம், புத்தி கூர்மையின் ஆழம், விளங்குதிறனின் கனபரிமானம் பற்றி எனக்கு ஒரு மாற்றுக்கருத்தும் இல்லை. Narnia மாநிலம் வாழ்த்துக்கு நன்றி🙏 உங்கள் ஆசைப்படியே செய்கிறேன்🤣 பிகு: உங்கள் துர்பாக்கிய நிலைக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
  12. குத்தடி குத்தடி ஷைலக்கா… குனிஞ்சு குத்தடி ஷைலக்கா… பந்தலிலே பாவக்கா…. தொங்குதடி டோலாக்கு…. அண்ணன் வாரான் பாத்துக்கோ….. பணம் குடுப்பான் வாங்கிகோ…. சில்லறையா மாத்திக்கோ… சுருக்கு பையில போட்டுக்கோ… ஜிணுக்கு ஜிக்கிண்ணு ஆடிக்கோ…..
  13. சான்சே இல்ல…. நமக்கு எருமை மாடு மாரித்தோல்…🤣.
  14. அதென்னமோ தெரியவில்லை…. புலிகளின் ரகசியம்…. வீரப்பன் ரகசியம்…… டெல்லி உளவுத்துறை ரகசியம்…. எல்லாம் உங்களிடம் மட்டும் சிக்குது.
  15. 1ம், 3ம் விதிகளை தளர்த்தலாமே? எப்படியோ ஜூன் 4 வரை இனி எது நடந்தாலும் முடிவுகள் மாறப்போவதில்லை. எனவே இறுதி நாளை ஜுன்3 எனவும், அதுவரை விடைகளை மாற்றலாம் எனவும் வைக்கலாம் என நினைக்கிறேன். நிச்சயமாக.
  16. மேலதிக இணைப்புக்களுக்கு நன்றி அண்ணா🙏.
  17. தம்பி ஆவது ஒரு ப்ரோசஸ். தம்பி ஆக முதல் zombie ஆக வேண்டும். பின்னர் படி படியாக brain transplant பண்ணி தம்பி ஆகி விடலாம். சிறுவயதில் தலைக் காயமோ அல்லது பிடரி அடிபட விழுந்திருந்தாலோ இந்த ப்ரோசசை ஈசியாக கடந்து விடலாம். எப்போ நீங்கள் கொள்ளைகாரன் வீரப்பனை உங்கள் தந்தை அல்லது கடவுள் நிலைக்கு இணை வைக்கிறீர்களோ அன்றைக்கு நீங்கள் ஒரு fully certified தம்பி ஆகி விட்டீர்கள் என அர்த்தம்.
  18. வீரப்பன் சாவுக்கோ அல்லது அவரை கெளரவித்தோ புலிகள் ஒரு பஸ் டிக்கேட் அளவு பிரசுரம் தன்னும் அடித்ததாய் ஆதாரம் காட்டுங்கோ. மிச்சத்தை பிறகு கதைப்பம். இப்படி உங்கள் சொந்த இனப்போராட்டம் பற்றி உங்கள் போன்றோருக்கு பிழையாக மண்டையை கழுவி வைத்திருப்பதுதான் நான் சீமானை எதிர்க்க முதல் காரணம்.
  19. @பையன்26 @கிருபன் @island @kandiah @ஈழப்பிரியன் @ராசவன்னியன் @குமாரசாமி @Justin @வாலி @தமிழ் சிறி @இணையவன் @ஏராளன் @புரட்சிகர தமிழ்தேசியன் @நிழலி
  20. 1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2ம் இடம் 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 4ம் இடம் 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 3ம் இடம் 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன் 2ம் இடம் 5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 2ம் இடம் 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 2ம் இடம் 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 3ம் இடம் 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 1ம் இடம் 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 1ம் இடம் 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 1ம் இடம் 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 1ம் இடம் 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 4ம் இடம் 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 1ம் இடம் 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 2ம் இடம் 15) தயாநிதிமாறன் திமுக) 1ம் இடம் 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 2ம் இடம் 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 1ம் இடம் 18)ரி ஆர் பாலு ( திமுக) 1ம் இடம் 19)எல் முருகன் (பிஜேபி) 2ம் இடம் 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 1ம் இடம் 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக விஜயகாந்தின் மகன்) 1ம் இடம் 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 1ம் இடம் 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 1ம் இடம் 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்? 1) 5% க்கு குறைய 2) 5% - 6% 3) 6% - 7% 4) 7% - 8% 5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? கூட 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? சுழியம் 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 1 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? சுழியம் 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 1 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? சுழியம் 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? சுழியம் 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? 3 35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? சுழியம் 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) இரெண்டு (விழுப்புரம், விருதுநகர்) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) மூன்று (குமரி, தர்மபுரி, திருநெல்வேலி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 34 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 22 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 1 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 7 (குமரி, விருதுநகர், திருநெல்வேலியில் தோல்வி) 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 1 (தர்மபுரியில் செளம்யா வெற்றி) 43) 23 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 2 - குமரி, திருநெல்வேலி
  21. இந்தியாவோடு இருந்த பிரசானையள் போதாதென்று, ஜெயின் பரம எதிரியான, இந்திய அரசு தேடும் வீரப்பனை, ஜெ ஆட்சியில் வன்னிக்கு தலைவர் எடுத்திருப்பார் என விசயம் தெரியாதோர் நம்பலாம். உண்மையில் இதற்கும் புலிகளுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை. எளிதில் உணர்சிவசபட கூடிய வீரப்பனின் மொக்குதனத்தை பயன்படுத்தி, புலிகள் போல வேடமிட்டு, அவரை வன்னிக்கு போகலாம் என ஏமாத்தி, தமது கட்டுப்பாட்டில் எடுத்து பின் போட்டு தள்ளியது தமிழக உளவுத்துறை. ”ஈழத்தாய்” ஜெ உத்தரவில் இது நடந்தது. புலிகள் வீரப்பனை பற்றி அலட்டி கொள்ளவே இல்லை. ஒரு அஞ்சலி போஸ்டர் கூட இல்லை. ஒரு விடுதலை இயக்கம் - அவர்களுக்கு ஒரு கொள்ளையன் பற்றி ஒரு அக்கறையும் இல்லை என்பது ஏற்புடையதே.
  22. முன்னர் ஒரு திரியில் இப்படி இல்லை. அது முழுக்க முழுக்க இந்திய மக்களால் நடத்தப்படும் கட்சி, ஈழத்தமிழர் காசே கொடுக்க முடியாது என கம்பு சுத்தினீர்களே? பரவாயில்லை - சந்தர்பத்துக்கு ஏற்ப நாக்கை பிரட்டுவது எப்படி என சீமானை பார்த்து கற்று கொண்டீர்களாக்கும். ஆனால், நீங்கள் சொன்னது உண்மை எனில் - என் குரலுல்கான தேவை மேலும், மேலும் உள்ளது என்பதே அர்த்தம். ஆகவே சாம, பேத, தான, தண்டம் எவ்வகையில் அணுகினாலும் - சீமான் பர்னிச்சர் உடைப்பு தொடரும். எனது கூவ கேட்பதை பற்றி எனக்கு கவலை இல்லை. யாழ் களத்தில் ஒரு காலத்தில் சீமான் பிரச்சார திரிகளே ஓடியது. ஒரு அளவுக்கு பிறகு அநேகர் உண்மை விளங்கி விட ஒதுங்கி கொண்டார்கள். சிலர்ருக்கு இன்னும் விளங்கவில்லை. ஆனால் என்போறவர்களின் எழுத்துக்கள் நிச்சயம் ஒரு தாக்கத்தை கொடுத்துள்ளன. சீமான் அரசியலை விட்டு ஓடும் வரை எமது எழுத்துக்கான தேவை இருக்கிறது.
  23. நான் நின்று முக்குவது சீமானை எதிர்க்க. அதன் மூலம் ஈழத்தமிழர் தமிழ் நாட்டு அரசியலில் பக்கம் சாராதவர்கள் என்பதை நிலை நிறுத்த. திமுக வுக்கு கவர் எடுக்க அல்ல. அதை நான் செய்வதும் இல்லை. இரெண்டுமே அதிமுக. அடித்தும் திருத்த முடியாத கழுதைகள். இப்போ தலைவரும் இல்லை….வீரப்பனும் இல்லை….வீரப்பன் மகள் அப்போ பால்குடி….. ஆமை ஓட்டில் படகு பயணம் போனதாக சொன்ன அண்ணன் - இப்படி ஒரு சுப்பர் ஸ்டோரிலைனை விட்டு வைப்பாரா என்ன🤣. 2008 கிழக்கு முற்றாக இழக்கப்பட்டு, வன்னி படிபடியாக இழக்கப்பட்ட நேரம் - புலிகள் வாழ்வா சாவா என போராடிய நேரம் - தலைவர் வீரப்பனை பற்றி புத்தகம் வாங்கிப்படித்தாராமா🤣. இதை 2008 இல் குட்டி பையனாக இருந்தவர் நம்பலாம். எனக்கெல்லாம் 2008 ஏழு கழுதை வயசு - நான் எப்படி நம்புவேன். உங்கள் குலசாமி வீரப்பனை ஜெயலலிதா போட்டு தள்ளிய போது, அண்ணியின் அப்பா காளிமுத்து என்னவாய் இருந்தார்?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.