Everything posted by goshan_che
-
கல்லோயா குடியேற்றத்திட்டத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவு: இனிப்பும் கசப்பும் கலந்த நினைவுகள்!
இணைப்புக்கு நன்றி ஜி. சீனியர் கனகசுந்தரம் பிற்காலத்தில் செல்வநாயகம் அன்று ரயிலில் கூறியது எப்படிப்பட்ட தீர்க்கதரிசனம் என்பதை உணர்ந்திருக்க கூடும். நிச்சயம் 83 இல் ஓடும் போது அஜித் கனகசுந்தரம் அறிந்திருப்பார். இன்றும் இதே போல் “இலங்கையர்” என்ற அடையாளம் முந்தள்ளுப்படுவதையும், நாட்டில் தமிழ் இளையோர் பலர் அதன் பால் இழுவுண்டு போவதையும் காணும் போது - நாமும் செல்வநாயகம் போல “Young man (men and women) – Do you realize that you are driving a dagger into the hearts of the Tamil people?” என கேட்டு நகர்வதை விட வேறு எதுவும் செய்யவியாலாது. வரலாறு மீள் திரும்பி கொண்டே இருக்கிறது….கனக சுந்தரங்களின் விரல்களை கொண்டு அவர்களின் கண்களையே குத்து போக்கை இந்த தடவையாவது சேனநாயக்கள் கைவிடுவார்களா? எனக்கு நம்பிக்கை இல்லை.
-
சிறிலங்கன் ஏர்லைன்ஸ்சில் பங்குகளை வாங்க ஆறு கம்பெனிகள் ஆர்வம்
ஒப்பந்தம் சந்திரிக்கா காலத்தில் நடைமுறைக்கு வந்து 2008 இல் முறிந்தது என நினைக்கிறேன்.
-
சிறிலங்கன் ஏர்லைன்ஸ்சில் பங்குகளை வாங்க ஆறு கம்பெனிகள் ஆர்வம்
ஐரோப்பா, அவுஸ்(?) இருந்து இலங்கைக்கு நேரடி சேவை எனும் மொனோபொலியை கொண்டிருக்கும் வரை - ஒழுங்காக நடத்தினால் இலாபம் வரும் என்றே நினைக்கிறேன். ஆனால் இலங்கை அரசின் பிடியும் இருக்கும் எண்டால் சாண் ஏற முழம் சறுக்கும் நிலைதான். சந்திரிக்கா காலத்தில் எமிரேட்ஸ் அடைந்த மோசமான அனுபவம் பல முண்ணனி நிறுவனங்கள் இந்த முறை ஆர்வம் காட்டவில்லை என நினைக்கிறேன். ஏர் ஏசியா பெரும்பான்மை பங்கை வாங்கினால் - இலாபம் வரும் எனில் ஹீத்துரோ-பலாலி கூட ஓடுவார்கள். முன்னர் மன்செஸ்டர் - கோலாலம்பூர் ஓடினார்கள் .இலாபம் இல்லை என்பதால் இப்போ ஐரோப்பாவுக்கு வருவதில்லை.
-
சிறிலங்கன் ஏர்லைன்ஸ்சில் பங்குகளை வாங்க ஆறு கம்பெனிகள் ஆர்வம்
இலங்கையின் அரச நிறுவனமான சிறிலங்கன் ஏர்லைன்ஸ் பங்குகளை வாங்க தனியாரிடம் விண்ணபங்கள் கோரப்பட்ட நிலையில், ஆறு நிறுவனங்கள் ஆர்வம் காட்டியுள்ளன என கொழும்பு செய்திகள் சொல்கிறன. 1. AirAsia Consulting Sdn. Bhd. 2. Dharshaan Elite Investment Holding (Pvt) Ltd 3. FITS Aviation (Private) Limited 4. Sherisha Technologies Private Limited 5. Treasure Republic Guardians Limited 6. Hayleys PLC என்பனவே அவையாகும். செய்தி மூலம்: https://www.newswire.lk/2024/04/22/6-companies-submit-rfqs-to-buy-srilankan-airlines/ டிஸ்கி இதில் ஏர் ஏசியா ஏலவே இந்தியா+தென்கிழக்காசியாவில் மலிவு விலை சேவையாக அறியப்பட்டது. ஹேலீஸ் இலங்கையின் முண்ணனி கார்பரேட் நிறுவனங்களில் ஒன்று. ஏனையவை பற்றி தெரியவில்லை.
-
“இலங்கை வேடுவர்களுக்கு 5 இந்திய பழக்குடியினருடன் நெருங்கிய மரபணு தொடர்பு – ஆய்வில் தகவல்”
தகவலுக்கு நன்றி. ஜாவாவிற்கு அருகில் உள்ள சுமாத்திரா தீவில் உள்ள மெதான் நகரில் ஐரோப்பியர் காலத்துக்கு முன்பிருந்தே தமிழ் குடியிருப்புகளும் கோவில்களும் இருந்தனவாம். இப்போதும் உள்ளன. கடாரம் வரை தம் ஆளுகையின் கீழ் வைத்திருந்த தமிழ் பேரரசுகள் இந்த நாடுகளின் முக்கிய நகர்களில் எல்லாம், chamber of commerce போல ஒரு அமைப்பை, தமிழரை கொண்டு நிறுவி அதன் வழி, வரி மட்டும் வர்த்தகத்தை கட்டுப்படுத்தினார்களாம். அதேபோல் கோவில்களும், அதை சுற்றி தமிழ் குடியிருப்புக்களும் அமைத்துள்ளார்கள். வெள்ளையர் வெள்ளயருக்கென இலங்கை காலி கோட்டை, சென்னையில் அமைத்த நகர்கள் போல என நினைக்கிறேன். ஆகவே தமிழர்கள் அங்கே போனது போல ஜாவாகாரர் இங்கேயும் வந்திருப்பர் என்பது அத்தனை நடக்கவியலாத காரியம் அல்ல. https://en.m.wikipedia.org/wiki/Kampung_Madras
-
அயோத்தி ஸ்ரீ ராமர் கோவிலின் நிர்வாக முக்கியஸ்தர் கோவிந்த் தேவ் கிரி மகாராஜ் இலங்கைக்கு விஜயம்
கண்டியில் ஏது எமது அழிக்கப்பட்ட தலங்கள்? இவர் பண்டாரவள, சீதா-எலிய கோவிலுக்கு வந்துள்ளார் என நினைக்கிறேன். பிகு எமது கோவில்கள் முஸ்லிம் அல்லது கிறிஸ்தவரால் அழிக்கப்பட்டிருந்தால் இவர் தானாக போய் பாத்திருப்பார்.
-
“இலங்கை வேடுவர்களுக்கு 5 இந்திய பழக்குடியினருடன் நெருங்கிய மரபணு தொடர்பு – ஆய்வில் தகவல்”
Know the Etymology: 39 Place Name of the Day: Saturday, 03 June 2017 Cāvakac-cēri சாவகச்சேரி Cāvakac-cēri Cāvakar+cēri The Javanese settlement சொல்வது நானல்ல - சாட்சாத் தமிழ்நெற்.கொம் https://www.tamilnet.com/art.html?catid=98&artid=22810
-
“இலங்கை வேடுவர்களுக்கு 5 இந்திய பழக்குடியினருடன் நெருங்கிய மரபணு தொடர்பு – ஆய்வில் தகவல்”
நன்றி. இந்த மரபணு சுட்டிகளில் ஒன்று மதுரையிலும், அதேபோல் அபர்ஜினிகளிடமும் பரவலாக உள்ளது என 2000 ஆண்டுகளில் ஒரு ஆராய்சியும் நிறுவியுள்ளது. இனத்தூய்மை வாதம் இங்கே எவரும் பேச முடியாதது என்பதை இது காட்டுகிறது. சுத்தி சுத்தி பார்த்தால் எல்லாரும் ஆபிரிக்கரே. அதே போல் ஆபிரிக்காவின் ரிட் வெளியில் இருப்போரை தவிர மிகுதி இடங்களில் உள்ள மிச்சம் எல்லாரும், வந்தேறிகளே. இந்திய தீபகற்பகத்துள் முதலில் வந்த குழுக்கள் இரெண்டை திராவிட குடிகள் என வகைப்படுத்தின், அதன் பின் வந்தோரை ஆரியர் எனலாம் என நினைக்கிறேன். இதில் திராவிட குழுக்கள் கடைசி பனிக்காலம் முடியும் முன் தரை வழியாக இலங்கை வந்து அங்கே யக்கர், நாகர், வேடராக பரவி இருக்கலாம்.
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
#யாவரும் கேளிர்❤️
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
இந்த திரியை கட்சிசார்/எதிர் காணொளிகள் இணைக்கப்பாவிக்காமல் - போட்டி திரியாக மட்டும் பாவித்தால் நல்லம் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.
-
“இலங்கை வேடுவர்களுக்கு 5 இந்திய பழக்குடியினருடன் நெருங்கிய மரபணு தொடர்பு – ஆய்வில் தகவல்”
இதற்கு பொறுப்பான அமைச்சர் டயனா கமகேயா🤣 ம்ம்ம்…..அதுவும் உண்மையே.
-
“இலங்கை வேடுவர்களுக்கு 5 இந்திய பழக்குடியினருடன் நெருங்கிய மரபணு தொடர்பு – ஆய்வில் தகவல்”
சாவகச்சேரி என்பது முதலில் ஜாவகர் -சேரி எனப்பட்டதாம்? ஆனால் இது இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இருந்து ஒல்லாந்தர் கொண்டு வந்தமர்த்திய ஜாவகர்கள். ஆனால் இலங்கையில் நாகர், இயக்கர், வேடர் என்ற ஆதிகுடிகள் இருந்தன என சொல்கிறார்கள். இவர்களுடன் இருளருக்கும், பள்ளருக்கும் தொடர்பு இருக்கிறதாயின், விஜயனுக்கு முந்திய இலங்கையின் ஆதி குடிகள் திராவிட/தொல் தமிழரே என்பதை நிறுவ உதவியாக இருக்க கூடும்.
-
நாளை முதல் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
🤣…. கனபேர் 2022 இல் அடிச்சு பிடிச்சு தமக்கும் பிள்ளைகளுக்கும் சைக்கிள் வாங்கி போட்டு, இப்ப அவை கிடந்து உக்குது என்ற ரீதியில் சொன்னார்கள். சைக்கிள் பாவனை வெகுவாக குறைந்து விட்டது போலத்தான் எனக்கும் தெரிந்தது. கல்லுண்டாய், வல்லை, பொன்னாலை எதிர்காத்தில் சைக்கிள் உழக்கி போவதை இப்ப நினைத்தாலும் முதுகு நோவது போல் இருந்தாலும் - உடம்பு கொஞ்சமேனும் working condition இல் இருக்க அப்போ சைக்கிள் ஓடியது நிச்சயம் ஒரு காரணமே.
-
தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா? இல்லை. இதை false equivalence என்பார்கள். ஒன்று தமிழர் காணியில் அடாத்தாக தமிழரை துரத்தி விட்டு, அல்லது தமிழர் பிரதேசத்தில் உள்ள வனப்பகுதிகளை அழித்துவிட்டு அதில் அந்த பகுதியில் உள்ள இனம்பரம்பலுக்கு சரி எதிரான பரம்பலில், அரசே முழு கட்டுமானங்களையும் செய்து, மானியமும், காணியும் வேலையும் கொடுத்து உருவாக்கும் state sponsored colonization. மற்றையது தனி மனிதர்கள் தம் சுய விருப்பு, முயற்சியில் வாய்ப்பை தேடி இடம் பெயர்வது. Individual enterprise. சில சிங்களவர் இப்படி என்னிடம் கேட்டு நான் விளக்கம் கொடுத்ததும் ஏற்று கொண்டுள்ளார்கள். பலர் பதில் இல்லாமல் வாயை மூடியுள்ளார்கள். உங்கள் நண்பர் படித்தவன் என்கிறீர்கள் - இந்த அடிப்படை வேறுபாட்டை கூட விளங்க முடியவில்லையா அவரால்?
-
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளையும் வரலாற்று சான்றுகளையும் அறிவோமா?
பதிலுக்கு நன்றி. தொடரவும் ஆவலாக இருக்கிறது.
-
வங்குரோத்தான நாட்டை நோக்கி வரும் சுற்றுலாப் பயணிகள் – நிலாந்தன்!
🤣 மேலே “சேற்றை வாரி” இறைப்பதாக எழுதியது உங்களுக்கல்ல. கட்டுரையை பதிந்ததால் உங்களை quote பண்ணினேன். தவறாக விளங்கி கடுப்பாகி விட்டீர்கள் போலும். அரசியல் ஆய்வாளர்கள் மீது ஒரு போதும் நம்பிக்கை வைத்ததில்லை. இப்போதும் நிலாந்தன் சொல்வதால் இது உண்மை என நான் சொல்லவில்லை. நான் கண்டு வந்து எழுதியதை நிலாந்தனும் சொல்கிறார். ஆனால் எனக்கு செய்வது போல் அவரை இலகுவாக கடந்து போக முடியாது.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
எப்படி கருணாநிதி குடும்பத்துக்கு வக்கீல் வேலை செய்வது என் நோக்கம் இல்லையோ அதேபோல் வீரப்பன் கொள்ளையன் அல்லது கொள்ளையன் அல்ல என நிறுவுவதும் என் நோக்கமில்லை. ஆனால் வீரப்பனுக்கும் ஈழ விடுதலை போராட்டத்துக்கும் ஒரு சம்பந்தமுமில்லை. அவர் எமது குலசாமியும் இல்லை.
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
சொல்வது கோஷானாக இருந்தால் சேற்றை வாரி இறைகலாம். நிலாந்தனும் இப்படி எழுதினால் என்ன செய்வது🤣
-
வங்குரோத்தான நாட்டை நோக்கி வரும் சுற்றுலாப் பயணிகள் – நிலாந்தன்!
சொல்வது கோஷானாக இருந்தால் சேற்றை வாரி இறைகலாம். நிலாந்தனும் இப்படி எழுதினால் என்ன செய்வது🤣
-
நாளை முதல் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
தகவலுக்கு நன்றி. 2019 உடன் ஒப்பிடும் போது யாழில் மிக அதிக அளவில் பெற்ரோல் செட் டுகளை கண்டேன். சில இடங்களில் எதிரும் புதிருமாக இரெண்டு செட் அடித்துள்ளார்கள். அனதளவுக்கு எரிபொருளுக்கு கேள்வி உள்ளதா?
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
உலகில் முதல்முறையாக தேர்தல் மூலம் அதிகாரத்தை கம்யூனிஸ்டுகள் கைப்பற்றியது மே. வங்கத்தில் என நினைக்க்கிறேன். 1996 வரை மிக சிறப்பாகவே மே வங்கத்தை ஆண்டார்கள். 1991 ற்கு பின்னான நரசிம்மராவின் திறந்த பொருளாதார இந்தியா தூக்கி அடித்த விடயங்களில் மே. வங்க கம்யூனிஸ்டுகளும் அடக்கம். அதை விட திறமான ஆட்சியை இன்றும் கேரளாவில் தருபவர்களும் கம்யூனிஸ்டுகளே. நான் அடிப்படையில் பொதுவுடமை கொள்கைக்கு ஆதரவானவன் இல்லை. ஆனால் சுந்தந்திர இந்தியாவில் கறைபடியாத அரசியல் எனப்பார்த்தால் மீண்டும், மீண்டும் பட்டியலில் வருவது அவர்கள்தான். தமிழ் நாட்டிலும் அதுவே. அதே போல் கம்யூனிஸ்டுகள் இல்லாவிடில் எமர்ஜென்சி காலத்தில் இந்தியாவை ஒரு சர்வாதிகார நாடாக்கவும் வாய்ப்பு இருந்தது. கேரளாவில் எதிர்ப்பு, மத்தியில் கூட்டு என்பது தவிர்க்க முடியாத அரசியல் இக்கட்டு. ஆனால் இன்று வரை பிஜேபி யை மூர்க்கமாக நாடெங்கும் எதிர்க்கிறார்கள். நாம் ஒருபோதும் பிஜேபியோடு கூட்டணி வைக்கவில்லை என கூறும் தகுதி வேறு எந்த பெரிய கட்சிக்கும் இல்லை. நான் கம்யூனிஸ்ட் ஆதரவாளன் இல்லை - ஆனால் தமிழ் நாட்டில் இன்றைக்கும் நாட்டை கொள்ளை அடிக்காத, அடிக்கமாட்டர்கள் என நம்ப கூடிய அரசியல்வாதிகள் உள்ள கட்சிகள் எவை எனப்பார்க்கின்- அது கம்யூனிஸ்டுக்ளே.
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
நன்றி🙏 ——பதிலிட்ட பையனுக்கும் நெடுஸ்சுக்கும் 🙏. ———-
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
1991 மே 21 க்கு பின் தமிழ் நாட்டில் ஒரு ஈழத்தமிழ் குடும்பம் வாடைக்கு வீடு எடுப்பதே இயலாத காரியமாக இருந்தது.ஒரே இரவில் வீட்டை காலி செய்ய சொன்னர்வர்கள் பலர். அதே போல் பொலிஸ் பதிவு, அலைக்கழிப்புகள் ஏராளம். இது வெளியில் வாடகை வீட்டில் இருந்தோருக்கு. முகாமில் நிலமை இன்னும் மோசம். இந்த காலத்திலும் பின்பும் வேல் முருகன், மணி, தியாகு போன்றோரின் அர்பணிப்புகள் எப்போதும் நன்றிக்குரியன. ஆனால் வீரப்பனுக்கும், தமிழக அரசியல் கட்சிகளும் இடையில் இருந்தது இப்படியான நேர்மஐயான உறவு அல்ல. அது சந்தன கட்டை வியாபாரம் அதன் இலாபம் பற்றியது. அதே போல் தமிழகத்தில் இருந்து 1991 இன்பின்னர் பொருட்கள் அனுப்புவது தனியே உதவியாக மட்டும் அல்ல, வியாபாரமாகவும் நடந்தது. தமிழகத்தின் பல அரசியல் கட்சிகள் ஆட்டோ சங்கருடனும் தொடர்பில் இருந்தன. அதே கட்சிகள் ஈழ ஆதரவு நிலைப்பாட்டையும் எடுத்தன. ஆனால் ஆட்டோ சங்கருக்கும் ஈழ போராட்டத்துக்கும் ஒரு தொடர்புமில்லை. அப்படித்தான் வீரப்பனும். வீரப்பன் புலிகளை ஆதர்சித்து இருக்கலாம். இருக்கலாம் இல்லை. ஆதர்சித்தார். ஆனால் புலிகள் இவரை அருகில் கூட எடுக்கவில்லை. இவரை மட்டும் அல்ல பல ஆயுத வழி தமிழ் தேசிய இயக்களையும் தள்ளியே வைத்திருந்தனர். உங்களுக்கு தனிப்பட்டு அவர் என்னவாயும் இருந்து விட்டு போகட்டும், ஆனால் ஈழத்தமிழருக்கு அவர் குலசாமி இல்லை. எங்கள் குலசாமிகள் அடையாளம் இல்லாத உப்பு தரவைகளில் உறங்கி கொண்டிருக்கிறார்கள். 👆🏼🙏 👆🏼👍
-
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளையும் வரலாற்று சான்றுகளையும் அறிவோமா?
தொடருங்கள்🙏. புத்தரின் நான்கு பேருண்மைகளை நான் மிக இலகுவாக, எளிமையாக: 1. துக்கம் உள்ளது 2. துக்கத்தின் வேர் ஆசை 3. ஆசையை துறந்தால் துக்கத்கில் இருந்து விடுபடலாம் 4. 3ஐ அடுத்த கட்டமாகிய கொல்லாமை, காரூண்யம், அன்பு என்பனவற்றுக்கு நகர்தினால் - பிறவி கடலின் சுழற்சியில் இருந்து விடுபட்டு நிர்வாண நிலையை அடையலாம். இந்த புரிதல் சரிதானா? —————- எஸ் போவின் மொழிபெயர்ப்பை கையாள்கிறீர்களா?
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
அதே 1% தான். தமிழ் நாட்டில், இரு கட்சிகள் அத்தனை சீட்டையும் வெல்ல வேண்டும் என எனக்கு ஒரு நடக்க முடியாத ஆசை உண்டு - அது இரெண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள். தா.பாவை தவிர, பதவிகளில் இருந்தும் - கறை இல்லாத அரசியல் செய்தவர்கள் என்பதால். பிகு இப்பதானே மற்ற ஐடியில் நன்றி வணக்கம் சொல்லி போனீர்கள்😎 ————- @nedukkalapoovan @பாலபத்ர ஓணாண்டி உங்கள் கவனத்துக்கும்.