Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. ஹரோ, வட மேற்கு இலண்டனை சேர்ந்த போதனா சிவாநந்தன் என்ற 8 வயது தமிழ் சிறுமி ஐரோப்பிய பிளிட்ஸ் செஸ் சாம்பியன் தொடரை வென்றுள்ளார். பல அனுபவசாலி வீரர்களை தாண்டி இவர் வெற்றியீட்டியதாக பிபிசி கூறுகிறது. இவரை பிபிசி ஒரு chess prodigy, அசாத்திய திறமை உடைய குழந்தை-செஸ்-மேதை என விபரிக்கிறது. இத்தொடரில் போதனா ஒரு international master ஐ தோற்கடித்தார். ஒரு grandmaster உடன் சமன் செய்தார். செஸ் உலகமே இந்த கெட்டிக்காரத் தமிழ் பெண்ணை X வாயிலாக பாராட்டுகிறது. https://www.bbc.co.uk/news/uk-england-london-67770604
  2. பிகு இஸ்ரேலில் இரு நாடுகள் கொள்கையை மேற்கு அண்மையில் வலியுறுத்துவதாக நிக்சன் சொல்வது சரியில்லை. அநேகமாக அத்தனை மேற்கு நாடுகளும் 1940 களில் இருந்து இதையே வலியுறுத்துகிறன. ஆனால் ஒரு ஒப்பீடு சரிதான் ஐக்கியநாடுகள் தீர்மானம் இருந்தும், பலஸ்தீன தனி நாடு அமையாமைக்கு, இஸ்ரேல் + அதன் கூட்டாளிகள் 70% காரணம் என்றால், பலஸ்தீனத்தலைவர்கள், மக்களின் அணுகுமுறை 30% காரணம். அதேபோல், பல வாய்புகள் வந்தும், பாரிய தியாகங்களுக்கு பின்னும், இலங்கையின் வடக்கு கிழக்கில் ஒரு சுயாட்சி மாநிலம் இன்னும் அமையாமைக்கு, இலங்கை+ கூட்டுகள்+இந்தியா+மேற்கு 80% காரணம் எனில், தமிழ் மக்கள், தலைவர்களை அணுகுமுறை 20% காரணம்.
  3. சில விடயங்களை நிக்சன் மிகவும் எளிமைப்படுத்துகிறார். தமது இந்தோபசிபிக் பிராந்திய நலனே மேற்கு நாடுகளுக்கு முக்கியம் என நிக்சன் சொல்வது சரியே. ஆனால் நிக்சன் சொல்வது போல் மேற்குக்கு இலங்கை மேல் ஒரு பாசமும் இல்லை. இலங்கயில் ஒரு சுயநிர்ணய தமிழ் மாநிலம் அமையகூடாது (தமது நலனுக்கு தீங்கு ஏற்படாவண்ணம்) என்பதிலும் அவர்கள் உறுதியாக இல்லை. ஒஸ்லோ பிரகடனம் மேற்கு அனுசரணையில் வந்ததுதான். இந்தியாவோ, சீனாவோ, ரஸ்யாவோ அப்படி ஒரு தீர்வை இலங்கையில் கனவிலும் நினைக்காது. ஆனால் அது நாம் வலிமையாக இருந்த போது இலங்கையும், மேற்கும், வேறு வழி இன்றி இந்தியாவும் இறங்கி வந்த நிலை. அதன் பின் இலங்கை+இந்தியா தந்திரமாக செயல்பட்டு, மேற்கின் நலனுக்கு புலிகள் அழிப்பு இன்றி அமையாதது என்ற முடிவுக்கு மேற்கை வரப்பண்ணினார்கள். புலிகளின் அனுகுமுறையும் இந்த முடிவுக்கு வருவதை இலகுவாக்கியது. காஸா வில், தமது நலனுக்கு ஹமாஸ் அழியவேண்டும், அதற்காக மக்கள் அழிவதும் ஏற்புடையதே என்ற மேற்கின் அணுகுமுறையை காணும் நமக்கு, 2009 இல் அவர்கள் எடுத்ததும் இதுவே என்பதை புரியமுடியும். புலிகளின் அழிவுக்கு பின், நாம் பலமற்று போன நிலையில் - அவர்களுக்கு எம்மை நோக்கி வர எந்த தேவையும் இல்லை. ஆனால் இலங்கை கிட்டத்தட்ட சகல துருப்பு சீட்டையும் தன்னகத்தே வைத்திருந்தது. தொடர்ந்தும் சீன பூச்சாண்டி காட்டுகிறது. இந்த நிலையில்தான் கொவிட், ஏனைய காரணிகள் + கொவிட்டால் நெருக்கடி அதன் வழியே அறகளை என மேற்கு இலங்கையில் இறங்கி ஆடுகிறது. ஒன்றுபட்ட இலங்கை என்பது எப்போதும் மேற்கு வலியுறுத்தியதே. பாலா அண்ணைக்கு கூட இது விளங்கியது. எமது விடயத்தில் மேற்கு ஒருபோதும் ஒரு பிரிந்துபோகும் வாக்கெடுப்பை முன் மொழியவோ, ஆதரரிக்கவோ இல்லை. ஆனால் உள்ளக சுயநிர்ணயத்தை ஏற்க மேற்கு தயாராக இருந்தது. இப்போ எம்மை மேற்கு அதை கூட கைவிட நிர்பந்திக்கிறது என்றால் - அதற்கு எமது 2009 பின்னான பலமில்லா நிலையே காரணம். 2009 ற்கு பின் நாம் ஆயுதம் இல்லா வழிகளில் எமது கூட்டு பேரம் பேசும் வலுவை அதிகரிக்க என்ன செய்தோம்? எதுவுமில்லை. என்ன செய்யலாம்? 1. எம்மில் எம்பிகள் உள்ள ஒரு கட்சியாவது சீனாவை அணுகியே ஆக வேண்டும். இது இலங்கைக்கு தேள் கொட்டிய நிலையை கொடுக்கும். மேற்குக்கும், இந்தியாவுக்கும் இலங்கையை வழிக்கு கொண்டு வந்து எமக்கு ஒரு நியாமான தீர்வை தர வேண்டிய நிர்பந்தத்தை கொடுக்கும். 2. புலம்பெயர் நாட்டில் ஏனை நாட்டு உளவு அமைபுகளுக்கு விலை போகாத தலைமைகளை, அடி மட்டத்தில் இருந்து உருவாக்கி (இப்போ உள்ளோர் அனைவரையும் தூக்கி அடித்து விட்டு) அடிப்படைகளை விட்டு கொடாமல் பேரம் பேசலாம். லாபி பண்ணலாம். 3. மேற்கின் பாராளுமன்ற, நிர்வாக, அரச, இராஜதந்திர, பொருளாதார கட்டமைப்பில் தனி நபர்களாக உள்ளிட்டு மேலே வந்து அழுத்தம் கொடுக்கலாம். இவற்றை செய்ய புலத்திலும், மேற்கிலும் நமது தலைவர்கள், பிரமுகர்களாக கொள்கை பிடிப்புள்ள, விலை போகாதோர் தேவை. அதை நாம் செய்யும் வரை நாம் எல்லோருக்கும் கிள்ளுகீரைகள்தான். எமக்கான நியாயமான தீர்வு ஒரு கட்டிடம் என்றால் - அதன் அத்திவாரமாக அமையப்போவது எமது புலம், புலம்பெயர் அரசியலை இனத்துக்கு நேர்மையான மனிதர்கள், வெளிப்படைத்தன்மையுடன் முன்நகர்துவது. அத்திவாரத்தையே நாம் போடாமல், மேற்கு யன்னலை தர மறுக்கிறது, சீனா கூரையை தரவில்லை, இந்தியா சுவரை இடிக்கிறது என்பதில் ஒரு பயனும் இல்லை. மேற்கிற்கு வேண்டப்பட்டவர்களாவதும், ஆகாமல் விடுவதும் எமது கையில்தான் இருக்கிறது. இந்த அத்திவாரத்தை நாம் சரியாக போட்டால், மேற்கே வீட்டை கட்டித்தரும் நிலையை காலம் உருவாக்கும்.
  4. போலிக்கா வின் வருகை + ஜி ரி எவ், சிடிசி யின் இமாலய பேய்க்காட்டல். இரெண்டும் ஒன்றோடு ஒன்று சம்பந்தபட்டவை. RAW வின் ஏஜெண்டுகள் யாழ் உட்பட்ட தளங்களில் சில வருடங்களாக “மனங்களை பதப்படுத்தும்” ஒப்பரேசனில் ஈடுபட்டது இதை ஒட்டித்தான். இதன் முடிவில் சுமந்திரன் பங்களிப்போடு ஒரு வெளிப்படைதன்மை அற்ற, “மாவட்ட அபிவிருத்தி சபை” யை விட அதிகாரம் இல்லாத ஒரு பேய்காட்டல் தமிழர் தலையில் தீர்வு/ புதிய அரசியல் யாப்பு என்ற வகையில் இறங்க போகிறது. பொறுப்பு கூறலும் இல்லை, விசாரணையும் இல்லை, தீர்வு தந்தாகிவிட்டது. பிரச்சனை தீர்ந்தது. சுபம். இந்த திட்டத்துக்கு கரி ஆனந்தசங்கரி உடன்படவில்லை போல படுகிறது. ஏலவே ஐ எம் எவ் விவகாரத்தில் இலங்கையை தமிழர் நலன் சார்ந்து அழுத்திய ஒரே நபரும் இவரே. அதைகூட சாத்தியமற்ற நகர்வு என ஏஜெண்ட்ஸ் யாழில் விமர்சித்தார்கள். ஆனால் கடைசியில் ஐ எம் எவ், இலங்கையின் இராணுவ பாதீட்டில் கைவைத்தது. இலங்கைக்கும், ரோவுக்கும் முகத்தில் கரி. இவ்வாறாக சுயாதீனமான, வெளிப்படையான நடவடிக்கைகள் சிலதை கரி எடுப்பதை அவதானிக்ககூடியதாக உள்ளது. ஆகவேதான் அவர் மேல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது என நினைக்கிறேன்.
  5. கரி தான் சரியான பாதையில் போகிறார் என்பதை காட்டிய இன்னுமொரு சந்தர்பமாக நான் இதை காண்கிறேன். மேற்கு நாடுகள் ஒவ்வொன்றிலும் இப்படி ஒருவர் வந்து அவர்கள் ஒன்றாகினால் பலதை சாதிக்கலாம். எனக்கு கரியின் அரசியல் பற்றி அதிகம் அல்ல எதுவுமே தெரியாது…ஆனால் தொலைவில் இருந்து பார்க்கும் போது…..2009 க்கு பின்னான புலம், புலம்பெயர் ஈழத்தமிழ் அரசியல்வாதிகளில் அடிப்படை கொள்கை தெளிவு, நம்பகதன்மை மிக்கவராக கரி எனக்குப்படுகிறார். உண்மையில் கரி ஒரு அடுத்த தலைமுறைத்தலைவர்தான். இலண்டனில் உள்ளவர்கள் எல்லாம் ஊரில் இருந்து வந்த கள்ளர். இங்கேயும் ஒரு அடுத்த தலைமுறை அரசியல்வாதி மிக விரைவு தோன்றக்கடவது.
  6. உழைப்புக்கு நன்றி🙏. உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்.
  7. இதை நானும் வழிமொழிகிறேன்.
  8. இந்த பேட்டியில் அதை (pray for Sri Lanka) தான் போட்டதாக ஒத்து கொள்கிறார். ஆனால் தானாக அதை உருவாக்கவில்லை, பேஸ்புக் போட்டதை போட்டேன் என்கிறார். இராவணனோ இன்னொரு படி மேலே போய் இலங்கை கொடியை போடவில்லை என கவர் எடுக்கிறார். கார்த்தி இலங்கை கொடியை போட்டு, pray for Sri Lanka என போட்டது உறுதியாகியுள்ளது. முடிவு இதை வைத்து மட்டும் அவரை முத்திரை குத்த முடியாது. ஆனால் நம்பவும் முடியாது. சாதராண மக்கள் நாமே இலங்கை மீது அனுதாபம் வரினும் கொடியை அதன் வரலாற்றை உணர்ந்து தவிர்க்கும் போது- இப்படி ஒரு குடும்பத்தில் இருந்து வந்தவர் - பேஸ்புக் போட்டது நானும் போட்டேன், இத்தாலிக்கும் போட்டேன் என சொல்வது - யோசிக்க வேண்டிய விடயம்.
  9. நன்றி முதல்வன். பார்க்கிறேன்🙏
  10. https://www.facebook.com/100077415585753/posts/pfbid02GZ4T6uNq4KtxvWVwP3xxNo7uKy4MadXBUny5PBJNBZXJ1kwQupJwibJxQhzjmKel/?app=fbl நன்றி
  11. நன்னி, முடிந்தால் ஒரு fact check உதவி. இந்த கார்திக் pray for Sri Lanka, என்ற செய்தியுடன், இலங்கை கொடி போட்ட அவரின் முந்தைய முகபுத்தக புரோபைல் என சில படங்கள் கண்ணில் பட்டது. இவை உண்மையா? போட்டோஷாப்ப்பா?
  12. என்னதான் நளபாகம் செய்ய தெரிந்தாலும்…பகலாபாத் எப்படி கிண்டுவது எண்டு யூடியூப்பில் சமையல் குறிப்பு பார்த்து அறிந்து கொள்வதில் தப்பொன்றும் இல்லையே?
  13. இல்லியா பின்ன🤣 கிறிஸ்மஸ் என்பதால் இந்த முறை சங்க கூட்டம் விரைவாக கூட்டப்பட்டுள்ளது. சிலதை சொல்ல மனது விழைந்தாலும்…..🤣 நீங்கள் இன்னும் “அமேசிங் இண்டியன்ஸ்” காலத்தில நிண்டு, பாஸ்வேர்ட் கேக்கிறியள்🤣. டாக்டர் பிரகாஷே உள்ளே போய் வெளியேயும் வந்திட்டார். Hint - ட்விட்டரை ஏன் மஸ்கார் X என மாத்தினவர் எண்டு யோசியுங்கோ….
  14. 3 நாளில் கியவ்… ரஸ்யா டாங்கிகள் மீது உக்ரேனியர் பூங்கொத்து எறிவார்கள்…. ஒட்டுமொத்த உக்ரேனும் ரஸ்யவசமாகும்…. இப்படி பலதை சொன்னதையும் நினைவூட்டுகிறேன்🤣. அமெரிக்காவில் ரிபளிக்கன்ஸ் கை ஓங்கினால் உக்ரேன் பாடு கஸ்டம், டிரம்ப் வந்தால் (அவர் புட்டினிடம் பிடி கொடுத்துள்ளவர்) ஐரோப்பவின் நிலையே கஸ்டம் என்பதை உக்ரேன் போருக்கு முதலே இங்கே பலர் எழுதிய படிதான் இருந்தார்கள். உங்களுக்கு பதிலாகவே இவற்றை நான் எழுதியதும் உண்டு. உங்களைத் தீர்கதரிசி, மற்றவர்களை விடு பேயன் என் நிறுவி விடும் மேட்டுகுடி அந்தரிப்பில் இவற்றை செலக்டிவ் அம்னீசியாவில் விட்டு விட்டீர்கள் போலும்🤣.
  15. ஓம்…ஜனநாயக நாடுகளில் இது ஒரு பிரசிச்சினை. அதிகாரம் கட்சிக்கு கட்சி மாறுவதால் சில விடயங்களில் கொள்கை தளம்பல் இருக்கும். பொதுவாக இது அமெரிக்க வெளியுறவு கொள்கையில் இருப்பதில்லை. ஆனால் உக்ரேன் விடயத்தில் இருக்கிறது. காங்கிரஸ் மட்டும் அல்லாது பிரெசிடென்சியும் ரிப்பளிக்கன் வசமானானால் செலன்ஸ்கி தலைமையிலான உக்ரேனுக்கு சங்குதான். இது புட்டினுக்கும் தெரியும் - ஆகவேதான் he is playing the long game. விடுதலைபுலிகள் பற்றி முன்னர் எழுதும் போது ஒரு தடவை எழுதினேன். Perfect should never be the enemy of the good. அதாவது நாம் விரும்பும் இலட்சிய தீர்வை அடைவதற்க்காக, கிடைக்க கூடிய நல்ல தீர்வை கைவிடக்கூடாது. செலன்ஸிக்கும் அதுதான். அடுத்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரைக்கும்தான் நேரம். அதற்குள் ஒன்றில் இழந்த 20% உக்ரேனை மீட்கவேண்டும், அல்லது மிகுதியையாவது தக்கவைக்கும் ஒரு உடன்படிக்கைக்கு போகவேண்டும். ஆனால் இது ஒன்றும் புதிய விடயம் அல்ல. புட்டின் உக்ரேனில் இறங்கிய தருணமே, டிரம்ப் இதர தீவிர வலது ரிபப்ளிகன் ஆட்கள் சொன்னதை வைத்து, பைடன் தோற்றால் இப்படி ஆகும் என நான், ஜஸ்டின் போன்றோர் முன்பே எழுதியுள்ளோம். பிகு ஆனால் அரசியலில் எதுவும் விரைவில் மாறலாம். தீவிர வலதுசாரிகளின் டார்லிங் தற்போதைய அர்ஜெண்டீனா அதிபர். அவரின் பதவி ஏற்பில் அவர் செலென்ஸ்கியை கொஞ்சாத குறை அவ்வளவு அரவணைப்பு. செலன்ஸ்கியின் தென், வட அமெரிக்க பயணங்கள் தனியே ஊடகங்களை வாசித்துவிட்டு வாந்தி எடுப்போர் சொல்வது போல் “பிச்சை பயணமாக” மட்டும் இல்லாமல், ஆர்ஜெண்டினா வழியாக, American Right இடம் தன்னை/உக்ரேனை re position பண்ணும் முயற்சியாயும் இருக்கலாம்.
  16. யூகே யிற்கான இஸ்ரேல் தூதர் - “இரு நாடுகள் கொள்கை” இனி சரிவராது என்ற தொனியில் பேட்டி கொடுத்துள்ளார் (இதுவே இப்போதைய இஸ்ரேலிய அரசின் நீண்ட கால நோக்கு). இதை சுனக் மறுதலித்துள்ளார். தீவிரவாத இஸ்ரேலிய குடியேறிகளுக்கு பிரிட்டன் வர தடை என கமரன் அறிவித்தார். https://www.bbc.co.uk/news/live/world-middle-east-67709805
  17. யுத்தமுனையிலும், கருத்துக்களத்திலும் stalemate. கூடவே பனிக்காலம் வேற. இரு பக்கத்திலும் பெரிய பீரங்கிகள் ஓய்வில் இருக்கும். சின்ன, சின்ன சில்லறை பிஸ்தோலுக்கள் நாமும் இருக்கிறோம் என்பதை காட்ட இடைக்கிடை வெடிக்கும்.
  18. மேலே சொன்ன பட்டியலில் 87 ஒப்பந்தத்தை வேண்டும் என்றே சேர்க்கவில்லை. அது சம்பந்தமாக என் பார்வை வேறுபட்டது. யாழில் முன்பே பலதடவை எழுதியதுதான். எமக்கு சரியான பொறுப்புக்கூறல், தீர்வு அமைந்த பின் இந்த பொது அடையாளத்தை சுமக்கும் படி கொரோனா அது நியாயம். ஆனால் இவர்கள் அணுகுமுறையோ, பிரச்சனையே நாம் இந்த பொது அடையாளத்தை சுமக்க மறுப்பதுதான் என்பது போல இருக்கிறது.
  19. எனது கருத்து, 1. இந்த பிரகடனம் பற்றி எனக்கு இந்த திரி வரும் வரை தெரியவில்லை. எனக்கு மட்டும் இல்லை புலவர் உட்பட பலருக்கு தெரியவில்லை. இது எமது பிழையா? அல்லது இப்படி ஒன்றை தனியே தமிழ் காடியனில் மட்டும் போட்டு விட்டு, மக்களை சம்பந்த படுத்தாமல் விட்ட ஜி ரி எப் வின் பிழையா? பிழை சரிக்கு அப்பால் - இது வெளிப்படைத்தன்மை அதற்காக எனக்கு படுகிறது. 2. இலங்கையோடு நேரடியாக நாம் எழுதும் எதுவும் அது எழுதபட்ட காகிதத்தின் பெறுமதி கூட அற்றது என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. டட்லி-செல்வா, பண்டா-செல்வா, திம்பு, ஒஸ்லோ….இப்போ இமாலயன். 3. இதை வாசித்து பார்த்தால் இது ஜஸ்டின் அண்ணா சொன்னது போல் மிகவும் உயர் நிலை சாராம்சமாக இருக்கிறது. யாரும் இல்லை என மறுக்கமுடியாத விடயங்கள் - அது மட்டும் அல்ல ஏலவே இலங்கை சட்டத்தில் உள்ளவைதான் இதில் இருக்கிறன. ஆகவே இதில் நான் எந்த முன்னேற்றத்தையுமோ, எமக்கான தீர்வுக்கான blueprint ஐயோ காணவில்லை. இது எல்லோரும் இலங்கையர், இலங்கைக்குள் ஜனநாயகத்தை, மனித உரிமையை, பொருளாதார அசமச்சீரை சரி செய்தால், அதிகாரத்கை மாகாண, மாவட்ட மட்டத்தில் பகிர்ந்தால் இனப்பிரச்சனை தீர்ந்துவிடும் என்ற பழைய சிங்கள அணுகுமுறையின் புதிய வடிவாகவே எனக்கு படுகிறது. இது இனைப்பிரச்சினையின் அடிப்படையான தமிழர் அபிலாசைகள் பற்றி எதுவும் சொல்வதாக எனக்கு படவில்லை. 4. அடுத்து வசி சொன்ன விடயம். எமது அபிலாசைகள் நிறைவேறாவிட்டால் கூட பரவாயில்லை, இருக்கும் சட்டத்தையாவது அமல்படுத்த இது உதவினால் பரவாயில்லை. ஆனா தொடரும் நில அபகரிப்பு இதர விடயங்கள் - அது கூட சாத்தியமில்லை என்றே சொல்லி நிற்கிறன. 5. நல்லாட்சியில் சுமந்திரனை வைத்து ரணில் புதிய அரசியல் சட்ட நாடகம் ஆடி நேரம் கடத்தியது போல் இப்போ சுரேந்திரனை வைத்து ஆடுகிறார்.
  20. எழுதினால்…. எல்லாம் தெரிஞ்ச மாதிரி ஒவ்வொரு திரியிலும் எழுதுறார்….. சதா யாழில் கிடக்கிறார்…வேலைக்கு போறேல்லையோ…. சுய விலாசம் காட்ட எழுதுறார்…. இத்யாதி…இத்யாதி…. தேவையில்லை அண்ணை…. எதாவது புளிச்சல் ஜோக்கை கொப்பி பேஸ்ட் அடிப்பது, அல்லது கருத்தேதும் எழுதாமல் திரிக்கு திரி ஆட்களை குறிவைத்து தாக்குவது… இப்படி நாட்களை ஜாலியாக கழிக்கலாம் என்ற முடிவில் இருக்கிறேன்.
  21. நான் நினைக்கிறேன் இவர்கள் எல்லாரும் தமிழ் எழுதுவது எப்படி என மறந்து விட்டார்கள் என. இதற்குள் எழுதுபவர்கள் மீதும் நீங்கள் அதிகம் எழுதுகிறீர்கள் என குறை வேறு படுவார்கள். பேசாமல்….. உலகத்தமிழருக்கு ஒரு வீடியோக்கடை என மாத்திவிடலாம்🤣
  22. அனுமான் இலங்கைக்கி போய் செய்த வேலை மாரித்தான் முடியும்🤣
  23. இந்த விளம்பரங்களை யாழ்களம் ஆட்களிடம் நேரடியாக கோராமல் - சில நிறுவனங்கள் ஊடாக செய்ய முடியும் என நினைக்கிறேன். உதாரணமாக நான் தற்ஸ் தமிழை பார்க்கும் போது எனக்கு இலண்டனில் வீடு, கார், சப்பாத்து வாங்கும் விளம்பரம் எல்லாம் வரும். நிச்சயமாக இதை என்னை டார்கெட் பண்ணி தற்ஸ்தமிழ் செய்யவில்லை. ஆனால் அவர்கள் பக்கதில் இந்த விளம்பரம் ஓட, அதை நாம் அழுத்தி பார்க்க, அவர்களுக்கு அதில் ஒரு தொகை போகிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ், இன்னும் சில தளங்களில் விளம்பரத்தை பார்க்காமல், பக்கத்தை பார்க்கவே முடியாது. Popup blocker பாவித்தால், நம் தளம் நடக்க விளம்பர பணம் தேவை எனவே popup blocker ஐ நூத்து விட்டு வாருங்கள் என சொல்லும். இப்படி செய்யலாமா? எனக்கு end user அனுபவம்தான். டெக்னிக்கல் சிக்கல் இருக்கலாம்.
  24. பிபிசி எம்மிடம் எடுக்கும் licence fee யில் தான் ஓடுகிறது. டெலிகிராப், டைம்ஸ், விகடன், குமுதம், இன்னும் பல paywall. சி என் என், ஸ்கை, யூடியூப், பேஸ்புக், தட்ஸ்தமிழ் - விளம்பரம் மற்றும் popups. இணையத்தில் யாழோடு ஓடத்தொடங்கிய பலர் இப்போ இல்லை. இருப்போர் மேலே சொன்ன மூன்று வகையில் ஏதோ ஒரு வகையில் செலவையாவது எடுக்கிறார்கள். யாழ், யூடியூப் அல்லது தட்ஸ்தமிழின் funding model இல் செயல்பட முடியாதா? எனக்கு அதிக விளக்கம் இல்லை. ஆனால் ஒரு யோசனை. ஒவ்வொரு திரியிலும் விளம்பரத்தை போட்டால் நாம் அதை கர்ம சிரத்தையாக அழுத்தி, ஓடவிட்டு ad revenue வை கூட்ட முடியும்? இந்த முறையில், எவரும் நான் காசு கொடுக்கிறேன் என உதார் விடவும் முடியாது. # மனமுண்டானால் மார்கபந்து

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.