Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. நான் அவதூறை அள்ளி கொட்டவில்லை. எல்லாமும் தரவுகளின் அடிப்படையிலான சீமான் பற்றிய எனது கருத்து மட்டுமே. ஆனால் நான் எழுதாத 3 மாதத்தில் இங்கே என்ன நடந்த்தது? நான் தெளிவாக சொல்லி விட்டேன், @விசுகு அண்ணாவுக்காக இன்னொரு தரம் சொல்கிறேன். தமிழக அரசியலில், ஈழத்தமிழர் கட்சி சாராமையயை இரு வகையில் நிலை நிறுவலாம். 1. எந்த கட்சியையும் சாராத நிலை (புலிகளின் நிலைப்பாடு) 2. எல்லா கட்சிகளையும் விமர்சிக்கும் நிலை. பையன், முன்னர் இசை போன்றோர் யாழிலும், ஏனையோர் சமூகவலை உலகிலும், தீவிர நாதக ஆதரவு, திமுக கூட்டணி எதிர் நிலை எடுத்தபடியால் - இனிமேல் 1ம் வழியை பின்பற்ற முடியாது. ஆகவே ஈழத்தமிழர் கட்சி சாராதோர் என காட்ட என்போன்றோருக்கு இருக்கும் ஒரே வழி, ஈழ தமிழராக சீமானை விமர்சிப்பதே. ஆகவேதான் சமயம் கிடைக்கும் போதெல்லாம் அண்ணனின் பர்னிச்சர் உடைக்கப்படுகிறது.
  2. நீங்க ஆர்விச்சி, மூலம் தாக்கினது தெரியும் ப்ரோ, ஆனால் அது ஆர் பி ஜி அளவுக்கு தாக்கமில்லை. டென்சன் ஆகாம அண்ணன் பேசிய வீடியோ வை பாருங்கோ. எவ்வளவு அழகா, தமிழில் படிப்பதை வலியிறுத்துகிறார் (அடுத்தவன் பிள்ளைக்கு).
  3. என்னது டெபாசிட் வாங்கினீங்களா?🤣 இதெப்ப? ஒவ்வொரு தொகுதியிலும் அத்தனை தொகுதியிலும் டெபாசிட் காணிக்கை அல்லவா செலுத்தி உள்ளீர்கள்🤣. இரண்டு பவுண்ஸ் (2 pounds) எண்டு ஸ்டைலா சொல்லுங்க ப்ரோ🤣
  4. ஜெய் ஜெக்கம்மா…சை..காளியம்மா… ஏதோ வெளிநாட்டில் இருந்து உருட்டுவதால் தப்பித்தீர்கள். இதுவே நீங்கள் தமிழ் நாடில் இருந்து இதை சொல்லி, பாக்கியராசன் வழி அண்ணி காதுக்கு போ இருப்பின், இப்போ உங்களை முன்னாள் தம்பி ஆக்கி இருப்பார்கள். பரவாயில்லை…குறைந்தது இன்னும் 5 வருட அவகாசம் இருக்கிறது, மாவீரன் அரசியல் வருகையை எப்படி முட்டு கொடுத்து தூக்கலாம் என இப்போதே யோசிக்க தொடங்குங்கள். இதுவரை சீமான் அடித்த அத்தனை பல்டிக்கும் வகை வகையாக முட்டு கொடுத்த உங்களுக்கு இது அதிக கஸ்டமாய் இராது. பிகு சின்ன கருணாநிதி அடுத்து என்ன பல்டி அடிப்பார் என நான் சொன்னவை அப்படியே நடப்பது போல் மாவீரனின் அரசியல் வருகையும் நடக்கும். அவருக்கு துணையாக முதலில் சுவீகார புத்திரன் இறக்கப்படுவார். # காலெண்டரில் குறித்து வைத்துக்கோ(ங்கோ).
  5. அருமையான தரவு சார் கருத்து🙏. பிகு இதை அப்படியே கடந்து போய் விட்டு, வாக்கு மிசினில் ஓட்டை என்பார்கள்🤣. அட குழப்பம் பிடிச்ச மக்களா, ஏமாற்றப்படும் தேர்தல் முறையில் எப்படியும் தோற்ப்போம் என தெரிந்தும், ஏன் ஒவ்வொரு முறையும் டெபாசிட்டை பறி கொடுக்கிறீர்கள் என 10 வருடமாக கேட்கிறேன் பதில் இல்லை.
  6. 🤣 நீங்கள் சும்மா இருந்தாலே யாழில் சீமான் பர்னிச்சர் உடைவது குறையும் என்பது என் கணிப்பு🤣. எனக்கு (ஐலண்ட், ஏனையோருக்கும் என நினைக்கிறேன்) சீமானும், திமுக வும் ஒன்றுதான். மாறி, மாறி எவர் பெர்னிச்சரை உடைத்தாலும் எனக்கு சந்தோசமே🤣. # ஆரம்பிக்கலாமா
  7. தாலிபான்கள், பஜ்ரங்தள், தமிழ்தாலிபான்கள், சிங்கலே…. எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள்தான். கள்ளன் ஸ்டாலின். ஆனால் அண்ணன் சீமான் மட்டும் என்னவாம்? 1. மச்சானுக்கு சீட் கொடுக்கிறார் 2. சம்பந்தமே இல்லாமல் கட்சி கூட்டங்களில் அண்ணியை முன் வரிசையில் அமர்த்துகிறார். 3. மாவீரன், சுவீகார புத்திரன் வயசுக்கு வந்ததும் வருவார்கள். கள்ள திமுக. ஆனால் அண்ணர் மட்டும் லேசா? 1. அக்யூஸ்ட் நம்பர் 2 வை சந்தித்து கூழை கும்பிடு போட்டு விட்டு, செய்தியாளரை சந்திக்க திராணி இல்லாமல் பின் கதவால் எஸ் ஆகினார். (பின் கதவு சீமான்🤣). 2. விஜி அண்ணி வழக்குக்கு பயந்து, ஸ்டாலின் பதவி ஏற்றதும் நேரில் சந்தித்து கூழை கும்பிடு போட்டு, கருணாநிதி படம் முன்னால் நின்று படம் எடுத்து, விஜி வழக்கை சாதகமாக முடித்துக்கொண்டார்.
  8. இலங்கையில் தமிழ்த் தேசிய அரசியலின் தந்தை, தமிழரசு கட்சியின் நிறுவனத் தலைவர் செல்வா. இப்போ அந்த கட்சியின் தலைவர் சிறிதரன், பேச்சாளர் சும். இவர்கள் இருவரின் தவறுகளுக்காக, செல்வா, தமிழ் தேசிய கொள்கையை விமர்சிப்பது எப்படியான அபத்தமோ…அப்படி ஒன்றே இது.
  9. ஆமா…ஆமா… கர்நாடக சங்கீதம், தமிழ் நாடு கிரிகெட் எல்லாம் அவாளின் பரம்பரை சொத்து. அதில் நான் பிராமின், அல்லது பெரியாரை புகழும் பிராமினை மரியாதை செய்தால் கோவம் வருமா இல்லையா? பிகு இத்தனை வருடத்துக்கு பிறகே இத்தனை கொழும்புன்னா, இராஜாஜி முதல்வர், பண்டிட் ஜி பிரதமர் என அவாள் கோலோச்சிய அந்த காலத்தில், பெரியார் போராடிய போது எவ்வளவு கொழுப்பு இருந்திருக்கும்.
  10. அவர்கள் (பையனை தவிர) ரொம்ப தெளிவானவர்கள். இரெண்டுக்குமான தெளிவு அவர்களுக்கு நல்லாகவே இருக்கிறது. இது விடயம் புரியாதவர்களை பேய்க்காட்ட என வேண்டும் என்றே ஏற்படுத்தப்படும் செயற்கையான குழப்பம். நேட்டோ ஒற்றுமையையும், பைடனின் மகனின் உக்ரேன் ஊழல் விடயத்தையும் சம்பந்தமில்லாமல் எப்படி டிரம்ப் கலந்து கட்டுகிறாரோ, அப்படி. தெலுங்கு வம்சாவழி ஆதிக்கம் = கருணாநிதி குடும்ப கொள்ளை = பெரியார் கொள்கை. என ஒரு மிக தப்பான ஆனால் எளிய சமன்பாட்டை பொய்கள் மூலம், மூலம் திரும்ப திரும்ப சொன்னால் - அதிகம் ஆராயாத மக்கள் நம்பி விடுவார்கள் என நினைக்கிறார்கள். Another leaf out of Trump’s playbook. இந்த திரியில் அண்ணனின் ஆங்கில மோகத்துக்கு ஒரு அளவுக்கு மேல் முட்டு கொடுக்க முடியாது எல்லா பக்கத்தாலும் கேட்டை போட்டதும், இந்த செயற்கை குழப்பத்துக்கு விளக்கம் கேட்டு திரியை சீமானின் பிக்காலித்தனத்தில் இருந்து திசை திருப்ப முயல்கிறனர்🤣. பிகு இவர்கள் அனைவருமே டிரம்ப் ஆதவாளர் அல்லது அனுதாப பார்வையாவது உள்ளோர் என்பதும் நோக்குக்குரியது.
  11. 🤣 வெகுமானத்துக்கு வாக்கை விற்றால்… வைப்பீர்கள் உங்கள் பிள்ளைகள் எதிர்காலத்தை அடமானம்!
  12. பிற்சேர்க்கை II குப்பை கூழம். ஒப்பீட்டளவில் தெற்காசியாவில் சுத்தமான நாடு என் இலங்கையை சொல்லலாம் என்பதை நம்மில் பலர் ஏற்போம் என நினைக்கிறேன். ஆனால் இந்த நிலை விரைந்து கெட்டு வருகிறது. கிராமப்புறங்கள், சிறு நகர்கள் முன்னர் போல இருந்தாலும். நகரங்களில் இது ஒரு பாரிய பிரச்சனையாக மாறி வருகிறது. யாழில் நகரத்தில் ஒரு குப்பை தொட்டியை தேடி அரை கிலோ மீட்டர் நடந்தாலும் கிடைப்பதில்லை. அதே போல் நடைபாதைகளும் சரியாக இல்லை. என்னதான் வீட்டில் கொசு வலையில் படுத்தாலும், ஏசி பஸ்சில் போனாலும், யாழில் அதிகாலையில் இறங்கி ஆட்டோவுக்கு காத்திருக்கும் அந்த பத்து நிமிடத்தில் - நுளம்புகள் உடலை மொத்தமாகவும், சில்லறையாகவும் துவம்சம் செய்து விடுகிறன. இவை அருகில் நீர்தேங்கி நிற்கும் வடிகாலில் இருந்து வருவது கண்கூடு. அதே போல் இன்னும் சில இடங்களில் ஊறணிகள், கேணிகளும் பாசி படர்ந்து, குப்பை சேர்ந்து இளம்பச்சை நிறத்தில் நாற்றம் எடுக்கும் நிலையில் உள்ளதை கண்டேன். புகையிலைக்கு தடை என செய்தியில் இரு வருடம் முன் வாசித்த நினைவு. ஆனால் யாழில் புகையிலை பயிர்செய்கை முன்னை போலவே தொடர்கிறது. கேட்டபோது, அறகலவுக்கு பின் தடை பெயரளவில் மட்டுமே என்கிறனர். யாழின் சதுப்பு நிலம் என கூறத்தக்க புங்கங்குளம் - நாவற்குழி பகுதியில் சட்ட விரோத குப்பை கொட்டும் போக்கு அதிகரித்திருப்பதாக சொல்கிறனர். பொம்மைவெளியின் யாழ் நகரை அண்டிய பகுதி, கோம்பையன் மணல் சுடுகாட்டுக்கு எதிரே உள்ள பகுதிகள், கிட்டதட்ட 90% அளவில் நிரப்பி கட்டி, மேட்டு நிலம் போல காட்சி அளிக்கிறது. கட்டிடங்களும் எழும்பியுள்ளன. இவை சட்டவிரோத கட்டுமானம் என்றே ஆட்கள் சொல்கிறார்கள். மாரி காலத்தில் வெள்ள காடாக இருக்கும் flood plain இது. சென்னையை போல வருடம் ஒரு தரம் வெள்ள அனர்த்தம் வரும் நகராக யாழை மாற்றி வருகிறார்களோ என எண்ணத்தோன்றியது. கொழும்பில் கோட்டா காலத்தை போல அன்றி நகரின் அழகுறுத்தல், தூய்மை குன்றியே உள்ளது. வெள்ளவத்தை, தெகிவளை கால்வாய்கள் உட்பட சகல கால்வாய்களும் கடக்கும் போது நாற்றம் எடுக்கிறன. சரிந்து விழுந்து பலரை காவு கொண்ட, கொலன்னாவ குப்பை மலை, கைவிடப்பட்டுள்ளது. அதன் மேல் செடிகளும், மரங்களும் வளர்ந்து, முழுவதும் பசுமையாகி ஏதோ காட்டு மலை போல தோன்றுகிறது. கொழும்பை விட்டு வெளியேறும் மூன்று ரயில் தடங்களிலும் கணிசமான அளவு தூரம் நகரமயமாதல், குப்பை கொட்டலை அவதானிக்க முடிகிறது. உலகின் மிக ரம்மியமான ரயில் பயணங்களில் ஒன்று என நான் கருதும் கொழும்பு-காலி ரயில் தடத்தில், தெஹிவள-களுத்தற வரை அழகிய கரையோரம் எங்கும் குப்பையை கொட்டி, பற்றவும் வைத்து, நாசமாக்கி உள்ளார்கள். பிரதான வீதிகளை பொறுத்த மட்டில், வடக்கில் நன்றாக உள்ளது, ஆனால் வடக்கை போல அன்றி கிழக்கிலும், தெற்கிலும் வீதிகள் காப்பெட் ஆகி 15 வருடம் ஆக போகிறது. இந்த வீதிகள் பராமரிப்பின்றி உடைய தொடங்கி விட்டன. 2019 இல் அருமையாக இருந்த வீதிகள் சில இப்போ குன்றும் குழியுமாக உள்ளன. இவற்றை பராமரிக்க அரசிடம் பணம் இல்லை என்பது கண்கூடு. நிலமை இப்படியே தொடர்ந்தால் 90களில் இருந்த நிலைக்கு வீதி கட்டமைப்பு விரைவில் வந்து விடும். யாழ்பாண 1ம் வகுப்பு ஏசி ரயில் இருக்கைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் உடைந்தே உள்ளன. இந்திய தரம் பல்லிளிக்கிறது. உண்மையில் இரெண்டாம் வகுப்பு வசதியால இருக்கிறது. புதிதாக எத்தனையோ பெட்டிகள் போனவருடம் வந்ததாக சொன்னாலும், நான் காணவில்லை. கொழும்பு புறநகர் ரயில் இன்னும் 1990இல் பிரேமதாசா தருவித்த அதே பெட்டிகளுடந்தான் ஓடுகிறது. யாழ் வவுனியா 1ம் வகுப்பு 1000, இரெண்டாம் வகுப்பு 650, முன்றாம் வகுப்பு 400 என நினைவு. அரச பஸ், ரயில்களின் நாட்டின் காசில்லாததன்மை தெளிவாக தெரிகிறது. சுனாமிக்கு பின்னான கடற்கரையோர கட்டுமானத்தடை இருக்கிறதா இல்லையா என தெரியவில்லை அந்தளவுக்கு சட்டபூர்வ/விரோத கட்டுமானங்கள், குடியிருபுகள் எழும்பியுள்ளன.
  13. விக்ரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் கொடுத்த பச்ச மட்டை அடியால்…அண்ணன் கொள்கை மாற்ற முடிவுக்கு வந்திருக்கலாம் அல்லவா? (முப்பது நாளில் முரட்டு முட்டு கொடுபது எப்படி - ஸ்பெசல் வகுப்புகள் இன்று முதல் ஆரம்பம் - உடனே அணுகவும்🤣). இதை பற்றி பக்கம் பக்கமாக முன்னர் எழுதியாகி விட்டது அண்ணை. ஒவ்வொரு வழக்கிலும் முழு சட்டத்தையும் அலசி ஆராய்வதில்லை. Precedent (முந்தைய முடிவு?) என முன்னர் பல வழக்குகளில் சொல்லபட்டதை ஆதாரமாக காட்டுவார்கள். அதே போல் உங்களையும் முன்னைய யாழ் திரிகளின் மேற்கோள்களுக்கு கைகாட்டி (signpost) அமைகிறேன்🙏.
  14. இடித்துரைப்புக்கு நன்றி. ஆனால் சீமானின் பக்தர்களும், டிரம்பின் MAGA பக்தர்களும் ஒரே டிசைன். அண்ணனை போலவே நாக்கை புரட்டி, புரட்டி முட்டு கொடுப்பார்கள். உதாரணமாக தமிழ் தமிழ் என கூவிய கருணாநிதியின் மகள் கனி மொழி சரளமாக ஆங்கிலம் மட்டும் அல்ல, தமிழில் கவிதை எழுதும் அளவுக்கு மொழியாளுமை உள்ளவர் - ஆனால் அதை கண்டுகொள்ளாமல், அவர் ஆங்கிலம் பேசுவதை கண்டிப்பார்கள். அதையே சீமான் செய்தால் தப்பென்ன? பள்ளி கூடம் சரியில்லை என நொண்டி சாட்டு சொல்வார்கள். ஆனால் ஸ்டாலினும், அழகிரியும் ஐ கம் யூ கோ இங்கிலிபிசுதான் என்பதையும், தமிழிழே திக்கி திணறி கதைக்கும் இவ்விரு வரும் ஆங்கிலம் சுட்டு போட்டாலும் வராத் என்பதையும் மறந்து விடுவார்கள். இதாவது பறவாயில்லை, ஒரு. படி மேலே போய் ஸ்டாலினும், உதயநிதியும் தெலுங்கில் எழுதி தமிழில் படிக்கிறார்கள் என்ற பொய்யை கூட திண்ணையில் சொல்லி விட்டு, ஆதாரம் கேட்டதும் அது சும்மா ஜோக் என நழுவினார்கள். ஆனால் அதை ஒரு உறவு உண்மை என நம்பி பின் தெளிவானார். இப்படியாக சிலர் இங்கே செய்வது பச்சை பொய்யும், புரட்டுகளும் நிறைந்த நாதக பிரச்சாரம். பொய்யும், பிரட்டும், வரலாற்றை பொய்யாக மீள எழுதுவதும், சதி கோட்பாடுகளை முந்தள்ளுவதும்தான் நாதக/சீமானின் அடிப்படை அரசியல் யுக்தியே. அண்ணணை அப்படியே பிரதி செய்க்கிறார்கள் அவரின் யாழ்கள தம்பிகள். இந்த பொய் வரலாற்றை எழுதுவதில் ஒரு அங்கம்தான் - கெளத்தூர் மணி, வேல்முருகன், நெடுமாறன், வைகோ இன்னும் பலரின் பங்களிப்பை மறைப்பது, சிறுமை செய்வது. இதை காலத்துக்கு காலம் யாழில் பலர் கண்டிக்கவே செய்கிறார்கள். இருந்தாலும் அடுத்த திரியில் தெரிந்தே அதே பொய்யை எழுதுவார்கள். உண்மையை உரைக்கும் உங்கள் முயசிக்கு நன்றி. புலித்தோல் போர்த்திய நரி. #தொண்டை தண்ணி வத்த பேசும், கள்ள மெளனி.
  15. திமுக காரன் கசமுசா வீடியோ அசல் நாதக காரன்கசமுசா வீடியோ போலி என்பதும் தம்பிகள் இங்கே பலவருடமாக ஓட்டும் முட்டுப் படம்தான். ஆனால் உங்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை. பராவாயில்லை, முட்டுக்கான தேவை அதிகரிக்க, அதிகரிக்க, முரட்டுத்தனமாக முட்டு கொடுப்பதும் அதிகரிக்க்கத்தானே வேண்டும்🤣.
  16. போன தடவை அவர் ஒன்றுக்கு இரெண்டு தரமாக பதிவு செய்த பிரமாண பத்திரத்திலேயே போதிய தகவல் உள்ளது. இது ஜஸ்ட் கணக்கில் வந்தது மட்டுமே.
  17. இந்தியா கூட்டணியா? வட இந்தியாவில் எல்லாரும் பிய்த்து கொண்டு போய் விட்டனரே. மோடி வெல்வது 100% கரண்டி.
  18. அதே…. மாற்றம் வேண்டும் என மக்கள் நினைத்தால்….. நா த க நம்பிக்கையான கட்சி என நினைத்தால்…. இந்த முறையில் கூட நாதவ வை ஆட்சி பீடம் ஏற்றுவார்கள். இதே முறையில்தான் முதன் முதலில், சிறு கட்சிகளாக இருந்த, திமுக, அதிமுக, சிவசேனா, தெலுங்கு தேசம், திணமூல் காங்கிரஸ் இன்னும் பல ஆட்சியை பிடித்தன. அண்மையில் கூட வை எஸ் ஆர் காங்கிரஸ் என நினைக்கிறேன். அதே போல் கேஜ்ரிவாலின் கட்சியும் இதே முறையில்தான் ஆட்சிக்கு வந்தனர். நா த கவால் 20 வருடத்தில் ஒரு உள்ளாட்ச்சி சீட்டை கூட பெற முடியவில்லை என்றால்… தவறு 20 வருடமாக மக்களின் நம்பிக்கையை வெல்ல முடியாத நாதக அதன் மாறி மாறி கதைக்கும் பித்தலாட்ட தலைமை மீதுதான். மக்கள் மீதோ, தேர்தல் முறை மீதோ அல்ல. ஆனால் நாதகவின் business strategy யே ஆட்சியை பிடிப்பது அல்ல. வாக்கை பிரித்து, ஒருங்கிணைப்பாளரின் சொத்து மதிப்பை கூட்டுவது.
  19. அண்ணன் ஆசை பட்டதில் தப்பில்லை. கட்சி கூட்டத்தில் முன் வரிசையில் வந்திருத்து, கட்சி விசயங்களையே கட்டுபாடு செய்யும் அரை-தெலுங்கு அண்ணி - அண்ணன் விரும்பினாலும் தமிழில் படிப்பிக்க விட்டிருக்க போவதில்லை. ஆனால்….இருபது வருடமாக எங்கும் தமிழ்…எதிலும் தமிழ்…தமிழ் என எல்லாருக்கும் அண்ணன் லந்து கொடுத்ததுதான் தப்பு.
  20. ஜனநாயகத்தின் அடிப்படையே தேர்தல் சுதந்திரம். இப்படி தடை செய்தால்…ஒரு போதும் பாஜக போன்ற (முன்னர் காங்கிரஸ்) ஒரு கட்சியை ஆட்சியை விட்டே அகற்ற முடியாது போகும். சுந்தந்திரத்தின் பின் அசுர பலத்தில் இருந்த காங்கிரசை, படி படியா, ஜனதா தள் என்ற பெயரில் தேர்தலுக்கு முந்திய கூட்டணி வைத்து, ஜெயபிரகாஷ் நாராயணம் முதல் வி பி சிங் வரை முயன்று தோற்று, அதன் பின் தான் வாய்பாயின் இரெண்டாவது முயற்சியில் முற்றாக பலமிழக்க முடியுமாய் இருந்தது. தேர்தலுக்கு முந்திய கூட்டணி இல்லை என்றால்…இன்றும் மத்தியில் காங்கிரஸ் ஆளும்.
  21. நாம் என்ன நாம் தமிழர் நாமே தமிழர் என அரசியல் செய்யும் அரசியல்வாதிகளா? அல்லது தமிழில்தான் அருச்சனை, தமிழில்தான் கல்வி, நான் எனது படத்தில் கூட ஆங்கில வசனம் சேர்க்க மாட்டேன், எனக்கூறி, பொய்யாக இயற்க்கையாக பேசும் சமயத்தில் கூட நெகிழிப்பை என சொல்லும் ஆள் என பொய் விம்பம் கட்டுகிறோமோ? நாம் தமிழ் இன அடையாளத்தை, எமது பிழைப்புக்காக அரசியலாக முன் வைப்பதில்லை. நாங்கள் ஆங்கில நாட்டில் வேறு வழியின்றி பிள்ளைகளை ஆங்கில வழி மூலம் படிப்பிக்கும், வீட்டில் தமிழ் கற்பிக்கும் சாமானியர்கள். சீமான் வேறு சாமானியன் வேறு. சாமிக்கு எல்லாம் தெரியும். #புரிஞ்சவன் பிஸ்தா🤣
  22. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நன்னி. புத்தர் சிலைகள் பொறுத்த இடங்களில் எல்லாம் முளைத்த படிதான் உள்ளன. ஊரில் ஒரு இடத்திக் காம்ப் அல்லது பொலிஸ் ஸ்டேசன் இருந்தால் அருகிலோ, வெளியிலோ சின்ன புத்தராவது இருப்பார் போல படுகிறது. கொழும்பில் ஒவ்வொரு பாடசாலையிலும் ஒன்று வைக்கும் ஒரு மறைமுக வேலைத்திட்டம் உள்ளதாயும். முதலில் சிங்களவர் படிக்கும் பாடசாலைகள் எல்லாவற்றிலும் வைக்கும் நடவடிக்கை ஆரம்பமாகிவிட்டது எனவும் சொன்னார்கள்.
  23. நான் அதை எல்லாம் பல இடங்களில் யாழில் எழுதி உள்ளேன். அதை வாசித்த பின்னும் நீங்கள்தான் சமயங்களில் செலக்டிவ் அம்னீசியாவில் மறந்து விடுகிறீர்கள். இதே போல் “சீமானை எதிர்ப்பவர்கள் யாழில் இலங்கை அரச அநியாயத்தை எழுதாதோர்” என ஒரு அரிய கண்டு பிடிப்பையும் நேற்று எழுதி இருந்தீர்கள். யாழில் சீமானை எதிர்க்கும் என் போன்றோர் ஆதாரபூர்வமாக இலங்கை இனவாதத்தை சாடியதையும் - செலக்டிவ் அம்னீயா தின்று விட்டது போலும். என் நிலைப்பாடு கருணாநிதி கள்ளன். சின்ன கருணாநிதியும் கள்ளன். இரெண்டும் எனக்கு ஒன்றே. இரண்டை சொல்லவும் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. உண்மை. இது இந்த இனத்தின் சாபக்கேடு. புலிகளுக்கு பின்னான யாழும் ஒன்றும் சுத்தம் இல்லை. சீமான் கட்சி கூட இதை வைத்தே நடக்கிறது. கடந்த தேர்தலில் சென்னையில் நாடார் அதிகம் உள்ள தொகுதியில் சீமான் போட்டியிட்டார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.