Jump to content

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    14924
  • Joined

  • Last visited

  • Days Won

    165

Everything posted by goshan_che

  1. முதலில் எந்த வெளி ஆட்களையும் உள்ளே விடாமல் இருந்த முகாமுக்குள், aid workers ஐ உள்ளே விடுவதற்கு இலங்க இணங்கியதால், அதை fund பண்ண வெளிநாடுகள் காசு கொடுத்தன? சரிதானே? இது அடைக்கப்பட்ட மக்களின் நல வாழ்வை இட்டு மேற்கொள்ளபட்டது. இது அல்ல நீங்கள் சொன்னது. நீங்கள் சொன்னீர்கள் மேற்கு இம்முகாம்களை நியாயபடுத்தியது என.
  2. ஒரு வருடத்தில்தான் எத்தனை மாற்றம் இல்லையா அண்ணை? உங்களிடத்தில் இலங்கை விடயத்தில், இந்தியா விடயத்தில் ஏற்பட்ட நிலை மாற்றம் எனக்கு மகிழ்ச்சி அல்ல.
  3. ஓம் DFID 2016 இல் உருவானது என்ற என் தரவு பிழைதான். ஆனால், மேற்கு இலங்கையின் தடை முகாம்களை நியாயப்படுத்தியது என்பதை நிறுவ இன்னும் நீங்கள் ஆதாரம் தரவில்லை.
  4. ICC மேற்கின் எதிரிகளை மட்டும் குறிவைக்கும் என்ற விமர்சனம் பல ஆண்டுகளாக உள்ளது. இதை சொல்லித்தான் 2016 இல் என நினைக்கிறேன் ரஸ்யா ரோம் சரத்தில் வைத்த கையொப்பத்தை மீள பெற்றது. 123 நாடுகளில் பல திடீரென்று ரோம் சரத்தில் இருந்து விலகாதவரை - ICC யி. நியாயப்பாட்டில் அதிக மாற்றம் இல்லை.
  5. வாய்பில்லை. DFID உருவாக்கப்பட்டதே ஜூலை 2016 இல்தான். ஆதாரம் இருந்தால் தரவும். ஜோக் அடிக்காதேங்கோ கடஞ்சா, ஒரு யுத்த நகரத்தில் திடேரென்று எப்படி 4000 பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள் தோன்றினர்? மரியபோல் என்ன மும்பாய் ரயில் நிலையம் போல், கைவிடபட்ட குழந்தைகள் வாழும் இடமா? அப்படி பெற்றார் இறந்து இருந்தாலும் அவர்களை அடுத்து next of kin எனப்படும் உறவினர்களிடம் ஒப்படைப்பதுதான் முறை. பிள்ளைகளை பத்திரமாக மீட்டு, பெற்றார் அல்லது, உறவினரிடம் ஒப்படைப்பதுதான் முறை. மாறாக அவர்களை கலச்சார சலவை செய்து, பொம்மைகள் போல் வெளிகிடுத்தி ரஸ்ய தொலைகாட்சிகளில் காட்சி பொருளாக்கியது ரஸ்யா. இப்பதானே பிடியாணை போயிருக்கு? எப்படி, எந்த குழந்தைகளை, புட்டின் கடத்தினார் என்பது வழக்கு முன் போகும் போது வெளிவரும்? ஆதாரம் எதும் அற்ற கூற்று சீனாவில் நடப்பது இனப்படுகொலைதான். நாளைக்கு ரொஹிங்யாவிலும் ஒண்டும் நடக்கவில்லை என்பீர்கள் போல் இருக்கு. ரஸ்யாவுக்கு வெள்ளை அடிக்க வெளிக்கிட்டு, எல்லாருக்கும் அடிக்கும் படி ஆகி விட்டது போலும். தவறான புரிதல். குற்றம் சாட்ட பட்டவரை நீதி மன்றம் கொண்டுவரும் பிடிவிறாந்து தான் கொடுக்கப்பட்டிருக்கு. இன்னும் குற்றன் என தீர்மானிக்கவில்லை.
  6. இரெண்டுமே கொடுமைதான். எது அதிகம் கொடுமையானது? தாய் தந்தை யுடன் பிள்ளைகளை அடைத்து வைத்தது (இலங்கை). தாய் தந்தை யுடன் இருந்த பிள்ளையை, அவர்களிடம் இருந்து பிரித்து - வேற்று நாட்டில் கொண்டு போய் அடைத்து வைப்பது? (ரஸ்யா). முள்ளிவாய்கால் மக்களை முகாமில் அடைத்து வைத்ததை எந்த மேற்கு நாடு சட்டப்படியானது என்று நியாப்படுத்தி அறிக்கை விட்டது? ஆதாரம்? இல்லை - பெற்றாரால் பிள்ளைக்கு தீங்கு என்ற ஒரு நிலை தவிர மிகுதி நிலைகளில் எல்லாம் பிள்ளைகளின் சேம நலன் - அவர்களின் பெற்றாருடன் தங்கி இருப்பதிலேயே உள்ளது. இந்த கேள்வியை லாவகமாக கடந்து சென்றுள்ளீர்கள் என நினைக்கிறேன்.
  7. முள்ளிவாய்க்காலில் சரணடைந்த மக்களை - மெனிக்பார்ம் உட்பட்ட முகாமகளில் தடுத்துவைத்தது - இதே பேணலுக்குள் வருமா ? இவர்கள் கைவிடப்பட்ட குழந்தைகள் இல்லை. அந்த நகரில், ரஸ்ய துருப்புகள் போய் இவர்களை எடுக்கும் வரை தம் பெற்றாருடன் வாழ்ந்த பிள்ளைகள். ஒரு குழந்தையின் best interest அதன் பெற்றாருடன் இருப்பதே என்கிறது சட்டம். பழங்குடி குழந்தைகளுக்கு நடந்தது கிரிமினல் குற்றம்தான். அதற்கு அவுஸ்ரேலிய அரசு பகிரங்க மன்னிப்பும் கேட்டுள்ளது. ஆகவே பல வருடங்களுக்கு முன் மேற்கு ஒரு குற்றத்தை இழைத்தது என்பதால், இப்போ அதையே ரஸ்யா செய்வது குற்றம் இல்லை என்றாகாது. ரஸ்யா உண்மையில் இந்த குழந்தைகளை பேண விரும்பினால் - அவர்களை பெற்றாருடன் சேர்த்து இடம் பெயர்த்து, பெற்றாருடன் சேர்த்து, உக்ரேனின் இன்னொரு நகருக்கு அனுப்பி இருக்க வேண்டும். போர்க்கைதிகளை பரிமாறும் ரஸ்யா இதை மிக இலகுவாக செய்திருக்கலாம். ————- ICC யில் 123 நாடுகள் ஒப்பம் இட்டுள்ளன. அவை எவையும் விலகுவதாக அறிவிக்கவில்லை. வழமையாக ICC ஐ ஏற்காத நாடுகள்…ஏற்கப்போவதில்லை. ஆனால், மனித குல விரோதமாக யார் நடந்தாலும் ICC விசாரிக்க முடியும் என்பதே உண்மை. நிச்சயமாக இதில் அரசியல் உண்டு. அது மேற்கு சார்பான அரசியல்தான். மேற்கின் ஆளுமை இருக்கும் வரை ICC குலைய வாய்ப்பு அதிகம் இல்லை.
  8. நமக்கு இடையான வயது இடை வெளி 15 க்கு கிட்ட வரும் என நினைக்கிறேன். நீங்கள் நிச்சயம் எனக்கு அறிவுரை கூறலாம். நானும் ஏற்றுக்கொள்வேன். திரி திசைமாறும் என்பதை ஏற்று கொள்கிறேன். சில சமயங்களில் சில இரெட்டை நிலைப்பாடுகளை அப்படியே போட்டுடைத்து விடுவது - தவிர்க்க கூடிய அசெளகரியம்தான். ஆனால் இப்படி போட்டுடைப்பது என் இயல்பிலேயே அமைந்த சுவாபம். நான் மேலே சொன்னது போல் “ நான் சும்மா இருந்தாலும், வாய் சும்மா இராது 🤣”. உங்கள் அறிவுரையை கவனத்தில் கொள்கிறேன்🙏🏾.
  9. நிச்சயமாக, உண்மையில் பிரித்தானியா தனது காலனித்துவத்தை விலக்கி கொண்டதில் அமெரிக்காவின் பங்கு மிகப்பெரியது. 2ம் உலக யுத்த முடிவில், 1ம் உலக யுத்தத்தை முடிவை போல் மீண்டும் காலனிய ஆட்சி முறையை தொடரலாம் என்பதே பிரித்தானியாவின் நப்பாசையக இருந்தது. ஆனால் மறைமுகமான அழுத்தம் மூலம் படிபடியாக பிரித்தானிய காலனிய வலையமைப்பை dismantle பண்ணி, பல நாடுகள் இன்று சுதந்திர நாடுகளாக இருக்கவும், ஆளுடன் ஆள் அடிபடுவதையே வரலாறாக கொண்ட ஐரோப்பியர் 2ம் உலக யுத்தத்தின் பின் அமைதியாக இருக்கவும் அமெரிக்காவே காரணம். எந்த ஒரு முதன்மை நாட்டின் தலைமையும் 100% சரியானதல்ல. அமெரிக்கா பல பிழைகளை விட்டு உள்ளது. ஈராக்கின் 2ம் யுத்தம் ஒரு யுத்த குற்றமே. ஆனாலும் அமெரிக்காவல் விளைந்த பல நல்லதும் உண்டு. நிச்சயம் எழுதுங்கள். அமெரிக்க மக்களின் சுதந்திர வேட்கையையும், அந்த சுதந்திரத்தின் அடிப்படையில் கட்டி எழுப்பபட்ட, American Dream ஐ பற்றியும் தமிழில் அதிகம் யாரும் எழுதுவதில்லை. எமது விடயத்தில் அமெரிக்கா எடுத்த மோசமான முடிவு என்ற ஒன்றை மட்டும் வைத்து - 200 வருட வரலாற்றை எடை போடுவதில் எனக்கு உடன்பாடில்லை. அமெரிக்கர்களின் ஒற்றுமை மாறக்கூடாது என்பதுதான் எனது விருப்பும். ஆனால் MAGA பேர்வழிகள் அதை சிறுக, சிறுக துண்டாடி விடக்கூடும் என அஞ்சுகிறேன்.
  10. பதில் இல்லை என்றால் வெறும் வாயை மெல்லுவதற்கு ஒரு சிகரெட்ட பத்த வைக்கலாம்?🤣
  11. ரதி அக்கா சிறு வயதில் யாழில் இருந்து மட்டு போனவ என்று சொன்ன நியாபகம். மட்டு, திருமலையில், வன்னியில் கூட பெரும்பாலும் அரிசி மாத்தான். நெல்மிகை மாவட்டங்கள் எல்லோ? கோதுமையில் செய்வதென்றால் எல்லா இடமும் அவித்துத்தான்.
  12. இல்லை வன்னி, திருமலை, மட்டகளப்பில் நாங்கள் கோதுமை மாவுக்குள் தண்ணியை ஊத்தி பசை கிண்டிப்போட்டு, அப்படியே சாப்பிடுவோம்🤣. என்ன மூத்தவரே, உங்களுகே கிழக்கில் இப்படி செய்வதுண்டா என தெரியவில்லை, பிறகு எப்படி உலகிலேயே யாழ்பாணத்தில் மட்டும்? அவைக்கு சொல்லி போடாதேங்கோ…. ஊரில…உத…. அமெரிக்கன் மா எண்டும் சொல்லுறவை🤣 ————— இந்த திரியை பார்த்து @ராசவன்னியன் சார் டென்சன் ஆக போறார் 🤣
  13. அருமையான கருத்து. இந்த ஐசிசி க்கு அதிகாரம் கொடுக்கும் ரோம் சட்டத்தில் 123 நாடுகள் கையொப்பம் இட்டுள்ளன. பிடியாணை பிறப்பித்த பின் இந்த நாடுகளுக்கு போனால் சட்டப்படி நாடு கடத்தும் நடவடிக்கை எடுக்கலாம். (அது புட்டின் பதவியில் இருக்கும் வரை நடைமுறை சாத்தியம் இல்லை என்பது குழந்தை பிள்ளைக்கும் தெரியும்). வழமையாக நாட்டின் அதிபர்களுக்கு இருக்கும் immunity ஐசிசி பிடிவிறாந்துக்கு இல்லை - என்பதே பெரும்பாலான சட்ட அறிஞர்கள் கருத்து. சூடான் அதிபர் தென்னமரிக்கா போனபோது, தென்னாபிரிக்க நீதிமன்றம் - இம்யூனிண்ட்டி தொடர்கிறது என தீர்பளித்ததே அவர் தப்ப காரணம் என நினைக்கிறேன். உண்மையில் என் பார்வையில் இந்த பிடி விறாந்து கொடுக்கும் விளைவுகள்: 1. அணு ஆயுத மிரட்டல் - புஸ் ஆகி விட்டது. புட்டினுக்கு பிடி விறாந்து வரை போனாலும், புட்டின் அணு ஆயுதத்தை தொட முடியாது என்பதை நிறுவியாகி விட்டது. 2. சீனாவுக்கு செய்தி. புட்டினுக்கு பிடி விறாந்து கொடுத்த நாம் - உங்களை இதுக்ககா வர்தக ரீதியில் பகைக்கவும் தயங்கோம். புட்டினா? லாபமா? 3.நீங்கள் கூறியது போல் இது ரஸ்யாவில் புட்டின் வட்டத்தில் இருந்தே அவரை தள்ளி விட்டு தாம் முன்னுக்கு வர நினைப்போருக்கு ஒரு கதவை திறக்கிறது. 4. மிக முக்கியமாக நீங்கள் சொன்ன புட்டின் பதவியில் இருந்து இறங்கியதும், அவரை காவு கொடுத்து விட்டு, மேற்குடன் உறவை சீர்செய்யும் ஒரு நிலமை வரலாம். இதன் தொடர்சியாக - இனி புட்டின் சாகும் வரை கதிரையை விட்டு இறங்க மாட்டார். இறங்கினால் மிலோசவிச்சுக்கு நடந்ததுதான் நடக்கும் என்ற பயம் அவரை துரத்தும். ஒருவர் எவ்வளவு காலம் பதவியில் நீடிக்கிறாரோ, நீடிக்க முனைகிறராரோ அந்தளவுக்கு அவருக்கு உள்ளே இருந்து எதிர்ப்பு வலுக்கும் - இது மனித இயல்பு. இப்படி பல கட்ட செஸ் நகர்வில் இது ஒரு நகர்வு. பிகு 1. பதவியில் இருக்கும் போதே பிடியாணை பெற்றோர் - கடாபி, பசீர், புட்டின். 2. பிடியாணை பற்றிய கருத்தாடலை உரிய திசைக்கு இட்டு வந்ததுக்கு நன்றி. ஆவா குரூப் வந்து படலையை ஆட்டி ஒரே அட்டகாசம். ரொக்ஸ் குரூப் ஒரு சிலமனும் காட்டவில்லை. சினம் தலைக்கேறியா ஆவாக்கள் சும்மா தன்ர வேலையை பார்த்து கொண்டு நிண்ட பொலிஸ் இன்ஸ்பெக்டர் மேல பாஞ்சு கடிச்சு வச்சிட்டினம்🤣. திரியிம் தமிழர்கள் போல உள்ளகமாக இடம்பெயர்ந்து விட்டது. ———//////-//////—— அபாய அறிவிப்பு 🤣 ——/////-//////——- ஆவா, ரொக்ஸ் பற்றிய என் கருத்துக்கு பதில் எழுதி நீங்கள் பிரச்சனையில் மாட்ட வேண்டாம்🙏🏾. இங்கே திருபள்ளி எழுச்சி தினமும் உங்கள் பெயரில்தான் அதோடு இதுவும் சேர வேண்டாம்🤣.
  14. அமெரிக்கா, ரஸ்யா, சீனா என்று கிட்டதட்ட 80 வருடமாக இருந்த உலக தரவரிசை….. அமெரிக்கா, சீனா, ரஸ்யா என மாறுவதை கட்டியம் கூறும் முதலாவது நிகழ்வு. புட்டின் : நீங்கள் ஜனாதிபதி ஆனமைக்கு வாழ்த்து. அண்மைய கால சீன அபிவிருத்தியை நாம் மெச்சுகிறோம். ஏன் பொறாமை கூட படுகிறோம். ஷி: சீனா ரஸ்யா இடையான மூலோபாய உறவு தொடர்ந்து உறுதியாக பயணிக்கும் என நம்புகிறேன். சர்வதேச நியாயப்பாட்டை உறுதி செய்யவும், இரு நாட்டின் நல்வாழ்வை பெருக்கவும் இது உதவும். கிட்டதட்ட ரொமேனியன் ஜனாதிபதியும், பைடனும் கதைப்பது போல் இருக்கிறது power dynamics.
  15. ஐ லைக் திஸ் கு.சா டச் யா …🤣 காதலில் இதுதான் ஏழு நிலை…. காணும் இடம் எல்லாம் அவன், தூணிலும் அவன், துரும்பிலும் அவன், போனிலும் அவன், பிசைந்த புட்டிலும் அவன். மணந்தால் மாஸ்கோ தேவன், இல்லையேல் மரண தேவன் 🤣
  16. சரி நான் அப்படியே மற்றவருக்கு எதுவும் தெரியாது என்ற பாணியில் எழுதுகிறேன் என்றே வைப்போம் (இதை பற்றி கீழே எழுதுகிறேன்), அதற்காக நான் சூரியன் கிழக்கில் எழும், சூரிய சக்தியால் பயிர் வளரும் என எழுதினால்….இல்லவே இல்லை, அது சூரியனே இல்லை, 60 வாட்ஸ் பல்பு, அது எழுவது மேற்கில், அதனால் பயிர் அழியும் என்று எழுதி, எனக்கு சூரிய அடிமை, என பட்டம் தருவது முறையான செயலா? பிறகு அதையே உங்கள் அபிமான கருத்தாளர் சொன்னால்…ஓமோம் அது சரிதான்…நீங்கள் தன்மையாக சொல்கிறீர்கள் என்றால்? அப்போ நீங்கள் ஒரு கருத்தை ஏற்பதும், ஆதரிப்பதும் யார் சொல்கிறார்கள்? அவரின் அணுகுமுறையையில்தான் தங்கியுள்ளது? கருத்தில் அல்ல? ————— நான் எடுத்தவுடன் எனக்கு எல்லாம் தெரியும், உனக்கு எதுவும் தெரியாது என எழுதுவதில்லை. ஆனால் சிலதை நக்கல், மற்றும் அழுத்தம் திருத்தமாக, ஆதாரபூர்வமாக எழுதுவேன். அது பின்வரும் வகையில் கருத்து எழுதுவோர்க்கு. 1. தரவு பிழைகளை தரவு என எழுந்தமானமாக அடித்து விடுவோர், தம் மனதில் உதித்த கற்பனைகளை வரலாறு என பதிய விளைவோர். 2. சதி கோட்பாட்டை காவுவோர் 3. குறித்த ஒரு கட்சிக்கு வாழ்க்கைபட்டு விட்டு, அதன் அஜெண்டாவை யாழில் நகர்த்த முனைவோர் 4. அப்பட்டமான இந்திய கையாட்கள் 5. மேலே சொன்னது போல் கோஷான் (அல்லது அவர் போல இன்னொருவர்) வடக்கே இழுத்தால், நாம் தெற்கே இழுத்தே ஆக வேண்டும் என விஷமம் செய்யும் குதர்கவாதிகள்.
  17. கிரெடிட் சூசே யை யூஎஸ்பி 2 பில்லியனுக்கு வாங்கி விட்டதே? இந்த டீலை 100 பில்லியன் வரை சுவிஸ் மத்திய வங்கி உத்தரவாதம் செய்துள்ளது (போனகிழமை மதிப்பு 7 பில்லியன் - முதலீட்டாளருக்கு கோவிந்தா, கோவிந்தா). ஆனால் கிட்டதட்ட 1 வருடமாக இந்த வங்கி சேடம் இழுத்தது. பலர் short செய்து நல்ல காசு பார்த்தார்கள். என்ன இவ்வளவு அப்பாவியாக இருக்கிறீகள். புட்டின் மட்டும் அல்ல, உலகின் எந்த பெரிய நாட்டின் தலைவரும் பாதுகாப்பு ஏற்பாட்டில் கவனம் எடாமல் விடுவதில்லை. அதுவும் புட்டின் சொந்த பாதுகாப்பு அமைச்சரையே 8 அடி தள்ளி வைப்பவர்🤣. போன முறை கிரைமியாவில் பென்ஸ் S class ஓடினார். இந்த முறை Toyota (Land Cruiser?). ரஸ்ய தயாரிப்புகளின் தரத்தில் அத்தனை நம்பிக்கை 🤣.
  18. 🤣 ஒரே விடயத்தை விரும்பியவர் எழுதும் போது தேனாக இனிப்பதும், வெறுப்பவர் எழுதும் போது வேம்பாக கசப்பதும்…… இந்த அணுகுமுறை கிட்டதட்ட உங்களின் டிரேட் மார்க் அண்ணை🤣. இதை விட குறைவாக அமேரிக்காவின் நல்ல பக்கத்தையும் எழுதிய பல உறவுகளுக்கு நீங்கள், வெள்ளையின விசுவாசி, மேற்கின் அடிமை, அமெரிக்கன் அடிமை என பல இளமானி, முதுமானி, ஏன் முனைவர் பட்டங்கள் கூட வழங்கி உள்ளீர்கள்🤣. பலர் நமுட்டு சிரிப்போடு கடந்து போயிருப்பார்கள். எனக்கு வாய் சும்மா இராதே🤣
  19. நல்ல கருத்துக்கள். அமெரிக்கா வந்தாரை வாழவைத்த வந்தேறிகள் தேசம் என்பதும், ஒவ்வொரு காலகட்டத்திலும் பொருளாதார குடியேறிகளின் கனவு தேசம் மட்டும் அல்ல, ஒடுக்குமுறைக்கு ஆளானவர்களின் (லூதரன் ஜேர்மானியர் உட்பட) தஞ்ச தேசம் என்பதும் கூட உண்மையே. ஆனால் இவை எல்லாவறுக்கும் அடிப்படை - அமெரிக்காவின் மக்களாட்சி அரசும், அரசியலமைப்பும், சட்டத்தின் ஆளுமையும், கிட்டதட்ட confederal அளவில் பகிரப்பட்டுள்ள மாநில அதிகார கட்டமைப்புமே. இதனால்தான் ஒரு உள்ளக ஸ்திரத்தன்மையை அமெரிக்காவால் உருவாக்கி பேண முடிகிறது. ஆனால் அமெரிக்காவின் உள்ளே இருக்கும் ஏற்றத்தாழ்வுகளும், சுரண்டல் முதலாளித்துவமும், சுதேசிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியும், right to bear arms, abortion போன்ற விடயங்களும், தற்போது அமெரிக்காவில் ஒரு உள் பிளவை ஏற்படுத்தி வருகிறது. இது நகர், கிராமம். வெள்ளை காலர், நீலக்காலர், வெள்ளை, லத்தினோ, கறுப்பு, சிவப்பு மாநிலங்கள், நீல மாநிலங்கள் என பல மட்டங்களில் பிளவாக தெரிகிறது. இந்த வேற்றுமைகள் ஜனநாயக நாட்டில் சகஜம்தான் என்பது உண்மையே, கெட்டிஸ்பேர்க் உரை நிகழும் போது நாடு இதைவிட துருவப்பட்டிருந்தது என்பதும் உண்மையே, அதேபோல் இதை சிலர் இலகுவாக culture wars என கடந்து போனாலும், இது அமெரிக்காவின் அடித்தளத்தை அசைத்துப்பார்க்கும் ஒரு பிளவாக அமைய வாய்ப்புகள் உண்டு என்பதை மறுக்க முடியாது. சோழ, கிரேக்க, ரோம, மொகலாய என பல பேரரசுகள் அழிந்தது உள்நாட்டில் ஸ்த்திரத்தன்மை குலைந்தமையாலே. எனது கணிப்பில் அமெரிக்காவின் உலக ஆதிக்கம் உடையுமாயின், அது உள்ளே இருந்தே ஆரம்பிக்கும். இன அழிப்பு என்பது மிகவும் பெரிய வார்த்தை. ஆனால் இந்தியாவின் இட ஒதுக்கீடு, பல்லாயிரம் வருடமாக பிராமணர் அனுபவித்த unfair advantage ஐ இல்லாமல் செய்தது (ஓரளவு). அதனால் பலர், IT போன்ற இட ஒதுக்கீட்டை bypass பண்ணி படிக்க கூடிய துறைகளில் புகுந்து, அதன் மூலம் அமெரிக்கா/மேற்கிக்கு இடம்பெயர்ந்து - தம் மேலாண்மையை தக்க வைக்கிறார்கள். இதே போல் தென்னாபிரிகா வெள்ளை இனத்தவரும் கூட செய்கிறார்கள்.
  20. @கற்பகதரு @arjun லேட்டா வந்தாலும், அண்ணர் உங்கள் வழிக்கு லேட்டஸ்டா வந்து விட்டார் 🤣.
  21. நன்றி. இணைப்புக்கும். இணையதளத்தின் சார்புநிலை பற்றிய விளக்கத்துக்கும்.
  22. இந்தியன் முட்டை எண்டால் கூழ்முட்டைதானே? ஏப்ரல் fool எண்டு அடிக்க வசதியா இருக்கும்🤣
  23. அருமையான பட்டியல் பெரும்ஸ். செய்தியை களத்தில் இறங்கி சேகரித்துப்போடாமல், ஏசி அறைகளுக்குள் அல்லது கேட்போர் கூடங்களில் ஏனையோர் சொல்லும் அறிக்கைகளை மட்டும் வைத்து செய்தி எழுதுவதால் இப்படி ஆகுகிறது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.