Everything posted by satan
-
ஜெனிவா மனித உரிமை பேரவையில் இராணுவத்தை காட்டிக்கொடுக்கக்கூடிய திட்டத்திற்கு எதிர்ப்பு
கால் நடைகளின் உரிமைகளை யாரிடமிருந்து, எப்போது, எப்படி பாதுகாத்தார்கள்? சொந்த நாட்டு மக்களின் உரிமையை பாதுகாக்க தெரியாதவர்கள், பகிர்ந்து வாழ முடியாதவர்கள், அவர்களின் உரிமைகளையும் நிலங்களையும் பறித்தவர்கள் மற்றவர்களுக்கு பாடம் நடத்துகிறார்கள். இவர்கள் குற்றம் புரியவில்லையென்றால் ஏன் துடிக்கிறார்கள்? இராணுவத்தை காட்டி பிச்சை எடுத்து அரசியல், சமயம் செய்பவர்கள்.
-
புலனாய்வு அதிகாரிகளுக்கு 'தண்ணிகாட்டிய' ஜனாதிபதி!
முந்தைய சிங்கப்பூர் ஜனாதிபதி லீக்குவான் லீயை பின்பற்ற முயற்சிக்கிறாரா? அல்லது தனது பாதுகாப்பை தானே உறுதிப்படுத்தி தமிழரின் மனதை கவர்கிறாரா? பொறுத்திருந்து பாப்போம்!
-
ஜெனீவா தீர்மானத்துக்கு எதிராக கையெழுத்து சேகரிக்கும் சரத் வீரசேகர குழு
ஆரம்பத்திலிருந்தே ஐ. நா. வில் எதிர்ப்பு தெரிவிப்பதும் அவகாசம் கேட்பதும் பொய்யுரைப்பதும் உள்நாட்டில் ரவுடித்தனம் காட்டுவதும் இராணுவத்தை காட்டி தாம் தப்புவதும் இவர்களது வாடிக்கை. இது சிங்கள மக்களை ஏமாற்றும் நடவடிக்கை. இவர்கள் ஊழல், போதைப்பொருள் கடத்தல், ஆட்கடத்தல், பாதாள உலகை நடத்துவது போன்ற குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டவர்களே. குற்றவாளிகளை காப்பாற்றுவதில் சந்திப்பதில் காட்டும் ஆர்வம், துடிப்பு, வக்காலத்து வாங்குவது, நிஞாயப்படுத்துவது இவற்றில் இருந்தே இவர்கள் யாரென்பது தெளிவாகிறது. ஒரு கள்ளனை கைது செய்தவுடன் எல்லா கள்ளரும் துடிக்கின்றனர். தாங்களாகவே தங்களையும் இனங்காட்டிக்கொள்கின்றனர். கையில் இருக்கவே இருக்கிறது செம்மணி அகழ்வு, ரணில் கைது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை. எடுத்து விடவேண்டியதுதான். ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களுக்கும் குறைவில்லை. பதினாறு ஆண்டுகளை கடத்தியவர்கள் இனிமேல் கடத்துவது ஒன்றும் கஸ்ரமில்லையே. 'ஆறின கஞ்சி பழங்கஞ்சியே.'
-
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது
தீவிர சிகிச்சையில் இருந்து வீட்டுக்கு சென்றவுடன் சஜித்துக்கு தொலைபேசி அழைப்பும் எடுத்துள்ளார். எதிர்கட்சிகளெல்லாம் ரணிலுக்காகவா அழுதனர்? தமக்கு நிகழ இருக்கும் சம்பவத்தை நினைத்தே அழுதிருப்பர். ரணில் தனது ஆட்சிக்காலத்தில் நீதியாக நடக்கவில்லை, நீதியை நிலைநாட்டவுமில்லை. மாறாக ஊழல்வாதிகளின் பாதுகாவலராகவே செயற்பட்டார். அதே போன்றே ரணிலுக்காக அழுவோரும், இன்று நீதிமன்றத்தை விமர்ச்சிப்பவர்கள் அன்று நீதிபதிகளையும் அவர்களது தீர்ப்புகளையும் மாற்றியமைத்தவர்களே. சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டதும் ரணில் அவரை சந்திக்க தூதனுப்பியதும் துடித்ததும் ஏன்? அப்போ, ஈஸ்ரர் குண்டுத்தாக்குதலில் இவருக்கும் தொடர்புண்டா? இப்போ, ஒவ்வொரு அரசியல்வாதிகளும் மற்றவரை போட்டுக்கொடுத்து தாம் தப்ப தூதனுப்பப்போகின்றனர்.
-
சுமந்திரன் ஒரு விலாங்கு மீன்; யாழில் இருந்து கிளம்பியது எதிர்ப்பு
தமிழ் அரசியல் தலைவர்கள் என்றே கூறுகிறார்கள். அதில் எட்டுப்பேர் என்றும் சொல்கிறார்கள். பார் சிறி என்று எங்கும் சொல்லப்படவில்லை, நானும் சொல்லவில்லை. உங்களின் தவறான புரிதலுக்கு விளக்கம் தர முடியாமைக்கு வருந்துகிறேன்!
-
கொஞ்சம் ரசிக்க
இந்தப்பறவைகள் ஒரே இனத்தை சேர்ந்தவை. ஒன்று பெண், மற்றையது ஆண்.
-
சுமந்திரன் ஒரு விலாங்கு மீன்; யாழில் இருந்து கிளம்பியது எதிர்ப்பு
ரணிலின் கைதை தொடர்ந்து சில தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கைது செய்யப்படுவார்கள் என கதை அடிபடுகிறதே, உண்மையா? ரணில் ஊழல் செய்யாதவர் என பேசிக்கொள்கிறார்கள். அப்படியெனில் ஏன் நோயாளி போல் நாடகமாடுகிறார்? "முதுகிலே புண்ணுள்ளவனுக்கு காடு நுழையப்பயம்." "மடியிலே கனமில்லாவிடில் வழிப்பயணத்திற்கு பயமில்லையே." ஏன் இவ்வளவு கொந்தளிப்பு இவர் கைது செய்யப்பட்டவுடன்?
-
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது
ஆமா .... தமிழ் இளைஞரை பயங்கரவாத சட்டத்தின் மூலம் கைது செய்து இதைவிட பயங்கர மனித உரிமை மீறலில் ஈடுபட்டபோது இவர் வாயே திறக்கவில்லையே, அது ஏன்? தான் தமிழரின் பிரதிநிதி என்று எப்படி உரிமை எடுத்துக்கொள்ளலாம்? எல்லோரும் வைத்திய சாலையில் படுக்கும் போது, தலைமறைவாகும்போது ரணிலார் மட்டும் ஏன் தலையைக் கொடுத்தார்? "யானைக்கும்அடி சறுக்கும்." தமிழரை தந்திரமாக கூறு போட்டு அழித்தவர், இன்று தன்னை தான் காப்பாற்ற முடியாமல் போனது ஏன்? அனுதாபம் பெறவா? இவனுகள் நித்திரையிலும் தமக்கு எழும் எதிர்ப்பை எதிர்ப்பாளரை வைத்தே தமக்கு சாதகமாக எப்படி திருப்பலாமென யோசிப்பார்கள். இராணுவ வெற்றி மறைந்து போக, இப்போ வீடற்றவர் எனக்காட்டி எப்படி ஏழை மக்களை திசை திருப்பினார்கள். உடனடியாக இவர்கள் மேல் நடவடிக்கை எடுத்திருந்தால் இப்படியான ஏமாற்று வேலைகளுக்கு இடமில்லாமல் போயிருக்கும். ஆனால் சரியான சட்ட விசாரணை செய்து குற்றங்கள் நிரூபிக்கப்படாமல் கைது செய்தால் அரசியல் பழிவாங்கல் என்பது ஏற்றுக்கொள்ளப்படும். அதனாலேயே அதற்கு முன், அனுராவுக்கு எதிராக நீதிக்கு எதிராக மக்களை அணிதிரட்ட முடிகிறது. இப்போ, மக்களை இவர்களின் ஊழலுக்கு எதிராக திசை திருப்பும் வேலையை அனுரா செய்ய வேண்டியது முதல் வேலை. இல்லையேல் எதிரி முந்திக்கொண்டு அனுராவை சிறையில் அடைக்கக்கூடும்.
-
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது
அப்போ ரணில் தவறு செய்தார் என்பதை ஏற்றுக்கொள்கிறார் இவர். அப்போ மக்கள் சிறிய தவறு செய்தாலும் வாழ்நாள் எல்லாம் சிறையில் வைத்து கண்ணை பிடுங்கி அடித்து சித்திரவதை செய்யலாமென்கிறார் இப்போ ரணிலை வைத்து இவர்கள் கைது செய்யப்படலாம். அனுரா அரசியல் பழிவாங்கல் செய்கிறார் என்றால்; இவர்களும் பழிவாங்கியவர்கள் என்பதை ஒத்துக்கொள்கிறார். சரி.... அவர் அரசியல் பழிவாங்கல் செய்தால், அவருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யுங்கள் நீதிமன்றத்தில் நம்பிக்கை இருந்தால். இல்லையென்றால், இந்த நீதிமன்றத்தில் தானே போர்க்குற்ற விசாரணை செய்வோமென எப்படி அடம் பிடித்தீர்கள்?
-
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது
ஊழல் விசாரணை வருகிற வரையும் ஊடகவியலாளர் சந்திப்பு, அறிக்கை, கூட்டம், வெளிநாட்டுப்பயணம் என பிசியாக இருக்கும் அரசியல்வாதிகள் விசாரணை என்றவுடன் உலகத்தில் இல்லாத நோய்கள் எல்லாம் வந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு விடுகிறார்கள். இதிலிருந்து விளங்குவது என்ன? ஏன் மக்கள் அதை உணர்கிறார்கள் இல்லை? இவரது கைதுக்கு சரியான விளக்கம் கொடுக்கப்பட்டு மக்கள் யதார்த்தத்தை உணர்ந்து, நீதிமன்றத்தின் மேல் நம்பிக்கை வைக்கச் செய்தால் செய்தால் மட்டுமே அடுத்து வரும் பெரிய தலைகளை இலகுவாக கைது செய்ய முடியும். இப்பவே தங்கள் கைதுகளை தடுக்கும் வழிமுறைகளை தயார் செய்ய தொடங்கி விடுவார்கள் ராஜ பாக்ஸர்கள். இன்றைக்கே மஹிந்தா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஊழல்வாதிகளை சட்டத்தின் முன் நிறுத்துவேன் என்பதே ஜனாதிபதியின் தேர்தல் வாக்குறுதி அதையே செய்வதாக விளக்க வேண்டும். ஆம், அவர்கள் புலிகளை கொலை செய்வதற்கு மக்கள் வாக்களித்தார்கள் என்று சர்வதேசத்திலும் நாட்டிலும் கூறி தமிழ் மக்களை அழித்து சாதித்தார்கள் யாரும் தட்டிக்கேட்கவில்லை. ஊழல்வாதிகளை கைது செய்தவுடன் நாடும் சர்வதேசமும் ஏதோ தியாகியை கைது செய்வதுபோல் கொந்தளிக்கிறார்கள்.
-
"கோட்டாபய ஒரு கொடுமைக்காரன்"? - ரிஷாத் அதிரடி பேச்சு
நீதிமன்ற விசாரணையின்போது தனக்கு மொழிப்பிரச்சனை என்று சொன்னவர், இன்று அதை மறந்து விளாசுகிறார். தனக்கு தனக்கென்றால் சுளகு படக்கு படக்கென்குமாம். புலிகளை சாட்டி, காட்டி அரபு முஸ்லீம் நாடுகளிடம் இரு இனமும் பெற்றவை அப்பப்போ வெளிவருகிறது. கட்டார் பள்ளி கட்ட நிதியளித்ததாம். தனக்கு பாதிப்பு வருகிறதென்றால் வீராவேசமாக நீதி கதைப்பார்கள். இன்னும் சிறிது நாளில் இவரும் விசாரணை வலையத்துக்குள் வருவார், அதுவரை தன் முன் கூட்டாளிகளை காட்டிக்கொடுக்கட்டும்.
-
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது
ஊழல் வாதிகளுக்கு தோள்கொடுத்து அடைக்கலம் கொடுத்து காப்பாற்றி வைத்தவர் இவர்தான். ஏன் இவர் ஊழல்வாதிகளை காப்பாற்ற வேண்டும்? சட்டத்தின்முன் ஏன் நிறுத்தவில்லை? இப்போ; ராஜபக்ச குடும்பத்தினருக்கு உளறல் எடுத்திருக்கும். முன்னே அவர்களுக்கு தெரியும் தங்கள் கைது செய்யப்படுவோம் என்று. அதனாலேயே வீடற்றவராக காண்பித்து மக்களிடம் பிச்சை எடுக்கிறார்கள். எந்த மக்களை சுரண்டினார்களோ ஏமாற்றினார்களோ அந்த மக்களை தமது சுயநலத்திற்காக பாவிக்கிறார்கள். இவர்களின் ஊழலால் தெருவுக்கு வந்து பிச்சை எடுக்கிறார்கள், இவர்களின் செல்வாக்கிற்காக போர் செய்து அவயவங்களை இழந்து, உறவுகளை இழந்து நீதிக்காய் உண்மைகளை வெளியிட்டவர்களை கொலை செய்து தனித்தவர்களுக்கு இந்த மக்கள் உணவும் வீடும் கொடுப்பார்களா? மக்களை எந்த விதத்திலும் ஏமாற்றி, கலவரத்தை தூண்டி தங்கள் நலனை பாதுகாப்பதில் இவர்கள் பலே கில்லாடிகள். இப்போ சட்டம் செய்ய வேண்டியது; இவர்களது ஊழல்கள் எல்லாவற்றையும் விசாரித்து உடனுக்குடன் மக்களுக்கு தெளிவுபடுத்தி நாட்டில் எவ்வளவு சுரண்டினார்கள், அதை என்ன செய்தார்கள், யாரெல்லாம் உடந்தை என்பதை வெளிச்சமாக வெளியிடவேண்டும். இவர்களால் கொலை செய்யப்பட்டவர்களை வெளியிட வேண்டும். இவர்களால் நாட்டிற்கு ஏற்பட்ட இழப்புகளை வெளியிட வேண்டும். இல்லையேல் நாட்டில் கலவரம் ஏற்பட்டு கொலைகள் நடப்பதை தவிர்க்க முடியாது. இதனால் தமிழர்மேலேயே வன்முறைகள் திரும்பும். அனுமதியற்ற, தேவையற்ற விகாரைகளை யார் கட்டினார்கள், எங்கிருந்து பணம் வந்தது, எதற்காக கட்டினார்கள் என்கிற சட்ட விசாரணை செய்து தண்டிக்கப்பட வேண்டும். நிஞாயமான முறையில் விசாரணைகள் நடைபெறாமை, சட்டத்தை தமக்கு சார்பாக வளைத்தமையே இப்படிப்பட்டவர்கள் கைது செய்யப்படும்போது அரசியல் பழிவாங்கல் என்று தப்பிப்பதும், மக்களை தூண்டி விடுவதும் நடைபெறுகிறது. சட்டம் தன் வேலையை செய்திருந்தால், தப்பு செய்பவர் தண்டனை பெறுவார் என்கிற மனநிலை மக்கள் மனதில் நிலைத்திருக்கும். சாட்சியத்தின் விசாரணைகளின் பெயரிலேயே இவர்களுக்கு தண்டனை என்பதை மக்கள் உணரச்செய்ய வேண்டும். பாவம் மக்கள், தொடர்ந்து ஏமாற்றப்படுகிறார்கள்.
-
ஹர்த்தால்: தனிநபர்களின் தோல்வியும், சமூகங்களின் வெற்றியும்!
மக்களிடம் இழந்துபோன தன் செல்வாக்கை கட்டியெழுப்ப இவர் என்னவெல்லாமோ செய்யப்பார்க்கிறார், அது காலம் கடந்துவிட்டது. இனி தனது தொழிலுக்கு திரும்புவதே நல்லது. ஆனால் அரசியலில் இறங்கி செய்த குழறுபடிகளால் இருந்ததையும் இழந்துவிட்டார் பாவம். அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாயிற்று. அவரை களத்தில் இறங்கியவர்கள் ஒதுக்கப்பட்ட பின் இவருக்கு அங்கு என்ன வேலை? மாறி மாறி பதவி சுகம் அனுபவித்தவர், எல்லோரும் தன்னை உபசரிப்பார்கள் என்கிற கனவு கலைந்தது. "பிறர்க்கு இடு பள்ளம், தான் விழும் குழி."
-
சிரிக்கலாம் வாங்க
பசி வந்தால் பத்தும் ப(ம)றந்து போகும். மானம், ரோசம், வெக்கம், கௌரவம், கோபம், பழிவாங்கும் மனப்பான்மை சுயநலம், பொறாமை, பேராசை.
-
‘ராஜபக்ஷக்களின் அலை’ அடிக்கத் தொடங்கும் அறிவிப்புக்கள் விடப்படுகின்றன
வேண்டுமென்றே வதந்தியை பரப்பி மக்களை அதன் பக்கம் திருப்ப முனைகிறார்கள் என்றே நினைக்கிறன். அப்படியா? அப்போ எதற்காக முன்னாள் ஜனாதிபதி சொல்லிக்கொள்ளாமல் நாட்டை விட்டு ஓடினார்? எப்படி ஆட்சி ரணிலின் கைக்குள் போனது? நான் நினைக்கவில்லை நாமலுக்கு அந்த தகுதியோ அதிஷ்டமோ இருக்கென்று. அப்படி இருந்திருந்தாலும் அதை அவர் அப்பாவும் சித்தப்பாவும் கெடுத்து விட்டனர்.
-
முத்தையன்கட்டு சம்பவம் - கைதுசெய்யப்பட்ட நபரை அன்றிரவே பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டோம் - இராணுவ பேச்சாளர்
இவர்கள் இதுவரையில் தாம் செய்தவற்றில் எதைத்தான் ஏற்றுக்கொண்டார்கள்? இதைமட்டும் மறுப்பதற்கு. அன்று மறுத்ததை இன்று ஏற்றுக்கொண்டு கைது செய்யப்பட்டுள்ளனரே. இந்த சம்பவத்தையும் இன்னொரு காலம் விசாரணையில் ஏற்றுக்கொள்வார்களாக்கும்.
-
ஊருக்கு... "கொலிடே" போறேன்.
இது என்ன சொந்த அனுபவமோ சிறியர்?
-
கிழக்கு மாகாணத்தை முஸ்லிம் முதலமைச்சர் ஆள வேண்டும் - ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மௌலவி முஹம்மத் மிப்லால்
ஓம், இவையளின்ர நிலைப்பாட்டினாற்தான் வடக்கில் தமிழர் முதலமைச்சர் ஆகிறார் இல்லையெனில் அதெல்லாம் முடியாது. இதையும் தமிழரசுக்கட்சி நம்பும்.
-
கொக்குத்தொடுவாயில் இளைஞன் வெட்டிக்கொலை
ஒரு குழப்பதை உருவாக்கி, இராணுவத்தினரை நிலையாக நிறுத்துவதற்காக வெளியேறும் இராணுவத்தினர் செய்யும் கொலையாக இருக்கலாமோ?
-
சிறீதரன் எம். பி. சட்டவிரோத சொத்து குவிப்பு குற்றச்சாட்டு - பெரிய தலைகள் தோற்றுப்போகும் நிலை
உறவினர் பெயரில் வைத்திருக்கிறார் என்கிற குற்றச்சாட்டும் அவர்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆகவே அவர்களின் பெயரிலுள்ள சொத்துக்களும் விசாரிக்கப்படும். ஏற்கெனவே சில அரசியல்வாதிகளின் உறவினர்கள் இந்த விசாரணையில் இவ்வாறான சிக்கி தண்டனை பெற்றிருக்குகிறார்கள்.
-
சிறீதரன் எம். பி. சட்டவிரோத சொத்து குவிப்பு குற்றச்சாட்டு - பெரிய தலைகள் தோற்றுப்போகும் நிலை
தங்கத்தை புடமிடுவதுபோல சிறிதரன் புடமிடப்படுகிறார். மக்களுக்கு இன்னும் சேவை செய்ய உத்வேகம் அளிக்கப்படுகிறார். அவரை நம்பி வாக்களித்த மக்கள் அவரோடு இருந்து சவால்களை சந்திப்பர். வருமானத்திற்கு மேல் சொத்து குவித்தவருக்கு வாக்களித்த மக்கள், ஏன் சொத்தில்லாத சுத்தமான மனிதரை நிராகரித்தனர் என்பதுதான் கேள்வி. மக்களுக்கு சிறிதரனை பற்றி தெரியாமலா வாக்களித்தார்கள்?
-
சிறீதரன் எம். பி. சட்டவிரோத சொத்து குவிப்பு குற்றச்சாட்டு - பெரிய தலைகள் தோற்றுப்போகும் நிலை
சிறிதரனை அசிங்கப்படுத்தி அரசியலில் இருந்து ஒதுக்கி விட நினைப்பவர்கள் அவரை மக்களிடத்தில் உயர்த்தி அவருக்கு வெட்டிய குழியில் தாங்களே விழுந்து மடியப்போகிறார்கள். காழ்ப்புணர்ச்சி என்பது தன்னை திருத்தாமல் மற்றவர்களின் நற்பெயரை அழிப்பதிலேயே குறியாக இருக்கும். மக்களின் பிரச்சனையை புறந்தள்ளி தங்களை நிலை நிறுத்த போராடுகிறார்கள். அரசியல் மேடையில் அவருக்கு சேறு பூசி அவரை உயர்த்தி, தங்களை தாழ்த்திக்கொண்டார்கள். சிறிதரன் தன்னை மெய்ப்பிப்பதை விட லஞ்ச ஊழல் விசாரணைக்குழு மெய்ப்பிப்பது மேலானது. அதுதான் எல்லோரின் முகத்திரையையும் கிழிக்கும். முறைபாடளித்தவர்கள், இரகசியத்தகவல் வழங்கியவர்களும் தங்களை சுத்தமானவர்கள் என நிரூபிக்க வேண்டும்.
-
இஸ்ரேலின் கொலனியாக இலங்கை மாறியுள்ளது - மரிக்கார்
இஸ்ரேலுக்கு மட்டுமல்ல அமைச்சரே, மேலும் பல நாடுகளுக்கும் இலவச விசாவை அறிமுகப்படுத்தியிருக்கிறது இலங்கையரசு. இலவச விசாவை காட்டி சுற்றுலாப்பயணிகளைஅழைத்து, கல்லாப்பெட்டியை நிரப்புவதற்காக. எங்கே நீங்கள் இலங்கை அரசோடு இணைந்து தமிழரை நசுக்கினீர்களோ, அவ்வாறே உங்களுக்கு எதிராக இஸ்ரேலோடு இலங்கை இணைந்துவிடுமோ என அஞ்சுகிறீர்கள் போலிருக்கிறது. எதை விதைத்தீர்களோ அதையே அறுவடை செய்வீர்கள். இலங்கையே யுத்தக்குற்றவாளிகள் பிறந்த, நிறைந்த நாடு. இதில இவர் வேற புனித நாடு போல கதையளக்கிறார். எல்லோருக்கும் சப்பித்துப்புவதற்கு வேறு யாரும் கிடைக்க மாட்டார்கள். சிங்கள கிறிஸ்தவர்களை சொல்லப்பயம். ஏன் நீங்கள் அழுத்தங்களை கொடுப்பது? தமிழருக்கு சமஉரிமை வழங்கக்கூடாது என்பதற்காக சகல ஒத்துழைப்புகளையும் வழங்கினீர்கள். உங்களுக்குத்தான் அதிக பலம், உரிமை இருக்கிறது கேட்பதற்கு கேட்டுப்பாருங்கள். இப்போ புரியும், தமிழர் ஏன் போராடினார்கள் என்பது. உங்களுக்காக குரல் கொடுக்க யாருமே வரப்போவதில்லை கூப்பாடு போட்டுப்பாருங்கள், போராடிப்பாருங்கள் என்ன பதில் கிடைக்கிறது என அறிய ஆவல்! சும்மா சுற்றுலா வருபவர்களை நிரந்தரவாசிகளாக்கப்போகிறார்கள் கூப்பாடு போட்டு.
-
ஊடகவியலாளர் குமணனை மீண்டும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை அழைத்துள்ளனர்
இவரும் வெகு விரைவில் பயங்கரவாத தடைப்பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்படலாம். உண்மையை எதிர்கொள்ள பயம், அதனால் உண்மையை வெளிக்கொணர்பவர்களை அச்சுறுத்துவது. அடக்கி ஒடுக்கினாலும் உண்மை வீறு கொண்டு எழும் என்பதற்கு இந்த மனித புதைகுழிகள் சான்று.
-
ஜனாதிபதியை ஒரு பெண்ணுடன் இணைத்து வதந்தி – சிஐடியில் முறைப்பாடு
எதிரிகள் கையிலெடுக்கும் இறுதி ஆயுதம் இது. நாட்டில் தமிழருக்கெதிரான அடக்குமுறையில் குளிர் காய்ந்த, காய காத்திருக்கும் கூட்டம் பதட்டமடைந்திருக்கு.