Jump to content

satan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    8481
  • Joined

  • Last visited

  • Days Won

    1

Everything posted by satan

  1. கிணறு வெட்ட வெளிக்கிட்டு, இப்போ அதிலிருந்து பூதம் கிளம்பி வெட்டிய எல்லோரையும் விழுங்கப்போகுதென்று ஊளையிடுகிறார் இவர் . சர்வதேச விசாரணையை சொன்னேன்!
  2. ரணிலின் அரசியலை குழப்பும் ராஜகபக்ஸாக்களை தூர வைப்பதற்காக, தான், பிரதம மந்திரியாக இருக்கும்போது அவர்கள் மீது ஊழல் மோசடி விசாரணைகளை ஆரம்பித்தார். ஆனால் மக்களின் எதிர்ப்பால் அதை கொண்டுசெல்ல முடியவில்லை, அது தனது அரசியலுக்கு சவாலாகிவிடுமென பயந்தார். காவற்துறையோ இராணுவமோ ஒத்துழைக்கவுமில்லை. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, தமது ஊழல்கள் வெளிவருமுன் அப்பாவிகளை பலியெடுத்து அரசியல் கதிரைகளை காத்துக்கொண்டனர். அப்போதே சர்வதேசம் விசாரணை செய்ய முன்வந்தது, அதை கோத்தா தடுத்தார், ரணில் அதை எதிர்த்து அவர்களை அழைக்காதது ஏன்? அதே பாணியில், மீண்டும் அரசியலை பிடித்து விட இன, மத முறுகல் ஏற்படுத்தப்பட்டது. அதை தடுக்கவோ, ஊக்கப்படுத்தவோ ரணிலால் முடியவில்லை. ஆனால் இதை வளரவிட்டால் தான் தோற்பதும் உண்மை என்பதையும் தெரிந்து வைத்துக்கொண்டார். சணல் முதலாம் பாகத்தை இலங்கையில் தடை செய்தவர்கள் இதை எவ்வாறு அனுமதித்தனர் என்கிற கேள்வி எழுகிறது. ஆகவே ரணில் இதை இலங்கையில் அனுமதித்து ராஜபக்சாக்களை தூரத்தில் வைக்க நினைத்திருக்கலாம். ஆனால் சர்வதேச விசாரணையை அனுமதிப்பாரா என்பது கேள்விக்குறியே. ஏனெனில் ராஜபக்க்ஷாக்களை சர்வதேசத்தின் மின்சாரக்கதிரையில் இருந்து காப்பாற்றியது தாமே என்று அவரே பகிரங்கமாக கடந்த காலத்தில் கூறியிருக்கிறார். அப்படி அவர்கள் உள்நுழைந்தால் அது தானாகவே போர்க்குற்ற விசாணைக்குள் இழுத்துச்செல்லும், அப்படி சென்றால் இராணுவத்தினர் மாட்டுப்படுவர், அவர்களுக்கு கட்டளை பிறப்பித்தவர்கள் மாட்டுப்படுவர் தொடர்ந்து ஆட்சியாளர்கள் மாட்டுவர். இது ஒரு சங்கிலியாக தொடரும். அதை இலங்கையில் உள்ள யாரும் விரும்ப மாட்டார்கள் ஆகவே இது ரணில் கொடுக்கும் ஒரு எச்சரிக்கை வைத்தியமாகவே நோக்க வேண்டியுள்ளது. அதே நேரம் இராணுவம், இனி ராஜபக்ஸாக்களுக்கு கட்டுப்படுவார்களோ என்பதும் கேள்விக்குறியே. எல்லா திணைக்களங்களுக்குள்ளும் இராணுவத்தை புகுத்தி தன் இருப்பை உறுதிப்படுத்திய கோத்தாவை பாதுகாக்காது கைகளை கட்டி, அவர் தப்பியோடுவதை வேடிக்கை பார்த்த இராணுவம் ஒத்துழைப்பார்களா என்பதும் கேள்விக்குறியே. அவர்கள் முன்னெடுத்த மத கலவரமும் பிசுபிசுத்துப்போனது மக்கள் ஆதரவின்றி. இனவாதத்தை கக்கியவர்களும் வீதிக்கு இறங்க பயந்து பதுங்கிக்கொண்டனர். சந்திரகாந்தன் தான் ஏதாவது செய்து அவர்களை காக்கவேண்டும், இல்லையேல் மாட்ட வேண்டும், அரசியல் கதிரை ஆசையை துறக்க வேண்டும். என்ன நடக்கிறது என்பதை தொடர்ந்து அவதானிப்போம்!
  3. அசாத் மௌலானா பாதுகாப்பான இடத்தில இருந்து வாக்குமூலம் அளிக்கிறார், இருந்தாலும் அவரது பேச்சில் ஏன் இந்தளவு பதட்டம், அவசரம்? அவரது உடல்மொழி அவர் எதையோ மறைப்பதுபோல் தெரிகிறதே. சந்தரகாந்தனின் மொழிபெயர்ப்பாளர் ஆன இவர் தனது காரியங்களை நிறைவேற்ற சந்திரகாந்தனையும் இவரை சந்திரகாந்தனும் இவர்களை சிங்களமும் பயன்படுத்தியிருக்கின்றனர். ஐ.எஸ்.ஐ. எஸ்.அமைப்பை இந்தமௌலானாவே சந்திரகாந்தனோடு சேர்ந்து கையாண்டிருக்கலாம். சந்திரகாந்தன் மூளையாகவும் மௌலானா செயற்பாட்டாளராகவும் இந்த குண்டுத்தாக்குதலை நடத்தியிருக்க வாய்ப்புண்டு. பெரும்பாலும் அரசியலில் முறையற்ற வகையில் பணம் சேகரிப்போர் பாதுகாப்பிற்காக தமது தூரத்து உறவுகள், நண்பர்கள், உத்தியோக உதவியாளர்கள், கார்சாரதிகள் போன்றோரின் வங்கி வைப்புகளில் வைப்பதுண்டு. இவ்வாறு வைப்பிலிட்டவர்கள் அகால மரணமெய்தினால், சம்பந்தப்பட்டவரின் உறவுகள் அந்த பணத்தை மீளப்பெற கேட்கும்போது, சம்பந்தப்பட்டவர் உயிரோடு இருக்கும்போது பணத்தை பெற்றுவிட்டார் என்று கூறி வைப்புச்செய்த பணத்தை தாம் சுருட்டுவதும். இல்லை, சம்பந்தப்பட்டவரே கேட்கும்போது அப்படி ஏதும் பணம் அவர் பெறவில்லை என கையை விரிப்பதும், அதற்கு எதிராக முறைப்பாடு செய்யவோ சட்ட நடவடிக்கையோ எடுக்க முடியாதாகையால் தனது அரசியல் செல்வாக்கைபயன்படுத்தி பழிவாங்குவதும் அல்லது இவர் அவரை மாட்டி விடுவதுமுண்டு. அந்த கோணத்தில் தான் செய்த தவறுகளையும் சந்திரகாந்தன்மேல் போட்டு தான் தப்பும் செயலாகவும் இருக்கலாம். ஆனால் இந்த மௌலானா, சுரேஷ் அலி போன்றோர் தமது இனத்தை, மதத்தை சேர்ந்தவர்களை பலிகொடுத்து, அப்பாவிகளை பலி எடுத்தது தமது தமது பதவிகளை தக்க வைப்பதற்காக, மனித குலத்துக்கே எதிரானது. அதுமட்டுமல்ல அந்த இனத்தின் பொருளாதாரம் நொறுக்கப்பட்டது, குண்டுதாரிகளின் மனைவிமார் குழந்தைகளும் பலி எடுக்கப்பட்டனர். இவர்கள் தங்கள் மதத்தையோ இனத்தையோ மதிக்கவுமில்லை பாதுக்காகவுமில்லை அவர்களைப்பற்றி சிந்திக்கவுமில்லை. இனம் இனத்தோடு சேரும் என்பது இவர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. இங்கு, அப்பாவிகளை கொன்று சுகம் அனுபவித்து, அதை சாட்சியாக உபயோகித்து தஞ்சம் பெற்று சுகமாக வாழ்வதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் பெயரில் இருக்கும் பணத்தை தடுப்பு செய்து (முடக்கி) ஏழைமக்களுக்கு, குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும்.
  4. சந்திரகாந்தன் ஒளித்து வைத்துள்ள ஆயுதங்கள், இடங்கள் போன்ற விபரங்களை இன்னொரு சகா வெளியிட்டிருக்கிறாராமே? தொடர்ந்து வரும்போலிருக்கிறதே இவரின் வண்டவாளம். ஒன்று சந்திரகாந்தன் ஒப்புதல் சாட்சியாக மாறி வாக்குமூலம் அளிக்க வேண்டும் தைரியமிருந்தால், இல்லையென்றால் சுரேஷ் அலியோ மற்றவர்களோ சந்திர காந்தன் தலையில் கட்டி தாம் தப்பி விட வாய்ப்புண்டு. யாரிடம் வாக்குமூலம் அளிப்பது? தப்பியோடுவதை தவிர வேறுவழியில்லை. ஆனால் இவர் இப்போ கண்காணிப்பு வலயத்தில் இருப்பார். இவரே நினைத்தாலும் முடியாது. ஒன்று, சூடுபட்டு சாகவேண்டும், தற்கொலை செய்யவேண்டும், குற்றத்தை ஒப்புக்கொள்ளவேண்டும். தற்கொலை செய்வதற்கு தைரியமிருந்திருந்தால்; காட்டிக்கொடுக்க வேண்டிய தேவை வந்திருக்காதே இவருக்கு. எஜமானருக்காக கொலைகள் செய்திருக்க வாய்ப்புமில்லை. எதற்கு பயந்து அடிமை வேலை செய்தாரோ அதுவே நிகழப்போகுது. எத்தனையோ உயிர்களை அலாக்காக பறித்தவர், தனது உயிருக்காக மன்றாடப்போகிறார். இவரைப்போன்றோர் தமது நேரத்துக்கு தங்களை தயார்ப்படுத்திக்கொள்ளட்டும். தமிழரை படுகொலை செய்து அழித்த இராணுவம், ஏன் இவர் போன்றோரை பயன்படுத்தவேண்டும் என்கிற கேள்விக்கு இவர்களின் மரணத்தின் பின்னால், அல்லது தண்டனையின் பின்னால் பதில் தெரிய வரும்.
  5. அவர்களுக்கென்றொரு யூனியனும் இருக்குது பாருங்கோ! அவையள் யாருமில்லாத நோயாளிகளின் உடைமை, உணவுகளை கையாடல் செய்வதுமுண்டு. நோயாளிகளால் கடவுளாக கையடுத்து கும்பிடப்பட வேண்டியவர்கள், அவர்களின் இயலாமையை தங்களின் வாய்ப்பாக பயன்படுத்துகின்றனர். மகப்பேற்று தாதியர் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளை பிரயோகிப்பதும், சில குழந்தைகளின் இறப்பிற்கும் காரணமாய் இருந்ததோடு, தம் குழந்தைகளை இழந்த தாய்மாருக்கு அனுதாபம் கூட தெரிவிக்காமல் தங்கள் சேவை நேரத்தில் வம்பளப்பதில் செலவிட்டதையும் கண்டிருக்கிறேன். பணம் ஒன்றே கடவுள். அது இல்லாதவனெல்லாம் பிணம் என்று நினைக்கிறார்கள், நடத்துகிறார்கள்.
  6. எல்லா குற்றச்சாட்டுக்களையும் மறுக்கலாம் மறைக்கலாம் கூறுவோரை அச்சுறுத்தலாம் ஆனால் தொடர்ந்து வெளிவரப்போகும் ஆதாரங்களையும் வாக்குமூலங்களையும் மறுக்க முடியுமா? முடிந்தால்; தங்களையே மறுப்பது போலவும் ஏமாற்றுவது போலவும் ஆகும். அமெரிக்கா போர்க்குற்ற ஆதாரங்களை சற்றலைட் மூலம் வைத்திருக்கிறது என்று சொல்கிறார்கள், அது உண்மையானால்; ஈராக்கில் ஆதாரமற்ற குற்றச்சாட்டை கொண்டு உள்நுழைந்தது, ஆப்கானிஸ்தானில், லிபியாவில் நடந்ததுபோல் இங்கும் வந்து இவர்களை இழுத்துக்கொண்டு போக முடியும்.
  7. ஆமா இலங்கையில் சிங்கங்கள் ஆடை உடுத்திக்கொண்டன என மகாவம்ஷம் கூறுகிறது. இவர்கள் கூறும் பதில்களை பாத்து இவர்களின் அறிவை வியக்காமல் இருக்க முடியவில்லை. வர வர நகைச்சுவையாளர்களாக மாறி வருகிறார்கள்.
  8. மற்றவர்களை எச்சரிப்பதையும் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதையும் விடுத்து விசாரணையின் முடிவுகளை வெளிப்படுத்துங்கள். ஒத்தூதும் கருதினாலே சர்வதேச விசாரணையை கோருகிறார். அதை எங்கே ஒளித்து வைத்திருக்கிறீர்கள்? எடுத்துக்காட்டுங்கள் பாப்போம்! கருதினாலும் கேட்டு கேட்டு களைத்துப்போய் சர்வதேசத்தை கூப்பிடுகிறார்.
  9. நாட்டிலே தீங்கொன்றும் நிகழவில்லை, சணல் நான்காற்தான் நிகழப்போகுது. தமிழருக்கு உரிமை வழங்கினால் கலவரம் வெடிக்கும், தனியார் காணிகளில் விகாரை கட்டுவதை தடுத்தால் இரத்த ஆறு ஓடும், தமிழருக்கு ஏதாவது வழங்கினால் நாட்டை கொழுத்துதல் இப்படியே உருவான, பழக்கப்பட்ட இனம். இதுகளை மாற்ற முடியாது. நன்மைகளை சிந்திப்பதுமில்லை, செய்வதுமில்லை. துறவிகளில் இருந்து அரசியல்வாதிகள், குடிமக்கள், பாதுகாப்பு அமைச்சு வரை முன்னேறவில்லை, அழிவையே சிந்திப்பது. இனி நாட்டில் ஒரு அழிவு ஏற்பட்டால்; அதற்கு தங்கள் பொறுப்பை தட்டிக்கழித்து மற்றவர்களை அச்சுறுத்தும்இலங்கை பாதுகாப்பு அமைச்சே பொறுப்பேற்க வேண்டும்!
  10. ஆமா... எச்சரிக்கை கொடுத்தும் அப்பாவிமக்களை பலிகொடுத்த அமைச்சு, அதுக்கு பாதுகாப்பு என்று பெயர். குற்றவாளிகளை பாதுகாக்கும் அமைச்சு, இவர்களின் அச்சுறுத்தலுக்கு ஒன்றும் குறைவில்லை. தெருவிலே நின்று ஊளையிடும் பிக்குகளை அடக்கத்தெரியவில்லை, உண்மைகளை வெளிபடுத்துவோருக்கு அச்சுறுத்தல் விட மட்டும் தெரியும். நிஞாயத்தை கேட்போரை அழிப்பது, அச்சுறுத்தல் விடுவது, காணலாலாக்குவது இந்த நாட்டின் அரசியலின் பாரம்பரியம். அதை இன்று உலகமே அனுபவிக்கிறது. நல்ல வேளை..... இந்த அமளியில் குமார் கஜேந்திரன் தப்பினார்.
  11. 2009 ம் ஆண்டு நடந்த போர்க்குற்றங்களுக்கு நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டிருந்தால் 2019 ம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை தவிர்த்திருக்கலாம். இவர்களின் அறிக்கைகளும் அழுத்தங்களும் பாராட்டுகளும் உதவிகளும் இன்னும் வன்முறைகளும் அழிவுகளும் ஏற்பட காரணமாகுமேயொழிய பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதையும் பெற்றுத்தரப்போவதில்லை. அவர்களும் கூடிக் கதைக்க ஏதாவதுவிஷயம் இருக்க வேண்டுமே.
  12. ஏன் அப்படி? ராஜபக்ச பாரம்பரியத்துக்கும் சணல் 4 குமிடையில் அப்படி என்ன கொடுக்கல் வாங்கல் பிணக்கு? சரி... அவர்களுடையது போலியானவை. உங்கள் விசாரணைகளின் அடிப்படைத்தன்மையை வெளிப்படுத்துங்கள் முதலில் பார்க்கலாம்? அவற்றின் மூலம் சணல் நான்கு போலியானது என்பதை நிரூபித்து அதை தடை செய்யுங்கள் பார்க்கலாம் முடிந்தால்! எச்சரிக்கை கொடுத்தும் தடுக்க முடியாத, நான்கு ஆண்டுகள் கடந்தும் குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்க முடியாத இலங்கை புலனாய்வுப் பிரிவை குறி வைப்பதால் யாருக்கு என்ன நன்மை?
  13. ஆனால் உங்கள் மீது குற்றச்சாட்டு வந்திருக்கிறது, உங்கள் கூற்றை நாங்கள் நம்ப வேண்டுமானால் இந்த குற்றச்சாட்டிலிருந்து உங்களை விடுவிக்க வேண்டும். அதற்கு ஒரே வழி.... சர்வதேச விசாரணையை ஏற்று உங்கள் கூற்றை, வெற்றியை நிரூபியுங்கள். இல்லையேல்.... குற்றச்சாட்டு உண்மையானது என உறுதிப்படுத்தப்படும். அதுதான் சொல்கிறோம்.... அவர்களின் முயற்சியை முறியடிக்க வேண்டுமானால் சர்வதேச விசாரணையை ஏற்க தாங்கள் முன்வரவேண்டும். இல்லையென்றாலும் தாங்கள் விட்ட பெருந்தவறோ அன்றி ஒப்படைக்கப்பட்ட தரகர் விட்ட தவறோ.... சுற்றுலா விடுதிமேல் தாக்குதல் நடத்தியது. நீங்கள் மறுத்தாலும் அந்த மக்களின் அரசாங்கங்கள் சும்மா விடப்போவதில்லை உங்களை.
  14. அப்போ..... அவர்கள் 2022ம் ஆண்டு துரத்தப்படுவார்கள் என்றும் எல்லோரும் தெரிந்து வைத்திருந்தார்களா? அப்படியெனில் ஏன் அவர்களை வெல்ல வைத்தார்கள் மினிஸ்ரர் சந்திரகாந்தன்? அப்போ..... குடும்பப்பிரச்சனை உள்ளவர்களுக்கு உள்நாட்டில் தீர்வில்லை வெளிநாட்டிற்த்தான் தீர்வு என்கிறார் இவர். பாவம் இந்த சந்திரகாந்தன்! புலிகளுக்குதுரோகம் செய்து வீழ்ச்சியை கொடுத்து இன்று அதே துரோகாத்தால் மாட்டுப்பட்டு முழிக்கிறார். இவரை சிறையிலும் இருக்க விட மாட்டார்கள், வெளியிலும் இருக்க விடமாட்டார்கள். இவருக்கு அரசியல் அந்தஸ்து கொடுப்பதே தமக்காக கொலை செய்வதற்கே. இவர் மாட்டேன் என்றும் சொல்ல முடியாது, இவரின் குற்ற பட்டியல் அவர்களின் கையில். அதை காட்டியே சகல கொலைகளும் நடக்கின்றன, முடிவும் அவர்கள் கையாலேயே. அதனாற்தான் சொல்கிறேன் இது போராட போகாமல் இருந்திருக்கலாம், இல்லை பேசாமல் சிறைக்கு போயிருந்தால் மரியாதையோடு வெளியே வந்திருக்கலாம். எப்போதுமே இவர் ஒரு சிறைகைதியே அவர்களின். சர்வதேச விசாரணை என்று வந்தால்; சிக்கப்போவது, இவர் தன் வாயாலேயே மாட்டுவார். என்ன செய்வது அவரின் விதி அப்படி. இந்த சர்வதேச விசாரணை நாட்டுக்குள் வந்தால்; உயிர்த்த ஞாயிறு விசாரணையோடு மூடிக்கொண்டு போகப்போவதில்லை. தங்களை விடுவிக்க வெளிக்கிட்டு தாங்களாகவே சிக்கிகொள்ளப்போகிறார்கள். விதி வரையும் பாதை விசித்திரமானது ஆனால் நேர்த்தியானது!
  15. ஆனால் இதன் அடிப்படையில் தமிழ் அரசியல் கைதிகள் இன்னும் சிறையில் வாடுகின்றனரே அதெப்படி அமைச்சரே? உள்ளூர் நீதி பரிபாலனத்தின்மேல் மக்கள் நம்பிக்கையிழந்து வெகுகாலமாச்சு அமைச்சரே! இப்போ மக்கள் சர்வதேச விசாரணையைத்தான் கேட்க்கின்றனர் பாராளுமன்றத்திலும் கூட!
  16. ம் ..... திரும்பி வரும்போது போதைப்பொருளுக்கு பதிலாக வாளோடு வருவார்கள் தம்மை காட்டிக்கொடுத்தவர்களை தீர்த்துக்கட்ட. எப்படி பிடிபடாமல் விநியோகிப்பது நுகர்வது என்கிற பயற்சியும் கொடுத்து அனுப்புவார்கள்.
  17. குற்றவாளிகள் எல்லோரும் தங்கள் குற்றத்தை ஏற்றுகொண்டால் காவற்துறை எதற்கு? சட்டமும் நீதிமன்றமுந்தான் எதற்கு? அதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்! சிறைச்சாலையில் இருந்த சிவநேசதுரை சந்திரகாந்தனை, சிறைச்சாலை வரை சென்று மஹிந்தா சந்திப்பு நடத்த காரணமென்ன? கதைத்ததுதான் என்ன? அவ்வளவு பெரிய புள்ளியா இவர்? அல்லது மஹிந்தவின் உடன் பிறப்பு, உறவு, நட்பு? பதவியிழந்தவர் ஆட்சியை பிடிக்காவிட்டால் சிறை செல்வது உறுதி, இவரோ சிறையில் இருந்து வெளியில் வரமுடியாமல் தவித்தவர் இரண்டுபேரும் சந்தித்து தீட்டிய திட்டம், ஒருவர் விடுதலை பெற்றார் மற்றவர் ஆட்சியை பிடித்தார்.
  18. அதை விடுங்கோ.... அது உங்களுக்கும் கருதினாலுக்கும் இடையில் செய்யப்பட்ட இரகசிய உடன்பாடு கொடுக்கல் வாங்கல். உங்களுக்கு அரசியல் கதிரையை உறுதி செய்துவிட்டு சென்ற பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு என்ன செய்தீர்கள்? அல்லது இந்த கருதினால்தான் என்ன செய்தார் என பட்டியலிடுங்கள் முதலில்!
  19. இல்லை, முதற் பிழையிலேயே திருந்தியிருக்க வேணும். திருந்தவில்லை, இனி அதற்கு இடமுமில்லை சந்தர்ப்பமுமில்லை அதனால் பலனுமில்லை. இவர்கள் அழிவது ஒன்றே முடிவு. ஒன்றை மறைக்க இன்னொன்றை செய்து குவித்து விட்டார்கள். மீண்டு வர இடமில்லை விடவும் மாட்டார்கள்.
  20. ஆமா ..... இவர் பெரிய புகழின் உச்சிக்கொம்பில் இருக்கிறார், இவரை விழுத்துவதற்காக இவரின் பெயரை பயன்படுத்துகின்றனர், இவருக்குள் ஒரு நினைப்பு. இதுக்கே இப்படியென்றால்; இன்னம் பல சாட்சியங்களும் வாக்குமூலங்களும் தொடர்ந்து வரும்போலிருக்கிறதே. கோத்தா சாட்சியங்களை அழிக்காமல் உறங்க மாட்டார். இவர் முக்கியமான சாட்சி, இவர் எடுப்பார் கைப்பிள்ளை. தன் தலைவனையே காட்டிகொடுத்தவருக்கு, அதை நிஞாயப்படுத்தியவருக்கு இது ஒன்றும் புதிதில்லையே. அதுசரி .... ஹன்சீர் அஷாட் மௌலானா எதற்காக வெளிநாட்டில் தஞ்சம் கோரவேண்டும்? அதற்காக, ஏன் இவரின் பெயரை பயன்படுத்தவேண்டும்? வெளிநாட்டில் தஞ்சம் கோருவோரெல்லாம் இவரின் பெயரை பாவித்தா பெறுகின்றனர்? அப்போ ..... இவரால் ஹன்சீர் அஷாட் மௌலானாவுக்கு பாதுகாப்பு பிரச்சனை இருந்திருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்கிறார் இவர். அதை ஏன் அவர் இலங்கையில் முறையிட விரும்பவில்லை? தனக்கு பாதுகாப்பு கிடைக்காது என்பதை அவர் உணர்ந்துள்ளளார். அப்படி ஒரு உணர்வு அவருக்கு ஏற்பட காரணம் என்ன? அவர்களை (ஐ. எஸ்) உங்கள் எஜமானரின் அரசியல் நோக்கத்திற்காக மரணிக்க ஊக்குவித்ததாகவே தனது சாட்சியத்தில் கூறியிருக்கிறார், உங்கள் கூற்றும் அவரின் சாட்சியமும் ஒத்து வருகின்றது. தாங்கள் நினைத்ததை சாதிப்பதற்கும் தங்கள் அடாவடிகளை மறைப்பதற்கும், அதிலிருந்து தப்பிப்பதற்கும் வன்முறைகளை தூண்டுவதும், பாதிக்கப்பட்டவர்களை அச்சுறுத்துவதும் இந்த நாட்டின் கலாச்சாரம், அது இந்த நாட்டுக்கு ஒன்றும் புதிதில்லை, அதனாலேயே இந்த நாடு அழிந்து குட்டிச்சுவரானது, ஆனால் அதை செய்பவர்கள் செய்ய வேண்டும், தெரியாதவங்க செய்ய வெளிக்கிட்டால் அதனாலேயே அழிவர். பன்றியோடு சேர்ந்த கன்றும் ஏதோ தின்னுமாம், சேர்ந்த இடம், அவர்களுக்காக செய்யுந்தொழில் அப்படி பேச வைக்குது. கூட இருந்தவனாலேயே காட்டிக்கொடுக்க முடியும். எதற்காக காட்டிக்கொடுத்தார் என்பது நன்றாகவே இவருக்குத் தெரியும், தெரியாவிட்டால் தன் கடந்த அனுபவங்களை மீட்டிப்பார்க்கலாம். துரோகி துரோகத்தாலே அழிவான். கூலிக்கு கொலை செய்பவனை கொலை செய்ய, இன்னொருவன் கூலிக்கு அமர்த்தப்படுவான். இன்னும் நிறைய துரோகங்களையும் பரபரப்புச் செய்திகளையும் மாற்றங்களையும் எதிர் பார்க்கிறோம். சவேந்திர சில்வா அடுத்த சாட்சியாளராக மாறவும் இடமுண்டு. எதுவும் எந்த நேரத்திலும் இடம்பெறலாம் யாக்கிரதையாக நடமாடவும், முடிந்தால்........? தஞ்சமும் கோரலாம் வெளிநாட்டில்!
  21. தமிழரின் காணிகளை பறித்த்து விகாரைகள் எழுப்ப பயன்படும். பாராட்டுவதும் நிதியளிப்பதுமே அவர்களின் பங்களிப்பு.
  22. குண்டுத்தாக்குதல் நடந்த கால கட்டத்தில் சர்வதேச விசாரணை செய்ய முன்வந்தன, ஆனால் அது தமக்கு இழுக்கு என அதை ஏற்க மறுத்தவர் கோத்தா. இன்றுவரை அவர்களால் சரியான விசாரணை அறிக்கையை வெளியிட முடியாததும் சணல் நான்கு வெளிப்படுத்தியதும் இழுக்கல்லவே அவர்களுக்கு. கண்டிப்பாக தாங்கள் மாட்டுப்படுவோம் என்பதற்காகவே தடுத்திருந்தார். ஐயோ...ஐயோ! அவர்கள் ஐ .எஸ் அமைப்பினர். அவர்களுக்கு ஏற்கெனவே தாக்குதல் பயிற்சி அளிக்கப்பட்டவர்கள். சிறையில் எதற்காக இருந்தார்கள்? அதைவிட தற்கொலை குண்டுதாரிக்கு அப்படியென்ன பயிற்சி தேவை? அவர்கள் என்ன எதிரியின் பாசறையிலா தாக்குதல் நடத்தினர்? அல்லது போரிட்டா இறந்தனர்?
  23. எனக்கென்னவோ ராஜபக்சாக்களின் அரசியல் பயணம் அஸ்தமிக்குது என்றே தோன்றுகிறது. நாமலை ஜனாதிபதியாக்க மஹிந்தா எடுத்த முயற்சியே இவர்களுக்கு கஸ்ர காலத்தை தொடக்கியது. நானே அரசன் என்று நினைத்து ஆடும்போது நினைத்திருக்க மாட்டார்கள் இப்படி மாட்டுவோமென. வெற்றி விழா கொண்டாடும்போது அறிந்திருக்க மாட்டார்கள் தூக்கியெறியப்படுவோமென. இனி புத்தராலும் இவர்களை காப்பாற்ற முடியாது. எப்போதும் ஒரே தந்திரம் பலிக்காது. அப்படி செய்ய வெளிக்கிட்டால் அந்த தந்திரத்தில் அவர்களே சிக்கிக் கொள்வார்கள். குண்டு வெடித்து அரசை கைப்பற்றிய ருசி, வன்முறையை கிளப்பி மீண்டும் அரச கதிரையேற துடித்தவர்கள், சரியான நேரத்தில் சணல் 4 உண்மையை வெளிப்படுத்தி அடையாளம் காட்டியிருக்கிறது. இனி விதி அவர்களை பாத்துக்கொள்ளும். இல்லையேல் சிங்கள மக்களே இந்தமுறை அவர்களின் வன்முறையில் சிக்குவார்கள். இது இவர்களின் வழமையான பல்லவி என்பது உலகறிந்த விஷயம். ராஜபக்சவின் உருவச்சிலையை அடித்து நொருக்கியதை உலகமே கண்டதே. . ஏற்கெனவே மக்களால் துரத்தப்பட்டவர்களுக்கு ஏன் சேறடிக்க வேண்டும்? தூய்மையானவர்களுக்கு சேறடித்து அவர்களின் புகழை மறைக்கிறார்கள் என்று சொல்லலாம், திருடர் மாதிரி ஒளித்து ஓடியவர்கள் மேல் ஏன் சேறடிக்க வேண்டும்? ?
  24. நம் அரசியற் தலைவர்கள் சட்ட நடவடிக்கை எடுத்து தடுக்க முயற்சிக்கலாம், அந்த பிரதேசத்தை சேர்ந்த மக்கள் காணியில்லாமல் தவிக்கும்போது, அரசுக்கு எதற்கு காணி? மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது அரசின் கடமை. அந்ததந்த பிரதேசத்தில் உள்ள காணிகள் அந்த பிரதேச மக்களுக்கேயுரியது. அவர்களுக்கே பகிர்ந்தளிக்கப்படவேண்டும். காணி சீர்திருத்தச் சட்டத்தை ஆராய்ந்தால் இதற்கு சரியான பதில் கிடைக்குமென நினைக்கின்றேன். சிங்கள மக்களை வடக்கில் குடியேற்றுகிறது, தேவைக்கதிகமான விகாரைகளை தனிப்பட்ட மக்களின் காணிகளிலேயே நிறுவுகிறது. இந்த அடாவடிகளை சர்வதேசத்துக்கு இடை விடாமல் அறிவிக்க வேண்டும், இல்லையேல் ஒரு காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களாக சிங்கள மக்களே கருத்தப்படக்கூடும்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.