Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. நல்லாட்சி காலத்தில் வரைந்த சட்ட வரைபை நிறைவேற்றுவேன், என்று அனுரா தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார். அதற்கு தான் பாராளுமன்றம் போக வேண்டும் என்று முன்பே சுமந்திரன் கூறியிருந்தார். இன்று கஜேந்திரன் பொன்னம்பலம் செய்யமுடியும் என்று சொல்லும்போதும் ஒரு பெரிய சிரிப்பு தெரிகிறது. அங்கெ நிக்கிறார் சூழ்ச்சி சுமந்திரன். அந்த தீர்வை வரைந்தவர் சுமந்திரன், சிங்களத்தோடு சேர்ந்து. அதற்கு பரிசாக பிரதமமந்திரி பதவியை எதிர்பார்த்தார். அப்போ, அந்த தீர்வில் என்ன இருக்கும்? "ஏக்கய ராஜ்ய" அதற்காக தான் போயே ஆகவேண்டும். முழுதாக தேசியத்துக்கு ஆப்பு. இல்லையென்றால் அதில் சம்பந்தபடுபவரை அந்த ஆப்பில் செருகி தான் தப்பிப்பது. இதுதான் இவரின் சூழ்ச்சி, தந்திரம். ஆனால் அனுர சொல்லியிருக்கிறார். இதுவரை எடுத்த சட்ட வரைபு எல்லாவற்றையும் ஆராய்ந்து, ஆலோசித்து, நடைமுறைக்கு சாத்தியமானதே நடைமுறைப்படுத்துவோமென அறிவித்திருக்கிறார். அந்த ஏக்கய ராஜ்ய சட்ட வரைபை ஏற்காவிடடாலோ, அல்லது பொன்னம்பலம் கஜேந்திர குமார் மாற்றிவடிவமைத்தாலோ, வேறொரு சட்ட வரைபை அமுல்படுத்தினாலோ, நான் செய்திருப்பேன், நான் மறுத்திருப்பேன், மக்கள் என்னை நிராகரித்ததால் அது வீணாக போய்விட்டது என மக்கள் மேல் பழியை போடுவது. அவரால் இனிவருங்காலத்தில் முடியுமென்றால்; ஏன் அவர் முட்டுக்கொடுத்த அரசுகளால் செய்விக்க முடியவில்லை இவரால். ஒவ்வொரு தவறுக்கு வேறொருவரை காரணம் சொல்லி தப்புவது இவரது இயல்பு.
  2. சுயநல வாதிகளை சுற்றி இப்படி பல உண்ணிகள் தொற்றிக்கொண்டிருக்கும். அவர்களின் செயற்பாட்டு நிலை இறங்கும்போது உண்ணிகள் யாவும் தானாகவே இறங்கி வேறிடத்தில் மாற்றிக்கொள்ளும். அதைத்தான் கண்ணதாசனும் சொன்னார் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் உன் நிழலுங்கூட மிதிக்கும். இவர்களின் நலன்விரும்பி, உறவினர், மாமன், மச்சான் சுமந்திரனாய் இருந்தால்; தங்கள் எதிர்கால சூனியத்தை மக்கள்மேல், மதத்தின் மேல் திணித்து வாழ வைக்க முயற்சிக்கிறார்கள்.
  3. கிறிஸ்தவத்தை தமது சுயலாபத்திற்காக பாவிப்பவர்களே இந்த தத்துவத்தை பேசுவார்கள். இது போலிகிறிஸ்தவர்களின் வாதம். ஆனால் உண்மையான கிறிஸ்தவம் அதுவல்ல, எங்கு பிழை உள்ளதோ அதை கண்டித்து திருத்தும். இல்லையேல் அவரை அந்நியர் போல் விட்டுவிடும். இவர்களின் வாதம் உண்மையென்றால்; இவர் எவ்வாறு இரண்டுதடவை தேர்தலில் நின்று வெற்றி பெற்றேன் என்கிறார். தனது தவறை ஏற்றுக்கொள்ளாதவர், மதத்தின்மேல் தன் தவறை திணிக்கிறார். கிறிஸ்தவர்கள் வாக்களித்தாலே இவர் வெற்றி பெற வாய்ப்புண்டு. சரி கிறிஸ்தவரை ஒதுக்கினர் என்றே வைத்துக்கொள்வோம். அப்போ, அனுரா கட்சி எப்படி வென்றது? சாதாரணம். இவரின் அடாவடியின் உச்சக்கட்டம், கடைசி நிமிடத்தில் இவர் கட்சிக்குள் செலுத்திய சர்வாதிகாரம். இவர் இந்த முறை வென்றிருந்தால் கூட எதுவும் சாதிக்க முடியாது. ரொம்ப அவமானப்படுத்தப்பட்டிருப்பார். அவர் போவது, தான்தான் எல்லாம் தெரிந்த சட்டத்தரணி என்று காட்டுவதற்கு, அந்த திமிர் ஒட்ட நறுக்கப்பட்டிருக்கும். சரியாக சொன்னீர்கள் மீரா! அனுரா கட்சி பெரியளவில் யாழ்ப்பாணத்தில் பிரச்சாரம் செய்யவில்லை, வாக்குறுதிகள் அளிக்கவில்லை, யாரையும் விமர்சிக்கவில்லை, யாரும் கேள்வி, சந்தேகம் என்று கூட கேட்கவில்லை. அப்படியிருந்தும் மக்கள் அமோகமாக வாக்களித்துள்ளார்கள். காரணம்; இவர்கள் மேலிருந்த வெறுப்பு, தங்கள் தேசிய உணர்வை வைத்து இவர்கள் தங்களை ஏமாற்றுகிறார்கள், தாங்கள் இந்த உணர்வோடு இருக்குமட்டும் இந்த போலிதேசிய வாதிகள் தம்மை ஏமாற்றி தம்மிடம் உள்ளவற்றையும் பறிக்கும் என்பதை உணர்ந்தே, அனுரா மேல் நம்பிக்கை வைத்து தெரிந்தெடுத்துள்ளார்கள். இவர்களை வெறுத்து இன்னொரு சிங்கள கட்சியை அவர்கள் ஆதரிக்கவில்லை. குறிப்பாக அனுராவை தேர்ந்தெடுத்துள்ளார்கள். எல்லோரும் அதன் விளைவை எச்சரித்தும் வாக்களித்தார்கள். மக்களின் நம்பிக்கை, அந்த இரும்பு மனங்களை கவரும், உடைக்கும். கட்டாயம் மற்ற சிங்கள கட்சிகளை போலல்லாது ஏதாவது செய்வார்கள். அது இருக்க, சிறிதரன் ஒத்துக்கொள்கிறார். மக்கள் நம்மீது வெறுப்பு கொண்டு எங்களை அகற்றியிருக்கிறார்கள், நாங்கள் அதற்கு மதிப்பளிக்கிறோம், திருந்துவோம். ஆனால் சுமந்திரனோ, நாங்கள் வென்று விட்டோம், பிரிந்து சென்ற கட்சிகள் தோற்றுவிட்டார்கள், நாங்கள் இத்தனை ஆசனங்களை பெற்றோம் என்று வரிசைப்படுத்துகிறார். இதிலிருந்து அவர் மனநிலையை பாருங்கள். எதுவுமே தெரியாதவர் போல் சிரித்துக்கொண்டு பேட்டியளிக்கிறார். இதுதான் வெட்கங்கெட்ட தன்மை. தனது தோல்வியை மறைத்து, மற்றவர்களை விமர்சிக்கிறார். இவர் ஒரு உளறுவாயன். தன்னைத்தானே உயர்த்துவதற்காக எதையும் செய்ய தயங்காதவர். இந்த முறை தேர்தலில் ஏமாற்றுக்காரருக்கு நல்ல பாடம் படிப்பித்திருக்கிறார்கள் மக்கள். நீ உன் நண்பனைப்பற்றி சொல்லு நான் உன்னைப்பற்றி சொல்கிறேன் எனும் பழமொழி உண்டு. கபித்தான் நேரடியாகவே தன் குணாதிசயங்களை காட்டுகிறார், ஆனால் இன்னும் சிலர் அங்கு பாதி இங்கு பாதி என தளம்பி தம்மை மறைக்க முயற்சிக்கின்றனர். ஒரு தடவை தமிழரசுக்கட்சி எல்லா ஆசனங்களையும் வென்றிருந்தது, எந்த தேர்தல் என்பது நினைவில்லிலை. அப்போ மக்கள், சம்பந்தரை ஆரத்தி எடுத்து, பொட்டு வைத்து, மாலை போட்டு, மேளம் கொட்டி ஊர்வலமாக அழைத்துச்சென்றனர். இவர்கள் மனம் இளகவில்லை, இந்த மக்களுக்கா நாம் துரோகம் செய்கிறோம், ஏமாற்றுகிறோமென்று. எத்தனை கயவர்கள் இவர்கள்? இதிலை தாங்கள் வெற்றியாமென ஆர்ப்பரிக்கிறார் சுமந்திரன். வெட்கம் கெட்டவனுக்கு சூடென்ன, சுரணையென்ன என்று கூறுவார்கள். அநாகரிக வார்த்தை பிரயோகம் மூலம் உண்மை பேசுபவர்களின் வாயை அடைப்பது. இதுவும் ஒரு யுக்தி. ஆனால் தாம் எப்படியும் யாரையும் விமர்சிக்கலாம். நேற்ரொரு காணொளி பாத்தேன். எல்லா தமிழ்தேசிய கட்சி அரசியல் வாதிகளும் இருக்கிறார்கள். எல்லோர் முகங்களிலும் சந்தேகம், சோகம், அமைதியாக ஒருவரோடு ஒருவர் பேசவில்லை அமைதியாக இருக்கிறார்கள். சுமந்திரன் மட்டும் தேவையற்ற ஒரு சிரிப்பு, கரட்டி ஓணான் மாதிரி தலையை உயர்த்தி தாழ்த்தி, முன்னுக்கு பின்னுக்கு திரும்பி, பாவனை காட்டுகிறார். இவரை யாரும் விமர்சிக்க மாட்டார்கள் எனும் பாவனை. இந்த மனிதன் எப்படியானவர்?
  4. வாக்கு வாங்கு மட்டும் மக்களின் கழிவுகளையும் எடுப்பார்கள் போலிருக்கே. என்னமா நடிக்கிறார்கள்? மக்களை ஏமாற்றுவதும் கொள்ளை அடிப்பதும் ஒரு கலை இவர்களுக்கு!
  5. என்னது! அரசியலில் சூழ்ச்சியும் தந்திரமும் நிறைந்தவர் சுமந்திரனா? அவர் தமிழ் மக்களை, அவர்களின் மூச்சான தேசியத்தை உடைப்பதிலும் முழு மூச்சாக சூழ்ச்சியும் செய்தார், தந்திரமும் செய்தார் ஒழிய அரசியலில் மக்களுக்கு எதுவும் சாதிக்கவில்லை. அதனாலேயே இன்று அரசியலில் கேள்விக்குறியாக இருக்கிறார். பேச்சாளர் பதவியை கைவிடாமல் வைத்திருப்பது, தனக்கு வரும் அவமானங்களை தடுப்பதற்கு, ஊடக சந்திப்புகளை நடத்தி மற்றவர்களை பேசவிடாமல் தடுப்பதற்கே. போனதடவை மாவையர் தோற்றபோது என்ன நடந்தது என்பதை கொஞ்சம் மனக்கண் கொண்டுவந்து பாருங்கள். மாவையரை அறியாமல், எத்தனை அறிக்கை விட்டார், எத்தனை ஊடக சந்திப்புகளை நடத்தினார், முடிவுகளை எடுத்தார், நியமனங்களை செய்தார். இன்று, தான் எவ்வாறு செயற்படுகிறார்? அவர் யாரையும் எதையும் மதிப்பதில்லை, தன்னிச்சைப்படியே நடப்பார். இது ஒன்றும் அவரது சொந்த வீடல்ல, தான் நினைத்தபடி நடந்து கொள்வதற்கு. தன்னாலேயே கட்சி இவ்வளவு பாரிய பின்னடைவுகளை எதிர்கொண்டுள்ளது, அதிலும் இவருக்கு மீண்டெழ முடியாத அவமானம், தானே தேடிக்கொண்டது. இருந்தாலும் அதை எப்படி மாற்றி கதைவிடுகிறார் எனப் பாருங்கள். இதெல்லாம் பிறவிக்குணம். இவரை மாற்ற முடியாது, நாம் மாறவேண்டும். இவரை விட்டு கட்சியை மீட்டெடுக்க வேண்டும். இப்படியெல்லாம் அதுவும் அரசியலில் வெட்கக்கேடு. சர்வதேசமே, அட இவரிடமா பேசினோம் நாம். என நினைப்பார்கள் நிஞாய தர்மம் இல்லாதவர்.
  6. சுமந்திரன் அப்படி ஒரு செயல் வீரன், சட்டத்தரணி என்றால்; அவர் வந்தவுடனேயே தீர்வு எடுத்து தந்திருக்க வேண்டுமே? இப்பொழுது விரட்டப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லையே, அனுராவை விட்டு சஜித்துக்கு வாக்களிக்கும்படி கேட்டிருக்கவும் வாய்ப்பில்லையே? அதுதானே அனுரா, இவரை வெறுக்க காரணம். நாங்கள் பொது வேட்பாளரை ஆதரித்த போது, எந்த முகத்தோடு சிங்களத்தோடு பேசுவது என்று கேட்டவர்கள், எந்த முகத்தோடு பிரதம மந்திரி பதவி அழைப்பிதழுக்கு காத்திருந்தார்?
  7. 2015 தொடங்கி 2019 ல் வரைந்த அரசியல் தீர்வு. முதல் வரியில் ஏற்பட்ட தவறுக்கு வருந்துகிறேன்.
  8. சுமந்திரனின் அறிவிப்பின்படி ௨௦௧௫-௨௦௧௯ ம் ஆண்டில் நல்லாட்சி செய்த சட்டவரைபை பூர்த்தி செய்வேனென அனுரா தனது தேர்தல் வாக்குறுதியில் சொன்னதாக கூறுகிறார். அப்படியானால் சுமந்திரன் ஏற்கெனவே பலதடவை, தான் நல்லாட்சி அரசாங்கத்துடன் தீர்வை வரைந்து விட்டதாகவும் நிறைவேற்றுவதே பாக்கி என்றும் அறிவித்திருந்தார். அதை நிறைவேறுவதற்கு இவர் ஏன் பாராளுமன்றம் செல்ல வேண்டும்? அதுதான் வரைந்தாயிற்றே. இவர்சொல்வதுபோல் வரைந்ததை நிறைவேற்றுவது ஜனாதிபதியின், பாராளுமன்றத்தின் வேலை. அதை நிறைவேற்ற ஆரம்பிக்கும்போதுதான் வெளிவரும் இவர் என்ன சட்டம் வரைந்தார் என்கிற உண்மை. "ஏக்கய ராஜ்ய" இவர் சொல்கிறார் ஒன்றுபட்ட அரசு. அதற்கு சரியான சிங்கள வார்த்தை இல்லை, அதனாலேயே ஏக்கய என குறிப்பிடுவதாக. ஆனால் ஏக்கய என்பது ஒற்றை ஆட்சி என்று சிலர் விளக்குகிறார்கள். அது இருக்கட்டும்.... இவர் இன்னும் காலாவதியான பேச்சாளர் பதவியை விடுவதாக இல்லை. இவர் மட்டும் தேர்தலில் வென்றிருந்தால் இங்கு ஒரு களம் ஆகியிருக்கும், மற்றைய கட்சிகளை சீண்டியிருந்திருப்பார் சுமந்திரன். மக்கள் இன்னும் தமிழ் தேசியத்தை நேசிக்கிறார்கள், ஆனால் சுமந்திரனை வெறுக்கிறார்கள். அதை சுமந்திரன் உணரவேண்டும். தோற்ற மாவை பதவி விலகவேண்டும் அன்று கூவியவர் இன்று அதை தான் செய்திருக்க வேண்டும் அடுத்த தேர்தலில் போட்டியிடக்கூடாது. ஏதோ தமிழரசுக்கட்சி தன்னிற் தான் தாங்கி நிற்பதுபோல் கதையளக்கிறார். இவர் தேர்தலுக்கு முன் அறிவித்தது போல் பாராளுமன்றம் செல்லக்கூடாது. எப்படியும் மூச்சுக்கு முன்னூறு தடவை நானே சட்டவரைபை அவர்களோடு சேர்ந்து இயற்றியதாக பிதற்றுகிறாரே, அது என்ன சட்ட வரைபு என்பது தெரிய வரும். மதுபான சாலை அனுமதிப்பத்திரம் பெற்றவர்களின் பெயரை அறிவிப்பதாக சொன்னார்கள் அறிவிக்கவில்லை என்று கூறுகிறார். அனுரா வெளியிட்டிருக்கக்கூடும், இவர் போய் கேட்டது தேர்தல் காழ்புணற்சியினால் மற்றைய வேடபாளர்களை அவமதிக்கக்கூடுமென நினைத்திருக்கலாம். சுமந்திரனின் வாயை எல்லோருமாறிவர். இவர் வைத்த குற்றச்சாட்டுக்கு மேற்தானே மக்கள் சிறிதரனை தெரிந்தெடுத்து இருக்கிறார்கள். ஆனால் பாருங்கோ மனிதன் கூச்ச நாச்சமில்லாமல் சாதாரணமாக வெற்றி பற்றி கட்சி பற்றி விளக்குகிறார். சொல்வார்கள், "துரோகிக்கு வெட்கம், ரோசம், மானம், எல்லாம் கிடையாதென. அதை நேரடியாக காண்கிறேன் நலன் விரும்பிகள் அவரைச்சுற்றி எழுப்பிய விம்பம் அது. ஆனால் சுமந்திரன் தன்னைவிட வேறு யாரையும் சட்டத்தரணி என்று ஏற்கவும் மாட்டார், செயலாற்றவும் விடமாட்டார். உதாரணம்; விக்கினேஸ்வரன் ஐயாவை விரட்டியது, தவராசாவை பின்தள்ளியது அவரது பயம் தன்னை இவர்கள் விஞ்சி விடுவார்கள் என்பதே. "நிறைகுடம் தளம்பாது, குறைகுடம் எப்போதும் தளம்பிகொட்டிக்கொண்டே இருக்கும்." "ஆலையில்லா ஊருக்கு, இலுப்பம்பூ சக்கரையாம்."
  9. இவற்றில் எதையும் தருவேன் என்று அனுரா சொல்லவில்லை, தரமாட்டேன் என்று உறுதியளிக்கவுமில்லை. இதை தாருங்கள் அதை கைவிடுகிறோமென மக்கள் கூறவுமில்லை, எதிர்பார்க்கவுமில்லை. இலங்கை முழுக்க உள்ள எத்தனையோபேர் எச்சரித்திருந்தும் மக்கள் அவரை தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்கள் மாற்றத்தை எதிர்பார்த்து அனுராவை நம்பி தெரிந்தெடுத்தார்கள். அவர்களின் வேணவா அனுராவுக்கு புரியும், தன்னாலியன்றதை முயற்சித்து செய்வார். முன் இருந்த ஆட்சியாளர்கள் எத்தனையோ சொன்னார்கள், செய்தார்களா? சொல்பவர் செய்வதில்லை செய்பவர் சொல்வதில்லை. பொறுத்திருங்கள், மக்களின் தெரிவை எள்ளி நகையாடாதீர்கள். இதெல்லாம் சுமந்திரனை தூக்கியெறிந்த மக்கள் மேல் உள்ள வக்கிரம் அனுராவை வசை பாடுகிறார்கள். சரி அனுராவை தெரிந்தது பிழையென்றால், உங்கள் தெரிவு யாராக இருந்திருக்க வேண்டுமென்று சொல்லித்தான் தொலையுங்களேன்! இன்னொரு சிங்களவர்தானே, அரியம் நின்றபோதும் நகைத்தீர்கள். அனுராவை தெரிந்தபோதும் வசை பாடுகிறீர்கள். இதைத்தான் மனதுக்குள் உள்ளதை வெளியிட விரும்பாமல் வெதும்புவது என்பது.
  10. அடியைப்போல் அண்ணன் தம்பி உதவான்! ஆனாலும் இவரை அகற்றுவது மிக மிகக் கடினம். தழரசுக்கு சோதனை முடியாது. சிறிதரன் இவரிடம் இருந்து கட்சியை காப்பாற்ற வேண்டும். ஊடகப்பேச்சாளர் பதவிக்கு உகந்தவர் இவரல்லர் உடனடியாக அதை அவரிடமிருந்து பறித்தெடுக்கவும். தேர்தலில் தோற்றவர்களுக்கு ஆசனம் கிடையாதென கட்டளை இட்டவர், அவரது கட்டளைகளை அவருக்கெதிராக நிறைவேற்றவும். தனக்கேற்ற மாதிரி காரணங்களை தேடுவதும் நிஞாயம் கற்பிப்பதும் நிறுத்தப்படவேண்டும்.
  11. அது கோஷனின் விருப்பமென்றால், அதை சிரந்தாழ்த்தி ஏற்கத்தயாராக இருக்கிறேன் என்பதை சபையோர் முன்னிலையில் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பதவிப்பிரமாணம் எப்போது வைப்பதென உத்தேசித்துள்ளீர்கள்? கபிதனையும் கட்டாயம் கூட்டி வாருங்கள்.
  12. உங்களிடம் முறையிட வர மாடடோம் அதுமட்டும் நிட்சயம்.
  13. இது எனது கருத்தல்ல, என மறுத்துரைக்கிறேன். பொது இடத்தில நாகரிகம் முக்கியம்! பதில் சொல்ல முடியாவிடில் கடந்து செல்லுங்கள்.
  14. ஏன்? இதுவரை கட்டி முடித்து அபிஷேகம் செய்த விகாரைகளை அடித்து நொறுக்கி விட்டீர்களாக்கும். கூரை மீதேறி கோழி பிடிக்க தெரியாதவர் வானமேறி வைகுண்டம் போனாராம்.
  15. சட்ட நிபுணர் இவ்வளவு காலமும் எதை சாதித்தார்? அவரது நிபுணத்துவதால் வரைந்த சட்ட வரைபையே நிறைவேற்றுவிக்க முடியாதவர், ரணிலை காப்பாற்ற போய் எதிர்க்கட்சி பதவியை இழந்ததுதான் சாதனை. கால நீட்டிப்பு கொடுத்து இழுபட வழிசமைத்தது, கட்சியை பிரித்தது தவிர வேறெதை செய்தார் மக்களுக்கு? கடைசி தமிழ் அரசியல் கைதிகளையாவது விடுதலை செய்வித்தாரா? அவரை அவரே சட்ட நிபுணர் என்று சொல்லி புளகாங்கிதம் அடைய வேண்டியதுதான். அனுரா தான் எடுத்த முடிவை தனது குழுவுடன் ஆலோசித்து செய்வார், இதற்குள் சுமந்திரனை புகுத்தி உள்ளதையும் கெடுத்து விடாமல் இருப்பதே நல்லது. அவரின் தோழர்களுக்கு மாறி மாறி தோள் கொடுத்து ஒன்றுமே செய்ய முடியவில்லை, விரும்பவுமில்லை. அனுராவோ, சுமந்திரனை தூரவே வைக்க விரும்புகிறார். ஒரு அரசியலை தூர நோக்கோடு நடத்தி செல்ல திறமையில்லாதவர், அனுராவோட போய் தன் இருப்பை தக்கவே உழைப்பார்
  16. ஆமா... நம்ம தலைவர்கள் காட்டியபடி அவர்களுக்கு வாக்களித்தோம் ஆனால் சொன்னதை அவர்கள் நிறைவேற்றவில்லை. வரும் வராது என்கிற கப்பலை நம்பி காலத்தை வீணடித்து ஏமாறுவதைவிட, ஏமாற்றுபவர்களை நம்புவதை விட, மக்கள் ஒருவரை நம்பித்தான் ஆக வேண்டுமென்று துணிந்து முடிவெடுத்துள்ளார்கள். நம்பிக்கைதான் வாழ்க்கை. அனுரா இப்போதான் பதவி அதிகார பூர்வமாக அவர் கையில் வந்துள்ளது. எழுபத்தைந்து வருடங்களாக புரையோடிப்போனதை பிடுங்கியெறிய உடனடியாக முடியாது. அப்படி முயன்றால் ஒரு வருடம் கூட அவர் பதவியில் தாங்க மாட்டார். நிட்சயம் ஏதாவது செய்வார். இல்லையென்றால்; இன்னொருவர் வருவார் என்பது அவருக்கு தெரியும். ஆடறுக்க முதல் பு .....கு எனக்கு என்று குளறாதீர்கள். மக்கள் தீர்ப்பு எழுதிவிட்டார்கள், அவர்களை குறை கூறுவதற்கு யாருக்கும் அருகதையில்லை. இழந்தவர்கள் அனுபவிப்பவர்கள் எல்லாம் அவர்கள். அவர்கள் முடிவை மதியுங்கள் முறையிடாதீர்கள்.
  17. தேர்தலுக்கு முன் பூச்சாண்டி காட்டி தட்டிப்பறிக்க நினைத்தார்கள், அதையும் தாண்டி மக்கள் அவர்மேல் தமக்கிருந்த நம்பிக்கையை வெளிக்காட்டினார். இப்போ தமிழருக்கு ஏதாவது கிடைத்து விடுமோ என்கிற அச்சத்தில் வந்து புத்திமதி கூறுகிறாராம். ஏதோ அனுரா இவரைக்கேட்டுத்தான் முடிவெடுப்பார் போல. கண்கெட்டபின் புலம்பத்தான் முடியும், தேடியடைய முடியாது இழந்ததை. அனுராவுக்கு காலம், சந்தர்ப்பம், மக்கள், அகன்ற கதவை திறந்து அரிய கொடுத்துள்ளது. அவர் மனதை திறந்து நம்மையும் பங்காளிகளாக அழைத்தால் நன்மைகள் நிறைவேறும். இல்லையேல் சந்திரிகா புலம்புவதுபோல், கோத்தா ஓடியதுபோல் எதுவும் நடக்கலாம். இனிமேல் இவர்கள் வாயை சாப்பிடுவதற்கு அப்பால் திறந்தால் ரொம்ப அவமானப்படுவார்கள்.
  18. ஒவ்வொருவரும் ஒவ்வொருவரை பயன்படுத்திக்கொள்கிறார்கள், இதுதான் சுமந்திரன் கட்சிக்குள் வந்ததன் பின் ஏற்பட்ட மாற்றம். "ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி, கடந்தபின் நீ யாரோ நான் யாரோ."
  19. ஐயா.... அர்ச்சுனா ஒன்றும் ஜனாதிபதியுமல்ல, அவர் கட்சியை சார்ந்தவருமல்லர். இன்று முழு அளவிலான வெற்றி பெற்றவருடன் அர்ச்சுனா மட்டும் போய் போராட முடியுமா? அநுர கட்சியை சேர்ந்தவர்கள் பிரச்சனையை நேரடியாக கதைக்க முடியும், இல்லை ஜனாதிபதியே அவர்களுடன் கலந்துரையாட முடியும். தனக்காக வாக்களித்தவர்கள் என அவர் மனம் மாறி நல்லது செய்யவும் கூடும். பல கை ஓசையில் அர்ச்சுனாவின் ஒருகை ஓசை எடுபடுமா? நீங்கள் இப்போ அர்ச்சுனாவோடு கோத்து விட முயற்சிக்கிறீர்கள். முதலில் ஒருவருடமாவது பொறுத்திருங்கள், அநுர என்ன செய்கிறாரென பார்ப்பதற்கு.
  20. இப்போ தேசியப்பட்டியலில் பாராளுமன்றம் போக சத்தியலிங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துகிறாராம். இவர் எல்லாம் ஒரு மனிதன், நேரம் ஒரு கதை கதைத்துக்கொண்டு.
  21. இது தேர்தலுக்கு முன், எப்படியும் வென்று விடுவேன் எனும் மிதப்பில் சொன்னது. இது தேர்தலுக்குப்பின் தெளிந்த பின். இருவரும் காலையில் ஒன்று சொல்வார்கள், மாலையில் வேறொன்று சொல்வார்கள். பாப்போம் இருவரின் பேரம் பேசலையும். இருக்கிற மிச்சமும் கலையப்போகுது. இவர்களை விரட்டிய பின்தான் வீட்டை புனரமைக்க முடியும். இல்லையென்றால் வீட்டை அரித்துக்கொட்டிக்கொண்டே இருப்பார்கள்.
  22. அர்ச்சுனாவின் திறமையை இனிமேற்தான் பாராட்ட வேண்டும். அதற்கு ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டும். மக்கள் தங்களுக்கு வேண்டியதை நேரடியாகவே கேட்கமுடியும். அரசியல்வாதிகள் கேட்பதேயில்லையே.
  23. கவலைப்படாதீர்கள், மஹிந்தா ரணிலுடன் கூட்டுச் சேர்ந்து செய்த அடூழியங்களுக்கெல்லாம் பதில் சொல்லும் காலம் வந்துவிட்டது. அவர்கள் இவர்கள்மேல் பழி போடுகிறார்களா, இவர்கள் அவர்கள்மேல் கை நீட்டுகிறார்களா என்பதெல்லாம் இல்லை. எல்லோருமே தண்டிக்கப்படவேண்டும். முன்பெல்லாம் மஹிந்த கூட்டத்தை விசாரணைக்கு அழைத்தால்; மக்கள் புடை சூழ வருவார்கள். இப்போ மக்களே வலைபோட்டு பிடித்து கொடுப்பார்கள். தேர்தலில் தமது விருப்பத்தை மக்கள் காட்டியிருக்கிறார்கள். ஊழல்வாதிகளை கைது செய்வேன் என்றார், அதை செய்யுங்கள் என்றே மக்கள் ஆணை அளித்துள்ளார்கள். எதற்கும் விமான நிலையத்தை சுற்றி பாதுகாப்பை பலப்படுத்த வேண்டியதிருக்கிறது.
  24. மாறி மாறி ஆட்சி செய்தவர்கள் தீர்வு தாறோம் என்று சொன்னார்களா? இல்லை சொன்னதை செய்தார்களா? அவர்கள் மேலெல்லாம் வராத வெறுப்பு ஏன் இவர் மீது மட்டும் கொட்டுகிறது? ஒரு கட்சியாக ஆரம்பித்து இன்று பல கட்சிகளாக பிரிந்து தென்னிலங்கை கட்சிகளையும் நுழைய வைத்திருக்கிறார்கள், மக்கள் மட்டும் ஒருமித்து வாக்களிக்க வேண்டுமோ? மக்களின் வாக்குகளை இவர்கள் கொண்டுபோய் தென்னிலங்கை கட்சிகளிடம் கொடுத்து தங்கள் சுயலாபம் தேடுகிறார்கள், அதை இப்போ மக்கள் தங்கள் வாங்குகளை தாங்களே கொடுத்து பேரம் பேசுகிறார்கள். அதை குறை சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. மக்களின் குறைகளை அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தீர்த்து வைப்பேன் என்று அநுர கூறியிருக்கிறார். இதற்கு பூசாரி, தரகர் எல்லாம் எதற்கு?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.