Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. அதுதான்! கோத்தாவுக்கு வாக்குப்போட லட்ஷக்கணக்கில் முண்டியடித்து வந்தவர்கள், பிறகு நாட்டுப்பக்கம் திரும்பியே பாத்திருக்க மாட்டார்கள். அப்படி இவருக்கும் வந்திருந்தால்; இவர் எண்ணிக்கை அறுபத்தொன்பது லட்ச்சத்தை தாண்டியிருக்க வேண்டுமே? ஏன் அனுராவை பாத்து இப்படி பயப்படுகிறார்கள்? ஊழல் ஒழிப்பு, விசாரணை இப்படி பலதால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் போலும்.
  2. ம்..... பல நாடகங்களை கண்டு விட்டோம். சாணக்கியன் தூஷண பிக்கு, தாடி இராணுவம், மகிந்தா கிறிஸ் பூதம், இப்படி ஒவ்வொரு தேர்தலுக்கும் நீளும். ஆனால் மக்கள் முன், வேறு நாடகம். அப்பாவி மக்களின் பயத்தை வைத்து அரங்கேறுகின்றன.
  3. ரணிலாரினதும் அவரது ஆதரவாளர்களினதும் பிரார்த்தனையும் அதுவே. இவ்வளவு காலமும் திருட்டு, ஊழல் என்று உழன்ற நாடு, வேறு திசையில் சென்றால் இவர்களெல்லாம் எப்படி சீவிப்பது? திரும்பிச்செல்ல முடியாதென்றால் எப்படி வந்தார்களாம்? இவர், தற்போதைய ஜனாதிபதி. ஆறு வாகனம். முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அதை விட பல மடங்கு வாகனங்கள் எதற்கு? ஒரே நேரத்தில் ஒருவர் இத்தனை வாகனங்களிலா பயணம் செய்வார்? அதுமட்டுமல்ல பயங்கரவாதத்தை வேரோடு அழித்து விட்டோம் என்று மார்தட்டியவர்கள், இப்போ பாதுகாப்பு வேண்டுமென்று கேட்ப்பது எந்த வகையில் நிஞாயம்? சரி..... அனுரா, பாதுகாப்பான ஒரு வீட்டில் உங்களை வாடகைக்கு அமர்த்துவார், உங்களுக்கு வேண்டிய நேரத்தில் பாதுகாப்பு, வாகன வசதி செய்து தருவார், உங்களுக்கு மட்டும். ஏற்றுக்கொள்ள தயாரா? ஆனால், அதன் சம்பளம், பராமரிப்பு, வாடகை, நீங்களே செலுத்த வேண்டும். மக்கள் வாக்குகளினாலே வந்து, அவர்கள் பணத்தில் நீங்கள் மட்டும் சலுகை அனுபவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.
  4. இது எத்தனை தடவையாக சொல்கிறீர்கள்? அத்தனை தரமும் மக்கள் உங்களை அனுப்பிவிட்டு நம்பிக்கையுடன் காத்திருந்தார்களே, என்ன சாதித்தீர்கள்? கட்சியையே காப்பாற்ற முடியாத உங்களால் எங்கள் பிரச்சனையை தீர்க்க முடியுமா என தேர்தலில் போட்டியிடுமுன் சிந்தித்து முடிவெடுத்திருந்தால்; இப்படி தேர்தல் மேடையில் ஒருவரை ஒருவர் சாடி, மக்கள் முகம் சுழிக்கும் நிலை வந்திருக்குமா? மக்கள் அனுரா பக்கம் சாய்ந்திருப்பார்களா? அவர்களை சாகவும் விடமாட் டீர்கள் வாழவும் விட மாட்டீர்கள்.
  5. ஆகா ..... ஆகா ..... நட்டு நறுக்காக சொல்லிவிட்டார். அவருக்கும் தெரியும், இதில் தமிழ் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் அரசியல் செய்வார்கள் என்று. இனி வருங்காலத்தில் இவர்கள் மக்களுடன் கூட இருந்து சேவைசெய்தாலே அவர்கள் மக்களின் பிரதிநிதிகள். இல்லையேல் மக்கள் நேரடியாக ஜனாதிபதியின் பிரதிநிதியான ஆளுநரிடம் தமது வேண்டுகோளை சமர்ப்பிக்கலாம். அதற்கு பிரதிநிதிகள் என்கிற தரகர்கள், மக்களின் வாக்குகளையும், அதிக பணவிரையத்தையும் பெற வேண்டிய அவசியமில்லை. இப்ப பாருங்கள்! அனுரா யாழ்ப்பாணம் வரும்போது மக்கள் கொடுக்போகும் வரவேற்பை. செய்வோம் என்று வாக்களித்தவர்களை வரவேற்று வாக்களித்து வாழ்த்துச்சொல்லி காத்திருந்து ஏமாற்றப்பட்டவர்களுக்கு, செய்து காட்டிவிட்டு வாக்குக்கேட்டு வருபவரை காணாமல் இருப்பார்களோ? இதோடு அனுரா நல்லவராக இருந்தால்; அந்த மக்களின் வெள்ளை உள்ளத்தை பார்த்து, மனம் மாறுவார் இல்லையேல் பத்தோடு பதினொன்று. இவரை அனுரா ஆளுநராக நியமித்தபோது, யாரோ ஒரு உறவு, அதற்கான காரணத்தை பதிந்திருந்தார், யாரென்று மறந்துவிட்டேன். அந்த திரியில் பார்த்தீர்கள் என்றால் தெரிந்து கொள்ளலாம். போன ஆண்டு என நினைக்கிறன், இங்குள்ள ஒரு ஆலயத்தை திறக்கப்போகிறார்கள் என்று சொல்லி இராணுவம் புடைசூழ தாடியர் வாகனத்தில் வந்தவர், அப்போது செய்தியாளர் உட்ச்செல்ல அனுமதியளிக்கப்படவில்லை. தாடியரிடம் தாங்களும் உட்ச்செல்ல அனுமதி வாங்கித்தருமாறு கேட்டிருந்தார்கள். அவர் உள்ளே போனவர்தான் காத்திருந்தவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஏனென்றால், அங்குள்ள நிலைமைகளை இவர்கள் படமெடுத்து மக்களுக்கு தெரியப்படுத்தி பிரச்சனையை உருவாக்குவார்களாம். தங்கள் நிலத்தை பார்வையிட மக்களுக்கு உரிமையில்லை. இது ஜனநாயக நாடு, இறைமையுள்ள நாடு என கர்ச்சிப்பார்கள்.
  6. சுமந்திரன்தான் தமிழரின் பிரச்சனைகளையும் சர்வதேசத்தையும் கையாளக்கூடிய திறமை பொருந்தியவர் எனும் மாயை அவர் நலன்விரும்பிகளாலும் உறவுகளாலும் ஏற்படுத்தப்படும் நாடகம். அவரும் தகுந்தாற்போல சுழன்று சுழன்று தனியாக சந்திப்புகளை, அறிக்கைகளை நடத்துகிறார் விடுகிறார். ஆனால் அதற்கான ஆதாரம் சுமந்திரனிடமோ அவரது ஆதரவாளர்களிடமோ இல்லை, சும்மா தேவையற்ற விடயங்களை செருகி மறைக்க மறுக்க முயற்சிக்கிறார்கள். தமிழரின் பிரச்சனைகளை, அவலங்களை தமிழ்த்தலைமைகள் ஜெனீவாவுக்கு கொண்டு சென்று பேசவேண்டுமென்கிறார். அதை செய்ய அவர்கள் விரும்புவதில்லை, தயங்குகிறார்கள். சுற்றுலாவுக்கு, தனிச்சந்திப்புக்கு, சிங்களத்துக்கு வக்காலத்து வாங்குவதற்கு, சிங்களத்துக்கு கால அவகாசம் வாங்கிக்கொடுப்பதற்கு துரிதமாக காலநேரம் பார்க்காமல் விரைவார்கள். அடுத்து, மக்கள் அனுரா பக்கம் சாய்வது; அந்த சாதாரண மக்களுக்கு வேறு என்ன தெரிவு இருக்கிறது? அவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்து இருந்த போது அள்ளிக்கொடுத்து தமிழ் தேசியத்தை தாங்கினார்கள், சொந்த இடத்தை விட்டு வெளியேறினார்கள், தங்கள் சொந்தப்பிள்ளைகளை அனுப்பினார்கள், இப்போ அவர்களிடம் ஏதுமில்லை. அவர்கள் வலியில், இழப்பில், தனிமையில், வீடற்ற நிலையில் அவர்கள் பிரதிநிதிகள் என்று அவர்கள் நம்பி பாராளுமன்றம் அனுப்பியவர்கள் அருகில் இருந்தார்களா? ஆறுதல் சொன்னார்களா? நாட்டிற்த்தான் இருந்தார்களா? இப்போ, அவர்களிடம் எஞ்சி இருப்பது உயிர் ஒன்றே. அது பிழைக்க வேண்டுமென்றால் நடந்தேறாத, அவர்கள் பிரதிநிதிகளே இயலாத காரியம் என்று சொன்ன ஒன்றுக்காக சாவதை விட, வயிற்றை நிரப்பியாவது வாழ்ந்து சாவோம் என்று நினைப்பதில் தவறென்ன இருக்கிறது? இந்த ஒரு இலகுக்காகவே இலங்கை காய் நகர்த்தி, கொடுமைகளை புரிந்து படுகொலைகளை நிகழ்த்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் உடமைகளையே பகுதியாக திருப்பியளித்து, தண்டனையிலிருந்து தப்பிக்கொள்கிறது. அரசு மாற்றம் தானாகவே கால அவகாசம், கண்துடைப்பு காணாமற்போனோர் அலுவலகம், விசாரணை நம்ப வைப்பு, இதில் பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கை நட்ஷத்திரங்கள் கொடுக்கும் கால அவகாசம். இவற்றோடு சாதாரண மக்களால் போராட முடியுமா? உறவுகளை இழந்த ஏக்கம், ஒரு தடவையாவது அவர்களை பார்த்து விட மாட்டோமா என்கிற தவிப்பு, வறுமை இவற்றாலேயே இருப்பவர்களும் மாண்டு போகிறார்கள். இனி தமிழ்த்தேசியம் என்கிற கனவு போய் வாழ்ந்தாலே போதும் என்கிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இந்த நிலைக்கு யார் காரணம்? புலிகள் போராடியிருக்காவிட்டால் எமது இழப்புகள் மூடி மறைக்கப்பட்டிருக்கும். அவர்கள் போராடியதாலேயே இன்றுவரை உலகம் அதுபற்றி பேசிக்கொண்டிருக்கிறது. ஐ .நா. ஏதாவது தீர்வு வழங்க முடியுமாயிருந்தால் எப்பவோ வழங்கியிருக்கும். இவ்வளவு கால நீடிப்பு தேவையில்லை, அதன்பின் நடக்கும் யுத்தங்களும் தடைப்பட்டிருக்கும். ஒரு அநிஞாயம் நடக்கும்போது கைகட்டி, வாழவிருந்து, இழப்புகளை வேடிக்கை பார்த்திருந்து விட்டு, காலத்தை கடத்தி வெறும் நாடகமே தவிர பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நிவாரணமோ நீதியோ கிடைக்க வாய்ப்பில்லை.
  7. அவர்தான் பதவிக்காக நாக்கைதொங்கபோட்டுக்கொண்டு திரியிறார் என்று வர்ணிக்கப்படுகிறார் இங்கு. அவர் அப்படி செய்வதில் தவறேதும் இல்லை, ஆனால் தமிழரசுக்கட்சியை சொந்தமாக்கி கொண்டவர்கள் என்ன செய்தார்கள் மக்களுக்கு? வெறும் அறிக்கைகளையும் மிரட்டல்களை விரட்டல்களையும் தவிர்த்து. அவரையும் கொஞ்சம் விமர்சித்தால் நீங்கள் நடுவுநிலையாளர்.
  8. ஏன், கந்தையர்தான் திருடினார் என்று முடிவு செய்து விட்டீர்களா? பாவம் கந்தையர்.
  9. ம்..... சிங்களத்தோடு கூத்தடித்துக்கொண்டு இருப்பார்கள், தமிழருக்கு ஏதாவது ஒரு நல்ல செய்தி வந்தால் கிளம்பி விடுவினம். அவர்கள் கேட்கமாட்டார்கள், தமிழர் தனிநாடு கோரினால், பங்கு கேட்கவும் அதை தடுக்கவும் வருவார்கள். ஏன், ரவூப் கூறினாரே போரில் தாங்களும் அரசுக்கு உதவியதனாலேயே போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது என்று.
  10. அதுசரி, இந்த வீதியை திறக்குமாறு வேண்டுகோள் வைத்தவரின் தலைக்கறுப்பையே காணமே. அவருக்கு தெரிவிக்காமலேயே திறந்து விட்டார்களோ? யாராவது வந்து ஆடம்பரமாக திறந்திருந்தால், சுமந்திரன் வந்து வாய்வீச்சு விட்டிருப்பார். பாவம் அவர்தான் கோரிக்கை வைத்தார் அவருக்கு சொல்லாமலேயே எல்லாம் நடந்து முடிந்தது. இந்த மக்களின் மனம் மாறமுதல், அனுரா வருவார் வாக்கு கேட்க. சரி, செய்து காண்பித்து விட்டு கேட்பதில் தவறில்லை. ஒன்றும் செய்யாமலே வாங்குகளை வாங்கியோரும், வாங்கிக் கொடுத்தோரையும் விட இது பரவாயில்லை. ஆனால் தேர்தல் முடிய வீதியை பூட்டாமல் இருந்தால் சரி. பதவி வரும்போது பணிவும் வரவேண்டும், அப்படி வந்தால் அந்தபதவி நிலைக்கும். நான் வீதியை திறக்கப்போகிறேன் என்று அறிவித்திருந்தால்; தெற்கில் இருந்து ஒரு குழப்ப கோஷ்ட்டி வந்திறங்கியிருக்கும், வடக்கிலிருந்து வசந்தம், சுமந்திரன் போன்றோர் பட்டு வேட்டிகளோடு உரிமை கோரி வந்திருப்பினம். இப்போ, இவர்களே கேட்டுத்தான் அறிதிருப்பினம் இந்த விடையத்தை. அதுவே நல்ல விடையம். இதற்கு ரணில் எதிர்ப்பு தெரிவிப்பார். ரணிலை அன்று புலிகள் தேர்தலில் புறக்கணித்தது தவறு என எத்தனைபேர் பாடம் எடுத்தார்கள். இன்று மஹிந்தவுக்கு பாதுகாப்பு குறைக்கப்படக்கூடாது என கூறுகிறார். எனக்கு வேண்டாம் அவருக்கு பாதுகாப்பு அளியுங்கள் என்கிறார். இதிலிருந்தே அவர் அன்று பதவிக்கு வந்திருந்தால்; என்ன செய்திருப்பார் என்பதை விளங்கிக்கொள்வது ஒன்றும் கடினமில்லை அறிவுள்ளவருக்கு.
  11. சும்மா இருந்து வாக்கு சேர்க்கிறவர்களுக்கு, தாங்களும் செயல் வீரர் என்று காட்ட இதுகளை எதிர்பார்த்திருப்பார்கள், சம்பவ இடத்துக்கு அழைப்பில்லாமலேயே வலியப்போய் படம் எடுத்து தங்கள் சாதனை என்று சொல்வார்கள். செய்கிறவர்களோ தங்களுக்கு மக்கள் வாக்கு போடுவார்கள் எனும் எதிர்பார்ப்பிலேயே அதிரடியாக தக்க சமயத்தில் இவற்றை செய்கிறார்கள். இதைத்தான் வடக்கின் வசந்தமும் செய்கிறார், வலியப்போய் கூட்டத்தில இருப்பார், படத்துக்கு எட்டி முகம் காட்டுவார், கருத்து சொல்லுவார். அவர் சட்டம் ஒன்றும் படிக்கவில்லை, இனத்தை விற்று பதவி பெறுகிறார். இவர் படித்தவர் என்று சொல்கிறார் கட்சியை உடைத்து, தேசியத்தை விற்று பதவியில் தொடர்ந்து இருக்க பாடுபடுகிறார். தனது பதவியாசையை மற்றவர்மேல் திணிப்பார்.
  12. ம் ..... எப்படி பெருமையாய் இருந்த பெயரை இப்படி நாறடிச்சிட்டாங்களே, இனி கந்தையா என்ற பெயர் உள்ளவர்கள் வெளியில் சொல்லவே பயப்படுவார்கள். சும்மா பகிடிக்கு.
  13. ஆயுதப்போராட்டத்தை நான் ஆதரிக்கவில்லை என்று அலம்பித்திரிந்தவர், இப்ப எப்படிப்பேசுகிறார் பாருங்கள்! அது சரி.... வெள்ளை வேட்டி சட்டையோடு வலம்வந்தவர், திடீரென்று ஜே .வி. நிறத்தில் திரியுறார், அதுவும் பேட்டிகளில். ம் .....மக்களிடம் ஒன்று, சிங்கள தலைவர்களோடு வேறொன்று பேசுகிறமாதிரி இப்போ, இரண்டையும் கலந்து நடமாடுகிறார், பேசுறார். ஆனால் அனுரா இதற்கெல்லாம் எடுபடப்போவதில்லை. தனது நம்பிக்கைக்குரியவராக ஆளுநரை தெரிவு செய்துள்ளார். அவர் வழியாகவே தமிழரின் பிரச்சனைகளை அணுகுவார். வடக்கின் வசந்தம் பேட்டி கொடுக்கும் போதெல்லாம் ஒன்று சொல்வார், அதாவது தான்தான் தீர்க்கதரிசனமாக பதின்மூன்றாம் அரசியல் சட்டத்தை அன்று முதல் ஏற்றுக்கொண்டவர் என்றும் அதை அன்று எதிர்த்தவர்கள் இன்று அதை நிறைவேற்றும்படி கேட்கிறார்கள் என்றும் அடிக்கடி புகழுவார். அவரது தீர்க்கதரிசனம் இன்று வரை நிறைவேறவில்லை, இவரால் நிறைவேற்றுவிக்கவும் முடியவில்லை. அதை அவர் தனது தீர்க்கதரிசனம் என்று சொல்லித்திரிகிறார். அவர்கள் என்றுமே எதையும் நிறைவேற்றப்போவதில்லை. சும்மா தங்களை பிரபல்யப்படுத்துவது. அன்று சமஷ்டி தீர்வை அளிக்க மஹிந்த முன்வந்தாராம், ஆனால் புலிகள் அதை ஏற்க மறுத்து விட்டனராம் என்று வேறு விளக்கம். அப்படி கொடுப்பவர்கள் போர் முடிவுக்கு வந்தவுடன் தாம் சொன்னதை நிறைவேற்றியிருக்கலாமே, புலிகளை அழித்த பின்னர் தமிழருக்கான தீர்வை வழங்குவேன் என்று சர்வதேசத்துக்கு வாக்களித்தார்களே அதற்கு என்ன நடந்தது? அவர்களே பகிரங்கமாக சொல்லியிருக்கிறார்கள், புலிகளை அழித்துவிட்டோம், இனிமேல் , தமிழருக்கு தீர்வு என்று ஒன்றுமில்லை, அவர்கள் இங்கு வாழ விரும்பினால் வாழலாம், உரிமை எல்லாம் கோரமுடியாது சொன்னவர்கள், இன்று தம்மை தற்காத்துக்கொள்ள முயற்சிக்கிறார்கள். அதில இவர்கள் வேற உரிமை கோரிக்கொண்டு, நான் சொன்னேன், நீ சொன்னாய் என்று. நாங்கள் கடந்த தேர்தலில் இதை நிறைவேற்றுவதாக வாக்களித்தோம் அதை நிறைவேற்றியிருக்கிறோம், இனிமேல் என்ன சாதிக்கப்போகிறோம் என்று ஏதாவது சொல்கிறார்களா? திட்டம் ஏதும் இருக்கிறதா? ஒருவரை ஒருவர் சாடுவதற்கும், சேறடிப்பதற்கும், வீம்பு பேசுவதற்கும் மக்கள் இவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமாம்.
  14. அட.... நீங்களும் இதற்குள் இருக்கிறியள். கவனம், பாத்து நடந்துக்கோங்க. நினைக்கிறதென்ன வலைவீசி தேடப்போகிறார்கள் கந்தையாவா, கந்தப்புவா என்று.
  15. முப்பத்து நான்கு வருடங்களாக பூட்டப்பட்டிருந்த வீதியைப்பற்றி மாறி மாறி முண்டுகொடுத்த அரசுகளுடன் வாயே திறக்காதவர், திடீரென கரிசனை வந்தது எப்படி? மக்களிடம் வாக்கு கேட்க ஒரு துருப்பு கிடைத்துவிட்டது. வாக்கு விழுந்தால் அதோடு பாராளுமன்றம் போகலாம் அல்லது ஜனாதிபதிக்கு ஒரு நன்றி, பாராட்டு அனுப்பி இணைந்துகொள்ளலாம். இப்போ பல அரசியல் வாதிகள் முன்னைய அரசோடு ஒட்டிக்கொண்டதுபோல் அனுராவோடு ஒட்ட முடியவில்லையே, ரகசியமாய் சந்தித்தாலும் பகிரங்கப்படுத்தி விடுகிறார்கள், வரப்பிரசாதங்களும் நிறுத்தப்படப்போகிறது என்கிற பதட்டத்தில் புகழ்ந்தும், வாக்குவங்கிக்காக தேர்தல் பிரச்சாரங்களில் இகழ்ந்தும் உளறுகிறார்கள். வர வர சுமந்திரன் வடக்கின் வசந்தத்தின் நிலைக்கு வந்து நிற்கிறார். வடக்கில் என்ன திட்டங்கள் நிறைவேற்றுவதென்றாலும் வடக்கு மாகாண ஆளுநரின் கோரிக்கைக்கமையவே அமுல்படுத்தப்படும். எதற்கும் சுமந்திரன் வடக்கு ஆளுநருக்கு தூது அனுப்புவது நல்லது. அவர் சுமந்திரனை ஏற்றுக்கொண்டால். இவர்களுக்கு ஊர்சுற்றாமல், படம் காட்டாமல், நான் தான் சாதித்தேன் என்று புழுகித்திரியாமல் இருக்க முடியாது. எப்படி சமாளிக்கப்போகிறார்கள் என தெரியவில்லையே? அடுத்த தேர்தலோடு அரசியலில் இருந்து விலகுவேன் என்றார் ஒருவர், மற்றவர் தானும் சேர்ந்து வரைந்த அரசியல் யாப்பின்படி ஒருவருடத்திற்குள் தீர்வு காணாவிட்டால் பதவி விலகுவேன் என்று கர்ச்சித்தார். இவர்கள் பேச்சு வெறும் மேடைப்பேச்சு, மக்கள் மறந்துவிடுவார்கள் என்று நினைத்து வேறொரு சவாலுடன் வருவார்கள் தங்களைத்தாங்களே ஏமாற்றிக்கொண்டு.
  16. உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துகிறேன்!
  17. தான் சமையற் கட்டுக்கு போகவேண்டி வரும் என நினைத்து குமுறுகிறார் போலுள்ளது. இவரது கணித அறிவை சஜித் ஒருதடவை பாராட்டியிருந்தார். ஜெனிவா கூட்டத்தொடரில், பெரும்பான்மையான நாடுகள் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை வரவேற்றிருந்தன, ஒரு சில நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை நாடுகள் தங்களை ஆதரித்தன என்று கூறி தம்மை சாதனையாளராக காட்டியபோது, சஜித் இவர்களின் கணிதவியல் அறிவை வியந்து புள்ளிவிபரத்தோடு உரையாற்றியிருந்தார்.
  18. அது வேற கந்தையாவாம். கந்தையர் என்றாலே வில்லங்கம் பிடிச்ச பெயர் போலிருக்கே! பெயரை மாத்துங்கோ.
  19. ஆமா... அந்த ஒற்றை ஆட்சி அமைப்பை தானும் சேர்ந்துதான் வரைந்ததாகவும் அதை தொடர்ந்து நடைமுறைப்படுத்த தான் பாராளுமன்றம் போயே ஆகவேண்டுமென்றும் சுமந்திரன் சொந்தம் கொண்டாடுகிறாரே, அது எப்படி? இது நடைமுறைப்படுத்தாவிட்டால் தான் அரசியலில் இருந்து விலகிவிடுவேன் என்று சூளுரைத்தாரே. இதைத்தான் ஏக்கய ராச்ஜய என்று விளக்கமளித்தவர். இப்போ அவரும் இந்த அரசை சாடுகிறார் தன்னை அழைத்துப்பேசவில்லை என்கிற கோபத்தில். இவர்களெல்லாம் பிரச்சனையை தீர்க்க வேண்டுமென்று நினைத்திருந்தால்; எப்பவோ தீர்த்திருக்கலாம். பிரச்சனையை நீட்டி வைத்து தம்மை வளர்ப்பவர்கள் இவர்கள். எல்லா சிங்கள அரசியல்வாதிகளும் இவர்கள் மேல் வைக்கும் குற்றச்சாட்டு, தீர்வை எடுக்க க்கூட்டமைப்பினரே பின்னடித்தனர்,சுயலாப அரசியலே கூட்டமைப்பினரின் இலக்கு, என்று விமர்சித்தனர். எப்படி அவர்களால் சொல்ல முடிந்தது? அந்த கூற்றை மறுத்து இவர்கள் அறிக்கை விடவுமில்லை, மறுக்கவுமில்லை மாறாக மௌனம் காத்தனர். இப்போது தான் தூக்கத்திலிருந்து எழும்பியதுபோல் குதிக்கிறார்கள்.
  20. இதென்னடா புதுக்கதை? இவ்வளவுநாளும் இவர்கள் மாறி மாறி முட்டுக்கொடுத்து கொண்டாடிய அரசுகள் இனவாதம் அற்றவையோ? அவர்கள்தானே பயங்கரவாதச் சட்டத்தையே உருவாக்கிய சட்ட வல்லுநர்கள். அப்படி இருக்கும்போது இவர்களை மட்டும் விமர்சிப்பதன் மர்மம் என்ன? ஓ...... இவர்களை அழைத்துப்பேசவில்லை, இவர்கள் தேடிப்போனபோதும் அணைக்கவில்லை என்கிற கோபமாய் இருக்குமோ அல்லது இவர்களது வாக்குவங்கிக்கு போட்டியாய் வந்துவிட்டார்கள் என்பதாலா? சிங்களமக்கள் ஊழல் அரசை கலைத்தார்கள், நாம் ஊழல் அரசியல் வாதிகளை அகற்றுவோம்.
  21. இந்த ஒரு உரிமையை வைத்துக்கொண்டு தப்பிவிடுவார்கள் குற்றவாளிகள். வெளிநாட்டிலேயே ஒரு ராஜதந்திரி இப்படியென்றால், இலங்கையில் இவர்கள் அனுபவிக்கும் விடுபாட்டுரிமை சொல்லவேண்டியதில்லை. சாதாரண மக்களே எல்லாவற்றாலும் பாதிக்கப்படுகின்றனர் தண்டிக்கப்படுகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு ஏன் பதவியளித்து நாட்டின் மதிப்பை குறைத்துக்கொள்கிறார்கள். வெளிநாடுகள் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும், வெளிநாடுகளிலேயே இப்படியான குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள், தம் நாட்டில் சிறுபான்மையினரை எப்படி கையாள்வார்கள், போர்க்காலத்தில் எப்படியெல்லாம் நடந்துகொண்டிருப்பார்கள் என்பதை நேரடியாக காணக்கூடியதாக உள்ளது.
  22. தமிழரசுக்கட்சி, தற்போது புதியதொரு கண்டுபிடிப்பை பிடித்திருக்கிறார்கள். கனடாவில் குளிர் அதிகமானால் சுமந்திரனையும் சம்மந்தனையும் சொன்னார்களாம், ஊரில் யாருக்கும் குழந்தை பிறக்காவிட்டால் அதற்கும் அவர்களையே காரணமாக சொல்வார்களாம். ஏன் கனடாவுக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு? பிள்ளை பிறக்காவிட்டால் ஏன் இவர்களை குற்றம் சொல்லவேண்டும்? அதாவது பிழையை சுட்டிகாட்டி காரணம் கேட்டால்; அவர்களை கேலி செய்து தங்களை மறைத்துக்கொள்வது. மக்களுக்கு தெரியும், எதுக்கு யாரை காரணம் கேட்கவேண்டுமென்று. ஏதோ நகைச்சுவை விடுவது போல் தம்மைத்தாமே தாழ்த்திக்கொள்கிறார்கள். அவர் குறிப்பிட்டு நகைச்சுவை பண்ணும் கூட்டத்தில் அவரும் ஒருவர். அவரும் தாயக மக்களின் உரிமைகளில் தலையீடு செய்து, தமது நலன்விரும்பிகளின் தவறுகளை மூடி மறைப்பதும் வக்காலத்து வாங்குவதும் அவரது தலையாய கடமை. யாராவது சுமந்திரன் என்றால் போதும் வந்து விடுவார் வரிஞ்சு கட்டிக்கொண்டு தூள் கிளப்ப
  23. இருப்பதே இரண்டு பேர், இவர்களுக்கு பதினாறு சமையல் காரர் எதற்கு? ஹோட்டல் ஏதும் நடத்துகிறாரா தெரியவில்லை? இவரிடமே இத்தனை சமையல் காரர் கேட்க்கிறார் என்றால், இவரது ஆட்சிக்காலத்தில் எவ்வளவு பேரை நியமித்திருப்பார்? நாட்டை எப்படி கெடுத்து குட்டிச் சுவராக்கினார்கள் என்பது இப்போது புரியுது. அதைவிட இலக்கத்தகடுகள் இல்லாமல், உரிமை பெறாமல் பாவனையில் இருந்த பல வாகனங்கள் அங்கங்கு கைவிடப்பட்டுள்ளன. இதை யாரும் கணக்கெடுக்கவுமில்லை, கண்டுகொள்ளவுமில்லை. சாதாரண மக்கள் பசியினால் களவெடுத்தால் நீதிமன்றத்துக்கு கொண்டு போகிறார்கள், பாராளுமன்றம் கள்ளர்களால் நிறைந்திருந்திருக்கிறது. இதற்கு மேல் அனுபவம் வாய்ந்த அரசியலாளர் என்று தம்மை வேறு அழைக்கிறார்கள். திருட்டுகூட்டம்.
  24. தமிழ் கட்சிகள் மீது தமிழ் மக்களுக்கு வெறுப்பு வரக்காரணம் என்னவென்று கூற முடியுமா? நீங்களும் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று சிங்கள அரசின் கைக்கூலிகளாக மாறுகிறீர்கள், உங்கள் செயலற்ற தன்மை விடுவெளியை ஏற்படுத்திற்று, அந்த விடுவெளிக்குள் அவர்கள் புகுந்துள்ளார்கள். இதற்கு யார் காரணம்? எத்தனை ஆண்டுகள் அவகாசம் தந்து உங்களுக்கு வாக்குகளை அள்ளிக்கொடுத்து காத்திருந்தார்கள்? உங்களுக்கு வாக்கு, சுகவாழ்க்கை வேண்டும். மக்களின் ஏமாற்றம், உங்கள்மேல் ஏற்பட்ட வெறுப்பே அவர்களை இந்த நிலைக்கு தள்ளியது, அதை நீங்கள் சிந்திக்க, ஏற்றுக்கொள்ள, திருந்த தயாரில்லை. மக்களை குற்றம் சாட்டாதீர்கள். சாதாரண மக்களைப்போல் வாழப்பழகிக்கொள்ளுங்கள். இனிமேல் அதுதான் உங்கள் நிரந்தர வாழ்க்கை.
  25. தமிழ் தலைவர்களையே தேர்தல் வந்தால்தான் மக்கள் காணலாம் அவர்களும் மக்களை காண வருவர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.