Everything posted by satan
-
இராணுவத்தின் காணிகளை விடுவிக்குமாறு மக்கள் கோரவில்லை: தமது சொந்த காணிகளையே கோருகின்றனர் - ஆளுநர் தெரிவிப்பு
என்ன சிறியர்? கொஞ்ச நாளாக எதிலும் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை உங்களால், ஏதாவது மனச்சிக்கலா?
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
இதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கும் அற்புத மனிதர் நீங்களாகத்தானிருக்கும்.
-
சாணக்கியன், சுமந்திரன் நோர்வே தூதுவருடன் கலந்துரையாடல்!
வெளிநாட்டுத் தூதுவர்களுடன் தனிச்சந்திப்புகளை எப்படி நடத்துவதென பயிற்சியளிக்கப்படுகிறது. மல்லுக்கு நிற்பவர்கள் போலிருக்கிறது இருவரையும் பார்க்க.
-
அரசியல்வாதிகளுக்கு கோடிக்கணக்கில் எவ்வாறு நிதியளிக்க முடியும் - ஜாமுனி காமந்த துஷார
இவரும் போதாக்குறைக்கு அனுராவுக்கு, அண்மையில் எச்சரிக்கை விட்டவர். காரணம் இதுதானோ? எல்லோரும் ஆதரவு தாறோம் எண்டு அனுராவின் காலில விழப்போகினம். அது சரி, இந்த தகவலை ஏன் இவ்வளவு காலமும் வெளியிடாமல் இருந்தவை? இவையள் அடிச்ச பணத்தை மீளப்பெற்று, அனுபவிச்ச சொகுசுக்குரிய பணத்தை வசூலிச்சு, வரப்பிரசாதங்களை குறைச்சாலே நாட்டுக்கடனை அடைத்து, முன்னேற்றவும் போதுமானது. எல்லாரும் சேர்ந்த கள்ளர். சிறை காணுமா இவர்களை அடைக்க? அவர்கள் பணம் அடிச்சு கும்மாளம் போட, மக்கள் தெருவில் லைனில் காத்து இருக்கிறார்கள்.
-
அரசியல்வாதிகளுக்கு கோடிக்கணக்கில் எவ்வாறு நிதியளிக்க முடியும் - ஜாமுனி காமந்த துஷார
ஒருவரை ஒருவர் காப்பாற்ற லஞ்சம்! ஆட்சி மாறும், தாம் நிராகரிக்கப்படுவோமென்று சம்பந்தப்பட்டவர்கள் நினைக்கவில்லை. மாறி மாறி நாம்தானே வரப்போகிறோம், ஒன்றுக்குள் ஒன்றாகிவிடுவோம் என நினைத்திருப்பார்கள். அதென்ன ரணில் இப்படி அனுராவுக்கு சாபமிடுகிறாரேயென யோசித்தேன், இங்கு இருக்கு பிரச்சனை. இங்கு யாரோ சொன்னார்கள், ரணில் ஊழல் செய்யாதவர் என்று. லஞ்சம் கொடுத்திருக்கிறாரே, எதற்கு? அதுவும் ஊழல், சட்ட விரோதமான செயல்தான். ஊழல் வேறு, லஞ்சம் வேறு, சட்ட விரோதம் வேறு என்றில்லை, எல்லாம் ஒன்றுதான். சட்டத்தை மீறும் செயல். மதுபான அனுமதிப்பத்திரத்துக்கு விளக்கம் கொடுத்து முடியேலை, கையோடு அடுத்த பிரச்சனை. இதற்கு என்ன விளக்கம் கொடுக்கப்போகிறார்? எல்லோரும் இனவாதத்தை கையிலெடுத்தது ஏனென இப்போ விளங்குகிறது. பணம் இருந்தாற்தானே கொடுப்பதற்கு? எல்லாம் வழிச்சு, துடைச்சு, எடுத்து, கொடுத்தாயிற்று. ஆமா.... இந்த ஜனாதிபதிகள் ஏன் இவ்வாறு செய்தார்கள்? அப்படியெனில் இவர்கள் கொடுத்ததற்கு மேலாக எடுத்திருப்பார்களோ? இவர்கள், அரசியலில் திறமையும் அனுபவமும் உள்ளவர்களாம். சொந்த வீட்டுக்குள்ளேயே களவெடுப்பவர்கள், எத்தனை காவல் போட்டாலும், கமரா பூட்டினாலும் சொந்த வீட்டுக்கள்ளரை எப்படி கைது செய்வது? ஒவ்வொருக்கா விளக்கம் கொடுக்காமல், எல்லாவற்றுக்கும் ஒன்றாக சேர்த்து கொடுப்பது நல்லது. அனுராவின் ஆட்சி முழுவதும் இந்த கள்ளரை பிடிப்பதிலேயே முடியப்போகிறது, நீதிமன்றமும் மக்களின் வழக்குகளை கையாள முடியாது, வெள்ளை வேட்டிக்கள்ளரை விசாரிக்கவே நேரம் காணாது.
-
ஜேர்மனியில் நத்தார் கடைகளுள் வாகனம் புகுந்ததால் பலர் படுகாயம்.
இது அவர்களது இரத்தத்தில் ஊறிய குணமாக இருக்கலாம். தமது நாட்டிலேயே சிறு சிறு குற்றங்களுக்கெல்லாம் கையை துண்டிப்பது, காலை வெட்டுவது, தலையை கொய்வது. வீட்டுப்பழக்கந்தான் போகிற இடத்திலும் வரும்.
-
மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார் ஜனாதிபதி
என்னசொல்லி ஆசி வழங்கியிருப்பார்கள்? அதன் பலன் இன்னும் சில ஆண்டுகளில் தெரிந்துவிடும். இவர்கள் முன்னையவர்களுக்கும் இவ்வாறுதானே செய்தார்கள்? ஆசி பெறப்போகிறார்களோ, இவர்களை குளிர்விக்க போகிறார்களோ?
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அவர்களை உலகமெல்லாம் இழுத்து விட்டது அமெரிக்காதான்!
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
இதைத்தான் சொல்லுறது, ஒருவருக்காவது தெரிவித்து வைத்திருக்க வேண்டுமென்று!
-
2028 ஆம் ஆண்டும் எமது ஆட்சியே - ஜனாதிபதி அநுர
நீங்கள் சொன்னபின் இந்த பழமொழியைத்தான் நினைத்தேன். இவர், புதுதும்புத்தடியை தூக்கி அடுத்த வீட்டையல்லோ கூட்டினவர். அது தும்புத்தடியின் பயன்பாட்டு காலத்தை பொறுத்து தூக்கியெறியும்போது தெரியும், கூட்டி துடைச்சுதா இல்லையா என்பது. இவர் அடுத்த தேர்தலில் வெல்லுற வழியை பாக்க வேணும், நெடுகிலும் வாயால வடை சுட்டுக் கொண்டு பாராளுமன்றம் போகேலாது. இப்போ ஒரு புது யுக்தி; தான் முதலில் தேசியபட்டியலின் மூலம் பாராளுமன்றம் போனாராம், அப்போ கட்சியில் சொன்னவர்களாம், நீங்கள் எப்போதும் தேசியப்பட்டியல் உறுப்பினராகவே இருந்து விடுங்கள் என்று. அதற்கு தான் மறுப்பு தெரிவித்து தேர்தலில் நின்று மக்கள் ஆணையை பெற்று பாராளுமன்றம் போவேன் என்று சொல்லி தேர்தலில் நின்று வென்று பாராளுமன்றம் தெரிவானாராம். அந்த தும்புத்தடி இப்போ தூக்கியெறியப்பட்டுவிட்டது. இப்போ தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிமேல் ஆசை வந்துவிட்டது இவருக்கு. பாராளுமன்றம் போக என்னென்ன திட்டம் எல்லாம் போடுறார் பதவியாசை இல்லாத ஞானி. சவால் விடுகிறார், குழப்பத்தை உருவாக்குகிறார், எச்சரிக்கிறார். இவ்வளவுக்கும் மக்களால் நிராகரிக்கப்பட்டவர் இவர்.
-
அரசியல்வாதிகளுக்கு மதுபான உரிமப் பத்திரங்களை வழங்கும் கலாசாரம் நிறுத்தப்பட வேண்டும் : எதிர்க்கட்சித் தலைவர்
இது சரியான கருத்து, சிங்கள அரசியல் வாதிகளும் மதுபான அனுமதிப்பத்திரம் பெற்றனர். உண்மையான சமூகத்தை நேசிக்கும் மக்களின் பிரதிநிதி, இதைத்தான் சொல்லவேண்டும், செய்ய வேண்டும். அதைவிட்டு, பட்டி தொட்டியெல்லாம் மைக் பிடிச்சு கூவக்கூடாது பதவிவிலகுங்கோ பதவிவிலகுங்கோ என்று. அதை சொல்லவேண்டியது அவர்களை தெரிந்தெடுத்த மக்களே. இவர் மக்களால் நிராகரிக்கப்பட்டவர். ஏன் நிராகரித்தார்கள் என்று யோசித்து திருந்துவதை விடுத்து, தான் ஏதோ மக்களை வழிநடாத்துகிறவர் மாதிரி உளறிக்கொண்டு திரியிறார்.
-
ஜேர்மனியில் நத்தார் கடைகளுள் வாகனம் புகுந்ததால் பலர் படுகாயம்.
சிறியர், சாமியார், கந்தையர், பாஞ் மற்றும் ஜெர்மன் வாழும் கள உறவுகள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா?
-
சுமந்திரன் நாடாளுமன்றம் செல்வதற்கு விரைவில் புதிய நகர்வு!
நாங்கள் முன்பே கூறியதுதான். சிவஞானத்தை குறிப்பிடாமல் விட்டுவிட்டாரோ. பதவிக்காக எந்தப்பக்கமும் இழுபடும் தன்மையானவர்கள். வேலியில போன ஓணான்களை பிடித்து, அவர்களின் பின்புலம்அறியாமல், வீட்டுக்குள்ள சேர்த்த மாவையரால, வீடு இரண்டாகி கலேபரமாயிருக்கு. இளையவர்கள், சட்டம் நுணுக்கம் தெரிந்தவர்கள், உதவியாக இருக்கும் என்று நினைத்திருப்பார். அவரோ மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணத்தெரியாமல், எதுக்கெடுத்தாலும் கோட்டு வாசலில் போய் நிக்கிறார்கள். அப்போ கட்சி பிரச்சனையை சுமுகமாக தீர்க்கத்தெரியாதவர், நீதிமன்ற பிரச்சனையை எப்படி கையாளுவார்? அரைகுறையால் இருந்ததையும் கெடுத்து விட்டதுதான் மிஞ்சியது. இந்த திறமையில் மோடி "உங்கள் அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துங்கள்." என்று அனுராவுக்கு கூறியது கேவலமாம். இருந்தாலும், சுமந்திரன் தந்திரமாய் பாராளுமன்றம் போனால், ரொம்ப மூக்குடைபடுவார். அவரது திட்டம், தமிழ்தேசியக்கட்சியை பிரித்து, தமிழரசுக்கட்சியை உடைத்து, தமிழரை சிங்களத்துக்கு அடிமையாக்குவது. அதை அவர் செவ்வனே செய்ய சில நாசகாரிகளை தெரிந்தெடுத்து வைத்திருக்கிறார், இன்னும் கொண்டுவருவார். இவர் ஆட்டம் நீடித்தால்; அடுத்த தேர்தலில் மக்கள் தமிழரசுக்கட்சியை துடக்கு கழித்து விடுவார்கள்.
-
சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர் ஒருவர் இலங்கையில் தஞ்சம்!
- 2028 ஆம் ஆண்டும் எமது ஆட்சியே - ஜனாதிபதி அநுர
நான் அறியவில்லை, இது எப்போ?- எனது தோல்விக்கு சமூக ஊடகங்களும் ஒரு காரணம் - டக்ளஸ் தேவானந்தா
நஷ்ட ஈடு கேட்டு வழக்கு போடப்போகிறேன் என்று அன்று அறிக்கை விட்டார், இன்று அடக்கி வாசிக்கிறார். அவர் இவரை நேர்மையற்றவர் என்கிறார், இவரோ அவரை சாடுகிறார். அதை விட வேறு பலரும் தம்மை இராணுவம் எனக்காட்டி அதிலும் தமது சம்பளத்தை பிடித்துக்கொண்டதாக கூறுகின்றனர். கிழக்கிலே விசாரணை ஆரம்பிக்க, இவர்க்கு வேற்குது போலிருக்கே!- 2028 ஆம் ஆண்டும் எமது ஆட்சியே - ஜனாதிபதி அநுர
அனுரா, ஆரம்பத்திலேயே வைச்சார் பாருங்கள் குட்டு. சஜித்துக்கு வாக்கு கேட்டவர், பதவி அனுரா குடுக்க வேணும்? முதலமைச்சர் கனவும் இருக்கு இரண்டு பேருக்கு.- இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழு தீர்மானங்களுக்குத் தடை கோரி வழக்கு தாக்கல்!
அதுதான். மக்களின் பிரதிநிதிகள், ஒருவரை ஒருவர் பொறுத்து போகத்தெரியாது, மதிக்க தெரியாது, கொள்கைகளுக்கு அமைவாக நடப்பது கிடையாது, ஒற்றுமையாக அமைதியாக செயற்படத்தெரியாது. சின்னப்பிள்ளைகள் மாதிரி கோள் சொல்வது, அடம்பிடிப்பது, ம்..... என்றால் கோட்டுக்கு போவது. இவர்கள் எப்படி மக்களை வழிநடத்தப்போகிறார்கள்? சாதாரண மக்கள் தங்கள் நீதிமன்ற விடயங்களுக்காக காத்திருக்கிறார்கள், இவர்களோ காலத்தை, பணத்தை, சக்தியை விரையமாக்கிக்கொண்டு கடமைகளை செய்யாது குழுச்சண்டை, தகுதிக்கு மீறிய அதிகாரம். மற்றைய கட்சிகளில் அப்படியில்லையே. முன்பெல்லாம் தமிழரசுக்கட்சியின் ஒற்றுமையை பாராட்டுவார்கள். இப்போ இவர்கள் செய்வதெல்லாம் கேலிக்கூத்து. கூத்தாடியள்!- மருத்துவர்களின் ஓய்வு வயது 63ஆக அதிகரிப்பு!
ஏழைமக்களுக்கு கஸ்ரகாலம்!- கருணா அம்மான் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை
சிவநேசதுரை சந்திரகாந்தனை நோக்கி கையை காண்பித்திருப்பாரோ? அதுபற்றி தனக்கு தெரிந்தவற்றை சொன்னேன் என்கிறார். சின்ன மீன்களை பிடித்தால், பெரிய மீன் தானாகவே வந்து மாட்டும்.- இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பினுள் ஒரு வினாடி கூட தொழில் செய்ய அனுமதிக்க முடியாது - டக்ளஸ்
அதன் பின்னும் நடந்தது, இன்னும் தொடருது. இவர் ஏன் அதை நிறுத்தவில்லை? அப்போ, இவர் அந்த பிரச்சனையை சரியாக கையாளவில்லை தீர்க்கவில்லை. எல்லோருக்கும் அனுரமேல் காதல். எப்போ கூப்பிடுவார், குசலம் விசாரிக்கலாமென தவியாய் தவிக்கிறார்கள். தாங்கள் கடந்த எஜமானருடன் கூடிகூத்தடித்துவிட்டு இப்போ எல்லாம் அனுரா தலையில். அவரொருத்தர் அனுரா சொன்னதை செய்யேல்லை என்கிறார். நாட்டில் எங்கு திரும்பினாலும் பிரச்சினை, ஊழல், பொருளாதாரப்பிரச்சனை தலைதூக்க முடியவில்லை. முன்பிருந்தவர்கள் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற வில்லை. அவர்கள் ஆட்சி முடிந்து போகும்போதோ அல்லது மீண்டும் ஆட்சியேறியபோதோ யாரும் கேள்வி கேட்க்காமல் நிபந்தனையில்லா ஒத்துழைப்பு கொடுத்து, நாட்டை அழித்தார்கள் சுருட்டினார்கள். அனுர வந்தது வரேல்லை சவால் விடுகிறார்கள், எச்சரிக்கிறார்கள், காலக்கெடு விதிக்கிறார்கள்,குற்றச்சாட்டு வைக்கிறார்கள். இதுக்கு அனுரா மசியாவிட்டால், பாராட்டிக்கொண்டு ஒத்துழைப்பு வழங்குகிறோம் என்று, ஒன்று சேர அழைப்பெடுப்பார்கள். இதெல்லாம் இவர்கள் தங்கள் கடமையை சரிவர செய்யாமல் தோற்றவர்கள், நிராகரிக்கப்பட்டவர்கள் தம்மை பெரியவர் என காட்டும் மாயை.- 103 பேருடன் முள்ளிவாய்க்கால் மேற்கு கடலில் கரை ஒதுங்கிய வெளிநாட்டுப் படகு !
அவர்களுடைய வரலாறு அவர்களுக்கே விளங்காது. தங்கள் எண்ணத்துக்கு ஒவ்வொரு பிக்கு ஒவ்வொரு வரலாறு எழுதுவார் பௌத்தத்தையும் சிங்களத்தையும் பெருமைப்படுத்தி தமிழ்ப்பெயரை மாற்றி சிங்களப்பெயர் என்றும் கூறுவார்கள், அதனாற்தான் நாட்டில் இவ்வளவு குழப்பம்.- பார் போமிட் வழங்கச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகரைப் போல் பதவி விலக வேண்டும் – சுமந்திரன்
அவர் ஏதோ பொழுது போக்குக்காக தான் சமூக சீர்கேடுகளை களைகிறேன் என்று போக்கு காட்டுகிறார், நீங்களும் நம்பிக்கொண்டு. பல காலமாக இந்த மதுபான சாலைகள் திறக்கப்படும்போதெல்லாம் மக்கள் எதிர்த்து போராடியிருக்கிறார்கள், நீதிமன்றங்களை நாடியிருக்கிறார்கள். அப்போதெல்லாம் பேசாதவர், இப்போ ஏன் பேசுகிறாரென யோசியுங்கள். அனுரா, இவரை அழைத்து விசாரிக்க வேண்டும், நான் ஜனாதிபதியோடு தனிப்பட்ட ரீதியில் சந்தித்து பேசினேன், அவர் எனக்கு வாக்குறுதியளித்தார் என்று உளறிக்கொண்டு திரியலாம். ரணில் மதுபான சாலை உரிமம் கொடுத்தது தப்பில்லை, அது யாருக்கு கொடுத்தது என்று அறிவிப்பேன் என்று அனுரா சொல்லிவிட்டு சொல்லாமல் திரிவதுதான் தப்பாம். இதுமட்டுமா, மோடி அனுராவிடம், உங்கள் அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துங்கள் என்று சொன்னதும் கேவலமாம். அதோட குபேந்திரன் என்கிற பெயரையும் அறிமுகம் செய்து வைக்கிறார். இனிமேற்காலங்களில் அடிக்கடி இவரது பிரசன்னம்/பெயர் வரும். அடுத்த தேர்தலுக்கு வேட்ப்பாளராக அறிமுகமாகலாம்.- 2028 ஆம் ஆண்டும் எமது ஆட்சியே - ஜனாதிபதி அநுர
அப்படித்தான் நினைத்தாலும், இங்கு ஒருவர், இவர் சொன்னதை மட்டும் தூக்கிக்கொண்டு மேடைபோட்டு விமர்ச்சிக்கிறார். அதனாலஅனுரா நடைமுறைப்படுத்தினாலும் படுத்தலாம். அல்லாட்டி சிங்கன் குடைச்சல் கொடுத்து, வழக்கு போட்டு பதவிவிலக வைத்துவிடுவார். அனுரா இவரை உள்ளுக்கு இழுக்குமட்டும், சிறிதரன் பதவி விலகுமட்டும் திரும்பத் திரும்ப பழைய சீலை கிழிஞ்ச மாதிரித்தான். ஆடின காலும் பாடின வாயும் சும்மா இராது கண்டியளோ! இன்னும் கொஞ்ச நாளில் தன்னிலேதான் கதைக்க வேண்டி வரப்போகுது. மக்கள் எத்தனை அல்லோல கல்லோல பட்டார்கள், வைத்தியசாலை அதிகாரிகளின் முறைகேடுகளால், இன்னும் பல ஊழல்களால். அதை கவனிக்க நேரமில்லை விரும்பவில்லை, தைரியமில்லை. தனக்கு கதிரை கிடைக்கேல என்கிற கடுப்பில் உளறிக்கொண்டு திரியிறார்.- பரம்பரை பரம்பரையாக நாங்கள் மலையகத்துக்கு ஏதும் செய்யவில்லை என்று குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது - ஜீவன் தொண்டமான்
எல்லோரும் மக்களுக்கு சேவை செய்கிறார்கள் ஆனால் மக்கள்தான் முன்னேற மறுக்கிறார்கள். - 2028 ஆம் ஆண்டும் எமது ஆட்சியே - ஜனாதிபதி அநுர
Important Information
By using this site, you agree to our Terms of Use.