Everything posted by satan
-
தமிழர்களுக்கான சமஷ்டி தீர்வை வழங்காமல் உண்மையான மாற்றம் சாத்தியமில்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க புரிந்துகொள்ளவேண்டும் - பா.உ கஜேந்திரகுமார்
இவர் ஒரு அறிக்கை, சுமந்திரன் வேறொரு அறிக்கை. தோற்றது அரியம் என்பது இவர்களின் கனவு. அரிய நேந்திரனுக்கு போதிய கால அவகாசம் இல்லை, அனுரவைப்பற்றி மக்களுக்கு தெரியாது, ரணில் நரியென்பது எல்லோருக்கும் தெரியும். அதனால் சஜித்துக்கு போட்டார்களேயொழிய இவர்கள் சொல்லி போட்டிருப்பார்களென நினைக்கவில்லை. இருந்தாலும் அடுத்த தேர்தலில் இவர்களின் வண்டவாளம் தெரியத்தானே போகுது. அப்போ பாப்போம் அதுவரை சிலாகிக்கட்டும்.
-
அநுரவின் அரசிற்கு ஆதரவை வழங்க மறுக்கும் கட்சிகள்
சுமந்திரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார், எல்லா கட்சிகளுடனும் கலந்தாலோசித்து இருக்கிறோம் எல்லோரும் எமது கொள்கைகளை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் வெல்லும் கட்சியுடன் இணைந்து செயற்படுவோம் என்றார். என்ன..... கொஞ்சம் கூட எதிர்பார்ப்பார். எப்போ அனுரா கூப்பிடுவாரென காத்திருக்கிறார்கள், அனுரா கூப்பிடுவாரோ தெரியவில்லை. சஜித், தான் ஒத்துழைப்பு வழங்குவேனென கூறியிருக்கிறார். நாமலும் அதையே கூறியிருக்கிறார். அவர் பெரும் பதவி எதிர்பார்ப்பார். ரணில் தனது குழந்தையை ஒப்படைப்பதாக நாத்தழுதழுத்தார்.. பதுக்கல் பேர்வழிகள் தப்பியோடவும்முடியாது, விசாரணைகளில் இருந்து தப்பவும் முடியாது, தானாகவே விழுவார்கள். இல்லையேல் அரிய சந்தர்ப்பத்தை நழுவ விட்டு விட்டோமே என பின்னாளில் அங்கலாய்ப்பர். சிலர் தலைமைக்கு தெரியாமல் ரகசிய டீலும் போடலாம்.
-
கால மாற்றத்துக்கு ஏற்ப நாமும் மாறாவிடின்..
இந்தியா என்கிற சனியனை தூர வைத்தாலே நம் நாட்டின் பாதிப்பிரச்சனை தீரும். நம்மை பிடித்த சனியன், நமது காலைச்சுத்தின பாம்பு. வெகு சீக்கிரம் நம்மை விட்டு விலகாது. வலிய வழிய மூக்கை நீட்டும்.
-
நாட்டை விட்டு வெளியேறும் அரச பிரபுக்கள்?; பலத்த பாதுகாப்பு
ஜனாதிபதி முறையை ஒழிப்போம் என்கிற கோஷத்துடன் கதிரையேறுகிறவர்கள் அதிலே நிலையாய் இருந்ததுதான் வரலாறு. அதற்கு முற்றுப்புள்ளி!
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
பொறுத்திருங்கள், அனுரா யாரை அரவணைக்கிறார்என்பதே கேள்வி. நாடு இக்கட்டில் இருக்கும்போது பதவியை ஏற்கச்சொல்லி அழைப்பு முதலில் சஜித்துக்கே விடுக்கப்பட்டது, அவரோ தயங்கி விட்டார். அதைவிட வடிவேலு நகைச்சுவை வசனத்தில், பகிரங்கமாக, கட்சியின் முடிவுப்பிரகாரம் சஜித்துக்கும், அரியத்துக்கும்,ரணிலுக்கும் குத்தினேன் என்று கூறினார். அதற்கு சிரிக்கலாம் அதேநேரம் சிந்திக்க கூடியது. இவ்வாறு கூறிவிட்டு எந்த மூஞ்சியோடு அனுராவோடு பேச முடியும்? எழுபத்தைந்து ஆண்டுகளாக ஒட்டு மொத்தமாக வாக்குகளை அளித்து என்ன நன்மை பெற்றோம்? ஏமாற்றப்பட்டதே வரலாறு. ஏதோ ஒரு சிங்கள கட்சிக்கு மாறி மாறி வாக்களித்து ஒன்றுக்கும் உதவாதவர்களாகவே கருத்தப்பட்டோம். நம்பிக்கையின் அடிப்படையில் வாக்களிக்கிறோமாம். எந்த நம்பிக்கையில்? காலம் முழுவதும் ஏமாற்றப்பட்ட வரலாறு இருக்கும்போது நம்பிக்கை எங்கிருந்து? யாரிடமிருந்து வந்தது? தலைவர்கள் நம்பிக்கையற்றவர்கள், ஒரு கொள்கை இல்லாதவர்கள், ஒரு தலைவன் இல்லை, கட்சி பிரிந்திருக்கிறது, எல்லோரையும் அணைத்துப்போகதெரியவில்லை, விரட்டுவது, வெருட்டுவது, சவால் விடுவது, கட்சி மக்களுக்காகவா, மக்கள் கட்சிக்காகவா? போன வருடம் தமிழரசுக்கட்சி தனித்து போட்டியிடுவது என முடிவெடுத்தவர்கள் பங்காளிக்கட்சிகளுக்கு அந்த முடிவை தெரிவித்தனரா? விளக்கமளித்தனரா? பத்திரிகை வாயிலாக அறிந்த அவர்கள் விளக்கம் கேட்டபோது, ஏதோ சொல்கிறார்கள். ஏன் அதை நேரடியாக சொல்லியிருக்கலாமே? தமிழரசுக்கட்சியின் பெயரை பாவிக்கக்கூடாது என கட்டளையிடுகிறார். அப்போ, அதன் உண்மை நோக்கமென்ன? மாவையர் எல்லாவற்றுக்கும் தலையாட்டுவார், தலைமைத்துவ பண்பு இருக்கிறதா அவருக்கு? அனிஞாயத்தை தட்டிகேட்கும் தைரியம் இருக்கிறதா அவருக்கு? இவர்களை நம்பி மக்கள் இனியும் இவர்களை தொடரலாமா? எழுபத்தைந்து வருடங்களாக வாக்குப்போட்டு ஏமாந்தே, மக்கள் இந்த முடிவுக்கு வந்தனர். அதற்கு இவ்வளவு கோபம், வெறுப்பு. அப்போ, மக்களுக்கு எவ்வளவு வெறுப்பிருக்கும். அதிலும் அவர்கள் தெரிந்த வேட்ப்பாளர் தோல்வியை தழுவியுள்ளார். அவர் வென்றிருந்தாலும் கூட எதுவும் நடவாது. பழைய குருடி கதவைதிறவடி கதைதான். அரியம் முழு நம்பிக்கையுடன், மக்களுக்கு நேர்மையாக நடக்கும் பட்ஷத்தில் நம்மால் சாதிக்க முடியும். ஆனால் இவர்கள் தனி வழியில் செல்வதே தமிழருக்கு செய்யும் உதவி. சிலந்தியும் ஏழு முறை விழுந்து எழுந்துதான் தன் அழகான கூட்டை கட்டுகிறது. யாரும் எடுத்தவுடன் வெற்றி பெறுவதில்லை. தொடர விடாமல் தடுப்பார்கள். நீந்த நினைக்கிறவன் நீரில் இறங்கவேண்டும், மூச்சு பிடித்து தொடரவேண்டும். தாண்டு விடுவேன் என அஞ்சுகிறவன் அடுத்தவர் கதையை கேட்பவன் நீரிலே இறங்கக்கூடாது. கரையிலே நின்று தண்ணீர் ஆழம் அதனால் இறங்கமாட்டேன் என்று முதுகு காட்டி ஓடி விடவேண்டும்.
-
நாட்டை விட்டு வெளியேறும் அரச பிரபுக்கள்?; பலத்த பாதுகாப்பு
அவருக்கு தெரியும், தனக்கு எந்த கட்சியும் ஆதரவு கொடுக்காது, ஆனால் தொந்தரவு கொடுத்து விரட்டுவார்கள் என்பது. மக்கள் பலம் உண்டு, ஆதலால் நீதிமன்றத்தின்மூலமே காரியங்களை கையாளும்போது இவர்கள் நொறுங்க, நொறுக்க வாய்ப்பிருக்கிறது. இல்லையேல் அவரும் மாற வாய்ப்பிருக்கிறது பதவியை தக்க வைக்க. அல்லது உதறிவிட்டு வெளியேற வேண்டும். எல்லாம் தெரிந்தே கால் பதித்துள்ளார். ஊழல்வாதிகள் அடங்கியிருக்கிறார்கள், ஆடத் தொடங்குமுதல் அடக்கிவிட வேண்டும். அப்போதே சவாலை சமாளிக்க முடியும் அவரால்.
-
வெளிநாடு செல்வதை தடுக்கும் நடவடிக்கை!
கந்தையர்! இலங்கை அரசியலில் என்றும் இல்லாத வரலாறு காணாத அதிசயம், ஒரு நிகழ்ச்சி, அனுரா கத்தோலிக்க கர்தினாலை முதலில் சந்தித்திருக்கிறார். மஹிந்த கூட்டம் சிறை செல்ல தாயாராக வேண்டும். இங்கே பிக்குகள் குழம்புமென அனுராவுக்கு தெரியாத சிறுகுழந்தையா அவர்? ஆனால் தமிழருக்கு எடுத்த எடுப்பில் தட்டில் வைத்து தருவார் என்று நான் சொல்லவில்லை. எங்கே அடியை ஆரம்பித்தால் மற்றவை தானாக சரியுமென தெரிந்திருக்கிறார். நாங்கள் ஊழல் செய்யவில்லை, முடிந்தால் எந்த நாட்டிலேயும் வழக்கு தொடர்ந்து நிரூபியுங்கள், என்று நாமல் சவால் விட்டார். அதற்கு முதல், இவர்களை எப்படி விசாரணை வலையத்துக்குள் கொண்டு வருவது என்று நிதானித்தே வைக்கிறார் ஆரம்ப அடியை. அரியத்தார் இவருடன் இணைந்து செயற்படுவார் என நினைக்கிறன். நீதிமன்றம் சட்டம் மூலமே தனது நகர்வுகளை செய்வார்.
-
நாட்டை விட்டு வெளியேறும் அரச பிரபுக்கள்?; பலத்த பாதுகாப்பு
அவரை அனுரா அழைக்கப்போவதுமில்லை, பேசப்போவதுமில்லை. தன் இனத்தை காட்டிக்கொடுத்து, விற்று வயிறு வளர்க்கும் ஜென்மங்களை அவர் தேடமாட்டார். அப்படியென்றால் தேர்தலுக்கு முன், சும்மா ஒரு மரியாதைக்காக கூட அவரை சந்திக்கவேயில்லை யாழ்ப்பாணம் வந்தபோது. இவருக்கு ஓடி ஒளிக்க நாடுகளுமில்லை இந்தியாவுக்கு போகலாம் .........?
-
வெளிநாடு செல்வதை தடுக்கும் நடவடிக்கை!
இல்லை, பௌத்தத்தை வைத்து அரசியல் செய்ய முடியாது என்பது கடந்த கால மக்களின் சிந்தனை தெளிவுபடுத்தியுள்ளது. மஹிந்த பட்டாளத்துக்கு இந்த நிலை வந்து நாட்டை விட்டு தப்பியோடும் நிலை வருமென்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள் அவர்களுடபட. நாடு முன்னேற வேண்டுமென்றிருந்தால்; அதுவும் நடக்கும் காலம் வரும்போது. சும்மா தெண்டத்துக்கு மக்களுக்கு சுமையாயிருந்து அவர்களில் வயிறு வளர்த்து இந்த கூட்டம் பெருகி, நாட்டுக்கும் மக்களுக்கும் பெரிய பிரச்சினை!
-
நாட்டை விட்டு வெளியேறும் அரச பிரபுக்கள்?; பலத்த பாதுகாப்பு
திருடர்கள். அவர்களுக்கு பிரபுக்கள் அந்தஸ்து. ஆமாம்... மக்களின் பணத்தில் இவர்கள் பிரபுக்கள். அவசர பயணம், தாங்களாகவே தங்களை காட்டிக்கொடுக்கிறார்கள். அவர்கள் அரசியலில் வென்றபோது இப்படியான கைதுகளின் மூலமே எதிரிகளை காலில் விழ வைத்தனர். இப்போ இவர்கள் மடியில் கனம், அதனால் தப்ப முயற்சிக்கிறார்கள். கடைசி வரை வெல்வோம் என்று காத்திருந்து ஏமாந்தவர்கள் இறுதியில் மாட்டுப்பட்டார்கள். டக்ளஸ் ஹிஹி...... அவரை வளர்த்தவர்களுக்கே இந்த நிலை என்றால்; அவரின் நிலை என்ன என்று சிந்திக்கிறார். முன்பெல்லாம் அரச பதவியேறியவுடன், இவரை அழைத்து பணி கொடுப்பது வழக்கம். இப்போ அந்த அழைப்புக்காக காத்திருக்கிறாரோ என்னவோ, சுமந்திரன் வாழ்த்துச் சொல்லி கேட்கவில்லை. அவரும் தப்பி விட்டாரோ அல்லது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரோ தெரியவில்லை, விசாரித்துப்பாருங்கள்.
-
இணைந்து செயற்படுவதற்கு ஐக்கியதேசிய கட்சி தீர்மானம் - இன்று விசேட கூட்டம்
ம்....... இல்லையேல் தப்பிப்பிழைக்க முடியாதே, இனவாதம் ஊழல் கலாச்சாரம் மறைந்து இவர்களையும் மக்கள் மறந்து விடுவார்கள். அரசியல் ஊழல் இவற்றை நம்பி வாழப்பழகிய கூட்டமல்லவா!
-
வெளிநாடு செல்வதை தடுக்கும் நடவடிக்கை!
இறந்த தம் உறவுகளை அமைதியான வழியில் நினைவுகூர யாருக்கும் ஜனநாயக நாட்டில் உரிமை உள்ளது. அதை தடுக்க, இழப்பை அறியாதவர்களுக்கும் இழப்பை ஏற்படுத்தியவர்களுக்கும் உரிமையில்லை, சமாதானத்துக்கும் நாட்டின் அமைதிக்கும் பங்கம் ஏற்படுத்துபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அறிவித்தால் போதும். தாங்களாகவே தலையைகொடுக்க விரும்ப மாட்டார்கள். மக்களின் பலம், ஊழல் குழப்ப காரருக்கு சாதகமாயில்லை. சரத், தேரர்கள் போட்ட ஓலம், கொழுத்திய தீ பற்றவில்லை கடந்த வருடம். ஓடித்தப்பவும் முடியாது, பொறியில் மாட்டிய மூஞ்சூறு மாதிரி தப்பிக்க வழிதேடுவார்களே ஒழிய இதிலெல்லாம் மினக்கெடாமல். மிக இலகுவாக விசாரணைக்குழு வழியில் இழுக்கப்படுவார்கள். பொறுத்திருந்து பாப்போம். ஊழல்வாதிகளாலும் இனவாதிகளாலும் போற்றி வளர்க்கப்பட்ட பிக்குகள் கொஞ்சம் வீதிக்கிறங்கும். பௌத்தம் இல்லாமல் ஆக்கப்படப்போகிறது, அதற்கான ஒரு பாதுகாப்புமில்லை என்று இவர்கள் எழுப்பிய குற்றச்சாட்டையும் தாண்டியே அனுரா வென்றார். ஆகவே பௌத்தம் வாயை மூடிக்கொண்டிருப்பது நல்லது. இல்லையேல் மகிந்த பட்டாளத்துக்கு ஏற்பட்ட நிலையே பிக்குகளுக்கும் வரும். சும்மா இருந்து சாப்பிட்டு பழகிய அவர்கள் உழைத்துச்சாப்பிட தயாரா?
-
“நான் அன்பு வைத்துள்ள இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையினை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.” புதிதாக தெரிவான ஜனாதிபதி அநுரவுக்கு ஜனாதிபதி ரணில் உருக்கம்!
நம்ப வைத்து கழுத்தறுத்த நரியின் கருமவினை அவரை தொடர்ந்து போட்டறுக்குது. மகிந்த பட்டாளத்துக்கு ஒரு கோஷம், "நாட்டை பயங்கரவாதத்திலிருந்து மீட்ட கதாநாயகர் நாங்கள்." இவருக்கு ஒரு கோஷம், நாட்டை வரிசை யுகத்திலிருந்து மீட்டேன்." இவரை பொம்மைபோல வைத்து காரியம் சாதிக்க நினைத்த மகிந்த பட்டாளத்துக்கு பெரிய ஏமாற்றம். அவர்களுக்கு ஆபத்தில் கைகொடுக்க இனி யாருமில்லை, கூடியிருந்தவர்களும் ஓட தொடங்கி விட்டனர். போர் வெற்றி பேசிய சரத்தும் மண் கவ்வினார். மக்கள் எதிர்பார்த்தது வேறு. அதை தேடி அனுராவை அண்டியிருக்கின்றனர். பாப்போம் அனுரா எப்படி வெட்டியாளப்போகிறாரென.
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
வயிற்றெரிச்சலால் சம்பந்தமில்லாமல் ஏதோ புலம்புகிறார் அவர், அவருக்கு நம் இழப்புகள், தேவைகள் தெரிவதுமில்லை, கவலையுமில்லை, இன உணர்வுமில்லை. விழுந்து போன தன் இனத்தை பார்த்து தோல்வியை எள்ளி நகையாடுபவர் அந்த இனத்துக்கு வேண்டியவருமில்லை. விடுங்கள் அவரை, அவர்பாட்டில் களைத்ததும் ஓய்ந்து விடுவார்.
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
அனுரவின் வெற்றி உங்கள் கருத்துக்கு எதிராக இருக்கிறதே. அனுரவின் கட்சி வெல்லும் என கடந்த தேர்தல்களில் யாரும் நினைக்கவில்லை. தமிழரசுக்கட்சியிலுள்ள புல்லுருவிகளை களைந்தால் நமக்கு வெற்றி நிட்சயம். சளைக்க மாட்டோம். தமிழர் எல்லோரும் கடந்த காலத்தில் தமிழரசுக்கட்சிக்கு மட்டுமா வாக்களித்தனர்?
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
பொது வேட்பாளர் என்பது இன்றைய தமிழரின் அபிலாசைகளை கருதி பிறந்த குழந்தை. அது உடனேயே ஓட்டப்போட்டியில் வெற்றி பெறவேண்டுமென நாம் நினைத்தால்; அது நமது தவறு. அதுவும் இரண்டுபட்ட தமிழரசுக்கட்சியை வைத்துக்கொண்டு எதிர்பார்ப்பது நமது அனுபவக்குறைவேயல்லாமல் வேறொன்றுமில்லை. அவர் வெற்றி பெறாததால் ஒன்றும் குடிமுழுக்கப்பபோவதில்லை. எமது தேவைகளை, அபிலாசைகளை முன்னிறுத்தியுள்ளது. அது சிங்களத்துக்கும் புரியும். அனுரா அதை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டுள்ளார். புதிய பாதையில் பயணிப்பது முதலில் சிரமமாகத்தான் இருக்கும், போகப்போக அதன் ஏற்ற இறக்கங்கள் புரியும்.
-
ஜனாதிபதித் தேர்தலின் தோல்வியை ஏற்றுக் கொண்டார் ரணில் விக்ரமசிங்க
இவர்கள் அத்தனைபேரும் இனி அனுராவுக்கு தூது அனுப்புவார்களா அல்லது தொலைபேசி எடுத்து நேரடியாக வாழ்த்து சொல்வார்களா?
-
நாளை அமெரிக்க தூதரகம் மூடப்படும்
ஹிஹி..... அமெரிக்காவுக்கு குடியேற்ற விசா ஏற்க விரும்பவில்லைபோலும். இந்த முறை விசேட அறிவிப்பு. கடந்தகால அனுபவத்தினால்.
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
கண்டிப்பாக இல்லை. மஹிந்த குடும்பம் விசாரணைகளை எதிர்கொள்ளும், தமிழருக்கு கொடுமை செய்ததற்காகவல்ல, பதுக்கிய சொத்துக்களை பறிப்பதற்காக. போர்க்குற்றம் தொடர்பாக உள்ளூர் கண்துடைப்பு விசாரணை செய்து, நடந்தது என்னவென்று காட்ட முயற்சிப்பார். அவர் ஏற்கெனவே கூறி விட்டார், அதாவது போரில் என்ன நடந்தது என அறியவே தமிழர் விரும்புகின்றனர், யாரையும் தண்டிக்க அவர்கள் விரும்பவில்லை, அது எனது வேலையுமில்லை, அதை நீதிமன்றம் கையாளும் என்று உறுதிபட கூறிவிட்டார். பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்கிற நிலையில் தமிழர் இப்போ. இந்தியா மூக்கை நுழையா விட்டால் சரி.
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
தெரியாத தேவதையை விட தெரிந்த பேயே பரவாயில்லை என்று நினைத்திருப்பார்களோ என்னவோ? என்ன கந்தையர் தூக்க கலக்கமோ? அனுரா இன்னும் ஜனாதிபதியாகக்கூட பொறுப்பேற்கவில்லை அதற்குள் பாராளுமன்றத்தேர்தல் தேர்தல் பற்றி கவலைப்படுகிறீர்கள். தேர்தலில் நிற்கும் எண்ணம் உண்டோ?
-
தமிழர் பகுதியில் திடீரென போடப்பட்ட இராணுவ வீதி தடை - அச்சத்தில் மக்கள்
இரும்பு பிடித்தவன் கையும் சிரங்கு பிடித்தவன் கையும் சும்மா கிடவாது. போர்க்காலத்தில் மனித உரிமை மீறலில் ஈடுபட்டவர்கள் விசாரிக்கப்பட்டு நீதிமன்றம் தண்டிக்கும் என்று அனுரா சொன்னதை நம்பி விட்டார்கள் போலுள்ளது. அனுராவுக்கும் தமிழருக்கும் சிண்டு முடியிற வேலை. அனுரா தமிழரின் கடந்த கால அழிவுகளை, காயங்களை கணக்கிலும் எடுக்க மாட்டார். காயங்களுக்கு கட்டு போடவோ, அனுதாபம் தெரிவிக்கவும் மாட்டார். தனது அரசியலை எப்படி வளர்ப்பது கொண்டு செல்வது என்பதே அவரது இலக்கு.
-
இன மதத்தை தூண்டாமல் பெற்ற வெற்றி - அனுரவிற்கு சுமந்திரன் வாழ்த்து
போருக்கான அணிகளை அணியும்போது வீரம் பேசக்கூடாது, அவற்றை களையும் போது மற்றவர்கள் அதை பேசுவார்கள். சர்வாதிகாரி என்கிற பெயரை எடுக்காமல் இருந்தால் சரி.
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
ரணிலை மிதப்படுத்தி பேசியதெல்லாம் பொய் என மக்களுக்கு புரியும் என்பது தெரியாமலேயே அவிழ்த்துவிட்டு காத்திருந்தனர். எந்த வைத்தியராலும் அவரை காப்பாற்ற முடியாது, எந்த மருத்துவமனையிலும் அவருக்கு இடமில்லை. ஏற்கெனவே அவர் ஒரு தனிமரம், அது தெரியாமல் தோப்பாக நினைத்தார், தான் இருந்த மரத்திலிருந்தே சறுக்கி விழுந்து விட்டார். இனி ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, மொட்டுக்கட்சி மெல்ல மெல்ல சரியும். நாமல் எக்காலத்திலும் ஜனாதிபதியாக முடியாது!
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
சுமந்திரனின் குலுமாசு: "இலங்கை வாக்காளர், தேர்தல் மேடைகளில் நான் கொடுத்த சைகையை சரியாக பயன்படுத்தி, எனது கருத்துக்களைப் கேட்ட பின்னரே யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தீர்மானம் செய்ததாக நான் நம்புகிறேன், அதை நீங்களும் முன்னைய தேர்தலில் அவதானித்திருப்பீர்கள், இது எங்களின் ராஜதந்திரம்." "இதை தாங்கள் கவனத்தில் எடுத்து எனக்கு பதவியளித்தால், அதை நீங்கள் எனக்களிக்கும் கெளரவமாகக் கருதுகிறேன்." கண்டிப்பாக இப்பவே வாழ்த்து என்கிற பெயரில் அழைப்பெடுத்து கோரிக்கை விடுத்து காத்திருப்பார்கள், இனி அனுராவை புகழ்ந்தே பேசுவார்கள், ஆனால் இந்த வௌவால் கூட்டத்தை அனுரா சேர்த்துக்கொண்டால் மற்றவர்களைப்போலவே இவரின் ஆட்சியும் குப்பையாக மாறும். இவரின் கொள்கை மாற்றமடையும், இவருக்கு கிடைத்த இந்த அருமையான வாய்ப்பை இவர் தவற விட்டால் இன்னொரு வாய்ப்பு வழங்கப்படாது என்பதை அவர் அறிவார். ஆகவே கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த வேண்டும். பின்னர், எங்களின் கொள்கை சரியானது அதை நிறைவேற்ற மக்கள் எங்களுக்கு ஆணை (சந்தர்ப்பம்) தரவில்லை என்று பின்னாளில் புலம்புவதில் பயனில்லை. சொல்லும் செயலும் ஒன்றானதா என்பதை இவர்களின் அமைச்சரவையிலிருந்து புரிந்து கொள்ளலாம். ராஜா பக்க்ஷக்களுக்கு எதிராக தொடங்கிய அரகலியாவை அடக்கி அதை தன் தோளில் சுமந்து அவர்களை காப்பாற்றியவர் ரணில். அதன் எதிரொலிதான் இந்த தேர்தல் பெறுபேறுகள்! அது நாமலின் தவறு.. இவர்கள் வேண்டாமென்றுதானே மக்கள் இவர்களை விரட்டியடித்தாகள், அந்த வெறுப்பு ஆறுமுன், எனக்கு வாக்கு போடுங்கள் என்று வெட்கமில்லாமல் மேடையேறியது யார் தவறு? அந்த இடத்தில் மஹிந்த இருந்திருந்தாலும் இதுதான் நடந்திருக்கும். இது அவருக்கு பெருத்த அவமானமாக இருந்திருக்கும். அவர் தப்பித்துக்கொண்டிருந்தார். தமிழரை அழித்த கையோடு, அதை விழாவாக எடுத்து எக்காளம் ஊதிக்கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களிடம், தப்பித்து துயரை தாங்கமுடியாது தவித்தவர்களிடம் வெட்கமேயில்லாமல் வாக்கு கேட்டவரின் புதல்வாராயிற்றே நாமல்! நுணலும் தன் வாயாற் கெடும். இவர்கள் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளல்லர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இத்துடன் இவர்கள் அரசியலில் இருந்து வெளியேறுவது இவர்களுக்கு நல்லது. இல்லையேல், பாராளுமன்றத்தேர்தலில் தகுந்த பாடம் அளிக்கப்படும். இவர்களின் வழமையான போலி வாக்குறுதிகளும் நாடகங்களும் இனியும் எடுபடாது. இவர்கள் தமிழரை வைத்து நகைச்சுவை செய்திருக்கிறார்கள் என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்தியிருப்பது எவ்வளவு முட்டாள்தனம். இந்த இனவாத அரசியல் வாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர் மட்டுமல்ல சிங்களவர்களும், நாட்டின் பொருளாதாரமுந்தான் ஏப்பமிடப்படுள்ளது எனும் உண்மையை புரிந்து கொண்டுள்ளார்கள். ஏங்கோ! சிங்களத்துக்கு எழுபத்தைந்து வருடங்களாக வாக்குப்போட்டு நம்பிக்கையோடு இருந்த மூஞ்சிக்கு என்ன நடந்தது? அந்த மூஞ்சியில் கரியைப்பூசி அவர்களை இந்த நிலைக்கு தள்ளியது யார்? இது கூடத் தெரியாதா? சொல்கிறேன் கேளுங்கள்! தமிழர் இனியும் இவர்களை நம்பி இவர்கள் பின்னால் இவர்களுக்கு வாக்களிக்கத் தயாரில்லை என்கிற தரப்புக்குள் வரும்! இனவாதம் பேசுவோரை விரட்டியடிக்க தொடங்கியதோடு புதிய கொள்கைக்கு இடம் கொடுக்க முன்வந்திருக்கிறார்கள். அனுரா அதை சரியாக பயன்படுத்தினால் சரி, இல்லையென்றால் அவருக்கும் இதே கதிதான். இந்த நாட்டை கட்டியெழுப்புவது, ஊழலை ஒழிப்பது சாதாரண விடயமல்ல, விடவும் மாட்டார்கள். அவர்களின் சும்மா இருந்து பணம் உழைக்கும் வழி இது. தமது ஊழலையும் சிறை வாழ்வையும் தக்க வைக்க எந்த நிலைக்கும் போவார்கள். எழுபத்தைந்து வருடங்களாக வாக்குபோட்டுப்பழகிய பழக்க தோஷம், செம்மறிகூட்டங்களாக கேள்வி கேட்காமல் தலையாட்டிய கூட்டம், உடனடியாக புது பாதையை தெரிவது கொஞ்சம் சிரமம். ஆனாலும் முதல் தரத்திலேயே மக்கள் ஏற்றுக்கொண்டது பெரும் சாதகமே! இது தொடர்ந்து மக்களோடு பயணித்தால்; வெற்றியடையலாம். நரி, ஆபத்து நேரமெல்லாம் மஹிந்த கொம்பனிக்கு கை கொடுத்து ஒற்றையாட்சி கொள்கையை காப்பாற்றியதன் விளைவு; தன் வாலை இழந்து நிக்குது. இனி இந்த கிழட்டு நரி அரசியலில் இருந்து ஒதுங்குவது நல்லது. அனுரா கட்சிக்கு அரகலியா ஏற்படுத்திக்கொடுத்த அரிய வரப்பிரசாதம். இது கடைசியும் முதலுமானது, இதை இவர் சரியாக பயன்படுத்திக்கொண்டால் இனவாதிகளையும் அவர்களின் அரசியலையும் முற்றாக ஒழித்து நாட்டை முன்னேற்றலாம். இவர் சரியாக தமிழரை அணுகினால் முதலீடுகளை பெறலாம். இல்லையேல் இந்தக் கட்சிக்காக உயிரை தியாகம் செய்த இளைஞரை அவமதிப்பதோடு எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாக ஒருபோதும் அரசியல் செய்ய இடமளிக்கப்படாது.
-
திருப்பதி கோவில் லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் – சதி கொள்கைக்கு அனுமதிய முடியாது என்கிறது காங்கிரஸ்
இன்றைய உலகில், மதத்தை வைத்து பிழைப்பவர்களும் அதை விற்று பிழைப்பவர்களுமுண்டு. மதத்தின் புனிதம், மனித நேயம் எல்லாம் மரணித்து வெகுகாலமாகிவிட்டது. இந்து தமிழர் கட்சி தலைவர், ராம ரவிக்குமார் கிறிஸ்தவர்களை சாடியிருக்கிறார். ஒன்று இவர்களின் லாப நோக்கு அல்லது நிர்வாக திறன் இன்மையே காரணம் என்பதை ஒத்துக்கொள்ள தயாரில்லை. அங்கே முழங்கினால் இங்கே சச்சியர் வீட்டில் அடை மழைபெய்யும். கிறிஸ்தவர்களை வாங்கு வாங்கென்று வாங்குவார். ஆனால் தமிழக அரசு, இது ஒரு ஊர்ஜிதமற்ற குற்றச்சாட்டு என்றும் இவர்கள் கூறும் நிலையத்தில் கோவில் பிரசாதம் (லட்டு) செய்ய பொருட்கள் கொள்வனவு செய்வதில்லையென்றும் ஆதாரத்துடன் வெளியிட்டிருக்கிறது.