Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. இந்தியாவுக்கு சொல்லுகிறாரோ? இந்துசமுத்திரத்தின் வல்லரசு தான் என அண்ணர் நினைப்பில், இவர் மண்ணை அள்ளி போடுறாரே. நாடுகளை பக்கசார்பில்லாமல் நடத்த முடியுமென்றால், நாட்டுமக்களையும் சரி சமமாக நடத்த முடியுமே. எதற்கும், இந்தியாவை கொஞ்சம் தள்ளியே வைத்தால், நாடும் மக்களும் அமைதியாக இருக்க வாய்ப்புள்ளது. பாவம் ஜெய்சங்கர்! முதலாம் ஆளாக ஓடிவந்து நன்கொடை, அது, இது என்று ஐஸ் வைத்தவர், மூஞ்சியில கரியை பூசுறாரே.
  2. முன்பொருநாள், நீங்கள் ஊரில் போய் மோட்டார் சைக்கிள் சாகசம் காட்ட ஆர்வப்படுவதாக எழுதிய நினைவு, அது என் மனதில் வந்து எனக்கு கிலியை ஏற்படுத்திச்சு. விரக்தியில் எதையாவது செய்து தொலைச்சு போடுவியளோ என்றுதான். அப்பாடா ..... இப்பதான் போன உயிர் வந்த மாதிரி இருக்கு.
  3. அதற்கு வழிவிட வேண்டியது தவிர்க்க முடியாததாகும். மக்கள் மனங்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, ஏற்றுக் கொண்டு இளைஞர்களுக்கும், புதியவர்களுக்கும் இடம் கொடுப்பதே அரசியல் கட்சிகளினதும், தலைவர்களினதும் தலையாய கடமையாக இருக்கவேண்டும் இது கரெக்ட்! சிலருக்கு, தமிழ் வாசித்து கிரகிப்பதில் சிக்கலுள்ளது போலும். வினோ, தான் தேர்தலில் போட்டியிடாமைக்கு காரணத்தை தெளிவாக விளக்கியிருக்கிறார். மக்களின் எதிர்பார்ப்புக்கு மதிப்பளித்து, புதியவர்களுக்கு இடமளிப்பதற்காக போட்டியிடாமல் தவிர்ப்பதற்காக.. தான் சேர்த்த பணம் வாகனம் பற்றி ஏதும் குறிப்பிடவில்லையே. சம்பந்தப்பட்டவர்கள் தமக்கு சார்ந்தவர்கள், அதற்காகவே போட்டியிடுகின்றனர் என்று சொல்ல வருகின்றனரா?
  4. அட..... இவ்வளவுதானா? நான் பயந்தே போய்விட்டேன்!
  5. ஆகவே, மற்றவர்களும் கோடிக்கணக்கில் பணம், கணக்கில்லா வாகனங்கள் சேர்க்க வேண்டும். கொஞ்சம் இடம் விடுங்கப்பா, அப்பதான், சும்மா இருந்து சாப்பிடலாம் வயோதிபத்தில். மொத்தத்தில், பணம் வாகனம் பார்க்க. மக்கள் தலையில் அரசியல்! மக்கள் எப்பாடு பட்டாலும் பரவாயில்லை. இந்த வாதமும் நல்லாய்த்தானே இருக்கு.
  6. இது, தமிழ் இனத்துக்கு எழுபத்தாறு ஆண்டுகளாக இழைக்கப்பட்ட அநிஞாயாயங்களுக்கும் பொருந்தும். அதைத்தான் மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறீர்கள் என நினைக்கிறன். அதை தீர்த்து வைக்கவேண்டியது ஜனாதிபதியாகிய உங்களின் கடமை!
  7. அந்தக்கொள்கையின் விளக்கம் தேர்தல் முடிய தரப்படும். பாராளுமன்ற கதிரையா? தூக்குக் கயிறா என்று பின்னர் தெரியும். கடந்த காலம் போல் தொண்டை கிழிய கத்தி, தங்கள் மொழி ஆற்றலை காட்டி இனி வருங்காலத்தில் பதவி, சுகபோகம் அனுபவிக்க முடியாது.
  8. நீங்கள் எப்படி குட்டினாலும் எங்களுக்கு வலிக்காது, நாங்கள் குனிந்து வாழத்தயார்!
  9. ஒன்று, நம்மையும் இந்த நாட்டின் சுதந்திர குடிமக்களாக அதிகாரத்தை பகிர்ந்து சமமாக வாழ முன்வரவேண்டும். இல்லையேல், நம்மை பிரிந்து வாழ அனுமதிக்கவேண்டும். ஒரு ராச்சியம் என்றால்; ஏன் மதத்தில், கல்வியில், தொழிலில், நீதி நிலைநாட்டுவதில் பாகுபாடு? அதனாற்தானே பிரச்சனை தோன்றியது. எடுத்தவுடன் யாரும் ஆயுதம் ஏந்தவில்லையே. நீதி கோரி அஹிம்ஸை வழியில் போராடியவர்களின் கோரிக்கைக்கு எப்படி பதில் வழங்கப்பட்டது? தாமுண்டு தம்பாடுண்டு பொருளாதாரத்தில் உயர்ந்து நின்ற நம்மவர்களை எரித்தும் அழித்தும் அடித்தும் உங்கள் பகுதிக்கு செல்லுங்கள் என்று விரட்டியது யார்? பின் எங்கள் பிரதேசத்தில் வந்து, அங்கிருந்தும் அழிவுகளை ஏற்படுத்தி ஏதிலிகளாக்கியது யார்? சரி, போர் முடிந்தது, நம் நிலங்களையும் ஆலயங்களையும் நமது இருப்பையும் பறிப்பது யார்? இவர்களோடு எப்படி சேர்ந்து வாழ முடியும்? எங்களுக்கு வாக்களியுங்கள் என்கிறார்கள், பின் இரண்டாம் பட்ஷமாக நடத்துவது ஏன்? சிங்களத்துக்கு, தமிழர் இந்த மண்ணில் தங்களுக்கு அடிமைகளாக வாழ வேண்டுமென்றே விரும்புகிறார்கள், அதையும் நம்மவர் சிலர் நிஞாயம் என்றே வாதாடுகிறார்கள். ஆளுங்கட்சி ஒரு தீர்வை வைக்கும், எதிர்க்கட்சி அதை எதிர்க்கும், அடுத்த தேர்தலில் தான் வைத்த தீர்வை எதிர்கட்சியாக இருந்து எதிர்க்கும். ஆக மொத்தத்தில் தமிழருக்கு எதுவும் கொடுப்பதில்லை, அவர்களின் வாக்கு மட்டும் வேண்டும். அதனாலேயே நம் நாடு வங்குரோத்து அடைந்திருக்கு. அவர்கள் மாறாவிட்டால் நாடு முன்னேறப்போவதில்லை. நாடு எந்த நிலைக்கு போனாலும் பரவாயில்லை, ஆனால் தமிழருக்கு எதுவும் கொடுக்கக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்கள். அனுராவல்ல, எவர் வந்தாலும் தமிழர் பிரச்சனை தீராமல் நாடு அணுவளவும் முன்னேறாது! உண்மையான புத்திசாலி நாட்டை முன்னேற்ற விரும்பினால் நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்கு முன்னுரிமை கொடுப்பார். அதன் பின், பொருளாதாரம் விரட்டப்பட்ட மக்களால் கட்டியெழுப்பப்படும். இல்லையேல் சர்வதேச கூத்தாடிகளின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப நாட்டின் வளங்களை இழந்து தலையாட்டிக்கொண்டே இருக்கவேண்டியதுதான். அதை செய்ய தவறும் பட்ஷத்தில் அனுராவும் விரட்டப்படுவார், ஒருவேளை சர்வாதிகார ஆட்சி வரலாம். சிங்களமக்கள் விழிப்புணர்வுடன் சிந்திக்க தொடங்குவர்.
  10. நமக்குள் இருக்கும் தடைக்கற்கள், ஒன்றாக சேர்ந்து ஒரு கொள்கைக்காக போராடாமை, காட்டிக்கொடுப்பது, எதிரியின் கொள்கைக்காக அவர்கள் பெயரில் இயங்குவது, நான், எனக்கு, என்னால்தான், எனக்குக் கீழ்த்தான். இப்படி ஒவ்வொருவரும் இயங்குவதால், எதிரி இலகுவாக நம்மை கூறுபோட்டு எதிரெதிராகவே வைத்து தன் நலத்தை பேணிக்கொள்கிறான். ஒருவேளை பதின்மூன்றை விட கூடுதலான அதிகாரம் கிடைக்க வாய்ப்பிருக்கலாம் என சொல்கிறாரோ என்னவோ......?
  11. அவர் தமிழரசுக்கட்சிக்குள் செருகப்பட்டதே, தமிழ்த்தேசியம், தமிழரசு என்கிற கட்சிகளை இல்லாது அழித்து, ஒரு ராச்சியம் என்பதை உருவாக்குவதற்கே. கிட்டத்தட்ட அவர் வந்த நோக்கத்தை நிறைவேற்றிவிட்டார். ஆனால், அவரை பணிக்கு நியமித்த எஜமானர்கள் பதவியிலிருந்து அகற்றப்பட்டுவிட்டனர். பாவம்! கூலி முழுவதுமாக பெறமுன் இப்படியாகிவிட்டதே. இப்போ அதற்குரிய பலனை மக்கள் கொடுப்பார்கள். அடித்து விரட்டினாலும், ஏதோ ஒன்றை சொல்லிக்கொண்டு அங்கேயே சுத்துவார். இனிமேல் சட்டாம்பி வேலைக்கும் யாரும் அமர்த்த மாட்டார்கள், சொல்வது முழுக்க பொய்யும் புழுகும். நச்சுப்பாம்பு.
  12. அவர் எழுதிய நூலை, சிங்களத்தில் மொழிபெயர்த்து, அவருக்கே அளித்து என்ன சொல்ல வருகிறார்? பெருமை தேட முனைகிறாரா? இப்போ ஒரு பழக்கம், பதவி கிடைத்தவுடன் புத்தகம் எழுதுதல், பதவி விலகியவுடன் புத்தகம் எழுதுதல். சிங்களபுத்தகத்தை இந்திய அமைச்சருக்கு கொடுக்கிறார் இவர், இன்னொருவர், தமிழ் பத்திரிகையை சிங்கள அமைச்சருக்கு கொடுக்கிறார். எல்லாம் பேய்க்கா ட்டு!
  13. தான் பதவியில் இருக்கும்பொழுதே நாமலை ஜனாதிபதியாக்கி அழகு பார்த்து, இலங்கையை தமது குடும்ப சொத்தாக்க வேண்டும் என கனவு கண்டு எடுத்த நடவடிக்கைகள் எல்லாம் வீணாகி, குடும்பத்தையே திருடர் பட்டதோடு அரசியலில் இருந்து துரத்தும் காலம் வருமென கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். "நடக்கும் என்பார் நடக்காது, நடக்காதென்பார் நடந்துவிடும்." என்று காலம் நிரூபித்து சென்றுள்ளது. துக்கத்துடனும், அவமானத்துடனும் அரசியலில் இருந்து விடைபெறுங்கள். நீங்கள் இன்னும் நிலைத்திருந்திருப்பீர்கள், எந்த அரசியலை ஒழிக்கிறோம் எனக்கூச்சல் போட்டு பதவியேறினீர்களோ அதே அரசியலை நீங்கள் கையிலெடுத்ததே உங்கள் அரசியல் அஸ்தமனத்திற்கு காரணம். மக்களே, எங்களிடம் பதவியை தந்தார்கள், நாங்கள் வேண்டாம் என்றால், அவர்களே நம்மை துரத்துவார்கள் என்று அன்றொருநாள் உங்களையுமறியாமல் இப்படியாகுமென்றும் தெரியாமல் சொன்னீர்கள். உங்கள் வாய்வார்த்தை பலித்துவிட்டது. யாருக்கும் குறிப்பிட்ட காலமே வழங்கப்படும், அதை சரியாக, நிஞாயமாக பயன்படுத்தாவிட்டால் அது உங்களை விட்டு தூர விலகி விடும். இதை தெரிந்தவன் அதை பயன்படுத்திக்கொள்வான்.
  14. ஆக்கப்பொறுத்தவர் ஆறப்பொறுக்கவும் வேண்டும். எழுபத்தைந்து வருடங்களாக பொறுத்து விட்டோம், அடுத்த தேர்தல் வரை பொறுப்பதில் குடியொன்றும் முழுகப்போவதில்லை. எழுபத்தைந்து வருடங்களாக ஊறிப்போன பிரச்சனையை ஒரு இரவில் தீர்க்க முடியாது. அதுவும் அவரது பதவி தொங்கு பாலத்தில் நிக்குது. கரணம் தப்பினால் மரணம். பிறகு இந்தக்கட்சியால் எழுந்திருக்கவே முடியாது. அவரது பதவியை இல்லாமற் செய்வதற்கு நாமல், சரத் வீரசேகர, அவரின் வாயை கிளறி அனுதாப வாக்குகளால் மீண்டும் அரசியலை பிடிக்க துடிக்கின்றனர். மக்கள் இனி இவர்கள்மேல் அனுதாபம் காட்டுவார்களா என்பது சந்தேகம் ஆனால் முயற்சிக்கிறார்கள். தன்னை இஸ்திரப்படுத்துவதற்காகவே சில அதிரடிகளை, அறிவித்தல்களை வெளியிட்டு ஊழல் பேர்வழிகளுக்கு அதிர்ச்சி வைத்தியமும், மக்களுக்கு நம்பிக்கையையும் ஏற்படுத்த விழைகிறார். அந்தப்பக்கம் அதை சாதகமாக வைத்து அவரை விழுத்தி விழுந்துபோன தம் அரசியலை தூக்கி நிறுத்தி தம்மை பாதுகாத்துக்கொள்ள முயற்சிக்கின்றனர். ஆகவே அவரது கைக்கு முழுமையாக ஆட்சி வரட்டும், இந்த குழப்பக்காரர்களின் அட்டகாசத்தை அடக்கியபின் பின்னரே இவரால் எதுவும் செய்ய முடியும், இவரை குற்றம் சொல்லவும் முடியும். யதார்த்தமாய் யோசிப்போம். அதற்காக நான் அனுராவின் ஆதரவாளர் கிடையாது. நமது அரசியல்வாதிகளின் தில்லு முல்லுகளையே மாற்றியமைக்க எம்மால் முடியவில்லை. விட்டுக்கொடுப்பு என்பது இனிமேல் இல்லை, ஆனால் நாங்கள் கேட்பவற்றை பெறுவதற்கு நாங்கள் தகுதியுள்ளவர்கள் என்பதை நிலை நிறுத்துவோம். காலம் அது தன் கடமையை செய்யும். ஒவ்வொருவருக்கும் அவகாசம் கொடுக்கிறது. எம்மோடு அதிகாரங்களை பகிர்ந்து வாழ முடியாவிடில், அவர்களிடமிருந்தும் அதிகாரம் கைமாறும். அரசியல் கைதிகள் விரைவாக விடுதலை செய்யப்படவேண்டும். அவர்கள் தங்கள் வாழ்நாளின் முக்காற்பகுதியை, இளமையை, எதிர்கால வாழ்வை சிறைக்குள்ளேயே தொலைத்துவிட்டு நம்பிக்கையிழந்து வாழ்கிறார்கள். தேர்தலில் இவரின் கை ஓங்கினால்; விரைந்து நடவடிக்கை எடுப்பார் என நம்புவோம்!
  15. தேர்தலில் தென் இலங்கையில் களமிறங்கப்போறாராம், பொறுத்திருந்து பாப்போம்! இவற்றை கட்சியில் இருந்து புலிகளுக்கு பயந்து ஓடினதுகள், அங்கே குடும்பம் குட்டி என்று பலுகிப் பெருகி இருக்குதுகள். அவர்களின் வாக்குகளால் வெல்லலாமென நினைக்கிறாரோ என்னவோ? இந்த முறை தேர்தலோடு அரசியலில் இருந்து ஒதுங்குவதாக வேற தெரிவித்துவிட்டார். இவர்கள் ஒன்றும் சத்தியவான்களோ அரிச்சந்திரன்களோ கிடையாது. சுமந்திரன் சொன்னார், நல்லாட்சி காலத்தில் ஒருவருடத்துக்குள் அரசியல் யாப்பு ரீதியிலான தீர்வு காணப்படும், இல்லையேல் நான் பதவி விலகுவேன். இப்போ அதைப்பற்றி நினைவு படுத்தி அவரை கேட்டால்; அதற்கு வேறொரு விளக்கம் கொடுத்து, இன்னொருவரை குற்றவாளியாக்குவார். சில வாரங்களுக்கு முன் சொன்னார், இளையோருக்கு தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் அளிக்கப்படுமென. இப்போ சொல்கிறார், வடக்கில் நிட்சயம் தானும் சிறீதரனும் போட்டியிடுவதாக. அப்போ; இவர் இளையவரா? இவரின் உறுதிப்பாட்டுக்கு என்ன நடந்தது? உறுதியளித்தவர், தன்னை தியாகம் செய்து முன்னுதாரணமாக இருந்திருக்க வேண்டுமல்லவா? வார்த்தை ஒன்று, செயல் வேறொன்று. நான், என்னால், எனக்கு என்பதற்காக எந்த கீழ் நிலைக்கும் இறங்கும் சீவன்கள். இடம் கொடுக்கப்பட்ட ஒட்டகங்கள்! விரட்டுவது கடினம். வெட்கம் இல்லை, சொன்ன வாக்கை நிறைவேற்றும் திராணியில்லை, ஏமாற்றிப்பிழைப்பு.
  16. அவர் வந்தது அனுராவை யாரும் அண்டாமல் காக்கா பிடிப்பதற்கே. தமிழர் பற்றிய அக்கறை, கவலை, பயம் அவருக்கு இல்லை. தங்களுக்குள்ளேயே ஒற்றுமையில்லாத, மக்களுக்காக வாழ முயலாத, எடுப்பார் கைப்பிள்ளைகளால் இந்தியாவுக்கு நன்மையோ, அச்சுறுத்தலோ இல்லையே. 'வா' என்று ஒரு அறிவித்தல் வராதா காலில் போய் விழாமாட்டோமா என்று காத்திருக்கும் இவர்களோடு கதைத்தால் என்ன, கதையா விட்டால் என்ன? குடியா முழுகப்போகுது இந்தியாவுக்கு? அவர் வந்த வேலையை கச்சிதமாக நிறைவேற்றி விட்டார் அவரை வரவேற்பதற்கு ஆயத்தங்கள் பண்ண வேண்டாமோ? அவர் இவர்களுடன் வீணாக நேரத்தை செலவிட, இவர்கள் முக்கியமானவர்களுமில்லை, இவர்களின் கோரிக்கை முக்கியமானதுமில்லை, இதை எம்மவர்கள் உணரவுமில்லை, இவர்கள் எதிர்பார்த்திருந்திருப்பார்கள், தேர்தல் மேடையில் பிதற்றுவதற்கு. அவர்கள் தள்ளியிருப்பதே தமிழினத்துக்கு நன்மையளிக்கும். இந்தியாவும் இலங்கையும் பல ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள் எழுதுகிறார்கள், நடைமுறைப்படுத்துகிறார்கள். ஆனால் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் கைச்சாத்திட்ட ஒப்பந்தம் தொட்டுக்க ஊறுகாய்போல உள்ளது. இது இரண்டுதரப்பும் காட்டும் அலட்சியம். ஒருநாள் நிறைவேற்ற துடிப்பார்கள், அப்போ காலம் கடந்துவிடும். ஒப்பந்தமும் காலவரையறை முற்று ஆகி, நடைமுறைக்கு ஒவ்வாததும் ஆகிவிடும். நானும் இருக்கமாட்டேன், இதைப்பற்றி பேசுபவர்களும் இருக்க மாட்டார்கள் என நினைக்கிறன்.
  17. ஐயோ....... கவித்துபோட்டானே இந்தியன்! பூகோள அரசியல் இந்திய சீன போட்டியில் தான் சிக்கிகொள்ளப்போவதில்லை என அறிக்கை, இந்திய நிறுவன அதானியின் திட்டத்தை கைவிடுவது என்று அறிக்கை விட்டவரை, வாழ்த்துக்கூறி, வரவழைத்து, அன்பளிப்பு, நன்கொடையென வாரிவழங்கி கவிழ்த்துப்போட்டானே. "நக்குண்டார் நாவிடார்." "முதற் கோணினால், முற்றும் கோணும்." எதிர்பார்ப்பு ஏமாற்றமாகலாம். ஆகவே மக்கள் நிதானம்! குடிக்கக்கொடுத்து வாக்கு வாங்குவது போலாயிற்று.
  18. இனப்பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால் தரகர்களுக்கும் சகுனிகளுக்கும் கொண்டாட்டம். சிறீதரன், சுமந்திரன் அரசியல் தாதாக்கள்! அவர்கள் விலக மாட்டார்கள், மற்றவர்களை விரட்டுவார்கள். தங்களுக்குள் சந்தர்பத்திற்கேற்ப உடன் படிக்கை செய்து விட்டுக்கொடுத்தும் வாங்கியும் கொள்வார்கள்.
  19. இவனைப்பாத்தால்; பிக்கு மாதிரி தெரியவில்லையே. விகாரையில் சமைப்பவனாக இருப்பானோ? அவனது உடையும், தலையும், இருக்கும் விதமும் சுத்த குடிகாரன் வலுச்சண்டைக்கு வந்தவன் போல் தெரிகிறானே. இவனை விகாரையில் எந்த பணியோ அதோடு நிறுத்திக்கொள்ள செய்ய வேண்டும். இதெல்லாம் முன்னைய அரசுகளின் ஆதரவோடும் ஆசீர்வாதத்தோடும் அரங்கேறியவை, இதில் கைவைத்தால் அனுராவுக்கு பிரச்சனை ஆரம்பிக்கும். இந்த கலாச்சாரத்தை மாற்றா விடில் இவரும் நாட்டை மேற்கொண்டு செல்ல முடியாது. நாடு முழுவதும், எல்லாத்துறையிலும் ஊழல், அதிகார துஷ்பிரயோகம், அடாவடி, கொலை, கொள்ளை மலிந்து விட்டது. இதை உடனடியாக மாற்றுவது கடினம். அதோடு அவர்களும் இந்த கலாச்சாரத்தில் இருந்து வந்தவர்களே. இதற்கு கால அவகாசம் தேவை. முதல் இதன் பிதாக்களை சிக்க வைத்து, தண்டிக்கப்பட்டால் மாத்திரமே படிப்படியாக கட்டுக்குள் கொண்டுவரலாம், எடுத்தவுடன் அடிமட்டத்தில் கைவைத்தால்; பாரிய பிரச்சனை வரும். முதலில் நாடு வீழ்ந்ததற்கான காரணம், அதற்கு முன்னிருந்த நிலை, நாடு முன்னேற ஏற்படுத்தப்படவேண்டிய நடவடிக்கைகள், மக்களிடம் இருந்து எதிர்பார்ப்பதென்ன, அவர்கள் எவ்வாறு செயற்படவேண்டும், தவறும் பட்ஷத்தில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கை என்ன என்பதை தெளிவாக அறிவுறுத்தப்பட வேண்டும், சட்டமாக இயற்றப்படவேண்டும். அதன் பின் நடவடிக்கை எடுக்கும் போது தானாகவே ஒரு பயம், கடமை ஏற்பட வாய்ப்புள்ளது. இது இரண்டொரு நாளில் மாற்றப்படக்கூடியதல்ல, எழுபத்தாறு வருடங்களாக வேரோடி, நாடுபூராவும் விருட்ஷமாகி விட்டது. மெதுவாக வேர்களை வலுவிழக்கச் செய்தே மரத்தில் கைவைக்கவேண்டும். ஒரு கட்டத்தில் அனுராவே களைத்து வளரட்டும் எனவிடக்கூடும். இவரது ஆயுள் பூராவும் காணாது மாற்றத்தை ஏற்படுத்த. இவர் இதய சுத்தியுடன் செயற்பட்டால் இவரது காலத்தில் மாற்றத்தை காணலாம். உலகம் அழிவை நோக்கி போகும்போது எல்லாம் காலங்கடந்த்தே.
  20. இனி வருங்காலத்தில், அரசியல் சலுகைகள் வரப்பிரசாதங்கள் முன்போல் இருக்குமா என்பது சந்தேகம். அதை இழப்பதற்கு, அதிலிருந்து திளைத்தவர்கள் விரும்பவும் மாட்டார்கள். ஆனால் ஒரு இறுக்கமான சட்டங்கள் கொண்டுவரப்படவேண்டும். மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று ராஜபோக வாழ்க்கை வாழ்பவர்கள் மக்களுக்கு செய்த நன்மைகளை வெளிப்படுத்தி சம்பளம் பெறும் நிலை வரவேண்டும். சும்மா கதிரையில் இருந்து வார்த்தையாலம் காட்டி முன்னுரிமைகளையும் பதவிகளையும் பெறுவது தடுக்கப்பட வேண்டும். தென்னிலங்கையில் எப்படி முன்னுரிமை பெற்ற கட்சிகள் புறக்கணிக்கப்பட்டு புதிய கட்சிக்கு வாக்களித்து புது மாற்றத்தை ஏற்படுத்தினார்களோ, அதே போன்று தமிழ் மக்களும் பழையவர்களை வீட்டுக்கு அனுப்பி புதியவர்களை வரவேற்க வேண்டும். இவர்கள் சாதித்தது என்ன? அவர்கள் அனுப்பப்பட வேண்டியவர்களே! இல்லையேல் வரும் புதியவர்களுக்கு இதே கலாச்சாரத்தை எதிர்பார்த்து அதற்காகவே வேலையற்று வெறும் வாக்கில் வாழ்பவர்களாக இருப்பார்கள். இந்த தடவை உனக்கு சந்தர்ப்பம் அளிக்கிறோம், உன் திறமையை காட்டு, இல்லையேல் வீட்டுக்கு அனுப்பப்படுவாய் என்கிற செய்தியை மக்கள் அறிவிக்க வேண்டும். சர்வதேச தரகர், நம் தலைவர்களை கையாண்டு நமது நாட்டை சீரழிப்பதை தடுக்க வேண்டுமானால்; எல்லா குடிமக்களும் சரிசமமாக நடத்தப்பட வேண்டும். அப்போது சர்வதேசத்துக்கு இங்கு மூக்கு நுழைக்க வேண்டிய தேவையில்லை. இதை அனுரா செய்தால்; மிகச்சிறந்த தலைவராக, நாட்டை முன்னேற்றுபவராக மாறுவார். மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுபவராக இருப்பார். ஊர் இரண்டுபட்டால், கூத்தாடிக்கு கொண்டாட்டம். இந்த கூத்தாடிகளை விரட்ட வேண்டுமானால்; நாம் ஒன்றுபட வேண்டும். நாம் ஒன்றும் நிஞாயமற்றதை கேட்கவில்லை, எமது உரிமையைத்தான் கேட்கிறோம். அதை செய்யாமல், நீங்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை என்கிற விதண்டாவாதம் செய்யக்கூடாது. எப்போது, ஏன், நாங்கள் இந்த முடிவுக்கு வந்தோமென்பதை உணர்ந்து செயற்படவேணும். ஆரம்பம் வெறும் அதிரடிகளால், வெடி கொழுத்திவிட்டு மக்கள் நம்மை ஆதரிக்கிறார்கள் என சுகபோகத்தையும் சர்வாதிகாரத்தையும் கையிலெடுத்தால் நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது!
  21. அவருக்கு என்ன நடந்தது? சரியாக துப்பு விளக்கினேன் போலுள்ளது, அங்கால ஒருவர் முந்திக்கொண்டு துள்ளுறார். எனது அவதானிப்பு உண்மையாய் இருக்குமோ?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.