Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kadancha

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kadancha

  1. முதலில், இதை நம்புவது, நம்பாதது உங்களின் விருப்பம். நேரடியாக அல்ல, அந்த நேரத்தில் பகிரங்கம் என்று சொல்ல முடியாது, நம்பிக்கை உள்ள துறைசார் இதழ், சஞ்சிகை போன்ற ஊடகத்தின் அச்சு பதிவின் வழியாக நான் அறிந்தது.
  2. இந்தியாவில், அரசியவாகி / மந்திரி கொண்டுவரும் கொள்கை , மற்றும் முடிவுகளை, அவர்கள் விரும்பிய மாதிரி கொண்டுவர, செயற்றப்படுத்த முடியாமல் போவதை, பிரச்சனை வரும் பொது அருமையாக காணலாம். (ஏனெனில், அந்த அதிகாரம் வெளியில் தெரியாமல் பிரோயோகிக்க படுவது) மிகவும் அரிய, மிகுந்த உணர்த்திறனான சந்தர்ப்பங்கள், இதை ஓரளவு வெளிப்படையாக காண்பதற்கு. ஈழத்தமிழர் (குறிப்பாக புலிகள்)ஆதரவாளர் George Fernades (தனித்த சந்திப்புகளில் தமிழருக்கு அரசு என்பதுடன் இணங்கியதாக) அதிகாரத்தில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தும் கொள்கையை மாற்ற முடியவில்லை. ஆனல், George Fernades, ஒரு பேச்சில் சொல்லி இருந்தார், ஒரு குடும்பம் இந்தியாவின் கொள்கையை தீர்மானிக்க முடியாது என்று (எந்த குடும்பம் என்று எல்லாருக்கும் தெரியும்). அப்போது அந்த குடும்பம் பதவியி இல்லை. அந்த குடும்பம் பற்றி அக்கறை உள்ள வேறு ஏதோ அதிகார பீடம் (முன்பு சொன்னது போல இந்த அதிகார பிரயோகம் வெளியில் தெரிவதில்லை), George Fernades ஐ தடுத்து , அப்படியே Fernades அடங்கிவிட்டார். (George Fernades வெளியில் இருந்து அடங்கி இருந்த்த்தால் சொல்லாம் மிரட்டப்பட்டார் என்று. ஆனால், பாதுகாப்பு அமைச்சராக அடங்குவது என்பது உரிய அதிகாரத்தால் மாத்திரமே முடியும்.) (ஆனால், George Fernades தான் புலிகளில் ஓயாத அலைகள் நடவடிக்கை ஆயத்தப்படுத்தலில் இந்திய கடற்படை பார்த்தும் பாராமல் இருப்பதை வசதிப்படுத்தினார் என்ற ஒரு நம்பிக்கையும் இருக்கிறது. அனல், அது கொள்கை அல்ல, அமைத்திடம் இருக்கும் தந்திரோபாய அதிகாரம்.) இப்படி சுப்பிரமணிய சாமியும் ஓர் பேட்டியில் உணர்ச்சி வசப்பட்டு, வாய் தவறி, இதை போன்ற ஒரு கருத்தை சொல்லி இருந்தார், அவரரிடம் கேட்கப்பட்டது, (அந்த குறிப்பிட்ட ஈழத்தமிழர் விடயத்தில், அது இப்பொது எனக்கு நினைவில் இல்லை, அது கொள்கை சம்பந்தப்பட்ட விடயம்) இந்தியாவில் அதிகாரத்தில் மத்தியில் உள்ள அரசியல்வாதிகள் கொண்டுவந்தால் செய்யலாம் தானே என்று. அதற்கு சுப்பிரமணிய சாமி சொன்னது அப்படி கொண்டு வந்தாலும் நாங்கள் தடுப்போம், அதற்கு அதிகாரம் இருக்கிறது என்ற தோரணையில். அந்த பேட்டியை எடுத்த நிருபர், முதல் கேட்ட கேள்வி, நீங்கள் (சுரப்பிரமணிய சாமி) சொல்லும் அந்த "நாங்கள்" யார் என்று சுப்பிரமணிய சாமியிடம். அதை சமாளித்து , ஒன்றும் சொல்லாமல் கடந்து சென்றுவிட்டார். (னவே பகிரங்க அதிகார பீடங்களை விட வேறு எதாவது அதிகார அமைப்பு இருக்கிறதா கொள்கை ஆக்குதல் , முடிவு எடுப்பதில் என்ற கேள்வியும் இருக்கிறது. (ஏனெனில் யாப்பு மந்திரி / அரசியல்வாதி மட்டும் தான் அன்றி அதிகார தரப்பின் சம்மதமும் வேண்டும் என்ற கருத்து பட இருப்பது, அதுவும் சூட்சுமமாக இருப்பது. அதை எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்பது பற்றி யாப்பு சொல்லவில்லை)) எமது யுத்தத்தில் அமெரிக்காவால் வெளியில் தெரிந்தது, அதிகாரிகள் கொள்கை ஆக்குகிறார்கள், முடிவு எடுக்கிறார்கள் என்று. இதில் வேடிக்கை, மக்களால் தேர்ந்து எடுக்கப்படாத அதிகாரிகள் (நாராயணண், மேனன்) , முடிவுகள், கொள்கைகள் பற்றி மக்களால் தேர்ந்த்து எடுக்கப்பட்ட மாநில அரசியல் தலைமையான கருணாநிதிக்கு எதிர்க்காமல் போகுமாறு வலியறுத்தியது. கிட்டத்தட்ட அவர்கள் சொல்லியது, fall in line or else என்பது. இதன் (அதிகார) தாக்கம், விளைவு புரியாததே, பொத்தாம் பொதுவாக கதைப்பது. எதை கதைக்கிறோம், ஒப்பிடுகிறோம் என்று தெரியாமல். (அனால், மத்திய அரசியல் தலைமையும், அதிகார பீடமும் ஒரே முடிவில் இருந்தன) (இங்கே பொத்தாம் பொதுவாக சொல்லுபவர்கள் இந்தியாவை, அதன் அதிகார அமைப்பை பற்றி அறியாமல், சும்மா கதைப்பது.)
  3. மார்க் கானி, பல சந்ததிகள் கடந்த இங்கிலாந்து அரச குடும்ப இரத்த உறவு நீட்சி தானே. உரியவருக்கு தான் ஆட்சி கையில் வந்துள்ளது, முடி வழியாக அன்றி சனநாயகம் வழியாக.
  4. மேற்கு ஊடகங்கள் தவறான பிரசாரத்தை செய்கின்றன. இந்த பகுதிகள், சீனாவில் தேசியவாத அரசர்கள் இருக்கும் போதே உரிமை கொண்டாடின. அப்போது அது எல்லா மேற்கு அரசுகளும் உண்மையில் ஏற்பாக இருந்தது, ஏனெனில் சீன அரசு, அரசாங்கம் அவர்களின் பக்கமும், அவர்களின் செல்லவாக்குக்கு கீழும். சீனாவில், கம்னிஸ்ட் மோவோ தலைமையில் ஆட்சியை பிடித்தவுடன், மேற்கு நிலைப்பாடு மாறியது. எனவே, சீன நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. UNCLOS ஐ சீன ற்றுக்கொண்டதாயினும், இந்த பகுதிகளுக்கு அதில் இடம் இல்லை என்றே அதன் நிபந்தனை. மேட்ற்கு அரசுகள் அவற்றின் வழமையான நிலைப்பாட்டை மாற்றம் திருகுதாளத்தை விடுகின்றன, அனால், சேனா அதை அசட்டை செய்யும் பலம் உள்ளது. இது வெப்பியாரமாகமாக இருந்து குமுறுகிறது மேற்கு அரசுகளுக்கு.
  5. நான் ஒருவரிடமும் எதுவும் எதிர்பார்ர்ப்பது இல்லை. இங்கு மற்றவர்கள் சொல்லுகிறார்கள் என்று சொல்லியதும் நீங்கள் தான். ஒவ்வொரு அரசுக்கும் தனித்துவ தன்மை இருப்பது கூட புரியாது / தெரியாமல், புடிச்ச பிள்ளையார்களாக இருக்கும் அந்த அரசுக்களை (இந்தியா, சீன) பற்றி புரிவதை விலத்தி அல்லது தவிர்த்து, பொத்தாம் பொதுவான தியரியை வகுத்து, மேற்கு அரசுகளை மையமாக வைத்து உலகம் சுற்றி, அன்றைய மார்கிரெட் தட்சர் சொன்னது என்று சொல்லி, ஆனால் இன்றைய மேற்கு ராஜதந்திரிகள் (அரசியல்வாதிகல் சூட்சுமமாக) சொல்லுவதையும் ம் தவிர்த்து ... (எனக்காக) காலில்லா முயல் பிடித்தது நீங்கள்; ஓடாது. (வாதம் என்று சொன்னாலே எப்போதோ உங்களின் கதை அடிபட்டு போய்விட்டது). இந்த விடயத்தில், இந்தியா, சீன பற்றி உள்ளதை, யதார்த்தத்தை நான் சொன்னால் போதும், அதுவே நான் சொல்லியது. தேவையான அளவு விபரங்கள் (அக்கறை உள்ள எவரரின் மேலதிக தேடுதலுக்கு) விடயத்தில், எவ்வாறாயினும் இவை யாப்பால் உருவாகிய, இருக்கும் யதார்த்த அரசு / அரசாங்க நடைமுறைகள், இயங்கு முறைகள் இந்தியாவுக்கு, சீனாவுக்கு (அதுவும் 2 யாப்புகள் வழியாக, அரச அமைப்பு யாப்பு, cpc யாப்பு, இவை இரண்டுமே சீன அரசை / அரசாங்கத்தை நியாயாதிக்கபடுத்தி இயக்குகிறது). மற்றது இது பொதுவாக அக்கறை உள்ளவர்களுக்கு பதிவது.
  6. பொதுவான பதிவு முதலில் இந்திய ஜனநாயகத்தையும், மேற்கு ஜனநாயகத்தையும் ஒப்பிடுவது பொருத்தமும் அல்ல, தவறும் கூட. ஏனெனில் மேற்கு சனநாத்துக்கும், இந்திய சனநாயகத்துக்கும் உள்ள பாரிய வேறுபாடு, மக்கள் ஒரே தன்மை இல்லை, வேறுபாடுகள் இரத்த களரிக்கு இடடு செல்லும் நிலைமை, (பொதுவாக இப்பொது நிலம்கீழ் சென்று விட்டது, அனால், அவ்வப்போது மேல் வருகிறது) அரசியல்வாதிகளுக்கு அவர்கள் பிரபலமாக பெரிய தொகை மக்கள் விரும்புவதை கொண்டுவரலாம், அது அரச, தேசிய நலனுக்கு பாதகமாக இருந்தாலும். முக்கியமாக அமைச்சர் கொண்ட வருவது தனிப்பட்ட (அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில்). ஆனால் அதிகார பீடம் இணக்கம் , நிராகரிபு, மாற்றம், மாற்றீடு போன்றவை குழு முடிவு. எனவே முடிவு எந்த ஒரு பக்க மக்களுக்கு சாதகம், வேறு பக்க மக்களுக்கு பாதகம் ஆக இருப்பதத்திற்கு வாய்ப்புகள் மிக குறைவு. அத்துடன் அரச சேவை பயிற்றுவிக்கப்படும் விதமும். இந்தியா அரச சேவைக்கு எடுபடும் போதே அரைவாசி - முக்கால் வாசி பேதங்கள் அகன்று விடும், வெளிவரும் போது இந்தியா அரச, தேசிய நலன் மட்டுமுமே அந்த அதிகார பீடத்தின் மூச்சு, மனம், மதியாக இருக்கும். வரலாற்று காரணம் காலனித்துவ (பிரித்தானிய கொண்டுவந்த) சேவையில் தொடங்குகிறது. (விதிவிலக்குகள் இருக்கலாம்) அது போல, அந்த அதிகார பீடமும் அதிகாரத்தை துர்பிரோயோகம் செய்யாமல் இருக்க, அதிபர் ஒழுக்காற்று மற்றும் நீக்குவதை செய்யலாம். மந்திரிகள், பிரதமர், அதிபர் இலாகா ஊடாக அதன் அப்படியான செயற்பட்டுக்கு விண்ணப்பிக்கலாம். வற்றை கருத்தில் கொண்டும் அம்பேத்கார் வடிவமைத்தது யாப்பை.
  7. தெரியாவிட்டால் விடுங்கள். இது இந்தியா அரசை பற்றியது, எங்கு சென்றாலும் அதுக்கு ஒப்புமை காண முடியாது. அங்கு சென்று, இங்கு சென்று, சதிக்கதை என்று ... தவறாக திரிக்க தேவை இல்லை. தான் திரிப்பதை மற்றவர்கள் செய்தது என்று சொல்வது சீனாவை பற்றி மேற்கு ஊடகங்கள் சொல்லுவதை பிரதி செய்வது. சீனாவின் பார்வையில் எல்லோருமே அதிகாரிகள் அந்ததந்த தரத்தில். சீனாவை பற்றி தெரியாமல் கதைப்பது வசதிக்காக. அதன் அடிப்படை அமைப்பே திறமையான பணியாளர்களை, ஊழியர்களை selective - elective ஆக பொறுப்புக்கு கொண்டு வருவது. காங்கிரஸ் தேர்தலில் ல்லியது சீர்த்திருத்தம். தாராளம் என்பதோ திறந்த என்பதோ (இதுவல்ல இப்போதைய பொருளாதரமும்) என்றோ காங்கிரஸ் சொல்லவில்லை. (இப்போதைய பொருளாதாரம் தாராளம் உள்ள, மூடிய அமைப்பு சாய்ந்த பொருளாதாரம்) காங்கிரஸ் முதல் கட்டத்தில் (ராஜீவ் இருக்கும் பொது நடந்த தொகுதிகளில்) முற்றாக அடிபட்டு போய்விட்டது (உண்மையில் என்ன காரணம் என்று தெரியாவிட்டாலும், பொருளாதாரம் முக்கிய காரணம்) ராஜீவுக்கு (இறப்பின்) பின் நடந்ததில் கணிசமான வெற்றி பெற்றது. 1991 காங்கிரஸ் அரசாங்கம் சிறுபான்மை அரசாங்கம். (1991 மறக்க முடியாது சில காரணகளுக்காக) ஆம், காங்கிரஸ் பொருளியல் வல்லுனரை உள்ளுக்கு கொண்டு வந்தது, சுமுகமாக நடப்பதற்கு. அனால். அவருக்கு அதிகாரம் இல்லை தேர்தலில் சொன்னதை தலைகீழாக மாற்றுவதற்கு. அதுவும் சிறுபான்மை அரசாங்கத்தில். (அனால், இதில் சிறுபான்மை / பெரும்பான்மை அரசாங்கம் என்பது 2ம் பட்சம். பெரிய கொள்கை மற்றம் அல்லது மாற்றீடு என்பதே பிரச்சனை). அந்த நிலையில், அதிகாரா பீடத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அதுவே பாவிக்கப்பட்டது. அது வெளியில் தெரியாது தான். மாறாக, எந்த அரசியல்வாதி/ மந்திரி கொள்கை வந்தாலும், அந்த அதிகார பீட இணக்கம் இல்லாமல் வரமுடியாது. திருத்தம், மாற்றம், மாற்றீடு செய்ப்படும். உதவியா வழங்கப்படும், யாப்பு அப்படியான நிலையில் வைத்து இருக்கிறது மந்திரிகளை. ஆனால், மேற்கு சொல்வது என்ன இந்திய அரசை பற்றி - complex democracy. ராஜதந்திரத்தில், அரச கலையில் complex என்பதன் அர்த்தம் தெரியாத கதை. இந்தியாவுக்கு (சீனாவுக்கும்) பொத்தாம் பொதுவான ஒப்புமை, அது தவறான ஒப்புமை என்று கூட புரியாமல்.
  8. சொல்லுவது நடைமுறை யதார்த்தம் (இதில் இந்திய அரசை பொறுத்தவரை). பொத்தாம் பொதுவானா தியரி அல்ல. மன்மோகன்சிங் கொண்டு வந்ததே அந்த அதிகார பீட அதிகாரம் பாவிக்கப்பட்டதால். மன்மோகன்சிங் தேர்தலில் அதிகாரத்துக்கு வந்த அரசியல்வாதியாக அல்ல அந்த கொள்கை மாற்றீடு செய்தது (செய்து இருக்கவும் முடியாது என்பதும், ஏனெனில் தேர்தலில் அது இல்லை). (அந்தஅதிகார பீடத்துக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது, தேர்தலால் அல்லது மந்திரிகள் கொண்டுவரும் கொள்கைகளை நிராகரிக்க, மாற்ற, மாற்றீடு செய்ய, அல்லது அதிகார பீடமே கொள்கையை வகுக்க.) (முன்பு சொன்னது போல மன்மோகன்சிங் இருந்தது வசதி) சுருக்கமாக இந்திய அரச தனித்துவம். வெளியே தெரியாத அதிகாரம். (மற்றது, இப்படி நடப்பது குறைவு, ஏனெனில், அரசியாதிகள் / மந்திரிகள் கொண்டுவரும் கொள்கை பொதுவாக அந்த அந்த அதிகார பீட கொள்கை சிந்தனையோடு ஒத்து போவது. அப்படி நடந்தாலும் வெளியில் வராது. அந்த அதிகாரபீடம் கிட்டத்தட்ட கொள்கை காவலர்கள் என்று சொலலாம்.) ஒரு சரத்தை மட்டும் முடிவுக்கு (எந்த யாப்பிலும் ) முடிவுக்கு வருவது சரியான முறையா என்பதை சொல்லுங்கள் யாப்பில் சற்று சிறப்பு தேர்த்தி உங்களுக்கு இருந்தால்; இல்லாவிட்டால் உள்ளவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள். மற்றது யாப்பில் மொழியால், தொனியால் வரும் அதிகாரங்கள். மற்றது எந்த (சிறப்பு) அதிகார பீடத்தின் உருவெடுக்கும் வரலாற்று பாரம்பரியமும்.
  9. தேவை இல்லை. நீங்கள் சொல்லும் அடிப்படை, மேற்கு, இந்திய அரசு சனநாயகம், பொருளாதாரம் எல்லாம் பெரும் போக்கில் ஒரே தன்மை உள்ளவை என்ற அடிப்படையில். பெயர்களை வைத்து முடிவுக்கு வருவது, உங்கள் புரிதல் அவ்வளவு தான், முன்பே சொல்லியது போல மேலோட்டமான புரிதல். அது தான் ias (அல்லது அதன் ஒப்பான மற்ற சேவைகளின் இன் இந்த அதிகாரம்), வெளியில் தெரியாத அதிகாரம். (அனால், அதன் பொறுப்பு சொல்வது, அரசியல்வாதிகளிடம்.) நேரு அணிசேரா கொள்கையை உருவாக்கினார் என்றால், 1991 சோவியத் அகன்று, 30 வருடம் கடந்த பின்பும் இந்தியா அரசின் கொள்கையில் மற்றம் இல்லை. அனால், பொருளாதார கொள்கை (போக்கு) மாற்றப்படுகிறது, 1991 இல். ஏன்? இது தான் உங்களின் மேலோட்டமான புரிதல்.
  10. (உங்களை போன்றோருக்கு சொல்வது தான் நேரம் வீண். (ஏனெனில்,உணர்வு அடிப்படையில் பார்ப்பது)) ஆயினும், மற்றவர்கள் இதை உணர்வு இன்றி, ஆய்வி நிலையில் பார்க்கப்பட வேண்டும், புரியப்பட்ட வேண்டும் என்பதால். நிச்சயமாக , திராவிட மாடல் தான் என்றால்,கேரளாவில், கம்யூனிஸ்ட் எவ்வாறு வளந்தார்கள்? வெளிப்டையான, எதிர்மாறு. திராவிடத்தை கைவிட்டா, அல்லது எதிர்க்கும் போக்கு கொண்ட, மற்ற தென்மாநிலங்கல் எவ்வாறு வளர்ந்தன? பொதுவாக, வடக்கு, மத்தி மாநிலங்களை விட, அபிவிருத்தி சுட்டி தென்மாநிலங்களில் கூட, ஏன்? ஆகவே, எதோ ஒரு பொதுவான சமூக,பொருளாதார அமைப்பு இழை ஓடி உள்ளது இந்த தென்மாநிலங்களிலும், வேறான (அமைப்பு பிரச்சனைகள்) வடக்கு, மத்தி மாநிலங்களில்,ஏனெனில்,ஒரே மத்திய கொள்கை கீழ் இருப்பதால். (எனவே திரவிட மாடல் என்பது காகம் இருக்க பனம் பழம் விழுந்த கதை) பிகார் போன்ற வடக்கு, மத்தி மாநிலங்களில் இருப்பது, அமைப்பு அடிப்படையிலான பொருளாதார,சமூக அமைப்பு பிரச்சனை, முக்கியமாக காணி உரிமை பரம்பலில், மற்றும் கல்வியை மதிக்காமை (அதனால் கல்வி அறிவு வளராமையும்) போன்ற பிரச்சனைகளும். இதை தென்மாநினலன்கள் 60/ 70/ 80 ளில் சீரமைப்பு செய்தன. அதனால் தான் , 1991 தாராளமயா சாய்வு கொள்கைகள், பிகார் போன்ற மாநிலங்களில் அவ்வளவு மாற்றத்தை கொண்டுவரவில்லை, அரசியல் கட்சிகளும் (அவற்றை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும்), அப்படி முழுமையாக ஏற்றுக்கொண்டு இருந்தாலும் வளர்த்தியை கொண்டுவந்து இருக்க முடியாது. ஆயினும், பொருளாதார வளர்த்தியில் குறுக்கு பாதை இல்லை. இப்போது, பிகார் அந்த சீரமைப்பை கையில் எடுத்து இருக்கிறது. ஆயினும், இவை சந்ததிகள் காலம் செல்லும் விளைவு தெரிய. (ஆனால், மத்திய கொள்கை அளவில் ,அவற்றின் பிகார் போன்ற மாநிலங்களில் அமைப்பு சரி, ஏனெனில் புனல் போன்ற (பொருளாதார) கொள்கை அமைப்பு இருப்பதால், மத்தியில் தளர்வு, தாராள மய சாய்வு, மாநிலங்களில் அதை விட இறுக்கம்)
  11. பொருளாதரத்தில், மாநில நிர்வாகம் பெரிதாக மாற்ற முடியாது, (கொள்கை) போக்குக்குள் இருக்க வேண்டும். (அனால் , எந்த மாநில அரசியல் வாதிகளுக்கும் போக்கை மாற்ற வேண்டும் என்பது தேவை இல்லை) அனால், 2015 இல் மோடி, மாநிலங்களுக்கும் கொள்கை அமைப்பில் இடம் கொடுக்க வேண்டும் என்று, NITI Aayog (இதை policy commision என்றே வெளியில் சொல்வது) என்பதை உருவாக்கி இருக்கிறார். ஆயினும், முடிவு அந்த அமைப்பிடம்தான். இதன் அடிப்படை காரணம், இந்தியா மத்திய அரச அமைப்பு, அதாவது அரச இயந்திரம் கிட்டத்தட்ட ராஜ் (அதாவது முடி) என்ற வகிபாகத்தை எடுத்து கொண்டது, முக்கிய சனநயாக நடைமுறைகளுடன். பொருளாதாரத்தில், licensing ராஜ் என்றே இருந்தது வியாபாரம், தொழிற்றத்துறையை தொடங்குவதற்கு (அதில் 80 அதிகார பீடங்களிடம் அனுமதி வாங்க வேண்டும்) , 1991 இல் தாராளள மாயா போக்கில், இது 5-6 துறைகளை தவிர மிகுதி எல்லா துறைகளுக்கும் இல்லாமல் செய்யப்பட்டது. ஆயினும், அதுக்கான மாற்றீடு licensing முறையும் வந்தது வேறு பல அம்சங்களும் (குறிப்பிட்ட அதிகாரத்தின் பெயர்) ராஜ் இப்போதும் இருக்கும் என்றே நினைக்கிறன். மற்றது ias / ifs/ ips / irs ... அதிகாரிகளை நீக்குவது மிகவும், மிகவும் கடினம், அதிபருக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது. இவை எல்லாம் ஒன்றாக சேரும் போது, IAS அதிகாரிகள் கொள்கை முடிவு எடுக்கும் நிலைக்கு வருகிறார்கள். (அனால், இதை அமெரிக்கா தூதவர்களும் அவதானித்து குறித்து உள்ளார்கள்,எமது யுத்தம் நடந்த போது, அதாவது அதிகாரிகள் கொள்கைமுடிவு எடுக்கிறார்கள் என்று. சிவசங்கர் மேனனின் நூலில், இந்தியா கொள்கை முடிவு எடுத்ததாக, அனால் எடுத்து உண்மையில் யார்?)
  12. மேலோட்டமான புரிதல், ஹிந்தியைன் பொருளாதரத்தை பொறுத்தவரை. அப்படி அரசியல் வாதிகள் செய்ய முடியும் என்றால், 1991 க்கு முதல் , ஏன் தென்மாநிலங்கள், (இலங்கையில் வந்த ஒப்பிட்டளவிலான தாராளமயத்தை, அந்த போக்கை ) கொண்டு வர முடியவில்லை, வளர்த்தி வேறுபாடுகள் தெரிந்தும்? ஆனால், முயன்றன தென் மாநில அரசியல் கட்சிகள். அதே போல, 1991 தளரமயம் வந்ததும் அரசியல் வாதிகளால் அல்ல. 1991 balance of payment பிரச்சனையால். ஆனால், மன்மோகன்சிங் பொருளியல் துறை நிபுணராக இருந்தது வாய்ப்பாகியது. மன்மோகனின் பேச்சை பார்க்கவும், போக்கையே மாற்றுகிறோம் என்பது. (கொங்கிரஸ் சொல்லி இருந்தது சீரமைப்பு, போக்கை மாற்றுவது அல்ல).
  13. தேசிய கொள்கைகள் அல்ல. மாநிலக் கொள்கைகள். IAS என்ற படியால் தான் கொள்கை தொடர்ச்சி. அப்போது எப்படி சில மாநிலங்கள் பிந்திய வளர்ச்சி - மாநிக்க கொளகைகள் மாற பிந்தியது. ஏற்கனவே சொல்லவிட்டே சிறு மாற்றங்களை செய்யலாம். போக்கில் மாற்றங்களை செய்ய முடியாது. அனால் தேசிய பொருளாதார கொள்ககைகளை வகுப்பதும் ias தான். கொள்கை வகுப்பு முறை மத்தியில் இருக்கும் அமைப்பு முறையே மாநிலத்திலும் இருக்கிறது. பெயர்கள் வேறுபடலாம். (உண்மையில் கிந்தியா யாப்பின் படி மாறி, IAS வேண்டுமாயின் மாநில அரசியல்வாதி கொள்கைகளை தடுக்கலாம். இது அம்பேத்கா ர் சாதி கொடுமையை பார்த்து செய்தது. மொழியில் அதிகாரத்தை பரவல் ஆக்குவதாகவும், வேண்டுமாயின் மத்தி மாநிலத்தை தடுக்கலாம் என்றும்.)
  14. அனால், திராவிட காட்ச்சிகள் இருந்ததால் (பெரும்பாலும்) வரவில்லை. எந்த கட்சி ஆட்சிக்கு வந்த இருந்தாலும் இந்த வளர்ச்சி வந்து இருக்கும். ஏனெனில், தமிழ் நாடு நிர்வாக சேவையே கொள்கைகளை வகுப்பது, ஆட்சிக்கு வரும் கட்சிகள் அங்கங்கே சிறு மாற்றங்களை செய்யலாம். முக்கியமாக கொள்கை தொடர்ச்சியை பேணுவது, தமிழ் நாடு நிர்வாக சேவை. உதாரணம், சமூக பாதுகாப்பு, 70 கடைசியில், 80 தொடக்கம் வேலையில்லா திண்டாத்திலும், பேணப்பட்டது. அது மிக முக்கியமானது, இப்போதைய வளர்ச்சியில். அனால், பொதுவாக, ஒரு சில கட்சிகளை தவிர. கேரளாவில் கம்யூனிஸ்ட் கூட, 1991 தொடங்கிய தாராளமயம் சார்ந்த பொருளாதார கொள்கையை ஏற்றுக் கொண்டன என்பதும்.
  15. சும்மா வாய்ப்புளிகுது என்பதுக்கு சப்புக் கொட்டும் கதை, நிலம் திருடும் கூட்டத்தால். லாஸ்தீன அரசு / தனிநாடு எங்கு இருப்பது? dead sea இல். (செய்ய வேண்டியது, இரான் அணுஆயுதத்தை தயாரிக்கும் நிலையில் இருக்க வேண்டும் எனபர்ஹி ஏற்றுக்கொள்வது, அங்கீகரிப்பது. ற்ற அரபி கள்ளக்க்கோட்டம் ஒன்றும் வாளா இருந்தாலும், இரான் பலஸ்தீன படையை வளர்த்து விடும்.) இது சொல்லப்படுவது, ஈரான் மீது தாக்குதல் நடத்த மற்ற நாடுகள் அங்கிருக்கும் படைத்தளத்தை பாவிக்க தடுக்காமல் இருபதற்கு. மற்ற நாடுகளையும் கூட்டு சேர்ப்பதத்திற்கும் இருக்கலாம்.
  16. இது இப்படியே தொடர்ந்தால், அமெரிக்கா, தென்னமெரிக்கா, கனடா / eu, ருசியா மற்றும் மத்திய ஆசியா, சீன, asean , கிந்தியா/ தென்னாசிய, சீன, ஆஸ்திரேலியா/ நியூஸிலாந்து/ பசிபிக், ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு என்று பிரியும் தன்மை. பின்பு அவற்டறகுக்கு உள்ளேயும் பிரிவு, வர்த்தகத்தில், ஏற்றுமதி / இறக்குமதி வரிகளால். மேற்றகில், இப்போது பல அன்றாட மின்சாதன மற்றும் வேறுபல பொருட்களுக்கு, மானியத்தில் இருபவக்களை தவிர (பல பொருட்களை மானியத்தில் இருப்பவர்களும் 1-3 மத சேமிப்பில் வாங்க கூடிய தாராள நிதி, விலை தன்மை இருக்கிறது), சேமித்து தான் வாங்க அவசியம் இல்லை. அந்த நிலை, சேமித்து தான் அங்க வேண்டும் என்ற நிலை வரலாம். ஏனெனில், அததற்கான நிதி வழங்கல் நிலையும் (தவணையில் கட்டுவது) போன்றவை உருவாகவும், இந்த தளர்த்தலே (பொருளாதார தாராள தன்மையின் ஒரு பகுதியாக) காரணம் இங்குள்ள சிலரேமேற்றகில் அந்த சேமித்து தான் வாங்க வேண்டும் என்ற நிலையை அனுபவித்து இருப்பார்கள். த்துடன், இதன் தாக்கம் ஒருவராலும் சொல்ல முடியாது, ஏனெனில் விநியோக, வழங்கல் சங்கிலியின் நீளமும், சிக்கலும்.
  17. இந்த அரச மர விடயத்தை இங்குள்ளவர்களில் சிலராவது அறிந்து ஏற்கனவே அறிந்த இருப்பார்கள் என்று நினைக்கிறன். இதை பற்றி வேர் என்ஹா திரியிலாவது எதையும் சொல்லி இருக்கிறேனா தெரியாது. இந்த மரம் சிங்களமக்களை ஒருங்கிணைத்து வைத்து இருக்கும் முக்கிய சமய / கலாசார / சிங்கள பௌத்த பண்பாட்டு குறியீடுகளில் ஒன்று, உயிர்நாடி என்றே சொல்லலாம். (ஆனால், சிங்களம் தமிழரின் கலாசாரம், சமய (தலங்கள்) போன்றவற்றில் கைவைப்பதுக்கு முதல் இந்த மரத்தை பற்றி யோசிக்க வேண்டும்).
  18. இதில் jd vance சொன்னதே உண்மையான காரணம் இந்த வரிகளுக்கு, jd vance சொல்லியது, உலகமயமாக்கல், பணக்கார நாடுகள் சிக்கலான அல்லது சிந்தனை வயப்பட்ட தன்மை உள்ள சேவைகள், பொருட்களை செய்ய அவற்றை (வர்த்தக) பெருமானை சங்கிலியில் உயர்த்தும் என்றும், மற்ற நாடுகள் இலகுவாக செய்யக்க்கூடிய பெரும்பாலும் பொருட்களை, சேவைகளை செய்து (பணக்கார நாடுகளுக்கு விற்கலாம் ) என்று எதிர்பார்க்கப்பட்டதாக. அனால், அப்படி நடக்கவில்லை என்று (இது முற்றிலும் சரி அல்ல). அதனால், us வில த்துகிறது என்று. ஆனால், jd vance ஓர் உண்மையை போடு உடைத்து உள்ளார், அதாவது மற்ற நாடுகள் பெறுமான சங்கிலியில் எவ்வாறேனும் உயர அல்லது முயற்சிக்க கூடாது என்பது. இதுவே அடிப்படை பிரச்சனை. இன் உபரி முதல் முடிவு, ஆப்பிரிக்காவை வறுமையில் வைத்து இருப்பதில் மேற்கு பங்கு செலுத்துகிறது என்பது.
  19. நோகாமல் காசுக்கு பார்க்கும் ஆசை எவரை விட்டது? ஆனால், அமெரிக்காவில் இருந்து இஸ்ரேல் க்கு வரும் தனிப்பட்ட பணத்தை விட, கட்டார் கூட கொடுத்து இருக்கும் என்பதும் நம்ப முடியாததாக இருக்கிறது.
  20. இது காட்டுவது, ரஷ்யா மேற்றுகின் ஏவுகணை மற்றும் அது போன்ற தாக்குதல் தடுப்புகளை ஏய்க்கும் அல்லது உச்சும் வகையிலான தொழில்நுட்பத்தை அனுபவத்துக்கு ஊடக வளர்த்து உள்ளது. இங்கு இதைஇந்த சண்டை தொங்கும் பொது எகிர்வு கூறி இருந்தேன், ருசியா இரணிய நிறுவன அமைப்பில் உள்ள ஒழுங்கீனம், குறைபாடுகள், ஊழல்கள் போன்றவை, ருசியா இராணுவ வினைத்திறனை குறைத்து விட்டது. ஆயினும் ருசியா மீண்டு வளரும் வளங்களும், அறிவும், உடற்பதி போன்ற துறைகளும் உள்ளது , சண்டை இழுபடும் என்றால் இதன் சாத்திய கூகள் அதிக என்று. ரசிஸ்யா இப்பொது ராணிவ நிறுவன அமைப்பு இப்பொது கிட்டத்தட்ட இராணுவ நிறுவனமாக, அதிகாரிகள் பணம் கறக்கும் பசுவாக இல்லாமல், சீரமைப்பு நடந்து கொண்டு இருக்கிறது போல தெரிகிறது. வினைத்திறன் கொண்ட, எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லலாத, பொருளாதார துறை நிபுணர், பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட போது மேற்கும், உக்கிரனும் உள்ளுக்குள் புழுங்கி கொண்டன என்பதும் இங்கே குறிப்பிடப்பட வேண்டும்.
  21. இப்படியான தன்மையான போகும், காரணமுமே Brexit சரவசன வாக்கெடுப்பில் ஐ விளிம்பில் Brexit பக்கத்துக்கு புரட்டிட்டியது. அதாவது அந்த சமத்தன்மையான reciprocity uk,eu வில் இணைந்து இருந்த போது இல்லை. வயது வந்தவர்களே பெரும்பாலும் eu இல் அவர்களின் முழுவாழ்க்கை, பெரும்பகுதியை கழித்தனர். eu இல் இருந்து uk க்கு வருபவர்களுக்கு, உடனடியாக ஏறத்தாழ முழு சலுகையும், உரிமையும் (தேசிய வாக்களிப்பில் மாத்திரம் உடனடியாக பண்கேப்பற்ற முடியாது) மானியத்குக்கு கூட 3 மாதத்தில் உரிமை வந்துவிடும். அனால், eu இல் அப்படி இல்லை. ஏன், வருட கணக்கில் வேலை செய்தவர்களுக்கு கூட, uk பிரஷை என்றால், வேலை இல்லாவிட்டால் 3 மாதங்களே இருக்க அனுமதி, மானியமும் இல்லை. நான் அறிந்த ஜெர்மனி, பிரான்ஸ் இல் வேலை இழந்த 2 ceo க்கள், நாடுகடத்தப்படாத குறையாக uk திரும்பினர் அவர்களுக்கு UK உம் உடனடியாக மானியம் கொடுக்கவில்லை, ஏனெனில், eu இல் அவர்களின் பங்களிப்பு குறிப்புகள், தொகைகள் UK க்கு மாற்றப்பட ஏறத்தாழ 1 வருடம் எடுத்தது என்று. அந்த 2 ceo க்களின் தேடுதல் அனுபவத்தில், uk பிரசைகள் எவர் என்றாலும் இவ்வாறே நடத்தப்பட்டனர். eu இல் இப்படியான அனுபவங்களே எந்த அரச / பொது சலுகைகள், வசதிகள், சேவைகள் போன்றவற்றில் uk பிரசை என்றால். பிரெக்ஸிட் இல் பிரச்சாரம் ஒருபக்கம் என்றாலும், eu நாடுகள் கொடுத்த நேரடியான அனுபவங்களே பிரெக்ஸிட் பாகம் தள்ளியது. அதாவது வாக்காளர் தெரியாமல், மூளைச்சலவை செய்யப்பாட்டு தவறுதலாக வாக்களித்து விட்டனர் என்பது பெரும்பாலும் தவறான கருது ஆகும்.
  22. இது போன்றவற்றை தான் ஈரான் இரணவதுரையின் தவறான அணுகுமுறை.
  23. தடியால் அடிப்பது சட்டப்படி குற்றம் என்றால், எவ்வாறு இப்போதும் தடி வகுப்பறையில் வைத்து பேணப்படுகிறது? அல்லது எப்படி தடி ஆசிரியரின் கைக்கு அந்தத்தருணத்தில் கிடைத்தது?
  24. இது பொதுவான பதிவு. அமெரிக்கா சொல்லுவது பொய். இல்லை, உண்மையில் ஈரானுக்கு அதன் இருப்புக்கு மிகவும் பாரிய அச்சுறுத்தல். பக்கத்தில் பாகிஸ்தான், அயலில் இஸ்ரேல், சற்று தூர அயலில் கிந்தியா, இதை விட, அமெரிக்கா, மேற்கின் அணுஆயுத நீர்மூழ்கிகள் இதை விட மேற்கு சதாமை கொண்டு இரசாயன மாறும் உயிரியியல் ஆயுதங்களை பிரயோகித்தது. அதன் முதல், 1953 இல் ஈரான் எண்ணெய்யை தேசியமயப்படுத்தியதை அடுத்து, அங்கு தேர்தல் மூலம் வந்த அரசை கவிழ்த்து, அவர்களுக்கு மசியக்கூடிய தோற்றம் கொண்டிருந்த ஷாவை (மகன்) கொண்டு வந்தது. அனால், இறுதியாக ஷாவும் அப்படியான முடிவுக்கு வந்து இருந்தார், opec உதயமானது. எந்த தன்மை அரசாங்கம் ஈரானில் இருந்தாலும், அணுஆயுதம் வைத்துக்கருக்க வேண்டியது, இரான் அரசு அதன் மக்களுக்கு செய்யும் அடிப்படை பாதுகாப்பு சேவை. அமெரிக்கா சொல்ல்வது,அணுஆயும் மட்டும் அல்ல. முழு அணுத்துறையை ஈரான் கைவிட்டு எல்லாவற்றையும் தாமிடம் ஒப்படைக்க வேண்டும் , மேலும் மரபுவழி ஏவுகணைகளை ஆராய்வு, உடற்பதி செய்வதை நிறுத்தி, அவற்றையும் ஒப்படைக்க வேண்டும். எந்த அரசாவது இதை செய்யுமா? ருசியா, சீன போட்ட முதல் முட்டு, அணுஆயுத விடயத்தில் மற்ற விடயங்கள் உள்ளடக்கப்படாது என்பது. எனவே, டிரம்ப் / அமெரிக்கா இப்போது சண்டைக்கு போகவேண்டிய நிலை. (எம்மில் சிலரின் அச்சறுத்தல் பார்வை, மேற்கிடம் கிட்டத்தட்ட ஸ்டாக்கோம் சின்ரோம் ஏற்படுத்ப்பட்ட பார்வை, அதாவது மேற்றகில் உள்ள எமது இருப்பால், மேற்கு சொல்லுவதை அனுதாபத்துடன் பார்ப்பது. அது தவறில்லை. ஆனல், அதே நிலை ஈரான் அரசு, மக்களுக்கும் இருக்க கூடாது என்ற மேற்கின் வாதத்துடன் ஒத்து போவது) ஈரானுக்கு மேற்கு செய்தது, ஈரானின் முக்கிய வரலாற்று திருப்பங்கள் இந்த வீடியோ இல் இருக்கிறது. (இவை ஒரு நூலில் இல்லை, ஆங்காங்கே வேறு வேறு நூல்களில் இருக்கிறது, இது ஒரு தொகுப்பு) உண்மையில் இந்த விடீயோக்கள் நூல்களிலும் பார்க்க சரியான புரிதலை ஏற்படுத்துவது, ஏனெனில், பல்வேறு பட்ட பார்வைகளை கொண்டுவருவது. இதில் பார்த்தால் ஷாவுக்கும், முல்லாக்கல்லுக்கும் அவ்வளவு வேறுபாடு இல்லை. இப்படியாக நவீன வரலாறு கொண்ட நாடு அதன் பாதுகாப்புக்கு அம்மணமாக நிற்கவேண்டும் என்பதே மேற்கு , அமெரிக்கா சொல்வது.
  25. அமெரிக்காவின் வாய்சவாடவல் சரிவராது. டிரம்ப் மற்றும் அவரை சேர்ந்தவர்கல் நினைத்தது ருசியாவை வைத்து சீன, ஈரானை அமத்தலாம் என்று. அனால் , டிரம்ப் இப்பொது உணர்கிறார், ரஷ்யா அப்படியான இணக்கப்பாட்டுக்கு வராது என்றும், அத்துடன் ஈரன், சீனவை வைத்து அமெரிக்காவை பணியவைக்கும் முயதர்சிகள். அனால், இது வெளிப்படை, இதை இங்கு இரு திரியில் சொல்லி இருந்தேன், அதாவது அமெரிக்காவின் ஒப்பிட்டளவிலான மேலாண்மை குறைந்து வரும் போக்கை ருசியா, சீன குழப்பாது. அமெரிக்காவின் நடத்தையால் மட்டும் அல்ல, மேற்கு தவிர்ந்த உலகின் போக்கு இதுவாக இருக்கிறது. ஏனெனில் , முன்பு சோற்றில் இருந்து ஆயுதம் வரை தெரிவு என்றால் மேற்கு, எனவே மேற்கின் குறிப்பறிந்து நடந்தன மற்ற நாடுகள். இப்பொது தெரிவு இருக்கிறது, இதை மற்ற நாடுகள் வேண்டி நிற்கின்றன. ஓர் முக்கிய காரணம், மேற்கின் பொருளாதார தடை, இப்பொது எதிர்பார்த்த விளைவை செய்வது குறைந்து வருகிறது. முன்பு, தொழிநுட்பம் , உற்பத்தி , பணம், வளம், வழங்கல் இதனால் உணவாவு வழங்கல் மீது முழு பிடியை மேற்கு வைத்து இருந்தது, இப்பொது இவற்றில் பலவற்றில் பிடி இல்லை, பணம் மீதும் முழுப்பிடி இல்லை. மற்ற நாடுகள் இந்த போக்கு வேண்டும், வளர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன., ஒரு பகுதியை வைத்து மற்றவர்களுடன் பேரம், மற்றும் அந்ததந்த நாடுகளின் ஒப்பிட்டளவிலான இறைமை போன்றவற்றை இந்த போக்கு அதிகரிகிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.