Jump to content

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    18757
  • Joined

  • Last visited

  • Days Won

    12

Everything posted by ஏராளன்

  1. 17 டிசம்பர் 2023, 14:43 GMT புதுப்பிக்கப்பட்டது 33 நிமிடங்களுக்கு முன்னர் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி ஆகிய தென் மாவட்டங்களில் நேற்று முதல் தொடர் மழை பெய்து வருகிறது. மேலும் இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம். இந்நிலையில் தென் மாவட்டங்கள் பலவற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. சமீபத்தில் தான் மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் அருகில் உள்ள மாவட்டங்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தென் மாவட்டங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பல அணைகள் நிரம்பி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் பிரதான சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஓடி கொண்டிருக்கிறது. படக்குறிப்பு, குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு திருநெல்வேலியில் நிரம்பி வழியும் அணைகள் திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அதீத மழையால் அங்குள்ள பாபநாசம் அணை, மணிமுத்தாறு அணை உள்ளிட்டவற்றில் நீர் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் இங்கிருந்து உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இன்று காலை முதல் நீடித்து வரும் கனமழையால் பிற்பகல் 2 மணி நிலவரப்படி பாபநாசம் அணைக்கு சுமார் 20,000 கன அடி தண்ணீர் வந்துள்ளது. அதேபோல் மாஞ்சோலை மலைப்பகுதியில் கொட்டி தீர்க்கும் கனமழையால் மணிமுத்தாறு அணைக்கு தண்ணீர் வரத்து 17,000 கன அடியாக அதிகரித்துள்ளது. பாபநாசம் அணை 143 அடி கொள்ளவு மட்டுமே என்பதால் ஏற்கனவே அது 85 சதவீதம் நிரம்பிய நிலையில் விரைவில் அது நிறைய வாய்ப்புள்ளது. எனவே பாபநாசம் அணையில் இருந்து தாமிரபரணி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று காலை பாபநாசம் அணையில் இருந்து வெறும் 3000 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்ட நிலையில் தற்போது வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. திருநெல்வேலி நகரம் படக்குறிப்பு, தென்காசியில் மழைநீரோடு கழிவுநீர் கலந்துள்ளது திருநெல்வேலி மாநகரப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. மேலப்பாளையம், பாளையங்கோட்டை மனக்காவலம் பிள்ளை நகர், பெருமாள்புரம், என் ஜி ஓ காலனி போன்ற பகுதிகளில் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. மேலும் திருநெல்வேலி டவுன், களக்காடு, திசையன்விளை பகுதியில் உடன்குடி சாலை, நேருஜி கலையரங்கம் மற்றும் செட்டிகுளம் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இந்த பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மீனவர்கள் வாழ்க்கை ஸ்தம்பித்தது தூத்துக்குடி சாத்தான்குளம் ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தின் முக்கிய பகுதிகள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மற்றும் திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை காரணமாக 2 நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 400 விசைப்படகு மீனவர்கள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள், பைபர் படகு மீனவர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. குற்றால அருவிகளுக்கு செல்ல தடை தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் காலையிலிருந்து பெய்த தொடரும் கனமழையின் காரணமாக திருவேங்கடம் சாலையில் கழிவு நீருடன் மழை நீர் கலந்து வெள்ளப்பெருக்கு போல் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குற்றாலம் மெயின் அருவி, பழைய அருவி, ஐந்தருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. படக்குறிப்பு, கூடங்குளம் அதிகாரிகள் குடியிருப்பில் வெள்ளம் கூடங்குளம் அணுமின் நிலையப் பகுதியில் நிலைமை என்ன? கூடங்குளம் பகுதியிலும் கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், கூடங்குளம் அனு விஜய் நகரியம் வளாகத்திற்குள் வெள்ளம் புகுந்ததால் குடியிருப்பு வாசிகள் அவதியடைந்துள்ளனர். இந்த பகுதியில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணியாற்ற கூடிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் சனிக்கிழமையன்று தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் கொடுத்திருந்த நிலையில், ஞாயிறு(இன்று) அன்று பெய்த கனமழையால் இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு நாட்களுக்கு இந்த பகுதிகளில் மழை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் கொடுத்துள்ள நிலையில் இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு 18ம் தேதியன்று விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தனியார் நிறுவனங்கள் அடிப்படை தேவைகளுக்கு மட்டும் குறைந்த அளவில் பணியாளர்களை கொண்டு இயங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரலாறு காணாத மழை சமீபத்தில் சென்னையில் பெய்த மழையே வரலாறு காணாத மழை என்று வானிலை நிபுணர்கள் கூறியிருந்தனர். இந்நிலையில் தற்போது பாளையங்கோட்டையில் 4.30 மணிநேர நிலவரப்படி 26செமீ மழை பெய்துள்ளது. இதுவே 29ஐ தாண்டினால் கடந்த 150 வருடங்களில் இந்த பகுதியில் பெய்த அதிகமான மழை இதுவே என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் வானிலை நிபுணர் பிரதீப். தென்மாவட்டங்களுக்கு விரைந்த மீட்புக்குழு கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் தூத்துக்குடி மற்றும் தென்காசிக்கு தேசிய பேரிடர் மீட்புகுழு விரைந்துள்ளது. என்டிஆர்ஃஎப் சார்பில் ஒரு அணிக்கு 25 பேர் என்ற கணக்கில் 4 அணிகள் தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. தூத்துக்குடிக்கு சென்றுள்ள அணியே திருநெல்வேலி மாவட்டத்திலும் மீட்பு பணியில் ஈடுபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள், முதலுதவி மருந்துகள், படகுகள், இயந்திரங்கள் என தயார் நிலையில் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மக்களை தங்க வைக்கும் முகாம்கள், மீட்பு பணிகள் மற்றும் தேவையான அவசர பணிகளை தயார் படுத்தி வருகின்றனர். 2 நாட்களில் 50 செ.மீ. மழை பெய்ய வாய்ப்பு தற்போது பெய்யும் மழை கனமழை முதல் அதிகனமழையாக தொடரும் என்று அறிவித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். இதையடுத்து, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் அரசு நிர்வாகம் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க முகாம்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த மழை இன்னும் அதி கனமழையாக உருவாகும் என்றும் செவ்வாய்க் கிழமைதான் இதன் வேகம் குறையும் என்று தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப். அடுத்த 48 மணி நேரத்திற்கு 30 முதல் 50 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்க்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். https://www.bbc.com/tamil/articles/c28y7ygkmk3o
  2. 4-Month-Old Tennessee Boy Survives Being Sucked into Tornado ‘by the Grace of God,’ Mom Says Sydney Moore said her boyfriend attempted to grab the baby as he was being pulled out of his bassinet but got caught in the storm himself By Abigail Adams Published on December 13, 2023 04:39PM EST Trending Vid A destroyed home is seen in the aftermath of a tornado on December 10, 2023 in Clarksville, Tennessee. PHOTO: JON CHERRY/GETTY Family members say a 4-month-old baby somehow survived being sucked into one of the tornadoes that touched down in Tennessee during Saturday’s severe weather outbreak. The mom and her two children were inside their home on Biglen Road in Clarksville when the twister tore through their town, according to a GoFundMe started by the mother’s sister, Caitlyn Moore. Sydney Moore, 22, said she was with her 1-year-old son in the back bedroom of the mobile home when she heard the winds begin to pick up, according to NBC affiliate WSMV. The walls of the home collapsed just as the mom of two jumped on top of her eldest son, per WSMV. Then, Sydney’s boyfriend watched as their 4-month-old baby was pulled out of his bassinet and into the funnel cloud. Tenn. Man Remembered as a 'Hero' After Dying While Protecting His Mother and Son from Tornado The boyfriend tried to grab the sleeping child but was pulled into the twister himself, per the report. Simultaneously, Sydney and her 1-year-old were crushed by their trailer. Sydney and the toddler were somehow able to escape the wreckage, according to WSMV. She initially feared her youngest son was dead, but he was quickly found alive in a fallen tree. "I was pretty sure he was dead and we weren’t going to find him. But he’s here, and that’s by the grace of God," the mom said. Never miss a story — sign up for PEOPLE's free daily newsletter to stay up-to-date on the best of what PEOPLE has to offer, from celebrity news to compelling human interest stories. 10-Year-Old Boy Among 6 Dead After Tennessee Tornadoes: 'Absolutely Devastated,' Says Mom Luckily, Caitlyn said, almost everyone walked away after the twister with minor cuts and bruises, WSMV reported. Sydney’s boyfriend “suffered a broken arm/shoulder," per the GoFundMe. However, the family’s home was completely destroyed, and their car is now a total loss, according to the fundraiser. The tornado also “took all of the formula, diapers, wipes, clothing” and other important belongings. Toddler Found Dead in Mom’s Arms After Tennessee Tornado Flipped Mobile Home, Neighbor Says The mobile home’s rental company “has graciously put them in a hotel for a month” while they piece their lives back together following the deadly storm, Caitlyn said. More than $16,000 has been raised via GoFundMe to support the family following Saturday’s deadly tornado outbreak, which killed six people and injured dozens of others. https://people.com/4-month-old-tennessee-boy-survives-being-sucked-into-tornado-8415631
  3. புயலில் தொட்டிலோடு அடித்துச் செல்லப்பட்ட 4 மாத குழந்தை மரத்தில் தொங்கிய அதிசயம் - என்ன நடந்தது? பட மூலாதாரம்,CAITLYN MOORE/GOFUNDME படக்குறிப்பு, புயலால் தூக்கி எறியப்பட்ட 4மாத குழந்தை மீட்பு 29 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் ஏற்பட்ட தீவிர புயலில் சிக்கிக் கொண்ட 4 மாத குழந்தை ஒன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள அந்த குழந்தையின் பெற்றோர்கள், புயல் தங்கள் வீடு, மொபைல் என அனைத்தையும் அழித்து விட்டதாகவும் தங்கள் குழந்தையின் தொட்டில் புயலோடு சென்று விட்டதாகவும் கூறியுள்ளனர். ஆனால், கடவுள் புண்ணியத்தில் தங்கள் குழந்தை உயிர் பிழைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். கடுமையான புயல் காற்றில் இந்த குழந்தை தொட்டிலோடு சேர்த்து இழுத்து செல்லப்பட்டுள்ளது. பின்னர் வேரோடு சாய்ந்த மரம் ஒன்றில் தொட்டில் மாட்டி அந்த குழந்தை அதில் பத்திரமாக இருந்துள்ளது. அந்த சமயத்தில் கடுமையான மழையும் பெய்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த குழந்தையின் ஒரு வயதாகும் சகோதரன் மற்றும் பெற்றோர்கள் சிறு காயங்களோடு பத்திரமாக உள்ளனர். குழந்தையின் தாயான 22 வயதாகும் சிட்னி மூர் இந்த புயல் தங்களது மொபைல் போன்களை அழித்து விட்டதாக கூறியுள்ளார். புயலில் தொட்டிலோடு அடித்துச் செல்லப்பட்ட 4 மாத குழந்தை “ புயல் என் குழந்தையை தொட்டிலோடு அடித்துச் சென்றுவிட்டது, அந்த சமயத்தில் அவன் அதில் தூங்கி கொண்டிருந்தான்” என உள்ளூர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார் மூர். அந்த குழந்தையின் தந்தை தொட்டிலை பிடிக்க கடுமையான முயற்சி செய்த போதும் தீவிரமான புயல் அதை இழுத்து சென்றுவிட்டது. இதுகுறித்து மூர் கூறுகையில், “குழந்தையின் தந்தை தொட்டிலை தன்னுடைய முழு பலத்தையும் பயன்படுத்தி இறுக பற்றிக்கொண்டிருந்தார். ஆனால், புயல் தீவிரமாக வீசியதில் அவர் கீழே சரிந்து தொட்டில் கையை விட்டு நழுவிவிட்டது” என்று தெரிவித்துள்ளார். அந்த சமயத்தில், தான் தனது ஒரு வயது மகனான ப்ரின்ஸ்டனை இறுக பிடித்து கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார் மூர். “ குழந்தையை காப்பாற்று என்று எனக்குள் ஒரு குரல் கேட்டு கொண்டே இருந்தது. நான் ஓடி சென்று அவனை சூழ்ந்து கொண்ட அடுத்த கணமே மேற்கூரை இடிந்து எங்கள் மீது விழுந்து விட்டது. அதற்குள் நாங்கள் புதைந்து விட்டோம். என்னால் மூச்சு கூட விட முடியவில்லை” என்று கூறியுள்ளார் மூர். பட மூலாதாரம்,CAITLYN MOORE/GOFUNDME படக்குறிப்பு, புயலால் பாதிக்கப்பட்டுள்ள டென்னசி மாகாணம் குழந்தை மரத்தில் தொங்கிய அதிசயம் புயல் கடந்த பிறகு இடிபாடுகளுக்குள் இருந்து ப்ரின்ஸ்டனை மீட்டுள்ளார் மூர். பின்னர் அவரும், குழந்தையின் தந்தையும் இணைந்து இளைய மகனை தேடும் பணியில் இறங்கியுள்ளனர். கடும் மழையில் அந்த குழந்தையை தேடி கொண்டிருக்கும் சமயத்தில் ஒரு மரத்தில் அந்த குழந்தையின் தொட்டில் தொங்கி கொண்டிருந்திருக்கிறது. அதில் குழந்தை உயிருடன் பத்திரமாக இருந்துள்ளது. “என்னால் குழந்தையை உயிருடன் பார்க்க முடியாது, அவனை கண்டுபிடிக்கவே முடியாது என்றெல்லாம் நான் பயந்து விட்டேன், ஆனால் கடவுளின் கருணையில் அவனை உயிரோடு மீட்டு விட்டோம்” என்று கூறுகிறார் மூர். பட மூலாதாரம்,CAITLYN MOORE/GOFUNDME படக்குறிப்பு, தூக்கி எறியப்பட்ட குழந்தை மற்றும் அவனது சகோதரன் புயலால் தங்களது கார் மற்றும் வீட்டை இழந்த மூரின் குடும்பத்திற்கு உதவ மூரின் சகோதரி கெய்ட்லின் கோஃபவுண்ட்மீ (GoFundMe) - ஐ தொடங்கியுள்ளார். மூரும் அவரின் குழந்தைகளும் சிறு காயங்களால் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், குழந்தையின் தந்தைக்கு கை மற்றும் தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் கெய்ட்லின். கோஃபவுண்ட்மீ தகவல்படி, யாரோ மரத்தில் அமர வைத்தது போல இந்த குழந்தை கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஏதோ தேவதை வந்து அவனை மீட்டு அங்கு பத்திரமாக வைத்தது போல் உள்ளது என்றும் அது தெரிவித்துள்ளது. குழந்தை மட்டும் இல்லாமல் போயிருந்தால் என் வாழ்வே மோசமாக போயிருக்கும், குழந்தையின் தந்தைக்கும் இதே நிலைதான் என்று கூறியுள்ளார் மூர். https://www.bbc.com/tamil/articles/cgl4g3e9rkmo
  4. காசாவில் இஸ்ரேலிய படையினர் சினைப்பர் தாக்குதல் கிறிஸ்தவ தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த இரண்டுபெண்கள் பலி Published By: RAJEEBAN 17 DEC, 2023 | 11:58 AM காசாவில் சனிக்கிழமை இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட சினைப்பர் தாக்குதலில் கிறிஸ்தவ தேவாலயமொன்றில் தஞ்சமடைந்திருந்த தாயும் மகளும் கொல்லப்பட்டுள்ளனர். மேற்குகரை காசா இஸ்ரேல் ஜோர்தானில் கிறிஸ்தவ தேவலாயங்களை மேற்பார்வை செய்யும் Latin Patriarchate of Jerusalem, என்ற அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. யுத்தம் ஆரம்பித்த பின்னர் காசாவில் உள்ள பெரும்பாலான கிறிஸ்தவர்கள்இந்த தேவாலயத்திற்குள் தஞ்சமடைந்துள்ளனர் என Latin Patriarchate of Jerusalem, தெரிவித்துள்ளது. தேவாலயத்தின் கன்னியாஸ்திரிகள் பிரிவில் நடமாடிக்கொண்டிருந்த இரண்டு பெண்கள் சினைப்பர் தாக்குதலிற்குள்ளாகினர், காயமடைந்த ஒருவரை தூக்கி சென்றவர் கொல்லப்பட்டார் என Latin Patriarchate of Jerusalem தெரிவித்துள்ளது. ஏழு பேர் காயமடைந்துள்ளனர். எந்த முன்னெச்சரிக்கையும் முன்னறிவித்தலும் இன்றி இந்த தாக்குதல் இடம்பெற்றது எந்த அத்துமீறல்களும் இடம்பெறாத தேவாலயவளாகத்திற்குள் அவர்கள் சுடப்பட்டனர் எனவும் Latin Patriarchate of Jerusalemதெரிவித்துள்ளது. 54 மாற்றுத்திறனாளிகள் தங்கியிருந்த அன்னை தெரேசாவின் சகோதரிகள் என்ற கன்னியாஸ்திரிகள் மடமும் இஸ்ரேல் இராணுவத்தின் டாங்கிகளின் தாக்குதலிற்குள்ளாகியுள்ளது, இதன் போது அந்த கட்டிடத்திற்கு மின்சாரத்தை வழங்குவதற்கான ஒரேயொரு வழிமுறையாக காணப்பட்ட மின்பிறப்பாக்கி சேதமடைந்துள்ளது எனவும் Latin Patriarchate of Jerusalem தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/171876
  5. அரபிக்கடல் பகுதியில் கடத்தப்பட்டகப்பலை மீட்க சுற்றி வளைத்தது இந்திய கடற்படை 17 DEC, 2023 | 11:04 AM புதுடெல்லி: அரபிக் கடல் பகுதியில் கடத்தப்பட்டு சோமாலியா கொண்டு செல்லப்பட்டமோல்ட்டா நாட்டு சரக்கு கப்பலை இந்திய கடற்படை கப்பல் இடைமறித்துள்ளது. அந்த கப்பலை கொள்ளையர்களிடம் இருந்து மீட்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன. அரபிக் கடல் பகுதியில் கடந்த வியாழக் கிழமையன்று மோல்ட்டா நாட்டு சரக்கு கப்பல் ‘எம்.வி.ரூன்’ 18 பேருடன் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த கப்பலை 6 பேர் கும்பல் கடத்தியதாக அவசர அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து இந்திய கடற்படையின் கண்காணிப்பு விமானம் அரபிக் கடல் பகுதியில் எம்.வி ரூன் சரக்கு கப்பலை தேடும் பணியில் ஈடுபட்டது. நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்ட கப்பலை கடற்படை விமானம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. எம்.வி.ரூன் கப்பல் சோமாலியாகடல் பகுதியில் புன்ட்லேண்ட் பகுதியை நோக்கி சென்று கொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து ஏடன் வளைகுடா பகுதியில் கடத்தல் தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள இந்திய கடற்படை கப்பலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்திய கடற்படை கப்பல் தற்போது எம்.வி.ரூன் கப்பலை நேற்று காலை இடைமறித்தது. எம்.வி.ரூன் சரக்கு கப்பலுக்குள் நுழைந்த கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியை இந்திய கடற்படையினர் கூட்டணி நாடுகளின் கடற்படை உதவியுடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/171868
  6. அரசியலிலிருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை! - முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ 17 DEC, 2023 | 03:59 PM அரசியலிலிருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். ஒவ்வொரு கட்சியும் மாநாடுகளை நடத்த வேண்டும் என்றும், அதன் மூலம் கட்சியின் பலத்தைக் காட்ட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். பெரும்பான்மையான மக்கள் தமது கட்சியுடன் திரண்டுள்ளதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, சில மாற்றங்கள் ஏற்பட்டாலும் மக்கள் எமது கட்சியை விட்டு நகரவில்லை என்பதை கட்சி மாநாடு நிரூபித்துள்ளதாகவும் தெரிவித்தார். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தகுதி தனக்கு இல்லை என்றும், கட்சியைச் நேர்ந்த யாராக இருந்தாலும் வெற்றிபெற ராஜபக்ஷக்கள் பாடுபடுவார்கள் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவது தொடர்பில் தனக்கு தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/171891
  7. தொடர் மழையினால் சிறுவர்களுக்கு ஹெபடைடிஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இருமல், சளி, காய்ச்சல் போன்றவற்றுடன் ஹெபடைடிஸ் நோய் குழந்தைகளையும் பாதிக்கிறது என அவர் சுட்டிக்காட்டுகிறார். முறையான மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக் கொள்வதன் மூலம் குழந்தைகளை இந்நிலையில் இருந்து பாதுகாக்க முடியும் என நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார். இருமல் மற்றும் சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் எனவும் விசேட வைத்தியர் வைத்தியர் தீபால் பெரேரா பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். https://thinakkural.lk/article/285002
  8. வெள்ளத்தால் ஒட்டுசுட்டானில் பலர் பாதிப்பு : 102 பேர் பாதுகாப்பாக மீட்பு 17 DEC, 2023 | 09:42 AM முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழையினால் முல்லைத்தீவு மாட்ட மக்கள் அழிவுகளை எதிர்நோக்கியுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து வான் பாய்கின்ற நிலைமை காணப்படுகிறது. அந்தவகையில் சனிக்கிழமை (16) திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பண்டாரவன்னி கிராமத்தில் உள்ள 32 குடும்பங்களை சேர்ந்த 102 பேர் பாதுகாப்பாக மீட்க்கப்பட்டு கருவேலன்கண்டல் அ.த.க பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் மாங்குளம், பனிக்கன்குளம், பண்டாரவன்னி, இந்துபுரம், தட்டையர்மலை, புளியங்குளம், தச்சடம்பன் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 127 குடும்பங்களை சேர்ந்த 423 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மொத்தமாக 695 குடும்பங்களை சேர்ந்த 2117 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/171855
  9. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாலத்தீவு அதிபர் முய்சு, "தங்கள் நாட்டில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய படைகளை திரும்பப் பெற இந்திய அரசு ஒப்புக்கொண்டதாக" தெரிவித்திருந்தார். 4 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கு மாலத்தீவு அடுத்தடுத்து இரண்டு அதிர்ச்சிகளைக் கொடுத்துள்ளது. முதலில் தனது நாட்டில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய படைகளை திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக அது கூறியது. தற்போது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுடன் போடப்பட்ட ஹைட்ரோகிராஃபிக் சர்வே ஒப்பந்தத்தையும் ரத்து செய்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் தேதி, அப்போதைய அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ்ஹின் அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி மாலத்தீவுக்கு சென்றபோது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த கணக்கெடுப்பின் கீழ், இந்தியா மற்றும் மாலத்தீவு இணைந்து மாலத்தீவு பகுதிகளில் உள்ள நீர் பரப்பளவு, பவளப்பாறை, கடல் ஆகியவற்றை ஆய்வு செய்வதாக இருந்தது. மாலத்தீவில் அதிபர் முகமது முய்சு தலைமையிலான புதிய அரசு அமைந்ததற்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ள முதல் இருதரப்பு ஒப்பந்தம் இது. முன்னதாக மாலத்தீவு அதிபர் முய்சு, "தங்கள் நாட்டில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய படைகளைத் திரும்பப் பெற இந்திய அரசு ஒப்புக்கொண்டதாக" தெரிவித்திருந்தார். அதிபர் முகமது முய்சுவின் மாலத்தீவு முற்போக்கு கட்சியில் சீனாவுக்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கு இருப்பதாகக் கருதப்படுகிறது. தேர்தல் பிரசாரத்தின் போது, 'இந்தியாவே வெளியேறு’ என்ற கோஷத்தை முன்வைத்த அந்தக் கட்சி, மாலத்தீவில் இருந்து இந்திய படைகளை வெளியேற்றுவோம் என்று கூறி பிரசாரம் செய்தது. அவர் அதிபரான பிறகு எடுக்கும் இதுபோன்ற முடிவுகள் ‘முழுவதும் சீனாவின் செல்வாக்கின் அடிப்படையிலேயே’ எடுக்கப்படுவதாகத் தெரிகிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES இதற்கு முன்னால் அதிபராக இருந்த மாலத்தீவு ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த முகமது இப்ராகிம் சோலிஹ், 'முதலில் இந்தியா’ என்ற கோஷத்தை முன்வைத்தார். முய்சுவின் நிலைப்பாடோ இதற்கு முற்றிலும் நேர்மாறானது. ஹைட்ரோகிராஃபிக் சர்வே ஒப்பந்தத்தை ரத்து செய்யும் மாலத்தீவின் முடிவிற்குப் பிறகு, சீனாவுடன் ஒப்பிடும்போது இந்தப் பகுதியில் இந்தியாவின் ஸ்ட்ரேட்டஜிக் செல்வாக்கு தற்போது அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தனது முதல் வெளிநாட்டுப் பயணத்திற்கு துருக்கியை தேர்வு செய்துள்ள முய்சு, அங்கு புதிய மாலத்தீவு தூதரகத்தையும் தொடங்கியுள்ளார். இது குறித்து மாலத்தீவு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாலத்தீவு துருக்கியில் இருந்து தினசரி பயன்படுத்தும் பல பொருட்களை இறக்குமதி செய்து வருகிறது. தங்கள் நாட்டில் துருக்கிய முதலீட்டை ஊக்குவித்து வரும் அதே வேளையில் மாலத்தீவில் இருந்தும் துருக்கிக்கு ஏற்றுமதி செய்வதில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் மாலத்தீவில் இருந்து துருக்கிக்கு கல்வி கற்கச் செல்லும் மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. முய்சுவின் துருக்கி பயணத்தைத் தொடர்ந்து மாலத்தீவின் துணை அதிபர் ஹுசைன் முகமது லத்தீஃப் சீனா சென்றிருந்தார். சீனா தலைமையில் நடந்த சீனா-இந்தியா வளர்ச்சி ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அவர் அங்கு சென்றிருந்தார். அதே நேரம், இதேபோன்ற மற்றோர் அமைப்பான இந்தியப் பெருங்கடல் ரிம் அசோசியேஷன் குறித்து மாலத்தீவின் அணுகுமுறையோ அவ்வளவு நேர்மறையானதாக இல்லை. சீனா-இந்தியா வளர்ச்சி ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் பேசிய லத்தீஃப் தனது நாட்டிற்கு சீனாவின் பங்கு முக்கியமானது என்று கூறியுள்ளார். துருக்கி மற்றும் சீனாவிற்கு மாலத்தீவு தலைவர்கள் பயணிப்பது இந்தியாவின் நலன்களுக்கு சாதகமான அறிகுறி அல்ல என்று நிபுணர்கள் கூறுகின்றனர். காரணம், சீனாவும் துருக்கியும் இந்தியாவின் நிலம் மற்றும் கடல்சார் பாதுகாப்புக்கு எதிரெதிர் நிலைப்பாடுகளை எடுத்து வருகின்றன. இந்தியாவிற்கு என்ன பாதிப்பு? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாலத்தீவில் புதிய அரசு ஆட்சிக்கு வரும் போதெல்லாம், அந்த அரசை ஓரளவிற்குத் தனது பக்கத்தில் வைத்திருக்க இந்தியா முயன்று வருகிறது. மாலத்தீவின் சமீபத்திய நடவடிக்கை இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் நலன்களைப் பாதிக்கும் என்று கருதப்படுகிறது. புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள சீன ஆய்வு மையத்தின் இணை பேராசிரியர் அரவிந்த் யெல்லேரி, "1996-97 முதல் சர்வதேச அரசியல் நீல பொருளாதாரம் அல்லது பெருங்கடல் பொருளாதாரத்தில் இந்தியா அதிக கவனம் செலுத்தி வருவதாக" தெரிவிக்கிறார். இது இந்திய பெருங்கடல் அல்லது பசிபிக் பெருங்கலுடனான இந்தியாவின் நெருக்கம் கடல் தொடர்பான உத்தியில் இந்தியாவின் பாத்திரத்தை அதிகரித்துள்ளது. அதிலிருந்து, தென் சீனக் கடல், அரபிக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகியவற்றில் இந்தியா தனது ஸ்ட்ரேட்டஜிக் நலன்களில் கவனம் செலுத்தி வருகிறது. இதனால், மொரீஷியஸ், மாலத்தீவு, சீஷெல்ஸ் போன்ற நாடுகளில் இந்தியாவின் தொடர்புகள் அதிகரித்துள்ளது. கண்காணிப்பு, எரிபொருள் விநியோகம் மேலும் பல விஷயங்களில் இந்தியாவிற்கு இந்தப் பகுதிகளில் நலன்கள் உள்ளது. கடந்த 25-30 ஆண்டுகளில், இந்தியா இந்தப் பகுதிகளில் அதிக கவனத்தைச் செலுத்தி வருகிறது. இந்தியாவிற்கு பொருளாதார மற்றும் மூலோபாய அடிப்படையில் மாலத்தீவின் முக்கியத்துவம் மிக அதிகம் என்று கூறுகிறார் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் அமைதி மற்றும் மோதல் தீர்வுகளுக்கான நெல்சன் மண்டேலா மையத்தின் உதவிப் பேராசிரியர் டாக்டர் பிரேமானந்த் மிஸ்ரா. எனவேதான், மாலத்தீவில் புதிய அரசு ஆட்சிக்கு வரும் போதெல்லாம், அந்த அரசை ஓரளவிற்குத் தனது பக்கத்தில் வைத்திருக்க இந்தியா முயன்று வருகிறது. சீனாவும் இந்தப் பகுதியில் தனது செயல்பாட்டை அதிகரிக்க விரும்புகிறது. ஆனால் இந்தியா அதற்கு முக்கியப் போட்டியாளராக இருந்து வருகிறது. "இந்தியப் பெருங்கடலில் தனது செல்வாக்கை அதிகரிக்க சீனாவும் அழுத்தம் கொடுத்து வருகிறது. இதற்காக தற்போது தென்சீனக் கடலில் இருந்து வெளியே வந்து இங்கு தனது நடவடிக்கைகளை அதிகரித்து வருகிறது,” என்று கூறுகிறார் அரவிந்த் யெல்லேரி. “மாலத்தீவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் சீனாவுக்கு சாதகமான வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அது இந்தியாவில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இது அடுத்த நான்கைந்து ஆண்டுகளில் வலுவாக வெளியே தெரியும். மாலத்தீவில் இந்திய வீரர்கள் மிகக் குறைவாக இருந்தாலும், அவர்கள் திரும்பி வருவது கவலை அளிக்க கூடிய விஷயமாக உள்ளது,” என்று அவர் கூறுகிறார். சீனாவின் செல்வாக்கை குறைப்பது கடினமான சவால் பட மூலாதாரம்,GETTY IMAGES மாலத்தீவில் சீனாவின் செல்வாக்கைக் குறைக்க இந்தியா என்ன செய்ய முடியும்? இந்தக் கேள்விக்கு பதிலளித்த அரவிந்த் யெல்லேரி, இதுபோன்ற சிறிய நாடுகளைத் தனது பக்கம் கொண்டு வர இந்தியா இவ்வளவு கடும் முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை என்று கூறுகிறார். இலங்கை, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் சீன முதலீட்டிற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆனாலும், பூடான் மற்றும் மாலத்தீவில் தனது செல்வாக்கை வலுப்படுத்துவதில் சீனா வெற்றி பெற்றுள்ளது. இந்த விஷயத்தில் சீனாவுடனான உறவின் மதிப்பை இந்த நாடுகள் புரிந்துகொள்ள விடுவதே இந்தியாவின் கொள்கையாக இருக்கலாம் என்று அவர் கூறுகிறார். காரணம் இப்போது சீனாவின் நிதியுதவி பல நாடுகளுக்குச் சுமையாக மாறியுள்ளது. எனவே அவர்கள் இந்தப் 'பொறி'யில் இருந்து வெளியேற விரும்புகிறார்கள். “சொல்லப்போனால், பூகோள ரீதியாக மாலத்தீவு இந்தியாவுடன் நெருக்கமாக உள்ளது. இரண்டாவது, அங்குள்ள மக்கள்தொகை அமைப்பும் இந்திய மக்கள்தொகையின் அமைப்பிற்கு நெருக்கமாக உள்ளது. இது சீனாவின் மக்கள்தொகையின் தன்மை மற்றும் இயல்புடன் பொருந்தவில்லை. எனவே, மாலத்தீவின் பண்புகள் சீனாவுடன் பொருந்தவில்லை என்பதை அந்த நாடு புரிந்துகொள்ள வேண்டும்” என்று கூறுகிறார் யெல்லேரி. அதே நேரம், “தொடக்கத்தில் இருந்தே முய்சு இந்தியாவுக்கு எதிரான உதியையே கொண்டுள்ளார். அது அவரின் முடிவுகள் வாயிலாகவே கண்கூடாகத் தெரிகிறது. ஹைட்ரோகிராஃபி ஒப்பந்தம் ரத்து, இந்திய படைகள் திரும்பப் பெறுதல் உள்ளிட்டவை சீன கொள்கைகளுக்கு ஆதரவு அளிப்பது போலத்தான் உள்ளது. இது இந்தியா மீது பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்,” என்று தெரிவிக்கிறார் பிரேமானந்த மிஸ்ரா. “இஸ்லாமிய சித்தாந்தத்தின் பக்கம் மாலத்தீவு சாய்வதையும் கண்கூடாகவே பார்க்க முடிகிறது. தேசிய நலன் என்பது எந்த சித்தாந்தம் சார்ந்தோ அல்லது தலைவர் மற்றும் கட்சி சார்ந்தோ இருத்தல் கூடாது. ஆனால் சில நேரங்களில் வெளியுறவு கொள்கைகளில் அதைப் பார்க்க முடியும். குறிப்பாக இரான் போன்ற விஷயங்களில் இதைப் பார்க்கலாம்” என்கிறார் மிஸ்ரா. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவிற்கான மூன்று வழிகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாலத்தீவில் முய்சுவின் அரசு இருக்கும் வரை சீனாவின் இடையூறை குறைக்க முடியாத வரை இந்தியா ‘காத்திருந்து கண்காணிக்கும்’ உத்தியை பயன்படுத்த வேண்டும், என்கிறார் பிரேமானந்த் மிஸ்ரா. "இதில் என்ன பிரச்னை இருக்கிறது என்பதை முதலில் பார்க்க வேண்டும். ஆனால் தற்போதைக்கு முய்சு இருக்கும் வரை, அங்கு ஒரு இஸ்லாமிய சார்பு தன்மை இருக்கலாம். மாலத்தீவின் பொருளாதாரத் தேவைகளில் சீனாவின் தலையீடு அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது. இதனால் இது இந்தியாவின் பாதுகாப்புத் துறை, பொருளாதாரம் மற்றும் மூலோபாயக் கொள்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, இந்தியா தனது அண்டை நாட்டுக் கொள்கையில் இந்த பிரச்னைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்,” என்று கூறுகிறார் பிரேமானந்த் மிஸ்ரா. இந்தியாவிற்கு மாலத்தீவில் சீனாவின் செல்வாக்கைக் குறைக்க வேண்டுமென்றால், அதற்கு மூன்று வழிகள் இருப்பதாகக் கூறுகிறார் அவர். மாலத்தீவில் முய்சுவின் அரசு இருக்கும் வரை சீனாவின் இடையூறை குறைக்க முடியாத வரை இந்தியா ‘காத்திருந்து கண்காணிக்கும்’ உத்தியைப் பயன்படுத்த வேண்டும். இந்தியா மறைமுகமான செல்வாக்கை அங்கு உருவாக்க முயற்சி செய்ய வேண்டும். ஏனெனில் அமெரிக்காவும் பிற நாடுகளும்கூட இந்தியப் பெருங்கடல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளன. எனவே, அமெரிக்கா மூலம் மாலத்தீவு மீது செல்வாக்கு செலுத்த இந்தியா முயற்சி எடுக்கலாம். மாலத்தீவு சீனாவை சார்ந்திருப்பதை அதிகரித்திருப்பதால், அதன் இறையாண்மைக்கு ஆபத்து ஏற்படலாம். இத்தகைய சூழ்நிலையில், மாலத்தீவின் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை எழுப்புமாறு தூண்டி விடலாம். மிஸ்ராவின் கருத்துப்படி, மாலத்தீவில் சீனா குடியேற விரும்புவதால் அங்கு 'இந்தியாவே வெளியேறு’ கோஷம் ஊக்குவிக்கப்படுகிறது. எனவே எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்னையைக் கையிலெடுக்க வாய்ப்புள்ளது. சீனா - மாலத்தீவு இடையிலான உறவு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சீனாவிடம் இருந்து மாலத்தீவு 1 பில்லியன் டாலர் வரை கடன் பெற்றுள்ளதாக நம்பப்படுகிறது. இந்த பணம் மாலத்தீவில் உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்யப்படுகிறது. இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளும் பில்லியன்கணக்கான டாலர்களை உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் இதர வளர்ச்சி சார்நத பணிகளுக்காக கடனாக வழங்கியுள்ளது. மாலத்தீவு அமைந்துள்ள இந்திய பெருங்கடல் பகுதி முக்கியமான மூலோபாய பகுதியாகக் கருதப்படுகிறது. வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய் கொண்டு வரும் கப்பல்கள் இந்த வழியைத்தான் பயன்படுத்துகின்றன. நீண்டகாலமாகவே மாலத்தீவில் இந்தியாவின் செல்வாக்கு உள்ளது. மாலத்தீவில் இருப்பதன் மூலம் இந்தியப் பெருங்கடலின் பெரும் பகுதியைக் கண்காணிக்கும் திறனை இந்தியா பெற்றுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு, தனது தீவுகளில் ஒன்றை சீனாவுக்கு 40 ஆண்டுகளுக்கு வெறும் 50 மில்லியன் டாலருக்கு குத்தகைக்குக் கொடுத்தது மாலத்தீவு. மாலத்தீவும் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்திற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளது. சீனாவிடம் இருந்து மாலத்தீவு ஒரு பில்லியன் டாலர் வரை கடன் பெற்றுள்ளதாக நம்பப்படுகிறது. இந்தப் பணம் மாலத்தீவில் உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்யப்படுகிறது. சீன கடற்படை மாலத்தீவில் தனது எல்லையை அதிகரிக்க முயன்று வரும் அதே வேளையில் சீனாவின் செல்வாக்கைத் தடுக்க இந்தியா முயன்று வருகிறது. https://www.bbc.com/tamil/articles/c892x1ryrd1o
  10. 17 DEC, 2023 | 12:57 PM (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கையின் பொருளாதார - அரசியல் ஸ்திரதன்மை என்பது இந்தியாவுக்கு மாத்திரமல்ல, பிராந்திய நலன்களுக்கும் மிகவும் அவசியமான ஒன்றாகும். இலங்கை போன்ற நட்பு நாடொன்று நெருக்கடிகளை எதிர்கொள்ளும்போது அதன் தாக்கம் நிச்சயம் பிராந்தியத்திலும் இருக்கும் என தெரிவித்துள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இரு நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா, தகவல் தொழில்நுட்ப மற்றும் வலு சக்தி உள்ளிட்ட புதிய இணைப்புகளினால் இலங்கை நலனடையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் மூன்று ஆண்டு கால இந்திய இராஜதந்திர சேவையை வெள்ளிக்கிழமையுடன் உத்தியோகபூர்வமாக நிறைவு செய்துள்ள உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, அவுஸ்திரேலியாவுக்கான இந்திய உயர்ஸ்தானிகராக சேவையில் இணையவுள்ளார். இந்நிலையில், இலங்கையின் தனது சேவைக்காலம் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே கோபால் பாக்லே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், இலங்கை - இந்திய உறவு என்பது பொருளாதாரத்தை மாத்திரம் சார்ந்ததல்ல. மாறாக கலாசார பின்னணிகள், இரு நாட்டு மக்கள் தொடர்புகள் மற்றும் பாதுகாப்பு என பல்துறைகளில் மிகவும் ஆழமாக இருதரப்பு உறவுகள் வேரூன்றியுள்ளன.எனவே தான் இலங்கையின் கொவிட் உள்ளிட்ட அண்மைய நெருக்கடிகளில் இந்தியா முதலாவதாக முன்வந்து உதவிகளை செய்தது. அயலகத்திற்கு முதலிடம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இலங்கைக்கு உதவ யாருக்காகவும் காத்திருக்க வில்லை. குறிப்பாக அண்மைய பொருளாதார நெருக்கடிகளின் போது எரிபொருள், உணவு மற்றும் மருந்து என பல அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடுகள் ஏற்பட்டன. இதன் போது இந்தியா அவசரமாக செயல்பட்டு இலங்கை மக்களின் அத்தியாவசிய தேவைகளை ஈடுசெய்ததது. இதே போன்று தான் கொவிட் பெரும் தொற்றின் போது இலங்கை மக்களுக்கு தேவையான அனைத்து தடுப்பூசிகளையும் வழங்கி உதவியது. மறுப்புறம் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தை இலங்கை நாடியப்போது, இந்தியா பக்கபலமாக நின்று ஆதரவு வழங்கியது. எழுத்து மூலமாக சர்வதேச கடன் மறுசீரமைப்புகளுக்கு உத்தரவாதத்தை வழங்கியது. இலங்கையின் பொருளாதார - அரசியல் ஸ்தீரதன்மை என்பது இந்தியாவுக்கு மாத்திரமல்ல பிராந்தியத்துக்கும் மிகவும் அவசியமான ஒன்றாகும். இலங்கை போன்ற நட்பு நாடொன்று நெருக்கடிகளை எதிர்கொள்ளும் போது அதன் தாக்கம் பிராந்தியத்திலும் தாக்கம் செலுத்தும். எனவே பிராந்தியத்தில் நட்பு நாடுகள் சவால்களை எதிர்கொள்ளும் போது, அயலகத்திற்கு முதலிடம் என்ற கொள்கையின் அடிப்படையில் இந்தியா தலைமைத்தும் எடுத்து நிலையான தீர்வுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும். இவ்வாறான ஒத்துழைப்புகள் இலங்கைக்கு மாத்திரம் நன்மையளிக்காது. மாறாக பிராந்திய நலன்களிலும் தொடர்புப்படும். இலங்கை - இந்திய இணைப்புகள் முக்கிய உறவுகளில் ஒத்திசைவாகின்றன. வரலாற்று ரீதியிலான பாரம்பரிய இணைப்புகள். அபிவிருத்தி திட்டங்களையும் பொருளாதார உறவுகளையும் உள்ளடக்கியதாக உள்ள இணைப்புகள். மக்கள் - கலாசார இரு தரப்பு இணைப்புகள். இவை அனைத்துமே இரு நாடுகளுக்கு மாத்திரமன்றி இரு நாட்டு மக்களுக்கு பொதுவானதாக உள்ளது. இதனை மையப்படுத்திய இரு நாட்டு சுற்றுலா, தகவல் தொழில்நுட்ப மற்றும் வலு சக்தி உள்ளிட்ட புதிய இணைப்புகளினால் இலங்கை நலனடையும் என்றார். https://www.virakesari.lk/article/171879
  11. 18 வீத வரி விதிப்பதால் சுகாதாரத் துறைக்கு பாரிய நெருக்கடி -GMOA ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்படும் வட் வரியானது சுகாதாரத் துறைக்கு கடும் அச்சுறுத்தலாக அமையும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. சுகாதாரத் துறையில் பல பொருட்களுக்கு புதிதாக 18 வீத வரி விதிப்பது பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் எனவும் GMOA ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். ஆம்புலன்ஸ்கள், மருந்து தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், உயர் தொழில்நுட்ப மருத்துவ உபகரணங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களான ஊன்றுகோல், செவிப்புலன் கருவிகள் ஆகியவை ஜனவரி முதல் புதிய வரிக்கு உட்பட்டது. “சுகாதாரத் துறையின் மீது தேவையற்ற பாரம் சுமத்துவதன் மூலம் நோயாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நன்மைகள் தொடர்பில் பிரச்சினைகளை உருவாக்குகின்றது. இந்நாட்டின் சுகாதாரத் துறை நெருக்கடியான சூழலை எதிர்கொள்ளும். “இறுதியில், மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டிய அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள், அந்த மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்” என்று GMOA தெரிவித்துள்ளது. வரி அதிகரிப்பு காரணமாக மேலும் அதிகமான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என டாக்டர் விஜேசிங்க மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/284981
  12. உணவகம் ஒன்றில் ஒரு கிளாஸ் வெந்நீருக்கு 100 ரூபாய் வசூலித்த சம்பவம் குறித்து தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்து கருத்து வெளியிட்ட உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத், “இதுபோன்ற ஒன்றைச் சம்பவமே நமக்குத் தெரியும். வெந்நீரோ, குளிர்ந்த நீரோ, இப்படி ஒரு கிளாஸ் தண்ணீருக்குக் கட்டணம் வசூலிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது மிகப் பெரிய அநீதி.. இது போன்ற செயல்கள் இனி நடக்காமல் தடுக்கும் வகையில் உரிய தரப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து கவலை கொள்கிறோம், அத்துடன், நுகர்வோர் அதிகாரசபையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு கிளாஸ் தண்ணீருக்கு பணம் வசூலிக்க நுகர்வோர் சட்டத்தில் இடமில்லை.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் உள்ள சைவ உணவகம் ஒன்றிலேயே இவ்வாறு கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் சுடு நீருக்கு இவ்வளவு விலையை வசூலிக்க நேரிடுகிறது என சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். https://thinakkural.lk/article/284972
  13. காஸா: வெள்ளைத் துணி ஏந்திய பணயக் கைதிகளை இஸ்ரேல் ராணுவம் கொன்றது ஏன்? பட மூலாதாரம்,HOSTAGE AND MISSING FAMILIES FORUM படக்குறிப்பு, இஸ்ரேல் ராணுவம் தவறுதலாக மேற்கொண்ட தாக்குதலில் சொந்த மக்கள் 3 பேர் உயிரிழந்தனர். 16 டிசம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேலிய ராணுவம் காஸாவில் தனது தாக்குதல் நடவடிக்கையின் போது தவறுதலாக மூன்று பணயக் கைதிகளை 'அச்சுறுத்தல்' எனக் கருதி கொன்றுவிட்டதாகக் கூறுகிறது. உயிரிழந்தவர்களில் 28 வயதான யோதம் கைம், 22 வயதான சமர் தலால்கா மற்றும் 26 வயதான அலோன் ஷம்ரிஸ் ஆகியோர் அடங்குவர். ராணுவம் வருத்தம் தெரிவித்ததுடன், காஸாவின் வடக்கே ஷேஜாயாவில் மூவரும் இறந்ததாக அறிவித்தது. கொல்லப்பட்ட மூன்று பணயக் கைதிகளை தங்களது கையில் வெள்ளைத் துணியை வைத்திருந்ததாகக் கூறுகிறார் இஸ்ரேல் ராணுவத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி. இது ராணுவ விதிமீறல் என்பதால், இச்சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணை நடைபெற்று வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார். அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் ஆயுதக் குழு, 200க்கும் மேற்பட்டோரை பணயக் கைதிகளாகப் பிடித்து மீண்டும் காஸாவுக்கு கொண்டு சென்றது. கடந்த சில நாட்களில் ஹமாஸ் பல டஜன் பணயக் கைதிகளை விடுவித்தாலும், அந்தக் குழுவிடம் இன்னும் 100க்கும் மேற்பட்ட பணயக் கைதிகள் சிக்கியுள்ளனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமையன்று இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் சொந்த நாட்டவர்களே உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள ராணுவம், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. "காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்து, பணயக் கைதிகள் அனைவரையும் வீட்டிற்கு அழைத்து வருவதே எங்கள் தேசியப் பணி" என்றும் ராணுவம் கூறியுள்ளது. https://www.bbc.com/tamil/articles/c9x2ddj67n4o
  14. 16 DEC, 2023 | 09:41 PM (நா.தனுஜா) இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் பொது நிதிசார் செலவினங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படாத நிலையில், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவர்களை எவ்வாறு பொறுப்புக்கூறவைக்க முடியும் என சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான ஐக்கிய நாடுகள் நிதியத்தின் உறுப்பினர் அம்பிகா சற்குணநாதன் கேள்வி எழுப்பியிருக்கின்றார். போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னரும் கல்வி மற்றும் சுகாதாரத்துறையுடன் ஒப்பிடுகையில் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுவருவது குறித்து பல்வேறு தரப்பினராலும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், 2024ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தில் பாதுகாப்புத்துறைக்கு 423 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.5 சதவீதமாகக் கணிக்கப்பட்டிருக்கும் இந்நிதி ஒதுக்கீடு தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இவ்வாறானதொரு பின்னணியில் இவ்விடயத்தை மேற்கோள் காட்டி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் (டுவிட்டர்) செய்திருக்கும் பதிவிலேயே அம்பிகா சற்குணநாதன் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார். அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றின் 2022ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு அறிக்கையானது இலங்கை இராணுவத்தின் கணக்காய்வு அறிக்கையைப் போன்று நிதி முறையற்ற விதத்தில் முகாமை செய்யப்பட்டிருப்பதைக் காண்பிக்கின்றது. இருப்பினும் நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் சூழ்நிலையில் படையினரால் பொதுநிதி முறையற்ற விதத்தில் கையாளப்படுவது குறித்து தெற்கில் இயங்கிவரும் எந்தவொரு அரசியல் கட்சியும் பேசவில்லை. நிதியியல்சார் பொறுப்புடைமை குறித்துப் பேசுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா, எரான் விக்ரமரத்ன போன்றோர் இவ்விடயம் தொடர்பிலும் குரலெழுப்ப வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம். தற்போது இராணுவமானது சட்டத்துக்கு அமைவாக செயற்படாமல், பொது நிதியை தமது விருப்பத்துக்கு ஏற்ப செலவிடும் கட்டமைப்பாக எழுச்சியடைந்துள்ளது. இருப்பினும் அது உரியவாறு கண்காணிப்புக்கு உட்படுத்தப்படவில்லை. அதேபோன்று தமது வாக்கு வங்கிக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதனால் தெற்கில் இயங்கிவரும் அரசியல்வாதிகளும் அது குறித்துப் பேச முற்படவில்லை. குறைந்தபட்சம் பொது நிதியில் மேற்கொள்ளப்படும் செலவினங்கள் தொடர்பில் கூட இராணுவத்தை பொறுப்புக்கூறச் செய்ய முடியவில்லை என்றால், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவர்களைப் பொறுப்புக்கூறவைக்க முடியும் என்பதற்கான சாத்தியப்பாடு எங்கே இருக்கின்றது? சட்டங்களுக்கு அமைவாக செயற்படுகின்ற சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமெனில், இராணுவத்தினரைப் பொறுப்புக்கூறச் செய்வதைத் தவிர்க்கமுடியாது என தெரிவித்திருந்தார். https://www.virakesari.lk/article/171835
  15. வடக்கில் ஜப்பான், தென்னாபிரிக்கா, சுவிட்சர்லாந்து தூதுவர்கள் முகாம் உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறை குறித்து கலந்துரையாடல் 16 DEC, 2023 | 09:33 PM ஆர்.ராம் வடக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்துள்ள ஜப்பான், தென்னாபிரிக்கா, சுவிட்சர்லாந்து தூதுவர்கள் யாழில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்றதோடு, உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறை தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினருடன் தீவிரமான கலந்துரையாடல்களில் பங்கேற்றுள்ளனர். இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி, இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் சிரி வொல்ட் மற்றும் இலங்கைக்கான தென்னாபிரிக்க தூதுவர் சாண்டில் ஷால்க் ஆகியோர் வடக்குக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளனர். யாழில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்பது பிரதான விடயமாக இருந்தாலும், அந்நிகழ்வுக்கு அப்பால் பல்வேறு சந்திப்புக்களிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகள் சார்ந்து செயற்படும் குரலற்றவர்களுக்கான அமைப்பு, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான வடக்கு, கிழக்கு சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் இறுதிப்போரில் சரணடைந்தவர்களின் உறவினர்கள், நேரடிச் சாட்சியங்கள் உள்ளிட்ட தரப்பினருடன் சந்திப்புக்களை முன்னெடுத்துள்ளனர். குறிப்பாக, தென்னாபிரிக்கா, சுவிட்சர்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகள் இலங்கையில் உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறையை ஸ்தாபித்தல், நடைமுறையில் அதனை வெற்றி பெறச் செய்தல் என்பதில் கடுமையான பிரயத்தனம் செய்துவருகின்றன. இந்நிலையில், பாதிக்கப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி அடுத்த கட்டச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு மேற்படி தூதுவர்கள் முயற்சிகளை எடுத்துள்ளனர். அதனடிப்படையில் வடக்கில் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளதோடு, விசேடமாக சரணடைந்தவர்களின் உறவினர்கள் மற்றும் சாட்சியாளர்களை அழைத்து சரணடைந்த பகுதியை அடையாளம் காணும் செயற்பாட்டிலும் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை, இலங்கை அரசாங்கம் அடுத்த ஆண்டின் முற்பகுதியில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அறிவித்துள்ள நிலையில், தென்னாபிரிக்கா அதற்கான ஆலோசனைகளையும், சுவிட்சர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகியன நிதிப் பங்களிப்பையும் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/171839
  16. இஸ்ரேலிய பணயக் கைதிகளையே தவறுதலாக கொன்ற ராணுவம் - கொந்தளிக்கும் மக்கள் பட மூலாதாரம்,HOSTAGE AND MISSING FAMILIES FORUM படக்குறிப்பு, இஸ்ரேல் ராணுவம் தவறுதலாக மேற்கொண்ட தாக்குதலில் சொந்த மக்கள் 3 பேர் உயிரிழந்தனர். ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இஸ்ரேலிய ராணுவம் காஸாவில் தனது தாக்குதல் நடவடிக்கையின் போது தவறுதலாக மூன்று பணயக் கைதிகளை 'அச்சுறுத்தல்' எனக் கருதி கொன்றுவிட்டதாகக் கூறுகிறது. உயிரிழந்தவர்களில் 28 வயதான யோதம் கைம், 22 வயதான சமர் தலால்கா மற்றும் 26 வயதான அலோன் ஷம்ரிஸ் ஆகியோர் அடங்குவர். ராணுவம் வருத்தம் தெரிவித்ததுடன், காஸாவின் வடக்கே ஷேஜாயாவில் மூவரும் இறந்ததாக அறிவித்தது. அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் ஆயுதக் குழு, 200க்கும் மேற்பட்டோரை பணயக் கைதிகளாகப் பிடித்து மீண்டும் காஸாவுக்கு கொண்டு சென்றது. கடந்த சில நாட்களில் ஹமாஸ் பல டஜன் பணயக் கைதிகளை விடுவித்தாலும், அந்தக் குழுவிடம் இன்னும் 100க்கும் மேற்பட்ட பணயக் கைதிகள் சிக்கியுள்ளனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமையன்று இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் சொந்த நாட்டவர்களே உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள ராணுவம், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. "காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்து, பணயக் கைதிகள் அனைவரையும் வீட்டிற்கு அழைத்து வருவதே எங்கள் தேசியப் பணி" என்றும் ராணுவம் கூறியுள்ளது. தெருவில் இறங்கிய மக்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேல் ராணுவத்தின் தவறான தாக்குதலைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கொலைச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு, அந்நகரில் உள்ள ராணுவ தளத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர். எஞ்சியுள்ள பணயக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் ஆயுதக் குழுவுடன் அரசு சமரசம் செய்துகொள்ள வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கைகளில் மெழுகுவர்த்தி மற்றும் சுவரொட்டிகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சுவரொட்டிகளில் “அவர்களை வீட்டிற்கு அழைத்து வாருங்கள்” மற்றும் “இப்போது பணயக் கைதிகள் பரிமாற்ற நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளுங்கள்,” என்று எழுதப்பட்டுள்ளது. இறந்தவர்களின் உடல்கள் இஸ்ரேலை அடைந்துள்ளன. அங்கு உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. உடல்களை அடையாளம் காணும் பணிகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராணுவத் தாக்குதலில் உயிரிழந்த 3 பேரின் உடல்களுக்கும் மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளன. தற்போது உயிரிழந்த யோதம் கயீம் என்பவரை அக்டோபர் 7ஆம் தேதி, கிப்புட்ஸ் கஃப்ர் அஸாவில் இருந்து ஹமாஸ் குழுவினர் கடத்திச் சென்றனர். யோதம் ஒரு இசைக்கலைஞர் என்பதுடன், அவர் விலங்குகளை நேசிப்பவராகவும் இருந்தார். அவருக்கு இத்தாலிய உணவுதான் மிகவும் பிடித்த உணவு என்றும் தெரியவந்துள்ளது. ஹமாஸ் இஸ்ரேலை தாக்கிய நாளில், யோதம் கயீம் தனது குடும்பத்தினரை அழைத்து, தங்களது வீடு தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததாகக் கூறினார். இதற்கிடையில், யோதம் கயீம் காற்றோட்டமாக இருப்பதற்காகத் தனது வீட்டின் ஜன்னலை திறந்தபோது, ஹமாஸ் குழுவினர் அவரைக் கடத்திச் சென்றனர். மகன் இறப்பதற்கு முன் பிபிசி செய்தியிடம் பேசிய அவரது தாயார், தாக்குதல் நடந்த அன்று அவர் வீட்டில் பதுங்கியிருந்தபோது அவருடன் பேசியதாகத் தெரிவித்தார். இந்தச் சம்பவத்தில் இறந்த இரண்டாவது நபர், 26 வயதான அலோன் ஷம்ரிஸ், அக்டோபர் 7ஆம் தேதி காஃப்ர் அஸபவில் இருந்தார். இதுதவிர, 22 வயதான சமீர் தலால்கா, கிப்புட்ஸ் நிர் அம் என்ற இடத்தில் இருந்து ஹமாஸால் கடத்தப்பட்டார். மோட்டார் சைக்கிள் ஆர்வலரான சமீர், கிராமப்புறங்களுக்குச் செல்வதையும் தனது நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடுவதையும் அதிகம் விரும்புவராக இருந்திருக்கிறார். அவர் ஹுரா நகரில் வசித்து வந்த நிலையில் கிப்புட்ஸில் ஒரு கோழிப் பண்ணையில் வேலை செய்து வந்தார். இவர் அக்டோபர் 7ஆம் தேதி காலையில் வழக்கம் போல் வேலைக்குச் சென்றிருக்கிறார். ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு, சமீர் தலால்கா தனது சகோதரியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனக்கு துப்பாக்கி தோட்டாவால் காயம் ஏற்பட்டதாகத் தெரிவித்திருந்தார். தாக்குதல் நடந்த அன்று காலை உள்ளூர் நேரப்படி 7 மணியளவில் தனது மகனுடனான தொடர்பை இழந்ததாக அவரது தந்தை உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். சமீர் தலால்கா காஸாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட படம் டெலிகிராமில் பகிரப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராணுவத் தாக்குதலில் சொந்த மக்கள் 3 பேர் உயிரிழந்ததற்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வேதனை தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு என்ன சொன்னார்? இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த மரணங்களை 'தாங்க முடியாத சோகம்' என்று வர்ணித்துள்ளார். "இந்தக் கடினமான வேளையில்கூட, நமது காயங்களைக் குணப்படுத்துவோம், பாடங்களைக் கற்றுக்கொள்வோம். மேலும் எங்கள் நாட்டுப் பணயக் கைதிகள் அனைவரையும் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து வருவதற்கு எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோம்," என்று அவர் கூறியுள்ளார். அமெரிக்கா என்ன சொன்னது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேலின் தொடர் தாக்குதலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்தச் சம்பவத்திற்கு அமெரிக்க தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, இஸ்ரேலிய ராணுவத்தின் இந்தக் கொலைகள் ஒரு பெரிய தவறு என்றும், இந்த நடவடிக்கை எப்படி நடந்தது என்பது குறித்த முழுமையான தகவல்கள் அமெரிக்காவிடம் இல்லை என்றும் கூறினார். சமீபத்தில், காஸாவில் நடந்து வரும் தாக்குதல்கள் தொடர்பாக இஸ்ரேல் மீது அமெரிக்கா மிகக் கண்டிப்புடன் இருந்தது. காஸாவில் நடந்து வரும் கண்மூடித்தனமான குண்டுவெடிப்பால் இஸ்ரேல் உலகளாவிய ஆதரவை இழந்து வருவதாக டிசம்பர் 13ஆம் தேதியே அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருந்தார். 2024ஆம் ஆண்டிற்கான நிதி திரட்டுவது தொடர்பான நிகழ்வில் பைடன் பேசுகையில், ”இஸ்ரேலின் பாதுகாப்பு அமெரிக்காவை சார்ந்து இருக்கலாம், ஆனால் தற்போது அது அமெரிக்காவைவிட ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பா மற்றும் உலகின் பெரும்பாலான நாடுகளைச் சார்ந்துள்ளது. ஆனால் தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்களின் காரணமாக இஸ்ரேல் அந்த ஆதரவை இழக்கும் நிலை உள்ளது,” என்றார். இஸ்ரேலின் ராணுவத் தாக்குதல் தொடர்பாக பைடனுக்கு அமெரிக்காவில் பெரும் அழுத்தத்தை எதிர்கொள்ளும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. பைடனின் ஜனநாயகக் கட்சிக்குள் இருந்தும் இந்த அழுத்தம் வெளிப்படுகிறது. பைடனின் அறிக்கை அமெரிக்க நிர்வாகத்தின் அறிக்கைகளைப் போன்றது. இதில் இஸ்ரேல் போரின்போது மனித உயிர்களைக் காப்பாற்றுவது பற்றியும் பேசப்பட்டிருந்தது. மூத்த அமெரிக்க அதிகாரிகளும் இஸ்ரேலின் ராணுவ நிலைப்பாடு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதற்கு ஒரு நாள் முன்னதாக, காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையிலும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 153 நாடுகள் போர் நிறுத்தத்திற்கு ஆதரவாகவும், 10 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. இது தவிர, 23 நாடுகள் வாக்களிக்காமல் இருந்தன. ராணுவ நடமுறைகள் குறித்து எழும் கேள்விகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராணுவத் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். காஸாவில் ஹமாஸ் குழுவினர் நிர்வகிக்கும் சுகாதார அமைச்சகம் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில், இஸ்ரேலிய தாக்குதல்களில் இதுவரை 18,800 பேர் உயிரிழந்துள்ளனர். அக்டோபர் 7 அன்று, இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்டனர் என்பதுடன் ஹமாஸ் 240 பேரை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றது. ஹமாஸின் ஆக்கிரமிப்பில் இருந்து பணயக் கைதிகளை விடுவிக்க பயன்படுத்தப்படும் ராணுவ நடவடிக்கைகள் குறித்தும் மக்கள் கேள்விகளை எழுப்புகின்றனர். ஹமாஸால் சமீபத்தில் விடுவிக்கப்பட்டவர்களில் ஹான் அவிக்டோரியும் ஒருவர். "பணயக் கைதிகளை ராணுவத்தின் மூலம் மீட்க முடியும் என்று மக்கள் கூறுவதை நாங்கள் அடிக்கடி கேட்கிறோம். ஆனால் அவர்களை பாதுகாப்பாக திரும்ப கொண்டு வர எந்த ராணுவ நடைமுறையும் பின்பற்றப்படவில்லை," என்று அவர் கூறினார். அவர் தனது எக்ஸ் சமூக ஊடக பக்கத்தில் எழுதியபோது, இஸ்ரேல் தனது மக்கள் பாதுகாப்பாக திரும்புவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். https://www.bbc.com/tamil/articles/c9x2ddj67n4o
  17. இந்தியாவையும் பாகிஸ்தானையும் வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்த பங்களாதேஷ், ஐ.அ.இ Published By: DIGITAL DESK 3 16 DEC, 2023 | 10:26 AM (நெவில் அன்தனி) துபாய் ஐசிசி பயிற்சியக மைதானங்களில் வெள்ளிக்கிழமை (15) நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண அரை இறுதிப் போட்டிகளில் இந்தியாவையும் பாகிஸ்தானையும் முற்றிலும் எதிர்பாராத விதமாக முறையே வெற்றிகொண்ட பங்களாதேஷும் ஐக்கிய அரபு இராச்சியமும் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றன. இந்த அரை இறுதிப் போட்டிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் வெற்றிபெற்று இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரண்டு அணிகளும் பங்களாதேஷிடமும் ஐக்கிய இராச்சியத்திடமும் தோல்வி அடைந்து வெளியேறின. இந்தியாவுக்கு எதிராக ஐசிசி பயிற்சியக 2ஆம் இலக்க மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் மிகத் திறமையாக விளையாடிய பங்களாதேஷ் 4 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியது. மாறூப் ம்ரிதா, ஷெய்க் பாவெஸ் ஜிபொன் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகளும் அரிபுல் இஸ்லாம், அஹ்ரார் அமின் ஆகியோரின் சிறந்த துடுப்பாட்டங்களும் பங்களாதேஷை இறுதிப் போட்டிக்குள் இட்டுச் சென்றன. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி 42.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 188 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. 16ஆவது ஓவரில் இந்தியாவின் 6ஆவது விக்கெட் வீழ்ந்தபோது அதன் மொத்த எண்ணிக்கை 61 ஓட்டங்களாக இருந்தது. ஆனால், முஷீர் கான் (50), முருகன் அபிஷேக் (62) ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 85 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவை ஒரளவு கௌரவமான நிலையில் இட்டனர். அபிஷேக் 74 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகளையும் 2 சிக்ஸ்களையும் விளாசினார். பந்துவீச்சில் மாறூவ் ம்ரிதா 41 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஷெய்க் பாவெஸ் ஜிபொன் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரொஹானத் தௌல்லா போசன் 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணி 42.5 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 189 ஓட்டங்களை பெற்று அபார வெற்றியீட்டியது. அரிபுல் இஸ்லாம், அஹ்ரார் அமின் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 4ஆவது விக்கெட்டில் 138 ஓட்டங்ளைப் பகிர்ந்து பங்களாதேஷை வெற்றி அடையச் செய்தனர். அரிபுல் இஸ்லாம் 90 பந்துகளில் 9 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 94 ஓட்டங்களைக் குவித்ததுடன் அஹ்ரார் அமின் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 101 பந்துகளில் 3 பவுண்டறிகளுடன் 44 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் நாமல் திவாரி 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ராஜம் லிம்பானி 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: மாறுவ் ம்ரிதா. பாகிஸ்தானை சரித்தது ஐக்கிய அரபு இராச்சியம் ஐசிசி பயிற்சியக 1ஆம் இலக்க மைதானத்தில் நடைபெற்ற முதலாவது அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை அதிரவைத்த ஐக்கிய அரபு இராச்சியம் 11 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. துடுப்பாட்டத்தில் ஆரியன் ஷர்மா 46 ஓட்டங்களையும் இதான் டி சோஸா 37 ஓட்டங்களையும் அணித் தலைவர் ஆயன் அப்ஸால் கான் 55 ஓட்டங்களையும் பெற்றனர். இதான் டி சோஸா, ஆயன் அப்ஸால் கான் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 54 ஓட்ட இணைப்பாட்டம் அணியை ஓரளவு பலமான நிலையை அடைய உதவியது. பந்துவீச்சில் உபெய்த் ஷா 44 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் அரபாத் மின்ஹாஸ் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அலி அஷ்பண்ட் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 49.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 182 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. அஸான் அவாய்ஸ் (41), அணித் தலைவர் சாத் பெய்க் (50) ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 83 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு நம்பிக்கையைக் கொடுத்தனர். ஆனால் மத்திய மற்றும் பின்வரிசையில் அமிர் ஹசன் (27) தவிர்ந்த ஏனையவர்கள் துடுப்பாடத்தில் பிரகாசிக்கத் தவறியமை பாகிஸ்தானின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. பந்துவீச்சில் ஆய்மான் அஹமத் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹார்திக் பய் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெடகளையும் கைப்பற்றினர். மூன்று துடுப்பாட்ட வீரர்கள் ரன் அவுட் ஆக்கப்பட்டனர். ஆட்டநாயகன்: ஆயன் அப்ஸால் கான் https://www.virakesari.lk/article/171805
  18. இஸ்ரேல் தாக்குதலில் அல்ஜசீரா ஊடகவியலாளர் படுகாயம்: அம்புலன்ஸை தடுத்து நிறுத்தியதால் 5 மணிநேரத்தின் பின் ஊடகவியலாளர் உயிரிழப்பு Published By: RAJEEBAN 16 DEC, 2023 | 01:48 PM காசாவில் இடம்பெயர்ந்த மக்களிற்கான பாடசாலையொன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் அல்ஜசீராவின் புகைப்படப்பிடிப்பாளர் கொல்லப்பட்டுள்ளார். காசாவிற்கான அல்ஜசீராவின் தலைவர் காயமடைந்துள்ளார். கான்யூனிசின் தென்பகுதியில் உள்ள பர்ஹானா பாடசாலை தாக்குதலிற்குள்ளானதை தொடர்ந்து அதனை பார்வையிடுவதற்காக அல் ஜசீராவின் செய்தியாளர் வல்தஹ்தூஹ் புகைப்படப்பிடிப்பாளர் சாமர் அபு டோக்காவுடன் அந்த பாடசாலைக்கு சென்றுள்ளார், அவ்வேளை இஸ்ரேலின் ஆளில்லா விமானம் மீண்டும் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இஸ்ரேல் பத்திரிகையாளர்களையும் அவர்களது குடும்பத்தவர்களையும் இலக்குவைத்து தாக்குதல்களை மேற்கொள்கின்றது என அல்ஜசீரா தெரிவித்துள்ளது. சாமெர் காயங்களிற்குள்ளான பின்னர் ஐந்து மணித்தியாலங்கள் குருதி பெருக்கிற்குள்ளாகி உயிரிழந்தார் என தெரிவித்துள்ள அல்ஜசீரா இஸ்ரேலிய படையினர் அம்புலன்ஸ்களையும் மருத்துவ பணியாளர்களையும் தடுத்து நிறுத்தினர் எனவும் குற்றம்சாட்டியுள்ளது. காயமடைந்த பத்திரிகையாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இவர் இஸ்ரேலின் தாக்குதலில் தனது குடும்பம் முழுவதையும் இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/171827
  19. தமிழர்களின் பிரச்சினைகளை நிவர்த்தி செய்யாததால் 'இமயமலை பிரகடனத்தை' தமிழ் சிவில் சமூக குழுக்கள் நிராகரிப்பு - தவத்திரு வேலன் சுவாமிகள் 16 DEC, 2023 | 08:57 PM தமிழ் சிவில் சமூக குழுக்கள் தமிழர்களின் பிரச்சினைகளை நிவர்த்தி செய்யாததற்காக 'இமயமலை பிரகடனத்தை' நிராகரிக்கின்றன என சிவகுரு ஆதீனத்தின் முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்தார். நேற்று (15) ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்த அவர், அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாகவது : தமிழ் பல்கலைக்கழக மாணவர்கள், காணாமல் போனோர் குடும்பங்கள் உட்பட பாதிக்கப்பட்ட குழுக்கள், சமய குழுக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் கல்விமான்கள் என பலர் அடங்கிய தமிழ் சிவில் சமூக குழுக்கள், சங்காவின் சிறந்த இலங்கை (SBSL), உலகத் தமிழ் மன்றம் (GTF) இணைந்து 'இமயமலை பிரகடனத்தை' கூட்டாக நிராகரித்துள்ளன. இந்த இமயமலை பிரகடனத்தை ஆர்வத்துடன் படித்தோம். ஆனால், சுதந்திரத்துக்குப் பிறகு தமிழர்கள் அனுபவித்து வரும் வேதனைகள், தமிழர்களுக்கு உள்ள குறைகளை முற்றிலும் புறக்கணித்ததற்காக ஏமாற்றமடைந்தோம். வெளிப்படையாக, பௌத்த மதகுருமார்களுக்கு தமிழர்களின் குறைகள் பற்றி தெரியாது. ஏனெனில், அவர்கள் தமிழர் பகுதிகளுக்கு வெளியே சிங்களவர்களிடையே வசிப்பதால், நாம் எதை எதை கடந்து வந்தோம், தொடர்ந்து கடந்து வருகிறோம் என்பதை பற்றி எதுவும் தெரியாது. பதினான்கு வருடங்களுக்கு முன்னர் யுத்தம் முடிவடைந்த பின்னர், 'பொத்துவில் முதல் பொலிகண்டி வரை' போன்ற வெகுஜன பேரணிகள் மூலம் நேரடியாக எமது குறைகளை வெளிப்படுத்தியுள்ளோம். பாதுகாப்புப் படையினரின் மிரட்டல் மற்றும் தாக்குதல்களுக்கு மத்தியிலும் சுமார் அரை மில்லியன் தமிழர்கள் இணைந்து தமிழ்ப் பகுதிகளில் ஐந்து நாள் 'பொத்துவில் முதல் பொலிகண்டி வரை'யான அணிவகுப்பு பேரணியை வழிநடத்தியது. தமிழ் பல்கலைக்கழக மாணவர்களும், காணாமல் போனவர்களின் குடும்பங்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட குழுக்களும் தமிழர்களின் குறைகளை வெளிப்படுத்தும் வகையில் ஏராளமான போராட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள் மற்றும் ஊர்வலங்களை நடத்தினர். அவர்களின் குறைகள் எதுவும் இந்த பிரகடனத்தில் கவனிக்கப்படவில்லை. பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னர் யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழர்களால் வெளிப்படுத்தப்பட்ட பின்வரும் தமிழர்களின் குறைகளை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறோம். 1.போருக்கு முந்தைய 1983ஆம் ஆண்டு நிலைமைகளுக்கு தமிழர் பகுதிகளில் ஆயுதப் படைகளின் இருப்பை குறைத்தல். யுத்தம் முடிவடைந்து பதினான்கு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால், மே 2009இல் போரின் உச்சகட்டத்தில் இருந்ததைப் போலவே மோசமான இராணுவ புலனாய்வுப் பிரிவு உட்பட பாதுகாப்புப் படைகளின் பிரசன்னம் பராமரிக்கப்பட்டு வருகிறது. அமைதிக் காலத்தில் பொதுமக்கள் மத்தியில் அவர்களின் இருப்பு, இனப்படுகொலைகள் மற்றும் தமிழ்ப் பெண்களை பாதுகாப்புப் படையினரால் பெருமளவிலான பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட கடுமையான அட்டூழியங்களுக்கு முகங்கொடுத்த தமிழர்களுக்கு பல பாதுகாப்பு மற்றும் சமூகப் பிரச்சினைகளை உருவாக்குகிறது. 2. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு (ICC) இலங்கையைப் பார்க்கவும்: போர் முடிவடைந்து பதினான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், ஒரு பாதுகாப்புப் படை அதிகாரியோ அல்லது அரசியல் தலைவரோ நீதியை எதிர்கொள்ளவில்லை. - ஐ.நா. உள்ளாய்வு அறிக்கையின்படி, சுமார் எழுபதாயிரம் தமிழர்கள் 2009இல் நடந்த போரின் இறுதி ஆறு மாதங்களில் கொல்லப்பட்டனர். மேலும், ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் போனார்கள். மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகர் உட்பட பல ஐ.நா அதிகாரிகளின் கோரிக்கையின்படி, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு (ஐ.சி.சி) பரிந்துரைக்குமாறு நாங்கள் கோருகிறோம். 3. புராதன இந்து இடங்கள் உட்பட இந்துக் கோவில்களை அழிப்பதை நிறுத்தவும், பௌத்தர்கள் யாரும் வசிக்காத தமிழ் பகுதிகளில் புத்த கோவில்கள் கட்டுவதை நிறுத்தவும். 4. தமிழர் பிரதேசங்களில் அரச அனுசரணையுடன் சிங்கள குடியேற்றங்களை நிறுத்துதல் மற்றும் தமிழர் நிலங்களை அபகரிப்பதை நிறுத்துதல். 5. நீடித்து வரும் தமிழர் மோதலைத் தீர்க்க சர்வதேச அளவில் வாக்கெடுப்பு நடத்தவும் : சுதந்திரம் பெற்றதில் இருந்து நீடித்து வரும் தமிழர் மோதலுக்கான அடிப்படைக் காரணம் அர்த்தமுள்ள அரசியல் தீர்வு இல்லாததுதான். இந்த மோதலின் விளைவாக 1958, 1977, 1983 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் தமிழர்கள் பெருமளவில் கொல்லப்பட்டனர். தமிழ்த் தலைவர்களுக்கும் சிங்கள மேலாதிக்க அரசாங்கங்களுக்கும் இடையிலான பல ஒப்பந்தங்கள் ஒருதலைப்பட்சமாக அடுத்தடுத்த அரசாங்கங்களால் இரத்து செய்யப்பட்டன மற்றும் இந்தியா மற்றும் நோர்வேயின் சர்வதேச மத்தியஸ்தம் கூட தோல்வியடைந்தது. உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் உள்ளதைப் போலவே, ஜனநாயக ரீதியில் அரசியல் தீர்வினை காண்பதற்கு சர்வதேச அளவில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தமிழர்கள் பல முறை கோரிக்கை விடுத்துள்ளனர் என குறிப்பிடப்பட்டிருந்தது. https://www.virakesari.lk/article/171845
  20. பட மூலாதாரம்,AFP 16 டிசம்பர் 2023, 12:56 GMT புதுப்பிக்கப்பட்டது 59 நிமிடங்களுக்கு முன்னர் வளைகுடா நாடுகள் வரிசையில் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் எண்ணெய் வளம் மிகுந்த நாடாகப் பார்க்கப்படும் குவைத்தின் அமீர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபா வயது முதிர்வு காரணமாக இன்று மரணமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சி அறிவித்துள்ளது. குவைத் நாட்டை 263 ஆண்டுகளாக ஆண்டு வரும் சபா குடும்பத்தின் தொடர்ச்சியாக கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அந்நாட்டின் தலைவராகப் பதவியேற்றுக் கொண்டார் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத். இவர் யார்? அவரது வரலாறு என்ன? இங்கு விரிவாகப் பார்க்கலாம். ஷேக் நவாஃப் பிறப்பு குவைத்தில், “அமைதியான அதே நேரம் தேவையான நேரத்தில் தீர்க்கமான முடிவுகளை எடுப்பவர்,” என்று அழைக்கப்படும் சக்திமிக்க தலைவர்தான் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபா. கடந்த 1937ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி குவைத்தின் 10வது ஆட்சியாளரான ஷேக் அஹ்மத் அல்-ஜபர் அல்-சபாவுக்கு 5வது மகனாக பிறந்தவர் ஷேக் நவாஃப். இவரின் இளமைக் காலத்தில் குவைத்தில் உள்ள தாஸ்மன் அரண்மனையில் வளர்ந்த இவர் பள்ளிக்கல்வி மட்டுமே பெற்றவர். அரசு மற்றும் அரசியல் பொறுப்புகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 25 வயதாகும் போது 1961ஆம் ஆண்டு ஹவாலி பிராந்தியத்தின் கவர்னராக பொறுப்பேற்றுக் கொண்டார் இவர் அரசியல் பொறுப்புகளை வகிப்பதற்கு முன்னதாகவே மிக இளம் வயதிலேயே அரசாங்க ரீதியான பொறுப்புகளைக் கையாண்டவர். தனக்கு 25 வயதாகும்போது 1961ஆம் ஆண்டு ஹவாலி பிராந்தியத்தின் கவர்னராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த பதவியில் 1978ஆம் ஆண்டு வரை இருந்தார் ஷேக் நவாஃப். மேலும் இரண்டு முறை உள்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், சமூக விவகாரங்கள் மற்றும் தொழிலாளர் அமைச்சர், தேசிய காவல் படையின் துணைத் தலைவர் உள்ளிட்ட மூன்று அமைச்சர் பதவிகளையும் வகித்துள்ளார். கால வரிசைப்படி, 1988ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சர், 1991ஆம் ஆண்டு சமூக விவகாரங்கள் மற்றும் தொழிலாளர் அமைச்சகத்தின் இலாகாவின் பொறுப்பாளர், 1994ஆம் ஆண்டு துணை தேசிய பாதுகாப்பு தளபதி, 2003ஆம் ஆண்டு உள்துறை அமைச்சர், அதே ஆண்டு துணைப் பிரதமர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார் இவர். அரசியல் ஆற்றல் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, குவைத்தின் 16வது அமீராக தனது 83 வயதில் பதவியேற்றார் கடந்த 1990ஆம் ஆண்டில் குவைத் மீது இராக் போர் தொடுத்து ஆக்கிரமிப்பு செய்தபோதும், வளைகுடாப் போரின் தொடக்கத்திலும் ஷேக் நவாஃப்தான் குவைத்தின் பாதுகாப்பு அமைச்சராகச் செயல்பட்டார். பிறகு உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். இவரது சகோதரரின் ஆட்சிக் காலத்தோடு ஒப்பிடும்போது இவரின் மூன்றாடு கால ஆட்சி மிகவும் சொற்பமானது. அதிகம் தன்னை பொதுவெளிகளில் வெளிப்படுத்தி கொள்ளாத இவரை அல்-சபா குடும்பமே ஒருமித்த கருத்துடன் குவைத்தின் தலைவராக தேர்வு செய்துள்ளது. குடும்பத்திற்குள்ளும் சரி, மக்கள் மத்தியிலும் சரி நற்பெயரை பெற்றவராகவே அறியப்படுகிறார் ஷேக் நவாஃப். குவைத் மற்றும் இதர வளைகுடா நாடுகள் கொரோனா தாக்கத்தால் எண்ணெய் விலை மற்றும் பொருளாதாரத்தில் கடுமையான வீழ்ச்சி கண்டிருந்த சமயத்தில் குவைத்தின் தலைவர் பொறுப்பை ஏற்று தற்போது வரை அந்நாட்டை வழிநடத்தி வந்துள்ளார் அவர். எண்ணெய் வளம் மிக்க குவைத் நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட சிறிய நாடு குவைத். இதில் 60 சதவீதத்திற்கும் மேல் வெளிநாட்டு தொழிலாளர்கள். இருப்பினும் கல்ஃப் நாடுகள் வரிசையில் உச்சியில் இருக்கும் எண்ணெய் வளம் மிகுந்த செல்வ செழிப்பான நாடாக இருந்து வருகிறது குவைத். இதன் அரசியல் வரலாற்றில் வளைகுடா நாடுகளுக்குள் ஏற்படும் முரண்பாடுகளில் மத்தியஸ்தம் செய்வதில் தொடங்கிப் பல்வேறு சூழல்களில் இந்தப் பிராந்தியத்தின் முக்கிய அரசியல் சக்தியாக இருந்து வருகிறது குவைத். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அரசு அலுவலகங்கள் 3 நாட்கள் திறக்கப்படாது. புதிய அமீர் அறிவிப்பு தற்போது ஷேக் நவாஃப் மரணத்தைத் தொடர்ந்து குவைத்தில் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், அரசு அலுவலகங்கள் 3 நாட்கள் திறக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் நாட்டின் தலைவரின் மரணத்திற்குத் துக்கம் அனுசரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் மெஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா புதிய அமீராக அறிவிக்கப்பட்டுள்ளார். https://www.bbc.com/tamil/articles/c3gypnmryyjo
  21. Sri Lanka ArmyRanil Wickremesinghe 2 மணி நேரம் முன் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் பாரிய பொறுப்பு பாதுகாப்புப் படையினருக்கு இருப்பதாகவும், அதில் தலையிடவோ அல்லது கட்டுப்படுத்தவோ எவருக்கும் இடமளிக்க முடியாது எனவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மக்களின் இறைமையையும் இலங்கையின் தனித்துவத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு பாதுகாப்புத் தரப்பினருக்கும் உண்டு என சுட்டிக்காட்டிய அதிபர், இன மற்றும் மத ரீதியாக எவரேனும் செயற்பட முற்பட்டால் அது இலங்கையின் தனித்துவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் வலியுறுத்தினார். இன்று (16) முற்பகல் தியத்தலாவ சிறிலங்கா இராணுவ கல்வியற் கல்லூரியின் கெடட் அதிகாரிகள் விடுகை அணிவகுப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அதிபர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்நிகழ்வில் மேலும் கருத்துத் தெரிவித்த அதிபர் ரணில் விக்ரமசிங்க, பெருமை மிக்க வரலாற்றை கொண்ட இராணுவம் சிறிலங்கா இராணுவம் பெருமைமிக்க வரலாற்றைக் கொண்ட திறமையான இராணுவம் எனவும், அதன் பெருமையைப் பேணுவது அதனுடன் இணைந்த அனைவரினதும் பொறுப்பு எனவும் தெரிவித்தார். தனக்குக் கீழ் உள்ள அனைவருக்கும் அச்சமின்றி தலைமைத்துவத்தை வழங்குமாறு பிரசன்னமாகியிருந்த அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்ட அதிபர், இக்கட்டான காலங்களில் தலைமைத்துவம் வழங்கப்பட வேண்டுமெனவும், அதனை மனதில் கொண்டு நாட்டுக்கான பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் தெரிவித்தார். இலங்கை ஒரு இறையாண்மை கொண்ட நாடு இலங்கை ஒரு இறையாண்மை கொண்ட நாடு. நாங்கள் 1948 முதல் இறையாண்மை கொண்ட நாடாக செயற்பட்டு வருகிறோம். அந்த இறையாண்மை கொண்ட நாட்டின் அதிகாரம் மக்களுக்குரியது. அரசாங்கங்கள் மக்களின் வாக்குகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. மேலும் இந்த நாடு இலங்கை தனித்துவத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. நாம் அனைவரும் இலங்கையர்கள். இலங்கையர்களாகிய நாம் சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற எமது தேசியத்தை பாதுகாப்பதுடன் இலங்கையர் என்ற நாட்டின் தனித்துவத்தையும் பாதுகாக்க வேண்டும். பொருளாதாரம் வீழ்ச்சியடையும் போது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும். ஒரு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் போது என்ன நடக்கும் என்பதை கடந்த காலங்களில் நாம் அனுபவித்தோம். அப்போது நாட்டின் இறையாண்மை மட்டுப்படுத்தப்படும். நாட்டு மக்களை சமமாக நடத்தும் வகையில் சமூக முன்னேற்றமும் ஏற்பட வேண்டும். பொருளாதார முன்னேற்றமும் சமூக முன்னேற்றமும் இதன்போது மிக முக்கியம். இந்த கட்டமைப்பிற்குள் நாம் செயல்பட வேண்டும். ஒவ்வொரு குழுவுக்கும் இந்த கட்டமைப்பைப் பாதுகாக்கும் பொறுப்பு உள்ளது. அந்த பொறுப்பு அதிபர் முதல் கீழ்நோக்கிச் செல்கிறது. நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு இராணுவத்துக்கு உள்ளது. அதில் தலையிடவோ அல்லது கட்டுப்படுத்தவோ எவருக்கும் இடமளிக்க முடியாது. அதே சமயம் அதிகாரம் சார் மக்களின் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும். இலங்கையின் தனித்துவத்திற்கு கேடு விளைவிக்கும் அத்துடன் இலங்கையின் தனித்துவமும் பாதுகாக்கப்பட வேண்டும். அந்த தனித்துவத்தை பாதிக்கும் வகையில் எவரேனும் செயற்பட முற்பட்டால் அல்லது இன மற்றும் மத அடிப்படையில் தனித்தனியாக செயல்பட முயற்சித்தால் அது இலங்கையின் தனித்துவத்திற்கு கேடு விளைவிக்கும் செயற்பாடாகும். சிறிலங்கா இராணுவம் ஒரு புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்டுள்ளது. ஆசியாவில் நவீன இராணுவங்கள் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில், இலங்கை நான்காவது இடத்தில் இருந்தது. 1881 இல், இலங்கை காலாட்படை ஆரம்பிக்கப்பட்டபோது, நாங்கள் அந்த நிலையை அடைந்தோம். மேலும், வரலாற்றில் இடம்பெற்ற ஒவ்வொரு பாரிய போர்களிலும் நமது பாதுகாப்புப் படைகள் பங்கேற்றுள்ளன. இந்த பெருமைமிக்க இராணுவத்தின் கௌரவத்தை பாதுகாப்பது உங்களின் பொறுப்பாகும். பொறுப்புகளை புறக்கணிக்காதீர்கள் நீங்கள் தலைமை தாங்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். அச்சமின்றி அந்தத் தலைமையை உங்களுக்கு கீழ் உள்ள அனைவருக்கும் வழங்குங்கள். உங்கள் பொறுப்புகளை புறக்கணிக்காதீர்கள். குறிப்பாக கடினமான காலங்களில்தான், தலைமைத்துவம் முன்னோக்கிச் செல்ல வேண்டும். அந்தக் கடமையை நினைவில் வைத்து நாட்டுக்கான பொறுப்பை நிறைவேற்றுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, பாதுகாப்புப் பதவிநிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்ரினன் ஜெனரல் விக்கும் லியனகே, தியத்தலாவ இராணுவ கல்வியற் கல்லூரியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷார மகலேகம், உட்பட சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் கலைந்து சென்ற கெடட் உத்தியோகத்தர்களின் பெற்றோர்கள் உட்பட அதிதிகள் குழுவினர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://ibctamil.com/article/no-one-can-control-the-soldiers-ranil-1702729918
  22. வடக்கு, கிழக்கில் எதிர்வரும் 19 வரை கனமழை தொடரும் : தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் சுழற்சிக் காற்று தோன்றவும் வாய்ப்பு! 16 DEC, 2023 | 06:19 PM வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெய்து வருகிற மழையானது எதிர்வரும் 19ஆம் திகதி வரை தொடரக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். மழை நிலைமை தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இலங்கைக்கு கீழாக காணப்படுகின்ற காற்றடுக்கு சுழற்சி காரணமாக தற்பொழுது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழை எதிர்வரும் 19ஆம் திகதி வரை தொடரக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றமையை அவதானிக்க முடிகிறது. ஏற்கனவே இலங்கையின் வடக்கு மாகாணத்தின் தரை மேல் நீர்பரப்புக்கள், அவற்றின் உவர் நீரை வெளியேற்றுகின்ற இந்த சூழ்நிலையில், தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகவும் பல்வேறு பகுதிகளில் உள்ள தாழ் நிலங்களில் வெள்ள அனர்த்தத்துக்கான அபாய நிலை தென்படுவதாக அறிய முடிகிறது. எனவே, தொடர்ச்சியாக மழை பெய்யும் என்பதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருப்பது அவசியமானதாகும். மீண்டும் ஒரு காற்று சுழற்சி இலங்கையின் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் தோன்றுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதால் தொடர்ச்சியாகவும் மழை நீடிப்பதற்கான வாய்ப்புகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்படுகிறது. தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் இந்த தாழ்நில பகுதிகளில் உள்ள மக்கள் மழைவீழ்ச்சி தொடர்பான அளவு தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியமானதாகும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/171848
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.