Jump to content

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    19194
  • Joined

  • Last visited

  • Days Won

    12

Everything posted by ஏராளன்

  1. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 7 மணி நேரங்களுக்கு முன்னர் ஆக்ரோஷமான இடதுகை பேட்டிங் , சிறந்த தொடக்க ஆட்டக்காரர் மட்டுமின்றி, களத்தில் நங்கூரமிட்டால், ஸ்விட்ச் ஹிட் பேட்டிங்கை சிறப்பாக கையாளக் கூடியவர். ஆப்சைடில் அதிகமாக விளையாடக் கூடியவர், டெஸ்ட் போட்டிகளில் ஸ்ட்ரைக் ரேட்டை ஒருபோதும் 52க்கு குறைவில்லாமல் வைத்துள்ளவர் டேவிட் வார்னர். டி20 நிபுணராக சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகினாலும் சட்டென தன்னை ஒருநாள், டெஸ்ட் போட்டிகளுக்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டவர் டேவிட் வார்னர். ஆஸ்திரேலிய அணியில் உள்ள சிறந்த பீல்டர்களில் வார்னரும் குறிப்பிடத்தகுந்தவர். வார்னர் களத்தில் இருந்தாலே பெரும்பாலும் பீல்டிங்கை கோட்டைவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தது இல்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES 132 ஆண்டு வரலாற்றை திருத்தி எழுதியவர் ஆஸ்திரேலியக் கிரிக்கெட்டின் 132 கால வரலாற்றில் முதல் தரப் போட்டிகளில் விளையாடி தனது திறமையை நிரூபிக்காமல் ஒரு வீரர் தேசிய அணிக்குள் நுழையவே முடியாது. ஆனால், அனைத்தையும் முறியடித்து, முதல்தரப் போட்டிகளில் இடம் பெறாமலேயே தேசிய அணிக்குள் இடம் பெற்ற முதல் வீரர் டேவிட் வார்னர்தான். ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன், உலகக் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவர், இந்த தலைமுறையின் தலைசிறந்த பேட்டர், சர்ச்சைகளின் நாயகன் என்று வார்னரை அழைக்கலாம். டேவிட் வார்னர் தனது ஆஸ்திரேலிய அணியில் மட்டுமல்லாமல் பிக்பாஷ் லீக், ஐபிஎல் தொடர் என எதில் இடம் பெற்றாலும் தான் சார்ந்த அணிக்காக எந்தவிதமான சமரசமின்றி விளையாடி கோப்பையை வென்றுதரக்கூடிய மேட்ச் வின்னராகவே விளங்கினார். ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தது வார்னர் தலைமைதான். டெல்லி கேபிடல்ஸ் அணியிலும் இடம்பெற்று தனது திறமையை நிரூபிக்க வார்னர் தவறியதில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தது வார்னர் தலைமைதான். டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் ஓய்வு கிரிக்கெட்டிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாத, கிரிக்கெட்டை முழுமையாக நேசித்த டேவிட் வார்னர், டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக நடந்து வரும் 3ஆவது டெஸ்ட் போட்டியுடன் டேவிட் வார்னர் எனும் மகத்தான பேட்டரை ஆஸ்திரேலிய அணி இழக்கிறது என்றுதான் கூற முடியும். வார்னர் இடம் வெற்றிடமாக மாறும் இனிமேல் ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர் போன்ற சிறந்த தொடக்க ஆட்டக்காரரை தேடி எடுக்க வேண்டிய மிகப்பெரிய சவால் ஆஸ்திரேலிய நிர்வாகத்துக்கு வந்துள்ளது. ஆடம் கில்கிறிஸ்ட், மார்க் டெய்லர், மேத்யூ ஹெய்டன், ஷேன் வாட்ஸன் போன்றோர் சென்றபின் அடுத்தடுத்து ஜாம்பவான்கள் அணிவகுத்து இருந்ததால், ஆஸ்திரேலிய வாரியத்தின் பணி எளிதாக இருந்தது ஆனால், தற்போதுள்ள ஆஸ்திரேலிய அணியில் இருக்கும் வீரர்கள் வார்னர் இடத்தை எவ்வாறு நிரப்பப் போகிறார்கள் என்பது பெரிய கேள்வியாக இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES வலக்கையிலிருந்து இடக்கைக்கு மாறியவர் கடந்த 1986ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி சிட்னியின் புறநகரான பேடிங்டன் பகுதியில் பிறந்தவர் டேவிட் வார்னர். டேவிட் வார்னர் இடதுகை பழக்கம் கொண்டவராக இருந்தாலும், தொடக்கத்தில் கிரிக்கெட் பயிற்சி எடுத்தபோது வலதுகை பேட்டிங் செய்து வந்தார், அப்போது அவரால் பந்தை அதிக தொலைவுக்கு அடிக்க முடிந்தது. ஆனால், வார்னரின் தாயார் லோரன் வார்னர் அதற்கு சம்மதிக்கவில்லை வார்னருக்கு இடதுகை பேட்டராகவே பயிற்சி அளிக்க வேண்டும் என்று பயிற்சியாளரிடம் தெரிவித்தார். அதன்பின் வார்னர் இடதுகை பேட்டராகவே மாறி பயிற்சிஎடுத்தார். 16வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் சிட்னி கோஸ்டர் கிரிக்கெட் கிளப்பில் சேர்ந்து வார்னர் சிறப்பான ஆட்டத்தை நிரூபித்தார். இதையடுத்து வார்னரின் 19வயதில் மாநில கிரிக்கெட் அணியின் ஒப்பந்தமும் கிடைத்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இடதுகை பழக்கம் கொண்டவராக இருந்தாலும், தொடக்கத்தில் கிரிக்கெட் பயிற்சி எடுத்தபோது வலதுகை பேட்டிங் செய்து வந்தார் வார்னர். உள்நாட்டுப் போட்டிகளில் வார்னர் 2008ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதி நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக ஆடிய வார்னர். டாஸ்மானியா அணிக்கு எதிராக முதல்முறையாக உள்நாட்டில் சதம் அடித்தார். 2009ம் ஆண்டு நடந்த ஷெப்பீல்டு ஷீல்ட் சீசனிலும் முதல்முறையாக நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக முதல்தரப் போட்டியில் மேற்கு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக களமிறங்கினார். 6-வது வரிசையில் களமிறங்கிய வார்னர் 48 பந்துகளில் 42 ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக வார்னர் விளையாடியபோது, உள்நாட்டில் ஒருநாள் போட்டியில் அதிக ரன் அடித்த பேட்டர் என்ற பெருமையைப் பெற்றார். 141 பந்துகளில் 197ரன்கள் குவித்து வார்னர் சாதனை செய்து அசத்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முதல் டி20 போட்டியிலேயே அசத்திய டேவிட் வார்னர் 43 பந்துகளில் 86 ரன்கள் குவித்து மிரட்டினார். 1877ம் ஆண்டுக்குப்பின் முதல்வீரர் டேவிட் வார்னரின் சாதனையையும், பேட்டிங் திறமையையும் பார்த்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அவரை 2009ஆம் ஆண்டு, தேசிய அணிக்குத் தேர்வு செய்தது. இதையடுத்து, 2009, ஜனவரி 11ம் தேதி மெல்போர்னில் நடந்த டி20 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டேவிட் வார்னர் அறிமுகமாகினார். 1877ம் ஆண்டுக்குப்பின் ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் வரலாற்றில் முதல்தரப் போட்டிகளில் அனுபவமே இல்லாத ஒரு வீரரை தேசிய அணிக்குள் தேர்ந்தெடுத்தது என்றால் அது டேவிட் வார்னர் மட்டும்தான். முதல் போட்டியிலேயே அசத்திய டேவிட் வார்னர் 43 பந்துகளில் 86 ரன்கள் குவித்து மிரட்டினார். டி20 போட்டி அறிமுகத்திலேயே 86 ரன்கள் குவித்து வார்னர் அசத்தினார். 2011, டிசம்பர் 1ம் தேதி, பிரிஸ்பேனில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் வார்னர் அறிமுகமாகினார். ஷேன் வாட்ஸன் காயத்தால் அணியில் இடம் பெறமுடியாமல் போகவே, வார்னருக்கு வாய்ப்புக் கிடைத்தது. முதல் இன்னிங்ஸில் 3 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 12 ரன்களும்சேர்த்து அணியின் வெற்றிக்கு வார்னர் காரணமாகினார். 2ஆவது போட்டியிலேயே டேவிட் வார்னர் சதம் அடித்து 123ரன்கள் சேர்த்து ஜஸ்டின் லாங்கர், ஹெய்டன் சாதனையை முறியடித்தாலும் அந்தப் போட்டியில் நியூசிலாந்து வெற்றியைத் தடுக்க முடியவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வார்னர் 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6,932 ரன்கள் குவித்து, 45.30 சராசரி வைத்துள்ளார் வார்னரின் சாதனைகள் 2009ம் ஆண்டு ஹோபர்ட்டில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில்தான் வார்னர் முதல்முறையாக ஒருநாள் போட்டியில் அறிமுகமாகினார். இதுவரை வார்னர் 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6,932 ரன்கள் குவித்து, 45.30 சராசரி வைத்துள்ளார். இதில் 22 சதங்கள், 33 அரைசதங்கள் அடங்கும். வார்னர் என்றாலே அதிரடி தொடக்க ஆட்டக்காரர், களத்தில் நங்கூறமிட்டுவிட்டால் சதம் அடிக்காமல் செல்லமாட்டார் என்ற மிரட்டலான பாணியை தனக்கே உரிய ஸ்டைலில் கடைசி வரை பராமரித்தவர் டேவிட் வார்னர். ஆஸ்திரேலிய அணியில் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கிற்கு(29) அடுத்தார்போல் அதிகமாக 22 சதங்களை அடித்தவரும் வார்னர்தான். டேவிட் வார்னர் இதுவரை 111 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,695 ரன்கள் சேர்த்துள்ளார் . இதில் 26 சதங்கள், 36 அரைசதங்கள் அடங்கும், 45 ரன்கள் சராசரி வைத்துள்ளார். அதேபோல 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய வார்னர் 22 சதங்கள், 33 அரைசதங்களுடன் 6,932 ரன்கள் சேர்த்துள்ளார். 99 டி20 போட்டிகளில் விளையாடிய வார்னர் ஒரு சதம், 24 அரைசதங்களுடன் 2894 ரன்கள் குவித்துள்ளார். ஒட்டுமொத்தமாக 356 டி20 போட்டிகளில் விளையாடிய வார்னர் 11695 ரன்கள் குவித்துள்ளார். இதில் 8 சதங்கள், 99 அரைசதங்கள் அடங்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2023 உலகக் கோப்பைத் தொடரில் 11 போட்டிகளில் 535 ரன்கள் சேர்த்து தனது திறமையை நிரூபித்துள்ளார் வார்னர். ஆஸ்திரேலிய அணி இருமுறை (2015,2023) ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற போதும், 2021ல் டி20 உலகக் கோப்பையை வென்றபோதும், 2022ல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை வென்றபோதும் அணியில் இருந்த பங்களிப்பை செய்தவர் டேவிட் வார்னர். டேவிட் வார்னர் டி20 வீரராக அறிமுகமாகி, டி20 வீரராகவே வளர்ந்தாலும், ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்புக் கிடைத்து அதில் விளையாடும்போது தனது ஆட்டத்தின் பாணியை மாற்றிக்கொள்ளத் தயங்காதவர். 2015ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் 8 போட்டிகளில் 345 ரன்கள் சேர்த்த வார்னர், 2023 உலகக் கோப்பைத் தொடரில் 11 போட்டிகளில் 535 ரன்கள் சேர்த்து தனது திறமையை நிரூபித்துள்ளார். 2016 காலண்டர் ஆண்டில் மட்டும் ஒருநாள் போட்டிகளில் 7 சதங்களை வார்னர் அடித்து, சச்சின் டெண்டுல்கருக்குபின் 2ஆவதாக இடம் பெற்றார். 93 ஒருநாள் போட்டிகளில் 4ஆயிரம் ரன்களை எட்டிய வார்னர், 5ஆயிரம், 6ஆயிரம் ரன்களை அதிவிரைவாக எட்டிய வீரர் என்ற பெருமையும் பெற்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிக்பாஷ் லீக்கில் சிட்னி சிக்ஸர் அணிக்காக கேப்டன் பொறுப்பேற்று சிறப்பாக வார்னர் செயல்பட்டுள்ளார். கேப்டனாகவும் ஜொலித்த வார்னர் டேவிட் வார்னர் சிறந்த பேட்டர் என நிரூபித்த அதேநேரத்தில் சிறந்த கேப்டன் என்பதையும் அவர் ஆஸ்திரேலிய அணிக்காக தலைமை ஏற்றபோதும், பிக்பாஷ் லீக்கிலும், ஐபிஎல் தொடரிலும் நிரூபிக்க அவர் தவறவில்லை. ஆஸ்திரேலிய அணிக்கு ஒருநாள் போட்டிகளில் 3 போட்டிகளில் வழிநடத்திய வார்னர் 3 வெற்றிகளையும், டி20 போட்களில் 9 ஆட்டங்களில் கேப்டனாக செயல்பட்ட வார்னர் 8 வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்தார். வார்னருக்குள் இருந்த தலைமைப் பண்பு, ஐபிஎல் டி20 தொடரில் சன்ரைசர்ஸ் அணியில் வெளிப்பட்டது. ஆஸ்திரேலிய அணிக்கு துணைக் கேப்டனாகவும், கேப்டனாகவும் வார்னர் பணியாற்றியுள்ளார். பிக்பாஷ் லீக்கில் சிட்னி சிக்ஸர் அணிக்காக கேப்டன் பொறுப்பேற்று சிறப்பாக வார்னர் செயல்பட்டுள்ளார். ஐபிஎல் டி20 லீக்கில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக கேப்டனாக செயல்பட்ட வார்னர் கோப்பையையும் வென்று கொடுத்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஐபிஎல் லீக்கும் வார்னரும் ஐபிஎல் டி20 தொடரில் வெற்றிகரமான வெளிநாட்டு பேட்டராக வார்னர் வலம் வருகிறார். ஐபிஎல் தொடரில் மட்டும் 6 ஆயிரம் ரன்களைக் குவித்த வார்னர், இதுவரை 3 முறை ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியுள்ளார். 2009 முதல் 2014ம் ஆண்டுவரை டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ஆடிய வார்னர் 2014 ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் வார்னர் வாங்கப்பட்டார். 2015ம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட வார்னர், தொடரிலேயே முன்னணி ரன் குவித்து சாதித்தார். 2016ம் ஆண்டில், வார்னர் தலைமையில் ஆர்சிபி அணியை வென்று இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் அணி கோப்பையை வென்றது. 2018ம் ஆண்டிலும் சன்ரைசர்ஸ் அணிக்கு வார்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டாலும், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக பந்தை சேதப்படுத்திய புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார். 2019ம் ஆண்டு மீண்டும் விளையாட வந்த வார்னர் முதல் போட்டியிலேயே 85 ரன்களும், அந்த சீசனில் 600 ரன்களுக்கு மேல் குவித்தார். 2020ம் ஆண்டில் வில்லியம்சனுக்குப் பதிலாக வார்னரிடம் கேப்டன் பதவி தரப்பட்டது. ஆனால், கேப்டனாக வார்னர் வந்தபின் சன்ரைசர்ஸ் ஒரு போட்டியில் மட்டுமே வென்றதால், வார்னர் அணியிலிருந்து நீக்கப்பட்டார். பல்வேறு காரணங்களால் அணியில் தொடரமுடியாத நிலையில் வார்னரை டெல்லி கேபிடல்ஸ் அணி மீண்டும் விலைக்கு வாங்கியது.2023 ஐபிஎல் சீசனில் வார்னர் 432 ரன்களை டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக குவித்தார். ஐபிஎல் டி20 தொடர் தவிர்த்து இங்கிலாந்தில் கவுன்டி அணிகளான துர்ஹம், மிடில்செக்ஸ் கவுன்டி, குளோபல் டி20 கனடா, வங்கதேச டி20 லீக், பாகிஸ்தான் டி20 சூப்பர் லீக்கிலும் வார்னர் விளையாடியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2015ம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட வார்னர், தொடரிலேயே முன்னணி ரன் குவித்து சாதித்தார். வார்னரின் மைல்கல்கள் ஆஸ்திரேலியாவில் சிறந்த கிரிக்கெட் வீரருக்கு வழங்கப்படும் ஆலன் பார்டர் விருதை தொடர்ந்து 2முறை வாங்கிய 4வது வீரர் வார்னர். டி20 வரலாற்றில் ஷேன் வாட்ஸன், வார்னர் தொடக்க ஜோடி சேர்ந்து 1,108 ரன்கள் குவித்துள்ளர், இதுவரை இருவரின் பார்ட்னர்ஷிப்பை எந்த நாட்டு வீரர்களாலும் முறியடிக்க முடியவில்லை. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சுனில் கவாஸ்கருக்கு அடுத்தாற்போல், தொடர்ந்து 3 டெஸ்ட் சதங்களைக் குவித்து ஆடம் கில்கிறிஸ்ட்டுக்கு அடுத்தாற்போல் வார்னர் மட்டும்தான். டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 4 ஆயிரம் ரன்களைக் கடந்த 4ஆவது ஆஸ்திரேலிய பேட்டரும் வார்னர்தான். 100ஆவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த 8-வது சர்வதேச பேட்டரும் வார்னர்தான். இதற்கு முன் கிரீனிட்ஜ், கிறிஸ் கெயின்ஸ், அசாருதீன், குமார சங்கக்கரா, கிறிஸ் கெயில், டிரஸ்கோத்திக், ராம்நரேஷ் சர்வான் ஆகியோர் இந்த சாதனையைச் செய்திருந்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடால் 17 முறை ஆட்டமிழந்தவரும் டேவிட் வார்னர் மட்டும்தான். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே பந்துவீச்சாளரிடம் அதிகமுறை விக்கெட்டை இழந்தவரும் வார்னர் மட்டும்தான். பட மூலாதாரம்,GETTY IMAGES சர்ச்சைகளின் நாயகன் வார்னர் டேவிட் வார்னர் என்றால் அதிரடியான பேட்டிங் என்பது நினைவுக்கு வருகிறதோ இல்லையோ அவருடைய சர்ச்சைகள் கவனத்துக்கு வந்துவிடும். குறிப்பாக 2013 ஐசிசி சாம்பியன் டிராபி போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்துக்கு முன் மதுபாரில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டுடன் தகராறு செய்து அவரை வார்னர் தாக்கியது பெரிய சர்ச்சையானது. இங்கிலாந்து அணியுடன் அடைந்த தோல்வியால் ஆஸ்திரேலிய துவண்டுகிடந்த போது, வார்னர் மதுபாரில் இருந்தபோது இரு வீரர்களும் மோதிக்கொண்டனர். இந்த விவகாரத்தில் வார்னருக்கு அபராதமும், சில போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலிய நிர்வாகம் தடையும் விதித்தது. 2013ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஏ அணியில் வார்னர் விளையாடியபோது, தென் ஆப்பிரிக்க ஏ அணி வீரரும் விக்கெட் கீப்பருமான தமி சோல்கிலேயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் சர்ச்சையானது. இருமுறை நடுவர்கள் களத்தில் வாக்குவாதத்தை விலக்கிவிட்டாலும், இது முறைப்படி புகராக பதிவாகவில்லை என்பதால், வார்னர் தப்பித்தார். நியூசிலாந்து முன்னாள் கேப்டன் மார்டின் குரோவ் வெளிப்படையாகவே வார்னரின் அநாகரீகமற்ற செயல்கள், நடவடிக்கைகளை கண்டித்து, களத்தில் மரியாதைக் குறைவாக நடப்பவர்களுக்கு எதிராக ரெட் கார்டு, மஞ்சள் அட்டை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 2018ம் ஆண்டு, தென் ஆப்பிரிக்க பயணத்தின்போது, வார்னர் மனைவி குறித்து தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் டீ காக் பேசிய விதம் இருவருக்கும் இடையே மோதலை உருவாக்கியது. இதையடுத்து, பந்தை சேதப்படுத்தும் திட்டத்தை வார்னரும், கேப்டன் ஸ்மித்தும் செயல்படுத்தி சிக்கலில் மாட்டிக்கொண்டனர். இந்த விவகாரத்தில் வார்னருக்கும், ஸ்மித்துக்கும் ஓர் ஆண்டு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. 2018ம் ஆண்டு மார்ச் மாதம் கேப்டவுனில் நடந்த தென் ஆப்பிரி்க்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வார்னர் ஆட்டமிழந்து சென்றபோது, பார்வையாளருடன் நடந்த வாக்குவாதம் கடுமையாக கண்டிக்கப்பட்டது. இதுபோன்று களத்திலும், வெளியேயும் வார்னர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியர்களின் மனம் கவர்ந்தவர் ஆஸ்திரேலிய வீரராக இருந்தாலும் இந்தியாவிலும் மற்ற எந்த வெளிநாட்டு வீரர்களை விடவும் அதிகமாகப் பிரபலமானவர் டேவிட் வார்னர். இந்தியத் திரைப்பட நடனங்களுக்கு சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிடுவது இந்தியர்களுடன் அவரை நெருக்கமாக்கியது. இந்தியப் பாரம்பரிய உடைகளை அணிவது, இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகளுக்காக கருத்துக் கூறுவது என அவரது சமூக வலைத்தள பதிவுகள் இந்தியர்கள் மத்தியில் பிரபலமானவை. அவருக்கு கிரிக்கெட் ஆட ஓராண்டு தடை விதிக்கப்பட்டபோது, இந்தியாவில் இருந்து ஆதரவுக் குரல்கள் எழுந்ததையும் கேட்க முடிந்தது. https://www.bbc.com/tamil/articles/cz9eq3ygg6yo
  2. அமெரிக்காவில் மீண்டும் பாடசாலையில் துப்பாக்கி சூட்டு சம்பவம் - பலர் பலியாகியிருக்கலாம் என அச்சம் Published By: RAJEEBAN 04 JAN, 2024 | 10:00 PM அமெரிக்காவின் அயோவாவின் பெரி உயர் தரப்பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பலர் பலியாகியிருக்கலாம் என அச்சம் வெளியாகியுள்ளது. துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகின்றனர் என தெரிவித்துள்ள மருத்துவமனை வட்டாரங்கள் எத்தனை பேர் கொல்லப்பட்டுள்ளனர் காயமடைந்துள்ளனர் என்பதை தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/173158
  3. அமெரிக்காவின் குற்றச்சாட்டை நிராகரித்த ரஷ்யா! உக்ரைன் மீதான போரில் வடகொரியாவினால் வழங்கப்பட்ட, ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்தியுள்ளதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. தேசிய பாதுகாப்பு பேரவையின் பேச்சாளர் ஜோன் கிர்பி இதனைத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு பேரவையில் இந்த விடயம் தொடர்பில், அவதானம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆயுத பரிமாற்றத்தை எளிதாக்கும் தரப்பினருக்கு எதிராக கடும் பொருளாதார விதிப்பதற்கான விவாதங்கள் அதன்போது முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டை ரஷ்யா நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/287073
  4. எதிர்வரும் 7ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரையான வாரத்தை விசேட டெங்கு ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. டெங்கு நோயாளர்களின் கணிசமான அதிகரிப்பு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர, கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தெரிவித்துள்ளார். தொடரும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் டெங்கு பரவும் அதிக ஆபத்துள்ள 70 வலயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை அதிகளவில் முன்னெடுப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. முப்படையினர், பொலிஸார், சுகாதார அதிகாரிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த டெங்கு ஒழிப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். தேசிய டெங்கு தடுப்பு பிரிவின் புள்ளிவிபரத்தின் அடிப்படையில், கடந்த வருடத்தில் 88 ஆயிரத்து 398 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டனர். கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியிருந்ததுடன், டெங்கு நோயினால் கடந்த வருடத்தில் மாத்திரம் 58 பேர் உயிரிழந்தனர். https://thinakkural.lk/article/287067
  5. Published By: VISHNU 04 JAN, 2024 | 09:39 PM (எம்.ஆர்.எம்.வசீம்) வற்வரி அதிகரிப்பு குறுகிய காலத்துக்காகும், மக்களுக்கு விரைவாக நிவாரணம் வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்திருக்கிறார். அதனால் வீழ்ச்சியடைந்திருக்கும் பொருளாதாரத்தை ஸ்திரநிலைக்கு கொண்டுவர சிறிது காலத்துக்கு அனைத்து மக்களும் சற்று பொறுமையாக இருக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் வியாழக்கிழமை (4) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், வற்வரி அதிகரிப்பால் பொருளாதார ரீதியில் மக்களுக்கு பாரிய கஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. என்றாலும் இந்த வற் வரி அதிகரிப்பு குறுகிய காலத்துக்காகும். மக்களுக்கு விரைவாக நிவாரணம் வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்திருக்கிறார். அதேநேரம் அத்தியாவசிய பொருட்களுக்கு இந்த வற்வரி அதிகரிக்கப்படவில்லை. குறிப்பாக கல்வி, சுகாதார துறை சார்ந்த பொருட்களுக்கு இந்த வரி அதிகரிக்கப்படவில்லை. அத்துடன் 15வீதமாக இருந்ததை தற்போது 18 வீதமாக அதிகரித்திருக்கிறோம். ஏற்கனவே வரி விலக்களிக்கப்பட்டிருந்த ஒரு சில பொருட்களுக்கே தற்போது 18வீத வரி அதிகரிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பல வருடங்களுக்கு பின்னர் அரசாங்கத்தின் அனைத்து கொடுப்பனவுகளும் கடந்த டிசம்பர் 31ஆம் திகதிக்குள் கொடுத்த முடிப்பதற்கு திறைசேரிக்க இம்முறை முடியுமாகி இருந்துள்ளது. பணம் அச்சிடாமலே இதனை செய்ய முடியுமாகி இருக்கிறது. ஜனாதிபதியின் சிறந்த நிதி முகாமைத்துவமே இதற்கு காரணமாகும். கடந்த காலங்களில் பணம் அச்சிட்டே மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வந்தது. அதனால் நாட்டின் பணவீக்கம் அதிகரித்தது. ஆனால் ஜனாதிபதி சரியான முறையில் நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போது மக்களுக்கு கஷ்டம் ஏற்படும். என்றாலும் குறுகிய காலத்துக்கு இதனை பொறுத்துக்கொண்டால் எதிர்காலம் சுபீட்சமாக அமையும். அதற்காகவே வற்வரி அதிகரிக்கப்பட்டிருக்கிறது. பெப்ரவரி மாதமாகும்போது மின் கட்டணத்தை குறைக்க இருக்கிறது. அதேநேரம் பொருட்களின் விலையும் குறைவடையும். அத்துடன் வீழ்ச்சியடைந்திருக்கும் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேறு மாற்று வழி இல்லாததாலே ஜனாதிபதி இந்த வழியில் செல்கிறார். வேறு மாற்று வழி இருந்தால் இதனை விமர்சிப்பவர்கள் அதனை தெரிவிக்க வேண்டும். அதனால் மக்கள் இவர்களின் பாெய் பிரசாரங்களை ஏற்றுக்கொண்டு செயற்பட்டால் நாடு அழிவின்பால் சென்றுவிடும். அவ்வாறான நிலை ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அதனால் வீழ்ச்சியடைந்திருக்கும் பொருளாதாரத்தை ஸ்திரநிலைக்கு கொண்டுவர ஜனாதிபதி பாரிய முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார். எனவே இதன்போது ஏற்படுகின்ற கஷ்டங்களை குறுகிய காலத்துக்கு அனைத்து மக்களும் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/173144
  6. ஒத்தப்பேடி யார் என கண்டுபிடிச்சிட்டன். தொடருங்கள் ஐயா.
  7. 6 மணி நேரங்களுக்கு முன்னர் நாட்டில் பெரும்பாலான அரசுகள் நீதித்துறைக்கு அழுத்தம் கொடுப்பதாகவும், அது பல ஆண்டுகளாக நடந்து வருவதாகவும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் கூறியுள்ளார். பிபிசி உடனான சிறப்பு நேர்காணலில் பேசிய ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், இந்த மாதிரியான அழுத்தங்கள் 1950 முதலே இருந்து வந்துள்ளதாகக் கூறியுள்ளார். கடந்த 1975ஆம் ஆண்டு முதல் 1977 ஆண்டு வரையான காலத்தைக் குறிப்பிட்டுப் பேசிய சஞ்சய் கிஷன் கவுல், அப்போது நீதித்துறை மீது பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டதாகவும் அவர் பகிர்ந்தார். பேச்சு சுதந்திரம் குறித்துப் பேசிய நீதிபதி சஞ்சய், அது ஒரு சமூகப் பிரச்னை என்று கூறினார். பிபிசியுடனான இந்த நேர்காணலில், சமூகத்தில் பேச்சு சுதந்திரப் பிரச்னைகள் தற்போது அதிகரித்துள்ளதை அவர் ஒப்புக்கொண்டார். பிபிசிக்கு அளித்த பேட்டியில், நீதிபதிகள் நியமனம், தன்பாலினத்தவர் திருமணம் மற்றும் 370வது பிரிவு ஆகியவற்றில் எடுக்கப்பட்ட முடிவுகளையும் அவர் ஆதரித்தார். கடந்த டிசம்பர் மாதம் உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி வந்த சஞ்சய் கிஷன் கவுல் ஒய்வு பெற்றார். தற்போது 56 வயதான சஞ்சய் கிஷன் கவுல், 1982இல் வழக்கறிஞராகப் பதிவு செய்து, டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். இவர், மே 2001இல் டெல்லி உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகப் பதவியேற்றார். பின், 2015இல் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற இவர், 2016இல் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றினார். நீதித்துறை அன்றும் இன்றும் பட மூலாதாரம்,GETTY IMAGES கேள்வி: கடந்த காலங்களில் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்புகளைப் போலவே இப்போதும் வழங்கலாமா அல்லது, அதில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா? நீதிபதி கவுல்: “இதுதான் நடைமுறை. நீங்கள் 1950 முதல் பார்த்தால், அப்போதிருந்து இந்த நடைமுறைதான் இருந்து வருகிறது. கடந்த 1975 முதல் 1977 வரையிலான காலகட்டத்தில் ஒரு வகையான நடைமுறை இருந்தது. நீதித்துறைக்கும் நிர்வாகத்துறைக்கும் இடையில் எப்போதும் மோதல்கள் இருந்துகொண்டேதான் இருக்கும். அப்படியான மோதல்கள் இருப்பது நல்லது. நீதித்துறையின் வேலை, சரிபார்த்து சமநிலைப்படுத்துவதுதான். நம்மிடம் ஜனநாயக தேர்தல் முறை இருப்பதால், கூட்டணி அரசுகள் அமையும்போது, நீதித்துறையில் இருக்கும் சில இடையூறுகள் குறையும். ஒருவர் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரும்போது, தங்களிடம் மக்கள் ஆதரவு இருப்பதாக நினைக்கிறார்கள். எனவே, நீதித்துறை ஏன் நமது பணியில் தலையிடுகிறது என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதனால், நீதித்துறைக்கு இன்னும் கொஞ்சம் அழுத்தங்கள் உள்ளது. இது சற்று இழுபறியான ஒன்றாகத்தான் உள்ளது. இது மேலும் தொடரும்." கேள்வி: அப்படியென்றால் இப்போது அழுத்தங்கள் அதிகரித்துள்ளதா? நீதிபதி கவுல்: " பெரும்பான்மை அரசாங்கம் இருக்கும்போது, எப்போதும் அழுத்தங்கள் சற்று கூடுதலாகவே இருக்கும்." கேள்வி: இந்த அழுத்தங்கள் இப்போது எப்படி அதிகரிக்கிறது? நீதிபதி கவுல்: "இந்த அழுத்தங்கள் ஒரு கோடு போன்றது. அதன் ஒரு பக்கம் நீதித்துறையும் மறுபக்கம் நிர்வாகத்துறையும் இருக்கும். எப்போது கூட்டணி அரசுகள் வந்தாலும், நீதிமன்றம் அந்த எல்லைக்கு வெளியே அரை அடி எடுத்து வைக்கலாம் என்று நான் நம்புகிறேன். பெரும்பான்மை அரசுகள் வரும்போது, நீதிமன்றங்கள் அந்த எல்லையில் நிற்கின்றன. பெரும்பான்மை அரசாங்கம், தான் எந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தாலும், அதைப் பெரும்பான்மை மக்களின் ஆதரவோடு கொண்டு வருவதாக நம்புகிறது. எனவே, அந்தப் பெரும்பான்மை மக்களின் ஆதரவு மதிக்கப்பட வேண்டும், ஏனெனில் அதுதான் ஜனநாயகம். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது குறித்து நீதிமன்றத்தில் யாராவது முறையீடு செய்து, அதில் நீதிமன்றம் தலையிட்டால், 'நாடாளுமன்றம் சட்டத்தை நிறைவேற்றிவிட்டது, சட்டத்தை நிறைவேற்றுவதுதான் எங்கள் வேலை. இந்த விஷயத்தில் ஏன் தலையிடுகிறீர்கள்?' என அவர்கள் நினைப்பதாக நான் பார்க்கிறேன். கேள்வி: நீங்கள் நீதிபதி ஆனதில் இருந்து பேச்சு சுதந்திரம் (கருத்து சுதந்திரம்) விஷயத்தில் ஒருவிதமான போக்கைப் பார்க்கிறீர்கள். கருத்து சுதந்திரம் குறைந்துவிட்டது என்று நினைக்கிறீர்களா? நீதிபதி கவுல்: "எழுதுபவர் எழுதட்டும், ஓவியம் வரைபவர் ஓவியம் வரையட்டும் என்பதே என் கருத்து. ஹிந்துஸ்தானி சமூகம் மிகவும் தாராளமயமாக இருந்தது என்பது எனது சொந்த உணர்வு. ஒரு மதம் ஒன்றை நம்புகிறது, மற்றொரு மதம் வேறொன்றை நம்புகிறது. இப்படிப்பட்ட பன்முகத்தன்மை கொண்ட நாட்டை, ஒன்றாக வைத்து ஒன்றாக வாழ வேண்டும் என்றால், நாம் ஒருவரையொருவர் சகித்துக்கொள்ளக் கற்க வேண்டும். ஒவ்வொரு நபரும் தனது வாழ்க்கையை அவர் விரும்பியபடி வாழ உரிமை உண்டு என்று நான் உறுதியாக நம்புகிறேன்." கேள்வி: தற்போதைய காலகட்டத்தில் அது(பேச்சு சுதந்திரம்) மேலும் பாதிக்கப்பட்டுள்ளதாக உணர்கிறீர்களா? நீதிபதி கவுல்: "எங்கோ சில பிரச்னைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. ஆனால், எந்த குறிப்பிட்ட காலகட்டத்திலும் அதைச் சரிசெய்ய நான் விரும்பவில்லை. நான் அதை ஒரு சமூக பிரச்னையாகப் பார்க்கிறேன். சமூகத்தைப் பார்த்தால் எங்கோ ஒருவருக்கு ஒருவர் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது. மேலும் நான் நாட்டைப் பற்றிப் பேசவில்லை. இதே பிரச்னை சர்வதேச அளவிலும் உள்ளது." நீதித்துறையில் பாலியல் துன்புறுத்தல் வழக்குகளைக் கையாள்வதில் சிக்கல் உள்ளதா? பட மூலாதாரம்,GETTY IMAGES கேள்வி: சமீபத்தில், உ.பி.யில் சிவில் நீதிபதி ஒருவர், தனது மாவட்ட நீதிபதி தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார். அதன்பிறகு, அவரது புகார் ஐசிசி-யிலும் பதிவு செய்யப்பட்து. இப்போது அந்தப் பெண் எத்தியோப்பியா செல்ல அனுமதிக்க வேண்டும் என்று சொல்கிறார். ஏனென்றால் அவருக்கு இனி இங்கு வாழ விருப்பம் இல்லை. அதேபோல, முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டதை நாம் முன்பே பார்த்தோம். இப்போது மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி இருக்கிறார், அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இத்தகைய சூழ்நிலையில், நீதித்துறைக்குள் இருந்து வரும் பாலியல் துன்புறுத்தல் புகார்களை நீதித்துறை முழுமையாகச் சமாளிக்க முடியாமல் போய்விட்டதாக நீங்கள் கருதுகிறீர்களா? நீதிபதி கவுல்: "கடவுள், நீதிபதிகளை மேலே இருந்து இறக்குவதில்லை. அவர்களும் நமது சமூகத்தின் ஓர் அங்கம்தால. இத்தகைய சூழ்நிலையில், நீதிபதிகளின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ஆனால், அது முழுமையானதாக இருக்க முடியாது. சமாளிக்கக்கூடிய சில விஷயங்கள் இருக்கும். இப்போது, இதுவொரு சிறப்பு வழக்கு, இது பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், எல்லாவற்றிலும் ஒரு குற்றச்சாட்டும், அதற்கு ஒரு தற்காப்பும் இருக்கிறது. ஒருவர் ஏதேனும் தவறு செய்தாரா இல்லையா என்பதைச் சரிபார்க்காமல் குற்றச்சாட்டுகளையே இறுதி முடிவாக ஏற்க வேண்டுமா? எதையும் விசாரிக்காமல், முழுமையாகத் தெரியாமல் முடிவெடுக்க முடியாது." பட மூலாதாரம்,GETTY IMAGES கேள்வி: உயர்நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் சாதிப் பிரதிநிதித்துவத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? சட்ட அமைச்சகத்தின் கூற்றுப்படி, 5 ஆண்டுகளில் செய்யப்பட்ட 659 நியமனங்களில், 75% பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள். பட்டியல் சாதியினர் 3.5% மற்றும் பட்டியல் பழங்குடியினர் 1.5% மட்டுமே உச்ச நீதிமன்றத்தில் உள்ளனர். இதற்கான காரணங்கள் என்ன? நீதிபதி கவுல்: "நீதிபதி நியமனங்கள் மூன்று நிலைகளில் செய்யப்படுகின்றன. துணை நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு உள்ளது. இதுவும் செயல்படுத்தப்படுகிறது. உயர் நீதிமன்ற நீதிபதிகளில் மூன்றில் ஒரு பகுதியினர் அதிலிருந்து வந்தவர்கள். அதனால் மூன்றில் ஒரு பங்கு பிரதிநிதித்துவம் செய்யப்பட்டது. நாங்கள் வழக்கறிஞர்களின் சங்கத்தில் இருந்து வருபவர்களைப் பற்றிப் பேசுகிறோம். இங்கு சமூக எழுச்சி அவ்வளவாக நடக்கவில்லை. எனவே, நீங்கள் பட்டியலில் எந்த வயதினரைப் பார்க்க விரும்புகிறீர்கள்? நீங்கள் பார்க்க வேண்டியது, 45 முதல் 50 வயது வரை உள்ளவர்களை. இந்த எட்டு-பத்து ஆண்டுகளில் நீங்கள் பிரதிநிதித்துவத்தைப் பார்க்க வேண்டும். குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்களைக் கண்டால் சில சலுகைகள் கொடுப்போம். அவர்களின் செயல்பாட்டையும் பார்ப்பார்கள். ஆனால், அவர்களின் செயல்பாட்டில் திருப்தி இல்லை என்றால், எப்படி வலுக்கட்டாயமாக அதை அமல்படுத்த முடியும்? பெண்கள் நியமனம் பற்றிப் பேசும்போது, பல பதவிகளில் 50 சதவீதத்துக்கும் மேல் பெண்கள் நியமனம் நடப்பதாக அடிக்கடி கூறுவேன். 25 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் இல்லை என்றால், இன்று எப்படி அவர்கள் அந்த இடங்களுக்கு வந்திருப்பார்கள்? இப்போதும் அந்த அம்சம் தெரிகிறது. பல நேரங்களில் அரசு ஆர்வம் காட்டும்போது, சாதி, சமூகத்தைப் பற்றிக் கவலைப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், பிரதிநிதித்துவம் உள்ளது, ஆனால், சரியான பிரதிநிதித்துவத்திற்கு சிறிது காலம் எடுக்கும்." பட மூலாதாரம்,GETTY IMAGES கேள்வி: நீதிபதிகள் நியமன விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை அரசு பின்பற்றவில்லையா? நீதிபதி கவுல்: "இந்த கொலீஜியம் அமைப்பு நடைமுறைக்கு வந்ததில் இருந்து, அரசியல் வர்க்கம் எங்களுக்கு ஏதாவது பங்கு இருக்க வேண்டும் என்று உணர்ந்தது. என்ஜிசி அரசாங்கத்தால் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை." பட மூலாதாரம்,GETTY IMAGES கேள்வி: ஒருபுறம், தேர்தல் பத்திரங்கள் போன்ற முக்கியப் பிரச்னைகள் இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், மறுபுறம் தன்பாலினத்தவர் திருமணம் போன்ற விவகாரத்தில் ஓராண்டுக்குள் முடிவு எடுக்கப்பட்டது. இதை எப்படி பார்க்கிறீர்கள்? நீதிபதி கவுல்: "அரசமைப்பு விவகாரங்களில் முடிவுகள் விரைவாக எடுக்கப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் அவை பெரிய விஷயங்களைத் தீர்க்கின்றன. எங்கோ தலைமை நீதிபதி பட்டியலிடும் இடத்தில் விஷயம் சிக்கிக் கொள்கிறது. ஓரளவிற்கு, அது அவரது அதிகார வரம்பிற்குள் வருகிறது. தன்பாலின திருமணம் என்பது தலைமை நீதிபதியின் அதிகாரத்தின் கீழ் ஒரு சமூகப் பிரச்னையாக இருந்தது. தலைமை நீதிபதியின் கருத்துப்படி, அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்." பிரிவு 370இல் நீதிமன்றத்தின் நிலைப்பாடு சரியா? பட மூலாதாரம்,GETTY IMAGES கேள்வி: சட்டப்பிரிவு 370 தொடர்பான இரண்டு சிக்கல்கள் இருந்தன. முதலாவது அதை நீக்குவது சட்டப்பூர்வமானதா இல்லையா என்பது. ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பது சரியா இல்லையா என்பது இரண்டாவது பிரச்னை. இரண்டாவது பிரச்னையில், மாநில அந்தஸ்து மீட்டெடுக்கப்படும் என்று சொலிசிட்டர் ஜெனரல் உறுதியளித்திருப்பதால், இது குறித்து நாங்கள் எந்தக் கருத்தையும் தெரிவிக்கத் தேவையில்லை என்று நீதிமன்றம் கூறியது. முன்னாள் நீதிபதி ரோஹிண்டன் நாரிமன், எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதும் கூட முடிவு தானே என்று கூறியிருந்தார். நீதிபதி கவுல்: "அந்த அறிக்கை சொலிசிட்டர் ஜெனரலின் அறிக்கை மட்டும் அல்ல. இது நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் அமைந்தது. இப்போது ஏதாவது ஒரு கொள்கையின் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டால், அதில் எதுவும் நடக்காது, முன்னோக்கிச் செல்லும் வழி இருக்கிறது, அதில் எந்த சந்தேகமும் இல்லை." கேள்வி: அது திரும்பப் பெறக்கூடிய அறிக்கை, அதில் எந்த சட்டப்பூர்வ கடமையும் இல்லை. மற்ற சட்ட வல்லுநர்களும் நீதிமன்றம் ஒரு முடிவை வழங்கியிருக்க வேண்டும் என்று நம்பினர். நீதிபதி கவுல்: சட்டம் என்பதில் பலதரப்பட்ட கருத்துகள் இருக்கும். ஒரு காரணத்திற்காக, அந்த மக்கள் சரியானது என்று நினைப்பதற்கும் அமர்வு(bench) சரியானது என்று நினைப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. ஆனால், பிரச்னைக்கான தீர்வு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை (அரசு வழக்கறிஞர்) சொந்தமாகக் கொடுக்கப்படவில்லை. அவரிடம் கேட்கப்பட்டு, அவர் அறிவுறுத்தல்களைப் பெற்றுக்கொண்டு திரும்பி வந்து கொடுத்தார். https://www.bbc.com/tamil/articles/c72y9wr1z9lo
  8. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வழக்கமான 28 நாட்களுக்கு பதிலாக 29 நாட்கள் இருக்கும். 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்த ஆண்டு நமது காலண்டரில் கூடுதலாக ஒரு நாள் சேர்க்கப்படுகிறது. வழக்கமான 365 நாட்கள் அல்லாமல் 366 நாட்களுடன் ஆங்கிலத்தில் இருக்கும் ஆண்டு, லீப் ஆண்டு (Leap Year) என்று அழைக்கப்படும் மிகுநாள் ஆண்டாக 2024 இருக்கும். ஆண்டின் மிகச்சிறிய மாதத்துக்குக் கூடுதலாக ஒரு நாள் கிடைக்கிறது. பிப்ரவரி 29ஆம் தேதி மிகு நாள் (லீப் நாள்) என்று அழைக்கப்படுகிறது. மூட நம்பிக்கைகளும் கலாசார பாரம்பரியங்களும் இந்த நாளுடன் தொடர்புடையதாக இருக்கின்றன. மிகுநாள் ஆண்டு ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும். இதற்கு முந்தைய மிகுநாள் ஆண்டு 2020, அடுத்த மிகுநாள் ஆண்டு 2028. இதற்கு விதிவிலக்கு உண்டு. அது குறித்து விரிவாகக் கீழே பார்க்கலாம். ஏன் மிகுநாள் ஆண்டு நிகழ்கிறது? ஓர் ஆண்டு என்பது பொதுவாக 365 நாட்களைக் கொண்டது. ஏனென்றால், பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் அவகாசம் இது. ஆனால், 365 என்பது ஒரு தோராயமான எண்ணிக்கை மட்டுமே. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பூமி சூரியனை முழுமையாக ஒருமுறை சுற்றி வர 365.242190 நாட்கள் ஆகும். பூமி சூரியனை முழுமையாக ஒருமுறை சுற்றி வர 365.242190 நாட்கள் ஆகும். அதாவது 365 நாட்கள், 5 மணிநேரங்கள், 48 நிமிடங்கள், 56 நொடிகள். இது விண்மீன் ஆண்டு எனப்படும். அதாவது பூமி சூரியனைச் சுற்றிச் சுழலும் உண்மையான கால அளவு. ஆங்கிலத்தில் இதை sidereal year என்பர். நாட்காட்டியில் உள்ள 365 நாட்களைவிட மிகுநாள் ஆண்டு சற்று கூடுதலானது. எனவே கூடுதலான இந்த நேரத்தைச் சரிக் கட்டுவதற்காக நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஒரு முழு நாள் நமது நாட்காட்டியில் கூடுதலாகச் சேர்க்கப்படுகிறது. இதன்மூலம், நமது நாட்காட்டி மாறி வரும் பருவங்களுக்கு ஏற்றவாறு அமைந்திருக்கும். மிகுநாள் ஆண்டு பாரம்பரியங்கள் என்ன? மிகுநாள் ஆண்டுடன் தொடர்புடைய பல பாரம்பரியங்கள் மற்றும் மூட நம்பிக்கைகள் உள்ளன. திருமணமாகாத ஆண்களுக்கான இந்த தினத்தில், அயர்லாந்து நாட்டு பாரம்பரியத்தின்படி, பெண்கள் ஆண்களிடம் திருமண விருப்பத்தைத் தெரிவிக்கலாம். இது மிகுநாளில் நடைபெறும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அயர்லாந்தில் மிகுநாளில் பெண்கள் ஆண்களிடம் தங்கள் திருமண விருப்பத்தைத் தெரிவிக்கும் பாரம்பரியம் உள்ளது. நாகரிகம் மாறி வரும் காலத்தில் பெண்கள் ஆண்டின் எந்த நாளில் வேண்டுமானாலும் ஆண்களிடம் தங்கள் திருமண விருப்பத்தை வெளிப்படுத்தலாம். ஆனால் இந்தக் குறிப்பிட்ட பாரம்பரியம் 5ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. தூதர் பிரிட்ஜெட் மற்றும் தூதர் பாட்ரிக் இடையில் நடைபெற்றதாகக் கூறப்படும் புனைவு ஒன்றின் அடிப்படையில் இந்த பாரம்பரியம் தொடங்கியிருக்கலாம். ஆண்கள் தங்கள் திருமண விருப்பத்தைத் தெரிவிக்க வெகு நாட்கள் எடுத்துக் கொள்வதால் பெண்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியுள்ளது என தூதர் பிரிட்ஜெட், தூதர் பாட்ரிக்கிடம் புகார் செய்தார். எனவே திருமண விருப்பத்தை வெளிப்படுத்த பெண்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று அவர் கோரினார் என்று அந்தப் புனைவு அமைந்துள்ளது. பெண்ணின் திருமண விருப்பம் நிராகரிக்கப்படும்போது, செய்ய வேண்டிய சில சடங்குகளும் உள்ளன. பெண்ணின் விருப்பத்தை ஆண் நிராகரித்துவிட்டால், அந்தப் பெண்ணுக்கு பட்டாடைகள் மற்றும் கையுறைகள் வாங்கித் தர வேண்டும். சில பாரம்பரியங்களின்படி, மிகு நாள் துர்திருஷ்டவசமானதாகக் கருதப்படுகிறது. கிரேக்க நாட்டில், மிகுநாள் ஆண்டில் திருமணம் செய்து கொள்ளப்படுவது தவிர்க்கப்படுகிறது. அதுவும் குறிப்பாக, மிகுநாளில். மிகுநாள் ஆண்டில் செய்யப்படும் திருமணம் முறிந்துவிடும் என்று அங்கு நம்பப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாரம்பரியாக கிரேக்கர்கள், மிகுநாள் ஆண்டில் திருமணம் செய்து கொள்வதைத் தவிர்ப்பார்கள். ஸ்காட்லாந்து நாட்டில், மிகுநாளில் தீங்கு விளைவிக்கும் மந்திரவாதிகள் ஒன்று கூடுவதாக நம்பப்படும் பாரம்பரியம் உள்ளது. பிப்ரவரி 29ஆம் தேதி குழந்தை பிறப்பதையும் துர்நிகழ்வாக ஸ்காட்லாந்து மக்கள் சிலர் கருதுகின்றனர். பட மூலாதாரம்,GETTY படக்குறிப்பு, பிப்ரவரி 29ஆம் தேதி மந்திரவாதிகள் ஏதாவது தொல்லை கொடுப்பர் என்று ஸ்காட் மக்கள் நம்பினர். ஆனால் சில கலாசாரங்களின்படி, மிகுநாள் ஆண்டை அதிர்ஷ்டமானதாக பார்ப்பதும் உண்டு. சில ஜோதிடர்கள், உங்கள் பிறந்த நாள் மிகுநாளாக இருந்தால், நீங்கள் பல சிறப்பான திறமைகள் கொண்டவராக இருப்பீர்கள் என்று நம்புகிறார்கள். மிகுநாள் ஏன் பிப்ரவரி மாதத்தில் உள்ளது? மிகு நாள் ஏன் பிப்ரவரி மாதத்தில் அமைகிறது என்பதற்கான காரணத்தை அறிந்துகொள்ள, பண்டைய ரோம நாட்டில் ஜூலியஸ் சீசர் நாட்காட்டி சீர்திருத்தங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஜூலியன் நாட்காட்டியை சீசர் அறிமுகப்படுத்தினார். சூரிய நாட்காட்டியுடன், வழக்கமான நாட்காட்டி ஒன்றாக இருக்க வேண்டும் என்பதால், மிகுநாள் ஆண்டு சேர்க்கப்பட்டது. ஜூலியன் நாட்காட்டி, கிரிகோரியன் நாட்காட்டியாக 1852ஆம் ஆண்டு மேம்படுத்தப்பட்டது. எனினும், பிப்ரவரி மாதத்தில் ஒரு மிகுநாள் சேர்க்கப்படும் பாரம்பரியம் மாறவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜூலியன் மற்றும் கிரிகோரியன் நாட்காட்டிகளில் ஈஸ்டர் தேதிகளைத் தீர்மானிக்க பயன்படுத்தப்பட்ட ஒரு பித்தளை நிரந்தர நாட்காட்டி. மிகுநாள் ஆண்டுகளே இல்லாமல் போனால் என்னவாகும்? நாம் மிகுநாள் ஆண்டுகளைக் கடைப்பிடிக்காமலும், நாட்காட்டிகளுக்கு இடையே உள்ள சுமார் ஆறு மணிநேரத்தைக் கணக்கில் எடுக்காமலும் இருந்தால், பருவ காலங்கள் தடம் மாறிவிடும். உதாரணமாக, சுமார் 700 ஆண்டுகளுக்குப் பிறகு, வடக்கு அரைக்கோளத்தில் கோடைக்காலம் ஜூன் மாதத்திற்குப் பதிலாக டிசம்பரில் தொடங்கும். நாம் மிகுநாள் ஆண்டுகளைக் கடைப்பிடிக்காமல் இருந்தால், வடக்கு அரைக்கோளத்தில் ஒரு கட்டத்தில் ஜூன் மாதத்தில் குளிர்காலம் நிலவும், அதேநேரத்தில் தெற்கு அரைக்கோளத்தில் கோடைக்காலம் நிலவும். பட மூலாதாரம்,GETTY IMAGES மிகுநாள் ஆண்டுகள் எப்போதெல்லாம் வருகின்றன? பலரும் மிகுநாள் ஆண்டுகள் ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகின்றன என்று நினைக்கிறார்கள். ஆனால் அது எப்போதும் உண்மை இல்லை. இதற்குக் காரணம், ஓர் ஆண்டின் துல்லியமான நீளம் (நாட்கள், மணிநேரங்கள், நிமிடங்கள், விநாடிகள்) நமது நாட்காட்டியின் ஆண்டின் நீளத்திற்குச் சரியாகப் பொருந்தாததுதான். ஓர் ஆண்டின் துல்லியமான நீளம் 365.242222 நாட்கள். ஆனால் நமது நாட்காட்டியில் 365 நாட்கள் மட்டுமே இருக்கின்றன. இந்தக் குறைபாட்டை சரிசெய்வதற்காகத்தான் மிகுநாள் ஆண்டுகள் இருக்கின்றன. அவற்றின் விதி என்னவென்றால், ஓர் ஆண்டை நான்கால் வகுத்து மீதி இல்லாமல் வந்தால் அது மிகுநாள் ஆண்டாகும். இதற்கு ஒரு விதிவிலக்கு: நூற்றாண்டுகள். 100ஆல் வகுத்து மீதி இல்லாமல் வரும் ஆண்டுகள் மிகுநாள் ஆண்டுகள் அல்ல. ஆனால், 400ஆல் வகுத்து மீதி இல்லாமல் வரும் நூற்றாண்டுகள் மிகுநாள் ஆண்டுகள் ஆகும். சுருக்கமாகச் சொன்னால், மிகுநாள் ஆண்டுகள் ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கும் ஒருமுறை வராது. 100ஆல் வகுத்து மீதி இல்லாத ஆண்டுகளைத் தவிர்த்து, மீதமுள்ள நான்கு ஆண்டுகளில் ஒன்று லீப் ஆண்டாக இருக்கும். நூற்றாண்டுகளில் 400ஆல் வகுத்து மீதி இல்லாதவை மட்டுமே மிகுநாள் ஆண்டுகள். சிக்கலாக இருக்கிறதா? சில எளிமையான உதாரணங்களைக் கொண்டு விளக்கலாம். 2000ஆம் ஆண்டு ஒரு மிகுநாள் ஆண்டாக இருந்தது. ஏனென்றால் அந்த ஆண்டை 4 மற்றும் 400ஆல் வகுத்தால் மீதி இல்லாமல் வந்தது. ஆனால், 1700, 1800, 1900 ஆண்டுகள் 4ஆல் வகுத்தாலும் 400ஆல் வகுத்தால் மீதி வந்தது. ஆகையால் அவை மிகுநாள் ஆண்டுகள் அல்ல. அடுத்த முறை மிகுநாள் ஆண்டு தவிர்க்கப்படும் ஆண்டு 2100 ஆகும். https://www.bbc.com/tamil/articles/c1ryzq2n4gyo
  9. தென்மராட்சி-கைதடி கிழக்கு ஊற்றல் மயானத்திற்கு செல்லும் பிரதான வீதி அண்மையில் பிரதேச மக்களுடைய பங்களிப்போடு இளைஞர்களால் புனரமைக்கப்பட்டது. பொதுமக்களின் அதிக பயன்பாட்டில் உள்ள இவ் வீதி நீண்ட காலமாக குன்றும் குழியுமாக காணப்பட்டதுடன், மழைக் காலத்தில் போக்குவரத்து பெரும் சிரமத்துக்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு மழைக் காலத்தில் குறித்த வீதியை பயன்படுத்த முடியாத நிலையில் கைதடி இராசபுரி, கலைநகர் மற்றும் பண்டகவயல் பகுதி மாணவர்கள் பாடசாலைக்குச் செல்வதனைத் தவிர்த்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனவே பிரதேச மக்கள் இணைந்து முதற்கட்டமாக 50 மீற்றர் தூரத்தை புனரமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/287052
  10. IND vs SA: கேப் டவுனில் தென் ஆப்பிரிக்காவை திணற வைத்த பும்ரா, சிராஜ் - சமன் செய்த இந்திய அணி பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 44 நிமிடங்களுக்கு முன்னர் கேப்டவுன் நியூலாந்து மைதானத்தில் நடந்த தென் ஆப்பிரிக்குவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, 2 நாட்களிலேயே ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. கடந்த 40 ஆண்டுக்கால வரலாற்றில் இந்த முறையாவது இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏமாற்றம் இருந்தாலும் ஆறுதலும் கிடைத்துள்ளது. கேப்டவுன் மைதானத்தில் இதுவரை இந்திய அணி 7 முறை விளையாடியுள்ளது என்றாலும் ஒரு போட்டியில்கூட வென்றது இல்லை. ஆனால், முதல்முறையாக நியூலாந்து மைதானத்தில் வெற்றியை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி பதிவு செய்தது. முதலிடத்தில் இந்திய அணி பட மூலாதாரம்,GETTY IMAGES உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது. இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகளில் 2 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிரா என 26 புள்ளிகளுடன் 54.16 சதவீதத்துடன் முதலிடத்தை இந்திய அணி பெற்றது. தென் ஆப்பிரிக்க அணி 2வது இடத்துக்குச் சரிந்தது. 92 ஆண்டுகளுக்குப் பின்... ஏறக்குறைய 92 ஆண்டுகளுக்குப்பின் ஒரு டெஸ்ட் போட்டியில் மிகக் குறைவான பந்துகள் வீசப்பட்டு, டெஸ்ட் போட்டி முடிவுக்கு வந்துள்ளது என்றால் இந்த ஆட்டம்தான். இதற்கு முன் கடந்த 1932ஆம் ஆண்டு மெல்போர்னில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா இடையே 656 பந்துகள் வீசப்பட்டதுதான் குறைந்த பந்துகள் வீசப்பட்ட டெஸ்ட் போட்டியாக இருந்தது. ஆனால் இந்த டெஸ்ட் போட்டியில் மொத்தம் 106.4 ஓவர்கள், அதாவது 642 பந்துகள் மட்டுமே வீசப்பட்டு 92 ஆண்டுகளுக்குப் பின் குறைந்த பந்துகள் வீசப்பட்ட டெஸ்ட் போட்டியாக மாறியுள்ளது. முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 55 ரன்களும், இந்திய அணி 153 ரன்களும் சேர்த்து, இந்திய அணி 98 ரன்கள் முன்னிலை பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 176 ரன்களுக்கு ஆட்டமிழந்து 79 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து, 12 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் சேர்த்து இந்திய அணி வென்றது. பந்துவீச்சாளர்களுக்கு அர்ப்பணம் பட மூலாதாரம்,GETTY IMAGES வெற்றிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில், “சிறந்த அடியை முன்னெடுத்துள்ளோம் என்றாலும் ஏராளமான தவறுகளில் இருந்து பாடம் கற்று இருக்கிறோம். பந்துவீச்சாளர்கள் லைன் லென்த்தில் வீசி, வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளனர். பேட்டர்களும் 100 ரன்கள் வரை முன்னிலை எடுத்துக் கொடுத்தனர். ஆனால், கடைசி 6 விக்கெட்டுகள் சரிந்தது வேதனைதான். யாரும் இதுவரை பார்க்காத வகையில் சிராஜ் பந்துவீச்சு இருந்தது. இந்த வெற்றி பந்துவீச்சாளர்களுக்கு அர்ப்பணம். தென் ஆப்பிரிக்கா எப்போதுமே நமக்கு சவலாக இருந்தது, இங்கு வந்து வெற்றியும் பெற்றுள்ளோம்,” எனத் தெரிவித்தார் ஆட்ட நாயகன், தொடர் நாயகன் இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தன. ஆட்டநாயகன் விருது 7 விக்கெட்டுகளை வீழ்த்திய சிராஜுக்கும், தொடர்நாயகன் விருது ஜஸ்பிரித் பும்ராவுக்கும், எல்கருக்கும் வழங்கப்பட்டது. இந்த டெஸ்ட் தொடருடன் தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரரும், இந்தப் போட்டிக்கு கேப்டனாக செயல்பட்ட டீன் எல்கர் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார். பேக்ஃபயராக மாறிய ஆடுகளம் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அணியின் வெற்றிக்கு பந்துவீச்சாளர்களின் பங்களிப்புதான் முக்கியக் காரணம். முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்காவை புரட்டி எடுத்தது சிராஜ்ஜின் பந்துவீச்சும் 6 விக்கெட்டுகளும் என்றால், 2வது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க பேட்டர்களை கதிகலங்க வைத்தது ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சு. வேகப்பந்துவீச்சாளர்களின் நலனுக்காக, சாதகமாக ஆடுகளத்தை அமைத்த தென் ஆப்பிரிக்காவுக்கு அந்த ஆடுகளமே “பேக்ஃபயராக” மாறிவிட்டது. தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 53 ரன்களுக்கு சுருண்டதும், 2வது இன்னிங்ஸில் 48 ரன்களுக்குள் முதல் 5 விக்கெட்டுகளை இழந்ததும் தோல்விக்கு முக்கியக் காரணம். இந்திய அணியும் இதில் சளைத்தது இல்லை. முதல் இன்னிங்ஸில் 153 ரன்கள் சேர்த்திருந்தபோது, அடுத்து எந்த ரன்னும் சேர்க்காமல் பூஜ்ஜிய ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து மோசமான சாதனையைப் படைத்தது. இரு அணிகளும் பந்துவீச்சாளர்களை நம்பி நியூலாந்தில் கால் வைத்தன, இதில் இந்திய அணி முந்திக்கொண்டதால், தென் ஆப்பிரிக்காவின் தோல்வி உறுதியானது. ஆறுதல் அளித்த மார்க்ரம் தென் ஆப்பிரிக்க அணிக்கு இந்த டெஸ்டில் ஒரே ஆறுதல் மார்க்ரம் அடித்த சதம்(103) மட்டுமே. டெஸ்ட் வரலாற்றிலேயே முதல்முறையாக, ஒரு அணியில் மற்ற வீரர்கள் 20 ரன்களுக்கு மேல் சேர்காத நிலையில் மார்க்ரம் மட்டும் சதம் அடித்தது இதுதான் முதல்முறை. பும்ராவிடம் சரண் பட மூலாதாரம்,GETTY IMAGES இரண்டாவது நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் சேர்த்திருந்தது. மார்க்ரம் 36, பெடிங்கம் 7 ரன்களில் இன்றைய ஆட்டத்தைத் தொடர்ந்தனர். ஆனால், இன்றைய தொடக்கமே தென் ஆப்பிரிக்காவுக்கு சிறப்பாக அமையவில்லை. பும்ராவின் முதல் ஓவரிலேயே பெடிங்ஹாம் விக்கெட் கீப்பரிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த வெரினேவும் நிலைக்கவில்லை. பும்ரா பந்துவீச்சில் ஃபுல் ஷாட் அடிக்க முற்பட்டு, சிராஜிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கேசவ் மகராஜ் கல்லி பகுதியில் கேட்ச் பிடிக்கப்பட்டு வெளியேற தென் ஆப்பிரிக்க 7 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் சேர்தித்திருந்தது. மார்க்ரம் சதம் விக்கெட்டுகள் ஒருமுனையில் வீழ்ந்தாலும் மற்றொரு முனையில் மார்க்ரம் அதிரடியாக ஆடினார். 68 பந்துகளில் அரைசதம் அடித்த மார்க்ரம், அடுத்த 31 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து சதம் அடித்தார். ரபாடா, மார்க்ரம் சேர்ந்து 8வது விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்தனர். மார்க்ரம் 73 ரன்கள் சேர்த்திருந்தபோது, பும்ரா பந்துவீச்சில் கிடைத்த கேட்சை ராகுல் தவறவிட்டதால், அதிர்ஷ்ட வாய்ப்பு பெற்று சதம் அடித்தார். இல்லாவிட்டால் சதம் அடிக்காமலே மார்க்ரம் நடையைக் கட்டியிருப்பார். மார்க்ரம் 106 ரன்களுக்கு ஆட்டமிழந்த சிறிது நேரத்திலேயே தென் ஆப்பிரிக்காவின் 2வது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. விக்கெட் சரிவு பட மூலாதாரம்,GETTY IMAGES இரண்டு முதல் ஐந்து விக்கெட்டுகளை 48 ரன்களுக்கு பறிகொடுத்த தென் ஆப்பிரிக்க அணி கடைசி 3 விக்கெட்டுகளை வெறும் 8 ரன்களுக்குள் இழந்தது. 36.5 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 176 ரன்களில் 2வது இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா 13.5 ஓவர்கள் வீசி 61 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளையும், முகேஷ் குமார் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்திய அணிக்கு 79 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்க அணி. எளிய இலக்கை அதிரடியாக அடைந்தால்தான் வெற்றி கிட்டும் என்பதை உணர்ந்த ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா ஆவேசமாக பேட் செய்தனர். இருவரின் பெரும்பாலான ஷாட்கள் பேட்டின் மத்தியப் பகுதியில் விழவில்லை, இருப்பினும் இருவரின் அதிரடி ஆட்டத்தால் 5.4 ஓவர்களில் இந்திய அணி 44 ரன்களை தொட்டது. ஜெய்ஸ்வால் 28 ரன்னில் பர்கர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். சுப்மான் கில் 10 ரன்னில் ரபாடாவின் லோபவுன்ஸரில் போல்டாகி வெளியேறினார். கோலி 12 ரன்னில் யான்சென் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். கேப்டன் ரோஹித் சர்மா 12 ரன்களுடனும், ஸ்ரேயாஸ் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 12 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் சேர்த்து இந்திய அணி வென்றது. https://www.bbc.com/tamil/articles/cgr3gqnpjpvo
  11. ஜப்பான் நிலநடுக்கங்களை ரிக்டர் அளவில் அறிவிப்பதில்லை. நிலம் எவ்வளவு அதிர்கிறது என்பதை வைத்தே அவர்கள் நிலநடுக்கத்தை கணக்கிடுகின்றனர். இந்த அளவுகோள் ஒன்று முதல் ஏழு வரை செல்கிறது. இஷிகவாவில் திங்கட்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் அதிகபட்ச அளவான 7ஐ தாண்டியது. சாலைகள், பாலங்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளன. இது பெரும் நிலச்சரிவை ஏற்படுத்தியது. இருப்பினும், பெரும்பாலான கட்டடங்கள் பாதிப்புக்கு உள்ளாகாமல் நிலைத்து நிற்கின்றன. டொயாமா (Toyama), கனாசவா (Kanazawa) போன்ற பெருநகரங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. இது எப்படி சாத்தியம்?
  12. 2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்று(04) ஆரம்பமாகிறது. இம்முறை பரீட்சையில் 346,976 பேர் தோற்றவுள்ளதுடன், இவர்களில் 281,445 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் ஆவர். உயர்தர பரீட்சையை முன்னிட்டு, நாடு முழுவதும் 2298 பரீட்சை மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார். இன்று ஆரம்பமாகவுள்ள பரீட்சை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. மழையுடன் கூடிய வானிலையால் பரீட்சைக்கு இடையூறு ஏற்படாத வகையில் பரீட்சையை நடத்துவதற்கு பரீட்சை திணைக்களம் மற்றும் இடர் முகாமைத்துவ நிலையம் இணைந்து வேலைத்திட்டமொன்றை வகுத்துள்ளன. அதற்கமைய வெலிகந்த, அரலகங்வில மற்றும் திம்புலாகல கல்வி வலயங்களைச் சேர்ந்த பரீட்சார்த்திகளுக்காக மனம்பிட்டிய சிங்கள மகா வித்தியாலயத்தில் விசேட பரீட்சை நிலையமொன்று அமைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/286939
  13. “என்ன School-ல சேர்க்க Teachers விரும்பல” - கல்வி மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த விதுர்ஷா
  14. காசாவில் சிக்கியிருந்த அமெரிக்க இராணுவ வீரரின் குடும்பம் - இரகசிய நடவடிக்கை மூலம் மீட்பு Published By: RAJEEBAN 04 JAN, 2024 | 03:05 PM காசாவில் சிக்கியிருந்த அமெரிக்க இராணுவ வீரரின் குடும்பத்தவர்கள் இரகசிய நடவடிக்கையொன்றின் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். அமெரிக்கா எகிப்து இஸ்ரேல் உட்படபல நாடுகள் இணைந்து மேற்கொண்ட இரகசிய நடவடிக்கையொன்றின்மூலம் அமெரிக்காவின் இராணுவவீரரின் தாயாரும் உறவினரும் மீட்கப்பட்டுள்ளனர் என அமெரிக்க அதிகாரியொருவர் அசோசியேட்டட் பிரசிடம் தெரிவித்துள்ளார். காசாவில் கடும் மோதல்கள் ஆரம்பித்த பின்னர் அமெரிக்கர் ஒருவரை மீட்பதற்காக இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை இதுவே முதல்தடவை என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். 44வயதான ஜஹ்ராஸ்கக் தனது உறவினருடன் புத்தாண்டு தினத்தன்று காசாவிலிருந்து வெளியேறியுள்ளார் என பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்,இந்த நடவடிக்கை குறித்த விபரங்கள் பாதுகாப்பு காரணங்களிற்காக இரகசியமாக வைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட பெண் காசாவில் கட்டிடமொன்றில் மேற்கொள்ளப்பட்ட விமானக்குண்டுவீச்சிலிருந்து தப்புவதற்காக தப்பியோடியவேளை அவரது கணவர் சுடப்பட்டார்அவர் சில நாட்களின் பின்னர் உயிரிழந்தார். இவர்களின் மகன் அமெரிக்கஇராணுவத்தில் பணியாற்றுகின்றார். இஸ்ரேலிய இராணுவத்தினரும் இஸ்ரேலிய அதிகாரிகளும் இணைந்து அமெரிக்க இராணுவீரரின் தாயாரை மீட்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர் - தரை நடவடிக்கைகளில் அமெரிக்க பங்கேற்கவில்லை. https://www.virakesari.lk/article/173074
  15. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, புதிய ஏவுகணை சோதனையை நிகழ்த்தியுள்ளது பாகிஸ்தான். கட்டுரை தகவல் எழுதியவர், உமர் ஃபரூக், நியாஸ் ஃபரூக்கி பதவி, பிபிசி உருது 4 மணி நேரங்களுக்கு முன்னர் டிசம்பர் 27, 2023 அன்று பாகிஸ்தான் ஒரே சமயத்தில் பல ஏவுகணைகளை ஏவும் "ஃபதா 2" ராக்கெட் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தி தொடர்புத்துறை (ஐஎஸ்பிஆர்) தகவல்களின்படி, இந்த ஏவுகணை 400 கிலோமீட்டர் வரை சென்று துல்லியமாக தாக்கக்கூடியது என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக ஆகஸ்ட் 24, 2021 அன்று, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட "ஃபதா 1" ராக்கெட் பாகிஸ்தானில் சோதனை செய்யப்பட்டது. ஃபதா 2 ஏவுகணையின் சிறப்பம்சங்கள் என்னென்ன? ஐஎஸ்பிஆர் தகவலின்படி, ஃபதா 2 ஏவுகணையில் மேம்படுத்தப்பட்ட பறக்கும் திறன் இடம்பெற்றுள்ளது. மேலும், இதில் மேம்படுத்தப்பட்ட டார்கெட் - டூ - டார்கெட் தாக்குதல் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இந்த தனித்துவமான ஏவுகணையில் பொறுத்தப்பட்டுள்ள இலக்கை தாக்கும் தொழில்நுட்பம் மிக துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. அதோடு சேர்த்து அதன் பறக்கும் திறனும் அதை வலிமைமிக்கதாக மாற்றுகிறது. இது போன்ற சிறப்பம்சங்களால் இந்த ஏவுகணை தனது இலக்கை துல்லியமாக தாக்கும் என்றும், அதன் குறியை தவறவே விடாது என்றும் ஐஎஸ்பிஆர் கூறுகிறது. சில ராணுவ ஆயுதம் மற்றும் உபகரண நிபுணர்கள், இந்த ஃபதா 2 ஏவுகணை “ஃபிளாட் ட்ராஜெக்டரி ஏவுகணை” என்று அழைக்கின்றனர். அதற்கு அர்த்தம் இந்த ஏவுகணை கிடைமட்டமாக பறக்கக்கூடியது. ரேடாரில் தெரியாது. இது குறித்து பாதுகாப்புதுறை நிபுணரான ஓய்வு பெற்ற பிரிகேடியர் சாத் முகமது பிபிசியிடம் பேசுகையில், ஃபதா ஒரு ஃபிளாட் ட்ராஜெக்டரி ஏவுகணை, இதை ராடாரில் கண்டறிந்து அழிப்பது மிகவும் கடினம் என்று தெரிவித்துள்ளார். பாலிஸ்டிக் ஏவுகணைக்கென்று தனியான பாதை உண்டு, முதலில் அவை விண்ணில் பாய்ந்து பின்னர் பூமிக்கு திரும்பி வரும். அதன் பாதை மாறும் சமயத்தில் எதிரி ரேடார்கள் அதை கண்டறிந்து தாக்கும் என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 'எல்ஆர்எஸ்ஏஎம்' என்ற பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை இந்தியா உருவாக்கி வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்திய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு ஃபதா 2-இன் வெற்றிகரமான சோதனைக்கு பிறகு, அது இந்திய பாதுகாப்பு ஏவுகணை திட்டத்திற்கு எதிரான வலுவான ஆயுதமாக கருதப்படுவதாக கூறுகின்றனர் சில நிபுணர்கள். அதே போல் இந்தியாவும் சில காலமாகவே தங்களுடைய ஏவுகணை அமைப்புகளை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் அடைந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. நீண்ட தூர எஸ்-400 ட்ரையம்ப் (Triumph) தவிர, உள்நாட்டில் உருவாக்கப்பட்ட குறுகிய தூரம் சென்று தாக்கும் சமர் மற்றும் டிஆர்டிஓ உருவாக்கிய VSHORADS ஏவுகணைகளையும் தனது பாதுகாப்பு அமைப்பில் சேர்த்துள்ளது இந்தியா. இவை அனைத்துமே மிகக் குறைந்த தூரத்தில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டவை. இந்த ஏவுகணைகள் கடல் பரப்பில் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களுக்கு எதிராகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்திய செய்தி நாளிதழான 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' செய்தியின்படி, 'எல்ஆர்எஸ்ஏஎம்' என்ற பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை இந்தியா உருவாக்கி வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்த அமைப்பு ரஷ்யாவின் S-400 ட்ரையம்ப் போல வான் பாதுகாப்பு அமைப்பின் திறன்களைக் கொண்டுள்ளது. இந்த அமைப்பில் நீண்ட தூர கண்காணிப்பு மற்றும் ரேடார் கட்டுப்பாட்டு திறன்கள் இருக்கும். மேலும் 150, 250 மற்றும் 350 கிமீ தொலைவில் உள்ள ஏவுகணைகளைக் கண்டறிந்து இடைமறிக்கும் ஆற்றலும் இதில் உள்ளது. இந்தியா தனது பாதுகாப்பு அமைப்பில் உள்ள ஏவுகணை தொழில்நுட்பத்தை கொண்டு தனது நகரங்கள், அணுசக்தி அமைப்புகள் மற்றும் ராணுவத்தை பாதுகாப்பதற்கான திட்டத்தை வகுத்து வருகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES இஸ்ரேலிடம் இருந்து அயர்ன் டோம் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை வாங்க நீண்ட காலமாகவே ஆசைப்பட்டு வருகிறது இந்தியா. இந்நிலையில் அயர்ன் டோம் வாங்குவதில் இந்தியாவின் விருப்பம் குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க இஸ்ரேல் தயாராக இருப்பதாக டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் 2013 ஜூலை மாதம் செய்தி ஒன்றை வெளியிட்டது. காரணம், அந்த அமைப்பு உட்பட அதன் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்க ஒப்புக்கொண்டது இஸ்ரேல். ஒவ்வொரு நாடும் அயர்ன் டோமை வாங்க விரும்புகிறது, ஆனால் அது பணம் மற்றும் தொழில்நுட்பத்தைப் பொறுத்தது என்று கூறுகிறார் இந்திய ராணுவத்தின் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் மற்றும் பாதுகாப்புதுறை ஆய்வாளருமான எச்.எஸ்.பனாக் "உங்களிடம் பணம் மற்றும் தொழில்நுட்பம் இருந்தால், அதை நீங்களே உருவாக்கி கொள்ளலாம்," என்று கூறும் அவர், அதே சமயம் இந்த செய்தி அறிக்கைகள் எச்சரிக்கையுடன் பார்க்கப்பட வேண்டும் என்கிறார். ஆவணங்களின்படி, இந்தியாவில் தொழில்நுட்பக் (பாதுகாப்பு) குறைபாடு உள்ளது. ஆனால் "ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களில் நாங்கள் இதை உருவாக்கினோம், அதை உருவாக்கினோம் என்று பல செய்திகள் வருகின்றன. ஆனால் அடிப்படை உண்மைகள் வேறு” என்று கூறுகிறார் அவர். தலைநகர் டெல்லி அல்லது வர்த்தக மையமான மும்பை போன்ற முக்கியமான இடங்களை பாதுகாக்க இந்தியாவுக்கு இதுபோன்ற அமைப்பு தேவைப்படலாம் என்று கூறுகிறார் பாதுகாப்பு நிபுணர் ராகுல் போன்ஸ்லே. "ஆனால் நாம் அது போன்ற அச்சுறுத்தலில் இல்லை, ஏனெனில் உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமெனில் இந்த அமைப்பு தற்போது ஹமாஸ் போன்ற அமைப்புகள் பயன்படுத்தும் ராக்கெட்டுகளுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது" என்று அவர் கூறுகிறார். ‘பாகிஸ்தானுக்கு அதைச் செய்யும் திறன் உள்ளது, ஆனால் இதனால் அவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும்? அதனால் வரும் எதிர் வினையும் மிகக் கடுமையாக இருக்கும் என்பது வெளிப்படையாக தெரிந்ததே' என்கிறார் அவர். இது மிகவும் விலையுயர்ந்த பாதுகாப்பு அமைப்பு மற்றும் இந்தியா எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் மற்ற நாடுகளில் இருந்து மிகவும் வித்தியாசமானது. மேலும், இந்தியாவில் ஏற்கனவே முக்கியமான மற்றும் தீவிரமான உள்கட்டமைப்பு பகுதிகளை பாதுகாக்கக்கூடிய பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன என்கிறார் ராகுல் போன்ஸ்லே. இஸ்ரேலிய அயர்ன் டோம் அமைப்புகள் இந்தியாவிற்கு பலனளிக்காது என்பதற்கு மூன்று காரணங்கள் இருப்பதாக பிபிசியிடம் கூறியுள்ளார் பாகிஸ்தான் ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுத நிபுணர் சையத் முஹமத். அதில் முதலாவது காரணம் இந்தியா இஸ்ரேலை விட மிகப்பெரிய நில அமைப்பை கொண்டுள்ளது. இஸ்ரேல் போன்ற சிறிய பகுதிக்கு அயர்ன் டோம் நன்கு கைகொடுக்கும் ஆயுதம். ஆனால், அதே இந்தியா போன்ற பெரிய நாட்டுக்கு அது அவ்வளவு திறன்மிக்கதாக இருக்காது என்கிறார் அவர். இஸ்ரேல் ஹமாஸிடம் இருந்து வரும் ராக்கெட்டுகளை நிறுத்த இந்த அயர்ன் டோமை பயன்படுத்துகிறது. ஆனால், அந்த ஆயுதங்கள் இரண்டாம் உலக போரின்போது ஜெர்மானியர்களால் பயன்படுத்தப்பட்ட பழைய ரக ஆயுதங்கள் என்கிறார் அவர். மேலும், இந்தியாவோ சீனா மற்றும் பாகிஸ்தானிடமிருந்து இதை விட பல மடங்கு மேம்படுத்தப்பட்ட ஆயுதங்களின் அச்சுறுத்தலை கொண்டுள்ளன. அதற்கேற்றவாறு இந்தியாவிடமும் அதிநவீன S-400 ஏவுகணைகள் உள்ளன. ஆனாலும், கூட அவர்களால் பாகிஸ்தான் ஏவுகணைகளுக்கு எதிராக முழுமையான பாதுகாப்பை வழங்க முடியாது என்கிறார் சையத் முஹமத். பட மூலாதாரம்,ISPR படக்குறிப்பு, எல்லை அடிப்படையில் பாகிஸ்தான் ஒரு உச்சத்தை பெற்றுள்ளது. புதிய ஏவுகணையால் முன்னிலை பெற்ற பாகிஸ்தான் ஃபதா-2 ஏவுகணையின் வெற்றிகரமான சோதனை மூலம், ராணுவ அரங்கில், குறிப்பாக எல்லை அடிப்படையில் பாகிஸ்தான் ஒரு உச்சத்தை பெற்றுள்ளதாக, சில இந்திய பாதுகாப்பு நிபுணர்கள் நம்புகின்றனர். பாகிஸ்தானின் இந்த புதிய ஏவுகணை எல்லை அடிப்படையில் இந்தியாவை விட கூடுதல் நன்மையை பாகிஸ்தானுக்கு அளிக்கிறது என்றும், இது பாகிஸ்தான் இராணுவத்திற்கு நன்மையளிக்கும் என்றும் இந்தியாவின் பாதுகாப்பு பிரச்னைகளை அறிக்கையிடும் போர்ட்டலான இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி பிரிவு தெரிவிக்கிறது. ‘திறன் அடிப்படையில் பார்த்தால் , இது குறிப்பிடத்தகுந்த வளர்ச்சி’ என்று கூறுகிறார் ராகுல் போன்ஸ்லே "பாகிஸ்தானின் ஃபதா-2 வானது, இந்தியாவின் பினகா (Pinaka) மல்டி-பேரல் ராக்கெட் லாஞ்சரைப் போன்றது என்றும், "பாகிஸ்தானின் பீரங்கித் திறன்களை இது மேம்படுத்தும்" என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார். இது இரண்டு நாடுகளுக்கும் இயல்பான வளர்ச்சிதான் என்று கூறும் அவர், இந்தியா உட்பட உலகில் உள்ள அனைத்து நாடுகளுமே மல்டி-பேரல் ராக்கெட் லாஞ்சர் அமைப்புகளை உருவாக்குகின்றன என்கிறார். இந்த ஆயுதங்கள் மிகவும் பயனுள்ளவை என்பதை ரஷ்யா - யுக்ரைன் போர் நிரூபித்துள்ளது. பாகிஸ்தானின் ஏவுகணை பாதுகாப்பு திறனை மேம்படுத்தும் நோக்கில், கடந்த இரண்டு மாதங்களில் பாகிஸ்தான் நடத்தியுள்ள இரண்டாவது ஆயுத சோதனை இது என்பதை உள்ளூர் மற்றும் சர்வதேச வல்லுநர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். 2023 அக்டோபர் 18 அன்று, பாகிஸ்தான் அபாபில் ஏவுகணையை சோதனை செய்தது. இதுவே தெற்காசியாவில் பல அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட முதல் ஏவுகணையாகும். அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளில் நிபுணரான சையத் முகமது அலியின் கூற்றுப்படி, அபாபில் மற்றும் ஃபதா 2 ஆகிய இரண்டின் சோதனைகளும் பாகிஸ்தான் ஆயுதப்படைகளின் இராணுவ செயல்பாடு மற்றும் தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்கின்றன. நீண்ட காலமாகவே இந்த பாதுகாப்பு அமைப்பை உருவாக்க அவர்கள் பணிபுரிந்து வருகின்றனர், தற்போது அதன் நம்பகத்தன்மையை சோதிக்க விரும்புகின்றனர். தொழில்நுட்பத் தேவைகளைப் பூர்த்தி செய்த பிறகு, தற்போது இந்த ஆயுதத்தை இராணுவத்தின் செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அதனிடம் ஒப்படைக்க விரும்புகிறார்கள்.’ 'இந்தியாவில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் பாஜகவின் போர் மனப்பான்மையும் இதற்கான காரணங்களில் ஒன்று என்பதை எல்லைகளை தாண்டி தினமும் வெளிவரும் அறிக்கைகளை வைத்து மதிப்பிடலாம். வழக்கமான பாணியில் தேர்தலுக்கு முன் இந்தியா எதுவும் தவறான நடவடிக்கைகளை எடுக்கும் முன், பாகிஸ்தான் ராணுவத்தை மனதில் வைத்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக இருக்கலாம்” என்று கூறுகிறார் முஹம்மது அலி. பட மூலாதாரம்,ISPR படக்குறிப்பு, 1947ம் ஆண்டிலிருந்தே ஆயுத பந்தயம் நடைபெற்று வருகிறது. தெற்கு ஆசியாவின் ஆயுதப் போட்டி ‘இந்த ஆயுத பந்தயம் ஒன்றும் புதிதல்ல, 1947ம் ஆண்டிலிருந்தே தொடர்வதுதான்’ என்று கூறுகிறார் ஓய்வு பெற்ற பிரிகேடியர் சாத் முஹம்மது. மேலும் சர்ஃபேஸ் டூ சர்ஃபேஸ் ஏவுகணைகளை உருவாக்குவதற்கும், அவற்றைச் சுட்டு வீழ்த்துவதற்கான ஏவுகணைகளை உருவாக்குவதற்கும் உலகின் இராணுவப் படைகளுக்கு இடையே நிலவும் போட்டி மிகவும் பழமையானது. இந்தப் போட்டி தெற்காசியாவில் மீண்டும் மீண்டும் நடைபெற்று வருவதாக கூறுகிறார் அவர். பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய இருநாடுகளுமே தங்களது இராணுவ வளர்ச்சியில் மிகவும் உணர்திறன் கொண்டவை, மேலும் இரு நாடுகளும் தங்களது எதிரிகளை எதிர்கொள்ள உலகளாவிய கூட்டாளிகளுடன் இணைந்து உள்ளூரில் தொழில்நுட்ப திறன்களை வளர்ப்பதில் முதலீடு செய்து வருகின்றன. https://www.bbc.com/tamil/articles/c51z2zn9qdqo
  16. Published By: DIGITAL DESK 3 04 JAN, 2024 | 03:09 PM ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக ஜனாதிபதி நிதியத்தினால் தற்போது வழங்கப்படும் மருத்துவ உதவிக் கொடுப்பனவுகளை 2024 ஜனவரி 01 ஆம் திகதி முதல் 50% இலிருந்து 100% ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2024ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதியின் வழிகாட்டுதலுக்கு அமைய ஜனாதிபதி நிதியத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் சரத்குமார தெரிவித்தார். இதன்படி, இதுவரை மருத்துவ உதவி வழங்கப்படாத நோய்கள் கண்டறியப்பட்டு, அந்த நோய்களுக்கான மருத்துவ உதவிகள் வழங்கும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல், 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு, தனியார் அல்லது அரை அரசாங்க வைத்தியசாலைகளில் கண் சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்கு மருத்துவ உதவி வழங்கப்படும். நோய்வாய்ப்பட்டவர்கள் மருத்துவ உதவி பெறுவதற்காக நகரத்திற்கு வருவதைக் குறைப்பதற்காக, நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளின் ஜனாதிபதி நிதியத்தில் இலகுவாகப் பதிவு செய்யும் முறையும் 2024ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கராபிட்டிய வைத்தியசாலையில் வேலை நேரத்தின் பின்னர் இருதய சத்திரசிகிச்சையை மேற்கொள்வதற்காக வழங்கப்படும் கொடுப்பனவு இந்த வருடம் முதல் அதிகரிக்கப்படவுள்ளதுடன் ஏனைய வைத்தியசாலைகளுக்கும் இந்த முறையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் ராகம வைத்தியசாலையில் சிறு குழந்தைகளுக்கான கல்லீரல் மாற்று சத்திரசிகிச்சைகளுக்காக ஒரு மில்லியன் ரூபா வரையான மருத்துவ உதவி தொகையும் வழங்கப்படும். மேலும், தனியார் அல்லது அரை அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் புற்றுநோய் அறுவை சிகிச்சைகளுக்கு இது வரை மருத்துவ உதவி வழங்கப்படாததோடு அதற்கான மருத்துவ உதவி இந்த ஆண்டு முதல் வழங்கப்படும். தனியார் அல்லது அரை அரசு மருத்துவமனைகள் தவிர, அரசு மருத்துவமனைகளும் இந்த ஆண்டு முதல் எலும்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்பும் பின்பும் வெளியில் செய்யப்படும் மருத்துவப் பரிசோதனைகளுக்கு இந்த ஆண்டு முதல் மருத்துவ உதவி வழங்கப்படும். மருத்துவ உதவிகளை வழங்குவதில் நோயாளர்களின் குடும்ப அலகு ஒன்றின் மாதாந்த வருமான வரம்பான 150,000 ரூபாவை இந்த வருடம் முதல் 02 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மருத்துவ உதவி பெற வேண்டிய நடுத்தர மக்கள் ஜனாதிபதி நிதியில் இருந்து மருத்துவ உதவி பெற முடியும். இதேவேளை, 2023ஆம் ஆண்டிலும் மக்களுக்கான விரைவான மற்றும் விரிவான சேவைகளை வழங்குவதற்கு ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதி நிதியம் செயற்பட்டதாக அதன் செயலாளர் சரத் குமார தெரிவித்தார். 2022 ஆகஸ்ட் முதல் பணம் செலுத்தாமல் குவிந்துள்ள 8,000 க்கும் மேற்பட்ட மருத்துவ உதவி விண்ணப்பங்கள் உட்பட, அந்த ஆண்டின் இறுதிக்குள், சுமார் 12,000 மருத்துவ உதவி விண்ணப்பங்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக 1,342 மில்லியன் ரூபா செலவழிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டிற்கு, 3458 மருத்துவ உதவி விண்ணப்பங்கள் பெறப்பட்டதோடு அந்த விண்ணப்பங்கள் அனைத்திற்கும் பணம் செலுத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதற்காக செலுத்தப்பட்ட தொகை 844.7 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது. அதேபோல் 2022 ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்திபெற்றாலும் உயர்கல்வியை தொடர்பவதற்கான நிவாரணம் தேவைப்படும் மாணவர்களுக்காக கல்விப் பிரிவுவொன்றுக்கு 30 பேர் என்ற அடிப்படையில் நாடளாவிய ரீதியில் 100 கல்விப் பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு 24 மாதங்களுக்கு 5,000 கொடுப்பனவும் வழங்கப்பட்டது. அதற்கமைய அனைத்து மாதங்களிலும் பணிகளை ஆரம்பிக்கும் முதல் இரு தினங்களுக்குள் மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் பணம் வைப்புச் செய்து அவர்களுக்கு குறுஞ்செய்தி (SMS)மூலம் அறிவிக்கப்படும். தற்போது இந்த மாணவர்களுக்காக 10 மாதாந்த தவணை கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் இம்முறை க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்றிருந்தாலும் உயர்கல்வியை தொடர்வதில் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கும் மாணவர்களுக்காக 50 கல்விப் பிரிவொன்றுக்கு 50 பேர் என்ற அடிப்படையில் 100 கல்விப் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட 5,000 மாணவர்களுக்கு 24 மாதங்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவை மாதாந்தம் வழங்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதி நிதியத்தினால் க.பொ.த பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கல்வியை தொடர்வதற்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டியவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த இரண்டு ஆண்டுகளில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மாவட்ட அளவிலும், தேசிய அளவிலும் தெரிவு செய்யப்பட்டு, அந்த மாணவர்களுக்கு நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 90 மாணவர்களுக்கு 31.5 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. வறுமையில் வாடும் ஆனால் சுயதொழில் செய்யக் கூடிய குடும்பங்களை மேம்படுத்துவதற்காக பிரதேச செயலாளர்கள் ஊடாக நிதி மற்றும் பொருளுதவி வழங்கும் வேலைத்திட்டமும் ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டது. மேலும், வறுமையில் வாடும் ஆனால் சுயதொழில் அல்லது பிற வேலைகளைச் செய்ய முடியாத குடும்பங்களை அடையாளம் காண, பிராந்திய செயலகங்கள் மூலம் மாதாந்தம் நிதி மற்றும் பொருள் உதவிகளை வழங்குவதற்கான திட்டங்கள் 2023 இல் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டன. சமய நல்லிணக்கத்தைப் பேணுவதற்கும் சமய நடவடிக்கைகள் மற்றும் ஏனைய சமூக நடவடிக்கைகளுக்கும் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், மருத்துவ உதவித் தொகையை செலுத்துவதில் ஏற்படும் தேவையற்ற காலதாமதத்தைத் தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறைபாடுகள் இல்லாமல் பூர்த்தி செய்யப்பட்டு ஜனாதிபதி நிதியத்திற்கு ஒப்படைக்கப்படும் விண்ணப்பப்படிவத்திற்கு மூன்று வேலை நாட்களுக்குள் பணத்தை செலுத்தத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், அறுவை சிகிச்சை/சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு உத்தரவாதச் சான்றிதழ்கள் சில மணி நேரங்களுக்குள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ வசதிகளைப் பெற்று மருத்துவமனையை விட்டு வெளியேறும் போது, மருத்துவமனைகளுக்கு அந்த நிதியத்தால் செலுத்த ஒப்புக்கொள்ளப்பட்ட தொகையை மருத்துவக் கட்டணத்தில் இருந்து குறைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்த பணிகளை நிறைவேற்ற நோயாளி/விண்ணப்பதாரர் ஒருமுறை மட்டும் ஜனாதிபதி நிதியத்திற்கு வருகை தந்தால் போதும் எனவும், எந்தவொரு விண்ணப்பதாரரும் தேவையில்லாமல் நிதியத்திற்கு அழைக்கப்படவோ அல்லது அசௌகரியங்களுக்கு உள்ளாக்கப்படவோ மாட்டார்கள் எனவும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் சரத் குமார மேலும் தெரிவித்தார். இதேவேளை, 2024ஆம் ஆண்டு புத்தாண்டில் தமது கடமைகளை ஆரம்பிக்கும் ஜனாதிபதி நிதியத்தின் ஊழியர்களுக்கு ஆசி வழங்கும் நிகழ்வும் நேற்று (03) நிதிய அலுவலக வளாகத்தில் இடம்பெற்றது. கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாராதிபதி கிரிந்தே அஸ்ஸாஜி தேரர் தலைமையில் ஆசி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, அமைச்சரவை செயலாளர் டொனால்ட் பெர்னாண்டோ, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் சுலக்ஷா ஜயவர்தன, திறைசேரியின் பிரதி செயலாளர் பிரியந்த ரத்நாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் அசல ருவன் வீரகோன், ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/173120
  17. 04 JAN, 2024 | 01:03 PM சம்பள உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு, கிழக்கில் உள்ள புகையிரத கடவை காவலர்கள் இன்று (04) முதல் இரண்டு நாள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். ஜனாதிபதியின் வடக்குக்கான விஜயத்தை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு இன்று 4ஆம் திகதி காலை 6 மணி முதல் எதிர்வரும் 6ஆம் திகதி காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவித்துள்ள புகையிரத கடவை காவலர்கள் சங்கத்தின் தலைவர், அந்த நேரத்தில் பயணிகளை பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பான அறிவித்தலை முல்லைத்தீவு ஊடக மையத்தில் நேற்று (3) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது வெளிப்படுத்திய புகையிரத கடவை காவலர்கள் சங்கத்தின் தலைவர் ரொஹான் ராஜ்குமார் தொடர்ந்து கூறுகையில், சரியான ஊதியமின்றி, கடந்த 11 வருடங்களாக நாடளாவிய ரீதியில் 2,064 தொழிலாளர்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் புகையிரத கடவை காவலர்களாக கடமையாற்றி வருகின்றனர். ஒரு தொழிலாளிக்கு ஒரு நாளைக்கு 250 ரூபாய் கொடுப்பனவே கிடைக்கிறது. பொலிஸாரின் அடிமைகளாக இருக்கும் எம்மை உடனடியாக விடுதலை செய்யுமாறு எதிர்வரும் 4, 5, 6ஆம் திகதிகளில் வடபகுதிக்கு வரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவிக்கும் வகையில் வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கின்றோம். அத்தோடு, புகையிரத திணைக்களத்தின் கீழ் நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும். நாங்கள் வாழ்வதற்கான சரியான ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சரியான சம்பளம் வழங்கப்படாவிட்டால் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/173097
  18. பட மூலாதாரம்,SUPRIYASAHUIAS கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி,பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் "இன்னும் இரண்டு நாட்கள் தாமதமாகியிருந்தால், குட்டியை விட்டு யானைக் கூட்டம் வெகு தூரம் சென்றிருக்கும். கடைசி வரை அந்த குட்டியால் தாயை பார்த்திருக்க முடியாது, தாய்ப்பால் இல்லாமல் குட்டி உயிர் பிழைப்பதும் கடினமாகியிருக்கும். நல்லவேளையாக தாயிடம் சேர்த்து விட்டோம்", என புன்னகையுடன் கூறுகிறார் வனத்துறை ரேஞ்சர் மணிகண்டன். கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ளது, பன்னிமேடு தேயிலை எஸ்டேட். டிசம்பர் 29 அன்று இந்தப் பகுதியில் தாயைப் பிரிந்து, கூட்டத்திலிருந்து விலகிய ஒரு குட்டியானை சுற்றிக் கொண்டிருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே அங்கு விரைந்த வனத்துறையினர், சில மணிநேரங்களில் எந்த யானைக் கூட்டத்திலிருந்து குட்டி பிரிந்தது என்பதைக் கண்டறிந்து அதனை தாய் யானையுடன் சேர்த்துள்ளனர். கடந்த 5 நாட்களாக யானைக்குட்டி மற்றும் அதன் கூட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தது வனத்துறை. இந்நிலையில் நேற்று, தாயின் அருகே அந்த குட்டியானை அமைதியாக படுத்து உறங்கும் காணொளியை வெளியிட்டது வனத்துறை. இணையத்தில் பலரால் பகிரப்பட்ட அந்த காணொளி குறித்தும், 300க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு இருக்கும் வால்பாறை பகுதியில், ஒரே நாளில் எவ்வாறு குட்டியானை தாயிடம் சேர்க்கப்பட்டது என்பது குறித்தும் வனத்துறை அதிகாரிகளிடம் பேசினோம். பட மூலாதாரம்,FOREST DEPARTMENT "மனித வாடை இருந்தால் குட்டியை தாய் விரட்டிவிடும்" "அன்று காலை தகவல் கிடைத்தவுடன் பன்னிமேடு எஸ்டேட் பகுதிக்கு சென்றுவிட்டோம். அங்கு 5 முதல் 6 மாதங்களே ஆன ஒரு குட்டி யானை சுற்றித் திரிந்தது. குட்டி யானை தன் தாயிடமிருந்து பிரிந்து விட்டால், அதை உடனடியாக அதன் தாயிடமோ அல்லது கூட்டத்திடமோ சேர்க்க வேண்டும்." "மனித வாடை அதன் உடலில் பட்டுவிட்டால் யானைக் கூட்டம் அதை சேர்த்துக் கொள்ளாது, தாய் அதனை விரட்டிவிடும்" என்று நம்மிடம் பேசத் தொடங்கினார் வனத்துறை ரேஞ்சர் மணிகண்டன். "யானைகள் எப்போதும் கூட்டம் கூட்டமாக வால்பாறை பகுதியில் முகாமிடுவதால், புதிதாக ஏதும் யானைக் கூட்டம் இங்கு வந்தால் எங்களுக்கு தெரிந்துவிடும். டிரோன் மூலமாகவும், கண்காணிப்பு குழுக்கள் மூலமாகவும் யானைகள் எங்கே செல்கின்றன என்பதை நாங்கள் பார்ப்போம்." "எந்த யானைக் கூட்டம் ரேஷன் கடைகளைத் தாக்குகின்றன, எவை மக்களின் குடியிருப்புகளுக்குள் செல்கின்றன, தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டுள்ள யானைகள் எவை என அனைத்து தரவுகளும் எங்களிடம் இருக்கும்" என்றார் மணிகண்டன். தொடர்ந்து பேசிய அவர், "ஒவ்வொரு நாளும் மாலை 5 மணிக்கு மீண்டும் ஒருமுறை டிரோன் மூலம் கண்காணித்து, அதை உறுதிபடுத்திக்கொள்வோம். அப்படி இருக்கையில் அன்று அதிகாலை பன்னிமேடு பகுதிக்கு சென்று குட்டியை மீட்டுவிட்டு, அதன் யானைக் கூட்டத்தை தேடத் தொடங்கினோம்." என்றார். பட மூலாதாரம்,FOREST DEPARTMENT 11 யானைகள் கொண்ட கூட்டம் மேலும் அவர் கூறியது, "காலை 8.30 மணிக்கு எங்களுக்கு யானைக்குட்டி பற்றி தகவல் வந்தது, சரியாக மதியம் 1.30 மணிக்கு நாங்கள் அதை தாயிடம் சேர்த்துவிட்டோம். இவ்வளவு துரிதமாக செயல்பட்டதற்கு காரணம் ஒரு நாளுக்கு மேல் ஆகிவிட்டால், யானைக்கூட்டம் வேறு பகுதிக்கு நகர்ந்து விடும். பிறகு குட்டியை கூட்டத்தில் சேர்ப்பது கடினம்." "யானைக்குட்டி மிகவும் ஆரோக்கியமாக இருந்தது. காரணம் முழுக்க முழுக்க அது தாய்ப்பாலை மட்டும் குடித்து வளர்ந்தது. புல்லைக் கூட உண்ணாது. எனவே நாங்கள் வேறு ஏதாவது உணவு அல்லது லாக்டோ பானம் கொடுத்து அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால், உடல்நிலை சரியில்லாமல் போய் மேலும் தாமதமாகிவிடும்." "இன்னொரு சிக்கல், யானைக்குட்டி நம்மிடம் பழகிவிட்டால் நம்மை விட்டு போகாது. அது குட்டிக்கு தான் ஆபத்து. இப்படி பல சிக்கல்கள் இருந்ததால், பல குழுக்களாக பிரிந்து தேடுதலில் ஈடுபட்டோம். தேயிலைத் தோட்ட தொழிலார்கள் கூறியது மற்றும் எங்களிடமிருந்த தரவுகள் மூலமாக மூன்று யானைக்கூட்டங்களை பின்தொடர்ந்தோம்." "அதில் பதினோரு யானைகள் கொண்ட கூட்டத்தில் தான், ஒரு குட்டியை காணவில்லை என்பதை உறுதிபடுத்திக்கொண்டோம். பின்னர் டிரோனைப் பறக்க விட்டு அந்த குறிப்பிட்ட யானைக்கூட்டத்தைப் பின்தொடர்ந்தோம். ஆனால் இப்போது தான் இரண்டு பெரிய சிக்கல்கள் உருவானது" என்கிறார் மணிகண்டன். பட மூலாதாரம்,FOREST DEPARTMENT ஆக்ரோஷமான யானைகள் தொடர்ந்து பேசிய அவர், "யானைகள் கூட்டத்தை நோக்கி செல்லும்போது, குட்டி சோர்வடைய ஆரம்பித்தது. அதற்கு குடிக்க ஆற்றுத் தண்ணீரை மட்டுமே கொடுத்தோம். அது எங்களுடன் சற்று நெருக்கமாகத் தொடங்கியது. இப்போது எங்களுக்கு பயம் வந்துவிட்டது, நன்றாகப் பழகி விட்டால் அதை கூட்டத்திடம் சேர்ப்பது சிக்கல்." "இன்னொரு சிக்கல், யானைக் கூட்டம் மிகவும் ஆக்ரோஷமாக இருந்தது. அருகில் சென்று குட்டியை விட முடியாது. அது எங்களை தாக்க வாய்ப்புகள் அதிகம். தேயிலைத் தோட்டம் என்பதால் யானைகளிடமிருந்து தப்பிப்பது இன்னும் கடினம். எனவே மீண்டும் டிரோன் மூலம் கூட்டத்தின் இருப்பிடத்தை உறுதி செய்துவிட்டு, யானையை நன்றாக குளிப்பாட்டி சேற்று மணலை பூசினோம். மனித வாடை இருக்கக்கூடாது அல்லவா." என்று சிரிக்கிறார் மணிகண்டன். "பின்னர் அதை முன்னே செல்ல விட்டோம். கூட்டத்தின் சத்தத்தைக் கேட்ட குட்டி யானை பிளிறியது. உடனே இரண்டு யானைகள் முன்னே குட்டியை அழைத்துக் கொண்டன. அப்போது தான் நாங்கள் நிம்மதி அடைந்தோம். ஏனென்றால் இவ்வளவு சிறிய குட்டி தாயைப் பிரிந்தால் அதிக நாட்கள் தாக்குப் பிடிக்காது." என்று கூறினார். வைரலான காணொளி குறித்து பேசும்போது, "அது இரண்டு நாட்களுக்கு முன்பாக எடுக்கப்பட்ட காணொளி, டிரோன் மூலம் தான் எடுத்தோம். எங்களுக்கு இருந்த சந்தேகம் தாய் அந்தக் குட்டியை எவ்வாறு அணுகும் என்பது தான். ஆனால் டிரோன் மூலம் அந்தக் காட்சியை பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது" என்றார் வனத்துறை ரேஞ்சர் மணிகண்டன். பட மூலாதாரம்,FOREST DEPARTMENT வால்பாறையில் 300-க்கும் மேற்பட்ட யானைகள் இது தொடர்பாக ஆனைமலை புலிகள் காப்பக இயக்குநர் ராமசுப்ரமணியனிடம் (ஐஎப்எஸ்) பேசியபோது, "கேரளாவில் சபரிமலை சீசன் என்பதால் அங்கிருந்து வெளியேறிய முன்னூறுக்கும் மேற்பட்ட யானைகள் வால்பாறையில் முகாமிட்டுள்ளன." "அவை தங்களுடைய உணவுக்காக மக்கள் இருக்கும் பகுதிகளுக்கு செல்லும். எனவே எத்தனை யானைகள் வருகின்றன போகின்றன என்பது குறித்த தரவுகள் எங்களிடம் எப்போதும் இருக்கும்." "இப்போது அந்த குட்டி யானையும் அதன் கூட்டமும் மீண்டும் கேரளாவுக்குள் சென்றுவிட்டது. நாங்கள் இறுதியாக கண்காணித்தவரை குட்டி மிகவும் ஆரோக்கியமாக இருந்தது." "சில மணிநேரங்களில் அனைத்தும் நடந்ததற்கு எப்படியாவது தாயுடன் குட்டியை சேர்த்துவிட வேண்டுமென்ற குழுவின் எண்ணம் தான் காரணம். ஒருவேளை மீண்டும் அந்த யானைக்கூட்டம் வால்பாறைக்குள் வந்தால் கண்காணிக்கப்படும்" என்றார். காணொளிக் குறிப்பு, வால்பாறையில் கூட்டத்திலிருந்து விலகிய குட்டியானையை மீட்டு தாயிடம் சேர்த்த வனத்துறை அழிக்கப்படும் யானையின் வாழ்விடங்கள் யானைகளைப் பற்றி ஆராய்ச்சிகள் செய்துவரும் ஆற்றல் பிரவீன்குமார் தனது பேஸ்புக் பக்கத்தில், "தாயை பிரிந்த யானையின் கன்று ஒன்று மீண்டும் தனது தாயுடன் சேர்ந்த அழகிய தருணங்கள், தாயின் மடியில் பத்திரமாக இருப்பதாய் குட்டி உணர்கிறது. பெரும் முயற்சிக்குப் பிறகு தமிழ்நாடு வனத்துறை இந்த குட்டியை தாயுடன் சேர்த்து வைத்துள்ளனர்." "தமிழ்நாடு வனத்துறையை சேர்ந்த இக்குழுவினருக்கு எம்முடைய வாழ்த்துக்கள். ஆஸ்கர் விருது வாங்கிய தி எலிபெண்ட் விசுபெரர்ஸ் ஆவணப்படத்தில் தோன்றிய அம்மு குட்டி என்னும் யானைக் குட்டி ஒன்று இன்று வரை தன் கூட்டத்துடன் சேர முடியாமல் அனாதையாகவே உள்ளது. தாயை பிரிந்த வேதனை அதற்கு மட்டும் தான் தெரியும்" என்று பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில், "பல ஆறுகளின் மூலமாக இருக்கும் மழைக்காடுகளை துண்டுச் சோலைகளாக மாற்றி விட்டு நாம் தினமும் குடிக்கும் தேயிலைக்காக இங்கு பயிர் செய்து வருகிறார்கள். இழந்துவிட்ட தனது வாழிடத்தை தேடி வரும் யானைகள் இதனால் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றன" என்று கூறியுள்ளார். https://www.bbc.com/tamil/articles/c802d2eggeno
  19. Published By: DIGITAL DESK 3 04 JAN, 2024 | 03:27 PM மரக்கறிகள் மீதான வரியினை குறைக்குமாறு கோரி வலி.மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட வியாபாரிகள் இன்று வியாழக்கிழமை (04) பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். இது குறித்து மேலும் தெரிவிக்கையில், பிரதேச சபையினால் சந்தையானது ஏலத்திற்கு விடப்பட்டது. ஏலத்தில் எடுக்கும் குத்தகைதாரருக்கு வியாபாரிகள் 4 வீத வரி செலுத்த வேண்டும் என்ற விடயம் ஏற்கனவே அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் பிரதேச சபையும் சந்தையை குத்தகைதாரருக்கு வழங்கியது. இந்நிலையில் குறித்த வரி பிரச்சினை ஏற்பட்டதனால் குத்தகைதாரர், வலி.மேற்கு பிரதேச சபையின் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் குறித்த பகுதிக்கு சென்றனர். அவர்கள் அங்கு இருந்த வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடந்த வருடம் குறித்த குத்தகைதாரர் மனிதாபிமான ரீதியில் ஒரு மூடை மரக்கறிக்கு 60 ரூபா வரி வாங்கியுள்ளார். இந்த ஆண்டு விலைகள் அதிகரிப்பு காரணமாக மரக்கிக்கறிகளுக்கு கிலோவுக்கு மூன்று ரூபாவும், வெங்காயத்துக்கு கிலோவுக்கு ஒரு ரூபாவும், உருளைக்கிழங்குக்குக்கு கிலோவுக்கு இரண்டு ரூபாவும் வரியாக கோரியுள்ளார். அல்லது அனைத்து மரக்கறிகளுக்கும் இரண்டும் ரூபா வரியாக கோரியுள்ளார். ஆனால் அந்த வரிப்பணத்தை தங்களால் செலுத்த முடியாது என்றும் ஒரு மூடை மரக்கறிக்கு 80 ரூபா வரியாக தருவதாகவும் அல்லது வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்குக்கு கிலோவுக்கு ஒரு ரூபா வரியாக தருவதாகவும் ஏனைய அனைத்து மரக்கறிகளுக்கும் கிலோவுக்கு இரண்டு ரூபா படி வழங்குவதாகவும் வியாபாரிகள் கூறினர். இறுதியில் இரண்டு தரப்பினரும் அனைத்து மரக்கறிகளுக்கும் இரண்டு ரூபா வரி செலுத்துவதாக தெரிவித்து இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர். https://www.virakesari.lk/article/173124
  20. கேப் டவுன் நியூலேண்ட்ஸ்: பேட்ஸ்மேன்களை சித்ரவதை செய்யும் தென்னாப்பிரிக்க ஆடுகளத்தில் அப்படி என்ன இருக்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒரே நாளில் 23 விக்கெட், இந்திய அணி 0 ரன்னுக்கு 6 விக்கெட்டுகள், தென் ஆப்பிரிக்கா 55 ரன்னில் சுருண்டது என தேவையற்ற சாதனைகளை இரு அணிகளும் பெற்றுள்ளன. ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியா- தென் ஆப்பிரிக்க இடையிலான டெஸ்ட் தொடரில் இரு நாட்டு வீரர்களுடன் சேர்ந்து ‘ஆடுகளங்களும் விளையாடுகின்றன’ என்றால் கேட்பதற்கு சற்று நகைச்சுவையாகத்தானே இருக்கிறது. ஆனால் அது உண்மைதான். ஏனென்றால், இரு போட்டிகளிலும் வெற்றியை தீர்மானிப்பது பந்துவீச்சாளர்களோ, பேட்டர்களோ அல்ல ஆடுகளங்கள்தான். இது 2ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளை பார்த்தபோதே புரிந்திருக்கும். கேப்டவுனில் நடந்து வரும் இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டெஸ்ட்டின் முதல் நாளில் ஒரே நாளில் 23 விக்கெட், இந்திய அணி 0 ரன்னுக்கு 6 விக்கெட்டுகள், தென் ஆப்பிரிக்கா 55 ரன்னில் சுருண்டது என தேவையற்ற சாதனைகளை இரு அணிகளும் பெற்றுள்ளன. அதிலும் இந்திய அணி 153 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்று வலுவாக இருந்த நிலையில், அடுத்த 2 ஓவர்களில் 2 பந்துகளுக்கு ஒரு விக்கெட் வீதம் மீதமிருந்த 6 விக்கெட்டுகளையும் பூஜ்ஜியம் ரன்னுக்கு மோசமாக இழந்திருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுபோன்ற மோசமான சாதனையை இந்திய அணி மட்டுமே செய்திருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தென் ஆப்பிரிக்க கேப்டன் எல்கர் காலையில் முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்து, மாலையில் 2வது இன்னங்ஸிலும் ஆட்டமிழந்தார். தனது கடைசி போட்டியில் மோசமான சாதனையைப் படைத்த எல்கர் அது மட்டுமல்லாமல் ஒரே நாளில் ஒரு பேட்டர் இரு இன்னிங்ஸிலும் ஆட்டமிழந்ததும் இரண்டாவது முறையாகும். தென் ஆப்பிரிக்க கேப்டன் எல்கர் காலையில் முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்து, மாலையில் 2வது இன்னங்ஸிலும் ஆட்டமிழந்தார். இதற்கு முன் 1890ம் ஆண்டு ஆஸ்திரேலிய பேட்டர் ஜேக் பேரட் மட்டுமே இதுபோல் ஆட்டமிழந்திருந்தார். அதற்கு பின் ஏற்ககுறைய 134 ஆண்டுகளுக்குப்பின் டீன் எல்கர் இந்த மோசமான சாதனையைச் செய்துள்ளார். தென் ஆப்பிரிக்க அணியில் விக்கெட் கீப்பர் கெயில் வெரினே தவிர ஒரு பேட்டர் கூட களத்தில் 20 பந்துகளைக் கூட சந்திக்காமல் ஆட்டமிழந்தனர். அந்த அளவுக்கு பந்துவீச்சாளர்களுக்கு ஏற்றாற்போல், பேட்டர்களுக்கு சிறிதும் ஒத்துழைக்காத ஆடுகளமாக கேப்டவுன் மைதானம் மாறிவிட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1889ம் ஆண்டு மார்ச் 25ம் தேதியிலிருந்து நூற்றாண்டு கடந்து கேப்டவுனில் டெஸ்ட் போட்டிநடத்தப்பட்டு வருகிறது கேப்டவுன் நியூலேண்ட்ஸ் ஆடுகளம் எப்படி? தென் ஆப்பிரிக்க ஆடுகளம் என்றாலே வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கும் வகையில்தான் இருக்கும் என்று வரலாறு இருக்கிறது. அதையும் கடந்து இங்கும் சில நல்ல ஆடுகளங்களும் இருக்கின்றன. அந்த வகையில் கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் ஆடுகளமும் ஒன்றாகும். ஆனால், நல்ல மைதானங்கள் வரிசையில் இடம் பெற்ற நியூலேண்ட்ஸ் ஆடுகளம் இவ்வளவு மோசமாக பேட்டர்களுக்கு சிறிதும் ஒத்துழைக்காத ஆடுகளமாக எவ்வாறு மாறியது என்பது தென் ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கருக்கே வியப்பாக இருக்கிறது. 1889ம் ஆண்டு மார்ச் 25ம் தேதியிலிருந்து நூற்றாண்டு கடந்து கேப்டவுனில் டெஸ்ட் போட்டிநடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 58 டெஸ்ட் போட்டிகள் நடத்தப்பட்டாலும், பெரும்பாலான ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்காதான் வென்றுள்ளது. இந்த மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையில்தான் நடந்தது. அந்த அளவுக்கு கேப்டவுன் நியூலேண்ட்ஸ் மைதானம் பாரம்பரியம், புகழ்பெற்றது. தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் அழகான மைதானங்களில், வேகப்பந்துவீச்சாளர்களுக்கு இயற்கையாகவே ஒத்துழைக்கும் வகையில் ஈரக்காற்று அதிகம் வீசும் சூழல் நிறைந்தது. இதனால் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஏற்றாற்போல் ஆடுகளம் அமைத்தாலும், இயற்கை சூழலும் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு உதவும் வகையில் குளிர்காலத்திலும், மழைக்காலத்திலும் காற்றில் அதிகமான ஈரப்பதத்துடன் இங்கு வீசுவதால் சீமிங், ஸ்விங் நன்றாக எடுபடும். இந்த மைதானத்தில் அதிகபட்சமாக 651 ரன்கள் வரை அடிக்கப்பட்டாலும், இந்த டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் தேவையற்ற சாதனைகளை சம்பாதித்துக்கொண்டனர். இந்த மைதானத்தைப் பொறுத்தவரை முதலில் பேட் செய்த அணி 23 போட்டிகளிலும் சேஸிங் செய்த அணி 25 போட்டிகளிலும் வென்றுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கேப்டவுன் விக்கெட்டில் பிளவுகளும், புற்களும் அதிகமாக இருக்கும். மோசமடையுமா ஆடுகளம்? இப்போதுள்ள நிலையைவிட கடைசி 2 நாட்களில் ஆடுகளத்தின் நிலைமை இன்னும் மோசமாகலாம். ஆடுகளத்தில் பந்து சமச்சீரற்ற வகையில் பவுன்ஸ் ஆகும், பேட்டர் எதிர்பாரா வகையில் ஸ்விங் ஆகி, பேட்டர் ஏன் களமிறங்கினோம் என்று மனதுக்குள் புலம்பும் வகையில் சித்ரவதை செய்யும் ஆடுகளமாக அடுத்துவரும் நாட்கள் மாறக்கூடும் என்று பிட்ச் ரிப்போர்ட் கூறுகிறது. டாஸ் வெல்லும் அணி முதலில் பேட் செய்வதுதான் சிறந்த முடிவாக இதற்கு முன்பு வரை இருந்தது என்பதால்தான் தென் ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கரும் பேட் செய்தார். ஆனால், தங்களின் பேட்டிங் திறமை வெறும் 24 ஓவர்களுக்குள் பெட்டிப்பாம்பாக அடங்கிவிடும் என்று அவரே நினைக்கவில்லை. இந்த நியூலேண்ட்ஸ் மைதானம் செஞ்சூரியன் மைதானத்தைப் போலவே வேகப்பந்துவீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைக்கும் மைதானமாகும். விக்கெட்டில் பிளவுகளும், புற்களும் அதிகமாக இருக்கும். மேலும், விக்கெட்டில் தண்ணீர் ஊற்றி ரோலர் போடாமல், ரோலர் மட்டுமே உருட்டுவதால், ஆடுகளத்தில் வேகப்பந்துவீச்சில் அதிகமாக ஸ்விங் ஆகும், பவுன்ஸரில் பந்து எகிறி பேட்டர்களை சித்ரவதை செய்யும். ஆனால், கடைசி இரு நாட்கள் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கும் என்று நடுநிலையான பிட்ச் ரிப்போர்ட் தெரிவித்தாலும், இப்போதுள்ளநிலையில் 4வது நாள்வரை போட்டி செல்லுமா என்பது கேள்விக்குறிதான். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கேப்டவுன் நியூலேண்ட்ஸ் ஆடுகளத்தில் பந்துகள் சராமாரியாக பவுன்ஸ் ஆகி எகிறுகிறது ஐசிசி விதிகளுக்கு உட்பட்டுதான் ஆடுகளம் அமைக்கப்பட்டதா? ஐசிசி விதிகளில் ஆடுகளம் குறித்து தெரிவிக்கையில் ஒரு ஆடுகளம் பேட்டர்களுக்கும், பந்துவீச்சாளர்களுக்கும் சம வாய்ப்பு அளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கிறது. ஆனால், தென்ஆப்பிரிக்காவில் செஞ்சூரியன், கேப்டவுன் ஆடுகளங்கள் இரண்டுமே பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாகவே அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரு ஆடுகளங்களிலும் பேட்டர் ரன் சேர்ப்பதே அரிதாக இருக்கிறது, ஒரு பேட்டர் நீண்டநேரம் களத்தில் நிற்பதே அதிசயமாக இருக்கிறது. இந்தியாவில் ஆகமதாபாத், சென்னை ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஏற்றார்போல் மாற்றப்பட்டுள்ளன என்று புகார் எழுந்தபோது ஐசிசி அப்போது அதில் தலையிட்டது. அதுபோன்று நியூலேண்ட்ஸ் மைதானத்தின் தரத்தையும் பார்வையிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. ஆசியாவில் இதுபோன்று ஒரு போட்டியில் 23 விக்கெட்டுகள் ஒரு போட்டியில் வீழ்த்தப்பட்டு அது பெரிய சர்ச்சையாகியது, ஆடுகளங்களும் ஐசிசியால் ஆய்வு செய்யப்பட்டன. ஒரு டெஸ்ட்போட்டி 3 நாட்களில் முடிந்து, ஒரு தரப்புக்கு உதவுமாறு அமைக்கப்பட்டால் ரசிகர்களின் விமர்சனங்கள் மோசமாக இருக்கும். தென்ஆப்பிரிக்காவில் வேகப்பந்துவீச்சுக்கு மட்டும் உதவுமாறு ஆடுகளங்களை அமைக்காதீர்கள் என்று முன்னாள் வீரர் ஷான் போலக்கூட விமர்சித்திருந்தார். ஆனால் கேப்டவுன் நியூலேண்ட்ஸ் ஆடுகளத்தில் பந்துகள் சராமாரியாக பவுன்ஸ் ஆகி எகிறுகிறது, பேட்டர்களால் பந்தை பேட்டால்கூட தொட முடியவில்லை, அதிகபட்ச ஸ்விங் ஆகிறது, செஞ்சூரியன் மைதானத்திலும் இதே நிலை இருந்தது. இதை அனைத்தைபும் பார்த்தஐசிசி போட்டி ரெப்ரி இந்த ஆடுகளங்களை நல்ல ஆடுகளங்கள் என்று தரச்சான்று அளித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES உள்நாட்டு அணிக்கே சிக்கலை ஏற்படுத்திய ஆடுகளம் பொதுவாக உள்நாட்டில் போட்டி நடக்கும்போது, உள்நாட்டு அணியைக் கேட்டுத்தான் ஆடுகளம் வடிவமைப்பாளர் ஆடுகளத்தை தயார் செய்வார். இதுதான் அதிகாரபூர்வமற்ற நடைமுறையாக அனைத்து நாடுகளிலும் இருக்கிறது. ஆனால், செஞ்சூரியன், கேப்டவுன் ஆடுகளம் அமைக்கப்பட்ட விதத்தின் தார்மீகம் குறித்த கேள்வி எழுகிறது. பந்துவீச்சாளர்களுக்கு உதவக்கூடிய வகையில், ஆடுகளத்தை மோசமாக வடிவமைப்பது எந்த விதத்தில் நடுநிலையானது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்திய அணியின் பலவீனத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் வகையில் ஆடுகளம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு மட்டும் ஏற்றார்போல் மாற்றப்பட்டது. ஆனால், முதலில் பலியானது என்னமோ 23.2 ஓவர்களில் தென்ஆப்பிரிக்காதான். புதிய பந்திலேயே இவ்வளவு மோசமாக ஆடுகளம் செயல்படுகிறது என்றால், பந்து தேய்ந்து பழசாகிவிட்டால் இன்னும் மோசமாக இருக்கும். தன்வினை தன்னைச் சுடும் என்பதுபோல், ஆடுகளத்தை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றாற்போல் அமைக்க வேண்டும் என்று தென் ஆப்பிரிக்க அணி எடுத்து முடிவு, அந்த அணிக்கே “பேக் பயர்” ஆகிவிட்டது. ஒரே நாளில் 23 விக்கெட்டுகள் சரியும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியப் பந்துவீச்சு எப்படியிருந்தது? ஆனால், இந்திய அணியின் பந்துவீச்சாளர்ள் ,செஞ்சூரியன் மைதானத்தில் பந்துவீசியதைவிட, கூடுதல் துல்லியத்தன்மையுடனும், லைன் லென்த்திலும் வீசினர். ஆடுகளத்தில் பேட்டர்களால் பந்தை எதிர்கொண்டு ஆடமுடியவில்லை என்பதை தொடக்கத்திலேயே புரிந்து கொண்டு பவுன்ஸர்களை வீசி பேட்டர்களை மிரட்டினர். தென் ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர் ஆடுகளம் குறித்து அளித்த பேட்டியில் “ இந்த நியூலேண்ட்ஸ் ஆடுகளம் பொதுவாக மெதுவாக இருக்கும், பேட்டர்கள் அதற்கு ஏற்றாற்போல் தங்களை மாற்றிக்கொள்ள முடியும். இந்த ஆடுகளத்தில் 600 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்று ஆடுகளத்தில் பந்துகள் பவுன்ஸர் ஆகியவிதம், வேகப்பந்துவீச்சுக்கு ஏற்றார்போல் மாறியவிதம் எனக்கு வியப்பாக இருக்கிறது. வெறும் கண்களில் பார்த்தால் ஆடுகளம் மோசமாக இருக்கும், ஆனால், நான் அப்படி மோசமானதாக இருக்கும் என நினைக்கவில்லை. உள்நாட்டுப் போட்டிகள் நல்லவிதமாக முடிந்துள்ளன, பேட்டர்களுக்கு சாதகமாகவும் இருந்துள்ளன. “ “ஆடுகளம், சூழல் ஆகியவற்றை அறிந்து நான்தான் முதலில் பேட் செய்ய வேண்டுமா என்பதை முடிவு செய்திருக்க வேண்டும். இந்திய பந்துவீச்சாளர்கள் சரியான லைன் லென்த்தில் பந்துவீசினர். கோலி, ரோஹித் சர்மா சரியான பந்துகளை தேர்வு செய்து பேட் செய்தனர். அவர்கள் சிரமப்பட்டதற்கு ஏற்றார்போல் ஸ்கோரும் கிடைத்தது. “ பட மூலாதாரம்,GETTY IMAGES “இந்த ஆடுகளம் மோசமானது என்று என்னால் கூற முடியாது. தனிப்பட்ட ரீதியில் இந்த ஆடுகளத்தில் நல்ல ஸ்கோரை நான் எடுத்திருக்கிறேன். கிரேம் ஸ்மித்துக்கு அடுத்தார்போல் நான் அதிகமான ரன்களை கேப்டவுனில் அடித்துள்ளேன். என்னைப் பொறுத்தவரை ஆடுகளம் பேட்டர்களுக்கும், பந்துவீச்சாளர்களுக்கும் சமவாய்ப்பு அளிக்குமாறு இருக்க வேண்டும், அமைக்க வேண்டும். ஆனால் தென் ஆப்பிரிக்காவில் பந்துவீச்சாளர்களுக்கு வசதியாக அமைப்பது தவறானது. பேட்டர்கள் வழக்கமான ஒழுக்கத்தைவிட கூடுதல் ஒழுக்கத்துடன் பேட் செய்ய வேண்டும், தங்களை ஆடுகளத்துக்கு ஏற்றார்போல் மாற்றிக்கொண்டு பேட் செய்ய வேண்டும், மனநிலையை கடுமையாக வைத்திருக்கவேண்டியது இதுபோன்ற ஆடுகளங்களில் அவசியம்” எனத் தெரிவித்தார். “இப்படி ஆடுகளத்தை நான் பார்த்து இல்லை” தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஆஸ்வெல் பிரின்ஸ் ஆடுகளம் குறித்துக் கூறுகையில் “ நியூலேண்ட்ஸ் விக்கெட்டை இப்போது பார்த்தது போன்று இதற்குமுன் நான் பார்த்தது இல்லை. விக்கெட்டில் பந்து பட்டதும் வரும்வேகம், சமச்சீரற்ற பவுன்ஸர், சீமிங், ஸ்விங் அனைத்துமே வித்தியாசமாக இருந்தது. ஒருநாளில் ஒரு இன்னிங்ஸும் முடியும் அளவுக்கு நியூலேண்ட்ஸ் விக்கெட்டை இதற்கு முன் நான் பார்த்து இல்லை. பேட்டர்கள் இந்த ஆடுகளத்தில் பேட் செய்வது கடினமாக இருந்ததைப் பார்த்தேன். ஒரு பந்து தாழ்வாக பவுன்ஸராகிறது, மற்றொரு பந்து மார்புக்கு நேரே வருகிறது. பந்து இந்த அளவுக்கு சீமிங், ஸ்விங் ஆவதற்கு காலநிலையும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று நான் நினைக்கவில்லை. முதலில் நாளில் இப்படி இருக்கலாம் அடுத்துவரும் நாட்களும் இதுபோன்ற நிலை தொடர்ந்தால் அது கவலைப்படக்கூடியதுதான்” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c4nylvjnelxo
  21. 04 JAN, 2024 | 11:19 AM இலங்கை சுதந்திரமடைந்த பிறகு இதுவரை இல்லாத வகையில் கடந்த 2023ஆம் ஆண்டு 474 யானைகள் உயிரிழந்துள்ளன. கடந்த பல வருடங்களாகவே இலங்கையில் தொடர்ச்சியாகவே யானைகளின் இறப்பு அதிகரித்து வருகிறது. இந்த எண்ணிக்கை 2022ஆம் ஆண்டு 439 என்றளவில் இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டு 375 யானைகள் உயிரிழந்தன. இந்த உயிரிழப்புகளில் மூன்றில் ஒரு பங்கு, யானைகளுக்கும் மனிதர்களுக்கும் உருவாகும் மோதல்கள் காரணமாகவே ஏற்படுகிறது. சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையத்தின் திமுது சந்தருவான் சேனாதீர இது தொடர்பில் கூறுகையில், சுதந்திரத்துக்குப் பின்னரான காலப்பகுதியைப் பார்க்கும்போது, அதிகளவிலான யானைகள் இறப்பு பதிவாகியுள்ளது. 2023ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 74 யானைகள் உயிரிழந்துள்ளன. ஆனால், அவை எப்படி இறந்தன என்பது பற்றி தகவல் இல்லை. 49 யானைகள் துப்பாக்கிச் சூட்டின் மூலமும் 36 யானைகள் மின்சாரம் தாக்கியும் பலியாகின. விரைவான நகரமயமாக்கல் மற்றும் யானைகளின் வாழ்விடங்களை மனிதர்கள் ஆக்கிரமித்தமை, அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு உணவளிக்கவேண்டிய கட்டாயம் காரணமாக விவசாயத்துக்காக காடுகளை அழித்தமை ஆகியவையே உலகளவில் யானைகளின் அழிவுக்கு முக்கிய காரணங்களாக உள்ளது. யானைகள் மற்றும் மனிதர்களுக்கு இடையே ஏற்படும் மோதல்களை தடுக்க அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. அரசியல் தலைமைகளும் அதிகாரிகளும் என்ன செய்கிறார்கள் என்றால் யானைகளை ஒருங்கிணைத்து அவற்றை ஒரு பகுதிக்குள் தள்ளி பிறகு மின்வேலி அமைக்கிறார். ஆனால், அதற்கு அப்பாற்பட்டு அவர்களால் எந்த தீர்வையும் அளிக்க முடியவில்லை. சுற்றுச்சூழல் சிறப்பாக இருப்பதற்கு யானைகளை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் அதேவேளை இப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினை காண்பது சுலபமான காரியமல்ல. யானைகள்-மனிதர்களுக்கு இடையேயான மோதல்களுக்கு நிரந்தர தீர்வு காண்பது கடினம் என்றாலும், யானைகளை பாதுகாக்க இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பது மிகவும் அவசியமானது என வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/173082
  22. தொடருங்கள் கவி ஐயா.
  23. Japan-ல் பயணிகள் உயிர் தப்பியது எப்படி? தீப்பிடித்த போது Flight-க்குள் என்ன நடந்தது? வெளியான வீடியோ
  24. ஹமாஸ் குழுவிவின் தலைவர்களில் ஒருவரான சாலே-அல்-அரோரி ஒரு ‘துல்லியத் தாக்குதல்’ மூலம் கொல்லப்பட்டிருப்பதாக லெபனான் நாட்டின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. லெபனானின் தலைநகரான பெய்ரூட்டின் தெற்கிலிருக்கும் ஹமாஸ் அலுவலகத்தின் மீது இஸ்ரேலிய ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் அரோரி கொல்லப்பட்டதாக லெபனானின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் இச்சம்பவத்தைக் கண்டித்திருக்கிறது. அதே சமயம் ஹமாஸின் கூட்டாளியான ஹெஸ்புல்லா இது லெபனானின் இறையாண்மை மீதான தாக்குதல் என்று கூறியிருக்கிறது. இந்த தாக்குதலை தான் நடத்தியதாக இஸ்ரேல் பொறுப்பேற்கவும் இல்லை; அதே நேரத்தில் மறுக்கவும் இல்லை. இது ஹமாஸ் தலைமை மீதான துல்லியத் தாக்குதல் என இச்சம்பவத்தை இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.