Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. இலங்கையை ஏன் டிரம்ப் தனது வரிப்பட்டியலில் சேர்த்தார்? சிஎன்என் கலந்துரையாடலில் கேள்வி? 10 APR, 2025 | 10:52 AM அமெரிக்க ஜனாபதியின் வரிகள் குறித்த சிஎன்என் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போது இலங்கை குறித்தும் பொருளாதார நிபுணர்கள் எதிர்பாராதவிதமாக கருத்து வெளியிட்டுள்ளனர். நிகழ்ச்சி தொகுப்பாளர் எரின்பேர்னாட்டும், சிக்காக்கோ பல்கலைகலைகழகத்தின் பொருளியல் பேராசிரியர் பிரென்ட் நெய்மனும், டிரம்ப் இலங்கையை தனது வரிப்பட்டியலில் சேர்த்தமை எவ்வளவு அர்த்தபூர்வமான நடவடிக்கை என கேள்வி எழுப்பியுள்ளனர்? அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் இலங்கை மட்டுப்படுத்தப்பட்ட வர்த்தக சமநிலையின்மையை கொணடுள்ள போதிலும் டிரம்ப் ஏன் இலங்கையை பட்டியலில் இணைத்தார் என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அமெரிக்கர்கள் இலங்கையிடமிருந்து பெருமளசு ஆடைகளை கொள்வனவு செய்கின்றனர், ஆனால் இலங்கை அமெரிக்காவிடமிருந்து அதிக எரிவாயு விசையாழிகளை கொள்வனவு செய்வதில்லை இது சரிசெய்யப்படவேண்டிய வர்த்தக ஏற்றத்தாழ்வல்ல என எரின்பேர்னார்ட் கேள்வி தெரிவித்துள்ளார். இலங்கை ஜோர்தான், ஜம்பியா போன்றவை டிரம்பின் பட்டியலில் காணப்படுவது குறித்து ஆச்சரியமடைந்ததாக சிக்காக்கோ பல்கலைகலைகழகத்தின் பொருளியல் பேராசிரியர் பிரென்ட் நெய்மன் தெரிவிததுள்ளார். பரஸ்பர வர்த்தகம் கணிப்பிடப்படுவதில் தவறான தத்துவம் பயன்படுத்தப்படுவதை இது வெளிப்படுத்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/211681
  2. 35 வருடங்களின் பின் திறக்கப்பட்ட வீதி; பொங்கல் பொங்கி கொண்டாடிய மக்கள் இராணுவப் பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்த யாழ்ப்பாணம் வசாவிளான் – பலாலி வீதி இன்று காலைமுதல் திறக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் குறித்த வீதியினூடாக போக்குவரத்து நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்நிலையில் நீண்டகால மூடப்பட்டிருந்த வீதி விடுவிப்பினை மக்கள் பொங்கல் வைத்து தேங்காய் அடித்து கொண்டாடி வருகின்றனர். யாழ்ப்பாணம் பலாலி வீதியில் வசாவிளான் சந்தியில் இருந்து பருத்தித்துறை- பொன்னாலை வீதியுடன் இணையும் பலாலி சந்தி வரையான 2.5 கிலோமீற்றர் நீளமான வீதியே இவ்வாறு திறந்து விடப்பட்டுள்ளது. 35 வருடங்களாக மூடப்பட்டிருந்த குறித்த வசாவிளான் தொடக்கம் பலாலி கடற்கரை சந்தி வரையிலான பாதை நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டுள்ளதுடன் வீதியை பயன்படுத்துவது தொடர்பாக சில கட்டுப்பாட்டு விதிமுறைகள் இராணுவத்தினரால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, சில பாதுகாப்புக் காரணங்களுக்காக குறித்த வீதியினூடாக நடந்தும், மிதிவண்டியினூடாகவும் பயணிப்பது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் வாகனங்களினூடான போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக மூடப்பட்டு இருந்த குறித்த வீதியூடான போக்குவரத்துக்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்த அதேவேளை, கடந்த ஜனவரி 31ம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் யாழ் மாட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இக்கோரிக்கை ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டிருந்தது. குறித்த வீதி விடுவிப்பினால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும், இது ஒரு தேர்தலுக்கான நடவடிக்கையாக இல்லாமல் தொடர்ச்சியான மக்கள் பாவனைக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர். நீண்டகால மூடப்பட்டிருந்த வீதி விடுவிப்பினை மக்கள் பொங்கல் வைத்து தேங்காய் அடித்து கொண்டாடுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/316935
  3. 10 APR, 2025 | 11:46 AM காடுகளை அழிப்பது எங்கள் நோக்கமல்ல. காடுகளை பாதுகாக்கின்றோம் என்ற பெயரில் மக்களின் காணிகளை அபகரிப்பது மற்றும் அபிவிருத்திக்கு தடையாக இருப்பதையே எதிர்க்கின்றோம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநரின் கோரிக்கைக்கு அமைவாக வடக்கு மாகாணத்தில் வனவள, வனஜீவராசிகள் திணைக்களங்கள் என்பனவற்றால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் புதன்கிழமை (09) இடம்பெற்றது. சுற்றாடல்துறை பிரதி அமைச்சர் அன்ரன் ஜெயக்கொடி மற்றும் காணி, நீர்ப்பாசனத்துறை பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க ஆகியோரின் பங்கேற்புடன் நடத்தப்பட்ட இந்தக் கலந்துரையாடலில் வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் பாதுகாவலர்நாயகங்கள், காணி ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட தொடர்புடைய அதிகாரிகள் கலந்துகொண்டனர். வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கின் 5 மாவட்டங்களினதும் மாவட்டச் செயலர்களும் இதில் பங்கேற்றனர். யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் இ.சந்திரசேகரன், வன்னித் தேர்தல் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், திலகநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். காணி, நீர்பாசனத்துறை பிரதி அமைச்சர், வடக்கு மக்கள் எதிர்கொள்ளும் காணிப் பிரச்சினை குறிப்பாக வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் என்பனவற்றால் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தொடர்பில் ஆராய்வதற்காகவே கூட்டம் நடத்தப்படுவதாகத் தெரிவித்திருந்தார். தொடர்ந்து வனவளத் திணைக்கள பாதுகாப்பு நாயகம் வடக்கு மாகாணங்களில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் விவரித்தார். குறிப்பாக முன்னைய ஆட்சியில் இது தொடர்பில் விசேட செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் வவுனியா மாவட்டச் செயலர் தவிர்ந்த ஏனைய மாவட்டச் செயலர்கள் அதனை முழுமைப்படுத்தவில்லை என்றும் குற்றம் சுமத்தியிருந்தார். அத்துடன் வனவளத் திணைக்களம் வடக்கு மாகாணத்தில் முன்னெடுத்து வருகின்ற செயற்பாடுகளை முழுமையாக நியாப்படுத்தியிருந்தார். அவரது கருத்துக்கு மறுப்புத் தெரிவித்து வடக்கு மாகாண ஆளுநர் நிலைப்பாட்டை முன்வைத்தார். மிக நீண்ட காலப் போர் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில் அவர்களது காணிகள் ஆள்நடமாட்டம் அற்ற நிலையில் அவையே காடுகளாக வளர்ந்துள்ளன என்றும் அவற்றை கூகுள் வரைபடம் மூலமே வனவளத் திணைக்களம் வனஜீவராசிகள் திணைக்களம் என்பன தமக்குரியதாக அடையாளப்படுத்தி 2012ஆம் ஆண்டின் பின்னர் அரசிதழ் வெளியிட்டுள்ளன எனவும் குறிப்பிட்டார். 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் அரசிதழ் வெளியிட்டப்பட்டவை தொடர்பில் எந்தக் குற்றச்சாட்டுக்களையும் முன்வைக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், போரின் பின்னர் கூகுள் வரைபடத்தை மாத்திரம் பயன்படுத்தி, கள அலுவலர்களுக்கும், பிரதேச செயலர், மாவட்டச் செயலர் ஆகியோருக்கும் தெரியாமலேயே அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது என்றும் அதுவே தற்போதுள்ள சகல பிரச்சினைகளுக்கும் அடிப்படையாக அமைந்துள்ளது எனவும் தெளிவுபடுத்தினார். வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் என்பன தமக்குரியதாக 2012ஆம் ஆண்டுக்குப் பின்னர் வெளியிட்ட அரசிதழ்களில் குறிப்பிடப்படும் பகுதிக்குள் மக்கள் முன்னர் வாழ்ந்தமைக்கான கட்டடங்களின் எச்சங்கள், கிணறுகளின் எச்சங்கள், வயல்கள் செய்தமைக்கான அடையாளங்கள் என்பன இப்போதும் காணப்படுகின்றன என்றும் அவை மக்களின் வாழ்விட மற்றும் வாழ்வாதார நிலங்கள்தான் என்பனவற்றுக்கு இவை சிறந்த சான்று எனவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார். வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் என்பன தான்தோன்றித்தனமாகச் செயற்படுவதால், மக்களின் வாழ்வாதாரம், குடியேற்றம் என்பன மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் வடக்கின் அபிவிருத்திச் செயற்பாடுகளும் திட்டமிட்ட ரீதியில் முடக்கப்படுவதற்கான அபாயம் காணப்படுகின்றது எனவும் குறிப்பிட்டார். இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் மிக நீண்ட காலமாக பேசப்பட்டு வந்தாலும் அதற்கு தீர்வு காணப்படாமல் இழுதடித்துச் செல்லப்படுகின்றது என விசனத்துடன் குறிப்பிட்ட ஆளுநர், மக்களின் காணிகளையும், அபிவிருத்திக்குத் தேவையான காணிகளையும் விடுவிப்பதே தீர்வாகும் என்பதையும் அதனை உடனடியாகச் செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஆளுநரைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட அமைச்சர் இ.சந்திரசேகரன், ஆளுநர் குறிப்பிட்ட விடயங்கள் மிகச் சரியானது. இந்த விடயங்களால் வடக்கு மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். வனவளத் திணைக்களம் முன்வைத்த காலை எப்படி பின்வைப்பது என்று யோசிக்காமல் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் செயற்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் என்பனவற்றுக்கு எதிராக மிகக் காட்டமான கருத்துக்களை முன்வைத்தார். வவுனியா மாவட்டத்துக்கு சிங்கள மாவட்டச் செயலர் இருக்கின்றார். அந்த மாவட்டத்துக்கு ஒருங்கிணைப்புக்குழுத் தலைவராக சிங்களவரான நான் இருக்கின்றேன். அப்படியிருக்கையிலேயே எனக்குத் தெரிந்து மடுகந்த குளத்தின் கீழ் வனவளத் திணைக்களம் ஆக்கிரமித்த காணிகளை விடுவிப்பதற்கு மறுக்கின்றது. அது மக்கள் வயல் செய்த காணிகள். சிங்களவர்களுக்கே இவ்வாறான நிலைமை என்றால் தமிழ் மக்களின் நிலைமை சொல்லத்தேவையில்லை. இந்த நாட்டில் போர் உருவாகுவதற்கு காணிப் பிரச்சினையும் பிரதான காரணம் என்பதை மறவாதீர்கள் என்று குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து மாவட்டச் செயலர்கள் ஒவ்வொருவரும் தமது மாவட்டத்தில் இந்த இரு திணைக்களங்களாலும் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களைப் பட்டியல்படுத்தினர். முன்னைய ஆட்சியில் விடுவிப்பதற்கு தங்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் 10 சதவீதத்தையே விடுவிக்க இணங்கியமையும் சுட்டிக்காட்டிய அவர்கள் அது போதாது எனவும் குறிப்பிட்டனர். இதற்கு மேலதிகமாக, விடுவிக்க இணங்கியதைவிட பல காணிகளை புதிதாக காடுகளாக அரசிதழ் வெளியிடுவதற்கு வனவளத் திணைக்களம் கோரியிருப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், இதனாலேயே முன்னைய ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையில் இணங்கிச் செல்ல முடியாத நிலைமை காணப்பட்டதாகவும் குறிப்பிட்டனர். வவுனியா மாவட்டச் செயலர், கடந்த ஆட்சிக் காலத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவராக இருந்தவரது அறிவுறுத்தலுக்கு அமைவாகவே தான் செயற்பட்டதாகக் குறிப்பிட்டார். இருப்பினும் வவுனியா மாவட்டத்தில் வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பனவற்றால் மக்கள் தினமும் எதிர்கொள்ளும் பாதிப்புக்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் பட்டியல்படுத்தியதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் திலகநாதனும் மேலதிக விடயங்களைத் தெரியப்படுத்தினார். வடக்கில் மிகப்பெரும் பாரதூரமான விடயமாக வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் என்பனவற்றின் செயற்பாடுகள் இருப்பதை ஏற்றுக்கொண்ட சுற்றாடல்துறை பிரதி அமைச்சர், இது தொடர்பில் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகக் குறிப்பிட்டார். மேலும், ஜனாதிபதியின் செயலருடன் இது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடலை நடத்துவது பொருத்தமாக இருக்கும் என தீர்மானிக்கப்பட்டது. அதேநேரம், ஆளுநர் ஜனாதிபதியின் பிரதிநிதி என்ற வகையில் ஜனாதிபதியுடன் சந்தித்து அவரின் கவனத்துக்கு கொண்டு செல்லலாம் எனவும் பிரதி அமைச்சர்கள் குறிப்பிட்டனர். மேலும், வடக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் மாவட்டச் செயலர்களால் தமது மாவட்டங்களில் விடுவிப்பதற்கு கோரிக்கை முன்வைத்த காணிகளை மீளவும் களப் பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்வதற்கும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/211675
  4. தமிழக வீரர்களால் குஜராத் அணி முதலிடம், சாய் சுதர்சன் அதிரடியில் வீழ்ந்த ராஜஸ்தான் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் 23வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 58 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்ன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் சேர்த்தது. 218 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.2 ஓவர்களில் 159 ரன்களுக்கு ஆட்டமிழந்து 58 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் பெற்று முதலிடத்துக்கு முன்னேறியது. அதோடு, 1.413 என வலுவான நிகர ரன்ரேட்டில் இருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 போட்டிகளில் 2 வெற்றிகள் மற்றும் 3 தோல்விகளைப் பெற்று 4 புள்ளிகளுடன் 7வது இடத்துக்குச் சரிந்தது. குஜராத் அணியின் வெற்றிக்கு தமிழக வீரர்களான சாய் சுதர்சன், சாய் கிஷோர் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா மீண்டும் காரணமாகியுள்ளனர். அதிலும் தமிழக பேட்டர் சாய் சுதர்சன் கடந்த 5 போட்டிகளிலும் நிலையான பேட்டிங்கை வெளிப்படுத்தி, ஆரஞ்சு தொப்பியை நோக்கி முன்னேறியுள்ளார். சாய் சுதர்சன் 53 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்து குஜராத் அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்து, ஆட்டநாயகன் விருதையும் வென்றார். பிரசித் கிருஷ்ணா 4 ஓவர்களில் 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் எனவும், சாய் கிஷோர் 2.2 ஓவர்களில் 20 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் எனவும் ராஜஸ்தான் அணியை நெருக்கடியில் தள்ளினர். சிஎஸ்கே பவுலர்களின் தூக்கம் கெடுத்த இந்த 'இடது கை சேவாக்' யார்?9 ஏப்ரல் 2025 மதுரை சிறுமி 7 வயதிலேயே டேக்வாண்டோ பயிற்சியாளராகி கின்னஸ் சாதனை9 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES ராஜஸ்தான் அணியின் சரியில்லாத பேட்டிங்தான் தோல்விக்கான முக்கியக் காரணம். 3 பேட்டர்கள் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்றவர்கள் யாரும் ஜொலிக்கவில்லை. சிவப்பு மண் கொண்ட ஆடுகளம் பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியாக இருந்தது. ஆனால் பேட்டர்கள் யாரும் நிதானமாக ஆடவில்லை என்பதுதான் விக்கெட் சரிவுக்கு காரணம். அது மட்டுமின்றி ராஜஸ்தான் அணியில் ஹெட்மெயருக்கு அடுத்தார்போல் நடுப்பகுதியில் பெரிதாக பேட்டர்கள் யாருமில்லை. டாப்ஆர்டர் 3 பேர்தான் ஓரளவுக்கு சிறப்பாக ஆடக்கூடியவர்கள். நடுப்பகுதியும், கீழ்வரிசையும் ராஜஸ்தான் அணியில் பலவீனமாக இருக்கிறது. இதைச் சரிசெய்யாவிட்டால் ராஜஸ்தான் அணி முதல் சுற்றிலேயே வெளியேற்றப்பட்டுவிடும். நடுப்பகுதியில் பெரிய ஷாட்களை ஆடக்கூடிய வகையில் ஆங்கர் ரோல் எடுத்து விளையாடக் கூடிய பேட்டர்கள் யாருமில்லை. ஷுபம் துபே, ஜூரெல் இருவரும் கடந்த சில போட்டிகளாக மோசமாக ஆடி வருகிறார்கள். ஷிம்ரன் ஹெட்மயர்(52) மட்டுமே அரைசதம் அடித்தார். கேப்டன் சஞ்ஜூ சாம்ஸன்(41), ரியான் பராக்(26) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற வகையில் ஜெய்ஸ்வால்(6), நிதிஷ் ராணா(1), ஜூரெல்(5), ஷுபம் துபே(1) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு எப்போது? மௌனம் கலைத்தார் தோனி8 ஏப்ரல் 2025 ஏமாற்றம் தந்த தோனி: சிஎஸ்கே அணியின் 'ஹாட்ரிக்' தோல்வி உணர்த்துவது என்ன?6 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்ச்சரின் அதிரடி பந்துவீச்சு வெற்றிக்குப் பின் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் பேசுகையில், "நன்கு ஸ்கோர் செய்திருந்தோம். சேஸிங்கும் எளிதாக இருக்கவில்லை. முதல் 4 ஓவர்களில் நாங்கள் நெருக்கடி கொடுத்துவிட்டோம். சாய், பட்லர் பார்ட்னர்ஷிப் ஆட்டம் அற்புதமாக இருந்தது, அதனால்தான் 200 ரன்களை கடக்க முடிந்தது. எங்கள் வேகப்பந்துவீச்சாளர்களும் அற்புதமாகப் பந்துவீசினர்," என்று தெரிவித்தார். அதோடு, ஒவ்வொருவரும் தனது பங்கை உணர்ந்து ஆடியதாகக் குறிப்பிட்ட அவர், "நாம் நினைத்தது போல் பந்துவீச்சாளர்கள் செயல்படும்போது கேப்டன்சி எளிதாகிறது. நான் யாரை பிளேயிங் லெவனில் கொண்டு வந்தாலும் 100 சதவீத பங்களிப்பு செய்கிறார்கள். இஷாந்த் சர்மாவும் கடந்த ஆட்டத்தில் சிறப்பாகப் பந்து வீசினார்," எனத் தெரிவித்தார். ராஜஸ்தான் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு இந்த சீசன் சிறப்பாகத் தொடங்கவில்லை. முதல் இரு போட்டிகளில் 6.3 ஓவர்களில் 109 ரன்கள்வரை கொடுத்தார். ஆனால் அடுத்து வந்த போட்டிகளில் மீண்டு வந்த ஆர்ச்சர் 7 ஓவர்களில் 38 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி பந்துவீச்சில் அதிரடியைக் காட்டியுள்ளார். இந்த ஆட்டத்திலும் ஆர்ச்சரின் பந்துவீச்சில் அனல் பறந்தது. சாய் சுதர்சன் சந்தித்த முதல் ஓவரில் ஆர்ச்சர் 152 கி.மீ வேகத்தில் பந்துவீசித் திணறடித்தார். 147 கி.மீ வேகத்தில் இன்ஸ்விங் வீசி சுப்மன் கில்லை கிளீ்ன் போல்டாக்கி மகிழ்ச்சியில் ஆர்ச்சர் திளைத்தார். அடுத்து வந்த இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லருக்கு 2 ஸ்லிப் ஃபீல்டர்களை நிறுத்தி, ஷார்ட் லெக்கில் ஃபீல்டர் அமைத்து ஆர்ச்சர் அவுட் ஸ்விங் வீசியும், பவுன்ஸர் வீசியும் திணறவிட்டார். ஆனால், பட்லர் கடைசியில் பவுண்டரி அடித்து ஆர்ச்சருக்கு பதிலடி கொடுத்தார். ஒரே ஒரு வீடியோவால் தர்பூசணி விலை கிலோ ரூ.2-க்கு வீழ்ந்து விட்டதாக விவசாயிகள் வேதனை9 ஏப்ரல் 2025 கோழி இறைச்சியை ஆரோக்கியமான முறையில் கழுவுவதும், சமைப்பதும் எப்படி?7 ஏப்ரல் 2025 சாய் சுதர்சன் எனும் நங்கூரம் பட மூலாதாரம்,GETTY IMAGES குஜராத் டைட்ன்ஸ் அணியின் நம்பிக்கை நாயகன், நங்கூரம் என்று தமிழக வீரர் சாய் சுதர்சனை குறிப்பிடலாம். இதுவரை 5 போட்டிகளில் 3 அரைசதங்கள் உள்பட 40க்கும் அதிகமான ரன்களை 4 முறை அடித்துள்ளார். குஜராத் அணி ஒவ்வொரு முறையும் பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு தொடக்கப் புள்ளியாக சாய் சுதர்சன் ஆட்டம் அமைந்துள்ளது. தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடிய சுதர்சன் ஸ்கூப், டிரைவ், கட்ஷாட் என அடித்து ரன்களை சேர்த்தார். இதன்மூலம் 5.1 ஓவர்களில் குஜராத் 50 ரன்களை எட்டியது. பவர்ப்ளே முடிவில் குஜராத் 56 ரன்கள் சேர்த்தது. அதில் 39 ரன்கள் சாய்சுதர்சன் சேர்த்தது. ஜாஸ் பட்லர் ஒரு கட்டத்தில் திணறி 12 பந்துகளில் 13 ரன்கள் என இருந்தார். அதன் பின்னர், அடுத்த 6 பந்துகளில் 4 பவுண்டரிகளை விளாசி 19 பந்துகளில் 31 ரன்களுக்கு முன்னேறினார். பட்லரும், சாய் சுதர்சனும் 2 விக்கெட்டுக்கு 46 பந்துகளில் 86 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர். தீக்சனா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி பட்லர் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு குஜராத் ரன்ரேட் திடீரென சரிந்தநிலையில் மற்றொரு தமிழக வீரர் ஷாருக்கான் களமிறங்கி சிறிய கேமியோ ஆடி 20 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்து ரன்ரேட்டை உயர்த்திக் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆர்ச்சர் வீசிய 18வது ஓவரில் பவுண்டரி எல்லையில் கிடைத்த கேட்ச் வாய்ப்பை ஷுபம் துபே கைக்கு வந்ததைத் தவறவிட்டார். ஆனால், அதன் பிறகு ஒரு ரன் மட்டுமே சேர்த்த சுதர்சன் 82 ரன்னில் ஆட்டமிழந்தார். சாய் சுதர்சன் 32 பந்துகளில் அரைசதம் அடித்து, 46 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்து தேஷ்பாண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். முதல் ஓவரில் களமிறங்கிய சாய் சுதர்சன் 19வது ஓவர் வரை களத்தில் இருந்து ஆங்கர்ரோல் எடுத்தார். ராகுல் திவேட்டியா(24) மற்றும் ரஷித்கான்(12) குஜராத் அணி 200 ரன்களை கடக்க உதவினர். 20 ஓவர்களில் குஜராத் அணி 217 ரன்கள் சேர்த்தது. யாரையும் நெருங்க விடாத இந்தியாவின் சென்டினல் தீவு பழங்குடிகளை பார்க்க சென்ற அமெரிக்கர் என்ன ஆனார்?8 ஏப்ரல் 2025 'தயிர் சாதத்துடன் ஆரம்பம்' : சைவ உணவுகளையே விரும்பிய ஒளரங்கசீப் உள்ளிட்ட முகலாய பேரரசர்கள்8 ஏப்ரல் 2025 ராஜஸ்தான் திணறல் பட மூலாதாரம்,GETTY IMAGES ராஜஸ்தான் அணி 218 ரன்கள் எனும் பெரிய இலக்குடன் களமிறங்கியது. ஜெய்ஸ்வால் 3வது முறையாக ஏமாற்றினார். அர்ஷத் கான் வீசிய 2வது ஓவரில் ஆப்சைடு விலகிச் சென்ற பந்தை அடிக்க முயன்று டீப் தேர்டு திசையில் ரஷித் கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ராணா ஒரு ரன்னில் சிராஜ் பந்துவீச்சில் டீப் தேர்டு திசையில் கெஜ்ரோலியாவிடம் கேட்ச் கொடுக்கு விக்கெட்டை இழந்தார். ரியான் பராக் வந்த வேகத்தில் சிராஜ் பந்துவீச்சில் சிக்ஸர் விளாசினார். சாம்சன், ரியான் பராக் ஓரளவுக்கு ஆடி 26 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்திருந்தபோது சர்ச்சைக்குரிய வகையில் பராக் ஆட்டமிழந்தார். பவர்ப்ளேவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் சேர்த்தது. குல்வந்த் கெஜ்ரோலியா வீசிய 7வது ஓவரில் ரியான் பராக் பந்தை அடிக்க முற்பட்டு பட்லரிடம் கேட்சானது. பேட் தரையில் மோதியபோது சத்தம் கேட்டது, ஆனால், பந்து பேட்டில் பட்ட சத்தமா அல்லது பேட் தரையில் மோதியதால் சத்தம் வந்ததா என்ற குழப்பத்தில் 3வது நடுவர் ரியான் பராக்கிற்கு அவுட் வழங்கினார். இதுகுறித்து கள நடுவரிடம் தனது அதிருப்தியைத் தெரிவித்து பராக் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். ஃபார்முக்கு வந்த ரஷித் கான் கடந்த 4 போட்டிகளில் ஒரு விக்கெட்டை மட்டும் வீழ்த்தியிருந்த ரஷித் கான் இந்த ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி மீண்டும் ஃபார்முக்கு திரும்பினார். தனது முதல் ஓவரிலேயே துருவ் ஜூரெல் விக்கெட்டை எடுத்தார் ரஷித் கான். அதன்பின் ஹெட்மெயர் வந்தவுடன் கால்காப்பில் வாங்கியது தெளிவாகத் தெரிந்தது. இருப்பினும் பந்து சிறிது லெக்ஸ்டெம்புக்கு தள்ளி பிட்ச் ஆனதால் அவுட் வழங்கவில்லை. ஆனால் ரஷித் கான் குறிவைத்துப் பந்து வீசியதில் ஹெட்மயர் 12 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் உள்பட 26 ரன்களை விளாசினார். ஷுபம் துபே ஒரு ரன்னில் ரஷித் கான் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். பி.கே.ரோஸி: 100 ஆண்டுகளுக்கு முன் சாதி கொடுமையால் நாகர்கோவிலில் தஞ்சமடைந்த தலித் நடிகை1 ஏப்ரல் 2025 மம்மூட்டி மீதான அன்பால் மோகன்லால் செய்த செயல் சர்ச்சையாவது ஏன்?28 மார்ச் 2025 நெருக்கடியளித்த சாய் கிஷோர், பிரசித் கிருஷ்ணா பட மூலாதாரம்,GETTY IMAGES நடுப்பகுதியில் சாய் கிஷோர், பிரசித் கிருஷ்ணா இருவரும் கடைசி வரிசை விக்கெட்டுகளை கவனித்துக்கொண்டனர். சாம்சன், ஹெட்மெயர் இருவரும் அணியை மெல்ல வெற்றியை நோக்கி நகர்த்தினர். 12 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 115 ரன்களுடன் ராஜஸ்தான் அணி வலுவாக இருந்தது. பிரசித் கிருஷ்ணா வீசிய பவுன்சரை அடிக்க முற்பட்டு ஷார்ட் தேர்டு திசையில் கேட்ச் கொடுத்து சாம்சன் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். பிரசித் கிருஷ்ணா வீசிய 16வது ஓவரில் ஷார்ட் பந்தில் ஆர்ச்சர்(4), ஹெட்மெயர்(52) இருவரும் விக்கெட்டுகளை இழந்தனர். ராஜஸ்தான் அணி, 16 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் சேர்த்துத் தடுமாறியது. அதன் பிறகு அடுத்த 14 ரன்களுக்குள் மீதமிருந்த இரு விக்கெட்டுகளையும் சாய் கிஷோரிடம் இழந்து ராஜஸ்தான் அணி 159 ரன்களில் ஆட்டமிழந்தது. அடுத்த ஆட்டம் யாருக்கு? இன்றைய ஆட்டம்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேபிடல்ஸ் இடம்: பெங்களூரு நேரம்: இரவு 7.30 சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம்: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட்ரைடர்ஸ் நாள் - ஏப்ரல் 11 இடம் - சென்னை சேப்பாக்கம் மும்பையின் அடுத்த ஆட்டம்: மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் நாள் - ஏப்ரல் 13 இடம் - டெல்லி ஆரஞ்சு தொப்பி யாருக்கு? நிகோலஸ் பூரன் (லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்) -288 ரன்கள் (5 போட்டிகள்) சாய் சுதர்சன் (குஜராத் டைட்டன்ஸ்) - 273 ரன்கள் (5 போட்டிகள்) மிட்ஷெல் மார்ஷ் (லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்) - 265 ரன்கள் (5 போட்டிகள்) பர்பிள் தொப்பி யாருக்கு? நூர் அகமது (சிஎஸ்கே) - 11 விக்கெட்டுகள் (5 போட்டிகள்) சாய் கிஷோர் (குஜராத் டைட்டன்ஸ்) - 10 விக்கெட்டுகள் (5 போட்டிகள்) முகமது சிராஜ் (குஜராத் டைட்டன்ஸ்) - 10 விக்கெட்டுகள் (5 போட்டிகள்) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cevddnllzgdo
  5. 09 APR, 2025 | 07:20 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வவுனியா கணேசபுரத்தில் வனவளத்துறை திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட எல்லை கற்கள் நடும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் விசேட கோரிக்கையை முன்வைத்து உரையாற்றுகையில், வவுனியா கணேசபுரம் மக்கள் தற்போது ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றனர். வன இலாகா திணைக்களத்தால் அந்தப் பகுதியில் கல் நடப்படுவதாக தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்மானங்கள் எடுக்கப்பட்ட பின்னர் அந்த விடயங்களை கையாளுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும். எவருக்கும் கூறாது கல் நாட்டப்படக் கூடாது என்றே அபிவிருத்திக் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால் எவருக்கும் கூறாது அது நடைபெறும் நிலையில் மக்கள் அங்கே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் உடனடியாக அந்த நடவடிக்கைகளை நிறுத்த அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார். இதற்கு எழுந்து பதிலளித்த பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, இந்த விடயம் நேற்று செவ்வாய்க்கிழமை (08) காலையில் எங்களுக்கு அறியக் கிடைத்தது. அதனை அறிந்த உடனேயே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதாவது தேர்தல் காலம் முடிவடையும் வரையிலும் மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி அதனை செயற்படுத்தும் வரையில் அந்த நடவடிக்கைகளை நிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/211630
  6. மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். சென்னை பூவிருந்தவல்லியில் பார்வைத் திறன் குறைபாடு உடையோர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த மார்ச் 3ஆம் தேதியன்று தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வை கணினி உதவியுடன் ஆனந்த் எழுதியுள்ளார். மாநில பாடத் திட்டத்தில் பார்வை மாற்றுத் திறனாளி ஒருவர் கணினி உதவியுடன் எழுதுவது இதுவே முதல்முறை. இதற்காக வடிவமைக்கப்பட்ட பிரத்யேக செயலியின் உதவியுடன் அவர் தேர்வு எழுதியுள்ளார். கேள்விகளை ஒருவர் வாசித்தால் மட்டும் போதும். அதற்கான பதில்களை விரைவாக கணினியில் தட்டச்சு செய்கிறார் மாணவர் ஆனந்த். முன்னதாக தமிழ்நாட்டில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் இரு மாணவிகள் இதே முறையில் தேர்வு எழுதியுள்ளனர். வரும் ஆண்டில் தன்னைப் போலவே 10க்கும் மேற்பட்ட பார்வை மாற்றுத் திறனாளி மாணவர்கள் தேர்வெழுத பயிற்சி எடுத்து வருவதாகக் கூறுகிறார், ஆனந்த். Producer: Vijayanand Shoot & Edit : Wilfred Thomas இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
  7. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பங்குச் சந்தைகள் வீழ்ச்சி காரணமாக உடனடியாக வேலை இழப்புகள் இருக்குமா? கட்டுரை தகவல் எழுதியவர், மரியா சக்காரோ பதவி, பிபிசி உலக சேவை 8 ஏப்ரல் 2025 அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிய வரிவிதிப்புகளால் உலக நாடுகள் தொடர்ந்து தடுமாறி வரும் நிலையில், உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகள் சரிவைச் சந்திக்கின்றன. இது தங்களுக்கு என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்று பலர் யோசிக்கிறார்கள். திங்களன்று, ஷாங்காயில் இருந்து டோக்கியோ மற்றும் சிட்னியில் இருந்து ஹாங்காங் வரை ஆசிய பங்குகள் பல தசாப்தங்களில் கண்டிராத அளவில் சரிந்தன. ஐரோப்பிய சந்தைகளும் வீழ்ச்சியடைந்தன, வங்கிகள், நிதி பாண்டுகள் மிகப்பெரிய சரிவைக் கண்டன. அதே நேரத்தில் அமெரிக்க சந்தைகள் 2020-ல் கொரோனா தொற்றுநோய் தொடங்கியதற்குப் பின்னதாக ஒரே நாளில் மிக மோசமான வீழ்ச்சியைக் கண்டன. பெரும்பாலான நாடுகளுக்கு 10% முதல் 46% வரை புதிய வரிவிதிப்புகளை அதிபர் டிரம்ப் புதன்கிழமை அறிவித்ததைத் தொடர்ந்து இது நிகழ்ந்துள்ளது. தற்போதைய பங்குச் சந்தை குழப்பங்கள் மக்களின் வாழ்க்கையையும் நிதியையும் பல வழிகளில் பாதிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வேலை இழப்புகள் ஏற்படுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பங்குச் சந்தைகள் வீழ்ச்சி மக்களை பல வகைகளில் பாதிக்கக் கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பங்கு விலைகள் நீண்ட காலத்துக்கு வீழ்ச்சியை சந்தித்தால் அது வேலைகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம். ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்யும் ஒருவர் அதிலிருந்து லாபத்தை எதிர்பார்ப்பார். நிறுவனத்தின் பங்குகள் சில காலத்துக்கு வீழ்ச்சியடைந்து வந்தால், அதை தடுப்பதற்கு நிறுவனம் ஏதாவது செய்ய வேண்டும் என்று முதலீட்டாளர் எதிர்பார்ப்பார். உதாரணமாக வேலைகளை குறைப்பதன் மூலம் செலவுகளை குறைக்கலாம். ஆனால், லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் பொருளாதார பேராசிரியராக இருக்கும் மார்டன் ராவ்ன் "தற்போது" ஊழியர்களை வேலையை விட்டு அனுப்ப, நிறுவனங்கள் தயங்குவார்கள் என்று கூறுகிறார். "இது இன்னும் மோசமடையும், இந்த வரி விதிப்புகள் திரும்ப பெறப்பட மாட்டாது என்று கருதினால் ஒழிய" வேலை இழப்புகள் இருக்காது என்கிறார். ஆனால் நீண்ட காலத்தில் "வேலை குறைப்பு குறித்து ஒரு முடிவு விரைவில் எடுக்க வேண்டியிருக்கும்" என்கிறார். கோழி இறைச்சியை ஆரோக்கியமான முறையில் கழுவுவதும், சமைப்பதும் எப்படி?7 ஏப்ரல் 2025 கொண்டை ஊசி வளைவில் எந்த கியரில் செல்வது? மலைப் பாதையில் காரில் செல்லும் போது கவனிக்க வேண்டியவை7 ஏப்ரல் 2025 வரியும் வட்டி விகிதங்களும் உயருமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தற்போதைய நிலை உலக பொருளாதார மந்த நிலைக்கு இட்டுச் செல்லலாம் என்று சிலர் அஞ்சுகின்றனர். பங்குச் சந்தைகளின் தற்போதைய வீழ்ச்சி மக்கள் செலுத்தும் வரிகள், கடன்கள், அடமானங்கள் மற்றும் சேமிப்புகளுக்கான வட்டி விகிதங்களில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால் அவை அனைத்தும் பாதிக்கப்படலாம் என்று ராவ்ன் கூறுகிறார். சந்தை குழப்பங்கள் அரசாங்கங்களின் நிதிகளில் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் விளக்குகிறார், அதாவது அவர்கள் செலவுகளைக் குறைப்பதையும் வரிகளை அதிகரிப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கும். வட்டி விகிதங்களும் பாதிக்கப்படலாம், அவற்றில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். "இது எந்த வழியிலும் செல்லலாம்," என்று அவர் கூறுகிறார். அமெரிக்க வரி விதிப்புக்கு நாடுகள் எவ்வாறு பதிலடி கொடுக்கின்றன என்பது உட்பட பல காரணிகளைப் பொறுத்து விகிதங்கள் உயரலாம் அல்லது குறையலாம். உதாரணமாக, ஒரு நாட்டின் மத்திய வங்கி, வட்டி விகிதங்களைக் குறைக்க முடிவு செய்தால், அது சில வகையான அடமானங்களை மலிவானதாக மாற்றக்கூடும் - இருப்பினும் பண சேமிப்பாளர்கள் தங்கள் சேமிப்புகளில் குறைந்த வருமானத்தைப் பெறுவார்கள். மாறாக, வட்டி விகிதங்களின் அதிகரிப்பு கடன்களுக்கான வட்டியை அதிகரிக்கச் செய்யும், ஆனால் சேமிப்பாளர்களுக்கு சிறந்த வருமானத்தைக் கொண்டுவரும். மின்சாரம், கார் எதுவுமே வேண்டாம் என இந்த தீவு மக்கள் தவிர்ப்பது ஏன்?6 ஏப்ரல் 2025 டிஎன்ஏ பரிசோதனையால் பெற்றோர் குறித்து பெண்ணுக்கு தெரியவந்த அதிர்ச்சி தரும் உண்மை6 ஏப்ரல் 2025 ஓய்வூதியம் பாதிக்கப்படுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பங்குகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள ஓய்வூதிய தொகுப்புகள் பங்குச் சந்தையின் உறுதியற்ற நிலை காரணமாக பாதிக்கப்படலாம். சிலர் நேரடியாக பங்குகளை வைத்திருந்தாலும், பலருக்கு பங்குச் சந்தையுடனான தொடர்பு ஓய்வூதிய திட்டங்கள் மூலம் வருகிறது. சில வகையான ஓய்வூதிய பங்களிப்புகள் பங்குச் சந்தைகளில் உள்ளன. இந்தப் பங்குகளின் மதிப்பு குறைந்தால், மக்களின் ஓய்வூதிய தொகுப்பின் மதிப்பு பாதிக்கப்படலாம் என்று ராவ்ன் விளக்குகிறார். ஆனால் சில ஓய்வூதிய பங்களிப்புகள் அரசாங்க பத்திரங்கள் போன்ற பாதுகாப்பான முதலீடுகளில் உள்ளன. பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடையும் போது இவற்றின் மதிப்பு அதிகரிக்கும், ஏனெனில் அவை தங்கம் போன்ற பிற சொத்துக்களுடன் "பாதுகாப்பான புகலிடமாக" பார்க்கப்படுகின்றன. எனவே, அரசாங்க பத்திரங்களின் மதிப்பு உயர்ந்தால், பங்குகளின் சில அல்லது எல்லா வீழ்ச்சியையும் ஈடுசெய்ய முடியும். ஆனால் அவை மக்களின் ஓய்வூதிய சேமிப்புகள் எவ்வாறு ஒதுக்கப்படுகின்றன என்பதைப் பொறுத்தது. ஓய்வு பெறும் வயதை நெருங்க நெருங்க, மக்களின் ஓய்வூதிய தொகுப்பில் அதிக சதவீதம் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட வாய்ப்புள்ளது, ஏனென்றால் அவர்கள் குறைவாக பாதிக்கப்படுவார்கள். இன்டர்மீடியா: உணவுக் கழிவுகளை சுவைமிக்க உணவாக மாற்றும் பூஞ்சை - விரும்பி உண்ணும் மக்கள்4 ஏப்ரல் 2025 அழகுசாதனப் பொருட்களால் தோல் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் - தவிர்க்கும் வழிகள்4 ஏப்ரல் 2025 பொருளாதார மந்தநிலைக்கு வாய்ப்புள்ளதா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் முழு அளவிலான வர்த்தகப் போர் உருவானால் அதை கவலை அளிக்கக் கூடியதாக இருக்கலாம். மந்தநிலை என்பது ஒரு நாட்டில் உள்ள நிறுவனங்கள், அரசாங்கங்கள் மற்றும் மக்களின் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக இரண்டு மூன்று மாத காலங்களுக்கு சுருங்குவதாகும். உலகம் பொருளாதார மந்தநிலையால் பாதிக்கப்படுமா என்பதை விரைவில் கூற முடியாது என்று ராவ்ன் கூறுகிறார். "அடுத்த வாரம் அல்லது இரண்டு நாட்களில் என்ன நடக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இது ஒரு முழு அளவிலான வர்த்தகப் போராக அதிகரித்து, மற்ற நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக பதிலடி கொடுத்தால் நான் கவலைப்படுவேன்" என்று அவர் மேலும் கூறுகிறார். பங்குச் சந்தைகளின் தற்போதைய நிலைமை உலகளாவிய மந்தநிலைக்கு வழிவகுத்தால், வேலை இழப்புகள் "மிகவும் சாத்தியம்" என்று அவர் கூறுகிறார். ஒரு மந்தநிலை மக்களுக்கும் ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கும் பல விளைவுகளை ஏற்படுத்தும். உதாரணமாக, சிலர் வேலை இழக்கக்கூடும், வேலையின்மை உயரக்கூடும். மற்றவர்களுக்கு பதவி உயர்வு பெறுவது கடினமாக இருக்கலாம், அல்லது விலைவாசி உயர்வுக்கு ஈடுகொடுக்க போதுமான சம்பள உயர்வு பெறுவது கடினமாக இருக்கலாம். இருப்பினும், மந்தநிலையின் வலி பொதுவாக சமூகம் முழுவதும் சமமாக உணரப்படுவதில்லை, இதனால் சமத்துவமின்மை அதிகரிக்கக்கூடும். -இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce9281rpxzxo
  8. INNINGS BREAK 23rd Match (N), Ahmedabad, April 09, 2025, Indian Premier League RR chose to field Gujarat Titans (20 ov) 217/6 Current RR: 10.85 • Last 5 ov (RR): 72/4 (14.40) Rajasthan Royals Win Probability: GT 73.46% • RR 26.54%
  9. அமெரிக்காவுக்கு பதிலடியாக 84% வரி விதித்த சீனா - எங்கு போய் முடியும் வர்த்தகப் போர்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பென் சூ பதவி, பிபிசி வெரிஃபை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஏப்ரல் 9, புதன்கிழமை (இன்று) முதல் சீனப் பொருட்களுக்கு 100 சதவிகிதத்துக்கும் அதிகமான இறக்குமதி வரி விதிப்பை அமெரிக்கா அமலாக்கிய நிலையில், சீனா 84 சதவிகித வரி விதிப்பால் பதிலடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்கள் அனைததுக்கும் இந்த 84 சதவிகிதம் வரி அமலாகும் என சீனா அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் முழு அளவிலான வர்த்தகப் போர் ஏற்பட்டுள்ளது. டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள வரிவிதிப்புகளுக்கு எதிராக தேவைப்பட்டால் "கடைசி வரை போராடுவோம்" என சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகை "கொடுமையான நடைமுறைகளை" பின்பற்றுவதாகவும் சீனா குற்றம் சாட்டியுள்ளது. மேலும் 6 அமெரிக்க நிறுவனங்களை நம்பகத்தன்மையற்ற நிறுவனங்கள் பட்டியலில் சீனா இணைத்துள்ளது. சீனாவின் பதிலடி வரி விதிப்பு தொடர்பாக சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இது வர்த்தக நிறுவனங்கள் சீனாவிலிருந்து , அமெரிக்காவுக்கு திரும்புவதற்கான நேரம் என குறிப்பிட்டுள்ளார். அதிகரித்து வரும் இந்த வர்த்தக மோதல் உலகப் பொருளாதாரத்தை என்ன செய்யும்? அமெரிக்கா - சீனா வரிக்கு வரி யுத்தம்: டிரம்ப் நடவடிக்கை பற்றி சீனா கூறுவது என்ன? டொனல்ட் டிரம்ப்: பங்குச்சந்தையின் மொத்த சரிவுக்கும் ஒற்றைக் காரணம் பங்குச் சந்தைக்கும் உங்கள் பதவி உயர்வுக்கும் என்ன தொடர்பு? - நீங்கள் கவனிக்க வேண்டிய 4 விஷயங்கள் இந்திய பங்குச் சந்தையில் ஒரே நாளில் ரூ.19 லட்சம் கோடி நஷ்டம் – எதிர்காலம் எப்படி இருக்கும்? இரு நாடுகளுக்கும் இடையே நடைபெறும் வர்த்தகம் எவ்வளவு? இரண்டு பொருளாதார சக்திகளுக்கும் இடையே கடந்த ஆண்டு நடைபெற்ற வர்த்தகத்தின் அளவு சுமார் 585 பில்லியன் டாலர் (சுமார் 50,65,661 கோடி ரூபாய்கள்). ஆனால், சீனா அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்ததை விட (145 பில்லியன் டாலர்), அமெரிக்கா வெகு அதிகமாக (440 பில்லியன் டாலர்) சீனாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. இதனால் அதன் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான வர்த்தக வித்யாசமான 295 பில்லியன் டாலர் வர்த்தகப் பற்றாக்குறையை அமெரிக்கா கடந்த 2024 ம் ஆண்டு சந்தித்துள்ளது. இந்தக் கணிசமான வர்த்தகப் பற்றாக்குறை அமெரிக்கப் பொருளாதரத்தில் சுமார் 1 சதவிகிதத்துக்கு சமம். ஆனால், இந்த வாரம் முழுக்க டிரம்ப் பலமுறை கூறிய 1 டிரில்லியன் டாலர் அளவிலான பற்றாக்குறை என்பதை விட குறைவானதே. ஏற்கெனவே டிரம்பின் முதல் பதவிக்காலத்தில் அவர் சீனாவின் மீது குறிப்பிடத்தக்க இறக்குமதி வரி விதித்திருந்தார். அவர் பதவிக் காலத்துக்குப் பின்பும் தொடர்ந்த அந்த இறக்குமதி வரிகளை ஜோ பைடன் அரசும் அதிகரித்தது. இந்த வர்த்தகத் தடைகள் சேர்ந்து 21 சதவிகிதமாக அமெரிக்காவில் இருந்த சீன இறக்குமதியை சென்ற ஆண்டு 13 சதவிகிதமாகக் குறைத்துள்ளது. இதனால், கடந்த பத்து ஆண்டுகளில் வர்த்தகத்துக்காக சீனாவை அமெரிக்கா நம்பி இருப்பது குறைந்துள்ளது. வேந்தராக ஆளுநர் நீடிப்பாரா? உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க வாய்ப்பு9 ஏப்ரல் 2025 Y மற்றும் U ஆகிய எழுத்துகளால் பெண் காவல் அதிகாரி கொலை வழக்கில் துப்பு துலங்கியது எப்படி?3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES எனினும், சில சீனப் பொருட்கள் நேரடியாக அல்லாமல் சில தென்கிழக்கு ஆசிய நாடுகள் வழியாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். உதாரணமாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சூரியசக்தி தகடுகளுக்கு, 2018ல் டிரம்ப் நிர்வாகம் 30 சதவிகிதம் இறக்குமதி வரி விதித்தது. ஆனால், அதன்பிறகு சீனத் தயாரிப்பாளர்கள் தங்கள் சூரிய சக்தித் தகடுகளை ஒருங்கிணைக்கும் செயல்பாடுகளை (assembly operations) மலேஷியா, தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் போன்ற இடங்களுக்கு மாற்றி முடிக்கப்பட்ட தயாரிப்புகளை அங்கிருந்தே அமெரிக்காவுக்கு அனுப்புவதன் மூலம் இறக்குமதி வரியைத் தவிர்க்கிறார்கள் என, 2023ல் அமெரிக்க வர்த்தகத் துறை ஆதாரங்களை சமர்ப்பித்தது. அந்த நாடுகள் மீது அமெரிக்கா விதிக்க இருக்கும் 'பரஸ்பர வரிகள்', அடிப்படையில் சீனாவில் உற்பத்தியான கணிசமான பொருட்களுக்கு அமெரிக்காவில் விலை ஏறும். இந்தியா என்ன செய்தது? பிரபாகரனை விட்டு பிரிந்தது ஏன்? புலிகள் இயக்க முன்னாள் தளபதி கருணா பேட்டி9 ஏப்ரல் 2025 மதுரை சிறுமி 7 வயதிலேயே டேக்வாண்டோ பயிற்சியாளராகி கின்னஸ் சாதனை9 ஏப்ரல் 2025 சீனாவும், அமெரிக்காவும் பரஸ்பரம் இறக்குமதி செய்யும் பொருட்கள் 2024 இல் அமெரிக்கா சீனாவுக்கு ஏற்றுமதி செய்ததில் முதன்மையானது சோயாபீன்ஸ் - சீனாவின் 44 கோடி பன்றிகளின் உணவாக அவை பயன்படுத்தப்படுகின்றன. அமெரிக்கா சீனாவுக்கு மருந்துகளையும், கச்சா எண்ணெயையும் கூட ஏற்றுமதி செய்கிறது. மறுபுறம் சீனாவிடம் இருந்து அமெரிக்கா மிக அதிக அளவிலான மின்னணு சாதனப் பொருட்கள், கணினிகள், பொம்மைகள் போன்றவற்றை வாங்குகிறது. மின்சார வாகனங்களுக்கு இன்றியமையாத தேவையான பெருமளவிலான மின்கலன்களும் (battery) சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களில் ஸ்மார்ட்ஃபோன் வகைகள் மிக முக்கியமானவை. இவை மொத்த இறக்குமதியில் 9 சதவிகிதத்தைப் பிடித்துள்ளன. இதில் பெரும்பகுதி, அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டுள்ள பன்னாட்டு நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்துக்காக சீனாவில் தயாரிக்கப்படுபவை. கடந்த சில வாரங்களில் ஆப்பிளின் சந்தை மதிப்பு இறங்குவதற்கு அமெரிக்கா சீனாவின் மீது விதித்திருக்கும் இறக்குமதி வரிகள் மிக முக்கிய காரணியாகும். கடந்த மாதத்தில் மட்டும் ஆப்பிள் பங்குகளின் மதிப்பு 20 சதவிகிதம் குறைந்திருக்கிறது. சென்னையை கலங்கடித்த 'தனி ஒருவன்': ஹாட்ரிக் சிக்சர், பவுண்டரியுடன் சதம் தொட்ட 'இடது கை சேவாக்' யார்?9 ஏப்ரல் 2025 மின்சார பைக், கார்களுக்காக தமிழ்நாடு முழுவதும் பொது சார்ஜிங் மையம் அமைக்க திட்டம் - இன்றைய டாப்5 செய்திகள்9 ஏப்ரல் 2025 டிரம்ப் நிர்வாகம் பெய்ஜிங்கின் மீது விதித்துள்ள 20 சதவிகித இறக்குமதி வரியின் காரணமாக, சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும், அமெரிக்காவில் கணிசமாக விலை ஏறும். எல்லாப் பொருட்களும் இறக்குமதி வரி – 100 சதவிகிதமாக உயர்ந்தால் – அதன் விளைவாக விலை ஐந்து மடங்கு அதிகரிக்கலாம். சீனாவின் பதிலடி வரி விதிப்பால் அமெரிக்க இறக்குமதிப் பொருட்களின் விலை சீனாவில் அதிகரித்து, இதேபோன்ற வழியில் சீன நுகர்வோரைத்தான் இறுதியாக பாதிக்கும். ஆனால், இறக்குமதி வரியைத் தவிரவும், இரண்டு நாடுகளும் வர்த்தகம் மூலமாக ஒன்றை ஒன்று சேதப்படுத்திக் கொள்வதற்கு பிற வழிகளிலும் முயற்சிக்கலாம். தொழில்துறைக்குத் தேவையான தாமிரம், லித்தியத்தில் இருந்து பல அரிய தாதுக்கள் வரையிலான முக்கிய உலோகங்களை சுத்திகரிப்பதில் சீனா முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த உலோகங்கள் அமெரிக்காவுக்குக் கிடைக்காமல் செய்வதற்கான தடைகளை பெய்ஜிங் ஏற்படுத்தலாம். ராணுவ தெர்மல் இமேஜிங்கிலும், ரேடாரிலும் பயன்படுத்தப்படும் ஜெர்மானியம் மற்றும் கேலியம் இரண்டு பொருட்களின் விஷயத்திலும் சீனா இதை ஏற்கெனவே செய்துள்ளது. விடுதலைப் புலிகள் முன்னாள் போராளி பிள்ளையான் கைது - இலங்கையில் நடப்பது என்ன?8 ஏப்ரல் 2025 கட்டுக்குள் வருகிறதா ஆளுநர் அதிகாரம்? - மத்திய அரசு அடுத்து என்ன செய்யும்?8 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தாமிரம், லித்தியத்தில் இருந்து பல அரிய தாதுக்கள் வரையிலான முக்கிய உலோகங்களை சுத்திகரிப்பதில் சீனா முக்கிய பங்கு வகிக்கிறது அமெரிக்காவைப் பொறுத்தவரை, அது ஏற்கெனவே ஜோ பைடன் தொடங்கிய சீனாவின் மீதான தொழில்நுட்ப முற்றுகையைத் தொடரலாம். இதன் மூலம், செயற்கை நுண்ணறிவுக்கு முக்கியமான மேம்பட்ட மைக்ரோசிப்கள் போன்ற சீனா இன்னமும் தயாரிக்க முடியாத பொருட்களின் இறக்குமதியை சீனாவுக்கு அமெரிக்க கடினமாக்க முடியும். அமெரிக்காவுக்குத் தொடர்ந்து ஏற்றுமதி செய்ய விரும்பினால் சீனாவுடன் வணிகப் பரிவர்த்தனை செய்யக்கூடாது என்று கம்போடியா, மெக்ஸிகோ, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்க முடியும் என்று இந்த வாரம் குறிப்பிட்டார் டொனால்ட் டிரம்பின் வர்த்தக ஆலோசகரான பீட்டர் நவாரோ. மற்ற நாடுகளை இது எப்படி பாதிக்கும்? சர்வதேச நாணய நிதியத்தின் படி (ஐ.எம். எஃப்), அமெரிக்காவும், சீனாவும் சேர்ந்து உலகப் பொருளாதாரத்தில் மிகப் பெரிய பங்கு , அதாவது 43 சதவிகிதத்தைக் கொண்டுள்ளன. இந்த இரண்டு நாடுகளும் முழுமையான வர்த்தகப் போரில் ஈடுபட்டு அவற்றின் வளர்ச்சி குறைந்தாலோ, அல்லது பொருளாதார மந்தநிலையை நோக்கித் தள்ளப்பட்டாலோ, அது உலக வளர்ச்சியைக் குறைப்பதன் மூலம் மற்ற நாடுகளின் பொருளாதாரத்துக்கும் தீங்கு விளைவிக்கும். சர்வதேச முதலீடும் பாதிக்கப்படலாம். வேறு விளைவுகளுக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளன. சீனா உலகின் மிகப்பெரிய உற்பத்தி நாடு. அது தன் சொந்த மக்கள் தொகை நுகர்வதை விட மிக அதிகமான பொருட்களைத் தயாரிக்கிறது. ஏற்கெனவே ஒரு டிரில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை சீனா உபரியாக உற்பத்தி செய்து வருகிறது - அதாவது தான் இறக்குமதி செய்வதை விட உலகின் பிற பகுதிகளுக்கு அது ஏற்றுமதி செய்கிறது. மலிவாகக் கிடைக்கும் கடன்கள் போன்ற அரசு நிதி உதவிகள், உள்நாட்டு மானியங்கள் போன்றவற்றால், சலுகை பெறும் நிறுவனங்கள், அந்தப் பொருட்களின் உண்மையான உற்பத்திச் செலவை விடவும் குறைவான விலைக்கே பொருட்களை உற்பத்தி செய்து கொள்கின்றன. எஃகு இதற்கு ஒரு உதாரணம். கொண்டை ஊசி வளைவில் எந்த கியரில் செல்வது? மலைப் பாதையில் காரில் செல்லும் போது கவனிக்க வேண்டியவை7 ஏப்ரல் 2025 பங்குச் சந்தைக்கும் உங்கள் பதவி உயர்வுக்கும் என்ன தொடர்பு? - நீங்கள் கவனிக்க வேண்டிய 4 விஷயங்கள்6 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தப் பொருட்களை சீனா அமெரிக்காவுக்குள் நுழைக்க முடியவில்லை என்றால், சீன நிறுவனங்கள் இவற்றை உலகின் எங்கு வேண்டுமானாலும் 'தள்ளிவிடும்' ஆபத்து இருக்கிறது. சில நுகர்வோருக்கு இதனால் நன்மை பயக்கும் என்றாலும், உலகெங்கும் இதே பொருட்களைத் தயாரிக்கும் மற்ற நாடுகளுக்கு சம்பளம் மற்றும் வேலை இழப்பை இது ஏற்படுத்தலாம். 'லாபி' அமைப்பான யுகே ஸ்டீல், அதிகப்படியான எஃகு பிரிட்டன் சந்தைக்குள் நுழைய வாய்ப்பிருக்கிறது என்று எச்சரித்துள்ளது. முழுமையான சீன- அமெரிக்க வர்த்தகப்போர் பாதிப்பின் எச்சம், உலகம் முழுவதும் உணரப்பட வாய்ப்பிருக்கிறது. இதன் விளைவுகள் மிகவும் எதிர்மறையாக இருக்கவே வாய்ப்பிருக்கிறது என்று பெரும்பான்மையான பொருளாதார வல்லுநர்கள் கருதுகிறார்கள். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0jzzn1ep62o
  10. Published By: VISHNU 09 APR, 2025 | 07:24 PM இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றங்களிலிருந்து அரசியல் பொறிமுறையை மீட்டெடுக்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதால், அதிகார பொறிமுறையும் விரைவில் சரியான பாதைக்கு திரும்ப வேண்டுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். அதற்காக இதுவரையான 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருந்ததாகவும், அதிகாரிகளின் பொறிமுறை சரியாகாத பட்சத்தில், எதிர்வரும் மே மாதத்திற்குப் பிறகு அவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பின்வாங்கப்போவதில்லை என்றும் ஜனாதிபதி கூறினார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் புதன்கிழமை (09) நடைபெற்ற "தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டம் 2025-2029" வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். நாட்டின் அரச நிறுவன கட்டமைப்பின் கௌரவம் மற்றும் பெறுமதிகளை அழித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் ஆட்சி செய்வதாகவும், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களில் அரச சேவையில் எந்தவொரு பகுதியும் சரிவதற்கு இடமளிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதிகாரிகள் பொறிமுறை இனியும் மாறத் தயாராக இல்லையெனில், மே மாதத்திற்குப் பிறகு அதிகாரிகள் மாற்றப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். இலஞ்ச மற்றும் ஊழல் குற்றங்கள் காரணமாக உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை பல தசாப்தங்களாக பின்தங்கியிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இது தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது அரசியல் பழிவாங்கல் அன்றி, மனிதாபிமான கடமை என்பதையும் வலியுறுத்தினார். சட்டத்தை மதிக்கும், சட்டத்திற்கு அஞ்சும் சமூகம் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்றும், இதற்கு கருத்தரங்குகளும், பயிற்சி பட்டறைகளும் மாத்திரம் போதாது என்றும், குற்றமொன்றிற்கு தண்டனை வழங்கப்படுமென நடைமுறையில் உறுதி செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறினார். கிராமத்தில் மண் வீதியில் ஆரம்பித்த இலஞ்சம் மற்றும் ஊழல், பிரஜைகளை கண் பார்வை இழக்கச் செய்யும் மருந்துப் பொருட்களைக் கொண்டுவருவது வரையிலும், எளிய இடங்களில் ஆரம்பித்த இலஞ்சம் மற்றும் ஊழல் உச்சகட்ட மனிதாபிமானமற்ற நிலைமை வரையிலும், பிரதேச சபை முதல் மத்திய வங்கியில் திருடித் தின்பது வரையிலும் பரவியிருக்கிறது என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி முன்னைய ஆட்சியாளர்கள் அந்த நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு அளித்தனர் என்பதையும் நினைவுபடுத்தினார். பொது நிர்வாக நிறுவனங்கள் மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களில் சிலர் மற்றும் ஆயுத குற்றக் கும்பலும் உள்ளடங்கியதான இலஞ்சம் மற்றும் ஊழலை செய்யும் திருடர்களின் வளையம்பொன்று உருவாகியுள்ளதாகவும், அதனை தற்போது அடையாளம் காண்டிருப்பதாகவும் எதிர்காலத்தில் அதற்கான தீர்வுகள் செயல்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். நாட்டிலிருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்கும் பொறுப்பை அடுத்த தலைமுறையின் மீது சாட்டாமல், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அதற்கு தீர்வு காணப்படும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். இலங்கைக்கு ஒரு வருடத்திற்கு முன்பாக சுதந்திரம் பெற்ற இந்தியா, தேசிய நிகழ்ச்சி நிரலுடன் முன்னேறியதன் பலனாக விண்வெளி மற்றும் மென்பொருள் துறைகளில் பெருமளவான சிரமப் படையினை உருவாக்கியுள்ளதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இலங்கையின் அரசியல் அதிகார தரப்பினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களினால் 2022 ஆம் ஆண்டில் இலங்கை வங்குரோத்து நாடாக மாறியது என்றும் கூறினார். மக்களின் ஒவ்வொரு ரூபாய்க்கும் பொறுப்புக்கூறும் வகையில் தேசிய நிகழ்ச்சி நிரலின் மூலம் இலங்கையை உலக நாடுகளுக்கு முன்பாக உயர்த்தி வைக்கும் பொறுப்பை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றி வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். அவ்வாறு செய்வதன் மூலம் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள் மீது பிரஜைகள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்றும், குற்றத்தை செய்துவிட்டு சட்டத்திலிருந்து தப்பிக்க வழியில்லை என்பதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டுமெனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார். "தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டம் 2025-2029" ஊடாக நாட்டை "வளமான தேசத்தை நோக்கி" கொண்டு செல்வதே நோக்கமாகும் என்பதுடன், ஜனாதிபதி செயலகம் உட்பட அனைத்து அரசு நிறுவனங்களிலும் உள் விவகார பிரிவுகளை நிறுவி, டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் அதைக் கண்காணிக்கக்கூடிய ஒரு திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கல்வி மற்றும் சமூக பங்களிப்பு, நிறுவனங்களை வலுப்படுத்தல் மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்தல், சட்டம் மற்றும் கொள்கை சீர்திருத்தம் ஆகியவற்றுக்கு இடமளிக்கும் மூலோபாய முன்னுரிமைத் துறைகளுக்காக இந்த செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க வேண்டியது முக்கியமானதாகும், இலங்கைக்குள் அந்த பொறிமுறையை மிகவும் வலுப்படுத்தக்கூடிய முன்னணி அரச நிறுவனமாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவை கூறலாம். அதன்படி, இலஞ்சம் இல்லாத சமூகத்தை உருவாக்க, அனைத்து துறைகளிலும் செயல்படுத்தப்படும் ஒரு வலுவான தேசிய ஊழல் எதிர்ப்புக் கொள்கையை உருவாக்க வேண்டியதன் அவசியம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தேசிய செயல் திட்டத்தை தயாரிக்கும்போது, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, அனைத்து பங்குதாரர்களினதும் ஆதரவுடன், தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் நிகழ்ச்சிகளை நடத்தியதுடன், மூன்று மொழிகளிலுமான பத்திரிகை விளம்பரங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் ஊழல் பிரச்சினைகள் குறித்த பொதுமக்களின் கருத்தை மதிப்பீடு செய்வதற்காக நடத்தப்பட்ட விரிவான கணக்கெடுப்பும் அதற்குள் அடங்கியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள், நீதிபதிகள், அரச அதிகாரிகள், தனியார் துறை, சர்வதேச அமைப்புகள், சிவில் அமைப்புகள். சமூக அமைப்புகள், மதக் குழுக்கள், பல்வேறு தேவைகள் உள்ள குழுக்கள், ஊடகம், இளைஞர்கள், சிறுவர்கள் உள்ளிட்ட அனைத்து பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டு அரசாங்கங்களின் அனுபவங்கள், மற்றும் சகல மாகாணங்களில் உள்ள பல்வேறு குழுக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட பரிந்துரைகள் ஆகியவை தேசிய செயல் திட்டத்தை தயாரிப்பதில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இந்த தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், ஊழலுக்கு எதிராகப் போராடும், ஊழலை நிராகரிக்கும் பிரஜைகள் குழு, ஊழலுக்கு எதிரான போராட்டத்தை அனைத்து வழிகளிலும் ஆதரிக்கும் அரசியல் விருப்பம், சட்டத்தை செயல்படுத்த தேவையான அனைத்து பின்னணிகள் மற்றும் அரச சேவையுடன் அனைத்து துறைகளிலும் நேர்மைத்திறனை ஏற்படுத்தி, எதிர்கால சந்ததிக்கு நேர்மைத் திறனான நாட்டை உருவாக்க அனைவரினதும் ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசமோட்டோவும் இந்த நிகழ்வில் உரையாற்றினார். முந்தைய ஆட்சியாளர்களின் தவறான முடிவுகளால் இலங்கையிலிருந்து தூரமான முதலீட்டாளர்கள் தற்போதைய அரசாங்கத்தின் திட்டங்கள் காரணமாக தற்போது இலங்கையை நெருங்கி வருவதாகக் தெரிவித்தார். வெளிப்படைத்தன்மை மற்றும் நல்லாட்சி என்பன நிலையான பொருளாதார அபிவிருத்திக்கு அடிப்படை தூண்கள் என்று ஜப்பான் உறுதியாக நம்புவதால், உலகம் முழுவதும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஜப்பான் ஆதரிப்பதாகவும் ஜப்பானிய தூதுவர் குறிப்பிட்டார். இலங்கைக்கான ஐ.நா அபிவிருத்தித் திட்டப் பிரதிநிதி அசுசா கொபோடாவும் இந்த நிகழ்வில் உரையாற்றினார். கடந்த ஆண்டு இலங்கையின் முதல் தேசிய வரி செலுத்துவோர் தொடர்பான தொகை மதிப்பின் படி, 84% வீதமானோர் வரி செலுத்தும் விருப்பத்தை ஊழல் நேரடியாக பாதிக்கிறது என்று குறிப்பிட்டனர். ஊழல் முதலீட்டைத் தடுக்கிறது என்றும் வர்த்தகம் செய்வதற்கான செலவை அதிகரிக்கிறது எனவும் நிலையான அபிவிருத்தி மற்றும் மனித பாதுகாப்பை தடுக்கிறது என்றும் ஊழல் காரணமாக வளர்ந்து வரும் நாடுகள் ஆண்டுதோறும் 1.3 டிரில்லியன் அமெரிக்க டொலர்களை இழக்கின்றன என்றும் கொபோடா சுட்டிக்காட்டினார். இந்த ஆண்டு வரவு செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி சுட்டிக்காட்டியது போல, வரி செலுத்துவோரின் ஒவ்வொரு சதத்திற்கும் அரச பொறுப்பேற்க வேண்டும் என்கின்ற இந்த செயல் திட்டம், இலங்கை சமூகத்தின் மாற்றத்திற்கான ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்றும் அவர் கூறினார். பிரதம நீதியரசர் முர்து நிருபா பிந்துஷினி பெர்னாண்டோ, சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் நீல் இத்தவெல, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஆர்.எஸ்.ஏ. திசாநாயக்க, முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்புப் படைகளின் பிரதானிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/211652
  11. வேந்தராக ஆளுநர் நீடிப்பாரா? உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க வாய்ப்பு கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு தன்னுடைய சிறப்பு அதிகாரத்தின் கீழ் உச்சநீதிமன்றமே ஒப்புதல் அளித்து தீர்ப்பளித்துள்ளது. 'உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு, தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் கிடைத்த வெற்றி' என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். இந்த தீர்ப்பு நிலைத்திருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனக் கூறுகிறார் மத்திய அரசின் மூத்த வழக்கறிஞர் ராமமூர்த்தி. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பால் என்ன நடக்கும்? பல்கலைக் கழகங்களில் வேந்தராக ஆளுநர் தொடர்வதில் சிக்கல் உள்ளதா? ஆளுநரின் செயலும் தமிழ்நாடு அரசின் முறையீடும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்ட 22 மசோதாக்களின் மீது எந்த முடிவையும் எடுக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி நிலுவையில் வைத்திருந்தார். இவற்றில் பல்கலைக்கழக சட்டங்களை மாற்றியமைப்பது தொடர்பான பத்து மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருப்பி அனுப்பினார். இதே மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்தது. ஆனால், மசோதாக்களின் மீது ஆளுநர் எந்த பதிலையும் அளிக்கவில்லை. இதையடுத்து, ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு இரண்டு ரிட் மனுக்களை தாக்கல் செய்தது. தீர்ப்பில் என்ன உள்ளது? இந்த மனுக்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.டி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தன. செவ்வாய்க் கிழமையன்று (ஏப்ரல் 8) இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், "சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களையும் ஆளுநர் நிலுவையில் வைத்திருப்பது அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200-ன் கீழ் எதிரானது" எனக் கூறினர். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிரான பஞ்சாப் மாநில அரசு வழக்கின் தீர்ப்பை சுட்டிக் காட்டிய நீதிபதிகள், "அதன்பிறகும் இவ்வாறு நடந்து கொண்டிருப்பது சரியல்ல" எனக் கூறினர். இந்த வழக்கின் போது ஆளுநரின் அதிகாரத்தை நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்துக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டதாக அறிவித்தனர். குறிப்பாக, அந்த மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நாளிலேயே அவற்றுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுவிட்டதாக கருதப்படுவதாகவும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. பங்குச் சந்தைக்கும் உங்கள் பதவி உயர்வுக்கும் என்ன தொடர்பு? - நீங்கள் கவனிக்க வேண்டிய 4 விஷயங்கள்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 'தயிர் சாதத்துடன் ஆரம்பம்' : சைவ உணவுகளையே விரும்பிய ஒளரங்கசீப் உள்ளிட்ட முகலாய பேரரசர்கள்8 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES தீர்ப்பில், 'ஆளுநருக்கு தன்னிச்சையான அதிகாரம் (Veto) என்பதற்கு அரசியல் அமைப்புச் சட்டத்தில் இடமில்லை. சட்டப்பேரவையால் நிறைவேற்றப்படும் மசோதாவுக்கு அரசியலமைப்புப் பிரிவு 200-ன் கீழ் ஏதாவது ஒரு நடவடிக்கையை அவர் எடுக்க வேண்டும்' என நீதிபதி ஜே.டி.பர்திவாலா குறிப்பிட்டார். சட்டப்பேரவையில் மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பும் போது அதை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்ப முடியாது என்பது பொது விதியாக உள்ளதாகவும் தீர்ப்பில் ஜே.டி.பர்திவாலா குறிப்பிட்டார். "மாநில அரசின் ஆலோசனைப் படியே ஆளுநர் செயல்பட வேண்டும். அரசியலமைப்பு சட்டப் பிரிவு 200-ன் கீழ் அவருக்கு என எந்த தனிப்பட்ட விருப்புரிமையும் இல்லை" என உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. 'ஒரு மசோதா கிடைத்ததும் ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதாக இருந்தால் அதைப் பற்றி மூன்று மாதங்களுக்குள் அரசுக்கு தெரிவிக்க வேண்டும்' என நீதிபதிகள் கூறியுள்ளனர். சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களுக்கு ஒரு மாதத்துக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்ப முடியாது எனவும் தீர்ப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வரலாற்றில் உயர்சாதி அல்லாத பொதுச்செயலாளர் - எம்.ஏ.பேபிக்கு காத்திருக்கும் சவால்கள்38 நிமிடங்களுக்கு முன்னர் ரகசிய 'ஏவுகணை நகரங்கள்': இந்தியாவுக்கு தெற்கே உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை தாக்குவோம் என இரான் மிரட்டல்8 ஏப்ரல் 2025 பல்கலைக் கழக வேந்தராக ஆளுநர் தொடர்வாரா? பட மூலாதாரம்,P WILSON உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து பல்கலைக் கழகங்களில் வேந்தராக ஆளுநர் தொடர்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய தி.மு.க எம்.பியும் மூத்த வழக்கறிஞருமான வில்சன், "பல்கலைக் கழகங்கள் மீது ஆளுநருக்கு உள்ள அதிகாரங்கள் நீக்கப்பட்டுள்ளன. துணைவேந்தர் நியமனம், தேர்வுக் குழு ஆகியவற்றில் அவரது அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளது" எனக் கூறினார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, பல்கலைக் கழகங்களில் இருந்து வேந்தர் என்ற பதவியை நீக்குவது தொடர்பானது அல்ல எனவும் குறிப்பிட்டார். செய்தியாளர் சந்திப்பின் போது இதையே குறிப்பிட்ட வில்சன், "பல்வேறு பல்கலைக் கழகங்களில் ஆளுநர் வேந்தராக இருக்கிறார். அந்தப் பதவியில் அமர்ந்து கொண்டு துணைவேந்தர் நியமனம் உள்பட அனைத்துப் பணிகளையும் தடுத்து வந்தார். அவர் வேந்தராக நீடிக்கக் கூடாது. அதற்குப் பதிலாக மாநில அரசு கூறும் நபரை வேந்தராக நியமிக்க வேண்டும் என மசோதாவில் கூறப்பட்டிருந்தது" எனக் கூறினார். '60 வயதில் 16 வயதைப் போல் உணருகிறேன்' - சர்வதேச கால்பந்தில் கலக்கும் மூதாட்டிகள்8 ஏப்ரல் 2025 ஹர்திக் தடாலடியால் மும்பைக்கு கிடைத்த சாதகத்தை ஒரே ஓவரில் காலி செய்த சகோதரர் க்ருணால்8 ஏப்ரல் 2025 "இது பல்கலைக்கழகங்களில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தலாம்" எனக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், "தமிழ்நாடு இசைப் பல்கலைக்கழகத்தில் முதலமைச்சர் வேந்தராக இருக்கிறார். பிற பல்கலைக்கழங்களில் வேந்தராக ஆளுநர் இருக்கிறார். அதிகாரத்தை முதலமைச்சர் எடுத்துக் கொண்டால் குழப்பம் ஏற்படும்" என்கிறார். 'உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அவசரச் சட்டம் வரலாம்' "துணைவேந்தர் தேடுதல் குழுவில் (Search committee) பல்லைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதி இருக்க வேண்டும் என்பது விதியாக உள்ளது. இந்த தீர்ப்பை தொடர்ந்து விதிகளை மீறி துணைவேந்தர்கள் நியமனங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன" எனக் கூறுகிறார் மத்திய அரசின் மூத்த வழக்கறிஞர் ராமமூர்த்தி. கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதால் பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகள் மீறப்படும் போது, பல்கலைக் கழகங்களுக்கான நிதியை நிறுத்தலாம் எனவும் அவர் குறிப்பிட்டார். "மசோதாக்களில் சட்டமீறல் உள்ளதா என்பதை ஆளுநர் ஆராய்வதற்கு அதிகாரம் இல்லை என உச்ச நீதிமன்றம் கூறுவதை ஏற்க முடியாது. ஆளுநரை நீக்குமாறு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அதை ஆளுநர் ஏற்க வேண்டும் என்பதைப் போல இந்த தீர்ப்பு உள்ளது" என ராமமூர்த்தி தெரிவித்தார். உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் இந்த தீர்ப்பு நிலைத்திருப்பதற்கான வாய்ப்புகளும் குறைவு என்றும் அவர் குறிப்பிட்டார். இனி ஆளுநர் செயல்பாட்டில் என்ன மாற்றம் இருக்கும்? - உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் என்ன பலன்? 'தமிழ்நாடு ஆளுநரின் செயல் சட்டவிரோதம்' - 10 மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றமே ஒப்புதல் வழங்கி தீர்ப்பு தமிழ்நாடு: ஆளுநர் ஆர்.என்.ரவி 'திராவிட ஒவ்வாமை' அணுகுமுறையை கடைபிடிக்கிறாரா? 'திராவிடம்' இல்லாத தமிழ்த்தாய் வாழ்த்து: என்ன சர்ச்சை? பாடலின் வரலாறும், பின்னணியும் என்ன? "குடியரசுத் தலைவருக்கும் பொருந்தும்" பட மூலாதாரம்,TARASU SHYAM படக்குறிப்பு,தராசு ஷ்யாம் அதேநேரம், தீர்ப்பு தொடர்பாக மாறுபட்ட கருத்தை முன்வைக்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம். "ஆளுநர்கள் தங்களின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும்போது, உச்ச நீதிமன்றம் அந்த அதிகாரத்தை தானே எடுத்துக் கொள்ளும் என்பது தான் இதில் கவனிக்க வேண்டிய விஷயம். அது ஜனநாயகத்துக்கு சரியானதாக இருக்குமா என்பது பிரதான கேள்வி" எனக் கூறுகிறார் ஷ்யாம். பிபிசி தமிழிடம் பேசிய அவர், " இந்த தீர்ப்பு, அனைத்து மாநில ஆளுநர்களுக்கும் பொருந்தும். எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது எனத் தெரியவில்லை" எனவும் அவர் குறிப்பிட்டார். தனக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி மறைமுக ஆட்சி அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் செலுத்துவதுபோல இந்த உத்தரவு உள்ளதாகவும் அவர் கூறுகிறார். தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்வதற்கான வாய்ப்பு உள்ளதாகக் கூறும் ஷ்யாம், "அவ்வாறு சீராய்வு மனுவை தாக்கல் செய்யவில்லை என்றால் இது சட்டமாகிவிடும். இந்த தீர்ப்பு குடியரசுத் தலைவருக்கும் பொருந்தும்" எனத் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது பதவியை ராஜினாமா செய்வது தான் சரியானதாக இருக்கும் எனக் கூறிய ஷ்யாம், "அரசியல் சாசனத்தை மதிக்காத ஒருவரை எவ்வாறு தொடர அனுமதிக்கிறீர்கள் எனக் குடியரசுத் தலைவரைப் பார்த்து கேள்வி கேட்பதாக இந்த தீர்ப்பை பார்க்க முடியும்" எனவும் அவர் குறிப்பிட்டார். ஆளுநர் தனக்கு அனுப்பும் சட்ட முன்வடிவை எவ்வளவு நாள் தாமதிக்கலாம் என்றும் அவ்வாறு தாமதித்தால் தங்களுக்கு அதிகாரம் உள்ளதாக நீதிமன்றம் கூறுவதாகவும் ஷ்யாம் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn05jv95v8qo
  12. 09 APR, 2025 | 02:08 PM இந்தியாவுடன் பல உடன்படிக்கைகளில் கைசாத்திட்டுள்ளதன் மூலம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டிற்கு துரோகமிழைத்துள்ளது என சில எதிர்கட்சி அரசியல்வாதிகள் தெரிவித்திருப்பதை ஜேவிபியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா நிராகரித்துள்ளார். இலங்கைக்கு பாதகம் ஏற்படுத்தும் விதத்தில் ஏதாவது உடன்படிக்கையில் அரசாங்கம் கைசாத்திட்டுள்ளதா என்பதை எதிர்கட்சிகள் நிரூபிக்கவேண்டும் என அவர் சவால் விடுத்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்தைய விஜயத்தின் போது செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைகளை உடனடியாக பொதுமக்களிற்கு அரசாங்கம் பகிரங்கப்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ள அவர் இந்த உடன்படிக்கைகள் இரண்டு நாட்டிற்கும் நன்மை பயக்ககூடியவை என தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் இந்தியாவின் பல திட்டங்களிற்கு ஜேவிபி எதிர்ப்பு வெளியிட்டதை ஏற்றுக்கொண்டுள்ள அவர் இந்திய இராணுவம் இலங்கைக்கு வருவதற்கு காரணமான இந்திய இலங்கை ஒப்பந்தம் நாட்டிற்கு இழைக்கப்பட்ட துரோகம் என்பதால் அதற்கு எதிராக ஜேவிபி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது என தெரிவித்துள்ளார். நாங்கள் கடந்த காலங்களில் இந்தியாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டோம், இந்தியா தற்போது மாறிவிட்டது, உலகமும் மாறிவிட்டது என தெரிவித்துள்ள ரில்வின் சில்வா 1987 இல் நாங்கள் எதிர்த்ததால் அந்த கோபத்தை கைவிடாமல் தொடர்ந்தும் அதே மனோநிலையில் இருக்கவேண்டுமா என கேள்வி எழுப்பியுள்ளார். https://www.virakesari.lk/article/211600
  13. 09 APR, 2025 | 03:58 PM 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை உண்மைக்கு புறம்பான முறையில் மேற்கொண்ட குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில், சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள் மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இவர், 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் 2 பொலிஸ் அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/211623
  14. 09 APR, 2025 | 02:41 PM இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் கே.வி.சமந்த வித்யாரத்ன குழுவினருக்கும் இடையே அமைச்சில் நேற்று செவ்வாய்க்கிழமை (08) விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது. மலையக மக்களுக்காக கொண்டுவரப்பட்ட இந்திய வீடமைப்புத் திட்டத்தையும், மலையக பாடசாலைகளுக்கான ஸ்மார்ட் வகுப்பறைகள் வழங்கும் செயற்றிட்டத்தையும் நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கத்தின் வினைத்திறன் குறித்து மகிழ்ச்சியடைவதாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இச்சந்திப்பின்போது தெரிவித்தார். அதேவேளை அவர், இந்த அரசாங்கம் மக்கள் அரசாங்கமாக பிரபல்யமடைந்துள்ளதாகவும் அதனால் தான் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதாக தான் நம்புவதாகவும் குறிப்பிட்டார். மலையக சமூகத்தினருக்காக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 10,000 வீடுகளின் முன்னேற்றம் மற்றும் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறைகளின் செயற்பாடுகள் தொடர்பாகவும் சந்தோஷ் ஜா கலந்துரையாடினார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அண்மைய இலங்கைக்கான விஜயத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் வலுவடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், இந்த சந்திப்பில் பிரதி அமைச்சர் சுந்தர்லிங்கம் பிரதீப், அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி, பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளரும் ஆலோசகருமான கலாநிதி சிவப்பிரகாசம், அமைச்சின் இணைப்புச் செயலாளர் வசந்தமூர்த்தி உட்பட இந்திய தூதரக அதிகாரிகள், அமைச்சின் ஏனைய அதிகாரிகளும் இணைந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/211605
  15. நாடாளுமன்றத்தில் முதன் முதலாக தமிழில் ஒலித்த குரல்- குமரி அனந்தன் வாழ்வின் முக்கிய தருணங்கள் பட மூலாதாரம்,X@DRTAMILISAI4BJP படக்குறிப்பு,காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் தனது 93வது வயதில் காலமானார். 44 நிமிடங்களுக்கு முன்னர் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் தனது 93வது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். காந்தியவாதியாகவும், காமராஜரின் சீடராகவும் இருந்த குமரி அனந்தன் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார். தமிழுக்கு அவர் ஆற்றிய பணிகளுக்காக 'இலக்கியச் செல்வர்' என்று பாராட்டப்பட்டார். தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக நான்கு முறையும் நாடாளுமன்ற உறுப்பினராக ஒரு முறையும் பதவி வகித்துள்ளார். அவரது மகளான தமிழ்நாடு பாஜகவின் மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அவரது தமிழ் இலக்கிய பங்களிப்பை நினைவுகூர்ந்து, அவர் விட்டுச் சென்ற பணியை தான் தொடர்வேன் என்று தெரிவித்திருந்தார். தமிழிசை செளந்தரராஜன்: ஆர்எஸ்எஸ் பின்னணி இல்லை, தேர்தலில் வென்றதில்லை - ஆனாலும் சாதித்தது எப்படி? வேந்தராக ஆளுநர் நீடிப்பாரா? உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க வாய்ப்பு வசந்தகுமார் காலமானார் - கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்றவர் மரணம் காங்கிரஸ் இதுவரை இல்லாத அளவு மிகக் குறைந்த தொகுதிகளில் போட்டி - வெற்றிக்கான வியூகமா? பலவீனமா? பட மூலாதாரம்,TN GOVT குமரி அனந்தன் வயது மூப்பு காரணமாக சில காலமாக உடல் நலம் குன்றியிருந்தார். அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். சுவாசப் பிரச்னை ஏற்பட்டதால் வேலூரில் தனியார் மருத்துவமனையில் சமீபத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. பின்னர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், வயது மூப்பு காரணமாக சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்கிழமை இரவு அவர் காலமானார். அவர் உடல் நலன் குன்றியிருந்ததன் காரணமாகவே சமீபத்தில் பிரதமர் மோதி ராமேஸ்வரம் வந்திருந்த போது, தமிழிசை சவுந்தரராஜன் தனது பயணத்தை ரத்து செய்ய வேண்டியிருந்தது. சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சவுந்தரராஜனின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள குமரி அனந்தனின் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். பட மூலாதாரம்,X/@NAINARBJP படக்குறிப்பு,பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவராக குமரி அனந்தன் பொறுப்பு வகித்தார் "ஒற்றை வீடியோவால் வீழ்ந்த தர்பூசணி விலை" - 2 ரூபாய்க்கு கேட்பதாக விவசாயிகள் வேதனை44 நிமிடங்களுக்கு முன்னர் 'தயிர் சாதத்துடன் ஆரம்பம்' : சைவ உணவுகளையே விரும்பிய ஒளரங்கசீப் உள்ளிட்ட முகலாய பேரரசர்கள்8 ஏப்ரல் 2025 குமரி அனந்தன், தொழிலதிபராகவும், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த ஹெச். வசந்த குமாரின் அண்ணன் ஆவார். வசந்த குமாரின் மறைவுக்கு பிறகு வசந்த குமாரின் மகன் தற்போது அந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் குமரிமங்கலம் என்ற அகத்தீஸ்வரத்தில் 1933-ம் ஆண்டு மார்சு 19-ம் தேதி பிறந்தவர் குமரி அனந்தன். சுதந்திரப் போராட்டத் தியாகி அரிகிருஷ்ணன் – தங்கம்மாள் தம்பதிக்கு தலை மகனாக பிறந்தார். 1977-ம் ஆண்டு குமரி அனந்தன் நாகர்கோயில் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980, 1984, 1989, 1991 ஆகிய ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது அரசியல் பயணத்தில் அவர் காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் மற்றும் மாணவர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை தொடங்கினார். பிறகு அவை இந்திய தேசிய காங்கிரஸ் உடன் இணைக்கப்பட்டது. பட மூலாதாரம்,X@DRTAMILISAI4BJP படக்குறிப்பு,"எனது தந்தை இன்று என் அம்மாவுடன் இரண்டறக் கலந்துவிட்டார்" என குமரி அனந்தனின் மகள் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார் விளைநிலத்தில் யானைகள் நுழையாமல் தடுக்கும் தேனீக்கள் - பல ஆண்டு ஆய்வில் தெரியவந்த ரகசியம்25 மார்ச் 2025 கொண்டை ஊசி வளைவில் எந்த கியரில் செல்வது? மலைப் பாதையில் காரில் செல்லும் போது கவனிக்க வேண்டியவை7 ஏப்ரல் 2025 தனது தந்தையின் இழப்பு குறித்து தமிழிசை சவுந்தரராஜன், "தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை, தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன் என்று பெருமையாக பேச வைத்த என் தந்தை, இன்று என் அம்மாவோடு இரண்டற கலந்து விட்டார். குமரியில் ஒரு கிராமத்தில் பிறந்து தன் முழு முயற்சியினால் அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக தமிழ் மீது தீராத பற்று கொண்டு தமிழிசை என்ற பெயர் வைத்தார். நாடாளுமன்றத்தில் முதன் முதலில் தமிழில் பேசியவர் இன்று தமிழோடு காற்றில் கலந்துவிட்டார். மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா" என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பட மூலாதாரம்,X@DRTAMILISAI4BJP படக்குறிப்பு,தமிழ் மீது பற்று கொண்ட அவர் 'இலக்கியச் செல்வர்' என்று அனைவராலும் அழைக்கப்பட்டார் காந்தியவாதியாக இருந்த குமரி அனந்தன், காங்கிரஸ் கொள்கைகள் மீது தீவிரப் பற்றுக் கொண்டவர். காமராஜரின் சீடராக விளங்கி, பிற்காலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பணியாற்றியுள்ளார். காந்தியவாதியான அவர் கதர் வேட்டி அணிந்து, நெற்றியில் விபூதியுடன் எளிய தோற்றமளிப்பவராக இருந்தார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு பனை மர பணியாளர்கள் நல வாரிய தலைவராக 2008-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார், 2011-ம் ஆண்டு அந்த பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார். அப்போது அவர் எழுதிய கடிதத்தில், "நான், சுதேசியத்தில் பற்றுக் கொண்டவன் என்ற காரணத்தினால் பனைமரத் தொழிலாளர் நல வாரியத் தலைவர் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது. பனைச் செல்வம் பெருஞ்செல்வம், உடல் நலம் தரும் செல்வம். ஊதியம் இல்லாத வேலையினாலும், எளியோர்க்கும் நாட்டுக்கும் செய்யும் தொண்டாக மனநிறைவோடு அந்த பொறுப்பில் இருந்து பணியாற்றினேன்" என்று குறிப்பிட்டிருந்தார். பட மூலாதாரம்,X@DRTAMILISAI4BJP பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 17 முறை தமிழத்தில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். மதுவிலக்கு, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், தமிழுக்கு முன்னுரிமை, நதிகளை இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர் இந்த நடைபயணங்களை மேற்கொண்டுள்ளார். 2016-ம் ஆண்டு கன்னியாகுமரி முதல் சென்னை வரை பூரண மதுவிலக்குக் கோரி அவர் மேற்கொண்ட நடைபயணம் முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டது. 2017-ம் ஆண்டு அவர் சென்னையிலிருந்து தருமபுரிக்கு நடைபயணம் மேற்கொண்டார். சென்னை மெரினா கடற்கரையிலிருந்து அந்த நடை பயணத்தை தொடங்கி வைத்து பேசியிருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், "தமிழக மக்களின் நலனுக்காக தனது 86வது வயதில் 16வது முறையாக நடை பயணம் மேற்கொள்கிறார். சுப்ரமணிய சிவாவால் தேர்வு செய்யப்பட்ட இடமான தருமபுரி பாப்பாரப்பட்டியில் பாரதமாதாவுக்கு கோவில் அமைக்க வலியுறுத்தியும், பூரண மதுவிலக்கு, நதிகளை இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் நடைபயணம் மேற்கொள்கிறார் " என்று கூறினார். பட மூலாதாரம்,TN GOVT மோதியை விமர்சிப்பவர்கள் விரும்பும் ஈலோன் மஸ்கின் 'க்ரோக்' எவ்வாறு இயங்குகிறது?23 மார்ச் 2025 டிஎன்ஏ பரிசோதனையால் பெற்றோர் குறித்து பெண்ணுக்கு தெரியவந்த அதிர்ச்சி தரும் உண்மை6 ஏப்ரல் 2025 இலக்கியச் செல்வர் என அனைவராலும் அழைக்கப்பட்ட குமரி அனந்தன், நாடாளுமன்றத்தில் முதன் முதலில் தமிழில் பேசியவர். அவரது மேடைப்பேச்சுகள் பலரையும் ஈர்க்கக்கூடியதாக இருந்தன. செம்பனை நாடு-மலேசிய அனுபவம், உலகம் சுற்றும் குமரி-பயண அனுபவங்கள், கடலில் மிதக்கும் காடுகள்- அந்தமான் பயணம், பாரதிரப் பாடிய பாரதி, தேசமும், நேசமும், விடுதலை வீரர்களின் வீரரும் தியாகமும், நல்லாட்சி தந்த நாயகன் காமராஜ், தமிழ் தரும் காட்சிகள், தென் ஆப்பிரிக்காவில் காந்தியடிகளின் காலடி தேடி, பேச்சுக் கலைப் பயிற்சி என பல்வேறு தலைப்புகளில் நூல்களை எழுதியுள்ளார். சோவியத்தை முந்தி, அமெரிக்கா நிலவில் முதலில் கால் பதிக்க வித்திட்ட 'ஹிட்லரின் விஞ்ஞானி'23 மார்ச் 2025 குடிநீர் பாட்டிலை எத்தனை நாளைக்கு ஒருமுறை, எவ்வாறு கழுவ வேண்டும்?24 மார்ச் 2025 பட மூலாதாரம்,TN GOVT படக்குறிப்பு,தமிழக அரசு குமரி அனந்தனுக்கு மகாகவி பாரதியார் விருது, பெருந்தலைவர் காமராஜர் விருது, தகைசால் தமிழர் விருது ஆகியவற்றை வழங்கியுள்ளது தமிழக அரசின் மகாகவி பாரதியார் விருது, பெருந்தலைவர் காமராஜர் விருது ஆகியவற்றை பெற்றுள்ளார் குமரி அனந்தன். அவருக்கு 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக அரசு 'தகைசால் தமிழர்' விருதை வழங்கியது. கடந்த 2022-ம் ஆண்டு அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அவருக்கு வழங்கப்பட்டது. அவரது மறைவுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5ygg45jz8lo
  16. சீனாவிற்கு எதிராக 104 வீத வரி – டிரம்ப் 09 APR, 2025 | 08:02 AM அமெரிக்கா சீனாவிற்கு எதிராக 104 வீத வரியை விதிக்கவுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். சீனாவின் ஏற்றுமதிகளிற்கு எதிராக 34 வீத வரியை விதிக்கவுள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்த டிரம்ப் இதற்கு எதிராக சீனா பதில் நடவடிக்கை எடுத்தால் மேலதிகமாக 50 வீத வரியை விதிக்கப்போவதாக எச்சரித்துள்ளார். சீனாவிற்கு எதிராக அமெரிக்கா ஏற்கனவே 20 வீத வரியை விதித்துள்ள நிலையில் தற்போது சீனா 104வீத வரியை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளது. https://www.virakesari.lk/article/211551
  17. 09 APR, 2025 | 10:41 AM காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார். அவருக்கு வயது 93. கடந்த சில தினங்ககளாக வயது மூப்பு பிரச்சினையால் அவ்வப்போது மருத்துவமனையில் குமரி அனந்தன் சிகிச்சை பெற்று வந்தார். அண்மையில் அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி குமரி அனந்தன் காலமானார். இதனை அவரது மகளும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை உறுதி செய்துள்ளார். குமரி அனந்தன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம், குமரிமங்கலம் என்ற அகத்தீச்வரத்தில், சுதந்திரப் போராட்டத் தியாகி அரிகிருஷ்ணன் – தங்கம்மாள் தம்பதிக்கு முதல் மகனாக 1933 மார்ச் 19 ஆம் தேதியன்று பிறந்தவர் குமரி அனந்தன். காமராஜரின் சீடராக விளங்கிய இவர், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்தவர். மக்கள் நலனுக்காகப் பதினேழு முறை தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டவர். ஏழை விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வேண்டுமென்று களக்காட்டிலிருந்து ராதாபுரம் வரை நடைபயணம் மேற்கொண்டு, அதன் விளைவாக 1984-ல் 1.5 ஏக்கர் நஞ்சை நிலம் மற்றும் 2.5 ஏக்கர் புஞ்சை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத் திட்டம் பெற்றுத் தந்தவர். இலக்கியவாதியாகவும் சிறந்த மேடைப் பேச்சாளராகவும் திகழ்ந்தவர். 1977-ம் ஆண்டு நாகர்கோயில் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் உறுப்பினராக 1980, 1984, 1989 மற்றும் 1991 ஆகிய ஆண்டுகளில் நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். தமிழகத்தில் பனைவளம் பெருக முழங்கியவர். தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகப் படிவங்கள் அனைத்திலும் தமிழுக்கு முதலிடம் தரப்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மத்திய அரசின் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியவர். தமிழகத்தில் தாய்மொழித் தமிழுக்கு எங்கும் முதலிடம் தரப்படவேண்டும் என்று வலியுறுத்தியவர். தமிழக அரசின் மகாகவி பாரதியார் விருது மற்றும் பெருந்தலைவர் காமராஜர் விருது பெற்றவர். குமரி அனந்தனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் ‘தகைசால் தமிழர் விருது’ மற்றும் அதற்குரிய பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கி சிறப்பித்தார். https://www.virakesari.lk/article/211566
  18. Published By: RAJEEBAN 08 APR, 2025 | 04:23 PM இஸ்ரேலிய இராணுவத்திற்கு மைக்ரோசொப்ட் நிறுவனம் செயற்கை தொழில்நுட்பத்தினை வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தமைக்காக இரண்டு பணியாளர்களை அந்த நிறுவனம் வேலையிலிருந்து நீக்கியுள்ளதாக பணிநீக்கம் செய்யப்பட்டவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பொன்று தெரிவித்துள்ளது. மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் 50 வது வருடகொண்டாட்டத்தின் போது அந்த நிறுவனம் இஸ்ரேலிய இராணுவத்திற்கு செயற்கை தொழில்நுட்பத்தினை வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இரண்டுபெண் ஊழியர்களையே அந்த நிறுவனம் வேலை நீக்கம் செய்துள்ளது. ஒருவர், புகழ்பெறுவதற்காகவும், இந்த பெரும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வை அதிகபட்சமாக சீர்குலைப்பதற்காகவும் தவறான நடத்தையில் ஈடுபட்டனர் என மைக்ரோசொவ்ட் தனது பணிநீக்க கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. மற்றைய பணியாளர் ஏற்கனவே தனது இராஜினாமாவை அறிவித்துவிட்டார் என தெரிவித்துள்ள அந்த நிறுவனம், எனினும் ஐந்து நாட்களிற்கு முன்னதாகவே அவரை வேலையிலிருந்து விலகுமாறு கேட்டுக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மைக்ரோசொப்டின் நிறுவனத்தின் நிறைவேற்றதிகாரி ஒருவர் புதிய தயாரிப்பு அம்சங்கள் மற்றும் மைக்ரோசொப்டின் செயற்கை நுண்ணறிவு குறித்த நீண்டகால தொலைநோக்கு குறித்து உரையாற்றிக்கொண்டிருந்த வேளையில் அந்த நிறுவனத்தின் பொறியியலாளர் இப்திஹல் அபொசாட் மேடைக்கு சென்று நீங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சமூகத்தின் நன்மைக்காக பயன்படுத்தப்படவேண்டும் என நீங்கள் தெரிவிக்கின்றீர்கள். ஆனால், மைக்ரோசொவ்ட் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு ஆயுதத்தை இஸ்ரேலிய இராணுவத்திற்கு விற்பனை செய்கின்றது என தெரிவித்தார். ஐம்பதினாயிரம் பேர் உயிரிழந்துள்ளனர், மைக்ரோசொப்ட் இந்த இனப்படுகொலையை எங்கள் பிராந்தியத்தில் முன்னெடுக்கின்றது என அவர் நிறைவேற்றதிகாரியை நோக்கி சீற்றத்துடன் குறிப்பிட்டார். இதன் காரணமாக மைக்ரோசொப்ட் அதிகாரி தனது உரையை இடைநிறுத்தவேண்டிய நிலையேற்பட்டது. அபுசாத் தொடர்ந்தும் சீற்றத்துடன் மைக்ரோசொப்டின் அதிகாரியை நோக்கி குற்றச்சாட்டுகளை முன்வைத்ததுடன் அந்த அதிகாரி உட்பட மைக்ரோசொப்டில் பணிபுரியும் அனைவரினது கரங்களிலும் இரத்தக்கறை படிந்துள்ளது என தெரிவித்தார். பாலஸ்தீன மக்களிற்கு ஆதரவு தெரிவிக்கும் விதத்தில் அவர் தனது கெபியே ஸ்கார்வை மேடையில் வீசினார். அதன் பின்னர் அவர் அங்கிருந்து அழைத்து செல்லப்பட்டார். இதன் பின்னர் வானியா அகர்வால் என்ற ஊழியரும் மைக்ரோசொப்டின் நடவடிக்கைகளிற்கு தனது எதிர்ப்பை வெளியிட்டு நிகழ்வை குழப்பினார். https://www.virakesari.lk/article/211507
  19. சென்னையை கலங்கடித்த 'தனி ஒருவன்': ஹாட்ரிக் சிக்சர், பவுண்டரியுடன் சதம் தொட்ட 'இடது கை சேவாக்' யார்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பிரியன்ஸ் ஆர்யா மற்றும் தோனி கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 9 ஏப்ரல் 2025, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஐபிஎல் டி20 போட்டியின் 22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி. இளம் வீரர் பிரியான்ஷ் ஆர்யாவின அதிரடி சதம், சஷாங் சிங்கின் அரைசதம் ஆகியவை பஞ்சாப் அணி வெல்லக் காரணமாக அமைந்தன. முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் சேர்த்தது. அடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணி 5 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் சேர்த்து 18 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியால் பஞ்சாப் அணி 4 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகள் பெற்று 4வது இடத்துக்கு முன்னேறியது. சிஎஸ்கே அணி 5 போட்டிகளில் ஒரு வெற்றி 4 தோல்விகளுடன் 9வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணி சந்திக்கும் தொடர் 4வது தோல்வியாகும். வெறும் 39 பந்துகளில் சதம் அடித்து சாதனை ஏடுகளில் இடம் பிடித்த இளம் வீரரான பிரியான்ஷ் ஆர்யா யார்? சிஎஸ்கே தோல்விக்கு என்ன காரணம்? ஆர்யா தனி ஆவர்த்தனம் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியில் விக்கெட்டுகள் ஒருபக்கம் சரிந்தநிலையில் பிரியான்ஷ் ஆர்யா மட்டும் தனது பேட்டிங் ஸ்டைலையும், அதிரடியையும் குறைக்கவில்லை. தொடக்கத்திலேயே ஆர்யா ஆட்டமிழக்க வேண்டிய நிலையில் கலீல் அகமது கேட்சை தவறவிட்டார், 35 ரன்களில் இருந்தபோது விஜய் சங்கர் கேட்சை கோட்டைவிட்டார். இதை சரியாகப் பயன்படுத்திய ஆர்யா சிஎஸ்கே பந்துவீச்சை காலி செய்தார். அஸ்வின் பந்துவீச்சையும் ஆர்யா விட்டுவைக்கவில்லை. பொதுவாக இடதுகை பேட்டர்களுக்கு அஸ்வின் பந்துவீச்சை ஆடுவது கடினம் . ஆனால், நேற்று அஸ்வின் ஓவரில் 10 பந்துகளில் 28 ரன்களை ஆர்யா விளாசினார். பவர்ப்ளேயில் பஞ்சாப் அணியின் ஸ்கோரை 3 விக்கெட்டுகளுக்கு 75 ரன்கள் வரை ஆர்யா உயர்த்தினார். பஞ்சாப் அணி 83 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த போது ஆர்யா அரைசதம் அடித்திருந்தார். 5-வது விக்கெட்டுக்கு சஷாங் சிங்குடன் சேர்ந்து ஆர்யா அமைத்த 67 ரன் பார்ட்னர்ஷிப் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. சிஎஸ்கே பந்துவீச்சை விளாசித் தள்ளிவிட்டார் ஆர்யா. குறிப்பாக சிஎஸ்கே அணியின் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 310 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ஆர்யா பேட் செய்தார். சிஎஸ்கே வேகப்பந்துவீச்சாளர்களின் 20 பந்துகளைச் சந்தித்து 62 ரன்களை ஆர்யா குவித்தார். அதிலும் பதிராணாவின் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள், பவுண்டரி அடித்து சதத்தை ஆர்யா நிறைவு செய்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சதம் அடித்த மகிழ்ச்சியில் பிரியான்ஷ் ஆர்யா 19 பந்துகளில் அரைசதத்தை எட்டிய ஆர்யா, அடுத்த 20 பந்துகளில் சதத்தை எட்டினார், அதாவது 13-வது ஓவரில் பஞ்சாப் அணி 150 ரன்களைத் தொட்டபோது, ஆர்யா சதம் அடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரில் 5வது விக்கெட் விழுந்தபின் பஞ்சாப் அணி 136 ரன்கள் சேர்த்தது. ஐபிஎல் தொடரில் 5வது விக்கெட்டுக்குப் பின் சேர்க்கப்பட்ட 4வது அதிகபட்ச ஸ்கோராக இருந்தாலும், சிஎஸ்கேவுக்கு எதிராக இதுதான் அதிகபட்சமாகும். ஆர்யா ஆட்டமிழந்தபின் சஷாங் சிங் ஆட்டத்தை கையில் எடுத்து, யான்செனுடன் சேர்ந்து சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்துவாங்கினார். 36 பந்துகளில் அரைசதம் அடித்த சஷாங் சிங் 52 ரன்களுடனும், யான்சென் 34 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பஞ்சாப் அணி 200 ரன்களுக்கு மேல் சேர்க்க இருவரின் அதிரடி பேட்டிங் முக்கியக் காரணமாக இருந்தது. பஞ்சாப் அணியில் ஆர்யா(103), சஷாங் சிங்(52), யான்சென்(34) ஆகியோர் சேர்த்ததுதான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற பேட்டர்கள் ஸ்ரேயாஸ்(9), பிரப்சிம்ரன்(0), ஸ்டாய்னிஷ்(4), நேஹல் வதேரா(9), மேக்ஸ்வெல்(1) ஆகியோர் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சஷாங் சிங் கோழி இறைச்சியை ஆரோக்கியமான முறையில் கழுவுவதும், சமைப்பதும் எப்படி?7 ஏப்ரல் 2025 குடிநீர் பாட்டிலை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை கழுவ வேண்டும்?7 ஏப்ரல் 2025 சிஎஸ்கே ஆட்டம் எப்படி? சிஎஸ்கே அணியைப் பொருத்தவரை கடந்த 4 போட்டிகளுடன் ஒப்பிடுகையில் பவர்ப்ளேயில் கான்வே, ரவீந்திரா இருவரும் விக்கெட்டை இழக்காமல் ஓரளவு நல்ல தொடக்கத்தை அளித்தனர். பவர்ப்ளேயில் சிஎஸ்கே விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் சேர்த்தது. சிஎஸ்கேவுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு என்ன, ஓவருக்கு எத்தனை ரன்கள் சேர்க்க வேண்டும், ரன்ரேட் என்ன என்பது குறித்து எந்த புரிதலும் இல்லாமல் ரவீந்திரா, கான்வே இருவரும் ஆடியது போல் இருந்தது. அதனால்தான் 10-வது ஓவர் வரை சிஎஸ்கே அணி ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை. ஷிவம் துபே களத்துக்கு வந்த பின்புதான் சிஎஸ்கே அணி முதல் சிக்ஸரை அடித்தது. ரச்சின் ரவீந்திரா 36 ரன்களில் மேக்ஸ்வெல் பந்துவீச்சில் ஸ்டெம்பிங் ஆகவே, அடுத்துவந்த கேப்டன் ருதுராஜ், ஒரு ரன்னில் பெர்குஷன் பந்துவீச்சில் மிட் விக்கெட்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பெர்குஷன் பந்துவீச்சில் 42 ரன்னில் துவே க்ளீன் போல்டாகினார். நடுப்பகுதியில் சிஎஸ்கே அணிக்கு ஓவருக்கு 17 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற நெருக்கடி ஏற்பட்டது. விளைநிலத்தில் யானைகள் நுழையாமல் தடுக்கும் தேனீக்கள் - பல ஆண்டு ஆய்வில் தெரியவந்த ரகசியம்25 மார்ச் 2025 ஆனைமலை நெல்லி, காட்டு காபி, காட்டு ஆப்பிள் - அழியும் ஆபத்தில் தமிழ்நாட்டின் 25 பூர்வீக தாவரங்கள்25 மார்ச் 2025 கான்வே களத்தில் 49 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்து களத்தில் இருந்தாலும், கடைசி நேரத்தில் அவரால் ரன்ரேட்டை உயர்த்தும் வகையில் பெரிய ஷாட்களை ஆடமுடியவில்லை. இதனால் ரிட்டயர் அவுட் முறையில் கான்வேயை 69 ரன்னில் சிஎஸ்கே வெளியேற்றியது. தோனி 18-வது ஓவரில் வந்து 3 சிக்ஸர்களை விளாசி ஆட்டத்தில் பரபரப்பு ஏற்படுத்தினார். யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் பைன் லெக் திசையில் சஹலிடம் கேட்ச் கொடுத்து தோனி 27 ரன்னில் ஆட்டமிழந்தவுடன் சிஎஸ்கே வெற்றிக் கனவு கலைந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கான்வே சிஎஸ்கேவும், சிக்ஸரும் பஞ்சாப் அணியில் மட்டும் நேற்று 16 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன, அதாவது 16 பந்துகளில் 96 ரன்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் சிஎஸ்கே அணி 10-வது ஓவரில்தான் முதல் சிக்ஸரை விளாசியது, ஒட்டுமொத்தமாக 8 சிக்ஸர் மட்டுமே அடித்தது அதாவது 48 ரன்கள் சேர்த்தது. சிஎஸ்கே அணியில் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசும் பிக்ஹிட்டர்கள் யாரும் இல்லை. 200 ரன்களுக்கு மேல் சிஎஸ்கே அணி கடந்த காலங்களில் சேஸ் செய்திருந்தது, அதற்கு அப்போது சுரேஷ் ரெய்னா, ஹேடன், வாட்ஸன், ஹசி போன்ற பெரிய ஹிட்டர்கள் இருந்ததால், இலக்கை எளிதாக அடைந்தது. ஆனால், இப்போதிருக்கும் சிஎஸ்கே பேட்டர்களை வைத்து இதுபோன்ற பெரிய ஸ்கோரை இந்த சீசனில் சேஸ் செய்வதை நினைத்துக் கூட பார்க்க முடியாது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர். காத்தவராயன் போன்ற நாட்டார் தெய்வங்கள் 'சாதி ஆணவக் கொலையால்' உதித்தவையா? ஓர் ஆய்வு7 ஏப்ரல் 2025 கொண்டை ஊசி வளைவில் எந்த கியரில் செல்வது? மலைப் பாதையில் காரில் செல்லும் போது கவனிக்க வேண்டியவை7 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தோனி சிஎஸ்கேவும் 180 ரன்கள் இலக்கும் 180 ரன்களுக்கு மேல் எதிரணி இலக்கு வைத்துவிட்டாலே சிஎஸ்கே சேஸ் செய்ய இயலாது என்பது இந்த முறையும் நிரூபிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டுக்குப்பின் 11 முறை 180 ரன்களுக்கு மேல் சேஸ் செய்ய முடியாமல் சிஎஸ்கே தோல்வி அடைந்துள்ளது. போட்டி நாயகன் ஆர்யா பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு முழுமையான காரணம் அன்கேப்டு வீரர் பிரியான்ஷ் ஆர்யாவின் அச்சமில்லா, அற்புதமான ஆட்டம்தான். பிரியான்ஷ் ஆர்யாவின் பேட்டிங்கை நேற்று பார்த்தபோது, "வின்டேஜ் சேவாக்", இடதுகையில் பேட் செய்வது போல் இருந்தது. பஞ்சாப் கிங்ஸ் வெற்றிக்கு காரணமாக இருந்த பிரியன்ஸ் ஆர்யாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. ஆர்யா 42 பந்துகளில் 103 ரன்கள் சேர்த்து (9 சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) ஆட்டமிழந்தார். 245 ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் பேட் செய்தார். 19 பந்துகளில் அரைசதம் அடித்த பிரியான்ஷ் ஆர்யாஸ், 39 பந்துகளில் சதம் அடித்து, ஐபிஎல் வரலாற்றில் அதிகவேகமாக சதம் அடித்த 2வது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். யூசுப் பதான் 37 பந்துகளில் சதம் அடித்து முதலிடத்தில் உள்ளார். ஐபிஎல் தொடரில் ஒட்டுமொத்தமாக அதிவேகமாக சதம் அடித்தவர்கள் பட்டியலில் கெயில்(30பந்து), யூசுப் பதான்(37), டேவிட் மில்லர்(38) ஆகியோருக்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் ஆர்யா வருகிறார். "ஒற்றை வீடியோவால் வீழ்ந்த தர்பூசணி விலை" - 2 ரூபாய்க்கு கேட்பதாக விவசாயிகள் வேதனை8 ஏப்ரல் 2025 'தயிர் சாதத்துடன் ஆரம்பம்' : சைவ உணவுகளையே விரும்பிய ஒளரங்கசீப் உள்ளிட்ட முகலாய பேரரசர்கள்8 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பிரியான்ஷ் ஆர்யா யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா? ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே பௌலர்கள் வயிற்றில் புளியை கரைத்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இடம்பெற்று விட்டார் பிரியான்ஷ் ஆர்யா. அவருக்கு வயது வெறும் 24 தான். இன்று நடைபெற்ற ஆட்டத்தின் முதல் ஓவர் முதல் பந்தை டீப் பாக்வேர்டு பாயிண்டில் ஒரு அபாரமான சிக்ஸர் வைத்து ஆட்டத்தை துவங்கினார் பிரியான்ஷ் ஆர்யா. அவரை கட்டுப்படுத்த அடுத்த பந்தே வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கோட்டை விட்டது சென்னை சூப்பர் கிங்ஸ். அதன் பின்னர் பிரியான்ஷ் ஆர்யா ஆடிய ஆட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மற்றும் அந்த அணி நிர்வாகம் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விடவே முடியாது. அவர் ஆடிய ஆட்டம் கிட்டதட்ட 11 ஆண்டுகளுக்கு முன்பு வான்கடே மைதானத்தில் பிளேஆஃபில் சிஎஸ்கேவின் கனவை சேவாக் நொறுக்கிய ஆட்டத்தை நினைவு படுத்தியது. ஆர்யா பேட்டிங் ஸ்டைலைப் பார்த்தால் சேவாக் இடதுகையில் பேட்டிங் செய்ததுபோல்தான் இருந்தது, அதாவது சேவாக் அதிரடியைப் போன்று ஆர்யாவின் அதிரடி ஆட்டமும் இருந்தது. பதிராணா வீசிய வைடு யார்கர், புல்டாஸ் என எது வீசினாலும் பந்து சிக்ஸருக்கு பறந்தவாறு இருந்தது. சிஎஸ்கே அணியில் நேற்று ஒரு பந்துவீச்சாளரையும் ஆர்யா விட்டுவைக்கவில்லை. பிரியான்ஷ் ஆர்யாவை எவ்வாறு அவுட் ஆக்குவது என தெரியாமல் சென்னை அணியினர் திணறி வந்தனர். பிரியான்ஷ் ஆர்யா டெல்லியைச் சேர்ந்தவர். அவரது பெற்றோர்கள் டெல்லியில் அரசு பள்ளியில் ஆசிரியர்களாக பணிபுரிகிறார்கள். கௌதம் கம்பீரின் முன்னாள் பயிற்சியாளரான சஞ்சய் பரத்வாஜிடம் பயிற்சி அவர் பெற்றார். டெல்லி பல்கலைகழகத்தில் பிஏ பட்டம் பெற்றுள்ளார். ஐபிஎல் டி20 வலைதள தகவல்படி, ஆர்யா 19 வயதுக்குட்பட்டோருக்கான டெல்லி அணியை வழிநடத்துகையில் தனது சிக்ஸர் அடிக்கும் திறனுக்காக பெரிதும் அறியப்பட்டவர். கடந்த ஆண்டு டெல்லி பிரிமியர் லீக்கில் அவர் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டினார். குறிப்பாக, தெற்கு டெல்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடிய அவர் வடக்கு டெல்லிக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் மனன் பரத்வாஜ் எனும் இடது கை சுழற்பந்து வீச்சாளரின் ஓவரில் ஆறு பந்துகளையும் சிக்ஸர்களுக்கு விரட்டி மிரட்டினார். அதனாலேயே ஆர்யாவை ஸ்பெஷல் ப்ளேயர் என்று பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் அழைத்துள்ளார். அந்த ஆட்டத்தில் அவரது அணி 20 ஓவர்களில் 308 ரன்கள் குவித்தது. அந்த போட்டியின் மூலம் கவனம் பெற்றவருக்கு சையது முஷ்டாக் அலி கோப்பையில் டெல்லி அணி சார்பாக விளையாட இடம் கிடைத்தது. அதில் உத்தரப் பிரதேசத்துக்கு எதிராக ஒரு மிரட்டல் ஆட்டம் ஆடினார். புவனேஷ்வர் குமார், பியூஷ் சாவ்லா உள்ளிட்ட நட்சத்திர பந்துவீச்சாளர்கள் இருந்த அந்த அணிக்கு எதிராக, 43 பந்துகளில் 10 சிக்ஸர்கள் ஐந்து பவுண்டரிகளை அடித்து 103 ரன்கள் எடுத்தார். கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு ஆட்டத்தை சென்னை அணிக்கு எதிராக தற்போது பிரியான்ஷ் ஆர்யா விளையாடியுள்ளார். உள்ளூர் போட்டிகளில் அநாயசமாக சிக்ஸர்களை விளாசி அதீத ஸ்டிரைக் ரேட்டில் ரன்களைக் குவித்து ஆர்யா கவனம் ஈர்த்தார். இதன் மூலம் ஐபிஎல் அணிகளின் பார்வை பட, கடந்த ஆண்டு இறுதியில் நடந்த ஏலத்தில் பிரியான்ஷை எடுக்க டெல்லி, பஞ்சாப் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதின. 3 கோடியே 80 லட்சம் கொடுத்து அவரை ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் அணி. பிரியான்ஷுக்கு ஐபிஎல் தொடரில் ஜஸ்ப்ரீத் பும்ராவை எதிர்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. சிஎஸ்கே தோல்விக்கான காரணங்கள் என்ன? சிஎஸ்கே அணியில் பெரிய இலக்கை துரத்திச் செல்லும்போது, அதிரடியாக பெரிய ஷாட்களை அடிக்கும் பிக் ஹிட்டர்கள் யாருமில்லை. ஷிவம் துபே தவிர மற்ற யாரையும் பிக்ஹிட்டர்கள் வரிசையில் சேர்க்கமுடியாது. பீல்டிங், பந்துவீச்சு, பேட்டிங் படுமோசமாக இருந்தது. 200 ரன்களை சிஎஸ்கே தொட்டது பெரிதாக இருந்தாலும், கடந்த போட்டிகளைவிட இதில் பரவாயில்லை என ஆறுதல்படலாம். மற்றவகையில் சிஎஸ்கே பந்துவீச்சும், பீல்டிங்கும் சுமார் ரகத்துக்கும் குறைவுதான் என்று பயிற்சியாளர் பிளெம்மிங் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த ஆட்டத்தில் மட்டும் நேற்று 9 கேட்சுகளை இரு அணி வீரர்களும் நழுவவிட்டனர். கேட்சை நழுவவிட்டாலும் பஞ்சாப் வெற்றியை தவறவிடவில்லை. ஆனால் சிஎஸ்கே அணி 5 கேட்சுகளை தவறவிட்டு ஆட்டத்தையும் கோட்டைவிட்டது. குறிப்பாக பிரியான்ஷ் ஆர்யாவுக்கு கலீல் அகமது, ரவீந்திரா, கேட்ச் பிடித்திருந்தாலே ஆட்டம் மாறியிருக்கும். சனிப் பெயர்ச்சி நிகழும் நாளை கணிப்பதில் ஜோதிடர்கள் முரண்படுவது ஏன்? அறிவியல் உண்மை என்ன?30 மார்ச் 2025 கோடையில் எந்தெந்த பாம்புகள் வீடுகளை நோக்கிப் படையெடுக்கும்? எப்படி தவிர்க்கலாம்?29 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தோனி, ரவீந்திர ஜடேஜா சிஎஸ்கேஅணியில் ஃபார்மில் இல்லாத வீரர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள். இவர்கள் ஏதேனும் ஒருபோட்டியில் சிறப்பாக ஆடினாலும், பல போட்டிகளில் அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிடுவார்கள். மோசமான கேப்டன்சியும், பேட்டிங்கும் தோல்விக்கு முக்கியக் காரணம். ஏனென்றால் சிஎஸ்கே அணி 180 ரன்களுக்கு மேல் சேஸ் செய்யாமல் போன பல போட்டிகளில் ருதுராஜ் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துள்ளார். அந்த போட்டிகளில் ருதுராஜ் பேட்டிங் சராசரி 13 ரன்களுக்கும் குறைவாக இருக்கிறது, இந்த ஆட்டத்திலும் ருதுராஜ் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அதுமட்டுமல்லாமல் அதிகமான அழுத்தம், நெருக்கடியில் கேப்டன்சி பொறுப்பை ருதுராஜால் சரிவர செய்ய முடியவில்லை. சிஎஸ்கே பந்துவீச்சு நேற்று படுமோசமாக இருந்தது. ஜடேஜா மட்டும் 6 ரன்ரேட்டில் பந்துவீசியுள்ளார். ஆனால் மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு 10 ரன்களுக்கும் குறைவில்லாமல் ரன்களை வாரி வழங்கி மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தினர் தோனியின் போராட்டம் வீண் - சென்னை அணி மீண்டும் தோல்வி ஹர்திக் தடாலடியால் மும்பைக்கு கிடைத்த சாதகத்தை ஒரே ஓவரில் காலி செய்த சகோதரர் க்ருணால் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு எப்போது? மௌனம் கலைத்தார் தோனி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,யான்சென் ஆட்டத்தை மாற்றிய 3 சிக்ஸர்கள் சிஎஸ்கே அணியின் தோல்வி குறித்து பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறுகையில் " இந்த ஆட்டத்தில் பேட்டிங் மட்டுமே சற்று நேர்மறையாக இருந்தது. டாப் ஆர்டர் வலுவாகஇருந்த போதிலும் அதிலும் சின்ன தவறு நடந்தது. இந்த ஸ்கோரை சேஸ் செய்வதற்கான கட்டமைப்பை உருவாக்க முடியவில்லை. குறிப்பாக ரன்ரேட்டை சரியாகக் கொண்டு சென்றிருந்தாலே போட்டியை இன்னும் நெருக்கமாக வந்திருக்கலாம். களத்தில் நாங்கள் பீல்டிங், பந்துவீச்சில்தான் ஆட்டத்தை இழந்தோம். குறிப்பாக மந்தமான பீல்டிங், பந்துவீச்சில் பலமுறை லென்த்தை தவறவிட்டோம். ஆர்யாவின் அதிரடி ஆட்டம் பந்துவீச்சாளர்களுக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தி தவறான லென்த்தில் பந்துவீச வைத்தது. அப்போதே ஆட்டம் எங்களைவிட்டு சென்றது. பெரிய ஸ்கோரை சேஸ் செய்யும் இந்த ஆட்டத்தில் 18 ரன்களில் தோல்வி அடைந்தோம், அதாவது 3 சிக்ஸர்கள். இந்த 3 சிக்ஸர்களை பேட்டர்கள் கூடுதலாக அடித்திருந்தால் ஆட்டம் வேறுமாதிரியாக இருக்கும், இந்த சீசன் மிகவும் வெறுப்படைய வைக்கிறது. கேட்ச் பிடிப்பது மோசமாக இருக்கிறது, பஞ்சாப் தரப்பிலும் பல கேட்சுகளை நழுவவிட்டனர். மின் ஒளியில் கேட்சை தவறவிட்டார்கள் என்று நான் நழுவவில்லை, உண்மையில் நாங்கள் பலவீனமாக இருக்கிறோம். அது கவலைக்குரியதுதான். ஐபிஎல் போட்டியில் வெல்ல வேண்டுமென்றால், டாப்3 பேட்டர்கள் பெரிய ஸ்கோர் செய்ய வேண்டும். ஆனால் நாங்கள் அவ்வாறு இல்லை. இன்னும் வலுவான தொடக்கத்தை எதிர்பார்க்கிறோம். அதே ஆட்டத்தை நடுப்பகுதிவரை கொண்டு வர வேண்டும். நல்ல பந்துவீச்சு இருந்தாலே பேட்டர்களுக்கு சுமை குறைந்துவிடும். அனைத்தையும் மறுஆய்வு செய்வோம். ஆனால் இது மோசமான ஆட்டமாக சேஸிங்காக இல்லை. 3 சிக்ஸர்கள்தான் எங்களை தோல்வியில் தள்ளியது" எனத் தெரிவித்தார் இன்றைய ஆட்டம் குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் இடம் - ஆகமதாபாத் நேரம் - இரவு 7.30 மணி சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட்ரைடர்ஸ் நாள் - ஏப்ரல் 11 இடம் - சென்னை சேப்பாக்கம் மும்பையின் அடுத்த ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் நாள் - ஏப்ரல் 13 இடம் - டெல்லி ஆர்சிபி அணியின் அடுத்த ஆட்டம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேபிடல்ஸ் அணி நாள் - ஏப்ரல் 10 இடம் - பெங்களூரு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நிகோலஸ் பூரன் ஆரஞ்சு தொப்பி யாருக்கு? நிகோலஸ் பூரன் (லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்) - 288 (5 போட்டிகள்) மிட்ஷெல் மார்ஷ் (லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்) - 265 (5 போட்டிகள்) சூர்யகுமார் யாதவ் (மும்பை இந்தியன்ஸ்) - 199 (5 போட்டிகள்) நீலத் தொப்பி நூர் அகமது (சிஎஸ்கே) - 11 விக்கெட் (5 போட்டிகள்) கலீல் அகமது (சிஎஸ்கே) - 10 விக்கெட் (5 போட்டிகள்) ஹர்திக் பாண்டியா (மும்பை இந்தியன்ஸ்) - 10 விக்கெட் (5 போட்டிகள்) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c39jjkydlxdo
  20. அரச சொத்துக்களில் ஊழல், மோசடி செய்தவர்களை சட்டத்துக்கு முன் நிறுத்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது - சுனில் ஹந்துன்நெத்தி 08 APR, 2025 | 09:34 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) நாட்டில் கடந்த காலங்களில் அரச சொத்துக்களில் ஊழல் மோசடி செய்தவர்களை சட்டத்துக்கு முன் நிறுத்த தற்போது அரசாங்கத்துக்கு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அதற்கு தேவையான சட்டமாகவே குற்றச்செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட விடயங்கள் தொடர்பான சட்ட திருத்தம் அமைகிறது. ஆனால், இந்த சட்டத்தை நாங்கள் ஒருபோதும் துஷ்பிரயோகம் செய்யமாட்டோம் என்ற உறுதியை வழங்குகிறோம் என அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (8) நடைபெற்ற குற்றச்செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட விடயங்கள் தொடர்பான சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு மக்கள் வழங்கிய ஆணையை நிறைவேற்றுவதற்கும் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்குமான ஒரு சட்டமாகவே இந்த சட்டம் அமைகிறது. எமது நாட்டில் மோசடிகளுக்கு எதிரான அதிகமான சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் அரசியல்வாதிகளால் அந்த சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வந்திருக்கிறது. சட்டத்தை அவர்களுக்கு தேவையான முறையில் பயன்படுத்தி வந்தார்கள். அதனால் உரிமையாளர் இல்லாத பொருட்கள் வெளிப்பட்டன. அதனால் இந்த சட்டத்தை நாங்கள் ஒருபோதும் துஷ்பிரயோகம் செய்யமாட்டோம் என்ற உறுதியை வழங்குகிறோம். அதனால் இந்த சட்டம் மக்களுக்காகவும் மக்களின் அபிலாசைகளுக்காகவுமே பயன்படுத்தப்படும். யாரையும் பாதுகாக்க பயன்படுத்தப்படாது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்த சபையில் எதிர்க்கட்சியில் இருக்கும்போது, ஒரு தடவை அன்று ஆளும் கட்சியில் முதலாம் வரிசையை பாரத்து, தனக்கு அதிகாரம் இருக்குமானால் இங்கு முன்வரிசையில் இருப்பவர்கள் அனைவரும் சிறையில் இருப்பார்கள் என தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது அந்த அதிகாரத்தை மக்கள் ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு வழங்கியுள்ளது. ஆனால் சொன்ன விடயத்தை இன்னும் செயற்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எமக்கு எதிராக தெரிவிக்கப்படுகிறது. இதுபோன்ற பல குற்றச்சாட்டுக்கள் எமது அரசாங்கத்துக்கு எதிராக தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் எமக்கு நிறைவேற்று அதிகாரம் இருந்தாலும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தாலும் சட்ட ரீதியில் இதனை மேற்கொள்ள வேண்டி இருந்தது. அதனாலே தற்போது இந்த சட்டத்தை நாங்கள் கொண்டுவந்துள்ளோம்.இந்த சட்டம் மூலம் முறையற்ற முறையில் சொத்து சேர்த்தவர்கள், ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்கள் பொதுச் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமான சூழல் அமைகிறது. நாட்டு மக்கள் எமக்கு வாக்களிக்க பிரதான காரணம்தான் பிணைமுறை மோசடிகளுடன் தொடர்புபட்டவர்களை சட்டத்துக்கு முன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதாகும். தற்போது அதற்கான சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அதேபோன்று சீனி வரி மோசடி, சீனாவில் இருந்து கழிவு உரம் கொண்டுவந்தமையால் ஏற்பட்ட நட்டம். கரவை பசுக்களை அவுஸ்திரேலியாவில் இருந்து கொண்டுவருவதன் மூலம்16 பில்லியன் ரூபா மோசடி போன்ற மோசடிகாரர்களை சட்டத்துக்கு முன் கொண்டுவர தற்போது இந்த சட்டம் மூலம் வாய்ப்பு கிடைக்கிறது. எனவே இதுபோன்று நாட்டுக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட அனைத்து மோசடிகள் தொடர்பாகவும் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க சந்தர்ப்பம் கிடைக்கிறது. அரசாங்கம் இந்த சட்டத்தை பயன்படுத்தி மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம் என்றார். https://www.virakesari.lk/article/211537
  21. விடுதலைப் புலிகள் முன்னாள் போராளி பிள்ளையான் கைது - இலங்கையில் நடப்பது என்ன? படக்குறிப்பு, 8 ஏப்ரல் 2025, 16:02 GMT தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியும், இலங்கையின் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு பகுதியிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைத்து இன்றிரவு (ஏப்ரல் 8) போலீஸாரினால் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது சம்பவத்தை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் பிபிசி தமிழிடம் உறுதி செய்தனர். கைது செய்யப்பட்டமைக்கான காரணம் கூறப்படாத நிலையில், பிள்ளையான் கொழும்புக்கு அழைத்து செல்லப்படவுள்ளதாகவும் பாதுகாப்பு பிரிவினர் கட்சியினருக்கு அறிவித்துள்ளனர். சிவில் ஆடைகளில் வேன் ஒன்றில் வருகைத் தந்த பாதுகாப்பு அதிகாரிகளே இவ்வாறு பிள்ளையானை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை மற்றும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் உள்ளிட்ட சில சம்பவங்கள் தொடர்பில் பிள்ளையான் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. இவ்வாறு முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை, பிபிசி தமிழுக்கு சில தினங்களுக்கு முன்னர் வழங்கிய பேட்டியில், பிள்ளையான் மறுத்திருந்தார். இந்த நிலையில், காரணங்கள் குறிப்பிடப்படாது பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. "விடுதலைப் புலிகளுடன் ஆயுதப்பரிமாற்றத்தில் இருந்த ஆளும் ஜேவிபி கட்சி"- புலிகளின் முன்னாள் போராளி பிள்ளையான் பிபிசி தமிழுக்கு பேட்டி37 நிமிடங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகளான கருணா - பிள்ளையான் 21 ஆண்டுகளுக்கு பின்னர் இணைந்தது ஏன்?22 மார்ச் 2025 கருணா அம்மான் உள்பட 4 இலங்கையர்களுக்கு தடை விதித்த பிரிட்டன் - இதன் விளைவுகள் என்ன?27 மார்ச் 2025 யார் இந்த பிள்ளையான்? தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியாக சிவநேசத்துரை சந்திரகாந்தன் செயற்பட்டிருந்தார். விடுதலைப் புலிகள் அமைப்பில் சிவநேசத்துரை சந்திரகாந்தன், பிள்ளையான் என அழைக்கப்பட்டார். 1990ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் தனது 16வது வயதில் இணைந்த பிள்ளையான், முக்கிய தாக்குதல்களில் முன்னிலை வகித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தளபதியாக விளங்கிய கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுடன் கைகோர்த்து 2004ம் ஆண்டு புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்த பிள்ளையான், இலங்கை அரசாங்கத்துடன் இணைந்திருந்தார். இவ்வாறு விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறிய நிலையில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை ஆரம்பித்து அதனை இன்று வரை செயற்படுத்தி வருகின்றார். வடகிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டதன் பின்னர், கிழக்கு மாகாணத்திற்காக நடத்தப்பட்ட முதலாவது மாகாண சபைத் தேர்தலில் முதலாவது கிழக்கு மாகாண முதலமைச்சராக பிள்ளையான் 2008ம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் பிள்ளையான் மீது முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், அவர் 2015ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார். 2020ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சிறைச்சாலையில் இருந்தவாறே போட்டியிட்ட பிள்ளையான், மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். அதன்பின்னர் 2020ம் ஆண்டு நீதிமன்றத்தினால் பிள்ளையான் விடுதலை செய்யப்பட்டிருந்தார். இவ்வாறான நிலையிலேயே, தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2kvg7xzk9eo
  22. 'தமிழ்நாடு ஆளுநரின் செயல் சட்டவிரோதம்' - 10 மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றமே ஒப்புதல் வழங்கி தீர்ப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES 8 ஏப்ரல் 2025, 07:43 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தது சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், அவ்வாறான 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்றது முதலே ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் மோதல் போக்கு நீடிக்கிறது. குறிப்பாக, ஆர்.என்.ரவி ஆளுநரான பிறகு அந்த மோதல் இன்னும் தீவிரமானது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டு வருவதாக ஆளும் திமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. அந்த வகையில், ஆளுநர் நிலுவையில் வைத்துள்ள, துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான மசோதாக்கள் விவகாரத்தில் ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த ரிட் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.பி.பர்டிவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்தது. "10 மசோதாக்களையும் நிலுவையில் வைத்திருப்பது சட்டப்பிரிவு 200-க்கு எதிரானது மற்றும் பிழையானது. நீண்ட காலமாக மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. பஞ்சாப் வழக்கின் தீர்ப்புக்குப் பிறகும் இவ்வாறு நடந்து கொண்டிருப்பது சரியல்ல. ஆகவே, உச்ச நீதிமன்றத்திற்கு உள்ள சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி அந்த 10 மசோதாக்களும் அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது என்று அறிவிப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை." என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாடு அரசு முன்வைத்த வாதம் என்ன? வழக்கு விசாரணையின் போது, மாநில அரசின் சார்பில் வாதாடிய ராகேஷ் திவேதி சில விஷயங்களை முன்வைத்தார். "மத்திய அரசின் அதிகார வரம்பில் உள்ள விவகாரத்தில் மாநில அரசு சட்டம் இயற்றினால் அதை நிராகரிப்பதற்கு ஆளுநருக்கு உரிமை உள்ளது. ஆனால், மாநில பட்டியலில் உள்ளவற்றுக்காக நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டார். சட்டமன்றத்தில் அனைத்தையும் ஆராய்ந்து மசோதா நிறைவேற்றப்படுவதாகக் கூறிய ராகேஷ் திவேதி, "ஆளுநர் நிராகரிக்க வேண்டும் என்பதற்காக மசோதா அனுப்பி வைக்கப்படுவதில்லை. ஆனால், எந்த விளக்கமும் கொடுக்காமல் நிறுத்தி வைப்பது ஏற்புடையது அல்ல" என வாதிட்டார். "மாநில அமைச்சரவையின் அறிவுரைகளின் படியே ஆளுநர் முடிவெடுக்க வேண்டும்" எனவும் தமிழ்நாடு அரசு தனது வாதத்தை முன்வைத்தது. அப்போது நீதிபதிகள், "ஆளுநர் விளக்கம் அளிக்காமல் திருப்பி அனுப்பினால் அவர் மனதில் என்ன உள்ளது என எப்படி அறிந்து கொள்ள முடியும்?" எனக் கேள்வி எழுப்பினர். மேலும், 2023 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவருக்கு மசோதாக்கள் அனுப்பப்பட்ட பிறகு தற்போது வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? இரண்டு ஆண்டுகளாக மசோதாக்கள் ஆளுநரிடம் உள்ளதா? ஒப்புதல் அளிக்க முடியாது என அவர் எப்போது உணர்ந்தார்? ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே தகவல் பரிமாற்றம் இருந்ததா என்று நீதிபதிகள் கேட்டனர். ஆளுநர் தரப்பு வாதங்கள் என்ன? ஆளுநர் சார்பாக வாதிட்ட அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி, "அனைத்து சூழ்நிலைகளிலும் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை" என்றார். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது, நிறுத்தி வைப்பது, திருப்பி அனுப்புவது, அதிருப்தியை தெரிவிப்பது என நான்கு அதிகாரங்கள் ஆளுநருக்கு உள்ளதாகவும் அவர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். 'மாநில அரசின் மசோதாக்களில் சில முரண்பட்ட காரணங்களுக்காக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்தால் அரசும் ஆளுநரும் இணைந்து முடிவெடுக்கும் வகையில் குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம்' எனவும் ஆளுநர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. மசோதாக்கள் மீது முடிவெடுப்பதற்கு குடியரசுத் தலைவருக்கு அனுப்புமாறு ஆளுநரை மாநில அரசு கேட்கலாமே தவிர, இது எந்த வகையிலும் மாநில உரிமைகளைப் பறிப்பது அல்ல எனவும் ஆளுநர் தரப்பில் வாதிடப்பட்டது. "சட்டவிதிகளுக்கு எதிராக இருந்தது" துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநரின் தலையீடு தொடர்பான தமிழ்நாடு அரசின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த ஆளுநர் தரப்பு, துணைவேந்தர் நியமனத்தில் தமிழ்நாடு அரசின் நடைமுறை, மத்திய சட்டவிதிமுறைகளுக்கு எதிராக உள்ளதாக வாதிட்டது. அதேநேரம், மத்திய சட்டவிதிமுறைகளுக்கு எதிராக மாநில அரசின் நடவடிக்கை இருந்தால் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், "அரசுக்கு ஆளுநர் தடையாக இருக்கிறார். மசோதா விவகாரம் தொடர்பாக ஆளுநர் முட்டுக்கட்டை போட முடியாது" எனத் தெரிவித்தனர். ஆனால், ஆளுநர் தரப்போ, "மசோதாவை திருப்பி அனுப்பினாலோ அல்லது நிராகரித்தாலோ அதற்கான காரணத்தை தெளிவாக சுட்டிக் காட்ட வேண்டும் என்ற அரசியல் சாசனம் கூறுகிறது. ஆனால், அதைக் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்பதாக இல்லை" என ஆளுநர் தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES உச்ச நீதிமன்ற தீர்ப்பு முழு விவரம் தீர்ப்பை வழங்கிய போது உச்ச நீதிமன்ற நீதிபதி பர்டிவாலா கூறுகையில், "தன்னிச்சையான அதிகாரம் (absolute veto) என்ற கருத்துக்கு அரசியலமைப்பில் இடமில்லை. ஆளுநருக்கு மசோதா அனுப்பப்படும் போது, அரசியலமைப்புப் பிரிவு 200-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு நடவடிக்கையை அவர் எடுக்க வேண்டும்." என தெரிவித்தார். "ஆளுநர் நேர்மையுடன் செயல்படவில்லை. மசோதாக்கள் சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட நாளிலேயே அவற்றுக்கு ஆளுநரால் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைப்பதற்கு ஆளுநருக்கு எவ்வித வாய்ப்பும் இல்லை. பிரிவு 200-ன் கீழ் தன்னிச்சையான அதிகாரம் என்பது அனுமதிக்கப்பட முடியாதது. மாநில சட்டமன்றத்தால் மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்படும் போது அந்த மசோதாவை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்ப முடியாது என்பது பொது விதியாக உள்ளது. இரண்டாவதாக அனுப்பப்பட்ட மசோதா முதலில் அனுப்பியதிலிருந்து வேறுபடும் போதுதான் இதற்கு விதிவிலக்கு உள்ளது. மசோதாக்களை நிறுத்தி வைக்கும் போதோ அல்லது குடியரசு தலைவருக்கு அனுப்பும் போதோ ஆளுநர் அம்மசோதா மீது ஒரு மாதத்துக்குள் முடிவெடுக்க வேண்டும். மசோதாக்களை நிறுத்தி வைப்பது அல்லது குடியரசு தலைவருக்கு அனுப்புவது என்பது, மாநில அரசின் முடிவுக்கு முரணானதாக இருந்தால், ஆளுநர் அதுகுறித்து அதிகபட்சம் மூன்று மாத காலத்துக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும்." என்று நீதிபதி பர்டிவாலா குறிப்பிட்டார். "ஆளுநர் ஒரு மாநில அரசின் நலன் மற்றும் ஆலோசனைப் படியே செயல்பட வேண்டும் என்பது பொது விதியாக உள்ளது. (இந்திய அரசு சட்டம்) 1935-ன் கீழ் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள எந்தவொரு விருப்புரிமையும் அரசியலமைப்பை செயல்படுத்தும் போது இல்லாமல் ஆகிறது. ஆளுநர் ஒரு மாநிலத்தின் நலன் மற்றும் மாநில அரசின் ஆலோசனைப் படியே செயல்பட வேண்டும் என்பதை மீண்டும் கூறுகிறோம். சட்டப் பிரிவு 200ன்கீழ் அவருக்கு என தனிப்பட்ட விருப்புரிமை எதுவும் இருக்க முடியாது" என்றார் நீதிபதி பர்டிவாலா. இந்த வழக்கில் பி.ஆர்.அம்பேத்கரின் வார்த்தைகளை நீதிபதி ஜே.டி.பர்டிவாலா மேற்கோள் காட்டியுள்ளார். 'ஓர் அரசியல் அமைப்பு எவ்வளவு நல்லதாக இருந்தாலும் அதைச் செயல்படுத்துகிறவர்கள் நல்லவர்களாக இல்லாவிட்டால் அது மோசமானதாக அமையும்' என்ற வார்த்தைகளை அவர் குறிப்பிட்டுள்ளார். 10 மசோதாக்கள் என்ன? தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக மசோதா, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக திருத்த மசோதா, தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டங்கள் திருத்த மசோதா, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக திருத்த மசோதா, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக திருத்த மசோதா, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக திருத்த மசோதா உள்பட 10 மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. கறுப்பு திங்கள்: இந்திய பங்குச் சந்தையில் ரூ 19 லட்சம் கோடி இழப்பு – இனி என்ன நடக்கும்?7 மணி நேரங்களுக்கு முன்னர் ரகசிய 'ஏவுகணை நகரங்கள்': இந்தியாவுக்கு தெற்கே உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை தாக்குவோம் என இரான் மிரட்டல்8 ஏப்ரல் 2025 ஹர்திக் தடாலடியால் மும்பை பக்கம் திரும்பிய ஆட்டத்தை ஒரே ஓவரில் மாற்றிக் காட்டிய சகோதரர் க்ருணால்6 மணி நேரங்களுக்கு முன்னர் வழக்கின் பின்னணி தமிழக சட்டமன்றத்தால் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 22 மசோதாக்கள் மீது ஆளுநர் மாளிகை எந்த முடிவும் எடுக்காமல் நிலுவையில் வைத்திருந்தது. இதேபோல பஞ்சாப் மாநிலத்தில் அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கும் முதலமைச்சர் பகவந்த் சிங் மான் தலைமையிலான அரசுக்கும் இடையில் மோதல் நீடித்து வந்தது. இதையடுத்து அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது. இதற்குப் பிறகு, இதே போன்ற வழக்குகளை தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களும் தொடர்ந்தன. இந்த வழக்குகளை ஒட்டுமொத்தமாக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், ஜே.பி. பர்டிவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்துவந்தது. இந்த வழக்கின் விசாரணையின் போது, ஆளுநர்கள் இதுபோலச் செயல்படுவது, "நெருப்போடு விளையாடுவதைப் போல" என்று 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாத தொடக்கத்தில் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. அந்த வழக்கு அந்த ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவிருந்த நிலையில், அதற்கு முன்னதாக நவம்பர் 13ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் இருந்து 10 மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டன. நவம்பர் 20ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது அந்த மசோதாக்கள் மீண்டும் ஆளுநர் மாளிகையிலேயே இருக்க வேண்டும் எனக் கருதிய தமிழ்நாடு அரசு உடனே சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டி அந்த 10 மசோதாக்களையும் மீண்டும் நிறைவேற்றி அனுப்பியது. பட மூலாதாரம்,DIPR உச்ச நீதிமன்ற தீர்ப்பு பற்றி ஸ்டாலின் கருத்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்ப்பு குறித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை தமிழ்நாடு அரசு பெற்றுள்ளதாகக் கூறினார். மேலும், "ஒரு முறை ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்களை தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றினால், ஆளுநர் ஒப்புதல் அளித்தே தீர வேண்டும் என அரசியல் சாசனத்தில் உள்ளது. ஆனால் இதனை ஏற்க மறுத்த ஆளுநர் தனக்கு அதிகாரம் இருப்பதாகக் கூறி வந்தார்." என முதலமைச்சர் குறிப்பிட்டார். உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பைக்குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின்," தமிழ்நாடு அரசின் வாதத்திலிருந்த நியாயத்தை ஏற்ற உச்சநீதிமன்றம், மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்ட விரோதம் எனவும், ஆளுநர் நிறுத்தி வைத்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்ததாகவும் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவு, தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியாவின் அனைத்து மாநில அரசுகளுக்கும் கிடைத்த வெற்றி" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி தத்துவத்தை நிலைநாட்ட தமிழ்நாடு போராடியது, தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமது உரையில் குறிப்பிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cdjlyn82vjzo
  23. 08 APR, 2025 | 07:31 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்கள் மற்றும் வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள சொத்துக்கள் அரசுடமையாக்கப்படும். ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (8) நடைபெற்ற முறையற்ற சொத்துக்கள் தொடர்பான சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, சட்டவிரோதமான முறையில் சேர்க்கப்பட்ட சொத்துக்களை அரசுடமையாக்குவதாக நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவோம். இதற்கான முதல் கட்டமாகவே முறையற்ற வகையில் சேர்க்கப்பட்ட சொத்துக்களை அரசுடமையாக்குவது தொடர்பான சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது. தண்டனை சட்டக்கோவை, பொது சட்டம், ஊழல் சட்டம் ஆகிய சட்டங்களில் காணப்படும் குறைப்பாடுகள் இந்த சட்டமூலத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் முறையற்ற வகையில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சொத்துக்கள் இந்த புதிய சட்டத்தின் ஊடாக அரசுடமையாக்கப்படும். இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். மோசடி செய்யப்பட்ட அரச சொத்துக்கள் மற்றும் அரச நிதி அரசுடமையாக்கப்பட வேண்டும் என்று மக்கள் கடந்த காலங்களில் அழுத்தமாக வலியுறுத்தினார்கள். மக்களின் அபிலாசைக்கு அமைவாகவே இந்த சட்டம் சர்வதேச கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. முறையற்ற வகையில் ஈட்டப்பட்ட சொத்துக்களை சட்டத்தின் பிரகாரம் அரசுடமையாக்குவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள இந்த சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இந்த சட்டத்தின் பிரகாரம் விசேட பொறிமுறைகள் வகுக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/211536
  24. கனேடிய உயர்நீதிமன்றத் தீர்ப்பு; இனப்படுகொலை மறுப்பை முறியடிக்கும் முக்கிய மைல்கல் அடைவு - தேசிய கனேடியத் தமிழர் பேரவை வரவேற்பு 08 APR, 2025 | 03:06 PM (நா.தனுஜா) தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரச்சட்டம் தொடர்பான கனேடிய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பானது, தமிழினப்படுகொலை இடம்பெறவில்லை என முன்வைக்கப்படும் மறுப்புக்களை முறியடிப்பதை இலக்காகக்கொண்டு உலகளாவிய ரீதியில் வாழும் தமிழர்களால் கூட்டாக முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளின் ஊடாக எட்டப்பட்டுள்ள மிகமுக்கிய மைல்கல் அடைவாகும் என தேசிய கனேடியத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. தமிழினப்படுகொலை மறுப்பாளர்களால் 104 ஆம் இலக்க தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரச்சட்டத்துக்கு எதிராக கனேடிய உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, கடந்த வாரம் நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கனடாவின் ஒன்ராரியோ மாகாண பாராளுமன்றத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் 104 ஆம் இலக்க தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அச்சட்டத்தின் பிரகாரம் வருடாந்தம் மே மாதம் 12 - 18 ஆம் திகதி வரையான ஒருவாரகாலம் ஒன்ராரியோ மாகாணத்தில் தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரமாகப் பிரகடனப்படுத்தப்படும். தமிழினப்படுகொலை தொடர்பிலும், உலகில் இடம்பெற்ற ஏனைய படுகொலைகள் தொடர்பிலும் ஒன்ராரியோ மாகாணத்தைச்சேர்ந்தவர்கள் அந்த ஒருவாரகாலத்தில் அறிந்துகொள்வதை ஊக்குவிக்கும் நோக்கிலேயே அச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் 104 ஆம் இலக்க தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரச்சட்டத்துக்கு எதிராக தமிழினப்படுகொலை மறுப்பாளர்களால் மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீடு கடந்த வாரம் கனேடிய உயர்நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள தேசிய கனேடியத் தமிழர் பேரவை, 'தமிழினப்படுகொலை இடம்பெறவில்லை என முன்வைக்கப்படும் மறுப்புக்களை முறியடிப்பதை இலக்காகக்கொண்டு உலகளாவிய ரீதியில் வாழும் தமிழர்களால் கூட்டாக முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளின் ஊடாக எட்டப்பட்டுள்ள மிகமுக்கிய மைல்கல் அடைவு இதுவாகும்' எனச் சுட்டிக்காட்டியுள்ளது. அதேவேளை இந்த உயர்நீதிமன்றத்தீர்ப்பு தொடர்பில் பல்வேறு தவறான தகவல்கள் பகிரப்பட்டுவருவதாகத் தெரிவித்துள்ள அப்பேரவை, குறிப்பாக 'கனேடிய உயர்நீதிமன்றம் உண்மையை நிலைநாட்டியுள்ளது. இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை' எனும் தலைப்பில் வெளியாகியிருக்கும் கட்டுரையில், இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை கனேடிய உயர்நீதிமன்றம் நிராகரித்ததாக பொய்யான விடயம் உள்வாங்கப்பட்டிருப்பதாக விசனம் வெளியிட்டுள்ளது. 'தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரச்சட்டத்துக்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கான கோரிக்கை கனேடிய உயர்நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. அவ்வாறிருக்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை உயர்நீதிமன்றம் நிராகரித்ததாக குறித்த கட்டுரையில் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது சட்ட அடிப்படையில் தவறான கருத்து என்பதுடன் கனேடியத் தமிழர்களின் நீண்டகால முயற்சியின் விளைவாகக் குவிந்திருக்கும் அவதானத்தைக் கலைக்கும் செயலாகும்' எனவும் தேசிய கனேடியத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/211480
  25. 08 APR, 2025 | 07:19 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) 2005ஆம் ஆண்டு ரணில் - சந்திரிக்காவை தோற்கடிப்பதற்காகவே ராஜபக்ஷர்களுக்கு ஆதரவளித்தோம். வடக்கு மற்றும் கிழக்கு மக்களை அழித்த ராஜபக்ஷர்களுக்கும் பிள்ளையானுக்கும் ஒத்துழைப்பு வழங்கியவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (8) நடைபெற்ற முறையற்ற வகையில் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றிய சாணக்கியன் இராசமாணிக்கம் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை சுட்டிக்காட்டி உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, நான் இந்த பாராளுமன்ற உறுப்பினர் தொடர்பில் பல விடயங்களை குறிப்பிட்டேன். ஆனால், அவர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து நிதி பெற்ற விடயத்தை மாத்திரம் குறிப்பிடுகிறார். மஹிந்த ராஜபக்ஷவுடன் நாங்கள் 2006 - 2009 வரையான காலப்பகுதியில் ஒன்றிணைந்து செயற்படவில்லை. இது அரசியல் சத்தியம். தமிழ் அரசியல் கட்சி என்று குறிப்பிட்டுக்கொண்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இல்லாதொழித்தவர்களுடன் ஒன்றிணைந்து தான் இவர்கள் செயற்பட்டார்கள். இவர்கள் ராஜபக்ஷர்களுடன் ஒன்றிணைந்து 2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் வாக்கு கோரினார். பிள்ளைகளை கடத்தி, கப்பம் பெற்ற பிள்ளையானின் மேடையிலும் இவர் இருந்துள்ளார். 2005ஆம் ஆண்டு எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு தான் ராஜபக்ஷர்களுக்கு ஆதரவளித்தோம். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நிலைக்கு கவலையடைகிறேன். சபாநாயகரை இவர் மிகவும் கீழ்த்தரமான முறையில் விமர்சிக்கிறார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் இவ்வாறு முறையற்ற வகையில் செயற்படவில்லை. மூன்றாம் தரப்பு அரசியல்வாதி போல் செயற்படவில்லை. 2005ஆம் ஆண்டு ரணில் - சந்திரிக்காவை தோற்கடிப்பதற்காகவே ராஜபக்ஷர்களுக்கு ஆதரவளித்தோம். இதன் பின்னர் ராஜபக்ஷர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. வடக்கு மற்றும் கிழக்கு மக்களை அழித்த ராஜபக்ஷர்களுக்கும், பிள்ளையானுக்கும் ஒத்துழைப்பு வழங்கியவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என்றார். https://www.virakesari.lk/article/211534

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.