Everything posted by ஏராளன்
-
கருத்து படங்கள்
அததெரண கருத்துப்படம்.
-
இந்தியா - தென் ஆபிரிக்கா கிரிக்கெட் தொடர்
Tea 2nd Test, Guwahati, November 22 - 26, 2025, South Africa tour of India South Africa 489 India (36 ov) 102/4 Day 3 - Session 1: India trail by 387 runs.
-
துபை விமானக் கண்காட்சியில் கீழே விழுந்து நொறுங்கிய தேஜஸ் போர் விமானம் - என்ன நடந்தது?
தேஜஸ் விமான விபத்தில் இறந்த விமானிக்கு கோவை, இமாச்சலில் இறுதி அஞ்சலி பட மூலாதாரம், @IafSac படக்குறிப்பு, விங் கமாண்டர் நமான்ஷ் ஸ்யாலின் உடல் கோயம்புத்தூரில் உள்ள சூலூர் விமானப்படை தளத்திற்குக் கொண்டு வரப்பட்டது, அங்கு இந்திய விமானப்படை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். ஒரு மணி நேரத்துக்கு முன்னர் துபையில் தேஜஸ் விமான விபத்தில் உயிரிழந்த இந்திய விமானப்படை விங் கமாண்டர் நமான்ஷ் ஸ்யாலின் இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை அவரது சொந்த கிராமத்தில் நடைபெற்றது. இறுதி மரியாதை செலுத்துவதற்காக இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான பட்டியல்கரில் காலை முதலே மக்கள் திரண்டிருந்தனர். நமான்ஷ் ஸ்யாலின் மனைவியும் விங் கமாண்டருமான அஃப்ஷான் ஸ்யால், விமானப்படை சீருடையில் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். அவர் ராணுவ மரியாதையுடன் தனது கணவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். சொந்த கிராமத்திற்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன், விங் கமாண்டர் நமான்ஷின் உடல் கோயம்புத்தூரில் உள்ள சூலூர் விமானப்படை தளத்திற்குக் கொண்டு வரப்பட்டது. அங்கு இந்திய விமானப்படை அதிகாரிகள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு, ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணியளவில் விமானப்படையின் சிறப்பு விமானம் மூலம் அவரது உடல் காங்க்ரா விமான நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. தந்தை கூறியது என்ன? ''நாடு ஒரு சிறந்த விமானியை இழந்துள்ளது, நான் என் இளம் மகனை இழந்துள்ளேன். அவர் வாழ்க்கையில் ஒருபோதும் சலிப்பு என்பதே இருந்ததில்லை; பங்கேற்ற ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்றார். இந்திய அரசு தனது தரப்பில் விசாரணை நடத்துகிறது, அதே நேரத்தில் துபை அரசும் விசாரணை செய்து வருகிறது." என்று நமான்ஷின் தந்தை ஜகன் நாத் ஸ்யால் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்தார். "எங்கள் விமானி நமான்ஷின் இறுதிச் சடங்கில் நான் கலந்துகொள்ள வந்துள்ளேன். அவர் 12ஆம் வகுப்புக்குப் பிறகு தேசியப் பாதுகாப்பு அகாடமியில் (NDA) சேர்ந்தார்," என உள்ளூர்காரரான ராஜீவ் ஜம்வால் கூறுகிறார். "என்டிஏவில் அவர் சிறப்பாக செயல்பட்டார், மேலும் விமானப்படையிலும் அவர் சிறந்த விமானிகளில் ஒருவராக இருந்தார். அவருக்கு மரியாதை செலுத்த நாங்கள் இங்கு வந்துள்ளோம்," என்று கூறினார். "எங்கள் கிராமத்தில் துக்க சூழல் நிலவுகிறது... மிகவும் மோசமாக உணர்கிறேன். வார்த்தைகள் இல்லை... இப்படி நடந்திருக்கக் கூடாது," என நமான்ஷ் ஸ்யாலின் கிராமத்தைச் சேர்ந்த சந்தீப் குமார் கூறுகிறார். பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, கணவர் நமான்ஷ் ஸ்யாலுக்கு அஞ்சலி செலுத்திய அவரது மனைவி விபத்து நடந்தது எப்படி? இந்திய விமானப்படையின் தேஜஸ் போர் விமானம் வெள்ளிக்கிழமை துபை ஏர் ஷோவின் போது விபத்துக்குள்ளானது. இதில் விமானி விங் கமாண்டர் நமான்ஷ் ஸ்யால் உயிரிழந்தார். துபையில் உள்ள அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் இந்த விபத்து உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணியளவில் நிகழ்ந்தது. இந்த விபத்தின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. காணொளியில், விமானம் புறப்பட்ட உடனேயே தரையில் விழுந்து, தீப்பிடித்து எரியத் தொடங்கியது தெரிகிறது. இந்த விபத்து குறித்து இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், "வெள்ளிக்கிழமை துபை ஏர் ஷோவில் விமான சாகசத்தின்போது இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி தனது உயிரை இழந்தார்," என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் உருவான தேஜஸ் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஒற்றை எஞ்சின் கொண்ட தேஜஸ் போர் விமானம் முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாகும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் முற்றிலும் உள்நாட்டில் தயாரித்த ஒற்றை எஞ்சின் கொண்ட போர் விமானம்தான் தேஜஸ். இந்த விமானம் வெகு தொலைவில் இருந்தே எதிரி விமானங்களைக் குறிவைத்துத் தாக்கக்கூடியது மற்றும் எதிரி ரேடாரைத் தவிர்க்கும் திறனையும் கொண்டுள்ளது. இந்த விமானத்தால், தன்னைவிட அதிக எடை கொண்ட சுகோய் விமானம் தாங்கக்கூடிய அதே அளவு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளைத் தாங்கிப் பறக்க முடியும். 2004 ஆம் ஆண்டிலிருந்து தேஜஸில் மேம்படுத்தப்பட்ட எலக்ட்ரிக் எஞ்சின் F404-GE-IN20 பயன்படுத்தப்படுகிறது. தேஜஸ் மார்க் 1 வகை தற்போது F404 IN20 எஞ்சினைப் பயன்படுத்துகிறது. தேஜஸ் போர் விமானங்கள் சுகோய் போர் விமானங்களை விட இலகுவானவை மற்றும் எட்டு முதல் ஒன்பது டன் வரை எடையைத் தாங்கக்கூடியவை. இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில், இந்தியப் பாதுகாப்பு அமைச்சகம் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்(ஹெச்ஏஎல்) உடன் 97 தேஜஸ் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்தது. அவற்றின் விநியோகம் 2027 இல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன், 2021 இல் இந்திய அரசு ஹெச்ஏஎல் உடன் 83 தேஜஸ் விமானங்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதன் விநியோகம் 2024 இல் தொடங்க திட்டமிடப்பட்டது, ஆனால் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எஞ்சின்கள் பற்றாக்குறை காரணமாக இதில் தாமதம் ஏற்பட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd6xqg74pwxo
-
வீட்டை சுத்தம் செய்யும்போது கிடைத்த புத்தகம் ரூ. 82 கோடிக்கு ஏலம் போனது ஏன் தெரியுமா?
பட மூலாதாரம், Heritage Auctions / HA.com படக்குறிப்பு, இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், பல்லாண்டுகள் கழித்தும் அந்த காமிக்ஸ் புத்தகம் மிகச் சிறப்பான நிலையில் இருந்தது. கட்டுரை தகவல் கிரேஸ் எலிசா குட்வின் 3 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது, அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள தங்களது மறைந்த தாயின் பரணில் சுத்தம் செய்துகொண்டிருந்த அந்த மூன்று சகோதரர்களுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. பழைய செய்தித்தாள்களின் குவியலுக்கு அடியில், அவர்களது வாழ்க்கையையே மாற்றக்கூடிய ஒரு புத்தகத்தைக் கண்டுபிடித்தனர். முதன்முதலில் வெளியான சூப்பர்மேன் காமிக்ஸ் புத்தகங்களில் அதுவும் ஒன்று. சூப்பர்மேன் கதாபாத்திரத்தின் (Man of Steel) சாகசங்கள் குறித்த ஜூன் 1939-இல் வெளியான முதல் பதிப்பின் அசல் புத்தகம் அது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அது மிகவும் சிறப்பாக எந்த சேதமும் இல்லாமல் இருந்தது. தற்போது இதுவே உலகின் அதிக விலைக்கு விற்கப்பட்ட காமிக்ஸ் புத்தகமாகச் சாதனை படைத்துள்ளது. ஏலத்தில் இது 9.12 மில்லியன் டாலர்களுக்கு (சுமார் 82 கோடி ரூபாய்) விற்பனையாகியுள்ளது. வியாழக்கிழமை இவ்விற்பனையை நடத்திய டெக்சாஸைச் சேர்ந்த 'ஹெரிடேஜ் ஆக்ஷன்ஸ்' நிறுவனம், இதனை 'காமிக்ஸ் சேகரிப்பின் உச்சம்' என்று வர்ணித்துள்ளது. பட மூலாதாரம், Heritage Auctions / HA.com படக்குறிப்பு, காமிக்ஸ் புத்தகத்தின் முழு அட்டைப்படம் அந்த மூன்று சகோதரர்களும், 2024ஆம் ஆண்டில், வீட்டின் பரணில், சிலந்தி வலைகள் சூழ்ந்திருந்த ஓர் அட்டைப் பெட்டிக்குள், பழைய செய்தித்தாள்களுக்கு அடியில் 'சூப்பர்மேன் #1' உள்ளிட்ட ஆறு காமிக்ஸ் புத்தகங்களைக் கண்டெடுத்ததாக ஹெரிடேஜ் நிறுவனம் கூறியுள்ளது. ஏல நிறுவனத்தைத் தொடர்புகொள்வதற்கு முன் அவர்கள் சில மாதங்கள் காத்திருந்தனர். ஆனால் அவர்கள் தொடர்புகொண்ட சில நாட்களிலேயே, ஹெரிடேஜ் ஆக்ஷன்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் லான் ஆலன் அவர்களைச் சந்தித்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தங்கள் பெயர்களை வெளியிட விரும்பாத அந்தச் சகோதரர்கள், 50 மற்றும் 60 வயதுகளில் உள்ளவர்கள். "அதிக மதிப்புள்ள காமிக்ஸ் புத்தகங்களைத் தான் சேகரித்து வைத்திருப்பதாக அவர்களின் தாயார் பலமுறை கூறியுள்ளார், ஆனால் அவற்றை அவர்களுக்குக் காட்டியதே இல்லை," என்று ஆலன் தெரிவித்தார். Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது சியா, ஆளி உள்ளிட்ட விதைகளை எப்படி சாப்பிட வேண்டும்? யாரெல்லாம் சாப்பிட கூடாது? உங்கள் வீட்டுக்கு அருகே இந்தச் செடிகள் இருந்தால் உண்மையில் பாம்புகள் வராதா? சமையல் அலுமினிய பாத்திரங்களை எத்தனை ஆண்டுகள் பயன்படுத்தலாம்? மீறி உபயோகித்தால் என்ன பிரச்னை? 'டிச. 31க்குள் இதை செய்ய வேண்டும்'; உங்கள் பான் - ஆதார் எண்ணை இணைப்பதற்கான 2 எளிய வழிகள் End of அதிகம் படிக்கப்பட்டது "பொதுவாக, 'எனது காமிக்ஸ் புத்தகங்களை அம்மா தூக்கி எறிந்துவிட்டார்' எனப் பிள்ளைகள் புகார் சொல்வார்கள். அந்தக் கதைகளுக்கு நேர்மாறான ஒரு சுவாரஸ்யமான கதை இது," என்கிறார் அவர். "பெரும் பொருளாதார மந்தநிலைக்கும் இரண்டாம் உலகப் போரின் துவக்கத்திற்கும் இடைப்பட்ட காலத்தில், தானும் தனது சகோதரனும் வாங்கிய காமிக்ஸ் புத்தகங்களை, அந்தத் தாய் பத்திரப்படுத்தி வைத்திருந்தார்," என்று ஹெரிடேஜ் நிறுவனம் கூறியது. வடக்கு கலிஃபோர்னியாவின் குளிர்ந்த காலநிலை, அந்தக் காமிக்ஸ் புத்தகத்தின் பழைய காகிதங்களைப் பாதுகாப்பதற்கு மிகவும் ஏதுவாக இருந்துள்ளது என ஆலன் குறிப்பிட்டார். "ஒருவேளை இந்த காமிக்ஸ் புத்தகங்கள் டெக்சாஸில் உள்ள ஒரு வீட்டின் பரணில் இருந்திருந்தால், அவை பாழாகியிருக்கும்," என்றும் அவர் கூறினார். காமிக்ஸ் புத்தக ஏலத்தில் புதிய சாதனை புத்தகத்தின் இந்தச் சிறப்பான நிலை காரணமாக, காமிக்ஸ் புத்தகங்களை மதிப்பீடு செய்யும் நிறுவனமான சிஜிசி (CGC), இந்த 'சூப்பர்மேன் #1' புத்தகத்திற்கு 10-க்கு 9.0 என்ற மதிப்பீட்டை வழங்கியது. இது '8.5' என்ற வேறொரு புத்தகத்திற்கு வழங்கப்பட்ட முந்தைய சாதனையை முறியடித்துள்ளது. சூப்பர்மேன் #1 புத்தகம், வாங்குபவருக்கான கட்டணம் உட்பட 9 மில்லியன் டாலருக்கும் அதிகமான விலைக்கு விற்பனையானது. இதன் மூலம், இதற்கு முன் அதிக விலைக்கு விற்கப்பட்ட காமிக்ஸ் புத்தகத்தின் சாதனையை விட 3 மில்லியன் டாலர் அதிக விலைக்கு விற்றுப் புதிய வரலாற்றைப் படைத்துள்ளது. சூப்பர்மேனை முதன்முதலில் அறிமுகப்படுத்திய 1938ஆம் ஆண்டு படைப்பான 'ஆக்ஷன் காமிக்ஸ் எண் 1' (Action Comics No. 1), கடந்த ஆண்டு 6 மில்லியன் டாலருக்கு விற்பனையானது. பரணின் பின்பகுதியில் காமிக்ஸ் புத்தகங்கள் கொண்ட அந்தப் பெட்டி பல ஆண்டுகளாக யாருடைய கவனத்திற்கும் வராமல் இருந்தது என, அந்த மூன்று சகோதரர்களில் இளையவர் கூறியதாக ஏல நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "பல ஆண்டுகள் கடந்த நிலையில், வாழ்க்கையில் தொடர்ச்சியான இழப்புகளையும் மாற்றங்களையும் குடும்பம் சந்தித்து வந்தது. அன்றாட வாழ்க்கைப் பிரச்னைகளே முக்கியமானதாக மாறியதால், ஒரு காலத்தில் அக்கறையுடன் எடுத்து வைக்கப்பட்ட காமிக்ஸ் பெட்டி நினைவில் இருந்து மறைந்தது. கடந்த கிறிஸ்துமஸ் வரை அது அப்படியே இருந்தது," என அந்தச் சகோதரர்களில் இளையவர் கூறியுள்ளார். "இது காமிக்ஸ் புத்தகங்கள், அதன் பழைய காகிதங்கள் பற்றிய கதை மட்டுமல்ல. கடந்த கால வாழ்வின் மற்றும் குடும்பத்தின் நினைவுகள், எதிர்பாராத வழிகளில் மீண்டும் நம்மை வந்தடையும் என்பதற்கான ஒரு சான்று இது." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce8q12eepqlo
-
நவம்பர் 2025 - இன்றைய வானிலை
அடுத்த நாட்களிலும் மழையுடனான வானிலை தொடரும்; வானிலை ஆராய்ச்சி மத்திய நிலையம் Published By: Vishnu 23 Nov, 2025 | 06:27 PM ( இராஜதுரை ஹஷான்) நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் சில நாட்களுக்கும் தொடரும். அவதானத்துடன் செயற்படுமாறு வானிலை ஆராய்ச்சி மத்திய நிலையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, வடமேல், வடக்கு மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/231232
-
யாழ்ப்பாணத்தில் முதல் உள்ளக விளையாட்டரங்க கட்டுமானம் ஆரம்பம்
Published By: Vishnu 23 Nov, 2025 | 08:11 PM யாழ்ப்பாண மாவட்டத்தில் முதல் உள்ளக விளையாட்டரங்கின் கட்டுமானப் பணிகள் இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே அவர்களின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 23) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் மற்றும் பாராளுமன்ற சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் கே. இளங்குமரன், விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வி.பிரேமச்சந்திரன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் கலந்துகொண்டனர். இந்தச் செய்தியை உங்கள் ஊடகங்கள் மூலம் ஒளிபரப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் ஆதரவுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டுள்ளோம். இந்நிகழ்வு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/231234
-
வடக்கில் மாவீரர் துயிலும் இல்லங்கள் இம்மாத இறுதிக்குள் விடுவிக்கப்படலாம் - அமைச்சர் சந்திரசேகரன் நம்பிக்கை!
Published By: Vishnu 23 Nov, 2025 | 06:47 PM வடக்கில் பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டுக்குள் காணப்படுகின்ற சில மாவீரர் துயிலும் இல்லங்களை இம்மாத இறுதிக்குள் விடுவிப்பதற்கான சாத்திய கூறுகள் தென்படுவதாக யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டை குட்டிச் சுவராக்கிய வாங்குரோத்து அரசியல்வாதிகள் இணைந்து ஆட்சியைக் கலைக்கப்போவதாக கூக்குரல் இட்டு வருகின்றனர். நாட்டை 70 வருட காலத்துக்கு மேலாக சீரழித்த வரலாற்றை எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மாற்றி அனைத்து இன மத மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய ஒரு தாய் நாட்டைக் கட்டி எழுப்பி வருகிறோம். கடந்த காலங்களில் குடும்பமாக நாட்டை சூறையாடியவர்கள் துரத்தப்பட்ட நிலையில் நேர்மையான ஒரு அரசியல் கலாச்சாரத்தை எமது அரசாங்கம் முன்னெடுத்து வருவதை சகித்துக் கொள்ள முடியாத கூட்டம் இனவாதத்தை தூண்ட முனைகிறது. எமது அரசாங்கம் தமிழ் மக்கள் யுத்தத்தில் இறந்த மாவீரர்களை நினைவு கூறுவதற்கு எந்த தடையும் ஏற்படுத்தவில்லை . கடந்த காலங்களில் நினைவிடங்கள் உடைக்கப்பட்ட, கொடிகள் அறுத்தெறியப்பட்ட வரலாறுகளையும் மாற்றி பூரணமாக நினைவு கூரும் உரிமையை வழங்கியது எமது அரசாங்கமே. நாட்டின் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பாதுகாப்பு தரப்பிடம் இருக்கின்ற துயிலும் இல்லங்களை விடுவிப்பதற்கான அறிவுறுத்தல்களை பாதுகாப்பு அமைச்சுக்கு ஏற்கனவே வழங்கியுள்ளார். அதன் அடிப்படையில் இம்மாத இறுதிக்குள் சில துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்படலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதேபோல வடக்கில் காணி விடுவிப்புகள் திட்டமிட்டபடி படிப்படியாக இடம்பெறும். அதில் விதமான தயக்கமும் இல்லை. அண்மையில் வன்னி நிலப்பரப்பில் இராணுவத்திடம் இருந்த ஒரு பகுதி காணி விக்கப்பட்ட நிலையில் அதனை உரியவர்களுக்கு வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக அறிகிறேன். எமது அரசாங்கம் நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப் பிரச்சனைக்கான தீர்வினை காண்பதற்காக புதிய அரசியலமைப்பு தொடர்பில் கவனம் செலுத்தி வருகிறது. அதைப் பொறுக்க முடியாத சிலர் தெற்கிலும் வடக்கிலும் இருக்கின்ற நிலையில் அவர்கள் ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நினைப்பில் இருக்கிறார்கள். அண்மையில் திருகோணமலையில் ஏற்படுத்தப்பட்ட குழப்பங்களுக்கு பின்னால் இனவாத சக்திகளின் செயற்பாடுகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகிய உள்ளது. இவர்களின் நோக்கம் மக்களை வாழவைப்பது அல்ல தமது அரசியல் இருப்புக்களை தக்கவைத்துக் கொண்டு நாட்டை சூறையாடுவதே நோக்கம். இதை நான் விளாவரையாக கூற வேண்டிய தேவையில்லை. கடந்த காலங்களில் நாட்டை எப்படி ரணில் ராஜபக்சர்கள் சூறையாடினார்கள் என்பது நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும். ஆகவே எமது அரசாங்கத்தை வீழ்த்துவதாக கூறிக்கொண்டு இனங்களுக்கு இடையில் முறுகல் நிலையை தோற்றுவிப்பதற்கு வங்குரோத்து அரசியல்வாதிகள் பலவிதமான செயற்பாடுகளை செய்வார்கள். மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/231233
-
இந்தியா - தென் ஆபிரிக்கா கிரிக்கெட் தொடர்
முத்துசாமி சதம், யான்சன் அரைசதம்; வலுவான நிலையில் தென்னாப்பிரிக்கா பட மூலாதாரம், Getty Images இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இரண்டாம் நாள் உணவு இடைவேளையின்போது 428/7 என்ற வலுவான நிலையில் இருக்கிறது தென்னாப்பிரிக்க அணி. அந்த அணியின் செனுரன் முத்துசாமி சதமடித்து விளையாடிக்கொண்டிருக்கிறார். 247/6 என்ற ஸ்கோரில் இருந்து இரண்டாவது நாள் ஆட்டத்தைத் தொடங்கிய தென்னாப்பிரிக்காவின் முத்துசாமி, வெரெய்னே இருவரும் நிதானமாக ஆடி விக்கெட்டே இழக்காமல் முதல் செஷனைக் கடந்தனர். இரண்டாவது செஷனில் ஜடேஜா பந்துவீச்சில் வெரெய்ன் ஸ்டம்பிங் செய்யப்பட்டு 45 ரன்களோடு வெளியேறினார். ஆனால், அதன்பிறகு களமிறங்கிய ஆல்ரவுண்டர் மார்கோ யான்சன் அதிரடியாக விளையாடி வேகமாக ரன் சேர்த்தார். அவர் 53 பந்துகளில் அரைசதம் கடந்தார். இவர் அதிரடி ஒருபக்கம் இருக்க, நிதானமாகவும் உறுதியாகவும் விளையாடிய செனுரன் முத்துசாமி, தன் முதல் டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்தார். இவர் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர். இரண்டாவது செஷன் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 428/7 என்ற நிலையில் இருக்கிறது. முத்துசாமி 107 ரன்களுடனும், யான்சன் 51 ரன்களுடனும் களத்தில் இருக்கிறார்கள். இன்று இதுவரை வீசப்பட்ட 55.1 ஓவர்களில் இந்தியா 1 விக்கெட்டை மட்டுமே வீழ்த்தியிருக்கிறது. https://www.bbc.com/tamil/live/c7v8pjqg0n7t?post=asset%3A94f7d311-6cfd-4f66-bcd1-3c4b4d6a63f7#asset:94f7d311-6cfd-4f66-bcd1-3c4b4d6a63f7 2nd Test, Guwahati, November 22 - 26, 2025, South Africa tour of India Toss:- South Africa, elected to bat first South Africa 489 India (6.1 ov) 9/0 Day 2 - India trail by 480 runs. Current RR: 1.45
-
யாழ். புகையிரத நிலையத்தில் இருந்து காரைநகருக்கு பஸ் சேவை ஆரம்பம்
அண்ணை, 782 வழித்தடம்(யாழ் - மானிப்பாய் - சங்கானை - சுழிபுரம் - காரைநகர்) காலையில் செல்ல உள்ளதாம், மாலை சேவையை உறுதிப்படுத்த முடியவில்லை.
-
நுண்நிதி, கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை பற்றிய வரைபு ஆவணம்
நுண்நிதி, கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை பற்றிய வரைபு ஆவணம் : அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உப குழு, பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் இணைந்து கலந்துரையாடல் 23 Nov, 2025 | 05:10 PM (நமது நிருபர்) அமைச்சரவையின் அனுமதியை அடுத்து பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்படவுள்ள நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை பற்றிய வரைபு ஆவணம் தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, நுண்நிதிக் கடன் வழங்கல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான எதிர் கால நடவடிக்கைகள் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உப குழு மற்றும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் இணைந்து விரிவாகக் கலந்துரையாடினர். அந்தக் குழுக்களின் தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) லக்மாலி ஹேமசந்திர மற்றும் சமன்மலீ குணசிங்க ஆகியோரின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டத்தில் இலங்கை மத்திய வங்கி மற்றும் திறைசேரியின் நீதி அலுவல்கள் திணைக்களத்தின் அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர். இங்கு கருத்துத் தெரிவித்த அதிகாரிகள், இந்த உத்தேச சட்டமூலம் தொடர்பான முதலாவது சட்டமூலம் 2024 ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்டதாகத் தெரிவித்தனர். அதன்போது, சட்டமூலம் மீது உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கமைய உயர் நீதிமன்றத்தினால் உள்வாங்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்ட திருத்தங்கள், சட்டமூலத்தின் குழு நிலையின் போது மேற்கொள்ளப்படுவதாக நிதி அமைச்சினால் உயர் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்ட திருத்தங்கள் மற்றும் கொள்கை ரீதியாக உள்வாங்கப்படவேண்டிய ஏனைய திருத்தங்கள் சேர்க்கப்பட்டு புதிய சட்டமூலம் வரைபு செய்யப்பட்டு வர்த்தமானி தயாரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். அதற்கமைய, இந்தச் சட்டமூலத்தை பத்தாவது பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக அந்த அதிகாரிகள் குறிப்பிட்டனர். அதற்கமைய, இந்தச் சட்டமூலத்தின் ஊடாக இலங்கை நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையை நிறுவுதல், பணக் கடன் வழங்கும் தொழில் மற்றும் நுண்நிதித் தொழில் என்பவற்றை ஒழுங்குபடுத்தல், அவற்றின் வாடிக்கையாளர்களுக்குப் பாதுகாப்பை வழங்குதல் மற்றும் 2016 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க நுண்நிதியளிப்புச் சட்டத்தை நீக்குவதற்கும் எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் பணிப்பாளர்கள் சபையின் அமைப்பு தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், பணிப்பாளர்கள் சபையின் அமைப்பில் நுண்நிதித் தொழில் வாடிக்கையாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உறுப்பினர் ஒருவர் உள்வாங்கப்படாமை பிரச்சினைக்குரியது என பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமசந்திர சுட்டிக்காட்டினார். விசேடமாக நுண்நிதித் தொழிற்துறைக்கு ஒழுங்குபடுத்தல் இல்லாததால் பெண்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஒருவர் இருப்பதன் முக்கியத்துவத்தை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். அதற்கமைய, பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழு அல்லது மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் பிரதிநிதி ஒருவர் அல்லது அந்த விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சின் செயலாளர் இந்தப் பணிப்பாளர் சபையில் அங்கத்தவராக இருப்பது பொருத்தமாகும் என கௌரவ உறுப்பினர்களின் கருத்தாக இருந்தது. அத்துடன், இந்த வரைபு ஆவணத்தில் உள்ளடங்கப்பட்டுள்ள ஏனைய விடயங்கள் தொடர்பிலும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், எந்தவொரு ஒழுங்குபடுத்தலும் இன்றி நுண்நிதித் தொழிற்துறை கீழ் மட்டத்தில் செயற்படுவதால் பாரியதொரு சமூக நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய குழு, அந்த சமூக நெருக்கடியையும் பாதிப்பையும் தவிர்ப்பதே இதன் குறிக்கோளாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியது. அதற்கமைய, எதிர்வரும் காலத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ள சட்டமூலத்துக்குத் தேவையான திருத்தங்களை உள்வாங்குமாறு அதிகாரிகளுக்குக் குழு அறிவுறுத்தியதுடன், சம்பந்தப்பட்ட திருத்தங்களை சட்டமூலத்தின் குழு நிலையின் போது முன்வைக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர்கள், பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் அங்கத்தவர்கள், நுண்நிதிக் கடன் வழங்கல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான எதிர் கால நடவடிக்கைகள் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உப குழு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் சிலரும் கலந்துக்கொண்டனர். https://www.virakesari.lk/article/231229
-
கார்த்திகை வாசம் மலர்க்கண்காட்சி கிட்டு பூங்காவில் வெள்ளிக்கிழமை ஆரம்பம் - தொல். திருமாவளவன் பங்கேற்பு
கார்த்திகை வாசம் மலர்க்கண்காட்சியில் கார்த்திகை மலரே...!; இசைப்பாடல் வெளியீடு 23 Nov, 2025 | 04:22 PM (எம்.நியூட்டன்) நல்லூர் கிட்டு பூங்காவில் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டுத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ஏற்பாடு செய்துள்ள 'கார்த்திகை வாசம்' மலர்க்கண்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை (23) 'கார்த்திகை மலரே!' என்ற இசைப்பாடல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் இசைப்பாடலை வெளியீடு செய்ய சிரேஷ்ட இசையமைப்பாளர் க. சத்தியன் பெற்றுக்கொண்டார். தமிழகத்தின் பாடலாசிரியர் யுகபாரதி எழுதிய ''கார்த்திகை மலரே! மலர்வாயா? எங்கள் காத்திருப்பை நீ அறிவாயா?, கல்லறை சேர்ந்த ஈகியர்கள் கண்ட கனவினைக் கண்ணில் தருவாயா?'' என்று தொடங்கும் பாடலை ஈழத்தின் பாடகி ஜெயபாரதி பாடியுள்ளார். பூவன் மதீசன் இசையில் உருவான இப்பாடலின் ஒலிப்பதிவை மதி மனு மேற்கொண்டுள்ளார். தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தயாரிப்பான கார்த்திகை மலரே! என்ற இந்த இசைப்பாடலை பாடல் வரிகளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளாமல் எவரும் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/231225
-
மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் நவம்பர் 21 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்படும் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
மீனவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு - கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே Published By: Digital Desk 3 23 Nov, 2025 | 01:11 PM மீன்பிடித்தொழில்துறையை கட்டியெழுப்புவதற்காக 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துறையை மேம்படுத்துவதற்குரிய எமது வேலைத்திட்டங்கள் சிறப்பாக முன்னெடுக்கப்படும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்தார். அக்வா பிளான்ட் இலங்கை - 2025 சர்வதேச மீன்வள கண்காட்சி நேற்று (21) கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமானது. கண்காட்சியின் 2ஆம் நாள் நிகழ்வான இன்று (22) விவசாயத்துறை அமைச்சர் லால்காந்த பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார். நிகழ்வின் போது, சீரற்ற காலநிலை உட்பட இயற்கை அனர்த்தங்களால் மீனவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பதிவாகி இருந்தன. இந்நிலையில் இவற்றை தடுப்பதற்குரிய விடயங்கள் பற்றி ஆராய்வதற்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனால் குழுவொன்று அமைக்கப்பட்டிருந்தது. மேற்படி குழுவின் அறிக்கையும் அமைச்சரிடம் இன்று கையளிக்கப்பட்டது. மீன்பிடி கைத்தொழிலின்போது எவ்வித குற்றமும் இழைக்காத, சட்டத்திட்டங்களின்போது செயல்பட்ட மாத்தறை, தங்கலை, காலி ஆகிய பகுதி மீனவர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது. மேற்படி இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் கிஹான், தர்மபிரிய திசாநாயக்க, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் டாக்டர். பீ.கே.கோலித்த கமல் ஜினதாச, கடற்றொழில் மற்றும் கடல்வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ். ஜே. கஹாவத்தே, அமைச்சின் அதிகாரிகள், வெளிநாட்டு பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டுள்ளனர். இந்நிகழ்வில் உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “மீனவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. எமது அமைச்சின் 25 வருடகாலம் சேவையாற்றியவர்களுக்குரிய கௌரவிப்பும் இடம்பெற்றது. கடல்சார் சட்டங்களை முறையாக பின்பற்றி செயல்படும் கடற்றொழிலாளர்களும் கௌரவிக்கப்பட்டனர். அனைத்து தரப்பினரதும் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த கண்காட்சி அமைந்துள்ளது. மீன்பிடி தொழில்துறையென்பது கடல் மற்றும் ஆறுகளுக்கு சென்று மீன்பிடிப்பது மட்டும் அல்ல. அதனை சார்ந்து பல விடயங்கள் உள்ளன. எனவே, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் அது பற்றி கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மீன்பிடித்துறையைக் கட்டியெழுப்புவதற்காக வரவு- செலவுத் திட்டத்தில் 10.6 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரவு- செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின்போது மேலும் இரண்டு பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது. மீன்பிடி துறைமுகங்களை கட்டியெழுப்புவதற்கும் நிதி ஒதுக்கீடு இடம்பெற்றுள்ளது. இதற்கமைய மீன்பிடி கைத்தொழில்துறையை கட்டியெழுப்புவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உற்பத்தி பொருளாதாரத்தை மேம்படுத்துவதே எமது இலக்காகும். அதற்கமைய மீன்பிடித்தொழில்துறையும் நவீனமயப்படுத்தப்படும். மீனவ குடும்பங்களை நாம் நேரில் சந்தித்து கலந்துரையாடி, பிரச்சினைகளைத் தீர்த்து வருகின்றோம். மீன்பிடி தொழில்துறை மூலம் எமது நாட்டு பொருளாதாரத்துக்கு பங்களிப்பு வழங்க வேண்டும். அந்திய செலாவணியை பெறுவதற்கு வழிசமைக்க வேண்டும். அதற்குரிய பங்களிப்பை நாம் வழங்க வேண்டும். ” என்றார். https://www.virakesari.lk/article/231198
-
முதலாவது பார்வையற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடர்
பார்வையற்றோர் மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி- கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, முதல் பார்வையற்றோர் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப் போட்டி கொழும்புவில் நடைபெற்றது. பார்வையற்றோருக்கான மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நேபாளத்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. வெற்றியைத் தொடர்ந்து பேசிய இந்திய அணியின் கேப்டன் தீபிகா டி.சி., "நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம். எங்கள் அணியை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறோம், இது மிகப்பெரிய வெற்றி. இதற்காக நாங்கள் அனைவரும் மிகவும் கடினமாக உழைத்தோம். இது மிகவும் வலுவான அணி" என்று கூறினார். கொழும்புவில் நடைபெற்ற முதல் மகளிர் பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் இந்தியா ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த நேபாளம் 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சரிதா கிமிரே அதிகபட்சமாக 35 (ஆட்டமிழக்காமல்) ரன்களும், பிம்லா ராய் 26 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி 12.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 117 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்தியா சார்பாக கருணா கே அதிகபட்சமாக 27 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார், ஃபுலா சரென் 27 பந்துகளில் 4 பவுண்டரிகள் உட்பட ஆட்டமிழக்காமல் 44 ரன்கள் எடுத்தார். https://www.bbc.com/tamil/live/c7v8pjqg0n7t?post=asset%3A3fb9112c-212e-4105-b167-21b5002c948a#asset:3fb9112c-212e-4105-b167-21b5002c948a
-
யாழ். புகையிரத நிலையத்தில் இருந்து காரைநகருக்கு பஸ் சேவை ஆரம்பம்
23 Nov, 2025 | 04:43 PM (எம்.நியூட்டன்) யாழ். புகையிரத நிலையத்தில் இருந்து காரைநகருக்கு இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் போக்குவரத்து சேவை திங்கட்கிழமை (24) முதல் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் அதிகாலை 5.00 மணிக்கும் மாலை 7:00 மணிக்கும் ஆகிய இரண்டு நேரம் இ.போ.ச பஸ் சேவை நடைபெறவுள்ளது. பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இபோச முகாமையாளர் ,வடக்கு மாகாண ஆளுநர் , புகையிரத நிலைய அதிபர் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடலுக்கு அமைவாக இந்த சேவை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/231226
-
தமிழீழத் தேசியக்கொடியை அங்கீகரித்த கனடா- பிரம்டன் நகரசபை!
இனவழிப்பு நிகழவில்லை எனச் சித்தரிக்க விரும்புபவர்கள் கொழும்பு திரும்புங்கள்; தமிழீழத் தேசியக்கொடி தின நிகழ்வில் பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன் உரை 23 Nov, 2025 | 11:54 AM (நா.தனுஜா) இலங்கையில் இனவழிப்பு இடம்பெற்றது என்ற உண்மையை அங்கீகரிப்பதற்கு எந்தவொரு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அதனை இலங்கை உயர்ஸ்தானிகரகம் எதிர்க்கின்றது. இலங்கையில் இனவழிப்பே இடம்பெறவில்லை என்பது போல் சித்தரிப்பதற்கும், வரலாற்றை அழிப்பதற்கும், தமிழர்களின் குரல்களை ஒடுக்குவதற்கும் விரும்புபவர்கள் கொழும்புக்கே திரும்பிச்சென்றுவிடலாமென பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார். கனடாவின் பிரம்டன் நகரம் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலிக்கொடியை அங்கீகரித்திருப்பதுடன் அதற்கான பிரகடனத்தை பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்துள்ளார். அதற்கமைய நவம்பர் மாதம் 21 ஆம் திகதி தமிழீழத் தேசியக்கொடி நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி உலகத்தமிழர் உரிமைக்குரல் அமைப்பினால் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பிரம்டன் நகரில் நடாத்தப்பட்ட தமிழீழத் தேசியக்கொடி நாள் நிகழ்வில் கலந்துகொண்ட பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன் உரை நிகழ்த்தியதன் பின்னர் புலிக்கொடியை ஏற்றிவைத்தார். அவர் தனது உரையில் சுட்டிக்காட்டிய விடயங்கள் வருமாறு: தமிழ் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுக்கும், அவர்களது குரல்கள் நசுக்கப்படுவதற்கும் மத்தியில் பிரம்டன் நகரம் தமிழ் மக்களுடன் உடன்நிற்கின்றது. தமிழர்கள் அவர்களது அன்புக்குரியவர்களை இழந்தனர். துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்டதுடன் பல்வேறு வகையிலும் உயிரச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்தனர். இலங்கையில் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பு, நாம் வாழும் காலத்தில் பதிவான மிகமோசமான மனிதப்பேரவலமாகும். ஆனால் இலங்கையில் இனவழிப்பு இடம்பெற்றது என்ற உண்மையை அழிப்பதற்கான பல்வேறு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறானதொரு பின்னணியில் இந்தத் தமிழீழக்கொடி ஏற்றப்படுவதானது தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பு தொடர்பான உண்மைகள், அவர்களது கலாசாரம், அடையாளங்கள் என்பன அழிக்கப்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது என்பதைக் காண்பிக்கும் குறியீடாகும். அதேபோன்று உள்ளக விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீடுகள் குறித்துப் பேசப்படுகின்றது. ஆனால் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற இனவழிப்பை மூடிமறைப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகள் பற்றியே போதியளவு பேசப்படவேண்டும். இந்த இனவழிப்புக் குற்றங்களுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அதிலிருந்து தப்பிவிடலாம் எனக் கருதினால், அவ்வாறு தப்பிக்க முடியாது என்பதே சர்வதேச சமூகம் கூறுகின்ற பதிலாகும். எமது நகரில் தமிழின அழிப்பு நினைவுத்தூபி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதற்கு எதிராக அரசாங்கத்தின் (இலங்கை) அடிவருடிகள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்தகைய செயற்பாடுகள் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவையாகும். அதுமாத்திரமன்றி இலங்கையில் இனவழிப்பு இடம்பெற்றது என்ற உண்மையை அங்கீகரிப்பதற்கு எந்தவொரு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அதனை இலங்கை உயர்ஸ்தானிகரகம் எதிர்க்கின்றது. இலங்கையில் இனவழிப்பே இடம்பெறவில்லை . என்பது போல் சித்தரிப்பதற்கும், வரலாற்றை அழிப்பதற்கும், தமிழர்களின் குரல்களை ஒடுக்குவதற்கும் விரும்புபவர்கள் கொழும்புக்கே திரும்பிச்சென்றுவிடலாம். அதேவேளை தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரம், தமிழின அழிப்பு நினைவுத்தூபி, தமிழீழத் தேசியக்கொடிக்கான அங்கீகாரம் என்பன உள்ளடங்கலாக இவ்விடயத்தில் எட்டப்பட்டிருக்கும் கணிசமாளனவு முன்னேற்றம் வரவேற்கத்தக்கதாகும். இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் தமிழர் விவகாரம் பலரது அவதானத்தைப் பெறும். அத்தோடு வலிமையுடனும், மீண்டெழும் தன்மையுடனும் தொடர்ந்து குரல் எழுப்பும் பிரம்டன் மற்றும் கனேடிய தமிழ் மக்கள் குறித்துப் பெருமையடைவதுடன் நாம் தமிழீழ மக்களுடன் என்றும் உடன்நிற்போம் என்றார். https://www.virakesari.lk/article/231186
-
மாகாணசபை முறைமையை பதிலீடு செய்வது குறித்து அரசாங்கம் ஆலோசனை; டில்வினின் இந்திய விஜயத்தின்போது இதுகுறித்தும் பேசப்படும் சாத்தியம்
23 Nov, 2025 | 11:55 AM (நா.தனுஜா) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பிறிதொரு முறைமையின் ஊடாக மாகாணசபை முறைமையைப் பதிலீடு செய்வது குறித்து ஆலோசித்துவருவதாகவும், வெகுவிரைவில் இடம்பெறவுள்ள டில்வின் சில்வாவின் இந்திய விஜயத்தின்போது இதுகுறித்து கலந்துரையாடப்படும் சாத்தியம் காணப்படுவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகின்றது. நீண்டகாலமாக நடாத்தப்படாமல் நிலுவையில் இருக்கும் மாகாணசபைத்தேர்தல்கள் ஒரு வருடகாலத்துக்குள் நடாத்தப்படும் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்த போதிலும், அவ்வாக்குறுதி இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. தமிழரசுக்கட்சியுடன் கடந்த வாரம் இடம்பெற்ற சந்திப்பிலும் இதுகுறித்து ஜனாதிபதி உத்தரவாதமாக எதனையும் கூறவில்லை. இவ்வாறானதொரு பின்னணியில் பிறிதொரு முறைமையின் ஊடாக மாகாணசபை முறைமையைப் பதிலீடு செய்வது குறித்து அரசாங்கம் ஆலோசனை செய்துவருவதாக அறியமுடிகின்றது. குறிப்பாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வாவின் இந்திய விஜயம் வெகுவிரைவில் இடம்பெறவுள்ளது. இவ்விஜயத்தின்போது மாகாணசபை முறைமையைப் பதிலீடு செய்வது குறித்தும் கலந்துரையாடப்படும் என எதிர்பார்ப்பதாக இதுபற்றி அறிந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். அதேபோன்று இனிவரும் நாட்களில் மாகாணசபைகள் மற்றும் அதிகாரப்பகிர்வு குறித்துப் பேசுவதில் அர்த்தமில்லை எனவும், அதனைப் பதிலீடு செய்யக்கூடிய மாற்றுவழிகள் குறித்துச் சிந்திக்குமாறும் அரசாங்கத்துக்கு நெருக்கமான செயற்பாட்டாளர் ஒருவர் தன்னிடம் கூறியதாக சிவில் சமூகப்பிரதிநிதி ஒருவர் குறிப்பிட்டார். எனவே மாகாணசபைத்தேர்தலை நடாத்துவதற்கான காலவரையறை எதனையும் அரசாங்கம் வெளியிடாத நிலையில், ஜனாதிபதி உத்தரவாதம் அளித்ததன் பிரகாரம் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளின்போது மாகாணசபை முறைமையை பதிலீடு செய்வது குறித்தும் ஆராயப்படக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/231190
-
திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார் ஜீவன் தொண்டமான்!
திருமண பந்தத்தில் இணைந்தார் ஜீவன் தொண்டமான் எம்.பி Published By: Digital Desk 3 23 Nov, 2025 | 05:18 PM இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் திருமணம் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) இந்தியாவில், தமிழ்நாடு, திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை வீதியில் அமைந்துள்ள ஆறுமுகம்பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்தியா, தமிழ்நாடு மாநிலம் திருப்பத்தூரைச் சேர்ந்த சீதை ஸ்ரீ நாச்சியார் என்ற மணமகளை கரம்பிடித்து திருமண பந்தத்தில் இனைந்துக்கொண்டார். இத்திருமண நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது துணைவியார் பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க கலந்துக்கொண்டனர். மேலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், இ.தொ.காவின் தவிசாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ரமேஸ்வரன் மற்றும் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும், இந்தியாவின் அரசியல், சினிமா மற்றும் வர்த்தகத் துறையைச் சேர்ந்த பிரமுகர்கள் ஆகியோர்களுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். https://www.virakesari.lk/article/231195
-
அவுஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியைத் தாக்கியது "ஃபினா" சூறாவளி; ஆயிரக்கணக்கானோருக்கு மின்சாரத் தடை
அவுஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியைத் தாக்கியது ஃபினா சூறாவளி ; ஆயிரக்கணக்கானோருக்கு மின்சாரத் தடை Published By: Digital Desk 3 23 Nov, 2025 | 04:19 PM அவுஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் சனிக்கிழமை இரவு முழுவதும் வெப்பமண்டல ஃபினா சூறாவளி கடுமையாக தாக்கியதால் மரங்கள், போக்குவரத்து மின் விளக்குகள் வீழ்ந்து ஆயிரக்கணக்கானோருக்கு மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது. அத்தோடு, சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் குடியிருப்பாளர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. அவுஸ்திரேலியாவின் வடக்குப் பிராந்தியத்தின் கரையோரம் பல நாட்கள் நீடித்த வெப்பமண்டல சூறாவளி ஃபினா, 3 ஆம் வகை சூறாவளியாக வேகமாக வலுவடைந்ததன் பின்னர் பல நாட்கள் நீடித்துள்ளது. சனிக்கிழமை இரவு, பரபரப்பான டார்வின் நகருக்கும், கடற்கரையிலிருந்து சுமார் 80 கிலோ மீற்றர் (50 மைல்) தொலைவில் உள்ள திவி தீவுகளுக்கும் இடையில் சூறாவளி வீசியுள்ளது. அங்கு மணிக்கு 110 கிலோ மீற்றர் (70 மைல்) வேகத்தில் காற்று வீசியுள்ளது. சூறாவளியின் "மிகவும் அழிவுகரமான மையம்" வடக்குப் பிராந்தியத்திிலருந்து நகர்ந்து விட்டது, ஆனால் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை மற்றும் காற்று நீடிக்கும் என வானிலை ஆய்வு மைய முன்னறிவிப்பாளர் அங்கஸ் ஹைன்ஸ் தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 19,000 வீடுகள் மற்றும் வணிக செயற்பாடுகளுக்கு மின்சாரம் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது. மின்சாரத்தை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வட பிராந்தி ஆளுநர் லியா ஃபினோச்சியாரோ தெரிவித்துள்ளார். சூறாவளியினால் பாரிய மரங்கள் வீதியில் சரிந்து வீழ்ந்துள்ளன. வைத்தியசாலை ஒன்றின் கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. மரங்கள் மற்றும் மின்கம்பிகள் வீழ்ந்து கிடப்பதால் பொதுமக்கள் நகர்ந்து செல்லும்போது கவனமாக இருக்குமாறும் அவர் மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போது ஃபினா சூறாவளி மேற்கு அவுஸ்திரேலியாவை நோக்கி நகர்ந்து வருகிறது, மேலும் இது 4-வது வகை சூறாவளியாக வலுவடையக்கூடும் என கணிப்புகள் கூறுகின்றன. ஆனால் ஞாயிற்றுக்கிழமை சூறாவளி கரையைக் கடக்க வாய்ப்பில்லை எனவும், வரும் நாட்களில் அது படிப்படியாக நகர்ந்து விடும் என வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காலநிலை மாற்றம் காட்டுத்தீ, வெள்ளப்பெருக்கு மற்றும் சூறாவளி போன்ற இயற்கை அனர்த்தங்கள் அபாயத்தை அதிகரிக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றான 1974 ஆம் ஆண்டு நத்தார் தினத்தன்று 66 பேரைக் கொன்ற டிரேசி சூறாவளியின் வேதனையான நினைவுகளை டார்வினில் வசிக்கும் சுமார் 140,000 பேருக்கு ஃபினா சூறாவளி மீண்டும் கொண்டு வந்துள்ளது. https://www.virakesari.lk/article/231219
-
இலங்கையில் சீன மின்சார பேருந்து திட்டம்
Published By: Digital Desk 3 23 Nov, 2025 | 11:12 AM (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கைக்கு மின்சாரப் பேருந்துகளை வழங்குவதற்கான உதவித் திட்டத்தை சீனா பரிசீலித்து வருவதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஷென்ஹோங்(Qi Zhenhong) தெரிவித்தார். இந்தத் திட்டம் குறித்த செய்தி, இரு நாடுகளின் ஒத்துழைப்பில் ஒரு புதிய சகாப்தத்தை குறிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் இறக்குமதிக்காக வெளிநாட்டுச் செலாவணியை நம்பியிருக்கும் இலங்கை, கடந்த காலத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி, பெட்ரோல் மற்றும் டீசலுக்கான தட்டுப்பாட்டை சந்தித்தது. இதனால் பொதுப் போக்குவரத்து மற்றும் மக்களின் தினசரி வாழ்க்கை வெகுவாகப் பாதித்தது. மின்சாரப் பேருந்துகளுக்கு மாறுவது, எரிபொருள் இறக்குமதியைக் குறைப்பதுடன், கொழும்பு போன்ற நகரங்களில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் உதவும். ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் போன்ற நிறுவனங்களின் ஆதரவுடன் மின்சார வாகனங்களுக்கான சோதனைத் திட்டங்கள் ஏற்கனவே இலங்கையில் நடந்து வருகின்றன. சமீபத்திய ஆண்டுகளில், மத்திய அதிவேக நெடுஞ்சாலைப் பணிகள், சினோபெக் எரிசக்தித் திட்டம் போன்ற சீன ஆதரவுடைய வளர்ச்சித் திட்டங்களில் இலங்கை சீரான முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்த மின்சாரப் பேருந்துத் திட்டம், இந்த நீண்டகாலப் பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்தும் ஒரு முயற்சியாக உள்ளது. மறுபுறம் இந்த திட்டத்திற்கான அறிவிப்பு, கொழும்பில் நடைபெற்ற இலங்கை மாணவர்களுக்கான சீனாவின் பயிற்சிகளில் பங்கேற்கும் மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் வெளியிடப்பட்டது. நிர்வாகம், விவசாயம், சுகாதாரம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட 17 முக்கியப் பகுதிகளில் இதுவரை கிட்டத்தட்ட 1,000 இலங்கையர்களுக்கு சீனா பயிற்சி அளித்துள்ளது. இந்த மின்சாரப் பேருந்துத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், அது இலங்கையின் போக்குவரத்துத் துறையில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும். டீசல் பேருந்துகளுக்குப் பதிலாக மின்சாரப் பேருந்துகள் பயன்படுத்தப்படுவதால், கார்பன் உதவும். எரிபொருள் விலையின் நிலையற்ற தன்மையிலிருந்து இலங்கையின் பொதுப் போக்குவரத்துச் சேவையை இந்தத் திட்டம் விடுவிக்கும் என்று குறிப்பிடப்படுகின்றது. https://www.virakesari.lk/article/231182
-
நவம்பர் 2025 - இன்றைய வானிலை
இன்று பல இடங்களில் 100 மி.மீ கன மழை! Nov 23, 2025 - 06:11 AM நாடு முழுவதும் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல், வடக்கு மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் சில இடங்களில் சுமார் 75 மி.மீ. அளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். https://adaderanatamil.lk/news/cmiazt5ib01w3o29nzsv2zx06
-
கரூர் துயரத்துக்கு பின் முதல் நிகழ்ச்சி.. காஞ்சிபுரத்தில் நாளை விஜய் ‘சந்திப்பு’!
கரூர் சம்பவத்துக்கு பிறகு முதல் மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் விஜய் பேசியது என்ன? பட மூலாதாரம், TVK 23 நவம்பர் 2025, 08:18 GMT புதுப்பிக்கப்பட்டது 24 நிமிடங்களுக்கு முன்னர் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (நவ. 23) நடைபெற்றது. இதில் பேசிய விஜய், தாங்கள் ஆட்சிக்கு வரும்போது செய்ய விரும்பும் விஷயங்கள் என்ன என்பதைக் குறிப்பிட்டார். மேலும், தங்கள் ஆதரவாளர்கள் மீதான விமர்சனத்துக்கும் அவர் பதிலளித்துள்ளார். மேலும், திமுக மீது பல்வேறு விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார். அதுகுறித்து பதிலளித்த திமுக மூத்த தலைவர் டிகேஎஸ் இளங்கோவன், "திமுகவை குறை சொல்வதற்கு விஜய்க்கு தகுதி இல்லை" என்றார். விஜயின் குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்தார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பிறகு டிசம்பர் 4 அன்று சேலம் மாவட்டத்தில் விஜய் பங்கேற்கும் பரப்புரைக் கூட்டத்திற்கு அனுமதி கோரி காவல்துறையில் மனு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், தவெக தரப்பில் அளிக்கப்பட்ட மனுவை கவனமாகப் பரிசீலித்ததாகக் கூறியுள்ள டவுன் சரக காவல் உதவி ஆணையாளர் சரவணன், சில காரணங்களால் அனுமதி மறுக்கப்படுவதாக கடிதம் மூலம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சுமார் 2,000 பேர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சியில் மக்களை சந்தித்த விஜய், காஞ்சி மக்களின் பிரச்னைகளைப் பற்றிப் பேசி தன் உரையைத் தொடங்கினார். "வாலாஜாபத் அருகே உள்ள அவலூர் ஏரி பாலாறை விட உயரமாக இருப்பதால் ஆற்றுத் தண்ணீர் ஏரிக்குப் போக முடியவில்லை. தடுப்பணை கட்டுவதன் மூலம் விவசாயம் சிறப்பாக நடக்கும். இதற்காக எத்தனை ஆண்டு மக்கள் போராட வேண்டும்?" என்று விஜய் கேள்வியெழுப்பினார். மேலும், "பரந்தூர் விமான நிலையப் பிரச்னையில் நாங்கள் விவசாயிகளின் பக்கம் மட்டுமே நிற்போம்" என்று கூறிய அவர், புகழ்பெற்ற காஞ்சிப் பட்டு நெய்பவர்களின் நிலை மோசமாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். 60 ஆண்டுகளாக காஞ்சிபுரம் பேருந்து நிலையம் புதுப்பிக்கப்படாமல் இருப்பதையும் விமர்சித்த அவர், அரசால் அதற்கு ஒரு இடத்தை ஒதுக்க முடியாதா என்ற கேள்வியையும் எழுப்பினார். செய்ய நினைக்கும் திட்டங்கள் தவெக ஆட்சி அமைந்தால், தான் செய்ய நினைக்கும் திட்டங்கள் குறித்தும் அவர் கூறினார். "எல்லோருக்கும் நிரந்தரமான வீடு. எல்லா வீட்டுக்கும் ஒரு மோட்டார் சைக்கிள் வாகனம் உறுதியாக இருக்கும். கார் லட்சியம், அதற்கான வசதி வாய்ப்பை உண்டாக்கும் வகையில் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும். வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் குறைந்தது பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். வீட்டில் குறைந்தது ஒருவருக்கு நிரந்தர வருமானம். அதற்கான வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். அதற்கு வழிவகுக்கும் வகையில் கல்வியில் சீர்த்திருத்தம் செய்ய வேண்டும்" என பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டார். இந்தத் திட்டங்கள் எப்படி செயல்படுத்தப்படும் என்பது தவெகவின் தேர்தல் அறிக்கையில் தெளிவாக விளக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம், TVK 'தற்குறிகள் அல்ல ஆச்சர்யக்குறிகள்' தங்கள் கட்சி மீதான விமர்சனம் குறித்து பேசிய விஜய், "எம்ஜிஆர் கட்சியை ஆரம்பத்தில் இருந்தே கூத்தாடியின் கட்சி என்றுதான் சொல்கிறார்கள். ஆனால், அப்படிச் சொன்னவர்கள் அனைவரும், மக்கள் போல் எம்ஜிஆர் அவர்களோடுதானே போய்ச் சேர்ந்தார்கள். இது வரலாறு. இது நம்மைவிட அவர்களுக்கு நன்றாகவே தெரியும்" என்று கூறினார். அதுமட்டுமல்லாமல், தவெக ஆதராவளர்களைப் பொதுவெளியில் விமர்சிப்பது குறித்தும் பதிலளித்தார். "தற்குறி தற்குறி என்கிறீர்களே, இவர்களெல்லாம் ஒன்றாக சேர்ந்துதான் உங்கள் அரசியலை கேள்விக்குறியாக்கப் போகிறார்கள். இவர்களெல்லாம் தமிழ்நாட்டு அரசியலின் ஆச்சர்யக்குறி. தமிழ்நாட்டு அரசியல் மாற்றத்திற்கான அறிகுறி" என்றும் அவர் கூறினார். திமுக சொல்லும் பதில் என்ன? 'திமுகவின் கொள்கையே கொள்ளைதான்' என்றும் விஜய் தன் பேச்சில் விமர்சித்திருந்தார். அதற்கு பதில் கொடுத்த திமுக மூத்த தலைவரும் அக்கட்சி செய்தித் தொடர்பாளருமான டிகேஎஸ் இளங்கோவன், "இன்று மக்களின் முக்கிய தேவை 4 விஷயங்கள் - கல்வி, உணவு, மருத்துவம், பெண் உரிமை & பெண் பாதுகாப்பு. இது எல்லாவற்றிலும் திமுகவின் திட்டங்கள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. கொள்கைப்படி பல திட்டங்கள் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோம். திட்டங்களை நிறைவேற்றாமல் இருக்கிறோமா? கொள்கையிலிருந்து மாறுபட்டு நிற்கிறோமா? இல்லை. கொள்ளை என்பது எல்லோரும் அரசியலில் குற்றம் சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்வது" என்று கூறினார். மேலும், கொள்கைகளுக்காகவே திமுகவினர் போராட்டங்கள் நடத்தி சிறைக்குச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டார். பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற விஜயின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், "பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது அரசாங்கத்தால் அல்ல" என்று கூறினார். மேலும், "அது தனி மனித குற்றம். அதில் ஈடுபடுபவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இது மணிப்பூர் அல்ல. இங்கே என்ன குற்றம் நடந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என்றும் அவர் கூறினார். பட மூலாதாரம், X/TKS Elangovan படக்குறிப்பு, டிகேஎஸ் இளங்கோவன் அண்ணா ஆரம்பித்த கட்சியைக் கைப்பற்றியவர்கள் என்று திமுகவை விஜய் குறிப்பிட்டது பற்றிக் கேட்கப்பட்டதற்கு, "அவருக்கு அண்ணா யாரென்றே தெரியாது. முதல்வர் ஆகும் ஆசையில் இருக்கிறார். அண்ணாவே முதல்வர் ஆகவேண்டும் என்று கட்சி தொடங்கவில்லை. முதல் தேர்தலில் அவரே போட்டியிடவில்லை. அவர் போராட்டகளத்தில் நின்று சிறை சென்றவர். அவர் சொன்னவற்றைத்தான் தலைவரும் (மு.க. ஸ்டாலின்) நாங்களும் கடைபிடிக்கிறோம்" என்று கூறினார். மேலும், "ஏன் கரூரில் பரப்புரைக்கு 12 மணிக்கு வராமல் 7.30 மணிக்கு வந்தார் என்ற பதிலைக் கூட விஜய் இன்னும் சொல்லவில்லை. இதற்கு அவர் ஏன் பதில் சொல்லவில்லை? நாமக்கல்லில் 11 மணிக்குப் பேசிவிட்டு உடனே கரூர் வராதது ஏன்? இடைப்பட்ட நேரத்தில் என்ன செய்துகொண்டிருந்தார்? இவர் எங்களைக் குறை சொல்வதற்கு தகுதி இல்லாதவர்" என்றும் டிகேஎஸ் இளங்கோவன் பேசினார். தற்குறி என்று தாங்கள் யாரையும் சொல்லவில்லை என்று குறிப்பிட்ட அவர், "தற்குறி என்று நாங்கள் யாரையும் சொல்லவில்லை. விஜயை வேண்டுமானால் சொல்லியிருக்கலாம். பேச்சு பொருத்தமாக இல்லையென்றால் அப்படி விமர்சிப்பார்கள். அது பொதுவாக எல்லோரும் சொல்வதுதான்" என்று அவர் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cpvd24prpl3o
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட மாற்றம்! வெளிநாட்டு பயணிகள் மகிழ்ச்சி தெரிவிப்பு
அண்ணை, அழகான பெண் அதிகாரிகளை நியமிக்கச் சொல்லி ஜனாதிபதிக்கு ஒரு வேண்டுகோளை அனுப்புங்கோ!
-
பெங்களூருவில் சினிமா பாணியில் ரூ. 7 கோடி கொள்ளையடித்த நபர்களை போலீஸார் பிடித்தது எப்படி?
பட மூலாதாரம், Imran Qureshi கட்டுரை தகவல் இம்ரான் குரேஷி பிபிசி இந்திக்காக 23 நவம்பர் 2025, 06:41 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு பணத்தை எடுத்துச் செல்லும் வாகனத்தில் இருந்து, சினிமா பட பாணியில் 7.11 கோடி ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்ததாக சந்தேகிக்கப்பட்ட 7 பேரைப் பிடித்திருப்பதாக பெங்களூரு போலீஸார் தெரிவித்தனர். கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் 6.29 கோடி ரூபாயை மீட்டிருப்பதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர். பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பெங்களூரு காவல்துறை ஆணையர் சீமந்த் குமார் சிங், விசாரணை சரியான திசையில் இருப்பதாகக் கூறினார். மேலும், மீதமுள்ள தொகை மற்றும் இந்த குற்றத்தில் தொடர்புடையவர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என்றும் கூறினார். கைதானவர்களில், கோபால் பிரசாத் என்பவர் காவலாளியாக இருக்கிறார். சேவியர் என்பவர் பண மேலாண்மை சேவை (CMS) நிறுவனத்தில் பணியாற்றியிருக்கிறார். அன்னப்பா நாயக், பெங்களூருவின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் நியமிக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கைத் தீர்க்க கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா மற்றும் கோவா உள்ளிட்ட தென்னிந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் 200 அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை காவல்துறை நியமித்திருந்தது. பணத்தைத் திருடிய பிறகு திருடர்கள் வாகனங்களை மாற்றியிருக்கிறார்கள். போலியான நம்பர் பிளேட்களைப் பயன்படுத்திய அவர்கள், சிசிடிவி கேமராக்கள் குறைவாக உள்ள, அல்லது இல்லாத இடங்களில் நிறுத்தி பணப் பெட்டிகளை மாற்றியிருக்கிறார்கள். இந்நிகழ்வு புதன்கிழமை மதியம் 12:48 மணியளவில் நடந்திருக்கிறது. ஆனால், போலீஸ் கமிஷனரைப் பொறுத்தவரை சிஎம்எஸ் என்ற நிறுவனம் இதுபற்றிய தகவலை மதியம் 1:20 மணியளவில் காவல்துறைக்குத் தெரிவித்திருக்கிறது. வேன் ஓட்டுநரிடம் துப்பாக்கியைக் காட்டி பணத்தை அந்த கும்பல் கொள்ளையடித்ததாக காவல்துறை ஆணையர் தெரிவித்தார். Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது உங்கள் வீட்டுக்கு அருகே இந்தச் செடிகள் இருந்தால் உண்மையில் பாம்புகள் வராதா? சியா, ஆளி உள்ளிட்ட விதைகளை எப்படி சாப்பிட வேண்டும்? யாரெல்லாம் சாப்பிட கூடாது? துபையில் கீழே விழுந்து நொறுங்கிய தேஜஸ் விமானத்தில் இருந்த விமானி யார்? முழு விவரம் பல நாள் பட்டினி கிடந்து, கொடிய விஷத் தவளைகளை உண்ட பாம்புகள் உயிர் பிழைத்தது எப்படி? End of அதிகம் படிக்கப்பட்டது பெங்களூரு நகரின் மத்தியில் பட்டப்பகலில் இந்நிகழ்வு நடந்ததாக காவல்துறை தெரிவித்தது. அதன்பிறகு கொள்ளையர்களைப் பிடிப்பதகான திட்டத்தை காவல்துறை வகுத்தது. இதுபற்றி பிபிசியிடம் பேசிய பெங்களூரு காவல்துறை ஆணையர் சீமந்த் குமார் சிங், புதன்கிழமை மதியம் ஒரு எஸ்யூவி காரில் வந்த ஆறு பேர் பணத்தை எடுத்துச்செல்லும் வாகனத்தை நிறுத்தியதாகக் கூறினார். அப்போது அந்த வாகனம் ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு பணத்தை எடுத்துச் சென்றுகொண்டிருந்தது. அந்த வேனில் ஓட்டுநர், பணப் பாதுகாவலர் மற்றும் ஆயுதம் ஏந்திய இரு காவலர்கள் இருந்துள்ளனர். ரிசர்வ் வங்கி அதிகாரிகளாக நடித்த திருடர்கள் அந்தத் திருடர்கள் தாங்கள் இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் என்று சொல்லியிருக்கிறார்கள். வேனில் அவ்வளவு பெரிய தொகையை எடுத்துச் செல்வதற்கான சரியான ஆவணங்களை அவர்கள் வைத்திருக்கிறார்களா என்று சோதனை செய்வதற்காக வாகனத்தை நிறுத்தியதாக வேனில் இருந்தவர்களிடம் கொள்ளையர்கள் சொன்னதாக காவல்துறை ஆணையர் தெரிவித்தார். முதல்கட்ட தகவலின்படி, அந்த கும்பல் பணப் பாதுகாவலரையும் காவலர்களையும் தங்களின் ஆயுதங்களை விட்டுவிட்டு எஸ்யூவியில் ஏறச் சொல்லியிருக்கிறார்கள். பின்னர் வேனை பணத்தோடு ஓட்டிச்செல்லுமாறு அதன் ஓட்டுநரிடம் கூறியிருக்கிறார்கள். காவல்துறை கூற்றுப்படி அந்த கொள்ளையர்கள் லால்பாக்-குக்கு அருகில் உள்ள அஷோக் பில்லர் ரோட்டில் அந்த வேனை நிறுத்தியிருக்கிறார்கள். அந்த கும்பல் தங்கள் ஆள் ஒருவரை, பணத்தை எடுத்துச் சென்ற வேனோடு அனுப்பியிருக்கிறார்கள். சில தூரம் சென்ற எஸ்யூவி, நிம்ஹான்ஸ் (NIMHANS) பேருந்து நிறுத்தத்தில் அந்த மூன்று பணியாளர்களையும் இறக்கிவிட்டிருக்கிறது. பின்னர் அந்த கும்பல், குறைவான சிசிடிவி கேமராக்களே இருந்த பெங்களூரு டெய்ரி சர்க்கிள் மேம்பாலத்திற்கு எஸ்யூவியை ஓட்டிச் சென்றிருக்கிறது. பட மூலாதாரம், Imran Qureshi படக்குறிப்பு, பத்திரிகையாளர்களிடம் இந்த கொள்ளைச் சம்பவம் குறித்துப் பேசிய ஆணையர் சீமந்த் சிங் (நடுவே இருப்பவர்) மாறிய வண்டிகள், மாற்றப்பட்ட பணம் சிஎம்எஸ் நிறுவனம் இந்த சம்பவம் நடந்த இடமாக டிஜே ஹல்லியைக் குறிப்பிட்டதாக சீமந்த் குமார் சிங் தெரிவித்தார். அது நகரத்தின் கிழக்குப் பக்கம் இருக்கும் இடம். ஆனால், சம்பவம் நடந்த அஷோக் பில்லரோ தெற்குப் பகுதியில் உள்ளது. இதுபற்றிப் பேசிய கமிஷனர், "இந்த விவகாரத்தில் ஏஜென்சியின் பங்கு என்ன என்பதும் விசாரிக்கப்படுகிறது. பணப் பரிமாற்றத்தின் போது பல ரிசர்வ் வங்கி விதிகள் மீறப்பட்டுள்ளன. அவர்களிடம் தவறுகள் ஏதுமில்லை என்று சொல்லிவிட முடியாது" என்று கூறினார். ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையை மேற்கோள் காட்டிய சீமந்த் சிங், பண வேன்களில் பணப்பெட்டிகள் மற்றும் பணியாளர்களுக்கு இரண்டு தனித்தனிப் பெட்டிகள் இருக்க வேண்டும் என்றார். பயணிகள் பெட்டியில் இரண்டு பாதுகாவலர்கள், இரண்டு ஆயுதமேந்திய காவலர்கள் மற்றும் ஓட்டுநர் இருக்க வேண்டும் என்று கூறிய அவர், இரண்டு பெட்டிகளிலுமே சிசிடிவி கேமராக்கள் இருக்கவேண்டும் என்று கூறினார். பணம் எடுத்துச்செல்லும் ஒவ்வொரு வேனிலும் ஜிபிஎஸ், நேரடி கண்காணிப்பு, ஜியோ-ஃபென்சிங் மற்றும் வழித்தடத்தில் அருகிலுள்ள காவல் நிலையத்தின் குறிப்பேடு ஆகியவை பொருத்தப்பட்டிருக்க வேண்டும். வேன்கள் ஒரே பாதையிலோ அல்லது ஒரே நேரத்திலோ மீண்டும் மீண்டும் பயணிக்கக் கூடாது. அவற்றின் இயக்கம் பற்றிக் கணித்துவிடக்கூடாது என்பதற்காக இந்த விதிமுறை. சிஎம்எஸ் நிறுவனத்திடமிருந்து இதுபற்றிய கருத்து பெறுவதற்காக பிபிசி முயற்சி செய்தது. அவர்களிடம் கருத்து பெற்ற பிறகு இந்தக் கட்டுரை புதுப்பிக்கப்படும். தன் பெயர் சொல்ல விரும்பாத காவல்துறை அதிகாரி ஒருவர், கொள்ளையடிப்பதற்குப் பயன்படுத்தப்பட எஸ்யூவி போலியான நம்பர் பிளேட்டையும் இந்திய அரசு ஸ்டிக்கரையும் பயன்படுத்தியிருந்ததாக பிபிசியிடம் தெரிவித்தார். அந்த நிறுவனத்துக்கு இந்தக் கொள்ளையுடன் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்றும் காவல்துறை விசாரிப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார். இந்தக் கொள்ளையில் பயன்படுத்திய எஸ்யூவி காரை காவல்துறை மீட்டுள்ளதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார். ஆனால் கொள்ளையர்கள் தப்பிக்கப் பயன்படுத்திய வாகனம் எது என்று தெளிவாகத் தெரியவில்லை என்று உள்துறை அமைச்சர் ஜி.பரமேஷ்வரா தெரிவித்தார். ''வாகனங்களை மாற்றி பண பரிமாற்றம் செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். சமீபகாலமாக கர்நாடகாவில் நடந்த மற்ற வங்கிக் கொள்ளை சம்பவங்களை போலீசார் தீர்த்ததுபோல், இந்த வழக்கையும் விரைவில் தீர்த்து வைப்பார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். கடந்த மே மாதம் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள ஒரு வங்கியில் இருந்து 53.26 கோடி ரூபாய் மதிப்புள்ள 59 கிலோ தங்கம் திருடப்பட்டது. இதுவரை 39 கிலோ தங்கமும் கொஞ்சம் பணத்தையும் போலீசார் மீட்டுள்ளனர். இந்தத் திருட்டு தொடர்பாக இரண்டு முன்னாள் ஊழியர்கள் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdxernjq1jzo
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட மாற்றம்! வெளிநாட்டு பயணிகள் மகிழ்ச்சி தெரிவிப்பு
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள மின்னணு நுழைவாயில் (E-Gate) வசதியால் நன்மை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டிலிருந்து வரும் இலங்கை கடவுச்சீட்டை கொண்டுள்ள பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த வசதி மூலம் குடிவரவுப் பணிகளுக்காக நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். விமானத்தில் இருந்து இறங்கி, நேரடியாக விமான நிலையத்தை விட்டு வெளியேறும் வாய்ப்பு மின்னணு நுழைவாயில்கள் காரணமாக கிடைத்துள்ளது. சுயமாக குடிவரவு பணி வெளிநாடுகளில் இருந்து இலங்கை செல்வோர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து விரைவாக வெளியேறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில நிமிடங்களில் சுயமாக குடிவரவு பணிகளை நிறைவு செய்து கொண்டு வெளியேற முடியும். இதற்கு முன்னர் மணித்தியாலக்கணக்கில் காத்திருந்து குடிவரவு பணிகளை முடிக்க வேண்டிய நிலை இருந்தது. இலங்கைக்கு அடிக்கடி வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இதுவோரு சிறந்த வழிமுறையாகும் என பயணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் மின்னணு நுழைவாயில் (E-Gate)வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து கடவுச்சீட்டுகளையும் கொண்ட பயணிகளுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும். பல இலட்சம் சுற்றுலாப் பயணிகளை உள்ளீர்க்கும் வகையிலான செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டு வரும் நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்த வசதி குறிப்பிடத்தக்க நன்மையை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/good-news-foreigners-who-visting-sri-lanka-1763883182
-
அஸ்வெசும திட்டம்: வங்கி கணக்குகளை திறக்காதவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்குத் தகுதி பெற்று, இன்னும் வங்கிக் கணக்கைத் திறக்காத பயனாளிகள் வங்கிக் கணக்குகளை விரைவில் திறக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வங்கிக் கணக்குகள் இல்லாததால், முந்தைய ஆண்டில் (2024) 43,703 அஸ்வெசும பயனாளிகள் தங்கள் உரிமை பலன்களைப் பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக, தகுதியான பயனாளிகள் தங்கள் பலன்களைப் பெற முடியாமல் போகலாம் அல்லது இழக்க நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரச்சினையை தீர்க்க பொருத்தமான வழிமுற ஜூன் 2025 இறுதிக்குள் இந்த பிரச்சினையைத் தீர்க்க பொருத்தமான வழிமுறையை நிறுவி செயல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அஸ்வெசும திட்டத்தின்படி தகுதியான நபர்களுக்கு சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பல சந்தர்ப்பங்களில் வங்கிக் கணக்குகளைத் திறக்காத பயனாளிகளுக்கு கணக்குகளைத் திறக்குமாறு தனிப்பட்ட முறையில் தெரிவித்துள்ளதாக நலன்புரி சபை தெரிவித்துள்ளது. நலன்புரி சபை தொடர்பாக 2024 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த தகவல் சேர்க்கப்பட்டுள்ளது. https://tamilwin.com/article/important-instructions-for-opened-bank-accounts-1763885116