Everything posted by ஏராளன்
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
வட்டு தெற்கு பரராஜசிங்கம் ஐயாவின் மலசலகூடக் குழி கல்லு கட்டும் வேலை நடைபெறுகிறது. காரைநகர் புதிய மலசலகூடத்திற்கான மாதிரி அளவுத்திட்டம்.
-
கொழும்புத் துறைமுக அபிவிருத்தியில் முதலீடு செய்ய ஐக்கிய அரபு அமீரகம் ஆர்வம்
கொழும்புத் துறைமுக அபிவிருத்தியில் முதலீடு செய்ய ஐக்கிய அரபு அமீரகம் ஆர்வம் Published By: Vishnu 31 Jan, 2026 | 02:43 AM இலங்கையும் ஐக்கிய அரபு அமீரகமும் இணைந்து இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவை துறைகளை மேம்படுத்துவது கவனம் செலுத்தப்பட்டது. இலங்கைக்கான ஐக்கிய அரபு அமீரக தூதுவர் கலீத் நாசர் அல்அமேரிக்கும், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலகவுக்கும் இடையிலான இருதரப்பு கலந்துரையாடல் வியாழக்கிழமை (29) அமைச்சில் நடைபெற்றது. இதன்போது, சிவில் விமான சேவைத் துறையின் தலைவர்களுக்கான சர்வதேச நிகழ்ச்சி ஒன்று எதிர்வரும் பெப்ரவரி 03 முதல் 06 வரை துபாயில் நடைபெறவுள்ளதுடன் அந்நிகழ்வில் பங்கேற்குமாறும், பெப்ரவரி 03 துபாயில் உலக அரச உச்சி மாநாடு மையத்தில் நடைபெறவுள்ள உலகளாவிய சேவை வழங்கல் தொடர்பான வட்டமேசை கலந்துரையாடலிலும் பங்கேற்குமாறு அமைச்சர் அனுர கருணாதிலகவுக்கு தூதுவர் உத்தியோகபூர்வ அழைப்பை விடுத்தார். மேலும், கொழும்புத் துறைமுக அபிவிருத்திக்காக அபு தாபி துறைமுக நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆர்வம் காட்டியுள்ளதாகவும், அந்த நிறுவனங்களுடன் கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்யத் தயார் எனவும் குறிப்பிட்டார். அத்துடன், இலங்கையில் காணப்படும் திறமையான விமான பொறியியல் மனித வளமும், குறைந்த செயற்பாட்டு செலவுகளும் விமான சேவை துறையை மேம்படுத்துவதற்கு சாதகமாக அமையும் எனவும், இலங்கையில் பிராந்திய விமான பராமரிப்பு மையம் ஒன்றை நிறுவுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. விமான சேவை மற்றும் துறைமுக சேவை வழங்கல் துறைகளில் நடைமுறை மற்றும் நீண்ட கால கூட்டாண்மையை உருவாக்குவதற்கு தொடர்ந்து நெருங்கிய ஒத்துழைப்புடன் செயல்பட இருதரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/237440
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
7) முதல் சுற்று குழு C:திங்கள் 09 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், பங்களாதேஷ் எதிர் இத்தாலி SCOT 🆚 ITA - SCOT 33) முதல் சுற்று குழு C:செவ்வாய் 17 பெப்: 1:30 PM, வாங்கெடே, பங்களாதேஷ் எதிர் நேபாளம் SCOT 🆚 NEP - SCOT 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) Select WI 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு C: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) Group C - Second WI அண்ணை, தடித்த எழுத்தில் எனது பதில்.
-
பிராஜா சக்தி திட்டம் தமிழ் தேசிய அரசியலை வேரிலேயே அழிக்க கூடிய ஆபத்தானது - அரசியல் ஆய்வாளர் சி. அ. யோதிலிங்கம்
பிராஜா சக்தி திட்டம் தமிழ் தேசிய அரசியலை வேரிலேயே அழிக்க கூடிய ஆபத்தானது - அரசியல் ஆய்வாளர் சி. அ. யோதிலிங்கம் Published By: Vishnu 30 Jan, 2026 | 07:51 PM பிராஜா சக்தி எனும் திட்டம் தமிழ் தேசிய அரசியலை வேரிலேயே அழிக்க கூடிய ஆபத்தானது என அரசியல் ஆய்வாளரும், சட்டதரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குனருமான சி. அ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை (30) நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியாளர்கள் அடிமட்ட மக்கள் மத்தியில் பணியாற்றுவதற்காக பிரஷா சக்தி என்கின்ற அமைப்பை உருவாக்கியுள்ளது அந்த அமைப்பின் ஊடாக வறுமை ஒழிப்புத் திட்டத்தை தாம் மேற்கொள்வதாக கூறி வருகிறார்கள். தங்களினுடைய உள்ளூராட்சி அதிகாரங்கள் இல்லாத இடங்களில் அதனை பலவீனப் படுத்துவதற்கா அந்த அதிகாரத்திற்கு சமாந்தரமாக உருவாக்கப்பட்ட அமைப்புத்தான் இந்த பிராஜா சக்தி அமைப்பு. இது தமிழ் பகுதிகளில் உள்ளூராட்சி மன்றங்களை பலவீனப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று என்றுதான் கூறவேண்டும். கிராமங்களில் அவர்கள் பிராஜா சக்தி தலைவர்களை தெரிவு செய்கின்றார்கள். தேசிய மக்கள் சக்தி தங்களோடு நம்பிக்கை யாக நிற்பவர்களைத்தான் தெரிவு செய்கின்றார்களே தவிர மக்கள் தெரிவு செய்த தலைவராக அந்த தலைவர் இருக்கவில்லை. இங்கு ஜனாதிபதி வருகின்றபோது கிளைகள் எல்லாவற்றிற்கும் மக்களை அழைத்து வருமாறு கட்டளையிடப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. கிராம சேவையாளர்கள், சமுர்த்தி உத்தியோகாத்தர்கள், பிராஜா சக்தி கட்டமைப்புக்களுக்கும் ஆட்களை அழைத்துவர கட்டளை இடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தங்களினுடைய பணிகளை வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் மேற்கொள்வதற்கே இந்த அமைப்பு செயற்படுகிறது என்று சொல்லிவிடலாம். அடிமட்ட மக்கள் மத்தியில் பணியாற்றிய அனுபவம் npp உடைய தலைமை கட்சியான jvpயிடம் இருப்பதனால் அது அவர்களுக்கு இந்த இடத்தில் அதிகம் துணை புரிவது காணப்படுகிறது. தமிழ் தேசிய சக்திகள் இதன்னுடைய அபாயத்தை சரியாக விளங்கிகொள்ள வேண்டும். தமிழ் தேசிய சக்திகளை பொறுத்தவரை அவர்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு அரசியலை செய்து கொண்டிருக்கிறார்களே தவிர தேச நிர்மான அரசியலில் கவனம் செலுத்தவில்லை. எமது மக்களில் உதவிகளையும் தேவைகளையும் எதிர்பார்ப்பவர்கள் இருக்கிறார்கள். அகவே அந்த நலன்களை பேணவேண்டிய பொறுப்பு தமிழ் தேசிய சக்திகளுக்கு இருக்கின்றது. தமிழ் தேசிய சக்திகள் அதில் கவனம் செலுத்தமையால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற ஒரு நிலமையை நாங்கள் பார்க்கின்றோம். அகவே இது ஒரு அபாயமான விடயம். ஏனெனில் அடிமட்டத்தில் தமிழ் தேசிய அரசியலை பலவீனப்படுத்துகின்றது. உண்மையில் கிராமகளில் அடிமட்டமாக இருக்கின்ற அந்த அடிமட்ட மக்களை பலவீனப்படுத்துகின்ற ஒரு அரசியலை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுக்க முனைக்கிறது. இது தமிழ் தேசிய அரசியலை வேரிலேயே அழுக செய்கின்ற ஒரு நிலமை. இந்த விடயம் தொடர்பில் வலுவான கவனம் செலுத்த வேண்டிய தேவை இருக்கின்றது என்றே நான் நினைக்கின்றேன். எதிர்ப்பு அரசியலில் மட்டும் கவனம் செலுத்தமல் தேச நிர்மான அரசியலிலும் கவனம் செலுத்துகின்றபோது இந்த விடயங்களை வெற்றிகொள்ளk கூடிய நிலமை உருவாகும். இது தொடர்பான பொறுப்பு தமிழ் அரசியல் கட்சிகளுக்கு மட்டும் அல்ல. தமிழ் தேசிய சக்திகள் அனைவருக்கும் இருக்கின்றது என நினைக்கின்றேன் என மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/237433
-
சீனாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேருக்கு மரண தண்டனை விதிப்பு!
சீனா ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேருக்கு இவ்வளவு விரைவாக மரண தண்டனை நிறைவேற்றியது ஏன்? பட மூலாதாரம்,CCTV படக்குறிப்பு,மிங் குடும்பத்தைச் சேர்ந்த டஜன் கணக்கானோருக்கு செப்டம்பர் மாதம் தண்டனை விதிக்கப்பட்டது கட்டுரை தகவல் ஜோனாதன் ஹெட் தென்கிழக்கு ஆசிய செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த செப்டம்பரில் மியான்மரின் வட கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் ஒன்றின் 11 உறுப்பினர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களுக்கு சீனா விரைவாக மரண தண்டனை நிறைவேற்றியதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை. மனித உரிமை அமைப்புகளின் கூற்றுப்படி, உலகின் வேறு எந்தப் பகுதியையும்விட சீனா அதிகமான மக்களுக்கு மரண தண்டனை விதிக்கிறது. அதன் சரியான எண்ணிக்கை அரசாங்க ரகசியமாக உள்ளது. ஊழல் குற்றங்களுக்காக அதிகாரிகளுக்கு அடிக்கடி மரண தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால், தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்ட மிங் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அதைவிட மிகவும் தீவிரமானவை. ஷான், மியான்மரில் வறுமையிலுள்ள ஒரு மாகாணம். அங்கு, தொலைதூர எல்லையில் அமைந்துள்ள லௌக்கைங் நகரத்தில், கடந்த 2009ஆம் ஆண்டு முதல், மிங், பௌ, வெய், லியு ஆகிய வம்சாவளிகளைச் சேர்ந்த குடும்பங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தன. நான்கு குடும்பங்கள் கடந்த 1980களில் இருந்து பல ஆண்டுகளுக்கு, எம்.என்.டி.ஏ.ஏ என்றழைக்கப்படும் ஆயுதமேந்திய இனக்குழு ஒன்றின் கட்டுப்பாட்டில் லௌக்கைங் மற்றும் அருகிலுள்ள பகுதிகள் இருந்தன. மியான்மரில் ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய ராணுவ தளபதி மின் ஆங் ஹ்லைங் தலைமையிலான ராணுவத் தாக்குதலின் மூலம், எம்.என்.டி.ஏ.ஏ என்ற ஆயுதமேந்திய இனக்குழு அங்கிருந்து வெளியேற்றப்பட்டது. அதன் பிறகு, இந்த குடும்பங்கள் செல்வாக்கு பெறத் தொடங்கின. 'நான்கு குடும்பங்கள்' என்று அறியப்பட்ட மிங், பௌ, வெய், லியு குடும்பத்தினர் அப்பகுதியைக் கைப்பற்றி, அங்கு நிலவிய, அபின், மெத்தம்பெட்டமைன் உற்பத்தியைச் சார்ந்திருந்த பழைய நிலையை மாற்றி சூதாட்ட விடுதிகள், இணையவழி மோசடிகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்கினர். அவர்கள் மியான்மர் ராணுவத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்தனர். டிசம்பர் 2021இல் தனது ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு, மின் ஆங் ஹ்லைங் தலைநகர் நேபிடாவில் லியு குடும்பத்தின் தலைவரான லியு ஜெங்சியாங்கிற்கு விருந்தளித்து, "அரசின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய அசாதாரண பங்களிப்புக்காக" ஒரு கௌரவ பட்டத்தையும் வழங்கினார். பட மூலாதாரம்,Chinese Ministry of Public Security படக்குறிப்பு,சீன காவல்துறையின் காவலில் மிங் ஷென்ஜென் மற்றும் மிங் குவோபிங் 'சீனாவை சேர்ந்த பலர் கொலை' அவரது 'ஃபுல்லி லைட்' நிறுவனம் மியான்மர் முழுவதும் லாபகரமான தொழில்களைக் கொண்டிருந்தது. அந்த நான்கு குடும்பங்களின் பிற உறுப்பினர்கள் ராணுவ ஆதரவு பெற்ற யு.எஸ்.டி.பி கட்சியின் வேட்பாளர்களாக இருந்தனர். லௌக்கைங்கில் அவர்கள் நடத்திய மோசடி மையங்கள் கொடூரமானவையாக இருந்தன. ஆசியாவின் பிற பகுதிகளிலுள்ள மோசடி மையங்களைவிட இவை மிகவும் மோசமானவை. அங்கு சித்திரவதை என்பது ஒரு வழக்கமான செயலாக இருந்தது. அதிக சம்பளம் தரும் வேலைகள் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கான சீன தொழிலாளர்கள் அந்த இடத்திற்குக் கொண்டு வரப்பட்டனர். ஆனால், அவர்கள் உண்மையில் பெரிய கட்டடங்களில் பூட்டி வைக்கப்பட்டு, இணைய ஊடகங்களின் வழியாக ஒருவரின் நம்பிக்கையை மெதுவாகப் பெற்று, பின்னர் அவர்களிடம் இருந்து பெரும் தொகையைத் திருடும் இணைய மோசடி வேலைகளில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். இவ்வாறு சிக்கியவர்களில் பெரும்பாலானோர் சீனர்கள். இந்த மோசடிகளில் பாதிக்கப்பட்டவர்களும், அங்கு சிக்கிக்கொண்ட தொழிலாளர்களின் குடும்பத்தினரும் சமூக ஊடகங்களில் தங்கள் புகார்களையும் உதவி கோரல்களையும் பதிவிடத் தொடங்கினர். லௌக்கைங்கில் மிகவும் நன்கு அறியப்பட்ட இத்தகைய ஒரு மோசடி மையம்தான் 'க்ரூச்சிங் டைகர் வில்லா'. இது மிங் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அக்டோபர் 2023இல் அதிலிருந்து தப்பிக்கும் முயற்சியென நம்பப்படும் சம்பவம் ஒன்றின்போது, காவலர்கள் சீனாவை சேர்ந்த பலரைக் கொலை செய்தனர். இதனால் சீன அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாக வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார்கள். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,தென்கிழக்கு ஆசியாவில் சட்டவிரோத சூதாட்ட சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஷே ஷிஜியாங், கடந்த ஆண்டு சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டார் தற்போதைய உள்நாட்டுப் போரில் மியான்மர் ராணுவத்திற்கு எதிராக எம்.என்.டி.ஏ.ஏ குழு மற்றும் அதன் கூட்டாளிகள் மேற்கொண்டு வரும் தாக்குதலின் ஒரு பகுதியாக, சீனாவின் வெளிப்படையான ஆதரவுடன், லௌக்கைங்கை தாக்கி மீண்டும் கைப்பற்றினர். அங்கு நடக்கும் மோசடி தொழில்களை முற்றிலுமாக ஒழிப்பதாக எம்.என்.டி.ஏ.ஏ. உறுதி பூண்டது. அவர்கள் அந்த நான்கு குடும்பங்களின் தலைவர்களையும் கைது செய்ததோடு, அவர்களது உறவினர்கள், கூட்டாளிகள் என 60க்கும் மேற்பட்டோரை சீன காவல்துறையிடம் ஒப்படைத்தனர். குடும்பத் தலைவரான மிங் சூசாங், பிடிபட்ட பிறகு தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சீன காவல்துறையின் விசாரணைகளின்போது, குடும்ப உறுப்பினர்களில் ஒருவர், தனது பலத்தைக் காட்டுவதற்காகவே கூட்டத்தில் ஒருவரைத் தேர்வு செய்து பிறர் முன்னிலையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் குடும்பங்களின் மீது மேற்கொள்ளப்படும் கடுமையான நடவடிக்கைகளை நியாயப்படுத்தவே இந்த விவரங்களை சீனா வெளியிட்டுள்ளது. மேலும், பௌ குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மரண தண்டனை நிறைவேற்றப்படக் காத்திருக்கின்றனர். அதோடு, வெய் மற்றும் லியு குடும்பங்களின் மீதான வழக்குகள் இன்னும் முடிவடையவில்லை. இந்த நான்கு குடும்பங்களும் இனரீதியாக சீனர்கள். மேலும், யுனான் மாகாணத்தில் எல்லையின் சீன பகுதியிலுள்ள அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தனர். மேலும், லௌக்காங்கில் உள்ள இந்த மோசடி தொழில்களுக்கு எதிரான நடவடிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் தீர்க்கமானதாக இருந்துள்ளது. இதோடு, பெரிய மோசடி நடவடிக்கைகளை நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு சீன வணிக பிரமுகர்களை திருப்பி அனுப்ப தாய்லாந்து மற்றும் கம்போடியாவை சீனா சம்மதிக்க வைத்துள்ளது. அவர்களில் மியான்மரின் போரால் பாதிக்கப்பட்ட கரேன் மாகாணத்தில் ஒரு முழு நகரத்தையே கட்டியெழுப்பிய ஷே ஷிஜியாங்கும் ஒருவர். மற்றொருவர், கம்போடியாவில் தனது பிரின்ஸ் குரூப் நிறுவனத்தின் மூலம் செல்வத்தையும் அதிகாரத்தையும் குவித்த சென் ஷி. அத்துடன், மோசடி மையங்களில் பணிபுரிந்த பல்லாயிரக்கணக்கான சீனர்களையும், விசாரணைகளுக்காக சீனா மீண்டும் நாட்டிற்கு அழைத்து வந்துள்ளது. இருப்பினும், இந்த மோசடி வணிகம் தம்மைத் தகவமைத்துக் கொண்டு, பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. அதை முற்றிலுமாக முடக்குமாறு சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள் கம்போடிய அரசுக்கு அழுத்தம் கொடுத்தபோதிலும், இதுவே இன்னமும் அந்நாட்டில் மிகப்பெரிய தொழிலாகக் கருதப்படுகிறது. மேலும், தாய்லாந்து-மியான்மர் எல்லையில் உள்ள கேகே பார்க், ஷுவே கோக்கோ போன்ற முக்கிய மோசடி மையங்கள் மூடப்பட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளான போதிலும், இந்தத் தொழில் மியான்மரில் புதிய பகுதிகளுக்கு நகர்ந்து கொண்டே இருக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp87e1kvjydo
-
செமிகண்டக்டர் உற்பத்தியில் சீனாவுக்கு சவால் விடுவதற்காக சிங்கப்பூருடன் இணையும் இந்தியா
செமிகண்டக்டர் உற்பத்தியில் இந்தியா எந்த கட்டத்தில் உள்ளது? முன்னணி நாடாக மாறுமா? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் ப்ரீத்தி குப்தா தொழில்நுட்ப செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் அர்னாப் ராய், தேஜஸ் நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனராக உள்ளார். அவரைப் பொறுத்தவரை, நம்பகமான கணினி சிப்கள் விநியோகிக்கப்படுவது அவசியமானது. இந்தியாவின் பெங்களூருவில் அமைந்துள்ள அவரது நிறுவனம், மொபைல் போன் நெட்வொர்க்குகள் மற்றும் பிராட்பேண்ட் இணைப்புகள் செயல்படத் தேவையான உபகரணங்களை விநியோகிக்கிறது. "அடிப்படையில், தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகள் முழுவதும் இணைய தொடர்புகளைக் கொண்டு செல்லத் தேவையான மின்னணு சாதனங்களை நாங்கள் விநியோகிக்கிறோம்," என்கிறார் அவர். அதற்கு தொலைத்தொடர்பு பணிகளுக்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு சிப்கள் தேவை. "டெலிகாம் சிப்கள் அடிப்படையில், ஸ்மார்ட்போன் சிப்களில் இருந்து வேறுபட்டவை. அவை லட்சக்கணக்கான பயனர்களிடம் இருந்து ஒரே நேரத்தில் வரும் மிகப்பெரிய அளவிலான தரவுகளைக் கையாள்கின்றன. இந்த நெட்வொர்க்குகளின் இயக்கம் தடைபடக்கூடாது. நம்பகத்தன்மை, பிரச்னைக்குரிய நேரத்தில் சமாளிப்பதற்கான பாதுகாப்பு அம்சம் போன்றவை மிகவும் அவசியம். சிப் கட்டமைப்பு அதற்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும்," என்று கூறுகிறார் அர்னாப் ராய். 'செமிகண்டக்டர் உற்பத்தி இல்லை' கணினி சிப்களை வடிவமைப்பதில் நிபுணத்துவம் பெற்ற நாடாக இந்தியா விளங்குகிறது. அந்த கணினி சிப்களில் (செமிகண்டக்டர்கள் என்றும் அழைக்கப்படுகின்றன) பலவற்றை தேஜஸ் நிறுவனம் வடிவமைக்கிறது. உலகின் செமிகண்டக்டர் பொறியாளர்களில் 20% பேர் இந்தியாவில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. "கிட்டத்தட்ட ஒவ்வொரு பெரிய உலகளாவிய சிப் நிறுவனமும், அதிநவீன தயாரிப்புகளில் பணியாற்றும் தனது மிகப்பெரிய அல்லது இரண்டாவது-பெரிய சிப் வடிவமைப்பு மையத்தை இந்தியாவில் கொண்டுள்ளது," என்று இந்தியாவின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணைச் செயலாளர் அமிதேஷ் குமார் சின்ஹா கூறுகிறார். ஆனால், செமிகண்டக்டர்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இந்தியாவில் இல்லை. இதனால், தேஜஸ் நெட்வொர்க்ஸ் போன்ற இந்திய நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான சிப்களை இந்தியாவில் வடிவமைத்து, அவற்றை வெளிநாடுகளில் உற்பத்தி செய்கின்றன. பட மூலாதாரம்,Tejas Networks படக்குறிப்பு,தேஜஸ் நெட்வொர்க்ஸ் மொபைல் போன் நெட்வொர்க்குகள் மற்றும் பிராட்பேண்ட் இணைப்புகளுக்கான சாதனங்களை விநியோகிக்கிறது கோவிட் பேரிடரின்போது, இந்த அமைப்பின் பலவீனம் வெளிப்பட்டது. அப்போது சிப்களின் விநியோகம் தடைபட்டதால், அனைத்து தொழில் துறைகளிலும் உள்ள நிறுவனங்கள் உற்பத்தியைக் குறைக்க வேண்டியிருந்தது. "குறைக்கடத்தி என்று அழைக்கப்படும் இந்த செமிகண்டக்டர்களின் உற்பத்தியை உலகளவில் பார்த்தால், ஒரு சில இடங்களிலேயே அதிகமாகக் குவிந்துள்ளது. இத்தகைய சூழல் கடுமையான அபாயங்களைக் கொண்டுள்ளதை பெருந்தொற்றுப் பேரிடர் தெளிவுபடுத்தியது," என்று தெரிவித்தார் அர்னாப் ராய். இந்த நிலைமை, இந்தியாவை அதன் சொந்த செமிகண்டக்டர் தொழில்துறையை உருவாக்கத் தூண்டியது. "உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் எவ்வளவு பலவீனமானவை என்பதை கோவிட் பேரிடர் நமக்குக் காட்டியது. உலகின் ஒரு பகுதி மூடப்பட்டால், அனைத்து இடங்களிலும் மின்னணுவியல் உற்பத்தி பாதிக்கப்படுகிறது" என்கிறார் சின்ஹா. மேலும் அவர், "அதனால்தான் அத்தகைய அபாயத்தைக் குறைக்கவும், மீள்திறனை அதிகரிக்கவும் இந்தியா தனது சொந்த செமிகண்டக்டர் விநியோகக் கட்டமைப்பை உருவாக்கி வருகிறது," என்றார். செமிகண்டக்டர் தொழில்துறையை மேம்படுத்துவதற்கான அரசின் முயற்சிகளுக்கு அமிதேஷ் குமார் சின்ஹா தலைமை தாங்குகிறார். இதில், உற்பத்திச் செயல்முறையின் எந்தெந்தப் பகுதிகளில் இந்தியாவால் பிற நாடுகளுடன் போட்டியிட முடியும் என்பதைக் கண்டறிவதும் அடங்கும். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கணினி சிப்கள் சிலிகான் தகடுகளின் மீது மின்சுற்றுகளைப் பொறிப்பதன் மூலம் உருவாக்கப்படுகின்றன இந்தியாவின் கவனம் எங்கே? கணினி சிப் தயாரிப்பதில் பல கட்டங்கள் உள்ளன. அதில் முதலாவதாக இருக்கும் சிப் வடிவமைப்பில் இந்தியா ஏற்கெனவே வலுவாக உள்ளது. இரண்டாவது கட்டம், வேஃபர் தயாரிப்பு. இதில், மிகவும் மெல்லிய சிலிகான் தகடுகள் பயன்படுத்தப்படுகின்றன. சிறப்பு இயந்திரங்கள் இந்தத் தகடுகளின் மீது மிகச் சிறிய மின்னணு சுற்றுகளை வரைகின்றன. இந்த இயந்திரங்கள் மிகவும் விலை உயர்ந்தவை மற்றும் செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைகள் எனப்படும் பிரமாண்ட தொழிற்சாலைகளுக்குள் வைக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டாவது கட்டத்தில், குறிப்பாக மிகவும் அதிநவீனமான சிப்களின் உற்பத்தியைப் பொறுத்தவரை, தைவானில் உள்ள நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சீனா அதை முந்துவதற்கு முயல்கிறது. மூன்றாவது கட்டத்தில், அந்தப் பெரிய சிலிகான் வேஃபர்கள் தனித் தனி சிப்களாக வெட்டப்பட்டு, பாதுகாப்பு உறைகளில் அடைக்கப்பட்டு, இணைப்பிகளுடன் இணைக்கப்பட்டு சோதிக்கப்படுகின்றன. அவுட்சோர்ஸ்ட் செமிகண்டக்டர் அசெம்ப்ளி மற்றும் சோதனை (OSAT) என்றழைக்கப்படும் இந்த மூன்றாவது கட்டத்தைத்தான், இந்தியா தனது உற்பத்திச் செயல்முறையின் இலக்காகக் கொண்டுள்ளது. "சிப் உற்பத்திச் செயல்முறையின் இரண்டாவது கட்டத்தைத் தொடங்குவதைவிட அசெம்ப்ளி, சோதனை, பேக்கேஜிங் ஆகியவற்றைத் தொடங்குவது எளிது. அதில்தான் இந்தியா முதலில் கவனம் செலுத்துகிறது" என்கிறார் இந்திய மின்னணுவியல் மற்றும் செமிகண்டக்டர் சங்கத்தின் தலைவர் அசோக் சந்தக். இதுபோன்ற பல தொழிற்சாலைகள், இந்த ஆண்டில் "பெரியளவிலான உற்பத்தியைத் தொடங்கும்" என்கிறார் அவர். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சீனா தனது செமிகண்டக்டர் தொழிலை மேம்படுத்தி வருகிறது கடந்த 2023இல் நிறுவப்பட்ட கேன்ஸ் செமிகான், இந்திய அரசின் ஆதரவுடன் ஒரு செமிகண்டக்டர் ஆலையை நிறுவி, அதை வெற்றிகரமாக இயக்கி வரும் முதல் நிறுவனமாகும். கேன்ஸ் செமிகான், குஜராத்தில் கணினி சிப்களை ஒருங்கிணைத்து சோதனை செய்வதற்கான ஒரு தொழிற்சாலையில் 260 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் தயாரிப்பை தொடங்கியது. கேன்ஸ் செமிகானின் தலைமை செயல் அதிகாரி ரகு பணிக்கர் அதுகுறித்துப் பேசியபோது, "பேக்கேஜிங் என்பது ஒரு சிப்பை ஒரு பெட்டியில் வைப்பது மட்டுமல்ல. இது 10 முதல் 12 கட்டங்களைக் கொண்ட ஓர் உற்பத்திச் செயல்முறை" என்றார். "அதனால்தான், பேக்கேஜிங் மற்றும் சோதனையைச் செய்வது, சிப்களை உருவாக்குவதைப் போலவே மிகவும் முக்கியமானது. இது இல்லையென்றால், வேஃபர் பயனற்றதாகிவிடும்," என்றும் அவர் குறிப்பிட்டார். சமீபத்திய மொபைல் போன்களில் காணப்படும் அல்லது செயற்கை நுண்ணறிவுக்குப் பயிற்சி அளிக்கப் பயன்படுத்தப்படும் மிகவும் மேம்பட்ட கணினி சிப்களை இவரது ஆலை தயாரிக்காது. "ஆரம்பக் கட்டத்திலேயே இந்தியாவுக்கு மிகவும் சிக்கலான தரவு மையம் அல்லது செயற்கை நுண்ணறிவு சிப்கள் தேவையில்லை. அங்கு நமது தேவை இல்லை என்பதோடு, அங்கு நாம் பலமாகவும் இல்லை" என்கிறார் ரகு பணிக்கர். பட மூலாதாரம்,Getty Images அதற்குப் பதிலாக, அவர்கள் கார், தொலைத்தொடர்பு, பாதுகாப்புத் துறை ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் சிப் வகைகளைத் தயாரிப்பார்கள். "இவை கவர்ச்சிகரமான சிப்கள் இல்லை. ஆனால், அவை இந்தியாவுக்கு பொருளாதார ரீதியாகவும் உத்தி ரீதியாகவும் முக்கியமானவை. முதலில் நமது சொந்த சந்தைக்குச் சேவையாற்றுவதன் மூலம் ஒரு தொழில்துறையை உருவாக்க வேண்டும். அதன் சிக்கலான தன்மை அதற்கடுத்து வரக்கூடும்" என்று ரகு பணிக்கர் தெரிவித்தார். கேன்ஸ் செமிகான் நிறுவனத்திற்கு இதுவொரு கடினமான கற்றல் அனுபவமாக இருந்துள்ளது. "நாம் இதற்கு முன்பு இந்தியாவில் செமிகண்டக்டர் தூய்மை அறைகளை உருவாக்கியதில்லை. நாம் இதற்கு முன்பு இந்த உபகரணங்களை நிறுவியதில்லை. நாம் இதற்கு முன்பு இதற்காக யாருக்கும் பயிற்சி அளித்ததில்லை," என்கிறார் பணிக்கர். அவரைப் பொறுத்தவரை, "செமிகண்டக்டர் சிப்களுக்கு, பாரம்பரிய உற்பத்தி முறைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஓர் ஒழுங்கு, ஆவணப்படுத்தல் மற்றும் செயல்முறைக் கட்டுப்பாடு தேவைப்படுகிறது. அந்த கலாசார மாற்றம் தொழில்நுட்ப மாற்றத்தைப் போலவே முக்கியமானது." ஊழியர்களுக்குப் பயிற்சி அளிப்பது ஒரு மிகப்பெரிய சவாலாக இருந்துள்ளது. ரகு பணிக்கரின் கூற்றுப்படி, "பயிற்சிக்கு நேரம் எடுக்கும். ஐந்து வருட அனுபவத்தை ஆறு மாதங்களில் சுருக்கிவிட முடியாது. அதுதான் மிகப் பெரிய தடையாக இருக்கிறது." பெங்களூருவில் உள்ள தேஜஸ் நெட்வொர்க்ஸ் நிறுவனத்தில், அர்னாப் ராய் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிகமான தொழில்நுட்பப் பொருட்களை வாங்குவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறார். "அடுத்த பத்து ஆண்டுகளில், இந்தியாவில் ஒரு குறிப்பிடத்தக்க செமிகண்டக்டர் உற்பத்தி தளம் உருவாகும் என்று எதிர்பார்க்கிறோம். அது எங்களைப் போன்ற நிறுவனங்களுக்கு நேரடியாக உதவும்," என்கிறார் அர்னாப் ராய். அவரது கூற்றுப்படி, இதுவொரு நீண்ட பயணத்திற்கான தொடக்கம். "இந்திய நிறுவனங்கள் இறுதியில் முழுமையான தொலைத்தொடர்பு சிப்செட்களை வடிவமைத்து தயாரிக்கும் என்று நம்புகிறேன். ஆனால், அதற்கு முதலீடும் நேரமும் தேவைப்படும். ஆழ்ந்த தொழில்நுட்ப தயாரிப்புகள் முதிர்ச்சியடைய அதிக காலம் எடுக்கும். அதோடு இந்தியா இப்போதுதான் அத்தகைய முதலீட்டை ஆதரிக்கத் தொடங்கியுள்ளது." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cg7yp0eljk0o
-
ஈரானை நோக்கி அமெரிக்கக் கடற்படை சென்று கொண்டிருப்பதாக ட்ரம்ப் தெரிவிப்பு!
ஈரான் மீது ட்ரம்ப் விதித்துள்ள 02 முக்கிய நிபந்தனைகள் Published By: Digital Desk 3 30 Jan, 2026 | 03:19 PM வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்கா தனது இராணுவ பலத்தைக் குவித்து வரும் நிலையில், ஈரான் உடனான மோதலைத் தவிர்க்க அந்த நாடு இரண்டு காரியங்களைச் செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை (ஜன 29) தெரிவித்துள்ளார். வொஷிங்டனில் தனது மனைவி மெலனியா குறித்த ஆவணப்படத்தின் (Documentary) வெளியீட்டு விழாவில் பேசிய ட்ரம்ப், ஈரானுக்கு விடுத்துள்ள நிபந்தனைகள்: ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தைக் கைவிட்டு, அணு ஆயுதங்களை உருவாக்க மாட்டோம் என்று உறுதி அளிக்க வேண்டும். ஈரானில் அரசுக்கு எதிராகப் போராடுபவர்களைக் கொல்வதை அந்த நாட்டு அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும். "அவர்கள் ஆயிரக்கணக்கானோரைக் கொன்று வருகிறார்கள்" என்று ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். ஈரானை நோக்கி மிக சக்திவாய்ந்த அமெரிக்கப் போர்க்கப்பல்கள் சென்று கொண்டிருப்பதை உறுதிப்படுத்திய ட்ரம்ப், "அவற்றை நாங்கள் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படாமல் இருந்தால் நன்றாக இருக்கும்" என எச்சரிக்கும் தொனியில் பேசினார். ஏற்கனவே ஈரானுக்கு எதிராக 'ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்' போன்ற தாக்குதல்களை முன்னெடுத்த டிரம்ப், பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் அடுத்த தாக்குதல் "மிக மோசமானதாக இருக்கும்" என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். ட்ரம்ப்பின் இந்த மிரட்டலுக்கு ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி கடும் பதிலடி கொடுத்துள்ளார். ஈரானிய ராணுவம் எந்த நேரத்திலும் பதிலடி கொடுக்கத் தயாராக இருப்பதாகவும், அவர்களின் "விரல்கள் தூண்டுதலில் (Trigger) இருப்பதாகவும்" அவர் தெரிவித்துள்ளார். அணுசக்தி நிலைப்பாடு: ஈரான் எப்போதும் அமைதியான முறையில் அணுசக்தியைப் பயன்படுத்துவதையே விரும்புவதாகவும், அணு ஆயுதங்களை உருவாக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை எனவும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். சமமான மற்றும் மரியாதையான பேச்சுவார்த்தைக்கே ஈரான் தயாராக உள்ளதே தவிர, மிரட்டல்களுக்குப் பணியாது எனவும் அரக்சி கூறியுள்ளார். ஈரானிய நாணயத்தின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் இறுதியில் அங்கு பெரிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. https://www.virakesari.lk/article/237407
-
கியூபாவிற்கு எண்ணெய் விநியோகிக்கும் எந்தவொரு நாட்டிற்கும் வரி விதிக்கப்படும் – ட்ரம்ப் எச்சரிக்கை!
கியூபாவுக்கு எண்ணெய் வழங்கும் நாடுகள் மீது வரிகளை விதிப்பதாக ட்ரம்ப் மிரட்டல் Published By: Digital Desk 3 30 Jan, 2026 | 09:11 AM கம்யூனிச நாடான கியூபாவுக்கு மசகு எண்ணெய் வழங்கும் நாடுகள் மீது கடும் வரிகளை விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை (ஜன 29) மிரட்டல் விடுத்துள்ளார். இதன் மூலம் கியூபா மீதான தனது பொருளாதார அழுத்தத்தை அவர் உச்சகட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளார். கியூபா அரசாங்கத்தை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு "அச்சுறுத்தல்" என குறிப்பிட்ட ட்ரம்ப், தேசிய அவசரநிலை பிரகடனத்தின் கீழ் இந்த நிறைவேற்று ஆணையில் கையெழுத்திட்டுள்ளார். கியூபாவுக்கு மசகு எண்ணெய் அல்லது பெற்றோலியப் பொருட்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வழங்கும் எந்தவொரு நாட்டின் மீதும் மேலதிக வரிகளை விதிக்க இந்த ஆணை வழிவகை செய்கிறது. இந்த உத்தரவில் குறிப்பிட்ட வரி விகிதங்களோ அல்லது நாடுகளின் பெயர்களோ இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும், மெக்சிகோ மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் இதன் மூலம் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 03 ஆம் திகதி அமெரிக்க இராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதலில் வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ சிறைப்பிடிக்கப்பட்டார். வெனிசுவேலா தான் கியூபாவுக்கு நீண்டகாலமாக எண்ணெய் வழங்கி வந்தது. தற்போது மதுரோவின் வீழ்ச்சிக்குப் பின்னர், கியூபாவுக்கான எண்ணெய் விநியோகம் முற்றிலும் நின்றுபோயுள்ளது. "கியூபா விரைவில் வீழ்ச்சியடையும். வெனிசுவேலாவிலிருந்து இனி ஒரு சொட்டு எண்ணெய்யோ அல்லது ஒரு டொலர் பணமோ கியூபாவுக்குப் போகாது" என ட்ரம்ப் இந்த வார ஆரம்பத்தில் தெரிவித்திருந்தார். https://www.virakesari.lk/article/237382
-
இலங்கை - அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு: பேரனர்த்த மீட்சித் திட்டத்தில் புதிய முன்னெடுப்பு
இலங்கை - அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு: பேரனர்த்த மீட்சித் திட்டத்தில் புதிய முன்னெடுப்பு 30 Jan, 2026 | 12:19 PM டிட்வா சூறாவளியினைத் தொடர்ந்து சுகாதார வசதிகள் மற்றும் முக்கியமான உட்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடுவதற்காக இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) மற்றும் பிற அரச நிறுவனங்களைச் சேர்ந்த தமது எதிரிணைகளுடன் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் மொன்டானா தேசிய காவல் படையினைச் சேர்ந்த பொறியியலாளர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் குழுவொன்றை இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இவ்வாரம் வரவேற்றது. பேரனர்த்தத்திற்குப் பின்னரான மீட்சியினை நீண்டகால மீண்டெழும் தன்மை மற்றும் நிறுவன ரீதியிலான திறனுடன் இணைத்து, மனிதாபிமான உதவிகளுக்கான அமெரிக்காவின் பங்காண்மை அடிப்படையிலான அணுகலை இவ்விஜயம் பிதிபலிக்கிறது. அமெரிக்காவில் இயற்கை பேரனர்த்தங்களுக்கு பதிலளிப்பதில் தமக்கிருக்கும் விரிவான அனுபவத்தைப் பயன்படுத்தி, மீட்புத் திட்டமிடலுக்கு உதவி செய்வதற்காகவும் எதிர்கால அமெரிக்க மனிதாபிமான உதவி முடிவுகளைத் தெரிவிப்பதற்காகவும் கொழும்பு, பதுளை, நுவரெலியா, கண்டி, மாத்தளை மற்றும் புத்தளம் ஆகிய இடங்களில் மொன்டானா தேசிய காவல் படை கள விஜயங்களை மேற்கொண்டது. இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பாதுகாப்பு இராஜதந்திர அதிகாரியும், சிரேஷ்ட பாதுகாப்பு அலுவலருமான லெஃப்டினன் கேணல் மெத்திவ் ஹவ்ஸ், “பங்காண்மைகள் மிக முக்கியமானதாக அமையும் களத்தில் அமெரிக்க-இலங்கை பங்காண்மை எவ்வாறுள்ளதென்பதை இவ்விஜயம் காட்டுகிறது.” எனக் குறிப்பிட்டார். “இலங்கை எதிரிணைகளுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலமும், தமது நாட்டில் இடம்பெற்ற மெய்யான பேரனர்த்தங்களின் போது மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அனுபவங்களைக் கொண்ட மொன்டானா தேசிய காவல்படையினைச் சேர்ந்த பொறியியலாளர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களைப் பயன்படுத்துவதன் மூலமும், நாங்கள் தற்போதய மீட்சிக்கு உதவி செய்வதுடன், எதிர்காலத்திற்கான வலுவான கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும் உதவுகிறோம்.” என அவர் மேலும் தெரிவித்தார். போர்த் திணைக்களத்தின் State Partnership Program (SPP) இன் கீழ் ஒத்துழைப்பினை உத்தியோகபூர்வமாக முறைப்படுத்தும் வகையில், மொன்டானா தேசிய காவல் படைக்கும், இலங்கை பாதுகாப்பமைச்சிற்கும் இடையில் 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கைச்சாத்திடப்பட்ட ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இது முன்னெடுக்கப்படுகிறது. மொன்டானாவில், காட்டுத்தீ மற்றும் வெள்ளம் முதல் கடுமையான குளிர்கால புயல்கள் வரை இயற்கைப் பேரனர்த்தங்களின் போது மாநிலத்தின் முதன்மை பதிலளிப்பாளராக தேசிய காவல்படை செயற்படுவதனால் இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ நிறுவனங்களுடனான அதன் பங்காண்மையானது வலுவான மற்றும் நடைமுறையில் பொருத்தமான ஒன்றாக அமைகிறது. “சமூகங்களுக்கு மிகவும் அவசியமாக உதவி தேவைப்படும்போது பொதுமக்களுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றி, எமது மாநிலத்தில் ஏற்படும் இயற்கையனர்த்தங்களுக்குப் பதிலளிப்பதில் மொன்டானா தேசிய காவல் படை ஒரு முக்கிய பங்கினை வகிக்கிறது.” என மொன்டானா தேசிய காவல் படையின் பிரதான நிர்வாக அதிகாரியான பிரிகேடியர் ஜெனரல் ட்ரென்ட் கிப்சன் தெரிவித்தார். “இலங்கையுடனான இப்பங்காண்மையினை நாங்கள் எவ்வாறு அணுகுகிறோம் என்பதை அவ்வனுபவம் வடிவமைக்கிறது. நாங்கள் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை மட்டும் பகிர்ந்து கொள்ளவில்லை. நம்பிக்கை, ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர மரியாதை ஆகிய பண்புகளில் வேரூன்றிய உறவுகளையும் கட்டியெழுப்புகிறோம். பங்காளர்களாக மட்டுமன்றி, நண்பர்களாகவும் இலங்கையுடன் இணைந்து நிற்பதில் நாங்கள் பெருமையடைகிறோம். அதுவே மொன்டானா பாணியாகும்.” என அவர் மேலும் தெரிவித்தார். இச்செயற்பணியானது பாதுகாப்பை பலப்படுத்துவதற்காகவும், பேரனர்த்தங்களின் போது மீட்புப்பணிகளை மேற்கொள்ளும் திறன்களை மேம்படுத்துவதற்காகவும் மற்றும் நீடித்த உறவுகளை பேணி வளர்ப்பதற்காகவும் மொன்டானா தேசிய காவல் படையினை இலங்கையுடன் இணைக்கும் State Partnership Program (SPP) நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக இடம்பெறும் பல வருட கால ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்டதாகும். மனிதாபிமான உதவி மற்றும் பேரனர்த்தங்களின் போது மீட்புப்பணிகளை மேற்கொள்வதற்கான தயார்நிலை ஆகியவற்றினை மேம்படுத்துவதற்காக அமெரிக்க மற்றும் இலங்கை அதிகாரிகள் ஒன்றிணைந்து அருகருகே பணியாற்றியதை ATLAS ANGEL 2024 மற்றும் PACIFIC ANGEL 2025 போன்ற சமீபத்திய ஈடுபாடுகள் வெளிப்படுத்தின. டிட்வா சூறாவளியினைத் தொடர்ந்து பதிலளிப்பு நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்வதற்கு இந்த உறவுகள் முக்கியமானவை என்பதை அவை நிரூபித்தன. இவ்வொத்துழைப்பினை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தைச் சேர்ந்த இலங்கை அதிகாரிகள் வரவேற்றனர். “நிஜ உலக பேரனர்த்தங்களின்போது மேற்கொள்ளப்பட்ட பதிலளிப்பு நடவடிக்கைகளிலிருந்து பெறப்பட்ட மதிப்புமிக்க அனுபவங்களை இப்பங்காண்மை எடுத்து வருகிறது” என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேகொட கூறினார். “மொன்டானா தேசிய காவல்படை வழங்கிய அறிவு நுட்பமான கருத்துக்களும் தொழிநுட்ப நிபுணத்துவமும் எமது மீட்பு முயற்சிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததுடன், எதிர்கால அவசரநிலைகளை முகாமை செய்வதற்கான எமது தேசிய திறனையும் அவை பலப்படுத்தின. இவ்வொத்துழைப்பானது ஒரு முறையான மதிப்பீட்டை விட அதிகமானதாகும்; இது எமது நாடுகளுக்கிடையில் காணப்படும் நீடித்த பங்காண்மைக்கான ஒரு சான்றாகும்.” என அவர் மேலும் கூறினார். 4 மில்லியன் டொலர்கள் பெறுமதியான அமெரிக்க மனிதாபிமான உதவிகள், பேரனர்த்தங்களுக்கான பதிலளிப்பு மற்றும் அவசர விமானப் போக்குவரத்துத் திறன் ஆகியவற்றை பலப்படுத்துவதற்காக U.S. Excess Defense Articles நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பத்து Bell 206 (TH-57) ஹெலிகொப்டர்களை இலங்கை விமானப் படைக்கு வழங்கியமை, முக்கியமான உதவிகளை விநியோகிப்பதற்காக அமெரிக்க விமானப்படையின் C-130 விமானங்கள் மேற்கொண்ட நிவாரண வான் போக்குவரத்து உதவி உள்ளிட்ட டிட்வா சூறாவளியினைத் தொடர்ந்து வழங்கப்படும் விரிவான அமெரிக்க உதவிகளின் தொடராக மொன்டானா தேசிய காவல்படையின் இவ்விஜயம் அமைகிறது. இம்முயற்சிகள் அனைத்தும் பங்காண்மை மற்றும் பகிரப்பட்ட திறன்கள் ஊடாக இலங்கையின் மீட்சிக்கும் நீண்டகால மீண்டெழும் தன்மைக்கும் உதவி செய்வதற்கான அமெரிக்காவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன. மொன்டானா தேசிய காவல் படையினைப் பற்றி: மொன்டானா மாநிலத்தின் ஹெலனா நகரில் தனது தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ள மொன்டானா தேசிய காவல் படையானது, தமது மாநிலம் மற்றும் தமது நாடு ஆகிய இரண்டிற்கும் சேவையாற்றும், சிறப்பாகப் பயிற்சியளிக்கப்பட்ட இராணுவ மற்றும் விமானப்படை வீரர்களைக் கொண்டதாகும். சமஷ்டி அரசின் செயற்பணிகளுக்கான தயார்நிலையைப் பேணும் அதேவேளை, மொன்டானா மாநிலத்தினுள் நிகழும் இயற்கையனர்த்தங்களுக்கான முதன்மை பதிலளிப்பாளராக, சமூகங்களை பாதுகாப்பதில் இக்காவற்படை மிகமுக்கிய பங்கு வகிக்கிறது. State Partnership Program நிகழ்ச்சித்திட்டத்தினூடாக நிலைபேறான, பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பினூடாக பேரனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான தயார்நிலை, மீண்டெழும் தன்மை மற்றும் நிறுவன ரீதியிலான திறன்களை பலப்படுத்துவதற்காக 2021ஆம் ஆண்டு முதல் மொன்டானா தேசிய காவல்படை இலங்கையுடன் கூட்டுச் சேர்ந்துள்ளது. https://www.virakesari.lk/article/237398
-
கருத்து படங்கள்
அத தெரண கருத்துப்படங்கள்.
-
சங்கானை இராணுவ முகாமை அகற்றுமாறு பவானந்தாஜா எம்.பி கோரிக்கை!
இராணுவ முகாமை அகற்றுமாறு பவானந்தாஜா எம்.பி கோரிக்கை! Jan 30, 2026 - 05:40 PM சங்கானையில் அமைந்துள்ள இராணுவ முகாமினை அகற்றிவிட்டு அந்த காணியை மக்களிடம் கையளிக்குமாறு இராணுவத்தினரிடம் கோரிக்கை முன்வைத்ததாக பாராளுமன்ற உறுப்பினரும், வலி. மேற்கு அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார். ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், சுழிபுரத்தில் 30 வருடமாக நிலை கொண்டிருந்த இராணுவ முகாம் அகற்றப்பட்டு அந்த காணியின் உரியவர்களான பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தினரிடம் ஒப்படைத்து இருக்கின்றோம். சங்கனை கிழக்கு பகுதியிலும் ஒரு இராணுவ முகாம் அமைந்திருக்கின்றது. அது தனியாரின் காணி. அந்தக் காணியையும் பொதுமக்களிடம் கையளிக்குமாறு நாங்கள் இராணுவத்திடம் கோரி இருந்தோம். அவர்கள் அதனை சாதகமாக பரிசீலிப்பதாக கூறினார்கள். மேலும் இன்றைய கூட்டம் சமூகமாக நடைபெற்றது. சென்ற கூட்டமானது நடைபெற்றபோது கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் அதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது. மேலும் இன்றைய கூட்டத்தில் பொதுமக்கள் தமது கோரிக்கைகளை முன் வைத்திருந்தனர். நாங்கள் அவற்றை சாதகமாக பரிசீலிக்கின்றோம். இங்கே தீர்வு காணப்படக்கூடிய விடயங்களுக்கு இங்கே தீர்வை கண்டு, மேலதிகமாக ஏதாவது விடயங்கள் இருந்தால் அவற்றை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு கொண்டு சென்று அதற்குரிய நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம் என தெரிவித்தார். -யாழ். நிருபர் கஜிந்தன்- https://adaderanatamil.lk/news/cml0udcrw04mho29n6c8je0tg
-
மார்ச் மாதத்தில் மின் துண்டிப்பு ஏற்படக் கூடிய வாய்ப்புள்ளது - பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் எச்சரிக்கை
மார்ச் மாதத்தில் மின் துண்டிப்பு ஏற்படக் கூடிய வாய்ப்புள்ளது - பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் எச்சரிக்கை 29 Jan, 2026 | 04:50 PM (எம்.மனோசித்ரா) அரசாங்கத்தால் திட்டமிட்டு தரக்குறைவான நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலக்கரி தொகையைக் கொண்டு பயன்பாட்டுக்கு தேவையானளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது. எனவே மார்ச் மாதத்தில் பெரும்பாலும் மின் துண்டிப்பு ஏற்படக் கூடிய வாய்ப்புள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் வியாழக்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறி ஆட்சியை பொறுப்பேற்ற இந்த அரசாங்கம் தற்போது தமது ஆட்சியில் இடம்பெறும் ஊழல், மோசடிகளை மறைப்பதிலேயே அவதானம் செலுத்தி வருகிறது. இலங்கை நிலக்கரி சங்கத்தால் நாட்டுக்கு தரக் குறைவான நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் நாம் பாராளுமன்றத்திலும், பாராளுமன்றத்துக்கு வெளியிலும் பல்வேறு காரணிகளை வெளிப்படுத்தியிருக்கின்றோம். நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கான விலைமுறி கோரலில் ஆரம்பித்து ஆரம்பத்திலிருந்தே மோசடிகள் இடம்பெற்று வருகின்றன. அதாவது மோசடியை இலக்காக வைத்து தான் இந்த செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கான விலைமுறி கோரலுக்கு 48 நாட்கள் கால அவகாசம் வழங்குவதே வழமையான நடைமுறையாகும். ஆனால் அதனை 21 நாட்களுக்கு குறைத்து தான் இந்த நடைமுறை ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாறு திட்டமிட்டு தரக்குறைவான நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆரம்பத்தில் வலுசக்தி அமைச்சர் இந்த குற்றச்சாட்டை முற்றாக நிராகரித்தார். எனினும் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மாதிரி பரிசோதனைகளில் நிலக்கரி தரமற்றது என்பது நிரூபனமாகியுள்ளது. தொடர்ச்சியாக இவ்வாறு தரக்குறைவான நிலக்கரி இறக்குமதி செய்யப்படும் பட்சத்தில் மார்ச்சில் நிச்சயம் மின்துண்டிப்பு ஏற்படும். தரத்தில் குறைந்த இந்த நிலக்கரியைப் பயன்படுத்தி தேவைக்கேற்ப மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது. இந்த நிலக்கரி மற்றும் டீசல் மாபியாக்களின் செயற்பாடுகளால் மார்ச்சில் மின் துண்டிப்பு ஏற்பட பெரும்பாலும் வாய்ப்புள்ளது. இது மத்திய வங்கி மோசடியை விட பாரிய மோசடியாகும். கடந்த ஆட்சி காலங்களில் கொள்ளையர்கள் மோசடி செய்தனர். ஆனால் தற்போது அரசாங்கமே நேரடியாக மோசடிகளில் ஈடுபடுகிறது என்றார். https://www.virakesari.lk/article/237352
-
பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளம் போதுமானதல்ல
பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளம் போதுமானதல்ல Jan 30, 2026 - 01:00 PM பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளம், அவர்கள் வழங்கும் அர்ப்பணிப்புக்கு போதுமானதாக அமையவில்லை என பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். பொலிஸ் குற்ற அறிக்கை பிரிவில் இன்று (30) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளம், அவர்கள் வழங்கும் அர்ப்பணிப்புக்கு போதுமானதாக அமையவில்லை என்பதை நாம் அறிந்துள்ளோம். இது தொடர்பில் அரசாங்கத்திற்கு தௌிவுப்படுத்திய நிலையில், அது குறித்து ஆராய அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அந்த குழுவுக்கு தேவையான அளவு எமது யோசனைகளை நாம் முன்வைத்துள்ளோம். இது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கிறோம். அதேநேரம் பொலிஸ் துறையில் 32000 பொலிஸ் அதிகாரிகளுக்கு பற்றாக்குறை உள்ளது. இந்த வருடத்தில் 2500 பேரும், அடுத்த வருடத்தில் 2700 பேரும் ஓய்வு பெறவுள்ளனர். எனவே அவர்களை யாரும் தடுக்க முடியாது. இந்நிலையில் பொலிஸ் துறையில் புதிதாக 10000 பேரை சேவையில் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் முன்னடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். https://adaderanatamil.lk/news/cml0kd9ri04lto29nk5lo24vj
-
ஊழல் மற்றும் மோசடிக்கு எதிரான பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை அரச அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும் - ஜனாதிபதியின் செயலாளர்
ஊழல் மற்றும் மோசடிக்கு எதிரான பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை அரச அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும் - ஜனாதிபதியின் செயலாளர் Published By: Vishnu 30 Jan, 2026 | 04:29 AM இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற நேர்மையான அரச சேவையை கட்டியெழுப்புவதற்கான அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு இணங்க, உள்ளக விவகாரப் பிரிவுகளை நிறுவ அறிவுறுத்தப்பட்டுள்ள 250 அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு தெளிவூட்டும் செயலமர்வு, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் வியாழக்கிழமை (29) இலங்கை மன்றக் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த வேலைத்திட்டத்தின் முதல் கட்டமாக, 106 அரச நிறுவனங்களில் உள்ளக விவகாரப் பிரிவுகள் நிறுவப்பட்டு, இதற்கு முன்னர் பயிற்சிகள் நடைபெற்றதுடன், இரண்டாவது கட்டமாக, மேலும் 250 அரச நிறுவனங்களில் உள்ளக விவகார பிரிவுகளை நிறுவ அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. அதன்படி, Clean Sri Lanka வேலைத் திட்டத்தின் கீழ் ஜனாதிபதி செயலகத்தால் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது. கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் தரவரிசையில் இலங்கை உயர் இடத்தில் இருந்தாலும், 2024 ஊழல் புலனாய்வு குறியீட்டில் இலங்கை 121 ஆவது இடத்தில் உள்ளதுடன், இது ஏனைய துறைகளில் தரவரிசையில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க தெரிவித்தார். கடந்த மக்கள் எழுச்சியின் முக்கிய கோசம் ஊழல் அரசியலுக்கு எதிரானதாக இருந்தாலும், அந்த குற்றச்சாட்டு ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் மீது மாத்திரமன்றி, ஊழல் நிறைந்த அரச அதிகாரிகள் மீதும் சுமத்தப்பட்டதாக தெரிவித்த ஜனாதிபதியின் செயலாளர், நாடு பொருளாதார ரீதியாக வங்குரோத்தடைந்து, அதன் பாதகமான விளைவுகளை மக்கள் அனுபவித்து வரும் நேரத்தில் மக்கள் எழுச்சி ஏற்பட்டதாகவும், மக்கள் எழுச்சி ஒரு முறையான செயல்முறையின் இறுதி விளைவாகும் என்றும் குறிப்பிட்டார். இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, மக்களின் எழுச்சியை அற்பமானதாக கருத முடியாது. அது மிகவும் சக்தி வாய்ந்தது. எனவே, அரசியல்வாதிகள் மாத்திரமன்றி, அரச அதிகாரிகளும் மக்களின் எழுச்சி மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகளைப் பற்றிய புரிதலைக் கொண்டிருக்க வேண்டும். அரச ஊழியர்களாக, மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க நாம் கடமைப்பட்டுள்ளோம். எனவே, மக்களுக்கு வழங்கப்படும் அரச சேவைகளின் தரத்தை மேம்படுத்த ஒரு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தோம். அதற்காகத்தான் நாம் உள்ளக விவகாரப் பிரிவுகளை நிறுவியுள்ளோம். அரச அதிகாரிகள் தமது கடமைகளைச் செய்யும்போது அவர்களின் நேர்மையை வளர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். இதன் மூலம் அரச துறையில் ஊழல் கலாசாரத்தை மாற்ற முடியும். அரச சேவைக்குள் நேர்மையான கலாசாரத்தை உருவாக்குவதற்கான ஒரு பொறிமுறையாகவும், அரச அதிகாரிகளின் நேர்மையை பொதுமக்கள் அறிந்துகொள்ள உதவும் ஒரு தளமாகவும் உள்ளக விவகாரப் பிரிவுகளைக் கருதலாம்'' என்றும் தெரிவித்தார். இந்நிகழ்வில் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சந்திமா விக்ரமசிங்க மற்றும் களனி பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் தரிந்து தனஞ்சய வீரசிங்க ஆகியோர் உரைகளை நிகழ்த்தினர். https://www.virakesari.lk/article/237370
-
இந்தியா - ஐரோப்பிய ஒன்றியத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்!
'மிகுந்த ஏமாற்றம்': இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம் பற்றி அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,Press Information Bureau (PIB)/Anadolu via Getty Images 29 ஜனவரி 2026 இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா எதிர்வினையாற்றியுள்ளது. இந்தியாவும் ஐரோப்பாவும் இந்த வர்த்தக ஒப்பந்தத்தை 'அனைத்து ஒப்பந்தங்களின் தாய்' என்று அழைக்கின்றன. ஆனால் அமெரிக்க கருவூலத்துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் இந்த ஒப்பந்தத்தை விமர்சித்துள்ளார். சிஎன்பிசி செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், "அவர்கள் தங்களுக்கு எது சிறந்ததோ அதைச் செய்யட்டும். ஆனால் ஐரோப்பாவின் இந்த அணுகுமுறை எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது," என்று கூறினார். "யுக்ரேன் - ரஷ்யா போரினால் பாதிக்கப்பட்டவர்களின் வரிசையில் இவர்கள்தான் முன்னணியில் இருக்கிறார்கள். இந்தியா முதலில் தடை செய்யப்பட்ட ரஷ்ய எண்ணெயை தள்ளுபடி விலையில் கிடைத்ததால் வாங்கத் தொடங்கியது. பின்னர், ஐரோப்பா அதே சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை இந்தியாவிடமிருந்து வாங்கத் தொடங்கியது. இதன் பொருள் அவர்கள் தங்களுக்கு எதிரான போருக்கு அவர்களே நிதியளிக்கிறார்கள் என்பதுதான்," என்று ஸ்காட் பெசென்ட் குறிப்பிட்டார். இந்தியா மீதான 'அழுத்தத்தை அதிகரிக்க', அமெரிக்கா 25 சதவீத கூடுதல் வரியை விதித்ததாகவும், ஆனால் ஐரோப்பா அவ்வாறு செய்யவில்லை என்றும் பெசென்ட் கூறினார். "ஐரோப்பியர்கள் எப்போதும் யுக்ரேன் மக்களின் நலனைப் பற்றிப் பேசுகிறார்கள், ஆனால் இந்தியாவுடன் இந்த ஒப்பந்தத்தைச் செய்ததன் மூலம், அவர்கள் யுக்ரேன் மக்களை விட வர்த்தகத்தில்தான் அதிக அக்கறை கொண்டுள்ளனர் என்பதைக் காட்டியுள்ளனர்'' என்று கூறினார். பெசென்ட் இதற்கு முன்பும் இந்த ஒப்பந்தத்தை விமர்சித்திருந்தார். ஜனவரி 26 அன்று ஏபிசி நியூஸிடம் பேசிய அவர், "யுக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர ஐரோப்பாவை விட அமெரிக்கா அதிக தியாகம் செய்துள்ளது. ரஷ்ய எண்ணெயை வாங்கியதற்காக இந்தியா மீது நாங்கள் 25 சதவீத வரி விதித்தோம். ஐரோப்பா இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யப் போகிறது," என்று கூறினார். பட மூலாதாரம்,Chris J. Ratcliffe/Bloomberg via Getty Images படக்குறிப்பு,ஜேமிசன் கிரீர் 'இந்தியாவுக்கு சாதகமான ஒப்பந்தம்' முன்னதாக, அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர், ஃபாக்ஸ் பிசினஸ் ஊடகத்திடம் பேசுகையில், இந்த ஒப்பந்தம் ஐரோப்பாவை விட இந்தியாவிற்கு சாதகமாக இருப்பதாகத் தெரிவித்தார். "இதுவரை இந்த ஒப்பந்தத்தின் சில விவரங்களை நான் பார்த்துள்ளேன். தெளிவாகச் சொல்லப்போனால், இதன் மூலம் இந்தியா அதிக பலன்களைப் பெறுவது போல் தெரிகிறது. ஐரோப்பிய சந்தைகளில் இந்தியாவிற்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும்," என்றார். இந்தியா ரஷ்ய எண்ணெயை இன்னும் வாங்குகிறதா என்ற கேள்விக்கு கிரீர் பதிலளிக்கையில், "அவர்கள் இந்த திசையில் நிறைய முன்னேற்றம் அடைந்துள்ளனர். ஆனால் இந்த விவகாரத்தில் அவர்கள் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. அவர்களுக்குத் தள்ளுபடி விலையில் கிடைக்கும் ரஷ்ய எண்ணெய் பிடித்துள்ளது. எனவே அதை விட்டுக்கொடுப்பது அவர்களுக்கு கடினமாக உள்ளது," என்று கூறினார். இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம் பட மூலாதாரம்,Prakash Singh/Bloomberg via Getty Images ஜனவரி 27 அன்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அந்தோனியோ லூயிஸ் சாண்டோஸ் டா கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் இணைந்து இந்தியா - ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்தனர். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோதி, ''இந்தியா தனது வரலாற்றிலேயே இதுவரை இல்லாத மிகப்பெரிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவு செய்துள்ளது. இன்று 27-ஆம் தேதி, ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளுடன் இந்தியா தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை செய்திருப்பது ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு" என்றார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் , மற்ற நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க வர்த்தகத்தை ஒரு ராஜீய ஆயுதமாகப் பயன்படுத்துகிறார். இதுவே இந்த ஒப்பந்தத்திற்கு மிக முக்கிய காரணம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பட மூலாதாரம்,Harun Ozalp/Anadolu via Getty Images படக்குறிப்பு,ஸ்காட் பெசென்ட் அமெரிக்காவின் வரி நடவடிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக, ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கி வேகமாக நகர்ந்தன என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கிரீன்லாந்து மீதான அமெரிக்கக் கட்டுப்பாட்டை ஐரோப்பிய நாடுகள் எதிர்த்ததால், அவர்கள் மீது வரி விதிக்கப்படும் என ஆரம்பத்தில் மிரட்டினார், ஆனால் பின்னர் தனது முடிவிலிருந்து பின்வாங்கினார். ரஷ்ய எண்ணெய் வாங்குவதைக் காரணம் காட்டி, இந்தியா மீது அமெரிக்கா 25 சதவீத கூடுதல் வரியை விதித்தது. ஒட்டுமொத்தமாக, டிரம்ப் நிர்வாகம் இந்தியா மீது 50 சதவீத வரியை விதித்துள்ளது. ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் பட மூலாதாரம்,Press Information Bureau (PIB)/Anadolu via Getty Images ஐரோப்பிய ஆணையம் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில், இந்தியா தனது மற்ற வர்த்தக கூட்டாளிகளுக்கு வழங்காத வரிச் சலுகைகளை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கும் என்று கூறியுள்ளது. உதாரணமாக, கார்கள் மீதான வரி படிப்படியாக 110%-லிருந்து 10%-ஆகக் குறைக்கப்படும், அதே நேரத்தில் கார் பாகங்கள் மீதான வரி ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் முழுமையாக நீக்கப்படும். மேலும், இந்த ஒப்பந்தம் சிறிய ஐரோப்பிய நிறுவனங்கள் புதிய ஏற்றுமதி வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள உதவும். இயந்திரங்கள் மீது 44% வரையிலும், ரசாயனங்கள் மீது 22% வரையிலும் மற்றும் மருந்துகள் மீது 11% வரையிலும் விதிக்கப்படும் வரிகள் பெரும்பாலும் நீக்கப்படும். 2024–25 நிதியாண்டில், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான பொருட்கள் வர்த்தகம் சுமார் ரூபாய் 11.5 லட்சம் கோடியாகவும், சேவை வர்த்தகம் ரூபாய் 7.2 லட்சம் கோடியாகவும் இருந்தது. இந்த ஒப்பந்தத்தின் முதல் நாளிலிருந்தே ஜவுளி, ஆயத்த ஆடைகள் மற்றும் உடைகள் மீதான வரி பூஜ்ஜியமாக இருக்கும் என்று இந்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவிக்கிறது. ''இந்தச் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், 263.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஐரோப்பிய ஒன்றிய ஜவுளிச் சந்தைக்கான வாய்ப்பைத் திறந்துவிடும். இது கைவினைஞர்கள், பெண்கள், நெசவாளர்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் தொகுப்புகளுக்குப் குறிப்பிடத்தக்க வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.'' பிரதமர் நரேந்திர மோதி, இது உலகின் 2-வது பெரிய பொருளாதாரம் (ஐரோப்பா) மற்றும் 4-வது பெரிய பொருளாதாரம் (இந்தியா) இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது என எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஐரோப்பாவிற்கு 6.41 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்ய இந்தியா தயாராக உள்ளதாக அவரது பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, ''இந்தியாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்குச் செல்லும் சுமார் 99 சதவீத ஏற்றுமதிகள் இனி பூஜ்ஜிய வரி வரம்பிற்குள் வரும். அதேபோல், இந்தியா தனது 99 சதவீதத்திற்கும் மேலான ஏற்றுமதிக்கு ஐரோப்பிய சந்தையில் நேரடி மற்றும் எளிதான அணுகலைப் பெறும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியத் தொழிலாளர்களும் மாணவர்களும் பயனடைவார்கள். ஒப்பந்தத்தின்படி, தகவல் தொழில்நுட்பம் (IT), கல்வி மற்றும் நிதி போன்ற துறைகளில் இந்தியாவிற்கு அனுமதி வழங்கப்படும். அதோடு, ஐரோப்பாவிற்குப் படிக்கச் செல்லும் மாணவர்களுக்குப் படிப்பு முடிந்த பிறகு தங்குவதற்கான 9 மாத கால விசா கட்டமைப்பு குறித்தும் ஒப்புக்கொள்ளப்படுள்ளது.'' என தெரிவிக்கப்படுள்ளது - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c20zy1x308wo
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
புதிய மலசலகூடம் இனி கட்டுவது காரைநகரில் தான் அண்ணா.
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
சரி அண்ணை. நன்றி அண்ணை, படிப்படியாக தொடருவோம்.
-
பண்டத்தரிப்பில் இருந்து வெளியேறிய இராணுவம்; பிரதேச சபை எடுத்துள்ள முக்கிய தீர்மானம்
பண்டத்தரிப்பில் இருந்து வெளியேறிய இராணுவம்; பிரதேச சபை எடுத்துள்ள முக்கிய தீர்மானம் Published By: Vishnu 29 Jan, 2026 | 09:31 PM மானிப்பாய் பிரதேச சபைக்கு சொந்தமான பண்டத்தரிப்பில் உள்ள காணியில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் அக்காணியில் இருந்து புதன்கிழமை (28) முற்றாக வெளியேறியுள்ளனர். காணியில் இருந்து வெளியேறிய இராணுவத்தினர் காணியை சண்டிலிப்பாய் பிரதேச செயலரிடம் கையளித்த நிலையில் , பிரதேச செயலர் குமாரசாமி பிரபாகரமூர்த்தி , காணியை மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர் கந்தையா ஜெசிதனிடம் உத்தியோக பூர்வமாக கையளித்துள்ளார். மானிப்பாய் பிரதேச சபைக்கு சொந்தமான 31 பரப்புடைய காணியை யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் கடந்த 2012ஆம் ஆண்டளவில் இராணுவத்தினர் கையகப்படுத்தி இராணுவ முகாம் அமைத்திருந்தனர். குறித்த காணிக்குள் மானிப்பாய் பிரதேச சபைக்கு சொந்தமான "கொல்களம்" இருந்த நிலையில் , அதுவும் இராணுவத்தினரின் பிடிக்குள் இருந்ததால் , தெல்லிப்பழை பகுதியில் வாடகை இடமொன்றில் கொல்களம் இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை, காணி பிரதேச சபைக்கு மீள கிடைத்த நிலையில் , அது தொடர்பில் தவிசாளர் தெரிவிக்கையில், குறித்த காணியில் சபைக்கு வருமானத்தை ஈட்ட கூடிய வகையில் மிக சிறந்த பொருளாதார திட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும். காணிக்குள் முன்னர் கொல்களம் இயங்கி வந்தது. அதனை மீள அவ்விடத்தில் இயக்குவது தொடர்பில் அப்பிரதேச மக்கள் மற்றும் அப்பகுதி வட்டார உறுப்பினர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு , அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அதேவேளை கடந்த வாரம் சுழிபுரம் பகுதியில் இருந்த மினி இராணுவ முகாம் ஒன்றும் அகற்றப்பட்டு, அக்காணிகள் காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/237366
-
மாங்குளம் ஆதார வைத்திய சாலையில் புனரமைக்கப்பட்ட தாதியர் விடுதி
தாதியர் விடுதி Jan 27, 2026 - 06:13 PM முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதான வைத்தியசாலைகளில் ஒன்றான மாங்குளம் ஆதாரவைத்திய சாலையில் புனரமைக்கப்பட்ட தாதியர் விடுதி மற்றும் நோயாளர் காவு வண்டி தரிப்பிடம் மற்றும் சாரதி ஓய்வு அறை என்பன வடமாகாண ஆளுநரால் இன்று (27) காலை திறந்து வைக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டம், மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் புனரமைக்கப்பட்ட விடுதிகளைப் பாவனைக்குக் கையளிக்கும் நிகழ்வு இன்று வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்றது. வடக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், மாங்குளம் ஆதார வைத்தியசாலை வைத்தியர் விடுதி, தாதியர் விடுதி, துணை வைத்திய ஆளணியினர் விடுதி, சாரதி விடுதி மற்றும் நோயாளர் காவு வண்டித் தரிப்பிடம் என்பன புனரமைக்கப்பட்டு வருகின்றன. இதில் முதற்கட்டமாக முழுமையாகப் புனரமைக்கப்பட்ட தாதியர் விடுதி, நோயாளர் காவு வண்டித் தரிப்பிடம் மற்றும் சாரதி விடுதி என்பன இன்று திறந்து வைக்கப்பட்டன. இதில் தாதியர் விடுதியானது 8 அறைகள், சமையலறை மற்றும் உணவு அருந்தும் அறை உள்ளிட்ட வசதிகளைக் கொண்டுள்ளது. இலங்கை இராணுவத்தினரின் ஆதரவுடன் திருத்தப் பணிகள் இடம்பெற்ற இந்த தாதியர் விடுதி மற்றும் நோயாளர் காவு வண்டி தரிப்பிடம் மற்றும் சாரதி ஓய்வு அறை திறப்பு விழாவானது இன்று காலை 7.30 மணிக்கு மாங்குளம் ஆதார வைத்தியசாலையின் வைத்தியர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், வன்னிப் பிராந்தியக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரதீப் குலதுங்க, வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ப.ஜெயராணி, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி சமன் பத்திரன, முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் உமாசங்கர், வைத்தியசாலை அத்தியட்சகர் வைத்தியர் காயன், வைத்தியசாலை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். -முல்லைத்தீவு நிருபர் தவசீலன்- https://adaderanatamil.lk/top-picture/cmkwl84ql04hzo29nc7h66128
-
சிவில் பாதுகாப்பு படையின் 15,000 பேர் தொடர்பில் எடுக்கப்படும் தீர்மானம்
சிவில் பாதுகாப்பு படையின் 15,000 பேர் தொடர்பில் எடுக்கப்படும் தீர்மானம் Jan 29, 2026 - 08:31 PM சிவில் பாதுகாப்புப் படையின் சுமார் 5,000 பேரை வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு விடுவிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். சிவில் பாதுகாப்புப் படை தலைமையகத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். பொலிஸ் துறைக்குச் சிவில் பாதுகாப்புப் படையிலிருந்து சுமார் 10,000 பேரை இணைத்துக்கொள்ளவும் எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறினார். இதன் மூலம் பொதுமக்கள் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் ஆனந்த விஜேபால தெரிவித்தார். மேலும் சிவில் பாதுகாப்புப் படையின் வினைத்திறனை அதிகரிப்பதற்கு தேவையான வசதிகள், உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி, பயிற்சித் திட்டங்கள் மற்றும் மனித வள முகாமைத்துவம் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்படும் என அமைச்சர் வலியுறுத்தினார். https://adaderanatamil.lk/news/cmkzl13tk04l2o29nrcvxhnro
-
ஈரானை நோக்கி அமெரிக்கக் கடற்படை சென்று கொண்டிருப்பதாக ட்ரம்ப் தெரிவிப்பு!
US-ஆல் மத்திய கிழக்கில் பதற்றம்; இரானை தாக்கினால் என்ன நடக்கும்? அமெரிக்கா இரானை தாக்க தயாராக இருப்பதுபோலத் தெரிகிறது. எந்தெந்த பகுதியில் தாக்குதல் நடத்தப்படலாம் என்பது கணிக்கப்படக் கூடியதாக இருந்தாலும் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பது தெளிவாக தெரியவில்லை. ஒருவேளை அமெரிக்கா இரான் மீது தாக்குதல் நடத்தினால் என்ன நடக்கும்? #Iran #America #Trump இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
-
IMF குழு மீண்டும் இலங்கைக்கு!
IMF குழு மீண்டும் இலங்கைக்கு! Jan 29, 2026 - 01:16 PM இலங்கைக்கு வழங்கப்படும் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் ஐந்தாவது மீளாய்வுக்காக, பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பான கலந்துரையாடல்களை மீண்டும் ஆரம்பிக்க, கூடிய விரைவில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று மீண்டும் நாட்டிற்கு வருகை தரத் திட்டமிட்டுள்ளதாக இலங்கையிலுள்ள IMF தூதுக்குழுவின் தலைவர் எவன் பாபஜோர்ஜியோ தெரிவித்தார். 'டித்வா' புயலுக்குப் பின்னரும் IMF வேலைத்திட்டம் வலுவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். இதற்கிடையில், நெருக்கடி உச்சத்தில் இருந்த சந்தர்ப்பத்திலிருந்து இதுவரையில் வளர்ச்சிக்காகக் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன் குறிப்பிட்டார். "நிதியியல் துறையின் வருமானத்தை பலமாகச் சேகரித்தல், சமூகச் சீர்திருத்தங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு வலைகளைப் பலப்படுத்துதல் என்பன வேலைத்திட்டத்தின் முதல் தூணாகும். இரண்டாவது தூண் கடன் நிலைத்தன்மையை நிறுவுதல், நிதி ஸ்திரத்தன்மையைப் பேணுதல் மற்றும் கடன் மறுசீரமைப்பதாகும். விலை ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவது அதன் மூன்றாவது தூணாகும்; இதில் வெளிநாட்டு கையிருப்பு உள்ளிட்ட வெளிப்புறத் தேவைகளைப் பலப்படுத்துவதும் உள்ளடங்கும். நான்காவது நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதாகும். இறுதியாக நிர்வாகத்தை மேம்படுத்துதல் மற்றும் ஊழலைக் குறைத்தல் ஆகியவை மேற்கொள்ளப்பட வேண்டும். இதுவரை இந்த இலக்குகளுக்காக எட்டப்பட்டுள்ள முன்னேற்றம் உண்மையில் சிறப்பானது. இது குறித்துப் பல துறைகளில் நாம் திருப்தியடைய முடியும். நெருக்கடி உச்சத்தில் இருந்த சந்தர்ப்பத்திலிருந்து இதுவரையில் வளர்ச்சிக்காகக் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடையப்பட்டுள்ளது. வளர்ச்சி குறிப்பிடத்தக்க வகையில் மீட்சியடைந்துள்ளதால், கடந்த ஆண்டில் 5% வளர்ச்சியை எட்டியுள்ளது. மொத்தத் தேசிய உற்பத்தியின் (GDP) முன்னேற்றமாக வரி வருமானம், நெருக்கடி நிலவிய காலத்தில் 7.3% ஆக இருந்தபோதிலும், இன்று அது 14.8% வரை அதிகரித்துள்ளது. இதன் மூலம் இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கை மக்கள் மேற்கொண்ட முன்னேற்றம் பிரதிபலிக்கிறது. வருமானத்திற்குள் உள்நாட்டு உற்பத்தியையும் ஒரு பகுதியாக அதிகரிப்பது நிதி ஸ்திரத்தன்மைக்கான அடித்தளத்தை அமைக்கிறது. விலைகளைக் கருத்திற்கொள்ளும் போது, இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னர் நான் முதலாவது ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட போது பணவீக்கம் 70% என்ற உயர் மட்டத்தில் காணப்பட்டது. இன்று அது 2% மற்றும் 3% இற்கு இடையில் காணப்படுவதுடன், மத்திய வங்கியின் இலக்கான 5% மட்டத்தில் ஸ்திரமடையும்." இதேவேளை, 'டித்வா' புயலுக்குப் பின்னரும் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டங்கள் மிக வலுவாகச் செயற்படுத்தப்பட்டு வருவதாக இலங்கையிலுள்ள IMF தூதுக்குழுவின் தலைவர் எவன் பாபஜோர்ஜியோ கூறினார். "இன்னும் ஒரு வாரத்தில் நாம் மீண்டும் இலங்கைக்கு வருகிறோம். வேலைத்திட்டத்தின் அடுத்த கட்டத்தில் 'டித்வா' புயலின் தாக்கம் அதில் எவ்வகையில் பிரதிபலிக்க வேண்டும் என்பது குறித்துக் கலந்துரையாட நாம் எதிர்பார்த்துள்ளோம் சீனிவாசன் கூறியது போன்று வேலைத்திட்டத்தின் அடிப்படை நோக்கங்கள் அவ்வாறே உள்ளன. ஏனெனில் கடந்த வருடம் நவம்பர் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் வீசிய புயலுக்குப் பின்னரும் வேலைத்திட்டம் வலுவாகச் செயற்படுத்தப்பட்டு வருகிறது எனக் கூறமுடியும்." https://adaderanatamil.lk/news/cmkz5h9am04kmo29nc4h73hj8
-
மட்டக்களப்பில் 40 வருடங்களாக காடாக இருந்த மாங்காடு விதானையார் வீதி மீண்டும் திறப்பு
மட்டக்களப்பில் 40 வருடங்களாக காடாக இருந்த மாங்காடு விதானையார் வீதி மீண்டும் திறப்பு 29 Jan, 2026 | 03:40 PM மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட மாங்காடு விதானையார் வீதி கடந்த 40 வருடங்களாக கவனிப்பாரற்ற நிலையில் பற்றைக்காடாக காணப்பட்டு வந்துள்ளது. இதனால் அப்பிரதேசத்தில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகள் பல சவால்களை எதிர்கொண்டு வந்த நிலையில், மேற்படி விடயம் தொடர்பில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளரிடம் அப்பகுதி மக்கள் எடுத்துக் கூறியதையடுத்து இவ் வீதியியை ஜேசி.பி இயந்திரம் மூலம் துப்பரவு செய்து, பாவனைக்குரிய வீதியாக செப்பனிடும்பணி புதன்கிழமை (28) முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது அப்பகுதி பொதுமக்கள் பிரதேச சபையின் இந்த செயற்பாட்டிற்கு நன்றியையும் தெரிவித்துள்ளனர். அப்பகுதியிலுள்ள சுமார் 150 மேற்பட்ட விவசாயிகளின் மிக நீண்ட நாள் கோரிக்கையாக அமைந்த இந்த பாதை விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகின்றதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். https://www.virakesari.lk/article/237340
-
'இது தெய்வ குற்றம்' - கள்ளழகர் கோவில் வழக்கில் நீதிமன்ற உத்தரவு பற்றி சேகர்பாபு கூறுவது என்ன?
'இது தெய்வ குற்றம்' - கள்ளழகர் கோவில் வழக்கில் நீதிமன்ற உத்தரவு பற்றி சேகர்பாபு கூறுவது என்ன? பட மூலாதாரம்,alagarkoilkallalagar படக்குறிப்பு,கோப்புப் படம் கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 29 ஜனவரி 2026, 03:21 GMT "கடந்த 2023ஆம் ஆண்டில் ரூ.107 கோடியாக இருந்த கோவிலின் உபரி நிதி, 2024ஆம் ஆண்டில் ரூ.62 கோடியாக சரிந்துள்ளது. சட்ட அதிகாரமின்றி (authority of law) இந்த நிதி செலவிடப்பட்டுள்ளது. இது தெய்வ குற்றம். வேலியே பயிரை மேய்வதற்கு இது தெளிவான உதாரணம்." மதுரை கள்ளழகர் கோவில் வளாகத்தில் புதிய கட்டுமானங்களை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பில் நீதிபதிகள் கூறிய வார்த்தைகள் இவை. கோவிலில் வணிக கட்டடங்கள் கட்டுவதற்கான அரசாணையை ரத்து செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். தீர்ப்பின் விவரம் என்ன? பிபிசி தமிழிடம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியது என்ன? மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் கள்ளழகர் கோவில் அமைந்துள்ளது. இதே தாலுகாவில் உள்ள வெள்ளரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஏ.வி.பி.பிரபு என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், கோவில் வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிகக் கட்டுமானங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் இது தொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரியிருந்தார். இதே கோரிக்கையை முன்வைத்து நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் சவுரிராஜன் என்பவரும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசியபோது, "மலை சார்ந்து பாரம்பரியமான புனிதத் தலமாக அழகர் கோவில் அமைந்துள்ளது. திருப்பதியில் உள்ள பெருமாள் போல தென் மாவட்டத்திற்கான ஏழுமலையானாக கள்ளழகரைப் பார்க்கிறோம்" எனக் குறிப்பிட்டார், வழக்கு தொடர்ந்த ஏ.வி.பி.பிரபு. பட மூலாதாரம்,alagarkoilkallalagar படக்குறிப்பு,"கடந்த ஆண்டு ஆடித் திருவிழாவின்போது தங்கள் வாகனங்களை உள்ளே அனுமதிக்கவில்லை" என்கிறார் ஏ.வி.பி.பிரபு (கோப்புப் படம்) கள்ளழகர் கோவில் ஆடித் தேரோட்டத்தின்போது மேலூரில் வடக்குத் தெரு, மேலத் தெரு, தெற்குத் தெரு, பாளையப்பட்டு என நான்கு தெருக்களைச் சேர்ந்தவர்கள் குழுவாக இணைந்து தேரை இழுக்கின்றனர். இவ்வாறு தேர் வடம்பிடித்து இழுக்கும் உரிமையைப் பெற்றுள்ளவர்களை 'நாட்டார்' என அழைக்கின்றனர். இந்த நாட்டாரில் ஒருவராக வழக்குத் தொடர்ந்த ஏ.வி.பி.பிரபு இருக்கிறார். "ஆடித் திருவிழாவின்போது வண்டி, மாடுகளைக் கட்டிக் கொண்டு கள்ளழகரை தரிசிப்பதற்கு மக்கள் வருவார்கள். ஆனால், கடந்த ஆண்டு எங்கள் வாகனங்களை உள்ளே அனுமதிக்கவில்லை" என்கிறார் அவர். 'தீர்த்தம் ஆட முடியாத நிலை ஏற்படும்' கட்டுமானப் பணிகள் நடப்பதால் அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறும் ஏ.வி.பி.பிரபு, "கோவில் அமைந்துள்ள மலையின் பசுமை மாறாமல் இருக்க வேண்டும். ஆனால், அதைக் கெடுக்கும் விதத்தில் கோவில் நிதியைத் தேவையற்ற வழியில் பயன்படுத்துவதை அறிந்தோம்" என்றார். ஆடித் தேரோட்டத்தின்போது 2000க்கும் மேற்பட்ட வாகனங்களில் வரும் மக்கள் அங்குள்ள பரந்த காலியிடத்தில் நிறுத்துவதை வழக்கமாக வைத்துள்ளதாகக் கூறும் அவர், "அந்த இடத்தில்தான் கட்டுமானங்களை எழுப்பி வருகின்றனர்" என்றார். பட மூலாதாரம்,alagarkoilkallalagar படக்குறிப்பு,"மலையின் புனிதத் தன்மை கெட்டுவிடும் என்பதால் வழக்கு தொடர்ந்தேன்" என்கிறார் ஏ.வி.பி.பிரபு (கோப்புப் படம்) கடந்த 2024ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதியன்று கள்ளழகர் கோவிலின் துணை ஆணையர் வெளியிட்ட அறிவிப்பில், கோவில் வளாகத்தில் பக்தர்கள் தங்குவதற்கு யாத்ரி நிவாஸ், அர்ச்சகர்கள் குடியிருப்பு, விருந்தினர் மாளிகை, உணவகங்கள், கடைகள், கழிப்பறைகள், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, கழிவுநீர் சுத்திகரிப்பு ஆகியவை கட்டப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இந்தப் பணிகளை ஈரோட்டைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் ஒன்றுக்கு வழங்க உள்ளதாகவும் உத்தரவில் கூறியுள்ளார். இதைக் குறிப்பிட்டுப் பேசிய ஏ.வி.பி.பிரபு, "கோவில் வளாகத்தில் தங்கும் விடுதி என்ற பெயரில் 8 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டடத்தை அறநிலையத் துறை திறந்து வைத்துவிட்டது" என்றார். "பக்தர்கள் தீர்த்தமாடும் நீரை மறுசுழற்சி செய்கின்றனர். அது புனித தீர்த்தமாகப் பார்க்கப்படுகிறது. இவ்வாறு மறுசுழற்சி செய்வதை ஏற்க முடியாது" என்றும் அவர் தெரிவித்தார். "இதுபோன்று கட்டடங்களைக் கட்டிவிட்டால் தீர்த்தமாடக்கூட யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுவிடும், மலையின் புனிதத் தன்மை கெட்டுவிடும் என்பதால் வழக்கு தொடர்ந்தேன்." இதுதொடர்பாக கள்ளழகர் கோவிலின் துணை ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அவர் கொடுத்துள்ளார். "என்னுடைய புகாரை ஒரு பொருட்டாகவே அதிகாரிகள் எடுத்துக் கொள்ளவில்லை" என்கிறார் ஏ.வி.பி.பிரபு. பட மூலாதாரம்,alagarkoilkallalagar படக்குறிப்பு,கோப்புப் படம் 'திசை திருப்பப்பட்ட நிதி' கள்ளழகர் கோவில் தொடர்பான இரண்டு மனுக்களையும் இணைத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்து வந்தது. வழக்கின் வாதத்தில் மனுதாரர் ஏ.வி.பி.பிரபு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.ஆர்.வெங்கடேஷ், கோவில் நிதியில் இருந்து கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கு 2024ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை 135ஐ சுட்டிக்காட்டி வாதிட்டார். மேம்பாட்டுத் திட்டங்களுக்கு முதலில் 92 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பிறகு 40 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டதாக வாதிட்ட எம்.ஆர்.வெங்டேஷ், "மேம்பாடு என்ற பெயரில் கணிசமான அளவு கோவில் நிதி தேவையற்ற நோக்கங்களுக்காக திசை திருப்பி விடப்பட்டுள்ளது" எனக் கூறினார். "அரசாணையின் அடிப்படை தவறானது" எனக் குற்றம் சாட்டிய அவர், "கோவிலின் பராமரிப்பு செலவினங்கள் அனைத்தும் நடப்பு வரவுகளில் இருந்து செயல்படுத்தப்பட வேண்டுமென அறநிலையத் துறை சட்டம் கூறுகிறது. உபரி நிதியில் இருந்து அல்ல" எனத் தெரிவித்தார். இதற்கு மாறாக, கள்ளழகர் கோவில் நிதியை சட்டத்திற்குப் புறம்பாகப் பயன்படுத்தியதால் அவை குறைந்துவிட்டதாக அவர் வாதிட்டார். "நிதிநிலை அறிக்கைகளைக் கவனித்தால் எந்த அளவுக்கு பொறுப்பற்ற முறையில் கோவில் நிதி செலவிடப்படுகின்றன என்பது தெரிகிறது" எனவும் அவர் வாதிட்டார். பட மூலாதாரம்,alagarkoilkallalagar படக்குறிப்பு,கோப்புப் படம் 'இது தெய்வக் குற்றம்' வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு, கடந்த ஜனவரி 23ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கியது. "கள்ளழகர் கோவிலில் அறங்காவலர் குழு இல்லாமல் உபரி நிதியைப் பயன்படுத்தி வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றுவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. கோவில் நிதியை தனிப்பட்ட சொத்தாகக் கருத முடியாது" எனத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில், கோவில் நிதியில் இருந்து வளர்ச்சிப் பணிகளுக்காக 40 கோடி ரூபாயை ஒதுக்கி ஒப்புதல் வழங்கிய அரசாணையை நீதிபதிகள் ரத்து செய்துள்ளனர். அதோடு, "2022ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி கள்ளழகர் கோவிலின் உபரி நிதி 96 கோடியே 60 லட்சம் ரூபாயாக இருந்துள்ளது. இது 2023ஆம் ஆண்டில் 107 கோடியே 60 லட்ச ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆனால், 2024 மார்ச் மாதத்தில் இந்தத் தொகை சுமார் 62 கோடியே 37 லட்ச ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளனர். "இது மிகவும் கவலைக்குரிய விஷயம்" எனத் தீர்ப்பில் கூறியுள்ள நீதிபதிகள், "சட்ட அதிகாரமின்றி இவ்வாறு செலவிடப்பட்டுள்ளது. இது தெய்வக் குற்றம். வேலியே பயிரை மேய்வதற்கு இது தெளிவான உதாரணம்" எனக் கூறியுள்ளனர். அது தவிர, கோவில் நிதி எவ்வாறு தணிக்கை செய்யப்படுகிறது என்பது கேள்விக்குறியாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், "தணிக்கை மேற்கொள்ளப்படும் விதம் குறித்து இரண்டு வாரங்களில் இந்து சமய அறநிலையத் துறை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்" என்றும் உத்தரவிட்டனர். பட மூலாதாரம்,alagarkoilkallalagar படக்குறிப்பு,கோப்புப் படம் 'அரசே தொகையைக் கொடுக்க வேண்டும்' கோவில் வளாகத்தில் அக்னி புஷ்கரணி பகுதிக்கு அருகில் பணியாளர் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இதைத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், "இதுபோன்ற கட்டுமானத்தால் அக்னி புஷ்கரணி பாதிக்கப்படும் என்பதைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை" எனத் தெரிவித்தனர். "அக்னி புஷ்கரணிக்கு அருகில் குடியிருப்புகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை அமைக்கக் கூடாது. இந்தத் திட்டங்கள் ரத்து செய்யப்படுகின்றன. இதற்காகச் செலவிடப்பட்ட தொகையை கோவிலுக்கு தமிழ்நாடு அரசு திருப்பி வழங்க வேண்டும்" என்று தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர். "கோவில்களில் நடக்கும் கட்டுமானப் பணிகளுக்கு எந்தவித அனுமதிகளும் பெறவில்லை" எனக் கூறிய நீதிபதிகள், "உரிய ஒப்புதல் பெறாமல் கட்டுமானங்களை மேற்கொள்ள மாட்டோம்" என கோவில் நிர்வாகம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதாகவும் தீர்ப்பில் குறிப்பிட்டனர். "கோவிலில் முன்மொழியப்பட்ட சில கட்டடங்கள், இந்திய தொல்லியல் கழகத்தால் பாதுகாக்கப்படும் கட்டடங்களுக்கு மிக அருகில் அமைந்துள்ளதால் இதை சட்டப்படி அனுமதிக்க முடியாது" என மனுதாரரின் வழக்கறிஞர் எம்.ஆர்.வெங்கடேஷ் வாதிட்டார். "கட்டுமானங்களுக்கு இந்திய தொல்லியல் கழகத்தின் அனுமதி பெறப்படும்" என தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தெரிவித்தார். கோவில் வளாகத்தில் நாயக்கர் மஹால் போன்ற தொல்லியல் நினைவுச் சின்னங்களுக்கு அருகில் கட்டுமானம் நடைபெற்றுள்ளதை தலைமை வழக்கறிஞர் ஒப்புக் கொண்டுள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். "இந்தக் கட்டுமானங்கள் உடனே அகற்றப்படும்" என தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளதாக தீர்ப்பில் பதிவு செய்துள்ள நீதிபதிகள், "உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" எனவும் தெரிவித்துள்ளனர். பட மூலாதாரம்,alagarkoilkallalagar படக்குறிப்பு,கோப்புப் படம் 'அறங்காவலர்களே முடிவு செய்ய வேண்டும்' நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாகக் கூறுகிறார், மனுதாரரின் வழக்கறிஞர் எம்.ஆர்.வெங்கடேஷ். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "அறங்காவலர்கள் இல்லாமல் செயல் அலுவலர்கள் மூலமாகவே நிர்வாகத்தை நடத்தி வருகின்றனர். இதை நீதிமன்றம் ஏற்கவில்லை" என்றார். இதே கருத்தை பிபிசி தமிழிடம் தெரிவித்த ஆலய வழிபடுவோர் சங்கத்தின் தலைவர் டி.ஆர்.ரமேஷ், "கோவில் வளர்ச்சி என்ற பெயரில் அரசு தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. சட்ட விதிகளுக்கு உட்பட்டு அறங்காவலர்கள் முடிவு செய்ய வேண்டும் எனத் தீர்ப்பு கூறுகிறது" எனக் குறிப்பிட்டார். அவரது கூற்றுப்படி, "கோவிலின் ஆண்டு நிதிநிலை விவரம், உபரிநிதியை எவ்வாறு செலவு செய்வது, பக்தர்களின் பாதுகாப்புக்கும் ஆரோக்கியத்துக்கும் செலவு செய்யக்கூடிய பணம் என ஒவ்வொன்றுக்கும் விதிகளின்படி செலவு செய்வது குறித்து அலசி ஆராய்ந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது." கள்ளழகர் கோவிலுக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் ஆகியோர் தனித்தனியாகச் சென்று பார்வையிட்டதாகக் கூறும் டி.ஆர்.ரமேஷ், "அங்குள்ள கட்டுமானங்களை அவர்கள் கவனித்துள்ளனர். இவற்றில் பல கட்டுமானங்கள் அவசியமற்றவை எனக் கூறியுள்ளனர்" என்கிறார். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் வணிகக் கட்டடங்களை கட்டுவதற்கு எதிராக மூன்றுக்கும் மேற்பட்ட வழக்குகளில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பட மூலாதாரம்,SekarBabu/FB படக்குறிப்பு,தீர்ப்பு இரண்டு விதமாக வந்துள்ளதாகக் கூறுகிறார் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு 'மூன்றுக்கும் மேற்பட்ட தீர்ப்புகள்' திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வணிக வளாகம் கட்டுவதற்குக் கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. அதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு நந்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் கட்டுமானத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது. இதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. சென்னை ராசப்பா தெருவில் கந்தகோட்டம் ஸ்ரீமுத்துகுமாரசாமி கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்குச் சொந்தமாக நிலங்கள் உள்ளன. இவற்றில் வணிக வளாகம் மற்றும் குடியிருப்புகளைக் கட்டும் முயற்சியில் இந்து சமய அறநிலையத் துறை ஈடுபட்டது. இதைக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, அருள் முருகன் அமர்வு, 'கோவில் நிதியைப் பயன்படுத்தி வணிக வளாகம் கட்டக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டும் கட்டப்பட்டு வருகின்றன' எனக் கூறினர். அப்போது அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், "80 சதவிகித பணிகள் முடிந்துவிட்டன. ஏழு கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் இந்தக் கட்டடங்கள் மூலம் மாதம் 7 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும்" என வாதிட்டார். இந்த வழக்கில், "கட்டடங்களை பக்தர்களின் வசதிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். வணிகரீதியில் பயன்படுத்தக் கூடாது" என உத்தரவிட்ட நீதிபதிகள், "கோவில் நிதியில் வணிக வளாகங்களைக் கட்டக்கூடாது மாநிலம் முழுவதும் உள்ள கோவில்களுக்கு அறநிலையத் துறை ஆணையர் சுற்றறிக்கையை அனுப்ப வேண்டும்" என உத்தரவிட்டனர். இதுகுறித்துப் பேசியபோது, "நீதிமன்றம் உத்தரவிட்டும் கோவில் நிதியில் கட்டடம் கட்டும் பணிகளை அரசு தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதாக" கூறுகிறார், ஆலய வழிபடுவோர் சங்கத்தின் தலைவர் டி.ஆர்.ரமேஷ். சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டு கோவிலில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதாகக் கூறிய டி.ஆர்.ரமேஷ், "செயல் அலுவலர்கள் மூலமாக இதைச் செயல்படுத்துகின்றனர். இனி இதுபோன்று மேற்கொள்ள முடியாது என்பதை கள்ளழகர் வழக்கின் தீர்ப்பு உணர்த்துகிறது" என்றார். 'சட்டரீதியாக விவாதிக்க வேண்டும்' - அமைச்சர் சேகர்பாபு கள்ளழகர் கோவில் வழக்கின் தீர்ப்பு தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவிடம் பிபிசி தமிழ் பேசியது. "இரண்டு விதமாக தீர்ப்பு வெளிவந்துள்ளது. சில கட்டுமானங்களை மேற்கொள்ளுமாறு கூறுகின்றனர். அறங்காவலர் குழுவை அழைத்து விவாதிக்காமல் செயல்பட்டதாகவும் கூறுகின்றனர். தீர்ப்பில் உள்ள விவரங்களை சட்டரீதியாக விவாதிக்க வேண்டியுள்ளது" எனக் கூறினார். 'நிதியை செலவிட்டது தெய்வ குற்றம்' எனத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது குறித்துக் கேட்டபோது, " தீர்ப்பை முழுமையாகப் படித்த பிறகே அதுதொடர்பாக பதில் கூற முடியும்" என்று மட்டும் அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cly1p307124o
-
அமெரிக்கா முழுவதும் கடும் பனிப்புயல் – 18 மாநிலங்களில் அவசரநிலை அறிவிப்பு
மீண்டும் ஒரு பனி புயலா? அமெரிக்க மக்களை வாட்டும் கடும் குளிர் அமெரிக்காவில் அதிகரித்து வரும் குளிர், கடும் பனிப்பொழிவு போன்ற காரணங்களால் இதுவரை குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளதாக AFP செய்தி குறிப்பிட்டுள்ளது. இந்த சூழலில் 11,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக Flight Aware தகவல் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் நிலவரம் எப்படி உள்ளது? #USSnow#America #SnowStorm இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு