Everything posted by ஏராளன்
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
ஓம் அக்கா. என்னால் வீட்டினுள் செல்ல முடியாது. இந்த படங்கள் பிளம்பிங் செய்யும் தம்பி எடுத்து அனுப்பி உள்ளார். இந்த நிலையில் உள்ள மலசலகூடத்தை தான் 3 சகோதரர்களும் பாவித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள் என்பதை நினைக்க கவலையாக உள்ளது. நாளை தான் மணல், சல்லி, சீமந்து, கம்பி என்பன வழங்குவார்களாம். உடனடியாக வேலையை தொடங்க கேட்டுள்ளேன். மலசலகூடத்தையும் தூய்மைப்படுத்த கேட்டுள்ளேன். இவர்கள் டிசம்பர் 3ஆம் திகதி நிகழ்விற்கு சகோதரியுடன் வந்தவர்கள், பிந்தியபடியால் தூக்கி இறக்குவதும் ஏற்றுவதிலும் உள்ள சிரமம் காரணமாக ஆட்டோவில் இருந்தவர்கள். அப்போதே மலசலகூடம் திருத்தும் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதன் பின்னர் நடந்ததெல்லாம் விந்தைதான்!
-
முன்னாள் காதலரின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்த பெண் கணினி பொறியலாளர் கைது
முன்னாள் காதலரின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்த பெண் கணினி பொறியலாளர் கைது 16 Jan, 2026 | 11:11 AM முன்னாள் காதலரின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண் பெண் கணினி பொறியியலாளரை கைது செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் பிரிவினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட பெண் சந்தேக நபர் யாழ்ப்பாணம், கந்தர்மடத்தில் வசிக்கும் 25 வயதுடைய கணினி பொறியாளர் என குற்றப் புலனாய்வுத் பிரிவினர் மேலும் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர், தனது நிர்வாண புகைப்படங்களை தனது முன்னாள் காதலி வாட்ஸ்அப் குழு மூலம் பகிர்ந்து கொண்டதாகக் கூறி, குற்றப் புலனாய்வுத் பிரிவினரிடம் முறைப்பாடு அளித்துள்ளார். இந்த முறைப்பாட்டடின் அடிப்படையில் வடக்கு மாகாண குற்றப் புலனாய்வுத் பிரிவினர் விசாரணை தொடங்கியபோது சந்தேகநபரான பெண் முன்னாள் காதலனின் நிர்வாண புகைப்படங்களை வாட்ஸ்அப் குழுவிற்கு பகிரந்துள்ளமை தெரியவந்ததுள்ளது. பின்னர் குற்றப் புலனாய்வுத் பிரிவினர் குறித்த பெண் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்ட போது இந்த பெண் அவர் சுமார் ஐந்து ஆண்டுகளாக முன்பு முன்னால் காதலடன் உறவை பேணிவந்துள்ளார். அவர்களின் காதல் முறிவை தொடர்ந்து, அந்த பெண் உணர்ச்சி ரீதியான துயரத்தையும் மனக்கசப்பையும் அனுபவித்ததால் முன்னால் காதலனை பழிவாங்கும் நோக்குடன் நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் குறித்த பெண் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/236148 காதலர்கள் ஜாக்கிரதை!
-
யாழில் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட ஜனாதிபதி : மக்களுடன் உரையாடினார் !
யாழில் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட ஜனாதிபதி : மக்களுடன் உரையாடினார் ! 16 Jan, 2026 | 12:25 PM யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இன்று வெள்ளிக்கிழமை (16 ) காலை பலாலி–அன்ரனிபுரம் வீதி வழியாக நடைப்பயிற்சி மேற்கொண்டார். காலை நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடைப்பயிற்சியின் போது, வீதியோரங்களில் இருந்த பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் இளைஞர்களுடன் ஜனாதிபதி சுருக்கமாக உரையாடியதுடன், அவர்களின் தினசரி வாழ்வாதார நிலவரங்கள், அடிப்படை தேவைகள் மற்றும் பிரதேசத்தின் தற்போதைய சூழ்நிலை குறித்து கேட்டறிந்தார். மேலும், குறித்த பிரதேசத்தின் உட்கட்டமைப்பு வசதிகள், வீதி அபிவிருத்தி மற்றும் பொது சேவைகள் தொடர்பான விடயங்களிலும் அவர் கவனம் செலுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் இந்த திடீர் நடைப்பயிற்சி பொதுமக்களிடையே கவனத்தை ஈர்த்ததுடன், அவரை நேரில் காண பொதுமக்கள் ஆர்வத்துடன் திரண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய இந்த நடைப்பயிற்சி எந்தவித இடையூறும் இன்றி நிறைவு பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/236163
-
தாய்லாந்தில் மீண்டுமொரு கிரேன் சரிந்து கார்களின் மீது விழுந்ததில் 2 பேர் பலி! ; “மரண வீதி”யானது நெடுஞ்சாலை!
தாய்லாந்தில் மீண்டுமொரு கிரேன் சரிந்து கார்களின் மீது விழுந்ததில் 2 பேர் பலி! ; “மரண வீதி”யானது நெடுஞ்சாலை! 16 Jan, 2026 | 11:36 AM தாய்லாந்து நாட்டில் நேற்றும் (15) மற்றுமொரு கிரேன் சரிந்து விழுந்ததில் இரண்டு கார்கள் நொறுங்கி, சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இவ்விபத்து இடம்பெற்றதற்கு முதல்நாள் (14) நகோன் ரச்சசீமா மாகாணத்திலிருந்து சிகியோ மாவட்டத்தில் பயணித்துக்கொண்டிருந்த ரயில் மீதும் கிரேன் ஒன்று விழுந்ததில் இதுவரை 32 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரும் நிலையில் தற்போது மற்றுமொரு கிரேன் விழுந்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பெங்கொக்கிலிருந்து சமுதத் சகோன் மாகாணத்தின் பாங்குன் தியான் வரை ரமா 2 என்ற நெடுஞ்சாலையில் அபிவிருத்திப் பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று அப்பகுதியில் மேம்பால வீதி கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோதே அங்கிருந்த கிரேன் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் இரண்டு கார்கள் சேதமடைந்துள்ளன. அவ்வேளை அவ்வாகனங்களுக்குள் இருந்த இருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அப்பகுதியில் மீட்புக்குழுவினர் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபடுவதில் பெரும் சிரமங்கள் இருப்பதாக கூறப்படும் அதேவேளை அங்கு வேறு வாகனங்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனவா என்பதை அறியவும் கடினமான நிலை ஏற்பட்டிருப்பதாக அந்நாட்டு போக்குவரத்துத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அப்பகுதியில் இரும்புத்தகடுகள் தொங்கிக்கொண்டிருப்பதால் மேலும் இடிபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மீட்புக்குழுவினர் அச்சம் தெரிவித்துள்ளனர். அந்த நெடுஞ்சாலையில் கடந்த ஏழு ஆண்டுகளில் சுமார் 150 பேர் உயிரிழந்த காரணத்தினால் நேற்றைய விபத்துக்குப் பின்னர், குறித்த அவ்வீதி “மரண வீதி” என்று அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. https://www.virakesari.lk/article/236157
-
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் 2026 தொடர்
16ஆவது ஐ.சி.சி. 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணம் ஆரம்பம் – மேற்கிந்தியத் தீவுகள் வெற்றியுடன் தொடக்கம் 15 Jan, 2026 | 09:28 PM (நெவில் அன்தனி) 16ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் முதலாவது வெற்றியை மேற்கிந்தியத் தீவுகள் பதிவுசெய்தது. ஸிம்பாப்வேயிலும் நமிபியாவிலும் கூட்டாக நடத்தப்படும் இந்த உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தைப்பொங்கல் தினமான இன்று வியாழக்கிழமை (15) ஆரம்பமானது. ஸிம்பாப்வேக்கும் ஸ்கொட்லாந்துக்கும் இடையில் ஹராரே டக்காஷிங்க விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று நடைபெறவிருந்த சி குழுவுக்கான போட்டி சீரற்ற காலநிலை காரணமாக முழுமையாக கைவிடப்பட்டது. இதன் காரணமாக இரண்டு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பெற்றுக்கொண்டன. விண்ட்ஹோக், ஹை பேர்ஃபோமன்ஸ் ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்ற தன்ஸானியாவுக்கு எதிரான டி குழு போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 5 விக்கெட்களால் வெற்றியீட்டியது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட தன்ஸானியா 34 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 122 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. தன்ஸானியாவின் மொத்த எண்ணிக்கையில் 27 உதிரிகளே அதிகூடிய எண்ணிக்கையாக பதிவானது. துடுப்பாட்டத்தில் டிலான் தக்கார் (36), தர்பன் ஜோபன்புத்ரா (19), காலிதி ஜுமா (12), அக்ரி ஹியூகோ (10) ஆகிய நால்வரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். பந்துவீச்சில் விட்டெல் லோஸ் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மிக்கா மெக்கென்ஸி 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஷக்குவான் பெலே 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் 29 ஓவர்கள் மீதம் இருக்க 5 விக்கெட்களால் வெற்றிபெற்றது. மெற்கிந்தியத் தீவுகள் 21 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 124 ஓட்டஙகளைப் பெற்று இலகுவாக வெற்றியீட்டியது. மொத்த எண்ணிக்கை 20 ஓட்டங்களாக இருந்தபோது ஸக்கரி கார்ட்டர் (8) ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து தனேஸ் பிரான்சிஸ் 52 ஓட்டங்களையும் ஜுவெல் அண்ட்றூ 44 ஓட்டங்களையும் பெற்றதுடன் இருவரும் இணைந்து 2ஆவது விக்கெட்டில் 80 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றி இலக்கை அண்மிக்க உதவினர். எவ்வாறாயினும் அவர்கள் இருவர் உட்பட நால்வர் 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (114 - 4 விக்.) ஷமார் அப்ள் (4 ஆ.இ.), ஷக்குவான் பெலே (6 ஆ.இ.) ஆகிய இருவரும் வெற்றி இலக்கை அடைய உதவினர். பந்துவீச்சில் அகஸ்டினோ முவாமெலே 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரேமண்ட் பிரான்சிஸ் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்:ஷக்குவான் பெலே https://www.virakesari.lk/article/236130
-
ஜல்லிக்கட்டு செய்திகள் 2026
பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,2025 பாலமேடு ஜல்லிக்கட்டில் காளையை அடைக்க முயற்சி செய்யும் மாடுபிடி வீரர்கள் 16 ஜனவரி 2026, 01:56 GMT புதுப்பிக்கப்பட்டது 58 நிமிடங்களுக்கு முன்னர் மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியது. சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் காளைகளுக்கு கார் டிராக்டர் பைக் மற்றும் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படுகிறது. வீரர்கள் உறுதிமொழி ஏற்புடன் நிகழ்ச்சி தொடங்குகியது. ஊர் கோவில் காளைகள் வாடிவாசல் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. படக்குறிப்பு,பாலமேடு ஜல்லிக்கட்டை காணவந்த நடிகர் சூரி துணை முதல்வர் வருவதற்குத் தொடர்ந்து தாமதம் ஆனதால், ஆட்சியர் பிரவீன் குமார் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி ஏற்றனர். அதைத் தொடர்ந்து , கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டு ஜல்லிக்கட்டு தொடங்கியது. முதலில் பாலமேடு கிழக்குத் தெரு மஞ்சமலை கோவிலை சேர்ந்த காளை வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்டது. 2 மணி நேரம் தாமதம் பாலமேட்டில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி 7 மணிக்கு தொடங்கும் என ஜல்லிக்கட்டு குழுவினர் மற்றும் அரசு தரப்பு அறிவித்திருந்தனர். இந்நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாலமேட்டுக்கு வர தாமதமான நிலையில், ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. 2 மணி நேரம் தாமதமாக காலை 9 மணியளவில் போட்டி தொடங்கியது. வெற்றி பெறுபவர்களுக்கான பரிசுகள் பாலமேடு மஞ்சமலை ஆற்று திடலில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு நிசான் கார், டிராக்டர், மோட்டார் பைக் மற்றும் தங்க நாணயம் ஆகியவை பரிசாக வழங்கப்படுகின்றன. அதேபோன்று ஒவ்வொரு சுற்றிலும் காளைகளைப் பிடிக்கும் வீரர்களுக்கும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பீரோ, கட்டில், மெத்தை, சைக்கிள், அண்டா உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்த போட்டியில் சுமார் ஆயிரம் காளைகளும் 800 மாடுபிடி வீரர்களும் களம் இறங்க உள்ளனர். 12 சுற்றுகள் வரை போட்டிகள் நடைபெறும். பாதுகாப்பு ஏற்பாடுகள் மதுரை மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை, கால்நடைத்துறை, உள்ளாட்சித் துறை மற்றும் காவல்துறை ஆகியவை சார்பாக போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காவல்துறை சார்பாக ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காயமடையும் வீரர்களை காப்பாற்றுவதற்காக 108 ஆம்புலன்ஸ்கள் 12, பைக் ஆம்புலன்ஸ்கள் 2, ஆம்புலன்ஸ் பணியாளர்கள் 40 பேர் என தயார் நிலையில் உள்ளனர். வீரர்களுக்கு காயம் ஏற்படும் பட்சத்தில் அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு போதிய முதலுதவிகள் அளிக்கப்பட்டு அருகில் உள்ள அரசு சிறப்பு முதலுதவி மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் அங்கிருந்து மேல் சிகிச்சை தேவைப்படும்பட்சத்தில் அரசு ராஜாஜி மருத்துவக்கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்படுவர் என 108 ஆம்புலன்ஸ் சேவை மண்டல மேலாளர் பிரசாத் தெரிவித்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0mklgz32j2o
-
நாவற்குழியில் கோர விபத்து; கிளிநொச்சியைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு
யாழ் - மன்னார் வீதியில் சோகம்: இருவர் உயிரிழப்பு! Published By: Digital Desk 1 16 Jan, 2026 | 09:52 AM யாழ்ப்பாணம் - மன்னார் வீதியில் நாவக்குளி பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற டிப்பர் வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, சுவர் மற்றும் தொலைபேசி கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் டிப்பர் வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளர் இருவரும் காயமடைந்து, யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று வியாழக்கிழமை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்கள் 19 மற்றும் 23 வயதுடைய கிளிநொச்சி மற்றும் அச்சுவேலி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். சாவகச்சேரி பொலிஸார், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/236147
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
பொன்னாலை மலசலகூடம் புனரமைப்பதற்கு முன் சில படங்கள்.
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
பொன்னாலை ஏரம்பு ஐயாவின் 3 பிள்ளைகளின் மலசலகூடம் (பிளாற்) திருத்தப்பணிகளுக்காக 80000 ரூபா மூளாய் கணேஷா ஹாட்வெயர்ஸ் அன் எலக்ரிக்கல்ஸ் கடை உரிமையாளர் முருகசோதி அவர்களின் வங்கிக்கணக்கில் வைப்புச் செய்துள்ளேன். பணம் செலுத்தினால் தான் மணல், சல்லி, சீமந்து, கம்பி என்பவற்றை பறிப்பதாக கூறியதால் பணத்தை செலுத்திவிட்டேன். இருப்பு 380,420.67-80025=ரூ 300,395.67 சதம் இன்று 16/01/2026 80000 ரூபா வைப்புச் செய்த பின் வங்கி மீதி. 25 ரூபா இலங்கை வங்கிக்கு மாற்றுவதற்கான கட்டணம் எடுத்துள்ளார்கள்.
-
இருதய சத்திரசிகிச்சைக்காக வரும் 25 - 30 வயதுக்குட்பட்ட இளையவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு
இருதய சத்திரசிகிச்சைக்காக வரும் 25 - 30 வயதுக்குட்பட்ட இளையவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு Published By: Vishnu 15 Jan, 2026 | 06:47 PM (செ. சுபதர்ஷனி) அண்மைய நாட்களில் இருந்து இருதய சத்திரசிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. 60 தொடக்கம் 70 வயதுக்குட்பட்டவர்களே இருதய சத்திரசிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கு வருகை தருவது வழக்கமானதாக இருந்தபோதிலும், சமீபகாலமாக 25 தொடக்கம் 30 வயதுக்குட்பட்ட இளையவர்களும் இந்த சத்திரசிகிச்சைக்காக வருகை தருவதாக விசேட வைத்திய நிபுணர் நாலக்க திஸாநாயக்க தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் புதன்கிழமை (14) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். வைத்தியர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் மேற்கொள்ளப்படும் இருதய சத்திர சிகிச்சையில் 65 தொடக்கம் 67 சதவீதமானவை பைபாஸ் சத்திர சிகிச்சையாகும். அண்மைய நாட்களில் இருந்து இருதய சத்திரசிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. குறிப்பாக இளம் வயதில் பைபாஸ் சிகிச்சைக்காக வருகை தருபவர்களின் எண்ணிக்கையும், வீதமும் சடுதியாக அதிகரித்துச் செல்வதைக் காணக்கூடியதாக உள்ளது. அத்தோடு தொற்றா நோய்களும் சமூகத்தில் அதிகரித்துள்ளன. நோய் தொடர்பான தெளிவும் அவதானமும் இல்லாமையே நோயாளர் அதிகரிப்புக்குப் பிரதான காரணமாக உள்ளது. ஆரம்ப காலத்தில் விலா எலும்புகளை அகற்றி இருதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எனினும் தற்போது நவீன சிகிச்சை முறைகளைப் பின்பற்றி எலும்புகளை அகற்றாது இடது பக்கமாக இந்த சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. வயது வந்தவர்களில் பெரும் எண்ணிக்கையிலானோர் மாரடைப்பால் உயிரிழக்கின்றனர். இதய வால்வுகளில் ஏற்படும் அடைப்பால் மாரடைப்பு ஏற்படுகிறது. 60 தொடக்கம் 70 வயதுக்குட்பட்டவர்களே இருதய சத்திரசிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கு வருகை தருவது வழக்கமானதாக இருந்தபோதிலும், சமீபகாலமாக 25 தொடக்கம் 30 வயதுக்குட்பட்ட இளையவர்களும் இந்த சத்திரசிகிச்சைக்காக வருகை தருகின்றனர். இலங்கையில் கொழும்பு, கண்டி, காலி கராபிட்டிய ஆகிய தேசிய வைத்தியசாலைகளிலும், யாழ்ப்பாணம் உள்ளிட்ட ஒரு சில வைத்தியசாலைகளில் மாத்திரமே இருதய சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சிகிச்சைகள் வழங்கப்படுவதால், சத்திரசிகிச்சைக்காக முன்பதிவு செய்யப்பட்டுள்ள நோயாளர் காத்திருப்புப் பட்டியலில் ஒரு வருடத்துக்கும் அதிக காலத்துக்கு நீண்டுள்ளது. ஆகையால் இலங்கை போன்ற நாடுகளில் இவ்வாறான நோய்களில் இருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்வதே சிறந்த தீர்வு. பொதுமக்கள் நோய்த் தடுப்புக் குறித்து அவதானம் செலுத்த வேண்டும். முறையான உடற்பயிற்சி, உணவுப் பழக்கம், மன அழுத்தத்தைக் குறைத்துக்கொள்ளுதல் மற்றும் இரத்த கொலஸ்ட்ரோலைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நோய்களில் இருந்து பாதுகாப்புப் பெறலாம் என்றார். https://www.virakesari.lk/article/236125
-
நாட்டை கட்டியெழுப்பும் தேசிய நிதியத்திற்கு ‘Rebuilding Sri Lanka’ பல்வேறு அமைப்புகள் நன்கொடை
ஐக்கிய இராச்சிய பிரஜை ஒருவரினால் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு விசேட நிதி நன்கொடை 15 Jan, 2026 | 12:31 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்திற்கு அருகில் வசிக்கும் ரிச்சர்ட் வுட் தம்பதியினர் (Mr and Mrs Richard Wood) 2,000 ஸ்டேர்லிங் பவுண் நன்கொடை வழங்கியுள்ளனர். இந்த நன்கொடை பற்றித் தெரிவித்து, ரிச்சர்ட் வுட் தம்பதியினர், ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர் ஸ்தானிகர் நிமல் சேனாதீரவிடம், அதற்கான பற்றுச்சீட்டுடன் கூடிய கடிதத்தை ஒப்படைத்துள்ளனர். டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவும் நோக்கில் இந்த நிதி நன்கொடை வழங்கப்பட்டதாகவும், கடந்த நத்தார் மற்றும் புத்தாண்டு காலத்தில் மூன்று வாரங்கள் இலங்கையில் பயணம் செய்த தமக்கு, நாட்டின் இயற்கை அழகு, சுவையான உணவுகள் மற்றும் மக்களின் உயர்ந்த மனித குணங்கள் குறித்து நல்லெண்ணம் ஏற்பட்டதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களுக்கு மத்தியிலும், நாடு வலுவாக மீண்டெழுந்து வருவதை காண முடிந்ததாகவும், எதிர்காலத்தில் தமக்கு மிக அண்மையில் உள்ள ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர் ஸ்தானிகராலயத்துடன் நல்லுறவைப் பேண எதிர்பார்த்துள்ளதோடு, இலங்கையின் தேசிய தினத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/236081
-
மன்னாரில் ஜனாதிபதியால் காற்றாலை மின் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.!
ஜனாதிபதி தலைமையில் மன்னார், Hayleys Fentons Limited 50 மெகாவோட் காற்றாலை மின் நிலையத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம் 15 Jan, 2026 | 05:08 PM 2050 ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு இணங்க, மன்னாரில் Hayleys Fentons Limited நிறுவனத்தால் நிர்மாணிக்கப்படும் 50 மெகாவோட் காற்றாலை மின் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று வியாழக்கிழமை (15) முற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. மன்னாரின் இயற்கை காற்று சக்தியைப் பயன்படுத்தி, 10 காற்றாலை விசையாழிகளைக் கொண்ட இந்த அதிநவீன காற்றாலை, ஆண்டுக்கு 207,000,000 கிலோ வோட் மணிநேர மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. ஒரு அலகு மின்சாரம் 0.0465 அமெரிக்க டொலர் அல்லது 14.37 இலங்கை ரூபாயில் வழங்கப்படுவதோடு, இந்த திட்டம் மார்ச் 2027 இல் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஓலைத்தொடுவாய் ரோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலைக்கு நவீன கல்வி வசதிகளுடன் கூடிய முழுமையான Smart வகுப்பறையை வழங்கும் ஆவணங்களை கையளித்தல், தேசிய நீர் வழங்கல் சபையுடன் இணைந்து 200 வீடுகளுக்கு குடிநீர் வசதிகளை வழங்குதல், இலங்கை மின்சார சபையுடன் இணைந்து மன்னார் பாலம் வழியாக தள்ளாடி நகரம் வரை நடைப்பாதைக்காக புதிய மின்விளக்குகள் பொருத்துதல், அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் இணைந்து, சுமார் 10 மில்லியன் ரூபா செலவில் இலகுவாக நீர் வழிந்தோடும் வகையில் புதிய நீர்வழிகளை உருவாக்கி, வெள்ளத்தைத் தடுக்க கால்வாய்களைத் தோண்டுதல், போன்ற பிரதேச அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான ஆவணங்களை கையளிக்கும் நிகழ்வும் ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்றது. இன்று ஆரம்பிக்கப்படும் இந்த திட்டம், நாட்டை புதுப்பிக்கத்தக்க வலுசக்தியால் பலப்படுத்துவதோடு, பிரதேச மக்களுக்குத் தேவையான வசதிகள் மற்றும் நன்மைகளை வழங்கும் திட்டமாகும் என்று நிகழ்வில் உரையாற்றிய வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார். மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கம் என்ற வகையில், மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இந்தத் திட்டத்தின் பின்னணியில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை என்றும், மக்களுக்குத் தேவையான சேவைகளை வழங்குவதே உண்மையில் எமது தேவை என்றும் குறிப்பிட்டார். மன்னாரை அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதில், அந்தப் பகுதியில் உள்ள மதத் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள் உட்பட அனைவரின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, மன்னார் பகுதி நாட்டிலேயே அதிக காற்று மின் உற்பத்தி திறன் கொண்ட பகுதிகளில் ஒன்றாகும். நாட்டின் அபிவிருத்திக்கு அந்த உயர் இயலுமையைப் பயன்படுத்த அரசாங்கத்தின் வலுவான தேவையை நிரூபிக்கும் நாளாக இன்றைய நாளை குறிப்பிடலாம். இலங்கையில் காற்றாலை மின் உற்பத்தி வரலாற்றில் மிகக் குறைந்த விலையில் ஒரு அலகு மின்சாரத்தை கொள்வனவு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்ட முதல் திட்டமும் இதுவாகும். அதன்படி, 0.0465 அமெரிக்க டொலர் விலையில் இந்த கொள்வனவு செய்யப்படுகிறது. மன்னார் பகுதியில் வேறு பல திட்டங்களும் நடைபெற்று வருகின்றன. கடந்த 2025 ஆம் ஆண்டு, புதுப்பிக்கத்தக்க வலுசக்தியின் ஊடாக 1848 மெகாவோட் மின்சக்தியைப் பெறுவது எமது இலக்காக இருந்தது. இருப்பினும், அந்த இலக்கைத் தாண்டி 2,695 மெகாவோட் திறனைச் சேர்க்க எம்மால் முடிந்துள்ளது. மேலும், 2026 ஆம் ஆண்டிற்கான இலக்கு 2078 மெகாவோட் ஆகும். தற்போது, இது 3,089.5 மெகாவோட் பெறுவதற்காக ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. மேலும், 2027, 2028 மற்றும் 2029 ஆம் ஆண்டுகளுக்கான இலக்குகள் முறையே 2563, 3253 மற்றும் 3943 மெகாவோட்களாக இருந்தபோதிலும், நாம் ஏற்கனவே அந்த இலக்குகளை தாண்டி முறையே 3,822.5 மெகாவோட், 4332.5 மெகாவோட் மற்றும் 4,634.5 மெகாவோட் மின்சாரத்திற்கான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதன்படி, 2025-2029 ஆம் ஆண்டிற்கான திட்டமிடப்பட்ட மொத்த திறனான 9,759 மெகாவோட் மின் உற்பத்திக்கு பதிலாக 12,789.5 மெகாவோட் மின்சாரத்திற்கான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட முடிந்தது. புதுப்பிக்கத்தக்க வலுசக்தி இலக்குகளை அடைய மிகவும் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதை இது எடுத்துக்காட்டுகிறது. இப்பிரதேசத்தின் காற்று மின் உற்பத்தித் திறன் மற்றும் இப்பகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், பிரதேசத்திற்கு உரித்தான புவியியல் ரீதியான காரணிகள் குறித்து நாம் ஆராய்ந்தோம். குறிப்பாக, இப்பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகளில் அரசாங்கத்தின் தலையீடு மிக அவசியமானது என்பதே இங்குள்ள மக்களின் பிரதான கோரிக்கையாக இருந்தது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, மன்னார் பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகளுக்காக நாம் விசேட செயற்பாட்டுக் குழுவொன்றை நியமித்துள்ளோம். அதன் ஊடாக இப்பிரதேசத்தின் எதிர்கால அபிவிருத்திப் பணிகளுக்குத் தேவையான தலையீடுகள் மேற்கொள்ளப்படும். குறிப்பாக, இங்குள்ள புவியியல் ரீதியான அமைவிடம் காரணமாக நீர் வழிந்தோடாமையினால் ஏற்படும் பிரச்சினைக்கு நிலையான தீர்வொன்றை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். தற்போது அதற்கான நில அளவீட்டுப் பணிகள் இடம்பெற்று வருவதுடன், அதன் முன்னேற்றம் குறித்து தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டங்களை வகுத்து, மக்களுக்குத் தேவையான வசதிகளை விரைவாகச் செய்துகொடுக்க மாவட்டச் செயலாளரின் தலையீட்டுடன், அரசியல் தலைவர்கள் மற்றும் மதத் தலைவர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது. நாம் இந்த நடவடிக்கைகளை மின்சார உற்பத்தியுடன் மாத்திரம் மட்டுப்படுத்தவில்லை. மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் என்ற வகையில், மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் நிவாரணங்களை வழங்கி அதன் நன்மைகளை மக்களுக்கு ஈட்டிக்கொடுக்கும் பணிகளை முன்னெடுத்து வருகின்றோம். நாம் எக்காலத்திலும் மக்களை மறந்துவிடவில்லை என்பதுடன், அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்க அரசாங்கம் என்ற ரீதியில் கடமைப்பட்டுள்ளோம். எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கட்சிபேதமின்றி இதற்கு ஆதரவளிப்பார்கள் என நாம் எதிர்பார்க்கிறோம். இவை எமது அரசியல் நோக்கங்களுக்காகச் செய்யப்படும் விடயங்கள் அல்ல. எனவே, நாம் அனைவரும் ஒன்றிணைந்து மக்களுக்குத் தேவையான சேவைகளை வழங்கி இப்பிரதேசத்தை அபிவிருத்தி செய்வோம் என கேட்டுக்கொள்கிறேன். என்றும் தெரிவித்தார். இலங்கை நிலைபெறு சக்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் விஜேந்திர பண்டார, இலங்கை மின்சார சபை பொதுமுகாமையாளர் பொறியியலாளர் கே.எஸ்.ஐ. குமார, Hayleys PLC நிறுவனத்தின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மொஹான் பண்டிதகே மற்றும் Hayleys Fentons Limited நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஹசித் பிரேமதிலக்க ஆகியோரும் இங்கு கருத்துத் தெரிவித்தனர். வலுசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இல்யாஸ், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் ஆகியோருடன் பிரதேச மக்கள் பிரதிநிதிகள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வுபெற்ற) எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய உட்பட பாதுகாப்பு பிரிவு பிரதானிகள், இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை நிலைபெறுசக்தி அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரிகள், Hayleys PLC நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சரத் கணேகொட, Hayleys Advantis Ltd நிறுவனத்தின் பொது முகாமையாளர் ருவன் வித்யாரத்ன உள்ளிட்ட அதன் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/236114
-
ஜல்லிக்கட்டு செய்திகள் 2026
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 22 காளைகளை பிடித்தவருக்கு கார் பரிசு - முழு விவரம் 15 ஜனவரி 2026, 03:11 GMT புதுப்பிக்கப்பட்டது 47 நிமிடங்களுக்கு முன்னர் இந்த ஆண்டுக்கான அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜனவரி 15) காலை தொடங்கி, 12 சுற்றுகளுடன் மாலையில் நிறைவடைந்தது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 22 காளைகளை பிடித்த வலையங்குளம் பாலமுருகன் முதல் இடத்தை பிடித்தார். 17 காளைகளை பிடித்த கார்த்திக் இரண்டாவது இடத்தை பிடித்தார். ரஞ்சித் என்பவர் 16 மாடுகள் பிடித்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் உள்பட 57 பேர் காயமடைந்தனர். இதில் பலத்த காயமடைந்த 11 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக, திருப்பரங்குன்றம் அவனியாபுரம் சாலையில் குருநாத சுவாமி அங்காள ஈஸ்வரி கோவில் முன்பு வாடிவாசல் அமைக்கப்பட்டது. காலை 7.30 மணிக்கு, தமிழ்நாட்டின் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மாடுபிடி வீரர்களுடன் ஜல்லிக்கட்டு உறுதிமொழி ஏற்ற பின்னர் கொடியசைத்து போட்டியைத் தொடங்கி வைத்தார். போட்டியில் பங்கேற்பதற்காக 600 வீரர்கள் ஆன்லைன் மூலமாக பதிவு செய்திருந்த நிலையில் 573 பேர் பங்கேற்க வந்திருந்தனர். இதில் 12 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு 561 பேர் போட்டியில் பங்கேற்றனர். மொத்தம் இறுதிச் சுற்றோடு சேர்த்து 12 சுற்றுகள் நடைபெற்றன. மதுரை மட்டுமல்லாது திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஜல்லிக்கட்டுக் காளைகளும் மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். முதல் பரிசாக கார் படக்குறிப்பு,அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் மூர்த்தி பரிசுகளை வழங்கினார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 22 காளைகளைப் பிடித்து, முதல் இடத்தைப் பிடித்த மதுரை மாவட்டம், வலையங்குளத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாவது இடத்தில், 17 காளைகளை பிடித்த கார்த்திக் என்பவருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது. அதேபோல, சிறந்த மாடுகளுக்கான பரிசுகளில் முதல் இடத்தைப் பிடித்த விருமாண்டி சகோதரர்கள் காளைக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாவது இடத்தைப் பிடித்த ஜி.ஆர் கார்த்திக் என்பவரின் காளைக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் மூர்த்தி பரிசுகளை வழங்கினார். மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், மதுரை மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன், மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் ஆகியோர் உடன் இருந்தனர். பதினோராவது சுற்று நிலவரம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 11ஆம் சுற்று முடிவில், களம் கண்ட 870 மாடுகளில் 219 மாடுகள் பிடிபட்டன. இதில் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்ற மொத்த வீரர்கள் - 36 வீரர்கள் முன்னிலை நிலவரம் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை: பாலமுருகன், வலையங்குளம் - 18 கார்த்தி, அவனியாபுரம் - 16 கார்த்திக், திருப்பரங்குன்றம் - 10 11ஆம் சுற்றில் தகுதி பெற்றவர்கள் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை: அமரன், சிவகங்கை - 4 ஒன்பதாம் சுற்று நிலவரம் ஒன்பதாம் சுற்றின் முடிவில், களம் கண்ட 764 மாடுகளில் 190 மாடுகள் பிடிபட்டன. வீரர்கள் முன்னிலை நிலவரம் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை: பாலமுருகன், வலையங்குளம் - 18 கார்த்தி, அவனியாபுரம் - 16 ரஞ்சித், அவனியாபுரம் - 9 9ஆம் சுற்றில் தகுதி பெற்றவர்கள் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை: பாலமுருகன், வலையங்குளம் - 18 ராபின், செக்கானூரணி - 3 ராஜு, செக்கானூரணி - 2 https://www.bbc.com/tamil/articles/c5y5l9l2y31o
-
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் 2026 தொடர்
16ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் இன்று ஆரம்பம்; இலங்கை உட்பட 16 அணிகள் பங்கேற்பு 15 Jan, 2026 | 12:01 PM (நெவில் அன்தனி) சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அடுத்த கிரிக்கெட் நட்சத்திர தலைமுறையினரின் ஆற்றல்களை வெளிக்கொண்டுவரும் 16ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர், தைப்பொங்கல் தினமான இன்று ஆரம்பமாகிறது. ஸிம்பாப்வே, நமிபியா ஆகிய நாடுகளில் கூட்டாக நடைபெறும் 16ஆவது 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண அத்தியாயம் இந்தியா மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய இளையோர் அணிகளுக்கு இடையில் ஸிம்பாப்வே, புலாவாயோவில் இன்று நடைபெறவுள்ள போட்டியுடன் ஆரம்பமாகும். சி குழுவில் இடம்பெறும் ஸிம்பாப்வேக்கும் ஸ்கொட்லாந்துக்கும் இடையிலான போட்டி ஹராரேயிலும் டி குழுவில் இடம்பெறும் அறிமுக அணி தன்ஸானியாவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையிலான போட்டி விண்ட்ஹோக்கிலும் இன்று நடைபெறவுள்ளன. இந்தப் போட்டிகள் யாவும் பிற்பகல் 1.00 மணிக்கு ஆரம்பமாகும். ஏ குழுவில் இடம்பெறும் இலங்கை தனது ஆரம்பப் போட்டியில் ஜப்பானை விண்ட்ஹோக்கில் 18ஆம் திகதி சந்திக்கும். இந்த வருட உலகக் கிண்ணப் போட்டியில் 16 நாடுகளைச் சேர்ந்த 240 இளம் வீரர்கள் தங்களது ஆற்றல்களை வெளிப்படுத்த காத்திருக்கின்றனர். இளையோர் உலகக் கிண்ண கிரிக்கெட் முதன் முதலில் அவுஸ்திரேலியாவில் அந்நாட்டின் 200 ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் முகமாக நடத்தப்பட்டது. இதற்கு அமைய அங்குரார்ப்பண அத்தியாயம் 1988ஆம் ஆண்டு மெக்டொனல்ட்ஸ் பைசென்டினியல் இளையோர் உலகக் கிண்ணம் என பெயரிடப்பட்டிருந்தது. பத்து வருடங்கள் கழித்து ஐசிசி 19 வயதுக்குட்ட உலகக் கிண்ணம் (ஆண்கள்) என பெயரிடப்பட்டு 1998 இல் இருந்து இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. அங்குரார்ப்பண அத்தியாயத்தில் விளையாடிய சனத் ஜயசூரிய, ரொமேஷ் களுவித்தாரண, சஞ்சீவ ரணதுங்க, சந்திக்க ஹத்துருசிங்க போன்றவர்கள் இலங்கை தேசிய அணியில் இடம்பெற்றனர். அவர்களில் சனத் ஜயசூரிய, ரொமேஷ் களுவித்தாரன ஆகிய இருவரும் 1996 உலக சம்பியன் அணியில் இடம்பெற்றதுடன் உலகக் கிண்ண வரலாற்றில் முதலாவது பெறுமதி வாய்ந்த வீரர் விருதை வென்ற பெருமை சனத் ஜயசூரியவை சாருகிறது. இந்த வருட ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் நடப்பு சம்பியனும் நான்கு தடவைகள் சம்பியனுமான அவுஸ்திரேலியா (1988, 2002, 2010, 2024), ஐந்து தடவைகள் சம்பியனான இந்தியா (2000, 2008, 2012, 2018, 2022), இரண்டு தடவைகள் சம்பியனான பாகிஸ்தான் (2004, 2006), தலா ஒரு தடவை சம்பியனான இங்கிலாந்து (1998), தென் ஆபிரிக்கா (2014), மேற்கிந்தியத் தீவுகள் (2016), பங்களாதேஷ் (2020) ஆகிய நாடுகளில் ஒன்று மீண்டும் சம்பியனாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏழு நாடுகள் உட்பட 16 நாடுகள் நான்கு குழுக்களில் மோதுகின்றன. ஏ குழுவில் அவுஸ்திரேலியா, அயர்லாந்து, ஜப்பான் ஆகிய அணிகளுடன் இலங்கை இடம்பெறுகிறது. பி குழுவில் பங்களாதேஷ், இந்தியா, நியூஸிலாந்து, ஐக்கிய அமெரிக்கா ஆகியன இடம்பெறுகின்றன. சி குழுவில் இங்கிலாந்து, பாகிஸ்தான், ஸ்கொட்லாந்து, ஸிம்பாப்வே ஆகியன பங்குபற்றுகின்றன. டி குழுவில் ஆப்கானிஸ்தான், தென் ஆபிரிக்கா, தன்ஸானியா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகியன போட்டியிடுகின்றன. இந்த நான்கு குழுக்களிலும் முதல் சுற்று போட்டிகள் இன்று ஜனவரி 15 முதல் 24 வரை லீக் அடிப்படையில் நடத்தப்படும். ஒவ்வொரு குழுவிலும் முதல் 3 இடங்களைப் பெறும் 12 அணிகள் இரண்டு குழுக்களில் தலா 6 அணிகள் வீதம் சுப்பர் 6 சுற்றில் விளையாட தகுதிபெறும். இந்த சுற்று ஜனவரி 25 முதல் பெப்ரவரி 1 வரை நடைபெறும். லீக் சுற்றில் கடைசி இடங்களைப் பெறும் 4 அணிகள் நிரல்படுத்தல் போட்டியில் விளையாடும். சுப்பர் 6 சுற்று முடிவில் இரண்டு குழுக்களிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் அரை இறுதிகளில் விளையாடுவதுடன் அவற்றில் வெற்றிபெறும் அணிகள் 19 வயதுக்குட்பட்ட உலக சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெறும். அரை இறுதிப் போட்டிகள் பெப்ரவரி 3, 4ஆம் திகதிகளிலும் இறுதிப் போட்டி பெப்ரவரி 6ஆம் திகதியும் நடைபெறும். https://www.virakesari.lk/article/236080
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
பயனாளியின் முகம் மறைக்கப்பட்ட படம். வங்கிப்பரிமாற்ற பிரதி.
-
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் 2026 தொடர்
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ணம் டி குழு: ஆப்கானிஸ்தான், தென் ஆபிரிக்கா, தன்ஸானியா, மெற்கிந்தியத் தீவுகள் Published By: Vishnu 14 Jan, 2026 | 08:49 PM (நெவில் அன்தனி) ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட்டின் 16ஆவது அத்தியாயத்தில் டி குழுவில் மீண்டும் சம்பியனாக வேண்டும் என்ற குறிக்கோளுடன் இரண்டு முன்னாள் சம்பியன்களான தென் ஆபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகியவற்றுடன் ஆப்கானிஸ்தான், அறிமுக அணி தான்சானியா ஆகியன போட்டியிடுகின்றன. தென் ஆபிரிக்கா 2014இல் சம்பியனானதுடன் இரண்டு வருடங்களுக்கு முன்னர் வரவேற்பு நாடாக அரை இறுதிவரை முன்னேறி இருந்தது. 2016இல் சம்பியனான மேற்கிந்திய தீவுகள் எட்டு வருடங்களின் பின்னர் கிண்ணத்தை மீண்டும் வெல்வதற்கான முயற்சியில் இறங்கவுள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் மிகக் குறுகிய வித்தியாசத்தில் அரை இறுதி வாய்ப்பை மேற்கிந்தியத் தீவுகள் தவற விட்டிருந்தது. ஆப்கானிஸ்தான் இரண்டு தடவைகள் (2018, 2022) அரை இறுதிவரை வீறுநடை போட்டிருந்தது. ஆனால், 2024இல் முதல் சுற்றுடன் வெளியேறியது. தன்சானியா தனது அறிமுக உலகக் கிண்ணத்தில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற முனைப்புடன் களம் இறங்கவுள்ளது. ஆப்கானிஸ்தான் 2024 இளையோர் உலகக் கிண்ணப் போட்டியில் முதல் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றம் அடைந்த ஆப்கானிஸ்தான், அதற்கு முன்னர் இரண்டு தடவைகள் அரை இறுதிவரை முன்னேறியது. இம் முறை அரை இறுதி அல்லது அதற்கும் அப்பால் முன்னேற ஆப்கானிஸ்தான் முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென் ஆபிரிக்காவில் 2024இல் நடைபெற்ற உலகக் கிண்ண அத்தியாயத்தில் 3 நேரடி தோல்விகளுடன் முதல் சுற்றில் இருந்து ஆப்கானிஸ்தான் வெளியேறியது. எதிர்நீச்சல் போடக்கூடிய தன்மை கொண்ட ஆப்கானிஸ்தான், இம் முறை எதிரணிகளுக்கு சவாலாக விளங்கி எதையாவது சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத்தில் 2010ஆம் ஆண்டு அறிமுகமானது முதல் ஆப்கானிஸ்தான் தொடர்ச்சியாக ஒவ்வொரு அத்தியாயத்திலும் விளையாடி வருகிறது. அத்துடன் நான்கு தடவைகள் நொக் - அவுட் சுற்று வரை முன்னேறி இருந்தது. உசைருல்லா நியாஸாய், பங்களாதேஷுக்கு எதிராக 103 ஓட்டங்களைப் பெற்ற பைசால் கான் ஆகிய இருவரும் 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த போதிலும் குழு நிலை போட்டிகளுக்கு அப்பால் ஆப்கானிஸ்தான் முன்னேறவில்லை. 19 வயதுக்குட்பட்ட ஆப்கானிஸ்தான் அணித் தலைவராக விக்கெட் காப்பாளர் மஹ்பூப் கான் நியமிக்கப்பட்டுள்ளார். நூரிஸ்தானி ஓமர்ஸாய் மற்றும் ஸய்த்துல்லா ஷஹீன் ஆகிய இருவரும் அணியில் இடம்பெறும் சிறந்த பந்துவீச்சாளர்களாவர். இரண்டு வருடங்களுக்கு முன்னர் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத்தில் விளையாடிய எவரும் இந்த வருட அணியில் இடம்பெறவில்லை. தென் ஆபிரிக்கா இரண்டு வருடங்களுக்கு முன்னர் சொந்த மண்ணில் இறுதிப் போட்டி வாய்ப்பை மயிரிழையில் தவறவிட்ட தென் ஆபிரிக்கா, இம்முறை அதனைவிட சிறப்பாக செயல்படும் குறிக்கோளுடன் விளையாடவுள்ளது. இந்த வருடப் போட்டி ஆபிரிக்க கண்டத்தில் நடைபெறுவதால் ஸிம்பாப்வே, நமிபியா ஆடுகளங்களின் தன்மையை நன்கு அறிந்தவர்களாக தென் ஆபிரிக்க வீரர்கள் இலகு மனதுடன் ஆற்றல்களை வெளிப்படுத்தி தமது அணியை இரண்டாவது தடவையாக சம்பியனாக்க முயற்சிக்கவுள்ளனர். இந்தியாவுக்கு எதிராக 2024இல் நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்கா தோல்வி அடைந்து வெளியேறியது. அப்போது விளையாடிய வீரர்கள் எவரும் இந்த வருட அணியில் இடம்பெறவில்லை. தென் ஆபிரிக்க அணியின் தலைவராக முஹம்மத் புல்புலியா நியமிக்கப்பட்டுள்ளார். அண்மையில் நடைபெற்ற இளையோர் மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் புல்புலியா தலைமையிலான தென் ஆபிரிக்கா இரண்டாம் இடத்தைப் பெற்றது. அந்தத் தொடரில் விளையாடிய பெரும்பாலானவர்கள் உலகக் கிண்ண குழாத்தில் இடம்பெறுவதுடன் ஜோரிச் வென் ஷோக்வைக், அத்னான் லகாடியென் ஆகியோர் துடுப்பாட்டத்தில் அசத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சில் நிட்டண்டோயென்கோசி சோனி, பயண்டா மஜோலா முக்கிய வீரர்களாக இடம்பெறுகின்றனர். தன்ஸானியா ஆபிரிக்க பிராந்தியத்தில் வளர்முக கிரிக்கெட் நாடுகளுக்கான உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் 13 நாடுகள் போட்டியிட்ட போதிலும் அவற்றை எல்லாம் பின்தள்ளி முதல் முறையாக ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாட தன்ஸானியா தகுதிபெற்றுள்ளது. முதலில் முன்னோடி தகுதிகாண் சுற்றில் விளையாடிய தன்ஸானியா அதில் வெற்றி பெற்று பிரதான ஆபிரிக்க தகுதிகாண் சுற்றில் விளையாட தகுதிபெற்றது. அங்கு ஐந்து போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற தன்ஸானியா தொடர்ந்து இறுதிப் போட்டியிலும் வெற்றியீட்டி 16ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண அத்தியாயத்தில் விளையாட தகுதிபெற்றுக்கொண்டது. தகுதிகாண் போட்டிகளில் ஈட்டிய வெற்றிகள் தன்ஸானியாவை உற்சாகம் அடையச் செய்துள்ளதுடன் முதல் தடவையாக ஆபிரிக்காவுக்கு வெளியே உள்ள அணிகளை எதிர்த்தாடவுள்ளது. ஆபிரிக்க தகுதிகாண் சுற்றில் துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் அதிசிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்திய லக்ஷ் பக்ரானியா அணித் தலைவராக விளையாடுகிறார். சகலதுறை ஆட்டக்காரரான லக்ஷ் பக்ரானியா துடுப்பாட்டத்தில் அதிக ஓட்டங்களைக் குவித்ததுடன் பந்துவீச்சில் சிரான இடைவெளியில் விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். 18 வயதான இடதுகை துடுப்பாட்ட வீரரான பக்ரானியா, தன்ஸானியாவின் சிரேஷ்ட அணியில் இடம்பெற்றதுடன் நமிபியாவுக்கு எதிரான போட்டி ஒன்றில் 28 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தி ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார். ஹம்சா அலி மற்றும் ரேமண்ட் பிரான்சிஸ் ஆகியோருடன் இணைந்து வேகப்பந்துவீச்சில் காலிதி அமிரி பந்துவீச்சை வழிநடத்துவார். அக்ரே பஸ்கல் மற்றும் அகஸ்டினோ மவாமெலே ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரதான பங்களிப்பு செய்யவுள்ளனர். மேற்கிந்திய தீவுகள் 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண வரலாற்றில் அற்புதமான சாதனைகளைப் பதிவுசெய்துள்ள மேற்கிந்தியத் தீவுகள் 2016இல் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. ஆனால், அதன் பின்னர் கடந்த 10 வருடங்களில் நொக் அவுட் சுற்றை மேற்கிந்தியத் தீவுகள் நெருங்கவில்லை. 2016இல் இந்தியாவை இறுதிப் போட்டியில் 5 விக்கெட்களால் வெற்றிகொண்டு மேற்கிந்தியத் தீவுகள் சம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. இம்முறை டி குழுவில் அதேபோன்ற ஆற்றல்களை வெளிப்படுத்தினால் மேற்கிந்தியத் தீவுகள் குறைந்த பட்சம் சுப்பர் 6 சிக்ஸ் விளையாடுவதை உறுதிசெய்துகொள்ளும். மேற்கிந்தியத் தீவுகள் அணியில் 2024இல் விளையாடிய ஜோசுவா டோர்ன் இம்முறை அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் இரண்டாவது உலகக் கிண்ணத்தில் ஜுவெல் அண்ட்றூ விளையாடவுள்ளார். இலங்கை, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற இளையோர் மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் துடுப்பாட்டத்தில் டோர்ன மிகத் திறமையாக செயல்பட்டிருந்தார். அந்தத் தொடரில் ஜக்கீன் பொல்லார்ட், ஷக்வான் பெலே ஆகிய இருவரும் பந்துவீச்சில் திறமையாக செயல்பட்டதுடன் உப அணித் தலைவர் ஜொநதன் வென் லங்கே அதிரடிக்கு பெயர் பெற்றவராவார். போட்டி விபரங்கள் ஜனவரி 15 – தன்ஸானியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ஜனவரி 16 – ஆப்கானிஸ்தான் எதிர் தென் ஆபிரிக்கா ஜனவரி 18 – ஆப்கானிஸ்தான் எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ஜனவரி 19 – தென் ஆபிரிக்கா எதிர் தன்ஸானியா ஜனவரி 21 – ஆப்கானிஸ்தான் எதிர் தன்ஸானியா ஜனவரி 22 – தென் ஆபிரிக்கா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் https://www.virakesari.lk/article/236055
-
வெனிசுவெலா சிறையில் அடைக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் விடுவிப்பு
வெனிசுவெலா சிறையில் அடைக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் விடுவிப்பு 14 Jan, 2026 | 04:35 PM வெனிசுவெலாவில் சிறை பிடிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. வெனிசுவெலா நாட்டின் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள எண்ணற்ற அமெரிக்கர்கள் விடுவிக்கப்பட்டிருக்கும் இந்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம். இது, வெனிசுவெலாவின் இடைக்கால அதிகாரிகள் சரியான திசையை நோக்கி எடுத்த முக்கிய முடிவு என்றும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெனிசுவெலாவில் உள்ள மனித உரிமைகள் அமைப்பான போரோ பீனல் வெளியிட்ட செய்தியறிக்கையில், அரசியல் காரணங்களுக்காக சிறை பிடிக்கப்பட்ட 56 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனினும், வெனிசுவெலா அரசு 400 பேரை விடுவித்திருக்கிறோம் என தெரிவித்துள்ளது. ஆனால், விடுவிப்புக்கான சான்றுகளையோ அல்லது எப்போது விடுவித்தது என்பது பற்றிய தகவலையோ வெளியிடவில்லை. விடுதலை செய்யப்பட்டவர்களின் அடையாளமும் வெளியாகவில்லை. இதனால் அவர்கள் அரசியல் காரணங்களுக்காக அல்லது பிற காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களா? என்ற விபரம் தெரியவில்லை. கடந்த ஜூலையில் வெனிசுவெலா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 10 அமெரிக்கர்கள் விடுவிக்கப்பட்டனர் என தெரிவிக்கப்படுகிறது. வெனிசுவெலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோர் அமெரிக்க இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப்பட்ட பின்னர், வெனிசுவெலாவில் சிறை பிடிக்கப்பட்ட கைதிகளின் விடுவிப்பு விடயங்கள் அதிக கவனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/236040
-
சிங்கப்பூர் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக முதலிடம் : இலங்கை பாஸ்போர்ட் 93 ஆவது இடம்
சிங்கப்பூர் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக முதலிடம் : இலங்கை பாஸ்போர்ட் 93 ஆவது இடம் 15 Jan, 2026 | 02:04 PM விசா இன்றி வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் வசதியின் அடிப்படையில் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு (Henley Passport Index) – 2026 பட்டியலில், சிங்கப்பூர் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இந்த பட்டியலின்படி, சிங்கப்பூர் குடிமக்கள் விசா இல்லாமல் 193 நாடுகளுக்குப் பயணம் செய்யும் உரிமையை பெற்றுள்ளனர். உலகளாவிய பயண சுதந்திரத்தில் இது மிக உயர்ந்த நிலையாகக் கருதப்படுகிறது. 2-வது இடத்தில் ஜப்பான் மற்றும் தென்கொரியா ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு 2026 பட்டியலில் ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட்டுகள் இரண்டாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன. இந்த நாடுகளின் குடிமக்கள் விசா இன்றி பெரும்பாலான உலக நாடுகளுக்குப் பயணிக்க முடியும். 3-வது இடத்தில் ஐரோப்பிய நாடுகள் டென்மார்க், ஸ்பெயின், சுவீடன் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் மூன்றாவது இடத்தில் உள்ளன. இந்நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 186 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் செய்ய முடியும். அமெரிக்கா 10-வது இடத்திற்கு சரிவு ஒரு புள்ளி சரிவுடன், அமெரிக்கா இந்த ஆண்டு பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது. அமெரிக்க பாஸ்போர்ட் மூலம் 179 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் செய்ய இயலும் என ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு தெரிவிக்கிறது. இந்தியாவின் நிலை இந்த பட்டியலில் இந்தியா 85-வது இடத்தைப் பெற்றுள்ளது. இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் குறைந்த எண்ணிக்கையிலான நாடுகளுக்கே விசா இன்றி பயணம் செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இலங்கையின் நிலை இலங்கையின் பாஸ்போர்ட் உலகளாவிய ரீதியில் 93 ஆவது இடத்தில் உள்ளது. இது இலங்கை பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு 39 நாடுகளுக்குக் விசா இல்லாமல் அல்லது விசா- ஒன் அரைவல் (visa-on-arrival) முறையிலேயும் பயணம் செய்யும் உரிமையை வழங்குகிறது. உலகளாவிய அரசியல், இராஜதந்திர உறவுகள் மற்றும் குடிவரவு கொள்கைகள் போன்றவை பாஸ்போர்ட் தரவரிசையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதையும் இந்த ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு 2026 பட்டியல் வெளிப்படுத்துகிறது. https://www.virakesari.lk/article/236093
-
நாடு தழுவிய ரீதியில் தை திருநாள் வெகு விமர்சையாகக் கொண்டாட்டம்
நாடு தழுவிய ரீதியில் தை திருநாள் வெகு விமர்சையாகக் கொண்டாட்டம் 15 Jan, 2026 | 12:59 PM நாடு தழுவிய ரீதியில் இன்று வியாழக்கிழமை (15) தைப்பொங்கல் திருநாள் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருவதோடு,இதனை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் மற்றும் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றன. நீர்கொழும்பு தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு இன்று காலை நீர்கொழும்பு ஸ்ரீ சிங்க மகா காளியம்மன் கோயிலில் பரமேஸ்வர குருக்கள் தலைமையில் விசேட பூஜை நடைபெற்றது. அம்பாளுக்கு அபிஷேகம், பூஜை, தீபாராதனை, சூரிய பூஜை, வசந்த மண்டப பூஜை என்பன இடம்பெற்றதை அடுத்து அம்பாள் உள்வீதி வலம் வருதல் தொடர்ந்து இடம் பெற்றது. இந்த விஷேட பூஜையில் அதிக எண்ணிக்கையானோர் கலந்து கொண்டனர். மட்டக்களப்பு உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு இன்று (15) மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களிலும் வீடுகளிலும் பொங்கல் பொங்கப்பட்டு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தைத்திருநாளை முன்னிட்டு விசேட பொங்கல் வழிபாடுகள் நடைபெற்றன. காலை சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆலய முன்றிலில் பொங்கல் பொங்கி படைக்கப்பட்டு சூரிய பகவானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன. ஆலயத்தின் வண்ணக்கமார்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் பொங்கல் படைக்கப்பட்டு விசேட பூஜைகள் நடைபெற்றன. பேரிடர்களிலிந்து மக்களை பாதுகாக்கவும் நாட்டு மக்களுக்கு நல்லாசிவேண்டியும் விவசாயிகள் சிறந்த விளைச்சலைபெறவேண்டியும் மாமாங்கேஸ்வரருக்கு பூஜைகளும் பிரார்த்தனைகளும் செய்யப்பட்டன. இன்றைய தைத்திருநாள் விசேட பொங்கல் பூஜையில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டதுடன் பொங்கல் வாழ்த்துகளையும் தங்களுக்குள் தெரிவித்துக் கொண்டனர். இதேபோன்று இன்று அதிகாலை முதல் வீடுகளிலும் பொங்கல் படைக்கப்பட்டு சூரியனுக்கு வணக்கம் செலுத்தப்பட்டது. திருகோணமலை தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் தினமான இன்று திருகோணமலையில் உள்ள தமிழ் மக்களின் வீடுகளிலும் விசேட பொங்கல் பூஜை நிகழ்வுகள் இடம் பெற்றன. குறிப்பாக ஆலயங்களிலும் ,வீடுகளிலும் விசேட வழிபாடுகள் தைப்பொங்கல் நாளான இன்று இடம் பெற்றன. சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் நோக்கில் விசேடமாக பூஜை வழிபாட்டுடன் பொங்கல் இடம் பெறுகிறது. ஒவ்வொரு வீடுகளிலும் குடும்பங்களாக சேர்ந்து விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர். குறிப்பாக திருகோணமலை திருக்கோணேஸ்வரம், திருகோணமலை பத்திரகாளி அம்பாள் போன்ற ஆலயங்கள் மற்றும் வீடுகளில்,பொது இடங்களிலும் தைப்பொங்கல் நிகழ்வுகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பு மாவட்டம் செட்டிபாளையம் அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தின விசேட பூஜை வழிபாடுகள் இன்று பக்தி பூர்வமாக நடைபெற்றது. ஆலயத்தில் இடம்பெற்ற விசேட அபிசேக பூஜைகளை தொடர்ந்து, விநாயகப் பெருமானுக்கு பக்தி பூர்வமாக பூஜை வழிபாடுகள் நடைபெற்றது. ஆலயப்பிரதமகுரு திருவேரகசர்மா குருக்களினால் இப்பூஜை வழிபாடுகள் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பூஜையின் நிறைவில் பக்தர்களுக்கு கைவிசேஷமும் வழங்கப்பட்டமை சிறப்பம்சமாகும். https://www.virakesari.lk/article/236087
-
ஈரானில் தீவிரமடையும் போராட்டம்: இணைய சேவைகள் முடக்கம்
ஈரானில் வெடிக்கும் வன்முறைகள், போராட்டங்கள்! : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2571ஆக அதிகரிப்பு 14 Jan, 2026 | 02:17 PM ஈரானில் அரசுக்கு எதிரான பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2571ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் 2403 பேர் போராட்டக்காரர்கள், 147 பேர் அரசு தரப்பினர், 12 பேர் சிறுவர்கள் கொல்லப்பட்டதோடு போராட்டங்களில் பங்கேற்காத பொதுமக்களில் 9 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்துக்காக 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசு மற்றும் பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தபோதும் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு அதிகமாக ஈரானில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்போராட்டங்களை ஒடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடுமையான மோதல் இடம்பெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தில் பாதுகாப்பு படையினர் கண்மூடித்தனமாக எந்த ஆயுதங்களுமின்றி நிற்கும் பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வதாக போராட்டக்கார்கள் கூறுகின்றனர். கட்டடங்களின் மேற்கூரைகளிலிருந்து நின்று படையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவதாக தெரிவிக்கின்றனர். இப்போராட்ட நிலை காரணமாக ஈரானில் கைப்பேசி மற்றும் இணைய சேவைகள் முடக்கப்பட்ட நிலையில் தற்போது சில தகவல் தொடர்பு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு தளர்த்தியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்துக்காக கைது செய்யப்பட்ட எர்பான் என்ற 26 வயதுடைய இளைஞனுக்கு இன்று (14) ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதாக வெளியான அறிவிப்புகள் அந்நாட்டில் மேலும் குழப்பகரமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/236016
-
ஜல்லிக்கட்டு செய்திகள் 2026
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியின் கள நிலவரம் - நேரலை 15 ஜனவரி 2026, 03:11 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அமைச்சர் மூர்த்தி மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் உள்ளிட்டோர் கொடியசைத்துத் தொடங்கிவைத்தனர். காலை 7 மணி அளவில் வீரர்களின் உறுதி ஏற்பு நிகழ்வுடன், ஜல்லிக்கட்டு தொடங்கியது. திருப்பரங்குன்றம் அவனியாபுரம் சாலையில் குருநாத சுவாமி அங்காள ஈஸ்வரி கோவில் முன்பு வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது. மதுரை மட்டுமல்லாது திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஜல்லிக்கட்டுக் காளைகளும் மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மொத்தம் எட்டு சுற்றில் இருந்து 12 சுற்று வரை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான காளைகளும் மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் இதுவரை 7 சுற்றுகள் நிறைவடைந்துள்ளன. ஆறாம் மற்றும் ஏழாம் சுற்று நிலவரம் ஆறாம் சுற்றின் முடிவில், மாடுபிடி வீரர்கள் 23 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 15 பேர் மற்றும் பார்வையாளர்கள் 6 பேர் என மொத்தம் 44 பேர் காயமடைந்தனர். அதன் பிறகு நடைபெற்ற ஏழாம் சுற்றில், களம் கண்ட 616 மாடுகளில், 149 மாடுகள் பிடிபட்டன. வீரர்கள் முன்னிலை நிலவரம் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை: கார்த்தி, அவனியாபுரம் - 16 ரஞ்சித், அவனியாபுரம் - 9 பிரகாஷ், சோழவந்தான் - 7 விஜய், ஜெய்ஹிந்தபுரம் - 7 ஏழாம் சுற்றில் தகுதி பெற்றவர்கள் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை: ரஞ்சித்குமார், அவனியாபுரம் - 3 முத்துவன்னி, மதுரை - 3 நாகராஜ், மதுரை - 3 கோபி கிருஷ்ணன், திண்டுக்கல் - 3 மாயக்கண்ணன், சிவகங்கை - 2 ஹரிஹரன், மதுரை - 2 கண்ணன், மதுரை - 2 வேல்முருகன், திருப்பரங்குன்றம் - 2 பட மூலாதாரம்,X/pmoorthy21 ஐந்தாம் சுற்று நிலவரம் ஐந்தாம் சுற்று முடிவில், களம் சென்ற 464 மாடுகளில், 109 மாடுகள் பிடிபட்டன. வீரர்கள் முன்னிலை நிலவரம் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை: கார்த்தி, அவனியாபுரம் - 16 ரஞ்சித், அவனியாபுரம் - 9 பிரகாஷ், சோழவந்தான் - 6 5ம் சுற்றில் தகுதி பெற்றவர்கள் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை: விஜயகுமார், அய்யனார்குளம் - 5 அரவிந்த், குன்னத்தூர் - 4 பொன்பாண்டி, கருப்பாயூரணி - 4 அருண்பாண்டி, கருப்பாயூரணி - 2 பட மூலாதாரம்,X/pmoorthy21 நான்காம் சுற்று நிலவரம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டின் நான்காவது சுற்றின் முடிவில் மொத்தம் 376 மாடுகள் களம் சென்றன. அவற்றில் 89 மாடுகள் பிடிபட்டன. வீரர்கள் முன்னிலை நிலவரம் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை: கார்த்தி, அவனியாபுரம் - 16 ரஞ்சித், அவனியாபுரம் - 9 பிரகாஷ், சோழவந்தான் - 6 4ம் சுற்றில் தகுதி பெற்றவர்கள் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை: ரஞ்சித், அவனியாபுரம் - 9 டேவிட் வில்சன், புகையிலைப்பட்டி - 4 பரணி, அய்யம்பாளையம் - 2 ராகுல், அவனியாபுரம் - 2 மொத்தம் 12 வீரர்கள் இறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றிருக்கிறார்கள். பட மூலாதாரம்,X/pmoorthy21 மூன்றாம் சுற்று நிலவரம் 10 மணி வரையிலான தரவுகளின்படி, பரிசோதனைக்கு சென்ற 356 காளைகளில், 332 காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டன. 24 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. மூன்றாவது சுற்று முடிவில் களம் சென்ற மொத்த மாடுகளின் எண்ணிக்கை 288. அதில் 61 மாடுகள் பிடிபட்டன. வீரர்கள் முன்னிலை நிலவரம் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை: அதிக காளைகளைப் பிடித்து முன்னணியில் உள்ள வீரர்களின் பட்டியல் கார்த்தி, அவனியாபுரம் - 16 பிரகாஷ், சோழவந்தான் - 6 விக்னேஷ், சாப்டூர் - 3 முத்துப்பாண்டி, பேரையூர் - 3 ரிஷி, அவனியாபுரம் - 2 முரளி, மாடக்குளம் - 2 முதல் சுற்று காலை 8 மணி நிலவரப்படி, பரிசோதனைக்கு வந்த மொத்தம் 137 காளைகளில் 126 காளைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டு, பரிசோதனையில் 11 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. முதல் சுற்று முடிவில் 11 மாடுகள் பிடிபட்டுள்ளன. இந்த சுற்றில் 11 வீரர்கள் தலா ஒரு மாடு மட்டுமே பிடித்துள்ளதால் யாரும் தேர்வு செய்யப்படவில்லை. பாதுகாப்பு நடவடிக்கைகள் ஜல்லிக்கட்டுக்காக ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் காயம் பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். இங்கு மொத்தம் 15 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன, காயத்திற்கு உள்ளாகும் காளை மாடுகளை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்குக் கொண்டு செல்லும் வகையில் கால்நடை ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி சார்பாக ஆங்காங்கே ஸ்கிரீன்கள் அமைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒளிபரப்பப்படுகின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y5l9l2y31o
-
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் 2026 தொடர்
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ணம் : குழு சி இல் இங்கிலாந்து, பாகிஸ்தான், ஸ்கொட்லாந்து, ஸிம்பாப்வே Published By: Vishnu 13 Jan, 2026 | 09:35 PM (நெவில் அன்தனி) 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ணப் போட்டிக்கான சி குழுவில் முன்னாள் சம்பியன்களான இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் ஸ்கொட்லாந்து, ஸிம்பாப்வே ஆகியன இடம்பெறுகின்றன. ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த வருட இறுதியில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் சம்பியனான பாகிஸ்தான், மிகுந்த நம்பிக்கையுடன் உலகக் கிண்ணப் போட்டிகளை எதிர்கொள்ளவுள்ளது. 2024இலும் 2006இலும் தொடர்ச்சியாக இரண்டு தடவைகள் 19 வயதுக்குட்பட்ட உலக சம்பியனான பாகிஸ்தான் 3ஆவது தடவையாக சம்பியானாகும் குறிக்கோளுடன் இந்த உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடவுள்ளது. அதேவேளை, 38 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற இரண்டாவது 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண அத்தியாயத்தில் சம்பியனான இங்கிலாந்து, இரண்டாவது சம்பியன் பட்டத்துக்கு குறிவைத்து விளையாடவுள்ளது. அவுஸ்திரேலியாவில் 1988இல் நடைபெற்ற அங்குரார்ப்பண உலகக் கிண்ண அத்தியாத்தைத் தவிர்ந்த மற்றைய 14 அத்தியாயங்களிலும் ஸிம்பாப்வே பங்குபற்றியதுடன் ஸ்கொட்லாந்து 11ஆவது தடவையாக களம் இறங்குகிறது. இங்கிலாந்து 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண வரலாற்றில் ஐந்து நாடுகளே இதுவரை சம்பியன் பட்டத்தை சுவிகரித்துள்ளன. அவற்றில் ஒன்றான இங்கிலாந்து, 1998இல் உவைஸ் ஷா தலைமையில் சம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. சம்பியனான அந்த அணியில் தற்போதைய இங்கிலாந்து பணிப்பாளர்நாயகம் ரொப் கீ இடம்பெறுவதுடன் க்ரேம் ஸ்வோனும் விளையாடி இருந்தார். நான்கு வருடங்களுக்கு முன்னர் அன்டிகுவாவில் 2022இல் நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் இறுதிப் போட்டிவரை இங்கிலாந்து முன்னேறி இருந்தது. ஆனால், இந்தியாவிடம் தோல்வி அடைந்து உப சம்பியன் பட்டத்துடன் திருப்தி அடைந்தது. இங்கிலாந்தில் நடத்தப்படும் கவுன்டி கிரிக்கெட் போட்டியில் விளையாடும் பல வீரர்கள் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண குழாத்தில் இடம்பெறுகின்றனர். அணித் தலைவர் தோமஸ் ரீவ் (சமர்செட்), பர்ஹான் அஹ்மத் (நொட்டிங்ஹாம்ஷயர் சகலதுறை வீரர்) ஆகிய இருவரும் இங்கிலாந்து அணியில் பிரதான வீரர்களாக இடம்பெறுகின்றனர். கவுன்டி கிரிக்கெட் சம்பியன்ஷிப்பில் 8 போட்டிகளில் 13 விக்கெட்களைக் கைப்பற்றிய பர்ஹான் அஹ்மத், தனது அணி சம்பியனாவதில் பெரும் பங்காற்றி இருந்தார். அவர்கள் இருவரைவிட ஜேம்ஸ் மின்டோ (டேர்ஹாம்), ஈசாக் மொஹம்மத் (வூஸ்டர்ஷயர்) ஆகியோரும் கவுன்டி கிரிக்கெட் அனுபவத்துடன் அணியில் இடம்பிடித்துள்ளனர். எவ்வாறாயினும் அண்மையில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் நடைபெற்ற 7 போட்டிகள் கொண்ட இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2 - 5 என்ற ஆட்டக் கணக்கில் இங்கிலாந்து தோல்வி அடைந்திருந்தது. இது இங்கிலாந்து அணிக்கு நெருக்கடியைக் கொடுத்திருந்தாலும் இளையோர் உலகக் கிண்ணத்தில் சாதிக்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் பங்குபற்றவுள்ளது. பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியாவை 191 ஓட்டங்களால் வெற்றிகொண்டு ஆசிய சம்பியனான சூட்டோடு பாகிஸ்தான் இந்த உலகக் கிண்ணத்தில் பங்குபற்றவுள்ளது. இந்தியாவுக்கு எதிரான ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் சமீர் மின்ஹாஸ் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 172 ஓட்டங்களைக் குவித்ததுடன் அவர் மொத்தமாக 471 ஓட்டங்களைப் பெற்றார். இளையோர் உலகக் கிண்ண கிரிக்கெட்டில் ஐந்து தடவைகள் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் விளையாடியுள்ளதுடன் 2004இலும் 2006இலும் சம்பியன் பட்டத்தை சூடியிருந்தது. 2006இல் தலைவராக விளையாடிய சப்ராஸ் அஹ்மத், 2017இல் அணித் தலைவராக ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத்தில் பாகிஸ்தானை சம்பியன் ஸ்தானத்திற்கு உயர்த்தி இருந்தார். 2014க்குப் பின்னர் பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறாத போதிலும் கடந்த 4 அத்தியாயங்களில் அரை இறுதிகளில் விளையாடி இருந்தது. ஸ்கொட்லாந்து தமது சொந்த மண்ணில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஐரோப்பிய தகுதிகாண் சுற்றில் வெற்றிபெற்றதன் மூலம் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத்தில் பங்குபற்ற ஸ்கொட்லாந்து தகுதிபெற்றது. அந்த சுற்றுப் போட்டியில் விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றியீட்டிய ஸ்கொட்லாந்து, இறுதிப் போட்டியில் நெதர்லாந்தை 20 ஓட்டங்களால் வெற்றிகொண்டு ஐரோப்பிய தகுதிகாண் சம்பியன் என்ற அந்தஸ்துடன் உலகக் கிண்ணத்தில் பங்குபற்றுகின்றது. கடைசி எட்டு உலகக் கிண்ண அத்தியாயங்களில் ஏழில் விளையாடியுள்ள ஸ்கொட்லாந்து, இதுவரை குழுநிலை போட்டிகளில் வெற்றியை சுவைத்ததில்லை. எனினும், இந்த வருடம் ஸ்கொட்லாந்து தலைகீழ் முடிவுகளை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஸ்கொட்லாந்து அணிக்கு தோமஸ் நைட் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்கொட்லாந்து தனது ஆரம்பப் போட்டியில் ஸிம்பாப்வேயை ஹராரேயில் எதிர்த்தாடும். ஸிம்பாப்வே சொந்த மண்ணில் விளையாடும் ஸிம்பாப்வே அணியினர் தமது நாட்டின் சூழ்நிலைகளை நன்கு அறிந்தவர்களாக திறமையாக விளையாடி அடுத்து சுற்றுக்கு முன்னேற முயற்சிப்பர் என நம்பப்படுகின்றது. இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளில் ஒன்றை ஸிம்பாப்வே வெற்றிகொண்டால் அதன் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு அதிகரிக்கும். ஆனால், அது சாத்தியப்படும் என எதிர்பார்க்க முடியாது. முன்னாள் வீரர் எல்டன் சிக்கும்புரா பயிற்றுவிக்கும் ஸிம்பாப்வே அணிக்கு சிம்பராஷே மட்ஸெங்கெரே தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 1999 முதல் 2010 வரை ஸிம்பாப்வே அணியில் விளையாடிய அண்டி ப்ளிக்நோட்டின் புதல்வர்களான கியான், மைக்கல் ஆகிய இரட்டையர்கள் இளையோர் அணியில் இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும். அண்மையில் இளையோர் மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தென் ஆபிரிக்காவுடனும் பங்களாதேஷுடனும் விளையாடிய ஸிம்பாப்வேயினால் ஒரு வெற்றியையும் பெற முடியாமல் போனது. ஆனால், வேகப்பந்துவீச்சாளர் ஷெல்டன் மஸவிட்டேரெரா 25.00 என்ற சராசரியுடன் 11 விக்கெட்களைக் கைப்பற்றி தனது சிறந்த ஆற்றலை வெளிப்படுத்தி இருந்தார். போட்டி விபரங்கள் ஜனவரி 15: ஸிம்பாப்வே எதிர் ஸ்கொட்லாந்து ஜனவரி 16: இங்கிலாந்து எதிர் பாகிஸ்தான் ஜனவரி 18: ஸிம்பாப்வே எதிர் இங்கிலாந்து ஜனவரி 19: பாகிஸ்தான் எதிர் ஸ்கொட்லாந்து ஜனவரி 21: இங்கிலாந்து எதிர் ஸ்கொட்லாந்து ஜனவரி 22: ஸிம்பாப்வே எதிர் பாகிஸ்தான் https://www.virakesari.lk/article/235964
-
2026 பாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சின் புதிய வழிகாட்டல்
2026 பாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சின் புதிய வழிகாட்டல் Published By: Vishnu 15 Jan, 2026 | 03:12 AM 2026 ஜனவரி 21 முதல் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் நிலையில், 1ஆம் தரத்திற்கு புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழான பாடத்திட்டக் கற்றல் செயல்பாடுகள் ஜனவரி 29 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 6ஆம் தரத்திற்கான புதிய பாடத்திட்டம் 2027 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், 2026 ஆம் ஆண்டில் 6–13ஆம் தரங்களுக்கு தினசரி பாடவேளைகள் எட்டாகவும், ஒவ்வொரு பாடவேளையும் 40 நிமிடங்களாகவும் அமையும். மேலும், 2026 இலும் கடந்த ஆண்டின் பாடத்திட்டமே தொடரப்படுவதுடன், மாணவர்கள் பயன்படுத்திய பாடப்புத்தகங்களையே முதன்மையாக பயன்படுத்த வேண்டும் என்றும், புதிய சீர்திருத்தங்களுக்கு உரிய முன்னோடித் திட்டம் சில மாகாணங்களில் மட்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/236061
-
‘Rebuilding Sri Lanka’ தேசிய வேலைத்திட்டம் நாளை ஆரம்பம்
‘Rebuilding Sri Lanka’ தேசிய வேலைத்திட்டத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம் Published By: Vishnu 14 Jan, 2026 | 10:17 PM கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகத்திலுள்ள லோட்டஸ் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (13) நடைபெற்ற ‘Rebuilding Sri Lanka’ தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் www.rebuildingsrilanka.gov.lk உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. MIT மற்றும் டயலாக் (Dialog) நிறுவனங்களின் முன்மொழிவுக்கு அமைய, அந்த நிறுவனங்களினால் அரசாங்கத்திற்காக www.rebuildingsrilanka.gov.lk இணையத்தளம் வடிவமைக்கப்பட்டது. நாடு எதிர்கொண்ட அனர்த்தத்தின் பின்னர் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக பொதுமக்கள், தனியார் துறை மற்றும் சர்வதேச சமூகத்தை ஒரே மேடைக்குக் கொண்டு வந்து, ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் நம்பகமான செயல்முறையை உருவாக்குவதே இந்த இணையத்தளத்தின் பிரதான நோக்கமாகும். இந்த இணையத்தளத்தின் ஊடாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நன்கொடையாளர்களுக்கு நிதி ரீதியாகவும் அத்துடன் பொருட்கள், காணி மற்றும் ஏனைய வளங்களை நன்கொடையாக வழங்குவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அத்தோடு, நன்கொடையாளர்கள் தமது நன்கொடைகள் தொடர்பான தகவல்களை வெளிப்படைத்தன்மையுடன் அவதானிப்பதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு கிடைக்கப்பெறும் நிதி நன்கொடைகள் தொடர்பான தகவல்கள் தொடர்ந்து புதுப்பிக்கப்படும். மேலும், மாவட்ட ரீதியாக ஏற்பட்ட சேதங்கள், தமது நிதியின் மூலம் முன்னெடுக்கப்படும் மீளக் கட்டியெழுப்பும் திட்டங்கள், அவற்றின் முன்னேற்றம் மற்றும் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் ஆகியவற்றை இந்த இணையத்தளத்தின் ஊடாக பொதுமக்கள் தொடர்ச்சியாகப் பெற்றுக்கொள்ள முடியும். அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவது இதன் முக்கிய அம்சமாகும். இந்த இணையத்தளமானது வெளிப்படைத்தன்மையுடன் கூடிய நன்கொடை முகாமைத்துவம், சமூக நீதி, நிலையான அபிவிருத்தி மற்றும் பொறுப்புக்கூறலுடனான ஆட்சி ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகள், பொருளாதாரம் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கமைய, www.rebuildingsrilanka.gov.lk இணையத்தளம் ‘Rebuilding Sri Lanka’ வேலைத்திட்டத்தின் நம்பகமான தகவல் மையமாகச் செயற்படும். https://www.virakesari.lk/article/236057
-
நாவற்குழியில் கோர விபத்து; கிளிநொச்சியைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு
நாவற்குழியில் கோர விபத்து; கிளிநொச்சியைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு Jan 15, 2026 - 01:17 PM யாழ்ப்பாணம் - மன்னார் வீதி, தென்மராட்சி நாவற்குழி பகுதியில் டிப்பர் வாகனமொன்று வீதியை விட்டு விலகி, மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் இன்று (15) அதிகாலை 5.05 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சட்டவிரோத மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமே, வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் கிளிநொச்சி, வட்டக்கச்சியைச் சேர்ந்த இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஒருவரது சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையிலும், மற்றவரது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmkf5cyo003ybo29nf06wgdlk