Everything posted by ஏராளன்
-
கருத்து படங்கள்
அததெரண கருத்துப்படம்.
-
வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை மக்களிடம் கையளிக்க வேண்டுகோள்
13 Nov, 2025 | 03:50 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சகல மாவீரர் துயிலும் இல்லங்களையும் அங்குள்ள மக்களிடம் கையளித்து, அந்த இடங்களை அங்கீகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு அவை மக்களிடம் கையளிக்கப்படும் பட்சத்தில் அவற்றை பராமரிக்கும் செலவை தமிழர்களாகிய நாங்கள் பார்த்துக்கொள்வோம் என்று இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, இன்று கார்த்திகை வீரர்கள் ஞாபகார்த்த தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது. அதாவது இடதுசாரி கொள்கையுடன் போராடிய ஒரு மாவீரர் ரோகண விஜேவீரவின் நினைவுநாள் அனுஸ்டிக்கப்படுகின்றது. இந்த நாளிலேயே அவர் இலங்கை அரச படையினால் கொல்லப்பட்டார். அதில் ஜே.வி.பி வீரர்கள் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டனர். அவர்களின் நினைவஞ்சலியில் எமது அஞ்சலியை செலுத்துகின்றோம். இதேவேளை இந்த கார்த்திகை மாதத்தில் வடக்கு மற்றும் கிழக்கில் மாவீரர்கள் நாள் அனுஸ்டிக்கப்படுகின்றது. வடக்கு கிழக்கில் 32க்கும் மேற்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் உள்ளன. எமது இனத்திற்காக விடுதலைக்காக போராடிய மாவீரர்கள் பொதுமக்கள் இறந்த புனிதமான அந்த இடங்களை பாதுகாக்க வேண்டிய கடமைப்பாடு உள்ளது. இந்த அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களையும் அங்கே வாழும் தமிழ் மக்களிடம் கொடுக்க வேண்டும். அந்த இடங்களை அங்கீகரிக்க வேண்டும். அங்கே நிலைகொண்டுள்ள இராணுவ பிரச்சனத்தை அகற்ற வேண்டும். மக்கள் சுயாதீனமாக அங்கே நினைவு கூரலை நடத்துவதற்கு இடத்தை கொடுக்க வேண்டும். அந்த இடத்தை அங்கீகரித்து பொதுமக்களுக்கு அதனை கொடுக்கும் போது நீங்கள் அதற்கு நிதி ஒதுக்கத் தேவையில்லை. நாங்கள் தமிழர்கள். அதற்கான நிதியை ஒதுக்கி அந்த புனிதமான இடத்தை பாதுகாப்போம் என்பதனை தெளிவாகக் குறிப்பிட்டுக் கொள்கிறோம். இந்த அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/230255
-
2026 ஆம் நிதியாண்டுக்கான இலங்கையின் 80 ஆவது வரவு - செலவுத் திட்டம்!
வரவு - செலவு திட்டத்தில் அரச, தனியார் துறை என யாருக்கும் எந்த நன்மையும் இல்லை - ரஞ்சித் மத்தும பண்டார 13 Nov, 2025 | 06:23 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வரவு - செலவு திட்டத்தில் அரச துறை, தனியார் துறை என யாருக்கும் எந்த நன்மையும் இல்லை. அதனால் மக்கள் அரசாங்கத்துக்கு பதிலளிக்க மாகாண சபை தேர்தலை எதிர்பார்த்து இருக்கிறார்கள். முடிந்தால் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுகிறேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (13) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்ட உரை மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டின் அபிவிருத்தியை தடை செய்து இந்த நாட்டில் ஊழல் மோசடிகளில் யாராவது ஈடுபட்டிருந்தால், அவர்களைவிட நாட்டின் அபிவிருத்திக்கு எதிராக . மக்கள் விடுதலை முன்னணியும் விடுதலை புலிகளும் ஈடுபட்டு வந்திருக்கின்றன. மக்கள் விடுதலை முன்னணி அமைக்கப்பட்டு 60 வருடங்களில் இந்த நாட்டை ஆட்சி செய்துவந்த அனைத்து அரசாங்கங்களுக்கும் எதிராக செயற்பட்டு வந்தது. அதேபோன்று வெளிநாட்டு ஒப்பந்தங்களுக்கு எதிராக செயற்பட்டு வந்தார்கள். ஆனால் மக்கள் விடுதலை முன்னணி இன்று எமது வெளிநாட்டுக்கொள்கை, கல்விக்கொள்கை, பொருளாதாரக் கொகையை ஏற்றுக்கொண்டிருக்கிறது. அன்று இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்காவிட்டால், நாடு அபிவிருத்தியடைந்திருக்கும். மேலும் நாடு வீழ்ச்சியடைவதற்கு இந்த அரசாங்கமும் பொறுப்புக்கூறவேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெறும்போது அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால் இன்று நாணய நிதியத்தின் தாலத்துக்கும் ஆடும் நிலையில் ஜனாதிபதி அநுரகுமார இருக்கிறார். மக்களின் அத்தியாவசிய பொருட்களின் நூற்றுக்கு 18வீதம் வரி குறைப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். குறைத்தீர்களா என கேட்கிறோம். துறைமுகத்தில் இறக்கப்படும் கட்டணத்துக்கு எரிபொருள் வழங்குவதாக அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்திருந்தார்.வழங்குகிறார்களா? எமது காலத்தில் இருந்ததைவிட எரிபொருள் விலை தற்போது அதிகமாகும். சர்வதேச நாணய நிதியத்தின் கைபொம்மையாக மாறியுள்ள இந்த அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மறந்துள்ளது. நாங்கள் அட்சியில் இருக்கும்போது நாட்டில் வறுமை வீதம் நூற்றுக்கு 10வீதமாகவே இருந்தது. தற்போது அது நூற்றுக்கு 35வீதமாக அதிகரித்துள்ளது. அதனால் திறைசேரியில் பணம் அதிகமாக இருந்தால், மக்களுக்கு வழங்குவதாக தெரிவித்த நிவாரணங்களை வழங்குங்கள். அரச ஊழியர்களின் வாக்குகளை பெற்றுக்கொண்ட அரசாங்கம் அரச ஊழியர்களை ஏமாற்றி இருக்கின்றனர். எனவே வரவு செலவு திட்டத்தில் அரசதுறை, தனியார் துறை என யாருக்கும் எந்த நன்மையும் இல்லை. அதனால் மக்கள் அரசாங்கத்துக்கு பதிலளிக்க மாகாணசபை தேர்தலை எதிர்பார்த்து இருக்கிறார்கள். அதனால் முடிந்தால் அரசாங்கம் மாகாணசபை தேர்தலை நடத்தட்டும். பாெதுத் தேர்தலைவிட உள்ளூராட்சிமன்ற தேர்தலில் அரசாங்கத்துக்கு 23இலட்சம் வாக்குகள் குறைவடைந்துள்ளது. மாகாணசபை தேர்தலை நடத்தினால் மேலும் 25இலட்சம் வாக்குகள் இல்லாமல்போகும். அதனால் முடிந்தால் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுகிறேன் என்றார். https://www.virakesari.lk/article/230276
-
யாழில். தோட்ட கிணற்றினுள் கயிறு கட்டி இறங்கி நீராடியவர் கயிறு அறுந்த நிலையில் நீரில் மூழ்கி உயிரிழப்பு
Published By: Vishnu 13 Nov, 2025 | 08:29 PM யாழ்ப்பாணத்தில் தோட்ட கிணற்றில் கயிறு கட்டி குளித்துக்கொண்டிருந்த இளைஞன் கயிறு அறுந்த நிலையில் , நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். வல்வெட்டித்துறை , கொம்மாந்துறை பகுதியை சேர்ந்த நிரெக்சன் (வயது 18) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக கிணறுகளில் நீர் மட்டம் அதிகரித்தும் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் கொமாந்துறையில் உள்ள தோட்ட கிணற்றினுள் ஆளுக்கு ஒவ்வொரு கயிறு கட்டி இறங்கி ஐந்து பேர் நீராடியுள்ளனர். சில மணி நேரத்தில் நான்கு பேர் நீராடியது போது வீடு செல்வோம் என புறப்பட்ட போது , ஒருவர் மாத்திரம் நீங்கள் செல்லுங்கள் நான் இன்னும் சற்று நேரம் நீராடி விட்டு வருவதாக கூறி தொடர்ந்து கிணற்றினுள் நீராடி இருக்கிறார் ஏனைய நால்வரும் வீடு சென்ற நிலையில் , நீண்ட நேரமாகியும் மற்றையவர் வராததால் , கிணற்றடிக்கு சென்ற போது , அவர் கட்டியிருந்த கயிறு அறுந்த நிலையில் காணப்பட்டுள்ளது. அதனை அடுத்து கிணற்றினுள் தேடிய போது , கிணற்றினுள் சடலமாக காணப்பட்டுள்ளார். பின்னர் சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அதேவேளை தற்போது மழை காலம் ஆரம்பித்துள்ளதால் , நீர் நிலைகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையால் , அவற்றில் நீராடுதலை தவிர்க்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர். https://www.virakesari.lk/article/230285
-
முடிவுக்கு வந்த அமெரிக்க அரசு முடக்கம் - டிரம்புக்கு ஆறுதல் கிடைத்தாலும் சவால் தொடருமா?
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் ஆண்டனி ஸுர்கர் வட அமெரிக்க செய்தியாளர், வாஷிங்டன் 5 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட அரசாங்க முடக்கம் 43 நாட்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்க அரசு ஊழியர்கள் மீண்டும் சம்பளம் பெறத் தொடங்குவார்கள். தேசிய பூங்காக்கள் மீண்டும் திறக்கப்படும். குறைக்கப்பட்ட அல்லது முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு சேவைகள் மீண்டும் தொடங்கும். அனைத்தும் அமைதியான பிறகு, நிதி மசோதாவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்ட மை காய்ந்த பிறகு, இந்தச் சாதனை படைத்த அரசு முடக்கம் என்ன சாதித்தது? அதன் விலை என்ன? செனட் சபையில் ஜனநாயகக் கட்சியினர் சிறுபான்மையினராக இருந்தபோதிலும், குடியரசுக் கட்சியினர் அரசாங்கத்திற்குத் தற்காலிகமாக நிதியளிக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைக்க மறுத்ததன் மூலம் முடக்கத்தைத் தூண்ட முடிந்தது. ஆண்டின் இறுதியில் காலாவதியாகவிருந்த குறைந்த வருமானம் உடைய அமெரிக்கர்களுக்கான சுகாதார காப்பீட்டு மானியங்களை நீட்டிக்க குடியரசுக் கட்சியினர் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் ஒரு நிபந்தனையை விதித்தனர். அரசாங்கத்தை மீண்டும் செயல்பட வைக்க ஒரு சில ஜனநாயகக் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை, கட்சி ஒழுங்கை மீறி வாக்களித்த பின்னர், மானியங்கள் குறித்து செனட்டில் வாக்கெடுப்பு பற்றிய வாக்குறுதி மட்டுமே கிடைத்தது. ஆனால் குடியரசுக் கட்சியின் ஆதரவோ அல்லது பிரதிநிதிகள் சபையில் அவசியமான வாக்கெடுப்பு குறித்தோ எந்த வாக்குறுதியும் கிடைக்கவில்லை. இதனால், கட்சியின் இடதுசாரி உறுப்பினர்கள் கோபமடைந்துள்ளனர். பட மூலாதாரம், Getty Images கோபமடைந்த ஒரு தரப்பு நிதி மசோதாவுக்கு வாக்களிக்காத ஜனநாயகக் கட்சி செனட் சபை தலைவர் சக் ஷூமர் மீது, இந்த அரசை மீண்டும் திறக்கும் திட்டத்திற்கு ரகசியமாக உடந்தையாக இருந்தார் அல்லது திறமையற்றவராக இருந்தார் என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இடைக்காலத் தேர்தல்களில் கிடைத்த வெற்றி தங்களுக்குச் சாதகமாக இருந்தபோதிலும் தங்கள் கட்சி சரணடைந்துவிட்டதாக அவர்கள் உணர்ந்தனர். இந்த முடக்கத்தின் மூலமாகச் செய்யப்பட்ட தியாகங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதோ என்று அவர்கள் அஞ்சுகின்றனர். கலிபோர்னியாவின் ஆளுநர் கவின் நியூசோம் போன்ற பிரதான ஜனநாயகக் கட்சியினர்கூட முடக்க ஒப்பந்தத்தை "பரிதாபகரமானது" மற்றும் "சரணாகதி" என்று அழைத்தனர். நியூசோம் 2028இல் அதிபராக வேண்டுமென்ற லட்சியங்களைக் கொண்டவர் என்பதால் கட்சியினரின் மனநிலையை அறிய அவர் ஒரு நல்ல அளவுகோலாக இருக்கலாம். அவர் ஜோ பைடனின் விசுவாசமான ஆதரவாளராக இருந்தார். மேலும் டிரம்புக்கு எதிராக பைடனின் விவாத செயல்திறன் மிக மோசமாக இருந்தபோதும் அப்போதைய அதிபருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க முன்வந்தார். அவர் கோபமாக இருந்தால், அது ஜனநாயகக் கட்சித் தலைவர்களுக்கு நல்ல அறிகுறி அல்ல. பட மூலாதாரம், Getty Images டிரம்ப் மனநிலை என்ன? டிரம்பை பொறுத்தவரை, செனட் முட்டுக்கட்டை ஞாயிற்றுக்கிழமை உடைந்ததில் இருந்து, அவரது மனநிலை எச்சரிக்கை நிறைந்த நம்பிக்கையில் இருந்து கொண்டாட்டத்தை நோக்கித் திரும்பியுள்ளது. செவ்வாய்க் கிழமையன்று, அவர் நாடாளுமன்றத்தின் குடியரசுக் கட்சியினருக்கு வாழ்த்து தெரிவித்தார் மற்றும் அரசாங்கத்தை மீண்டும் இயக்க வாக்களித்ததை "மிகப்பெரிய வெற்றி" என்று அழைத்தார். "நாங்கள் எங்கள் நாட்டைத் திறந்து வைக்கிறோம். அது ஒருபோதும் மூடப்பட்டிருக்கவே கூடாது," என்று வீரர் தின நினைவேந்தலில் கூறினார். டிரம்ப், ஷூமர் மீதான ஜனநாயகக் கட்சியின் கோபத்தை உணர்ந்து, திங்கள் கிழமை இரவு ஃபாக்ஸ் நியூஸ் நேர்காணலின்போது அதைப் பயன்படுத்திக் கொண்டார். "குடியரசுக் கட்சியை உடைக்க முடியும் என்று அவர் நினைத்தார். ஆனால் குடியரசுக் கட்சியினர் அவரை உடைத்தனர்," என்று ஜனநாயகக் கட்சியின் செனட் தலைவரைப் பற்றி டிரம்ப் கூறினார். டிரம்ப் சில நேரங்களில் பின்வாங்குவது போலத் தோன்றிய போதும், அரசாங்கத்தை மீண்டும் இயக்க இருந்த முட்டுக்கட்டையை அகற்ற மறுத்ததற்காக, அவர் கடந்த வாரம் செனட் குடியரசுக் கட்சியினரைக் கண்டித்தார். அவர் இறுதியில், குறிப்பிடத்தக்க சலுகைகள் எதையும் வழங்காமல் அரசு முடக்கத்தில் இருந்து வெளியே வந்தார். கடந்த 40 நாட்களில் கருத்துக் கணிப்புகளில் அவரது எண்கள் குறைந்து இருந்தாலும், குடியரசுக் கட்சியினர் இடைக்காலத் தேர்தல்களை எதிர்கொள்ள இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. அடுத்து என்ன? முடக்கம் முடிவடைந்தவுடன், நாடாளுமன்றம் அதன் வழக்கமான நிகழ்ச்சி நிரலுக்குத் திரும்பும். பிரதிநிதிகள் சபை ஒரு மாதத்திற்கும் மேலாகப் பயனுள்ள செயல்பாடில்லாமல் இருந்தாலும், அடுத்த ஆண்டு தேர்தல் சுழற்சி தொடங்குவதற்கு முன்பு சில முக்கிய சட்டங்களை நிறைவேற்ற முடியும் என்று குடியரசுக் கட்சியினர் இன்னும் நம்புகிறார்கள். முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வரும் ஒப்பந்தத்தில் சில அரசுத் துறைகளுக்கு செப்டம்பர் வரை நிதியளிக்கப்பட்டாலும், மற்றொரு முடக்கத்தைத் தவிர்க்க ஜனவரி மாத இறுதிக்குள் மீதமுள்ள அரசாங்கத்திற்கான செலவினங்களுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும். தங்கள் காயங்களை ஆற்றி வரும் ஜனநாயகக் கட்சியினர், மீண்டும் மோதுவதற்கான ஒரு வாய்ப்புக்காக ஏங்கலாம். இதற்கிடையில், அவர்கள் எழுப்பிய சுகாதார மானியங்கள் பிரச்னை, இந்த வருட இறுதியில் தங்கள் காப்பீட்டுச் செலவுகள் இரு மடங்கு அல்லது மும்மடங்காக அதிகரிப்பதைக் காணப் போகும் கோடிக்கணக்கான அமெரிக்கர்களுக்கு ஒரு கவலையாக மாறக்கூடும். அத்தகைய வாக்காளர் வலியை புறக்கணித்தால் குடியரசுக் கட்சியினர் தங்கள் சொந்த அரசியல் ஆபத்தை எதிர்கொள்வார்கள். மேலும் அது மட்டுமே டிரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியினர் எதிர்நோக்கியிருக்கும் ஒரே ஆபத்து அல்ல. பிரதிநிதிகள் சபையில் அரசுக்கு நிதியளிக்கும் வாக்கெடுப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய நாளில், சமீபத்தில் மரணமடைந்த தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் பற்றிய சமீபத்திய செய்திகளைப் பற்றிப் பேசுவதிலேயே அதிக நேரம் சென்றது. புதன்கிழமை பிற்பகுதியில், நாடாளுமன்ற உறுப்பினர் அடெலிடா கிரிஜால்வா பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். மேலும் எப்ஸ்டீன் வழக்கு தொடர்பான அனைத்துக் கோப்புகளையும் வெளியிட நீதித் துறைக்கு உத்தரவிட சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கோரும் மனுவில் 218வது நபராக, இறுதி நபராக கையெழுத்திட்டார். தனது அரசுக்கு நிதி பெறுவதில் பெற்ற வெற்றி மறைக்கப்படுவதாகத் தனது ட்ரூத் சோஷியல் இணையதளத்தில் டிரம்ப் புகார் கூற இதுவே போதுமானதாக இருந்தது. "முடக்கத்திலும், வேறு பல விஷயங்களிலும் அவர்கள் எவ்வளவு மோசமாகச் செயல்பட்டார்கள் என்பதிலிருந்து திசைதிருப்ப எதையும் செய்யத் துணியும் ஜனநாயகக் கட்சியினர், ஜெஃப்ரி எப்ஸ்டீன் புரளியை மீண்டும் கொண்டு வர முயல்கின்றனர்," என்று அவர் எழுதினார். சிறப்பாகத் திட்டமிடப்பட்ட திட்டங்கள் மற்றும் அரசியல் உத்திகள் ஒரு நொடியில் தடம் புரளக்கூடும் என்பதற்கான மிகத் தெளிவான நினைவூட்டலாக இது உள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crl275jjyx1o
-
அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார் சிரிய ஜனாதிபதி
“உங்களுக்கு எத்தனை மனைவிகள்?” - சிரியா ஜனாதிபதியிடம் கேட்ட ட்ரம்ப் 13 Nov, 2025 | 04:09 PM “உங்களுக்கு எத்தனை மனைவிகள் இருக்கிறார்கள்” என சிரியா ஜனாதிபதி அகமது அல்ஷராவிடம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கேட்டது, தற்போது பேசுபொருளாகியிருக்கிறது. சிரியா ஜனாதிபதி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், வெள்ளை மாளிகையில் ட்ரம்பை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, சிரியா ஜனாதிபதிக்கு வாசனைத் திரவியமொன்றை ட்ரம்ப் பரிசாக வழங்கியுள்ளார். அவ்வேளை, “இது ஆண்களுக்கான வாசனைத் திரவியம்” என்று ட்ரம்ப கூறிவிட்டு, அந்த வாசனைத் திரவியத்தை சிரியா ஜனாதிபதி மீது தெளித்திருக்கிறார். “இது மிகச் சிறந்த வாசனைத் திரவியம்” என்றும் “மற்ற வாசனைத் திரவியங்கள் உங்கள் மனைவிக்கானது. உங்களுக்கு எத்தனை மனைவிகள்?” என்று ட்ரம்ப், கேட்க, அதற்கு சிரியா ஜனாதிபதி, “ஒன்றே ஒன்றுதான்” என்று பதிலளித்துள்ளார். அப்போது சுற்றியிருந்த தலைவர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்துள்ளது. அத்துடன், இந்த சந்திப்பின்போது அகமது அல்ஷராவும் ட்ரம்புக்கு பல அடையாளப் பரிசுகளை வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பண்டைய சிரிய நாட்டுக் கலைப்பொருட்களின் பிரதிகள், குறிப்பாக, அந்நாட்டின் முதல் எழுத்துக்கள், முதல் முத்திரை, முதல் இசைக் குறிப்பு, முதல் சுங்க வரி போன்றவற்றின் குறிப்புப் பிரதிகளை வழங்கியதாக கூறப்படுகிறது. https://www.virakesari.lk/article/230259
-
டெல்லி செங்கோட்டை அருகே வெடிப்பு - பலர் உயிரிழப்பு
டெல்லியில் நடந்தது ஒரு தெளிவான பயங்கரவாத தாக்குதல் - அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் 13 Nov, 2025 | 01:41 PM டெல்லியில் நடந்தது ஒரு தெளிவான பயங்கரவாத தாக்குதல் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ (Marco Rubio) தெரிவித்துள்ளார். “டெல்லியில் நடந்தது தெளிவான ஒரு பயங்கரவாத தாக்குதல் என்றே தெரிகிறது. இதை விசாரிப்பதற்கான உதவிகளை வழங்க அமெரிக்கா முன்வந்தது. ஆனால், இந்தியா மிக கவனமாகவும் திறமையாகவும் விசாரித்து வருகிறது. இந்தியர்களை வெகுவாக பாராட்டவேண்டும்” என மார்கோ ரூபியோ மேலும் தெரிவித்திருக்கிறார். இந்தியாவின் டெல்லி, செங்கோட்டைக்கு முன்பாக கடந்த 10ஆம் திகதி இரவு வெடிபொருட்களை கொண்டுசென்ற கார் வெடித்துச் சிதறியதில் 13 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஜம்மு காஷ்மீர் மற்றும் அரியானா மாநிலத்தில் 3 ஆயிரம் கிலோ அமோனியம் நைட்ரேட் உட்பட பல ஆயுதங்கள், பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அதன் தொடர்ச்சியாகவே டெல்லியில் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றது. இவ்வெடிப்பு அசம்பாவிதம் தொடர்பில் டெல்லி பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது பயங்கரவாதத்தோடு தொடர்புடைய வெடிப்பு சம்பவம் என்பதால் பின்னர், உள்விவகார அமைச்சர் அமித்ஷாவின் உத்தரவின் பேரில் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/230239
-
பதவிலிருந்து ஓய்வு பெறுவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவிப்பு!
13 Nov, 2025 | 03:21 PM தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் பதவிலிருந்து ஓய்வு பெறுவதாக சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவித்துள்ளார். சமன் ஸ்ரீ ரத்நாயக்க , 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டிருந்தார். 34 வருடங்களாக அரச சேவையில் பணியாற்றிய சமன் ஸ்ரீ ரத்நாயக்க , 2025 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் திகதியுடன் அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். தனது கடமையின் போது உதவிய முன்னாள் அமைச்சர்கள், அரசாங்க ஊழியர்கள், அமைச்சர்கள், பிரதம அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சமன் ஸ்ரீ ரத்நாயக்க நன்றியை தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/230252
-
மலையகத்தின் மூத்த எழுத்தாளர் தி.இராஜகோபாலன் காலமானார்!
13 Nov, 2025 | 02:18 PM மலையகத்தின் மூத்த எழுத்தாளரும் ஆய்வாளருமான தி.இராஜகோபாலன் தனது 86ஆவது வயதில் காலமானார். லிந்துலை, துலாங்கந்தையை பிறப்பிடமாகக் கொண்ட இவர், மலையக சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்ட ஆளுமையாக தனது வாழ்நாள் முழுதும் விளங்கினார். வீரகேசரி வாரவெளியீட்டில் அவர் எழுதிய “சிரிக்கும் செவ்வந்தி பூ”, “கண்ணான கண்மணிக்கு கதை கேட்க ஆசை இல்லையோ” போன்ற தொடர்கதைகள் பெருமளவு வரவேற்பை பெற்றன. வீரகேசரிக்கு மட்டுமன்றி, பல பத்திரிகைகளுக்கு பல கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், தொடர்களை இவர் எழுதினார். இவர் தமிழ் மொழியில் எந்தளவுக்கு ஆழமான அறிவைப் பெற்றிருந்தாரோ அதேபோன்று ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்றவர் ஆவார். இவரது பல படைப்புகள், ஆக்கங்கள் மலையக மண்ணின் எழுச்சி மீதான எதிர்பார்ப்பை பிரதிபலித்தன. அன்னாரின் மறைவு மலையக சமூகத்துக்கு பேரிழப்பாகிறது. https://www.virakesari.lk/article/230243
-
2025 உலக நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரம் - தேசிய நிகழ்வு நாளை ஆரம்பம்
2025 உலக நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புணர்வு வார தேசிய நிகழ்வு நாளை ஆரம்பம் Published By: Digital Desk 1 13 Nov, 2025 | 01:29 PM 2025ஆம் ஆண்டுக்கான உலக நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புணர்வு வார தேசியநிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை (14) நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. "நமது நிகழ்காலத்தைப் பாதுகாக்கவும், நமது எதிர்காலத்தைப் பாதுகாக்கவும்" என்ற தலைப்பில் தேசிய நுண்ணுயிர் எதிர்ப்பு தடுப்பு மையத்தால் இந்த தேசிய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆண்டிமைக்ரோபியல் எதிர்ப்பின் போக்கைக் குறைக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், 2050 ஆம் ஆண்டளவில் நுண்ணுயிர் எதிர்ப்பு காரணமாக வருடந்தோறும் 10 மில்லியன் உயிரிழப்புக்கள் ஏற்படுமென தெரிவிக்கப்படுகிறது. நுண்ணுயிர் எதிர்ப்பு என்பது பாக்டீரியா, வைரஸ்கள், பூஞ்சைகள் மற்றும் ஒட்டுண்ணிகள் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளுக்கு எதிர்ப்புத் திறன் கொண்டதாக உருவாகும் ஒரு நிகழ்வாகும். இது உலகளாவிய சுகாதாரம் மற்றும் மேம்பாட்டு அச்சுறுத்தல் என தெரிவிக்கப்படுகிறது. நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரம் AMR பற்றிய விழிப்புணர்வையும் புரிதலையும் அதிகரிப்பதையும் மருந்து எதிர்ப்புத் தொற்றுகளின் தோற்றம் மற்றும் பரவலைக் குறைப்பதற்கான சிறந்த நடைமுறைகளை இனம்காணுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மருந்து எதிர்ப்பின் விளைவாக, நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் பிற நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் மூலம் தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பது கடினம் இதன்காரணமாக நோய் பரவும் அபாயம், கடுமையான நோய் மற்றும் உயிரிழப்பு அதிகரிக்கும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் நுண்ணுயிர் எதிர்ப்பு தடுப்புக்கான தேசிய மையத்தின் தலைவர் பிரதி பணிப்பாளர் ஜெனரல் டாக்டர் பிரியந்த அத்தப்பத்து தெரிவித்துள்ளார். அதன்படி, 2019ஆம் ஆண்டில் நுண்ணுயிர் எதிர்ப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.27 மில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 4.95 மில்லியன் ஆகும். இதனை கட்டுப்படுத்த அவசர நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், 2050 ஆம் ஆண்டுக்குள் நுண்ணுயிர் எதிர்ப்பு காரணமாக ஆண்டுதோறும் 10 மில்லியன் மக்கள் உயிரிழப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான நோய் காரணமாக நீண்டகால வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுதல் மற்றும் விலையுயர்ந்த மருந்துகளின் தேவை ஆகியவற்றுடன், நுண்ணுயிர் எதிர்ப்பால் பாதிக்கப்பட்ட தனிநபர்களும் அவர்களது குடும்பங்களும் பெரும் நிதிச்செலவுகள் காரணமாக கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். 2030ஆம் ஆண்டுக்குள், நுண்ணுயிர் எதிர்ப்பு 24 மில்லியன் மக்களை தீவிர வறுமையில் தள்ளக்கூடும். மேலும், 2050ஆம் ஆண்டுக்குள், நுண்ணுயிர் எதிர்ப்பு தாக்கம், அதிக விலை கொண்ட மருந்துகள் மற்றும் தீவிர சிகிச்சை சேவைகளால் 1.2 டிரில்லியன் சுகாதாரப் பராமரிப்பு செலவுகளுக்கு வழிவகுக்கும். நுண்ணுயிர் எதிர்ப்பை எதிர்த்துப் போராட நாம் செய்யக்கூடிய முக்கிய விடயங்களில் மனிதர்களிடமும் விலங்குகளிடமும் தேவையற்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதாகும் என குறிப்பிடப்படுகிறது. மருத்துவ ஆலோசனை இல்லாமல் மருந்துகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதனூடாக, மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையில் தொற்று பரவுவதைத் தடுக்கமுடியும் என தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/230236
-
முதல்தர கிரிக்கெட்டில் மேகாலயா வீரர் ஆகாஷ் இரண்டு சாதனைகள்: 8 பந்துகளில் 8 சிக்ஸ்கள்; அதிவேக அரைச் சதம்
8 பந்துகளில் 8 சிக்ஸர்: வெறும் 11 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை - யார் இந்த ஆகாஷ் சௌத்ரி? பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, ரஞ்சி டிராஃபியில் மேகாலயாவுக்காக விளையாடுகிறார் ஆகாஷ் சௌத்ரி 10 நவம்பர் 2025 முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்து மேகாலயா கிரிகெட் வீரர் ஆகாஷ் சௌத்ரி வரலாறு படைத்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை ஆடிய அந்த இன்னிங்ஸில் தொடர்ந்து 8 பந்துகளில் 8 சிக்ஸர்களை அவர் விளாசினார். முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓவரின் ஆறு பந்துகளிலும் சிக்ஸர் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமை பெற்றார் அவர். வேகப் பந்துவீச்சாளரான ஆகாஷ் சௌத்ரி, அருணாச்சல பிரதேச அணிக்கு எதிரான ரஞ்சிக் கோப்பை பிளேட் டிவிஷனின் குரூப் போட்டியில் இந்த சாதனையைப் படைத்தார். சூரத்தில் நடந்த இந்த ஆட்டத்தின் இரண்டாவது நாளில் மேகாலயா அணியின் ஸ்கோர் 576/6 என இருந்தபோது அவர் களமிறங்கினார். மேகாலயா அணி முதல் இன்னிங்ஸில் 628/6 என்ற ஸ்கோருடன் டிக்ளேர் செய்ய, தொடர்ந்து விளையாடிய அருணாச்சல பிரதேச அணி முதல் இன்னிங்ஸில் 73 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ரவி சாஸ்திரி, கேரி சோபர்ஸ் சாதனை சமன் ஆகாஷ் சௌத்ரிக்கு முன்னதாக முதல் தரப் போட்டிகளில் ஒரு ஓவரின் ஆறு பந்துகளிலும் சிக்ஸர் அடித்தவர்கள் வெஸ்ட் இண்டீஸின் கேரி சோபர்ஸ் மற்றும் இந்தியாவின் ரவி சாஸ்திரி ஆகிய இருவர் மட்டுமே. . தென்னாப்பிரிக்காவின் மைக் ப்ராக்டரும் தொடர்ச்சியாக 6 சிக்ஸர்கள் அடித்திருக்கிறார். ஆனால், இருவேறு ஓவர்களில் அவர் 6 சிக்ஸர்களை அடித்தார். தன் இன்னிங்ஸின் முதல் மூன்று பந்துகளில் ஆகாஷ் இரண்டு ரன் மட்டுமே எடுத்திருந்தார். அதன்பிறகு இடது கை ஸ்பின்னர் லிமார் தாபி வீசிய ஓவரில் 6 பந்துளிலுமே சிக்ஸர் அடித்தார் அவர். அடுத்த ஓவரில் ஆஃப் ஸ்பின்னர் டி.என்.ஆர்.மோஹித் பந்துவீச்சில், தான் சந்தித்த முதலிரு பந்துகளையும் சிக்ஸருக்கு அனுப்பி அவர் அரைசதம் கடந்தார். இதன்மூலம் 11 பந்துகளிலேயே அரைசதம் அடித்து அவர் சாதனை படைத்தார். இதற்கு முன், 'குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த வீரர்' என்ற சாதனையை டெஸ்டர்ஷயர் அணியின் வெய்ன் வைட் வைத்திருந்தார். 2012-ஆம் ஆண்டு எஸக்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் 12 பந்துகளில் அரைசதம் கடந்திருந்தார். 9 நிமிடங்களில் அரைசதம் இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தரவுகளின்படி, நேர அடிப்படையில் முதல் தர கிரிக்கெட்டில் அதிவிரைவாக அடிக்கப்பட்ட அரைசதங்களின் பட்டியலில் இது இரண்டாவது இடம் பிடித்திருக்கிறது. ஆகாஷ் சௌத்ரி தன் அரைசதத்தை 9 நிமிடங்களில் அடித்திருக்கிறார். இந்த சாதனை கிளைவ் இன்மேன் வசம் இருப்பதாக இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ சொல்கிறது. 1965-ஆம் ஆண்டு லெஸ்டர்ஷயர் அணிக்காக ஆடிய அவர், நாட்டிங்ஹாம்ஷயருக்கு எதிராக 13 பந்துகளில் அரைசதம் அடித்திருக்கிறார். ஆனால், அது 8 நிமிடங்களிலேயே அடிக்கப்பட்டிருக்கிறது. வலது கை மித வேகப்பந்துவீச்சாளரான ஆகாஷ் சௌத்ரி, வலது கை பேட்டர். அவர் 1999-ஆம் ஆண்டு நவம்பர் 28-ஆம் தேதி பிறந்தவர் என்று இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ குறிப்பிட்டிருக்கிறது. அவர் 30 முதல் தரப் போட்டிகளில் (அருணாச்சல பிரதேசத்துக்கு எதிரான இந்தப் போட்டிக்கு முன்பு வரை) 14.37 என்ற சராசரியில் 503 ரன்கள் எடுத்திருந்தார். 29.97 என்ற சராசரியில் 87 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றியிருக்கிறார். இவருக்கு முன்பாக, முதல் தரப் போட்டிகளில் அதிவேக அரைசதம் அடித்த இந்தியர் என்ற சாதனை பந்தீப் சிங் வசம் இருந்தது. 2015-ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் அணிக்காக ஆடிய அவர் திரிபுரா அணிக்கெதிராக 15 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஒரு ஓவரின் 6 பந்துகளிலும் சிக்ஸர் அடித்த சாதனையை முதன்முதலில் செய்தவர் கேரி சோபர்ஸ். 1968-ஆம் ஆண்டு நாட்டிங்ஹாம்ஷயர் மற்றும் கிலாமார்கன் அணிகள் மோதிய போட்டியில், மால்கம் நேஷ் பந்துவீச்சில் அந்தச் சாதனையை செய்தார் சோபர்ஸ். 1984-85 ரஞ்சி சீசனில் பரோடாவுக்கு எதிரான போட்டியில் அன்றைய பாம்பே (இன்று மும்பை) அணிக்கு விளையாடிய ஆல்ரவுண்டர் ரவி சாஸ்திரி, திலக் ராஜ் வீசிய ஒரு ஓவரின் ஆறு பந்துகளிலும் சிக்ஸர் அடித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2y16gz17eo
-
வீதி விளக்குகளுக்கான மின்சார கட்டணத்தை செலுத்த தவறிய உள்ளூராட்சி நிறுவனங்கள் - வலுசக்தி அமைச்சர்
13 Nov, 2025 | 12:47 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) கொழும்பு மாநகரசபை உள்ளிட்ட நாடளாவிய ரீதியிலுள்ள பெரும்பாலான உள்ளூராட்சி நிறுவனங்கள் வீதி விளக்குகளுக்கான மின்சார கட்டணத்தை செலுத்த தவறியுள்ளதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (12) நடைபெற்ற அமர்வின் போது வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில், பாராளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் தர்மப்பிரிய திசாநாயக்க முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் பதிலளித்ததாவது, மின்சார கட்டணத்திற்கான பட்டியல்கள் இலங்கை மின்சார சபையினூடாக விநியோகிக்கப்பட்டுள்ள போதிலும், குறித்த உள்ளூராட்சி நிறுவனங்கள் அதனை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. வீதி விளக்குகளுக்கான விசேட மின்சார கட்டணம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட கட்டணமே அறிவிடப்படுகின்றன. கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட நாடளாவிய ரீதியிலுள்ள பெரும்பாலான உள்ளூராட்சி நிறுவனங்கள் வீதி விளக்குகளுக்கான மின்சார கட்டணத்தை செலுத்த தவறியுள்ளன. இவ்விடயம் குறித்து மாநகர சபையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் என்றார். https://www.virakesari.lk/article/230220
-
நல்லூர் பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படும் பாதீனிச் செடி அகற்றும் செயற்றிட்டம்
13 Nov, 2025 | 12:42 PM நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட வீதிகளில் காணப்படுகின்ற பாதீனிச் செடிகளினை வேரோடு அகற்றுகின்ற பணியினை நல்லூர் பிரதேச சபை செவ்வாய்க்கிழமை (11) முதல் முன்னெடுத்து வருகின்றது. குறித்த செயற்றிட்டத்தினை வினைத்திறனாக தொடந்து முன்னெடுக்கும் வகையில் ஒரு பிரத்தியேக அணி உருவாக்கப்பட்டு அவர்கள் வீதியோரங்களில் காணப்படுகின்ற பாதீனியச் செடிகளினை உரிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி அழித்து வருகின்றார்கள். நல்லூர் பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இச் செயற்றிட்டம் தொடர்பில் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் மயூரன் கருத்து தெரிவிக்கையில் வீதிகளில் காணப்படும் பாதீனிய செடிகளினை அழிக்கும் செயற்பாட்டினை எமது பணியாளர்கள் செய்து வருகின்றார்கள். இச் சம நேரத்தில் நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் வாழ்கின்ற பொது மக்களும் தங்கள் குடியிருப்பு வளாகங்களில் காணப்படுகின்ற பாதீனிச் செடிகளை உரிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி அழிக்கும் செயற்பாட்டினை முன்னெடுக்குமாறும் அவ்வாறு பிடுங்கப்படுகின்ற பாதீனிச் செடிகளினை அகற்றவேண்டும். எனின் அது தொடர்பில் நல்லூர் பிரதேச சபையுடன் தொடர்பு கொண்டால் அதற்குரிய ஏற்பாடுகளை நல்லூர் பிரதேச சபை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/230217
-
விதை நெல் உற்பத்திக்கு காப்புறுதித் திட்டம் அறிமுகம்
விதை நெல் உற்பத்திக்கு காப்புறுதித் திட்டம் அறிமுகம் - கமநல காப்புறுதிச் சபை 13 Nov, 2025 | 12:42 PM (நமது நிருபர்) விதை நெல் உற்பத்தி செய்யும் பண்ணைகளில் மேற்கொள்ளப்படும் நெற்செய்கைக்கு காப்புறுதித் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடமிருந்து கிடைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் இந்தக் காப்புறுதித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது. விதை நெற்செய்கைக்கு வெள்ளம், வறட்சி, நோய்கள், பூச்சித் தாக்குதல்கள், இயற்கைப் பேரழிவுகள் மற்றும் காட்டு யானைகளினால் ஏற்படும் சேதங்களுக்கு இந்தத் திட்டம் காப்பீடு வழங்குகிறது. ஒரு ஏக்கர் செய்கைக்காக ஒரு போகத்திற்கு ரூ. 13,600 தவணை செலுத்துவதன் ஊடாக ஒரு ஏக்கருக்கு ரூ. 180,000 இழப்பீடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை கூறுகிறது. இந்த விதை நெல் பண்ணைகளுக்கு காப்புறுதிப் பாதுகாப்புப் பெற வேண்டுமானால், அவை விவசாயத் திணைக்களத்தின் விதைப் பதிவுச் சேவையில் கட்டாயம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் அச் சபை வலியுறுத்துகிறது. விதை நெல் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதன் மூலம் விவசாயிகளைச் செய்கையில் தக்கவைத்துக்கொள்வதே இதன் பிரதான நோக்கம் என்றும் விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/230218
-
பாகிஸ்தான் இலங்கை கிரிக்கெட் தொடர்
பரபரப்பை ஏற்படுத்திய முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 6 ஓட்டங்களால் பாகிஸ்தான் வென்றது 12 Nov, 2025 | 01:04 AM (நெவில் அன்தனி) இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ராவல்பிண்டி கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (11) மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6 ஓட்டங்களால் பாகிஸ்தான் வெற்றிபெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலை அடைந்துள்ளது. பாகிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 300 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 293 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. ஆறு வீரர்கள் 25க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றபோதிலும் அவர்களில் வனிந்து ஹசரங்கவைத் தவிர மற்றையவர்களால் பெரிய எண்ணிக்கைகளைப் பெற முடியாமல் போனது. அது இலங்கையின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. மத்திய வரிசையில் தனித்து போராடிய வனிந்து ஹசரங்க அரைச் சதம் குவித்த போதிலும் அவரால் இலங்கையை வெற்றிக்கு இட்டுச் செல்ல முடியாமல் போனது. பெத்தும் நிஸ்ஸன்க, அறிமுக வீரர் ஆகிய இருவரும் 85 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால்,காமில் மிஷார (38), பெத்தும் நிஸ்ஸன்க (29), குசல் மெண்டிஸ் (0) ஆகிய மூவரும் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்ததால் இலங்கை ஆட்டம் கண்டது. (90 - 3 விக்.) அந்த மூவரையும் ஹரிஸ் ரவூப் ஆட்டம் இழக்கச் செய்தார். அதன் பின்னர் சதீர சமரவிக்ரம, அணித் தலைவர் சரித் அசலன்க ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 57 ஓட்டங்ளைப் பகிர்ந்து அணிக்கு சிறு நம்பிக்கையை ஊட்டினர். சதீர சமரவிக்ரம 39 ஓட்டங்களுடனும் சரித் அசலன்க 32 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். சரித் அசலன்க 5ஆவது விக்கெட்டில் ஜனித் லியனகேவுடன் 36 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மொத்த எண்ணிக்கை 191 ஓட்டங்களாக இருந்தபோது ஜனித் லியனகே 28 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். கமிந்து மெண்டிஸ் (9) ஒற்றை இலக்க எண்ணிக்கையுடன் வெளியேறினார். சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய வனிந்து ஹசரங்கவுடன் 8ஆவது விக்கெட்டில் 37 ஓட்டங்களைப் பகிர்ந்த துஷ்மன்த சமீர 7 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து போராடிய வனிந்து ஹசரங்க 49ஆவது ஓவரில் மொத்த எண்ணிக்கை 279 ஓட்டங்களாக இருந்தபோது 59 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். மஹீஷ் தீக்ஷன 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் ஹரிஸ் ரவூப் 61 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் பாஹீம் அஷ்ரப் 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நசீம் ஷா 55 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் 50 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 299 ஓட்டங்களைக் குவித்தது. சல்மான் அகா மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அபார சதம் குவித்தார். அவர் 87 பந்துகளில் 9 பவுண்டறிகள் அடங்கலாக 105 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். ஹுசெய்ன் தலாத் 62 ஓட்டங்களையும் மொஹம்மத் நவாஸ் ஆட்டம் இழக்காமல் 36 ஓட்டங்களையும் பக்கார் ஸமான் 32 ஓட்டங்களையும் பெற்றனர். போட்டியின் 24ஆவது ஓவர்வரை பாகிஸ்தானை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த இலங்கை அதன் பின்னர் ஆட்டத்தின் பிடியைத் தளரவிட்டது. அப்போது 4 விக்கெட்களை இழந்து 95 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்த பாகிஸ்தான் தடுமாற்றத்தை எதிர்கொண்டது. ஆனால், சல்மான் அகா, ஹுசெய்ன் தலாத் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 138 ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தானை பலமான நிலையில் இட்டனர். அதனைத் தொடர்ந்து சல்மான் அகா, மொஹம்மத் நவாஸ் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் மேலும் 66 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். இலங்கை பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 54 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஆட்டநாயகன்: சல்மான் அகா இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி இதே விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (13) நடைபெறவுள்ளது. https://www.virakesari.lk/article/230131
-
8 வயது சிறுமிக்கு பாலியல் துஷ்பிரயோகம்; குற்றவாளிக்கு கடூழிய சிறைத்தண்டனை
13 Nov, 2025 | 12:26 PM மன்னார், அடம்பன் பிரதேசத்தில் 8 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், எதிரி குற்றவாளியாக இனங்காணப்பட்டு, அவருக்கு 8 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து மன்னார் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தக் குற்றம், கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை, மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி . எம். மிஹால் முன்னிலையில் நேற்று புதன்கிழமை (12) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவ்வழக்கின் நீண்ட விசாரணைகளின் பின்னர், எதிரி குற்றவாளியாகக் காணப்பட்டார். எதிரி தரப்பிற்கு சார்பாக சட்டத்தரணி தினேஷன் ஆஜராகியிருந்தார். வழக்குத்தொடருநர் தரப்பிற்காக, அரச சட்டவாதி ஆறுமுகம் தனுஷன் ஆஜராகி, வழக்கினை நெறிப்படுத்தினார். தண்டனை குறித்த தனது சமர் பணத்தில், அரச சட்டவாதி . தனுஷன் அவர்கள், "இக் குற்றத்தின் பாரதூரமான தன்மையையும், சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும்" கடுமையாக வலியுறுத்தினார். மேலும், "எதிர்காலத்தில் இவ்வாறான கொடூரமான குற்றங்கள் மீண்டும் இடம் பெறாமல் தடுக்கும் பொருட்டு, குற்றவாளிக்கு அதியுச்ச கட்டாய சிறை தண்டனை வழங்க வேண்டும்" எனவும், "கொடூரமான இந்த செயலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய நஷ்ட ஈட்டை பெற்றுத் தருமாறும்" மன்றை அவர் கோரினார். அரச சட்டவாதி அவர்களின் சமர்ப்பணத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி , குற்றவாளிக்கு 8 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நஷ்ட ஈடாக 200,000/- ரூபாய் (இரண்டு லட்சம் ரூபா) தண்டப்பணம் செலுத்துமாறும் குற்றவாளிக்கு கட்டளையிட்டு நீதிபதி தனது தீர்ப்பை வழங்கினார். https://www.virakesari.lk/article/230207
-
போதைப்பொருள் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
13 Nov, 2025 | 11:36 AM மன்னாரில் 20 கிராம் ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தமை மற்றும் வியாபாரம் செய்தமை தொடர்பான வழக்கில், எதிரிக்கு ஆயுள் தண்டனை விதித்து மன்னார் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தக் குற்றம், கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு, நேற்று புதன்கிழமை (12) மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி எம். மிஹால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இவ்வழக்கில், வழக்குத்தொடருநர் தரப்பிற்காக அரச சட்டவாதி ஆறுமுகம் தனுஷன் ஆஜராகி, வழக்கினை நெறிப்படுத்தினார். எதிரி தரப்பிற்காக ஜனாதிபதி சட்டத்தரணி யு. ஆர். டி சில்வா ஆஜராகியிருந்தார். வழக்கு விசாரணையின் முடிவில், வழக்குத் தொடுநர் தரப்பினால் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில், எதிரி மீதான குற்றச்சாட்டு நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப் பட்டதாக மன்றம் ஏற்றுக்கொண்டது. இதையடுத்து, எதிரியை குற்றவாளியாக அறிவித்த நீதிபதி எதிரிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். சமீப காலமாக, மன்னார் பிரதேசத்தில் இடம் பெறும் பாரிய போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில், குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை மற்றும் நீண்ட கால கடூழிய சிறை தண்டனைகள் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/230206
-
கருத்து படங்கள்
அததெரண கருத்துப்படம்.
-
இலங்கை - இந்திய கடற்படைகள், கடலோர காவற்படைகள்: 35வது சர்வதேச கடல்சார் எல்லைக் கோடு சந்திப்பு (IMBL) நிறைவடைந்தது
Published By: Digital Desk 1 13 Nov, 2025 | 08:43 AM இலங்கை, இந்திய கடற்படைகள் மற்றும் கடலோர காவற்படைகளுக்கு இடையிலான 35வது சர்வதேச கடல்சார் எல்லைக் கோடு சந்திப்பு கடந்த 11ஆம் திகதி, காங்கேசன்துறைக்கு வடக்கே உள்ள இந்தோ - இலங்கை கடல்சார் எல்லைக் கோட்டில் INS சுகன்யா கப்பலில் நடைபெற்றது. இரு நாடுகளின் கடற்படைகள் மற்றும் கடலோர காவற்படையினர் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பகிரப்பட்ட கடல்சார் சவால்களை எதிர்கொள்ள செயற்படுத்தக்கூடிய கூட்டு உத்திகளை ஆராய்வதும், உறவுகளை வலுப்படுத்துவதும் வருடாந்திர IMBL கூட்டத்தின் நோக்கமாக காணப்படுகிறது. வடக்கு கடற்படைப் பகுதியின் தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே தலைமையில் இலங்கை குழுவும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படைப் பகுதியின் கொடி அதிகாரி ரியர் அட்மிரல் சதீஷ் ஷெனாய் தலைமையில் இந்திய குழுவும் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்திப்பின்போது, கடல்சார் எல்லைகளின் பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், முந்தைய சந்திப்புகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்துள்ளனர். மேலும் IMBL முழுவதும் வெளிப்படும் கடல்சார் சவால்களை ஒன்றிணைந்து எதிர்த்துப் போராடுவதற்கான தங்கள் உறுதியை கட்சிகள் வலுப்படுத்தின. இந்நிகழ்வில் வட மத்திய கடற்படைப் பகுதியின் பிரதித் தளபதி கொமடோர் அருண வீரசிங்க, இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவற்படையின் சிரேஸ்ட அதிகாரிகள் குழு மற்றும் இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் ஆனந்த் முகுந்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/230204
-
எதிர்பாராத காட்சிப்படுத்தல்களுடன் குறுங்காணொளிகள்
handbrake போடாத வண்டி! விபத்தில் இருந்து தப்பிய முதியவர்! wheel chair ஆட்டுக்குட்டி!
-
இலங்கையின் சனத்தொகை 21 மில்லியனாக பதிவானது!! ஆண்களின் எண்ணிக்கை 48.3 வீதம்
காஜலிசம்=சோசலிசம்=கம்யூனிசம் ?! "எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிவிடும். இது வாழ்க்கையின் நிலையாமைக்கான ஒரு உதாரணம். அதற்காக, இன்று நம்மிடம் உள்ளதை சிறப்பாகப் பயன்படுத்துவோம்." என்று பலர் கூறுகின்றனர். ஆதலால் காதல் செய்வீர் .....பாரதி "காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம் கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும் காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம் கானமுண்டாம், சிற்ப முதற் கலைகளுண்டாம் ஆதலினாற் காதல் செய்வீர், உலகத்தீரே! அஃதன்றோ இவ்வுலகத் தலைமையின்பம்; காதலினால் சாகாமலிருத்தல் கூடும் கவலைபோம், அதனாலே மரணம் பொய்யாம்."
-
வடக்கில் போதைப்பொருள் வியாபாரம்; பின்னணியில் இராணுவத்தினர், பொலிஸார்; மாபியாக்களுடன் தமிழ் அரசியல்வாதிகளும் இணைவு - அமைச்சர் சந்திரசேகர்
வடக்கில் போதைப்பொருள் வியாபாரத்தில் இராணுவம், பொலிஸார் ஈடுபடவில்லை - பாதுகாப்பு பிரதி அமைச்சர் விளக்கம் 12 Nov, 2025 | 04:20 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) வடக்கில் போதைப்பொருள் வியாபாரத்தில் இராணுவத்தினரும், பொலிஸாரும் ஈடுபடவில்லை. ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரால் (ஓய்வு நிலை) அருண ஜயசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (12) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நான்காம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, வடக்கில் போதைப்பொருள் வியாபாரத்தில் இராணுவத்தினரும், பொலிஸாரும் ஈடுபடுவதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிடுகிறார். அவ்வாறு முறையற்ற வகையில் செயற்படும் இராணுவத்தினர், பொலிஸார் யார், அவர்களின் சேவை பிரதேசம் தொடர்பான விபரங்களை அவர் வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு குறிப்பிட்டால் ஆராய்ந்து பார்ப்போம். இவர் குறிப்பிடுவதை போன்று பாதுகாப்பு தரப்பினர் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புப்படவில்லை. கடந்த காலங்களில் அரசாங்கங்கள் எடுத்த தவறான தீர்மானங்களினால் நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டார்கள். அரச நிதி முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டதால் நாடும் வங்குரோத்து நிலையடைந்தது. தேசிய மக்கள் சக்தி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை சிறந்த முறையில் செயற்படுத்தி வருகிறது. எதிர்க்கட்சியினர் தான் கலக்கமடைந்து போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த கால அரசாங்கங்கள் பிணைமுறி மோசடி, தேங்காய் எண்ணெய் மோசடி, சீனி மோசடி, வெள்ளைப் பூண்டு உட்பட பாரதூரமான மோசடிகளால் தான் பிரபல்யமடைந்தன. பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை தயாரித்துள்ளோம். நிதி ஒழுக்கம் தற்போது கடுமையான முறையில் பேணப்படுகிறது. கடந்த காலங்களை போன்று முறையற்ற வகையில் வரவு - செலவுத் திட்டத்தை தயாரிக்கவில்லை. மக்களுக்கு போலியான நிவாரணங்களை வழங்கும் வாக்குறுதிகளை வழங்கவில்லை. மக்களுக்கு சாதகமான முறையில் தான் இந்த வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/230180
-
ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்(50 ஓவர்) போட்டித் தொடர் - 2025
'இந்திய அணி கொடுத்த பிறந்த நாள் பரிசு' - மகளிர் கிரிக்கெட் அணியில் பணியாற்றிய தமிழக மருத்துவர் பட மூலாதாரம், Harini Muralidharan கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் சமீபத்தில் நடந்து முடிந்த மகளிர் ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்தியாவில் நடந்த இந்தத் தொடரை வென்று முதல் முறையாக மகுடம் சூடியது மகளிர் அணி. இந்த அணியில் மருத்துவராகப் பணியாற்றிய ஹரிணி முரளிதரன் சென்னையைச் சேர்ந்தவர். உலகக் கோப்பை வெற்றிக் கொண்டாட்டங்கள், முக்கிய தலைவர்களுடனான சந்திப்புகளெல்லாம் முடிந்து திரும்பியவர், பிபிசி தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அவரது பயணம், உலகக் கோப்பையின் ஏற்ற இறக்கங்கள், இந்திய அணி தோல்விகளிலிருந்து மீண்டு வந்த தருணங்கள், இந்த அணிக்கு பெரும் உத்வேகமாக இருந்த விஷயங்கள் என இந்தப் பேட்டியில் நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார் மருத்துவர் ஹரிணி. கேப்டன், துணைக் கேப்டன், தலைமைப் பயிற்சியாளர் ஆகியோர் முக்கியமான தருணங்களில் என்ன செய்தார்கள் என்பது பற்றி நம்மிடம் அவர் கூறினார். உலக சாம்பியன் அணியின் ஓர் அங்கமாக இருந்திருக்கிறீர்கள். அந்த உணர்வு எப்படி இருக்கிறது? உலகக் கோப்பை போன்ற ஒரு பெரிய தொடரில் மருத்துவராகப் பணியாற்றக் கிடைத்த வாய்ப்பே பெரிய விஷயம். அதற்கே முதலில் கடவுளுக்கு நன்றி சொல்லவேண்டும். அதன்பிறகு அந்தப் பயணத்தில் ஒன்றாக இருந்து, அணியோடு வெற்றி, தோல்விகள் அனைத்தையும் சந்தித்து, அந்த உலகக் கோப்பையையும் வென்ற அந்த அனுபவத்தைப் பற்றிச் சொல்ல வார்த்தையே இல்லை. அந்த நிமிடங்கள் எங்கள் அனைவருக்கும் கண்களில் கண்ணீர் தான் வந்தது. சொல்லப்போனால் அப்போது எதுவுமே தோன்றவில்லை, ஆனால் எங்களைச் சுற்றிப் பேசிய ஒரு விஷயம் பின்பு புரிந்தது. அது என்னவெனில், ஆண்கள் கிரிக்கெட்டுக்கு எப்படி 1983 உலகக் கோப்பையோ அதுபோல் பெண்கள் கிரிக்கெட்டுக்கு இந்த வருட வெற்றி என்றார்கள். அதைக் கேட்கும்போது புல்லரித்தது. இது மிகவும் விசேஷமான ஒரு தருணம். பட மூலாதாரம், Harini Muralidharan படக்குறிப்பு, இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் மருத்துவர் ஹரிணி முரளிதரன் ஒரு கிரிக்கெட் அணியில் உங்கள் பயணம் எப்படித் தொடங்கியது? இந்த அணியில் மருத்துவராக உங்களுடைய பங்கு என்ன? மருத்துவம் முடித்துவிட்டு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டு இருந்தபோது சிலர் ஸ்போர்ட்ஸ் மருத்துவத்தை பரிந்துரைத்தனர். எனக்கும் அதில் ஆர்வம் ஏற்பட, பாசு சங்கரிடம் (இந்திய அணிக்கு ஸ்ட்ரெங்த் அண்ட் கண்டிஷனிங் பயிற்சியாளராக இருந்தவர்) இன்டர்ன்ஷிப் (internship) செய்தேன். அப்போது ஒரு மாதத்திலேயே எனக்கு இதுதான் எதிர்காலம் என்று தோன்றிவிட்டது. அதன்பிறகு பிரிட்டனில் முதுகலை பட்டம் பெற்றேன். இப்போது ஆர்சிபி (RCB), இந்திய அணி என்று பயணிக்கிறேன். ஸ்போர்ட்ஸ் மருத்துவம் என்பது 'காயம் மேலான்மை' (injury management) பற்றியது. முக்கியமாக ஒரு காயம் ஏற்படுவதை எப்படித் தவிர்க்கலாம், ஒருவேளை காயம் ஏற்பட்டால் அதிலிருந்து மீண்டு வருவதற்கான அவகாசத்தை எப்படிக் குறைக்கலாம் என்பன முக்கியமான விஷயங்கள். அதிலிருந்து தொடங்கி, ஊக்கமருந்து பயன்பாட்டைத் தடுப்பது எப்படி என்பதிலும் நாங்கள் பங்களிக்கவேண்டும். மேலோட்டமாக சொல்லவேண்டுமென்றால் கொஞ்சம் ஊட்டச்சத்து, கொஞ்சம் உளவியல் ஆகியவையும் சேர்ந்ததுதான் ஸ்போர்ட்ஸ் மருத்துவம். இதுவே ஒரு அணிக்குள் ஃபிசியோதெரபிஸ்ட், ஸ்ட்ரெந்த் அண்ட் கண்டிஷனிங் (strength & conditioning) பயிற்சியாளர், ஊட்டச்சத்து நிபுணர், உளவியல் ஆலோசகர் என தனித்தனியாக ஒவ்வொரு துறைக்கும் ஒரு வல்லுநர் இருப்பார்கள். அதேசமயம் வீரர்களும் தனியாக தங்களுக்கு இந்த விஷயங்களில் பயிற்சியாளர்கள் வைத்திருப்பார்கள். அப்படியிருக்கும்போது நான் முக்கியமாக கவனத்தில் கொள்வது, ஒரு தொடருக்கு நடுவே எந்த மாற்றமும் கொண்டுவரக்கூடாது என்பது. அந்தந்த தருணங்களில் அந்த வீரருக்கு என்ன தேவையோ அதை மட்டும் செய்துவிட்டு வெளியே வந்துவிடவேண்டும். காயம் மேலாண்மை என்று பேசும்போது, இந்த இந்திய அணியில் உங்களுக்கு பல சவால்கள் இருந்திருக்கும். ஐந்து வாரங்கள் நடக்கும் ஒரு மிகப் பெரிய தொடரில் அனைவரையும் ஃபிட்டாக வைத்திருப்பது என்பதே மிகப் பெரிய சவால்தானே? பொதுவாகவே இப்போது ஆண்கள் கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி பெண்கள் கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி, ஆஃப் சீசன் (Off Season - போட்டிகள் இல்லாத காலகட்டம்) என்பதே இல்லாமல் போய்விட்டது. ஒரு வீரரின் ஃபிட்னஸ் முன்னேற்றம் பற்றிய எங்களுடைய திட்டங்கள் ஓய்வு நேரத்தை பொறுத்துத்தான் அமையும். ஆனால், இப்போது வீரர்களுக்கு அவ்வளவாக நேரமே கிடைப்பதில்லை. அதனால் அவர்களுக்கு ரெகவரி நேரம் (recovery time) மிகவும் குறைவு. இந்த உலகக் கோப்பைக்கு முன்புகூட அவர்கள் ஒரு தொடரை முடித்துவிட்டு (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக) நேராக இந்த உலகக் கோப்பைக்குள் நுழைந்தார்கள். அப்படியிக்கும்போது அதன் தாக்கம் நிச்சயம் இதில் இருக்கும். ஆனால், நான் அதை சவால் என்று சொல்லமாட்டேன். ஒவ்வொரு வீரருக்குமான தேவை என்ன, அவர்கள் எந்த அளவுக்கு ஓய்வு எடுக்கிறார்கள், அவர்களின் ரெகவரி நேரம் என்ன என்பதை கணக்கிட்டோம். ஒரு சிறு வலியாக இருந்தாலும் அதற்கு என்ன செய்யவேண்டும், ஃபிசியோ தேவையா, மருந்துகள் தேவையா, மருந்துகள் என்றால் என்ன கொடுக்கவேண்டும், எப்போது கொடுக்கவேண்டும் என்று சரியாகத் திட்டமிட்டோம். உதாரணமாக ஆன்டிபயாடிக்ஸ் (antibiotics) கொடுக்கும்போது உடல் பலவீனமாகும். அதனால் அனைத்து விஷயங்களையும் சரியாக அலசி ஒவ்வொன்றையும் திட்டமிட்டோம். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா சரி, இந்த உலகக் கோப்பையின் முக்கிய தருணங்களைப் பற்றிப் பேசுவோம்... லீக் சுற்றில் இந்திய அணி தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என தொடர்ச்சியாக 3 போட்டிகளைத் தோற்றது. அந்த 3 போட்டிகளுக்குப் பிறகு இந்திய அணி மீண்டு வந்தது எப்படி? அதற்குக் காரணமாக இருந்த விஷயங்கள் என்னென்ன? இந்த அணியில் நான் பார்த்த நல்ல விஷயம் ஒன்று இருக்கிறது. அந்தத் தோல்விகள் அவர்களுக்குக் கொஞ்சம் கனமாக இருந்தன. ஆனால், அதை யாருமே நெகடிவாக வெளிக்காட்டவே இல்லை. 'இன்று நாம் தோற்றுவிட்டோம், அடுத்த போட்டியில் ஜெயித்துவிடலாம்' என்ற மனநிலையில் தான் இருந்தார்கள். நானாக இருக்கட்டும், அணியில் இருந்த பயிற்சியாளர் குழுவாகட்டும், அனைவருமே உரையாடல்களை பாசிடிவாக வைத்துக்கொள்ளவேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தோம். யாரிடமும் தோல்வியைப் பற்றிப் பேசாமல், அடுத்த போட்டிக்கு, அடுத்த பயிற்சிக்கு என்ன செய்யப்போகிறோம், வீரர்களுக்கு என்ன மாதிரியான உதவிகளை நாம் செய்யப்போகிறோம், அவர்களை எப்படி அடுத்த வெற்றிக்குத் தயார் செய்யப்போகிறோம் என்பதுதான் எங்களின் உரையாடல்களாக இருந்தது. அனைவருமே அடுத்த நாள் பற்றித்தான் யோசித்தார்களே தவிர, முந்தைய நாள் பற்றி யாரும் பேசவில்லை. அதுவே வீராங்கனைகளுக்கு ஒரு நல்ல உத்வேகமாக அமைந்தது என்று நினைக்கிறேன். அணியின் பயிற்சியாளர் குழுவில் யாரும் அந்தத் தோல்விகளைப் பற்றிப் பேசவில்லை எனும்போது, 'அவர்கள் நம்மை நம்புகிறார்கள். நமக்காக உழைக்கிறார்கள்' என்ற எண்ணம் அவர்களுக்கு வந்திருக்கவேண்டும். அதுவே அவர்களுக்கான உத்வேகத்தைக் கொடுத்திருக்ககூடும். குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிரான தோல்வி பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்குமே! ஏனெனில், தொடர்ச்சியாக 3 தோல்விகளுக்குப் பிறகு அரையிறுதி இடம் பற்றிய கேள்விகள் எழத் தொடங்கிவிட்டன. அந்தத் தோல்விக்குப் பின் என்ன மாற்றம் நடந்தது? நிச்சயமாக அந்த மூன்றாவது தோல்வி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. முதல் முறையாக அந்தத் தொடரின்போது வீராங்கனைகளின் கண்களில் நான் கண்ணீரைப் பார்த்தேன். 'இந்தப் போட்டியை விட்டுவிட்டோமே' என்ற கவலை அவர்களிடத்தில் இருந்தது. அங்கு நடந்த அழகான விஷயம் என்னவெனில், அணியின் கேப்டனும் (ஹர்மன்ப்ரீத் கவுர்) துணைக் கேப்டனும் (ஸ்மிரிதி மந்தனா) பொறுப்புகளை கையில் எடுத்துக்கொண்டார்கள். 'இது எங்கள் அணி, அந்த பொறுப்புகளை எடுத்துக்கொள்கிறோம், நாங்கள் இந்த அணியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்கிறோம்' என்றார்கள். கேப்டனும் தலைமைப் பயிற்சியாளரும் இன்னொரு அழகான விஷயம் சொன்னார்கள். அங்கிருந்த சப்போர்ட் ஸ்டாஃப் (support staff) அனைவரையும் பார்த்து உங்களுக்காக இதை வென்றுகொடுக்கிறோம் என்றார்கள். வீராங்கனைகள் எங்களுக்காக பேசியது மிகவும் சிறப்பான ஓர் உணர்வைக் கொடுத்தது. இந்த வீராங்கனைகள் அவர்களுக்காக என்று நினைக்காமல், ஒருவருக்கொருவர் ஆடவேண்டும் என்றுதான் நினைத்தார்கள். அதுதான் இந்த அணியின் சிறப்பம்சம். நீங்கள் சொன்னதுபோல், ஸ்மிரிதி தானே அந்தத் தோல்விக்குப் பொறுப்பெடுத்துக்கொள்வதாக பத்திரிகையாளர் சந்திப்பிலேயே கூறினார். தன்னுடைய விக்கெட் தான் தோல்விக்கு வித்திட்டது என்று வெளிப்படையாக சொன்னார். சொன்னதுபோல் பொறுப்பை ஏற்று அடுத்த போட்டியிலேயே நியூசிலாந்துக்கு எதிராக சதமடித்தார். அவரை ஆர்சிபி அணியில் இன்னும் அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். அந்த இங்கிலாந்து டிஸ்மிசல் அவரிடம் ஏற்படுத்திய தாக்கம் என்ன, அடுத்த சில தினங்களில் ஸ்மிரிதியிடம் என்ன மாறியது? அவரிடம் எதுவும் அதிகமாக மாறியது என்று நான் நினைக்கவில்லை. அவர் தலைமைப்பண்பை நன்கு வெளிப்படுத்தினார் என்றுதான் நான் சொல்வேன். ஸ்மிரிதி அன்று களமிறங்கும்போது 'நான் என்னுடைய 100% கொடுப்பேன் என்றுதான் இறங்கினார். ஆனால், அவர் எப்போதுமே அந்த மனநிலையில் தான் களமிறங்குவார். அவர் அதே மனநிலையில் தான் இருந்தார். அதேசமயம், என்னதான் பொறுப்பை அவர் தன் தோள்களில் ஏற்றுக்கொண்டாலும், இந்த இந்திய யூனிட் எப்போதும் ஓர் அணியாகவே செயல்பட்டார்கள். அவர்கள் அனைவருமே அந்தப் போட்டிக்கு நன்கு தயாரானார்கள். அந்தப் போட்டிக்கு முன்பு நடந்த 2 பயிற்சி செஷன்களிலுமே மிகவும் தீவிரமாக பயிற்சியெடுத்தார்கள். அதன்பிறகு அந்த அணியின் நம்பிக்கை அவர்கள் உடல்மொழியிலேயே வெளிப்பட்டது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், துணைக் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா இருவரும் பொறுப்புகளை கையில் எடுத்துக்கொண்டனர் என்கிறார் மருத்துவர் ஹரிணி. அந்த இங்கிலாந்து தோல்வி உங்களுக்கு பெர்சனலாகவும் வருத்தமளித்திருக்குமே! ஏனெனில், அன்று (அக்டோபர் 19) உங்களுடைய பிறந்த நாள் வேறு... நான் இந்த பணிக்கு விண்ணப்பித்த பிறகு, 'என் பிறந்தநாளன்று இந்திய அணியுடன் இருக்கவேண்டும்' என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டேன். 2 தோல்விகளுக்குப் பிறகு அன்று வீராங்கனைகள் சற்று பாசிடிவாகத்தான் இருந்தார்கள். 'இன்னைக்கு எனக்காக ஜெயித்துக் கொடுத்திடுங்க' என்று விளையாட்டாக சொல்லிக்கொண்டிருந்தேன். ஆனால், போட்டி முடிந்த பிறகு அனைவருக்கும் மிகவும் கனமாக இருந்தது. அந்த நிலையிலும் கூட வீராங்கனைகள் கேக் வெட்டுவதற்காக எடுத்துவந்தார்கள். நான் வேண்டாமென்று சொல்லியும் அவர்கள் கேட்காமல் கேக் வெட்ட வைத்தார்கள். எல்லாம் முடித்து கிளம்பும்போது பேருந்தில் ஜெமி (ஜெமிமா ரோட்ரிக்ஸ்) அருகில் தான் நான் அமர்ந்திருந்தேன். அவர்தான், 'சாரி மேம் உங்களுக்காக ஒரு பிறந்த நாள் பரிசு கொடுக்க முடியவில்லை' என்று வருந்தி கூறினார். 'பரவாயில்லை ஜெமி, 2ம் தேதி (நவம்பர் 2 - இறுதிப் போட்டி நடந்த நாள்) பரிசு கொடுங்கள் என்று சொன்னேன். அன்று இறுதிப் போட்டியை வென்றதும், பரிசுக்கு நன்றி என்று ஜெமியிடம் சொன்னேன். கட்டிப்பிடித்து 'ஹேப்பி பர்த்டே மேம்' என்று அவர் சொல்லிச் சென்றார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் - ஒரு மிக முக்கியமான செயல்பாட்டை இந்த உலகக் கோப்பையில் கொடுத்தார். ஆனால், அவருக்கு இந்த உலகக் கோப்பை அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. தொடரின் தொடக்கத்தில் இரண்டு டக் அவுட்கள், பின்னர் அணியிலிருந்து கழற்றிவிடப்பட்டார், அதன்பிறகு பேட்டிங் பொசிஷன் மாற்றம் வேறு. அனைத்தையும் கடந்து அசத்தினார். ஆனால், அவரும் கூட உளவியல் ரீதியாக கஷ்டப்பட்டதாகக் கூறினார். நீங்களும் ஸ்போர்ட்ஸ் மருத்துவத்தில் உளவியலும் ஒரு அங்கம் என்று சொன்னீர்கள். உங்கள் பார்வையில் ஜெமியின் இந்தப் பயணம் எப்படி இருந்தது? ஜெமி போன்று ஒரு பாசிடிவான குதூகலமான ஒரு ஆளைப் பார்ப்பது சாத்தியமில்லாத ஒன்று. அவர் அவ்வளவு சிக்கல்களை எதிர்கொண்டிருந்தார் என்பதே அந்த பேட்டியைப் பார்த்த பிறகுதான் எனக்குத் தெரிந்தது. அவர் தன்னுடைய அறையில் அந்த உணர்வுகளோடு போராடியிருக்கிறார். அதை நினைக்கும்போதே எனக்குக் கஷ்டமாக இருக்கிறது. அவர் வெளியில் ஒரு இடத்தில் கூட அந்த உணர்வுகளை காட்டிக்கொள்ளவில்லை. அவர் எல்லோர் மீதும் அக்கறை செலுத்துவார், அனைத்து விஷயங்களிலும் அக்கறை செலுத்துவார். மும்பையில் அவர் வீட்டில் இருந்து அவருக்காக ஏதாவது உணவுப்பொருள் வருகிறதென்றால், அது மொத்த அணிக்கும் வருமாறு பார்த்துக்கொள்வார். மிகவும் பாசிடிவான நபர் அவர். அந்த தருணத்தில் அணிக்கு என்ன வேண்டும் என்பதை மட்டுமே பார்க்கும் ஒருவர் அவர். அவுட் ஆனாலும் கூட, அடுத்து ஃபீல்டிங்கில் எப்படி பங்களிக்கலாம் என்று யோசிப்பவர். அவரைப் பொறுத்தவரை எல்லாமே அணிக்காகத்தான். அதுதான் முதலில். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, உலகக் கோப்பையின்போது உளவியல் ரீதியாக தான் அவதிப்பட்டதாகக் கூறியிருந்தார் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டி வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்கது. 338 என்ற இலக்கை அதுவரை பெண்கள் கிரிக்கெட்டில் யாரும் சேஸ் செய்ததில்லை. அதை இந்தியா மிகப் பெரிய அரங்கில் நிகழ்த்திக் காட்டியது. ஆனால், அசாத்தியம் என்று கருதப்பட்ட விஷயம் எப்படி சாத்தியமானது. இன்னிங்ஸ் இடைவெளியில் என்ன நடந்தது? அப்போது யாரும் அதிகமாகப் பேசிய நினைவு இல்லை. அனைவரும் தயாராகிக்கொண்டுதான் இருந்தோம். ஆனால், தலைமைப் பயிற்சியாளர் ஒரேயொரு விஷயத்தை அங்கிருந்த போர்டில் ஒரு விஷயத்தை எழுதினார். 'நாம் அவர்களை விட 1 ரன் அதிகமாக எடுப்போம்' என்பதை எழுதிவிட்டு அவர் சென்றுவிட்டார். அவ்வளவுதான். எல்லோரும் தயாரானார்கள். சென்று கூடுதலாக அந்த ரன்களையும் எடுத்துவிட்டார்கள். தலைமைப் பயிற்சியாளர் அமோல் மஜும்தார் இந்திய அணிக்காக ஒரு போட்டியில் கூட விளையாடுவதற்கான வாய்ப்பைப் பெறவில்லை. ஆனால், இன்று ஓர் உலகக் கோப்பையை வென்றுகொடுத்திருக்கிறார். அவர் இந்த அணியில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் என்ன? நான் பார்த்தவரைக்கும் அவர் மிகவும் நிதானமான நம்பிக்கையான பயிற்சியாளர். அவருக்கு என்ன தேவை என்பது அவருக்கு நன்கு தெரியும். அதை சரியாக நடைமுறைப்படுத்த என்ன தேவையோ அதை சரியாகத் திட்டமிட்டு, சரியாக அதை தொடர்புகொள்கிறார். இது முதல் விஷயம். இரண்டாவதாக, ஒரு வீரரின் பலம் என்ன என்பதைப் புரிந்துகொண்டு, அந்த வீரரை 100% நம்புகிறார். அந்த வீராங்கனை கொடுக்கும் கருத்துகளை (feedback) ஏற்றுக்கொண்டு திட்டமிடுகிறார். வீரர்கள் மட்டுமல்ல எங்களைப் போன்ற சப்போர்ட் ஸ்டாஃப்களுக்கும் அதுதான். 'நீங்கள் இந்த விஷயத்தில் வல்லுநர், இதுதான் சிறந்தது என்று நீங்கள் பரிந்துரைத்தால் நாம் அதைச் செய்வோம்' என்கிறார். அவர் எதையும் முயற்சி செய்யாமல் விடுவதில்லை. ஒரு விஷயத்தைச் செய்தால் நல்ல முடிவு கிடைக்குமா, அதை நடைமுறைப்படுத்த வாய்ப்பு இருக்கிறதா, அப்படியிருந்தால் அதை நாம் செய்துவிடுவோம் என்று சொல்பவர். இதுவொரு மிகச் சிறந்த பண்பு. ஒவ்வொருவரின் மீதும் மரியாதை செலுத்தி, அவர்கள் மீது நம்பிக்கையும் வைக்கும்போது இந்த அணி ஒரு குடும்பம் போல் ஆகிவிடுகிறது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளரான அமோல் மஜும்தார் சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பைப் பெறவில்லை வுமன்ஸ் பிரீமியர் லீக் (WPL) தொடர் இந்த வெற்றியில் தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறது என்று நினைக்கிறீர்களா? டபிள்யூ.பி.எல் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மிக மிகப் பெரியது. அதை மறுக்கவே முடியாது. பெண்கள் கிரிக்கெட்டில் இதற்கு முன் தொடர் அட்டவணைகள் என்பது அவ்வளவாக இருந்திருக்கவில்லை. நம்முடைய இந்தியா மிகப் பெரிய நாடு. இங்கு ஒவ்வொரு மூலை முடுக்குகளுக்கும் சென்று தேசிய அணிக்கு வீரர்களை அடையாளம் காண்பது என்பது நடைமுறையில் கடினமான ஒன்று. இந்த இடத்தில் டபிள்யூ.பி.எல் மேடை நன்கு இந்திய கிரிக்கெட்டுக்கு உதவியிருக்கிறது. இந்த 3 ஆண்டுகளில் வீரர்களின் தரத்தில், ஃபிட்னஸில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முதல் சீசனில் இருந்ததை ஒப்பிடும்போது இப்போது நல்ல முன்னேற்றத்தைப் பார்க்க முடிகிறது. இங்கு வாய்ப்பு பெற்ற வீராங்கனைகள் பிரகாசமாக ஜொலிப்பதற்கும், புதிதாக வீராங்கனைகள் விளையாட ஆசைப்படுவதற்கும் இது ஊக்கம் கொடுப்பதாக அமைந்திருக்கிறது. இவ்வளவு ஏன் எங்களைப் போன்ற சப்போர்ட் ஸ்டாஃப்கள் கூட நிறையப் பேர் அங்கிருந்துதான் வந்திருக்கிறோம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0rpyd1pkd4o
-
வடக்கில் போதைப்பொருள் வியாபாரம்; பின்னணியில் இராணுவத்தினர், பொலிஸார்; மாபியாக்களுடன் தமிழ் அரசியல்வாதிகளும் இணைவு - அமைச்சர் சந்திரசேகர்
வடக்கில் போதைப்பொருள் வியாபாரம் ; பின்னணியில் இராணுவத்தினர், பொலிஸார் ; மாபியாக்களுடன் தமிழ் அரசியல்வாதிகளும் இணைவு - அமைச்சர் சந்திரசேகர் 12 Nov, 2025 | 04:24 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் அதனூடான பிரச்சினையின் பின்னணியில் இராணுவத்தினர், பொலிஸார் இருப்பதாக கூறுவதில் உண்மை இருக்கின்றது. இது மாபியாக்களுடன் தொடர்புபட்டுள்ளது. அந்த மாபியாக்களுடன் தமிழ் அரசியல்வாதிகளும் இணைந்துள்ளனர் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (12) நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நான்காம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, தமிழ் மக்களுக்கு கார்த்திகை மாதம் என்பது முக்கியமான மாதம். இந்த மாதம் மாவீரர்களை நினைவு கூரும் மாதமாகும். அதுமட்டுமன்றி வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தமது பிள்ளைகளை நினைவு கூரும் மாதம். இந்த மாதத்தில் இருந்துகொண்டு நாங்கள் திரும்பி பார்க்க வேண்டியுள்ளது. அதாவது பல தசாப்தங்களுக்கு முன்பிருந்து இந்த நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று, தமிழ் மக்களுக்கு எதனையாவது செய்ய வேண்டும் என போராடிய மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன? அவர்களின் எதிர்பார்ப்புகள், அவர்களின் ஆசைகள் மற்றும் அபிலாசைகள் என்ன என்பதனை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அங்குள்ள மக்கள் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ வேண்டும். இந்த வாழ்க்கையை ஏற்படுத்துவதற்காக அவர்கள் போராடியிருந்தால் இன்று அந்த இளைஞர்களின் கனவினை நனவாக்கும் செயற்பாடுகளை எந்தவொரு தமிழ் கட்சியாவது எந்தவொரு தமிழ் அரசியல்வாதியாவது அன்றைய கால கட்டத்தில் இளைஞர்கள் செய்த அர்ப்பணிப்பு தியாகங்களை செய்கின்றார்களா? என்பது கேள்விக்குரிய விடயம் . அதுமாத்திரமன்றி வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசத்தில் மக்கள் தொகை குறைந்துகொண்டு வருகின்றது. வறுமை கூடிய மாகாணமாக வடக்கு மற்றும் கிழக்கு காணப்படுகிறது. இன்று தேசிய உற்பத்திக்கு குறைந்த பங்களிப்பு செய்கின்ற மாகாணங்களாகவும் உள்ளன. இதன்மூலம் இந்த மாகாணங்களுக்கு கடந்த கால ஆட்சியாளர்கள் இந்த பிரச்சினைகள் தொடர்பில் இந்த மாகாணங்களை கண்டுகொள்ளவில்லை. உரிய தீர்வுகளையும் வழங்கவில்லை. அதன் விளைவாகவே வடக்கில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் 1981ஆம் ஆண்டில் 8இலட்சத்து 30ஆயிரம் மக்கள் வாழ்ந்தார்கள். ஆனால்தற்போது 6 இலட்சத்து 10 ஆயிரம் மக்களே வாழ்கின்றனர். அப்போது 11 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்த மாவட்டம் இப்போது 6 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட மாவட்டமாக இருக்கின்றது. வருகின்ற வருடங்களில் இந்த எண்ணிக்கை இன்னும் குறையுமா என்றும் தெரியாது. இதனால் எமது அரசியல் இருப்பும் கேள்விக்குரியதாகியுள்ளது. எம்.பிக்களை தெரிவு செய்வதற்கான மக்கள் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அந்த நிலைமைக்கான காரணத்தை கண்டறிந்து அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க எடுக்க வேண்டும். தமிழ் மக்கள் வேகமாக நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர். இதனால் தமிழ் மக்களின் குடிப்பரம்பல் மேலும் குறைவடைகின்றது. கல்வியில் முன்னேறியிருந்த சமூகம் இப்போது கடந்த வருடங்களாக வீழ்ச்சியடைந்து வருகின்றது. ஆனால் கடந்த 6 மாதங்களாக அதில் முன்னேற்றம் காண்பதற்கான நம்பிக்கை உருவாகியுள்ளது. இது எங்கள் அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கையாகவே இருக்கின்றது. போதைப்பொருள் மாபியாக்கள் வடக்கை ஆளுகின்றனர். அது வடக்கை அச்சப்படுத்துகின்றது. இதில் இருந்து வடக்கை மீட்க வேண்டும். கடந்த காலங்களில் சஜித் அணியினரை சார்ந்தவர்கள் 78ஆம் ஆண்டில் இருந்து அவ்வாறான நாசகர வேலை மாபியாக்களை உருவாக்கியுள்ளனர் என்றார். இதன்போது ஒழுங்கு பிரச்சினையை எழுப்பிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணயின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கடந்த 7 மாதங்களாக கல்வியில் வடக்கு முன்னேற்றம் காண்பதாக கூறியுள்ளீர்கள் எதனை அடிப்படையாகக் கொண்டு அவ்வாறு கூறுகின்றீர்கள் ?. அதேபோன்று வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவமே போதைப் பொருளுக்கு பிரதான காரணம். இதனால் எப்போது இராணுவத்தை அங்கிருந்து வெளியேற்றப் போகின்றீர்கள் எனக்கேள்விகளை எழுப்பினார். இதனைத் தொடர்ந்து எழுந்து உரையாற்றிய அமைச்சர் சந்திரசேகர், கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தில் உள்ள பிள்ளைகளை கல்வி கற்பதற்காக கொழும்புக்கு அனுப்பும் நிலைமை காணப்பட்டது. அத்துடன் போதைப் பொருள் அச்சுறுத்தல் காரணமாக அதிகளவான பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு ஆதாரங்கள் தேவையில்லை. யதார்த்தமே இது. யாழ்ப்பாணத்தில் இருப்பவர்கள் இதனை புரிந்துகொள்ள வேண்டும். இதேவேளை போதைப் பொருள் பிரச்சினைக்கு பின்னால் இராணுவம் மற்றும் பொலிஸ் இருப்பதாக கூறினீர்கள். அதில் உண்மை இருக்கின்றது. இராணுவமும் பொலிஸும் வேறு அல்ல. இது மாபியாக்களுடன் இணைந்துள்ளது. அந்த மாபியாக்களுடன் தமிழ் அரசியல்வாதிகளும் பிணைந்துள்ளனர். அந்த அரசியல்வாதிகள் அண்மையில் கைது செய்யப்பட்டும் உள்ளனர் என்றார். இவ்வேளையில் மீண்டும் ஒழுங்கு பிரச்சினையை எழுப்பி கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போதைப் பொருளுடன் இராணுவம் பொலிஸ் தொடர்புபட்டுள்ளமை தொடர்பில் ஏற்றுக்கொண்டுள்ளமையை நான் வரவேற்கின்றேன். இதற்கு முன்னரான அரசாங்கங்கள் இதனை கூறியதில்லை. நீங்கள் இராணுவத்தை பொறுப்புக்கூற வைக்காமல் இந்த மாபியாக்களை இல்லாமல் செய்யப் போவதில்லை. வடக்கில் இரண்டு பிரஜைகளுக்கு ஒரு இராணுவ சிப்பாய் இருக்கும் நிலைமையே இருக்கின்றது என்றார். இதேவேளை தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் சந்திரசேகர் இந்த விடயத்தில் ஒட்டுமொத்த இராணுவத்தின் மீதோ, பொலிஸார் மீதோ பழிகூற முடியாது. ஒரு சிலரின் செயற்பாடுகள் உள்ளன. உங்களுடைய நண்பர்களின் அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களும் இந்த மாபியாக்களுடன் பின்னால் இருக்கின்றனர் என்பதை மறந்துவிடக்கூடாது என்றார். https://www.virakesari.lk/article/230188
-
இலங்கையின் சனத்தொகை 21 மில்லியனாக பதிவானது!! ஆண்களின் எண்ணிக்கை 48.3 வீதம்
எனக்கும் இந்தக்கோட்பாடு ஏற்றுக்கொள்ளக்கூடியதே என்பதை பணிவன்புடன் தெரிவித்துக்கொண்டு நாங்கள் இந்த பிரபஞ்ச பயணத்தை வாயேஜர் போல கண்களை(கமரா) இறுக மூடிக்கொண்டு தொடருவோம்!