Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. கல்மேகி புயலின் தாக்கம் - பிலிப்பைன்ஸ், வியட்நாம் நாடுகளில் சுமார் 200 பேர் பலி! 07 Nov, 2025 | 02:10 PM பிலிப்பைன்ஸில் பாரிய சேதத்தையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்திய கல்மேகி புயல் வியட்நாமில் கரையை கடக்கத் தொடங்கியுள்ள நிலையில், இந்த அனர்த்தத்தில் சிக்கி இதுவரை சுமார் 5 பேர் உயிரிழந்ததாகவும் பிலிப்பைன்ஸில் பலியான 188 பேரையும் சேர்த்து, கல்மேகி புயல் சுமார் 200 பேரை காவு வாங்கியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த புயலின் பெரும் தாக்கத்தினால் மத்திய வியட்நாமில் நேற்று வியாழக்கிழமை (6) மண்சரிவு ஏற்பட்டதோடு, பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. நிறைய வீடுகள் சேதமடைந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்ந்தனர். கல்மேகி புயலின் தாக்கத்தால் 7 பேர் காயமடைந்ததாகவும் சுமார் 2800 வீடுகள் சேதமடைந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பசுபிக் கடலில் உருவான கல்மேகி புயல் கடந்த புதன்கிழமை (5) பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியை கடந்து, தென் சீனக் கடலை நோக்கி நகர்ந்தது. இதில் மத்திய பிலிப்பைன்ஸில் உள்ள சில தீவுப் பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்று வீசியதுடன் கனமழை பெய்ததையடுத்து, நீக்ரோஸ் ஆக்சிடென்டல், செபு முதலிய மாகாணங்கள் வெள்ளக்காடாயின. வீதியோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், கடற்கரையோர வீடுகள், பெரிய அளவிலான கப்பல் கொள்கலன்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த புயல் இன்று வியட்நாமின் மத்திய பகுதியை நெருங்கி பெரிதளவில் சேதம் ஏற்படுத்தி வருகிறது. கடந்த வியாழக்கிழமை மத்திய வியட்நாம் வழியாக மணிக்கு 149 கி.மீ வேகத்தில் வீசிய கல்மேகி புயல், தற்போது மேற்கு நோக்கி கம்போடியா, லாவோஸை பகுதிகளில் நகர்கிறது. நேற்று இரவு முழுவதும் வீசிய புயல் காற்று காரணமாக இன்று காலை வியட்நாமின் மத்திய கடற்கரையோரப் பகுதிகள் முழுவதும் சேதமடைந்து, குப்பைகளால் சூழ்ந்து காணப்படுகிறது. இந்நிலையில், இன்று (7) இரவு மத்திய வியட்நாமை கல்மேகி புயல் கடுமையாக தாக்கக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் அந்நாட்டு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/229714
  2. சீனாவின் புதிய விமானந்தாங்கி போர்க்கப்பல் அமெரிக்கா, இந்தியாவுக்கு எந்த அளவு சவால் தரும்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சீனாவின் அதிநவீன விமானந்தாங்கி போர்க்கப்பலான 'ஃபுஜியான்' 7 மணி நேரங்களுக்கு முன்னர் "சீனாவின் அதிநவீன விமானந்தாங்கி போர்க்கப்பலான 'ஃபுஜியான்' அதிகாரப்பூர்வமாக நாட்டிற்கான சேவையில் இணைந்துள்ளது. அதற்கான பிரம்மாண்ட விழாவில் சீன அதிபர் ஜின்பிங் கலந்து கொண்டார்" என்று சீன அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சீனாவின் மூன்றாவது போர்க் கப்பல் ஃபுஜியான், விமானங்களை அதிவேகமாகப் பறக்கச் செய்யும் மின்காந்த கவண்கள் (electromagnetic catapults) கொண்டிருக்கிறது. இதன்மூலம், கப்பல்களின் எண்ணிக்கை அடிப்படையில் உலகின் மிகப் பெரிய கடற்படையாக சீனா உருவெடுத்துள்ளது. சீனா தனது கடற்படையை வேகமாக வலுப்படுத்துவது அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளும் தங்களது ராணுவ திறன்களை அதிகப்படுத்த வேண்டிய நெருக்கடியை ஏற்படுத்துகிறது. சீனப் போர்க்கப்பல் எப்படி இருக்கிறது? பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, லியோனிங் தான் சீனாவின் நவீன போர்க்கப்பலாகத் திகழ்ந்தது சீன அரசு ஊடக தகவலின்படி, ஃபுஜியானின் மின்காந்த கவண்கள் மற்றும் சமதள பறக்கும் தளம் (flat flight deck) மூலம் மூன்று வெவ்வேறு விதமான விமானங்கள் புறப்படலாம். சீனாவின் இந்த போர் கப்பலால், ஆயுதங்கள் ஏந்திய, எரிபொருள் நிரப்பப்பட்ட விமானங்களை செலுத்த முடியும். நீண்ட தூரத்திலிருந்தபடி எதிரி இலக்குகளை குறிவைத்து தாக்கும் திறனும் கொண்டது. ரஷ்யாவின் உதவியோடு கட்டப்பட்ட முந்தைய போர்க்கப்பல்களான தி லியோனிங் (the Liaoning) மற்றும் ஷான்டாங் (Shandong) ஆகியவற்றை விட இது சக்தி வாய்ந்தது. சீன கடற்படையின் முன்னேற்றத்தில் ஃபுஜியான் ஒரு மைல்கல் என்று சீன அரசு ஊடகம் கூறுகிறது. ஃபுஜியான் கப்பல் புதன்கிழமை தெற்கு ஹைனான் மாகாணத்தில் நடந்த நிகழ்ச்சியில் கடற்படையில் இணைக்கப்பட்டது. சீன அதிபர் ஜின்பிங் கப்பலின் தளத்தைப் பார்வையிட்டு, கடலில் அதன் செயல்திறன் பற்றி விரிவாக கேட்டறிந்தார். மின்காந்த கவண் தொழில்நுட்பத்தை சீனா பெறவேண்டும் என்பது அதிபரின் தனிப்பட்ட முடிவு என்றும் அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா எந்த அளவுக்கு போட்டியை சந்திக்க வேண்டியிருக்கும்? இதற்கு முன் மின்காந்த கவண் கொண்ட போர்க்கப்பல் அமெரிக்காவிடம் மட்டுமே இருந்தது. அமெரிக்கா - சீனா இடையிலான ஆதிக்கப் போட்டியில் சமீபமாக அதிகரித்துக் கொண்டிருக்கும் இந்த மோதல் போக்கு ஆசிய பசிஃபிக் பிராந்திய பாதுகாப்பில் ஒரு முக்கிய விஷயமாக உருவெடுத்துள்ளது. கப்பல்களின் எண்ணிக்கை அடிப்படையில் அமெரிக்காவை முந்தி இப்போது சீன கடற்படை உலகின் பெரிய கடற்படையாக உருவெடுத்துள்ளது. அதேசமயம் கப்பல்களின் எண்ணிக்கையை மட்டும் வைத்து பலத்தைத் தீர்மானிப்பது துல்லியமாக இருக்காது என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். தற்போது பல விஷயங்களில் சீனாவை விட அமெரிக்கா முன்னிலையில் இருக்கிறது. சீனாவிடம் தற்போது 3 நவீன விமானந்தாங்கி போர்க் கப்பல்கள் இருக்கின்றன. ஆனால், அமெரிக்காவிடம் அதுபோன்ற 11 விமானந்தாங்கி போர்க்கப்பல்கள் இருக்கின்றன. அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள், க்ரூஸர்கள் (Cruisers), டெஸ்ட்ராயர்கள் (Destroyers) அல்லது பெரிய போர்க்கப்பல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அமெரிக்காவின் கடற்படைத் திறன் சீனாவை விட மிக உயர்ந்தது. இருந்தாலும், சீனா தனது கடற்படையை மேலும் விரிவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2020 மற்றும் 2040க்கு இடையில் சீன கடற்படை கப்பல்களின் எண்ணிக்கை சுமார் 40 சதவீதம் அதிகரிக்கும் என்று அமெரிக்க கடற்படை மதிப்பிடுகிறது. இருப்பினும், அமெரிக்கா பல தொழில்நுட்ப துறைகளில் சீனாவை விட மிகவும் முன்னிலையில் உள்ளது. பல விமானந்தாங்கி கப்பல்களை இயக்கும் திறனையும் அமெரிக்கா கொண்டுள்ளது. சீனாவை விட அமெரிக்கா எவ்வளவு முன்னிலையில் உள்ளது? அமெரிக்க போர் கப்பல்கள் கடலில் நீண்ட காலம் தங்கிச் செயல்பட அணுசக்தி உதவுகிறது. ஆனால் ஃபுஜியான் பாரம்பரிய எரிபொருளில் இயங்குகிறது. அதனால், அந்தக் கப்பல் எரிபொருள் நிரப்புவதற்காக கரையோரத்திற்குத் திரும்ப வேண்டும் அல்லது கடலிலேயே டாங்கர்கள் மூலம் அதில் எரிபொருள் நிரப்பப்பட வேண்டும். ஃபுஜியான் மின்காந்த கவண் தொழில்நுட்பம் கொண்டிருந்தாலும், அதிலுள்ள போர் விமானம் பறக்கும் செயல்பாடு, 50 ஆண்டுகள் பழமையான அமெரிக்க விமானந்தாங்கி போர்க்கப்பலின் திறனில் சுமார் 60% மட்டுமே என்று அமெரிக்க கடற்படையின் முன்னாள் அதிகாரிகள் இருவர் கடந்த மாதம் சிஎன்என் ஊடகத்திடம் தெரிவித்ததனர். இதற்கு காரணமாக அவர்கள் அமெரிக்க விமானந்தாங்கி போர்க்கப்பலின் பறக்கும் தள வடிவமைப்பை குறிப்பிடுகின்றனர். லியோனிங் மற்றும் ஷான்டாங் போன்ற முந்தைய கப்பல்களுக்கு மாறாக, ஃபுஜியான், சீனாவின் ஸ்கீ-ஜம்ப் பாணி ரேம்ப் (ski-jump-style ramp) இல்லாத முதல் விமானந்தாங்கி போர்க்கப்பல் ஆகும். சீனாவின் முந்தைய விமானந்தாங்கி போர்க்கப்பல்களில், அதிலிருந்த போர் விமானங்கள் தங்களின் சொந்த சக்தியால் பறக்கும். இந்த புதிய வடிவமைப்பு சீனாவில், நாட்டின் 'விமானந்தாங்கி போர்க்கப்பல் வலிமையின் எழுச்சியின் சின்னம்' என பாராட்டப்படுகிறது. சுமார் 80,000 டன் எடையுள்ள ஃபுஜியான், அமெரிக்க கடற்படையின் 97,000 டன் எடையுள்ள நிமிட்ஸ் வகை போர்க் கப்பல்களுடன் அளவிலும் திறனிலும் நெருக்கமானதாகக் கருதப்படுகிறது. சீனா தற்போது டைப் 004 என்று அழைக்கப்படும் மற்றொரு புதிய விமானம் தாங்கி கப்பலை உருவாக்கி வருகிறது. அதிலும் மின்காந்த கவண் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். ஃபுஜியானுக்கு மாறாக அது அணு ஆற்றலில் இயங்கும் வகையில் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்தியாவின் நவீன போர்க்கப்பல் ஐ.என்.எஸ்.விக்ராந்த் இந்திய கடற்படையின் பலம் இந்திய கடற்படையில் 1.42 லட்சம் வீரர்கள் உள்ளனர் மற்றும் மொத்தம் 293 கப்பல்கள் உள்ளன. இதில் 2 விமானந்தாங்கி கப்பல்கள், 13 டெஸ்ட்ராயர்கள் (destroyers), 14 ஃபிரிகேட்ஸ் (frigates), 18 நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் 18 கார்வெட்ஸ் (corvettes) அடங்கும். தற்போது இந்திய கடற்படையில் மின்காந்த கவண் அமைப்பு கொண்ட எந்த விமானந்தாங்கி போர்க்கப்பலும் இல்லை. இந்தியாவின் விமானந்தாங்கி போர் கப்பல்களான ஐ.என்.எஸ்.விக்ரமாதித்யா மற்றும் ஐ.என்.எஸ்.விக்ராந்த் ஆகிய இரண்டும் எஸ்.டி.ஓ.பி.ஏ.ஆர் (Short Take-off But Arrested Recovery) எனப்படும் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளன. சோவியத் காலத்தில் உருவாக்கப்பட்ட ஃபிரிகேட் கப்பல் அட்மிரல் கோர்ஷ்கோவ், 2013-ஆம் ஆண்டு இந்திய கடற்படையில் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா என்ற பெயரில் இணைந்தது. அதேசமயம், இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானந்தாங்கி கப்பலான ஐ.என்.எஸ்.விக்ராந்த், 2022ஆம் ஆண்டு கடற்படையில் இணைக்கப்பட்டது. இந்த போர் கப்பல், பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் தன்னிறைவு நோக்கில் ஒரு முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்பட்டது. எனினும், இந்தியப் பெருங்கடலில் ராணுவ பலத்தில் சமநிலையைக் பராமரிக்க, மூன்றாவது விமானந்தாங்கி கப்பல் தேவையென இந்திய கடற்படை கருதுகிறது. ஐ.என்.எஸ்.விக்ராந்த் அடுத்த மூன்று அல்லது நான்கு தசாப்தங்கள் வரை சேவையில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதேசமயம் விக்ரமாதித்யா 2035ஆம் ஆண்டுவாக்கில் ஓய்வு பெறும் வாய்ப்புள்ளது. சீனாவுடன் ஒப்பிடுகையில், இந்தியாவிடம் தற்போது இரண்டு விமானந்தாங்கி போர் கப்பல்கள் மட்டுமே உள்ளன. மின்காந்த கவண் அமைப்புகளுடன் அடுத்த தலைமுறை போர் கப்பல்களை உருவாக்குவது குறித்து இந்தியா பரிசீலித்து வருவதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y07q2kq5zo
  3. அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சன் காலமானார்! 08 Nov, 2025 | 03:33 PM DNA கட்டமைப்பைக் கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சன் தனது 97 ஆவது வயதில் காலமானார். அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சன் 1953 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் விஞ்ஞானி பிரான்சிஸ் கிரிக் (Francis Crick) உடன் இணைந்து DNAயின் இரட்டைச் சுருள் கட்டமைப்பைக் கண்டுபிடித்தார். இது 20 ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய திருப்புமுனையாக இருந்தது. DNAயின் இரட்டைச் சுருள் கட்டமைப்பைக் கண்டுபிடித்ததற்காக அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சனுக்கு 1962 ஆம் ஆண்டில் நோபல் பரிசும் கிடைத்தது. அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சன் 1928 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிகாகோவில் பிறந்தார். ஜேம்ஸ் வாட்சன் தனது 15 வயதில் சிகாகோ பல்கலைக்கழகத்தில் படிக்க புலமைப்பரிசில் பெற்றார். DNA கட்டமைப்பு குறித்த தனது ஆராய்ச்சியைத் தொடர ஜேம்ஸ் வாட்சன் கேம்பிரிட்ஜுக்குச் சென்றார், அங்கு அவர் பிரிட்டிஷ் விஞ்ஞானி பிரான்சிஸ் கிரிக்கை சந்தித்து தனது கண்டுபிடிப்பை வெற்றிகரமாக நிறைவேற்றியமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/229849
  4. வரமா? சாபமா? நிஜத்திலிருந்து..... சட்ட மருத்துவம் November 7, 2025 1 Minute சம்பவம் 1: யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த மாதம் 7 திகதி ஒரே நேரத்தில் மூன்று பிள்ளைகளை பெற்ற நிலையில் அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார், நேற்று முன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழநதுள்ளார், ஆனால் மூன்று குழந்தைகளும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவத்தில் வதிரி பகுதியைச் சேர்ந்த யோகராஜா மயூரதி வயது 46 என்ற தாயை இவ்வாறு உயிரிழந்துள்ளார். திருமணம் செய்து 20 ஆண்டுகளாக குழந்தை இன்றி பெரும் கஷ்டங்களையும் துன்பங்களையும் எதிர் கொண்டு விட்டு மூன்று பிள்ளைகளையும் பார்க்காமல் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் 2: 24-05-2025 அன்று யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிரசவித்த சம்பவம் பதிவாகி இருக்கின்றது. குறித்த சம்பவமானது யாழ் வட்டுக்கோட்டையை சேர்ந்த தம்பதியினரே ஐந்து குழந்தைகளை முறையே ஆண்,பெண்,ஆண்,பெண் ,ஆண் என பெற்றெடுத்தனர் ஐந்து குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளார்கள் என வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது சம்பவம் 3: கிளிநொச்சியினை சேர்ந்த 56 வயதுமிக்க கர்ப்பிணி கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். குறித்த கர்ப்பிணி செயற்கை முறையில் கருத்தரித்த நிலையிலேயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். கணவனுக்கு தெரியாமலேயே குறித்த பெண்மணி கருத்தரித்ததாக கூறப்படுகின்றது இவை இந்த வருடத்தில் முகநூலிலும் பத்திரிகைகளிலும் வெவ்வேறு காலப்பகுதிகளில் வந்த செய்திகள். ஏன் இவ்வாறு கர்ப்பிணி தாய்மாரின் மரணங்கள் நிகழுகின்றன என்பது பற்றி இப்பதிவு விளக்குகின்றது. இன்றைய காலப்பகுதியில் இலங்கையில் திருமணம் செய்யும் சோடிகளில் அண்ணளவாக நான்கில் ஒரு சோடிக்கு (23%) குழந்தைப்பேறு இன்மை ஓர் பிரச்சனையாக இருக்கின்றது. இதற்கு தீர்வாக பல்வேறு சிகிச்சை முறைகள் பெண்ணோயியல் மருத்துவத்தில் வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றன. இவற்றில் முக்கியமானது IVF (In vitro fertilization) என்றழைக்கப்படும் வெளிச் சோதனை முறை கருக்கட்டல் அல்லது ஆய்வுகூடச் சோதனை முறை கருக்கட்டல் ஆகும். இந்த IVF சிகிச்சை முறையானது பல்லாயிரக்கணக்கான குழந்தை பேறு அற்றவர்களின் வாழ்க்கையில் வசந்தத்தினை வீசியுள்ளது என்றால் மிகையாகாது. ஏனெனினும் இந்த IVF சிகிச்சையின் பொழுது பல்வேறுபட்ட மருத்துவ ஒழுக்கவியல் (medical ethics) சம்பந்தமான பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக இவ்வாறான கர்ப்பிணி தாய்மாரின் மரணங்கள் நிகழுகின்றன. இவ்வாறான ஒரு சில பிரச்சனைகளை இப்பதிவு விளக்குகின்றது 1. செலுத்தப்படும் முளையங்களின் எண்ணிக்கை (number of embryos) IVF சிகிச்சையின் பொழுது வெளிச்சூழலில் கருக்கட்டபட்ட முளையம் தாயின் கருப்பையினுள் உட்செலுத்தப்படும். தாயின் வயது, முளையங்களின் தரம், தோல்வியடைந்த IVF சிகிச்சைககிளின் எண்ணிக்கை போன்றவற்றினை கருத்தில் கொண்டு முளையங்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும். பொதுவாக தாயினது, பிறக்க போகும் குழந்தையின் நலனை கருத்தில் கொண்டும் பல குழந்தைகள் பிறக்கும் பொழுது ஏற்படும் தீய விளைவுகளை கருத்தில் கொண்டும் ஓர் முளையத்தினை கருப்பையினுள் உட்பதிக்கவே சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. எனினும் அரிதான சில சந்தர்ப்பங்களில் இரண்டு அல்லது மூன்று முளையங்கள் உட்பதிக்கப்படலாம். உதாரணமாக தாயின் வயது அதிகம், குறைந்த தரத்திலான முளையம், பலமுறை தோல்வி அடைந்த சிகிச்சை முறைகள் என்பவற்றினை கருத்தில் கொண்டு இரண்டு அல்லது மூன்று முளையங்கள் உட்பதிக்கப்படலாம். எவ்வாறாயினும் 03 முளையங்களுக்கு மேல் உட்பதிக்க சிபாரிசு இல்லை. ஆனால் இன்றைய வியாபார உலகில் மேற்குறித்த விடயங்கள் கருத்தில் கொள்ளப்படாதன் காரணமாகவே இவ்வாறான மேற்குறித்த கர்ப்பிணி தாய்மாரின் மரணங்கள் நிகழுகின்றன. இவ்வாறு முளையங்கள் உட்செலுத்தப்பட்டு ஒன்றிற்கு மேற்பட்ட குழந்தைகள் கருத்தரிக்கும் பொழுது தாயாருக்கு ஏற்படும் ஒரு சில முக்கிய சிக்கல்கள் 1. உயர் குருதி அழுத்தம் அதன் காரணமான வலிப்பு நோய் மற்றும் ஈரல் செயலிழப்பு 2. கர்ப்பகால சலரோகம் 3. அதிக மன அழுத்தம் மற்றும் மன நோய்கள் 4. குருதி சோகை 5. பிள்ளை பேறிற்கு பின்னரான குருதி போக்கு ஒன்றிற்கு மேற்பட்ட குழந்தைகள் கருத்தரிக்கும் பொழுது பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் ஒரு சில முக்கிய சிக்கல்கள் 1. குறை மாதத்தில் பிறத்தல் 2. நிறை குறைவாக பிறத்தல் 3. பிறந்தவுடன் முதிரா குழந்தைகள் பிரிவில் அனுமதியும் அதன் நீண்ட கால தீங்கான சுகாதார விளைவுகள் 4. இருதய, சுவாச தொகுதிகளில் ஏற்படும் பிறப்பு குறைபாடுகள் 5. தாயாரின் அன்பினை மற்றும் அரவணைப்பினை உரிய அளவில் பெற முடியாத நிலைமை 6. தாய்ப்பாலினை உரிய அளவில் அல்லது முற்றாக பெறமுடியாத நிலைமை இவ்வாறான IVF சிகிச்சைகள் தனியார் மருத்துவ மனைகளிலேயே மேற்கொள்ளப்பட்டு பிரசவத்திற்க்கு அரச வைத்தியசாலைகளில் பெரும்பாலும் அனுமதிக்கப்படுகின்றனர். இவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் முதிரா நிலையில் குறை மாதத்தில் பிறக்கும் பொழுது முதிராக குழந்தைகள் நிலையத்தில் நெருக்கடி நிலை ஏற்படும் இதன்காரணமாக மற்றைய தாயாரின் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படலாம். முதிரா குழந்தைகள் நிலையத்தில் வரையறுக்கப்பட்ட அளவிலேயே கட்டில்களின் எண்ணிக்கை மற்றும் உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களின் எண்ணிக்கை காணப்படும் 2. வயது கட்டுப்பாடு மற்றும் சம்மதம் 50 வயதினை கடந்த பெண்களுக்கு இவ்வாறான IVF சிகிச்சை முறைகளை வழங்க கூடாது என வைத்தியர்களுக்கான வழிகாட்டி வலியுறுத்துகின்றது. தாயினதும் கருவில் உருவாகும் குழந்தையினதும் நலத்தினை கொண்டே இந்த வயது எல்லை வரையறுக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறான சிகிச்சைகள் வழங்கப்படும் பொழுது கணவன் மற்றும் மனைவி இருவரினதும் எழுத்துமூலமான சம்மதம் பெறப்பட்டிருக்க வேண்டும். மேலும் இவ்வாறு அதிகரித்த வயதில் ஓர் பெண் கருத்தரிக்கும் பொழுது குறித்த பெண் மனோரீதியாக மற்றும் மருத்துவ ரீதியாக கர்ப்பத்தினை தாங்கி பிள்ளையினை பெற்று வளர்த்து எடுக்க தகுதி வாய்ந்தவளா என்று தீர ஆராய வேண்டும். இலங்கையில் IVF (MEDICALLY ASSISTED REPRODUCTIVE TECHNIQUES) பற்றிய இறுக்கமான சட்ட திட்டங்கள் ஏதும் இல்லை வெறுமனே வழிகாட்டுதல் மட்டுமே உள்ள நிலையில் மக்கள் இவ்வாறு மருத்துவ வழிகாட்டுதல்களை மீறி ஒன்றிற்கு மேற்பட்ட முளையங்களை தமது வியாபார நோக்கம் கருதி உட் செலுத்தி கர்ப்பிணி தாய்மாரின் உயிரினை ஆபத்திற்கு உள்ளாக்கும் மற்றும் பிறக்கும் குழந்தைகளின் நலனில் அக்கறையில்லாத வைத்தியர்களை புறக்கணிப்பதே தீர்வாகும். குறிப்பு : இங்கு தலையங்கத்தில் வரமா? சாபமா? என குறிப்பிட்டது IVF சிகிச்சை முறையினையே ஆகும். மக்கட் செல்வம் என்றும் வரமே. “குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்”……… திருக்குறள் நன்றி https://tinyurl.com/ys69ddn7
  5. 'இந்திய வாக்காளர் ஆவணங்களில் இடம் பெற்ற' பிரேசில் பெண் - வைரலானது பற்றி கூறியது என்ன? பட மூலாதாரம், Congress Party படக்குறிப்பு, புதன்கிழமையன்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியின் பத்திரிகையாளர் சந்திப்பில் இடம்பெற்ற லாரிசா நேரியின் புகைப்படம் கட்டுரை தகவல் லூயிஸ் பெர்னாண்டோ டோலிடோ , லண்டன் கீதா பாண்டே மற்றும் யோகிதா லிமாயே, இந்தியா 4 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவில் தேர்தல் மோசடி தொடர்பாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் முன்வைக்கும் குற்றச்சாட்டில் இடம் பெற்றிருந்த ஒரு பெண்ணின் புகைப்படம் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது. அந்தப் பெண் பிரேசில் நாட்டைச் சேர்ந்த சிகையலங்கார நிபுணர் லாரிசா நேரி. இதுவரை இந்தியாவிற்கே வந்ததில்லை என்று பிபிசியிடம் தெரிவித்த அந்தப் பெண், "ஏதோ தவறு நடந்திருக்கலாம், யாரோ குறும்பு செய்து விளையாடுகிறார்கள்" என்று நினைத்ததாகக் கூறுகிறார். பின்னர் தன்னுடைய சமூக ஊடகக் கணக்குகளில் செய்திகள் வந்து குவிந்தன, பலரும் இன்ஸ்டாகிராமில் டேக் செய்யத் தொடங்கினார்கள் என்று அவர் கூறுகிறார். "முதலில் அது தவறான செய்தி, என்னை வேறு யாரோ என தவறாக புரிந்துக் கொண்டார்கள் என நினைத்தேன்," என்று அவர் பிபிசியிடம் கூறினார். "பின்னர் என் முகம் பெரிய திரையில் தோன்றும் வீடியோவை எனக்கு அனுப்பினார்கள். அப்போதும், அது செயற்கை நுண்ணறிவு மூலம் செய்யப்பட்டது அல்லது ஏதோ நகைச்சுவை என்று தோன்றியது. ஆனால் நிறைய பேர் ஒரே நேரத்தில் செய்தி அனுப்பத் தொடங்கிய பின்தான், அது விளையாட்டல்ல, உண்மை என்பதை உணர்ந்தேன்" என்கிறார் லாரிசா நேரி. தென்கிழக்கு பிரேசிலில் பெலோ ஹொரிசாண்டே நகரில் வசிக்கும் நேரி, இந்தியாவிற்கு ஒருபோதும் வந்ததில்லை. என்ன நடக்கிறது என்பதே புரியாமல், விஷயத்தைத் தெரிந்து கொள்ள கூகுளில் அவர் தேடிய போதுதான் அவருக்கு எல்லாம் புரிந்தது. கடந்த ஆண்டு ஹரியாணா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவுடன் கூட்டுவைத்து வாக்குத் திருட்டு செய்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பில் குற்றம் சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டுகளை பாஜக மறுத்தது. பத்திரிகையாளர் சந்திப்புக்குப் பிறகு, ஹரியாணா மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், ஆகஸ்ட் மாதம் ராகுல் காந்திக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை பகிர்ந்தார். அதில், தகுதி இல்லாத வாக்காளர்களின் பெயர்களுடன் ஒரு உறுதிமொழியை கையெழுத்திடுமாறு அவரிடம் கேட்டிருந்ததாகவும், அதன் மூலம் தேவையான நடவடிக்கைகளை தொடங்க முடியும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது என தெரிவித்தார். ஆனால், அவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கவில்லை, நேரியின் புகைப்படத்துடன் வாக்காளர் அட்டை இருப்பது குறித்தும் எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை அறிவதற்காக அதிகாரிகளை பிபிசி தொடர்பு கொண்டுள்ளது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று செய்தியாளர் சந்திப்பை நடத்திய ராகுல் காந்தி, வாக்குகளை திருடுவதாக தேர்தல் ஆணையத்தையும் பாஜக அரசாங்கத்தையும் குற்றம் சாட்டினார் ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் இருந்து தேர்தல் ஆணையத்தின் மீது "வாக்குத் திருட்டு" குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி தொடர்ந்து கூறி வருகிறார் . அவரது சமீபத்திய கூற்றுகளில், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் தரவை தங்களது குழு ஆராய்ந்ததாகவும், அதில் சுமார் 2 கோடி வாக்காளர்களில், 25 லட்சம் பேரின் அடையாள அட்டையில் ஒழுங்கற்ற தரவுகளை கொடுத்திருக்கின்றனர் என்றும், ஒரு வாக்காளர் எண் - பல நபர்கள்; ஒரே நபர் - பல வாக்காளர் எண்கள் மற்றும் போலியான முகவரிகள் இருப்பதைக் கண்டறிந்ததாகவும் ராகுல் காந்தி கூறினார். ஹரியாணா தேர்தலில் தனது கட்சியின் தோல்விக்கு வாக்காளர் பட்டியலில் நடந்ததாகக் கூறப்படும் மோசடியே காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார். ராகுல் காந்தி தனது வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக, பெரிய திரை ஒன்றில் பல ஸ்லைடுகளைக் காட்டினார். அவற்றில் நேரியின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, தேர்தல் ஆணையம் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்துள்ளார். "இந்தப் பெண்மணி யார்? அவரின் வயது என்ன? இவர் ஹரியானாவில் 22 முறை வாக்களித்துள்ளார்," என்று ராகுல் காந்தி கூறினார். பிரேசிலிய புகைப்படக் கலைஞர் மேத்தியஸ் ஃபெரெரோ எடுத்த ஒரு பெண்ணின் ஸ்டாக் புகைப்படம், பல வாக்காளர் பதிவுகளில் வெவ்வேறு பெயர்களில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டதாக அவர் கூறினார். நேரி என்ற பிரேசிலிய மாடல், சீமா, ஸ்வீட்டி, சரஸ்வதி என பல்வேறு பெயர்களில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றதாக அவர் விவரித்தார். "அந்த புகைப்படத்தில் இருப்பது நான் தான்" என 29 வயதான லாரிசா நேரி என பிபிசியிடம் உறுதிப்படுத்தினார். "ஆம், எனது சிறு வயது புகைப்படம், அதில் இருப்பது நான் தான்." தான் சிகை அலங்கார நிபுணராக பணியாற்றுவதாகவும், மாடல் அல்ல என்றும் கூறிய லாரிசா நேரி, அந்தப் புகைப்படம் 2017-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தான் 21 வயதாக இருந்தபோது தனது வீட்டிற்கு வெளியே எடுக்கப்பட்டது என்றும் தெளிவுபடுத்தினார். "நான் அழகாக இருப்பதாக சொன்ன புகைப்படக் கலைஞர், என்னைப் புகைப்படம் எடுத்தார்" என்று கூறினார். புகைப்படம் எடுக்கப்பட்டு பல வருடங்களுக்குப் பிறகு, கடந்த இரண்டு நாட்களில், இந்தியாவைச் சேர்ந்தவர்கள், அதிலும் பெரும்பாலும் பத்திரிகையாளர்கள் என பலரின் கவனம் தன் மீது குவிந்ததால் நேரி பயந்துவிட்டார். "நான் பயந்துவிட்டேன். இது எனக்கு ஆபத்தானதா, அதைப் பற்றிப் பேசுவது யாருக்காவது தீங்கு விளைவிக்குமா என்று எனக்கு எதுவுமே தெரியவில்லை. யார் சரி, யார் தவறு என்றும் எனக்குத் தெரியவில்லை, ஏனென்றால் சம்பந்தப்பட்ட தரப்பினரை எனக்குத் தெரியாது," என நோரி கூறுகிறார். "எனது வாடிக்கையாளர்களிடமிருந்து வந்த செய்திகளைக் கூட என்னால் பார்க்க முடியவில்லை, காலையில் வேலைக்குச் செல்லவில்லை. நான் வேலை செய்யும் இடத்தின் எண்ணை கண்டுபிடித்து பல பத்திரிகையாளர்கள் போன் செய்து கொண்டிருந்தார்கள்". "அவர்கள் நான் வேலை செய்யும் இடத்தில் தொந்தரவு செய்ததால், சலூன் பெயரை என் சுயவிவரத்திலிருந்து நீக்கிவிட்டேன். என் முதலாளியும் என்னிடம் பேசினார். சிலர் அதை ஒரு மீம் போல நினைக்கிறார்கள், ஆனால் அது என்னை தொழில் ரீதியாக பாதிக்கிறது." பட மூலாதாரம், Congress Party படக்குறிப்பு, ஹரியானாவில் சீமா, ஸ்வீட்டி மற்றும் சரஸ்வதி உள்ளிட்ட பல பெயர்களில் நேரி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக காந்தி கூறினார் நேரியின் புகைப்படத்தை எடுத்த மேத்தியஸ் ஃபெரெரோவும் திடீர் கவனத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். சமீப காலம் வரை, இந்தியா என்றால், 2009-ஆம் ஆண்டு ஒளிபரப்பான Caminho das Índias என்ற பிரேசிலிய பிரைம் டைம் நிகழ்ச்சி மட்டுமே தெரியும் என்று அவர் கூறுகிறார். ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள நாடு ஒன்றில் கடந்த சில நாட்களில் நடைபெற்ற நிகழ்வுகளை அவரால் இன்னும் சரியாக புரிந்துக் கொள்ளமுடியவில்லை. இந்தியாவில் இருந்து ஒரு வாரத்திற்கு முன்பு தன்னைத் தொடர்பு கொண்ட சிலர், புகைப்படத்தில் உள்ள பெண் யார் என்று கேட்டதாக பிபிசியிடம் தெரிவித்த அவர், "நான் பதில் சொல்லவில்லை. யாரின் பெயரையும் என்னால் அப்படி சொல்லிவிடமுடியாது. இவரை (நேரியை) நான் பல வருடங்களாகப் பார்க்கவில்லை. இதெல்லாம் மோசடி என்று நினைத்து, அந்த எண்களை நான் பிளாக் செய்தேன்." என்று அவர் பிபிசியிடம் கூறினார். இருப்பினும், ராகுல் காந்தியின் பத்திரிகையாளர் சந்திப்பிற்குப் பிறகு இந்தப் பிரச்னை பெரிதாக வெடித்தது. "இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் என்னிடம் கேள்வி கேட்டார்கள், அது மிகவும் மோசமாக இருந்தது. என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முயற்சித்தேன், என்னுடைய இன்ஸ்டாகிராமை செயலிழக்கச் செய்தேன். பின்னர் என்ன நடக்கிறது என்பதை கூகுள் மூலம் உணர்ந்தேன், ஆனால் முதலில் எதுவுமே புரியவில்லை." சில வலைத்தளங்கள் அனுமதியின்றி நேரியின் புகைப்படத்துடன் தனது படங்களை வெளியிட்டதாக ஃபெர்ரெரோ கூறுகிறார். "மீம்ஸ்-களை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள், அதை ஏதோ ஒரு 'கேம்-ஷோ' நகைச்சுவை போல சித்தரிப்பது அபத்தமாக இருந்தது." 2017-ஆம் ஆண்டில், ஃபெரெரோ ஒரு புகைப்படக் கலைஞராக பணியாற்றத் தொடங்கும் போது, தனக்கு நன்கு பரிச்சயமான நேரியை புகைப்படப் படப்பிடிப்பிற்கு வருமாறு அழைத்தார். அப்போது எடுக்கப்பட்ட நேரியின் புகைப்படங்களை ஃபெர்ரெரோ பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டதாகவும், நேரியின் ஒப்புதலுடன் புகைப்பட வலைத்தளமான Unsplash-இல் வெளியிட்டதாகவும் அவர் கூறினார். "அந்தப் புகைப்படம் பெரிய அளவில் வைரலானது... சுமார் 57 மில்லியன் பார்வைகளைப் பெற்றது," என்று அவர் கூறினார். அவர் இப்போது தனது Unsplash கணக்கிலிருந்து இணைப்பை நீக்கிவிட்டார், ஆனால் அதே படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட நேரியின் மற்ற புகைப்படங்களைக் காட்டும் ஸ்கிரீன்ஷாட்களை எங்களுக்கு அனுப்பினார். பட மூலாதாரம், ANI "புகைப்படங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதால் பயந்துபோய் அவற்றை நீக்கிவிட்டேன். நான் புகைப்படம் எடுத்த ஒருவருக்கு இவ்வாறு நடப்பதை நினைத்து அச்சமடைந்தேன், அத்துமீறப்பட்டதாக உணர்ந்தேன். நிறைய பேர் என்னிடம் வந்து, 'ஏதாவது தவறு செய்துவிட்டதாக நினைக்கிறாயா?' என்று கேட்கிறார்கள், ஆனால் நான் தவறேதும் செய்யவில்லை. தளம் திறந்திருந்தது, மில்லியன் கணக்கானவர்களைப் போலவே நானும் பதிவேற்றினேன்" என்று சொல்கிறார். அவர் இப்போது நேரியுடன் இருக்கும் தனது புகைப்படங்களுடன் கூடிய பேஸ்புக் பதிவை, தனியுரிமை அமைப்பைப் பயன்படுத்தி தனிப்பட்ட (Private) புகைப்படமாக மாற்றியுள்ளார். "நமது ட்விட்டர், பேஸ்புக், தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கில் மக்கள் திடீரென பெருமளவில் நுழைவதைப் பார்க்கும்போது, பீதி ஏற்படுகிறது. அதன் முதல் எதிர்வினை எல்லாவற்றையும் மூடிவிட்டு, பின்னர் புரிந்துகொள்வதுதான். சிலர் அதை வேடிக்கையாக நினைத்தார்கள், ஆனால் எனக்கு அது வித்தியாசமாக இருந்தது." ஃபெர்ரெரோவோ அல்லது நேரியோ இதுவரை இந்தியாவுக்குச் வந்ததில்லை, உலகின் ஏதோ ஓர் இடத்தில் நடந்த ஒன்று அவர்களின் வாழ்க்கையை எவ்வாறு தலைகீழாக மாற்றும் என்பதைப் புரிந்துகொள்ள இன்னும் அவர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். இவை அனைத்தும் தேர்தல் மோசடியைக் கண்டறிய உதவியதா, அது நேர்மறையானதா? என்று ஃபெர்ரெரோவிடம் கேட்டோம். "ஆமாம், அது நேர்மறையாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் எனக்கு உண்மையில் விவரங்கள் எதுவுமே தெரியாது," என அவர் கூறினார். இதுவரை தன்னுடைய நாட்டை விட்டு வெளியே எங்குமே செல்லாத நேரி, "இது எனது அன்றாட வாழ்விலிருந்து வெகு தொலைவில் உள்ளது. பிரேசில் தேர்தல்களைக் கூடப் பின்தொடராத நான் வேறொரு நாட்டின் தேர்தலைப் பற்றி நினைத்துக்கூட பார்த்ததில்லை" என்று சொல்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgmxevpxdexo
  6. 17 வயது கிரிக்கட் வீரரின் மரணம் ஏன்?? நிஜத்திலிருந்து..... சட்ட மருத்துவம் November 2, 2025 1 Minute அக்டோபர் 29, 2025 அன்று மெல்போர்னின் கிரிக்கட் பயிற்சியின் பொழுது 17 வயதான ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பென் ஆஸ்டினின் (Ben Austin) கழுத்து பகுதியில் பந்து தாக்கியதினால் மரணம் அடைந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. தன்னியக்க இயந்திரத்தின் மூலம் பந்து வீசப்பட்டு கொண்டிருக்க துடுப்பாட்ட வலையினுள் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளையில் இந்த அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது. விரைவில் நடைபெறவுள்ள T 20 போட்டிக்கான பயிற்சியின் பொழுதே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. பயிற்சி அமர்வின் போது குறித்த வீரர் ஹெல்மெட் அணிந்திருந்தாலும், அவர் கழுத்துப் பாதுகாப்பு (ஸ்டெம் கார்டு) அணிந்திருக்கவில்லை. இதேமாதிரியாக 2014 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸ் (Phillip Hughes) என்பவர் பந்தினால் தாக்கப்பட்டு பரிதாபகரமான முறையில் மரணத்தினை தழுவினார். குறித்த இருவரினதும் மரணத்துக்கான காரணம் மூளைப்பகுதியில் ஏற்பட்ட இரத்த கசிவே காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பதிவில் கழுத்து பகுதியில் ஏற்படும் காயங்களினால் எவ்வாறு மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டு இறப்பு ஏற்படுகின்றது குறித்து விளக்கப்படுகின்றது. இதற்கு முதற்படியாக மூளைக்கு இரத்தம் வழங்கும் நாடிகளின் அமைவிடம் பற்றி தெரிந்திருத்தல் அவசியம் ஆகின்றது. எமது மூளைக்கு தேவையான இரத்தத்தினை இரு நாடிகள் வழங்குகின்றன 1. Internal Carotid Arteries ( உட்கழுத்து நாடி ) 2. Vertebral Arteries (முதுகெலும்பு நாடி ) இவற்றின் உடலின் அமைவிடத்தினை கீழ் உள்ள படம் விளக்குகின்றது. படத்தில் முறையே நீலம் ( உட்கழுத்து நாடி ) மற்றும் பச்சை (முதுகெலும்பு நாடி ) நிறங்களினால் கோடிடப்பட்டுள்ளது இவற்றில் முதுகெலும்பு நாடியானது கழுத்தின் கீழ்ப்பகுதியில் இருந்து ஆரம்பித்து மேல் நோக்கி அதாவது மூளையினை நோக்கி செல்கின்றது இவ்வாறு செல்லும் பொழுது கழுத்து பகுதியில் கழுத்து முள்ளந்தண்டு என்புகளில் இருக்கும் துவாரங்களின் ஊடாகவே செல்லும். மேலும் கழுத்தின் மேற்பகுதியில் கழுத்து முள்ளந்தண்டு என்புகள் ஊடாக செல்லாது கழுத்து முள்ளந்தண்டு என்புகள் 1 மற்றும் 2 இற்கு இடையே வெளி நோக்கி வளைந்து (Loop) பின்னர் மண்டையோட்டின் துவாரத்தின் ஊடக மூளையினுள் செல்கின்றது. இவ்வாறு வளைந்து வெளிநோக்கி செல்வதன் காரணமாகவே அதிக அசைவுகள் நடைபெறும் கழுத்து – மண்டையோட்டு பகுதியில் இந்த கழுத்து முள்ளந்தண்டு நாடி காயப்படாமல் இருக்க முடிகின்றது. எனினும் பின்வரும் காரணங்களினால் கழுத்து முள்ளந்தண்டு நாடி காயப்படுகின்றது 1. கழுத்தின் முள்ளந்தண்டுகளின் கிடையான முனைகளின் ஊடாக செல்லும் பொழுது கழுத்து முள்ளந்தண்டு என்புகளில் ஏற்படும் என்பு முறிவுகள், மூட்டு விலகல்கள் என்பவற்றின் காரணமாக கழுத்து முள்ளந்தண்டு நாடி காயப்படுகின்றது 2. கழுத்தின் மேற்பகுதியில் கழுத்து முள்ளந்தண்டு என்புகள் ஊடாக செல்லாது கழுத்து முள்ளந்தண்டு என்புகள் 1 மற்றும் 2 இற்கு இடையே வெளி நோக்கி வளைந்து செல்லும் பொழுது நேரடியாக விசையின் தாக்கத்திற்கு உள்ளாகி கழுத்து முள்ளந்தண்டு நாடி காயப்படுகின்றது. மேலும் இப்பகுதியில் கழுத்து முள்ளந்தண்டு நாடியின் சுவரானது மெலிதாகவும் இலாஸ்டிக் தன்மை குறைந்தும் காணப்படுவதன் காரணமாக காயப்படும் தன்மை அதிகமாகின்றது மேற்குறித்த காரணங்களினால் பந்து மற்றும் கராத்தே அடி ( karate blow) போன்ற மொட்டையான விசைகள் கழுத்து பகுதியில் தாக்கும் பொழுது கழுத்து முள்ளந்தண்டு நாடி காயப்படுகின்றது (Dissection of vertebral artery) மேலுள்ள படத்தில் மேற்குறித்த காயங்கள் ஏற்படும் பகுதிகள் 1,2 குறிக்கப்பட்டுள்ளன மேலும் சில சந்தர்ப்பங்களில் கழுத்து பகுதியில் கட்டாயம் விசை ஒன்று தாக்க வேண்டிய தேவை இல்லாமலேயே தலை மற்றும் கழுத்து பகுதியில் ஏற்படும் வழமைக்கு மாறான எல்லை மீறிய அசைவு காரணமாகவும் கழுத்து முள்ளந்தண்டு நாடி காயப்படக்கூடிய சாத்தியம் உள்ளது. மேலும் இவ்வாறான மொட்டையான விசையின் தாக்கத்தினால் களுத்துபகுதியில் உள்ள உட்கழுத்து நாடியும் காயப்படக்கூடிய சாத்தியம் உள்ளது. மேலும் கழுத்து முள்ளந்தண்டு நாடி கிழிந்து காயப்படுவதன் காரணமாக அக்கிழிவுக்காயமானது விசை தாக்கிய இடத்தில் மட்டும் உண்டாகாது நீண்ட தூரத்திற்கு செல்லும் இதன் காரணமாக கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டாலும் தலையினுள் இரத்த கசிவு உண்டாகலாம் நன்றி https://tinyurl.com/4c3pmdem
  7. 08 Nov, 2025 | 04:46 PM (பு.கஜிந்தன்) கொழும்பு கொட்டாஞ்சேனை 16ஆம் ஒழுங்கையில் நேற்று வெள்ளிக்கிழமை (07) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பெண் உட்பட இருவர் யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் வைத்து மானிப்பாய் பொலிஸாரால் இன்று சனிக்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, கொட்டாஞ்சேனை 16ஆம் ஒழுங்கையில் நேற்று இரவு சொகுசு காரில் வந்த குழுவொன்று, நபரொருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி அதே காரில் மோதிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் 43 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் , துப்பாக்கி சூட்டினை நடாத்திய பெண் உட்பட இருவர் யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் வைத்து யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலின் கீழ், மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொட்டாஞ்சேனையை சேர்ந்த ஆண் ஒருவரும், பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மானிப்பாய் பொலிஸ் நிலைய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொட்டாஞ்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/229855
  8. செய்தியாளரின் கேள்வியால் நடிகை கௌரி கிஷன் கோபம்: அதர்ஸ் பட ஊடக சந்திப்பில் என்ன நடந்தது? படக்குறிப்பு, நடிகை கௌரி கிஷன் 7 நவம்பர் 2025 புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் ஒரு திரைப்படம் குறித்த செய்தியாளர் சந்திப்பின்போது, அந்தப் படத்தின் கதாநாயகியான கௌரி கிஷன் தனது எடை குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளருக்கு கோபமாக பதிலளித்துள்ளார். இதைத் தொடர்ந்து, "அந்த செய்தியாளர் சந்திப்பில் அவருக்கு ஆதரவாக வெளிப்படையாக யாரும் குரல் கொடுக்காத போதும், அவர் துணிச்சலாக அந்த நிலைமையைக் கையாண்டார்" என்று சமூக ஊடகங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். நடிகை கௌரி கிஷன், புதுமுக நடிகர் ஆதித்யா மாதவன் நடிப்பில் அபின் ஹரிஹரன் இயக்கத்தில் 'அதர்ஸ்' (others) என்ற திரைப்படம் இன்று (நவம்பர் 7) வெளியானது. இந்தத் திரைப்படம் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அந்தச் சந்திப்பின்போது பத்திரிகையாளர் கார்த்திக்கும் நடிகை கௌரி கிஷனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சந்திப்புக்கு முன்பாக இந்த திரைப்படம் குறித்த மற்றொரு பத்திரிகையாளர் சந்திப்பின் போது, "கதாநாயகியின் எடை எவ்வளவு?" என்று கதாநாயகனிடம் சம்பந்தப்பட்ட பத்திரிகையாளர் கேட்டுள்ளார். அதே நபர், நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் இயக்குநரிடம் அதேபோன்ற மற்றொரு கேள்வியை எழுப்பினார். அப்போது உடனிருந்த நடிகை கௌரி கிஷன், "நீங்கள் தானே எனது எடை என்ன என்று கேட்டது?" என்றார். அதற்கு முதல் வரிசையில் இருந்த அந்த பத்திரிகையாளர், "ஆமாம். நான் கேட்டதில் என்ன தவறு" என்று பதிலளித்தார். "என்ன தவறா? நீங்கள் என் எடையை கேட்டுள்ளீர்கள், உங்கள் எடை என்ன? கூறுகிறீர்களா?" என்று கௌரி கிஷன் கேள்வி எழுப்பினார் இதற்கு மீண்டும் பதிலளித்த அந்த பத்திரிக்கையாளர் தான் கேட்ட கேள்வியில் தவறு இல்லை என்று கூறி குரலை உயர்த்திக் கோபமாகப் பேசினார். படக்குறிப்பு, பத்திரிக்கையாளர் கார்த்தி 'என்ன சம்பந்தம் உள்ளது?' அப்போது கௌரி கிஷன், "கதாநாயகியின் எடை என்ன என்று கேட்பது மரியாதைக் குறைவான கேள்வி" என்றார். "இந்தக் கேள்விக்கும் இந்த படத்திற்கும் என்ன சம்பந்தம் உள்ளது? எனது கதாபாத்திரத்தைப் பற்றியோ, அதற்காக நான் என்ன செய்தேன் என்பதைப் பற்றியோ ஒரு கேள்வியும் கேட்கப்படவில்லை. எனது எடை என்னவென்று தெரிந்துகொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்? இதே கேள்வியை ஒரு கதாநாயகனிடம் கேட்பீர்களா?" என்று காட்டமாகப் பேசினார் கௌரி கிஷன். "ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு உடல்வாகு உள்ளது. நான் எனது திறமை பேசப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். நான் இதுவரை கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களிலேயே நடித்து வந்துள்ளேன்" என்று பதிலளித்தார். அந்தச் சந்திப்பில் இருந்த மற்றொருவர் அந்த கேள்வி சாதாரணமாகக் கேட்கப்பட்டது என்ற தொனியில் பேச, கௌரி கிஷன், "எனக்கு அதில் எந்த நகைச்சுவையும் தெரியவில்லை, உருவ கேலியை (body shaming) இயல்பான செயலாக மாற்றாதீர்கள்" என்று கண்டித்தார். மேலும் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அந்த அரங்கில் தான் ஒருவர் மட்டுமே பெண் என்றும், தன்னை அவர் குறிவைத்துப் பேசுகிறார் என்றும் கௌரி கிஷன் குற்றம் சாட்டினார். கௌரி கிஷன் மற்றும் பத்திரிகையாளருக்கு இடையிலான வாக்குவாதம் குறித்த வீடியோ இணையத்தில் பரவத் தொடங்கியதும், அது குறித்த கருத்துகளும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. சினிமாவில் பெண்கள் எப்படி சித்தரிக்கப்படுகிறார்கள் என்பது குறித்தும், சினிமா துறையில் பெண்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பது குறித்தும் விவாதங்கள் ஆன்லைனில் நடைபெற்றன. "கௌரி சிறந்த செயலைச் செய்துள்ளார். மரியாதையற்ற, தேவையற்ற கேள்வியைச் சுட்டிக்காட்டியதும், உடனே கத்தலும் கூச்சலும் எழும். அவரைப் போன்ற இளம் வயதிலான ஒருவர் தாம் சொல்ல வந்த கருத்தில் நிலையாக இருந்து பேசினார் என்பது பெருமையாக உள்ளது. எந்த ஆண் நடிகரிடமும் அவரது எடை என்ன என்ற கேள்வி கேட்கப்படுவதில்லை" என்று பாடகி சின்மயி பதிவிட்டுள்ளார். படக்குறிப்பு, நடிகர் ஆதித்யா மாதவன், இயக்குநர் அபின் ஹரிஹரன், நடிகை கௌரி கிஷன் மன்னிப்பு கேட்ட கதாநாயகன் பத்திரிகையாளர் சந்திப்பின்போது அதே மேடையில் அருகில் அமர்ந்திருந்த படத்தின் கதாநாயகனும், இயக்குநரும் அமைதியாக இருந்தது குறித்தும் ஆன்லைனில் விமர்சிக்கப்பட்டது. படத்தின் கதாநாயகன் ஆதித்யா மாதவன் இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், தனது எக்ஸ் பக்கத்தில், "நான் அமைதியாக இருந்ததால், யாருடைய உடலையும் கேலி செய்வதை நான் ஆதரிக்கிறேன் என்று அர்த்தமில்லை. எதிர்பாராமல் நடந்ததால் நான் உறைந்துவிட்டேன் – இது எனது முதல் படம். நான் இன்னும் விரைவாகத் தலையிட்டிருக்கலாம் என்று கருதுகிறேன். அவர் அதை எதிர்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. யாருமே எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. யாராக இருந்தாலும், மரியாதை கொடுக்கப்பட வேண்டும். நான் மீண்டும் மன்னிப்பு கோருகிறேன்" என்று பதிவிட்டிருந்தார். கௌரி கிஷன் தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருபவர். தமிழில் '96' திரைப்படத்தில் இளம் வயது ஜானுவின் (த்ரிஷா) கதாபாத்திரத்தில் நடித்துப் பிரபலமானார். பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் அந்த பத்திரிக்கையாளர் & யூட்யூபரின் செயல்பாட்டைக் கண்டித்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "உடல் எடையை கேலிக்கு உள்ளாக்கும் நோக்கத்தோடு கேள்வி கேட்பது அநாகரிகமானது, அருவருக்கத்தக்கது. கௌரி கிஷன் தனது எதிர்ப்பைத் தெரிவித்த பிறகும் கேள்வியை நியாயப்படுத்தி பெண் திரைக்கலைஞரை நோக்கி கடினமான குரலில் எதிர் விவாதம் நடத்திய யூட்யூபரின் செயல்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்." என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் கூறியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c70jnp8718lo
  9. 2026 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதம் இன்று முதல் Nov 8, 2025 - 07:26 AM 2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (08) முதல் ஆரம்பமாகிறது. வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகப் பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு அல்லது குழுநிலை விவாதம் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் 17 நாட்களுக்கு இடம்பெற்றதன் பின்னர், இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறும். வரவு செலவுத் திட்ட காலப்பகுதியில், அரசாங்க விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்து, ஒவ்வொரு நாளும் விவாதம் நடைபெறும் என்றும் பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் மேலும் தெரிவித்தது. 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (07) மாலை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். ஜனாதிபதி நேற்று 4 மணித்தியாலங்களுக்கு மேல் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmhpmv6oa01gyqplph0135vca
  10. 10 நோயாளிகளை ஊசி போட்டு கொலை செய்த தாதி - ஜேர்மனியில் சம்பவம்! 08 Nov, 2025 | 02:08 PM ஜேர்மனியின் வூர்ஸ்பர்க் (Würzburg) நகரில் உள்ள வைத்தியசாலையில் இரவு நேரக் கடமையின் மன அழுத்தத்தைக் குறைக்கத் தனது பராமரிப்பில் இருந்த 10 நோயாளிகளுக்குத் தூக்க மாத்திரைகளை ஊசி மூலம் செலுத்தி கொலை செய்த ஆண் தாதிக்கு ஜேர்மனி நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் வூர்ஸ்பர்க் நகரில் உள்ள வைத்தியசாலையில் கடமைபுரியும் குறித்த தாதி, தனது பராமரிப்பில் இருந்த வயதான மற்றும் தீவிர நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் இவ்வாறு கொலை செய்துள்ளார். இரவுப் பணியின் போது ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கவே அவர் இந்தச் செயலைச் செய்ததாகக் கூறப்படுகிறது. நோயாளிகளுக்குத் தேவையற்ற அதிகப்படியான தூக்க மாத்திரைகளை ஊசி மூலம் செலுத்தி அவர் இந்தக் கொடூரச் செயலைச் செய்துள்ளார். டிசம்பர் 2023 முதல் மே 2024 வரை இந்த இறப்புகள் பதிவாகி உள்ளன. விசாரணையில், அவர் 10 நோயாளிகளைக் கொலை செய்ததுடன், மேலும் 27 நோயாளிகளை அதே முறையில் கொல்ல முயன்றார் என்றும் தெரியவந்தது. குற்றம் சாட்டப்பட்ட ஆண் தாதியின் பெயர் வெளியிடப்படாத நிலையில், வழக்கு விசாரணையின் இறுதியில், குற்றத்தை உறுதிசெய்த நீதிமன்றம், அந்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. இருப்பினும், அவர் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜேர்மனியில் தாதியர்களால் அரங்கேற்றப்படும் தொடர் கொலைச் சம்பவங்கள் இது முதல் முறையல்ல. வடக்கு ஜேர்மனியில் 1999 முதல் 2005 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், நீல்ஸ் ஹோஜெல் (Niels Högel) என்ற ஆண் தாதி இரண்டு வைத்தியசாலைகளில் வேலை செய்தபோது, 85 நோயாளிகளைக் கொலை செய்தார் என்பது 2019 ஆம் ஆண்டில் வெளிச்சத்துக்கு வந்தது. இவர் ஜேர்மனியின் நவீன வரலாற்றில் மிகவும் கொடூரமான தொடர் கொலைகாரராகக் கருதப்படுகிறார். தற்போது அதே பாணியில், இரவுப்பணி அழுத்தத்தைக் காரணம் காட்டி மற்றொரு தாதியர் நிகழ்த்திய கொடூரக் கொலைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளமை, ஜேர்மன் சுகாதாரத் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/229845
  11. நியூயார்க் மேயராக மம்தானி தேர்வு பற்றி அரபு மற்றும் இஸ்ரேலிய ஊடகங்கள் கூறுவது என்ன? பட மூலாதாரம், EPA/Shutterstock படக்குறிப்பு, ஸோஹ்ரான் மம்தானி தனது தாயார் மீரா நாயருடன். 8 நவம்பர் 2025, 09:17 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நியூயார்க் நகர மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, முஸ்லிமான ஸோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றுள்ளார். மம்தானியின் இந்த வெற்றி அரபு மற்றும் இஸ்ரேலிய ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஸோஹ்ரான் மம்தானியின் வெற்றியை 'வரலாற்றுச் சிறப்புமிக்கது மற்றும் அசாதாரணமானது' என்று அரபு ஊடகங்கள் கூறுகின்றன. நியூயார்க் நகரத்தின் 'முதல் முஸ்லிம் மேயர்' என்று அவரது வெற்றி அரபு ஊடகங்களில் குறிப்பிடப்படுகிறது. பல சேனல்கள் மம்தானி ஆதரவாளர்களின் கொண்டாட்டங்களை மையப்படுத்தி, அதை ஒரு சிறப்பான வெற்றி என்று வர்ணிக்கின்றன. "இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த, அதேசமயம் கம்யூனிஸ்டாக அறியப்படும் மம்தானி, நியூயார்க்கில் சரித்திரம் படைத்துள்ளார்" என்று கத்தாரின் அல்-ஜசீரா வலைத்தளம் தெரிவித்தது. அல்-ஜசீரா சேனல், மம்தானியின் வெற்றியை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடும் காட்சிகளை ஒளிபரப்பி, "இது ஒரு அசாதாரணமான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க தேர்தல்" என்று விவரித்தது. அந்த சேனலின் செய்தியாளர், "இந்தத் தேர்தலில் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களித்துள்ளனர். இது நியூயார்க் மேயர் தேர்தலில் கடந்த பல்லாண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவிலான வாக்குப்பதிவு ஆகும்." என்று கூறினார். அல்-அரேபியா சேனல் வாக்குப்பதிவை நேரடியாக ஒளிபரப்பியது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஸோஹ்ரான் மம்தானி அல்-அரேபியா சேனலின் கூற்றுப்படி, சுமார் 60 சதவீத வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களித்துள்ளனர், இது நியூயார்க் நகரத்தைப் பொருத்தவரை குறிப்பிடத்தக்க எண்ணிக்கையாகும். அந்த சேனல், "மம்தானி இளைஞர்களை அதிகளவில் ஈர்த்துள்ளார். அவர்கள் பெரும் எண்ணிக்கையில் வாக்களித்துள்ளனர்" என்று கூறியது. லண்டனைச் சேர்ந்த அல்-குட்ஸ் அல்-அரபி வலைத்தளம், மம்தானியின் வெற்றி "நியூயார்க் நகரத்தில், முற்போக்கு கொள்கைகளுக்கான புதிய அத்தியாயத்திற்கு வழிவகுக்கும்" என்று தெரிவித்தது. டிரம்புடனான முரண்பாடு பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஸோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றால், நியூயார்க் நகரத்திற்கு நிதியளிப்பதில் சிரமம் ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். சௌதி அரேபியாவின், அல்-அரேபியா தொலைக்காட்சி அதிகாலை 4 மணி முதல் தனது ஒளிபரப்பில் இந்தச் செய்தியை பிரதானமாக காட்டத் தொடங்கியது. மம்தானிக்கும் டிரம்பிற்கும் இடையிலான 'வார்த்தைப் போர்' பற்றியும் அது குறிப்பிட்டது. அல்-அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஸ்கை நியூஸ் அரேபியா வலைத்தளங்கள் மம்தானியை "டிரம்பின் தீவிர எதிர்ப்பாளர்" என்று விவரித்தன. "நாட்டிற்கு துரோகம் இழைத்த டொனால்ட் டிரம்பை எப்படி தோற்கடிப்பது என்பதற்கு யாராவது உதாரணம் காட்ட வேண்டுமென்றால், நியூயார்க் நகரத்தை தான் காட்ட வேண்டும்" என்று மம்தானி தனது உரையில் கூறியதாக, ஸ்கை நியூஸ் அரேபியா மேற்கோள் காட்டியது. மம்தானி தனது உரையில் டிரம்பிற்கு 'சவால் விடுத்தார்' என்றும், அவரைத் 'விமர்சித்துப் பேசினார்' என்றும் அல்-ஜசீரா தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் ஆர்டி அரபிக் மற்றும் இரானின் அல்-ஆலம் தொலைக்காட்சியும் மம்தானி தனது உரையில் டிரம்ப் மற்றும் இஸ்ரேலை விமர்சித்ததை எடுத்துக்காட்டின. ஆர்டி அரபிக் மம்தானியை, "நெதன்யாகுவைக் கைது செய்யக் கோரியவர் என்றும், இஸ்ரேல் மீதான டிரம்பின் கொள்கைகளை விமர்சித்தவர்" என்றும் விவரித்தது. "சமீபத்திய அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய அரசியல் அதிர்ச்சி ஒன்றை மம்தானி தந்துள்ளார்" என்று அமெரிக்க செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் கூறியதை மேற்கோள் காட்டி எகிப்தின் அல்-காட் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் டிரம்ப் வெளியிட்ட அறிக்கையையும் சாண்டர்ஸ் குறிப்பிட்டார். அதில், "குடியரசுக் கட்சியினரின் தோல்விக்கு இரண்டு காரணங்கள் இருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார். அதில் முதலாவதாக, அவர்களின் பெயர்கள் வாக்குச்சீட்டில் இல்லை, இரண்டாவதாக, அரசாங்க முடக்கம் (Shutdown)." 'அமெரிக்காவில் சியோனிஸ்டுகளின் தோல்வி' பட மூலாதாரம், Getty Images அரபு நாடுகளில் உள்ள சமூக ஊடக பயனர்கள் மம்தானியின் வெற்றியை அவரது இஸ்ரேல் எதிர்ப்பு மற்றும் பாலத்தீன ஆதரவு நிலைப்பாட்டின் வெற்றியாகப் பார்க்கின்றனர். 'ப்ரோ முஸ்லிம் பிரதர்ஹுட்' ஆதரவு பத்திரிகையாளர் ஹம்சா சவ்பா தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "மம்தானியின் வெற்றி வெள்ளை மாளிகையில் 8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை போன்ற ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது அமெரிக்க அரசியலின் பழைய, வேரூன்றிய விதிகளை அசைத்துப் பார்க்கும்." என்று பதிவிட்டுள்ளார். அல்-வசத் கட்சித் தலைவர் அபு அலீலா மடி, மம்தானியின் வெற்றி "வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது" என்றும், "அவர் இஸ்ரேலிய லாபிக்கு சவால் விடுகிறார்" என்றும் கூறினார். பாலத்தீன-அமெரிக்க எழுத்தாளர் சமர் ஜரா, "மம்தானி உலகின் மிகவும் பிரபலமான நகரமான நியூயார்க்கில் வெற்றி பெற்றுள்ளார். சியோனிஸ்டுகள் அவருக்கு எதிராக இருந்த போதிலும் இந்த வெற்றி கிடைத்துள்ளது" என்று கூறினார். மம்தானியின் வெற்றி 'இஸ்ரேலிய லாபிக்கு ஒரு மாபெரும் தோல்வி' என்று அல்-ஜசீரா பத்திரிகையாளர் அகமது மன்சூர் கூறியுள்ளார். இஸ்ரேலிய ஊடகங்கள் கூறுவது என்ன? பட மூலாதாரம், CHANNEL 12 படக்குறிப்பு, ஸோஹ்ரான் மம்தானியின் 'இஸ்ரேல் எதிர்ப்பு' நிலைப்பாடு இஸ்ரேலிய ஊடகங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டது. மறுபுறம், இஸ்ரேலிய ஊடகங்கள் ஸோஹ்ரான் மம்தானியின் முஸ்லிம் அடையாளத்தையும், அவரது 'இஸ்ரேலிய எதிர்ப்புக் கொள்கைகளையும்' குறிப்பிட்டன. ஒரு வலதுசாரி சேனல் அவரை 'பாலத்தீன ஆதரவாளர்' என்று குறிப்பிட்டது. 'இஸ்ரேல் ஹயோம்' செய்தித்தாள் மம்தானியை மிக முக்கியமான சியோனிச எதிர்ப்பாளர்களில் ஒருவர் என்று வர்ணித்தது. பெரும்பாலான இஸ்ரேலிய செய்தி சேனல்கள் மம்தானியின் முஸ்லிம் அடையாளத்தை குறிப்பிட்டன. 'பாலத்தீன ஆதரவாளர் மம்தானி தனது வெற்றி உரையை அரபிக் மொழியில் தொடங்குகிறார்' என்று 'சேனல் 14'-இன் தலைப்புச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. "கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்காவில் 'இஸ்ரேல் மீதான வெறுப்பு' அதிகரித்துள்ளதாகவும், அதன் விளைவாகவே மம்தானி வெற்றி பெற்றதாகவும்" அந்த சேனல் தனது நேரடி ஒளிபரப்பில் கூறியது. நியூயார்க்கின் யூத வாக்காளர்களில் 16 முதல் 30 சதவீதம் பேர் மம்தானிக்கு வாக்களித்ததாக 'சேனல் 12' செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார். இது அந்த சேனலின் ஸ்டுடியோவில் இருந்த குழு உறுப்பினர்களை ஆச்சரியப்படுத்தியது. ஒரு தொகுப்பாளர், "யூதர்கள் இப்போது நியூயார்க்கை விட்டு வெளியேறும் நிலை வருமா?" என்று கேட்டார். 'சேனல் 12' தனது காலை செய்தி ஒளிபரப்பில், ட்ரூத் சோஷியல் தளத்தில் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட பதிவை குறிப்பிட்டுக் காட்டியது. அதில், "ஸோஹ்ரான் மம்தானிக்கு வாக்களிக்கும் எந்தவொரு யூதரும் யூத எதிர்ப்பாளராகவும் முட்டாளாகவும் இருப்பார்" என்று எழுதப்பட்டிருந்தது. 'பாலத்தீன ஆதரவு மற்றும் சியோனிச எதிர்ப்பு' பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நியூயார்க் நகர மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ஸோஹ்ரான் மம்தானி தனது மனைவி ரமா துவாஜியுடன். மம்தானியின் வெற்றியைத் தொடர்ந்து, நியூயார்க்கில் உள்ள அவரது பிரசார தலைமையகத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் கூடி, 'சுதந்திர பாலத்தீனம்' என்று கோஷமிட்டனர் என்று பாதுகாப்பு செய்தித்தாளான மாரிவ் செய்தி வெளியிட்டுள்ளது. மம்தானி இஸ்ரேலை வெளிப்படையாக எதிர்க்கிறார் என்றும், 'இஸ்ரேலை ஒரு யூத நாடாக தான் கருதவில்லை என்றும், பாலத்தீனர்களின் உரிமையை ஆதரிப்பதாகவும்' அவர் முன்னர் கூறியதாக மாரிவ் தெரிவித்துள்ளது. 'இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நியூயார்க்கிற்கு வரும்போது அவரைக் கைது செய்வேன்' என்று அவர் கூறியிருந்தார். மாரிவ் செய்தித்தாள் மம்தானியின் 2023-ஆம் ஆண்டு கருத்தை மேற்கோள் காட்டி, அது ஏறக்குறைய யூத-விரோதத்தை ஒட்டியே இருந்தது என்று கூறியது. 2023இல் மம்தானி, "நியூயார்க் காவல்துறை மக்களை வன்முறை மூலம் அடக்குகிறது, அது இஸ்ரேலிய ராணுவத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது" என்று கூறியிருந்தார். பல இஸ்ரேலிய ஊடகங்களும் மம்தானியின் "இன்டிஃபதாவை (Intifada- அரபு மொழியில் 'எழுச்சி') உலகமயமாக்க வேண்டும்" என்ற முழக்கத்தைக் குறிப்பிட்டன. பாலத்தீன ஆதரவாளர்கள் இதை பாலத்தீனத்துடன் உலகம் துணை நிற்பதற்கான அழைப்பு என்று விவரிக்கின்றனர். ஆனால் பலர் அதை யூதர்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டும் ஒரு முழக்கமாகக் கருதுகின்றனர். "இந்த மனிதர் தனது முழு தேர்தல் பிரசாரத்தையும் இஸ்ரேல் மீதான கடுமையான விமர்சனத்திலும், 'இன்டிஃபதாவை உலகமயமாக்க வேண்டும்' போன்ற முழக்கங்களை பரவலாக்குவதிலும் கவனம் செலுத்தினார்" என்று Ynet வலைத்தளம் குறிப்பிட்டுள்ளது. மம்தானியின் வெற்றி 'நியூயார்க்கின் அரசியல் மற்றும் பொருளாதார அமைதியின்மையைக் குறிக்கிறது' என்றும் 'இஸ்ரேலுக்கு ஒரு எச்சரிக்கை மணி' என்றும் Ynet விவரித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c04g3q150kdo
  12. இங்க தொட்டு ஆடுவது நினைத்தே பார்க்கவியலாது! டி.ஆர் போல தொடமால் ஆடலாம் என்றால் ஆண் பெண் சேர்ந்து ஆடவிடாங்கள்!! ஒரே வழி பொடியள் பெண் வேடமிடவேண்டியது தான்!!!
  13. 07 Nov, 2025 | 02:23 PM (செ.சுபதர்ஷனி) போதைப்பொருளுக்கு எதிராக தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ள ஜனாதிபதி முதலில் தனது கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களை போதைப்பொருள் வர்த்தகத்தில் இருந்து விலகுமாறு அறிவுறுத்துவது அவசியம். அண்மையில் போதைப்பொருள் உள்ளதா என மாணவர்களின் பைகளை சோதனையிட்டனர். அதற்கு பதிலாக தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களின் பைகளை சோதனை செய்திருக்கலாம் என மொட்டுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் வெள்ளிக்கிழமை (07) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜனாதிபதி முதற்கொண்டு தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் உள்ள அனைவரும் பேச்சு திறமை உடையவர்கள் என்பது எமக்கு நன்றாக தெரியும். பேச்சு திறமையை போல அவர்களின் செயலும் இருக்கும் என கடந்த வரவு செலவு திட்டத்தின் போதே எதிர்பார்தோம். எனினும் அவர்களின் செயல் திறனை இதுவரை காணவில்லை. இம்முறை வரவு -செலவு திட்ட உரையின் போது எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ஜனாதிபதி உரையாற்றலாம். வரவு – செலவு திட்ட உரையினூடாக வழங்கப்படும் வாக்குறுதிகள், பொதுமக்களுக்கு நன்மையை ஏற்படுத்தும் என்பதில் எமக்கு நம்பிக்கையில்லை. திருடர்கள் என எம்மீது குற்றம் சுமத்திய தேசிய மக்கள் சக்தி தற்போது வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதி செய்கிறது. வெங்காய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீர் குலைத்து வெளிநாட்டில் இருந்து அவற்றை கொள்வனவு செய்வதுடன் உருளைக்கிழங்கு பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளை அனாதையாக்கி அவற்றையும் இறக்குமதி செய்கின்றனர். போதாத குறைக்கு மீன்பிடி நடவடிக்கையையும் பாதிக்கும்படி மீன்களையும் இறக்குமதி செய்கின்றனர். புலனாய்வு தகவலின் படி போதைப்பொருள் அடங்கிய 323 கொள்கலன்களை சுங்கத்திலிருந்து வெளியே கொண்டு செல்லவும் அனுமதியளித்துள்ளார். இந்த அரசாங்கம் திருடர்கள் என பலி சுமத்தி விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைந்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் பின்னணியிலும் இவ்வாறே தெரிவித்தனர். ராஜபக்வின் ஆதரவாளர்கள், நாமலின் ஆதரவாளர்கள் என கூறினார்கள் இறுதியில் கைது செய்யப்பட்டவர்கள் திசைக்காட்டியை சேர்ந்தவர்களே. எனினும் இந்த போதைப்பொருள் வர்த்தகத்தில் அரச பாடசாலை அதிபர் ஒருவருக்கு தொடர்புள்ளமையே பெரும் பிரச்சினையாக உள்ளது. நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனை குறிப்பிடத்தக்களவில் அதிகரித்துள்ளது. போதைக்கு அடிமையான நபர்களுக்கு புனர்வாழ்வளித்தல் மற்றும் பாடசாலை மாணவர்களின் சிந்தனையிலிருந்து இவ்வாறான எண்ணங்களை அகற்றுவதற்கான எந்தவொரு திட்டத்தையும் அரசாங்கம் கொண்டு வரவில்லை. அதிபர், ஆசிரியர்கள் ஊடக பாடசாலையினுள் போதைப்பொருளை கொண்டு செல்லும் வர்த்தகத்தை மறைக்கும் வகையில் அரசாங்கம் செயல்படுகிறது. ஆகையால் அரசாங்கம் இந்த நகைச்சுவையை நிறுத்திவிட்டு உடனடியாக மாணவர்களின் எதிர்காலத்தையும் பெற்றோர்களின் நலனையும் கருதி செயற்படுமாறு வலியுறுத்துகிறேன். போதைப்பொருளுக்கு எதிராக தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ள ஜனாதிபதி முதலில் தனது கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களை போதைப்பொருள் வர்த்தகத்தில் இருந்து விலகுமாறு அறிவுறுத்துவது அவசியம். அண்மையில் போதைப்பொருள் உள்ளதா என மாணவர்களின் பைகளை சோதனையிட்டனர். அதற்கு பதிலாக தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களின் பைகளை சோதனை செய்திருக்கலாம். குற்றவாளிகளை பாதுகாப்பதற்கு ஒருபோதும் முயற்ச்சிக்க வேண்டாம் என்றார். https://www.virakesari.lk/article/229723
  14. பட மூலாதாரம், Yousuf Sarfaraz படக்குறிப்பு, மருத்துவமனையின் அலட்சியத்தால், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று உள்ள ரத்தம் செலுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கட்டுரை தகவல் முகமது சர்தாஜ் ஆலம் பிபிசி இந்திக்காக 7 நவம்பர் 2025 ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள அரசு சதார் மருத்துவமனையில், தலசீமியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட ரத்தம் செலுத்தப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பிபிசியிடம் பேசிய மேற்கு சிங்பூம் மாவட்ட மாஜிஸ்திரேட் சந்தன் குமார், எட்டு வயதுக்குட்பட்ட தலசீமியாவால் பாதிக்கப்பட்ட ஐந்து குழந்தைகள் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார். இந்த வழக்கில், சாய்பாசா சிவில் சர்ஜன், எச்.ஐ.வி பிரிவுக்குப் பொறுப்பான மருத்துவர் மற்றும் சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப நிபுணர் ஆகியோர் உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் உதவித் தொகையை முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார். இந்நிலையில், ரத்த மாற்றத்தின் மூலம் எச்.ஐ.வி தொற்று ஏற்பட்ட மூன்று தலசீமியா பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலையை அறிய பிபிசி முயன்றது. முதல் குழந்தை மஞ்சாரி தொகுதியைச் சேர்ந்த ஏழு வயது ஷஷாங்கை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பற்றியது. எச்.ஐ.வி தொற்றுள்ள இரத்தம் செலுத்தப்பட்டதால் அவருக்கும் எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் வெளியாகியவுடன், அக்டோபர் 30 அன்று ஷஷாங்க் தங்கியிருந்த சாய்பாசாவில் உள்ள வீட்டை, அந்த வீட்டின் உரிமையாளர் காலி செய்ய வைத்துள்ளார். அங்கு தங்கி, தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ஷஷாங்க், ஒரு ஆங்கில வழிப் பள்ளியிலும் படித்து வந்தார். Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது பெண்ணின் கண் இமைகளில் 250 பேன்கள் வந்தது எப்படி? குழந்தையின் முதல் மலம் அதன் எதிர்கால ஆரோக்கியம் பற்றி கூறுவது என்ன? 'நினைவோ ஒரு பறவை' : கமல்ஹாசன் குரலில் ஒலித்த 10 பாடல்கள் ஜவ்வாது மலையில் தங்க புதையல் - கட்டுமானத்திற்காக தோண்டிய போது கிடைத்தது End of அதிகம் படிக்கப்பட்டது வாடகை வீட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது பட மூலாதாரம், Yousuf Sarfaraz படக்குறிப்பு, தொற்று பற்றி அறிந்ததும் வீட்டு உரிமையாளர் வீட்டை காலி செய்துவிட்டதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். "உங்கள் மகனுக்கு எச்.ஐ.வி தொற்று உள்ளது, அதனால் வீட்டை காலி செய்யுங்கள்" என்று வீட்டு உரிமையாளர் கூறியதாக, ஷஷாங்கின் தந்தை தஷ்ரத் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூறுகிறார். "நான் பலமுறை விளக்கி, அவர்களுக்கு புரிய வைக்க முயற்சி செய்தேன். ஆனால் அவர்கள் பிடிவாதமாக வீட்டை காலி செய்ய சொன்னார்கள். இறுதியில், சுமார் 27 கிலோமீட்டர் தூரத்தில் மஞ்சாரி தொகுதியில் உள்ள எனது கிராமத்துக்கு திரும்ப வேண்டியிருந்தது" என்று அவர் கூறுகிறார். தலசீமியா நோயின் காரணமாக, அவரது மகனுக்கு மாதத்தில் இரண்டு முறை ரத்தம் மாற்றம் செய்ய வேண்டியிருந்தது. அதற்காக அவர்கள் மாதத்திற்கு இரண்டு முறை சதார் மருத்துவமனைக்கு வர வேண்டும். "கிராமத்துக்கு வந்து விட்டதால், என் மகனுக்கு நல்ல சிகிச்சை கிடைப்பது கடினமாகிவிட்டது. அவன் பள்ளிக்கும் செல்ல முடியவில்லை" என்று தஷ்ரத் கூறுகிறார். நெல் சாகுபடியை மட்டுமே நம்பி வாழும் விவசாயியான தஷ்ரத் குடும்பத்தின் பொருளாதார சூழல் மோசமாக உள்ளது. "இந்த சூழ்நிலையில், எனக்கு சவால்கள் மேலும் அதிகரித்துள்ளன.ஏற்கனவே தலசீமியா இருந்தது, இப்போது என் மகன் எச்.ஐ.வி-யுடனும் போராட வேண்டியுள்ளது" என அவர் வருந்துகிறார். 'தயங்கிய சுகாதார ஊழியர்கள்' ஷஷாங்கைப் போலவே, ஹட்கம்ஹாரியா தொகுதியைச் சேர்ந்த தலசீமியா நோயாளியான ஏழு வயதான திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டுள்ளார். திவ்யாவின் மூத்த சகோதரனுக்கும் சகோதரிக்கும் தொற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் இருக்கக்கூடாது என்பதற்காக, அவர்களின் தாய் சுனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அவர்களை தனது தாய் வீட்டிற்கு அனுப்பியுள்ளார். திவ்யாவுக்கு தலசீமியா இருப்பது கண்டறியப்பட்டதிலிருந்து, மாதத்திற்கு இரண்டு முறை சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சதார் மருத்துவமனைக்குச் சென்று ரத்தமாற்றம் செய்து வருவதாக சுனிதா கூறுகிறார். "ஒவ்வொரு மாதமும் கார் வாடகையை ஏற்பாடு செய்வதுதான் மிகப்பெரிய சவால்" என்கிறார் சுனிதா. இது குறித்து மாவட்ட மாஜிஸ்திரேட் சந்தன் குமாரிடம் கேட்டபோது, "குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் தொலைபேசி எண்ணை வழங்கியுள்ளோம். அவர்கள் வர வேண்டிய நேரங்களில், மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு வாகனம் ஏற்பாடு செய்யும்" என்றார். செப்டம்பரில் சதார் மருத்துவமனையில் திவ்யாவுக்கு ரத்தமாற்றம் செய்யும்போது, மருத்துவர்கள் கையுறைகள் அணிந்து அவரது பெண்ணைத் தொட்டதாகவும், ஆனால் செவிலியர்கள் அவரைத் தொட தயங்கினார்கள் எனவும் சுனிதா குற்றம் சாட்டுகிறார். "அவர்களின் நடத்தையைப் பார்த்ததும் நான் பயந்து விட்டேன். என் மகளுக்கு ஏதோ நடந்திருக்கலாம் என்று அப்போது தான் சந்தேகம் வந்தது" என்று சுனிதா அழுது கொண்டே கூறுகிறார். அவர் காரணம் கேட்டபோது தெளிவான பதில் தராமல், 'அறிக்கை வந்த பிறகுதான் சொல்ல முடியும்' என்று அவர்கள் கூறியதாகவும் அவர் தெரிவிக்கிறார். "அக்டோபர் 4 அன்று ஒரு சுகாதார ஊழியர், 'தவறான இரத்தம் கொடுக்கப்பட்டதால் உங்கள் மகள் எச்.ஐ.வி. பாதிப்புக்கு ஆளாகியுள்ளார் ' என்று சொன்னார்," என சுனிதா கூறுகிறார். எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டிருப்பது, திவ்யாவின் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கும்? "ஆரம்பத்தில் அதன் தீவிரத்தை நான் முழுமையாக உணரவில்லை, ஆனால் படிப்படியாக எய்ட்ஸ் எவ்வளவு தீவிரமானது என்பதை நான் புரிந்துகொள்கிறேன்" என்று சுனிதா கூறுகிறார். அம்மாவின் ஒரே நம்பிக்கை பட மூலாதாரம், Yousuf Sarfaraz படக்குறிப்பு, கணவரின் மரணத்திற்குப் பிறகு, தனி ஆளாய் தனது குழந்தையை வளர்க்கும் தாயின் சவால்கள் அதிகரித்துள்ளன. ஜிக்பானி தொகுதியில் உள்ள ஒரு கிராமத்தில், குளக்கரையில் விளையாடிக் கொண்டிருக்கும் ஆறரை வயது ஷ்ரேயா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ஒரு சிறிய வீட்டில் தன் தாய் ஷ்ரத்தாவுடன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வசிக்கிறார். கணவர் இறந்த பிறகு, ஷ்ரத்தாவின் வாழ்க்கையில் மீதமுள்ள ஒரே ஒரு நம்பிக்கை அவரது மகள் ஷ்ரேயா மட்டும் தான். தலசீமியா காரணமாக, ஷ்ரத்தா மாதம் ஒருமுறை 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாய்பாசா சதார் மருத்துவமனைக்கு சென்று மகளுக்கு ரத்தமாற்றம் செய்து வருகிறார். இதற்காக, அவர்கள் ஒவ்வொரு முறையும் ஒரு காரை முன்பதிவு செய்ய வேண்டும், அதற்கான செலவு அவர்களின் பொருளாதார சூழலுக்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது. இப்போது, தலசீமியாவுடன் சேர்ந்து எய்ட்ஸைக் கையாள்வதில் உள்ள கடினமான சவாலை அவர் எதிர்கொள்கிறார். ஷ்ரத்தாவுக்கு எய்ட்ஸ் குறித்து எதுவும் தெரியாது. "எச்.ஐ.வி ஒரு தீவிரமான நோயாக இருக்க வேண்டும், அதனால் தான் மருத்துவமனை செய்த தவறால் எனக்கு ரூ. 2 லட்சம் காசோலை கிடைத்தது" என்று அவர் கூறுகிறார். இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது எப்படி ? ஷ்ரத்தாவுக்கும் சுனிதாவுக்கும் எச்.ஐ.வி குறித்து முன்பு எதுவும் தெரியாது. ஆனால் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் நடத்தையை பார்த்ததும், அவர்களின் குழந்தைகளுக்கு ஏதோ பெரிய நோய் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருவருக்கும் வந்தது. அக்டோபர் மாத இறுதியில் ஷஷாங்கின் எச்.ஐ.வி ரிப்போர்ட், பாசிட்டிவ் என வந்த பிறகு, உள்ளூர் ஊடகங்கள் தஷ்ரத்தை தொடர்பு கொண்டன, அப்போது இந்த சந்தேகம் உண்மையாக மாறியது. "அக்டோபர் 18 அன்று என் மகனுக்கு ரத்தம் கொடுப்பதற்கு முன், சதார் மருத்துவமனையில் எச்.ஐ.வி. டெஸ்ட் செய்தனர். அக்டோபர் 20 அன்று, என் மகன் பாசிட்டிவ் என்று தெரிவித்தனர். அதன்பின், நானும் என் மனைவியும் பரிசோதனை செய்துகொண்டோம். எங்களது ரிப்போர்ட்கள் நெகட்டிவ் என வந்தது. பின்னர் மருத்துவர், 'தொற்று உள்ள ரத்தம் மாற்றப்பட்டதால் உங்கள் மகனுக்கு எச்.ஐ.வி ஏற்பட்டிருக்கிறது ' என்று கூறினார்" தஷ்ரத், மாஜிஸ்திரேட் சந்தன் குமாரிடம் புகார் அளித்தார். அதன்பின் இந்த குறித்த தகவல் ஊடகங்களில் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து (suo motu) வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு உத்தரவிட்டது. இதற்கிடையில், அவரது மகன் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டிருப்பதால், மாவட்ட மாஜிஸ்திரேட், எம்.எல்.ஏ, எம்.பி ஆகியோர் வருவார்கள் என்ற தகவலும் தஷ்ரத்துக்கு வந்தது. அபுவா வீட்டுவசதி, ரேஷன், கழிப்பறை போன்ற அனைத்து அரசு திட்டங்களின் பலன்களும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்று சந்தன் குமார் கூறுகிறார். மேலும், "தலசீமியாவால் பாதிக்கப்பட்டு எச்.ஐ.வி பாசிட்டிவ் ஆன ஐந்து குழந்தைகளுக்கும் முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் உதவி வழங்கப்பட்டுள்ளது" என்றும் அவர் கூறுகிறார். அரசு உதவியால் அதிருப்தி அடைந்துள்ள குடும்பத்தினர் பட மூலாதாரம், X/@IrfanAnsariMLA படக்குறிப்பு, ஜார்க்கண்ட் சுகாதார அமைச்சர் மருத்துவர் இர்பான் அன்சாரி கூறுகையில், மேற்கு சிங்பூம் மாவட்டம் தலசீமியா மண்டலத்தில் வருகிறது, மேலும் மொத்தம் 59 தலசீமியா நோயாளிகள் தற்போது அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார். "மாவட்ட மாஜிஸ்திரேட்டும், எம்.பியும், எம்.எல்.ஏவும் வந்து ரூ. 2 லட்சம் காசோலை கொடுத்துவிட்டு சென்றார்கள். ஜார்க்கண்டில் இதுதான் நடைமுறை. ஏழைக்குழந்தைக்கு ரூ. 2 லட்சம். ஆனால் இதுவே ஒரு அமைச்சரின் மகன் என்றால், அவருக்கு கோடிகளில் உதவி கிடைத்திருக்கும்," என்று தஷ்ரத் வருத்தத்துடனும் கோபத்துடனும் கூறுகிறார். மேலும் "ஏழை மக்களின் உயிருடைய மதிப்பு வெறும் இரண்டு லட்சம் ரூபாய் மட்டும்தானா?" என்றும் அவர் கேள்வி எழுப்பிகிறார். அரசாங்கத்திடமிருந்து உங்களுக்கு என்ன வேண்டும்? என்ற கேள்விக்கு, "அரசாங்கம் உண்மையில் உதவ விரும்பினால், எங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு ஒரு பெரிய மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும். தவறு அரசு மருத்துவமனையால் தானே நிகழ்ந்தது? அப்படியானால் அதற்கும் அரசாங்கமே பொறுப்பு" என்று தஷ்ரத் பதில் அளிக்கிறார். "மேற்கு சிங்பூம் மாவட்டம் தலசீமியா பாதிப்பு அதிகம் இருக்கும் பகுதி. தற்போது இங்கு 59 தலசீமியா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலருக்கும் மாதம் இருவேளை ரத்தம் தேவைப்படுகிறது. அதற்கான ரத்த விநியோகம் முழுவதும் நன்கொடையாளர்களைப் பொறுத்தது"என்று சுகாதார அமைச்சர் மருத்துவர் இர்பான் அன்சாரி கூறுகிறார். யாருக்காவது ஹெச்.ஐ.வி தொற்று இருக்கிறதா? பட மூலாதாரம், Yousuf Sarfaraz படக்குறிப்பு, ஜார்க்கண்டின் சிறப்பு சுகாதார செயலாளர் மருத்துவர் நேஹா அரோரா, இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றார். இந்நிலையில் எழுந்துள்ள மிக முக்கியமான கேள்வி என்னவென்றால், பாதிக்கப்பட்ட ரத்தம் எங்கிருந்து வந்தது என்பது தான். இது குறித்து சந்தன் குமார் கூறுகையில், "2023 முதல் 2025 வரை, மாவட்டத்தில் மொத்தம் 259 பேர் ரத்த தானம் செய்துள்ளனர். இதில் 44 பேரை கண்டறிந்து பரிசோதித்தோம். அவர்களில் நான்கு நன்கொடையாளர்கள் எச்.ஐ.வி. பாசிட்டிவ் எனத் தெரியவந்துள்ளது"என்றார். மேலும், "மீதமுள்ள நன்கொடையாளர்களின் நிலையையும் பரிசோதித்து வருகிறோம். அவர்களில் வேறு யாருக்காவது எச்.ஐ.வி தொற்று இருந்தால் கண்டறிய முடியும்"என்றும் குறிப்பிட்டார். யார் பொறுப்பு? இந்தக் கேள்விக்குப் பதில் அளித்த ஜார்க்கண்டின் முன்னாள் சுகாதார அமைச்சர் ராமச்சந்திர சந்திரவன்ஷி, "இந்த விவகாரத்தில் சிவில் சர்ஜன் மற்றும் பிற அதிகாரிகள் அலட்சியம் காட்டியுள்ளனர். எனவே குற்றவாளிகள் அவர்கள்தான்" என்று கூறுகிறார். ஜார்க்கண்டின் சிறப்பு சுகாதார செயலாளர் மருத்துவர் நேஹா அரோரா, இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றார். தானம் செய்யப்பட்ட ரத்தத்தை பரிசோதிக்கும் செயல்முறை குறித்து அவர் கூறுகையில், "பிரீ-கிட் (Pre-kit) மூலம் சோதனை செய்தால், 'விண்டோ பீரியட்' நீளமாக இருக்கும். அதனால் தொற்று இருந்தாலும், பாசிட்டிவ் முடிவு தாமதமாக வரும். ஆனால் எலிசா அல்லது நாட் சோதனை ஆன்டிஜென்களை நேரடியாக கண்டறிவதால், வைரஸ் சீக்கிரமே கண்டுபிடிக்கப்படும். அதனால் நன்கொடையாளர்கள் ரத்தத்தை சோதிக்க பயன்படுத்தப்படும் பிரீ-கிட் இப்போது தடை செய்யப்பட்டுள்ளது"என்றார். பட மூலாதாரம், Yousuf Sarfaraz படக்குறிப்பு, மேற்கு சிங்பும் சம்பவம் (மாதிரி புகைப்படம்) குறித்து ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் அரசாங்கத்திடம் பதில் கோரியுள்ளது. மறுபுறம், ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் மாநில அரசிடம், உரிமம் இல்லாமல் ரத்த வங்கிகள் ஏன் இயங்குகின்றன என்று கேள்வி எழுப்பியுள்ளது. உள்ளூர் தகவல்களின் படி, சாய்பாசா உட்பட மாநிலத்தில் உள்ள ஒன்பது ரத்த வங்கிகளின் உரிமங்கள் காலாவதியாகிவிட்டன, ஆனால் பணிகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன எனத் தெரிய வருகிறது. இது குறித்து சுகாதார அமைச்சர் இர்பான் அன்சாரி கூறுகையில், "உரிமம் புதுப்பிப்பதற்கான என்ஓசி மத்திய அரசிடமிருந்து பெறப்படுகிறது. அது வழங்காவிட்டால், நாங்கள் எவ்வாறு புதுப்பிக்க முடியும் ? ஆனால் நாங்கள் கோப்பை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளோம்" என்றார். மாநில அரசு எழுத்துப்பூர்வமாக பரிந்துரை அனுப்பாவிட்டால், மத்திய அரசு உரிமத்தை புதுப்பிக்க முடியாது என்று முன்னாள் சுகாதார அமைச்சர் ராமச்சந்திர சந்திரவன்ஷி கூறுகிறார். "உரிமம் புதுப்பிக்கப்படாததற்கான காரணம் விதிமுறையை பின்பற்றாதது தான். இதனால் ரத்தத்தின் தரம் பாதிக்கப்பட்டது. அதன் விளைவு தான், சாய்பாசாவில் நடந்த துயர சம்பவம் "என்று தலசீமியா ஆர்வலர் அதுல் கெரா குற்றம் சாட்டுகிறார். "ஜார்க்கண்ட் போன்ற ஒரு மாநிலத்தில், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட தலசீமியா நோயாளிகள் உள்ளனர், ஆனால் அவர்களுக்கு சிகிச்சையளிக்க ஒட்டுமொத்த மாநிலத்திலும் ஒரே ஒரு ஹீமாட்டாலஜிஸ்ட் மட்டுமே உள்ளார்" என்றும் அவர் குறிப்பிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn0gejd8d2jo
  15. Published By: Vishnu 07 Nov, 2025 | 09:31 PM ( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய முடியாது. 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் வருடாந்த சடங்கு மாத்திரமே என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (09) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஒரு சம்பிரதாயமாக சடங்காகவே உள்ளது. இந்த வரவு செலவுத் திட்டத்தில் நாட்டின் முக்கிய பிரச்சனையான இனப் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி எந்த ஒரு தீர்வையும் முன்வைக்கவில்லை . 2025 ஆம் ஆண்டின் கொடுத்த வாக்குறுதிகள் தொடர்பில் ஜனாதிபதி ஏதும் சொல்லவில்லை.தமிழ் மக்களின் காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை என எந்த ஒரு விடயமும் இதில் உள்ளடக்கப்படவில்லை . ஆசிய வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் கடன் பெற்று அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து செல்வதாக ஜனாதிபதி கூறுகின்றார் அவ்வாறு பெரும் கடன்களை எந்த வகையில் இவர்கள் அடைக்கப் போகின்றார்கள் அதுவும் மக்களின் தலைகளில் தான் சுமத்தப்படும். வழமையாக ஒரு அரசாங்கம் வருடாந்தம் கொண்டுவரும் ஒரு வரவு செலவுத் திட்ட சடங்காகவே இந்த வரவு செலவுத் திட்டமும் அமைந்துள்ளது அதாவது இது ஒரு வெற்று வரவு செலவுத் திட்டமென்று தெரிகிறது என்றார். https://www.virakesari.lk/article/229803
  16. நான்கரை மணிநேரம் வரவு - செலவுத் திட்ட உரையாற்றிய ஜனாதிபதி எதிர்க்கட்சிகளிடம் விடுத்த வேண்டுகோள்! 07 Nov, 2025 | 06:05 PM நான்கரை மணிநேரம் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை சபையில் சமர்ப்பித்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, எதிர்க்கட்சிகளிடம் வரவு செலவுத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். 2026 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (07) நிதியமமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாக்கவால் சமர்ப்பிக்கப்பட்டது. வரவு - செலவுத் திட்ட உரையின் நிறைவில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவிக்கையில், வரவு - செலவுத் திட்டத்தை தயாரிக்க ஒத்துழைப்பு வழங்கிய அரச அதிகாரிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பாதாளக் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வகையில் வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வரவு - செலவுத் திட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/229795
  17. பட மூலாதாரம், Supplied கட்டுரை தகவல் அபூர்வா அமீன் பிபிசி குஜராத்தி 7 நவம்பர் 2025, 15:41 GMT புதுப்பிக்கப்பட்டது 32 நிமிடங்களுக்கு முன்னர் குஜராத் மாநிலத்தின் அம்ரேலி மாவட்டத்தில் அமைந்திருக்கும் சவர்குண்ட்லாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தனித்துவமான மற்றும் அரிதான பிரச்னை ஒன்று அண்மையில் பதிவாகியுள்ளது. சூரத்தை சேர்ந்த 66 வயதான கீதாபென்னுக்கு சில மாதங்களாக கண் இமைகளில் கடுமையான வலியும் அரிப்பும் இருந்தது. கண்கள் சிவந்திருந்தன, அவரால் தூங்கவும் முடியவில்லை. கண் மருத்துவரை அணுகியபோது, கண் இமைகளில் உயிருள்ள பூச்சிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதிலும் ஒன்றிரண்டு அல்ல, மொத்தம் 250 பேன்கள் மற்றும் 85 ஈர்கள் இருந்துள்ளன. வெளிச்சம் பட்டால் பேன்கள் இருக்கும் இடத்தில் இருந்து நகர்ந்துவிடும் என்பதாலும், மருத்துவ அறிவியலின் சில வரம்புகள் இருப்பதாலும், பேன்களை அகற்றும் சிகிச்சை இரண்டு மணிநேரம் நீடித்தது. கண் இமைகளில் ஏற்படும் அரிய வகை பேன், phthiriasis palpebrarum என்று அறியப்படுகிறது. பட மூலாதாரம், Supplied படக்குறிப்பு, கீதாபென் மேத்தாவின் கண்ணில் இருந்து எடுக்கப்பட்ட பேன்கள் விசித்திரமான மருத்துவ பிரச்னையின் பின்னணி சவர்குண்ட்லாவில் உள்ள லாலுபாய் சேத் ஆரோக்ய மந்திர் மருத்துவமனையின் கண் மருத்துவர் மிருகங்க் படேலிடம் பிபிசி பேசியது. கீதாபென் சிகிச்சைக்காக புறநோயாளி பிரிவுக்கு வந்தபோது, சுமார் மூன்று மாதங்களாக அவரது கண் இமைகளில் தொடர்ந்து அரிப்பு இருப்பது குறித்துக் கூறியதாகத் தெரிவித்தார். "பொடுகு இருப்பதே கண் இமைகளில் அரிப்பு ஏற்படுவதற்குப் பொதுவான காரணம். கண் இமைகளில் பேன் இருப்பது மிகவும் அரிதானது. கருவியின் மூலம் கண் இமைகளை கவனமாகப் பார்த்தபோது, அங்கு பேன் அசைவதைக் கண்டோம்" என்று மருத்துவர் மிருகங்க் படேல் கூறினார். "பேன்கள் மட்டுமல்ல, பேன்களின் முட்டையான ஈர்களும் பாதிக்கப்பட்டவரின் கண் இமைகளில் இருந்தன. கண்களில் ஈரும் பேனும் இருப்பது அந்தப் பெண்ணுக்குத் தெரிந்தால் அவர் பீதியடைந்து விடுவார் என்பதால், முதலில் நாங்கள் அவருக்கு ஆலோசனை வழங்கினோம். அதுமட்டுமல்ல, பேன்கள் அதிக அளவில் இருப்பதால் அவற்றை நீக்குவதற்கு அதிக நேரம் ஆகலாம் என்றும் விளக்கிச் சொன்னோம்." மருத்துவரின் ஆலோசனையைக் கேட்ட குடும்பத்தினருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது. அவர்கள், இதற்கு முன்னதாக சூரத்தில் உள்ள சில மருத்துவமனைகளுக்கும் சென்று மருத்துவர்களிடமும் ஆலோசனை பெற்றிருந்தனர். நோயாளி கீதாபென்னின் மகன் அமித் மேத்தா பிபிசியிடம் , "அம்மாவின் கண்களில் அரிப்பு இருந்தது. இரவில் அவரால் தூங்க முடியவில்லை. சூரத்தில் உள்ள சில மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று மருத்துவர்களிடம் காட்டினோம், எந்தப் பலனும் இல்லை. பின்னர் லாலுபாய் சேத் ஆரோக்ய மந்திர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு அம்மாவை பரிசோதித்த மருத்துவர் மிருகாங்க் அம்மாவின் கண்ணில் பேன் இருப்பதாகவும், அதை வெளியே எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்," என்று கூறினார். "இந்த பேன் நம் உடலில் உள்ள ரத்தத்தை உரிஞ்சுகிறது. உடலின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது கண் இமைகளின் தோல் மிகவும் மெல்லியதாக இருப்பதால், அங்கு அவற்றால் ரத்தத்தை சுலபமாகக் குடிக்க முடியும். இந்தப் பேன்கள் கண் இமைகளின் மேல் அமர்வதால் நோயாளிக்கு அரிப்பு ஏற்படும். இந்தப் பேன்களை எளிதில் அகற்ற முடியாது" என்று மருத்துவர் மிருகங்க் தெரிவித்தார். பட மூலாதாரம், Supplied படக்குறிப்பு, மருத்துவர் மிருகங்க் படேல் பேன் அகற்றும் செயல்முறை இந்த வகையான பேன்கள் வெளிச்சம் ஏற்பட்டால் நகர்ந்துவிடுபவை. எனவே அவற்றை அகற்ற, McPherson எனப்படும் சிறப்புக் கருவியைப் பயன்படுத்தி, ஒவ்வொரு பேனாகப் பிடித்து வெளியே இழுக்க வேண்டும். "இந்த சிகிச்சைக்கு சுமார் இரண்டு மணிநேரம் எடுத்தது" என்று மருத்துவர் மிருகங்க் படேல் விளக்கினார். "செயல்முறை முடிந்ததும், நோயாளியின் கண் அரிப்பு குறைந்துவிட்டது. இதுபோன்ற அரிதான பாதிப்புகள் இந்தியாவில் ஆங்காங்கே காணப்படுகின்றன. சில மாதங்களுக்கு முன்பு அவர் என்னிடம் வந்தபோது, நான் ஆராய்ச்சிக் கட்டுரையைப் படிக்க வேண்டியிருந்தது, ஏனென்றால் இதுவொரு அரிய பிரச்னை." சிக்கலான நடைமுறையை மேற்கொண்டு மருத்துவர் மிருகங்க் படேல் மற்றும் அவரது குழுவினர், நோயாளியின் கண் இமைகள் இரண்டில் இருந்தும் மொத்தம் 250க்கும் மேற்பட்ட பேன்களையும் 85க்கும் மேற்பட்ட ஈர்களையும் அகற்றினர். சிகிச்சைக்கு அடுத்த நாளன்று மீண்டும் கண் பரிசோதனை செய்தபோது நோயாளியின் கண்கள் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தன. பிபிசியிடம் பேசிய மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் மருத்துவர் பிரகாஷ் கட்டாரியா, "நான் மருத்துவத் துறையில் 21 ஆண்டுகளாக இருக்கிறேன். ஆனால் இன்று வரை இதுபோன்ற பாதிப்பை இரு முறை மட்டுமே பார்த்திருக்கிறேன். இது சற்று சிக்கலான பிரச்னை" என்று கூறினார். "நோயாளி இரண்டரை மாதங்களாகத் தூங்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். சூரத்தில் சில மருத்துவர்களை அவர் சந்தித்து இருந்தாலும், நோய் கண்டறியப்படவில்லை, இது பிரச்னையின் தீவிரத்தைக் காட்டுகிறது" என்றார் அவர். ஃபிதிரியாசிஸ் பால்பெப்ரரம் என்றால் என்ன? அமெரிக்க தேசிய உயிரி தொழில்நுட்ப தகவல் மையத்தின்படி, ஃபிதிரியாசிஸ் பால்பெப்ரரம் (Phthiriasis palpebrarum) என்பது கண் இமைகளில் பேன் மற்றும் அதன் முட்டையான ஈர் இருக்கும் அரிய மருத்துவ நிலை ஆகும். இந்தச் சிக்கல் ஏற்பட்டால், கடுமையான அரிப்பு, கண் இமைகள் சிவத்தல், தூக்கமின்மை ஆகிய பாதிப்புகள் ஏற்படும். இது பொதுவான கண் தொற்று போல் இல்லை என்பதால் அதைக் கண்டறிவது கடினமாக இருக்கலாம். பட மூலாதாரம், Supplied படக்குறிப்பு, மருத்துவர் பிரகாஷ் கட்டாரியா கண்களில் எப்படி பேன் வரும்? ஆமதாபாத்தில் உள்ள துருவ் மருத்துவமனையின் கண் நிபுணர் மருத்துவர் ஹர்ஷத் அகஜா பிபிசியிடம் கூறுகையில், "இது மிகவும் அரிதான நோய். இந்த லார்வாக்கள் கொசுக்கள் முட்டையிடும் அதே வகையிலான லார்வாக்கள். சுகாதாரமின்மையால் ஏற்படுகின்றன." "பல ஆண்டுகளுக்கு முன்பு ஆமதாபாத்தில். இதுபோன்ற ஒரு பாதிப்பை பார்த்தோம். ஆனால் இது மிகவும் அரிதானது" என்றார் மருத்துவர் அகஜா. கண்ணிமைகளில் பேன் வருவதற்குக் காரணம், வீட்டிலுள்ள சில வகையான சூழல்களாகவோ, பயன்படுத்தும் தலையணைகளாகவோ இருக்கக்கூடும். "மனிதர்களுக்கு இருப்பதைப் போலவே கால்நடைகளிலும் இந்த பாதிப்பு காணப்படுகிறது. சுகாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும். இந்தப் பேன்கள் படுக்கை விரிப்புகள், தலையணைகள், போர்வைகள் அல்லது ஆடைகளில் இருக்கலாம்" என்று மருத்துவர் மிருகங்க் கூறுகிறார். "இந்த நோய் தற்செயலாகவும் ஏற்படலாம். காடு போன்ற இடத்திற்குச் செல்லும்போது அல்லது கால்நடைகளுடன் தொடர்பு கொள்ளும்போது அவை உடலில் ஒட்டிக்கொண்டு, தலையில் இருந்து கண் இமைகளுக்கு வந்து சேரலாம்" என்றும் அவர் விளக்கினார். பட மூலாதாரம், Supplied படக்குறிப்பு, சாவர்குண்ட்லாவில் உள்ள ஸ்ரீ லாலுபாய் சேத் சுகாதார மந்திர் மருத்துவமனை கண் இமைப் பேன் முதன்மை அறிகுறிகள் கண் வலி, கண்களில் தொடர்ந்து அரிப்பு, தூக்கமின்மை ஆகியவை கண் இமையில் பேன்கள் இருப்பதற்கான அறிகுறிகள் என்று மருத்துவர் மிருகாங்க் கூறுகிறார். கண் இமைகளில் நீர் வடிதல், வீக்கம் ஆகியவை தோலில் ஏற்படும் தொற்று காரணமாக அரிப்பு ஏற்படுவதற்கான அடிப்படை அறிகுறிகளாகும். இந்த வகையான நோய்களைத் தவிர்க்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் என்ன? சுகாதாரத்தில் கவனம் செலுத்துவது அவசியம். கைகளை அவ்வப்போது கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதிலும், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்குத்தான் பாதிப்பு அதிகமாக ஏற்படும். வீட்டில் தூய்மையைப் பராமரிப்பது மிகவும் முக்கியம். கண்கள் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால், நேரத்தைக் கடத்தாமல் உடனடியாக மருத்துவரைத் தொடர்பு கொள்ள வேண்டும். கண் பிரச்னைகளை லேசாக எடுத்துக் கொள்வது பாதிப்பை அதிகப்படுத்தும் என்று மருத்துவர் பிரகாஷ் கட்டாரியா கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cpq1xzd7955o
  18. பட்டாம்பூச்சிக்கு சத்திரசிகிச்சையா?! முந்திச்செல்ல முயன்ற கார் விபத்தில் சிக்கியது. குதிரை கடிக்குமா?!
  19. பட மூலாதாரம், Photo by AMIR MAKAR/AFP via Getty Images படக்குறிப்பு, துட்டன்காமனின் தங்க முகமூடி உட்பட அவரது கல்லறையின் 5,000 பொக்கிஷங்கள் முதல் முறையாக ஒன்றாகக் காட்சிப்படுத்தப்படும் கட்டுரை தகவல் கெய்ன் பியரி பிபிசி நியூஸ் 6 நவம்பர் 2025 பண்டைய உலகின் கடைசி எஞ்சியிருக்கும் அதிசயமான பிரமாண்டமான கிசா பிரமிடின் அருகில் கட்டப்பட்ட, உலகமே ஆவலுடன் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகம் இறுதியாக திறக்கப்பட்டது. 120 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தத் தளம் - பிரான்சின் லூவர் அருங்காட்சியகத்தை விட இரண்டு மடங்கு பெரியது. பாய் கிங் (சிறிய வயதில் அரசரானவர்) என்று அழைக்கப்பட்ட துட்டன்காமன் உடன் புதைக்கப்பட்ட இதுவரை உலகத்தின் பார்வைக்கு காட்டப்படாத பொக்கிஷங்கள் உட்பட 70,000 முதல் 100,000 பொருட்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்ட அருங்காட்சியகம் 2002-இல் அறிவிக்கப்பட்டது. 2012-இல் திறப்பதாக திட்டமிடப்பட்ட இந்த அருங்காட்சியகம், பெரும் செலவு, அரசியல் குழப்பங்கள், கோவிட்-19 தொற்றுநோய், பிராந்திய மோதல்கள் என தொடர்ந்து பலமுறை தாமதங்களை எதிர்கொண்டது. இந்த மெகா திட்டத்திற்கு சுமார் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகை செலவாகியுள்ளது, இதில் பெரும்பகுதி ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் கடன்களால் மேற்கொள்ளப்பட்டது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சலீமா இக்ராம் கடந்த இருபது வருடங்களாக கிரேட் எகிப்திய அருங்காட்சியகத்துடன் இணைந்து பணியாற்று வருகிறார். மர்மங்களுக்குப் பெயர் போன இடம் இந்த அருங்காட்சியகத்தை எகிப்தின் "உலகிற்கான பரிசு" எனக் குறிப்பிடுகிறார் அந்நாட்டின் பிரதமர் மொஸ்தபா மட்பௌலி. இந்த அருங்காட்சியம் எகிப்திய கலாசாரத்தின் முக்கியத்துவத்தையும் செல்வாக்கையும் எடுத்துக்காட்டுவதுடன், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. கெய்ரோ பல்கலைக்கழக பேராசிரியரான சலீமா இக்ராம் கடந்த இருபது வருடங்களாக கிரேட் எகிப்திய அருங்காட்சியகத்துடன் இணைந்து பணியாற்று வருகிறார். "பண்டைய எகிப்து, அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறது" என்று கூறும் சலீமா, "கிரேக்கர்கள், ரோமானியர்கள் மற்றும் போனீஷியர்கள் கூட எகிப்தை மர்மம் மற்றும் அறிவு நிறைந்த நிலமாக நினைத்தார்கள்" என்றார். நவீன கால எகிப்தியர்களை அவர்களின் பாரம்பரியத்துடன் மீண்டும் இணைக்க இந்த அருங்காட்சியகம் உதவும் என்று நம்பப்படுகிறது. வீடு திரும்பும் துட்டன்காமன் பட மூலாதாரம், Grand Egyptian Museum படக்குறிப்பு, கிரேட் எகிப்திய அருங்காட்சியம் 1922-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் எகிப்தியலாளர் ஹோவர்ட் கார்ட்டர் துட்டன்காமன் கல்லறையைக் கண்டுபிடித்ததிலிருந்து, அவரைப் பற்றிய செய்திகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. உலகெங்கிலும் பல நகரங்களில் பல தசாப்தங்களாக காட்சிப்படுத்தப்பட்ட பின்னர், துட்டன்காமனின் தங்க முகக் கவசம், சிம்மாசனம் மற்றும் அவருடன் புதைக்கப்பட்ட 5,000-க்கும் மேற்பட்ட பொக்கிஷங்கள் (இதுவரை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படாதவை உட்பட) முதல் முறையாக முழுமையாக காட்சிக்கு வைக்கப்படுகின்றன. "துட்டன்காமனின் கல்லறையில் கிடைத்த பொருட்களை ஒரே இடத்தில் வைப்பது அற்புதமானது" என்கிறார் சலீமா. "எதிர்காலத்தில் சுற்றுலாப் பயணிகள் துட்டன்காமனின் காட்சியகங்களில் கவனம் செலுத்துவார்கள் என்று நினைக்கிறேன்." என்கிறார் மான்செஸ்டர் அருங்காட்சியக எகிப்து மற்றும் சூடான் காப்பாளரான கேம்பல் பிரைஸ். இவர் ஏற்கனவே இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட்டுள்ளார். "முக்கிய காட்சியகங்கள் அனைத்துமே கண்களை கொள்ளை கொள்ளக்கூடியவை, ஒவ்வொரு பொருளும் வியப்படையச் செய்கிறது. எனக்கு மிகவும் திருப்தியாக உள்ளது, என்னை உணர்ச்சிவசப்படச் செய்தது." என்று அவர் தெரிவித்தார். பட மூலாதாரம், REUTERS/Mohamed Abd El Ghany படக்குறிப்பு, 3,200 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான ராமெசஸ் தி கிரேட் என்ற பிரமாண்டமான சிலை கிங் டுட்டின் பொக்கிஷங்களுடன், அருங்காட்சியகத்தின் பிரதான மண்டபத்தில் 3,200 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான ராமெசஸ் தி கிரேட்-இன் பிரமாண்டமான சிலை உட்பட பிற குறிப்பிடத்தக்க படைப்புகளும் வைக்கப்பட்டுள்ளன. கிமு 7000 ஆம் ஆண்டு வரையிலான பல பொக்கிஷங்களைப் போலவே, இந்த சிலையும் இங்கு வந்த கதை சுவராஸ்யமானது. கெய்ரோவின் பிரதான ரயில் நிலையத்தின் முன் 51 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்த இந்த சிலை, புதிய இடத்திற்கு மாற்றப்பட்டது. இங்கு கொண்டு வரப்படுவதற்கு முன்பாக நகர் முழுவதும் காட்சிக்காக எடுத்துச் செல்லப்பட்டது. உலகின் பழமையான மற்றும் சிறப்பான முறையில் பாதுகாக்கப்பட்ட கப்பல்களில் ஒன்றாகக் கருதப்படும், 4,600 ஆண்டுகள் பழமையான, கிங் கூஃபுவின் 'சூரிய ஒளிப் கப்பலுக்காக' பிரத்யேக சிறப்புப் பிரிவு ஒன்றும் உள்ளது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, எகிப்தியவியலாளர் ஜாஹி ஹவாஸ் (நடுவில்), கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகம் தொடங்கப்பட்டதிலிருந்து நிதி திரட்டவும் அதை மேம்படுத்தவும் உதவியுள்ளார். "எகிப்தின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும்" இந்த அருங்காட்சியகத்தின் திறப்பு விழா என்பது பொக்கிஷங்களை காட்சிப் பொருளாக வைப்பது மட்டும் அல்ல, அதற்கும் அப்பாற்பட்டது என்கிறார் எகிப்தின் இந்தியானா ஜோன்ஸ் என்று அழைக்கப்படும் தொல்பொருள் ஆய்வாளர் ஜாஹி ஹவாஸ். மேலும், இது எகிப்தின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக உள்ளது என்று தெரிவித்தார். "நமது நினைவுச் சின்னங்களை ஆராயும் விஞ்ஞானிகளாக நாம் மாற வேண்டிய நேரம் இது" என்று கூறும் அவர், "அரசர்களின் பள்ளத்தாக்கில், 64 அரச கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன என்றாலும், அதில் ஒன்றைக் கூட எகிப்தியர்கள் தோண்டி எடுக்கவில்லை" என்றார். துட்டன்காமனின் கல்லறை உட்பட எகிப்தின் பெரும்பாலான முக்கிய கண்டுபிடிப்புகளை கண்டறிந்தது வெளிநாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் என்பதை ஹவாஸ் சுட்டிக்காட்டுகிறார். எகிப்தியர்கள் தங்கள் சொந்த பாரம்பரியத்தை அறிந்து கொள்வதிலும், தேடி பாதுகாப்பதிலும் முன்னணியில் இருக்க வேண்டும் என்று கூறும் அவர், அவற்றை உறுதி செய்வதை தனது வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டுள்ளார். இந்த அருங்காட்சியகம் அனைத்து எகிப்தியர்களுக்குமான இடமாக கருதப்பட்டாலும், சிலருக்கு நுழைவுக் கட்டணம் அதிகமாகத் தோன்றலாம். வயது வந்த எகிப்தியர்களுக்கான டிக்கெட் 200 எகிப்திய பவுண்டுகள் (சுமார் ரூபாய் 354) ஆகும். இந்தக் கட்டணம், வெளிநாட்டு பார்வையாளர்களிடம் வசூலிக்கப்படும் 1,200 பவுண்டுகளுடன் (சுமார் ரூபாய் 2100) ஒப்பிடும்போது மிகவும் குறைவானதுதான் என்றாலும், பல உள்ளூர் குடும்பங்களுக்கு இந்தக் கட்டணம் மிகவும் அதிகமானதாக தோன்றக்கூடும். "இறந்தவர்களை மட்டும் கவனித்துக் கொண்டிருக்காமல், உயிருள்ளவர்களையும் கவனித்துக் கொள்ள வேண்டும்," என்று பேராசிரியர் சலீமா கூறுகிறார். "இது அனைவருக்கும் பொதுவானது, இருப்பினும் சில எகிப்தியர்களுக்கு நுழைவுக் கட்டணம் சற்று அதிகம் என்றே தோன்றும்." பட மூலாதாரம், Mohamed Elshahed /Anadolu via Getty Images படக்குறிப்பு, இந்த அருங்காட்சியகம் நவம்பர் 1-ஆம் தேதி முதல் பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. தொல்பொருளியலின் புதிய சகாப்தம் ஹவாஸைப் பொறுத்தவரை, கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகத்தின் திறப்பு விழா கடந்த காலத்தைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், எகிப்தின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதும் ஆகும். நினைவுச்சின்ன காட்சியகங்களுக்கு அப்பால், இந்த வளாகத்தில் மிகவும் மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி ஆய்வகங்கள் உள்ளன. அவை, எகிப்திய மற்றும் சர்வதேச குழுக்கள் பல தசாப்தங்களாக தொடர்ந்து ஆய்வு செய்து, மீட்டெடுத்து, புதிய கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தும் இடங்கள் ஆகும். "இப்போது கிங்ஸ் பள்ளத்தாக்கில் உள்ள லக்சர் மற்றும் சகாராவில் அகழாய்வு செய்து வருகிறேன். எங்கள் நினைவுச்சின்னங்களில் 30% மட்டுமே நாங்கள் கண்டுபிடித்துள்ளோம் - இன்னும், 70% மணலுக்கு அடியில் உள்ளது," என்கிறார் ஹவாஸ். அருங்காட்சியகம் அதன் பரந்த அரங்குகளை பொதுமக்களுக்குத் திறந்தாலும், எகிப்தின் மிகப்பெரிய பொக்கிஷங்கள் இன்னும் அதன் பாலைவனங்களுக்கு அடியில் காத்திருக்கின்றன - எகிப்தின் தொல்பொருளியலின் புதிய சகாப்தம் இப்போதுதான் தொடங்கியுள்ளது. கூடுதல் செய்தி சேகரிப்பு: பிபிசி நியூஸ் அரபிக் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckg1135klrxo
  20. 2026 ஆம் நிதியாண்டுக்கான இலங்கையின் 80 ஆவது வரவு - செலவுத் திட்டம்! Published By: Priyatharshan 07 Nov, 2025 | 05:57 PM வரவு - செலவுத் திட்டம் - 2026 - நேரலை பகுதி - I - https://www.virakesari.lk/article/229638 புதிய கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு சேவை வழங்கும் டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்க 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையை மேம்படுத்த 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள வர்த்தகர்களுக்கு இலகு வட்டி அடிப்படையில் கடன் வழங்க 25 மில்லின் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி விவசாயிகளுக்கு கடன் வழங்க 800 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி சகல தொழிற்றுறைகளிலும் கடன் பெற்றுக் கொள்ள 80 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி சுற்றுலாத்துறையை மேம்படுத்த தெரிவு செய்யப்பட்ட சுற்றுலாத்துறை தலங்களை அபிவிருத்தி செய்ய 3500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி அப்புத்தளை பிரதேசத்தை பிரதான சுற்றுலாத்துறையாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை - ஜனாதிபதி சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலில் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்க 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி கொழும்பு பேர வாவியை தூய்மைப்படுத்தி சுற்றுலாத்துறையை மேம்படுத்த 2500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி 2026 மூன்றாம் காலாண்டில் டிஜிட்டல் ஆள் அடையாள அட்டை விநியோகிக்கப்படும் - ஜனாதிபதி அடுத்த ஆண்டு முதல் அரச நிறுவனங்களில் நிகழ்நிலை முறைமை ஊடாக கொடுக்கல் வாங்கலின் போது சேவைக் கட்டணம் அறவிடப்படாது. நிகழ்நிலை முறைமை கொடுக்கல் ,வாங்கல் கருத்திட்டத்துக்கு 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி பாடசாலை மற்றும் பல்கலைக்கழக கட்டமைப்பில் AI திட்ட பயிற்சிக்கு 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி அஸ்வெசும பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானமுடைய குடும்பத்தின் பிள்ளைகளுக்கு ப்ரோவ்ட் பேன்ட் பற்றுறுதிச்சீட்டு ( வவுச்சர் ) நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்கப்படும் - ஜனாதிபதி டிஜிட்டல் துறை ஆராய்ச்சியாளர்களுக்காக "அக்னி நிதியம் " உருவாக்கப்படும். இதற்காக 1500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு -ஜனாதிபதி சிறைச்சாலைகளை மறுசீரமைக்க 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு -ஜனாதிபதி விசேட தேவையுடையவர்களின் நலன்களுக்காக 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி அரச சேவையின் ஆட்சேர்ப்பின் போது விசேட தேவையுடையோர் 3 சதவீதமளவில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் - ஜனாதிபதி ஓட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் நலன் கருதி 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக அடுத்த ஆண்டும் 6000 ரூபா வழங்கப்படும் - ஜனாதிபதி விசேட தேவையுடைய பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக மாதாந்தம் 5000 ரூபா வழங்கப்படும். இந்த திட்டத்துக்கு 50 மில்லியன் ரூபா ஒதுக்கீடு -ஜனாதிபதி பல்கலைக்கழக மாணவர்களின் விடுதி, சிற்றுச்சாண்டிச்சாலை மற்றும் வளாக பொது சேவை அபிவிருத்திக்காக 2500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி அரச பல்கலைக்கழக மருத்துவ பீட அபிவிருத்திக்கு 11 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி பல்கலைக்கழக மாணவர்களுக்கான மாபொல கொடுப்பனவு 5000 ரூபா, இதர கொடுப்பனவு 2500 ரூபா அதிகரிக்கப்படும் - ஜனாதிபதி ஆசிரிய கலாசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவு 2500 ரூபா அதிகரிப்பு - ஜனாதிபதி தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ அறிக்கையின் பிரகாரம் மாதாந்தம் 10,000 ரூபா வழங்கப்படும் - ஜனாதிபதி பிரஜா சக்தித் திட்டம் ஊடாக சகல மாவட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு - ஜனாதிபதி பெருந்தோட்ட மக்களுக்கு உழைப்புக்கேற்ப ஊதியம் கிடைக்க வேண்டும் என்பது எமது கொள்கை - ஜனாதிபதி பெருந்தோட்ட மக்களுக்கு தற்போது வழங்கப்படும் 1350 ரூபா ,2026 ஜனவரி மாதம் முதல் 1550 ரூபா வரை அதிகரிக்க பரிந்துரை - ஜனாதிபதி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1550 மேலதிகமாக, அரசால் வருகை ஊக்குவிப்பு தொகையாக 200 ரூபா வழங்க பரிந்துரை - ஜனாதிபதி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1750 ரூபா சம்பளம் கிடைக்கப்பெறும் - ஜனாதிபதி பெருந்தோட்ட நிறுவனங்களுடனான ஒப்பந்தம் 2041 ஆம் ஆண்டுக்கு பின்னர் நீட்டிக்கப்படமாட்டாது - ஜனாதிபதி கிராமிய வீதி அபிருத்திக்கு 24 ஆயிரம் மில்லியன் ரூபா, கிராமிய பாலம் அபிவிருத்திக்கு 2500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி மகளிர் வலுவூட்டலுக்கு 240 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி யானை - மனித மோதலுக்கு தீர்வு காணும் பொருட்டு வனவள திணைக்களத்துக்கு வாகனங்கள் கொள்வனவு செய்யவும்,மின்வேலி அமைக்கவும் 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி வனவளத்துறை திணைக்களத்துக்கு நிரந்தர நியமனத்துக்கு அமைய 5000 பேரை இணைத்துக் கொள்ள தீர்மானம் - ஜனாதிபதி யானை - மனித மோதலுக்கு நிலையான தீர்வு காண 10 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி ஊடகவியலாளர்கள் உயர்கல்வி ,மற்றும் ஊடக தொழிற்றுறைக்குரிய உபகரணங்களை கொள்வனவு செய்ய கடன் வழங்கலுக்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி சீன திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் தொடர்மாடி குடியிருப்புக்கள் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படும் - ஜனாதிபதி நெல்,வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு உட்பட அத்தியாவசிய பொருட்களை சதொச நிறுவனம் கொள்வனவு செய்து களஞ்சியம் செய்யும் கட்டமைப்பை உருவாக்க 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி தேசிய பாற்பண்ணை தொழிற்றுறையை மேம்படுத்த 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி தெங்கு பயிர்ச்செய்கையை மேம்படுத்தும் முகமாக வடக்கு தென்னை முக்கோண வலயத்துக்கு 600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு -ஜனாதிபதி மீன்பிடி துறைமுகங்களை அபிவிருத்தி செய்ய 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி மீனவர்களுக்கு உயிர் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி மீன்பிடி தொழிலில் டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி கருத்திட்டங்களை மீள ஆரம்பிக்க 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு - ஜனாதிபதி மன்னார் மாவட்டத்தில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு அனர்த்தத்துக்கு தீர்வு காணும் வகையில் அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்த 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு - ஜனாதிபதி கிரான் பாலம், பொன்டுகால் பாலம் அபிவிருத்திக்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு - ஜனாதிபதி தூய்மையான குடி நீர்த் திட்டத்துக்கு 85,700 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு - ஜனாதிபதி நீண்ட தூர பேருந்து சேவைக்கு புதிதாக 600 பேருந்துகளை சேவையில் இணைத்துக்கொள்ள 3,600 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு - ஜனாதிபதி புகையிரத சேவைக்கு நவீன புகையிரதங்களை கொள்வனவு செய்ய நிதி ஒதுக்கீடு - ஜனாதிபதி வலுச்சக்தி துறையை வினைத்திறனாக்கும் வகையில் இலங்கை மின்சார சபை மறுசீரமைக்கப்படும் - ஜனாதிபதி வலுச்சக்தி்த் துறையை வினைத்திறனாக்கும் வகையில் "வலுச்சக்தி பரிவர்தனை" சட்டமூலம் அடுத்தாண்டு கொண்டு வரப்படும் - ஜனாதிபதி கட்டுநாயக்க விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் 2026 முதல் காலாண்டில் செயற்படுத்தப்படும் - ஜனாதிபதி திண்மக் கழிவகற்றலுக்கு 900 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி உள்ளூராட்சி மன்ற சேவைகளை வினைத்திறனாக்க 2500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு -ஜனாதிபதி வீதி நாய்கள் பாதுகாப்பு மற்றும் வீட்டு நாய்கள் இறந்ததன் பின்னர் புதைத்தல், எரித்தலுக்காக பிலியந்தலை மற்றும் கெஸ்பேவ பகுதியில் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீட்டுக் கடன் வழங்க 3000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான தொடர்மாடி குடியிருப்பு நிர்மாணத்துக்காக 15 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி மலையக மக்களுக்கு இந்திய அரசின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டுள்ள குடியிருப்பு திட்டத்தைத் நிறைவு செய்ய 4290 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளை நிர்மாணித்துக்கொள்ள 20 இலட்சம் ரூபா வழங்கப்படும் - ஜனாதிபதி 2026 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் கடன் பெறும் எல்லை 60 மில்லியன் ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது - ஜனாதிபதி 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட தரவுகள் முறையாக செயற்படுத்தப்படும் - ஜனாதிபதி அரச நிறுவனங்கள் தைரியமாக செயற்பட வேண்டும். தீர்மானிக்கப்பட்டதை போன்று நிதி ஒதுக்கப்படும் - ஜனாதிபதி சட்டத்துக்கமைய செயற்படுவதை எவ்வாறு சர்வாதிகாரம் என்று குறிப்பிடுவது -ஜனாதிபதி எதிர்க்கட்சிகளிடம் கேள்வி மாகாண சபைத் தேர்தல் குறித்து எதிர்வரும் ஜனவரி மாதம் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோர தீர்மானம் - ஜனாதிபதி மாகாண சபைத் தேர்தல் பற்றி எனக்கு தீர்மானிக்க முடியாது. தேர்தல் முறைமையை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொடுங்கள் - ஜனாதிபதி மாகாண சபைத் தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி எதிர்க்கட்சித் தலைவர் ஊழல் மோசடியாளர்களுடன் ஒன்றிணையமாட்டார். அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் - ஜனாதிபதி ஜனநாயகத்துக்கு எதிரான அரசியலமைப்புத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்ட போது மனோ கணேசன் அதில் இல்லை என்று மேற்கோள் குறி ஊடாக குறிப்பிடுகிறேன் - ஜனாதிபதி பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வகையில் வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. பாதீட்டுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் - ஜனாதிபதி வலியுறுத்தல் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பாதாளக் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - ஜனாதிபதி வரவு - செலவுத் திட்டத்தை தயாரிக்க ஒத்துழைப்பு வழங்கிய அரச அதிகாரிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி - ஜனாதிபதி 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட உரையை ஜனாதிபதி சுமார் நான்கரை மணித்தியாலங்கள் நிகழ்த்தி நிறைவு செய்தார். https://www.virakesari.lk/article/229734
  21. கனடாவில் இலங்கை குடும்பம் கொலை; குற்றத்தை ஒப்புக்கொண்ட இளைஞன் 07 Nov, 2025 | 09:42 AM 2024 ஆம் ஆண்டு கனடாவின் ஒட்டாவாவில் இலங்கையைச் சேர்ந்த குடும்பமொன்றை கத்தியால் தாக்கி கொலை செய்த 20 வயது பெப்ரியோ டி-சொய்சா குற்றத்தை ஒட்டாவா நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். அத்துடன், தனுஷ்க விக்ரமசிங்க என்பவரையும் தாக்க முயற்சித்தமை தொடர்பான குற்றச்சாட்டையும் சந்தேகநபர் ஒப்புக் கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையைச் சேர்ந்த குடும்பம் ஒன்றில் தாய், 04 பிள்ளைகள் மற்றும் அவர்களின் நண்பர் உள்ளிட்ட 06 பேர் கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 06 ஆம் திகதி கொலை செய்யப்பட்டனர். இந்நிலையில், ஒட்டாவா நீதிமன்றத்தில் குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு, நேற்று வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, தம்மீது சுமத்தப்பட்ட 06 குற்றச்சாட்டுக்களில், 04 குற்றச்சாட்டுக்களை இலங்கையரான சந்தேக நபர் டி சொய்சா ஏற்றுக் கொண்டுள்ளார். கொலை சம்பவம் இடம்பெற்றபோது, பெப்ரியோ டி-சொய்சா 19 வயதான மாணவராக இருந்தார். அவர் ஒட்டாவாவின் பர்ஹேவன் புறநகர்ப் பகுதியில் வசித்த விக்ரமசிங்க குடும்பத்தினருடன் வீட்டின் வசித்து வந்தார். நண்பர் என்ற ரீதியில் கற்றல் செயற்பாடுகளுக்காக, இலங்கை மாணவரான பெப்ரியோ டி-சொய்சா , விக்ரமசிங்கவின் குடும்பத்துடன் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொலை இடம்பெற்ற தினத்திலேயே சந்தேகநபரான பெப்ரியோ டி-சொய்சா கைது செய்யப்பட்டார். பணமின்மை மற்றும் விசா காலாவதி காரணமாக இந்த தாக்குதலுக்கு திட்டமிட்டதாக ஆரம்ப வாக்குமூலத்தில் கூறியுள்ளார். கொலைக்கு ஐந்து நாட்களுக்கு முன்பே திட்டம் தீட்டியிருந்துள்ளார். தற்கொலை முயற்சியும் செய்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் எந்த கல்வி அல்லது தொழில் செயற்பாடுகளிலும் ஈடுபடாமல், பெரும்பாலான நேரத்தை வீடியோ விளையாட்டுக்களில் தமது நேரத்தை செலவிட்டார் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பான வழக்கை விசாரணை செய்த ஒட்டாவா நீதிமன்றத்தின் நீதிபதி கெவின் பிலிப்ஸ், "இந்த வழக்கில் வன்முறையின் அளவு திகைப்பூட்டும், கொடூரமானதாக காணப்படுவதாக" நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். எனினும், விசாரணை முழுவதும் டி சொய்சா அமைதியாக அமர்ந்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. நீதிபதி ஏதாவது சொல்ல வேண்டுமா என்று கேட்டபோது, தான் செய்ததற்கு மிகவும் வருந்துவதாகவும், "நான் செய்ததன் உண்மையை ஒப்புக்கொள்வதில் வாழ்நாள் முழுவதும் செலவிடுவேன்" என்றும் குற்றவாளியான டி.சொய்ஷா தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் தற்போது குற்றத்தை ஒப்புக் கொண்டாலும், ஒரு சமூகத்தை பதறவைக்கும் வகையில் கொலை நடத்தப்பட்டுள்ளதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார். அத்துடன், ஒரு குடும்பத்தின் நம்பிக்கையை சீர்குழைத்து, கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால் நீதிமன்றத்தின் கூட்டுத் தீர்மானங்களுக்கு தாம் இணங்குவதாக தெரிவித்த நீதிபதி பிலிப்ஸ் வழக்கை நிறைவுறுத்தியுள்ளார். குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், டி-சொய்சாவுக்கு பிணையற்ற குறைந்தது 25 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/229684
  22. Published By: Priyatharshan 07 Nov, 2025 | 07:03 AM (இராஜதுரை ஹஷான்) சுதந்திர இலங்கையின் 80 ஆவது வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சரும், ஜனாதிபதியுமான அநுரகுமார திஸாநாயக்க இன்று வெள்ளிக்கிழமை ( நவம்பர் 7, 2025) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, விசேட உரையாற்றவுள்ளார். இது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2 ஆவது வரவு - செலவுத்திட்டமாகவும் அமைகின்றது. வரவு - செலவுத் திட்ட மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 5 ஆம் திகதி மாலை 6:00 மணிக்கு நடைபெறும். 2026 நிதியாண்டுக்கான வரவு - செலவுத்திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக கடந்த மாதம் 26ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கமைய இரண்டாவது மதிப்பீடான வரவு - செலவுத்திட்ட உரையை நிதி அமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் நிகழ்த்தவுள்ளார். நாளை (8) முதல் எதிர்வரும் டிசம்பர் 5ஆம் திகதி வரை இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெறவுள்ளது. நவம்பர் 14ஆம் திகதி மாலை 6 மணிக்கு இரண்டாவது மதிப்பீடுக்கான வாக்கெடுப்பு நடத்தப்படும். இதன் பின்னர் நவம்பர் 15ஆம் திகதி முதல் டிசம்பர் 5ஆம் திகதி வரை 17 நாட்கள் குழுநிலைவிவாதத்தை நடத்துவதற்கும், டிசம்பர் 5ஆம் திகதி மாலை 6 மணிக்கு மூன்றாவது மதிப்பீட்டுக்கான வாக்கெடுப்பை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலப்பகுதியில் அரசாங்க விடுமுறைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர சனிக்கிழமை உள்ளிட்ட ஏனைய அனைத்து நாட்களிலும் வரவு-செலவுத் திட்ட விவாதம் இடம்பெறும் 2026 நிதியாண்டுக்குரிய வரவு - செலவுத் திட்டம் குறித்து அரச மற்றும் தனியார் துறையினர் உட்பட ஆசிரியர்கள், வைத்தியர்கள், விவசாயிகள், கடற்றொழிலாளர்கள்,மற்றும் கைத்தொழிற்றுறையினர் விசேட அவதானம் செலுத்தியுள்ளனர். இம்முறை வரவு - செலவுத் திட்டத்தில் நிதியமைச்சுக்கு 634 பில்லியன் ரூபா, பாதுகாப்பு அமைச்சுக்கு 455 பில்லியன் ரூபா, சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்கு 554 பில்லியன் ரூபா, கல்வி ,உயர்கல்வி மற்றும் தொழிற்றுறை கல்வி அமைச்சுக்கு 301 பில்லியன் ரூபா, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்றங்கள் அமைச்சுக்கு 618 பில்லியன் ரூபா, அரச நிர்வாகம் மற்றும் பொதுநிர்வாக அமைச்சுக்கு 569 பில்லியன் ரூபா என்ற அடிப்படையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வரவு - செலவுத் திட்டம் குறித்து ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொருளாதார திணைக்களத்தின் பேராசிரியர் காமினி வீரசிங்க குறிப்பிடுகையில், பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தான் இந்த வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு - செலவுத் திட்டத்தின் பற்றாக்குறையை குறைத்து அரச வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும். அத்துடன் சர்வதேச மற்றும் தேசிய மட்டத்திலான கடன்களுக்கான வட்டி வீதத்தை குறைத்துக் கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார். பொதுமக்களின் எதிர்பார்ப்பு ஒவ்வொரு ஆண்டும் வரவு - செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுகிறது. நிறைவேற்றப்படுகிறது. வரவு - செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்படும் விடயங்கள் அனைத்தும் முறையாக செயற்படுத்தப்படவில்லை. இந்த ஆண்டும் அவ்வாறான நிலையே காணப்படுகிறது. 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்படும். ஆனால் தனியார் துறையினர் தொடர்பில் பேச்சளவில் மாத்திரமே நிவாரணங்கள் குறிப்பிடப்படும். ஆகவே வாழ்க்கைச் செலவினை குறைத்தால் ஒட்டுமொத்த மக்களுக்கும் பயனுடையதாக அமையும். வாழ்க்கைச் செலவுக்கும், மாத சம்பளத்துக்கும் இடையில் பாரியதொரு இடைவெளி காணப்படுகிறது. ஆகவே அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றனர். பெருந்தோட்ட மக்களின் சம்பளம் 2025 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட மக்களின் சம்பளம் தொடர்பில் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் சம்பள பிரச்சினைக்கு அரசாங்கத்தின் தீர்வினை எதிர்பார்த்துள்ளோம் என பெருந்தோட்ட மக்கள் குறிப்பிடுகின்றனர். சம்பள விவகாரம் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், பெருந்தோட்ட மக்களுக்கு மானிய அடிப்படையில் அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் பெருந்தோட்ட மக்கள் வலியுறுத்துகின்றர். 2026 நிதியாண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தில் வழக்கம் போலவே பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகளும் வழக்கத்திற்கு மாறாக ஜனாதிபதி செலவீனத்திற்கான நீதி ஒதுக்கீடுகளை அதிகரித்துள்ள அதேவேளை, இந்த வரவு - செலவுத்திட்டத்தில் மக்களுடன் தொடர்பு பட்ட மக்கள் நலன்சார் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் 2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடுகளை விடவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசின் கன்னி வரவு - செலவுத்திட்டமான 2025 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்திற்கும் இரண்டாவது வரவு - செலவுத்திட்டமான 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்திற்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன. 2026 ஆம் ஆண்டுக் கான வரவு - செலவுத் திட்டத்தில் செலவீனமாக 4 இலட்சத்து 43,435கோடியே 64, 68000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தில் அரச செலவீனமாக 4 இலட்சத்து 21824 கோடியே 80,18000 ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கான அரச செலவீனம் 21610கோடியே 84,50000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்காக புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கு 13,725,000, 000ரூபா, பௌத்த அலுவல்கள் திணைக்களத்துக்கு 3,563,000,000 ரூபா முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்துக்கு 210,000,000 ரூபாய், கிறிஸ்தவ சமய அலுவல்கள் திணைக்களத்துக்கு 270,000,000 ரூபா, இந்து சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்துக்கு 300,000,000 ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 2026 ஆம் ஆண்டுக்காக வரவு செலவுத் திட்டத்தில் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கு 14,500,000, 000 ரூபா, பௌத்த அலுவல்கள் திணைக்களத்துக்கு 1,350,000,000 ரூபாய், முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்துக்கு 204,000,000 ரூபாய், கிறிஸ்தவ சமய அலுவல்கள் திணைக்களத்துக்கு 178,000,000 ரூபாய், இந்து சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்துக்கு 285,000, 000ரூபா என்ற வகையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 2025 ஆம் ஆண்டை காட்டிலும், 2026 ஆம் ஆண்டுக்கு புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள்அமைச்சுக்கு 77 கோடியே 50 இலட்சம் மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்க்கான வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கக்கு 61,744 கோடியே 50 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டது.2026 ஆம் ஆண்டுக்காக பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்களுக்காக 64800 கோடி ரூபா ஒதுக்கப்பட் டுள்ளது. இதன்மூலம் 2026 ஆம் ஆண்டுக்காக பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்களுக்காக 3055 கோடியே 50 இலட்சம் ரூபா மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுர குமாரவின் விடயதானத்துக்குள் உள்ள பாதுகாப்பு அமைச்சு, நிதி, திட்டமிடல் மற்றும் , டிஜிட்டல் பொருளாதார அமைச்சு ஆகிய 3 அமைச்சுக்களுக்குமாக மொத்தம் 11, 6980 கோடியே 5 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டது. 2026 ஆம் ஆண்டுக்காக பாதுகாப்பு அமைச்சு, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மூன்று அமைச்சுகளுக்காக 1,105,782, 000000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.இதில் பாதுகாப்பு அமைச்சுக்கு மேலதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய இரண்டு அமைச்சுகளுக்குமான நிதி குறைக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கு ஜனாதிபதி செலவீனமாக 297,49,80, 000 ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு ஜனாதிபதிக்கான செலவினமாக 1137,79,80000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.இது 2025 ஆம் ஆண்டு ஜனாதிபதி செலவீனத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையை விடவும் 838,50,00000 ரூபா அதிகமாகும். அதேவேளை பிரதமர் செலவினமாக 2025 ஆம் ஆண்டுக்கு 117,0000,000 ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கான பிரதமருக்கான செலவீனமாக 97,50,00000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2025 ஆம் ஆண்டு பிரதமரின் செலவீனத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையை விடவும் 19,50,00,000 ரூபா குறைவானதாகும். கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட் டல் அமைச்சுக்கு 2025 ஆம் ஆண்டுக்கு 30,050,000,000 ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 38,600,000,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் 2026 ஆம் ஆண்டுக்கு 855 கோடி ரூபா மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்காக கல்வி,உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சுக்கு 271,000,000,000 ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்காக கல்வி,உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சுக்கு 301,000,000,000ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது .இதன்மூலம் 3000 கோடி ரூபா மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது 2025 ஆம் ஆண்டுக்கு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சுக்கு 496,500,000,000 ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 596,000,000,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் 2026 ஆம் ஆண்டுக்கு 99,500,000000 கோடி ரூபா அதிகமாக ஒதுக்கப்படுள்ளது.2025 ஆம் ஆண்டுக்கு சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கு 308,499,998,000 ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 554,999,998,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் 246,500,000.000 ரூபா அதிகமாக ஒதுக்கப்படுள்ளது. ஜனாதிபதியின் கீழுள்ள நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு 2025 ஆம் ஆண்டுக்கு 714,177,500,000 ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 634,782,000,000 ஒதுக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் 2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டில் 79,395,500,000 ரூபா குறைக்கப்பட்டுள்ளது.2025 ஆம் ஆண்டுக்கு நீதி மற்றும் தேசிய ஒற்றுமைப்பாட்டு அமைச்சு 54,106,300இ000 ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 58,500,000,000ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது இதன்மூலம் 439 கோடி 37 இலட்சம் ரூபா மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற் றும் சிவில் விமானசேவைகள் அமைச்சுக்கு 473,410,000, 000 ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 446,000,000,000 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2741 கோடி ரூபா குறைக்கப்பட்டுள்ளது.2025 ஆம் ஆண்டுக்கு கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப் பாசன அமைச்சுக்கு 208,722,000, 000ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 221,300,000,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் 125 கோடி 78 இலட்சம் ரூபா அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற் றும் வீடமைப்பு அமைச்சுக்கு 101,282,000, 000 ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 103,500,000, 000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது .இதன்மூலம் 2026 ஆம் ஆண்டுக்கு 22 கோடி 18 இலட்சம் ரூபா அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு 16,738,000, 000 ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 18,000,000, 000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் 2026 ஆம் ஆண்டுக்கு 126 கோடி 20 இலட்சம் ரூபா அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு 13,443,000, 000ரூபா ஒதுக்கப்படட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 11,500,000, 000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் 2026 ஆம் ஆண்டுக்கு 194 கோடி 30 இலட்சம் ரூபா குறைக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கு கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சுக்கு 11,440,000, 000 ரூபா ஒதுக்கப்படட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 10,600,000,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் 2026 ஆம் ஆண்டுக்கு 84 கோடி ரூபா குறைக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுற்றாடல் சுற்றாடல் அமைச்சுக்கு 16,040,000, 000 ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 18,300,000, 000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது இதன் மூலம் 2026 ஆம் ஆண்டுக்கு 226 கோடி ரூபா அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கு வலுசக்தி அமைச்சுக்கு 21இ142இ000இ000 ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 23,100,000,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2026 ஆம் ஆண்டுக்கு 195 கோடி 80 இலட்சம் ரூபா அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கு 21,463,000, 000 ரூபாய்' ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 23,000,000, 000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2026 ஆம் ஆண்டுக்கு 153 கோடி 70 இலட்சம் ரூபா அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கு வர்த்தக,வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சுக்கு 2,564,000,000 ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 2,700,000,000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2026 ஆம் ஆண்டுக்கு 13 கோடி 60 இலட்சம் ரூபா அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சுக்கு 14,526,000,000 ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 16,400,000,000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது .இதன் மூலம் 2026 ஆம் ஆண்டுக்கு 187 கோடி 40 இலட்சம் ரூபா அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கு டிஜிட்டல் பொருளாதார அமைச்சுக்கு 13,623,000,000 ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 16,000,000,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது .இதன் மூலம் 2026 ஆம் ஆண்டுக்கு 237 கோடி 70 இலட்சம் ரூபா அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கு தொழில் அமைச்சுக்கு 6,070,000,000 ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 6,400,000,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது .இதன் மூலம் 2026 ஆம் ஆண்டுக்கு 33 கோடி ரூபா அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.2025 ஆம் ஆண்டுக்கு இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு 12,100,000இ000 ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 13,500,000,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது .இதன்மூலம் 140 கோடி ரூபா அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது .2025 ஆம் ஆண்டுக்கு விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சுக்கு 5,000,000,000 ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 6,000,000, 000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது .இதன் மூலம் 2026 ஆம் ஆண்டுக்கு 100 கோடி ரூபா அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/229638
  23. Published By: Vishnu 07 Nov, 2025 | 02:51 AM ஏற்கனவே தீர்மனிக்கப்பட்டதற்கு அமைவாக வடக்குமாகாண சுதேச மருத்துவத் திணைக்கள அலுவலகத்தினை வடமாகாணத்தின் மையப்பகுதியான மாங்குளத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். எடுக்கப்பட்ட தீர்மானத்தை மீறி வேறு இடங்களில் குறித்த அலுவலகத்தை அமைக்க நடவடிக்கை எடுத்தால் வீதியில் இறங்கி போராடவேண்டிய நிலை ஏற்படுமெனவும் எச்சரித்துள்ளார். மன்னார் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் வடக்குமாகாண சுதேச மருத்துவத்திணைக்களத்திற்கான அலுவலகம் அமைப்பதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கேள்வி எழுப்பியநிலையில், வடக்குமாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் ஆணையாளர் தி.சர்வானந்தன் யாழ்ப்பாணத்திலும், வடக்குமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ப.ஜெயராணி கிளிநொச்சியிலும் குறித்த வடமாகாண சுதேச மருத்துவத்திணைக்கள அலுவலகத்தினை அமைக்லாமென தமது கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர். இந்நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில், மாங்குளம் வடமாகாணத்தின் மையப்புள்ளியில் அமைந்துள்ளதால், மாங்குளத்தில் வடமகாணத்திற்குரிய மாகாணத் திணைக்களங்கள் அமைக்கப்படவேண்டுமென மாகாணசபையில் ஏற்கனவே அனைவராலும் தீர்மானிக்கப்பட்டிருந்து. எனவே அந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டு வடமாகாணத்திற்குரிய சில மாகாணத் திணைக்களங்கள் மாங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ளன. அந்தவகையிலே வடமாகாண சுதேச மருத்துவத்திணைக்கள அலுவலகமும் மாங்குளத்தில் அமைக்கப்படவேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய கடந்த 2020.12.23ஆம் திகதி இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட காணிபயன்பாட்டுக் குழுக்கூட்டத்தில் குறித்த வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்கள அலுவலகத்தை மாங்குளத்தில் அமைப்பதற்கு 02ஏக்கர் காணி ஒதுக்குவதெனத் தீர்மானிக்கப்பட்டு காணியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போதும் வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் தொடர்ந்தும் யாழ்ப்பாணத்தில் வாடகைக் கட்டடத்தில் இயங்கிவருவதாக அறியமுடிகின்றது. குறித்த வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்கள அலுவலகத்தை மாங்குளத்தில் அமைப்பதற்கு காணி ஒதுக்கீடுசெய்யப்பட்டும் இதுவரை அங்கு அலுவலகம் அமைக்கப்படாமைக்கான காரணம் என்ன? தொடர்ந்தும் எதற்காக யாழ்ப்பாணத்தில் வாடகைக் கட்டடத்தில் இயங்கிவருகின்றீர்கள்? மாங்குளத்தில் குறித்த அலுவலகத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? வடமாகாண சுதேச மருத்துவ ஆணையாளரை இதற்குரிய பதிலை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் - என்றார். இந்நிலையில் வடமாகாண சுதேச மருத்துவத்திணைக்கள ஆணையாளர் வைத்திய கலாநிதி தி.சர்வானந்தன் இதன்போது பதிலளிக்கையில், வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் பல வருடங்களாக வாடகைக் கட்டடத்திலேயே இயங்கிவந்தது. இந்நிலையில் அரச திணைக்களங்கள் எவையும் வாடகையில் இயங்கக்கூடாதெனச் சுற்றறிக்கையொன்று வந்திருந்தது. அதற்கமைய யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களில் தொடர்ச்சியாக எமக்கு இடமொன்று தேவையென கோரிக்கை விடுத்திருந்தோம். அதற்கமைய வடக்குமாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர் பணிமனை இயங்கிவந்த அரச கட்டடத்தை எமக்குத் தருவதாகத் தொடர்ச்சியாகக் கூறிவந்தனர். அந்தவகையில் கடந்த 2024ஆம் ஆண்டு எம்மிடம் அந்தக்கட்டத்தைக் கையளித்துள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து அக்கட்டடத்தில் இயங்கிக்கொண்டிருக்கின்றோம். வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்கள அலுவலகத்தை நிறுவுவதற்கென ஒரு காணியைத் தேடிக்கொண்டிருக்கின்றோம். மாங்குளத்திலுள்ள காணியானது மூலிகைத் தோட்டத்திற்காகவே எம்மால் ஆரம்பத்தில் கொள்வனவுசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும் மாங்குளத்தில் எம்மால் பெறப்பட்டுள்ள காணியிலும் வடமாகாண சுதேச மருத்துவத்திணைக்களத்தினை அமைப்பதற்குரிய வசதியிருக்கின்றது. இந்நிலையில் வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்கள அலுவலகத்தை நிறுவுவதற்கு யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியிலும் எம்மால் ஒரு இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது - என்றார். இதன்போது குறுக்கீடு செய்த நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் பெறப்பட்ட ஆவணங்கள் எம்மிடமுள்ளன. வடக்குமாகாண சுதேச மருத்துவத் திணைக்கள அலுவலகம் அமைப்பதற்கென்றே கடந்த 2020.12.23திகதியன்று முல்லைத்தீவு மாவட்ட காணி பயன்பாட்டுக்குழுக் கூட்டத்தில் தங்களுக்கு மாங்குளத்தில் 02ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இந்தவிடயத்தில் தாங்கள் மாற்றுக்கருத்துக்களைத் தெரிவிக்கவேண்டாம். கூடியவிரைவில் வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்கள அலுவலகத்தை மாங்குளத்தில் ஒதுக்கப்பட்டுள்ள காணியில் அமைப்பதற்கான உரிய முன்மொழிவுகளை வழங்குங்கள். மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள அலுவலகம் அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடுகள் பெறுவதில் சிரமங்கள் இருப்பின் எம்மிடம் முறையீடுசெய்யுங்கள். அரசாங்கத்துடன் பேசி அந்த நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுத்தருகின்றோம் - என்றார். தமது கோரிக்கைக்கு அமைய 2026ஆம் ஆண்டு குறித்த வடமாகாண சுதேச மருத்துவத்திணைக்கள அலுவலகம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுமெனச் சொல்லப்படுவதாக இதன்போது வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்கள ஆணையாளர் சர்வானத்தனால் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த வடமாகாண சுதேச மருத்துவத்திணைக்களம் கிளிநொச்சியில் அமைக்கப்படுவதற்கு வாய்ப்பிருப்பதாக வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ப.ஜெயராணியினால் இதன்போது கருத்துத் தெரிவிக்கப்பட்டது. அத்தோடு மாகாண அலுவலகத்தினை கொண்டுவரும் விடயத்தில் தாம் மாத்திரம் முடிவெடுக்கமுடியாதெனவும், குறித்த அலுவலகத்திற்கு பணியாற்றுவதற்கு வருகைதரும் உத்தியோகத்தர்கள் அனைவரையும் கருத்தில் கொண்டுதான் முடிவெடுக்கவேண்டுமெனவும் வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். இதன்போது குறுக்கீடுசெய்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், மாங்குளத்தில் குறித்த மாகாணசுதேச மருத்துவதிணைக்களம் அமைப்பதற்கு ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு எடுக்கப்பட்ட முடிவைச் செயற்படுத்துமாறும் வலியுறுத்தினார். அதேவேளை குறித்த அலுவலகத்திற்கு பணியாற்ற வருகைதரும் உத்தியோகத்தர்கள் அனைவரையும் கருத்தில்கொண்டுதான் குறித்த அலுவலகம் எங்கு அமைக்கப்படுமென முடிவெடுப்பதானால் மக்களின் நலன் தொடர்பில் கருத்திலெடுப்பதில்லையா எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது கேள்வி எழுப்பினார். நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் இவ்வாறு கேட்கப்பட்ட கேள்விக்கு வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ப.ஜெயராணி பதிலளிக்கையில், நிச்சயமாக மக்களின் நிலைதொடர்பிலும் நிச்சயமாக கவனத்திலெடுக்கப்படவேண்டும். அதில் எவ்விதாமான மாற்றுக்கருத்துக்களுமில்லை. வடமாகாண சுதேசமருத்துவத் திணைக்கள அலுவலகத்தினை மாங்குளத்தில் அமைக்கக்கூடாதென்ற மனநிலை எமக்கில்லை. ஆனாலும் கிளிநொச்சியில் குறித்த மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள அலுவலகத்தை அமைத்தால் அனைத்து மாவட்டங்களுக்கும் பொருத்தமாகஇருக்கும். ஓரளவிற்கேனும் குறித்த அலுவலகத்திற்கு உத்தியோகத்தர்களையும் கொண்டுவந்தாலே குறித்த மாகாண சுதேசமருத்துவத் திணைக்களத்தின் செயற்பாடுகளை வினைத்திறானாகக் கொண்டுசெல்லமுடியும். அதற்காகவே கிளிநொச்சியில் அமைப்பது பொருத்தமாக இருக்கும் என்ற நிலைப்பாட்டிலிருக்கின்றோம். இதுதொடர்பாக வடமாகாண ஆளுநருடனும் பேசியிருக்கின்றோம். நிச்சயமாக அடுத்தவருடம் வடமாகாண சுதேசமருத்துவத் திணைக்களத்திற்குரிய அலுவலகம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் கலந்துரையாடி பொருத்தமான இடத்தில் நிர்மாணிப்பதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனத் தெரிவித்தார். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், இதுதொடர்பில் ஆளுநருடன் நாமும் கலந்துரையாடுவோம். இருப்பினும் வடமாகாணத்தின் மையமாக இடமாக மாங்குளம் இருப்பதால், வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களினதும் நன்மை கருதியே மாங்குளத்தில் குறித்த அலுவலகத்தினை அமைப்பதென ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதில் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டாமெனவும், வன்னியைப் புறக்கணிக்கவேண்டாமெனவுந் தெரிவித்தார். குறித்த வடமாகாண சுதேசமருத்துவத் திணைக்கள அலுவலகத்தை ஐந்து மாவட்டங்களினதும் நன்மைகருதி மாங்குளத்தில் அமைப்பதென ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானத்தை மீறிச் செயற்பட்டால் வீதிக்கு இறங்கிப் போராடவேண்டிய நிலை ஏற்படுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் இதன்போது தெரிவித்தார். இதன்போது மன்னார் பிரஜைகள்குழுவின் தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளார் இதுதொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவிப்பதைப்போல குறித்த வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்கள அலுவலகம் மாங்குளத்தில் அமைக்கப்படுவதே சிறப்பாக இருக்குமெனத் தெரிவித்தார். இந்நிலையில் வடமாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன் இதன்போது கருத்துத் தெரிவிக்கையில், குறித்த விடயம்தொடர்பில் ஏற்கனவே கலந்துரையாடியுள்ளோம். கட்டாயமாக அடுத்த ஆண்டில் வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்கள அலுவலகத்திற்கான புதியகட்டடமொன்றை அமைக்கவுள்ளோம். பெரும்பாலும் நாங்கள் அந்தக்கட்டடத்தினை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமைக்கமாட்டோம். மாகாணமென்ற ரீதியில் மாகாணத்தின் மையப்பகுதியில் அந்தக் கட்டடம் அமைக்கப்படவேண்டுமென்பதில் உறுதியாக உள்ளோம் - என்றார். https://www.virakesari.lk/article/229674

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.