Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. India Women 298/7 South Africa Women (28/50 ov, T:299) 141/4 SA Women need 158 runs from 22 overs. Current RR: 5.03 • Required RR: 7.18 • Last 5 ov (RR): 17/0 (3.40) அண்ணை, உங்காளு 72 தொடர்கிறாவே!
  2. ஒரு ஆங்கில கவிதை. நான் சிறுவனாக இருந்தபோது, இந்த உலகை மாற்ற ஆசைப்பட்டேன், நடக்கவில்லை. இளைஞனான போது ஊரைத் திருத்த முனைந்தேன், முடியவில்லை. குடும்பத் தலைவன் ஆனபோது, குடும்பத்தையாவது திருத்த விழைந்தேன், இயலவில்லை. தந்தையான போது, பிள்ளைகளை மாற்றிவிட துடித்தேன், எவரும் என் பேச்சை கேட்கவில்லை. இவ்வளவு முயற்சிகள் செய்ததற்குப் பதிலாக, "நான் கொஞ்சம் மாறியிருக்கலாம்" என்று மரணப் படுக்கையில் தான் புரிகின்றது எனக்கு, ஆனால் நேரம் கடந்துவிட்டது..... ----------------------------------------------------------------------------------------யாஸிர். இடுகையிட்டது யாஸிர் அசனப்பா. https://civilyasir.blogspot.com/2011/09/blog-post_18.html
  3. India Women 298/7 South Africa Women (23/50 ov, T:299) 124/4 SA Women need 175 runs from 27 overs. Current RR: 5.39 • Required RR: 6.48 • Last 5 ov (RR): 24/2 (4.80)
  4. அப்ப ஜெக்கம்மாவை கூப்பிடவேண்டியது தான், ஜெய் ஜெக்கம்மா!
  5. 14 வயதுக்குட்பட்ட சிறுமிகள் தட்டெறிதல் போட்டி சுண்டிக்குளி மகளிர் கல்லூரியின் ஆயிலை முதலிடம் Published By: Vishnu 02 Nov, 2025 | 09:56 PM (நெவில் அன்தனி) எம்பிலிப்பிட்டி பொது மைதானத்தில் நடைபெற்றுவரும் 56ஆவது கனிஷ்ட சேர் ஜோன் டாபட் மெய்வல்லுநர் போட்டியில் சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவி ஏ. ஆயிலை தங்கப் பதக்கம் வென்றுள்ளார். சனிக்கிழமை நடைபெற்ற 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான தட்டெறிதல் போட்டியில் 25.29 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து ஆயிலை முதலாம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். அப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற வென்னப்புவை புனித இரண்டாவது அருளப்பர் சின்னப்பர் ஆங்கில மொழிமூல பாடசாலை மாணவி ஏ. பொன்சேகாவை விட ஒரு மீற்றருக்கும் அதிகமான தூர வித்தியாசத்தில் ஆயிலை வெற்றிபெற்றார். தட்டெறிதல் போட்டியில் பொன்சேகா 23.91 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து வெள்ளிப் பதக்கத்தையும் வென்றதுடன் கொட்டாஞ்சேனை நல்லாயன் கன்னியாஸ்திரிகள் மடம் மாணவி எஸ். அந்த்ரியானா 23.34 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் சங்கத்தினால் நடத்தப்பபடும் 56ஆவது கனிஷ்ட சேர் ஜோன் டாபட் மெய்வல்லுநர் போட்டிக்கு ரிட்ஸ்பறி அனுசரணை வழங்குகிறது. https://www.virakesari.lk/article/229315
  6. Laura Wolvaardt (rhb) 43 இவவினுடைய விக்கெட் விழுந்தால் தான் இந்தியாவிற்கு வாய்ப்பு.
  7. India Women 298/7 South Africa Women (15/50 ov, T:299) 78/2 SA Women need 221 runs from 35 overs. Current RR: 5.20 • Required RR: 6.31 • Last 5 ov (RR): 26/1 (5.20)
  8. சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானம் 02 Nov, 2025 | 05:10 PM திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் கிழக்கு சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் சனிக்கிழமை (01) சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது. மூதூர் கிழக்கு சம்பூர் -ஆலங்குளம் மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு இவ் சிரமதானத்தை ஏற்பாடு செய்திருந்தது. சிரமதான நிகழ்வில் முன்னாள் போராளிகள், போராளிகளின் குடும்பத்தினர்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதன்போது சிரமதானத்தில் கலந்து கொண்டோருக்கு கூழ் காய்ச்சி பரிமாறப்பட்டிருந்தது. மாவீரர் நாள் நினைவேந்தல் மாதத்தை முன்னிட்டு மூதூர் கிழக்கு சம்பூர் -ஆலங்குளம் துயிலுமில்லத்தில் தொடர்ந்தும் சிரமதானம் மேற்கொள்ளப்படவுள்ளமையால் அதில் கலந்து கொள்ளக் கூடியவர்கள் கலந்து கொள்ள முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/229308
  9. அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா! Nov 2, 2025 - 06:28 PM அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. Hobartயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. அதன்படி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 186 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் அதிகபட்சமாக Tim David 74 ஓட்டங்களையும், Marcus Stoinis 64 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் Arshdeep Singh 03 விக்கெட்டுக்களையும், Varun Chakravarthy 02 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். பின்னர் 187 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 18.3 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் Washington Sundar ஆட்டமிக்காமல் அதிகபட்சமாக 49 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இதன்படி 05 போட்டிகள் கொண்ட இந்த இருபதுக்கு 20 ஓவர் தொடரில் இந்திய அணியும் அவுஸ்திரேலிய அணியும் தலா ஒவ்வொரு போட்டியில் வெற்றிப்பெற்று சமநிலையில் உள்ளன. https://adaderanatamil.lk/news/cmhhpw39u01cwqplpcv76i4ty
  10. பிட்ச் ரிப்போட்(கூகிள் மொழிபெயர்ப்பு): நல்ல காற்று வீசுகிறது, அது மேகங்களைத் தள்ளிவிட்டதாகத் தெரிகிறது. இருப்பினும், 79 சதவீத ஈரப்பதத்துடன், இன்னும் மிகவும் ஈரமானதாக இருக்கிறது. மைதானம் சதுக்கத்தின் மையத்தில் உள்ளது. 66 மீட்டர் நேராக அடிக்க, 56 மீட்டர் மற்றும் 57 மீட்டர் சதுர பவுண்டரிகள். மழை பெய்து கொண்டிருக்கும் நிலையில், மூடியின் கீழ் இருக்கும் இந்த மைதானம், கப் மற்றும் ரேணுகா போன்ற ஸ்விங் பவுலர்களுக்கு ஆர்வமாக இருக்கலாம் என்று மெல் ஜோன்ஸ் நினைக்கிறார். இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான அரையிறுதிப் போட்டியைக் கண்டதைப் போன்றது, இருப்பினும் இந்த ஸ்ட்ரிப் கடைசியாக இந்தியா-நியூசிலாந்து போட்டிக்கு பயன்படுத்தப்பட்டது. இந்த மைதானத்தில் பந்தை சுழற்றச் செய்த சில சுழற்பந்து வீச்சாளர்களில் சரணியும் ஒருவர், மேலும் அவர் எவ்வளவு விக்கெட்டுகளை பெறுகிறார் என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.
  11. இந்தியா, தென்னாபிரிக்காவிற்கு நிர்ணயித்த வெற்றி இலக்கு Nov 2, 2025 - 08:31 PM 2025 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிளுக்கு இடையில் தற்போது மும்பையில் இடம்பெற்று வருகிறது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற தென்னாபிரிக்க மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்து. இதன்படி முதலில் துடுப்பாடிய இந்திய மகளிர் அணி 50 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 298 ஓட்டங்களை பெற்றுள்ளது. துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் Shafali Verma அதிகபட்சமாக 87 ஓட்டங்களையும், Deepti Sharma 58 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில் Ayabonga Khaka 03 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். இதன்படி 2025 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க மகளிர் அணிக்கு 299 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmhhu9lq401czqplpkjmd7grg
  12. Nov 2, 2025 - 08:08 PM வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாளைய தினம் (03) கிழக்கு மாகாணத்திலும், பொலன்னறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் உள்ள சில பகுதிகளில் வெப்பச் சுட்டியானது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய மட்டத்தில் நிலவக்கூடும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், நிழலான இடங்களில் முடிந்தவரை ஓய்வெடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmhhtfzno01cyqplp5a1j2ogs
  13. ஆயுர்வேத சேவைக்கு 303 பட்டதாரிகள் நியமனம்! Published By: Digital Desk 1 02 Nov, 2025 | 02:43 PM நாட்டின் உள்நாட்டு ஆயுர்வேத மருத்துவத்துறையை வலுப்படுத்தும் நோக்கில், சமூக சுகாதார மருத்துவ அதிகாரிகள் உட்பட 303 பட்டதாரிகளை இலங்கை ஆயுர்வேத மருத்துவ சேவைக்கு நியமிக்கும் நிகழ்வு நாளை திங்கட்கிழமை (03) நடைபெறவுள்ளது. சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் கொழும்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. 2018 ஆம் ஆண்டு முதல் உள்ளூர் ஆயுர்வேத மருத்துவத் துறைக்கு மருத்துவ அதிகாரிகள் அதிக அளவில் ஆட்சேர்ப்பு செய்யப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் ஆயுர்வேத சேவைகளின் எதிர்கால செயற்திறனை மேம்படுத்துதல், நோயாளர் பராமரிப்பின் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் இலங்கை ஆயுர்வேத மருத்துவ சேவையில் முதன்மை தர மருத்துவ அதிகாரி பதவிகளுக்கான தற்போதைய வெற்றிடங்களை நிவர்த்தி செய்தல் என்பவற்றை நோக்காக கொண்டு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதலின் கீழ் இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள மத்திய மற்றும் மாகாண சபை ஆயுர்வேத வைத்தியசாலைகளில் ஆயுர்வேத நிபுணர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த ஆயுர்வேத மருத்துவர்களின் மேற்பார்வையின் கீழ் ஒரு வருட விரிவான பயிற்சியை பெற்றவர்களுக்கே இந்த நியமனம் வழங்கப்படவுள்ளது. மேலும், இலங்கையில் தொற்றும் மற்றும் தொற்றா நோய்கள் பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை வலுப்படுத்தவும், சுகாதாரப் பாதுகாப்பை விரிவுபடுத்துவதற்காக சிறுநீரக நோய்கள் அதிகமாக உள்ள பகுதிகளுக்கு இந்த ஆயுர்வேத மருத்துவர்களை அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/229289
  14. கேன் வில்லியம்சன் இருபதுக்கு 20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு! Published By: Digital Desk 1 02 Nov, 2025 | 02:31 PM நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவர் கேன் வில்லியம்சன் இருபதுக்கு 20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று ஞாயிற்றுக்கிழமை (02) அறிவித்துள்ளார். அடுத்த வருடம் உலகக் கிண்ண போட்டிக்கு முன்னதாக அணிக்கு "தெளிவு" தேவை என அவர் குறிப்பிட்டுள்ளார். 35 வயதான அவர் டிசம்பரில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவார் என தெரிவிக்கப்படுகிறது. வில்லியம்சன் நியூசிலாந்தின் இரண்டாவது அதிக ஓட்டங்களை எடுத்த வீரராக திகழ்கிறார். அவர், 93 டி20 சர்வதேச போட்டிகளிலும் விளையாடியுள்ளதுடன், 2575 ஓட்டங்களையும், 18 அரைச்சதங்களையும், பெற்றுள்ளார். 2021ஆம் ஆண்டு டி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அணித்தலைவராக நியூசிலாந்து அணியை வழிநடத்தியுள்ளார். நியூசிலாந்து வரலாற்றில் சிறந்த துடுப்பாட்டக்காரர் என்று பலரால் கருதப்படும் அவர், முன்னணி டெஸ்ட் ஓட்டங்களை பெற்றுள்ளதுடன், ஒருநாள் பட்டியலில் நான்காவது இடத்திலும் உள்ளார். இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக் கிண்ண போட்டி 2026ஆம் ஆண்டு பெப்ரவரியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/229283
  15. இன்னும் ஒரு 3 மணித்தியாலத்தில் முடிவு ஓரளவு தெரிந்துவிடும் பையா.
  16. Live Final (D/N), DY Patil, November 02, 2025, ICC Women's World Cup India Women (9.6/50 ov) 64/0 South Africa Women SA Women chose to field. Current RR: 6.40 • Last 5 ov (RR): 33/0 (6.60)
  17. 02 Nov, 2025 | 12:20 PM (லியோ நிரோஷ தர்ஷன் ) ஒரு நாட்டின் கட்டமைப்பிலும், பாதுகாப்பிலும், அதன் இலக்குகளை அடைவதிலும், பொதுமக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதிலும் அரச நிர்வாகம் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது என தெரிவித்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பலவீனமான அரச நிர்வாகமே இலங்கை, பங்களாதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் ஆட்சி மாற்றத்திற்கு காரணம் என்றும் குறிப்பிட்டார். ராஷ்டிரிய ஏக்தா திவாஸ் (தேசிய ஒருமைப்பாட்டு தினம்) நிகழ்வை முன்னிட்டு நேற்று உரையாற்றிய அஜித் தோவல், நிர்வாகத்தில் வளர்ந்து வரும் சவாலாக, பொதுமக்களைத் திருப்திப்படுத்த வேண்டியதன் அவசியம் அதிகரித்து வருவதை எடுத்துரைத்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், பொதுமக்கள் அதிக விழிப்புணர்வுடனும், இலட்சியத்துடனும் உள்ளனர். அவர்கள் அரசிடம் அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர், மேலும் அவர்களைத் திருப்திப்படுத்துவதில் அரசுக்கு முக்கிய அக்கறை உள்ளது. பலவீனமான நிர்வாகமே ஆட்சி மாற்றத்திற்கான சாத்தியமான காரணம் என்று விவரித்த தேசியப் பாதுகாப்பு ஆலோசகர், வங்கதேசம், இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளில் நிறுவன ரீதியற்ற வழிமுறைகள் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை உதாரணமாகக் குறிப்பிட்டார். "ஒரு தேசத்தின் வலிமை அதன் நிர்வாகத்தில் உள்ளது. அரசு நிறுவனங்கள் மூலம் செயல்படுகிறது, மேலும் தேசத்தைக் கட்டமைக்கும் பணியில், இந்த நிறுவனங்களை உருவாக்கி, வளர்ப்பவர்களே மிக முக்கியமானவர்கள்," என்று அவர் வலியுறுத்தினார். பிரதமர் நரேந்திர மோடியின் நிர்வாக மாதிரியைப் பாராட்டிய அவர், "இந்தியா ஒரு குறிப்பிட்ட வகையான நிர்வாகம், ஒரு குறிப்பிட்ட வகையான அரசு மற்றும் சமூக அமைப்பிலிருந்து, உலகளாவிய ஒழுங்கில் அதன் இடத்திலும் கூட ஒரு சுற்றுப்பாதை மாற்றத்தைக் கண்டு வருகிறது," என்றார். மேலும், தற்போதைய அரசாங்கம் நிறுவனமயமாக்கப்பட்ட ஊழலைக் கட்டுப்படுத்த கொண்டு வந்த நிறுவன மாற்றங்களையும் அவர் எடுத்துரைத்தார், மேலும் அதிக நடவடிக்கைகள் வரலாம் என்பதையும் சுட்டிக்காட்டினார். ஒரு மாற்றம் வரும்போதெல்லாம், மிக முக்கியமான விஷயம், உங்களின் பார்வையில் தெளிவு இருக்க வேண்டும். தூசியினாலும் புயல்களினாலும் கண்மூடித்தனமாகிவிடாமல், சத்தத்தினாலும் அச்சுறுத்தல்களினாலும் அச்சுறுத்தப்படாமல், துன்பங்களினால் அடங்கிவிடாமல் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். வல்லபாய் படேலின் வாழ்க்கையை இதற்கு உதாரணமாகக் காட்டிய அவர், சுதந்திரப் போராட்ட வீரராக மகாத்மா காந்திக்கும் அவரது அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவளித்ததுடன், சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில் 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து நாட்டை ஒன்றிணைப்பதில் படேல் ஆற்றியப் பங்கை எடுத்துரைத்தார். நல்லாட்சியின் முக்கிய பகுதியாக, பாதுகாப்பு, பாதுகாப்பு உணர்வு, மற்றும் பெண்களுக்குச் சமத்துவம் மற்றும் அதிகாரமளித்தல் உணர்வை வழங்குவதன் அவசியத்தை தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எடுத்துரைத்தார். "நவீன புதிய உலகில் நல்லாட்சிக்கு பெண்களுக்கு அதிகாரமளித்தல் அவசியம். மேலும், நல்ல சட்டங்கள், நல்ல கட்டமைப்புகள் மற்றும் நல்ல அமைப்புகள் இருப்பது மட்டுமல்லாமல், மிக முக்கியமாக, அவற்றை பயனுள்ள முறையில் செயல்படுத்துவதும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் கூறினார். மேலும், நிர்வாகத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் அவசியத்தை தோவல் வலியுறுத்தினார். "அதிகரித்த வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் பொதுமக்களுக்குச் சேவை வழங்குதலை உறுதி செய்யும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும், பின்னர் இணைக்க வேண்டும்." "சைபர் அச்சுறுத்தல்கள் அல்லது தொழில்நுட்பத்தால் ஏற்படும் பல அச்சுறுத்தல்கள் போன்ற அச்சுறுத்தல்களிலிருந்து சமூகத்தைப் பாதுகாக்க வேண்டும்," என்றும் அவர் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/229278
  18. தென்னாப்பிரிக்காவை ஏன் இந்திய அணி சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் சதமடித்த ஜெமிமா கட்டுரை தகவல் சஞ்சய் கிஷோர் பிபிசி ஹிந்திக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் 1983-ஆம் ஆண்டு ஆடவர் ஒருநாள் உலக கோப்பையைப் போலவே இந்திய மகளிர் கிரிக்கெட்டிற்கு முக்கியமான தருணம் இது. இன்று நடைபெறவுள்ள மகளிர் ஒருநாள் உலககோப்பை இறுதிப் போட்டி வரலாற்று புத்தகங்களில் பொன் எழுத்துக்களால் எழுதப்பட உள்ளது. 2006-ஆம் ஆண்டு பிசிசிஐ மகளிர் கிரிக்கெட்டை தங்களின் குடைக்குள் எடுத்துக் கொண்டது. அப்போது மகளிர் கிரிக்கெட் இன்று அடைந்துள்ள உயரத்தை அடையும் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். மகளிர் கிரிக்கெட்டின் ஆரம்ப காலகட்டத்தில் மைதானங்கள் காலியாக இருந்தன, தொலைக்காட்சிகளில் போட்டிகளை ஒளிபரப்பு செய்ய போராட வேண்டியிருந்தது. அந்தச் சூழல் தற்போது மாறிவிட்டது, வீராங்கனைகள் நட்சத்திரங்களாக மாறி உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்படுகின்றனர். பெண்கள் கிரிக்கெட் பிரபலமடைந்துள்ளது. ஆனால் மைதானங்களுக்கு ரசிகர்களைக் கொண்டு வருவதில் வெற்றியடையவில்லை. இந்திய அணிக்குப் பின்னால் உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ உள்ளது. அவர்களிடம் வளமும் கட்டமைப்பும் உள்ளது. ஆனால் கிரிக்கெட் என்பது பணத்தால் மட்டுமல்ல, தைரியத்தால் வெல்லப்படுகிறது என்பதை வரலாறு நமக்குச் சொல்கிறது. ரசிகர்களின் மனங்களை வெல்ல வேண்டுமென்றால் எந்த அணியும் கோப்பைகளை வெல்ல வேண்டும். இந்திய கிரிக்கெட்டின் பிம்பத்தையும் தலைவிதியையும் மாற்ற கபில் தேவின் அணி உலக கோப்பையை வெல்ல வேண்டியிருந்தது. தற்போது அதே போன்றதொரு சூழல் மகளிர் அணிக்கும் உருவாகியுள்ளது. இந்திய அணி இறுதிப் போட்டியில் மட்டும் விளையாடவில்லை, ஒரு கனவை நிறைவேற்றவும் விளையாடுகிறது. ஆனால் தென் ஆப்ரிக்க அணிக்கு இறுதிப் போட்டியில் இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 2024 டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது தென் ஆப்ரிக்கா. இறுதி போட்டி வெற்றியைக் கொண்டாடுவாதற்காக டேன்சிங் ஷூக்களை எடுத்து வந்துள்ளனர். தென் ஆப்ரிக்க அணியின் இயக்குநர் ஈனோச் நிக்வே தனது அணியை "ஆர்டிஸ்டிக் ஹன்டர்கள்" என அழைக்கிறார். இரு 'உதய சூரியன்' அணிகளின் கதை பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அரை இறுதி போட்டியில் இங்கிலாந்தை தோற்கடித்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது தென் ஆப்ரிக்க அணி வரலாற்றை மாற்றும் இறுதி போட்டியாக இது அமைந்துள்ளது. முதல்முறையாக ஆஸ்த்ரேலியா, இங்கிலாந்து அல்லாமல் ஒரு புதிய அணி உலக சாம்பியனாக உள்ளது. இது, இந்தத் தொடரில் விட்டுக் கொடுக்காத உணர்வை வெளிப்படுத்திய இரு 'உதய சூரியன்' அணிகளின் கதைகளாகும். இந்திய அணி முதல் மூன்று இடங்களைப் பிடித்த அணிகளை தோற்கடிக்காமல் நாக்-அவுட் சுற்றுக்கு வந்தது. அதன் பிறகு அரை இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவிடம் வரலாற்று வெற்றி பெற்று இறுதி போட்டியை அடைந்தது. இந்த வெற்றி, இந்திய அணி அழுத்தமான சூழல்களுக்காக தயாராக்கப்பட்டது என்பதைக் காட்டுகிறது. ஜெமிமா ரோட்ரிகசின் சதம் (ஆட்டமிழக்காமல் 127 ரன்கள்) மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுரின் 89 ரன்களும் இந்திய அணி எந்த இலக்கையையும் அடைய முடியம் என்பதை நிரூபித்தது. மறுபுறம் தென் ஆப்ரிக்க அணி இந்தத் தொடரில் இரண்டு போட்டிகளில் முறையே 69 மற்றும் 97 ரன்களுக்கு ஆட்டம் இழந்ததிலிருந்து மீண்டு வந்துள்ளது. அரை இறுதிப் போட்டியில் தங்களின் பரம எதிரியான இங்கிலாந்து அணியை 125 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இது அவர்களின் அசாத்தியமான மன உறுதிக்குச் சான்றாக உள்ளது. இந்தப் போட்டி, தங்களின் கிராமங்கள் மற்றும் நகரங்களிலிருந்து போராடி இந்தக் கட்டத்தை அடைந்திருக்கும் வீராங்கனைகளின் கனவுகளைப் பிரதிபலிப்பதாக உள்ளது. இன்று வெற்றி என்பது வெறும் கோப்பையாக மட்டும் இருக்காது. மாறாக பொருளாதார சுதந்திரம், சமூக மாற்றம் மற்றும் அசாத்தியமானதை சாத்தியமாக்குவதாக இருக்கும். அணிகளின் நிலை மற்றும் முக்கியமான சவால்கள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஸ்மிரிதி மந்தனாவின் அனுபவம் இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு உதவியாக இருக்கும். அரை இறுதி போட்டிக்கு இந்திய அணி தேர்வு செய்த காம்பினேஷன் (ஆறு பந்து வீச்சாளர்கள் மற்றும் 8 வது வீரர் வரை பேட்டிங் ஆடுவது) தான் இறுதி போட்டிக்கும் உகந்ததாக இருக்கும் ஒபனிங் மற்றும் மிடில் ஆர்டர்: இந்திய அணிக்கு ஓபனிங்கில் ஸ்மிரிதி மந்தனா மற்றும் செஃபாலி வர்மா நல்ல தொடக்கம் தர வேண்டும் என்கிற அழுத்தத்தில் இருப்பார்கள். செஃபாலி கடந்த போட்டியில் பெரிதாக சோபிக்கவில்லை. ஆனால் அதிரடியான தொடக்கம் தருவதற்கான திறன் அவரிடம் உள்ளது. மிடில் ஆர்டர்: ஜெமிமா ரோட்ரிகஸ் மற்றும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மிடில் ஆர்டரில் இந்திய அணிக்கு அசைக்க முடியாத கூட்டணியாக உள்ளனர். ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மாவின் அனுபவமும் அமைதியான அணுகுமுறையும் இந்த அணியில் முக்கியமான பங்கு வகிக்கிறது. ரிச்சா கோஷின் அதிரடி ஃபினிஷிங் மற்றும் அமன்ஜோத் கவுரின் திறன்கள் நவீன கால கிரிக்கெட்டின் தேவைகளாக உள்ளன. சுழற்பந்து வீச்சு: தென் ஆப்ரிக்க அணியில் வலது கை பேட்டர்கள் அதிகமாக இருப்பதால் இடது கை சுழற்பந்து வீச்சாளரான ராதா யாதவ் சிறந்த தேர்வாக இருப்பார். இந்த நகர்வு மிடில் ஓவர்களில் இந்தியா ரன்களைக் கட்டுப்படுத்த உதவும். வேகப்பந்து வீச்சு: கிராந்தி கவுட் மற்றும் ரேணுகா சிங் காம்பினேஷன் தொடக்க ஓவர்களில் விக்கெட் எடுத்து ரன்களைக் கட்டுப்படுத்த உதவியாக இருக்கும். கவனமுடன் இருக்க வேண்டும் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தற்போதைய தென் ஆப்ரிக்க அணியை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. தென் ஆப்ரிக்க அணி சாம்பலில் இருந்து எழுந்து வந்துள்ளது. இந்தத் தொடரில் இரண்டு போட்டிகளில் மிக குறைவான ரன்களை எடுத்திருந்தாலும் 5 போட்டிகளில் தொடர்ந்து வென்று இறுதி போட்டிக்கு வந்துள்ளது. தென் ஆப்ரிக்க அணியின் வெற்றிக்கு நான்கு உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். உத்தி சார்ந்த செயல்திட்டம்: கடுமையான போட்டிகள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்திய அணியின் பெர்ஃபார்மன்ஸ் வேகப்பந்து வீச்சை எவ்வாறு சமாளிக்கிறார்கள் என்பதை பொருத்து அமையும். இன்றைய போட்டியின் முடிவு சில முக்கியமான அம்சங்களால் தீர்மானிக்கப்படும். மந்தனா vs கப் - உலகின் நம்பர் 1 பேட்டரான ஸ்மிரிதி மந்தனா, கப்-இன் துல்லியமான ஸ்விங் பந்து வீச்சை இறுதிப் போட்டியின் அழுத்தத்தில் எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறார் என்பது சுவாரஸ்யமாக இருக்கும். டி கிளார்க் vs இந்தியாவின் டெத் ஓவர் பவுலிங்: லீக் சுற்று தோல்வியை மறந்து இந்திய அணி டி கிளார்க்கை கட்டுப்படுத்த ஏதேனும் திட்டத்துடன் வருமா என்பதை கவனிக்க வேண்டும். தீப்தி சர்மா vs வோல்வார்ட்: தொடர்ச்சியாகவே வோல்வார்ட்டிற்கு எதிராக குறைவான ரன் ரேட்டை தீப்தி சர்மா கடைபிடித்து வருகிறார். இது மிடில் ஓவர்களில் ரன்களைக் கட்டுப்படுத்த இந்தியாவுக்கு முக்கியமானதாக இருக்கும். செஃபாலி வர்மா: அணியிலிருந்து நீக்கப்பட்டு மீண்டும் வந்துள்ள செஃபாலி வர்மாவுக்கு ஜொலிப்பதற்கான வாய்ப்பு இது. இத்தகைய பிட்ச் மற்றும் வாய்ப்பைப் பயன்படுத்தி அவர் பெரிதாக சாதிக்க முடியும். நவி மும்பை எனும் கடுமையான போட்டிக்களம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நவி மும்பை மைதானம் நவி மும்பை மைதானம் 30,000 ரசிகர்கள், உப்பு கலந்த கடல் காற்று மற்றும் கணிக்க முடியாத வானிலையைக் கொண்டிருக்கும். டி.ஒய் பாட்டீல் மைதானம் இந்திய அணிக்கு சாதகமானதாகவே இருந்துள்ளது. இங்கு நடைபெற்ற கடைசி மூன்று போட்டிகளில் இந்திய அணி வென்றுள்ளது. தென் ஆப்ரிக்க அணி முதல் முறையாக இங்கு விளையாடுகிறது. இது இந்தியா அணிக்குச் சாதகமான அமையும். ஆனால் கணிக்க முடியாத வானிலை மற்றும் பனி டாஸ் ஜெயிப்பதை முக்கியமாக்குகிறது. மூன்றாவது முறை இந்திய அணிக்கு சாதகமாகுமா? பட மூலாதாரம், @ICC படக்குறிப்பு, மகளிர் உலக கோப்பை இந்திய மகளிர் அணிக்கு இந்த இறுதி போட்டி மூன்றாவது முயற்சியாக இருக்கும். 2005 (இங்கிலாந்திடம் தோற்றது) மற்றும் 2017-இல் (இங்கிலாந்திடம் தோற்றது) இந்திய அணி இறுதி போட்டியை அடைந்தது. மாறாக, தென் ஆப்ரிக்க அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதற்கு முன்னர் மூன்று முறை அரை இறுதி போட்டி வரை சென்றுள்ளது தென் ஆப்ரிக்கா. இப்போது மிகவும் தொழில்முறை அணியாக மாறியுள்ள தென் ஆப்ரிக்கா கடந்த 12 ஆண்டுகளில் நான்கு முறை ஐசிசி தொடர்களில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgkzzkzl6ezo
  19. 02 Nov, 2025 | 03:02 PM வடக்கில் இருந்து வெளியேற்றிய முஸ்லிம் மக்களை மீண்டும் வடக்கில் குடியேற வருமாறு பிரபாகரன் அழைப்பு விடுத்ததாக செல்வின் இரேனியஸ் மரியாம்பிள்ளை தெரிவித்துள்ளார். வடக்கில் முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டு 35 வருட நிறைவை நினைவுகூரும் முகமாக, வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில், யாழ். தந்தை செல்வா கலையரங்கத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கையொப்பமிட்ட ஒரே ஒரு ஆவணம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீமுக்கும் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குமிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரான புரிந்துணர்வு ஒப்பந்த ஆவணம் மட்டும்தான். சமாதான காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தில்கூட அன்ரன் பாலசிங்கம் கையொப்பமிட்டிருப்பார், தமிழ்ச்செல்வன் கையொப்பமிட்டிருப்பார், புலித்தேவன் கையொப்பமிட்டிருப்பார், அல்லது திட்டமிடல் பணிப்பகத்தின் பணிப்பாளர் கையொப்பமிட்டிருப்பார். ஆனால் வேலுப்பிள்ளை பிரபாகரன் அந்த ஒருடத்திலும் கையொப்பமிடவில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீமுக்கும் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குமிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் "பிரபாகரன், இடம்பெயர்ந்த முஸ்லீம்கள் அனைவரையும் மீண்டும் குடியேறுவதற்கு வருமாறு அழைக்கின்றார்" என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ரவூப் ஹக்கீமுடன் புலிகள் கதைத்த நாட்கள் வலிமையுடனும் அங்கீகரிப்புடனும் இருந்த நாட்கள். தோற்றுப் போய் அழிவடைய போகின்றோம் எந்த நிலையில் இருந்து அவர்கள் கதைக்கவில்லை. சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்டு, பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மிகவும் பலமாக இருந்த நாட்களிலேயே கதைத்தார்கள். அப்போது யாழ்ப்பாண மாவட்டம் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. புலிகளின் கட்டுப்பாட்டில் இல்லாத யாழ்ப்பாணத்தில் குடியேறுங்கள் என்று சொல்வதற்கு புலிகளால் முடியாது. அந்தச் சூழலில் தங்களால், மீள குடியேறவுள்ள முஸ்லீம் மக்களுக்கு உத்தரவாதம் தர முடியாது என்பதே புலிகளின் சாராம்சமாக இருந்தது. முஸ்லிம் மக்கள் மதரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவுப், ஏனைய விடயங்கள் ரீதியாகவும் தனித்துவமானவர்கள். அவர்களது உரிமைகள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற விடயம் அந்த ஒப்பந்த ஆவணத்தில் தெளிவாக கூறப்படுகிறது. யார் யாரிடம் மன்னிப்பு கேட்பது? குற்றம் செய்தவர் மன்னிப்பு கேட்பதா? அல்லது குற்றம் செய்தவர் சார்பில் மூன்றாம் தரப்பினர் ஒருவர் மன்னிப்பு கேட்பதா? அல்லது அந்த குற்றத்தை பார்த்த ஒருவர் மன்னிப்பு கேட்பதா? மன்னிப்பு என்பது தவறு செய்தவர் தான் உணர்ந்து செய்வதுதான் மன்னிப்பு என்றார். https://www.virakesari.lk/article/229292
  20. IND Women vs SA Women, Final at Navi Mumbai, Women's World Cup, Nov 02 2025 Match delayed by a wet outfield Pitch Report: There is a nice breeze and that seems to have pushed the clouds away. Still quite muggy, though, with 79 percent humidity. The pitch is in the centre of the square. 66m straight hit, 56m and 57m square boundaries. Mel Jones thinks the pitch, being under covers, with the rain around, might interest swing bowlers such as Kapp and Renuka. Very similar to the one that saw the semi-final between India and Australia, although this strip was last used for the Ind-NZ game. Charani has been one of the few spinners to get the ball to turn at this venue, and it will be interesting to see how much purchase she can extract. India XI: Shafali Verma, Smriti Mandhana, Jemimah Rodrigues, Harmanpreet Kaur (capt), Richa Ghosh (wk), Deepti Sharma, Amanjot Kaur, Radha Yadav, Kranti Gaud, Shree Charani, Renuka Singh South Africa XI: Laura Wolvaardt (capt), Tazmin Brits, Anneke Bosch, Sune Luus, Marizanne Kapp, Annerie Dercksen, Sinalo Jafta (wk), Chloe Tryon, Nadine de Klerk, Ayabonga Khaka, Nonkululeko Mlaba
  21. இலங்கை - இந்திய மின் இணைப்புத் திட்டம் இறுதிக்கட்டத்தில் : இரு சாப்த கால கனவு 02 Nov, 2025 | 09:11 AM (லியோ நிரோஷ தர்ஷன்) இந்தியா மற்றும் இலங்கையின் தேசிய மின்சார கட்டமைப்புக்களை இணைக்கும் திட்டம், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்து வந்த பேச்சுவார்த்தைகள் மற்றும் ஆய்வுகளுக்குப் பிறகு, இப்போது நடைமுறைக்கு வரும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வரும்போது, இரு நாடுகளுக்கும் இடையே 1000 மெகாவாட் மின்சாரத்தை இருவழிப் பரிமாற்றம் செய்ய முடியும். இந்நிலையில், இரு நாட்டு அதிகாரிகள் குழு மெய்நிகர் மூலம் இந்த திட்டம் குறித்து கடந்த வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் இந்திய குழுவுக்கு ஒன்றிய மின்துறை செயலாளர் பங்கஜ் அகர்வாலும், இலங்கை குழுவுக்கு மின்வலுசக்தி அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபாலவும் தலைமை தாங்கினர். இருதரப்பு அதிகாரிகளும் மின்கட்டமைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அம்சங்கள் குறித்து கலந்துரையாடினர். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், 'இலங்கையின் எரிசக்தி பாதுகாப்புக்கு 1,000 மெகாவாட் மின் இணைப்பு திட்டம் மிகவும் முக்கியமானது. மின் தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் இலங்கையால் இந்தியாவில் இருந்து உத்தேச இணைப்பு திட்டத்தின் மூலம் மின்சாரத்தை இறக்குமதி செய்ய இயலும். மேலும் உபரியாக இருக்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஏற்றுமதி செய்வதன் மூலம் இலங்கை அந்நிய செலாவணியை ஈட்ட முடியும் என தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் 2002 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்தியா - இலங்கை மின் கட்டமைப்பு இணைப்பிற்கான யோசனை 1970 களிலிருந்தே பேசப்பட்டிருந்தாலும், தீவிரமான நடவடிக்கைகள் 2002 ஆம் ஆண்டிலேயே தொடங்கின. 2010 ஆண்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளின் அரசாங்கங்களும் ஒரு விரிவான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்தன. இவ்வாறு நீண்ட கலந்துரையாடல்களுக்கு பின்னர், தற்போது உத்தேச மின் இணைப்பு திட்டம் குறித்து ஒரு இலக்கை அடைய இருநாடுகளும் தீர்மானித்து இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன. https://www.virakesari.lk/article/229257
  22. பெண்கள் உலகக் கோப்பை: 'இந்த 5 விஷயங்கள் நடந்தால் இந்தியாவுக்கு வெற்றி பிரகாசம்' பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் மு.பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 1 நவம்பர் 2025 பெண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 2) தென்னாப்பிரிக்காவை சந்திக்கிறது இந்தியா. அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி நம்பிக்கையோடு வருகிறது இந்திய அணி. இந்த 5 முக்கிய விஷயங்கள் நடந்தால் இந்திய அணி சாம்பியன் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறார் சென்டர் ஆஃப் எக்சலன்ஸ் (முன்பு - தேசிய கிரிக்கெட் அகாடெமி) பயிற்சியாளர் ஆர்த்தி சங்கரன். அவை என்ன? 1) இந்தியா சேஸ் செய்வது சாதகமாக அமையலாம் இந்திய அணி டாஸ் வென்றால், பந்துவீச்சை தேர்வு செய்வது சாதகமாக அமையலாம் என்று சொல்கிறார் ஆர்த்தி சங்கரன். "வழக்கமாக இதுபோன்ற பெரிய போட்டிகளில் எந்த அணியுமே முதலில் பேட்டிங்கை தான் தேர்வு செய்வார்கள். பெரிய ரன்கள் அடித்தால், அதுவே எதிரணிக்கு நெருக்கடி ஏற்படுத்திவிடும். அது வழக்கம் தான். ஆனால், இந்தப் போட்டியில் இந்தியா இரண்டாவது பேட்டிங் செய்வது நல்லது என்று தோன்றுகிறது" என்றார் அவர். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 339 ரன்களை சேஸ் செய்தது இந்தியா தான் அப்படிச் சொன்னதற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாகக் கூறினார் அவர். "பனி (Dew) இந்தப் போட்டியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். பௌலர்களுக்குப் பந்தைப் பிடிப்பது எளிதாக இருக்காது. அரையிறுதியின் கடைசி கட்டத்தில் ஆஸ்திரேலிய பௌலர்கள் நிறைய வைட்கள் வீசியதைப் பார்த்தோம். அதுமட்டுமல்லாமல் பந்தும் பேட்டிற்கு நன்றாக வரும். அதனால் இந்த மைதானத்தில் இரண்டாவது பேட்டிங் நல்லது. அதுமட்டுமல்லாமல் மழை பெய்யக்கூடும் என்பதால் ஆடுகளம் மூடி வைக்கப்படலாம். அப்படி மூடிவைக்கப்பட்ட ஆடுகளத்தில் பந்து சற்று நின்று வரும். அப்படியிருக்கும்போது முதலில் பேட்டிங் செய்வது அவ்வளவு எளிதாக இருக்காது. அதனால் இரண்டாவது பேட்டிங் செய்வது நல்லது என்று நான் நினைக்கிறேன்" என்று கூறினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் இந்திய அணி இரண்டாவது பேட்டிங் செய்துதான் வரலாற்று வெற்றி பெற்றது. 339 ரன்களை சேஸ் செய்து, பெண்கள் ஒருநாள் போட்டிகளில் மிகப் பெரிய சேஸையும் பதிவு செய்தது இந்தியா. 2) ரேணுகா தாக்கூருக்குப் பதில் ஸ்னே ராணா அரையிறுதியில் ஆடிய அணியில் ஒரு மாற்றம் மேற்கொள்வது நன்றாக இருக்கும் என்று நினைக்கிறார் பயிற்சியாளர் ஆர்த்தி சங்கரன். "ஸ்னே ராணாவால் இறுதிப் போட்டியில் நல்ல தாக்கம் ஏற்படுத்த முடியும் என்று நான் நினைக்கிறேன். அரையிறுதியின் முக்கிய கட்டத்தில் அவர் இல்லாததை உணர முடிந்தது. அதேசமயம் ரேணுகா இந்தியாவின் சிக்கனமான பௌலராக இருக்கிறார். இருந்தாலும், அவரை முதல் ஸ்பெல்லுக்குப் பின் பெரிதாகப் பயன்படுத்த முடிவதில்லை. கடைசி கட்டங்களில் ஒரு பௌலர் குறைவாக இருப்பது போலத்தான். அதனால் எந்த கட்டத்திலும் பந்துவீசக்கூடிய ஸ்னே ராணாவை ஆடவைப்பது மிடில் ஓவர்களுக்கும், டெத் ஓவர்களுக்கும் உதவும்" என்று கூறுகிறார் ஆர்த்தி. இந்த உலகக் கோப்பையில் 5 போட்டிகளில் ஆடியிருக்கும் ரேணுகா 4.13 என்ற எகானமியில் பந்துவீசி 3 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். 6 போட்டிகளில் ஆடியிருக்கும் ஸ்னே ராணா, 5.67 என்ற எகானமியில் 7 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் ஸ்னே ராணா ஆடவில்லை 3) மரிசான் காப் வீசும் 10 ஓவர்களை சரியாகக் கையாளவேண்டும் தென்னாப்பிரிக்காவின் முன்னணி பௌலரான மரிசான் காப்பை இந்திய பேட்டர்கள் நன்றாகக் கையாளவேண்டும் என்கிறார் ஆர்த்தி. "காப் மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அதனால் அவருடைய 10 ஓவர்களை இந்தியா சிறப்பாகக் கையாளவேண்டும். ஒரு நல்ல விஷயம், இங்கிலாந்து பேட்டர்களுக்கு இருந்ததுபோல் இந்திய பேட்டர்களுக்கு இன்ஸ்விங்கை சமாளிக்கும் பிரச்னை இல்லை" என்றும் அவர் குறிப்பிட்டார். இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார் காப். பவர்பிளேவில் பேட்டர்களுக்கு சவால் விடக்கூடிய அவர், இதுவரை 3.83 என்ற எகானமியில் 12 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். இந்தியாவுக்கு பவர்பிளேவில் அவர் கொஞ்சம் பிரச்னை தரலாம் என்று சொல்லும் ஆர்த்தி, காப்போடு டெல்லி அணியில் ஷஃபாலி ஆடியது அவருக்குக் கொஞ்சம் சாதகமாக அமையலாம் என்றும் குறிப்பிட்டார். கடந்த 3 ஆண்டுகளாக ஷஃபாலி வர்மா, மரிசான் காப் இருவரும் வுமன்ஸ் பிரிமீயர் லீக் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக ஒன்றாக விளையாடி வருகின்றனர். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார் மரிசான் காப் அதேசமயம் ஷஃபாலி வர்மா அவருடைய இயல்பான அதிரடி ஆட்டத்தை விளையாடவும் அணி நிர்வாகம் அனுமதிக்கவேண்டும் என்று கூறுகிறார் ஆர்த்தி. காப் தவிர்த்து, இடது கை ஸ்பின்னரான மலாபா இந்தியாவுக்கு சவாலாக இருக்கலாம் என்று கணிக்கிறார் ஆர்த்தி. ஆனால், அவர் பந்துவீச்சில் அதிரடியாக அடித்து ஆடுவதே சரியான அணுகுமுறையாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். 4) மூன்று முக்கிய விக்கெட்டுகளை சீக்கிரம் கைப்பற்றவேண்டும் தென்னாப்பிரிக்க பேட்டர்கள் லாரா வோல்ஃபார்ட், டாஸ்மின் பிரிட்ஸ், மரிசான் காப் ஆகிய மூவரின் விக்கெட்டுகளையும் சீக்கிரம் வெளியேற்ற வேண்டும் என்கிறார் ஆர்த்தி சங்கரன். "தென்னாப்பிரிக்க பேட்டர்களைப் பொறுத்தவரை ஓப்பனர்கள் இருவருமே பெரிய சவாலாக அமைவார்கள். அவர்கள் போக காப்புடைய அனுபவமும் சிக்கல் கொடுக்கும். இவர்கள் மூவரையும் சீக்கிரம் பெவிலியனுக்கு அனுப்பினால், தென்னாப்பிரிக்க பேட்டிங்கின் முதுகெலும்பை உடைக்கலாம். அவர்கள் மூவருமே இல்லாதபோது மற்றவர்களுக்கு நெருக்கடி ஏற்படும்." என்று கூறினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, லாரா வோல்ஃபார்ட் & டாஸ்மின் பிரிட்ஸ் இந்தத் தொடரில் 470 ரன்கள் அடித்து அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் தென்னாப்பிரிக்க கேப்டன் வோல்ஃபார்ட். ''இவ்விரு அணிகளும் மோதிய முந்தைய போட்டியில் நடீன் டி கிளார்க் தான் 54 பந்துகளில் 84 ரன்கள் அடித்து தென்னாப்பிரிக்காவை வெற்றி பெற வைத்தார். அப்போது பெரும்பகுதி அவரோடு வோல்ஃபார்ட் விளையாடியிருந்தார். அந்த 3 பேரை (வோல்ஃபார்ட், பிரிட்ஸ், காப்) அப்படி நீண்ட நேரம் ஆடவிடாமல் செய்தால், பின்னால் வருபவர்கள் தாக்கம் ஏற்படுத்த முடியாமல் செய்ய முடியும்'' என்கிறார் ஆர்த்தி. 5) ஹர்மன், ஸ்மிரிதி இருவரின் நிதானமும் முக்கியம் இந்தியாவின் இரு தூண்களான ஹர்மன்ப்ரீத் கௌர், ஸ்மிரிதி மந்தனா இருவரும் இறுதிப் போட்டியில் நிதானமாக இருக்கவேண்டும் என்கிறார் ஆர்த்தி. "இந்தியாவின் இந்த இரண்டு ஸ்டார்களும் நெருக்கடிகளை தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டு, மற்றவர்கள் அவர்களின் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வழி வகுக்க வேண்டும்" என்று கூறினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்தியாவின் கேப்டனும், துணைக் கேப்டனும் நெருக்கடியான போட்டியை நிதானமாகக் கையாளவேண்டும் என்கிறார் ஆர்த்தி சங்கரன் மேலும், "அவர்கள் இருவரும் இப்போது பல ஃபைனல்கள் விளையாடி விட்டார்கள். நிறைய சூழ்நிலைகளை சந்தித்திருக்கிறார்கள். அதனால் அந்த நெருக்கடிகளையெல்லாம் அவர்கள் தோள்களில் தாங்கி அதை சமாளிக்கவேண்டும். மற்றவர்களுமே சிறந்த செயல்பாட்டைக் கொடுக்கிறார்கள். ஆனால், இந்த இரு சீனியர்களின் நிதானம் முக்கியம்" என்றார் ஆர்த்தி. இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் இருக்கும் டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்குத் தொடங்கும். இந்த இரு அணிகளுமே இதுவரை உலகக் கோப்பை எதுவும் வென்றதில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cm277k624lvo
  23. ஆண்டின் இறுதிக்குள் முதலீட்டாளர் பாதுகாப்புச் சட்டமூலம் அறிமுகம்; அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ அறிவிப்பு : சினோபெக் திட்டப் பேச்சுக்கள் இறுதிக்கட்டதை அடைந்துள்ளதாகவும் தெரிவிப்பு Published By: Digital Desk 1 02 Nov, 2025 | 09:33 AM ஆர்.ராம் நாட்டில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை உருவாக்கும் நோக்கத்துடன், இந்த ஆண்டு இறுதிக்குள் அரசாங்கம் முதலீட்டாளர் பாதுகாப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் கொண்டுவரும் என்று தொழில் அமைச்சரும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார். முதலீட்டாளர்களிடையே ஏற்படும் ஏதேனும் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பதன் மூலம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வளர்ப்பதற்கு அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். புதிய சட்டமூலமானது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வளர்ப்பதன் மூலம் முதலீடு மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அத்துடன், நாட்டில் வெளிப்படைத்தன்மை, ஸ்திரத்தன்மை மற்றும் முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை குறித்த சட்டமூலம் உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார். இதேவேளை, சினோபெக் திட்டம் சம்பந்தமான உரையாடல்கள்இறுதி கட்டத்தில் இருப்பதால், 3.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள குறித்த திட்டம் விரைவில் அமுலாக்கப்படவுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். குறித்த திட்டம் சம்பந்தமாக நீண்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்று தொழில்நுட்ப ரீதியான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதோடு விரைவில் குறித்த திட்டத்தினை பகிரங்கப்படுத்தப்படவுள்ளது என்றும் குறிப்பிட்டார். சீன தூதரகம் மற்றும் சினோபெக் அலுவலகங்கள் உள்ளிட்ட தொடர்புடைய பங்காளர்களுடன் நாங்கள் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை நடத்தியுள்ள நிலையில் தற்போது அவை இறுதிக்கட்டத்தினை அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். நாட்டிற்கு அதிவேகமான பொருளாதார வளர்ச்சி தேவையாக உள்ளது என்றும் தொழில்நுட்பம் மற்றும் புவிசார் அரசியல் கட்டமைப்புகள் போன்ற எந்தவொரு பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதன் ஊடாக அதனை முன்னேற்றகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/229255
  24. பட மூலாதாரம், Press Association படக்குறிப்பு, பூண்டை வெறும் வயிற்றில் உட்கொள்வது இரைப்பை குடல் கோளாறு, வாய்வு மற்றும் குடலில் மாற்றங்களை ஏற்படுத்தும். கட்டுரை தகவல் தி ஃபுட் செயின் ப்ரோக்ராம் பிபிசி உலக சேவை 2 நவம்பர் 2025, 01:52 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பூண்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அதன் தனித்துவமான சுவை மற்றும் மருத்துவ குணங்களுக்காக மதிக்கப்படுகிறது. இது நுண்ணுயிரிகளையும் வைரஸ்களையும் எதிர்க்கும் திறன் கொண்டதால், சமையலிலும் பாரம்பரிய மருத்துவத்திலும் முக்கிய இடம் பிடித்துள்ளது. மத்திய ஆசியாவில் தோன்றிய பூண்டு, மக்கள் இடம்பெயர்ந்தபோது ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் பரவியது. இன்று, உலகில் அதிக அளவில் பூண்டை உற்பத்தி செய்கிற நாடாக சீனா உள்ளது. பிபிசி உலக சேவையின் புட் செயின் நிகழ்ச்சி, பூண்டின் வரலாறு மற்றும் கலாசார முக்கியத்துவத்தைப் பற்றி பேசுகிறது. அதே சமயம், பூண்டு உண்மையில் நமது ஆரோக்கியத்துக்கு நல்லதா? என்ற ஒரு முக்கியமான கேள்வியையும் எழுப்புகிறது. சமையலில் அத்தியாவசியமான பொருள் பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, பூண்டு உலகெங்கிலும் உள்ள பல உணவு வகைகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பூண்டு உலகெங்கிலும் உள்ள பல உணவு வகைகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. வடமேற்கு பிரான்ஸில் உள்ள தனது பிரெஞ்சு சமையல் பள்ளியில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் ஆசியாவைச் சேர்ந்த மாணவர்களுக்கு கற்பிக்கும் டேனிஷ் சமையல் கலைஞரான பவுல் எரிக் ஜென்சன், 'பூண்டைப் பற்றித் தெரியாத மாணவரை நான் சந்தித்ததே இல்லை' என்கிறார். பூண்டு உணவின் சுவையைப் பெரிதும் உயர்த்துவதாக அவர் நம்புகிறார். 'பூண்டு இல்லாமல் பிரெஞ்சு உணவு எப்படி இருக்கும்?' என்று அவர் ஆச்சரியப்படுகிறார். "பிரெஞ்சுக்காரர்களால் பூண்டு இல்லாத உணவை கற்பனை கூட செய்ய முடியாது என நான் நினைக்கிறேன்," குழம்பு முதல் சூப் வரை, காய்கறி அல்லது இறைச்சி உணவுகள் வரை, எல்லாவற்றிலும் ஒரு பல் பூண்டு கண்டிப்பாக இருக்கும். பூண்டு இல்லாமல் சமைப்பதை கற்பனை செய்யவே முடியாது." என்று ஜென்சன் கூறுகிறார். ஆனால் 1970களின் தொடக்கத்தில் டென்மார்க்கின் கிராமப்புறத்தில் வளர்ந்தபோது, பூண்டு அவருக்கு புதிதாக இருந்தது. அதன் கடுமையான மணத்தின் காரணமாக மக்கள் அதை அப்போது பயன்படுத்தவில்லை. பின்னர், துருக்கிய தொழிலாளர்கள் டென்மார்க்கிற்கு வந்தபோது, பூண்டு சேர்த்த உணவு பரவலானது. இத்தாலிய பீட்சாக்கள் மூலமாகவும் ஜென்சன் பூண்டை ரசிக்கத் தொடங்கினார். இப்போது, குளிர்காலத்தில் ஆரோக்கியத்திற்காகவும் பூண்டைப் பயன்படுத்துகிறார். "நானும் என் துணைவியும், காலையில் ஒரு கப் சூப் குடிப்போம். அதில் ஒவ்வொருவரும் ஒரு முழு பூண்டு பல்லைப் பிழிந்து சேர்ப்போம். இதனால் எங்களுக்கு சளி, காய்ச்சல் எதுவும் வருவதில்லை. அதற்கு காரணம் பூண்டு தான் என நான் நிச்சயமாக நம்புகிறேன்." என்று அவர் குறிப்பிடுகிறார். ஒரு நீண்ட பயணம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 20ஆம் நூற்றாண்டில் புலம் பெயர்ந்தவர்கள் புதிய இடங்களுக்கு பூண்டை கொண்டு வந்தனர் பூண்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கலாசார மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் பெற்றுள்ளது. பண்டைய கிரேக்கர்கள், சூனியம் மற்றும் வீடுகளின் பாதுகாவலரான ஹெகேட்டுக்கு காணிக்கையாக சாலைச் சந்திப்புகளில் பூண்டை வைத்தனர். எகிப்தில், புகழ்பெற்ற துட்டன்காமூனின் கல்லறையில் பூண்டு கிடைத்தது, அவரைப் பாதுகாக்கும் சக்தி பூண்டுக்கு உண்டு என்றும் அவர்கள் நம்பினர். அதேபோல், சீன மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டுப்புறக் கதைகளில், காட்டேரிகளை விரட்ட பூண்டு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. "உலகின் பழமையான சமையல் செய்முறை ஒரு மெசபடோமிய குழம்பு. அது 3,500 ஆண்டுகள் பழமையானது. அதில் இரண்டு பூண்டு பற்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன" என 'கார்லிக்: எடிபில் பயோகிராபி'என்ற ('Garlic: An Edible Biography') புத்தகத்தின் ஆசிரியரான ராபின் செர்ரி கூறுகிறார். "பூண்டு குறித்து உள்ள மிகப் பழமையான மருத்துவ குறிப்பும் சுமார் 3,500 ஆண்டுகள் பழமையானது. 'எபர்ஸ் பாப்பிரஸ்' என்று அழைக்கப்படும் அந்த ஆவணத்தில், உடல்நலக்குறைவு முதல் உடலிலுள்ள ஒட்டுண்ணிகள், இதயம் மற்றும் சுவாசக் கோளாறுகள் வரை பல பிரச்னைகளுக்கு பூண்டை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றிய பல குறிப்புகள் இருந்தன," என்றும் அவர் கூறுகிறார். பண்டைய கிரேக்க மருத்துவரும் தத்துவஞானியுமான ஹிப்போகிரட்டீஸ் தனது மருத்துவ சிகிச்சைகளில் பூண்டைப் பயன்படுத்தியதாக செர்ரி குறிப்பிடுகிறார். அரிஸ்டாட்டில், அரிஸ்டோபேன்ஸ் போன்ற பல சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும் பூண்டின் மருத்துவ பயன்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர். அடிமைகளின் உணவில் இருந்து அரச குடும்பத்தின் உணவு வரை பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பீட்சா போன்ற நமக்குப் பிடித்த பல உணவுகளில் பூண்டு பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது. பண்டைய மெசபடோமியா, எகிப்து, கிரீஸ், ரோம், சீனா, இந்தியா போன்ற பல நாகரிகங்களில் பூண்டு மிகவும் பிரபலமாக இருந்தது. ரோமானிய வீரர்கள் பூண்டு தங்களுக்கு தைரியமும் வலிமையும் தருவதாக நம்பினர். அவர்கள் யுத்தங்களில் வெற்றி பெற்று புதிய பகுதிகளைக் கைப்பற்றிய போது, பூண்டை ஐரோப்பா முழுவதும் பரவலாக்கினர். பூண்டு உணவாகவும் மருந்தாகவும் பயன்பட்டாலும், ஒரு காலத்தில் சமையலில் அது ஏழைகளால் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. "அது ஏழைகள் உண்ணும் உணவாகவே கருதப்பட்டது." என்று கூறிய ராபின் செர்ரி, "எகிப்தில் பிரமிடுகள் கட்டிய அடிமைகளுக்கும், ரோமானிய மாலுமிகளுக்கும் வலிமை தருவதற்காக பூண்டு கொடுத்தனர். அது மலிவானது மட்டும் அல்லாமல், கெட்டுப் போன உணவின் சுவையையும் மறைக்கக்கூடும். அதனால் அது ஏழைகள் சாப்பிடும் உணவாகவே நீண்ட காலம் பார்க்கப்பட்டது." என்றும் விளக்குகிறார். ஆனால் 14 முதல் 16-ஆம் நூற்றாண்டு வரையிலான மறுமலர்ச்சி காலத்தில் பூண்டின் மதிப்பு மாறியது. அது, ஐரோப்பாவில் கலை, அறிவியல் வளர்ந்த காலம். "பிரான்சின் நான்காம் ஹென்றி பூண்டால் ஞானஸ்நானம் செய்யப்பட்டு, அதை அதிகம் உண்டார். இது பூண்டை பிரபலப்படுத்தியது. 19-ஆம் நூற்றாண்டில் பிரிட்டனிலும் பூண்டு பிரபலமானது," என்கிறார் செர்ரி. 1950-60களில் குடியேறியவர்கள் மூலம் பூண்டு அமெரிக்காவுக்கு வந்தது. இது எதிர்மறையான கருத்துகளை மாற்ற உதவியது. "யூதர்கள், இத்தாலியர்கள், கொரியர்கள் ஆகியோரை 'பூண்டு சாப்பிடுபவர்கள்' என்று அவமானகரமாக அழைத்தனர். இதற்கு மோசமான அர்த்தம் இருந்தது," என்றார் செர்ரி. மருந்தாகப் பயன்படுத்தப்படும் பூண்டு பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, பூண்டு அதன் மருத்துவ குணங்களுக்காக இன்றும் விரும்பப்படுகிறது உலகில் தற்போது 600-க்கும் மேற்பட்ட பூண்டு வகைகள் உள்ளன. உஸ்பெகிஸ்தான், ஜார்ஜியா போன்ற இடங்களில் விளையும் சில வகைகள் சமீபத்தில் தான் உலக சந்தையில் கிடைக்கத் தொடங்கியுள்ளன. சமையலில் முக்கியப் பங்கு வகிப்பதைத் தாண்டி, பூண்டு சளியின் அறிகுறிகளைக் குறைக்கவும் பயன்படுகிறது. ரத்த அழுத்தம், கொழுப்பு, புற்றுநோய் ஆகியவற்றில் பூண்டின் தாக்கத்தை ஆய்வு செய்ய பல மருத்துவப் பரிசோதனைகள் நடந்துள்ளன. ஆனால் அதில் வெளியான முடிவுகள் மாறுபட்டதாக உள்ளன. உதாரணமாக, இரானில் நடந்த சிறிய ஆய்வு, பூண்டு மற்றும் எலுமிச்சை சாறு ஆறு வாரங்களில் கொழுப்பையும் ரத்த அழுத்தத்தையும் குறைத்ததாகக் கூறுகிறது. ஆனால், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் 200 நபர்களிடம் ஆறு மாதங்களுக்கு நடந்த ஆய்வில் கொழுப்பு குறைவதற்கான குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் காணப்படவில்லை. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சீனா இப்போது உலகின் மிகப்பெரிய பூண்டு உற்பத்தியாளராக உள்ளது 2014-இல் ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு, பூண்டு வலுவான நுண்ணுயிர், வைரஸ் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தியது. "பூண்டில் அதிக அளவு பொட்டாசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், கந்தகம் ஆகியவை இருக்கின்றன. மெக்னீசியம், மாங்கனீசு, இரும்பு போன்றவை மிதமான அளவில் உள்ளன. உண்மையில் இது ஒரு அதிசய காய்கறி," என்கிறார் பிரிட்டிஷ் டயட்டெடிக் அசோசியேஷனின் செய்தித் தொடர்பாளரும் குழந்தை மருத்துவ உணவியல் நிபுணருமான பஹீ வான் டி போர். "பூண்டில் 'அல்லிசின்' என்ற கந்தகம் கூட்டு பொருள் உள்ளது. இதில், நம் குடல் மிகவும் விரும்பும் ப்ரீபயாடிக் நார்ச்சத்து நிறைந்துள்ளது. அதனால் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதில் நுண்ணுயிர் எதிர்ப்பு தன்மையும் உள்ளது." என்றார். அதேபோல் பூண்டின் நார்ச்சத்து குடல் பாக்டீரியாவை வளர்க்க உதவுகிறது, மலச்சிக்கல், வயிறு வீக்கம் ஆகியவற்றையும் குறைக்கலாம் என்றும் அவர் கூறுகிறார். தினமும் ஒன்று அல்லது இரண்டு பூண்டு பற்களை பச்சையாக சாப்பிடுவது பாதுகாப்பானது. ஆனால் அமெரிக்கன் ஃபேமிலி ஃபிசிஷியன் (American Family Physician) என்ற மருத்துவ இதழில் வெளியாகியுள்ள அறிக்கையின்படி, பூண்டை அதிகமாக, குறிப்பாக வெறும் வயிற்றில் சாப்பிட்டால், வயிற்றுப் பிரச்னைகள், வாயு பிரச்னை மற்றும் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாவில் மாற்றம் ஏற்படலாம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8drre7vv3do

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.