Everything posted by ஏராளன்
-
வெளியுலக தொடர்பே இல்லாத இந்த அமேசான் பழங்குடிகள் நெருப்பு பற்ற வைப்பது எப்படி? அவர்களே அளித்த பதில்
பட மூலாதாரம், Fenamad கட்டுரை தகவல் ஸ்டெஃபானி ஹெகார்ட்டி உலக மக்கள் தொகை செய்தியாளர் 3 நவம்பர் 2025, 03:18 GMT புதுப்பிக்கப்பட்டது 3 நவம்பர் 2025, 05:26 GMT பெருவின் அமேசான் பகுதியில் உள்ள ஒரு சிறிய திறந்த வெளியில் தாமஸ் அனெஸ் டோஸ் சான்டோஸ் வேலை செய்து கொண்டிருந்தபோது, காட்டில் காலடிச் சத்தம் நெருங்குவதைக் கேட்டார். அவர் தான் சூழப்பட்டுவிட்டதை அறிந்து உறைந்து போனார். "ஒருவர் நின்று, அம்புடன் குறிவைத்துக் கொண்டிருந்தார்," என்று அவர் கூறுகிறார். "எப்படியோ நான் இங்கு இருப்பதை அவர் கவனித்துவிட்டார், நான் ஓடத் தொடங்கினேன்." அவர் மாஷ்கோ பைரோ (Mashco Piro) பழங்குடியினரை நேருக்கு நேர் எதிகொண்டார். பல தசாப்தங்களாக, நுவேவா ஓசியானியா (Nueva Oceania) என்ற சிறிய கிராமத்தில் வசிக்கும் தாமஸ், வெளியாட்களுடன் தொடர்பைத் தவிர்க்கும் இந்த நாடோடி மக்களுக்கு அண்டை வீட்டாராகவே இருந்தார். இருப்பினும், மிகச் சமீப காலம் வரை, அவர் அவர்களை அரிதாகவே பார்த்திருந்தார். மாஷ்கோ பைரோ மக்கள் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உலகத்துடனான தொடர்பைத் துண்டித்துள்ளனர். அவர்கள் நீண்ட வில் மற்றும் அம்புகளைக் கொண்டு வேட்டையாடுகிறார்கள். அவர்களுக்குத் தேவையான எல்லாவற்றுக்கும் அமேசான் மழைக்காடுகளை நம்பியுள்ளனர். "அவர்கள் மிருகங்களைப் போலவும், பல வகையான பறவைகளைப் போலவும் சத்தம் எழுப்பியும், விசில் அடித்தும் என்னைச் சுற்றி வளைக்கத் தொடங்கினர்," என்று தாமஸ் நினைவு கூர்கிறார். "நான் தொடர்ந்து 'நோமோல்' (Nomole) (சகோதரர்) என்று சொல்லிக் கொண்டே இருந்தேன். பின்னர் அவர்கள் கூடினர், அவர்கள் நெருக்கமாக இருந்ததாக உணர்ந்தோம். எனவே நாங்கள் ஆற்றை நோக்கி ஓடினோம்." படக்குறிப்பு, மாஷ்கோ பைரோ மக்களைப் பாதுகாக்க தாமஸ் விரும்புகிறார்: "அவர்கள் எப்படி வாழ்கிறார்களோ, அப்படியே வாழ விடுங்கள்." மனித உரிமைகள் அமைப்பான சர்வைவல் இன்டர்நேஷனல் (Survival International) சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கை, உலகில் இன்னும் குறைந்தது 196 'தொடர்பற்ற குழுக்கள்' இருப்பதாகக் கூறுகிறது. மாஷ்கோ பைரோ பழங்குடியினர் அவற்றில் மிகப் பெரிய குழுவினர் என்று நம்பப்படுகிறது. அவர்களைப் பாதுகாக்க அரசுகள் அதிக நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்தக் குழுக்களில் பாதி பேர் அடுத்த தசாப்தத்தில் அழிக்கப்படலாம் என்று அறிக்கை கூறுகிறது. மரங்களை வெட்டுதல், சுரங்கத் தொழில் அல்லது எண்ணெய் எடுப்பது போன்றவற்றால் அவர்களுக்கு மிகப் பெரிய அபாயங்கள் இருப்பதாக அந்த அமைப்பு கூறுகிறது. தொடர்பற்ற குழுக்கள் சாதாரண நோய்களால் மிகவும் எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்கள். எனவே, சுவிசேஷ மிஷனரிகள் மற்றும் சமூக ஊடகப் பிரபலங்களுடனான தொடர்பு ஒரு அச்சுறுத்தலாக உள்ளது என்று அறிக்கை கூறுகிறது. சமீபத்தில், மாஷ்கோ பைரோ மக்கள் நுவேவா ஓசியானியாவுக்கு அதிகமாக வரத் தொடங்கியுள்ளதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். இந்தக் கிராமம் ஏழு அல்லது எட்டு குடும்பங்களைக் கொண்ட ஒரு மீன்பிடி சமூகம். இது அருகிலுள்ள குடியிருப்புக்கு படகில் செல்ல 10 மணி நேரம் ஆகும் தூரத்தில் அமைந்துள்ளது. இந்தப் பகுதி தொடர்பற்ற குழுக்களுக்கான பாதுகாக்கப்பட்ட காப்பகமாக அங்கீகரிக்கப்படவில்லை. இங்கு மரங்களை வெட்டும் நிறுவனங்கள் செயல்படுகின்றன. மரங்களை வெட்டும் இயந்திரங்களின் சத்தம் சில சமயங்களில் இரவும் பகலும் கேட்கிறது. மாஷ்கோ பைரோ மக்கள் தங்கள் காடு அழிக்கப்படுவதைக் காண்கிறார்கள் என்று தாமஸ் கூறுகிறார். நுவேவா ஓசியானியாவில், மக்கள் முரண்பட்ட உணர்வுகளுடன் இருப்பதாகக் கூறுகின்றனர். மாஷ்கோ பைரோவின் அம்புகளைப் பார்த்து அவர்கள் பயப்படுகிறார்கள், ஆனால் காட்டில் வாழும் தங்கள் "சகோதரர்கள்" மீது அவர்களுக்கு ஆழ்ந்த மரியாதை உள்ளது, மேலும் அவர்களைப் பாதுகாக்க விரும்புகிறார்கள். "அவர்கள் எப்படி வாழ்கிறார்களோ, அப்படியே வாழ விடுங்கள், நாம் அவர்களின் கலாசாரத்தை மாற்ற முடியாது. அதனால்தான் நாங்கள் இடைவெளியைக் கடைப்பிடிக்கிறோம்," என்று தாமஸ் கூறுகிறார். பட மூலாதாரம், Fenamad படக்குறிப்பு, பெருவின் மாட்ரே டி டியோஸ் மாகாணத்தில் ஜூன் 2024 அன்று எடுக்கப்பட்ட மாஷ்கோ பைரோ மக்களின் புகைப்படம் மாஷ்கோ பைரோவின் வாழ்வாதாரத்துக்கு ஏற்படும் பாதிப்பு, வன்முறை அச்சுறுத்தல் மற்றும் மரங்களை வெட்டுபவர்களால் மாஷ்கோ பைரோ மக்கள் நோய் தொற்றுக்கு ஆளாகும் வாய்ப்பு இருப்பதாக நுவேவா ஓசியானியா மக்கள் கவலைப்படுகிறார்கள். நாங்கள் கிராமத்தில் இருந்தபோது, மாஷ்கோ பைரோ மக்கள் மீண்டும் தங்கள் இருப்பை உணர வைத்தனர். இரண்டு வயது மகள் கொண்ட இளம் தாய் லெடிசியா ரோட்ரிக்ஸ் லோபஸ் காட்டில் பழங்களைப் பறித்துக் கொண்டிருந்தபோது அவர்களின் சத்தத்தைக் கேட்டார். "பலரின் கூக்குரல் சத்தங்களை கேட்டோம். ஒரு பெரிய குழு கத்துவது போல இருந்தது," என்று அவர் எங்களிடம் கூறினார். மாஷ்கோ பைரோ மக்களை அவர் சந்தித்தது அதுவே முதல் முறை, அதனால் அவர் ஓடினார். ஒரு மணி நேரத்துக்குப் பிறகும், பயத்தால் அவரது தலை துடித்துக் கொண்டிருந்தது. "மரம் வெட்டுபவர்கள் மற்றும் நிறுவனங்கள் காடுகளை வெட்டுவதால் அவர்கள் பயத்தில் ஓடி வந்து எங்களுக்கு அருகில் வந்து விடுகிறார்கள்," என்று அவர் கூறினார். "அவர்கள் எங்களிடம் எப்படி நடந்துகொள்வார்கள் என்று எங்களுக்குத் தெரியாது. அதுதான் எனக்குப் பயமாக இருக்கிறது." 2022 இல், இரண்டு மரம் வெட்டுபவர்களை மாஷ்கோ பைரோவினர் தாக்கினர். ஒருவர் வயிற்றில் அம்பு பாய்ந்தது. அவர் உயிர் பிழைத்தார், ஆனால் மற்றொருவர் உடல் சில நாட்களுக்குப் பிறகு ஒன்பது அம்பு காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது. பெரு அரசு தனிமைப்படுத்தப்பட்ட மக்களுடன் தொடர்பு கொள்வதில்லை என்ற கொள்கையைக் கொண்டுள்ளது. அவர்களுடன் தொடர்பை ஆரம்பிப்பது சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட மக்களுடனான ஆரம்ப தொடர்பால், நோய், வறுமை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை ஏற்பட்டு முழு குழுக்களும் அழிக்கப்படுவதைக் கண்ட பழங்குடி உரிமைக் குழுக்களின் பல தசாப்தகால போராட்டத்திற்கு பிறகு இந்த கொள்கை முதல் முறையாக பிரேசிலில் உருவானது. 1980களில், பெருவில் உள்ள நஹாவ் (Nahau) மக்கள் வெளி உலகத்துடன் ஆரம்பத் தொடர்பு கொண்டபோது, அவர்களின் மக்கள் தொகையில் 50% பேர் சில ஆண்டுகளில் இறந்தனர். 1990களில், முருகானுவா (Muruhanua) மக்கள் அதே விதியை எதிர்கொண்டனர். "தனிமைப்படுத்தப்பட்ட பழங்குடி மக்கள் தொற்றுநோயியல் ரீதியாக மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள். எந்தவொரு தொடர்பும் அவர்களுக்கு நோய்களைப் பரப்பக்கூடும். எளிமையான நோய்கள் கூட அவர்களை அழித்துவிடக்கூடும்," என்று பெருவியன் பழங்குடி உரிமைக் குழுவான ஃபெமனாட்டைச் சேர்ந்த இஸ்ஸ்ரைல் அக்விஸ்ஸே கூறுகிறார். "கலாசார ரீதியாகவும் எந்தவொரு தொடர்பும் அல்லது தலையீடும் ஒரு சமூகமாக அவர்களின் வாழ்க்கைக்கும் அவர்களின் ஆரோக்கியத்துக்கும் மிகவும் தீங்கு விளைவிக்கும்." தொடர்பற்ற பழங்குடியினரின் அண்டை பகுதியை சேர்ந்தவர்களுக்கு, இந்த கொள்கையின் யதார்த்தம் சிக்கலானதாக இருக்கலாம். மாஷ்கோ பைரோவை அவர் சந்தித்த காட்டுத் திறந்தவெளியில் தாமஸ் எங்களைச் சுற்றிக் காட்டும்போது, அவர் நின்று, கைகளை குவித்து விசில் அடித்து, பின்னர் அமைதியாகக் காத்திருக்கிறார். "அவர்கள் பதிலளித்தால், நாம் திரும்பிச் செல்ல வேண்டும்," என்று அவர் கூறுகிறார். பூச்சிகள் மற்றும் பறவைகளின் சலசலப்பு மட்டுமே கேட்கிறது. "அவர்கள் இங்கு இல்லை." ஒரு பதற்றமான சூழ்நிலையைத் தனியாகச் சமாளிக்க நுவேவா ஓசியானியாவின் குடியிருப்பாளர்களை அரசு விட்டுவிட்டதாகத் தாமஸ் கருதுகிறார். மாஷ்கோ பைரோ குழுவினர் எடுத்துச் செல்ல தனது தோட்டத்தில் அவர் காய், கனிகளைத் தரும் செடிகளை நடுகிறார். இது அவரும் மற்ற கிராம மக்களும் தங்கள் அண்டை வீட்டாருக்கு உதவவும், தங்களைப் பாதுகாக்கவும் கண்டுபிடித்த ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாகும். 'இந்த வாழைப் பழங்களை வைத்துக்கொள்ளுங்கள், இது ஒரு பரிசு', நீங்கள் அவற்றைத் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். என்மீது அம்பு எய்யாதீர்கள் என அவர்களிடம் சொல்வதற்கான வார்த்தைகள் எனக்கு தெரிந்திருந்தால் நன்றாக இருக்கும்." கட்டுப்பாட்டு நிலையத்தில்... அடர்ந்த காட்டின் மறுபுறத்தில், சுமார் 200 கிமீ தென்கிழக்கில், நிலைமை மிகவும் வேறுபட்டது. அங்கு, மனு ஆற்றுக்கு அருகில், ஒரு வனக் காப்பகமாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பகுதியில் மாஷ்கோ பைரோ வாழ்கின்றனர். பெருவின் கலாசார அமைச்சகம் மற்றும் ஃபெனமாட் இங்கு 'நோமோல்' கட்டுப்பாட்டு நிலையத்தை நடத்தி வருகின்றன. இதில் எட்டு முகவர்கள் பணியாற்றுகின்றனர். மாஷ்கோ பைரோவுக்கும் உள்ளூர் கிராமங்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பல கொலைகளில் முடிந்தபின்னர், 2013 இல் இது அமைக்கப்பட்டது. கட்டுப்பாட்டு நிலையத்தின் தலைவராக உள்ள அன்டோனியோ ட்ரிகோசோ யடால்கோவின் வேலை அது மீண்டும் நிகழாமல் தடுப்பதுதான். மாஷ்கோ பைரோ மக்கள் அடிக்கடி, சில சமயங்களில் வாரத்திற்குப் பல முறை வருகிறார்கள். அவர்கள் நுவேவா ஓசியானியாவுக்கு அருகிலுள்ளவர்களை விட வேறுபட்டவர்கள். அவர்களுக்கு ஒருவருக்கொருவர் தெரியாது என்று முகவர்கள் நம்புகிறார்கள். பட மூலாதாரம், Fenamad படக்குறிப்பு, மாஷ்கோ பைரோ மக்கள் நோமோல் கட்டுப்பாட்டு நிலையத்தை அணுகுகின்றனர் "அவர்கள் எப்போதும் ஒரே இடத்தில் வெளியே வருகிறார்கள். அங்கிருந்துதான் அவர்கள் குரல் கொடுக்கிறார்கள்," என்று அன்டோனியோ அகலமான மனு ஆற்றின் குறுக்கே எதிரே உள்ள ஒரு சிறிய கூழாங்கற்கள் நிறைந்த கடற்கரையைச் சுட்டிக் காட்டுகிறார். அவர்கள் வாழை, மரவள்ளிக்கிழங்கு அல்லது கரும்புகளைக் கேட்கிறார்கள். "நாங்கள் பதிலளிக்கவில்லை என்றால், அவர்கள் நாள் முழுவதும் அங்கேயே உட்கார்ந்து காத்திருக்கிறார்கள்," என்று அன்டோனியோ கூறுகிறார். சுற்றுலாப் பயணிகள் அல்லது உள்ளூர் படகுகள் கடந்து சென்றால், முகவர்கள் அதைத் தவிர்க்க முயல்கிறார்கள். பொதுவாகக் கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறார்கள். கட்டுப்பாட்டு நிலையத்தில் உணவுப் பயிர்களை வளர்க்க ஒரு சிறிய தோட்டம் உள்ளது. உணவு தீர்ந்து போகும்போது, அவர்கள் உள்ளூர் கிராமத்தில் இருந்து பொருட்களைக் கேட்கிறார்கள். இவை கிடைக்கவில்லை என்றால், இன்னும் சில நாட்களில் திரும்பி வருமாறு முகவர்கள் மாஷ்கோ பைரோவினரிடம் சொல்கின்றனர். இதுவரை அது வேலை செய்து சமீபத்தில் சிறிய மோதல்கள் மட்டுமே நடந்துள்ளன. வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என சுமார் 40 பேரை அன்டோனியோ வழக்கமாகப் பார்க்கிறார். அவர்கள் தங்களுக்கு விலங்குகளின் பெயர்களைச் சூட்டிக் கொள்கிறார்கள். தலைவருக்கு கமோடோலோ (தேனீ) என்று பெயர். அவர் ஒரு கண்டிப்பான மனிதர் என்றும் ஒருபோதும் சிரிப்பதில்லை என்றும் முகவர்கள் கூறுகின்றனர். மற்றொரு தலைவர், ட்கோட்கோ (கழுகு) ஒரு நகைச்சுவை உணர்வு கொண்டவர், அவர் நிறையச் சிரிக்கிறார் மற்றும் முகவர்களை கேலி செய்கிறார். யோமாக்கோ (டிராகன்) என்ற ஒரு இளம் பெண் இருக்கிறார், அவருக்கும் நல்ல நகைச்சுவை உணர்வு இருப்பதாக முகவர்கள் கூறுகிறார்கள். மாஷ்கோ பைரோ வெளி உலகத்தில் அதிக ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை, ஆனால் அவர்கள் சந்திக்கும் முகவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்கள் தங்கள் குடும்பங்களைப் பற்றியும், அவர்கள் எங்கு வாழ்கிறார்கள் என்றும் கேட்கிறார்கள். படக்குறிப்பு, நோமோல் கட்டுப்பாட்டு நிலையத்தில் உள்ள முகவர்களில் ஒருவருக்கு, மாஷ்கோ பைரோ மக்களால் பரிசாக வழங்கப்பட்ட குரங்குப் பல் அட்டிகை ஒரு முகவர் கர்ப்பமாகி மகப்பேறு விடுப்பில் சென்றபோது, குழந்தை விளையாடுவதற்கு ஒரு ஹவுலர் குரங்கின் தொண்டையில் இருந்து தயாரிக்கப்பட்ட கிலுகிலுப்பையை (rattle) அவர்கள் கொண்டு வந்தனர். அவர்கள் முகவர்களின் உடைகள், குறிப்பாக சிவப்பு அல்லது பச்சை நிற விளையாட்டு உடைகள் ஆகியவற்றில் ஆர்வம் காட்டுகிறார்கள். "நாங்கள் நெருங்கும் போது, பழைய, கிழிந்த, பொத்தான்கள் இல்லாத ஆடைகளை அணிந்து கொள்கிறோம் - அதனால் அவர்கள் அவற்றைப் பறித்துக் கொள்ள மாட்டார்கள்," என்று அன்டோனியோ கூறுகிறார். "முன்பு, பூச்சி நார்களில் இருந்து தயாரிக்கப்பட்ட அழகான பாரம்பரிய பாவாடைகளை அணிந்தார்கள், ஆனால் இப்போது அவர்களில் சிலர், சுற்றுலாப் படகுகள் கடந்து செல்லும்போது, ஆடைகள் அல்லது பூட்ஸ்களைப் பெறுகிறார்கள்," என்று கட்டுப்பாட்டு நிலையத்தில் ஒரு முகவரான எட்வர்டோ பாஞ்சோ பிஸார்லோ கூறுகிறார். பட மூலாதாரம், Fenamad படக்குறிப்பு, மாஷ்கோ பைரோ மக்கள் யார் என்பது பற்றி இன்னும் குறைவாகவே அறியப்படுகிறது. ஆனால் காட்டில் உள்ள வாழ்க்கை பற்றி குழுவினர் கேட்கும்போதெல்லாம், மாஷ்கோ பைரோ உரையாடலைத் துண்டிக்கிறார்கள். "ஒருமுறை, அவர்கள் எப்படித் தீ மூட்டுகிறார்கள் என்று நான் கேட்டேன்," என்று அன்டோனியோ கூறுகிறார். "அவர்கள் என்னிடம், 'உங்களிடம் மரம் இருக்கிறது, உங்களுக்குத் தெரியும்' என்று சொன்னார்கள். நான் வலியுறுத்திக் கேட்டபோது, அவர்கள், 'உங்களிடம் ஏற்கெனவே இந்த விஷயங்கள் அனைத்தும் உள்ளன - நீங்கள் ஏன் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்கள்?' என்று கேட்டனர்." யாராவது சிறிது காலம் வராமல் இருந்தால், அவர்கள் எங்கே என்று முகவர்கள் கேட்பார்கள். மாஷ்கோ பைரோ, "கேட்காதே" என்று சொன்னால், அந்த நபர் இறந்துவிட்டார் என்று அர்த்தம் என்று அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள். பல வருட தொடர்பு இருந்தபோதிலும், மாஷ்கோ பைரோ எப்படி வாழ்கிறார்கள் அல்லது ஏன் காட்டில் இருக்கிறார்கள் என்பது பற்றி முகவர்களுக்கு இன்னும் குறைவாகவே தெரியும். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், "ரப்பர் பிரபுக்கள்" என்று அழைக்கப்படுபவர்களால் பரவலான சுரண்டல் மற்றும் படுகொலைகளில் இருந்து தப்பி, ஆழமான காட்டுக்குத் தப்பிச் சென்ற பழங்குடி மக்களின் வாரிசுகள் என்று நம்பப்படுகிறது. மாஷ்கோ பைரோ, தென்மேற்குப் பெருவின் ஒரு பழங்குடி மக்களான யினியுடன் (Yine) நெருங்கிய உறவுடையவர்கள் என்று வல்லுநர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் ஒரே மொழியின் பழமையான வட்டார மொழியைப் பேசுகிறார்கள். அதை முகவர்களும் (அவர்களும் யினி பழங்குடியினரே) கற்றுக்கொள்ள முடிந்தது. ஆனால், யினி மக்கள் நீண்ட காலமாக ஆற்றுப் பயணிகள், விவசாயிகள் மற்றும் மீனவர்களாக இருந்தனர். அதேசமயம், மாஷ்கோ பைரோ இந்த விஷயங்களை எப்படிச் செய்வது என்பதை மறந்துவிட்டதாகத் தெரிகிறது. அவர்கள் பாதுகாப்பாக இருக்க நாடோடிகளாகவும் வேட்டையாடுபவர்களாகவும் மாறியிருக்கலாம். "அவர்கள் ஒரு பகுதியில் சிறிது காலம் தங்கி, ஒரு முகாமை அமைத்து, முழு குடும்பமும் கூடுகிறார்கள் என நான் புரிந்துகொள்கிறேன்," என்று அன்டோனியோ கூறுகிறார். "அந்த இடத்தை சுற்றியுள்ள அனைத்தையும் வேட்டையாடியவுடன், அவர்கள் வேறொரு இடத்துக்குச் செல்கிறார்கள்." பட மூலாதாரம், Fenamad படக்குறிப்பு, மாஷ்கோ பைரோ மக்கள் அமேசான் மழைக்காடுகளில் ஈட்டிகள் மற்றும் அம்புகளைப் பயன்படுத்தி வேட்டையாடுகிறார்கள். ஃபெனமாட்டின் இஸ்ஸ்ரைல் அக்விஸ்ஸே, 100-க்கும் மேற்பட்ட மக்கள் பல்வேறு நேரங்களில் கட்டுப்பாட்டு நிலையத்துக்கு வந்துள்ளனர் என்று கூறுகிறார். "அவர்கள் தங்கள் உணவை பல்வகைப்படுத்த வாழைப்பழங்கள் மற்றும் மரவள்ளிக்கிழங்கைக் கேட்கிறார்கள், ஆனால் சில குடும்பங்கள் அதன்பிறகு மாதங்கள் அல்லது வருடங்களாக மறைந்துவிடுகின்றன," என்று அவர் கூறுகிறார். "அவர்கள், 'நான் சில காலம் சென்றுவிட்டு, பின்னர் திரும்பி வருவேன்' என்று சொல்லிவிட்டு விடைபெறுகிறார்கள்." இந்தப் பகுதியில் உள்ள மாஷ்கோ பைரோ மக்கள் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளனர். ஆனால் சட்டவிரோதச் சுரங்கத் தொழில் பரவலாக இருக்கும் ஒரு பகுதியுடன் இணைக்கும் ஒரு சாலையை அரசு கட்டமைக்கிறது. ஆனால், மாஷ்கோ பைரோ வெளி உலகத்துடன் இணைய விரும்பவில்லை என்பது முகவர்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது. "இந்த நிலையத்தில் எனது அனுபவத்திலிருந்து, அவர்கள் வெளியுலகுடன் நெருங்கிய தொடர்பை விரும்பவில்லை என்பது தெரிகிறது," என்று அன்டோனியோ கூறுகிறார். படக்குறிப்பு, நோமோல் கட்டுப்பாட்டு நிலையத்தில் வழக்கமாக சுமார் 40 பேரைப் பார்ப்பதாக கூறுகிறார் அன்டோனியோ "ஒருவேளை குழந்தைகள் விரும்பலாம், அவர்கள் வளரும்போது, நாங்கள் ஆடை அணிந்திருப்பதைக் காணும்போது ஒருவேளை 10 அல்லது 20 ஆண்டுகளில் மாறலாம். ஆனால் பெரியவர்கள் மாற மாட்டார்கள். நாங்கள் இங்கு இருப்பதை கூட அவர்கள் விரும்பவில்லை," என்று அவர் கூறுகிறார். 2016 இல், மாஷ்கோ பைரோவின் காப்பகத்தை நுவேவா ஓசியானியா உள்ளிட்ட பகுதிகளுக்கு நீட்டிக்க ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், அது ஒருபோதும் சட்டமாக இயற்றப்படவில்லை. "அவர்கள் எங்களைப் போலச் சுதந்திரமாக இருக்க வேண்டும்," என்று தாமஸ் கூறுகிறார். "அவர்கள் பல ஆண்டுகளாக மிகவும் அமைதியாக வாழ்ந்தார்கள், இப்போது அவர்களின் காடுகள் அழிக்கப்படுகின்றன - அழிக்கப்பட்டு வருகின்றன என்பதை நாங்கள் அறிவோம்." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj6ny718p8yo
-
செம்மணி புதைகுழிக்குள் வெள்ளம்
இதற்காக தான் இழுத்தடிப்பு என்பது எப்பவோ தெரிந்ததே!
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
மிக்க நன்றி @கந்தப்பு அண்ணா. போட்டியில் தொடக்கம் முதலே முன்னணியில் இருந்த 1) @Ahasthiyan அண்ணா, 2) @alvayan அண்ணா, 3) @செம்பாட்டான் அண்ணா ஆகியோருக்கு வாழ்த்துகள். போட்டியில் கலந்து கொண்ட கள உறவுகளுக்கு நன்றியும் வாழ்த்துகளும்.
-
ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்(50 ஓவர்) போட்டித் தொடர் - 2025
அணுகுமுறை மாறியதால் வசமான உலகக்கோப்பை - இந்திய வீராங்கனைகள் சாதித்தது எப்படி? பட மூலாதாரம், Pankaj Nangia/Getty படக்குறிப்பு, உலகக்கோப்பையுடன் இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் கட்டுரை தகவல் மு.பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 2 நவம்பர் 2025, 19:52 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய பெண்கள் அணி இப்போது உலக சாம்பியன். ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றது இந்திய அணி. லீக் சுற்றின் ஒருகட்டத்தில் தொடர்ந்து 3 போட்டிகளில் தோற்றிருந்தது இந்திய அணி. அவர்களால் அரையிறுதிக்குத் தகுதி பெற முடியுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், மிகச் சிறப்பாக கம்பேக் கொடுத்து, அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வெளியேற்றிய இந்த இந்திய அணி, இப்போது சாம்பியனும் ஆகியிருக்கிறது. மிகமுக்கியமான இந்த இறுதிப் போட்டியில் பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என அனைத்து ஏரியாவிலும் முழுமையான செயல்பாட்டைக் கொடுத்தது இந்திய அணி. இந்த வெற்றியைப் பெற முக்கியமான கட்டங்களில் இந்திய வீராங்கனைகள் தங்கள் அணுகுமுறைகளை மாற்றவேண்டியிருந்தது, பெரும் எழுச்சியைக் காணவேண்டியிருந்தது, உறுதியாகப் போராடவேண்டியிருந்தது. இந்த அணி அவை அனைத்தையுமே செய்திருக்கிறது. இறுதிப் போட்டியில் நல்ல தொடக்கம் நவி மும்பையில் நடந்த இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய ஓப்பனர்கள் ஷஃபாலி வெர்மா, ஸ்மிரிதி மந்தனா இருவருமே இந்த இன்னிங்ஸை சிறப்பாகத் தொடங்கினார்கள். 17.4 ஓவர்களில் 104 ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தது இந்த ஜோடி. மரிசான் காப் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தை வழக்கத்துக்கு மாறாக ஸ்மிரிதி மந்தனா எதிர்கொண்டார். வழக்கமாக அவருடன் ஓப்பனராகக் களமிறங்கிய பிரதிகா ராவல் தான் முதல் பந்தை எதிர்கொண்டிருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் கூட ஷஃபாலி தான் முதல் பந்தை சந்தித்தார். ஆனால், இந்தப் போட்டியில் அது மாறியிருந்தது. இறுதிப் போட்டிக்கு முன் பிபிசி தமிழிடம் பேசிய சென்டர் ஆஃப் எக்சலன்ஸைச் சேர்ந்த பயிற்சியாளர் ஆர்த்தி சங்கரன், "மரிசான் காப் வீசும் இன்ஸ்விங்கர்கள் பேட்டர்களுக்கு சவாலாக இருக்கும்" என்று குறிப்பிட்டிருந்தார். உள்ளே வரும் பந்துகள் வழக்கமாக வலது கை பேட்டர்களுக்கு சிக்கல் விளைவிக்கும். அதிலிருந்து ஷஃபாலியைக் காப்பதற்காக ஸ்மிரிதி இந்த முடிவை எடுத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் முதல் ஓவரில் எவ்வித ரிஸ்கும் எடுக்காமல் அதை மெய்டனும் ஆக்கினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஸ்மிரிதி - ஷஃபாலி இணை முதல் விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்தது ஸ்மிரிதி அவ்வளவு பாதுகாப்பாக இன்னிங்ஸைத் தொடங்க, தன் வழக்கமான பாணியில் இன்னிங்ஸை ஆரம்பித்தார் ஷஃபாலி. அயபோங்கா ககா வீசிய முதல் பந்தையே பௌண்டரிக்கு விரட்டி தன் ரன் கணக்கைத் தொடங்கினார். நான்காவது ஓவருக்குப் பிறகு இவர்கள் இருவருமே அதிரடியைக் கையில் எடுத்தார்கள். அதனால் ரன்ரேட் ஆறுக்கும் அதிகமாகவே இருந்துவந்தது. இந்த ஜோடியைப் பிரிக்க முடியாமல் தென்னாப்பிரிக்க பௌலர்கள் தடுமாற, 18வது ஓவரிலேயே ஆறாவது பௌலரைப் பயன்படுத்தினார் தென்னாப்பிரிக்க கேப்டன் லாரா வோல்ஃபார்ட். அப்படி ஆறாவது பௌலராக பந்துவீசிய டிரையான் தான் அந்த அணிக்கு முதல் விக்கெட்டை பெற்றுக்கொடுத்தார். அவர் பந்துவீச்சில் 43 ரன்கள் எடுத்திருந்த ஸ்மிரிதி மந்தனா கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இருந்தாலும், மிகப் பெரிய இறுதிப் போட்டியில் முதல் விக்கெட்டுக்கு 104 ரன்கள் சேர்த்தது இந்த தொடக்க ஜோடி. இரண்டாவது போட்டியிலேயே தாக்கம் ஏற்படுத்திய ஷஃபாலி வழக்கமாக அதிக பந்துகளை தூக்கி அடிக்கும் ஷஃபாலி வெர்மா, இந்த அதிமுக்கிய இறுதிப் போட்டியில் சற்றே கூடுதல் கவனத்துடன் விளையாடினார். நிறைய பந்துகளை தரையோடு அடிக்கவே பார்த்தார். அதுமட்டுமல்லாமல் பந்துவீச்சாளர் யார் என்று பார்த்துத்தான் தன் அணுகுமுறையையும் தேர்வு செய்தார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மிக இளம் வயதில் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருது வாங்கியது ஷஃபாலி தான் போட்டிக்கு முன்பு பேசியிருந்த ஆர்த்தி சங்கரன், மரிசான் காப் தவிர்த்து இடது கை ஸ்பின்னர் மலாபாவை கவனமாக எதிர்கொள்ளவேண்டும் என்று கூறியிருந்தார். ஷஃபாலி அப்படி கவனமாக ஆடியது போலத்தான் இருந்தது. மலாபா தனக்கு வீசிய 17 பந்துகளில் ஒன்றை மட்டுமே பௌண்டரி ஆக்கினார் ஷஃபாலி. அதுவும் முதல் பவர்பிளேயில் வீசப்பட்ட பந்தில். அதன்பிறகு அவர் பௌண்டரி அடிக்க நினைக்கக்கூட இல்லை. மலாபாவை கவனமாகத்தான் அவர் எதிர்கொண்டிருந்தார். அதேசமயம் அவருக்கு நல்ல 'விட்த்' (width) கிடைக்கும் பந்துகளைத் தண்டிக்கவும் அவர் தவறவில்லை. நன்கு கணித்து திட்டமிட்டு அவர் இந்த இன்னிங்ஸை கட்டமைத்தார். 49 பந்துகளில் அரைசதம் அடித்த ஷஃபாலி, சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 87 ரன்கள் (78 பந்துகள்) அடித்திருந்த நிலையில் அவர் ஆட்டமிழந்தார். தீப்தியின் மற்றுமொரு அரைசதம் ஷஃபாலி அவுட்டாகி சரியாக 11 பந்துகள் கழித்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் (24 ரன்கள்) வெளியேறினார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்ததால் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் சற்று பொறுமையாக ஆடத் தொடங்கினார். அதனால் ரன்ரேட் குறையத் தொடங்கியது. 28வது ஓவர் முடிவில் 5.92 ஆக இருந்த ரன்ரேட், 32வது ஓவர் முடிவில் 5.46 என்றானது. ஆனால் இது மோசமடையாமல் பார்த்துக்கொண்டார் தீப்தி ஷர்மா. மரிசான் காப் வீசிய 33வது ஓவரின் முதல் பந்தையே சிக்ஸருக்கு அனுப்பி தன்னுடைய ரன் வேகத்தைக் கூட்டினார் அவர். அதனால் இந்திய அணியின் ரன்ரேட் மறுபடியும் எழுச்சி பெறத் தொடங்கியது. ஹர்மன்ப்ரீத் கவுர் அவுட்டான பிறகும் கூட தீப்தி சீரான வேகத்தில் ரன் சேர்த்தார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்திய அணியின் ரன்ரேட் பாதிக்காத வகையில் ஆடினார் தீப்தி ஷர்மா 53 பந்துகளில் அரைசதம் அடித்த தீப்தி ஷர்மா, 58 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார். இடையே ரிச்சா கோஷ் தன் வழக்கமான அதிரடி ஆட்டத்தின் மூலம் 24 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்தார். அதனால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்க அணி தரப்பில் அயபோங்கா ககா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ரன் அவுட் மூலம் கிடைத்த முதல் விக்கெட் 299 என்ற இலக்கை சேஸ் செய்த தென்னாப்பிரிக்க அணியின் ஓப்பனர்கள் லாரா வோல்ஃபார்ட், டாஸ்மின் பிரிட்ஸ் இருவரும் நிதானமாகவே இன்னிங்ஸைத் தொடங்கினார்கள். முதல் 5 ஓவர்களில் அந்த அணி 18 ரன்களே எடுத்திருந்தது. அதன்பிறகு இருவருமே வேகமெடுக்கத் தொடங்கினார்கள். 8.5 ஓவர்களில் தென்னாப்பிரிக்க அணி 50 ரன்களைக் கடந்தது. இது பெரிய பார்ட்னர்ஷிப்பாக உருவெடுக்கும் என்று நினைத்திருந்த நிலையில், பிரிட்ஸ் ரன் அவுட் ஆனார். மிட் ஆன் திசைக்கு அவர் அடித்துவிட்டு ஓட, அங்கு நின்றிருந்த அமஞ்சோத் கவுர் டைரக்ட் ஹிட் அடித்து அவரை அவுட்டாக்கினார். அதுமட்டுமல்லாமல், நேராக எதிர் முனைக்கு ஓடாமல், கோணலாக பிரிட்ஸ் ஓடியதும் ரன் அவுட்டுக்குக் காரணமாக அமைந்தது. 17.7 மீட்டர் தூரத்தில் கிரீஸை அவர் அடைந்திருக்கலாம். ஆனால் கோணலாக ஓடியதால் 19 மீட்டர் ஓடியும் அவரால் கிரீஸுக்குள் வர முடியவில்லை. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அமஞ்சோத் செய்த ரன் அவுட் இந்தியாவின் விக்கெட் தேடலுக்கான முதல் பதிலாக அமைந்தது பிரிட்ஸின் மோசமான ரன் அவுட், அமஞ்சோத்தின் சிறந்த ஃபீல்டிங் இரண்டும் சேர்ந்து இந்தியாவின் முதல் விக்கெட்டுக்கான தேடலுக்குப் பதில் கொடுத்தன. ஆனால், அமஞ்சோத்தின் நல்ல ஃபீல்டிங் மட்டுமல்லாமல், அதே ஓவரில் ஜெமிமா செய்த நல்ல ஃபீல்டிங்குமே இந்த விக்கெட்டுக்கு வழிவகுத்தது. அதற்கு முந்தைய பந்தை கவர் திசையில் அடித்து ஒரு ரன் எடுக்க முயற்சி செய்தார் பிரிட்ஸ். ஆனால், அதை ஜெமிமா சிறப்பாகத் தடுத்துவிட அவரால் ரன் எடுக்க முடியவில்லை. தொடர்ந்து அடுத்த பந்திலேயே அவர் அந்த ஒற்றை ரன்னைத் தேட அந்த விக்கெட் கிடைத்தது. "ஜெமிமா அந்த சிங்கிளைத் தடுத்தது இந்த விக்கெட்டுக்கு காரணமாக அமைந்தது" என வர்ணனையில் இருந்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசேன் கூறினார். அந்த விக்கெட்டுக்குப் பிறகு மிக விரைவாக இரண்டாவது விக்கெட்டும் கிடைத்தது. ஃபீல்டிங்கில் 2 கேட்ச்களைத் தவறவிட்டிருந்த பாஷ், பேட்டிங்கிலும் தடுமாறினார். 6 பந்துகள் சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் ஶ்ரீ சரணியின் பந்துவீச்சில் வெளியேறினார். பந்துவீச்சிலும் கைகொடுத்த ஷஃபாலி இந்த உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஆரம்பத்தில் இடம்பிடிக்காத ஷஃபாலி வெர்மாவுக்கு, கடந்த சில நாள்கள் நிறைய மாற்றங்கள் நடந்திருக்கின்றன. பிரதிகா ராவல் காயம் காரணமாக அணியில் இடம்பிடித்தவர், ஆடிய இரண்டாவது போட்டியிலேயே 87 ரன்கள் எடுத்தார். ஆனால், பேட்டிங் மட்டுமல்லாமல் இந்த இறுதிப் போட்டியில் பந்துவீச்சிலும் இந்திய அணிக்குக் கைகொடுத்தார் ஷஃபாலி வெர்மா. மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வோல்ஃபார்ட், சுனே லீஸ் ஜோடி இந்திய பந்துவீச்சை சிறப்பாகக் கையாண்டது. இருவருமே அதிரடியாக ஆடி ரன் விகிதம் குறையாமல் பார்த்துக்கொண்டனர். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, யாரும் எதிர்பாராத வகையில் பந்துவீச்சிலும் அசத்தினார் ஷஃபாலி அந்த பார்ட்னர்ஷிப்பை உடைப்பதற்கான ஷஃபாலி வெர்மாவை பந்துவீச அழைத்தார் ஹர்மன்ப்ரீத் கவுர். எதிர்பார்த்ததைப் போலவே இரண்டாவது பந்திலேயே சுனே லீஸின் விக்கெட்டை அவர் கைப்பற்றினார். ஆனால், ஷெஃபாலியின் வேட்டை அதோடு நிற்கவில்லை. அடுத்த ஓவரின் முதல் பந்தில் அனுபவ வீராங்கனையான மரிசான் காப்பின் விக்கெட்டையும் வீழ்த்தி தென்னாப்பிரிக்காவுக்கு பின்னடைவை ஏற்படுத்தினார். பந்தின் வேகத்தை நன்கு கூட்டி குறைத்து தன் பந்துவீச்சில் வித்தியாசம் காட்டினார் ஷஃபாலி வெர்மா. இந்த ஆடுகளத்தில் பந்து நன்கு நின்று வந்ததால், அவர் வேகத்தைக் குறைத்தபோது தென்னாப்பிரிக்க பேட்டர்களால் அதை கணிப்பது கடினமாக இருந்தது. போராடிய வோல்ஃபார்ட், ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய தீப்தி ஒருபக்கம் விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்துகொண்டே இருந்தாலும், மற்றொரு பக்கம் தென்னாப்பிரிக்க கேப்டன் லாரா வோல்ஃபார்ட் உறுதியாகப் போராடினார். சீரான இடைவெளிகளில் அவர் பௌண்டரிகள் அடித்துக்கொண்டே இருக்க தேவைப்படும் ரன் ரேட் ஓரளவு கட்டுக்குள்ளேயே இருந்தது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அரையிறுதி, இறுதி என தொடர்ந்து இரு பெரிய போட்டிகளிலும் சதமடித்திருக்கிறார் வோல்ஃபார்ட் 45 பந்துகளில் அரைசதம் அடித்த வோல்ஃபார்ட், 96 பந்துகளில் சதமடித்தார். இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியிலும் அவர் சதமடித்திருந்தார். இதன்மூலம் பெண்கள் உலகக் கோப்பையின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் சதமடித்த முதல் வீராங்கனை என்ற சாதனை படைத்தார் அவர். என்னதான் சதம் அடித்தாலும், வெற்றியை இலக்காகக் கொண்டிருந்ததால் அவர் கொண்டாடவில்லை. இந்தியா பேட்டிங்கில் சற்று பின்தங்கியபோது எப்படி தீப்தி முன்னாள் வந்து இந்திய ரன்ரேட்டை மறுபடியும் உயர்த்தினாரோ, அதேபோல் பந்துவீச்சிலும் அதைச் செய்தார் தீப்தி. 42வது ஓவர் வீசவந்த அவர், இந்தியாவின் கை மீண்டும் ஓங்குவதற்குக் காரணமாக அமைந்தார். அந்த ஓவரின் முதல் பந்தை வோல்ஃபார்ட் தூக்கி அடிக்க, தட்டுத் தடுமாறி அந்தப் பந்தைப் பிடித்தார் அமஞ்சோத் கவுர். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இறுதிப் போட்டியில் அரைசதம் அடித்ததோடு 5 விக்கெட்டுகளும் வீழ்த்தினார் தீப்தி ஷர்மா மூன்று பந்துகள் கழித்து இன்னொரு முன்னணி வீராங்கனையான டிரையானையும் அவுட்டாக்கினார் அவர். அது தென்னாப்பிரிக்காவுக்குப் பெரிய பின்னடைவாக அமைந்தது. லீக் சுற்றில் இந்தியாவுக்கு சவாலாக விளங்கிய நெடீன் டி கிளார்க் இந்தப் போட்டியிலும் போராடிப் பார்த்தார். அவர் கொடுத்த கேட்ச்சை ஜெமிமா தவறவிட்டது ஆட்டத்தை இன்னும் பரபரப்பாக்கியது. ஆனால், மறுபக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்துகொண்டே இருந்த நிலையில், ஒரு பெரிய ஷாட் அடிக்க முயற்சி செய்து அவரும் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். இதன்மூலம் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக சாம்பியன் ஆனது. 87 ரன்கள் அடித்ததோடு இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்திய ஷஃபாலி வெர்மா இந்தப் போட்டியின் 'பிளேயர் ஆஃப் தி மேட்ச்' விருது வென்றார். போட்டிக்குப் பின் பேசிய அவர், "என்னை கடவுள் ஏதோவொரு காரணத்துக்காகத்தான் இங்கு அனுப்பியிருக்கிறார் என்று நினைத்தேன். அது இன்று பிரதிபலித்துவிட்டது. இது கடினமாகத்தான் இருந்தது. ஆனால், நான் என் மீது நம்பிக்கை வைத்தேன். என்னால் நிதானமாக இருக்க முடிந்தால், எல்லாமே செய்ய முடியும் என்று நம்பினேன்" எனக் கூறினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பிளேயர் ஆஃப் தி டோர்னமென்ட் - தீப்தி ஷர்மா இறுதிப் போட்டியில் அரைசதம் அடித்ததோடு 5 விக்கெட்டுகளும் வீழ்த்திய ஆல்ரவுண்டர் தீப்தி ஷர்மா 'பிளேயர் ஆஃப் தி டோர்னமென்ட்' விருது வென்றார். இந்த உலகக் கோப்பையில் 3 அரைசதங்கள் உள்பட தீப்தி 215 ரன்கள் எடுத்தார். மேலும், 22 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார். இந்த உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீராங்கனை தீப்தி தான். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3ep0v9kpleo
-
இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் கத்திகுத்து - 9 பேர் காயம்
பிரிட்டன் ரயிலில் நடந்த கத்திக்குத்து - 9 பேர் கவலைக்கிடம் பட மூலாதாரம், PA Media படக்குறிப்பு, இச்சம்பவம், தொடர்பாக போலீஸார் இருவரை கைது செய்துள்ளனர். 2 நவம்பர் 2025 பிரிட்டனின் கேம்பிரிட்ஜ்ஷயரில் நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 10 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுள் 9 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக, பிரிட்டிஷ் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. டான்கேஸ்டரில் இருந்து லண்டன் கிங்ஸ் கிராஸ் சென்றுகொண்டிருந்த ரயிலில் இந்த தாக்குதல் நடைபெற்றது. இந்த சம்பவம் தொடர்பாக பிரிட்டன் நாட்டவர்கள் இரண்டு பேரை காவல்துறை கைது செய்துள்ளது. அவர்கள் யாரென்ற அடையாளம் இதுவரை வெளியாகவில்லை. சனிக்கிழமை இரவு 7.42 மணியளவில் (உள்ளூர் நேரப்படி) பயணிகள் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு புகார் அளித்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. இச்சம்பவத்தைத் தொடர்ந்து அந்த ரயில் கேம்பிரிட்ஜ்ஷயரில் உள்ள ஹண்டிங்டன் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட வேண்டியிருந்தது. எனினும், அந்த ரயில் வழக்கமாக அங்கு நிற்காது. பயணத்தை ஒத்திவைக்க அறிவுறுத்தல் பட மூலாதாரம், PA Media படக்குறிப்பு, காயமடைந்தவர்களின் விவரங்களை போலீஸார் வெளியிடவில்லை. உள்ளூர் நேரப்படி இரவு 9.45 மணியளவில், இச்சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டதாக, கேம்பிரிட்ஜ்ஷயர் மேயர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பான விசாரணையில் பயங்கரவாத தடுப்பு காவல்துறையும் இணைந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு என்ன காரணம் என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் குறித்த விவரங்களும் இதுவரை வெளியிடப்படவில்லை. பயணிகள் தங்கள் பயணத்தை ஒத்திவைக்குமாறு லண்டன் வடகிழக்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழுவதும் ரயில் சேவைகள் இதனால் பாதிக்கப்படலாம் எனவும் தெரிவித்துள்ளது. நேரில் கண்டவர்கள் கூறியது என்ன? பட மூலாதாரம், PA Media படக்குறிப்பு, சம்பவம் நடந்ததையடுத்து அவசரசேவை குழுவினர் சம்பவ இடத்தை அடைந்தனர். ரயிலில் இச்சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் பிபிசியிடம் கூறுகையில், காயமடைந்த ஒருவர் தங்களை நோக்கி ஓடிவந்து, "யாரோ ஒருவர் கத்தி வைத்துள்ளதாக" கூறியுள்ளார். நேரில் பார்த்த சாட்சியங்களின்படி, இச்சம்பவத்தைத் தொடர்ந்து பயணிகள் மத்தியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது, மேலும் காயமடைந்தவர்கள் உதவி கேட்டு கூச்சலிட்டுள்ளனர். எல்லோரையும் ஒரு நபர் கத்தியால் தாக்கியதையடுத்து, "ஓடுங்கள், ஓடுங்கள்!" என பலரும் அலறியதை தாங்கள் கேட்டதாக, நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர், பலரும் ஆரம்பத்தில் இதை ஹாலோவீன் இரவில் வேடிக்கையாக செய்ததாக கருதியுள்ளனர். ஆனால், ஒருவரின் கைகளில் இருந்த ரத்தத்தையும் இருக்கையில் இருந்த ரத்தத்தையும் பார்த்த பின்னரே பலரும் இதை தாக்குதல் என்று உணர்ந்துள்ளனர். பீட்டர்பரோ ரயில் நிலையத்திலிருந்து இந்த ரயில் கிளம்பியதையடுத்து, இத்தாக்குதல் நடைபெற்றதாக, ஹண்டிங்டன் எம்.பி. பிபிசியிடம் தெரிவித்தார். பிரிட்டிஷ் போக்குவரத்து காவல்துறை முதன்மை கண்காணிப்பாளர் கிரிஸ் கேசே, இத்தாக்குதல் "அதிர்ச்சியளிப்பதாக" தெரிவித்துள்ளார். அதிகரிக்கும் கத்திக்குத்து தாக்குதல்கள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இத்தகைய கத்திக்குத்து தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக, அரசு புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. 2011ம் ஆண்டு முதல் இந்த எண்ணிக்கை "நிலையான அளவில் அதிகரித்து வருகின்றன". இது "தேசிய நெருக்கடியாக" உள்ளதாக பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் கூறும் அளவுக்கு முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. கடந்த ஓராண்டில் அரசின் கடும் நடவடிக்கையால், போலீஸார் 60,000 கத்திகளை பறிமுதல் செய்துள்ளனர் அல்லது பலரும் அவர்களாகவே ஒப்படைத்துள்ளனர். பொது இடங்களில் கத்தி வைத்திருப்பது குற்றம், மேலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் நான்கு ஆண்டுகள் வரை அதற்கு சிறைத்தண்டனை அளிக்கப்படும். கடந்த மாதம் இதேபோன்று மான்செஸ்டரின் சினகாக்கில் நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj3z81n62y5o
-
'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' - 971 சந்தேக நபர்கள் கைது
“முழு நாடுமே ஒன்றாக” போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 1282 பேர் கைது! 03 Nov, 2025 | 11:55 AM ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாடளாவிய ரீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 1282 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது நாடளாவிய ரீதியில் 1274 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்போது, 86 கிலோ 153 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 252 கிலோ 129 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 18 மில்லிகிராம் கொக்கேயின் போதைப்பொருளும், 05 கிலோ 391 கிராம் 615 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளும், 37871 கஞ்சா செடிகளும், 02 கிராம் 195 மில்லிகிராம் குஷ் போதைப்பொருளும், 06 கிராம் 88 மில்லிகிராம் ஹசீஸ் போதைப்பொருளும், 1647 போதை மாத்திரைகளும் , 91 மதன மோதக மாத்திரைகளும் , 140 கிராம் 16 மில்லிகிராம் மாவா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்டவர்களில் 26 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வுட்லர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/229353
-
கருத்து படங்கள்
அததெரண கருத்துப் படம்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இன்னும் ஒரு விக்கெட்..... India Women 298/7 South Africa Women (45.3/50 ov, T:299) 246/10 Match Over IND Women won by 52 runs ஜெய் ஜெக்கம்மா! ஜெய் ஜெக்கம்மா! ஜெய் ஜெக்கம்மா! சரி தூங்கப்போவம்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
அப்ப கல்லடி, சொல்லடி விழப்போதா?!
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
ஒரு சகலதுறை ஆட்டக்காரி மட்டையை சுழற்றுகிறார்!
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
தோத்தா வீட்டிற்கு எறிவார்களே!
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
அநேகமாக ஆட்டம் இந்தியாவுக்கு சார்பாக வந்துவிட்டது!
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
ஜெய் ஜெக்கம்மா! ஜெய் ஜெக்கம்மா! பையா ஆயத்தமாகுங்கோ! தெ.ஆ கப்டனும் நூறடித்த பின் ஆட்டமிழந்துவிட்டார்!
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
India Women 298/7 South Africa Women (41/50 ov, T:299) 220/6 SA Women need 79 runs in 54 balls. Current RR: 5.36 • Required RR: 8.77 • Last 5 ov (RR): 34/1 (6.80) Sharma to Wolvaardt, OUT miscued a mile up, and Amanjot takes it, after multiple attempts! A juggling act that would have had a billion hearts beating faster, but it has been taken, and there is a roar at the ground! Laura Wolvaardt c AB Kaur b Sharma 101 (98b 11x4 1x6) SR: 103.06 India Women 298/7 South Africa Women (41.1/50 ov, T:299) 220/7 SA Women need 79 runs in 53 balls. Current RR: 5.34 • Required RR: 8.94 • Last 5 ov (RR): 34/2 (6.80)
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
India Women 298/7 South Africa Women (39/50 ov, T:299) 207/5 SA Women need 92 runs in 66 balls. Current RR: 5.30 • Required RR: 8.36 • Last 5 ov (RR): 28/0 (5.60)
-
ஆஸ்திரேலியா இந்தியா கிரிக்கெட் தொடர்
ஆஸ்திரேலியாவை எளிதில் வீழ்த்திய இந்திய அணி; அர்ஷ்தீப், வாஷிங்டன் சுந்தர் அபாரம் பட மூலாதாரம், Getty Images 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா மோதும் சர்வதேச டி20 தொடரின் மூன்றாவது போட்டி ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 2) ஹோபர்ட் நகரில் நடந்தது. இந்தப் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா. ஆஸ்திரேலியா நிர்ணயித்த 187 என்ற இலக்கை 18.3 ஓவர்களில் எட்டியது இந்திய அணி. இதன்மூலம் இந்தத் தொடர் 1-1 என சமநிலை அடைந்திருக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. கடந்த போட்டியில் ஆடியிருந்த சஞ்ச சாம்சன், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ் ஆகியோருக்குப் பதிலாக ஜித்தேஷ் ஷர்மா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் அர்ஷ்தீப் சிங் இந்தப் போட்டியில் இடம்பெற்றனர். ஆஸ்திரேலிய அணியில் ஹேசல்வுட்டுக்குப் பதிலாக ஷான் அபாட் இடம்பெற்றார். முதலில் டேவிட் அதிரடி முதல் முறையாக இந்தத் தொடரில் வாய்ப்பு பெற்ற அர்ஷ்தீப் சிங் நான்காவது பந்திலேயே விக்கெட் வீழ்த்தினார். 6 ரன்கள் எடுத்திருந்த அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட், சூர்யகுமார் யாதவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். முதல் ஓவரிலேயே பெரிய விக்கெட்டை வீழ்த்திய அர்ஷ்தீப், அவர் வீசிய அடுத்த ஓவரில் ஜாஷ் இங்லிஸ் விக்கெட்டையும் கைப்பற்றினார். அதனால் 14/2 என ஆஸ்திரேலிய அணி தடுமாறியது. இந்நிலையில் கேப்டன் மிட்செல் மார்ஷ் உடன் கைகோர்த்தார் டிம் டேவிட். தான் சந்தித்த முதல் பந்திலேயே பௌண்டரி விளாசிய அவர், அந்த அணுகுமுறையையே தொடர்ந்தார். மறுபக்கம் மிட்செல் மார்ஷ் நிதானமாக விளையாடினார். டேவிட் ஓவருக்கு ஒரு பௌண்டரியாவது அடித்துக்கொண்டிருந்ததால் ஆஸ்திரேலிய அணி சரிவிலிருந்து மீண்டது. அதோடு அவர்களின் ரன்ரேட்டும் முன்னேற்றம் கண்டது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 38 பந்துகளில் 74 ரன்கள் விளாசினார் டிம் டேவிட் ஸ்பின், வேகம் என அனைத்து விதமான பந்துவீச்சையும் சிறப்பாக எதிர்கொண்ட டிம் டேவிட், 23 பந்துகளில் அரைசதம் கடந்தார். அதேசமயம் 9வது ஓவர் வீசவந்த தமிழ்நாட்டு ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி, அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் மிட்செல் மார்ஷை வெளியேற்றிய அவர், அடுத்த பந்திலேயே மிட்செல் ஓவனை போல்டாக்கினார். ஆஸ்திரேலியா 73/4 என்ற நிலைக்குச் செல்ல அது அவர்களுக்குப் பின்னடைவாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டேவிட் உடன் இணைந்து அந்த எண்ணத்தை மாற்றினார் அடுத்து களமிறங்கிய மார்க்கஸ் ஸ்டாய்னிஸ். அடுத்ததாக ஸ்டாய்னிஸ் அதிரடி ஷிவம் துபே வீசிய ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் விளாசி தன் அதிரடியைத் தொடங்கினார் ஸ்டாய்னிஸ். முதலில் 'ஷார்ட் லென்த்தில்' வீசப்பட்ட பந்தை சிக்ஸராக்கிய அவர், ஃபுல் டாஸாக வீசப்பட்ட அடுத்த பந்தையும் எல்லைக்கோட்டு வெளியே அனுப்பினார். ஆஸ்திரேலியாவுக்குச் சாதகமாக சென்றுகொண்டிருந்த அந்த ஓவரின் கடைசிப் பந்தில் எதிர்பாராத விதமாக டேவிட் அவுட் ஆனார். பெரிய ஷாட் அடிக்க அவர் முற்பட, லாங் ஆஃப் திசையில் நின்றிருந்த திலக் வர்மாவிடம் கேட்சானார். ஆரம்பம் முதல் அதிரடி காட்டிய அவர், 38 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார். அதில் அவர் 8 ஃபோர்களும், 5 சிக்ஸர்களும் அடித்தார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தன் அதிரடியால் கடைசி கட்டத்தில் ரன் விகிதத்தை அதிகப்படுத்தினார் ஸ்டாய்னிஸ் அவர் அவுட்டானாலும், ரன்ரேட் குறையாமல் பார்த்துக்கொண்டார் ஸ்டாய்னிஸ். டேவிட்டைப் போல் ஓவருக்கு ஒரு பௌண்டரியாவது வரும் வகையில் அவர் ஆடினார். அபிஷேக் ஷர்மா வீசிய 16வது ஓவரில், ஒரு ஃபோரும் ஒரு சிக்ஸரும் அடித்து மேத்யூ ஷார்ட்டும் தன் அதிரடியைத் தொடங்கினார். அர்ஷ்தீப் வீசிய 18வது ஓவரில் 3 ஃபோர்கள் அடித்த ஸ்டாய்னிஸ், 32 பந்துகளில் அரைசதம் கடந்தார். 39 பந்துகளில் 64 ரன்கள் எடுத்த அவர், கடைசி ஓவரில் அர்ஷ்தீப் பந்துவீச்சிலேயே ஆட்டமிழந்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளும், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்தப் போட்டியில் களமிறக்கப்பட்ட வாஷிங்டன் சுந்தருக்கு ஒரு ஓவர் கூட பந்துவீச கொடுக்கப்படவில்லை. சிறிய அதிரடி இன்னிங்ஸ்கள் 187 என்ற இலக்கை துரத்திய இந்திய அணிக்கு அபிஷேக் ஷர்மா மற்றும் சுப்மன் கில் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினார்கள். தன் வழக்கமான அதிரடி பாணியையே கடைபிடித்த அபிஷேக் மூன்றாவது பந்தில் சிக்ஸ் அடித்து தன் ரன் கணக்கைத் தொடங்கினார். ஷான் அபாட் வீசிய இரண்டாவது ஓவரின் கடைசி மூன்று பந்துகளில் 4, 6, 4 என 14 ரன்கள் எடுத்தார் அவர். தொடர்ந்து அதிரடியை வெளிப்படுத்தியவர் நாதன் எல்லிஸ் வீசிய நான்காவது ஓவரில் ஆட்டமிழந்தார். 16 பந்திகளில் 25 ரன்கள் எடுத்த அவர் கீப்பர் இங்லிஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அபிஷேக், கில், அக்ஷர் என 3 பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தினார் எல்லிஸ் அவர் மட்டுமல்லாது இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்டர்கள் அனைவருமே அதே பாணியில் சிறிது நேரம் அதிரடியாக ஆடி அவுட் ஆகிச் சென்றனர். துணைக் கேப்டன் சுப்மன் கில் 15 ரன்களில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 24 ரன்களில், அக்ஷர் பட்டேல் 17 ரன்களில் வெளியேறினர். 11.1 ஓவர்களில் 111 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா. அந்த நான்கில் 3 விக்கெட்டுகளை நாதன் எல்லிஸே கைப்பற்றியிருந்தார். எல்லோரும் பெரிய இன்னிங்ஸைக் கட்டமைக்க முடியாமல் வெளியேறியிருக்க, அடுத்து வந்த தமிழ்நாட்டு வீரர் வாஷிங்டன் சுந்தர் நிலைத்து நின்று ஆடினார். 'பேட்டிங்கில்' கலக்கிய வாஷிங்டன் சுந்தர் இந்தப் போட்டியில் பந்துவீச்சில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், வாஷிங்டன் சுந்தருக்கு பேட்டிங்கில் நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஷிவம் துபே, ஜித்தேஷ் ஷர்மா ஆகியோருக்கு முன்பாக ஆறாவது வீரராகவே அவர் களமிறக்கப்பட்டார். அந்த வாய்ப்பையும் அவர் நன்கு பயன்படுத்திக்கொண்டார். தான் சந்தித்த இரண்டாவது பந்திலேயே சிக்ஸர் அடித்து ரன் கணக்கைத் தொடங்கினார் வாஷிங்டன். ஸ்பின்னர் கூனமன் வீசிய அடுத்த ஓவரில் ஒரு ஃபோர் அடித்தார். ஷான் அபாட் வீசிய 14வது ஓவரில் தன் அதிரடியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றார் அவர். அந்த ஓவரின் நான்காவது பந்தில் ஃபோர் அடித்த அவர், அடுத்த இரு பந்துகளிலுமே சிக்ஸர் விளாசினார். அதனால் இந்திய அணி இலக்கை நோக்கி விரைந்தது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பந்துவீச வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் பேட்டிங்கில் கலக்கினார் வாஷிங்டன் சுந்தர் திலக் வெளியேறிய பின்னர் (29 ரன்கள்) களமிறங்கிய ஜித்தேஷ் வாஷிங்டன் உடன் இணைந்து சிறப்பாக விளையாட, இந்திய அணி 18.3 ஓவர்களில் இலக்கை எட்டியது. 23 பந்துகளை சந்தித்த வாஷிங்டன் சுந்தர் 49 ரன்களுடன் (3 ஃபோர்கள், 4 சிக்ஸர்கள்) கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜித்தேஷ் ஷர்மா ஆட்டமிழக்காமல் 22 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அர்ஷ்தீப் ஆட்ட நாயகன் இந்தப் போட்டியில் 4 ஓவர்களில் 35 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பௌலர் அர்ஷ்தீப் சிங் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்த செயல்பாடு பற்றிப் பேசிய அவர், "நான் என் திறன் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து உழைக்கிறேன். உங்களை ஒரு பேட்டர் அட்டாக் செய்து ஆடும்போது விக்கெட் கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கும் என்று நான் நம்புகிறேன். மற்றொரு முணையில் இருந்து ஜஸ்ப்ரித் பும்ரா பந்துவீசியதும் எனக்கு உதவிகரமாக இருந்தது. நான் என்னவெல்லாம் பயிற்சி செய்தேனோ அதை நடைமுறைப்படுத்த நினைக்கிறேன் அவ்வளவுதான்" என்று கூறினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்தத் தொடரில் கிடைத்த முதல் வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்டார் அர்ஷ்தீப் சிங் இந்தியாவின் இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் 1-1 என சமநிலையை எட்டியிருக்கிறது. முதல் போட்டி மழையால் பாதியிலேயே கைவிடப்பட்டது. இந்தத் தொடரின் நான்காவது போட்டி கோல்ட் கோஸ்ட் நகரில் வரும் ஆறாம் தேதி நடக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cpd26vj43lxo
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
4) மூன்று முக்கிய விக்கெட்டுகளை சீக்கிரம் கைப்பற்றவேண்டும் தென்னாப்பிரிக்க பேட்டர்கள் லாரா வோல்ஃபார்ட், டாஸ்மின் பிரிட்ஸ், மரிசான் காப் ஆகிய மூவரின் விக்கெட்டுகளையும் சீக்கிரம் வெளியேற்ற வேண்டும் என்கிறார் ஆர்த்தி சங்கரன். "தென்னாப்பிரிக்க பேட்டர்களைப் பொறுத்தவரை ஓப்பனர்கள் இருவருமே பெரிய சவாலாக அமைவார்கள். அவர்கள் போக காப்புடைய அனுபவமும் சிக்கல் கொடுக்கும். இவர்கள் மூவரையும் சீக்கிரம் பெவிலியனுக்கு அனுப்பினால், தென்னாப்பிரிக்க பேட்டிங்கின் முதுகெலும்பை உடைக்கலாம். அவர்கள் மூவருமே இல்லாதபோது மற்றவர்களுக்கு நெருக்கடி ஏற்படும்." என்று கூறினார்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
Shafali Verma (ob) 4.1 0 13 2 வென்றால் இவ தான் ஆட்டநாயகி! 87 ஓட்டமும் எடுத்திருக்காவோ! Live Final (D/N), DY Patil, November 02, 2025, ICC Women's World Cup India Women 298/7 South Africa Women (31/50 ov, T:299) 156/5 SA Women need 143 runs from 19 overs. Current RR: 5.03 • Required RR: 7.52 • Last 5 ov (RR): 22/1 (4.40)
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
India Women 298/7 South Africa Women (28/50 ov, T:299) 141/4 SA Women need 158 runs from 22 overs. Current RR: 5.03 • Required RR: 7.18 • Last 5 ov (RR): 17/0 (3.40) அண்ணை, உங்காளு 72 தொடர்கிறாவே!
-
ஆனால் நேரம் கடந்துவிட்டது.....
ஒரு ஆங்கில கவிதை. நான் சிறுவனாக இருந்தபோது, இந்த உலகை மாற்ற ஆசைப்பட்டேன், நடக்கவில்லை. இளைஞனான போது ஊரைத் திருத்த முனைந்தேன், முடியவில்லை. குடும்பத் தலைவன் ஆனபோது, குடும்பத்தையாவது திருத்த விழைந்தேன், இயலவில்லை. தந்தையான போது, பிள்ளைகளை மாற்றிவிட துடித்தேன், எவரும் என் பேச்சை கேட்கவில்லை. இவ்வளவு முயற்சிகள் செய்ததற்குப் பதிலாக, "நான் கொஞ்சம் மாறியிருக்கலாம்" என்று மரணப் படுக்கையில் தான் புரிகின்றது எனக்கு, ஆனால் நேரம் கடந்துவிட்டது..... ----------------------------------------------------------------------------------------யாஸிர். இடுகையிட்டது யாஸிர் அசனப்பா. https://civilyasir.blogspot.com/2011/09/blog-post_18.html
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
India Women 298/7 South Africa Women (23/50 ov, T:299) 124/4 SA Women need 175 runs from 27 overs. Current RR: 5.39 • Required RR: 6.48 • Last 5 ov (RR): 24/2 (4.80)
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
அப்ப ஜெக்கம்மாவை கூப்பிடவேண்டியது தான், ஜெய் ஜெக்கம்மா!
-
56ஆவது கனிஷ்ட சேர் ஜோன் டாபட் மெய்வல்லுநர் போட்டி
14 வயதுக்குட்பட்ட சிறுமிகள் தட்டெறிதல் போட்டி சுண்டிக்குளி மகளிர் கல்லூரியின் ஆயிலை முதலிடம் Published By: Vishnu 02 Nov, 2025 | 09:56 PM (நெவில் அன்தனி) எம்பிலிப்பிட்டி பொது மைதானத்தில் நடைபெற்றுவரும் 56ஆவது கனிஷ்ட சேர் ஜோன் டாபட் மெய்வல்லுநர் போட்டியில் சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவி ஏ. ஆயிலை தங்கப் பதக்கம் வென்றுள்ளார். சனிக்கிழமை நடைபெற்ற 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான தட்டெறிதல் போட்டியில் 25.29 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து ஆயிலை முதலாம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். அப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற வென்னப்புவை புனித இரண்டாவது அருளப்பர் சின்னப்பர் ஆங்கில மொழிமூல பாடசாலை மாணவி ஏ. பொன்சேகாவை விட ஒரு மீற்றருக்கும் அதிகமான தூர வித்தியாசத்தில் ஆயிலை வெற்றிபெற்றார். தட்டெறிதல் போட்டியில் பொன்சேகா 23.91 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து வெள்ளிப் பதக்கத்தையும் வென்றதுடன் கொட்டாஞ்சேனை நல்லாயன் கன்னியாஸ்திரிகள் மடம் மாணவி எஸ். அந்த்ரியானா 23.34 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் சங்கத்தினால் நடத்தப்பபடும் 56ஆவது கனிஷ்ட சேர் ஜோன் டாபட் மெய்வல்லுநர் போட்டிக்கு ரிட்ஸ்பறி அனுசரணை வழங்குகிறது. https://www.virakesari.lk/article/229315
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
Laura Wolvaardt (rhb) 43 இவவினுடைய விக்கெட் விழுந்தால் தான் இந்தியாவிற்கு வாய்ப்பு.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
India Women 298/7 South Africa Women (15/50 ov, T:299) 78/2 SA Women need 221 runs from 35 overs. Current RR: 5.20 • Required RR: 6.31 • Last 5 ov (RR): 26/1 (5.20)