Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. "டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை” - ஐசிசி தலைவராக தேர்வாகியுள்ள ஜெய் ஷா உறுதி 28 AUG, 2024 | 02:25 PM டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என ஐசிசி தலைவராக தேர்வாகியுள்ள ஜெய் ஷா தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது: டி20 கிரிக்கெட் பார்மெட் அனைவருக்கும் உற்சாகம் தருகின்ற வடிவமாக இருக்கலாம். இருந்தாலும் கிரிக்கெட்டின் அடித்தளமான டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு எனது பதவிக்காலத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். எங்கள் முயற்சிகள் மற்றும் பணிகள் அது சார்ந்து இருக்கும். உலகம் முழுவதும் கிரிக்கெட் விளையாட்டின் தரத்தை உயர்த்தும் வகையில் என்னால் முடிந்த அனைத்து பணியையும் செய்வேன். இந்த முக்கிய பொறுப்பில் என் மீது உள்ள எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வேன். 2028-ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறவுள்ளது வரலாறாக இருக்கும். ஐசிசி-க்கு தலைமை தாங்குவது சிறப்பானது. மகளிர் கிரிக்கெட் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் மேம்பாடு சார்ந்தும் கவனம் செலுத்தப்படும். இதில் அனைவரும் ஒன்றிணைந்து சிறந்த பயணத்தை தொடங்குவோம். இவ்வாறு ஜெய் ஷா தெரிவித்துள்ளார். 35 வயதான ஜெய் ஷா, கடந்த 2019-ம் ஆண்டு முதல் பிசிசிஐ செயலாளராக இருந்து வருகிறார். ஐசிசி-யின் தலைவராக தொடர்ச்சியாக இரு முறை பதவி வகித்து வந்த நியூஸிலாந்தைச் சேர்ந்த 62 வயதான கிரேக் பார்க்லேவின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் 3-வது முறையாக தலைவர் பதவியில் தொடர தனக்கு விருப்பம் இல்லை எனவும், நவம்பர் மாதத்துடன் பதவியில் இருந்து விலகுவதாகவும் கிரேக் பார்க்லே தெரிவித்திருந்தார். இதனையடுத்து, ஐசிசி தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆகஸ்ட் 27-ம் தேதிக்குள் வேட்புமனுக்களை அளிக்கலாம் என்று ஐசிசி நிர்வாகம் அறிவித்தது. வேட்பு மனுக்கள் வழங்குவதற்கான கடைசி நாளான நேற்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவை தவிர வேறு யாரும் மனு வழங்கவில்லை. இதையடுத்து அவர், போட்டியின்றி ஐசிசி-யின் தலைவராக தேர்வானார். வரும் டிசம்பர் 1-ம் தேதி ஜெய் ஷா பொறுப்பேற்று கொள்கிறார். மறைந்த ஜக்மோகன் டால்மியா, சரத் பவார், என்.சீனிவாசன் மற்றும் ஷஷாங்க் மனோகர் ஆகியோருக்கு பிறகு ஐசிசி தலைவர் பொறுப்பை கவனிக்கும் ஐந்தாவது இந்தியராகி உள்ளார் ஜெய் ஷா. https://www.virakesari.lk/article/192226
  2. முத்தமிழ் முருகன் மாநாட்டு தீர்மானங்களை விமர்சிக்கும் தி.க, கம்யூனிஸ்ட் - இது பாஜகவை எதிர்க்கும் உத்தியா? பின்னணி என்ன? பட மூலாதாரம்,@PKSEKARBABU படக்குறிப்பு, அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு திண்டுக்கல் மாவட்டம் பழநியில் இந்த வாரம் நடைபெற்றது கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 31 நிமிடங்களுக்கு முன்னர் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு திண்டுக்கல் மாவட்டம் பழநியில் இந்த வாரம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை நடத்திய இரண்டு நாள் மாநாட்டை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். பகுத்தறிவு மற்றும் மதச்சார்பின்மை போன்றவை திமுகவின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாக உள்ளன. அவ்வாறு இருக்க, திமுக அரசு முருகன் மாநாட்டை நடத்துவது குறித்து ஏற்கெனவே விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட சில தீர்மானங்கள் அந்த விமர்சனங்களை கடுமையாக்கியுள்ளன. திமுகவின் தாய்கழகமான திராவிட கழகம் மற்றும் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதற்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திமுகவின் முயற்சியை வரவேற்றுள்ளார். தீர்மானங்கள் என்ன? முத்தமிழ் முருகன் மாநாட்டில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவற்றில், ‘முருக பக்தி இலக்கியங்களை மையப்படுத்தி’ இந்து சமய அறநிலையத்துறை நிர்வகிக்கும் பள்ளி, கல்லூரிகளில் போட்டிகள் நடத்தவும், அந்த கல்வி நிலையங்களில் ‘சிறப்பு ஆன்மிகப் பாடப்பிரிவுகள்’ அறிமுகப்படுத்தவும் அரசுக்கு பரிந்துரைக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், மாணவர்களைக் கொண்டு முருகன் கோயில்களில், ‘கந்தசஷ்டி பாராயணம்’ செய்யவும் தீர்மானிக்கப்பட்டது. ‘முருகன் மாநாடு - தமிழர் பண்பாட்டு மாநாடு’ - உதயநிதி ஸ்டாலின் பட மூலாதாரம்,DIPR படக்குறிப்பு, அறநிலையத்துறையின் பொற்காலமே திமுக ஆட்சியின் போதுதான் என்று கூறினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாநாட்டைத் தொடங்கி வைத்து பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், “ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நம்பிக்கை இருக்கும், அதில் உயர்வு தாழ்வு இல்லை. அந்த நம்பிக்கைகளுக்கு திராவிட மாடல் அரசு எப்போதும் தடையாக இருக்காது. திராவிட மாடல் என்பது எல்லோருக்கும் எல்லாம் என்ற கருத்தியலை அடிப்படையாகக் கொண்டது” என்று கூறினார். மாநாட்டை வாழ்த்தி பேசிய, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறநிலையத்துறையின் பொற்காலமே திமுக ஆட்சியின் போதுதான் என்று கூறினார். “நீதிக்கட்சி ஆட்சியின் போது இந்து சமய அறநிலையத்துறை பாதுகாப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு, வழிபாட்டு உரிமை உறுதி செய்யப்பட்டது. குன்றக்குடி அடிகளார் தந்த விபூதியை நெற்றி நிறைய பூசிக் கொண்டவர் தந்தை பெரியார். ஓடாத திருவாரூர் தேரை ஓட வைத்தவர் கலைஞர். இந்த மாநாடு ஆன்மிக மாநாடாக மட்டுமில்லாமல் தமிழர் பண்பாட்டு மாநாடாக நடைபெறுகிறது” என்று காணொளி வாயிலாக கலந்து கொண்டு பேசினார் உதயநிதி ஸ்டாலின். தோழமை இயக்கங்கள் விமர்சனம் பட மூலாதாரம்,DIPR படக்குறிப்பு, இந்து சமய அறநிலையத்துறை நடத்திய இரண்டு நாள் மாநாட்டை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார் திமுகவின் முருகன் மாநாட்டை அதன் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது. அதன் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மத அடிப்படையிலான விழாக்களை அரசு நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்று கூறினார். “இந்து சமய அறநிலையத்துறையை அழிக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் - பாஜக பரிவாரம் துடிக்கிறது. கோவில் சொத்துக்களை கொள்ளையடிப்பதும், சாதிய படிநிலையை பாதுகாப்பதுமே அவர்களின் நோக்கம். இதை முறியடிக்கும் நோக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை பணிகளை மேற்கொள்வது நல்லது” என்று தனது அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார். “இந்து அறநிலையத் துறை என்பதே கோவில் பாதுகாப்பு, நிதி வரவு - செலவுகளை நிர்வகிப்பதற்கானதே தவிர, இந்து மத பிரசாரத்திற்கானதல்ல” என்று திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி திமுக அரசை சாடியுள்ளார். தனது அறிக்கையில் மாணவர்களை கொண்டு கந்தசஷ்டி பாராயணம் செய்யவும், சிறப்பு ஆன்மிகப் பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தவும் பரிந்துரைக்கும் தீர்மானத்தை விமர்சித்த கி.வீரமணி, “இந்த இரண்டு தீர்மானங்களையும் எந்த வகையில் நியாயப்படுத்த முடியும்? இந்து அறநிலையத் துறையால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் மதச்சார்புடையது அல்ல, தி.மு.க. அரசின் கொள்கை என்பது மதச்சார்பற்ற தன்மை கொண்டதாகும்” என்று குறிப்பிட்டிருந்தார். அமைச்சர் சேகர்பாபு மீதான விமர்சனம் பட மூலாதாரம்,@PKSEKARBABU படக்குறிப்பு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு (நடுவில் இருப்பவர்) ‘‘கோவில் துறையைப் பாதுகாக்க அவரிடம் பொறுப்பை ஒப்படைத்தேன். அவர் இப்போது கோவிலிலேயே குடியிருக்கிறார்” என்று மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவைப் பாராட்டி பேசியிருந்தார். அதை தனது அறிக்கையில் சுட்டிக்காட்டிய கி.வீரமணி, “அவர் (அமைச்சர் சேகர் பாபு) தனது துறைப் பணிகளில் தேவையானவற்றைத் தாண்டிச் செய்கிறார். அதீத ஆர்வத்துடன் அவர் இருக்க வேண்டாம், இருக்கவும் கூடாது.” “அனைத்து சாதியினரும் அர்ச்சகர் நியமன உச்சநீதிமன்றத் தடை இன்னும் நீங்காது தொடரும் நிலை மாறவேண்டும், அதற்குரிய சட்ட நடவடிக்கைகள், நியமனங்கள், புதிய மாணவர் சேர்க்கைகள் போன்ற பணிகளில் அவர் தீவிரம் காட்டவேண்டும்” என்றும் விமர்சித்திருந்தார். பாஜகவின் வேல் யாத்திரை 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் பாஜகவின் அப்போதைய மாநிலத் தலைவர் எல்.முருகன், முருகன் வழிபாட்டுத் தலங்களில் வேல் யாத்திரை நடத்தினார். இந்துக்களின் நலன்களை பாதுகாக்க அந்த யாத்திரை நடத்தப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார். கடந்த காலங்களில் திமுக தலைவர்கள் ஆ.ராசா இந்து மதம் குறித்தும், உதயநிதி ஸ்டாலின் சனதான தர்மம் குறித்தும் பேசிய கருத்துகள் சர்ச்சையானதை அடுத்து, திமுகவை இந்து மதத்திற்கு எதிரான கட்சி என்று தொடர்ந்து விமர்சித்து வந்தது பாஜக. முத்தமிழ் முருகன் மாநாட்டை விமர்சித்து பேசிய பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, “சனாதன தர்மம் வேண்டாம், வெட்டி வீழ்த்த வேண்டும் என்று கூறியவர்கள், பழநியில் பால் காவடி தூக்குவதற்கு பதிலாக, அரசியல் காமெடி செய்கிறார்கள். தமிழ் பண்பாடு என்றால் திருவள்ளுவர், தொல்காப்பியர், கம்பர் ஆகியோர்தான். " "பெரியாரின் மாடல் தான் திராவிட மாடல் என்று கூறும் திமுக இன்று தமிழ் பண்பாடு என்ற வார்த்தையை உச்சரிக்கிறார்கள், ஒரு நாடகத்தை பழநி மண்ணில் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்” என்று மற்றொரு நிகழ்ச்சியில் அவர் பேசினார். பட மூலாதாரம்,DIPR பாஜகவை எதிர்க்கும் உத்தியா? தனது பெயரை வெளிப்படுத்த விரும்பாத திமுகவின் மூத்த தலைவர் ஒருவர் பிபிசி தமிழிடம் பேசும் போது, “தமிழ்நாட்டில், பாஜக தேர்தல்களில் வெற்றி பெறவில்லை என்றாலும், சமீப காலங்களில், மாநிலத்தில் குறிப்பிட்டத்தக்க கவனத்தைப் பெற்று வருகிறது. தமிழ்நாட்டின் இந்து வாக்குகளை பெறுவதற்கு பாஜக பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. எனவே இப்போது நிலவும் அரசியல் சூழலில் இந்த மாநாடு அவசியமானது” என்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திமுகவின் முயற்சியை வரவேற்றுள்ளார் “பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் வடஇந்தியாவில் செய்தது போல, தமிழ்நாட்டிலும் கடவுளையும் மதத்தையும் பயன்படுத்தி மக்களை அரசியல் வாக்கு வங்கியாக மாற்ற முயன்று வருகிறது. அதற்கு இடமளிக்காமல் அவர்களின் அரசியல் சதியை அம்பலப்படுத்தும் நோக்கில் அறநிலையத்துறை செயல்பட்டால் அதை வரவேற்கிறோம்” என்று செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறினார். வரலாற்று பேராசிரியர் கருணானந்தன் பிபிசி தமிழிடம் பேசுகையில், “முருகனுக்கு மாநாடு நடத்துவது ராமருக்கும் கிருஷ்ணருக்கும் மாற்றான அரசியல் உத்தியாக இருக்கலாம். ஆனால் திமுகவின் வளர்ச்சி என்பது திமுகவுக்கு மதத்துக்குமான உறவைப் பொருத்து அமையவில்லை. மத பிடிப்பு இல்லாததால், மதம் என்ற பெயரில் நடைபெற்ற கொள்ளைகளை, மூடநம்பிக்கைகளை எடுத்துரைத்ததால், நேர்மையானவர்கள் என்று மக்கள் நம்பினர்.” என்கிறார். மேலும், “சமூக எழுச்சி இயக்கங்கள் பெரிதாக நடைபெறாத வட இந்தியாவில் மதத்தைக் கொண்டு அரசியல் செய்யலாம். ஆனால் தமிழ்நாட்டில் அந்த நிலைமை கிடையாது. கல்லூரிகளில் ஆன்மீக பாடம் நடத்தலாம் என்று கூறுவது மதச்சார்பற்ற அரசுக்கு அழகல்ல, மதத்தை மறுக்கவும் வேண்டாம், பரப்பவும் வேண்டாம்” என்றார். மேலும் முருகனை தமிழ் கடவுள் என்று கூறுவதைக் குறித்தும் அவர் கேள்வி எழுப்புகிறார். “யேசுவை யூத கடவுள் என்று கூற முடியுமா? அல்லாவை அரபிக் கடவுள் என்று கூறலாமா? மதம் அனைவருக்குமானது, மொழியின் பெயரால் பிரிக்கக் கூடாது”, என்கிறார். சட்டம் என்ன சொல்கிறது? பட மூலாதாரம்,K. CHANDRU படக்குறிப்பு, இந்திய அரசியல் சாசன சட்டப்படி மதத்தை பரப்புவது தனி நபரின் உரிமை அதை அரசு செய்ய வேண்டாம் என்கிறார் ஓய்வெற்ற நீதிபதி கே. சந்துரு இந்து சமய அறநிலையத்துறை நடத்தும் கல்லூரிகளில் இந்து ஆன்மிக நூல்களை பாடமாகச் சேர்க்க வேண்டும் என்று பாஜக ஆதரவாளர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்ததை ஓய்வு பெற்ற நீதிபதி கே. சந்துரு சுட்டிக்காட்டினார் பிபிசி தமிழிடம் பேசிய சந்துரு “மத நிறுவனம் அல்லது அமைப்பு நடத்தும் கல்வி நிலையத்தில் மதச்சார்பற்ற பாடங்கள் கற்றுக் கொடுத்தால் அதை பாராட்ட வேண்டும் என்று 1963ம் ஆண்டு ‘சித்தாஜ்பாய் எதிர் பாம்பே அரசு’ என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. எனவே மதம் சார்ந்த பாடங்கள் இந்தக் கல்லூரிகளில் கட்டாயமில்லை.” என்றார். இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் நடைபெறும் மத நடவடிக்கைகளை தடுக்கக் கூடாது என்று கூறிய அவர், இந்திய அரசியல் சாசன சட்டப்படி மதத்தை பரப்புவது தனி நபரின் உரிமை, அதை அரசு செய்ய வேண்டாம் என்று சுட்டிக்காட்டினார். “2026ம் ஆண்டு தேர்தல்களை மனதில் வைத்துக் கொண்டு எதையும் செய்யக் கூடாது. இப்படி செய்வது மிகவும் பிற்போக்குத்தனமானது” என்று சந்துரு தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c2kj9859zg8o
  3. 28 AUG, 2024 | 05:24 PM நாட்டில் கடந்த 2023ஆம் ஆண்டில் 9,535 காச நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய காசநோய் மற்றும் இருதய நோய்கள் கட்டுப்பாட்டு நிகழ்ச்சி திட்டத்தின் (NPTCDD) விசேட வைத்திய நிபுணர் பிரமிதா சாந்தி லதா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அதிகளவான காச நோயாளர்கள் மேல் மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 4,362 ஆகும். இந்நிலையில், மத்திய மாகாணத்திலிருந்து 986 காச நோயாளர்களும், ஊவா மாகாணத்திலிருந்து 407 காச நோயாளர்களும், தென் மாகாணத்திலிருந்து 844 காச நோயாளர்களும், சப்ரகமுவ மாகாணத்திலிருந்து 751 காச நோயாளர்களும், வடமேல் மாகாணத்திலிருந்து 717 காச நோயாளர்களும், கிழக்கு மாகாணத்திலிருந்து 576 காச நோயாளர்களும், வட மாகாணத்திலிருந்து 444 காச நோயாளர்களும், வட மத்திய மாகாணத்திலிருந்து 448 காச நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சளியுடன் கூடிய இருமல், நீண்ட நாள் காய்ச்சல், பசியின்மை, உடல் எடை குறைதல், இரத்தம் கலந்த சளி, மார்புவலி என்பன காசநோய்க்குரிய அறிகுறிகளாகும். எனவே, இத்தகைய நோய் அறிகுறிகள் காணப்படுபவர்கள் உடனடியாக வைத்திய ஆலோசனைகளைப் பெறுவது அவசியமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/192245
  4. average human diving depth? என்று கூகிளைக் கேட்க கீழுள்ள பதிலை தந்தது. Most recreational free divers can only dive to a depth of around 12-18 metres without scuba gear. Diving to this depth requires a certain level of physical fitness and training, and divers must be aware of the risks involved. It's essential to listen to your body and avoid pushing yourself too hard. கூகிளில் மொழிமாற்றம் செய்தபோது! பெரும்பாலான பொழுதுபோக்கு இலவச டைவர்ஸ் ஸ்கூபா கியர் இல்லாமல் சுமார் 12-18 மீட்டர் ஆழத்திற்கு மட்டுமே டைவ் செய்ய முடியும். இந்த ஆழத்திற்கு டைவிங் செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட அளவிலான உடல் தகுதி மற்றும் பயிற்சி தேவைப்படுகிறது, மேலும் டைவர்ஸ் இதில் உள்ள அபாயங்கள் குறித்து அறிந்திருக்க வேண்டும். உங்கள் உடலைக் கேட்பது மற்றும் உங்களை மிகவும் கடினமாகத் தள்ளுவதைத் தவிர்ப்பது அவசியம்.
  5. அபிவிருத்தி பணிகளுக்காக ஜனாதிபதி செயலகத்தால் நிதி நேரடியாக மாவட்ட செயலகங்களுக்கு அனுப்பப்படுகின்றதே தவிர எந்த பாராளுமன்ற உறுப்பிருக்கும் நேரடியாக கொடுக்கப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வெளியிட்ட ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளதாக பெரியளவிலான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிதியானது குறிப்பிடப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்டது போன்ற தோற்றப்பாடு வேண்டுமென்றே ஏற்படுத்தப்படுகின்றது. பன்முகப்படுத்தப்பட்ட அபிவிருத்தி நிதி மற்றும் பல்வேறு அபிவிருத்தி நிதிகள் ஜனாதிபதி செயலாகத்தால் இவ்வருடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது. இதற்கு உதவியாக அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களால் அபிவிருத்திக்காக முன்மொழிவுகள் கோரப்பட்டிருந்தன. இக்கோரிக்கைகளின் அடிப்படையில் வெவ்வேறு தொகைகள் ஜனாதிபதி செயலாகத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணங்கள் மேற்சொன்ன அபிவிருத்தி பணிகளுக்காக நேரடியாக மாவட்ட செயலகங்களுக்கு அனுப்பப்படுகின்றதே தவிர எந்த பாராளுமன்ற உறுப்பிருக்கும் நேரடியாக கொடுக்கப்படவில்லை. அண்மைக்காலங்களில் மேற்கொள்ளப்படுகின்ற தவறான விஷமப்பிரசாரங்கள் காரணமாக இவ்வறிக்கை வெளியிடப்படுகின்றது என்றுள்ளது. https://thinakkural.lk/article/308544
  6. ரஷ்யா - யுக்ரேன் போர் முனையில் என்ன நடக்கிறது? புகைப்படங்கள் உணர்த்தும் உண்மைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யுக்ரேனில் உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த பொக்ரோவ்ஸ்க் நகரை ரஷ்யப் படைகள் நெருங்குவதால் அந்நகரை விட்டு பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட தாயும், அவரது 2 வயது மகனும். எதிர்காலத்தை எண்ணி கலங்குகிறார் அந்த தாய். (ஆக.27) 5 மணி நேரங்களுக்கு முன்னர் யுக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பு 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கிய பிறகு சுமார் இரண்டரை ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே கடும் போர் நீடிக்கிறது. கிழக்கு யுக்ரேனில் ஒரு பகுதியை ரஷ்யா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த போதிலும், போர் முடிவுக்கு வராமல் தொடர்கிறது. ரஷ்யாவின் தாக்குதலை ஆக்கிரமிப்பு என்று கூறி அதன் மீது பல்வேறு தடைகளை விதித்துள்ள அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், யுக்ரேன் இழந்த பகுதிகளை மீட்க உதவியும் புரிகின்றன. இதில், பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயுதங்களும் அடங்கும். கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி ரஷ்யாவுக்குள் யுக்ரேன் துருப்புகள் நுழைந்த பிறகு இந்த போர் மீண்டும் உக்கிரம் அடைந்துள்ளது. ரஷ்யாவின் கர்ஸ்க் பிராந்தியத்தில் ஆயிரம் ச.கி.மீ.ககும் அதிகமான நிலப்பரப்பை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக யுக்ரேன் கூறுகிறது. இதன் பிறகு யுக்ரேன் மீது ரஷ்யா மீண்டும் மிகப்பெரிய அளவில் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. ரஷ்யப் போர் விமானங்களும், டிரோன்களும் யுக்ரேனின் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளன. இந்த பின்னணியில் ரஷ்யாவிலும், யுக்ரேனிலும் என்ன நடக்கிறது? என்பதை இந்த புகைப்படத் தொகுப்பு விவரிக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யுக்ரேன் எல்லையை ஒட்டியுள்ள கர்ஸ்க் பிராந்தியத்தில் யுக்ரேன் படையினரின் ஆயுத தளவாடங்கள் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்திய காட்சி. (ஆக.8ம் தேதி, ரஷ்ய பாதுகாப்பு படை வெளியிட்ட புகைப்படம்) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யுக்ரேனின் டொனட்ஸ்க் பிராந்தியத்தில் கிராமாடோர்ஸ்க் நகரில் சஃபயர் ஹோட்டல் அருகே ரஷ்யாவின் இஸ்கந்தர்-எம் ஏவுகணை தாக்கியதால் இடிந்து விழுந்த கட்டடத்தில் அவசர கால மீட்புக் குழுவினர். (ஆக.25) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யுக்ரேனின் ஜபோரிஷியா பிராந்தியத்தில் ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் வீட்டை இழந்த பெண் கண்ணீர் விட்டு அழுகிறார். (ஆக.27) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யுக்ரேன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியதால் பாதுகாப்பு தேடி மெட்ரோ ரயில் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ள மக்கள் (ஆக.27) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரஷ்யாவுக்குள் யுக்ரேன் படைகள் புகுந்துவிட்ட பிறகு, எல்லையோர சமி பிராந்தியத்தில் சோவியத் தயாரிப்பான டி-72 டாங்குகளுடன் யுக்ரேன் துருப்புகள். (ஆக.12) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, போர்க் களத்தில் ரஷ்யாவுக்கு தலைவலி தரும் யுக்ரேனிய டிரோன்களை இயக்கத் தயாராகும் அந்நாட்டின் 22-வது படைப் பிரிவினர். இந்த புகைப்படம் யுக்ரேனின் டோனட்ஸ்க் பிராந்தியத்தில் எடுக்கப்பட்டது. (ஆக.09) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரஷ்யாவின் கர்ஸ்க் பிராந்தியத்தில் கைப்பற்றிய சுட்ஸா நகரில் சேதடைந்த லெனின் சிலைக்கு முன்னே யுக்ரேன் ராணுவ வீரர். (ஆக.16) பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK படக்குறிப்பு, யுக்ரேன் துருப்புகளின் திடீர் எல்லை தாண்டிய தாக்குதலால் ரஷ்யாவின் கர்ஸ்க் பிராந்தியத்தில் வசித்த அந்நாட்டு மக்கள் பாதுகாப்பான இடம் தேடி இடம்பெயர்ந்த காட்சி. பட மூலாதாரம்,RUSSIAN DEFENCE MINISTRY HANDOUT/EPA-EFE படக்குறிப்பு, கர்ஸ்க் பிராந்தியத்திற்குள் புகுந்த யுக்ரேன் படையினருக்கு எதிராக போரிட ரஷ்யா அனுப்பிய கூடுதல் துருப்புகள் அணிவகுத்துச் செல்கின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்க தயாரிப்பான எஃப்-16 போர் விமானங்களை அதன் நட்பு நாடுகள் யுக்ரேனுக்கு வழங்கியுள்ளன. அவ்வாறு பெற்றுக் கொண்ட எஃப்-16 விமானங்களின் முன்பாக யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி. இந்த விமானங்கள் ரஷ்யாவுக்கு எதிரான போரில் தனக்கு சாதகமான திருப்புமுனையை ஏற்படுத்த உதவியாக இருக்கும் என்று யுக்ரேன் எதிர்பார்க்கிறது. https://www.bbc.com/tamil/articles/ce9zydr0xk3o
  7. அண்ணை பத்து நாட்கள் இடைவெளியில் இருவர் இறந்தது அதிக ஆழத்தில் தொழிலில் ஈடுபட்டதால் ஏற்பட்ட பாதிப்போ என எண்ணத் தோன்றுகிறது.
  8. Published By: DIGITAL DESK 7 28 AUG, 2024 | 04:30 PM கச்சதீவுக்கு அண்மையில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் காப்பாற்றப்பட்ட இரண்டு இந்திய மீனவர்களும் இன்று புதன்கிழமை (28) யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நான்கு மீனவர்களுடன் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த படகு ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை (27) தண்ணீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்நிலையில் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கடற்படையினர் இரண்டு மீனவர்களை மீட்டுள்ளதோடு, அத்துடன் காணாமல் போன மற்ற இரண்டு மீனவர்களையும் தேடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மீட்கப்பட்ட மீனவர்கள் இருவரும் நேற்றையதினம் நெடுந்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் இன்றையதினம் குமுதினி படகு மூலம் குறிகட்டுவானுக்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டு யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் இருவரையும் நாளையதினம் பலாலி விமான நிலையமூடாக இந்தியாவிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை யாழ்ப்பாண இந்திய துணை தூதரகம் முன்னெடுத்து வருகிறது. https://www.virakesari.lk/article/192238
  9. இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி இயங்கும் இலங்கையின் முதல் மின் உற்பத்தி நிலையத்தின் சுழற்சி கட்டம் ஜனாதிபதியால் திறப்பு Published By: DIGITAL DESK 3 28 AUG, 2024 | 04:35 PM "சொபாதனவி" ஒருங்கிணைந்த சுழற்சி மின் நிலையத்தின் சுழற்சி கட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் திறந்து வைத்தார். இலங்கையின் எரிசக்தி துறையில் ஒரு தனித்துவமான மைல்கல்லைக் குறிக்கும் வகையில், திரவ இயற்கை எரிவாயுவை (LNG) முதன்மையாகப் பயன்படுத்தி இயங்கும் இலங்கையின் முதல் மின் உற்பத்தி நிலையமான 350 மெகா வோர்ட் திறன் கொண்ட கெரவலப்பிட்டி "சொபாதனவி" ஒருங்கிணைந்த சுழற்சி மின் நிலையத்தின் சுழற்சி கட்டத்தையே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திறந்து வைத்தார். https://www.virakesari.lk/article/192221
  10. யாழில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்தவர் உயிரிழப்பு! 28 AUG, 2024 | 03:19 PM யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த இளம் கடற்தொழிலாளி திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். வடமராட்சி கிழக்கு, நாகர் கோவில் கடற்பகுதியில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த வேளை திடீர் சுகவீனம் ஏற்பட்ட நிலையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் புத்தளம் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார். https://www.virakesari.lk/article/192219
  11. பட மூலாதாரம்,SLPP படக்குறிப்பு, மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச குடும்பத்தினர் உள்ளிட்டோர். கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் தேதி நடக்கிறது. ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்த நிலையில், தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளன. சுதந்திர இலங்கையின் தேர்தல் வரலாறு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன பிரித்தானிய ஆட்சியின் கீழிருந்த இலங்கை, 1948ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04ம் தேதி சுதந்திரமடைந்தது. எனினும், பிரித்தானியாவின் நாடாளுமன்ற கட்டமைப்பை பிரதிபலிக்கும் வகையில் அமைந்த ஒரு டொமினியன் அந்தஸ்துடைய அரசாங்கமாகவே 1972ம் ஆண்டு வரை இலங்கை செயற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், 1972ம் ஆண்டு இலங்கை குடியரசாக்கப்பட்டதை அடுத்தே, இலங்கையில் முதலாவது ஜனாதிபதி தேர்வு செய்யப்பட்டார். இலங்கை குடியரசாக அறிவிக்கப்பட்ட நிலையில், இலங்கையின் முதலாவது ஜனாதிபதியாக வில்லியம் கோபல்லாவ நியமிக்கப்பட்டார். அதன்பின்னர் 1978ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டு, புதிய ஜனாதிபதியாக ஜே.ஆர்.ஜெயவர்தன நியமிக்கப்படுகின்றார். இலங்கையில் 1978ம் ஆண்டு புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. இந்த புதிய அரசியலமைப்பின் ஊடாக, ஜே.ஆர்.ஜெயவர்தன இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி தேர்தல் 1982ம் ஆண்டு நடைபெற்றதுடன், அந்த தேர்தலின் ஊடாக ஜே.ஆர்.ஜெயவர்தன மீண்டும் ஜனாதிபதியாக தேர்வானார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க 1988ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ரணசிங்க பிரேமதாஸ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். அவர் 1992ம் ஆண்டு நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து, இடைக்கால ஜனாதிபதியாக டி.பி.விஜேதுங்க நாடாளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்டார். 1994ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். அத்துடன், 1999ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க, மீண்டும் ஜனாதிபதியாக தெரிவானார். 2005 மற்றும் 2010ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் மஹிந்த ராஜபக்ஸ தெரிவு செய்யப்பட்டு, இரண்டு முறை ஆட்சிபீடம் ஏறினார். அதனைத் தொடர்ந்து. 2015ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவும், 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஸவும் தெரிவானார்கள். இலங்கை எதிர்நோக்கிய பொருளாதார நெருக்கடியால் நாட்டு மக்களின் போராட்டத்திற்கு மத்தியில் கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலகினார். அந்த இடத்திற்கு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார். தேர்தல்களில் ஏற்பட்ட மாற்றங்கள் 1982ம் ஆண்டு நடைபெற்ற இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளர் அடங்கலாக ஐந்து வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், லங்கா சமசஜ கட்சி மற்றும் நவ சமசஜ கட்சி ஆகியன போட்டியிட்டன. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம் அப்போது போட்டியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து, 1988ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா மஹஜன பக்ஷய ஆகிய கட்சிகள் மாத்திரமே போட்டியிட்டன. நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகளை தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட முதல் இரண்டு தேர்தல்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி மாபெரும் வெற்றியை தன்வசப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, 1993ம் ஆண்டு ரணசிங்க பிரேமதாஸ தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில், இடைக்கால ஜனாதிபதியாக டி.பி.விஜேதுங்க நியமிக்கப்பட்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் தனித் தலைமைத்துவத்தின் கீழ் நாடு நிர்வகிக்கப்பட்ட காலம் 1994ம் ஆண்டுடன் முடிவுக்கு வந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரணசிங்க பிரேமதாஸ இந்த நிலையிலேயே, ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு 1994ம் ஆண்டு வெளியிடப்படுகின்றது. இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சி பீடத்தை கைப்பற்றிய ஐக்கிய தேசியக் கட்சியை வீழ்ச்சியடையச் செய்யும் நோக்கில், இரண்டாவது பெரிய கட்சியாக அப்போது திகழ்ந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முதல் முறையாக கூட்டணியாக தேர்தலை எதிர்நோக்கியது. அதுவரை கை சின்னத்தில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் கூட்டணி என்ற பெயரில் நாற்காலி சின்னத்தில் 1994ம் ஆண்டு தேர்தலை எதிர்நோக்கியது. 1994ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 6 கட்சிகள் போட்டியிட்ட நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையில் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்று, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார். இலங்கையின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையை சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தன்வசப்படுத்தினார். இந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பின்னடைவை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து, 1999ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 13 கட்சிகள் போட்டியிட்டன. இந்த தேர்தலிலும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூட்டணியாக ஐக்கிய மக்கள் கூட்டணியில் போட்டியிட்டு வெற்றியை தன்வசப்படுத்தினார். அதன்பின்னர் 2005ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி உருவாக்கப்பட்டு, வெற்றிலை சின்னத்தில் மஹிந்த ராஜபக்ஸ போட்டியிட்டு மாபெரும் வெற்றியை தனதாக்கிக் கொண்டார். 2005ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 13 கட்சிகள் போட்டியிட்டன. 2010ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் மஹிந்த ராஜபக்ஸ களம் இறங்கினார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஆட்சியை முறியடிப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் பல கட்சிகளின் ஆதரவுடன் பொது வேட்பாளர் ஒருவர் அறிவிக்கப்பட்டார். பட மூலாதாரம்,SLPP படக்குறிப்பு, கோட்டாபய ராஜபக்ஸ இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போர் முடிவடைந்த பின்னணியிலேயே இந்த தேர்தல் நடைபெற்றது. போரை முடிவுக்கு கொண்டு வர தலைமைத்துவம் வழங்கிய பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த ராஜபக்ஸ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் களம் கண்டார். போரை களத்திலிருந்து வழிநடத்திய ராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியின் பொது வேட்பாளராக களமிறங்கினார். சரத் பொன்சேகா பொது வேட்பாளராக பொது சின்னமான அன்னம் சின்னத்தில் போட்டியிட்டிருந்த போதிலும், அந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ வெற்றியை தன்வசப்படுத்தினார். போர் வெற்றியை மையப்படுத்தியே 2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள் நடத்தப்பட்டிருந்தன. இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதியாக பதவி வகித்த ஒருவர் மூன்றாவது முறையாகவும் 2015ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டிருந்தார். 2005, 2010 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றியீட்டிய மஹிந்த ராஜபக்ஸ, அரசியலமைப்பில் திருத்தத்தை ஏற்படுத்தி 2015ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் வெற்றிலை சின்னத்தில் மஹிந்த ராஜபக்ஸ போட்டியிட்டார். அவரது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளராக செயற்பட்ட மைத்திரிபால சிறிசேன கட்சியிலிருந்து வெளியேறி, அன்னம் சின்னத்தில் பொது வேட்பாளராக களமிறக்கப்பட்டார். பட மூலாதாரம்,PMD படக்குறிப்பு, மைத்திரிபால சிறிசேன பொதுச் சின்னத்தில் களமிறக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேனவிற்கு ஐக்கிய தேசியக் கட்சி உள்பட பல கட்சிகளும் ஆதரவு வழங்கியிருந்தன. இந்த தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டிய நிலையில், 'இலங்கையில் நல்லாட்சி அரசாங்கம்' என்ற பெயரில் கூட்டணி ஆட்சியொன்று அமைக்கப்பட்டது. பொதுச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டியதன் பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைத்துவத்தை மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்றுக் கொண்டார். இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைத்துவம் மைத்திரிபால சிறிசேன வசமானதை அடுத்து, ராஜபக்ஸ குடும்பம் அந்த கட்சியிலிருந்து வெளியேறி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சியை ஸ்தாபித்தது. கூட்டணி அரசின் தலைமை பொறுப்பு அதாவது ஜனாதிபதி பதவி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும், பிரதமர் பதவி ஐக்கிய தேசியக் கட்சிக்கும் வசப்படுத்தப்பட்டது. ஒரு கட்டத்தில் இரு கட்சிகளுக்கும் இடையே அதிருப்தி ஏற்பட, ஜனாதிபதியாக பதவி வகித்த மைத்திரிபால சிறிசேன, பிரதமர் பதவியை ரணிலிடமிருந்து பறித்து மஹிந்த ராஜபக்ஸவிற்கு கையளித்தார். பட மூலாதாரம்,PMD படக்குறிப்பு, ரணில் விக்ரமசிங்க இதையடுத்து, இலங்கையில் அரசியலமைப்பு குழப்ப நிலைமையொன்று ஏற்பட்டு, ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக தெரிவு செய்யப்பட்டார். 2019ம் ஆண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முதல் முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டது. அதேபோன்று, எதிரணியில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிளவுப்பட்ட தரப்பினர் ஒன்றிணைந்து ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கியிருந்தனர். சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவை எதிர்த்து போட்டியிட்டது. பொது வேட்பாளர் என்ற கருப்பொருள் 2019ம் ஆண்டு தேர்தலில் இல்லாது போனது. கூட்டணியாகவே கட்சிகள் அப்போது போட்டியிட்டன. இந்த தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஸ மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தார். எனினும், கோவிட் பெருந்தொற்று, பொருளாதார நெருக்கடி என பல்வேறு சவால்களை கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சி காலத்தில் இலங்கை எதிர்நோக்கியது. இதையடுத்து, நாடு முழுவதும் அரச எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரமடைந்ததை அடுத்து, கோட்டாபய ராஜபக்ஸ தனது பதவியை துறந்தார். அதனைத் தொடர்ந்து பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளை பெற்று இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டார். இவ்வாறான பின்னணியில், 2024ம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. https://www.bbc.com/tamil/articles/c047rdld29lo
  12. 28 AUG, 2024 | 02:10 PM இலங்கையை சேர்ந்த தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் புகலிடக்கொள்கையே அவரின் மரணத்திற்கு காரணம் என தமிழ் அகதிகள் பேரவை தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ் அகதிகள் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது, தன்னைத் தானே தீக்கிரையாக்கிக் கொண்டு இளைஞன் மரணம். 23 வயதேயான இந்த இளைஞனை ஆஸ்திரேலியா அரசாங்கமும், அரசாங்கத்தின் அகதிகள் மீதான மோசமான கொள்கைகளுமே படுகொலை செய்துள்ளது. அவனது மரணப்படுக்கையின் கடைசி நொடிகளில் அவரோடு கூட இருந்த ரதி கூறியது இதுதான். "பல எதிர்கால கனவுகளோடும், வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற லட்சியத்தோடும் வாழ்ந்த 23 வயதான இளைஞன் மனோ. உள்நாட்டுப் போரில் பாதுகாப்புத் தேடி வந்த ஒரு இளைஞனை இந்த நாட்டின் மனிதத் தன்மையற்ற அகதிகளுக்கு விரோதமான போக்கு, அதன் மூலம் அவன் சந்தித்த தனிப்பட்ட, சமூகப் பிரச்சனைகள் வாழ்வின் மீதான நம்பிக்கை இழக்கச் செய்ததோடு இனி வாழ்வதே வீணென்று இத்தகைய பாரதூரமான முடிவை எடுக்கச் செய்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் எத்தனையோ அப்பாவி அகதிகளின் அகால மரணங்களை நாங்கள் கடந்து வந்துள்ளோம் . இதோ இன்று இன்னொரு இளைஞன். இன்றைக்கு போராடிக் கொண்டிருக்கும் பல தமிழ் அகதிகள் போல் பாதுகாப்பற்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு ஒவ்வொரு நாள் விடியலையும் தங்களுக்கு மாற்றம் ஏற்பட்டு விடும் என்று கனவுகளோடு; இங்கிருந்து ஆபத்து நிறைந்த தங்கள் நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டு விடுவோமோ என்ற பயத்தோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் பல அகதிகளின் ஒருவரின் மரணம் இது." கிறிஸ்துவ குடும்பத்தை பின்னணியாகக் கொண்ட மனோ இலங்கை இனவழிப்பு போரின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு குடும்பமாக தனது பன்னிரண்டாவது வயதில் அவரது நான்கு சகோதரர்களோடு 2013 ஆம் ஆண்டு கப்பல் வழிப் பயணத்தால் ஆஸ்திரேலிய வந்தடைந்தார். இங்கு வந்து பல மாத தடுப்பு காவலுக்கு பிறகு சமூகத்திற்கு விடுவிக்கப்பட்டார். செவ்வாய் அன்று தனக்குத்தானே தீயிட்டுக் கொளுத்தி 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில்( Alfred Hospital, Melbourne) அனுமதிக்கப்பட்ட இன்று 12:27 மணி அளவில் தன் மூச்சை நிறுத்திக் கொண்டான் அந்த இளைஞன். மகிழ்ச்சியாக சாமானியமான வாழ்க்கையை வாழ வேண்டிய ஒரு இளைஞனை இத்தகைய மன உளைச்சலுக்கு உள்ளாக்கி அவன் தனது உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு தள்ளியுள்ளது இந்த நிரந்தரமற்ற அகதி வாழ்க்கை. ஆஸ்திரேலியா அரசாங்கம் இத்தனை ஆண்டுகளாகியும் தஞ்ச கோரிக்கையை அங்கீகரிக்காத பட்சத்தில் மேலும் இலங்கைக்கு அகதிகளை அனுப்ப முற்படும் என்றால் இங்கிருந்து மரணிப்பதே மேல் என்று பல அகதிகள் எண்ணங்கள் மாறி இருப்பது அவர்கள் வாழ்வின் மீதான பேர் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.‌ இத்தகைய சோர்வடைந்த வார்த்தைகள் வெறும் வார்த்தைகள் அல்ல உண்மையான மனநிலை என்று ஒரு இளைஞன் தன் உயிரைத் தீக்கிரையாக்கி உணர்த்திச் சென்றுள்ளான் அனைவருக்கும். ஒரே மாதத்தில் இரு அகதிகளை இழந்துள்ளோம். இது இதோடு முடியப்போவதும் இல்லை என்ற பயம் எங்கள் அனைவரையும் ஆட்கொண்டுள்ளது. https://www.virakesari.lk/article/192220
  13. ராஜாவுக்கு ஒதுங்க வேற இடம் கிடைக்கலையோ?!
  14. கமலா ஹாரிசுக்கு எதிராக தடுமாறும் டிரம்ப் - அதிபர் தேர்தல் வரை இதேநிலை நீடிக்குமா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரா ஸ்மித் பதவி, வட அமெரிக்கா ஆசிரியர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சிகாகோவில் நடைபெற்ற ஜனநாயக கட்சி மாநாட்டில் வீறுநடையுடன் மேடையேறிய கமலா ஹாரிஸ், தன்னை ஆதரிப்பதற்கு சிறந்ததொரு வாய்ப்பு உள்ளதாக அமெரிக்கர்களிடம் தெரிவித்தார். இந்த வார தொடக்கத்தில் அம்மாநாட்டில் ஒபாமாவும் அவருடைய மனைவியும் ஆற்றிய எழுச்சிமிக்க உரை போன்று இல்லை எனினும், கமலா ஹாரிஸின் 40 நிமிட உரையின் போது அரங்கத்தில் பரவசமும் நம்பிக்கையும் எழுந்ததை தெளிவாக காண முடிந்தது. உயர் அதிகார மட்டத்தில் உள்ள பிரபலங்களின் வலியுறுத்தல்கள் மற்றும் புதிய அத்தியாயத்தின் தொடக்கம் என ஜனநாயக கட்சியினரிடையே நம்பிக்கையும், உற்சாகமும் காணப்படுகிறது. 2008 அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா முதன்முறையாக போட்டியிட்ட போது கூட அக்கட்சி இந்தளவுக்கு நம்பிக்கையை வெளிப்படுத்தவில்லை. மகிழ்ச்சியில் ஜனநாயக கட்சியினர் ஜோ பைடனின் முதிர்ந்த வயது ஒரு சிக்கலாக எழுந்த நிலையில், அவர் இத்தேர்தலில் போட்டியிடாததும் கமலா ஹாரிஸ் மற்றும் துணை அதிபர் வேட்பாளர் டிம் வால்ஸ் இருவரும் எந்த தடையுமின்றி அந்த இடத்தை அடைந்ததும், அக்கட்சியினரின் மகிழ்ச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளது. ஆனால், இந்த மகிழ்ச்சிக்குப் பின்னால், ஜனநாயக கட்சியின் வாக்காளர்களும் செயற்பாட்டாளர்களும் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை நவம்பர் 5 அன்று வாக்கு செலுத்த ஊக்கம் அளிப்பது குறித்து கட்சி வியூகவாதிகள் கவலை கொண்டுள்ளனர். அதிபர் பைடன் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகியதையடுத்து, கருத்துக் கணிப்புகள் ஜனநாயக கட்சிக்கு ஆதரவாக வெளிவர தொடங்கினாலும் கடுமையான போட்டியே நிலவுகிறது. வெற்றி யாருக்கு என்பதை கணிக்க முடியாத ஜார்ஜியா, அரிசோனா, நெவாடா, விஸ்கான்சின், பென்சில்வேனியா, மிச்சிகன், வடக்கு கரோலினா ஆகிய 7 மாகாணங்களே அடுத்த அதிபரை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, கணவர் டக் எம்ஹாஃப், மற்றும் துணை அதிபர் வேட்பாளர் டிம் வால்ஸ் மற்றும் அவருடைய மனைவி க்வென்னுடன் கமலா ஹாரிஸ் கடந்த ஆறு வாரங்களை வைத்துப் பார்க்கும் போது, தேர்தலுக்கு இன்னும் மீதமுள்ள 70 நாட்களில் விரைவில் மீண்டும் அரசியல் சூழல் மாறலாம். பராக் ஒபாமாவின் 2012 தேர்தலின் பிரசாரத்தை நிர்வகித்தவரும் ஜனநாயக கட்சியின் மூத்த வியூகவாதியுமான ஜிம் மெசினா, பிபிசியின் அமெரிகாஸ்ட் எனும் பாட்காஸ்ட்டில், ஜனநாயக கட்சி உறுதியாக வெற்றி பெறும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று கூறினார். “அமெரிக்க அரசியலில் நீண்ட காலமாக நான் பார்த்ததிலேயே, இந்த போட்டிக்குள் கமலா ஹாரிஸ் நுழைந்ததிலிருந்து சிறப்பான 30 நாட்களை அனுபவித்துள்ளார்” என அவர் கூறினார். “எனினும், அவர் இத்தேர்தலில் எதிராளியுடன் சம பலத்திலேயே உள்ளார். தேர்தலுக்கு இன்னும் சுமார் 70 நாட்கள் மீதம் உள்ள நிலையில், இன்னும் கடும் போட்டியே நிலவுகிறது” என தெரிவித்தார். ஒபாமா பேசியது என்ன? கமலா ஹாரிஸ் உரையின் போது, அதீத உற்சாகம் தென்பட்டாலும், அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஜனநாயக கட்சியினர் செய்வதற்கு இன்னும் பல வேலைகள் உள்ளன. கமலா ஹாரிஸுக்கு எதிராக எப்படி பரப்புரை செய்வது என்பதில் டிரம்ப் இன்னும் தடுமாறுவதாக தெரிகிறது. கமலா ஹாரிஸுக்கு எதிராக தாக்குதலை தொடுப்பது எப்படி என்பதையும் அவருடைய வழக்கமான பாணியில் ஹாரிஸுக்கு இன்னும் பட்டப்பெயரையும் அவர் தீர்மானிக்கவில்லை. தன்னுடைய பரப்புரையை சிறப்பானதாக மாற்றும் வகையில், கமலா ஹாரிஸை வரையறுக்கும் வகையில் விரைவில் டிரம்ப் ஒரு திட்டத்தை உருவாக்குவார் என தான் நம்புவதாகவும், அதுதான் அவருடைய சிறப்பான அரசியல் திறன் என்றும் முக்கியமான ஜனநாயக வியூகவாதி ஒருவர் என்னிடம் கூறினார். அதை டிரம்ப் செய்யும் போது கமலா ஹாரிஸுக்கு இந்த தேர்தல் இன்னும் கடினமானதாக மாறும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2022ம் ஆண்டு வெள்ளை மாளிகை நிகழ்ச்சி ஒன்றில் ஒபாமாவும், கமலா ஹாரிஸும் ஜனநாயக கட்சி மாநாட்டு மேடையில் நம்பிக்கை தெரிந்தாலும், எச்சரிக்கை உணர்வும் இருந்தது. செவ்வாய்க் கிழமை இரவு மிஷெல் ஒபாமா தன் உரையில், தேர்தலில் மிகக் கடுமையான போட்டி இருக்கும் என்று எச்சரித்தார். “எந்த சந்தேகத்தையும் அழித்தொழிக்கும் வகையிலான எண்ணிக்கையில் நாம் வாக்கு செலுத்த வேண்டும்,” என குழுமியிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றினார். “நம்மை ஒடுக்கும் எந்த முயற்சியையும் நாம் அடக்க வேண்டும்” என்றார் அவர். இதே கருத்தை வலியுறுத்திய பராக் ஒபாமா, அரங்கில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கானோர் நாடு முழுவதும் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பியதும் தெருக்களில் இறங்கி வேலை செய்வதற்கு ஊக்கமளிக்கும் வகையில் சில வலுவான வார்த்தைகளை பயன்படுத்தினார். “நாம் மதிக்கும் அமெரிக்காவுக்காக போராடுவது நம் கையில்தான் உள்ளது,” என முன்னாள் அதிபர் தெரிவித்தார். “எந்த தவறும் செய்ய கூடாது, இது ஒரு போராட்டம்” என்றார் அவர். "கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார்" இந்த தேர்தலில் முடிவை தீர்மானிக்கக் கூடிய, இழுபறி நிலவும் முக்கியமான மாகாணங்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு செய்வதற்கு எவ்வளவு வேலைகள் உள்ளன என்பது நன்றாக தெரிந்திருக்கிறது. “இந்த வாரம் நான் செல்லும் எல்லா இடங்களிலும் ஜனநாயக கட்சியினரிடம், ‘உங்களை போன்றே எல்லோரும் சக்தியுடன் இருக்கிறார்கள் என எண்ணாதீர்கள்’ என கூறி வருகிறேன்,” என ஜனநாயக கட்சியின் பிரதிநிதியும் மிச்சிகன் மாகாணத்தில் செனட் உறுப்பினருக்கான போட்டியில் உள்ளவருமான எலிசா ஸ்லாட்கின், பொலிடிகோ என்ற இணைய ஊடகத்திடம் தெரிவித்தார். இந்த வாரம் நடைபெற்ற நிகழ்வுகள் காரணமாக ஊக்கம் பெற்றுள்ள ஜனநாயக கட்சி பிரதிநிதிகள், ஒபாமாவின் செய்தியை மனதில் கொண்டுள்ளதாக தெரிகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கமலா ஹாரிஸ் முக்கிய போட்டி களமான ஜார்ஜியாவை சேர்ந்த 21 வயதான கேமரோ லேண்டின், வெற்றியை சாதாரணமாக பெற முடியாது என தெரிவித்தார். ஜார்ஜியாவில் 28 ஆண்டுகள் கழித்து முதன்முறையாக கடந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது. “கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார் என நான் நம்புகிறேன்,” என, ஹாரிஸ் மேடை ஏறுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு கூறினார். சவன்னா நகரை சேர்ந்த பிராந்திய ஒருங்கிணைப்பாளரான அவர், வாக்குப்பதிவை அதிகப்படுத்துவதில் தான் தன்னைப் போன்றவர்கள் கவனம் செலுத்துவதாக கூறினார். “இதற்காக வாரத்தில் 60 மணி நேரத்திற்கும் அதிகமாக, ஏழு நாட்களும் ஒருங்கிணைக்கின்றனர். இதற்காக தன்னார்வலர்கள் தொலைபேசி அழைப்புகள் வாயிலாகவும் நேரில் சென்றும் பரப்புரை செய்கின்றனர்” என்றார். கமலா ஹாரிஸ் மற்றும் வால்ஸை நோக்கி அவர்களின் உருவப்படம் கொண்ட போஸ்டர்களை அசைத்த கட்சி பிரதிநிதிகளை சுட்டிக்காட்டி, “இதுதான் வெற்றி பெறும்” என்றார். “களத்தில் உள்ள மக்களால் தான் வெற்றி கிட்டும்” என்றார். "மாயையில் இல்லை" நெவெடா மாகாணத்தின் ஜனநாயக கட்சி பிரதிநிதி சூசி லீ, லாஸ் வேகாஸ் பகுதிகளை உள்ளடக்கிய மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். தேர்தலில் கடும் போட்டி நிலவும் என்றும், குறிப்பாக சம பலம் உள்ள தன்னுடைய மாகாணத்தில் கடும் போட்டி நிலவும் என்றும், தான் எந்தவித மாயையிலும் இல்லை என்றும் அவர் கூறினார். “வெற்றி குறித்து அதீத நம்பிக்கையில் இருக்கக் கூடாது” என அவர் கூறுகிறார். நெவாடாவில் சில பகுதிகளில் 50-100 வாக்குகளில் கூட வெற்றி தீர்மானிக்கப்படும் என்றார். “எனவே மக்களை வாக்கு செலுத்த ஊக்குவிக்க வேண்டும். “ஆனால், டொனால்ட் டிரம்ப் குறித்து மக்கள் சோர்வடைந்து விட்டனர் என நான் நினைக்கிறேன்,” என அவர் தெரிவித்தார். “ஹாரிஸ் மற்றும் டிரம்ப்பில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது மிக தெளிவாக உள்ளது. மக்களுக்கு அதுகுறித்து தெரியும் என நினைக்கிறேன்.” என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டொனால்ட் டிரம்ப் சிகாகோவில் நடைபெற்ற ஜனநாயக கட்சியின் அரசியல் மாநாட்டை கோடிக்கணக்கான மக்கள் பார்த்தனர். முதல் மூன்று நாள் இரவிலும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் 2 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்தனர். ஹாரிஸ்-வால்ஸ் கூட்டணி நிச்சயமாக மேலும் முன்னேற்றம் அடையும். ஆனால், மற்றொரு கட்சி மாநாட்டை தொடர்ந்தே இது நிகழும் என்று மாநாட்டுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. கமலா ஹாரிஸ் குறித்து அமெரிக்கா இப்போதுதான் அறிந்துவரும் நிலையில், கடினமான ஊடக நேர்காணல்களை இதுவரை அவர் தவிர்த்து வருவதாலும் கொள்கைகளை குறைவாகவே வெளிப்படுத்தியுள்ளதாலும் மாநாட்டின் மகிழ்ச்சி தருணம் நீடிக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. கிட்டத்தட்ட பாதி அமெரிக்கா, டிரம்ப்பின் பிடியில் உள்ளது. மூன்று தொடர்ச்சியான அதிபர் தேர்தலுக்கான பரப்புரைகள் மூலம் அவர்கள் டிரம்ப்பை நன்கு அறிவார்கள். இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியினர் நிச்சயமாக வெற்றி பெறலாம், ஆனால் அவர்கள் செய்வதற்கு பல கடினமான வேலைகள் உள்ளன. பெர்ன்ட் டெபுஸ்மன் ஜூனியர் வழங்கிய கூடுதல் தகவல்களுடன் https://www.bbc.com/tamil/articles/c303vd77g97o
  15. கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு மன்னிப்புக் கோரினார் அமைச்சர் அலி ஷப்ரி கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு மக்களிடம் மன்னிப்புக் கோருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி ஷப்ரி தெரிவித்துள்ளார். இதேவேளை, இன்று முதல் தினமும் 1000 கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு அருகில் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் பல நாட்களாக மக்கள் காத்துக் கொண்டிருக்கின்ற அதேவேளை,பெரும்பாலானோர் அதே இடத்தில் இரவை கழித்து வருகின்றனர். குடிவரவுத் திணைக்களம் வசம் வைத்திருக்கும் வெற்று கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்ட நிலையில், குடிவரவு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக இவ்வாறு வரிசை உருவானது. இவ்வாறானதொரு பின்னணியிலேயே புதிய இலத்திரனியல் கடவுச்சீட்டு அறிமுகம் செய்யப்படும் வரை ஒக்டோபர் மாதம் வரையில் இந்நிலை நீடிப்பதால் அத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு அந்த திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. https://thinakkural.lk/article/308524
  16. இலங்கை கடற்படை சிறைப்பிடித்த மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் 28 AUG, 2024 | 12:13 PM ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற மரியசியா என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் கிங்சன் (40), மெக்கன்ஸ் (37), ராஜ் (43), இன்னாசி ராஜா (45), சசி (40), மாரியப்பன் (45 ), அடிமை (33), முனியராஜ் ( 23) ஆகிய எட்டு பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்களை இலங்கை கடற்படையினர் செவ்வாய்கிழமை அதிகாலை கைது செய்தனர். கைதுசெய்யப்பட்ட 8 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து 8 பேருக்கும் செப்டம்பர் 14 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மீனவர்களை சிறைப்பிடித்ததைக் கண்டித்தும், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை தாயகம் திருப்பி அழைத்து வர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் ராமேசுவரத்தில் கடலுக்குச் செல்லாமல் மீன்பிடி இறங்குதளத்தில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கும் செல்லவில்லை. https://www.virakesari.lk/article/192210
  17. தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக வவுனியாவில் துண்டுப்பிரசுர விநியோகம் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ப.அரியநேத்திரனை ஆதரித்து வவுனியா நகரில் துண்டுபிரசுரம் விநியோகிக்கப்பட்டது. தமிழ்தேசிய பொதுக்கட்டமைப்பினரின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேருந்து நிலைய பகுதியில் நடந்த இந்த விநியோக பணியில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், பொதுஅமைப்புக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். https://thinakkural.lk/article/308533
  18. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விக்டோரியா பப்ளிக் ஹால், சென்னை கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 28 ஆகஸ்ட் 2024, 06:20 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் அமைந்திருக்கும் விக்டோரியா பப்ளிக் ஹால் ஒரு காலகட்டத்தில் சென்னையின் மகத்தான அடையாளங்களில் ஒன்றாக திகழ்ந்தது. சென்னையின் வரலாற்றோடு பிணைக்கப்பட்ட இந்த கட்டடத்தின் வரலாறு என்ன? சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குச் செல்லும் யாரும், அந்த ரயில் நிலையத்திற்கும் மாநகராட்சிக் கட்டடமான 'ரிப்பன் பில்டிங்கி'ற்கும் இடையில், இந்தோ - சராசெனிக் பாணியில் கட்டப்பட்டு கம்பீரமான தோற்றத்தோடு நிற்கும் ஒரு கட்டடத்தை பார்க்காமல் செல்ல முடியாது. செங்கல் நிறத்தில் உயர்ந்து நிற்கும் அந்தக் கட்டடம், விக்டோரியா பப்ளிக் ஹால். ஒரு காலத்தில் சென்னையின் பரபரப்பான நிகழ்வுகளின் மையமாக இருந்த இடம் அது. 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் 'Town Hall' எனப்படும் அரங்கங்களைக் கட்டுவது வழக்கமாக இருந்தது. நகர நிர்வாகத்திற்கென தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இது போன்ற டவுன் ஹால்களில் கூடி, அந்நகரம் குறித்த முடிவுகளை எடுப்பார்கள். அம்மாதிரி கூட்டங்கள் நடக்காத காலகட்டத்தில், நகரின் முக்கிய நிகழ்ச்சிகள், நகருக்கு வருகை தரும் முக்கியப் பிரமுகர்களுக்கான வரவேற்பு போன்றவை அந்த அரங்கில் நடக்கும். அந்த காலகட்டத்தில், கல்கத்தா, பம்பாய் போன்ற இடங்களில் டவுன் ஹால்கள் கட்டப்பட்டுவிட்டன. ஆனால், பிரிட்டிஷ் இந்தியாவின் மிக முக்கிய நகரமான மெட்ராஸில் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும்கூட அப்படி ஒரு கட்டடம் இல்லை. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் மெட்ராஸிலும் அப்படி ஒரு கட்டடத்தைக் கட்ட வேண்டும் என்ற விருப்பம் உருவானது. பிற நகரங்களில் இருந்த டவுன் ஹால்களில் நகராட்சிக் கூட்டங்கள் நடந்தாலும், மெட்ராஸ் டவுன் ஹாலின் நோக்கம், நகராட்சிக் கூட்டத்தை நடத்துவதாக இல்லை. காரணம், மெட்ராஸ் மாநகராட்சி அந்தத் தருணத்தில் எர்ரபாலு தெருவில் இருந்த ஒரு கட்டடத்தில் இயங்கிவந்தது. ஆகவே, புதிய கட்டடம், முக்கிய நிகழ்வுகளை நடத்தும் இடமாகவே இருக்கும் என்பது ஆரம்பத்திலேயே தெளிவாக இருந்தது. நிதியுதவி செய்த அரசர்கள் 1882ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜார்ஜ் டவுனில் இருக்கும் பச்சையப்பா அரங்கில் ஒரு கூட்டம் நடைபெற்றது. சென்னை நகரின் முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்ட அந்தக் கூட்டத்தில், மெட்ராஸ் நகருக்கென ஒரு டவுன் ஹாலைக் கட்ட தீர்மானிக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஒவ்வொருவரும் அந்தக் கட்டடத்திற்காகப் பங்களிப்புச் செய்தனர். முடிவில், கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் 30 பேரிடமிருந்து 16,425 ரூபாய் வசூலானது. படக்குறிப்பு, ஒரு லாட்டரி நடத்தப்பட்டு, அதில் கிடைத்த நிதியும் கட்டட நிதியில் சேர்க்கப்பட்டது. இதையடுத்து பணிகள் விறுவிறுப்படைந்தன. இந்தக் கட்டடத்தைக் கட்ட 12 உறுப்பினர்களைக் கொண்ட அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. மெட்ராஸ் மாகாண அரசிடம் இதற்கென ஒரு நிலத்தை ஒதுக்கித் தரும்படி கேட்கப்பட்டது. தற்போது நேரு விளையாட்டரங்கம், சென்ட்ரல் ரயில் நிலையம், சென்னை மாநகராட்சி ஆகியவை இருக்கும் இடத்தில், அந்தக் காலகட்டத்தில் மக்கள் பூங்கா (Peoples Park) என்ற பெயரில் 117 ஏக்கரில் மிகப் பெரிய பூங்கா இருந்தது. அந்த பூங்காவில் 3.14 ஏக்கர் நிலத்தை சென்னை மாகாண அரசு 99 வருட குத்தகைக்கு ஒதுக்கித் தந்தது. வருடத்திற்கு 28 ரூபாய் குத்தகைக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது. விஜயநகர மன்னரான புசபதி ஆனந்த கஜபதி ராஜு, 1883 டிசம்பர் 17ஆம் தேதி கட்டடத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். திருவனந்தபுர அரசர், மைசூர், ராமநாதபுரம், எட்டயபுர மன்னர்கள் இந்தக் கட்டடம் கட்டுவதற்காக நிதியுதவியைச் செய்திருந்தனர். இருந்த போதும், கட்டடத்தைக் கட்டி முடிக்க அந்த நிதி போதுமானதாக இல்லை. இதையடுத்து இதற்கென ஒரு லாட்டரி நடத்தப்பட்டு, அதில் கிடைத்த நிதியும் கட்டட நிதியில் சேர்க்கப்பட்டது. கட்டடத்தை முடிக்க ஐந்து ஆண்டுகள் அந்தத் தருணத்தில் வங்காளத்தின் பொதுப் பணித் துறையில் செயற்பொறியாளராக ராபர்ட் ஃபெலோவஸ் சிஸோம் என்பவர் பணியாற்றி வந்தார். அவர், சென்னை மாகாணத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தார். அவர்தான் இந்தக் கட்டடத்தின் வடிவமைப்பாளராகச் செயல்பட்டார். கட்டடத்தைக் கட்டும் பொறுப்பு, சென்னையில் உள்ள அரசு அருங்காட்சியகம், சட்டக் கல்லூரி, கன்னிமாரா நூலகம் போன்றவற்றைக் கட்டிய புகழ் பெற்ற கட்டட ஒப்பந்ததாரரான டி. நம்பெருமாள் செட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தக் கட்டடத்தைக் கட்டி முடிக்க ஐந்து ஆண்டுகள் ஆயின. 48 மீட்டர் நீளத்துடனும் 24 மீட்டர் அகலத்துடனும் செவ்வக வடிவில் அமைந்திருந்த இந்த கட்டடத்தில் இரண்டு அரங்குகள் உண்டு. ஒன்று, தரைத்தளத்திலும் மற்றொன்று முதல் தளத்திலும் இருந்தது. அதற்கு மேல் ஓடுகள் வேயப்பட்டிருந்தன. படக்குறிப்பு, விக்டோரியா பப்ளிக் ஹாலின் அழகு வேலைப்பாடுகள் நிறைந்த சன்னல் 1837ல் ஐக்கிய ராஜ்ஜியத்தின் அரசியாகியிருந்த விக்டோரியா மகாராணி ஆட்சியின் பொன் விழா 1887ல் நடந்து முடிந்திருந்தது. அதன் தொடர்ச்சியாக புதிதாக மெட்ராஸில் கட்டப்பட்ட அந்தக் கட்டடத்திற்கு மகாராணியின் பெயரைச் சூட்ட விரும்பியது பிரிட்டிஷ் அரசு. அதன்படி, அவரது பெயரே அந்தக் கட்டடத்திற்குச் சூட்டப்பட்டது. கட்டடம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு, இந்தக் கட்டடத்தை திறந்து வைத்தது யார் என்பதில் சிறு குழப்பம் நிலவுகிறது. ஆனால், சென்னை குறித்த வரலாற்றாய்வாளரான எஸ். முத்தையா சென்னை மாகாண ஆளுநராக இருந்த லார்ட் கன்னிமாராதான் இதனைத் திறந்துவைத்ததாகக் குறிப்பிடுகிறார். இந்தக் கட்டடம் திறக்கப்பட்ட பிறகு, பல புகழ்பெற்ற ஆளுமைகள் இந்த அரங்கில் பேசினர். சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி, கோபால கிருஷ்ண கோகலே, பாரதியார் ஆகியோர் இங்கே பேசியிருக்கின்றனர். திரையிடப்பட்ட படங்கள் "சிகாகோவிலிருந்து திரும்பிய விவேகானந்தர் பேசுவதைக் கேட்க பெரும் கூட்டம் அரங்கத்திற்குள் நிரம்பிவிட்டதால், அவரால் உள்ளே நுழையவே முடியவில்லை. இதனால், வெளியில் இருந்தபடியே பேசினார். அதேபோல, மகாத்மா காந்தி 1915ல் பம்மல் சம்பந்த முதலியாரின் ஹரிச்சந்திரா நாடகத்தை இங்கேதான் பார்த்தார். பாரதியார் இங்கே Cult of the Eternal (நித்தியத்தின் வழிபாடு) என்ற தலைப்பில் பேசியபோது, அவரது பேச்சைக் கேட்க ஒரு ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது" என்கிறார் சென்னை குறித்த வரலாற்றாய்வாளரான வெங்கடேஷ் ராமகிருஷ்ணன். 1919ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாரதியார் இங்கே பேசினார். அந்த காலகட்டத்தில் தமிழ் நாடக உலகில் புகழ்பெற்று விளங்கிய சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார் ஆகியோர் இங்கு தங்கள் நாடகங்களை தொடர்ந்து அரங்கேற்றினர். ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் இங்கு தமிழில் மேடையேறின. சென்னையில் முதன் முதலில் கட்டப்பட்ட சினிமா அரங்கம் வேறு என்றாலும், முதன் முதலில் சினிமா இங்குதான் காட்டப்பட்டது. 1896 டிசம்பரில் மெட்ராஸ் ஃபோடோகிராஃபிக் ஸ்டோர் என்ற கடையை நடத்திவந்த டி. ஸ்டீவன்சன் சில சிறு படங்களைத் திரையிட்டார். அந்த நாட்களில் பெரும் மழை பெய்துகொண்டிருந்ததால், அதைப் பார்க்க வந்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்தது. செய்யாத குற்றத்திற்கு 38 ஆண்டு சிறைவாசம் - நிரபராதி என்று நீதிபதி அறிவித்தும் விடுதலை ஆகாதது ஏன்?27 ஆகஸ்ட் 2024 படக்குறிப்பு, நிகழ்ச்சிகள் குறைந்ததால் பராமரிப்பும் குறைந்தது. இவை எல்லாவற்றையும்விட, தமிழ்நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வு இங்கே நடந்தது. 1916ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி, நகரின் பிராமணரல்லாத தலைவர்கள் இங்கே ஒன்றுகூடி, South Indian Liberation Federation அமைப்பை உருவாக்கினர். இதுவே பிற்காலத்தில் தமிழ்நாட்டு அரசியலை புரட்டிப் போட்ட திராவிட இயக்கம் உருவாகக் காரணமாக அமைந்தது. இதற்குப் பிறகு, சுகுண விலாஸ் சபா, சென்னபுரி ஆந்திர மஹாசபா, தென்னிந்திய தடகள வீரர்கள் சங்கம் போன்றவை இங்கு சிலகாலம் செயல்பட்டன. ஒரு கட்டத்தில் இந்தக் கட்டடத்தின் முக்கியத்துவம் குறைய ஆரம்பித்தது. அதற்குக் காரணம் இருந்தது. "நாட்கள் செல்லச்செல்ல மெட்ராஸ் நகரம் தெற்கு நோக்கி வளர ஆரம்பித்தது. முக்கிய நிகழ்ச்சிகள், கூட்டங்கள், நாடகங்கள் ஆகியவே நிகழ்ச்சிகள் நகரின் தெற்கில் புதிதாக உருவான அரங்கங்களுக்கு மாற ஆரம்பித்தன. இதனால், இந்த அரங்கின் மவுசு குறைய ஆரம்பித்தது" என்கிறார் வெங்கடேஷ். நிகழ்ச்சிகள் குறைந்ததால் பராமரிப்பும் குறைந்தது. பராமரிப்புப் பணிகள் 1967ல் சி.என். அண்ணாதுரை முதலமைச்சராகப் பதவியேற்ற போது, கட்டடத்தைப் புதுப்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அது நடக்கவில்லை. இதற்குப் பிறகு, ஒரு உணவகம், சில கடைகள் ஆகியவை இங்கே செயல்பட்டுவந்தன. இந்தக் காலகட்டத்தில் கட்டடம் பாழடைய ஆரம்பித்தது. கட்டடம் துவங்கப்பட்டதிலிருந்து சென்னை நகர ஷெரீஃப் தலைமையிலான ஒரு அறக்கட்டளை இந்தக் கட்டடத்தை நிர்வகித்து வந்தது. அந்த அறக்கட்டளையில் விஜயநகர ஜமீன் குடும்பத்திற்கும் சென்னை மாநகராட்சிக்கும் பெரும் பங்கு இருந்தது. ஷெரீஃப் பதவி ஒழிக்கப்பட்ட பிறகு, கட்டடம் மாநகராட்சியின் பொறுப்பிற்கு வந்தது. ஆனால், அந்தத் தருணத்தில் கட்டடம் மிக மோசமான நிலையில் இருந்தது. பிறகு, கட்டடத்தைப் புதுப்பிக்கும் நோக்கில், அதிலிருந்த கடைகள் போன்றவை அகற்றப்பட்டன. சிறிய அளவில் பராமரிப்புப் பணிகளும் நடந்தன. ஆனால், அந்தப் பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் துவங்கியதும், மீண்டும் பொதுமக்களின் பார்வையிலிருந்து இந்தக் கட்டடம் மறைந்தது. இப்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு, சுமார் 32 கோடி ரூபாய் செலவில் முழுமையாக இந்தக் கட்டடம் சீரமைக்கப்பட்டு வருகிறது. 2025ல் பராமரிப்புப் பணிகள் முடிவடைந்து கட்டம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.bbc.com/tamil/articles/c5y848y5ry8o
  19. Published By: VISHNU 27 AUG, 2024 | 11:02 PM (நெவில் அன்தனி) சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐசிசி) அடுத்த சுயாதீனத் தலைவராக இந்தியாவின் ஜெய் ஷா போட்டியின்றி தெரிவானார். 2019இலிருந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் கௌரவ செயலாளராகவும் 2021இலிருந்து ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவராகவும் பதவி வகிக்கும்ஜெய் ஷா, ஐசிசியின் தலைவர் பதவியை டிசம்பர் 1ஆம் திகதி பொறுப்பேற்பார். சமகாலத் தலைவர் க்ரெய்க் பாக்லே, மூன்றாவது முறையாக பதவியேற்க முன்வராத நிலையில் அடுத்த தலைவர் பதவிக்கு ஜெய் ஷாவின் பெயர் மாத்திரமே பிரேரிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் போட்டியின்றி தெரிவானார். தலைவர் பதவிக்கு தெரிவானதை அடுத்து, உலகளாவிய ரீதியில் கிரிக்கெட்டை பரப்பச் செய்வதும் பிரபல்யம் அடையச் செய்வதுமே தனது நோக்கம் என ஜெய் ஷா குறிப்பிட்டார். குறிப்பாக லொஸ் ஏஞ்சலிஸ் 2028 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் கிரிக்கெட்டை இணைப்பதன் மூலம் அதன் வளர்ச்சிக்கு முக்கிய வாய்ப்பு உருவாவதாக அவர் கூறினார். 'சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக பிரேரிக்கப்பட்டமைக்காக தாழ்மை அடைகிறேன்' என்றார் ஷா. 'கிரிக்கெட்டை மேலும் உலகமயமாக்கும் பொருட்டு ஐசிசி குழுவினருடனும் உறுப்பு நாடுகளுடனும் நெருக்கமாக பணியாற்ற அர்ப்புணிப்புடன் இருக்கிறேன். பல கிரிக்கெட் வடிவங்களின் சமநிலையைப் பேணுவதற்கும் மேம்பட்ட தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதற்கும் புதிய உலகளாவிய சந்தைகளுக்கு எங்கள் பிரதான நிகழ்வுகளை அறிமுகப்படுத்துவதற்கும் தேவையான ஒரு முக்கிய கட்டத்தில் நாங்கள் நிற்கிறோம். முன்னெப்போதும் இல்லாதவாறு கிரிக்கெட்டை முழுமைப்படுத்தி பிரபலமாக்குவதே எங்கள் குறிக்கோள்' என்றார். https://www.virakesari.lk/article/192170
  20. டெலிகிராம் செயலி தலைமை நிர்வாக அதிகாரியுடன் கைது செய்யப்பட்ட இளம்பெண் ஜூலி - மொசாட் உளவாளியா? 28 AUG, 2024 | 11:45 AM டெலிகிராம் செயலியின் தலைமைநிர்வாக அதிகாரி பவெல் துரோவ் உடன் இளம்பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஜூலி வவிலோவா என்ற அந்தப் பெண் இஸ்ரேலின் மொசாட் உளவாளி என்று குற்றம் சாட்டப் பட்டுள்ளது. டெலிகிராம் செயலி மூலம் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக குற்றம்சாட்டப்பட்டது. குற்றவியல் நடவடிக்கைகளை கண்காணிக்க தவறியது, பயனாளர்களின் தரவுகளை அரசிடமிருந்து மறைத்து பாதுகாத்தது போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் டெலிகிராம் சிஇஓ பவெல் துரோவ் பிரான்ஸ் நாட்டு விமான நிலையத்தில் சனிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டார். 90 கோடி பயனாளர்களைக் கொண்ட டெலிகிராமின் சிஇஓ கைது செய்யப்பட்டது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பவெலுடன் ஜூலி வவிலோவா என்ற இளம்பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பவெலின் காதலிஎன்று நம்பப்படுகிறது. 24 வயதான ஜூலி வவிலோவா துபாயைச் சேர்ந்த கிரிப்டோ பயிற்சியாளர் மற்றும் சமூக ஊடக பங்கேற்பாளர் என்பது தெரியவந்துள்ளது. கேமிங், கிரிப்டோ, மொழி ஆகியவற்றை தனது ஆர்வப் பட்டியலில் தெரிவித்துள்ள அவர் ஆங்கிலம், ரஷ்யன், ஸ்பானிஷ், அரபு ஆகிய நான்கு மொழிகளிலும் சரளமாக பேசக்கூடியவர். இவர் மொசாட் ஏஜென்ட்டாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. வவிலோவாவும், டெலிகிராம் சிஇஓவும் கஜகஸ்தான், கிர்கிஸ்தான், அஜர்பைஜான் போன்ற பல்வேறு நாடுகளில் ஒன்றாக சுற்றித்திரிந்துள்ளனர். அவர்களது வீடியோ இன்ஸ்டாகிராமில் தற் போது வைரலாகியுள்ளது. https://www.virakesari.lk/article/192208
  21. ஜே.ஆர்., ரணசிங்க பிரேமதாசவை மதிப்பவர்கள் கட்சி அரசியலுக்கு முக்கியத்துவமளிக்க மாட்டார்கள் - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க Published By: VISHNU 28 AUG, 2024 | 03:12 AM (எம்.மனோசித்ரா) நாடு நெருக்கடியில் இருக்கும் போது கட்சியை மறந்து நாட்டுக்காக சிந்தியுங்கள் எனக் கற்றுக் கொடுத்த ஜே.ஆர்.ஜெயவர்தனவின் கொள்கையையே இன்றும் நான் பின்பற்றுகின்றேன். அவரையும் ரணசிங்க பிரேமதாசவையும் உண்மையாக மதிக்கும் எவரும் கட்சி அரசியலுக்கு முக்கியத்துவமளிக்க மாட்டார்கள் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். செவ்வாய்கிழமை (27) மாவனல்லையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், நாடு நெருக்கடியில் இருக்கும் போது கட்சியை மறந்து நாட்டுக்காக சிந்தியுங்கள் என்று எனது தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன கற்றுக் கொடுத்திருக்கின்றார். 1971 ஜே.வி.பி. கலவரம் இடம்பெற்றபோது ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக நாம் இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்று அன்றைய எதிர்கட்சி தலைவர் குறிப்பிட்டார். அந்த சந்தர்ப்பத்தில் எமது கட்சியின் இளைஞர் அணியின் செயலாளரும், ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் மகனும் சிறையிலடைக்கப்பட்டிருந்தனர். எனினும் அந்த பிரச்சனைகளை பின்னர் தீர்த்துக் கொள்ளலாம் என்றும் தற்போது நாட்டில் உள்ள பிரச்சனைகளை தீர்ப்போம் என்றும் அவர் கூறினார். அதேபோன்று தான் 1983இல் ஜே.வி.பி. கலவரம் ஏற்பட்டபோதும் அப்போதைய எதிர்க்கட்சி ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுக்கு ஒத்துழைப்பு வழங்கியது. ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச கொலை செய்யப்பட்ட போது, உங்களது கட்சியில் ஜனாதிபதி ஒருவரை நிறுத்துங்கள் என்று பண்டாரநாயக்க தெரிவித்தார். இவ்வாறு தான் முன்னர் கட்சிகள் ஒற்றுமையுடன் செயற்பட்டன. அதேபோன்றுதான் நாடு நெருக்கடியான சூழலில் இருந்தபோது அனைத்து கட்சிகளையும் சேர்ந்த நாம் அனைவரும் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்பினோம். எனவே ஜே.ஆர்.ஜெயவர்த்தனவையும் ரணசிங்க பிரேமதாசவையும் மதிக்கும் ஐக்கிய தேசிய கட்சியினரான நாம் நாட்டுக்காக இணைந்து செயல்படுவோம் என்று கேட்டுக் கொள்கின்றேன். இரண்டு வருடங்களுக்கு முன்னர் நான் கட்சியை பற்றி சிந்தித்திருந்தால் நாடு இன்று இந்த நிலைமையில் இருந்திருக்காது. எதிர்க்கட்சித் தலைவரை மாற்று பிரதமர். ஐக்கிய தேசியக் கட்சியை பாரம்பரியமாகக் கொண்ட அவர் அன்று பிரதமர் பதவியை பொறுப்பேற்றிருக்க வேண்டும். யாரும் இல்லாத சந்தர்ப்பத்திலேயே நான் இந்த இடத்துக்கு வந்தேன். பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் முழுமையாக அந்த இடத்துக்கு செல்லவில்லை. மக்களின் வாழ்க்கை சுமையை மேலும் குறைப்பதற்கும் அவர்களின் வாழ்வாதாரத்தை அதிகரிப்பதற்கும் புதிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கும் ஏற்றுமதி பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும் எதிர்பார்க்கின்றோம். இன்னும் தொங்கு பாலம் உள்ள பாதையிலேயே பயணிக்க வேண்டியிருக்கின்றது. சிலர் வரியை முற்றாக நீக்குவதாக கூறுகின்றனர். வரி இல்லை என்றால் என்ன செய்வார்கள்? எமது வருமானம் முற்றாக இழக்கப்படும். அவர்கள் தொங்கு பாலத்தை அறுத்து எறிந்து விட்டு செல்லுங்கள் என்று கூறுகின்றார்கள். அவ்வாறு செய்தால் நாம் ஆற்றில் விழ வேண்டியதுதான். தொங்கு பாலத்தில் அவதானமாக பயணிப்பதா அல்லது அதனை அறுத்தெறிந்து ஆற்றில் விழுவதா? தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனத்திற்கு அமைய அரசாங்கத்தின் வருமானம் சுமார் 200 பில்லியன் வரை இழக்கப்படும். வருமானத்தை குறைத்து எவ்வாறு செலவை அதிகரிக்க முடியும்? இந்த கணிதமும் பொருளாதாரம் தெரியாத அவர்கள் தொங்கு பாலத்தின் இரு பகுதிகளையும் அறுத்துவிடவே எண்ணுகின்றனர். தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனத்தை நானும் வாசித்தேன் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி அதன் பிரதிபலனை உங்களுக்கு வழங்க வேண்டும் என்பதே எனது இலக்காகும். வருமானத்தை அதிகரிப்பதன் மூலம் வரை சுமையை குறைத்து பொருட்களின் விலைகளையும் குறைக்க முடியும். பொருளாதாரத்தை மேம்படுத்தினால் மாத்திரமே வாழ்க்கை சுமையை மேலும் குறைக்க முடியும். ஐக்கிய மக்கள் சக்திக்கு அவர்களது கொள்கை என்னவென்றே தெரியவில்லை. வியாழனன்று எமது முழுமையான வேலைத்திட்டத்தை கொள்கை பிரகடனத்தில் உங்களுக்கு வெளிப்படுத்துவோம். எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து 21ஆம் திகதி எரிவாயு சிலிண்டர் அருகில் புள்ளடியிடுங்கள் என்றார். https://www.virakesari.lk/article/192178
  22. பட மூலாதாரம்,BBC படக்குறிப்பு, சீமேநே எனும் ஒரு நாடோடி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் மார்டினா கட்டுரை தகவல் எழுதியவர், அலெகான்ட்ரோ மிலன் வலென்சியா பதவி, பிபிசி நியூஸ் முண்டோ 27 ஆகஸ்ட் 2024 பொலிவியக் காட்டில் மார்டினா காஞ்சி நேட் நடந்து செல்லும்போது, சிவப்பு வண்ணத்துப்பூச்சிகள் அவரைச் சுற்றி பறக்கின்றன. அவரின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் எங்கள் குழு அவரை மெதுவாக நடக்க கோரிக்கை வைத்தது. அவருடைய அடையாள அட்டை அவருக்கு 84 வயது என்று சொல்கிறது. ஆனால் 10 நிமிடங்களுக்குள், மூன்று யூக்கா (Yucca) மரங்களின் வேர்களில் இருந்து கிழங்குகளைப் பிரித்தெடுக்க அவற்றை தோண்டி எடுக்கிறார். தனது கத்தியால் இரண்டே வெட்டுகளில் ஒரு வாழை மரத்தை சாய்த்துவிட்டார். தன் முதுகில் ஒரு பெரிய வாழைத் தாரைச் சுமந்துகொண்டு, தனது தோட்டத்திலிருந்து வீட்டை நோக்கி நடக்க தொடங்குகிறார். இந்த தோட்டத்தில்தான் மரவள்ளிக்கிழங்கு, சோளம், வாழை மற்றும் அரிசி ஆகியவற்றை அவர் பயிரிடுகிறார். பொலிவியாவின் தலைநகரான லா பாஸுக்கு வடக்கே 600 கிமீ தொலைவில் உள்ள அமேசான் மழைக்காடுகளின் உள் பகுதிகளில் வாழும், Tsimanes (‘சீ-மே-நே’ என்று உச்சரிக்கப்படுகிறது) எனும் ஒரு நாடோடி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் மார்டினா. இந்த பழங்குடி சமூகத்தில் 16,000 பேர் வாழ்கின்றனர். மார்டினாவின் வலிமை என்பது அவரது வயதையொத்த ‘சீமேநே’ பழங்குடிகளுக்கு அசாதாரணமானது ஒன்றும் அல்ல. இதுவரை ஆய்வு செய்யப்பட்டதில் இவர்களுக்குதான் ஆரோக்கியமான தமனிகள் (Arteries) உள்ளன என்று விஞ்ஞானிகள் குழு கூறுகிறது. இவர்களின் மூளை வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பிற பகுதிகளில் உள்ளவர்களை விட மெதுவாகவே மூப்படைகிறது என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர். சீமேநே மிகவும் அரிதான ஒரு பழங்குடிக் குழு. வேட்டையாடுதல், உணவு தேடுதல் மற்றும் விவசாயம் என முழுமையான ஒரு வாழ்க்கை முறையை வாழும், உலகின் சில குறிப்பிட்ட சமூகங்களில் சீமேநேவும் ஒன்று. இந்த சமூகம், ஒரு கணிசமான அறிவியல் மாதிரியை வழங்கும் அளவுக்கு பெரியது. நியூ மெக்ஸிகோ பல்கலைக்கழகத்தின் மானுடவியலாளர் ஹில்லார்ட் கப்லான் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் இருபது ஆண்டுகளாக இச்சமூகத்தை ஆய்வு செய்துள்ளனர். படக்குறிப்பு, தனக்கு வயது 78 என்று சொல்கிறார் ஜுவான் ‘சீமேநே’ பழங்குடிகளின் வாழ்க்கை முறை விலங்குகளை வேட்டையாடுதல், பயிர் செய்தல் மற்றும் கூரைகளை வேய்தல் என ‘சீமேநே’ பழங்குடிகள் தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்கக் கூடியவர்கள். பகல் நேரத்தில் 10%க்கும் குறைவான நேரத்தையே அதிக உடலுழைப்பு தேவைப்படாத வேலைகளில் சீமேநே பழங்குடிகள் செலவிடுகிறார்கள். அதே சமயம் தொழில்துறையில் உள்ள மக்கள், 54% நேரத்தை அதிக உடலுழைப்பு தேவைப்படாத வேலைகளில் செலவிடுகின்றனர். எடுத்துக்காட்டாக, ஒரு சராசரி வேட்டை நிகழ்வு எட்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் மற்றும் 18 கிமீ (11 மைல்) தூரம் வரை செல்ல வேண்டியிருக்கும். அவர்கள் மானிக்கி நதியில் வாழ்கின்றனர். பதப்படுத்தப்பட்ட உணவுகள், மதுபானம் மற்றும் சிகரெட்டுகள் போன்ற பொருட்கள் அவர்களுக்கு எளிதாகக் கிடைப்பதில்லை. அவர்கள் உண்ணும் கலோரிகளில் 14% மட்டுமே கொழுப்பிலிருந்து கிடைக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர், இது அமெரிக்காவில் 34% ஆகும். அவர்களின் உணவுகளில் நார்ச்சத்து அதிகம் மற்றும் 72% கலோரிகள் கார்போஹைட்ரேட்டிலிருந்து வருகின்றது. ஆனால் இது அமெரிக்காவில் 52% ஆகும். அவர்கள் வேட்டையாடும் பறவைகள், குரங்குகள் மற்றும் மீன்கள் போன்ற விலங்குகளிலிருந்து புரதங்கள் கிடைக்கின்றன. அவர்களது பாரம்பரிய சமையல் முறைப்படி உணவைப் பொரிப்பது இல்லை. பட மூலாதாரம்,MICHAEL GUVERN படக்குறிப்பு, சீமேநே பழங்குடிகளின் பாரம்பரிய சமையல் முறைப்படி உணவைப் பொரிப்பது இல்லை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கப்லான் மற்றும் அவரது சக பணியாளரான மைக்கேல் குர்வெனின் ஆரம்பக்கால பணி மானுடவியல் சார்ந்ததாக இருந்தது. சீமேநே சமூகத்தின் முதியோர்களிடம் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு அல்லது இதயப் பிரச்னைகள் போன்ற முதுமையின் பொதுவான நோய்களின் அறிகுறிகள் தென்படவில்லை என்பதை அவர்கள் கவனித்தனர். பின்னர் 2013இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு பேராசிரியர் கப்லானின் ஆராய்ச்சி குழுவின் கவனத்தை ஈர்த்தது. அமெரிக்காவை சேர்ந்த இதய நோய் நிபுணர் ராண்டால் சி தாம்சன் தலைமையிலான குழு, பண்டைய எகிப்து, இன்கா மற்றும் உனங்கன் நாகரிகங்களிலிருந்து 137 மம்மிகளை ஆய்வு செய்ய சிடி (CT) ஸ்கேனிங்கைப் பயன்படுத்தியது. மனிதர்களுக்கு வயதாகும்போது, கொழுப்புச் சத்து, ரத்தக் கொழுப்பு மற்றும் இதர பொருட்களின் உருவாக்கம் தமனிகளை கெட்டியாக்குகிறது அல்லது கடினப்படுத்துகிறது. இதனால் அத்தரோஸ்கிலரோசிஸ் (atherosclerosis) என்ற பாதிப்பு ஏற்படுகிறது. 47 மம்மிகளில் இதற்கான அறிகுறிகளை அவர்கள் கண்டறிந்தனர். நவீன வாழ்க்கை முறைகளால்தான் இதுபோல ஏற்படுகிறது என்ற அனுமானங்கள் மீதான சந்தேகத்தை இது எழுப்பியது. இரண்டு ஆராய்ச்சிக் குழுக்களும் இணைந்து, 40 வயதிற்கு மேற்பட்ட 705 சீமேநே பழங்குடிகள் மீது சிடி ஸ்கேன்களை மேற்கொண்டனர். அடைபட்ட இரத்த நாளங்கள் மற்றும் மாரடைப்பு அபாயத்தின் அடையாளமாக இருக்கும் கரோனரி ஆர்டரி கால்சியத்தைக் (சிஏசி) கண்டறிவதே இதன் நோக்கம். ‘தி லான்செட்’ இதழில் 2017 ஆம் ஆண்டு முதன்முதலில் வெளியிடப்பட்ட அவர்களின் ஆய்வில், 75 வயதுக்கு மேற்பட்ட 65% சீமேநே பழங்குடிகளுக்கு சிஏசி இல்லை என்பதைக் காட்டுகிறது. அந்த வயதுடைய பெரும்பாலான அமெரிக்கர்கள் (80%) அதற்கான அறிகுறிகளைக் கொண்டுள்ளனர். படக்குறிப்பு, சீமேநே பழங்குடிகள் சராசரியாக ஒரு நாளைக்கு 16,000 முதல் 17,000 அடிகள் வரை நடக்கிறார்கள் ‘யாருக்கும் அல்சைமர் நோய் இல்லை’ கப்லான் கூற்றுப்படி, "75 வயதான சீமேநே பழங்குடிகளின் தமனிகள் 50 வயதான அமெரிக்கரின் தமனிகளைப் போன்று உள்ளது." இரண்டாம் கட்டமாக, 2023இல் ‘ப்ரோசீடிங்ஸ் ஆஃப் தி நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸ்’ இதழில் ஒரு ஆய்வு வெளியிடப்பட்டது. பிரிட்டன், ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற தொழில்மயமான நாடுகளில் உள்ள மக்களுடன் ஒப்பிடும்போது, சீமேநே பழங்குடிகள் 70% குறைவான பெருமூளைச் சிதைவை எதிர்கொள்வதாக அந்த ஆய்வு கூறியது. "சீமேநே பழங்குடி மக்கள்தொகையில், யாருக்கும் அல்சைமர் நோய் இல்லை என்பதை நாங்கள் கண்டறிந்தோம். இது மிகப்பெரிய சாதனை" என்று ஆராய்ச்சியாளர்களின் மருத்துவ ஒருங்கிணைப்பாளரான பொலிவியன் மருத்துவர் டேனியல் ஈத் ரோட்ரிக்ஸ் கூறுகிறார். படக்குறிப்பு, ஹில்டா தனது இரண்டாவது கணவர் பாப்லோவுடன் வசித்து வருகிறார் ‘முதுமையை உணர்கிறோம்’ அவர்களின் பதிவுகளின்படி, ஹில்டாவுக்கு வயது 81. ஆனால் சமீபத்தில் தனது குடும்பம் ‘தனது 100வது பிறந்தநாளைக்’ கொண்டாடுவதற்காக ஒரு பன்றியை வெட்டி விருந்து வைத்ததாக ஹில்டா கூறுகிறார். தனக்கு வயது 78 என்று சொல்லும் ஜுவான் எங்களை வேட்டையாட அழைத்துச் செல்கிறார். அவரது தலைமுடி கருமையாகவும், கண்கள் உற்சாகத்துடனும், கைகள் உறுதியாகவும் உள்ளன. தனக்கு வயதாவதை உணர்வதாகவும் அவர் ஒப்புக்கொள்கிறார், "இப்போது எனக்கு மிகவும் கடினமான விஷயம் என் உடல்தான். நான் இனி அதிக தூரம் நடப்பதில்லை” என்கிறார் அவர். மார்டினாவும் தனது முதுமையின் சிரமத்தை ஒப்புக்கொள்கிறார். காடுகளின் உள்பகுதிகளில் வளரும் தாவரமான ஜடாட்டாவிலிருந்து மேற்கூரைகளை வேய்வதில் சீமேநே பெண்கள் புகழ்பெற்றவர்கள். இந்தத் தாவரத்தைக் கண்டுபிடிக்க, மார்டினா மூன்று மணி நேரம் காட்டுக்குள்ளும், பிறகு மூன்று மணி நேரம் வீட்டிற்கும், ஜடாட்டா கிளைகளை முதுகில் சுமந்து நடக்க வேண்டும். "நான் மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே இதைச் செய்கிறேன், இப்போது அது எனக்கு மிகவும் கடினமாக உள்ளது," என்று அவர் கூறுகிறார். படக்குறிப்பு, தனக்கு வயதாவதை உணர்வதாக ஜுவான் ஒப்புக்கொள்கிறார் இருப்பினும், பல சீமேநே மக்கள் முதுமையை அடைவதில்லை. இந்த ஆய்வு தொடங்கியபோது, அவர்களின் சராசரி ஆயுட்காலம் 45 ஆண்டுகளாக இருந்தது. இப்போது அது 50ஆக உயர்ந்துள்ளது. "80 வயதை எட்டும் இந்த மக்களில் சிலர், நோய்கள் மற்றும் நோய்த்தொற்றுகள் நிறைந்த குழந்தைப் பருவத்தில் இருந்து தப்பிப்பிழைத்தவர்கள்" என்கிறார் டாக்டர் ஈத். அனைத்து சீமேநே மக்களும் தங்கள் வாழ்நாளில் ஒட்டுண்ணிகள் அல்லது புழுக்களால் ஒருவித தொற்றுநோய்க்கு ஆளானதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். அவர்கள் சீமேநே பழங்குடிகள் உடலில் அதிக அளவு நோய்க்கிருமிகள் மற்றும் வீக்கத்தைக் கண்டறிந்தனர். சீமேநே பழங்குடிகள் தொடர்ந்து தொற்றுநோய்களுடன் போராடுகிறார்கள் என்பதை இது காட்டுகிறது. உணவு பழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சியோடு சேர்த்து, வயதான சீமேநே மக்களின் ஆரோக்கியத்திற்கு பின்னால், இந்த ஆரம்பகால நோய்த்தொற்றுகள் மற்றொரு காரணியாக இருக்க முடியுமா என்று ஆச்சரியப்படுவதற்கு இது வழிவகுத்தது. படக்குறிப்பு, இரண்டு ஆராய்ச்சிக் குழுக்களும் இணைந்து, 40 வயதிற்கு மேற்பட்ட 705 ‘சீமேநே’ பழங்குடிகளுக்கு சிடி ஸ்கேன்களை மேற்கொண்டனர் ‘மாறிவரும் வாழ்க்கை முறை’ இருப்பினும், இந்த சமூகத்தின் வாழ்க்கை முறை மாறி வருகிறது. சில மாதங்களாக போதுமான அளவு பெரிய விலங்கை வேட்டையாட முடியவில்லை என்று ஜுவான் கூறுகிறார். 2023 ஆம் ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட தொடர் காட்டுத் தீ, கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் ஹெக்டேர் காடுகளை அழித்தது. "நெருப்பு விலங்குகளை இங்கிருந்து வெளியேறச் செய்தது," என்று அவர் கூறுகிறார். அவர் இப்போது கால்நடைகளை வளர்க்கத் தொடங்கியுள்ளார். மோட்டார் படகுகளின் பயன்பாடும் மாற்றத்தைக் கொண்டுவருவதாக டாக்டர் ஈத் கூறுகிறார். இதன் மூலம் சீமேநே பழங்குடிகள் வணிகச் சந்தைகளை எளிதாக அடைய முடிகிறது. சர்க்கரை, மாவு மற்றும் எண்ணெய் போன்ற உணவுகளை அவர்களால் எளிதில் அணுக முடிகிறது. படக்குறிப்பு, மோட்டார் படகுகளின் பயன்பாடும் மாற்றத்தைக் கொண்டுவருவதாக டாக்டர் ஈத் கூறுகிறார் மோட்டார் படகுகள் காரணமாக அவர்கள் முன்பை விட குறைவான துடுப்பு படகுகளை பயன்படுத்துகிறார்கள் என்று டாக்டர் ஈத் சுட்டிக்காட்டுகிறார். "மிகவும் உடலுழைப்பு தேவைப்படும் செயல்பாடுகளில் துடுப்பு படகு ஓட்டுவதும் ஒன்று" என்கிறார் அவர். இருபது ஆண்டுகளுக்கு முன்பு, நீரிழிவு நோய் பாதிப்பு அரிதாகவே இருந்தது. இப்போது இம்மக்களிடையே அவை தோன்றத் தொடங்கியுள்ளன. மேலும் இளைஞர்களிடையே கொலஸ்ட்ரால் அளவும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். "அவர்களின் பழக்கவழக்கங்களில் ஏதேனும் ஒரு சிறிய மாற்றம் இந்த சுகாதாரக் குறியீடுகளை பாதிக்கிறது" என்று டாக்டர் ஈத் கூறுகிறார். இந்த ஆராய்ச்சியாளர்களின் 20 ஆண்டுகால ஈடுபாடு சீமேநே பழங்குடிச் சமூகத்தில் ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கண்புரை அறுவை சிகிச்சை முதல் எலும்பு முறிவுகள் மற்றும் பாம்பு கடிகளுக்கான சிகிச்சை வரை சீமேநே மக்களுக்கான சிறந்த மருத்துவ வசதிகளை அவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் ஹில்டாவைப் பொறுத்தவரை, முதுமை என்பது பெரிதாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றல்ல. "நான் இறப்பதைப் பற்றி பயப்படவில்லை, ஏனென்றால் அவர்கள் என்னை பூமியில்தான் அடக்கம் செய்யப் போகிறார்கள், நான் இங்கேயேதான் இருக்கப் போகிறேன்…மிகவும் அமைதியாக" என்று அவர் புன்னகையுடன் எங்களிடம் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cly3z2dz2e2o
  23. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினமான ஆகஸ்ட் 30ஆம் திகதி கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம் Published By: VISHNU 28 AUG, 2024 | 02:38 AM வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினமான ஆகஸ்ட் 30ஆம் திகதி கிளிநொச்சியில் மாபெரும் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வடகிழக்கு மாகாண சங்கம் அறிவித்துள்ளது. யாழ்.ஊடக அமையத்தில் செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அறிவித்துள்ளனர். எதிர்வரும் 30ஆம் திகதி காலை 9.30 மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக போரட்டம் ஆரம்பமாகி, அங்கிருந்து பேரணியாக டிப்போ சந்தியை நோக்கி சென்று, அங்கு ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை சபைக்கான மகஜர் கையளிக்கப்படவுள்ளது. குறித்த போராட்டத்தில் கட்சி பேதங்களை கடந்து, அனைத்து அரசியல் கட்சியினரும், சிவில் சமூகங்கள், பொது அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சங்கங்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். அதேவேளை எதிர்வரும் 30ஆம் திகதி யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/192176
  24. Published By: VISHNU 28 AUG, 2024 | 02:29 AM வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் தமிழ் எம்.பிக்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்கள் குறித்து ஜனாதிபதி, இலங்கை ராமன்ய மகா பீட மகாநாயக்க தேரருக்கு விளக்கமளித்தார். நாரஹேன்பிட்டி, இலங்கை ராமன்ய மகா நிகாயவின் தலைமையகத்திற்கு செவ்வாய்க்கிழமை (27) முற்பகல் விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அங்கு ராமன்ய மகா நிகாயவின் மகாநாயக்க தேரர் வண, மகுலேவே விமல நாயக தேரரைச் சந்தித்து ஆசி பெற்றார். ஜனாதிபதி தனது தேர்தல் பணிகளை ஆரம்பித்த பின்னர், இவ்வாறு ராமன்ய மகா நிகாயவின் மகா நாயக தேரரரைச் சந்தித்தார். அதன்போது வண, வலேபொட குணசிறி தேரர், பிரதிப் பொதுச் செயலாளர் அக்குரெல்லே குணவன்ச தேரர், பிரதிப் பொதுச் செயலாளர் வண, வாந்துவே தம்மாவங்ச தேரர், பிரதி நீதிச் செயலாளர் வண, ஹால்பன்வில பாலித தேரர், கொழும்பு பிராந்திய சங்க சபையின் தலைவர் வண, சூரியவெவ ஹேமாநந்த தேரர் உட்பட மகாசங்கத்தினரும் கலந்துகொண்டனர். இதன்போது மகாசங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதியின் எதிர்கால பணிகளுக்கு தமது ஆசிகளைத் தெரிவித்தனர். அதன் பின்னர் ஜனாதிபதி, மகா சங்கத்தினருடன் சிறிது நேரம் கலந்துரையாடியதுடன் நாட்டின் பொருளாதார மீட்சி மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து மகா சங்கத்தினருக்கு தெளிவுபடுத்தினார். அத்துடன், பிரிவெனாக் கல்வி தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள், புனித பூமி சார்ந்த காணிப் பிரச்சினைகள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டதுடன், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பில் தமிழ் எம்.பி.க்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல்கள் குறித்தும் ஜனாதிபதி, மகாநாயக்க தேரருக்கு அறிவித்தார். https://www.virakesari.lk/article/192174
  25. சுவிஸ் குடும்பஸ்தர் கொலை; இருவர் கைது Published By: VISHNU 28 AUG, 2024 | 12:23 AM வவுனியா கனகராயன்குளம் சின்னடம்பன் பிரதேசத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சுவிஸில் இருந்து வருகை தந்த குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் இருவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐய்யனார் கோவில் திருவிழாவில் பின்னர் அங்குள்ள வீடொன்றில் சுவிசில் இருந்து வந்தவரும் அவரது உறவினரும் தங்கி இருந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் இரவு மது போதையில் வீட்டில் தூங்கிய போது வீட்டுக்குள் நுழைந்தவர்களினால் ஒருவர் வீட்டிற்குள் இருந்து இழுத்து வரப்பட்டு வெளியே விடப்பட்டதன் பின்னர் மற்றவர் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் கொலை செய்யப்பட்டவருடன் வீட்டில் தங்கியிருந்தவரும் சுவிஸில் இருந்து அண்மையில் நாட்டிற்கு வருகை தந்து வவுனியா உக்கிளாங்குளத்தில் வசித்து வந்த நபர் ஒருவரும் கனகராயன்குளம் பொலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை வீட்டில் இருந்த சிசிடிவி கமரா இரசாயன பகுப்பாய்வுக்காக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/192173

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.