ஏராளன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராக ஒத்துழைப்பு வழங்கிய சிலர் கைது - சாகர காரியவசம்
Everything posted by ஏராளன்
-
நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் : 224 உறுப்பினர்கள் எதிராக வாக்களிக்க வேண்டும் - சிவில் அமைப்பினர் கூட்டாக வலியுறுத்தல்
சமூக ஊடகங்களில் ஆபாசபடங்கள் பல மடங்காக அதிகரிப்பு; சைபர் குற்றங்களும் மிகவும் அதிகம்; இதற்காகத்தான் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் - டிரான் அலஸ் Published By: RAJEEBAN 23 JAN, 2024 | 02:37 PM கடந்த வருடம் சமூக ஊடகங்களில் ஒரு இலட்சத்திற்கும் மேலான நிர்வாணப்படங்கள் பரிமாறப்பட்டன என தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் 8000 சைபர் குற்றங்கள் இடம்பெற்றுள்ளன எனவும் தெரிவித்துள்ளார். நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குறித்த விவாதத்தை இன்று நாடாளுமன்றத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். 2024 இன் முதல்வாரங்களில் சமூக ஊடகங்களில் 500க்கும் மேற்பட்ட ஆபாசபடங்களை தங்களிடையே பரிமாறிக்கொண்டுள்ளனர். கடந்த வருடம் 6690 இணையவழி குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளன எனவும் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். இந்த புள்ளிவிபரங்கள் சிஐடியினரால் பதியப்பட்டவை மாத்திரமே வெளிவராத சம்பவங்கள் பல இருக்கலாம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குற்றங்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தையும் கிளர்ச்சிகள் இனமத ஐக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் குழப்பங்களை கட்டுப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டவை எனவும் தெரிவித்துள்ள அமைச்சர் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தை பயன்படுத்தி எவரையும் பழிவாங்கும் நோக்கமில்லை எனவும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/174613
-
பாடசாலைக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு!
பாடசாலைகளில் முதலாம் தர மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதுடன் , அதிபர்களின் நேர்முகப்பரீட்சையின் பின்னர் மாணவர்களை தெரிவு செய்யப்பட வேண்டும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சு விடுத்துள்ள சுற்றறிக்கையின் பிரகாரம் , குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் மாத்திரம் ஆறாம் தரத்திற்கு மாணவகளை இணைத்துக்கொள்ளும் செயற்பாடு நடைபெறும் எனவும் குறித்த அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், 2024 ஆம் ஆண்டில், தரம் 1, 5 மற்றும் 6 தவிர இடைநிலை வகுப்புகளுக்கு க.பொ.த. மாணவர் சேர்க்கை தொடர்பான விண்ணப்பங்கள் (உயர்தரம் உட்பட) பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும், அந்த பாடசாலைகளில் வெற்றிடங்கள் இருப்பின், அதிபர்களின் நேர்காணலின் மூலம் மாணவர்களின் பட்டியலை கல்வி அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/289175
-
புதுச்சேரியில் கட்டி முடித்த ஒரே மாதத்தில் சீட்டுக்கட்டாக சரிந்த கட்டடம் - என்ன காரணம்?
22 ஜனவரி 2024 புதுச்சேரியில் மூன்று அடுக்கு மாடி கட்டடம் சரிந்து விழுந்தது. கட்டி ஒரு மாதமே ஆன நிலையில், புதுமனை புகுவிழா கூட நடைபெறவில்லை. புதுச்சேரி ஆட்டுப்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சாவித்திரி. கணவர் ரங்கநாதன் உயிரிழந்த நிலையில், இவர் தனது மகள் சித்ரா மற்றும் மருமகன் சுரேஷ் ஆகியோருடன் வசித்து வருகிறார். இவர்கள் அதே பகுதியில் அரசு இலவசமாக கொடுத்த பட்டா இடத்தில் மூன்று மாடி வீடு கட்டி வந்தனர். இந்த வீட்டின் கட்டுமான பணிகள் கடந்த மாதம் முடிந்த நிலையில், வருகின்ற 26 ஆம் தேதி வீட்டின் புதுமனை புகுவிழா நடத்த சாவித்திரி திட்டமிட்டிருந்தார். இதற்கிடையே அந்த வீட்டின் அருகே செல்லும் வாய்காலுக்கு சுவர் கட்டும் பணி கடந்த 7 மாதங்களாக நடைபெற்று வருகிறது. அதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாவித்திரி வீட்டருகே வாய்கலுக்கு சுவர் கட்டுவதற்காக ஆழமாக பள்ளம் எடுக்கப்பட்டது. அப்போது புதிதாக கட்டப்பட்ட மூன்று மாடி வீடு லேசாக சாய்ந்து காணப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த சாவித்திரி இதுதொடர்பாக வாய்க்கால் சுவர் கட்டும் ஒப்பந்ததாரரிடம் முறையிட்டு வந்தார். இந்நிலையில் இன்று வீடு மிக மோசமாக சாய்ந்தவாறு காணப்பட்டதை தொடர்ந்து பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர், ஆகியோர் வீட்டின் தரத்தை ஆய்வு செய்ய வந்து பேசிகொண்டிருந்தபோது வீடு திடீரென முற்றிலுமாக சரிந்து விழுந்தது. அப்போது அங்கு இருந்தவர்கள் ஓட்டம் பிடித்ததால் யாருக்கும் உயிர் சேதமோ, காயங்களோ ஏற்படவில்லை. தொடர்ந்து வீடு இடிந்து விழுந்தது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவவும், அதற்கு பின்னரே வீடு அதிக உயரத்தில் தரமன்றி கட்டப்பட்டதால் சரிந்து விழுந்ததா? அல்லது வாய்க்காலுக்கு பள்ளம் எடுத்ததால் விழுந்ததா என தெரியவரும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். https://www.bbc.com/tamil/articles/czvqlzee1jro
-
மதுபோதையில் குழப்பம் விளைவித்த மக்ஸ்வெல்; விளக்கம் கோருகின்றது கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை
மதுபோதையில் குழப்பம் விளைவித்த மக்ஸ்வெல் வைத்தியசாலையில் அனுமதி; விளக்கம் கோருகின்றது கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை Published By: RAJEEBAN 23 JAN, 2024 | 10:33 AM அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரர் கிளென் மக்ஸ்வெல் ஹோட்டலொன்றில் இடம்பெற்ற சம்பவத்தை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதேவேளை இந்த சம்பவம் குறித்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மதுபோதை காரணமாக இடம்பெற்ற சம்பவத்தை தொடர்ந்தே மக்ஸ்வெல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அடிலெய்டில் பிரெட்லீ கலந்துகொண்ட இசைநிகழ்ச்சியொன்றை பார்வையிடுவதற்கு மக்ஸ்வெல் சென்றிருந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வேளையே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. என்ன நடந்தது என்பது குறித்த விபரங்கள் முழுமையாக வெளியாகாத போதிலும் அம்புலன்ஸ் அழைக்கப்பட்டது மக்ஸ்வெல் மருத்துவமனைக்கு அதில் அழைத்துசெல்லப்பட்டார் என்பது உறுதியாக தெரியவந்துள்ளது. மெல்பேர்ன் ஸ்டார் அணியின் பிபிஎல் போட்டிகளின் பின்னர் மக்ஸ்வெல்; அடிலெய்டில் பிரபலங்களின் கோல்ப் போட்டிகளிற்காக தங்கியிருந்தார். இதேவேளை மேற்கிந்திய அணிக்கு எதிராக விளையாடவுள்ள அவுஸ்திரேலிய அணியிலிருந்து கிளென் மக்ஸ்வெல் நீக்கப்பட்டுள்ளார். எனினும் இதற்கும் அடிலெய்ட் சம்பவத்திற்கும் தொடர்பில்லை என அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது. வாரஇறுதியில் இடம்பெற்ற சம்பவம் குறித்து அறிந்துள்ளோம் மேலதிக தகவல்களை கோரியுள்ளோம் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் தெரிவித்துள்ளது. தலைசுற்றுபோன்ற ஒன்றினால் மக்ஸ்வெல் பாதிக்கப்பட்டாரா என்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாடடுச்சபையின் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். மக்ஸ்வெலிற்கு ஏற்கனவே இவ்வாறான பாதிப்பு உள்ளதும் குறிப்பிடத்தக்கது. நடந்த சம்பவம் குறித்து மக்ஸ்வெல் அவமானமடைந்தவராக உணர்கின்றார் என அவரது முகாமையாளர் தெரிவித்துள்ளார். அவர் சனிக்கிழமை வலி மற்றும் வேதனையால் பாதிக்கப்பட்டார் மீண்டும் மெல்பேர்னிற்கு சென்று அவர் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளார் என முகாமையாளர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/174580
-
மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் கொடுப்பனவு 2000 ரூபாய் கொடுப்பனவு!
பராமரிப்பு நிறுவனங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஜனவரி மாதம் முதல் 2000 ரூபாய் மாதாந்த கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மாவட்ட செயலாளர்கள் ஊடாக இக்கொடுப்பனவை தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதுவரையில் பயனடைந்த 16,146 பேருக்கு, அதாவது பிரிவேனா, சிறுவர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், பராமரிப்பு இல்லங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் என 16,146 பேருக்கு இந்தப் பணம் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/289025
-
கண்டியில் ஐஐடி மெட்ராஸ் வளாகத்தை நிறுவ நடவடிக்கை
இந்தியாவின் முதன்மையான பொறியியல் நிறுவனமான இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) இந்த ஆண்டு கண்டியில் கிளை வளாகத்தைத் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை வெளிநாடுகளில் ஐஐடிகளின் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகும், அதே நேரத்தில் புதிய வளாகத்திற்கான முன்மொழிவு கடந்த நவம்பரில் 2024 வரவு -செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தனது அமைச்சினால் கல்வியாளர்கள் குழுவொன்றை மெட்ராஸ் ஐஐடிக்கு அனுப்பும் திட்டத்தை அறிவித்துள்ளார். வளாகத்தை அமைப்பது தொடர்பான கலந்துரையாடலுக்காக அடுத்த மாதம் இலங்கைக்கு ஐஐடியில் இருந்து குழு வருவதற்கு முன்னதாக இலங்கைப் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு அனுப்பப்படுவார்கள். ஐஐடி மெட்ராஸ் குழு இலங்கையின் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் அதன் பாடநெறிகள் மற்றும் கண்டி கிளை வளாகத்தை நிறுவுவதற்கான செயல்முறையைத் தொடங்கும் அறிக்கையை சமர்ப்பிக்க எதிர்பார்க்கப்படுகிறது என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கடந்த ஆண்டு டிசம்பரில் இந்தியாவிற்கு விஜயம் செய்து ஐஐடி-மெட்ராஸுடன் இலங்கையில் வளாகத்தை நிறுவுவது குறித்து கலந்துரையாடியதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த விஜயத்தின் போது அமைச்சர் பிரேமஜயந்த ஐஐடி மெட்ராஸ் உயர் அதிகாரிகளுடன் சந்திப்பில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கதாகும். https://thinakkural.lk/article/289063
-
நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் : 224 உறுப்பினர்கள் எதிராக வாக்களிக்க வேண்டும் - சிவில் அமைப்பினர் கூட்டாக வலியுறுத்தல்
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் அரசாங்கத்தை மேலும் ஏதேச்சதிகார தன்மை வாய்ந்ததாக மாற்றும் - எரான் Published By: RAJEEBAN 23 JAN, 2024 | 10:33 AM நாடாளுமன்றத்தில் இன்றும் நாளையும் விவாதிக்கப்படவுள்ள நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் மக்களின் பேச்சுசுதந்திரத்திற்கு பாரிய அடியாக அமையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் பெண்கள் சிறுவர்களின் உரிமைகளை பாதுகாப்பதே இந்த சட்டத்தின் நோக்கங்களில் ஒன்று என அரசாங்கம் தெரிவிக்கின்றது எனினும் அந்த சட்டமூலத்தில் பெண்கள் சிறுவர்கள் என்ற வார்த்தையே இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் பொலிஸார் நீதிமன்ற உத்தரவின்றி பத்திரிகையாளர்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் மொபைல்போன்களை பறிமுதல் செய்யலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது ஜனநாயகத்திற்கு வழிவகுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சட்டமூலத்தில் ஜனநாயக விரோத அம்சங்கள் உள்ளன இந்த சட்டமூலம் மக்களின் சுதந்திரத்தை பறிக்கும் எனவும் எரான் விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் நேரடிகண்காணிப்பின் கீழ்; ஆணைக்குழுவொன்றை அமைக்கும் யோசனையையும் இந்த சட்ட மூலம் முன்வைக்கின்றது இதுவரை காலம் நீதிமன்றங்கள் அனுபவித்த அதிகாரங்கள் எதிர்காலத்தில் இந்த ஆணைக்குழுக்களிற்கு வழங்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலம் அரசாங்கத்தை மேலும் அதிகளவு ஏதேச்சாதிகார தன்மை வாய்ந்ததாக மாற்றும் மக்களின் உரிமைகளிற்கு இது எதிரானது எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/174583
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
தினேஷ் ஷாப்டரின் தொலைபேசி சிம் அட்டையை மனைவியிடம் ஒப்படைப்பது தொடர்பில் நீதிவானின் தீர்மானம்! Published By: DIGITAL DESK 3 23 JAN, 2024 | 10:30 AM கொலை செய்யப்பட்ட வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் கையடக்க தொலைபேசியின் சிம் அட்டையை அவரது மனைவியிடம் ஒப்படைப்பது தொடர்பான கோரிக்கை அரசாங்க இராசாயன பகுப்பாய்வு பிரிவினரின் அறிக்கை கிடைத்த பின்னர் பரிசீலிக்கப்படும் என கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷண கெக்குணுவெல தெரிவித்துள்ளார். தனது கணவர் கொல்லப்படுவதற்கு முன்னர் பயன்படுத்திய தொலைபேசி இலக்கத்தைக் காட்டும் புதிய சிம்கார்டைப் பெற்றுக் கொள்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு தினேஷ் ஷாப்டரின் மனைவி விடுத்த கோரிக்கை தொடர்பிலேயே நீதிவான் மேற்கண்டவாறு தெரிவித்தார். தினேஷ் ஷாஃப்டரின் கொலை தொடர்பாக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும் எனவே, அவரது மனைவிக்கு புதிய சிம் கார்டை வழங்கும் கோரிக்கையை நிராகரிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்தபோதே நீதிவான் இந்த அறிவிப்பை விடுத்தார். https://www.virakesari.lk/article/174582
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
யாழ். நெடுந்தீவில் 06 தமிழக மீனவர்கள் கைது Published By: DIGITAL DESK 3 23 JAN, 2024 | 10:01 AM யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட 06 தமிழக மீனவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (23) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த கடற்படையினர், இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து கடற்தொழில் ஈடுபட்டு இருந்த தமிழக மீனவர்களை கைது செய்ததுடன், அவர்களின் இரண்டு படகுகளையும் மீட்டு இருந்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/174577
-
சிசிடிவி அபராத முறைக்கு பேருந்து சங்கம் எதிர்ப்பு!
கொழும்பில் சிசிரிவி கமரா மூலம் கண்காணிக்கப்பட்ட 125 போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் எச்சரிக்கை! Published By: DIGITAL DESK 3 23 JAN, 2024 | 11:51 AM கொழும்பிலுள்ள வீதிகளில் நேற்று திங்கட்கிழமை (22) சிசிரிவி கமரா மூலம் கண்காணிக்கப்பட்ட 125 போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக எச்சரிக்கப்பட்டுள்ளது. சிசிரிவி கமரா மூலம் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணித்து வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் முன்னோடித் திட்டம் நேற்று ஆரம்பமானது. அதன்படி, கொழும்பில் சிசிரிவி கமரா மூலம் 125 போக்குவரத்து விதிமீறல்கள் இனங்காணப்பட்டதாகவும் ஆரம்பக் கட்ட நடவடிக்கையாக அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இனங்காணப்பட்ட விதி மீறல்களில் பிரதானமாக பாதையை மாற்றியமை மற்றும் தரிப்பு பகுதிகளில் நிறுத்தாமல் வாகனம் செலுத்தியமை போன்ற தவறுகள் அவதானிக்கப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/174596
-
அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா துப்பாக்கிச் சூட்டில் பலி!
பெலியத்தையில் ஐவர் சுட்டுக்கொலை : பொலிஸாரால் வெளிப்படுத்தப்பட்ட மேலதிக தகவல்கள்! Published By: DIGITAL DESK 3 23 JAN, 2024 | 11:24 AM தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்தை நுழைவாயிலுக்கு அருகில் எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட ஐவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலான மேலதிக தகவல்களை பெலியத்த பொலிஸார் வெளியிட்டுள்ளனர். திங்கட்கிழமை (22) காலை 8.30 முதல் 8.40 மணிக்குள் இந்தச் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் வெள்ளை நிற டிபென்டரில் சென்று கொண்டிருந்தபோது காலை உணவுக்காக டிபென்டர் நிறுத்தப்பட்டபோதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பச்சை நிற வாகனத்தில் வந்த சிலர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் சமன் பெரேரா உட்பட நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சமன் பெரேரா, கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பில் தங்காலை நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு ஒன்றுக்காக சென்று கொண்டிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. உயிரிழந்த எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சமன் பெரேரா அம்பலாங்கொடையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றின் உரிமையாளராவார். ரி-56 ரக துப்பாக்கியே இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/174592
-
ஐ.சி.சி. கிரிக்கெட் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள வீர, வீராங்கனைகள்
2023 க்கான ஐ.சி.சி. மகளிர் ரி20 அணியின் தலைவியாக சமரி அத்தபத்து Published By: VISHNU 22 JAN, 2024 | 05:33 PM (நெவில் அன்தனி) சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் தெரிவு செய்யப்பட்டுள்ள 2023ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் அணிக்கு இலங்கையின் சமரி அத்தப்பத்து தலைவராக பெயரிடப்பட்டுள்ளார். 2023ஆம் ஆண்டில் நடைபெற்ற மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் துடுப்பாட்டம், பந்துவீச்சு அல்லது சகலதுறைகளில் அதிசிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்தியவர்கள் ஐசிசி மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் அணியில் பெயரிடப்பட்டுள்ளனர். இந்த சிறப்பு அணியை ஐசிசி இன்று திங்கட்கிழமை (22) அறிவித்தது. கேப் டவுனில் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 50 பந்துகளில் 68 ஓட்டங்களைக் குவித்ததன் மூலம் சமரி அத்தப்பத்து 2023க்கான தனது கிரிக்கெட் பருவகாலத்தை சிறப்பாக ஆரம்பித்தார். அவரது துடுப்பாட்ட உதவியுடன் தென் ஆபிரிக்காவை முற்றிலும் எதிர்பாராத விதமாக 3 ஓட்டங்களால் இலங்கை வெற்றிகொண்டிருந்தது. அவர் கடந்த வருடம் 130.91 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் 470 ஓட்டங்களை ரி20 கிரிக்கெட் போட்டிகளில் குவித்திருந்தார். இதில் 15 சிக்ஸ்கள் அடங்கியிருந்தன. நியூஸிலாந்துக்கு எதிராக கொழும்பில் வருடத்தின் மத்திய பகுதியில் நடைபெற்ற ரி20 போட்டி ஒன்றில் சமரி அத்தப்பத்து 47 பந்துகளில் 80 ஓட்டங்களைக் குவித்தார். இதன் மூலம் நியூஸிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 141 ஓட்டங்களை 10 விக்கெட்களும் மீதமிருக்க இலங்கை கடந்து அபார வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து இங்கிலாந்தில் நடைபெற்ற ரி20 கிரிக்கெட் தொடரில் இலங்கை வெற்றி பெறுவதற்கு சமரி அத்தப்பத்து பெரும் பங்காற்றி இருந்தார். ஐசிசி மகளிர் ரி20 கிரிக்கெட் அணி விபரம் (துடுப்பாட்ட வரிசையில்) சமரி அத்தபத்து (தலைவர் - இலங்கை), பெத் மூனி (விக்கெட் காப்பாளர் - அவுஸ்திரேலியா), லோரா வுல்வார்ட் (தென் ஆபிரிக்கா), ஹேய்லி மெத்யூஸ் (மேற்கிந்தியத் தீவுகள்), நெட் சிவர் ப்ரன்ட் (இங்கிலாந்து), அமேலியா கேர் (நியூஸிலாந்து), எலிஸ் பெரி (அவுஸ்திரேலியா), ஏஷ;லி கார்ட்னர் (அவுஸ்திரேலியா), தீப்தி ஷர்மா (இந்தியா), சொஃபி எக்லெஸ்டோன் (இங்கிலாந்து), மெகான் ஷ_ட் (அவுஸ்திரேலியா) https://www.virakesari.lk/article/174551 2023க்கான ஐசிசி ஆடவர் ரி20 கிரிக்கெட் அணியின் தலைவர் சூரியகுமார் யாதவ் Published By: VISHNU 22 JAN, 2024 | 07:14 PM (நெவில் அன்தனி) சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் தெரிவு செய்யப்பட்டுள்ள 2023ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் சர்வதேச ரி20 கிரிக்கெட் அணிக்கு இந்திய அதிரடி வீரர் சூரியகுமார் யாதவ் தலைவராக பெயரிடப்பட்டுள்ளார். இதற்கு அமைய ஐசிசி மகளிர் மற்றும் ஆடவர் ரி20 தெரிவு அணிகளுக்கு உப கண்டத்தைச் சேர்ந்த இருவர் முதல் தடவையாக பெயரிடப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். ஐசிசி மகளிர் ரி20 கிரிக்கெட் அணிக்கு இலங்கையின் சமரி அத்தபத்து தலைவராக பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஐசிசி ஆடவர் ரி20 கிரிக்கெட் அணித் தலைவராக பெயரிடப்பட்டுள்ள சூரியகுமார் யாதவ், கடந்த வருடம் 17 இன்னிங்ஸ்களில் 733 ஓட்டங்களைக் குவித்தார். இதில் 2 சதங்களும் 5 அரைச் சதங்களும் அடங்குவதுடன் அவரது ஸ்ட்ரைக் ரேட் 155.95 ஆகும். கடந்த வருடம் அதிசிறந்த ஐசிசி ரி20 கிரிக்கெட் வீரர் விருதை வென்றெடுத்த சூரியகுமார் யாதவ் இந்த வருடமும் அந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளவர்களில் அடங்குகிறார். வருடத்தின் ஆரம்பத்தில் இலங்கைக்கு எதிராக 36 பந்துகளில் 51 ஓட்டங்களையும் 51 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 112 ஓட்டங்களையும் குவித்த யாதவ், வருட இறுதியில் இந்திய அணியின் பதில் அணித் தலைவராக செயற்பட்டார். ரோஹித் ஷர்மா ஓய்வெடுத்ததால் அவரிடம் தலைமைப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. வருட இறுதியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 42 பந்துகளில் 80 ஓட்டங்களையும் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக 36 பந்துகளில் 56 ஓட்டங்களையும் 56 பந்துகளில் 100 ஓட்டங்களையும் குவித்திருந்தார். 2023ஆம் ஆண்டின் ஐசிசி ஆடவர் ரி20 கிரிக்கெட் அணி விபரம் துடுப்பாட்ட வரிசையில் : யஷஸ்வி ஜய்ஸ்வால் (இந்தியா), ஃபில் சோல்ட் (இங்கிலாந்து), நிக்கலஸ் பூரண் (விக்கெட் காப்பாளர் - மேற்கிந்தியத் தீவுகள்), சூரியகுமார் யாதவ் (தலைவர் - இந்தியா), மார்க் சப்மன் (நியூஸிலாந்து), சிக்கந்தர் ராஸா (ஸிம்பாப்வே), அல்பேஷ் ராம்ஜனி (உகண்டா), மார்க் அடயா (அயர்லாந்து), ரவி பிஷ்னோய் (இந்தியா), ரிச்சர்ட் ங்கராவா (ஸிம்பாப்வே), அர்ஷ்தீப் சிங் (இந்தியா). https://www.virakesari.lk/article/174558
-
தமிழ்நாட்டில் பள்ளிவாசல் திறப்பு விழாவுக்கு சீர்வரிசையுடன் வந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள்
கட்டுரை தகவல் எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமத்தில், ஞாயிற்றுகிழமை மஸ்ஜிதே இலாஹி- பள்ளிவாசல் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழா மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் நடைபெற்றது. அந்த கிராமத்தின் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் சீர்வரிசைகளுடன் சென்று, கலந்து கொண்டு திறப்பு விழாவை கொண்டாடினர். 'இறையில்ல இல்ல திறப்பு விழா' என பெயர் சூட்டிய கிராம மக்கள் கிராமம் முழுவதும் முக்கிய வீதிகள் மற்றும் பேருந்து நிலையங்களில் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில் மூன்று மதத்தவரும் திறப்பு விழாவுக்கு அழைப்பது போல வடிவமைக்கப்பட்டிருந்தது. பேனரின் ஓரத்தில் மஸ்ஜிதே இலாஹி என்று சிறிய எழுத்துகளில் எழுதப்பட்டிருந்த போதும், எந்த மத பெயரும் குறிப்பிடாமல், “இறையில்ல திறப்பு விழா” என்று விழாவுக்கு பெயர் சூட்டியிருந்தனர். இந்த பேனர்கள் ஊர் கவுன்சிலர், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் போன்றவர்கள் சார்பாக ஊரின் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்தது. திறப்புவிழாவுக்கு இந்துக்களும் கிறிஸ்தவர்களும் ஊர்வலமாக சென்றனர். இந்துக்கள் தாம்பூலத்தில் நெல்மணிகள், மிளகாய், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றை சீர்வரிசையாக பள்ளிவாசலுக்கு எடுத்துச் சென்றனர். கிறிஸ்தவர்கள் பாதிரியார் ரமேஷ் தலைமையில் மெழுகுவர்த்தி, பழங்களை சீர்வரிசையாக கொண்டுச் சென்றனர். சீர்வரிசை கொண்டு வந்த இருமதத்தினரையும் சாலைக்கிராமம் பள்ளிவாசல் ஜமாத் தலைவர் நைனா முகம்மது தலைமையில், ஜமாத் உறுப்பினர்கள் மற்றும் அல்பத்ரு வாலிபர் முன்னேற்ற சங்க நண்பர்கள் ஆரத்தழுவி வரவேற்று பள்ளிவாசலுக்குள் அழைத்துச் சென்றனர். குளிர்பானங்கள், தண்ணீர் கொடுத்து தங்களது அன்பை வெளிப்படுத்தினர். பின்னர் 150 கிடா வெட்டி 7,000 பேருக்கு அசைவ பிரியாணி வழங்கப்பட்டது. மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் நடைபெற்ற இந்த விழா, அப்பகுதி மக்களிடையே மனநெகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பள்ளிவாசலுக்கு உள்ளே அழைக்கப்பட்ட இந்துக்கள், கிறிஸ்தவர்கள் பள்ளிவாசல் கட்டுமான பணிகள் தொடங்கும் போதே திறப்பு விழாவிற்கு அனைத்து சமுதாய மக்களையும் அழைக்க வேண்டும் என முடிவு செய்திருந்தோம் என்கிறார் சாலைகிராமத்தை சேர்ந்த நைனா முகமத். இது குறுத்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “இந்த பள்ளிவாசல் கட்ட துவங்கும்போதே இதன் திறப்பு விழாவில் கிராமத்தில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொள்ள வேண்டும் என எங்கள் ஜமாத் சார்பில் முடிவு செய்யப்பட்டது. பல தலைமுறைகளாக இக்கிராமத்தில் மக்கள் மத நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகிறோம். எங்களுக்குள் எந்தவிதமான பாகுபாடும் இல்லை. நாங்கள் பல ஆண்டுகளாக முக்கிய நிகழ்வுகளுக்கு பள்ளிவாசலுக்குள் மாற்று சமுதாயத்தினரை அழைப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றோம். எங்களுக்குள் எந்த பேதமும் கிடையாது. அதேபோல் கிறிஸ்தவ மற்றும் இந்துக்களின் பண்டிகைகள் மற்றும் முக்கிய திருவிழாக்களில் இஸ்லாமியர்கள் கலந்து கொள்வோம். பள்ளிவாசலில் இருந்து கிராமத்தில் உள்ள இந்து கோயில்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாயத்திற்கு உரிய மரியாதையை செய்து வருகிறோம். பள்ளிவாசல் சார்பாக திறப்பு விழாவின் அழைப்பை கிறிஸ்தவர்கள், இந்துக்கள் என பாகுபாடு இன்றி வழங்கினோம். அழைப்பிதழ் வழங்காவிட்டாலும் திறப்பு விழாவிற்கு அனைவரும் வந்திருப்பார்கள்." என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். பள்ளிவாசல் திறப்பு விழாவில் கலந்து கொண்டது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மகேஸ்வரி, எங்கள் கிராமத்தில் பண்டிகையின் போது மட்டுமல்லாமல், தினசரி நடவடிக்கையிலும் ஒன்றாக இணைந்து தான் அனைத்து மதத்தவரும் வாழ்ந்து வருகிறோம் என்கிறார். "எங்கள் ஊரில் பிரதான தொழில் விவசாயம். விவசாய பணிகளுக்கு அனைத்து சமுதாயத்தினரும் வேலைக்கு வருவார்கள். அதே போல் 100 நாள் வேலைக்கும் நாங்கள் செல்லும்போது எங்களுடன் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என பலரும் வேலை செய்வார்கள். நாங்கள் அவர்களுக்கு உணவு கொடுப்பதும் அவர்களிடம் இருந்து உணவு வாங்கி சாப்பிடுவது என எந்த பேதமுமின்றி மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகிறோம். பள்ளிவாசல் திறப்பு விழாவுக்கு செல்லும் முன் மக்கள் அனைவரும் கோவிலில் ஒன்று கூடி சாமி கும்பிட்டு சீர்வரிசை பொருட்களை வைத்து பூஜை செய்து எடுத்துச் சென்றோம். எங்கள் ஊர் திருவிழா உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் கலந்து கொள்வார்கள். இந்துகளாகிய நாங்களும் இஸ்லாமிய, கிறிஸ்தவ விழாக்களில் கலந்து கொள்வோம். இது இன்று நேற்று அல்ல தலைமுறை தலைமுறையாகவே நடந்து வரும் ஒரு வழக்கம்" என்கிறார் மகேஸ்வரி. பள்ளிவாசல் திறப்பில் கிறிஸ்தவர்கள் சார்பாக கலந்து கொண்ட ஸ்டீபன் பிபிசி தமிழிடம் பேசினார். மற்றவர்களுக்கு தான் இது புதிதான நிகழ்வு என்றும், தங்கள் ஊரில் காலங்காலமாக நடைபெறும் ஒன்று என்று அவர் தெரிவித்தார். "இன்று எங்கள் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்து பாதிரியார் தலைமையில் இந்து மக்களுடன் இணைந்து பள்ளிவாசல் திறப்பு விழாவில் கலந்து கொண்டோம். எங்கள் கிராமத்தின் சிறப்பே பொங்கல் விழா தான். ஆண்டுதோறும் சமத்துவ பொங்கல் கொண்டாடி வருகிறோம். பொங்கல் மட்டுமல்லாமல் அனைத்து மதத்தவரின் பண்டிகைகளையும் நாங்கள் ஒன்று கூடி கொண்டாடுவோம். திறப்பு விழாவில் பங்கேற்றது மிகுந்த மன மகிழ்ச்சியை தந்தது" என்றார் ஸ்டீபன். https://www.bbc.com/tamil/articles/cw8jwj4np21o
-
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் - செய்திகள்
தினுர, ஷாருஜன், தருப்பதி ஆகியோரின் அபார ஆற்றல்களால் ஸிம்பாப்வேயை வென்றது இலங்கை Published By: VISHNU 22 JAN, 2024 | 04:35 PM (நெவில் அன்தனி) ஸிம்பாப்வேக்கு எதிராக கிம்பர்லி விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற பி குழுவுக்கான ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமையில் 39 ஓட்டங்களால் இலங்கை வெற்றிபெற்றது. தினுர கலுகஹன குவித்த அபார அரைச் சதம், ஷாருஜன் சண்முகநாதனின் அபார துடுப்பாட்டம் மற்றும் விக்கெட் காப்பு, மல்ஷா தருப்பதியின் சிறப்பான பந்துவீச்சு என்பன இலங்கையை வெற்றி அடையச் செய்தன. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 48.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 204 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கையின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. விஷேன் ஹலம்பகே (0), புலிந்து பெரேரா (3), அணித் தலைவர் சினேத் ஜயவர்தன (7) ஆகிய மூவரும் ஆடுகளம் விட்டகல 5ஆவது ஓவரில் இலங்கை 3 விக்கெட்களை இழந்து 12 ஓட்டங்களைப் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது. இந் நிலையில் ரவிஷான் டி சில்வா, ருசாந்த கமகே ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி தலா 31 ஓட்டங்களைப் பெற்றதுடன் 4ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். அதன் பின்னர் தினுர கலுபஹனவும் ஷாரஜன் சண்முகநாதனும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 6ஆவது விக்கெட்டில் 71 பந்துகளில் 80 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். தினுர கலுபஹன 55 பந்துகளில் 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 60 ஓட்டங்களைப் பெற்றார். ஷாருஜன் சண்முகநாதன் 41 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பின்வரிசையில் ரவிஷான் பெரேரா 12 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் கோல் எக்ஸ்டீன் 40 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மெத்யூ ஷொன்கென் 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நியூமன் நியம்பூரி 50 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 205 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே 13.2 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 30 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆட்டம் மழையினால் தடைப்பட்டது. சில மணித்தியாலங்களின் பின்னர் ஆட்டம் மீண்டும் தொடர்ந்தபோது 22 ஓவர்களில் 129 ஓட்டங்கள் என டக்வேர்த் லூயிஸ் முறைமையின் பிரகாரம் திருத்தி அமைக்கப்பட்ட வெற்றி இலக்கை நோக்கி தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே 21.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 89 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது. அணித் தலைவர் மெத்யூ ஷொன்கென் மாத்திரம் ஓரளவு திறமையை வெளிப்படுத்தி 27 ஓட்டங்களைப் பெற்றார். வேறு எவரும் 20 ஓட்டங்களை எட்டவில்லை. பந்துவீச்சில் மல்ஷா தருப்பதி 17 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் விஷ்வா ஹலம்பகே 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். விக்கெட் காப்பாளர் ஷாருஜன் சண்முகநாதன் 2 பிடிகளை எடுத்ததுடன் ஒரு ஸ்டம்ப்பையும் செய்தார். https://www.virakesari.lk/article/174540
-
லெனின் பிறப்பால் மேதையா? மூளையை 30,953 பாகங்களாக பிரித்து செய்த ஆய்வு முடிவு என்ன?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லெனின் மூளையை அவரது மரணத்திற்குப் பிறகு பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அகற்றினர். கட்டுரை தகவல் எழுதியவர், ஜுவான் பிரான்சிஸ்கோ அலோன்சோ பதவி, பிபிசி உலக சேவை 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஒரு மேதை பிறக்கிறாரா அல்லது உருவாக்கப்படுகிறாரா? இந்த மர்மம் பல நூற்றாண்டுகளாக தத்துவவாதிகளையும் விஞ்ஞானிகளையும் கவர்ந்துள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பு சோவியத் ஒன்றியத்தில் இருந்து இந்த மர்மத்தை அவிழ்க்க ஆய்வாளர்கள் முயன்றனர். சோவியத் ஒன்றியத்தின் நிறுவனரான லெனின் என்று அழைக்கப்படும் விளாடிமிர் இலிச் உல்யனோவின் மரணம் வாயிலாக ஆய்வாளர்கள் அக்கேள்விக்கு விடை தேட முயன்றனர். ஜனவரி 21, 1924. லெனின் மரணத்திற்குப் பிறகு, அவருக்கு சிகிச்சையளித்த சில மருத்துவர்கள், அவருடைய "மேதைமை" எங்கிருந்து வந்தது என்பதைக் கண்டறியும் நோக்கத்துடன், அவருடைய மூளையை அகற்றி பாதுகாக்கவும் ஆராயவும் யோசனை ஒன்றை முன்மொழிந்தனர். இந்த யோசனை சோவியத் உயர் மட்ட தலைவர்களால் அங்கீகரிக்கப்பட்டது. மேலும், ஆராய்ச்சியை மேற்கொள்ளும் நோக்கத்துடன் நிறுவனமும் உருவாக்கப்பட்டது. நூற்றாண்டுக்குப் பிறகு லெனினின் மூளை எங்கே உள்ளது, அந்த ஆய்வின் முடிவுகள் என்ன என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க, இதுகுறித்து ஆய்வு செய்த வரலாற்றாசிரியர்கள் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் பிபிசி முண்டோ பேசியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் மூளை பற்றிய ஆய்வில் மிக முக்கியமான நிபுணர்களில் ஒருவராக இருந்த ஜெர்மன் மருத்துவர் ஆஸ்கர் வோக்ட், லெனின் மூளையை ஆய்வு செய்ய அழைக்கப்பட்டார். பதப்படுத்தப்பட்ட லெனின் மூளை "சுகாதார அமைச்சர் நிகோலாய் செமாஷ்கோ மற்றும் ஸ்டாலினின் உதவியாளர் இவான் டோவ்ஸ்டுகா ஆகியோர், லெனின் மூளையை ஆய்வுக்காக பெர்லினுக்கு அனுப்ப முன்மொழிந்ததில் இருந்து இக்கதை தொடங்குகிறது," என்கிறார் அமெரிக்க வரலாற்றாசிரியர் பால் ரோட்ரிக் கிரிகோரி. "லெனின் மூளை மற்றும் சோவியத் ரகசிய ஆவணக் காப்பகங்களிலிருந்து சில கதைகள்" (Lenin's Brain and Other Stories from the Soviet Secret Archives) என்ற புத்தகத்தை எழுதியுள்ள பால் ரோட்ரிக், லெனின் இறந்த நேரத்தில், ரஷ்யாவில் நரம்பியல் நிபுணர்கள் இல்லை என்று குறிப்பிட்டார். எனவே, பிரேத பரிசோதனையில் அகற்றப்பட்ட மூளை, ஃபார்மால்டிஹைடு எனும் ரசாயனம் சேர்த்து பதப்படுத்தப்பட்டது. லெனின் மூளையை ஆய்வு செய்ய சோவியத் அதிகாரிகள் ஜெர்மன் மருத்துவர் ஆஸ்கர் வோக்ட்டை (1870-1959) அழைத்தனர். வோக்ட் ஒரு புகழ்பெற்ற நரம்பியல் நிபுணர். அவர் மூளை ஆராய்ச்சிக்கென பேரரசர் வில்லியம் இன்ஸ்டிட்யூட்-ஐ நிறுவினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லெனின் மூளை 30,000-க்கும் மேற்பட்ட பாகங்களாக வெட்டப்பட்டு, அவை கண்ணாடித் தகடுகளில் வைக்கப்பட்டு, சில ஆய்வுக்காக சாயங்கள் பூசப்பட்டன. "அப்போது ஜெர்மனியில் அறிவியல் துறை சிறந்து விளங்கியது. மேலும், நோபல் பரிசு பெற்றவர்கள் அதிகமாக இருந்தனர்" என்று சலமன்கா பல்கலைக்கழகத்தில் (ஸ்பெயின்) நியூரோபயாலஜி பேராசிரியர் ஜோஸ் ரமோன் அலோன்சோ பிபிசி முண்டோவிடம் விளக்கினார். "அப்போது அந்த பணியை ஏற்க வோக்ட்டுக்கு சில தயக்கம் இருந்தபோதிலும், ஜெர்மன் அரசாங்கம் அப்பணியை ஏற்குமாறு அவரை வற்புறுத்தியது. அந்த நேரத்தில், ஜெர்மனி சோவியத் ஒன்றியத்துடன் நல்ல உறவைப் பேணுவதில் ஆர்வமாக இருந்தது. முதலாம் உலகப் போருக்குப் பிறகு ஆயுதங்களை தயாரிப்பதில் ஜெர்மனிக்கு இருந்த தடையை நீக்க சோவியத் ஒன்றியத்தின் உறவு தேவைப்பட்டது," என்கிறார், தனது "ஹிஸ்டரி ஆஃப் பிரெய்ன்" (History of the Brain) புத்தகத்திற்காக இதுகுறித்து ஆய்வு செய்த ஜோஸ் ரமோன் அலோன்சோ. இருப்பினும், லெனின் மூளையை பெர்லினுக்குக் கொண்டு செல்லும் திட்டம் கைவிடப்பட்டது. "வெளிநாட்டுக்குக் கொண்டு சென்றால் தன்னால் இந்த ஆய்வை கட்டுப்படுத்த முடியாது என்பதால், அதில் ஸ்டாலினுக்கு உடன்பாடு இல்லை" என்று அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் ஹூவர் இன்ஸ்டிட்யூட் பேராசிரியர் கிரிகோரி விளக்கினார். சோவியத் ஒன்றியத்தின் சந்தேகங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லெனின் மேதையா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் பணியை வெளிநாட்டவரின் கைகளில் விடுவது ஸ்டாலினுக்குப் பிடிக்கவில்லை. இதற்கு சோவியத் தலைமை தரப்பிலிருந்து ஆட்சேபனைகள் இருந்தபோதிலும், வோக்ட் இறுதியில் ஆய்வில் பங்கேற்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார். மேலும், லெனின் மூளையின் பிரிக்கப்பட்ட 30,953 பாகங்களில் ஒன்று அவருக்கு வழங்கப்பட்டது. அதை ஜெர்மனியில் உள்ள தனது ஆய்வகத்திற்கு அவர் எடுத்துச் செல்லலாம் என்றும் கூறப்பட்டது. பதிலுக்கு, அவர் நரம்பியல் துறையில் ரஷ்ய மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்கவும், ரஷ்ய மூளை நிறுவனம் (இன்றைய ரஷ்ய மருத்துவ அறிவியல் அகாடமி) உருவாக்கத்தை வழிநடத்தவும் ரஷ்யா கேட்டுக்கொண்டது. இருப்பினும், பல ஆண்டுகளுக்குப் பிறகு, நாஜி ஆட்சியுடன் வோக்ட் கொண்டிருந்த மோதல்களால், ஜெர்மனியில் தன் பதவிகளை இழந்தது மட்டுமல்லாமல், ஸ்டாலினை விட்டு விலகுவதற்கும் காரணமாக அமைந்தது என்று அமெரிக்க வரலாற்றாசிரியர் ஜோஸ் ரமோன் அலோன்சோ கூறினார். வெளிநாட்டு தலையீடு பற்றிய சோவியத் சந்தேகங்கள் நியாயமானதாகத் தோன்றியது. அதனால்தான், கிட்டத்தட்ட இரண்டாம் உலகப் போரின் முடிவில், வோக்ட்டின் கைகளில் இருந்த லெனினின் மூளையின் ஒரு பாகத்தை மீட்க மாஸ்கோ ஒரு ரகசிய நடவடிக்கையைத் தொடங்கியது என்று பெல்ஜிய ஆராய்ச்சியாளர்கள் எல். வான் போகார்ட் மற்றும் ஏ. டெவல்ஃப் தெரிவித்தனர். "வோக்ட் வைத்திருந்த லெனின் மூளையின் பாகம், அமெரிக்காவின் கைகளுக்கு சென்றுவிடும் என சோவியத் அஞ்சியது. அமெரிக்கா அதைப் பயன்படுத்தி, ’லெனின் சிபிலிஸால் அவதிப்பட்டார்’ அல்லது ’அவர் மேதையே இல்லை’ என்று கூறி அவரை இழிவுபடுத்தலாம் என சோவியத் சந்தேகித்தது" என்று பேராசிரியர் ஜோஸ் ரமோன் அலோன்சோ விளக்கினார். லெனின் மூளையில் என்ன இருக்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நாஜிக்கள் லெனினை நோயுற்றவராகவும் குற்றவாளியாகவும் சித்தரித்து, அவரது மூளை ஓட்டைகளை கொண்டிருந்ததால் "சுவிஸ் சீஸ்" (Swiss Cheese) போல இருப்பதாகக் கூறினர். 1920களின் பிற்பகுதியில், வோக்ட் தனது ஆய்வுகளின் ஆரம்ப முடிவுகளை ஐரோப்பாவில் தொடர்ச்சியான விரிவுரைகள் வாயிலாக வெளிப்படுத்தத் தொடங்கினார். "லெனின் பெருமூளைப் புறணியின் அடுக்கு III-ன் நியூரான்கள் விதிவிலக்காக பெரிதாகவும் ஏராளமானதாகவும் இருந்தன" என்று அவர் இந்த விரிவுரைகளில் கூறினார். இது லெனினின் "சுறுசுறுப்பான மனம்" மற்றும் "கருத்துகளை மிக விரைவாக தொடர்புபடுத்தும் திறன் மற்றும் அவரது யதார்த்த உணர்வை" விளக்குவதாக, வோக்ட் கருதினார். அதேசமயம், மூளையின் அடுக்கு நியூரான்கள் பெரிதாக இருப்பது, மன வளர்ச்சி குன்றிய தன்மையின் குணாதிசயங்கள் என்று அக்கால மற்ற வல்லுநர்கள் தெரிவித்து வந்தனர். இதுதொடர்பாக, கம்யூனிஸ்ட் தலைவர் ஒருவர் ஸ்டாலினை எச்சரித்திருந்தார். "வோக்ட்-ன் கண்டுபிடிப்புகள் பரவலாக விமர்சிக்கப்பட்டுள்ளன. ஏனென்றால், லெனின் மூளை தனித்துவமானது மற்றும் விதிவிலக்கானது என, ரஷ்யர்கள் கேட்க விரும்புவதை அவர் சொன்னார் என்று நம்பப்படுகிறது" என்று அலோன்சோ கூறினார். "சோவியத் அதிகாரிகள் லெனின் சிறந்த மேதை என்று நம்பினர். மேலும், அவரது மூளைக்கு சிறப்புத் தன்மைகள் இருப்பதாகவும் , வேறு எந்த மனிதனைப் போலவும் அவருடைய மூளை இல்லை என்று சொல்வதற்கு ஏற்ப தனித்துவமான ஒன்று அதில் இருப்பதாகவும் அவர்கள் நம்பினர்" என்று ஜோஸ் ரமோன் அலோன்சோ கூறினார். மூளையின் அமைப்பு (அளவு மற்றும் வடிவம்) மற்றும் மக்களின் நுண்ணறிவுக்கு இடையே நேரடி தொடர்பு இருப்பதாக வோக்ட் நம்பினார். மூளைக்கும் அறிவுக்கும் தொடர்பு உண்டா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சோவியத் தலைவர்கள் லெனினை ஒரு மேதை என்றுகூறி அவரது மூளையை ஆய்வு செய்து அதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முயன்றனர். மக்களைக் கட்டுப்படுத்த பயங்கரவாதத்தைப் பயன்படுத்துவதை ஆதரித்தவர் அல்லது தன் தாயார் இறக்கும் வரை அவரை சார்ந்தே வாழ்ந்தவர் அறிவு ரீதியாக உயர்ந்தவராகக் கருதப்பட முடியுமா? சோவியத் குறித்த வரலாற்றாசிரியர்கள் இந்த கூற்றை புறக்கணித்தாலும் அவர் சிறந்த நினைவாற்றல் கொண்டவர் என்றும் ஏழு மொழிகளில் தேர்ச்சி பெற்றவராக இருந்ததாகவும், ஒரு மணிநேரத்தில் ஒரு செய்தித்தாளுக்கு கட்டுரை எழுதவும் அவரால் முடிந்தது என கூறுகின்றனர். லெனினின் "மேதைமை"யின் வேரைக் கண்டறிவதற்கான ஆய்வுகள் பத்தாண்டுகளுக்கும் மேலாக நீடித்தன. ஏனென்றால், மற்ற மனித மூளைகளும் ஆய்வுக்குத் தேவையாக இருந்தது. அப்போதுதான் அவற்றை லெனின் மூளையுடன் ஒப்பிட முடியும். மருத்துவ அறிவியல் அகாடமியின் அலமாரிகளில் இப்போது லெனின் மூளை மட்டுமல்ல, உடலியல் நிபுணர் இவான் பாவ்லோவ், ஏரோநாட்டிகல் பொறியாளர் கான்ஸ்டான்டின் சியோல்கோவ்ஸ்கி மற்றும் எழுத்தாளர் மக்சிம் கார்க்கி ஆகியோரின் மூளையும் வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, பத்து சாதாரண குடிமக்களின் மூளைகளுடனும் லெனின் மூளை ஒப்பிடப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை. உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. இது 63 பக்கங்கள் கொண்டது. தற்போது அறிக்கை மோசமான நிலையில் உள்ளது. மேலும், அதில் அறிவியல் ரீதியான பல வார்த்தைகள் உள்ளன. லெனின் நான்கு முறை பக்கவாதம் ஏற்பட்டிருந்தாலும், தன் இறுதி நாட்கள் வரை ஒரு மேதையாக இருந்தார் என அறிக்கை முடிவு செய்துள்ளது" என்று கிரிகோரி கூறினார். "இந்த ஆவணத்தைப் படிப்பது நகைச்சுவையாக இருந்தது. ஏனென்றால் ஆய்வாசிரியர்கள் தான் அடைய விரும்பிய முடிவுக்காக விஷயங்களை தேடியதாக தோன்றியது" என்று அவர் மேலும் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1922 முதல் லெனினுக்கு குறைந்தது நான்கு முறை பக்கவாதம் ஏற்பட்டது. லெனின் மூளையில் சில தனித்தன்மை வாய்ந்த இயல்புகள் இருப்பதாக சோவியத் ஆய்வாளர்கள் உறுதியளித்தனர். அந்த இயல்புகள் "மிகுதியான அறிவுசார் திறன்கள்" கொண்ட ஒருவருக்கு தகுதியானவை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அலோன்சோ வோக்ட் அவருக்குப் பின் வந்தவர்களின் கண்டுபிடிப்புகளை நிராகரித்தார். "மூளையின் அளவு அல்லது வடிவத்திற்கும் புத்திசாலித்தனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. பெரிய மூளை கொண்டவர்கள் சிறந்த கலை அல்லது அறிவியல் படைப்புகளை விட்டுச் சென்றுள்ளனர். ஆனால் சிறிய மூளை கொண்டவர்களும் உள்ளனர்” என்று அவர் விளக்கினார். “அறிவு என்றால் என்ன என்பதையே நாம் இக்காலத்தில் விவாதித்துக் கொண்டிருக்கிறோம்” என்றார் அலோன்சோ. "(ஓவியர் வின்சென்ட்) வான்கா ஒரு கலை மேதையாகக் கருதப்படுகிறார், ஆனால் அவர் பல பிரச்னைகளைக் கொண்டவர். வரலாற்றில் சிறந்த விஞ்ஞானியாகக் கருதப்படும் ஐசக் நியூட்டனுக்கும் இதேதான் நடந்தது. அவருக்கு நண்பர்களே இல்லை. பணம் இருந்தபோதிலும், கிட்டத்தட்ட துன்பத்தில் வாழ்ந்தார்" என்று அலோன்சோ தெரிவித்தார். உருவ வழிபாட்டை ஆதரித்த தலைவர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரஷியன் அகாடமி ஆஃப் மெடிக்கல் சயின்ஸில், லெனின் மூளையின் மாதிரி மெழுகு வடிவில் உள்ளது. 1991-ல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பிறகு, லெனின் மூளையைப் பாதுகாத்த அல்லது ஆய்வு செய்த சில விஞ்ஞானிகள் அதிகாரபூர்வ பதிப்பைத் தவிர வேறு சில கருத்துகளையும் வழங்கத் தொடங்கினர். "மூளைக்கு என சிறப்பு எதுவும் இல்லை என்று மட்டுமே நாம் இதிலிருந்து ஊகிக்க முடியும்” என்று லெனினின் மூளையை பாதுகாக்கும் மையத்தின் இயக்குநராக இருந்த டாக்டர். ஒலெக் அட்ரியானோவ் 1993-ல் ஒப்புக்கொண்டார். "அவர் ஒரு மேதை என்று நான் நினைக்கவில்லை" என்று ரஷ்ய விஞ்ஞானி பிரிட்டிஷ் பத்திரிகைகளிடம் தெரிவித்தார். சோவியத் ஒன்றியத்தின் நிறுவனர் வாரிசாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள ஸ்டாலின் முயன்ற ஆயுதங்களில் லெனின் மூளை பற்றிய ஆய்வும் ஒன்றாகும் . "லெனின் இறந்தவுடன் தொடங்கிய அதிகாரப் போராட்டத்தில் தனது நிலையை வலுப்படுத்த லெனின் மேதைமையை நிரூபிக்க நினைத்தார்" என்று கிரிகோரி மேலும் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சோவியத் ஒன்றியத்தில் அதிகாரத்தை பெறுவதற்கான ஸ்டாலினின் உத்தியின் ஒரு பகுதியாக லெனினின் இறவா நிலை இருந்தது. ஆனால், லெனின் மூளையை மட்டும் ஸ்டாலின் அதிகாரத்திற்கான போரில் பயன்படுத்தவில்லை. தனது முன்னோடி மற்றும் அவரது குடும்பத்தினரின் விருப்பங்களைப் புறக்கணித்து, கிரெம்ளின் சுவர்களின் கீழ் கட்டப்பட்ட கல்லறையில் ஒரு துறவியின் உடலை போன்று லெனின் உடலை பாதுகாக்கவும், பகிரங்கமாகக் காட்டவும் முடிவு செய்தார். அந்த இடம் இன்றும் உள்ளது. இருப்பினும், கியூப வரலாற்றாசிரியர் அர்மாண்டோ சாகுவேடா போன்ற வல்லுனர்கள், லெனினே தனது தெய்வீக செயல்முறைக்கு உயிர் கொடுத்தார் என்று நம்புகிறார்கள். "லெனின் சோவியத் சர்வாதிகார அரசை உருவாக்கியவர்" என்று அவர் கூறினார். "தலைவர்கள் சொல்வது ஒன்று, நடைமுறையில் நடப்பது இன்னொன்று. லெனின், பிடல் காஸ்ட்ரோ அல்லது மாவோ சே துங் போன்ற தலைவர்கள் அனைவரும் தங்களைச் சுற்றி ஆளுமை வழிபாட்டை விரும்பவில்லை என்று சொன்னார்கள். ஆனால், அது வெறும் வார்த்தைகள் தான். வாழ்நாள் முழுவதும் அவர்கள் தங்கள் உருவ வழிபாட்டை ஆதரித்தனர். அது அவர்களின் மரணத்திற்குப் பிறகும் தொடர்ந்தது," என்று அவர் கூறினார். https://www.bbc.com/tamil/articles/cek7z8pkyxvo
-
ஜேர்மனில் 5 வருடங்கள் வசிப்போருக்கு பிரஜாவுரிமை, இரட்டைப் பிரஜாவுரிமைக்கும் அனுமதி!
22 JAN, 2024 | 03:02 PM ஜேர்மனியில் பிரஜாவுரிமையைப் பெறுவதற்கான விதிகளை தளர்த்தும் புதிய சட்டத்திருத்தங்கள் அந்நாட்டுப் பாராளுமன்றத்தினால் கடந்தவாரம் அங்கீகரிக்கப்பட்டன. புதிய சட்டத்திருத்தத்தின்படி, ஜேர்மனியில் சட்டபூர்வமாக 5 வருடங்கள் வசிப்போர் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும். இதுவரை 8 வருடங்களின் பின்னரே பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்க முடியுமாக இருந்தது. அதேவேளை, விசேட ஒருங்கிணைப்பு அடைவுமட்டங்களை பூர்த்தி செய்வோர் இதுவரை 6 வருடங்களில் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றிருந்தனர். இக்காலவரம்பு தற்போது 3 வருடங்களாக குறைக்கப்பட்டுள்ளது. இரட்டைப் பிரஜாவுரிமை அத்துடன் இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டிருப்பதற்கான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன. இதுவரை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சுவிட்ஸர்லாந்தை தவிர்ந்த ஏனைய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஜேர்மன் பிரஜாவுரிமையை பெறும்போது தமது முந்தைய நாட்டின் பிரஜாவுரிமையை கைவிட வேண்டியிருந்தது. சில சந்தர்ப்பங்களில் மாத்திரம் விதிவிலக்கு வழங்கப்பட்டிருந்தது. தற்போது இவ்விதி தளர்த்தப்பட்டுள்ளது. அத்துடன் தம்பதிகளில் ஒருவர் சட்டபூர்வமாக 5 வருடங்கள் ஜேர்மனியில் வசித்தால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு ஜேர்மன் பிரஜாவுரிமை கிடைக்கும். கடந்த வெள்ளிக்கிழமை ஜேர்மன் பாராளுமன்றத்தில் இச்சட்டமூலம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, 639 எம்.பிகள் ஆதரவாகவும் 234 பேர் எதிராகவும் வாக்களித்தனர். 23 பேர் வாக்களிப்பில் பங்குபற்றவில்லை. ஜேர்மனி சான்ஸ்லர் ஒலாவ் சோல்ஸின் சமூக ஜனநாயகக் கட்சி, சுதந்திர ஜனநாயகக் கட்சி மற்றும் கிறீன் கட்சி ஆகியன இணைந்த ஆளும் கூட்டணி இப்புதிய சட்டமூலத்துக்கு ஆதரவளித்தன. பழைமைவாத கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி மற்றும் கிறிஸ்தவ சமூக ஒன்றியக் கட்சி, ஜேர்மனிக்கான மாற்றுக் கட்சி ஆகியன எதிராக வாக்களித்தன. இச்சட்டமூலம் அமுலுக்கு வருவதற்கு ஜனாதிபதி பிராங் வோல்ட்டர் ஸ்டேய்ன் மேயர் கையெழுத்திட வேண்டும். தொழிலாளர் பற்றாக்குறைக்கு மத்தியில், திறன்கொண்ட தொழிலாளர்களை ஈர்ப்பதற்கு இச்சட்டத்திருத்தங்கள் உதவும் என ஜேர்மனியின் உள்துறை அமைச்சர் நான்சி பயீசர் தெரிவித்துள்ளார். 'உலகெங்கும் உள்ள தகுதியான மக்களுக்கு அமெரிக்கா, கனடாவைப் போன்று நாம் வாய்ப்பு வழங்க வேண்டும்' என அவர் கூறியுள்ளார். எனினும், இச்சட்டத்திருத்தங்களுக்கு எதிர்க்கட்சிக் எதிர்ப்பு தெரிவித்துள்ன. இம்மாற்றங்கள் பிரஜாவுரிமையின் பெறுமதியைக் குறைக்க வழிவகுக்கும் என எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. விரைவான நாடு கடத்தல் இதேவேளை, புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை விரைவாக நாடுகடத்துவதற்கான சட்டத்திருத்தங்களுக்கும் ஜேர்மனி பாராளுமன்றம் கடந்த வியாழக்கிழமை அங்கீகாரம் அளித்தது ஜேர்மனியில் வசிக்கும் 8.44 கோடி மக்களில் 1.2 கோடிக்கும் (14 சதவீதம்) அதிகமானோருக்கு ஜேர்மன் பிரஜாவுரிமை இல்லை எனவும், அவர்களில் 53 இலட்சம் பேர் குறைந்தபட்சம் 10 வருடங்களுக்கு மேல் ஜேர்மனியில் வசிக்கின்றனர் எனவும் ஜேர்மனி அரசாங்கம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/174514
-
அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா துப்பாக்கிச் சூட்டில் பலி!
22 JAN, 2024 | 09:12 PM பெலியத்தை பிரதேசத்தில் இன்று (22) காலை ஐவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக 6 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். தென் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழும் தென் மாகாண குற்றப் பிரிவு, தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவு, தங்காலை தலைமையக பொலிஸ் பரிசோதகர் ஆகியோரின் கீழும் இந்த பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். குறித்த சம்பவம் தொடர்பில் இந்த பொலிஸ் குழுக்கள் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. https://www.virakesari.lk/article/174568
-
இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வுக்கு அழுத்தமளியுங்கள் : புதிய இந்திய உயர்ஸ்தானிகரிடம் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக கோரிக்கை
Published By: VISHNU 22 JAN, 2024 | 07:47 PM ஆர்.ராம் வடக்கு,கிழக்கு தமிழ் மக்களின் இனப்பிரச்சினைகான நிரந்தரமான தீர்வினை வழங்குவதற்கு அழுத்தமளிக்குமாறு இலங்கைக்கான இந்தியாவின் புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தவைர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், வடக்கு,கிழக்கு மாகணங்களின் சபைகளுக்காகவாவது தேர்தலை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கத்தினை வலியுறுத்துமாறு கோரியதோடு, அதற்கு இலங்கை அரசாங்கம் நிதியில்லை என்று கூறுமாக இருந்தால் அந்நிதியை இந்தியா வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டனர். இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள சந்தோஷ் ஜாவுக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் திங்கட்கிழமை (22) பிற்பகல் 4மணிக்கு நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் சிறீதரன், தமிழ்த் தேசியக் முன்னியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரும், சிரேஷ்ட தலைவர்களான இரா.சம்பந்தன் மற்றும் மாவை.சோ.சேனாதிராஜா பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சாள்ஸ் நிர்மலநாதன், சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம், வினோநோதராதலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர். https://www.virakesari.lk/article/174564
-
பாடசாலைகளிலேயே மாணவர்களுக்கு தொழிற்கல்வி
Published By: DIGITAL DESK 3 22 JAN, 2024 | 06:41 PM இவ்வருடம் கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு ஆங்கில மொழி உட்பட தகவல் தொழில்நுட்பம் பற்றிய அறிவுடன் தொழில் கல்வியை கற்பிக்கும் வேலைத்திட்டம் பெப்ரவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். உயர்தரக் கல்வியினை நிறைவு செய்யும் மாணவர்களை தொழில் கல்வியை நோக்கி வழிநடத்தும் நோக்கில், நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 299 பாடசாலைகளில் இந்தத் தொழிற்பயிற்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இவ்வருடம் கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை பரீட்சைக்குத் தோற்றியுள்ள மாணவர்கள் பெப்ரவரி 9 ஆம் திகதிக்கு முன்னர் இந்தத் திட்டத்தில் தங்களைப் பதிவு செய்துகொள்ள முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார். இது தொடர்பான மேலதிக தகவல்களை பிரதேச செயலகங்களின் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/174537
-
இலங்கையில் 20 வீதத்துக்கும் அதிகமானோர் நீரிழிவால் பாதிப்பு : 35 வயதுக்கு மேற்பட்டோரில் பலருக்கு உயர் இரத்த அழுத்தம் - ரமேஷ் பதிரண
22 JAN, 2024 | 07:44 PM இலங்கையில் 91வீத குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரண தெரிவித்துள்ளார். தட்டம்மை நோய் இந்நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்டுள்ள போதிலும், கடந்த காலங்களில் தட்டம்மை நோய் மீண்டும் தலைதூக்கியதையடுத்து, இவ்வாறான தடுப்பூசித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று திங்கட்கிழமை (22) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பதிரண இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரமேஷ் பதிரண, “நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதே இந்த ஆண்டின் முக்கிய எதிர்பார்ப்பாகும். ஆரம்ப சுகாதார சேவைகளை மேம்படுத்துவதன் மூலம் நோயாளிகளுக்கு மிகவும் தரமான சேவையை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு அவசியமான நிதி ஒதுக்கீடுகளை உடனடியாக வழங்கவும் எதிர்பார்க்கப்படுகிறது. தொற்றா நோய்கள் தொடர்பில் இலங்கை பாரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது. 20 வீதத்துக்கும் அதிகமான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தெற்காசிய பிராந்தியத்தில் 35 வயதுக்கு மேற்பட்டவர்களில் அதிகளவில் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உள்ள நாடாகவும் இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது. உயர் இரத்த அழுத்தம் தொடர்பான சிக்கல்களில் இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற பல நோய்கள் அடங்குகின்றன. மேலும், வேகமாக முதுமையடையும் மக்கள் தொகை கொண்ட நாடென்ற வகையில், நினைவாற்றல் குறைபாடு, கண் நோய்கள், எலும்பு நோய்கள் போன்ற பல நோய்கள் ஏற்படுகின்றன. எனவே, தொற்றாத நோய்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், வேகமாக பரவிவரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த விசேட அவதானத்துடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறையினரின் ஆதரவு கிடைத்துள்ள போதிலும், இது தொடர்பாக பொதுமக்களின் ஆதரவு இப்பொழுதுள்ளதை விடவும் அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தற்போது அதிகரித்து வரும் தட்டம்மை நோயைத் தடுக்க பல்வேறு விசேட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளோம். கடந்த சில வாரங்களில், 91 வீத குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை ஏற்ற முடிந்தது. அத்துடன், தற்போதுள்ள மருந்துப் பற்றாக்குறையை போக்குவதற்கு பெருமளவிலான அத்தியாவசிய மருந்துகளை நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மருந்து தட்டுப்பாடு படிப்படியாக குறைந்து வருகிறது என்றே கூற வேண்டும். எதிர்காலத்தில், மருத்துவ விநியோகத் துறையையும், கொள்முதல் செயல்முறையையும் வெளிப்படையானதாக மாற்ற ஒன்லைன் முறையைப் பயன்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்காக ஏற்கனவே மொரட்டுவை மற்றும் கொழும்பு பல்கலைக்கழகங்களின் கணினி துறைகளுடன் சுகாதார அமைச்சு கலந்துரையாடி வருகிறது” என்றும் அமைச்சர் ரமேஷ் பதிரண மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/174554
-
தேசபந்து தென்னக்கோனை பொலிஸ்மா அதிபராக நியமிப்பதை தடுக்கக் கோரி பேராயர் மனு : விசாரணை 31இல்!
22 JAN, 2024 | 05:59 PM பதில் பொலிஸ் மா அதிபரான தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதைத் தடுக்குமாறு கோரி கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் 31ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது. பிரிதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே, நீதிமன்றத்தில் தனது வாதங்களை முன்வைத்தார். இந்நிலையில் இந்த மனுவை எதிர்வரும் 31 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. https://www.virakesari.lk/article/174543
-
சீனாவில் நிலச்சரிவு: மண்ணுக்குள் புதைந்த 47 பேர்- மீட்புப்பணிகள் தீவிரம்
சீனாவின் தென்மேற்கு பகுதியில் இன்று காலை திடீரென நிலச்சரிவு ஒன்று ஏற்பட்டுள்ளது. சீனாவின் ஜாவோடோங் நகரில் உள்ள லியாங்சுய் கிராமம் இந்த நிலச்சரிவில் சிக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நிலச்சரிவு குறித்து தகவல் அறிந்த மீட்புப்படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பெரும்பாலான வீடுகள் மண்ணில் புதைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. புதைந்த வீடுகளில் சிக்கியிருந்த 500க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். அத்துடன், 18 குடும்பங்களைச் சேர்ந்த 47க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்துள்ளனர். இவர்களை மீட்கும் பணியில் 200 மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர். மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை. நிலச்சரிவுக்கான காரணமும் தெரிவிக்கப்படவில்லை. குறித்த நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் கடும் குளிர் நிலவி வருகிறது சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன. https://thinakkural.lk/article/288969
-
ராமர் கோவில்: 72 ஏக்கர் நிலம் இருக்கும்போது 2.7 ஏக்கரில் மட்டும் கோவில் கட்டப்பட்டது ஏன்?
அயோத்தி ராமர் கோவில்: நீதித்துறைக்கு நன்றி தெரிவித்த மோதி பட மூலாதாரம்,ANI 22 ஜனவரி 2024, 03:34 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா இன்று (ஜன. 22) கோலாகலமாக நடைபெற்றது. இன்று மதியம் 12.30 மணி அளவில் இந்நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோதி கலந்துகொண்டு கோவிலில் வைக்கப்பட்டிருந்த ‘ராம் லல்லா’ எனப்படும் பாலராமர் சிலைக்கு பிரதிஷ்டை செய்தார். சிறப்பு வழிபாட்டுக்குப் பின்னர் அச்சிலையின் கண்களை மூடியிருந்த மஞ்சள் துணி அகற்றப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. கடந்த 18-ம் தேதி மதியமே, 1.28 மணியளவில், 51 அங்குல ராமர் சிலை கோவிலின் கருவறையில் வைக்கப்பட்டது. முன்னதாக, அயோத்தி ராமர் கோவிலுக்கு பூஜை பொருட்கள், பட்டு வஸ்திரங்களுடன் வந்த பிரதமர் மோதி, அங்கு சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டார். இந்த வழிபாட்டில் மோதிக்கு அருகே ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அம்மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல் உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர். மேலும், இவர்கள் தவிர நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 15 பேரும் கலந்துகொண்டனர். அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு விழா வீடியோ அயோத்தி ராமர் கோவிலும் இந்திய அரசியலும் - எனும் தலைப்பில் மூத்த பத்திரிகையாளர் மணி மற்றும் எழுத்தாளர் ராம்கி ஆகியோர், பிபிசி செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனுடன் கலந்துரையாடியதை இங்கே காணுங்கள். பட மூலாதாரம்,ANI நீதித்துறைக்கு நன்றி தெரிவித்த மோதி ராமர் சிலை பிரதிஷ்டைக்குப் பிறகு கோவில் வளாகத்தில் குழுமியிருந்தவர்களை நோக்கிப் பேசிய பிரதமர் மோதி, “பல நூற்றாண்டு காத்திருப்புக்குப் பிறகு, துறவு, தவம், தியாகம் முடிந்து ராமர் இங்கு வந்திருக்கிறார். ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் மக்கள் இந்நாளை நினைவில் வைத்துக்கொள்வார்கள்” என தெரிவித்தார். அயோத்தி குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்ன என்று குறிப்பிடாமல், நீதித்துறைக்கு மோதி நன்றி தெரிவித்தார். இந்திய நீதித்துறை நீதியின் மாண்பை காத்ததாக அவர் கூறினார். பாலராமரின் கண்கள் திறந்து வைக்கப்பட்ட பின்னர் அயோத்தி ராமர் கோவிலை சுற்றி ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன. நாடு முழுவதிலும் இருந்து தேர்வு செய்யப்பட்டு, அயோத்திக்கு வரவழைக்கப்பட்டுள்ள இசைக்கலைஞர்கள் இந்நிகழ்வை முன்னிட்டு இசைக்கருவிகளை வாசித்தனர். ஜனவரி 23 ஆம் தேதிக்கு பின், அயோத்தியில் உள்ள ராமரை அனைவரும் தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். கோவிலின் சிறப்பம்சங்கள் நிகழ்வுக்கு முன்னதாக, பிரபலர் இசைக்கலைஞர்கள் சோனு நிகம், சங்கர் மகாதேவன், அனுராதா பட்வால் உள்ளிட்டோர் ராம பஜனை பாடினர். பின்னர், ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் அயோத்தி ராமர் கோவில் குறித்து பல தகவக்களை வழங்கினார். அதன்படி, கர்நாடகாவிலிருந்து கொண்டு வரப்பட்ட கல்லைக் கொண்டு ராமர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. சிலையை வடிவமைத்தவர் மைசூரை சேர்ந்த அருண் யோகிராஜ். இந்த கோவிலின் அடித்தளம் 14 மீட்டர் ஆழம் கொண்டது. ஆயிரம் ஆண்டுகளானாலும் கோவில் வலுவாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். கோவிலில் சுமார் 25,000 பேர் தங்கள் காலணிகள், மொபைல் போன்களை பாதுகாப்பாக வைப்பதற்கென மையம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. கோவில் கட்டமைப்புக்காக பல்வேறு நிபுணர்களும் உதவியுள்ளனர். பட மூலாதாரம்,ANI இந்நிகழ்வுக்காக அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. நாட்டின் பல்வேறு மூலைகளிலிருந்தும் பல்வேறு துறை பிரபலங்கள் அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்துள்ளனர். இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகள் மிகப் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வை முன்னிட்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் மத சடங்குகள், யாகங்கள், ஹோமங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. அயோத்தி 'இந்துக்களின் வாடிகன்' ஆகிறதா? வளர்ச்சிக்கு நடுவே இழையோடும் அதிருப்தி21 ஜனவரி 2024 பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, அயோத்தியில் ரஜினிகாந்த் யாரெல்லாம் கலந்து கொண்டனர்? அயோத்தி ராமர் கோவிலுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து தலைவர்கள், திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டிலிருந்து நடிகர் ரஜினிகாந்த் தன் மனைவி லதாவுடன் கலந்துகொண்டார். ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டு அவர் அயோத்தி சென்றடைந்தார். அதேபோன்று, நடிகர் தனுஷும் இந்நிகழ்வில் பங்கேற்றார். மேலும், நடிகர்கள் ரஜினிகாந்த், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, ராம்சரண், பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், கங்கனா ரனாவத், விக்கி கௌஷல், கத்ரீனா கைஃப், தொழிலதிபர்கள் அனில் அம்பானி, முகேஷ் அம்பானி மற்றும் அவருடைய குடும்பத்தினர், கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே, சச்சின் டெண்டுல்கர், யோகா குரு பாபா ராம்தேவ் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். மதச்சார்பற்ற ஜனதா தள தலைவரும் முன்னாள் பிரதமருமான ஹெச்.டி. தேவகவுடாவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார். மத்திய அமைச்சர்கள் பலரும் பல்வேறு பகுதிகளிலிருந்து கோவில்கள், பொது இடங்களில் நிகழ்வை நேரலையாக ஒளிபரப்பும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் குறித்து சர்வதேச ஊடகங்கள் கூறுவது என்ன?20 ஜனவரி 2024 ராமர் கோவில் குடமுழுக்கு நெருங்கும் நேரம் அயோத்தி இஸ்லாமியர்களின் மனநிலை என்ன?19 ஜனவரி 2024 பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, கங்கனா ரனவத் பாதுகாப்பு ஏற்பாடுகள் இந்த விழாவை முன்னிட்டு அயோத்தியில் தீவிர பாதுகாப்புப் பணிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால், பாதுகாப்புப் பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 10,000 சிசிடிவி கேமராக்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய ட்ரோன்கள் ஆகியவை கண்காணிப்புப் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கோவிலை சுற்றி முக்கியமான இடங்களில் முள்கம்பி தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. அயோத்தி ராமர் சிலையை மோதி பிரதிஷ்டை செய்வதை எதிர்ப்பது ஏன்? - பிபிசிக்கு சங்கராச்சாரியார் பேட்டி17 ஜனவரி 2024 பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, அயோத்தி ராமர் கோவிலுக்கு வருகை தந்துள்ள உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத். கூடார நகரம் அதிகளவிலான துறவிகள் மற்றும் விருந்தினர்கள் அயோத்திக்கு வந்தடைந்துள்ளனர். அவர்கள் தங்குவதற்காக தீர்த்த க்ஷேத்ர புரம் என்ற பெயரில் தற்காலிக நகரம் ஒன்றை அமைத்து கொடுத்துள்ளது ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை. இந்த தீர்த்த க்ஷேத்ர புரத்திற்கு விஷ்வ இந்து பரிஷத்தின் இணை செயலாளர் கோடீஸ்வர ஷர்மா பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, அவர் கூறுகையில், “அழைக்கப்பட்டவர்கள் மட்டுமே இந்த நிகழ்வில் பங்குபெற அனுமதிக்கப்படுவார்கள். இன்னமும் கோவில் கட்டுமானம் முழுமையடையாததால், இங்கு இருக்கும் இடத்திற்கு ஏற்ப 8000 விருந்தினர்கள் மட்டுமே இந்நிகழ்விற்கு அழைக்கப்பட்டுள்னர். அதில் 4000 துறவிகளும் அடங்குவர். கோவில் கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்களோடு சேர்த்து, நாடு முழுவதும் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களும் இந்நிகழ்வில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர். துறவிகள் மற்றும் அவர்களோடு வருபவர்களுக்கென்று கூடார நகரம் என்ற பெயரில் தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” என்றார். அயோத்தியில் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் ஒதுக்கியும் பணிகள் இன்னும் தொடங்காதது ஏன்?14 ஜனவரி 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES ஜனவரி 23 ஆம் தேதிக்குப் பிறகு அதிகளவில் மக்கள் வரத்தொடங்குவார்கள் என்பதால், அயோத்தியில் உள்ள இரண்டு மருத்துவமனைகளை 120 படுகைகள் கொண்ட ஒரு மருத்துவமனையாகவும், 350 படுக்கைகள் கொண்ட ஒரு மருத்துவமனையாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. அதேபோல, அயோத்திக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் இருந்து அயோத்திக்கு ஹெலிகாப்டர் சேவை தொடங்க உள்ளதாகவும் உத்தரப் பிரதேச மாநில சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் முகேஷ் மெஷ்ராம் பிடிஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார். அயோத்தி பகுதியில் மக்களுக்குத் தேவையான சுகாதார கட்டமைப்பையும் வலுப்படுத்தவுள்ளதாக மத்திய அரசு கூறியிருந்தது. தமிழ்நாட்டில் என்ன நிலை? தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்நிகழ்வை நேரலை செய்ய தடை விதித்து வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் குற்றச்சாட்டு எழுப்பினர். இதுதொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கின் விசாரணை இன்று காலை நடைபெற்றது. அப்போது, இந்நிகழ்வை நேரலையாக ஒளிபரப்பவோ, பூஜைகள், அர்ச்சனைகள், பஜனைகள் மேற்கொள்ளவோ, அன்னதானம் வழங்கவோ எவ்வித கட்டுப்பாடுகளும் தடையும் இல்லை எனவும் இந்த மனுக்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும் தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடப்பட்டது. சம்பந்தப்பட்ட இடங்களில் வேறு பல சமூகத்தினர் வசிப்பதாகக் கூறி அனுமதி மறுக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவிக்கிறது. அதேபோன்று, தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் ராமர் கோவில் திறப்பு விழாவை நேரடி ஒளிபரப்பு செய்ய தடை விதித்த வாய்மொழி உத்தரவை யாரும் கடைபிடிக்க வேண்டியதில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக, பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES காஞ்சிபுரத்தில் மீண்டும் எல்.இ.டி திரை உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் இந்நிகழ்வை நேரலையாக ஒளிபரப்புவதற்கு எல்.இ.டி திரைகள் மீண்டும் பொருத்தப்பட்டு நேரலையாக ராமர் கோவில் நிகழ்வு ஒளிபரப்பப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தார். முன்னதாக, காமாட்சி அம்மன் கோவிலில் மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்ட எல்.இ.டி திரையை "அனுமதி பெறாமல் வைக்கப்பட்டது" என கூறி அதை காவல்துறையினர் அகற்றியிருந்தனர். இதனை நிர்மலா சீதாராமன் கண்டித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cyejnlynex4o
-
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் - செய்திகள்
19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணம் : பங்களாதேஷை இலகுவாக வெற்றிகொண்டது இந்தியா Published By: VISHNU 21 JAN, 2024 | 10:25 AM (நெவில் அன்தனி) பங்களாதேஷுக்கு எதிராக ப்ளூம்ஃபொன்டெய்ன் விளையாட்டரங்கில் நடைபெற்ற ஏ குழுவுக்கான 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நடப்பு சம்பியன் இந்தியா 81 ஓட்டங்களால் இலகுவாக வெற்றிபெற்றது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 251 ஓட்டங்களைக் குவித்தது. ஆரம்பத்தில் 2 விக்கெட்கள் குறுகிய நேரத்தில் சரிய இந்தியா சிறு தடுமாற்றத்தை எதிர்கொண்டது. (31 - 2 விக்.) ஆனால், ஆரம்ப வீரர் ஆதர்ஷ் சிங் 76 ஓட்டங்களையும் அணித் தலைவர் உதய் சஹரான் 64 ஓட்டங்களையும் பெற்று அணியை சிறந்த நிலையில் இட்டனர். அவர்கள் இருவரும் 3ஆவது விக்கெட்டில் 116 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவை பலப்படுத்தினர். மத்திய வரிசையில் சச்சின் தாஸ் (26 ஆ.இ.), ப்ரியன்ஷு மோலியா (23), அரவெல்லி அபினாஷ் (23) ஆகியோர் தங்களாலான அதிகப்பட்ச பங்களிப்பை வழங்கினர். பந்துவீச்சில் மாறுப் ம்ரிதா 43 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 45.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 167 ஓட்டங்களைப் பெற்றது. திறமையாகத் துடுப்பெடுத்தாடிய மொஹமத் ஷிஹாப் ஜமெஸ் 54 ஓட்டங்களையும் அரிஃபுல் இஸ்லாம் 41 ஓட்டங்களையும் பெற்றதுடன் 5ஆவது விக்கெட்டில் 77 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். பந்துவீச்சில் சவ்மி பாண்டே 24 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் முஷீர் கான் 35 ஒட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: ஆதர்ஷ் சிங் ஞாயிற்றுக்கிழமை (21) போட்டிகள் இலங்கை எதிர் ஸிம்பாப்வே (ஏ குழு - கிம்பர்லி) நேபாளம் எதிர் நியூஸிலாந்து (டி குழு - ஈஸ்ட் லண்டன்) https://www.virakesari.lk/article/174430
-
சிசிடிவி அபராத முறைக்கு பேருந்து சங்கம் எதிர்ப்பு!
கொழும்பில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்டறியும் நோக்கில் இலங்கை பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள CCTV நிகழ்ச்சி இன்று (ஜனவரி 22) முதல் அமுலுக்கு வருகிறது. இதன்படி, கொழும்பில் உள்ள 33 முக்கிய இடங்களில் பொலிஸாரின் சிசிடிவி கமராக்கள் மூலம் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் அடையாளம் காணப்படவுள்ளனர். முதல் நடவடிக்கையாக குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டவர்களின் அபராதத் தாள்கள் வாகனத்தின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களின் முகவரிக்கு அனுப்பப்படும். இதேவேளை, கொழும்பில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்டறியும் பொலிஸாரின் சிசிடிவி திட்டத்திற்கு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் (LPBOA) எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, இந்த வேலைத்திட்டத்தின் கீழ் பஸ்களை ஒழுங்குபடுத்த வேண்டுமாயின் பஸ் முன்னுரிமைப் பாதை சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்றார். முச்சக்கர வண்டிகள் உட்பட ஏனைய வாகனங்கள் பஸ் பாதையில் பயணிப்பதால் பஸ்களை இயக்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/288959