Jump to content

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    20094
  • Joined

  • Last visited

  • Days Won

    15

Everything posted by ஏராளன்

  1. நான்கு லட்சம் ரூபாய் மாத சம்பளத்தை வேண்டாம் என்றேன் |CWC - Social Talk| Writer S.Ramakrishnan Part 2 9.30 - 10.30 நிமிடங்கள் சொல்வது உண்மை தான்.
  2. என்னை ஆச்சரியப்படுத்திய ஆட்டோ டிரைவர்|Chai with Chithra - Social Talk| Writer S. Ramakrishnan Part 1
  3. இன்றைய நாளுக்கும் இந்த பாடல் வரிகளுக்கும் ஏதும் தொடர்பு இருக்குமோ?!
  4. பிரனிர்ஷா: இலங்கையின் சிங்கள இசை நிகழ்ச்சியில் முதல்முறையாக தமிழ் சிறுமி வெற்றி ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 8 ஜூலை 2022 இலங்கை வரலாற்றில முதல் தடவையாக சிங்கள ரியாலிட்டி இசை நிகழ்ச்சி போட்டியில், தமிழ் சிறுமி ஒருவர் முதலிடத்தை பெற்று, வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார். பதுளை மாவட்டம், பண்டாரவளை நகரில் வசிக்கும் 13 வயதான தியாகராஜா பிரனிர்ஷா என்ற சிறுமியே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். இலங்கையில் பிரபல தனியார் சிங்கள தொலைக்காட்சி சேவையான சிரச தொலைக்காட்சியினால் நடத்தப்பட்ட 'வாய்ஸ் டீன்' இசை நிகழ்ச்சி போட்டியிலேயே இவர் இந்த சாதனையை படைத்துள்ளார். சுமார் 6 மாத காலமாக நடைபெற்ற இந்த போட்டியில், நூற்றுக்கணக்கான சிங்கள சிறுவர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் கலந்து கொண்ட ஒரே தமிழ் சிறுமி பிரனிர்ஷா. "குழந்தைக்கு பால் கூட வாங்க முடியாமல் தவிக்கிறேன்" - ஓர் இலங்கை தாயின் கண்ணீர் கதை "இலங்கையில் யாரும் உதவவில்லை" - 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் புதிய சாதனைப் படைத்த யுபுன் அபேகோ தனது சாதனை பயணம் குறித்து, பிரனிர்ஷா, பிபிசி தமிழிடம் பேசினார். ''இந்த போட்டிக்கு முதல் முதலில் செல்லும் போது, எனக்கு வெற்றி பெற முடியும் என்று நான் நினைக்கவே இல்லை. பங்குபெற வேண்டும் என்ற ஆசை மட்டும் தான் இருந்தது. வெற்றி பெற்றதன் பின்னர் மேடையில் இருக்கும் போதே, நான் அதிர்ச்சி அடைந்தேன். ஏனென்றால், இதுவொரு சிங்கள தொலைக்காட்சி. சிங்கள மக்கள் எனக்கு வாக்களிப்பார்கள் என்று நான் நினைக்கவே இல்லை. எனினும், நிறைய சிங்கள மக்கள் வாக்களித்திருந்தார்கள். சிங்கள மக்கள் தமிழ் மக்கள் இரண்டு பேரும் இணைந்து தான் எனக்கு வாக்களித்திருந்தார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது" என கூறினார். சிங்கள இசை நிகழ்ச்சி மேடையில் ஏன் பாட வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு வந்தது? இதுவொரு சர்வதேச போட்டி. இதில் அனைத்து மொழிகளிலும் பாட முடியும். பண்டாரவளை நகரிற்கும் ஆடிசனுக்கு வருகின்றார்கள் என கேள்விபட்டேன். சர்வதேச போட்டியொன்றில் பங்கு பெற வேண்டும் என்ற கனவு எனக்கு இருந்தது. அதுக்காகவே நான் போட்டியில் கலந்துக்கொண்டேன் என குறிப்பிட்டார். முதல் தடவையாக இந்த மேடையில் ஏறும் போது, உங்கள் மனதில் தோன்றியது என்ன? முதல் தடவையாக நான் அந்த மேடையில் ஏறும் போது, வித்தியாசமான ஒரு சுற்று. நடுவர்கள் மறுபுறம் திரும்பியிருப்பார்கள். இந்த முறைமை எனக்கு ரொம்பவே பிடிக்கும். இதில் நான் தெரிவு செய்யப்படுவேன் என நினைக்கவில்லை. அதுலயும் போட்டியிட வேண்டும் என்ற கனவு மாத்திரமே இருந்தது. ரொம்ப ரொம்ப சந்தோசமாக இருந்தது." இந்த போட்டியில் திருப்பு முனையாக இருந்த சந்தர்ப்பம் எது என நீங்கள் நினைக்கின்றீர்கள்? நான் மூன்றாவது சுற்றில் பாடிய பாடலே திருப்பு முனையாக இருந்தது. மூன்றாவது சுற்றில் நான் சிங்கள பாடல் ஒன்றை பாடினேன். 'மகே ரட்டட தலதா" என்ற பாடலை பாடினேன். அந்த பாடலுக்கு நிறைய பேர் கமண்ட் பண்ணி இருந்தார்கள். நல்ல வரவேற்பு கிடைத்தது. ஒரு தமிழ் சிறுமி, ஒரு சிங்கள பாடலை பாடும் போது, வித்தியாசமான உணர்வு இருந்தது என கூறினார்கள். இந்த பாடலே எனக்கு முழுமையான திருப்பு முனையாக அமைந்தது. நீங்கள் சிங்கள மொழி அறிந்தா இந்த இசை மேடைக்கு வந்தீர்கள்? ஆரம்பத்தில் எனக்கு சிங்கள வார்த்தைகள் மாத்திரமே தெரியும். அந்த வார்த்தைகளை எப்படி இணைத்து பேச வேண்டும் என எனக்கு தெரியாது. இந்த போட்டிக்கு வந்ததன் பிறகு தான் நான் சிங்களம் பேச கற்றுக்கொண்டேன். இந்த போட்டி ஆரம்பிக்கப்பட்டு, 5 அல்லது 6 மாதம் இருக்கும். இந்த 5, 6 மாதங்களில் அங்குள்ளவர்களுடன் பேசும் போது, சிங்களம் கற்றுக்கொண்டேன் என கூறினார். பாடல்களில் வார்த்தைகளை பயன்படுத்தும் போது, அது உணர்வோடு வர வேண்டும். இந்த ஐந்து மாத காலப் பகுதியில் உச்சரிப்பு, உணர்வு அனைத்தையும் எப்படி பழகுனீர்கள்? பாடல்களை பாடும் போது, பாடல்களிலுள்ள வசனங்களுக்கான அர்த்தம் எனக்கு தெரியாது. அப்போது, பயிற்றுவிப்பாளர்களே எனக்கு சொல்லி கொடுத்தார்கள். இந்த பாடல் இந்த சந்தர்ப்பத்தில் பாடப்பட்டது. இந்த பாடலுக்கான அர்த்தம் இது தான் என பயிற்றுவிப்பாளர்கள் கூறுவார்கள். ஒவ்வொன்றாக பயிற்றுவித்தார்கள். இந்த மேடையில் பெரும்பாலும் சிங்கள மக்களே இருந்தார்கள். இந்த சந்தர்ப்பத்தில் எவ்வாறான சவால்களை நீங்கள் எதிர்நோக்கியிருந்தீர்கள்? எனக்கு நிறைய சந்தர்ப்பங்களில் சவால்கள் ஆரம்ப காலத்தில் இருந்தது. எனக்கு சிங்களம் பேச முடியாது. தொடர்பாடலை ஏற்படுத்த முடியாது. பயிற்றுவிப்பாளர்கள் சொல்லி கொடுக்கும் சில விடயங்களை என்னால் புரிந்துக்கொள்ள முடியாது. அங்குள்ளவர்கள் பேசுவதை என்னால் புரிந்துக்கொள்ள முடியாது. நிறைய கஷ்டங்கள் இருந்தது. ஆனால், போக போக சிங்கள பாடல்கள் பாட சொல்லி, சிங்களம் பழகி, அதுக்கு பிறகு அவங்களோட வேலை செய்ய இலகுவாக இருந்தது. உங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? எனக்கு மருத்துவராக வேண்டும் என்பது லட்சியம். கட்டாயம் மருத்துவராகுவேன். சிறுவர்களுக்கான மருத்துவராக வேண்டும். அதோட சேர்த்து, இசையையும் தொடர வேண்டும் என்பது எனது ஆசை. எந்த வயதில் உங்களின் இசை பயணம் ஆரம்பமானது? நான் சின்ன வயதில் தேவாரம் பாடுவேன். பாடசாலை செல்வதற்கு முன்னரே நான் தேவாரம் பாடுவேன். அதை பார்த்து தான், பெற்றோர் என்னை வகுப்புக்களுக்கு சேர்க்க யோசித்தார்கள். வகுப்புக்களுக்கு சென்று படிபடியாக வந்தேன். இசையில் நான் இப்போது கர்நாட்டிக் படித்துக்கொண்டிருக்கின்றேன். அதை அப்படியே தொடர வேண்டும். இசையில் பெரிய பாடகியாக வேண்டும் என்ற ஆசை இருக்கின்றது. மருத்துவரானாலும், இசையையும் தொடர்வேன். வாழ்க்கையில் நிறைய பாடல்களை பாட வேண்டும். நிறைய ஆல்பம் பாடல்களை பாட வேண்டும் என்ற ஆசை இருக்கின்றது. இலங்கையை பொருத்த வரை இசைத்துறையில் தமிழர்களுக்கு சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன. இலங்கை தமிழர்களுக்கான ஒரே களம் தென்னிந்திய களம். தென்னந்தியாவிற்கு செல்ல அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? எனக்கு தெரியவில்லை அப்படி நடக்குமா என்று. அப்படி நடந்தால், ரொம்ப சந்தோஷமாக இருக்கும். தென்னிந்தியாவில் சந்தர்ப்பம் கிடைத்தால், செய்யலாமா? இல்லையா? என்பதை எதிர்காலத்தில் பார்க்க வேண்டும். அப்படி கிடைத்தால், ரொம்பவே சந்தோசம். 'சிங்களவர்களும் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்' சிரச தொலைக்காட்சியினால் நடத்தப்பட்ட இசை போட்டியில் வெற்றியீட்டிய தியாகராஜா பிரனிர்ஷாவிற்கு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் இந்த வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார். ''தமிழ் இளைஞர் யுவதிகள் எப்படி சிங்கள மொழி மூலமான பாடல்களை பாடுவதோடு சிங்கள மொழியினை சரளமாக பேசுகிறார்களோ, அதேபோன்று சிங்கள இளைஞர் யுவதிகள் தமிழ் பாடல்களை பாடுவதன் மூலமாக மற்றும் தமிழ் மொழியினை பேசுவதன் மூலமாக இலங்கையர்களாகிய நாம் மத மொழி வேறுபாடுகளை மறந்து ஒரு உண்மையான வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் அடைய முடியும் என நம்புகிறேன்." என தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார். அத்துடன், இலங்கையின் இசைத்துறை சார்ந்தோர், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பெரும்பாலானோர், தியாகராஜா பிரனிர்ஷாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். https://www.bbc.com/tamil/arts-and-culture-62098521
  5. இலங்கை: சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் கவனத்தை ஈர்க்கும் மக்கள் போராட்டங்கள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AMILA UDAGEDRA இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கையுடன் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த தேசிய எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தலைநகர் கொழும்பில் நடத்தப்பட்ட போராட்டங்கள் தீவிரம் ஆகியிருக்கிறது. கொழும்பில் திரண்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்ததுடன், அந்த பகுதியையும் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். முன்னதாக, அவர்களை அந்த இடத்துக்குள் நுழைய விடாமல் போலீஸாரும் ராணுவத்தினரும் கடுமையாக முயன்றனர். பல கட்ட அடுக்கு தடுப்புகள் அமைத்தும், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் கூட்டத்தைக் கலைக்க முயன்ற போலீஸார், பிறகு தொடர்ச்சியாக கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைக்க முற்பட்டனர். அதன் காரணமாக சில நிமிடங்கள் தணிந்த போராட்டம் பிற்பகலில் மீண்டும் தீவிரம் அடைந்தது. இதனால் அவர்களை சமாளிக்க முடியாமல் போலீஸாரும், ராணுவத்தினரும் ஒதுங்கிக் கொண்டனர். இதற்கிடையே, பொதுமக்கள் நடத்திய போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் தலைநகர் கொழும்பில் திடீரென நேற்று அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் மற்றும் கடந்த சில நாட்களாக இலங்கையில் பதிவாகும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான புகார்கள், சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளன. பட மூலாதாரம்,AMILA UDAGEDARA மறைமுகமாக செய்ய முயற்சிக்க வேண்டாம் - மனித உரிமைகள் ஆணையம் இதேவேளை, இலங்கை போலீஸ் மா அதிபரினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் சட்டவிரோதமானது என்று இலங்கை மனித உரிமைகள் ஆணையம் வெள்ளிக்கிழமை இரவு அறிக்கை மூலம் தெரிவித்தது. அதில், "போலீஸ் தலைவரின் உத்தரவு மக்களின் அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றான ஒன்று கூடும் உரிமையை பறிக்கிறது" என்று கூறப்பட்டுள்ளது. 'நேரடியாக செய்ய முடியாததை மறைமுகமாக செய்ய முயற்சிக்காதீர்கள்' என்ற தலைப்பில் இந்த அறிக்கையை ஆணையம் வெளியிடப்பட்டுள்ளது. "மக்களின் பேரணியைத் தடுக்க நீதிமன்ற உத்தரவைப் பெற முடியாத நிலையில், சட்ட விரோதமான வழிகளில் பேரணியைத் தடுக்க அரசு முயற்சிக்கிறது" என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் எதிர்வினை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகமும் போராட்டம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "சனிக்கிழமை, ஜூலை 9, கொழும்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக, கூட்டங்களைக் கையாள்வதில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறும், வன்முறையைத் தடுக்குமாறும் அதிகாரிகளுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். அனைத்து இலங்கையர்களுக்கும் கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான ஒன்றுகூடல் உரிமை உள்ளது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், "மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டங்களை அவதானிக்கவும் அது பற்றிய கருத்துக்களை வெளியிடவும் உரிமை உண்டு என்றும் பாதுகாப்புப் படையினருக்கு தெளிவாக அறிவுறுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்," என்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,AMILA UDAGEDARA ஒரு பொது விதியாக, மக்கள் கூட்டங்களைக் கட்டுப்படுத்த ராணுவத்தைப் பயன்படுத்தக்கூடாது என்ற மரபு உள்ளது. ஆனால் விதிவிலக்கான சந்தர்ப்பங்களில், ராணுவ வீரர்கள் சர்வதேச விதிமுறைகள் மற்றும் தரங்களுக்கு உட்பட்டு சட்ட அமலாக்கப் பணிகளைச் செய்யலாம். அப்படி பணியாற்றும்போது அவர்கள் சிவில் ஆளுகைக்கும் சிவில் சட்டங்களுக்கும் உட்பட்டவர்களாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. Twitter பதிவை கடந்து செல்ல, 2 Twitter பதிவின் முடிவு, 2 அமைதிவழி போராட்டம் மக்களின் உரிமை - ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்த நிலையில், அமைதி வழியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது அரசுப் படைகள் மற்றும் காவல்துறை நடத்திய தாக்குதலை கண்டித்து சர்வதேச மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. #RightsUnderAttack என்ற ஹேஷ்டேக் என குறிப்பிட்டு அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், போராட்டத்திற்கு செல்லும் குடிமக்கள் தங்கள் பாதுகாப்பிற்காக பின்பற்ற வேண்டிய பல விஷயங்களை உள்ளடக்கிய ஒரு வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும்போது 'செய்ய வேண்டியவை' மற்றும் 'செய்யக்கூடாதவை', என்ன உடை அணிய வேண்டும், எதை எடுத்துச் செல்ல வேண்டும், கண்ணீர் புகை குண்டுகளை எவ்வாறு தவிர்ப்பது மற்றும் எதிர்ப்பாளர்களின் உரிமைகள் என்ன போன்ற அறிவுறுத்தல்களை அந்த அறிக்கை தெளிவாகக் கொண்டிருக்கிறது. Twitter பதிவை கடந்து செல்ல, 3 Twitter பதிவின் முடிவு, 3 https://www.bbc.com/tamil/sri-lanka-62106319
  6. இலங்கை நெருக்கடி: கோட்டாபய, ரணில் இல்லாவிட்டால் அடுத்தடுத்த வாய்ப்புகள் என்ன? எம். மணிகண்டன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கை வரலாற்றிலேயே முதல் முறையாக ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்து அதைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாளிகையில் இருந்து வெளியேறிவிட்டார். அவர் எங்கிருக்கிறார் என்ற விவரம் தெரியவில்லை. கோட்டாபயவின் அலுவலகம் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால் அவரால் இயங்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. ரணில் பிரதமர் பதவியில் இருந்து விலக தயார் என கூறியிருக்கிறார். அப்படியென்றால், நாட்டை தலைமையேற்று நடத்துவதில் யாருக்கு என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? ஏற்கெனவே நிதியில்லாமல், எரிபொருள் தீர்ந்து பெரும் சிக்கலில் இருக்கும் இலங்கையில் அடுத்த என்ன நடக்கப் போகிறது? கோட்டாபய ராஜபக்ஷவுக்கு என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன? கோட்டாபய ராஜபக்ஷ தற்போது அவரது அதிகாரபூர்வ மாளிகையில் இல்லை. அவரது அலுவலகமும் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் அவரால் முழுமையாக இயங்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. "இப்போதைக்கு அவருக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு பதவி விலகுவதுதான்" என்கிறார் இலங்கை அரசியல் நிபுணர் நிக்சன். கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால் என்னவாகும்? இலங்கை அரசியல் சட்டப்படி ஜனாதிபதி பதவி விலகினால் பிரதமர்தான் தற்காலிக ஜனாதிபதியாக செயல்படுவார். ஆனால் ஒரு மாதத்துக்குள்ளாக நாடாளுமன்றம் கூடி அவரது நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் பதவியில் தொடர முடியாது. தற்போதைய சூழலில் ரணில் தற்காலிக அதிபராக வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரணில் விக்கிரமசிங்க ரணில் விக்கிரமிங்கவுக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு கிடைக்குமா? "வாய்ப்பில்லை" என்கிறார் நிக்சன். நாடாளுமன்றத்தில் அவரது கட்சிக்கு அவர் மட்டும்தான் உறுப்பினர். அதே நேரத்தில் எதிர்க்கட்சிகளுக்கு அவருக்கு எதிராக களத்தில் இருக்கின்றன. 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 113 உறுப்பினர்கள் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக சஜித் பிரேமதாஸ தலைமையிலான எதிர்கட்சிகள் கூறுகின்றன. இலங்கை நெருக்கடி: கோட்டாபய எங்கே? இதுவரை நடந்தது என்ன? இலங்கை: பிரதமர் பதவியில் இருந்து விலக தயார் - ரணில் விக்ரமசிங்க கோட்டாபய மாளிகை நீச்சல் குளத்தில் போராட்டக்காரர்கள் - புகைப்பட தொகுப்பு ரணில் அதிபராக முடியவில்லை என்றால் என்ன நடக்கும்? அரசியல் சட்டப்படி பிரதமருக்கு அடுத்தபடியாக சபாநாயகர் அதிபராக அறிவிக்கப்படலாம். தற்போதைய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, கோட்டாபயவின் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு எதிர்கட்சிகள் ஆதரவளிப்பதற்கான வாய்ப்புக் குறைவு. எனவே அரசியல் சட்டப்படி அவருக்கு அடுத்ததாக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அதிபராகலாம். ஆனால் அதற்கும் நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும். இதற்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு அவசியம். எதிர்கட்சிகளின் திட்டம் என்ன? தங்களுக்கு 113 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால் தாங்களே அரசமைக்க முடியும் என்று சஜித் பிரேமதாஸவின் எஸ்ஜேபி, ஜேவிபி உள்ளிட்ட கட்சிகள் கூட்டாக அறிவித்திருக்கின்றன. அதிபரும் பிரதமரும் பதவி விலக வேண்டும் என்பதையும் கோரியிருக்கின்றன. "தங்களில் ஒருவரே அதிபராகவும், பிரதமராகவும் இருக்க வேண்டும் என்பது அவர்களின் திட்டமாக இருக்கலாம்" என்கிறார் நிக்சன். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சஜித் பிரேமதாச கோட்டாபய பதவி விலக மறுத்தால் என்னவாகும்? "இது அரசியல் சிக்கலை ஏற்படுத்தும். அவர் பதவி விலக மறுத்தால் எதுவும் செய்ய இயலாது. அதே நேரத்தில் அவரது இல்லமும் அலுவலகமும் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவரால் செயல்படவும் முடியாது." என்கிறார் நிக்சன். ராணுவத்தைக் கொண்டு ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளவதற்கான சாத்தியத்தையும் நிக்சன் மறுக்கவில்லை. அனைத்துக் கட்சி அரசு அமைய வாய்ப்பிருக்கிறதா? இதுவும் எதிர்கட்சிகளின் கையில்தான் இருக்கிறது. ஏனென்றால் ஏற்கெனவே அழைக்கப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டங்களுக்கு எதிர்க்கட்சிகள் செல்லவில்லை. தங்கள் தலைமையில்தான் அரசு அமைய வேண்டும் என்பதில் அவை தீவிரமாக இருக்கின்றன. தேர்தல் அறிவிக்க வாய்ப்பிருக்கிறதா? இப்போது தேர்தல் நடத்துவதற்கு அரசிடம் பணம் இல்லை. அதனால் தேர்தல் வருவதற்கான வாய்ப்பு இல்லை. ஜனாதிபதி மாறினால் பொருளாதார நெருக்கடியில் மாற்றம் வருமா? தற்போது அத்தியாவசிய சேவைகளுக்கே அரசியம் பணம் இல்லை. பல மருத்துவமனைகள் இப்போது நன்கொடையை நாடத் தொடங்கிவிட்டன. எரிபொருள் முற்றிலுமாகத் தீரப் போகிறது. அரசு அலுவலகங்கள், பள்ளிகள் உள்ளிட்டவை செயல்படவில்லை. அதனால் யார் அதிபராக வந்தாலும் பொருளாதார நிலைமையில் "உடனடியாக மாற்றம் வர வாய்ப்பில்லை" என்று கூறுகிறார் நிக்சன். அதே நேரத்தில் அரசியல் நெருக்கடி நீடித்து வந்தால், ஐஎம்எஃப் உள்ளிட்ட நிதி அமைப்புகளிடம் இருந்து கிடைப்பது சிக்கலாகும் என்கிறார் நிக்சன். https://www.bbc.com/tamil/sri-lanka-62105420
  7. ஈலோன் மஸ்க்: ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவிலிருந்து பின்வாங்கியதன் காரணம் என்ன? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ட்விட்டர் சமூக வலைதள நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக உலகின் பெரும் பணக்காரரான ஈலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். அந்த ஒப்பந்தத்தில் பல்வேறு விதிமீறல்கள் இருப்பதாக, அவர் குற்றம்சாட்டியுள்ளார். ஈலோன் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக கடந்த ஏப்ரல் மாதத்தில் அறிவித்தபின் நீண்ட காலமாக நடக்கும் கதையின் சமீபத்திய திருப்பம் இது. ட்விட்டர் ஸ்பேம்கள் மற்றும் போலி கணக்குகள் குறித்த போதுமான தகவல்களை அந்நிறுவனம் வழங்கத் தவறியதால் தான் இம்முடிவிலிருந்து பின்வாங்குவதாக ஈலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். இதனிடையே, இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்த சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. பில்லியன் டாலர்களை இழக்கும் டெஸ்லாவின் புதிய தொழிற்சாலைகள் - ஈலோன் மஸ்க் கூறியது என்ன? ஈலோன் மஸ்க்குடன் உறவை முறித்துக் கொண்ட திருநங்கை மகள் "மொத்தமாக 4,400 கோடி டாலர் தருகிறேன்" - விலகி ஓடிய ட்விட்டரை ஈலோன் மஸ்க் கவர்ந்து இழுத்த கதை "ஈலோன் மஸ்க் உடன் ஒத்துக்கொள்ளப்பட்ட தொகை மற்றும் விதிமுறைகளுடன் ஒப்பந்தத்தை செயல்படுத்த ட்விட்டர் இயக்குனர் குழு உறுதிபூண்டுள்ளது," என ட்விட்டர் நிறுவனத்தின் தலைவர் பிரெட் டேய்லர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இது, ட்விட்டர் நிறுவனம் மற்றும் ஈலோன் மஸ்க் என இரு தரப்புக்கு இடையில் சாத்தியமான நீண்ட சட்டப் போராட்டம் ஏற்பட உள்ளதை குறிப்பதாக உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் 100 கோடி ரூபாய் பிரேக் அப் கட்டணமும் (ஒப்பந்தத்திலிருந்து பின் வாங்கினால் செலுத்தப்படும் அபராதம்) அடங்கும். போலி கணக்குகள் குறித்த சர்ச்சை ட்விட்டர் உடனான இந்த ஒப்பந்தம் "தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக" மே மாதம் அறிவித்த மஸ்க், ட்விட்டர் போலி கணக்குகள் மற்றும் ஸ்பேம்கள் குறித்த தரவுகளை அந்நிறுவனம் வழங்குவதற்காக தான் காத்திருப்பதாக தெரிவித்திருந்தார். ட்விட்டர் மொத்த பயனாளிகளில் ஸ்பேம் மற்றும் பாட் கணக்குகள் 5 சதவீதத்திற்கும் குறைவானவையே என அந்நிறுவனம் உறுதிபட தெரிவித்ததற்கான ஆதாரத்தை ஈலோன் மஸ்க் கேட்டிருந்தார். ஈலோன் மஸ்க் கேட்டிருந்த இத்தகவல்களை ட்விட்டர் நிறுவனம் தர தவறிவிட்டதாக, அமெரிக்க பாதுகாப்பு மற்றும் பரிமாற்ற ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த கடிதத்தில், ஈலோன் மஸ்க்கின் வழக்குரைஞர் தெரிவித்துள்ளார். "மஸ்க்கின் வலியுறுத்தல்களை ட்விட்டர் நிறுவனம் சில சமயங்களில் புறக்கணித்துவிட்டது. சிலசமயங்களில் அவற்றை நியாயமற்றதாக தோன்றும் காரணங்களுக்காக நிராகரித்துவிட்டது. சில சமயங்களில் முழுமையற்ற அல்லது பயன்படாத தகவல்களை கொடுக்கும்போது இணங்குவதாக கூறியுள்ளது" என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,REUTERS ட்விட்டர் ஸ்பேம் கணக்குகள் பெரிதளவிலானோருக்கு தகவல்கள் சென்றடையும் வகையில் வடிவமைக்கப்பட்டது, இவை ட்விட்டர் தளத்தை தவறாக கையாளும் வகையில் அமையப்பட்டது. சுமார் 10 லட்சம் ஸ்பேம் கணக்குகளை தினந்தோறும் நீக்கிவருவதாக, கடந்த செவ்வாய்க்கிழமை ட்விட்டர் நிறுவனம் தெரிவித்தது. ட்விட்டரில் ஸ்பேம் அல்லது பாட் கணக்குகள் சுமார் 20 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமாக இருப்பதாக ஈலோன் மஸ்க் நம்புகிறார். ஒப்பந்தத்தில் இருந்து விலகும் மஸ்க்கின் அறிவிப்புக்குப் பின் ட்விட்டர் பங்குகள் 7 சதவீதம் சரிந்தது. அடுத்து என்ன நடக்கும்? "ஈலோன் மஸ்க் ஏற்கெனவே இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில், இந்த கட்டத்தில் அவர் பின்வாங்க முடியுமா என்பது முற்றிலும் தெளிவாக இல்லை. ட்விட்டர் தங்கள் ஒப்பந்தத்தை மீறியதாக மஸ்க் நிரூபிக்க வேண்டும். மேலும், ட்விட்டர் நிறுவனத்துடனான இந்த ஒப்பந்தம், மஸ்க்கின் மற்ற நிறுவனங்களுடன் ஏற்படுத்தும் தாக்கமும் ஒரு காரனமாக உள்ளது. ட்விட்டர் நிறுவனத்தை வாங்க மஸ்க் விருப்பம் தெரிவித்ததிலிருந்து டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் குறிப்பிடத்தக்க அளவு சரிந்தது" என, பிபிசியின் வட அமெரிக்கா தொழில்நுட்ப செய்தியாளர் ஜேம்ஸ் கிளேட்டன் எழுதிய பகுப்பாய்வில் தெரிவித்துள்ளார். உலகின் பெரும் பணக்காரராக அறியப்படும் மஸ்க், ராக்கெட் தொழில்நுட்ப நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா நிறுவனங்களின் நிறுவனர். பட மூலாதாரம்,GETTY IMAGES ட்விட்டர் நிறுவனம் தனது உரிமையின் கீழ் வந்ததும் ட்விட்டரின் விதிகளை தளர்த்துவதாக உறுதியளித்தார். ட்விட்டரில் சில கணக்குகளை முடக்குவது குறிப்பாக, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கணக்கை முடக்கியது உள்ளிட்டவற்றை நீண்ட காலமாக விமர்சித்துவந்தார். ட்விட்டர் நிறுவனம் பயனர்களுக்கு ட்வீட்களை எவ்வாறு வழங்குகிறது என்பதில் அதிக வெளிப்படைத்தன்மை வேண்டும் என அவர் வலியுறுத்தியிருந்தார், இது தற்போது சிலரை விளம்பரப்படுத்தவும் பரந்த பார்வையாளர்களை வழங்கவும் அனுமதிக்கிறது. https://www.bbc.com/tamil/global-62104017
  8. இலங்கை நெருக்கடி: கோட்டாபய மாளிகைக்குள் நுழைந்த மக்கள் - போலீஸ் கண்ணீர் புகைகுண்டு வீச்சு 9 ஜூலை 2022, 05:54 GMT புதுப்பிக்கப்பட்டது 9 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் அதிபர் கோட்டாபயவின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் வளாகத்துக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர். முன்னதாக அவரது இல்லத்தை முற்றுகையிட முயன்றவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தண்ணீரையும் பீய்ச்சி அடித்தனர் இதில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் காவல்துறையினர் வைத்த தடுப்புகளைத் தாண்டி கோட்டாபயவின் வீட்டை நோக்கி போராட்டக்காரர்கள் முன்னேறியதால் பதற்றம் ஏற்பட்டது. சில போராட்டக்காரர்கள் இல்லத்தின் பிரதான வாயில் மீது ஏறி இல்லத்துக்குள் நுழைந்தனர். ராணுவத்தினர் போராட்டம் நடக்கும் இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். கூட்டத்தைக் கலைப்பதற்காக வானத்தை நோக்கி காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டனர். பட மூலாதாரம்,SAJID NAZMI அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த இருக்கைகளில் அமர்ந்திருக்கும் காட்சிகளும், நீச்சல் குளத்தில் குளிக்கும் காட்சிகளும் வெளியாகி இருக்கின்றன. கண்ணீர்ப்புகைக் குண்டு வீச்சால் காயமடைந்த பலர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் காட்சிகளை காண முடிகிறது. அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ தற்போது எங்கிருக்கிறார் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. Facebook பதிவை கடந்து செல்ல, 1 தகவல் இல்லை மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. Facebook பதிவின் முடிவு, 1 நிலைமை தொடர்பில் கலந்துரையாடி விரைவான தீர்மானத்தை எடுப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் நாடாளுமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் இல்லாத சூழல் ஆகியவற்றைத் தொடர்ந்து அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. இன்று அரசுக்கு எதிரான மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள், விவசாய அமைப்புகள் போன்றவை இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்திருந்தன. நேற்று முதலே நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர் அமைப்பினர் தலைநகர் கொழும்புவை நோக்கி வந்தவண்ணம் இருக்கின்றனர். இன்று காலையிலும் ஏராளமான வாகனங்களில் மக்கள் கொழும்பு நகருக்குள் வருவதைக் காண முடிந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடந்துவரும் காலி மைதானத்துக்கு வெளியேயும் ஏராளமான போராட்டக்காரர்கள் திரண்டுள்ளனர். https://www.bbc.com/tamil/sri-lanka-62104386
  9. ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக்கொலை: பாதுகாப்பான நாட்டில் குற்றம் நடந்தது எப்படி? ரூபர்ட் விங்ஃபீல்ட் – ஹேய்ஸ் பிபிசி நியூஸ், நாரா 8 ஜூலை 2022, 11:16 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே இன்று காலை மர்ம நபர் ஒருவரால் சுடப்பட்டு உயிரிழந்தார். இந்த செய்தி வந்ததிலிருந்து, எனது நண்பர்கள் எனக்கு தெரிந்தவர்கள் எல்லாம் மீண்டும் மீண்டும் ஒரே கேள்வியைதான் கேட்கின்றனர். இம்மாதிரியான ஒரு நிகழ்வு ஜப்பானில் எப்படி நடந்தது என்று? எனக்கும் அதே உணர்வுதான். இங்கு வாழ்பவராக நீங்கள் இருந்தால் மிக மோசமான குற்றங்கள் குறித்து எல்லாம் நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ஆனால் இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் குறித்த விவரம் வெளியானபோது எனக்கு மேலும் அதிர்ச்சியாக இருந்தது. ஷின்சோ அபே ஜப்பானின் முன்னாள் பிரதமர்தான், ஆனால் ஜப்பானின் புகழ் பெற்ற அரசியல் தலைவர் அவர். நீண்ட நாட்களுக்கு பிரதமராக இருந்தவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. கிட்டதட்ட 30 ஆண்டுகள் ஜப்பானின் புகழ்பெற்ற அரசியல் தலைவராக திகழ்ந்தவர் அவர். YouTube பதிவை கடந்து செல்ல, 1 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம் YouTube பதிவின் முடிவு, 1 அப்படியிருக்கும்போது அபேவை யார் கொல்ல நினைத்திருப்பார்கள்? அதுவும் ஏன்? இதேபோன்றதொரு மோசமான அரசியல் வன்முறை குறித்து நினைவுகூர நான் விரும்புகிறேன். உடனே என் நினைவுக்கு வருவது 1986ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து பிரதமர் ஓலஃப் பால்மே சுடப்பட்ட நிகழ்வுதான். ஜப்பானில் இருப்பவர்கள், மோசமான வன்முறைகள் குறித்தோ அல்லது குற்றங்கள் குறித்தோ யோசிக்க வேண்டியதில்லை என்று சொன்னது மிகைப்படுத்தல் அல்ல. ஆம். ஜப்பானில்தான் புகழ்பெற்ற யாசுகா என்ற வன்முறை கும்பல் உள்ளது. ஆனால் அவர்களுக்கும் பொதுமக்களுக்கும் எந்த தொடர்பும் ஏற்படாது. ஒருங்கிணைக்கப்பட்ட குற்றச் செயலில் ஈடுபடும் யாசுகாவினர் கூட துப்பாக்கியை பயன்படுத்த யோசிப்பர். ஏனென்றால் சட்டவிரோதமாக நீங்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்காக நீங்கள் செலுத்தும் அபராதம் மிகப் பெரியதாக இருக்கும். மர்ம நபரால் சுடப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழந்தார் ஜப்பான் புதிய பிரதமர் யோஷீஹிடே சுகா யார்? - 10 முக்கிய தகவல்கள் ஜப்பானில் துப்பாக்கி வைத்திருப்பது என்பது மிக கடினம். துப்பாக்கி வைத்திருக்க வேண்டும் என்றால், குற்றவியல் வழக்குகள் ஏதும் இருக்கக் கூடாது, கட்டாய பயிற்சி பெற்றிருக்க வேண்டும், மனநிலை சோதனையில் ஈடுப்படுத்தப்படுவீர்கள், மேலும் காவல்துறையினர் மற்றும் உங்கள் அக்கம்பக்கத்தினரிடம் எல்லாம் மிக தீவிரமான விசாரணைகள் நடைபெறும். அதேபோல துப்பாக்கி குற்றங்கள் இங்கு நடைபெறுவதும் இல்லை. ஒரு வருடத்திற்கு 10க்கும் குறைவான துப்பாக்கி தொடர்பான மரணங்களே இங்கு நடைபெறும். 2017ஆம் ஆண்டில் அது வெறும் மூன்றாக இருந்தது. சரி குற்றத்தில் ஈடுபட்டது யார்? அவருக்கு எங்கிருந்து துப்பாக்கி வந்திருக்கும்? அபேவை சுட்டதாக கைது செய்யப்பட்ட 41 வயது நபர், நாட்டின் முன்னாள் தற்காப்பு படை வீரர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தற்காப்புப் படை ராணுவத்திற்கு நிகரானது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஷின்சோ அபேவைவை சுட்டுக்கொன்றவராக கருதப்படும் இந்த நபரை சம்பவ இடத்திலேயே காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். சற்று உற்று நோக்கினால் அவர் கடற்படையில் வெறும் மூன்று ஆண்டுகள் மட்டுமே இருந்துள்ளார். அதேபோல அவர் பயன்படுத்திய துப்பாக்கியும் வித்தியாசமாக உள்ளது. துப்பாக்கிச் சுடும் சம்பவம் நடைபெற்ற பின் பகிரப்பட்ட புகைப்படத்தில் துப்பாக்கி கீழே இருப்பதை பார்க்க முடிந்தது. அதில் அது வீட்டில் செய்யப்பட்ட துப்பாக்கியை போல உள்ளது. அது ஏதோ இணையதளத்தில் பார்த்து செய்யப்பட்ட துப்பாக்கியை போல இருந்தது. சரி. இது திட்டமிட்ட ஒரு அரசியல் தாக்குதலா? அல்லது புகழ்பெற்ற ஒரு நபரை சுட்டு தானும் பிரபலமாக வேண்டும் என்ற மோசமான ஆசையா? என்ன காரணம் என நமக்கு இதுவரை தெரியாது. ஜப்பானில் இதற்கு முன்பும் அரசியல் கொலைகள் நடந்துள்ளன. 1960ஆம் ஆண்டில் ஜப்பானின் சோஷியலிஸ்ட் கட்சியை சேர்ந்த இனேஜிரோ ஆசானுமா வலதுசாரி நபர் ஒருவரால் சாமுராய் வாலால் வயிற்றில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். ஜப்பானில் தீவிர வலதுசாரி நபர்கள் இன்றும் உள்ளனர். இருப்பினும் வலதுசாரி தேசியவாதியான அபே ஒரு தாக்குதல் இலக்காக இருக்க வாய்ப்பில்லை. கடந்த சில வருடங்களாக வேறு சில குற்றங்கள் இங்கு அதிகரித்து வருவதை நம்மால் காண முடிகிறது. தனிமையில் இருக்கும் ஒரு ஆண் பிறரிடம் வன்மத்தை வளர்த்து அதனால் ஏற்படும் குற்றம். 2019ஆம் ஆண்டு க்யூடூ என்னும் புகழ்பெற்ற அனிமேஷன் ஸ்டூடியோ அமைந்துள்ள கட்டடம் ஒன்றிற்கு ஒருவர் தீ வைத்ததில் 36 பேர் உயிரிழந்தனர். தனது வேலைகளை அந்த ஸ்டுடியோ திருடிவிட்டதால் அதன் மீது கோபமாக இருந்ததாகவும் எனவே அந்த குற்றத்தில் ஈடுபட்டதாகவும் அந்த நபர் காவல்துறையிடம் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த சம்பவம் ஒட்டுமொத்த ஜப்பான் மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது இதேபோன்று 2008ஆம் ஆண்டு மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர், டோக்யோவின் அகிஹாபாரா மாவட்டத்தில் உள்ள கடைவீதியில் ட்ரக் ஒன்றை ஓட்டிச் சென்றார். பின் அங்கிருந்து வெளியேறி அங்குள்ளவர்களை கத்தியால் தாக்கினார். இதில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு முன்பு இணையத்தில், "அகிஹபாராவில் உள்ள மக்களை நான் கொல்லுவேன். எனக்கு நண்பர்கள் யாரும் இல்லை, நான் அழகாக இல்லை என்பதால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறேன். நான் குப்பையைக் காட்டிலும் கேவலமாக மதிக்கப்படுகிறேன்" என்ற செய்தியை அந்த இளைஞர் பதிவிட்டிருந்தார். அபேவின் கொலை இதில் எந்த காரணத்திற்காக நடைபெற்றது என்று தெரியவில்லை. ஆனால் இந்த சம்பவம் ஜப்பானை நிச்சயம் மாற்றிவிடும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஜப்பான் பாதுகாப்பான ஒரு நாடாக இருந்தாலும், இங்கு இறுக்கமான பாதுகாப்பு நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதில்லை. தேர்தல் பிரசாரங்களின் போது அரசியல் தலைவர்கள் கடை வீதிகளில் உள்ள மக்களிடம் கைக் குலுக்கி சகஜமாக பேசுவார்கள். சாலைகளில் நின்று உரையாற்றுவார்கள். இதே காரணத்தால்தான் அபேவை துப்பாக்கிதாரியும் நெருங்கி தாக்க முடிந்தது. எனவே இன்றைய சம்பவத்திற்கு இந்த சூழ்நிலை நிச்சயமாக மாறிவிடும். https://www.bbc.com/tamil/global-62095013 கனடிய நண்பரின் தொலைபேசி இயங்கவில்லை என குழம்பி இருந்தேன். உங்கள் தகவலால் தெளிவு பெற்றேன். நன்றி கபிதன்.
  10. குஜராத்தின் கேடா மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் புதுமை சிந்தனை மூலம் தங்களது வயல்களிலிருந்து இரட்டை லாபம் சம்பாதித்து வருகின்றனர்.
  11. போரிஸ் ஜான்சன் பதவி விலகல்: அடுத்த பிரிட்டன் பிரதமர் யார்? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், பதவி விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அடுத்த பிரதமர் மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இனி கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன், இறுதி செய்யப்பட்ட இரண்டு வேட்பாளர்கள் தலைமைப் பொறுப்புக்கு போட்டியிடுவர். அவர்களிலிருந்து ஒரு தலைவர் உருவாவார். ஆனால், யார் அந்த இருவர்? ரிஷி சுனக் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக இவர் ஆவதற்கான எல்லா சாத்தியங்களும் உண்டு என்று முன்பே சொல்லப்பட்டது. ஆனால், சில மாதங்களுக்கு முன்பு, ஊரடங்கு விதிகளை மீறியதற்காக இவர் அபராதம் செலுத்தினார். அதற்கு முன்னதாக, இவரது மனைவியின் வரி விவகாரங்கள் தொடர்பான பிரச்னைகளும் எழுந்ததையடுத்து இவரது நன்மதிப்பு குறைந்தது. நார்த் யோர்க்-ஷைர் தொகுதியிலிருந்து 2015ஆம் ஆண்டுதான் இவர், நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வானார். அதற்கு முன்னதாக பொது வருவாயை கையாளும் அரசாங்க கருவூல அதிகாரியாகவும் இவர் பணியாற்றினார். மேலும், கொரோனா தொற்று பொதுமுடக்க காலத்தில் ஆற்றிய பணிகளால் இவர் பிரபலமானார். பிரிட்டன் அமைச்சர் சஜித் ஜாவித்துடன் இணைந்து, தானும் பதவி விலகிய இவரது முடிவைத் தொடர்ந்தே மற்ற அமைச்சர்களின் பதவி விலகலும் நடந்தது அதன் விளைவாகவே தற்போது போரிஸ் ஜான்சன் பதவி விலகலை நோக்கித் தள்ளப்பட்டிருக்கிறார். லீஸ் ட்ரஸ் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, லீஸ் ட்ரஸ் போரிஸ் ஜான்சனின் சுகாதாரச் செயலர் வெளியேறிய சமயத்தில், போரிஸுக்கு தன்ஆதரவை அளித்ததன் மூலம் கட்சி விசுவாசிகளிடையே தன் நிலையை உயர்த்திக்கொண்டவர் லீஸ் ட்ரஸ். பிரிட்டனின் வெளியுறவு அலுவலகத்துக்கு தலைமை தாங்கிய இரண்டாவது பெண்மணியான இவர், பிரிட்டிஷ்-இரானிய எழுத்தாளர் `நசானின் ஜகாரி-ராட்க்ளிஃப்` இன் விடுதலைக்காகவும், ரஷ்யா மீது விதித்த தடைகளுக்காகவும் பெரிதும் புகழ் பெற்றவர். 2010ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக, சௌத் வெஸ்ட் நார்ஃபோக் தொகுதியிலிருந்து இவர் தேர்வானார். பொருளாதாரம், வர்த்தகம் தொடர்பாக இவர் வெளியிடும் சுதந்திரமான கருத்துகளுக்காக கன்சர்வேட்டிவ் கட்சியினரிடையே பிரபலமாக அறியப்படுகிறார். சஜித் ஜாவித் பட மூலாதாரம்,REUTERS ப்ராம்ஸ்க்ரோவ் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான இவர்தான், போரிஸ் ஜான்சனுக்கு எதிராக முதலில் அடியெடுத்து வைத்தவர். ஒருமைப்பாட்டுக்கான அவசியத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்த இவர், தனது பதவி விலகலின்போது, "பிரச்னை மேலிடத்தில் இருந்து தொடங்குகிறது" என்று பேசியிருந்தார். 2019ஆம் ஆண்டு தலைமைப் பொறுப்புக்காக முன்னிறுத்தப்பட்ட இவர், அப்போது நான்காம் இடத்தை பெற்றிருந்தார். நாட்டில் அதிகரிக்கும் பணவீக்கம் மற்றும் தேசிய கடன்கள் குறித்தும் இவர் தொடர்ந்து எச்சரித்து வந்தார். பாகிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்து வந்த முதல் தலைமுறை குடும்பத்தில் பிறந்த சஜித் ஜாவித்தின் தந்தை பேருந்து நடத்துநராக இருந்தவர். இப்படியான எளிய பின்னணியில் இருந்து வந்த இவர், 2010ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகும் முன்பு ஒரு வெற்றிகரமான தொழில் வாழ்வைக் கொண்டவராகவும் இருந்தார். ஜெர்மி ஹண்ட் பட மூலாதாரம்,UK PARLIAMENT 2019ஆம் ஆண்டு நடந்த தலைவர் தேர்தலின்போது, போரிஸ் ஜான்சனுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர். முன்னாள் வெளியுறவு செயலாராகவும் இருந்த இவருக்கு வெஸ்ட்மின்ஸ்டரில் இருந்த செல்வாக்கு அப்படியே நீடிக்கிறது. (வெஸ்ட்மின்ஸ்டர்: பிரிட்டன் நாடாளுமன்றத்தை குறிப்பதற்காக பயன்படுத்தப்படும் சொல்) கொரோனா பொது முடக்கத்தின்போது, பொது சுகதாரக் குழு ஒன்றின் தலைமையாக இருந்த இவர், அரசின் கொள்கைகளையே விமர்சித்தார். ஒரு அட்மிரலின் மகனான இவர், ஹாட்கோர்ஸ் என்ற இணையதளத்தையும் நடத்தி வந்தார். இது மாணவர்களையும் கல்வி நிறுவனங்களையும் இணைக்கும் விதமான இணையதளமாகும். 2005ஆம் ஆண்டு முதல், சௌத் வெஸ்ட் சர்ரே தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வரும் இவர், 2010அம் ஆண்டு அரசின் கலாசார செயலராகவும் சுகாதரத்துறையின் தலைமையாகவும் இருந்தார். மைக்கேல் கோவ் பட மூலாதாரம்,PA MEDIA 2019ஆம் ஆண்டு நடந்த தலைவர் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்தவர் இவர். ஆனால், ஐரோப்பிய யூனியன் வாக்கெடுப்பை முன்னிட்டு 2016ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தலைமைக்கான தேர்தலின்போது அதிமுக்கியத்துவம் வாய்ந்தவராக இவர் பார்க்கப்பட்டார். போரிஸ் ஜான்சனுக்கான தனது ஆதரவை விலக்கிக்கொண்ட போது, "ஜான்சனால் தலைமைத்துவத்தை தர முடியாது" என்றும் "எதிரே உள்ள சவால்களுக்கான குழுவை அமைக்க முடியாது" என்றும் பேசியவர் இவர். எல்லாவற்றுக்கும் மேலாக, பிபிசியின் முன்னாள் செய்தியாளர் மற்றும் டைம்ஸ் நாளிதழின் கட்டுரையாளரான இவர், அமைச்சரவையின் நீண்ட-கால உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2010ஆம் ஆண்டு கல்வி செயலராக பொறுப்பேற்ற இவர், அதைத்தொடர்ந்து சுற்றுச்சூழல் செயலாகவும் நீதி செயலராகவும் பணியாற்றியுள்ளார். நாடிம் ஸகாவி பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, நாடிம் ஸகாவி கொரோனா பேரிடர்க்காலத்தில் தடுப்பூசிகள் துறை அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டபோது தான் ஆற்றிய பணிகளால், தன் செல்வாக்கை பெருக்கிக்கொண்டவர். "நான் இதுவரை செய்ததிலேயே மிக முக்கியமான பணி இது" என்று அப்போது பேசினார். அதன் மூலம், அடுத்த கேபினட்டில் கல்வி செயலராக பதவி உயர்வும் பெற்றார். அதைத்தொடர்ந்து, ரிஷி சுனக் ராஜிநாமாவுக்குப் பின் கருவூல பொறுப்பும் இவருக்கு வழங்கப்பட்டது. ஆனால், அடுத்த 24 மணி நேரத்துக்கு பிறகு, தானும் போய் வருவதாக, போரிஸ் ஜான்சனிடம் விடை கூறிவிட்டு புறப்பட்டு விட்டார். 1967ஆம் ஆண்டு இராக்கில் பிறந்த ஸகாவியின் குடும்பம், சதாம் உசேன் ஆட்சி அமைத்தபோது, நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர் வேதிப்பொறியியல் படித்த இவர், யூ கவ் (YouGov) என்ற ஆன்லைன் வாக்கெடுப்பு நிறுவனத்தின் மூலம் சம்பாதித்து வந்தார். முன்னதாக இவர் பொம்மை வியாபாரமும் செய்து வந்தார். பென்னி மோர்டண்ட் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, பென்னி மோர்டண்ட் மேஜிக் ஷோக்கள் நடத்தும் ஒரு வித்தைக்காரரின் உதவியாளராக இருந்த இவர், அசாதரணமானவற்றை நிகழ்த்திக் காட்டுவதில் சிறந்தவர் என்று பெயர் பெற்றவர். ஏற்கனவே அப்படியொரு அதிசயத்தை நிகழ்த்தியும் காட்டியுள்ளார் பென்னி. அதாவதும் 2019ஆம் ஆண்டு பிரிட்டனின் முதல் பெண் பாதுகாப்பு செயலராக பொறுப்பேற்றார். வெஸ்ட்மின்ஸ்டருக்கு வெளியே, இவரது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக இவர் பெரிதும் அறியப்படுகிறார். போர்ட்ஸ்மௌத் தொகுதியின் உறுப்பினரான இவர், கன்சர்வேட்டிவ் கட்சியின் முன்னாள் இளைஞரணித் தலைவராகவும் இருந்தவர். டாம் டுகெந்தாட் பட மூலாதாரம்,GETTY IMAGES போரிஸ் ஜான்சனின் பாணியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பாணியை உடையவர் இவர். இனிவரும் காலங்களில், கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆற்றல்மிக்க தலைவராக இவர் இருப்பார் என்று, இவர் 2015 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினரான சமயம் முதலே பேசப்பட்டு வந்தது. நீங்கள் பிரதமர் ஆக விரும்புகிறீர்களா என்று 2017ஆம் ஆண்டு இவரிடம் கேட்கப்பட்டபோது, "கண்டிப்பாக, டிக்கட்டை வாங்க முடிந்த என்னால், ஏன் லாட்டரியை வெல்ல நான் நினைக்கக் கூடாது? என்று பதிலளித்தார். பென் வாலேஸ் பட மூலாதாரம்,PA MEDIA யுக்ரேனில் நடந்த ரஷ்ய படையெடுப்பின்போது பிரிட்டன் கீயவுக்கு உதவி செய்ய வேண்டும் என்று எடுக்கப்பட்ட விரைவான முடிவின் பின்னணியில் இருந்ததால் வெகுவாக கவனம் பெற்றவர் இவர். பாதுகாப்பு செயலரான இவர், முன்னாள் ராணுவ வீரராகவும் இருந்தார். கெர்மனி, சைப்ரிஸ், வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளில் பணியாற்றிய இவர், பிரிட்டிஷ் வீரர்களுக்கு எதிரான அயர்லாந்து குடியரசு ராணுவத்தின் வெடிகுண்டு முயற்சியை முறியடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இளவரசி டயானாவின் உடலை பாரிஸிலிருந்து மீட்கும் பணியில் ஈடுபட்ட முக்கியமான ராணுவ வீரரும் இவர் ஆவார். https://www.bbc.com/tamil/global-62082305
  12. நியமன எம்பிக்களாக தென்னிந்தியர்களை தேர்வு செய்த பாஜக அரசு - 'மிஷன் சௌத் இந்தியா'வின் ஒரு பகுதியா? நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@NARENDRAMODI/TWITTER தென்னிந்தியாவின் நான்கு பிரபலமான ஆளுமைகள், குடியரசு தலைவரின் அதிகாரத்திற்கு உட்பட்டு நியமிக்கப்படும் மாநிலங்களவை உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவருமான இளையராஜா, விளையாட்டுத்துறையில் சாதனை படைத்த முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா (கேரளா), பிரபல தெலுங்குப்பட கதையாசிரியரும் இயக்குநருமான விஜயேந்திர பிரசாத் (ஆந்திர பிரதேசம்), கர்நாடகாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வீரேந்திர ஹெகடே ஆகியோரும் நியமன உறுப்பினர்களாக தேர்வாகின்றனர். இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே, இந்திய பிரதமர் நரேந்திர மோதி, நால்வருக்கும் தன் ட்விட்டர் பக்கத்தில் தனித்தனியாக வாழ்த்துகளை பகிர்ந்திருந்தார். அவற்றில், நான்கு பேருடைய தனிச்சிறப்புகளை குறிப்பிட்ட மோதி, இளையராஜா குறித்த பதிவில், "எளிய பின்புலத்திலிருந்து உயர்ந்து எட்ட இயலா சாதனைகளை படைத்தவர்" என குறிப்பிட்டிருந்தார். Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 நியமன எம்.பிக்களாக அறிவிக்கப்பட்டிருக்கும் நால்வரும் தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பது அவர்களின் திறமைக்குக் கிடைத்த அங்கீகாரமா அல்லது அம்மாநிலங்களில் பாஜகவை வலுப்படுத்த அக்கட்சி கையிலெடுத்த உத்தியா என்ற கேள்வி பல்வேறு தரப்புகளிலிருந்தும் எழுந்துள்ளது. கர்நாடகா தவிர்த்த மற்ற 4 தென்னிந்திய மாநிலங்களில் பாஜக தன் இருப்பை விரிவுபடுத்தவும் ஆட்சியில் அமரவும் பல்வேறு உத்திகளை கையாண்டு வரும் நிலையில், தென்மாநில ஆளுமைகளை முன்னிறுத்துவது அதில் ஒரு பகுதியா என்றும் கேள்வி எழுகிறது. இளையராஜா எம்.பி ஆகிறார் - சாதனை, சர்ச்சைகளுடன் 50 வருட திரைப்பயணம் திருமாவளவன்: "இளையராஜா பாவம், அவருக்கு என்ன நெருக்கடியோ?" இளையராஜா சர்ச்சை: அம்பேத்கருடன் நரேந்திர மோதியை ஒப்பிட்டு அவர் எழுதியது என்ன? பாஜக தேசிய செயற்குழு கூட்டம் ஜூலை 2, 3 ஆகிய தேதிகளில் தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெற்று முடிந்த சில தினங்களில் நியமன எம்.பிக்கள் குறித்த அறிவிப்பு வந்திருக்கிறது. இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் என, பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், இந்திய அமைச்சர்கள், பாஜக மூத்த நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். தேசிய செயற்குழு கூட்டத்தில் ஜூலை 3 அன்று உரையாற்றிய பிரதமர் மோதி, தெலங்கானா மாநிலத்தை முன்னிறுத்தி பேசினார். மாநிலத்தின் வளர்ச்சியை குறிப்பிட்டு பேசிய அவர், "சப்கா சாத் சப்கா விகாஸ் (அனைவரும் இணைந்து அனைவருக்குமான முன்னேற்றம்) என்ற கொள்கை அடிப்படையில் தெலங்கானாவின் வளர்ச்சிக்காக பாஜக பணியாற்றுவதாக" குறிப்பிட்டார். மேலும், 'வாரிசு அரசியல்' குறித்தும் விமர்சனம் செய்திருந்தார். தென் மாநிலங்களுக்கு தொடர்ச்சியாக பயணம் செய்யும் மோதி, 'வாரிசு அரசியல்' விமர்சனத்தை முன்வைத்துவருகிறார். 2023ஆம் ஆண்டில் தெலங்கானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜக முன்கூட்டியே தேர்தல் வேலைகளைத் தொடங்கியுள்ளதாக, அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். பட மூலாதாரம்,@NARENDRAMODI/TWITTER "பாஜகவின் திட்டம் தெளிவாக இருக்கிறது" தேசிய செயற்குழு கூட்டத்தை ஐதராபாத்தில் நடத்தியது, 4 நியமன எம்.பிக்களை தென்மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுத்தது அனைத்தும், பாஜகவின் பரந்த உத்தியின் ஒரு பகுதியே என, மூத்த பத்திரிகையாளர் பல்லவி கோஷ் தெரிவிக்கிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தன்னுடைய கணக்கை இன்னும் தொடங்காத, அமைப்பு ரீதியாக பலமில்லாத தென்மாநிலங்களில் கவனம் செலுத்துவதுதான் 2024-க்கான (நாடாளுமன்ற தேர்தலுக்கான) பாஜகவின் திட்டம் என்பது தெளிவாக இருக்கிறது. தற்போது பிரதமர் மோதியின் உத்தி எளிதானதாக இருக்கிறது. ஹைதராபாத்தில் நடைபெற்ற தேசிய செயற்குழு கூட்டத்தில் 'தென்மாநிலங்களை நோக்கிச் செல்லுங்கள்" என்பதுதான் பிரதமர் மோதியின் குரலாக இருந்தது. அதனால் தான் அக்கூட்டம் ஐதராபாத்தில் நடைபெற்றது. தென்மாநிலங்கள் எப்போதும் பாஜகவுக்குக் கடினமானதாகவே இருந்திருக்கிறது. தென்னிந்திய மாநிலங்கள் பாஜகவுக்கு முக்கியம் என்பதையே இந்த நியமன எம்.பிக்களின் தேர்வு காட்டுகிறது. பிரதமர் மோதி தொடர்ச்சியாக தென்னிந்திய மாநிலங்களுக்குப் பயணம் செய்கிறார், திட்டங்களை தொடங்கிவைக்கிறார். 2024ஆம் ஆண்டுக்கான பாஜகவின் பரந்த உத்தியின் சமீபத்திய உதாரணம்தான் தென்மாநிலங்களிலிருந்து எம்.பிக்களை நியமித்தது" என்றார். "பிம்ப அரசியல் செய்கிறது பாஜக" தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன், "தலித் சமூகத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவராக இருக்கிறார். பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்திருக்கின்றனர். பிறபடுத்தப்பட்டோர் சமூகத்தைச் சேர்ந்த மோதி பிரதமராக இருக்கிறார். இப்படி 'பிம்ப' அரசியலைத்தான் பாஜக செய்கிறது. நியமன எம்.பிக்கள் தேர்வில் தென்மாநிலங்களுக்கு அளித்திருக்கும் முக்கியத்துவம், அடுத்தத் தேர்தலுக்கான வேலைகளை பாஜக இப்போதே தொடங்கிவிட்டதாகக் கருதலாம்" என தெரிவித்தார். தமிழ்நாட்டில் நெல்லை, சிவகங்கை உள்ளிட்ட 4 மக்களவை தொகுதிக்கான பாஜக பொறுப்பாளராக, இந்திய நெடுஞ்சாலைத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் நியமிக்கப்பட்டிருக்கிறார். "2023 டிசம்பர் மாதத்தில் தெலங்கானாவில் தேர்தல் நடத்த வேண்டும். ஆனால், இப்போதே தொடர் வேலைகளை பாஜகவினர் ஆரம்பித்துவிட்டனர். தமிழ்நாட்டிலும் 4 மக்களவை தொகுதிகளுக்கு பொறுப்பாளராக வி.கே.சிங்கை நியமித்திருப்பதும் முன்கூட்டிய வேலையாகத்தான் இருக்கிறது" என்றார் ஆர்.கே.ராதாகிருஷ்ணன். மேலும், "தமிழ்நாட்டில் திமுக - அதிமுக என்ற அளவில்தான் இன்னும் அரசியல் விவாதம் தொடர்கிறது. ஆனால், அதிமுகவின் இடம் வெற்றிடமானால் அந்த இடத்திற்கு பாஜக வரும்" என்றார், அவர். தென்னிந்திய மாநிலங்களிலிருந்து நியமன எம்.பிக்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பது பாஜகவின் தேர்தல் உத்தியா என, பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்புவிடம் பிபிசி தமிழ் கேள்வி எழுப்பியது. பட மூலாதாரம்,@KHUSHSUNDAR/TWITTER இதற்கு பதில் அளித்த அவர், "பாஜகவின் எல்லா நடவடிக்கைகளிலும் ஏன் அர்த்தம் கற்பிக்கப்படுகிறது? தகுதியானவர்களுக்குத்தானே வழங்கப்படுகின்றது. உத்தியாக ஏன் பார்க்க வேண்டும்? நால்வருக்கும் கொடுக்கக்கூடாதா? திறமையின் அடிப்படையில் தான் வழங்கியிருக்கிறோம். பத்ம விருதுகளும் அவ்வாறே வழங்கப்படுகின்றது. 'பிம்ப' அரசியல் செய்ய வேண்டும் என்ற அவசியம் பாஜகவுக்கு இல்லை. நாட்டிலேயே பெரிய கட்சியாக பாஜக இருக்கிறது. திறமையானவர்களுக்கு தங்களால் தகுந்த அங்கீகாரம் வழங்க முடியவில்லை என்கிற ஆதங்கத்தில்தான் எதிர்க்கட்சிகள் பேசுகின்றன" என தெரிவித்தார். https://www.bbc.com/tamil/india-62075668
  13. இது போல சைக்கிள் என்றால் இலங்கை பூரா சுற்றலாம் என நினைக்கிறன். 90km வேகம் போகுமாம், இலங்கையின் அங்கீகரிக்கப்பட்ட அதிகூடிய வேகம் 70km. கைதடி போக 1 லீற்றர் பெற்றோல் தேடி திரிகிறார் நண்பர். தீப்பிடிக்காது, கசிவுகளை ஏற்படுத்தாது என உற்பத்தியாளரால் உறுதி அளிக்கப்பட்ட பற்றி வகைகளுக்கு அனுமதி உண்டு என கேள்விப்பட்டுள்ளேன்.
  14. தமிழிசை சௌந்தரராஜன்: சிதம்பரம் நடராஜர் கோயில் சர்ச்சை தொடர்பாக விளக்கம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,FACEBOOK/DRTAMILISAIGUV "காலையில் முழுமன நிறைவோடு சிதம்பரம் நடராஜரின் ஆனி திருமஞ்சனம் விழாவில் தரிசனம் செய்துவிட்டு எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று பொதுநல வேண்டுதலுடன் கோயிலின் வெளியே வந்தால் வழக்கமாக சில வதந்திகளும், புரளிகளும் வருகிறது. அந்த புரளிகளை நான் புரந்தள்ளுகிறேன்," என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சனம் தேரோட்ட விழாவிற்கு நேற்று காலை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சென்றிருந்தார். அவர் கோயில் வளாகத்தில் அமர்ந்திருந்த போது தீட்சிதர்கள் வேறு இடத்தில் அமரும்படி கூறி அவமதித்ததாக செய்திகள் பரவின. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த தமிழிசை என்னை வேறு இடத்தில் அமரும்படி கூறியது உண்மை தான் ஆனால் அவமதிப்பு செய்யவில்லை என்று விளக்கமளித்தார். சிதம்பரம் கோயில் தொடர்பாக ஆளுநரின் விளக்கத்திற்கு பிறகும் அந்த விவகாரம் தமிழிசை சிதம்பரம் கோயில் தீட்சிதர்களால் அவமதிக்கப்பட்டார் என்ற கோணத்தில் சமூக வலைத்தளத்தில் பேசு பொருளாக மாறியது. இதனிடையே இந்த நிகழ்வு குறித்து தமிழிசை மீண்டும் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், "நடராஜரும் நானும், இடையில் நாரதர்கள் வேண்டாம்," என்று குறிப்பிட்டுக் காட்டியுள்ளார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் அவமதிக்கப்பட்டாரா தமிழிசை சௌந்தரராஜன்? உபி: தெய்வ படங்கள் பேப்பரில் அசைவ பொட்டலம் கட்டிய ஓட்டல் உரிமையாளர் கைது அதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கோயில் நடந்த நடந்த சுவையான சம்பவம் என்று குறிப்பிட்டுள்ளார். "நேற்று அதிகாலை 5 மணிக்கு சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலில் வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் ஆனி திருமஞ்சனம் உற்சவத்தில் கலந்து கொண்டு இறைவனை தரிசனம் செய்வதற்காக சென்றேன். திருக்கோவில் நிர்வாகத்தினர் என்னை கோயிலில் வெளியே வந்து உள்ளே அழைத்துச் சென்று திருமஞ்சனம் நிகழ்வை காண்பதற்காக கோயிலில் ஒரு இடத்தில் அமரச் செய்தார்கள். பொதுமக்களுக்கு எந்தவொரு இடையூறு இல்லாமல் இருக்க வேண்டும் என்று என்னுடன் வந்த பாதுகாப்பு அதிகாரிகளை ஓரமாக அமர வேண்டும் என்று சொல்லி நானும் பொது மக்களின் தரிசனத்திற்கு இடையூறு இல்லாமல் ஓரமாக அமர்ந்து கொண்டு இறைவனை தரிசனம் செய்து கொண்டிருந்தேன். பட மூலாதாரம்,@DRTAMILISAIGUV/TWITTER மகிழ்ச்சியாக இறைவனை தரிசனம் செய்து கொண்டிருந்தேன். யாரும் எனக்கு இடையூறு செய்யவில்லை. நானும் யாருக்கும் இடையூறு செய்யவில்லை. தரிசனத்திற்கு இடையில் ஒருவர் என்னிடம் வந்து வேறு இடத்தில் அமர்ந்து கொள்கிறீர்களா? என்று கேட்டார். நான் அதற்கு அபிஷேகம் எனக்கு நன்றாக தெரிகிறது, நான் இங்கேயே அமர்ந்து கொள்கிறேன் என்று மட்டும்தான் கூறினேன். அதற்கு பின்பு அபிஷேகம் முடிந்தவுடன் சந்தனம், மாலை கொடுத்தார்கள். நானும் என்னருகில் அமர்ந்திருந்த பொதுமக்களிடம் பிரசாதத்தை பகிர்ந்து கொண்டேன். நிறைவாக இறைவனுக்கு சொர்ணாபிஷேகம் நடைபெற்றது. தங்க காசுகளால் நடைபெற்ற சொர்ணாபிஷேகத்தை மகிழ்ச்சியாக இறைவனை தரிசனம் செய்து கொண்டிருந்தேன். சொர்ணாபிஷேகம் நிறைவடைந்தவுடன் அப்போது தீட்சிதர் ஒருவர் எனக்கு இரண்டு லட்டுகளை கொடுத்தார். லட்டுகளை கொடுத்துவிட்டு தீட்சிதர் என்னிடம் இறைவனின் அருள் உங்களுக்கு முழுவதுமாக உள்ளது இதை உங்களிடம் சொல்வதற்கு மிக ஆனந்தமாக உள்ளது என்றார். எனக்கு ஒன்றுமே புரியாமல் அவரை பார்த்தேன். அப்போது அவர் கூறினார் லட்டு மடித்திருக்கும் இந்த காகிதத்தை பாருங்கள் என்று கூறினார். நானும் பிரித்து பார்த்தேன் அதில் என்னுடைய வண்ணப்படம் இடம்பெற்றிருந்த ஒரு செய்தித்தாளாக இருந்தது. கவர்னருக்கு லட்டு கொடுக்க வேண்டும் என்று ஒரு காகிதம் கொடுங்கள் என்று மற்றொரு தீட்சிதரிடம் தான் கேட்டதாகவும் அவர் கொடுத்த காகிதத்தில் என்னுடைய படம் இருந்ததாகவும் அப்போது தீட்சிதர் என்னிடம் கூறினார். ஆகையால் இந்த லட்டை உங்கள் படத்தோடு உங்களுக்கு தருகிறேன் என்றும் இது உங்களுக்கு நடராஜ பெருமான் அருளும் மானசீக ஆசிர்வாதமாக எனக்கு தோன்றியது என்றும் அவர் என்னிடம் கூறினார். இது ஒரு சுவையான அனுபவம்," என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன். https://www.bbc.com/tamil/india-62075680
  15. "தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டிய அவசியம் இல்லை" - இந்திய அமைச்சர் வி.கே.சிங் 6 மணி நேரங்களுக்கு முன்னர் (இந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இன்று (07/07/2022) வெளியான சில முக்கிய செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.) தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டிய அவசியம் இல்லை என இந்திய அமைச்சர் வி.கே.சிங் கூறியுள்ளதாக, 'தினத்தந்தி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. நெல்லை நாடாளுமன்ற தொகுதி பாஜக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாளையங்கோட்டையில் நேற்று (ஜூலை 6) நடைபெற்றது. இதில், அத்தொகுதி பாஜக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய அமைச்சர் வி.கே.சிங், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். இதைத்தொடர்ந்து, வி.கே.சிங் நிருபர்களிடம் கூறுகையில், "குடும்ப ஆட்சி போல் இல்லாமல் பிரதமர் மோதி மக்களுக்கான ஆட்சியை நடத்தி வருகிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை விரிவாக்கப் பணிக்கு வனத்துறை, நீர்வளத்துறை ஒப்புதல் பெறுவதுடன் பல்வேறு காரணங்களால் பணி நடைபெறாமல் உள்ளது. இதேபோல், சில இடங்களில் நெடுஞ்சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அந்த பணிகளை விரைந்து முடிக்க மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் பாஜக வளர்ச்சி அடைந்து வருகிறது. இருந்தாலும் ஆட்சி அமைப்பது மக்கள் கையில்தான் உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து ஆந்திரா பிரிக்கப்பட்டதுதான். ஆகையால், இனி தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க அவசியம் இல்லை. அதிமுகவில் நிலவுவது உட்கட்சி பிரச்னையாகும். இதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை" என தெரிவித்ததாக, அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/global-62073937
  16. சீனா பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது: வரலாற்றில் முதல்முறையாக கூட்டாக அறிவித்த பிரிட்டன் - அமெரிக்கா கோர்டன் கொரேரா பாதுகாப்பு நிருபர், பிபிசி 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,UK POOL VIA ITN பிரிட்டன் மற்றும் அமெரிக்க உளவு அமைப்புகளின் தலைவர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் கூட்டாக இணைந்து சீனாவின் அச்சுறுத்தல்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ இயக்குநர் கிறிஸ்டோஃபர் வ்ரே, "நம்முடைய பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு நீண்ட கால பெரும் அச்சுறுத்தலாக சீனா விளங்குகிறது" என்றும், சமீபத்திய தேர்தல் உள்ளிட்ட அரசியல் விவகாரங்களிலும் சீனா தலையிடுவதாகவும் தெரிவித்துள்ளார். அதேபோன்று, பிரிட்டனின் உளவு அமைப்பான எம்.ஐ. 5-இன் தலைவர் கென் மெக்கலம், கடந்த 3 ஆண்டுகளில் சீனாவின் செயல்பாடுகளுக்கு எதிரான பணிகளை தங்கள் உளவு அமைப்பு இருமடங்கு அதிகரித்துள்ளதாகவும், மேலும் இரு மடங்கு அதிகரிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். 2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகள் தொடர்பான விசாரணைகளை எம்.ஐ. 5 ஏழு மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சீனாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை சம்பவங்கள் - கேள்வி எழுப்பும் மக்கள் சீனா: வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உலகின் மிகப்பெரிய சந்தையை விட்டு வெளியேறுவது ஏன்? - ஐந்து காரணங்கள் இந்தியா - சீனா எல்லை விவகாரம்: அமெரிக்கா மீதான சீனாவின் கோபம்; இந்தியாவின் நிலைப்பாடு என்ன? தொழில்நுட்பத்தை திருடுவதற்கு தயாராவதாக சீனா மீது குற்றச்சாட்டு தைவானை சீனா வலுக்கட்டாயமாக கைப்பற்றினால், "இந்த உலகம் இதுவரை கண்டிராத மிக மோசமான தொழில் ரீதியான சீர்குலைவுகளை எதிர்கொள்ள நேரிடும்" என, எஃப்.பி.ஐ இயக்குநர் கிறிஸ்டோஃபர் வ்ரே எச்சரித்தார். அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் உளவு அமைப்புகளின் இயக்குநர்கள் இருவரும் முதன்முறையாக கூட்டாக தோன்றிய இந்த சந்திப்பு, லண்டனின் தேம்ஸ் ஹவுஸில் உள்ள எம்.ஐ. 5 தலைமையகத்தில் நடைபெற்றது. சீன கம்யூனிஸ்ட் கட்சியால் ஏற்படும் சவால்கள், "ஆட்டத்தின் போக்கை மாற்றுவதாக" மெக்கலம் தெரிவித்துள்ள நிலையில், அந்த சவால்கள் "மிகப்பெரும் அதிர்ச்சி அடையும் வகையிலானவை" என கிறிஸ்டோஃபர் வ்ரே தெரிவித்தார். பல்வேறு தொழில்களின் தலைமை செயல் இயக்குநர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் மூத்த ஆளுமைகள் அடங்கிய அந்தக் கூட்டத்தில், பல்வேறு கருவிகளைப் பயன்படுத்தி, சீன அரசாங்கம் "உங்களின் தொழில்நுட்பத்தைத் திருடுவதற்கு தயாராக உள்ளது" என வ்ரே தெரிவித்தார். "பெரும்பாலான தொழிலதிபர்கள் உணர்ந்ததைவிட மேற்கத்திய நாடுகளின் தொழில்களுக்கு சீனா கடும் அச்சுறுத்தலாக உள்ளதாக" என்று அவர் தெரிவித்தார். பில்லியன் கணக்கிலான டாலர்கள் மதிப்பீட்டில், ஒரு தசாப்தமாக செலவிட்டு உருவாக்கப்பட்ட மரபணு மாற்றப்பட்ட விதைகளை கிராமப்புற அமெரிக்காவில் சீன நிறுவனங்களுடன் தொடர்புடையோர் திருடுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். சைபர் தாக்குதல்கள் குறித்த எச்சரிக்கை மேலும், மற்ற எல்லா பெரிய நாடுகளையும்விட பெரிய ஹேக்கிங் திட்டம் மூலம், "ஏமாற்றுவதற்காகவும் பெரிதளவில் திருடுவதற்காகவும்" சீனா சைபர் உளவு வேலையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். சைபர் தாக்குதல்கள் குறித்த உளவுத் தகவல்கள் 37 நாடுகளுடன் பகிரப்பட்டுள்ளதாகவும், மே மாதத்தில் வான்வெளிக்கு எதிரான தாக்குதல் சீர்குலைந்ததாகவும் எம்.ஐ. 5இன் தலைவர் கென் மெக்கலம் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES மேலும், சீனாவுடன் தொடர்புடைய இத்தகைய பல்வேறு உதாரணங்களை அவர் சுட்டிக்காட்டினார். அதில், பிரிட்டன் விமானப் போக்குவரத்து நிபுணர் ஒருவருக்கு இணையம் வாயிலாக கவர்ச்சிகரமான வேலைவாய்ப்பு வழங்கப்படுவதாக கூறப்பட்டதும் ஒன்று. இருமுறை சீனாவுக்கு சென்ற அந்நபர் "நன்றாக உபசரிக்கப்பட்ட" பின்னர், அவரிடம் சீன உளவுத்துறை அதிகாரிகளுக்கு முன்னோடியாக இருந்த ஒரு நிறுவனத்தால் ராணுவ விமானம் பற்றிய தொழில்நுட்பத் தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன. "அப்போதுதான் இந்த விவகாரத்திற்குள் நாங்கள் நுழைந்தோம்," என்கிறார் மெக்கலம். ஒரு பொறியியல் நிறுவனத்தை சீன நிறுவனம் அணுகியதாகவும், இரு நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தம் நிறுத்தப்படுவதற்கு முன்பு, அதன் தொழில்நுட்பத்தை சீன நிறுவனம் எடுக்க இது வழிவகுத்ததாகவும் அவர் கூறினார். "அரசியலில் நேரடி தலையீடு" அமெரிக்காவில் நடைபெற்ற செனட் தேர்தலில் சீன அரசாங்கம் நேரடியாக தலையிட்டதாக, எஃப்.பி.ஐ இயக்குநர் கிறிஸ்டோஃபர் வ்ரே தெரிவித்தார். யுக்ரேன் நெருக்கடியைத் தொடர்ந்து சீனா "எல்லா விதமான படிப்பினைகளையும்" பெறுகிறது என்று வ்ரே கூறினார். ரஷ்யா எதிர்கொண்டுள்ளது போன்ற தடைகளிலிருந்து தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள முயற்சிப்பதும் இதில் அடங்கும். சீனா தைவானில் படையெடுத்தால், ரஷ்யா - யுக்ரேன் நெருக்கடியால் இந்தாண்டு எதிர்கொண்ட பொருளாதார சீர்குலைவுளைவிட அதன் தாக்கம் பெரிதளவில் இருக்கும் என தெரிவித்துள்ள அவர், இதனால் சீனாவில் உள்ள மேற்கத்திய முதலீடுகள் "பணயக்கைதியாகி", விநியோக சங்கிலிகள் தடைபடும் என தெரிவித்தார். "தைவான் மீதான அவர்களின் ஆர்வம் எந்த வகையிலும் குறைந்துவிட்டது என்று நினைக்க எனக்கு எந்த காரணமும் இல்லை" என்று எஃப்.பி.ஐ இயக்குநர் கிறிஸ்டோஃபர் வ்ரே செய்தியாளர்களிடம் கூறினார். புதிய சட்டம் அச்சுறுத்தலை சமாளிக்க உதவும் என்று கூறிய எம்.ஐ. 5 இன் தலைவர், அனைத்துத் தரப்பும் இந்த அபாயங்களைப் பற்றி அதிகம் அறிந்திருப்பதை உறுதி செய்வதன் மூலம் பிரிட்டன் "கடினமான இலக்காக" மாற வேண்டும் என கூறினார். விசா நடைமுறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தம் சீன ராணுவத்துடன் தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பிரிட்டனை விட்டு வெளியேறுவதற்கு வழிவகுத்ததாக அவர் கூறினார். https://www.bbc.com/tamil/global-62075660
  17. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராஜிநாமா; பிரதமராக தொடருவார் 39 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து இன்று ராஜிநாமா செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பிரதமராக இன்னும் சில மாதங்களுக்கு தொடர்வார் என்றும் தெரிகிறது. கன்சர்வேடிவ் கட்சித் தலைமைக்கான தேர்தல் விரைவில் நடைபெறும். அக்டோபரில் நடைபெறவுள்ள கட்சி மாநாட்டுக்கு முன்னதாக புதிய பிரதமர் பதவிக்கு வருவார். போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் இருந்து 2 அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அண்மையில் பதவி விலகினர். இந்நிலையில், போரிஸ் ஜான்சன் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலக உள்ளார். முன்னதாக நாட்டை வழிநடத்தும் பொறுப்பில் உள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது தங்களுக்கு இனி நம்பிக்கை இல்லை என்று கூறி அந்நாட்டின் நிதியமைச்சர் பதவியில் இருந்து ரிஷி சுனக்கும் சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து சாஜித் ஜாவித்தும் செவ்வாய்க்கிழமை மாலையில் பதவி விலகியுள்ளனர். இதனால் போரிஸ் ஜான்சனுக்கு அரசியல் அழுத்தம் அதிகரித்தது. பிரிட்டன்: போரிஸ் அமைச்சரவையில் இருந்து ரிஷி சுனக், சாஜித் ஜாவித் விலகல் - என்ன நடந்தது? பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனாக்: "என் மனைவி அக்ஷதா மூர்த்தி வரி ஏய்ப்பு செய்யவில்லை" பதவி விலகல் முடிவை அறிவித்தது தொடர்பாக ரிஷி சுனக் கூறுகையில், அரசாங்கம் "சரியாக, திறமையாக மற்றும் தீவிரமாக" நடத்தப்படும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு," என்று தெரிவித்தார். இதே கருத்தை பிரதிபலித்த சாஜித் ஜாவித், "அரசாங்கம் தேசிய நலனுக்காக செயல்படவில்லை," என்று தெரிவித்தார். போரிஸ் அரசுக்கு இதுவரை வந்த சிக்கல்கள் போரிஸ் ஜான்சனின் அரசாங்கம் சமீபத்திய மாதங்களில் தொடர்ச்சியான சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. அது அவரது சொந்த கட்சி எம்பிக்கள் சிலரை, பிரதமரின் ராஜினாமாவைக் கோரத் தூண்டியது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா பெருந்தொற்று மிகவும் தீவிரமாக இருந்தபோது, பிரதமர் இல்லம் மற்றும் அதற்கு அருகே உள்ள பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட இடத்தில் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதில் பிரதமரின் பிறந்த நாள் விழாவும் அடங்கும். அந்த செயல்பாட்டுக்காக நாட்டின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சனுக்கே, கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாக லண்டன் போலீஸ் அபராதம் விதித்தது. அதன் மூலம் பிரிட்டனில் அரசாங்க விதியை மீறிய குற்றத்துக்காக அபராதம் விதிக்கப்பட்ட முதல் பிரதமரானார் போரிஸ் ஜான்சன். இது மட்டுமின்றி, சில கன்சர்வேட்டிவ் எம்.பி.க்கள், வரி உயர்வு நடவடிக்கை மற்றும் நாட்டில் அதிகரித்து வரும் மக்கள் செலவினத்தை கட்டுப்படுத்தும் அரசின் கொள்கையில் தெளிவில்லை என்று விமர்சித்து வந்தனர். https://www.bbc.com/tamil/global-62078343
  18. இலங்கை பொருளாதார நெருக்கடி: "மற்ற ஆசிய நாடுகளுக்கான பாடம்" - மகாதீர் மொஹம்மத் 50 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, மகாதீர் மொஹம்மத் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது மற்ற ஆசிய நாடுகளுக்கான எச்சரிக்கை மணி என மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மொஹம்மத் தெரிவித்துள்ளார். ஆசிய நாடுகள் பொறுப்பான நிதிக்கொள்கைகளைக் கையாள வேண்டும் என்றும், அவ்வாறு செயல்படவில்லை எனில் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிடியில் சிக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியும் அந்நாட்டின் கடன் சுமையும் ஆசிய நாடுகளுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், மகாதீர் மொஹம்மத் இது தொடர்பாக ஆசிய நாடுகளுக்கு அறிவுரை கூறியுள்ளார். 25 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டன. அப்போது மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு திடீரெனச் சரிந்தது. நாடு பொருளாதார ரீதியில் ஆட்டம் கண்ட நிலையில், சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார் மகாதீர். அவை பல்வேறு விவாதங்களையும் விமர்சனங்களையும் எழுப்பின. எனினும் நீண்டகால அடிப்படையில் பார்க்கும்போது தாம் மேற்கொண்ட நடவடிக்கைகளும் எடுத்த முடிவுகளும் நல்ல பலன்களை அளித்ததாக அவர் கூறுகிறார். "IMF பிடியில் சிக்கிவிட வேண்டாம்" பட மூலாதாரம்,GETTY IMAGES அந்நியச் செலாவணி அறவே இல்லாத நிலையில், தவிப்புக்கு ஆளாகி உள்ள இலங்கை, தனது வெளிநாட்டு கடன்களுக்கான தவணையைச் செலுத்த முடியாமல் உள்ளது. இதையடுத்து சர்வதேச நாணய நிதியத்தின் கடனை எதிர்பார்த்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இத்தகைய சூழலில், அந்த நிதியத்தின் பிடியில் சிக்கிவிட வேண்டாம் என ஆசிய நாடுகளை எச்சரித்துள்ளார் மகாதீர். "கடன் கொடுத்தவர்களுக்கு திருப்பிச் செலுத்தும் அளவுக்கு போதுமான நிதி இருப்பைக் கொண்டிருக்கவில்லை என்பதுதான் இலங்கைக்குள்ள பெரிய பிரச்னை. மிக மோசமான முதலீட்டுக் கொள்கையும், மோசமான நாணய, நிதி மேலாண்மையும்தான் இதற்குக் காரணம். "இலங்கை சென்ற பாதையில் நாமும் செல்வதற்கான வாய்ப்புள்ளது என்று அனைவரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர். இது அனைவருக்குமான பாடம்" என்கிறார் மகாதீர். "குழந்தைக்கு பால் கூட வாங்க முடியாமல் தவிக்கிறேன்" - ஓர் இலங்கை தாயின் கண்ணீர் கதை இலங்கை பாட்டி மரணம் - தமிழ்நாட்டுக்கு கணவருடன் அடைக்கலம் தேடி வந்தவர் ஆசியாவில் பொருளாதார சிறந்த நிலையில் உள்ளதாக கருதப்படும் சீனாவிடம் நிதி நெருக்கடிகளைத் தடுக்க போதுமான ஆதாரங்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், ஆசிய வட்டாரத்தில் உள்ள வளரும் பொருளாதாரத்தை கொண்ட நாடுகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் மூலதனக் கட்டுப்பாடுகளை விதிக்க தயாராக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். 25 ஆண்டுகளுக்கு முன்பு இத்தகைய வழிமுறைகளை தாம் கையாண்டதாகவும், அதன் மூலமாகத்தான் அப்போது எதிர்கொண்ட நெருக்கடியில் இருந்து, தமது தலைமையில் மலேசியா மீண்டு வந்தது என்றும் அண்மைய பேட்டி ஒன்றில் மகாதீர் குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES "நாணய வர்த்தகர்கள் உண்மையில் சீனாவுக்கு ஆட்டம்காட்ட முடியாது. எனவே, நாணயச் சந்தையில் பங்கேற்க விரும்பும் பிற வளரும் நாடுகள் கவனமுடன் இருக்க வேண்டும்," என்கிறார் மகாதீர். கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அமெரிக்க டாலரின் மதிப்பு தற்போது மிக வலுவாக உள்ளது. இதே வேளையில், ஆசிய நாடுகளின் நாணய மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளன. இதன் எதிரொலியாக, பணவீக்கம் அதிகரித்துள்ளதுடன், அமெரிக்க டாலரில் செலுத்தப்பட வேண்டிய கடன் சுமையும் உயர்ந்துள்ளது. ஒரு நாட்டின் நாணய மதிப்பானது, ஐந்து விழுக்காடு அளவுக்கு அதிகரிக்கவோ, குறையவோ செய்தால் பிரச்னை இல்லை என்று குறிப்பிட்டுள்ள மகாதீர், ஐம்பது விழுக்காடு அளவுக்கு மதிப்பு குறையும்போது, மக்கள் ஏழைகளாகிவிடுவர் என்றும், இதுபோன்ற நிலை ஏற்பட அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தைப் புறக்கணித்த மலேசியா கடந்த 1997ஆம் ஆண்டு ஆசிய வட்டாரத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட தலைவர்களில் மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீரும் ஒருவர். அதே போன்ற நெருக்கடி மீண்டும் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் பிடிகளில் சிக்கிவிட வேண்டாம் என்று ஆசிய நாடுகளுக்கு அவர் விடுத்துள்ள எச்சரிக்கையின் பின்னணியில் அவர் எதிர்கொண்ட சில அனுபவங்கள் உள்ளன. 1997 நெருக்கடியின்போது, சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தல்களை முற்றிலுமாகப் புறக்கணித்தார் மகாதீர். இச்சமயம் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தாய்லாந்து தனது நாணயமான 'பாட்'டின் (Baht) மதிப்பை பாதுகாக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் பலன் அளிக்கவில்லை. அந்நாட்டில் முதலீடு செய்யப்பட்ட முதலீடுகள் பெருமளவில் திரும்பப் பெறப்பட்டதால் சிக்கலை எதிர்கொண்டது தாய்லாந்து. அந்நாட்டுக்கு ஏற்பட்ட நெருக்கடி தென் கிழக்கு ஆசிய வட்டாரத்தில் உள்ள மற்ற நாடுகளையும் பாதித்தது. சரியாக இரண்டே வாரங்களில் மலேசியாவின் ரிங்கிட்டின் மதிப்பு வெகுவாக சரிவு கண்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES மலேசிய பங்குச் சந்தையின் குறியீடு 75 விழுக்காடு அளவுக்கு குறைந்தது. அந்நிய முதலீடுகள் நாட்டை விட்டு வேகமாக வெளியேறின. அந்நாட்டின் நாணயமான ரிங்கிட்டின் மதிப்பு சரிபாதியாக குறைந்ததால் தொழில் முனைவோர் கடன்களை திருப்பிச் செலுத்த திணறினர். தொடக்கத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுரைகளை ஏற்றுக்கொண்டது மலேசியா. அரசாங்கத்தின் செலவுகளைக் குறைத்து வட்டிவிகிதங்களை உயர்த்தியது. இதன் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க முடியும் என நம்பியது. ஆனால், அந்த நம்பிக்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் பல பரிந்துரைகளைப் புறக்கணித்தார் அன்றைய மலேசிய பிரதமர் மகாதீர். அந்த பரிந்துரைகளுக்கு நேர்மாறாக மலேசிய அரசாங்கம் அதிகம் செலவிட்டது. இதன் மூலம் பொருளாதாரம் மேம்படும் என்றார் மகாதீர். மேலும் பல்வேறு மூலதனக் கட்டுப்பாடுகளையும் விதித்தார். டாலருக்கு எதிரான ரிங்கிட்டின் மதிப்பை மலேசியாவே நிர்ணயித்தது. இந்த நிலை 2005ஆம் ஆண்டு வரை நீடித்தது. "சர்வதேச நாணய நிதியம், உலக வங்கியை அணுகும்போது அவை இரண்டும் ஒரு நாடு வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்துகிறதா என்பதை மட்டுமே கவனம் செலுத்தும். மற்றபடி, உங்கள் நாட்டுக்கு அரசியல், பொருளாதார ரீதியாக என்ன நேர்ந்தாலும் அவை கண்டுகொள்ளாது. நாட்டை வழிநடத்தும் பொறுப்பை தங்கள் கையில் எடுத்துக்கொள்ள விரும்புவார்கள். மேலும், நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளையும் தாங்களே வகுக்க நினைப்பார்கள். அப்படியெனில், நாம் அவர்களிடம் சரணடைய வேண்டும் என்று அர்த்தம்," என்கிறார் மகாதீர் மொஹம்மத். https://www.bbc.com/tamil/global-62074684
  19. தமிழிசை சௌந்தரராஜன் சிதம்பரம் நடராஜர் கோயிலில் அவமதிக்கப்பட்டாரா? 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@DRTAMILISAIGUV/TWITTER சிதம்பரம் நடராஜர் கோயிலில் சாமி தரிசனம் செய்து கோயில் வளாகத்தில் அமர்ந்த புதுச்சேரி துணைநிலை ஆளுநரிடம் வேறு இடத்தில் சென்று அமரும்படி கூறி தீட்சிதர் அவமதித்தாக கூறப்படுகிறது. ஆனால் இந்த விஷயத்தில் என்னை வேறு இடத்தில் அமர சொன்னது உண்மைதான் ஆனால் அவமதிக்கவில்லை, எந்த பிரச்னையும் இல்லை என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெறும் பூஜைகளில் மார்கழி மாதம் நடைபெறக்கூடிய ஆருத்ரா தரிசனம், ஆனி மாதத்தில் நடைபெறும் ஆனித் திருமஞ்சனம் ஆகியவை மிகவும் பிரசித்தி பெற்றது. கடந்த ஜூன் 27ஆம் தேதி கொடியேற்றத்தோடு ஆனித் திருமஞ்சனம் தொடங்கியது. இந்நிலையில் ஆனித் திருமஞ்சனம் மஹாபிஷேகம் விழாவில் கலந்து கொள்ள இன்று அதிகாலை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சென்றிருந்தார். சாமி தரிசனம் செய்துமுடித்த பின்னர் தமிழிசை சௌந்தரராஜன் கோயில் வளாகத்தில் அமர்ந்துள்ளார். அப்போது அவரிடத்தில் தீட்சிதர்கள் அங்கே அமரக்கூடாது என்று கூறியதாக தகவல்கள் அதிகமாக பரவின. மேலும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவமதிக்கப்பட்டார் என்றும் செய்திகள் பரவ தொடங்கியது. இதனிடையே புதுச்சேரிக்குச் சென்ற அவர் அங்கு அம்மாநில பட்ஜெட் தொடர்பாக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். அந்த கூட்டம் நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். உபி: தெய்வ படங்கள் பேப்பரில் அசைவ பொட்டலம் கட்டிய ஓட்டல் உரிமையாளர் கைது "அதிமுக பொதுக் குழு உள்கட்சி விவகாரம், தடை விதிக்க இயலாது" - உச்ச நீதிமன்றம் அப்போது தமிழிசை சௌந்தரராஜனிடம், சிதம்பரம் கோயில் வளாகத்தில் உள்ள படியில் அமர்ந்தபோது, அங்கே அமரக்கூடாது என்று தீட்சிதர்கள் கூறி உங்களை அவமதித்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது அதற்கு சிரித்தபடி மறுப்பு தெரிவித்தார். 'நடந்தது உண்மைத்தான் ஆனால் அவமதிக்கவில்லை' அது குறித்துப் பேசிய அவர், "என்னை யாரும் அவமதிக்கவில்லை. நான் நேராக சென்று ஒரு இடத்தில் அமர்ந்திருந்த போது ஒருவர் வந்து, அந்த பக்கம் நிறைய இடம் உள்ளது என்றும் அங்கே சென்று அமரும்படியும் கூறினார். அதற்கு நான் இறைவனைப் பார்க்கவந்தேன் இங்கே தான் உட்காருவேன் என்று கூறினேன்.‌ அதைக்கேட்டு அவரும் சென்றுவிட்டார். நான் படியில் கூட உட்காரவில்லை. இறைவனை‌ பார்க்க போனேன். அதை யாரோ ஒருவர் வந்து சொன்னார். அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பட மூலாதாரம்,@DRTAMILISAIGUV/TWITTER மற்ற எல்லா தீட்சிதர்களும் இறைவனுக்கு படைத்த மாலை, பிரசாதம் ஆகியவற்றை என்னிடம் கொடுத்தனர் என்றார். சிதம்பரம் கோயில் என்றாலே பிரச்னையைத் தீர்ப்பதற்கு முன்னாள் பிரச்னை வருவதாக கூறிய தமிழிசை ஆனால் தனது விஷயத்தில் எந்த பிரச்னையில்லை என்று கூறினார். சிதம்பரம் தீட்சிதர்கள் தரப்பில் கூறுவது என்ன? மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் சார்பில் பிபிசியிடம் பேசிய ஐயப்ப தீட்சிதர், "அவர்களை எந்த விதத்திலும் அவமரியாதை படுத்தியோ, அலட்சியப் படுத்தியோ அவர்களை நிராகரிக்கவில்லை. அவர்கள் குறிப்பிட்டுக் கூறும் அந்த இடத்தில் பிரம்மோற்சவம் என்ற தேரோட்டத் திருவிழா இரண்டு நாட்கள் நடக்கிறது என்பதால், சில இடங்கள் உபயம் செய்பவர்களுக்காகவும், கோயில் முக்கிய நிகழ்விற்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கே இருப்பவர், இல்லாதவர் என்று பாரபட்சமின்றி பரம்பரை பரம்பரையாக உபயம் செய்பவர்கள் இருக்கிறார்கள். ஆகவே அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடம் என்பதால் ஆளுநரிடத்தில் கொஞ்சம் இப்படி அமரும்படி வேண்டுகோள் வைத்தோம். அதையும் அவர் ஏற்றுக்கொண்டு, நின்று சாமி தரிசனம் செய்து சந்தோஷமாகத் தான் சென்றுள்ளார்," என்று கோயில் தரப்பில் ஐயப்ப தீட்சிதர் தெரிவித்துள்ளார். https://www.bbc.com/tamil/india-62063308
  20. ட்விட்டரின் சில கணக்குகளை முடக்க இந்திய அரசு அழுத்தம் - நீதிமன்றத்தில் முறையீடு 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ட்விட்டரில் தவறான தகவல்கள் அடங்கிய பதிவுகளை நீக்குமாறு இந்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக ட்விட்டர் நிறுவனம் கர்நாடக நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. இதுபோன்ற "பல" உத்தரவுகளை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக சமூக ஊடக நிறுவனமான ட்விட்டர், ஆதாரங்களுடன் பிபிசியிடம் தெரிவித்துள்ளது. அரசாங்க உத்தரவை அமல்படுத்தத் தவறினால் "கடுமையான விளைவுகள்" ஏற்படும் என்று கடந்த ஜூன் மாதம் இந்திய அரசு கடிதம் அனுப்பியிருந்த நிலையில், அந்த விவகாரத்தில் தற்போதுதான் ட்விட்டர் நிறுவனம் இந்த மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்தியாவில் 2.4 கோடிக்கும் அதிகமான பயன்பாட்டாளர்களை ட்விட்டர் நிறுவனம் கொண்டுள்ளது. இந்த நிலையில், ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த சில மணி நேரத்தில், இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், அனைத்து வெளிநாட்டு இணையதள நிறுவனங்களும் இந்தியாவின் சட்டங்களுக்கு உட்பட்டே செயல்பட வேண்டும் என்று ட்வீட் செய்துள்ளார். Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 தவறான தகவல்களை பரப்பும் நூற்றுக்கணக்கான ட்விட்டர் கணக்குகள் மற்றும் பதிவுகளை அகற்றுமாறு ட்விட்டர் நிறுவனத்தை அரசுத்தரப்பு தொடர்ந்து வலியுறுத்திய போதும், அதனை பொருட்படுத்தாமல் இருந்ததால், கடந்த மாதம் ட்விட்டருக்கு அனுப்பிய கடிதத்தில், அரசின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு இதுவே "கடைசி வாய்ப்பு" என்று குறிப்பிடப்பட்டிருந்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ட்விட்டர் பதிவில் எழுத்துக்களின் வரம்பு உயர்கிறது: சோதனை முயற்சி தொடக்கம்! உலகளாவிய லட்சியங்களுடன் இந்தியாவில் ட்விட்டருக்கு மாற்றாக போட்டியிடும் 'கூ' செயலி இணையத்தில் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள் - பெரிய முதலீடின்றி சுயதொழில் தொடங்குவது எப்படி? இந்தியாவின் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் இந்த உத்தரவுகளை ட்விட்டர் நிறுவனத்துக்கு அரசு விடுத்திருந்தது. அதாவது "நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்தும்" வகையில் இருக்கும் இணைய உள்ளடக்கங்களை முடக்குவதற்கு இந்த சட்டம் அரசாங்கத்தை அனுமதிக்கிறது. எனவே, இந்த சட்டத்தின்படி விடுக்கப்படும் உத்தரவுகளை நடைமுறைப்படுத்த தவறினால் குற்றவியல் நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என்பதால், "அச்சுறுத்தல்களின் தீவிரத்தன்மை" காரணமாக ட்விட்டர் நீதிமன்றத்திற்குச் செல்ல முடிவு செய்துள்ளதாக இதுகுறித்து அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உதாரணமாக, பல சந்தர்ப்பங்களில் முழு கணக்குகளும் தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் அரசாங்கத்தின் சார்பில் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ட்விட்டர் நிறுவனத்திற்கும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசாங்கத்திற்கும் இடையிலான தொடர்ச்சியான மோதலின் சமீபத்திய நடவடிக்கையாகும். பட மூலாதாரம்,GETTY IMAGES பொது ஒழுங்கை காரணம் கூறி, கடந்த ஓராண்டாக பல முறை அரசு தரப்பு, நூற்றுக்கணக்கான ட்விட்டர் கணக்குகள் மற்றும் பதிவுகளை நீக்குமாறு ட்விட்டர் நிறுவனத்தை கேட்டு வருகிறது. கடந்த ஆண்டு விவசாயிகள் நடத்திய மிகப் போராட்டங்கள் தொடர்பான கணக்குகள் மற்றும் ட்வீட்கள், கொரோனா தொற்றுநோயை அரசாங்கம் கையாள்வதை விமர்சிக்கும் ட்வீட்கள் ஆகியவை இதில் அடக்கம். அரசாங்கத்தின் நோட்டீசுக்கு இணங்கும் விதமாக, புலனாய்வு செய்தி இதழின் கணக்கு மற்றும் பல மாதங்களாக நடந்த விவசாய போராட்டங்களுக்கு ஆதரவளித்த ஆர்வலர்கள் மற்றும் குழுக்களின் கணக்குகள் உட்பட சுமார் 250 கணக்குகளை ட்விட்டர் தற்காலிகமாக முடக்கியது. ஆனால், தற்காலிகமான தடையை நீட்டிப்பதற்கு "போதுமான நியாயம் இல்லை" என்று குறிப்பிட்டு ட்விட்டர் அக்கணக்குகளை ஆறு மணி நேரத்தில் செயல்பாட்டுக்கு கொண்டுவந்தது. கடந்த ஆண்டு பிப்ரவரியில், "இந்தியாவில் வணிகம் செய்ய வரவேற்கிறோம்," அதே சமயத்தில் "ட்விட்டர் நிறுவனம் தனது விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை பொருட்படுத்தாமல்" நாட்டின் சட்டத்தை பின்பற்றி செயல்பட வேண்டும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு மே மாதம் இந்தியாவின் தலைநகர் டெல்லியிலுள்ள தனது நிறுவனத்தின் அலுவலகங்களுக்கு காவல்துறையினர் வந்த சம்பவத்தை அடுத்து, நாட்டில் கருத்து சுதந்திரம் குறித்த கவலைகளை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டிருந்தது. பாரதிய கட்சியின் பதிவொன்றை "உண்மைக்கு புறம்பாக மாற்றப்பட்ட உள்ளடக்கம்" என்று ட்விட்டர் நிறுவனம் குறிப்பிட்டதை அடுத்து டெல்லி காவல்துறையினர் அந்த நிறுவனத்தின் அலுவலகத்துக்கு சென்று நோட்டீஸ் வழங்கினர். ட்விட்டர் மனுவில் கூறியிருப்பது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ட்விட்டர் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், உள்ளடக்கங்களை முடக்குமாறு அரசாங்கம் விடுத்துள்ள உத்தரவுகளில் சிலவற்றை மறு ஆய்வு செய்யுமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். ட்விட்டர் நிறுவனம் தாக்கல் செய்த அந்த மனுவின் விவரங்கள் பிபிசிக்கு கிடைக்க பெற்றது. அதில் உள்ளடக்கங்களை முடக்க கோரும் அரசின் உத்தரவுகள் இந்திய அரசியலமைப்பு சட்டம் பயனர்களுக்கு கொடுத்துள்ள உரிமைக்கு எதிராக உள்ளது என கூறியுள்ளது. மேலும், ஒரு பதிவின் குறிப்பிட்ட பகுதியோ அல்லது முழு பதிவோ உண்மைக்கு புறம்பான தகவல்களை கொண்டிருந்தால் அந்த குறிப்பிட்ட பதிவுகள் மட்டுமே நீக்கப்படும் என்றும் அந்த கணக்கு நீக்கப்படாது என்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமே டெல்லி உயர்நீதிமன்றத்தில் பலமுறை கூறியுள்ளது என்று ட்விட்டரின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் ட்விட்டர் நிறுவனம் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் 200 பிரிவு 69Aவின் (எந்தவொரு கணினி ஆதாரத்தின் மூலமாகவும் ஒரு தகவலின் பொது அணுகலைத் தடுப்பதற்கான வழிமுறைகளை வழங்குவதற்கான அதிகாரங்கள்) கீழ் வழிகாட்டுதல் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. https://www.bbc.com/tamil/india-62061651
  21. இளையராஜா எம்.பி ஆகிறார் - சாதனை, சர்ச்சைகளுடன் 50 வருட திரைப்பயணம் 51 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவருமான இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராகவுள்ளார். குடியரசு தலைவரின் அதிகாரத்துக்கு உட்பட்டு நியமிக்கப்படும் நியமன உறுப்பினர்கள் வரிசையில் இவரது நியமனம் வருகிறது. இளையராஜா மட்டுமின்றி விளையாட்டுத்துறையில் சாதனை படைத்த முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா, பிரபல தெலுங்குப்பட கதையாசிரியரும் இயக்குநருமான விஜயேந்திர பிரசாத், கர்நாடகாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வீரேந்திர ஹெகடே ஆகியோரும் நியமன உறுப்பினர்களாக தேர்வாகின்றனர். இவர்களுக்கான நியமன உத்தரவு விரைவில் குடியரசு தலைவரால் பிறப்பிக்கப்படும். இதற்கிடையே, புதிய நியமன உறுப்பினர்களாகவிருக்கும் நால்வருக்கும் பிரதமர் நரேந்திர மோதி தமது ட்விட்டர் பக்கம் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். இளையராஜாவுக்கான வாழ்த்துச் செய்தியில், "தலைமுறைகளை கடந்து மக்களை தன்பால் ஈர்த்த படைப்புலக மேதை இளைராஜா. அவரது இசை பல்வேறு உணர்வுகளை அழகாக பிரதிபலிக்கக்கூடியது. எளிய பின்னணியில் இருந்து இந்த அளவுக்கு சாதனைகளை படைத்தவரின் வாழ்க்கை பயணம் மிகவும் ஊக்கமளிக்கக்கூடியது. அவர் ராஜ்யசபாவுக்கு நியமனம் செய்யப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது," என தெரிவித்துள்ளார். Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 பி.டி. உஷா தொடர்பாக பிரதமர் மோதி குறிப்பிடும்போது, "உஷா ஜி ஒவ்வொரு இந்தியருக்கும் ஒரு உத்வேகம். விளையாட்டில் அவரது சாதனைகள் பரவலாக அறியப்படுகின்றன. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக வளரும் விளையாட்டு வீரர்களுக்கு வழிகாட்டியாக அவர் ஆற்றிய பணி பாராட்டத்தக்கது," என்று மோதி கூறியுள்ளார். 'பாகுபலி', 'ஆர்ஆர்ஆர்' படங்களுக்கு கதாசரியரும், மூத்த படைப்பாளியுமான விஜயேந்திர பிரசாத், சமூக ஆர்வலர் வீரேந்திர ஹெக்டே ஆகியோரும் மாநிலங்களவை நியமன உறுப்பினராக குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படவிருக்கின்றனர். திருமாவளவன்: "இளையராஜா பாவம், அவருக்கு என்ன நெருக்கடியோ?" இளையராஜா சர்ச்சை: அம்பேத்கருடன் நரேந்திர மோதியை ஒப்பிட்டு அவர் எழுதியது என்ன? ஐந்து முறை தேசிய விருது 79 வயதாகும் இளையராஜா இசைத்துறையில் வழங்கி வரும் தொடர் பங்களிப்புக்காக இதுவரை ஐந்து முறை தேசிய விருது பெற்றுள்ளார். சாகர சங்கமம், ருத்ர வீணா என இரு தெலுகு படத்துக்கும், சிந்து பைரவி என்ற தமிழ் படத்திற்கும் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வென்றுள்ளார். பழசிராஜா மற்றும் தாரை தப்பட்டை படத்துக்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதையும் இளையராஜா வென்றுள்ளார். பட மூலாதாரம்,PIB INDIA 2018ஆம் ஆண்டு இந்திய அரசின் இரண்டாவது மிக உயரிய விருதான பத்ம விபூஷண் விருது இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது. திடீர் சர்ச்சையில் சிக்கியவர் இரு மாதங்களுக்கு முன்னர் பாபாசாகேப் அம்பேத்கரையும், பிரதமர் நரேந்திர மோதியையும் ஒப்பிட்டு 'அம்பேத்கர் அன்ட் மோதி' என்ற தலைப்பில் புளூகிராஃப்ட் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா எழுதிய முன்னுரை பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. அப்போதே இளையராஜாவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது வேறு உயர் பதவி கிடைக்கலாம் என்று பரவலாக பேசப்பட்டது. சமூக ஊடகங்களிலும் அம்பேத்கரை மோதியுடந் இளையராஜா ஒப்பிடுவதா என்று விவாதங்கள் எழுந்தன. இதற்கு முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் கோவை கொடிசியா மைதானத்தில் இசைஞானி இளையராஜாவின் 80 வது பிறந்த நாளை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் தனக்கு இசைஞானி பட்டம் சூட்டிய கலைஞரை நினைவுகூர்ந்து இளையராஜா பேசினார். அப்போது தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை புகழ்ந்துப் பேசிய அவர், "இசைஞானி என்ற பட்டத்தை கலைஞர் கொடுத்தார் என்பதற்காக அல்ல. தனிப்பட்ட முறையில் தமிழக மக்களை முன்னேற்ற அவர் பட்ட பாடெல்லாம் அரசியல் வட்டாரத்தில் உங்களுக்கு எல்லாம் நன்றாக தெரியும். பொது வாழ்வில் அவர் செய்த நல்ல காரியங்களும் தெரியும். அவர் வழியில் செல்லும் நமது முதல்வரும் நீண்ட நாள் அவரது கனவை நிறைவேற்றி வைப்பார் என நான் முழு மனதுடன் நம்புகிறேன்," என்று பேசினார். பட மூலாதாரம்,ILAYARAJA இது தவிர பல்வேறு தருணங்களில் மனதில் பட்டதை வெளிப்படையாகவும் சட்டென்று கோபத்துடனும் எதிர்வினையாற்றக் கூடியவராக அறியப்பட்ட இளையராஜா, ஆன்மிக கருத்துக்களை பொது நிகழ்ச்சிகளில் பேசுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்த நிலையில், தற்போது இளையராஜா நியமன உறுப்பினராகும் செய்தியை பிரதமர் மோதி பகிர்ந்திருப்பது அவரது ரசிகர்களையும் திரைத்துறையினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அரசியல், திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்கள் எத்தனை பேர்? 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி இந்திய அரசியலமைப்பின் நான்காவது அட்டவணையின்படி, மாநிலங்களவையில் 216 உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும், அதில் 12 உறுப்பினர்கள் குடியரசு தலைவரால் பரிந்துரைக்கப்பட வேண்டும், மீதமுள்ள 204 பேர், மாநிலங்களைப் பிரதிநிதித்துவப்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த 12 பேரை நியமன உறுப்பினர்களாக நியமிக்கும் மரபு இப்போதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இருப்பினும், தற்போதைய பலமான 245 உறுப்பினர்களில் 233 பேர் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள். 12 பேர் குடியரசு தலைவரால் நியமிக்கப்படுபவர்கள். மாநிலங்களவையை மக்களவை போல பெரும்பான்மை பலம் இல்லை என்று கூறி கலைத்து விட முடியாது. அதன் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் ஒவ்வோர் இரண்டாவது வருடமும் ஓய்வு பெறுகின்றனர். மக்களவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முழு பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள். ஆனால், மாநிலங்களவையில் ஒருவர் எம்.பி பதவி ஏற்றுக் கொண்ட நாளில் இருந்து ஆறு வருடங்களுக்கு அந்தப் பதவியில் இருக்க முடியும். இடையில் மக்களவை கலைக்கப்பட்டாலும் மாநிலங்களவை அப்படியே தொடரும். மாநிலங்களவையில் கட்சிகளின் பலம் அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட்டு தேர்வாகும் உறுப்பினர்கள் நீங்கலாக மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டோ குடியரசு தலைவரால் அவரது அதிகாரத்துக்கு உள்பட்டு நேரடியாக நியமிக்கப்படக் கூடிய தகுதியை 12 உறுப்பினர்கள் பெறுகின்றனர். அவர்கள் பொதுவாக இலக்கியம், அறிவியல், கலை மற்றும் சமூக சேவையில் சிறப்பு பங்களிப்பை வழங்கியவர்களாக இருப்பது நடைமுறையில் கடைப்பிடிக்கப்படும் மரபு. மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிக்க உரிமை இல்லை. எனினும், அவர்கள் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கலாம். டெல்லியில் எம்.பி குடியிருப்பு வளாகத்தில் ஒரு குடியிருப்பு, பிராட்பேண்ட் வசதியுடன் கூடிய தொலைபேசி இணைப்பு, எரிவாயு இணைப்பு வசதிகள், மாத ஊதியம், அலுவலக படி, உதவியாளர் படி, நாடாளுமன்ற கூட்டத்தொடர் காலத்தில் வந்து போக விமானம் அல்லது ரயில் இலவச பயணச் சலுகை, இதுதவிர பிற எம்.பிக்களுக்கு என்னவெல்லாம் சலுகைகள், ஊதியம் தரப்படுகிறதோ அதையே நியமன உறுப்பினர்களும் பாரபட்சமின்றி பெறுவார்கள். நியமன உறுப்பினர் குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்டு பதவியேற்ற நாளில் இருந்து ஆறு மாதங்களுக்குள் ஏதாவது கட்சியில் சேர விரும்பினால் அதற்கு வாய்ப்பு வழங்கப்படும். ஆனால், இந்த காலகட்டத்துக்குள் அவர்கள் கட்சியில் சேராமல் பின்னாளில் சேர முடிவெடுத்தால் அவர்கள் நியமன உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும். முக்கிய மசோதாக்கள் மீதான விவாதம், கவன ஈர்ப்பு நோட்டீஸ் தருவது உள்பட எல்லா அலுவல் நடைமுறைகளிலும் நியமன உறுப்பினர்கள் பங்கேற்கலாம். ஆனால், அவர்களுக்கான வாய்ப்பு தரப்படும்வரை அவர்கள் காத்திருக்க வேண்டும். நியமன உறுப்பினர்கள், எம்பி தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் வேலைகளைச் செயல்படுத்த, நாட்டின் எந்த மாநிலத்திலிருந்தும் எந்த மாவட்டத்தையும் தேர்ந்தெடுக்கலாம். MPLADS நிதியை செயல்படுத்துவதற்கும் வெளியிடுவதற்கும் உறுப்பினர் ஒரு நோடல் மாவட்டத்தையும் தேர்வு செய்ய வேண்டும். இப்போது யாரெல்லாம் நியமன உறுப்பினர்கள்? மாநிலங்களவையில் தற்போது நியமன உறுப்பினர்களாக ரஞ்சன் கோகாய் (உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர்), மகேஷ் ஜேட்மலானி (உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக இருந்தவர்), சோனல் மான்சிங் (பரதக்கலைஞர்), ராம் ஷகால் (பாஜக பிரமுகர்), ராகேஷ் சின்ஹா (ஆர்எஸ்எஸ் ஆதரவு முன்னாள் பேராசிரியர்) ஆகிய ஐந்து பேர் உள்ளனர். காலியாகவுள்ள ஏழு இடங்களில் தற்போது இளையராஜா, பி.டி. உஷா, வீரேந்திர ஹெகடே, விஜயேந்திர பிரசாத் ஆகியோர் முறைப்படி பதவியேற்றுக் கொண்டாலும் கூட மேலும் மூன்று நியமன உறுப்பினர்களுக்கான இடங்கள் காலியாகவே இருக்கும். https://www.bbc.com/tamil/india-62069195
  22. இவ்வாறு எதை தேடினாலும் வருகிறது. இதற்குத் தீர்வு தாருங்கோ. இதனால் பதிவுகளை திரும்ப திரும்ப தவறுதலாக பதியவேண்டி வருகிறது.
  23. சிங்கப்பூர் - மலேசியா: 60 ஆண்டுகாலமாக நீடிக்கும் தண்ணீர் பிரச்னை; வரலாறு என்ன? சதீஷ் பார்த்திபன் பிபிசி தமிழுக்காக 6 ஜூலை 2022, 06:03 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மலேசியா, சிங்கப்பூர் இடையே கடந்த அறுபது ஆண்டுகளாக தண்னீர் பிரச்னை ஒன்று நீடித்து வருகிறது. இதற்கு தீர்வு என்ன? இதன் வரலாறு என்ன? மலேசியாவில் இருந்து தண்ணீர் பெறுகிறது சிங்கப்பூர். தினந்தோறும் 250 மில்லியன் கேலன் (1000 கேலன் = 3,780 லிட்டர்) தண்ணீரை மலேசியாவின் எல்லை மாநிலமான ஜோகூரிலுள்ள நதியில் இருந்து சிங்கப்பூர் பெற்றுக்கொள்கிறது. இந்த தண்ணீர் பகிர்வுக்காக மலேசியா, சிங்கப்பூர் இடையே 1961ஆம் ஆண்டு ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. பின்னர் அதில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள், புதிய ஒப்பந்தங்களாக மாறின. எனினும் நாள்களின் போக்கில் சில பிரச்னைகள் தலைதூக்கின. தண்ணீர் பகிர்வு தொடர்பாக மலேசியா சில கோரிக்கைகளை முன்வைக்க, சிங்கப்பூர் அவற்றை ஏற்க மறுக்க, இரு நாடுகளும் இப்போது அனைத்துலக நடுவர் மன்றத்தை அணுகும் அளவுக்குப் பிரச்னை முற்றியுள்ளது. இந்தப் பிரச்னையின் ஆணிவேர் என்ன என்பதை சுருக்கமாக சில வரிகளில் இவ்வாறு குறிப்பிடலாம். "இரு நாடுகளுக்கும் இடையேயான ஒப்பந்தப்படி, தினமும் மலேசியாவிடம் இருந்து 250 மில்லியன் கேலன் தண்ணீர் பெறும் சிங்கப்பூர் அரசு, அதிலிருந்து 2% சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை ஜோகூர் மாநிலத்துக்கு வழங்க வேண்டும். இந்த ஒப்பந்தம் 2061 காலாவதியாகும்," என சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2%க்கு அதிகமாகவும் சிங்கப்பூரில் இருந்து தண்ணீர் வாங்குகிறது ஜோகூர் மாநிலம். எனினும் இவ்வாறு பகிரப்படும் நீருக்கான விலை என்ன என்பதில்தான் சிக்கல். குறைவான விலைக்கு தண்ணீரைப் பெறும் சிங்கப்பூர், அதை சுத்திகரித்த பின்னர் விற்கும்போது அதிக தொகையைப் பெறுகிறது என்றும் இதை ஏற்க இயலாது என்றும் மலேசியா சுட்டிக்காட்டுகிறது. 1962இல் கையெழுத்தான தண்ணீர் பகிர்வு ஒப்பந்தம் பட மூலாதாரம்,GETTY IMAGES இனி வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பார்ப்போம். மலேசியாவில் இருந்து பிரிந்து சிங்கப்பூர் என்ற தனி நாடு 1965ஆம் ஆண்டு உதயமானது. எனினும் அதற்கும் முன்னதாகவே தண்ணீர் பகிர்வு தொடர்பாக 1961ஆம் ஆண்டு ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் பின்னர் 1962ஆம் ஆண்டு சில திருத்தங்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் இன்றளவும் நீடிக்கிறது. இதில் துணை ஒப்பந்தம் ஒன்று 1990ல் கையெழுத்தானது. இவ்விரு ஒப்பந்தங்களின்படி மலேசிய எல்லையில் உள்ள ஜோகூர் நதிநீரை சிங்கப்பூர் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது சிங்கப்பூரின் அன்றாட தண்ணீர் தேவை என்பது 430 மில்லியன் கேலன்கள். இதில் சுமார் சரிபாதி அளவு மலேசியாவிடம் இருந்து கிடைக்கிறது. "1965ல் மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் பிரிந்து சென்றபோது, இவ்விரு ஒப்பந்தங்களும், சிங்கப்பூர் சுதந்திர ஒப்பந்தத்தில் 'பரஸ்பர அரசு உத்தரவாதங்களாக' குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த சுதந்திர ஒப்பந்தம் மலேசியா, சிங்கப்பூர் அரசாங்களுக்கு இடையே கையெழுத்தாகின. எந்தவொரு தரப்பும் ஒப்பந்தத்தில் உள்ளவற்றை தன்னிச்சையாக மாற்ற இயலாது," என்றும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய ஒப்பந்தத்தின்படி, நீர் பிடிப்புப் பகுதிகளாக பயன்படுத்தப்படும் மலேசிய நிலப்பகுதிக்கு சிங்கப்பூர் வாடகை செலுத்த வேண்டும் என்று முடிவானது. ஜோகூர் மாநிலத்தில் கட்டடத் தொகுப்புகளுக்கு என்ன வாடகை கிடைக்குமோ, அதை செலுத்த ஒப்புக்கொண்டது சிங்கப்பூர். நீரின்றி தவித்த சிங்கப்பூர் நீர் மேலாண்மையில் சாதிப்பது எப்படி? சிங்கப்பூரை அச்சுறுத்தும் உணவுப் பற்றாக்குறை: எப்படி சமாளிக்கிறது சின்னஞ்சிறு நாடு? மேலும், ஒப்பந்தப்படி மலேசியாவில் இருந்து பெறும் ஒவ்வொரு ஆயிரம் கேலன் நீருக்கும் சிங்கப்பூர் 3 காசுகள் தர வேண்டுமென விலை நிர்ணயிக்கப்பட்டது. அதேவேளையில், கொள்முதல் செய்த தண்ணீரில் இருந்து 2% சுத்திகரிக்கப்பட்ட நீரை ஜோகூர் மாநிலத்துக்கு வழங்கும் சிங்கப்பூர், அதற்காக ஆயிரம் கேலன் நீருக்கு 50 காசுகள் பெறுகிறது. 1973ஆம் ஆண்டு வரை இரு நாடுகளும் ஒரே கரன்சியை பயன்படுத்தி வந்தன. அது முடிவுக்கு வந்ததும் தண்ணீர் பகிர்வுக்கான விலை மலேசிய ரிங்கிட்டில் நிர்ணயிக்கப்பட்டது. அதாவது ஒவ்வொரு ஆயிரம் கேலன் தண்ணீருக்கும் தலா 3 காசுகள் (ஒரு காசு என்பது ஒரு சென் (sen) விலை நிர்ணயிக்கப்பட்டது. (நூறு சென்கள் ஒரு ரிங்கிட் ஆகும்.) 1962 ஒப்பந்தப்படி, இருபத்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு விலை குறித்து இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தலாம். அணை கட்ட அனுமதித்த மலேசியா பட மூலாதாரம்,GETTY IMAGES 1990ஆம் ஆண்டு சிங்கப்பூரின் பொதுப் பயன்பாட்டு வாரியம் (PUB) மற்றும் ஜோகூர் மாநில அரசு இடையே நவம்பர் 24, 1990 அன்று நீர்ப்பகிர்வு தொடர்பாக துணை ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. அதன்படி பண்டார் தெங்காரா என்ற சிற்றூரில் லிங்யூ (Linggiu) ஆற்றின் குறுக்கே அணை கட்ட சிங்கப்பூருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஜோகூர் நதியில் இருந்து தண்ணீர் எடுப்பற்கு வசதியாக இந்த ஏற்பாடு அமைந்தது. அதேவேளையில், அணை கட்டுவதற்காக கையகப்படுத்தப்படும் நிலப்பகுதி, அங்கு கிடைத்திருக்கக்கூடிய இதர வருமானங்கள் ஆகியவற்றைக் கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க சிங்கப்பூர் ஒப்புக்கொண்டது. மேலும், ஒரு ஹெக்டேருக்கு 18 ஆயிரம் மலேசிய ரிங்கிட் பிரீமியமாக வழங்கப்பட்டதுடன், தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்துக்காக பயன்படுத்தப்படும் ஒவ்வொரு ஆயிரம் சதுர அடி நிலத்துக்கும் ஆண்டு வாடகையாக முப்பது ரிங்கிட் அளிக்கவும் சிங்கப்பூர் முன்வந்தது. லிங்யூ அணையின் கட்டுமான, பராமரிப்புச் செலவுகளையும் அத்தீவு நாடு ஏற்றுக்கொண்டது. இன்று சிங்கப்பூரின் முக்கியமான குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது இந்த அணை. லிங்யூ அணை ஜோகூர் அரசாங்கத்துக்கு சொந்தமாக உள்ளது என்றாலும் அதன் கட்டுமானத்துக்கும் நடைமுறை செயல்பாட்டுச் செலவுகளுக்காகவும் சிங்கப்பூர் சுமார் 300 மில்லியன் சிங்கப்பூர் டாலர் செலவிட்டுள்ளது. விலையை உயர்த்திய மகாதீர் மொஹம்மத் 1962 தண்ணீர் பகிர்வு ஒப்பந்தம் கையெழுத்தான சில ஆண்டுகளிலேயே, அதற்குரிய விலை தொடர்பான முணுமுணுப்புகள் மலேசியாவில் தொடங்கிவிட்டதாகக் கூறப்பட்டாலும், முன்னாள் பிரதமர் மகாதீர் மொஹம்மத் ஆட்சிக் காலத்தில்தான் இந்த விஷயம் விவகாரமானது. 2000ஆம் ஆண்டில் தண்ணீர் பகிர்வு தொடர்பாக மலேசியா தனது கருத்தையும் கோரிக்கையையும் வலுவாக முன்வைத்தது. ஒவ்வொரு ஆயிரம் கேலன் நீருக்கும் 3 காசுகள் (சென்) விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதை 45 காசுகளாக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தியது மலேசியா. அதே ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்றைய சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூவை சந்தித்தார் மகாதீர். பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இருதரப்பும் இந்த விலை மாற்றத்துக்கு ஒப்புக்கொண்டன. 1962ல் ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் சுமார் நான்கு தசாப்தங்கள் கடந்துவிட்டதையும், அக்காலக்கட்டத்தில் ஏற்பட்ட பண வீக்கத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் மலேசியா சுட்டிக்காட்டியது. அப்போதுதான் தண்ணீர்பகிர்வுக்கான விலை நியாயமானதாக இருக்கும் என்றும் மலேசியா கூறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மகாதீர் மொஹம்மத் எனினும், 2001ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கான நீரின் விலையை ஒவ்வொரு ஆயிரம் கேலனுக்கும் 60 காசுகளாக (சென்) உயர்த்த மலேசியா பரிந்துரைத்தது. ஆனால், சிங்கப்பூர் உடனடியாக அந்த விலையேற்றத்தை ஏற்க இயலாது என்றும், 2011ஆம் ஆண்டு வேண்டுமானால் இதுகுறித்து பரிசீலிக்கலாம் என்றும் திட்டவட்டமாக கூறியது. எனினும், மலேசியா தன் பிடிவாதத்தை தளர்த்தவில்லை. 2002 மார்ச் மாதம் இந்த விலை நிர்ணய விவகாரம் உச்சத்தை அடைந்தது. இரு தரப்பு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட அம்சங்கள் குறித்து கவலைப்படப் போவதில்லை என்பதை உணர்த்தும் விதமாக ஆயிரம் கேலன் தண்ணீருக்கு 60 காசுகள் என்று விலையை நிர்ணயித்ததுடன், இந்தக் கட்டண விகிதத்தை பின்தேதியிட்டு, 1986 முதல் செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியது மலேசியா. மேலும், 2007 முதல் 2011 வரை ஆயிரம் கேலன் மூன்று ரிங்கிட் என விலையை நிர்ணயித்தது. அதன் பின்னர் வரும் ஆண்டுகளில் பண வீக்கத்துக்கு ஏற்ப விலையை மாற்றி அமைக்கலாம் என்றும் கூறியது. மலேசியாவில் 95 வயதில் புதிய அரசியல் கட்சி தொடங்கிய மகாதீர் கடல்நீரை நன்னீராக்கும் தொழில்நுட்பம்: அணு உலைகளுடன் கூடிய ஆலைகள் தண்ணீர் பிரச்னையை தீர்க்குமா? இந்நிலையில், மலேசிய, சிங்கப்பூர் அதிகாரிகள் தங்களுக்கிடையே பரிமாறிக் கொள்ளப்பட்ட கடிதங்களையும் அதிகாரப்பூர்வ அறிக்கைகளையும் வெளியிட்டு தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர். 2002ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை இந்நிலை நீடித்தது. இச்சமயம் தண்ணீர் விலையை மறு ஆய்வு செய்யப்போவதாக ஜோகூர் மாநில அரசு அதிகாரப்பூர்வமாக ஒரு நோட்டீசை அனுப்பியது. இதற்கு பதிலளித்த சிங்கப்பூர் பொதுப் பயன்பாட்டு வாரியம் (PUB) இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தும் உரிமை தங்களுக்கு இருப்பதாகவும், இரு அரசுகளும் கலந்து பேசி பரஸ்பரம் ஒப்புக்கொள்ளும் வகையில் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தது. ஊடகங்களில் வெளியான கடிதப் பரிமாற்றங்கள் மலேசியா தனது புதிய விலையில் பிடிவாதமாக இருந்த போதிலும், சிங்கப்பூர் இது நியாயமற்றது என தொடர்ந்து கூறியது. இந்நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, தண்ணீர் பகிர்வு-விலை சர்ச்சை குறித்து இருநாடுகளின் தலைவர்கள் இடையேயான கடிதப் பரிமாற்றங்கள் குறித்த விவரங்களை ஊடகங்களில் வெளியிட்டது சிங்கப்பூர். இதேபோல் மலேசிய அரசும் தனது நிலைப்பாட்டை விவரிக்கும் விதமாக ஊடகங்களில் பிரசாரம் மேற்கொண்டது. இதற்கிடையே 2003, அக்டோபரில் மலேசிய பிரதமர் பதவியில் இருந்து விலகினார் மகாதீர். அதன் பின்னர் தண்ணீர் பிரச்னை பெரிய அளவில் தலைதூக்கவில்லை. நாள்களின் போக்கில் மலேசியாவின் எல்லை மாநிலமான ஜோகூரில் தண்ணீர் இருப்புப் பகுதிகள் 4 விழுக்காடாகக் குறைந்துவிட்டதாக அரசு தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES இதற்கிடையே, சிங்கப்பூர் புதிய வாதத்தை முன்வைத்தது. 1961, 1962ஆம் ஆண்டுகளில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் விலையை மறு வரையறை செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய சிங்கப்பூர், அதன்படி 1986 அல்லது 1987ஆம் ஆண்டுகளிலேயே விலையை மாற்றி அமைத்திருக்க வேண்டும் என்றும், இனிமேல் அவ்வாறு செய்ய வாய்ப்பில்லை என்றும் கூறியது. ஆனால், மலேசிய தரப்பிலோ, 25 ஆண்டுகளுக்குப் பிறகு எப்போதுமே வேண்டுமானாலும் விலையை மாற்றி அமைக்கலாம் என்றுதான் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று விளக்கம் அளிக்கப்பட்டது. தண்ணீர் பகிர்வுக்கான விலை அதிகரிப்பு: கறார் காட்டிய மகாதீர் இந்நிலையில், எதிர்பாராத திருப்பமாக 2018 பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் மலேசியப் பிரதமரானார் மகாதீர். அடுத்த ஆண்டிலேயே தண்ணீர் விலை விவகாரம் மீண்டும் தலைதூக்கியது. ஜோகூர் மாநிலத்தில் தண்ணீர் இருப்புப் பகுதிகள் வெகுவாக குறைந்துவிட்டதை அடுத்து, 1962ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தின்படி, தண்ணீருக்கான விலையை உயர்த்துவதில் சிங்கப்பூர் ஒத்துழைக்க வேண்டும் என மலேசியா வலியுறுத்தியது. இவ்விஷயத்தில் மகாதீர் உறுதியாக இருந்தார். எனினும், இரண்டு ஆண்டுகளில் அவரது ஆட்சி கவிழ்ந்து, புதிய அரசாங்கம் அமைந்துள்ளது. கொரோனா நெருக்கடியில் இருந்து இரு நாடுகளும் முழுமையாக விடுபட்ட பின்னர் தண்ணீர் விலை குறித்து பேச்சுவார்த்தை நடத்த இரு நாடுகளும் முடிவு செய்துள்ளதாக நடப்பு மலேசிய அரசாங்கம் கூறியுள்ளது. பட மூலாதாரம்,FACEBOOK/CHARLES SANTIAGO படக்குறிப்பு, சார்லஸ் சந்தியாகு மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீரைப் பொறுத்தவரை சிங்கப்பூர் உடனான தண்ணீர் ஒப்பந்தம் தொடர்பான தமது நிலைப்பாட்டில் கறாராக இருந்தார். 2002ஆம் ஆண்டு கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் சிங்கப்பூருக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்தார். கடந்த காலங்களில் பல்வேறு அனைத்துலக ஒப்பந்தங்கள் பலமுறை சில நாடுகளால் மீறப்பட்டுள்ளதாகவும், அதுபோன்ற காரணங்களால் சில நாடுகள் போர் தொடுக்கும் முடிவுக்குச் சென்றதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். ஆனால், மகாதீரின் இந்த நிலைப்பாட்டை ஏற்க இயலாது என்கிறார் கடந்த 2018-19ஆண்டுகளில் மலேசியாவின் தேசிய நீர் சேவைகள் ஆணையத்தின் தலைவராக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு பிபிசி தமிழிடம் தெரிவித்தார். "தண்ணீர் கொடுக்கும் மாநிலத்துக்கே இப்போது தண்ணீர் பிரச்னை" இதற்கிடையே, 2015ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து வறட்சி, மாசுபாடு உள்ளிட்ட காரணங்களால் ஜோகூர் மாநில அணைகளில் உள்ள நீர்மட்டம் வரலாறு காணாத அளவுக்கு குறைந்தது. அச்சமயம் சிங்கப்பூரில் இருந்து மூன்று முறை கூடுதலாக குடிநீர் வரவழைத்து நிலைமையைச் சமாளித்தது அம்மாநில அரசு. மேலும், 2015 - 16ஆம் ஆண்டுகளில் சுமார் 85 ஆயிரம் குடியிருப்புகள், தொழிற்சாலைகளுக்கு ரேசன் முறையில் தண்ணீர் விநியோகிக்கப்பட்டது. கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கி பலமுறை சிறிதும் பெரிதுமாக ஜோகூர் நதி மாசடைந்துள்ளது. உரிய சுற்றுச்சுழூல் பாதுகாப்பு இல்லாததே இந்த மாசுபாடுக்கு காரணம் என்று சிங்கப்பூர் கவலை தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஜோகூர் மாநிலத்தில் உள்ள மலேசிய குடிமக்களுக்கே போதுமான தண்ணீர் இல்லாத நிலையில், சிங்கப்பூருக்கு எவ்வாறு தினந்தோறும் தண்ணீர் வழங்க இயலும் என்று மலேசிய முன்னாள் நீர், நிலம் மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த டாக்டர் சேவியர் ஜெயகுமார் கேள்வி எழுப்புகிறார். பட மூலாதாரம்,TWITTER/XAVIER JAYAKUMAR படக்குறிப்பு, சேவியர் ஜெயகுமார் மேலும், மலேசியாவில் இருந்து பெறும் தண்ணீருக்கு சிங்கப்பூர் நியாயமான விலையைக் கொடுக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் பிபிசி தமிழிடம் பேசும்போது குறிப்பிட்டார். கடந்த 2014ஆம் ஆண்டு மலேசியாவின் சிலாங்கூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. அதனால் ஒன்றுவிட்டு ஒரு நாள் மட்டுமே தண்ணீர் விநியோகிக்கப்பட்டது. "தண்ணீர் பெறும் உரிமை சிங்கப்பூருக்கு உள்ளது" மலேசியா, சிங்கப்பூர் இடையேயான தண்ணீர் பகிர்வு விவகாரத்தை பெரிதுபடுத்தக் கூடாது என மலேசியாவின் தேசிய நீர் சேவைகள் ஆணையத்தின் தலைவராக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு பிபிசி தமிழிடம் தெரிவித்தார். மலேசியாவிடம் இருந்து தண்ணீர் பெறும் உரிமை சிங்கப்பூருக்கு உள்ளதாக அவர் குறிப்பிட்டார். இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் பிறந்த கதை தெரியுமா? புரோட்டீன் பவுடர் சாப்பிடுவதால் பக்கவிளைவுகள் ஏற்படுமா? "உலகில் உள்ள இயற்கை வளங்களுக்கு எந்த நாடும் தனிப்பட்ட வகையில் உரிமை கொண்டாடக்கூடாது. தண்ணீருக்கும் இது பொருந்தும். "தண்ணீர் இயற்கை அளித்த கொடை. சிங்கப்பூர் தண்ணீர் கேட்கிறது எனில், அது அந்நாட்டின் உரிமை. மனித நேயத்தின் அடிப்படையில் மலேசியா இதைப் பரிசீலிக்க வேண்டும். முன்னாள் பிரதமர் இந்த விவகாரம் தொடர்பாக தெரிவிக்கும் கருத்துகள் தேவையற்றவை. அவர் கூறும் கருத்துகளுக்கு வேறு காரணங்கள் இருக்கலாம். "மலேசியாவும் சிங்கப்பூரும் அண்டை நாடுகள். இரு தரப்பும் ஒத்துழைத்தால்தான் நல்லது. மலேசியாவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் சிங்கப்பூரில் பணியாற்றுகின்றனர். எனவே இருதரப்பு நல்லுறவை பாதிக்கும் வகையில் யாரும் செயல்படக்கூடாது. பேச்சுவார்த்தையின் மூலம் இரு நாடுகளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும்," என்கிறார் சார்லஸ் சந்தியாகு. சிங்கப்பூர் தண்ணீருக்குரிய நியாயமான விலையை அளிக்க வேண்டும் பட மூலாதாரம்,GETTY IMAGES சிங்கப்பூருக்கு தண்ணீர் வழங்கும் மலேசியாவின் எல்லை மாநிலமான ஜோகூரிலும் தற்போது தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதாகச் சொல்கிறார் மலேசிய முன்னாள் நீர், நிலம் மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த டாக்டர் சேவியர் ஜெயகுமார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், மலேசியா வழங்கும் தண்ணீருக்கு ஏற்ற நியாயமான விலையை சிங்கப்பூர் அளிக்க வேண்டும் என்றார். "இந்தப் பிரச்சினை நீண்டகாலமாகவே உள்ளது. ஆனால் தற்போதைய நிலை என்னவென்றால், ஜோகூர் மாநிலம் தனது சொந்த மக்களின் தண்ணீர் தேவையை ஈடுகட்டவே சிரமப்படுகிறது. "இப்படிப்பட்ட சூழலில் இன்னொரு நாட்டுக்கு நம் தண்ணீரை விற்க வேண்டுமா? எனும் கேள்வி எழுகிறது. எங்களைப் பொறுத்தவரையில் ஜோகூரில் உள்ள மலேசிய குடிமக்களின் தேவையை முதலில் பூர்த்தி செய்வதற்குதான் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்போம். அதற்கும் மேல் உள்ள தண்ணீர் இருப்பைப் பொறுத்து, சிங்கப்பூருக்கு விற்பனை செய்யலாம். "இனிமேலும் சிங்கப்பூருக்கு மிகக் குறைவான விலையில் தண்ணீரை விற்க இயலாது. சந்தை விலைக்கு விற்பதுதான் சரியாக இருக்கும். "மலேசியாவில் மாநிலங்களுக்கு இடையே தண்ணீர் பகிர்வை ஊக்குவித்து வருகிறோம். நான் அமைச்சராக இருந்தபோதே இது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. உதாரணமாக பகாங் மாநிலத்தில் இருந்து ஜோகூர் மாநிலத்துக்கு தண்ணீர் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு நடக்கும்போது, ஜோகூரில் கூடுதல் நீர் இருக்கக்கூடும். அப்போதும்கூட நியாயமான விலைக்கு ஒப்புக்கொண்டால் சிங்கப்பூருக்கு தண்ணீர் கொடுப்போம்," என்கிறார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார். அடுத்து என்ன நடக்கும்? பட மூலாதாரம்,GETTY IMAGES இரு நாடுகளும் 1962, 1990 ஆண்டுகளில் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் 2061இல் முடிவுக்கு வரும். அதற்குள் தண்ணீர் தேவைக்காக மலேசியாவைச் சார்ந்திருப்பதை முற்றிலுமாக மாற்றி அமைக்க விரும்புகிறது சிங்கப்பூர். இதற்காக பல்வேறு திட்டங்களை அந்நாடு செயல்படுத்தி வருகிறது. அவற்றுள் கழிவுநீரை குடிநீராக மாற்றும் திட்டம் முக்கியமானது. மேலும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டமும் நடைமுறையில் உள்ளது. இதற்காக இத்தீவு நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுத்திகரிப்பு ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் 2061க்குள் தண்ணீர் விவகாரத்தில் தன்னிறைவு அடைய வேண்டும் என்பதே அந்நாட்டின் இலக்கு. இரு நாடுகளுக்கும் இடையே கடல்சார், விமானப் போக்குவரத்து, வான்வெளி எல்லை சார்ந்த சிக்கல்கள், இரு நாடுகளுக்கும் இடையேயான கடற்பகுதியில் அமைந்துள்ள சில தீவுப் பகுதிகளுக்கு உரிமை கோருவது தொடர்பான வழக்குகளும் உள்ளன. தண்ணீருக்கான புதிய விலையை நிர்ணயிப்பதில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை எனில், அனைத்துலக நடுவர் மன்றத்துக்குச் செல்ல மலேசியா நடவடிக்கை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. தண்ணீர் விலையை உயர்த்தியே ஆக வேண்டும் என மலேசியா வலியுறுத்தும் நிலையில், வருங்காலத்தில் இதற்கு உடன்படத் தயார் எனும் தனது நிலைப்பாட்டில் சிங்கப்பூர் உறுதியாக நிற்பதாக துறைசார் நிபுணர்கள் கூறுகின்றனர். ஒட்டுமொத்தத்தில், இருதரப்பு உறவில் உறுத்தலாக நீடித்து வரும் இந்த விவகாரத்துக்கு நேரடிப் பேச்சுவார்த்தை அல்லது நடுவர் மன்றம் மூலம் இணக்கமான தீர்வை மிக விரைவில் எட்டுவதே இரு தரப்புக்கும் நன்மை பயக்கும் என அந்நிபுணர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். https://www.bbc.com/tamil/global-62052917
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.