Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. Published By: VISHNU 12 JAN, 2024 | 03:58 PM யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தையில் சிறு பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் தமக்கு நல்லதொரு இடத்தினை ஒதுக்கி தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். திருநெல்வேலி சந்தையில் நீண்டகாலமாக சிறு பொருட்களை வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளுக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர், பிரதேச சபையினால் சந்தைக்குள் வேறு இடம் ஒன்று வியாபார நடவடிக்கைக்காக ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது. முன்னர் பிரதான வாயிலுக்கு அருகில் அவர்கள் வியாபாரம் செய்து வந்த வேளை , சந்தைக்கு வந்து செல்வோர் அவர்களிடம் பொருட்களை வாங்கி செல்ல இலகுவாக இருந்தது. தற்போது ,அவர்கள் முன்னர் வியாபாரம் செய்த இடங்கள் வாகன தரிப்பிட பகுதியாகவும் , சந்தையில் இருந்து பொருட்களை ஏற்றி இறக்கும் வாகன தரிப்பிடமாகவும் மாற்றப்பட்டுள்ளது. அந்த பகுதியில் வியாபாரம் செய்து வந்தவர்களுக்கு சந்தைக்குள் பிறிதொரு இடத்தினை பிரதேச சபை ஒதுக்கி கொடுத்துள்ளது. புதிதாக ஒதுக்கி கொடுக்கப்பட்ட இடமானது , சந்தையின் ஒதுக்கு புறமான பகுதி, அங்கு தமக்கு வியாபாரம் நடைபெறவில்லை. இட வாடகையாக முன்னர் 80 ரூபாய் வாங்கியவர்கள் தற்போது 150 ரூபாய் வாங்குகின்றார்கள். மின்சார வசதிகள் கூட செய்து தரவில்லை. எமது வியாபார நடவடிக்கைக்காக சந்தைக்குள் நல்லதொரு இடத்தினை ஒதுக்கி தர பிரதேச சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர். https://www.virakesari.lk/article/173793
  2. இலங்கையின் சவாலான சீர்திருத்தங்கள் சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன - ஜப்பானிய நிதியமைச்சர் Published By: VISHNU 12 JAN, 2024 | 03:20 PM இலங்கையின் சவாலான சீர்திருத்தங்கள் சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், ஜப்பானிய நிதியமைச்சர் Suzuki Shunichi தெரிவித்தார். இலங்கையின் பொருளாதாரம் கணிசமாக முன்னேற்றம் கண்டிருப்பதாகவும் இதற்கு ஜனாதிபதி வழங்கிய சிறந்த தலைமைத்துவத்தை பாராட்டுவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வியாழக்கிழமை (11) சந்தித்த ஜப்பான் நிதி அமைச்சர் Suzuki Shunichi தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் முதலாவது மீளாய்வை இலங்கை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாகவும், இலங்கையின் சவாலான சீர்திருத்தங்கள் சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், ஜப்பானிய நிதியமைச்சர் Suzuki Shunichi தெரிவித்தார். இலங்கையின் பொருளாதார நிலைமையில் இந்த சாதகமான முன்னேற்றம் நம்பிக்கைக்குரியது என்றும், இது இலங்கை மீதான உத்தியோகபூர்வ மற்றும் தனியார் கடன் வழங்குநர்களின் சர்வதேச நம்பிக்கையை மேம்படுத்த சாதகமாக இருப்பதாகவும் ஜப்பான் நிதியமைச்சர் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/173788
  3. கெஹெலியவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு சர்ச்சைக்குரிய மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைப்பாடு முன்வைத்துள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்டோர் இதன்போது சென்றிருந்தனர். இன்று முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://thinakkural.lk/article/287995
  4. அனைத்து பேருந்துகளிலும் CCTV கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அண்மைக் காலமாக வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோக சம்பவங்கள் பாரிய அளவு அதிகரித்துள்ள நிலையில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/287971
  5. வெள்ளத்தில் சிக்கி சீமெந்து, மாவு லொறிகள் விபத்து ; 600 சீமெந்து மூடைகள் நாசம் 12 JAN, 2024 | 01:31 PM திருகோணமலையில் இருந்து சீமெந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வாழைச்சேனை பகுதியில் வெள்ளத்தில் சிக்கியதில் லொறி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் லொறியில் ஏற்றிச்செல்லப்பட்ட 600 சீமெந்து மூடைகளும் நாசமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் வாழைச்சேனையில் மாவு ஏற்றிச் சென்ற லொறியொன்றும் வெள்ளத்தில் சிக்கியதில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்துக்குள்ளான லொறியில் உள்ள மாவை மற்றுமொரு லொறிக்கு மாற்றுவதற்கான முயற்சிகள் இடம்பெற்றுவருவதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/173778
  6. யேமனில் உள்ள ஹூதி நகரங்களுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நடத்திய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் அரேபிய கடலில் எண்ணெய் கப்பலை ஈரான் கைப்பற்றிய செய்தி ஆகியவற்றால் உலகளாவிய எண்ணெய் எதிர்காலம் இன்று கடுமையாக உயர்ந்தது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் ஃபியூச்சர்ஸ் ஆரம்ப வர்த்தகத்தில் ஒரு பீப்பாய்க்கு $74ஐ நோக்கி 2% உயர்ந்தது மற்றும் ப்ரெண்ட் எதிர்காலம் ஒரு பீப்பாய்க்கு $78ஐ நோக்கி 1.5% உயர்ந்தது. செங்கடலில் கப்பல் போக்குவரத்து மீதான ஹூதி தாக்குதல்களுக்கு பதிலடியாக யேமனில் உள்ள 12 இலக்குகள் மீது அமெரிக்க தலைமையிலான கூட்டணி இன்று தாக்குதல்களை நடத்தியது. பதிலடி கொடுப்போம் என ஹூதி துணை வெளிவிவகார அமைச்சர் சபதம் செய்தார். இதற்கிடையில், 145,000 தொன் மசகு எண்ணெய் ஏற்றப்பட்ட செயின்ட் நிகோலஸ் என்ற மார்ஷல் தீவுகளின் கொடியுடன் கூடிய டேங்கரை ஈரானிய கடற்படைப் படைகள் நேற்று கைப்பற்றியதாக ஈரானிய அரசாங்க செய்தி நிறுவனமான IRNA அறிவித்தது. இந்த டேங்கர் ஈராக்கில் உள்ள பாஸ்ராவில் இருந்து புறப்பட்டு துர்க்கியே நோக்கிச் சென்றது, அது ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையில் ஓமன் வளைகுடாவில் நுழைந்த உடனேயே கைப்பற்றப்பட்டது. அதில் 18 பிலிப்பைன்ஸ் மற்றும் ஒரு கிரேக்க குடிமகன் அடங்கிய குழுவினர் உள்ளனர். https://thinakkural.lk/article/287933
  7. Published By: VISHNU 12 JAN, 2024 | 03:19 PM தனியார் தொலைத்தொடர்பு நிலையத்தினால் நடத்தப்பட்ட பண பரிசு குலுக்கலில், பெருந்தொகை பணம் கிடைத்துள்ளது. அந்த பணத்தை பெற்றுக்கொள்ள 18 இலட்ச ரூபாய் வரி கட்ட வேண்டும். அந்த பணத்தை உடனே வைப்பிலிடுங்கள் என கூறி, 18 இலட்ச ரூபாயை மோசடி செய்த குற்றத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு, தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், தன்னை தனியார் தொலைத்தொடர்பு நிலையமொன்றின் பிரதிநிதி என கூறி, தங்கள் நிறுவனத்தால் நடத்தப்பட்ட பரிசு குலுக்கலில் , உங்களுக்கு பெருந்தொகை பணம் விழுந்துள்ளது. அந்த பணத்தினை பெற வரியாக 18 இலட்சம் ரூபாயை செலுத்த வேண்டும். 18 இலட்ச ரூபாயை செலுத்தினால், பரிசு பணத்தினை பெற முடியும் என கூறி, கணக்கிலக்கம் ஒன்றினையும் வழங்கியுள்ளார். அதனை நம்பிய நபர் குறித்த கணக்கு இலக்கத்திற்கு 18 இலட்ச ரூபாய் பணத்தினை வைப்பிலிட்டுள்ளார். அதன் பின்னர் தன்னுடன் தொடர்பு கொண்ட இலக்கத்திற்கு தொடர்பை ஏற்படுத்த முயன்ற போது, அந்த இலக்கம் செயலிழந்து காணப்பட்டது. அதனை அடுத்து, குறித்த தனியார் தொலைத்தொடர்பு நிலையத்திற்கு சென்று , விசாரித்த போதே , தான் ஏமாற்றப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், தென்னிலங்கையை சேர்ந்த நபர் ஒருவரை கைது செய்திருந்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் மற்றும் தொடர் விசாரணைகளின் அடிப்படையில், கைது செய்யப்பட்ட நபரின் உறவினரான மற்றுமொரு நபரை, மோசடிக்கு துணை போன குற்றச்சாட்டில் கைது செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/173787
  8. ஏமனுக்குள் புகுந்து இரான் ஆதரவு பெற்ற ஹூத்திகள் மீது அமெரிக்கா, பிரிட்டன் பல்முனை தாக்குதல் பட மூலாதாரம்,MINISTRY OF DEFENCE/PA WIRE 12 ஜனவரி 2024, 06:35 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்க மற்றும் பிரிட்டன் படைகள் ஏமனில் உள்ள ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் மீது பல்முனை தாக்குதல்கள் நடத்தியுள்ளன. கடந்த நவம்பவர் மாதம் முதல், செங்கடலில் பயணிக்கும் கப்பல்கள் மீது ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்தி வரும் தாக்குதல்களுக்கான எதிர்வினையே இது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மக்களை பாதுகாக்கவும், சர்வதேச வர்த்தகத்தை உறுதி செய்யவும், இந்த தாக்குதல்களை தீவிரப்படுத்த தயங்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார். இந்த தாக்குதல்களுக்கு நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, கனடா, பஹ்ரைன் ஆதரவு அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஏன் செங்கடலில் தாக்குதல்கள் நடைபெறுகின்றன? கடந்தாண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் தொடங்கியதை அடுத்து, ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் தங்கள் தாக்குதல்களை அதிகரித்தனர். இந்த தாக்குதல்களை நடத்தும் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் தங்களை ஹமாஸ் ஆதரவாளர்கள் என்று அழைத்துக்கொள்கின்றனர். ஏமனின் பெரும்பாலான பகுதிகளை அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இஸ்ரேலை நோக்கி செல்லும் கப்பல்களை குறிவைத்துத் தாக்குதல் நடத்துவதாக அவர்கள் தெரிவித்தனர். எனினும், ஹூத்தி கிளர்ச்சியாளர்களால் தாக்கப்பட்ட அனைத்துக் கப்பல்களும் உண்மையில் இஸ்ரேலை நோக்கிச் சென்றதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் இரானின் ஆதரவு பெற்றதாக அறியப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஏமனில் எங்கெல்லாம் தாக்குதல்கள் நடத்தப்பட்டன? அக்டோபர் மாதம் முதல் செங்கடலில் சர்வதேச கடல்வழித்தடத்தில் சென்ற 27 கப்பல்களை ஹூத்திகளை தாக்கியுள்ளன என்றும் இதனால் 55 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் சர்வதேச வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. பிரிட்டனின் ராயல் விமானப் படையின் போர்விமானங்கள், குறி வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலை நடத்த உதவி புரிந்ததாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல்கள் வரையறுக்கப்பட்டவை, அவசியமானவை மற்றும் தற்காப்புக்கு தேவையான அளவில் நடத்தப்பட்டவை என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். கடல் வழி சுதந்திர பயணத்துக்கும், தடையில்லா வர்த்தகத்துக்கும் பிரிட்டன் துணை நிற்கும் என்று கூறியிருந்தார். சைப்ரஸிலிருந்து பறந்த, பிரிட்டனின் ராயல் விமானப்படையின் நான்கு டைஃபூன் ஜெட் விமானங்கள் இரண்டு ஹூத்தி இலக்குகள் மீது குண்டு வீசின. இந்த தாக்குதல்கள் ஏமனின் தலைநகர் சனா, செங்கடலில் உள்ள ஏமனின் துறைமுகம் ஹுதயா, தமர் நகரம், சாதா நகரம் ஆகிய இடங்களில் நடைபெறுகின்றன. ஜனவரி 11ம் தேதி காலை 2.30 மணியளவில் அமெரிக்க போர்க்கப்பல் தோமாஹாக் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது. அமெரிக்க ஜெட் விமானங்கள் 12க்கும் மேற்பட்ட இடங்களை குறி வைத்து தாக்கின என்று தாக்குதல்கள் குறித்த விவரங்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. செங்கடலில் வர்த்தகப் போக்குவரத்தை சீர் செய்ய இந்த தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படலாம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஹூத்தி வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ஹுசைன் அல்-எஸ்ஸி, இந்த அப்பட்டமான தாக்குதல்களுக்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார். பட மூலாதாரம்,REUTERS அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் லாய்ட் ஆஸ்டின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டு ராணுவ நடவடிக்கைகள் ஹூத்திகளை வலுவிழக்க செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படுகின்றன என தெரிவித்திருந்தார். ஹூத்திகளின் ஆளில்லா விமானம், ஆளில்லா கப்பல், தரை வழி தாக்குதல் நடத்தும் ஏவுகணை, கடலோர மற்றும் வான்வழி கண்காணிப்பு கருவிகள் ஆகியவற்றை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அவர் விளக்கியுள்ளார். உடல் நலம் குன்றியுள்ள ஆஸ்டின் , மருத்துவமனையிலிருந்து இந்த தாக்குதல்களை நேரடியாக மேற்பார்வையிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஹூத்திகளுக்கு எதிரான பத்து நாடுகள் கூட்டறிக்கை ஆஸ்திரேலியா, பஹ்ரைன், கனடா, டென்மார்க், ஜெர்மனி, நெதர்லாந்து, நியூசிலாந்து, தென் கொரியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய அரசுகள் இணைந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன. ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான சர்வதேச சமூகத்தின் ஒத்த கருத்து இருப்பதாக கூறும் அந்த அறிக்கை, கடந்த மாதம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில், செங்கடலில் கப்பல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை ஹூத்திகள் நிறுத்த வேண்டும் என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சுட்டிக்காட்டியது. ஹூத்திகள் மீது நடத்தப்படும் பல்முனை தாக்குதல்கள், தனிப்பட்ட மற்றும் ஒட்டுமொத்த தற்காப்புக்காக நடத்தப்படுவது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “உலக மிக முக்கியன் கடல்வழிபாதைகளில் ஒன்றில் சர்வதேச வர்த்தகம் மற்றும் சர்வதேச மாலுமிகளின் உயிருக்கு அச்சுறுத்துலாக இருக்கும் ஹூத்திகளின் திறன் மற்றும் சக்தியை வலுவிழக்க செய்யவே இந்த தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன” என்று அந்த அறிக்கையில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. செங்கடலில் நிலவும் பதற்றத்தை தணித்து நிலைமைகளை சீராக்கும் நோக்கில் இந்த தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹூத்திகள் மீது நடத்தப்படும் இந்த தாக்குதல்களுக்கு, அவர்கள் தரப்பிலிருந்து எந்த எதிர்வினையும் வரவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். பட மூலாதாரம்,FAREED KOTB/ANADOLU VIA GETTY IMAGES சவுதி அரேபியா என்ன சொல்கிறது? இதற்கிடையில், செங்கடலில் தாக்குதல்களை அதிகரிக்க வேண்டாம் என்று அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு சவுதி அரேபியா அறிவுறுத்தியுள்ளது. அதன் வெளியுறவுத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செங்கடலில் பாதுகாப்பான சூழல் நிலவுவதன் முக்கியத்துவத்தை சவுதி அரேபியா உணர்கிறது. ஏமனில் நடைபெறும் பல்முனை தாக்குதல்கள் குறித்து சவுதி அரேபியா கவலைக் கொள்கிறது. எனவே அமெரிக்கா மற்றும் அதன் உடன் நிற்கும் நாடுகள் தாக்குதல்களை தீவிரப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார். ஹூத்திகள் என்ன கூறுகிறார்கள்? ஹூத்திகள் இந்த தாக்குதல்களுக்கு பயப்படவில்லை என்று தெளிவாக தெரிகிறது. ஹூத்தி அதிகாரிகளில் ஒருவர், “அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் கற்பனைக்கு அப்பாற்பட்டு அவர்களின் எதிர்பார்ப்புகளை விக பெரியதாக இந்த போர் இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார். ஹூத்திகளின் செய்தித் தொடர்பாளர் முகமது அப்துல்சலாம், “ஏமனுக்கு எதிரான இந்த தாக்குதல்களுக்கு எந்தவித நியாயமும் கிடையாது. செங்கடல் மற்றும் அரபிக்கடல்களில் சர்வதேச போக்குவரத்துக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது. இஸ்ரேல் கப்பல்கள் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலத்தீனின் துறைமுகங்கள் நோக்கி செல்லும் கப்பல்கள் மீது தான் தாக்குதல்கள் நடத்தப்பட்டன, அது இனியும் தொடரும். அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தங்கள் தாக்குதல்களினால், பாலத்தீன் மற்றும் காஸாவுக்கு ஆதரவு அளிப்பதை ஏமன் கைவிடும் என்று நினைப்பது தவறு” என்று X தளத்தில் பதிவிட்டிருந்தார். பிற நாடுகள் என்ன கூறுகின்றன? இரான் வெளியுறவுத்துறை அமைச்சகம், ஏமன் மீதான தாக்குதல்களை கண்டித்துள்ளது. “ஏமனின் இறையாண்மையை, பிராந்திய உரிமையை மீறும் செயலாகும். சர்வதேச சட்டங்களையும் இந்த தாக்குதல்கள் மீறுகின்றன. இந்த தாக்குதல்களின் அச்சமும், நிலையற்றத்தன்மையுமே” என்று அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நாசர் கனானி தெரிவித்துள்ளார். இரானின் ஆதரவு பெற்ற லெபனான் ஆயுதக்குழு ஹிஸ்புல்லாவும் இந்த தாக்குதல்களை கண்டித்துள்ளது. “காஸா மீது சியோனிச எதிரி நடத்திய படுகொலைகளுக்கும் துன்புறுத்தல்களுக்கும் அமெரிக்கா முழு உடந்தை என்பது இந்த தாக்குதல்கள் காட்டுகின்றன” என்று ஹிஸ்புல்லா கூறியுள்ளதாக ராய்டர்ஸ் செய்தி கூறுகிறது. இராக் பிரதமர் அலுவலகம் “இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு இடையிலான மோதலை இந்த பிராந்தியம் முழுவதும் நீட்டிக்கிறது அமெரிக்கா” என்று கூறியுள்ளது. பிரிட்டன் ராணுவத்தின் முன்னாள் தலைவர் லார்ட் டன்னட் பிபிசியிடம் பேசுகையில், இரான் இந்த விவகாரத்தில் முழுமையாக ஈடுபட்டுள்ளது. ஹூத்திகள் மட்டுமல்ல, ஹிஸ்புல்லா, ஹமாஸ் ஆகியவற்றுக்கான ஆதரவையும் வழங்குகிறது. இந்த தாக்குதல்கள் துல்லியமாக கணக்கிடப்பட்டு நடத்தப்படுபவையாக இருந்தால், செங்கடலில் நிலவும் பிரச்னையை துரிதமாக தீர்க்க உதவும். மீண்டும் நமது கவனத்தை இஸ்ரேல் காஸா போரை கட்டுப்படுத்தப்பட்டதாக வைத்திருக்க செலுத்த முடியும்” என்று கூறினார். பிரிட்டன் ஆயுதமேந்தி படைகளின் அமைச்சர் ஜேம்ஸ் ஹேப்பி “நமது நாட்டின், படைகள் மற்றும் அரசு அதிகாரிகள் இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக திட்டமிட்டு நடத்தியுள்ளனர். இதில் நிறைய ஆபத்துகள் இருந்தன. நேற்று இரவு அவர்கள் செய்த காரியத்துக்காக நாம் பெருமைப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார். https://www.bbc.com/tamil/articles/cnd7771x7zko
  9. யேமனில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு எதிராக அமெரிக்க பிரிட்டன் தாக்குதல் Published By: RAJEEBAN 12 JAN, 2024 | 08:26 AM யேமனில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு எதிராக அமெரிக்காவும் பிரிட்டனும் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன. செங்கடல் பகுதியில் ஹெளத்திகிளர்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ள தாக்குதல்களிற்கு பதிலடியாக இந்த தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார் அமெரிக்க போர்க்கப்பல்கள் குரூஸ் ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டன அமெரிக்க விமானங்கள் 12 இலக்குகள் மீது தாக்குதலை மேற்கொண்டன என தகவல்கள் வெளியாகின்றன. யேமனின் தலைநகர் சனா ஹெளத்திகளின் கோட்டையான செங்கடல் நகரம் குடாய்டா ஆகியவற்றின் மீதே தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. சைப்பிரசில் உள்ள தளத்திலிருந்து புறப்பட்ட பிரிட்டனின் போர் விமானங்களும் தாக்குதலை மேற்கொண்டுள்ளன. அவுஸ்திரேலியா கனடா பஹ்ரைன் நெதர்லாந்து உட்பட பல நாடுகள் ஆதரவை வழங்கியுள்ளன. https://www.virakesari.lk/article/173743
  10. Published By: VISHNU 11 JAN, 2024 | 07:32 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) நாட்டின் மொத்த சனத்தொகையில் 22,3 வீதமானவர்கள் கடனாளியாகி உள்ளனர். அதில் பெருந்தோட்டங்களில் 42,3 வீதமானவர்கள் கடனாளியாகி உள்ளனர். உழைப்புக்கு ஏற்ற சம்பளம் வழங்கப்படாமையே இதற்கு காரணமாகும் என எம். உதயகுமார் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் மந்தபோசணையை இல்லாது செய்வது தொடர்பில் இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், அதிகாரமோகம் காரணமாக பல்வேறு சதித்திட்டங்கள் மூலம் மக்களை ஏமாற்றி ஆட்சி பீடம் ஏறிய அரசாங்கம் தற்போது நம்பி வாக்களித்த மக்களை நடுத்தெருவில் விட்டுள்ளது. வாழ்க்கைச்செலவு அதிகரித்து மக்கள் தள்ளாடி வருகின்றனர். மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தின் அறிக்கையின் பிரகாரம் நாட்டில் 30இலட்சத்தி 29ஆயிரத்தி300 குடும்பங்கள் கடனாளி ஆகியுள்ளன.அ தில் 6இலட்சத்தி 97ஆயிரத்தி 300 குடும்பங்கள் தங்களின் அன்றாட உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்கே கடன் பெற்றுள்ளார்கள்.இது பாரதூரமான விடயமாகும். அத்துடன் வாங்கிய கடனை மீள செலுத்துவதற்காக 3இலட்சம் குடும்பங்கள் மீண்டும் கடன்பெற்றுள்ளதாக குறித்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று 9இலட்சத்தி 70ஆயிரம் குடும்பங்கள் அடமான முறையில் கடன்பெற்றுள்ளார்கள். வங்கிகளில் 97ஆயிரம் குடும்பங்களும் நிதி நிறுவனங்களில் 2இலட்சத்தி 72ஆயிரத்தி 500 குடும்பங்களும் பண தரகர்களிடமிருந்து 3இலட்சத்தி 3500 குடும்பங்களும் கடன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் நாட்டின் மொத்த சனத்தொகையில் 22,3 வீதமானவர்கள் கடனாளியாகி உள்ளனர். அதில் நகர் புறங்களில் சுமார் 24,3 சதவீதமானவர்கள் கடனாளியாகி உள்ள நிலையில் பெருந்தோட்டங்களில் அது 42,3 வீதமானவர்கள் கடனாளியாகி உள்ளனர். பெருந்தோாட்டங்களில் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லாமையே இதற்கு காரணமாகும். அத்துடன் கடனாளியாகி உள்ளது மாத்திரமல்லாது பெருந்தோட்டங்களில் மந்தபோசணை, வறுமை, போஷாக்கின்மை என்பன அதிகரித்து காணப்படுகிறது. நாட்டுக்காக உழைத்த மலையக பெருந்தோட்ட மக்கள் இன்று கடனாளியாக மாறியுள்ளார்கள் என்றார். https://www.virakesari.lk/article/173738
  11. பட்டியல் சாதி இளைஞரை திருமணம் செய்த பெண்ணை புளியமரத்தில் தூக்கிட்டு கொலை செய்த பெற்றோர் - பிபிசி கள ஆய்வு படக்குறிப்பு, பட்டியல் சாதியைச் சேர்ந்த நவீனும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யாவும் கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வந்தனர் கட்டுரை தகவல் எழுதியவர், பிரபாகர் தமிழரசு பதவி, பிபிசி தமிழ் 11 ஜனவரி 2024 (எச்சரிக்கை: இந்தக் கட்டுரையின் சில உள்ளடக்கங்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக் கூடும்) பட்டியல் சாதியை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்ததற்காக மகளை கொலை செய்து யாருக்கும் தெரியாமல் எரித்த பெற்றோரை தஞ்சாவூர் மாவட்ட போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பூவாளுர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர். அவரது மகன் நவீன். இவர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர். இவர் கடந்த 7 ஆம் தேதி வாட்டத்திக்கோட்டை காவல்நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், பக்கத்து கிராமமான நெய்வவிடுதியைச் சேர்ந்த ஐஸ்வர்யா(19) என்ற பெண்ணை தான் திருமணம் செய்திருந்த நிலையில், பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து கொலை செய்துவிட்டு ஊருக்குள் யாருக்கும் தெரியாமல் சுடுகாட்டிற்கு கொண்டு சென்று எரித்துவிட்டதாக கூறியிருந்தார். அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், பெண்ணின் தந்தை பெருமாள் மற்றும் அவரது மனைவி ரோஜா ஆகியோர் இந்த கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதை உறுதி செய்து, கைது செய்துள்ளனர். பெருமாளும், அவரது மனைவியும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இச்சம்பவம் தொடர்பாக என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ள பிபிசி சார்பில் ஐஸ்வர்யாவின் சொந்த கிராமமான நெய்வவிடுதிக்கும், நவீனின் சொந்த கிராமமான பூவாளுருக்கும் நேரடியாகச் சென்றிருந்தோம். ஐஸ்வர்யா கொலை செய்யப்பட்டது எப்படி? இரண்டு கிராமத்திலும் தற்போதைய நிலவரம் என்ன? காவல்துறையினர் என்ன சொல்கிறார்கள்? படக்குறிப்பு, நவீன் கடந்த இரண்டு வருடங்களாக திருப்பூரில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றினார். என்ன நடந்தது? கடந்த 7 ஆம் தேதி வாட்டத்திக்கோட்டை காவல்நிலையத்தில் நவீன் புகார் கொடுத்துள்ளார். அதன்படி, "பட்டியல் சாதியைச் சேர்ந்த நவீனும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யாவும் கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வந்தனர். நவீன் கடந்த இரண்டு வருடங்களாக திருப்பூரில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றினார். ஐஸ்வர்யா கடந்த ஒன்றரை வருடங்களாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் உள்ள ஒரு தறி மில்லில் பணியாற்றினார். இந்நிலையில், நவீன் பட்டியல் பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் ஐஸ்வர்யாவின் அப்பாவும், உறவினர்களும், அவர்கள் இருவரும் காதலிப்பதைத் தெரிந்துகொண்டு அவர்களை பிரிப்பதற்காக திருப்பூர் வருவதாகக் கேள்விப்பட்டு, கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி அவரப்பாளையத்தில் உள்ள விநாயகர் கோயிலில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்" என்று அந்த புகார் மனுவில் நவீன் கூறியுள்ளார். படக்குறிப்பு, ஐஸ்வர்யாவை அவரது தந்தையான பெருமாள், புளியமரத்தடிக்கு இழுத்துச் சென்று தூக்கிட்டு கொலை செய்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர். ஐனவரி 2 ஆம் தேதி, ஐஸ்வர்யாவைத் தேடி பல்லடம் வந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள், பல்லடம் போலீசில் புகார் அளித்துள்ளனர். வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசார், ஐஸ்வர்யாவை நவீனிடமிருந்து அழைத்துச் சென்று, அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். “மதியம் 2 மணியளவில், ஐஸ்வர்யா, அவரது தந்தை மற்றும் அவரது உறவினர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்குள் சென்றனர். அரை மணிநேரம் கழித்து பல்லடம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து ஐஸ்வர்யாவை அவரது தந்தையும், உறவினர்களும் அழைத்துக்கொண்டு, வெளியே நின்றுகொண்டிருந்த ஒரு காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டனர்,” என நவீன் தனது புகாரில் கூறியுள்ளார். நவீன் புகாரின் அடிப்படையில் பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில், ஜனவரி 3 ஆம் தேதி அதிகாலையே ஐஸ்வர்யாவை கொலை செய்துவிட்டு, ஊருக்குள் யாருக்கும் தெரியாமல் சுடுகாட்டில் எரித்துவிட்டது தொடர்பாக தனக்கு தகவல் கிடைத்ததாகவும், அதனை உறுதிப்படுத்திய பின் பயந்துகொண்டு வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். படக்குறிப்பு, ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாளும், அவரது மனைவி ரோஜாவும் கைது செய்யப்பட்ட பின், சம்பவ இடத்திற்கு அழைத்து வந்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர் ஐஸ்வர்யாவுக்கு என்ன நடந்தது? ஐஸ்வர்யாவின் கிராமமான நெய்வாவிடுதிக்குள் நுழையும்போதே, போலீசார் நடமாட்டத்தை பார்க்க முடிந்தது. தொடர்ந்து போலீசார் வந்து செல்வதால், அப்பகுதியில் உள்ள அனைவரது வீட்டின் கதவுகளும் அடைக்கப்பட்டு இருந்தன. சம்பவம் நடந்ததாகக் கூறப்படும், நெய்வவிடுதி கிராமத்தின் மூலையில் இருந்த ஐஸ்வர்யாவின் வீட்டிற்கு சென்றோம். அங்கு பாதுகாப்பு பணிக்காக அமர்த்தப்பட்டிருந்த போலீசாரோ, யாரையும் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் அனுமதிக்கவில்லை. நவீனின் புகாரை பெற்று வழக்குப்பதிவு செய்த காவல் துறை துணை ஆய்வாளர் நவீன்பிரசாத் கொலை நடந்ததாகக் கூறப்படும் இடத்தை ஆய்வு செய்து கொண்டிருந்தார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், ஐஸ்வர்யா தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டதை உறுதி செய்தார். விசாரணை முடித்துவிட்டு கிளம்பிய அவரிடம், எங்கே வைத்து கொலை செய்தார்கள் எனக் கேட்க, “அதோ அங்க இருக்கே அந்த புளியமரம், அதில் தான் கயிற்றைப்போட்டு இழுத்திருக்கிறார்கள். தடயங்கள் உள்ளன. அருகில் செல்ல வேண்டாம்,”எனக் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார் நவீன் பிரசாத். படக்குறிப்பு, பிபிசி தமிழிடம் பேசிய காவல் ஆய்வாளர் ஐஸ்வர்யா தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டதை உறுதி செய்தார். தொடர்ந்து, அக்கம் பக்கத்தில் இருக்கும் மக்களிடம் பேச பிபிசி முயற்சித்தது. ஐஸ்வர்யாவின் வீட்டிற்கு அருகில் சிலர், கொலையை பார்த்ததை ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், ஐஸ்வர்யாவை அவரின் அப்பா இழுத்துச் சென்றதைப் பார்த்ததாகக் கூறினர். “தேதி ஞாபகம் இல்லை. அது ஒரு இரவு நேரம் தான். ஒரே கூச்சல். அந்த சத்தம் கேட்டுதான் வெளியே வந்து பார்த்தோம். அந்தப் பெண்ணை அப்படியே தரத்தரவென நேராக அந்த புளியமரத்துக்கிட்டத்தான் இழுத்துக்கிட்டு போனார். அதற்குள் என் கணவர் என்னை உள்ளே போகச் சொல்லிவிட்டார்,” என்றார் அந்த பெயர் குறிப்பிட விரும்பாத பெண். ஐஸ்வர்யா கொல்லப்பட்டது எப்படி? இந்த கொலை வழக்கை விசாரித்து வரும் விசாரணை அதிகாரிகளில் ஒருவர் பிபிசி தமிழிடம் பேசினார். அவர், பெருமாளும், அவரது மனைவி ரோஜாவும் கைது செய்யப்பட்ட பின், சம்பவ இடத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தபோது, கொலை நடந்த நேரத்தில் இருவரும் என்ன செய்தார்கள் என்பதை செய்து காண்பித்ததாகக் கூறினார். “அவர் (பெருமாள்) அந்தப் பெண்ணை காரைவிட்டு கீழே இறங்கியதும் வீட்டிற்குள்கூட அழைத்துச் செல்லவில்லை. நேராக புளியமரத்தடிக்குத்தான் இழுத்துச் சென்றுள்ளார். அங்கு போகும்போதே, மனைவியை நாற்காலியும், கயிறும் எடுத்துவரச் சொல்லியுள்ளார். மனைவி கயிறைக்கொடுக்க, அந்த மரத்தின் கிளையில் கயிற்றைப்போட்டு தூக்கு போடுவதைப்போல சுருக்கு போட்டிருக்கார்,” என விசாரணையின்போது பார்த்ததைப் பகிர்ந்தார் அந்த அதிகாரி. தொடர்ந்து பேசிய அவர், “அப்பாவை மன்னிச்சுருமா. எனக்கு வேற வழி தெரியல. நீயே மாட்டிக்கோமா என மிரட்டியுள்ளார். பின் அந்தப் பெண் கழுத்தில் மாட்டிக்கொள்ள, இவன் கயிற்றின் மறுமுனையைப் பிடித்து, இழுத்து மரத்தில் கட்டியுள்ளார். பின், அந்தப்பெண்ணின் பெரியம்மா ஒருவர் வந்து அந்தக்கயிறை அரிவாளால் வெட்டியுள்ளார்." "அதில், ஐஸ்வர்யா கீழே விழுந்துள்ளார். விழுந்த பெண்ணிற்கு உயிர் இருப்பதை தெரிந்துகொண்டு கழுத்தை நெரித்துக்கொலை செய்துள்ளார். இவை அனைத்தையும் அவனே சம்பவம் நடந்த இடத்தில் செய்து காண்பித்தான். இதைத்தான் வாக்குமூலமாகவும் கொடுத்துள்ளார்,” என்றார் அந்த விசாரணை அதிகாரி. பிபிசியிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத்தும் அதனை உறுதிப்படுத்தினார். “பெண்ணின் தந்தை கொடுத்த வாக்குமூலத்தின்படி, அவர்கள் அந்தப் பெண்ணை தூக்கிலிட்டு, பின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். அவர் கூறிய வாக்குமூலத்தை, மற்றவர்களின் வாக்குமூலங்களோடு ஒப்பிட வேண்டும். இதில், வேறு யாரேனும் ஈடுபட்டுள்ளனரா, இது முன்னதாகவே திட்டமிடப்பட்டு நடந்ததா உள்ளிட்டவையை விசாரித்து வருகிறோம். இது திட்டமிடப்பட்டு இருந்தால், கூடுதலாக சில பிரிவுகளின் கீழ் வழக்கு மாற்றப்படும். ஆனால், அதனை தற்போதே முடிவு செய்ய முடியாது,” என்றார். பள்ளி காலம் முதலே சாதி சொல்லி விலக்கி வைத்த பெற்றோர் இச்சம்பவத்தில், புகார்தாரராகவும், முக்கிய சாட்சியாகவும் உள்ள ஐஸ்வர்யாவின் கணவர் நவீனின் கிராமத்திற்குச் சென்றோம். கிராமத்தின் நுழைவாயிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர். “உயர் அதிகாரிகளின் அனுமதியின்றி வெளியாட்கள் உள்ளே செல்லக் கூடாது,” என்றார் பாதுகாப்புக்காக இருந்த அந்த காவல்துறை அதிகாரி. உரிய அனுமதிபெற்று நவீனின் பூவாளுர் கிராமத்திற்கள் நுழைந்தோம். நவீனின் வீட்டிற்கு அருகே சென்றதும் காவல்துறையினர் சுற்றிவளைத்து, காட்சிகள் பதிவு செய்வதற்கு அனுமதி மறுத்தனர். “தற்போது, இரண்டு கிராமங்களுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுவதால், யாரையும் அவர்களின் வீட்டிற்கு அருகே அனுமதிப்பதில்லை,” என்றார் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை அதிகாரி. தொடர்ந்து, காவல்துறையின் விசாரணையில் உள்ள நவீனின் தந்தை பாஸ்கரை வாட்டத்திக்கோட்டை காவல்நிலையத்தில் வைத்து சந்தித்தோம். அப்போது அவர், தன் மகனை ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே எச்சரித்ததாகக் கூறினார். படக்குறிப்பு, இந்தப் பிரச்னைக்கு காரணமே திருமணமானது ஊரில் உள்ள அனைவருக்கும் தெரிந்தது தான் என்றார் பூவாளுரைச் சேர்ந்த பெண். நவீனின் தந்தை பாஸ்கர், பிபிசி தமிழிடம் பேசும் போது, “அவர்கள் இருவரும் வேறு வேறு பள்ளியில்தான் படித்தார்கள். ஆனால், பள்ளிக்கு ஒரே அரசுப்பேருந்தில் செல்லும் போது தான் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே இரு வீட்டாரும் எச்சரித்தோம். பின், எனக்கு பயமாகிவிட்டது. அதனால், அவனை நான் பத்தாம் பகுப்புக்கு மேல் பட்டுக்கோட்டையில் பள்ளிக்கு அனுப்பாமல், வேறு பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் அனுமதித்தேன். ஆனால், கொரோனாவிற்கு பிறகு, அவன் கல்லூரி செல்வதை நிறுத்திவிட்டு, வேலைக்குச் செல்லத் தொடங்கிவிட்டான்,” என்றார் இச்சம்பவத்திற்கு முன், நவீனின் தந்தை பாஸ்கரும், ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாளும் ஒருவருக்கு ஒருவர் தெரிந்தவர்களாகவே இருந்துள்ளனர். “இருவரும் நெருங்கிய நண்பர்கள் இல்லை என்றாலும், பக்கத்து பக்கத்து கிராமம் என்பதால் நல்ல பழக்கம்தான். இந்த சம்பவம் தெரிந்தபோது கூட, இரண்டு பேரும்போய் யாருக்கும் தெரியாமல் அழைத்து வந்துவிடுவோம் என்று என்னை அழைத்தான். ஆனால், அப்போது இவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை,” என்றார் பாஸ்கர். நவீன் - ஐஸ்வர்யா திருமணம் எப்படி ஊருக்கு தெரிந்தது? இந்தப் பிரச்னைக்கு காரணமே திருமணமானது ஊரில் உள்ள அனைவருக்கும் தெரிந்தது தான் என்றார் பூவாளுரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி. “இதுபோன்று பட்டியல் சாதியினர், பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்களை இதற்கு முன்பும் கூட திருமணம் செய்துள்ளனர். அவர்கள் பெரும்பாலும் சில வருடங்களுக்கு ஊருக்குள் வர மாட்டார்கள். ஏன் அவர்கள் திருமணம் செய்தது கூட ஊருக்குள் யாருக்கும் தெரியாது. ஆனால், இவர்கள் விஷயத்தில், இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளும் வீடியோ வாட்ஸ் அப் மூலம் ஊரில் உள்ள அனைவருக்கும் பரவிவிட்டது. அதுதான் இவ்வளவு பெரிய சம்பவத்திற்கு காரணம்,” என்றார் தமிழ்ச்செல்வி. படக்குறிப்பு, பல்லடம் காவல் நிலைய ஆய்வாளர் முருகையா பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் பல்லடம் காவல் ஆய்வாளர் இடைநீக்கம்: நடந்தது என்ன? பல்லடம் காவல்நிலையத்தில் இருந்து தான் ஐஸ்வர்யா அழைத்துச் செல்லப்பட்டதாகவும், தனக்கு கொலை மிரட்டல் இருப்பதாக போலீசார் கூறியதாகவும் நவீன் தனது புகார் மனுவில் கூறியிருந்தார். இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய பல்லடம் டிஎஸ்பி விஜயகுமார், " பெண்ணின் தந்தை பெருமாள் கொடுத்த புகாரின் பேரில் ஐஸ்வர்யா மற்றும் நவீனை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்திருந்தோம். ஆனால், நவீன் விசாரணைக்கு ஆஜராகவில்லை. ஐஸ்வர்யாவிடம் நாங்கள் விசாரணை நடத்திய போது அவர் எங்களிடம், நான் என் பெற்றோருடன் ஊருக்கு செல்கிறேன். எங்கள் திருமணம் குறித்து பெற்றோரிடம் பேசி ஒப்புக்கொள்ள வைக்கிறேன் எனக்கூறினார். ஐஸ்வர்யாவின் சம்மதத்தின் பேரில் தான் அவரை பெற்றோருடன் அனுப்பி வைத்தோம். நாங்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கவில்லை," என்றார். 'கொலை மிரட்டல் இருந்ததால் தான் நவீன் விசாரணைக்கு ஆஜராகவில்லையா?' என்ற கேள்வியை டிஎஸ்பி விஜயகுமாரிடம் நாம் முன்வைத்தோம். அதற்கு விளக்கமளித்த அவர், "நவீன் விசாரணைக்கு ஆஜராகியிருந்தால் தானே கொலை மிரட்டல் இருந்ததா இல்லையா என்பது தெரியவரும். அவர் விசாரணைக்கு ஆஜராகவும் இல்லை, கொலை மிரட்டல் இருந்ததாக எதுவும் தெரிவிக்கவில்லை," என்கிறார் அவர். இதற்கிடையில், பல்லடம் காவல் நிலைய ஆய்வாளர் முருகையா பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். https://www.bbc.com/tamil/articles/c3gy2425vg3o
  12. இஸ்ரேல் இனப்படுகொலை நோக்கத்துடன் செயற்படுகின்றது - சர்வதேச நீதிமன்றில் தென்னாபிரிக்கா வாதம் Published By: RAJEEBAN 11 JAN, 2024 | 05:01 PM இஸ்ரேல் இனப்படுகொலை நோக்கத்துடன் செயற்படுகின்றது என தென்னாபிரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இஸ்ரேலிற்கு எதிராக தென்னாபிரிக்கா தாக்கல் செய்த இனப்படுகொலை வழக்குவிசாரணை இன்று ஹேக்கின் சர்வதேச நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது. இதன் போது தென்னாபிரிக்கா சார்பில் வாதத்தை முன்வைத்த தென்னாபிரிக்காவின் உயர்நீதிமன்ற சட்டத்தரணி அடிலா ஹாசிம் இஸ்ரேல் திட்டமிட்ட அடிப்படையில் செயற்படுகின்றது அதன் நோக்கங்கள் இனப்படுகொலையை வெளிப்படுத்துகின்றன என தெரிவித்துள்ளார். இஸ்ரேல் காசாவில் வசிக்கும் பாலஸ்தீனியர்களை குறிவைத்து ஆயுதங்களை பயன்படுத்திய பாரியளவிலான படுகொலைகளில் அழிவுகளில் ஈடுபடுகின்றது மேலும் பொதுமக்களை சினைப்பர் தாக்குதல் மூலம் இலக்குவைக்கின்றது. பாலஸ்தீனியர்களிற்கான பாதுகாப்பு வலயங்களை அறிவித்த பின்னர் அவற்றின் மீது குண்டுவீச்சுதாக்குதலை மேற்கொள்கின்றது. காசாவில் பாலஸ்தீனியர்களிற்கான அத்தியாவசிய தேவைகளான உணவு நீர் சுகாதாரம் எரிபொருள் தொடர்பாடல் போன்றவற்றை மறுக்கின்றது சமூக கட்டமைப்புகளை வீடுகளை பாடசாலைகளை மசூதிகளை தேவாலயங்களை மருத்துவமனைகளை அழிக்கின்றது. பெருமளவானவர்களை கொலை செய்கின்றது கடும் காயங்களிற்குட்படுத்துகின்றது பெருமளவு சிறுவர்களை அனாதைகளாக்கியுள்ளது. இனப்படுகொலைகள் ஒரு போதும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு முன்னெடுக்கப்படுவதில்லை, ஆனால் இந்த நீதிமன்றத்திற்கு 13 வார ஆதாரங்கள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/173718
  13. உலகத்தமிழர்களின் பாதுகாப்பு அரணாக திமுக அரசு என்றும் திகழும்” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி! 11 JAN, 2024 | 04:10 PM அயலக தமிழர்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 'தமிழ் வெல்லும்' என்னும் கருப்பொருளை மையமாக கொண்டு அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் மாபெரும் அயலகத் தமிழர் தின விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது இந்நிலையில் இரண்டு நாட்கள் நடைபெறும் அயலக தமிழர் தின விழாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "இந்தியாவிலேயே அயலக தமிழர் அணியை தொடங்கிய ஒரே கட்சி நமது திராவிட முன்னேற்ற கழகம்தான். தமிழ்நாடு அரசு 2021ம் அயலகத் தமிழர், மறுவாழ்வு துறையை உருவாக்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 58 நாடுகளிலிருந்து அயலக தமிழகர்கள் பங்கேற்றுள்ளனர். உங்கள் அனைவரையும் ஒரே இடத்தில் தாய் தமிழ்நாட்டில் சந்திப்பது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வரும்போதெல்லாம் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக அயலக தமிழர்களாகிய நீங்கள்தான் இருக்கிறீர்கள். முன்பைவிட தமிழர்கள் இப்போது வெளிநாட்டில் தமிழர்கள் அதிகம் வாழ்கின்றனர். அயலக நல வாரியம் மூலம் சட்டப்பூர்வமாக வேலை வாய்ப்பை வழங்கி வருகிறோம். வெளிநாட்டு வேலை ஏற்பாடு மட்டுமல்ல அங்கு ஏதேனும் பிரச்சனை என்றால் அவர்களை மீட்கும் பணியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு வருகிறது. அயலக தமிழர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உயிரிழந்த வெளிநாட்டுத் தமிழர்களின் உடல்கள் தமிழ்நாட்டிற்கு வருவதற்கு 10 மாதங்களுக்கு மேல் ஆகும் என்றிருந்த நிலையை மாற்றியது நமது கழக அயலக அணிதான். தற்போது உயிரிழந்தவர்களின் உடல்களை 8 நாட்களுக்குள் அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கும் வகையில் தற்போது தி.மு.க அயலக அணி ஏற்பாடு செய்திருக்கிறது" என தெரிவித்துள்ளார். இந்த இரண்டு நாள் நிகழ்வில் இலங்கை , மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், துபாய், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 58 நாடுகளிலிருந்து தமிழ் வம்சாவளியினர், அமைச்சர்கள் , கவிஞர்கள் என 1000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும் 218 சர்வதேச தமிழ்ச் சங்கங்கள், 48 பிற மாநில தமிழ்ச் சங்கங்கள் கலந்து கொண்டுள்ளனர். நிறைவு நாளான நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழா பேருரை ஆற்றி எனது கிராமம் என்ற திட்டத்தை துவக்கி வைத்து, பல்வேறு துறையில் சிறந்து விளங்கும் 8 அயலக தமிழர்களுக்கு விருது வழங்குகிறார். https://www.virakesari.lk/article/173710
  14. இஸ்ரேலிற்கு எதிரான இனப்படுகொலை வழக்கு - ஹேக் சர்வதேச நீதிமன்றில் இன்று ஆரம்பம் Published By: RAJEEBAN 11 JAN, 2024 | 12:09 PM காசாவில் யுத்தம் தொடர்ந்தும் இடம்பெறும் அதேவேளை இஸ்ரேலிற்கு எதிராக தென்னாபிரிக்கா தாக்கல் செய்துள்ள இனப்படுகொலை வழக்கினை இன்று சர்வதேச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளது. இஸ்ரேலிற்கு எதிரான ஹமாசின் தாக்குதல் 1948 சமவாயத்தினை மீறுகின்றது என தெரிவித்து தென்னாபிரிக்க தாக்கல் செய்துள்ள குற்றச்சாட்டு குறித்தே சர்வதேச நீதிமன்றம் இன்று ஆராயவுள்ளது. ஹமாஸ் கற்பழிப்பாளர் ஆட்சிக்கு தென்னாபிரிக்கா அரசாங்கம் சட்டபூர்வ அரசியல் பாதுகாப்பை வழங்குவதால் தென்னாபிரிக்காவின் அபத்தமான இரத்த அவதூறுகளை களைவதற்காக சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்;துள்ளது. காசாமீதான இராணுவநடவடிக்கையை இஸ்ரேல் இடைநிறுத்தவேண்டும் என்பதற்கான அவசரநடவடிக்கைகள் அவசியம் என தென்னாபிரிக்கா விடுத்துள்ள வேண்டுகோள் குறித்தே சர்வதே நீதிமன்றம் விசேடமாக ஆராயவுள்ளது. தென்னாபிரிக்கா தாக்கல் செய்துள்ள வழக்கிற்கு கொலம்பியா பிரேசில் பாக்கிஸ்தான் உட்பட வேறு சில நாடுகள் ஆதரவளித்துள்ளன ஹமாசின் ஒக்டோபர்ஏழாம் திகதி தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் ஆரம்பித்துள்ள இராணுவ நடவடிக்கைகள் பேரழிவை ஏற்படுத்திய நிலையில் பலவாரங்களாக தொடர்கின்ற நிலையிலேயே தென்னாபிரிக்காவின் குற்றச்சாட்டுகள் குறித்து சர்வதேச நீதிமன்றம் இன்று விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது. ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு பின்னர் இஸ்ரேல் 23000க்கும் அதிகமான பொதுமக்களை கொலை செய்துள்ளது என காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் 70 வீதமானவர்கள் பெண்கள் குழந்தைகள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. காசாவின் சனத்தொகையில் 85 வீதமானவர்கள் -1.9 மில்லியனிற்கும் அதிகமானவர்கள் இடம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என பாலஸ்தீனியர்களிற்கான ஐநாவின் நிவாரண முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. ஆயிரகக்கணக்கான கட்டிடங்கள் நிர்மூலமாக்கப்பட்டுள்ளன. சர்வதேச நீதிமன்றத்திற்கான 84 பக்க ஆவணத்தில் தென்னாபிரிக்காவினால் முறைப்பாடு செய்யப்பட்ட இஸ்ரேலின் நடவடிக்கைகள் இனப்படுகொலை தன்மையை கொண்டவை - இஸ்ரேலின் நடவடிக்கைகள் பாலஸ்தீன தேசிய இனமற்றும் இனக்குழுவின் கணிசமான பகுதியை அழிப்பதை நோக்கமாக கொண்டுள்ளன என தென்னாபிரிக்க தெரிவித்துள்ளது. இனப்படுகொலை வழக்குகள் நிரூப்பிப்பதற்கு கடினமானவை - பல காலம் நீடிக்க கூடியவை எனினும் சர்வதேச நீதிமன்றம் தற்காலிக நடவடிக்கைகளை அறிவிக்கவேண்டும் என தென்னாபிரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. இஸ்ரேல் காசாவில் பொதுமக்களை கொல்வதையும் அவர்களிற்கு கடுமையான மன மற்றும் உடல் ரீதியாக தீங்கு விளைவிப்பதையும் நிறுத்தவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் வேண்டுகோள் விடுக்கவேண்டும் என தென்னாபிரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. https://www.virakesari.lk/article/173672
  15. நாடுகள் தயாராக இருக்க வேண்டும் – கொரோனா திரிபு தொடர்பில் WHO தலைவர் எச்சரிக்கை 2019 டிசம்பர் இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் தோன்றி பரவிய கொரோனா வைரஸ் நுண்கிருமியால்,கொவிட்-19 எனும் தொற்று நோய் உலகம் முழுவதும் வேகமாக பரவியது. இதை பெருந்தொற்று என உலக சுகாதார நிறுவனம் பிரகடனப்படுத்தி சுகாதார அவசர நிலையை கொண்டு வந்தது. 2020இல் உலகின் அனைத்து நாடுகளிலும் வெகுவேகமாக பரவிய இந்த பெருந்தொற்று, இலட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கியது. உயிரிழந்தவர்களின் உடல்களை கூட உறவினர்கள் தூரத்தில் நின்று மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்டு, அந்த உடல்களை மருத்துவமனை ஊழியர்களே அடக்கம் செய்தனர். பெருந்தொற்று பரவலை தடுக்க இந்தியா உட்பட பல உலக நாடுகள் மாதக்கணக்காக ஊரடங்கை பிறப்பித்தன. இதனால், பெருமளவு தொழில் முடக்கம் மற்றும் வேலை இழப்பு ஏற்பட்டது. இலட்சக்கணக்கான உயிர்சேதத்தினாலும், கோடிக்கணக்கான பொருளாதார இழப்பினாலும் உலகையே அச்சுறுத்திய கொவிட் பெருந்தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடித்து மக்களுக்கு செலுத்தி கொள்ள அறிவுறுத்தின. இதன் பயனாக தொற்றினால் தாக்கப்படுபவர்கள் குறைய தொடங்கினர். 2023 மே மாதம் உலக சுகாதார அமைப்பு, கொவிட் பெருந்தொற்றுக்கான சர்வதேச சுகாதார அவசரநிலை பிரகடனத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. இந்நிலையில், சமீப சில மாதங்களாக ஆங்காங்கே இந்தியா உட்பட உலக நாடுகளில், ஜேஎன்.1 (JN.1) எனும் கொரோனா வைரசின் புதிய திரிபு பரவ தொடங்கி உள்ளது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்ரேய்சஸ் (Tedros Adhanom Ghebreyesus), ஜெனிவாவில் இந்த புதிய திரிபு குறித்து எச்சரித்துள்ளார். அவர் இது குறித்து தெரிவித்ததாவது: 2023 டிசம்பர் மாதம் மட்டுமே, ஜேஎன்.1 திரிபால் சுமார் 10 ஆயிரம் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. எண்ணிக்கையில், கொரோனா பெருந்தொற்று காலத்தை ஒப்பிட்டால் இது குறைவுதான் என்றாலும் இது ஏற்க கூடியது அல்ல. மேலும் சில இடங்களில் இது பரவிய தகவல்கள் தெரிவிக்கப்படாமலும் இருக்கலாம். ஆனால், அரசாங்கங்கள்தான் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். இதுவும் ஓமிக்ரான் (omicron) வகை வைரஸ் என்பதால், கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகளே இந்த வைரசுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கும். மக்கள் தடூப்பூசி இன்னமும் செலுத்தி கொள்ளா விட்டால் விரைவாக செலுத்தி கொள்வது நல்லது. அத்துடன் முககவசம் அணிவதும், பணிபுரியும் இடங்கள் மற்றும் வசிக்கும் இடங்ககள் காற்றோட்டமாக இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டியதும் அவசியம் என தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/287859
  16. Bengaluru CEO: 4 வயது மகன் கொலை, அறையில் கிடைத்த ஆதாரம் - தாய் Suchana Seth கைதானது எப்படி?
  17. கடந்த இரு நாட்களில் 10 பேர் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தகவல் 11 JAN, 2024 | 08:30 PM கடந்த 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் சிறுவர் முதல் பெரியோர் வரையான 10 பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு வெலிபன்னை பிரதேசத்தில் கடந்த 9 ஆம் திகதி 2 வயது குழந்தை மற்றும் அவரது தாய் காணாமல் போயுள்ளார். காணாமல்போன பெண் ஒரு யூடியூப் சேனலை நடத்திச் செல்பவர் என வெலிபன்னை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 9 ஆம் திகதி யாழ்ப்பாணம், கோண்டாவில் பிரதேசத்தில் 14 வயது பாடசாலை மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக கோண்டாவில் பொலிஸார் தெரிவித்தனர். இதன்படி வறக்காப்பொலவில் 26 வயது யுவதியும் மொரட்டுவையில் 57 வயது பெண்ணும் முல்லேரியாவில் 67 வயது நபரொருவரும் தம்பகல்லவில் நபரொருவரும் அம்பாறை பிரதேசத்தில் 53 வயது நபரொருவரும் வவுணதீவு பிரதேசத்தில் 42 வயது நபரொருவரும் காணாமல் போயுள்ளனர். மேலும் நுவரொலியா ,மெதகம பிரதேசத்தில் 40 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட நபரொருவரும் காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/173695
  18. கனடாவின் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் டுபாய்க்கு புறப்பட ஏர் கனடா விமானம் தயாராக இருந்தது. பயணிகள் அனைவரும் தங்களது இருக்கையில் அமர்ந்தனர். அப்போது ஆண் பயணி ஒருவர் தனது இருக்கையில் அமராமல் நின்று கொண்டிருந்தார். திடீரென்று அவர் விமானத்தின் கேபின் கதவை திறந்து கீழே குதித்தார். இந்த வாலிபர் சுமார் 20 அடி உயரத்தில் இருந்து குதித்ததில் காயமடைந்துள்ளார். பொலிஸார் மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து வந்து வாலிபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் விமானத்தில் இருந்து எதற்காக கீழே குதித்தார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. அந்த வாலிபரின் பெயர், ஏனைய விவரங்களை வெளியிடாத பொலிஸார், அவர் கைது செய்யப்பட்டாரா என்பது குறித்தும் தெரிவிக்கவில்லை. இதனால் டுபாய்க்குச் செல்லும் விமானம் 6 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. https://thinakkural.lk/article/287806
  19. Published By: VISHNU 11 JAN, 2024 | 09:06 PM சட்டமா அதிபரின் ஆலோசனை பெறும் வரை குருந்தூர்மலை வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளதாக சட்டத்தரணி எஸ்.தனஞ்சயன் தெரிவித்தார். குருந்தூர் மலையில் பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதாக கூறப்பட்ட வழக்கானது முல்லைத்தீவு நீதிமன்றத்திலே வியாழக்கிழமை (11) எடுத்து கொள்ளப்பட்டது. வழக்கின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். குருந்தூர்மலை பிரதேசத்திலே நீதிமன்ற கட்டளையை நிறைவேற்றப்பட வேண்டும் என அமைதி வழியிலே போராட்டத்தை நடாத்திய அரசியல் வாதிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளடக்கிய நபர்களுக்கு எதிராக முல்லைத்தீவு பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது வியாழக்கிழமை (11) B688/2002 நீதிமன்றத்திலே எடுத்து கொள்ளப்பட்டது. குறித்த வழக்கின் போது முல்லைத்தீவு பொலிஸார் தாங்கள் இது தொடர்பாக சட்டமா அதிபரிடம் மேலதிக ஆலோசனை பெற வேண்டும் என விண்ணப்பம் செய்திருந்தனர். வியாழக்கிழமை (11) சந்தேகநபர்கள் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் உட்பட ஐந்து நபர்களாக இணைக்கப்பட்டிருந்தார்கள். இவர்கள் சார்பிலே முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினை சார்ந்த அனைத்து சட்டத்தரணிகளும் ஆஜராகி நாங்கள் விண்ணப்பம் செய்திருந்தோம். குறித்த வழக்கானது பிழையாக தாக்கல் செய்யப்பட்ட அமைதி வழியிலே போராடிய அரசியல் வாதிகள் மற்றும் சமூக அக்கறையுள்ளவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கென மன்றிற்கு தெரிவித்திருந்தோம். மேலும் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறும் வரையில் இவ்வழக்கினை கிடப்பில் போடவேண்டும் எனவும் மேலதிகமாக இந்த வழக்கினை தொடர வேண்டும் என சந்தர்ப்பம் ஏற்பட்டால் மாத்திரம் குறித்த சந்தேக நபர்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டு மீண்டும் இந்த வழக்கானது நீதிமன்றிலே கொண்டு செல்லப்பட முடியும் எனவும் விண்ணப்பம் செய்திருந்தோம். அதனை ஏற்றுக்கொண்ட நீதவான் அவர்கள் குறித்த வழக்கினை இன்றைய தினத்திலிருந்து கிடப்பில் போட்டுள்ளார். மீளவும் அறிவித்தல் கிடைத்தால் மாத்திரம் குறித்த சந்தேக நபர்கள் வழக்கிற்கு வருகை தர வேண்டும் என மேலும் தெரிவித்தார். குறித்த வழக்கிற்கு பாராளுமன்ற உறுப்பினர் வினோநோதராதலிங்கம், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் ஜீட்சன் ஆகியோர் தோன்றியிருந்தனர். https://www.virakesari.lk/article/173731
  20. அயலகத் தமிழர் தின விழாவில் பங்கேற்கும் செந்தில் தொண்டமானுக்கு இந்தியாவில் செஞ்சி மஸ்தான் அமைச்சரால் அமோக வரவேற்பு இந்தியாவின் தமிழக அரசினால் நடத்தப்படும் “அயலகத் தமிழர் தினம் 2024” விழாவில் சிறப்புரை ஆற்றுவதற்காக, தமிழக அரசினால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று இந்தியா சென்றுள்ள கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் அவர்களுக்கு, தமிழ்நாடு அரசின், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்களால் அமோக வரவேற்பளிக்கப்பட்டது. தமிழக முதல்வர் கௌரவ மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்றும் (11) நாளையும் (12), நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில், இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், டுபாய், இலண்டன், கனடா, மொரிசியஸ், அவுஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில், இந்தியா சென்றடைந்த கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோரை, தமிழக அமைச்சர் மாண்புமிகு செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்கள் நேரடியாகச் சென்று வரவேற்றார். இந்நிலையில், “அயலகத் தமிழர் தினம் 2024” விழாவில், கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் சிறப்புரையாற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/287856
  21. Published By: VISHNU 11 JAN, 2024 | 07:34 PM தேசிய ரின்மீன் உற்பத்தி தொழிலைப் கட்டியெழுப்புவதற்காக வெளிநாடுகளிலிருந்து ரின்மீன் இறக்குமதி செய்வதற்காக முன்னர் வழங்கப்பட்ட அனுமதியை இன்று வியாழக்கிழமை முதல் (11) தற்காலிகமாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்தவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இன்று கடற்றொழில் அமைச்சில் இலங்கை ரின்மீன் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சருக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு ஆலோசனை வழங்கினார். இதன் போது உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டப்பட்டது. குறிப்பாக கடந்த சில மாதங்களாக வெளிநாடுகளிலிருந்து பெருமளவு ரின்மீன்கள் இறக்குமதி செய்யப்பட்டதன் காரணமாக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ரின்மீன்களை சந்தைப்படுத்த முடியாத நிலையேற்பட்டுள்ளதாகவும் விசேடமாக இவ்வருடம் ஜனவரி மாதம் 01ம் திகதி முதல் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ரின்மீன்களுக்கு வட் வரி விதிக்கப்பட்டதால் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ரின்மீன்களின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டதாகவும் இலங்கை சந்தைக்கு தேவையான ரின்மீன்களை உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடியுமென்ற போதும் கடந்த காலங்களில் பெருமளவு ரின்மீன்கள் இறக்குமதி செய்யப்பட்டதை அவதானிக்கக் கூடியதாக இருப்பதாகவும் இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சரிடம் சுட்டிக்காட்டப்பட்டது. இறக்குமதி செய்யப்பட்ட ரின்மீன்களின் விலை குறைவடைந்துள்ளதாகவும் தற்போது அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள செஸ் மற்றும் வட் வரி காரணமாகஇறக்குமதி செய்யப்பட்டுள்ள ரின்மீன்களின் விலைக்கு தங்களது உற்பத்திகளை வழங்க முடியாதென்பதால் தங்களது தொழிற்சாலைகளை மூடி விடவேண்டிய நிலையேற்பட்டுள்ளதாகவும் சங்கத்தின் பிரநிதிகளால் சுட்டிக்காட்டப்பட்டது. இப் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்காக அமைச்சர், இன்று முதல் ரின்;மீன் இறக்குமதிக்காக முன்னர் வழங்கப்பட்ட அனுமதியை தற்காலிகமாக நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கியதுடன் தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ள ரின் மீன்களுக்கு மேலதிக வரி ஒன்றை அறவிடுவதற்கு ஏதுவான சாத்தியக் கூறுகள் தொடர்பாக ஆராய்ந்து தமக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு அமைச்சின் செயலாளர் திருமதி குமாரி சோமரத்னவுக்கு ஆலோசனை வழங்கினார். அத்துடன் இலங்கையில் மீன்களின் விலைகள் அதிகரிக்கும் சந்தர்ப்பங்களில் மீன்களை இறக்குமதி செய்யும் போது தேசிய ரின்மீன் உற்பத்தியாளர்களுக்கு அனுமதி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் பணிப்பாளர் நாயகத்திற்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியதுடன் நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சந்தை விலை மற்றும் விநியோகம் தொடர்பாக அவதானத்துடன் இருக்குமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கினார். இச் சந்திப்பில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் குமாரி சோமரத்ன, பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த, கடற்றொழில் அமைச்சின் மேலதிக செயலாளர்களான திருமதி அனுஷா போகுல, தம்மிக ரணதுங்க ஆகியோர் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/173737
  22. IMF பிரதிநிதிகள் நாட்டிற்கு வருகை Digital News Team சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) பிரதிநிதிகள் சிலர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். நிதி அமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் மத்திய வங்கி குழுவினருடன் இவர்கள் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதியையும் சந்திக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார். அவர்கள் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்கள் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தின் அண்மைய போக்குகளை ஆய்வு செய்வதே சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளின் முக்கிய நோக்கமாகும். சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியுடன் நாட்டின் பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளையும் குறித்த குழு கண்காணிக்கவுள்ளதாக நிதி அமைச்சு மேலும் கூறியுள்ளது. https://thinakkural.lk/article/287835
  23. 11 JAN, 2024 | 07:25 PM நாட்டிலுள்ள அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம் இவ்வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படுமென மகளிர், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார். ஆண், பெண் சமத்துவத்தை (Gender Equality Bill) ஆண், பெண் சமத்துவ சட்டமூலத்தின் வாயிலாக உறுதிப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று வியாழக்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், நாட்டின் 120,000 பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவை வழங்குவது சவாலாக அமைந்திருந்தது. அந்த வகையில் தற்போது மாணவர் ஒருவருக்காக ஒதுக்கப்படும் தொகையை 60 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையில் அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார் என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். இலங்கையின் பெருமளவான மாணவர்கள் போசாக்கு குறைப்பாட்டிற்கு ஆளாகியுள்ள நிலையில் புரோட்டின் நிறைந்த போசாக்கான உணவை வழங்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். அதற்கமையவே நாட்டிலுள்ள அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு வழங்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். நாட்டின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளும் உள்ளடங்கும் வகையில் திட்டத்தை செயற்படுத்தவிருப்பதாகவும், தோட்ட பாடசாலைகள் தவிர்ந்த பாலர் பாடசாலைகளில் மட்டும் 120,000 மாணவர்கள் இருப்பதாகவும் தோட்ட பாலர் பாடசாலைகளிலிருக்கும் 35,000 மாணவர்களும் உள்ளடங்களாக 155,000 மாணவர்கள் இத்திட்டத்தினால் பயன்பெறுவர் என்றும் தெரிவித்தார். அதேபோல் கர்பிணித் தாய்மாருக்கான போசாக்குப் பொதிகளை வழங்க எதிர்பார்த்திருப்பதாகவும், அதற்காக 220,214 கர்பிணித் தாய்மாருக்கு 4,500 பெறுமதியான போசாக்கு பொதிகளை 10 மாதங்களுக்கு வழங்க எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் பாலர் பாடசாலை ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கபடவிருப்பதாகவும் தெரிவித்தார். நாட்டின் அனைத்து மாவட்டங்களும் உள்ளடங்கும் வகையில் பாலர் பருவகால மேம்பாடு தொடர்பிலான தேசிய செயலாளர் அலுவலகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்கும் 18,333 பாலர் பாடசாலை ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். பாலர் பாடசாலைகளை மேம்படுத்தும் நோக்கில் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவாக மாதாந்தம் 2500 ரூபாயினை வழங்கவும், அது போதுமான தொகை இல்லை என்பதால் அதனை மேலும் அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். மேலும் அமைச்சினால் மகளிர் மற்றும் சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதை நோக்கமாக கொண்டு 03 புதிய சட்டங்களை கொண்டுவரவிருப்பதாகவும் தெரிவித்தார். அதற்கமைய, ஆண், பெண் சமத்துவ சட்டம். (Gender Equality Bill) ஊடாக ஆண், பெண் சமத்துவத்தை பாதுகாக்கவும், LGBTIQ ஊடாக ஆண், பெண் சமூக சமத்துவத்தை நிலைப்படுத்தும் சபையொன்றை நிறுவி அதன் கீழ் சமூக சமத்துவ மத்தியஸ்த அதிகாரிகளின் (Gender Focal Point) என்ற அரச நிறுவனத்திற்கான ஆட்சேர்ப்புச் செய்ய எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார். அதேபோல் பெண்கள் வௌிநாடு செல்லும் போது குழந்தையின் வயது குறைந்தபட்சம் 5 ஆக கருத்தில் கொள்ளப்படும் என்றும், 05 வயதுக்கு குறைவான குழந்தைகளிருக்கும் எத்தனை தாய்மார் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர் என்பது தொடர்பிலான தகவல்களை பிரதேச செயலக மட்டத்தில் தேடியறிவிருப்பதாகவும் தெரிவித்தார். அதேபோல் மாகாண ஆளுநர்கள், போக்குவரத்து அமைச்சர், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கும் அறிவித்து மாகாண போக்குவரத்து அதிகாரசபையின் கீழ் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்களில் (CCTV) பொருத்த எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார். அதேபோல் பொது போக்குவரத்து சேவைகளுக்குள் பெண்கள் முகம்கொடுக்கும் நெருக்கடிகளை ஓரளவு தடுக்கும் எதிர்பார்ப்புடனேயே கெமராக்களை பொருத்த எதிர்பார்த்திருப்பதாகவும் அதற்காக பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்களில் கெமராக்களை பொருத்த வேண்டியது அவசியம் என்ற நிபந்தனையுடன் அனுமதி பத்திரங்கைளைப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/173740
  24. அம்பாறையில் கடும் மழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு Published By: DIGITAL DESK 3 11 JAN, 2024 | 04:42 PM அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களான நாவிதன்வெளி, நற்பிட்டிமுனை, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, பாண்டிருப்பு, மருதமுனை, பெரியநீலாவணை, துறைவந்தியமேடு போன்ற தாழ்நில பகுதிகளில் வெள்ள நீர் பெருக ஆரம்பித்துள்ளன. தொடர்ச்சியாக கன மழை பெய்வதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் நாளாந்த கூலி வேலைகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு தாழ் நிலப் பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியிருப்பதால் டெங்கு நோய் பெருகக்கூடிய அபாயமும் ஏற்பட்டுள்ளன. அனர்த்தங்கள் நடைபெறும் இடங்களுக்கு கூட்டம் கூட்டமாக பார்வையிடச் செல்வதை தவிர்த்து பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/173713
  25. சுகாதார தரப்பினர் தொழிற்சங்க நடவடிக்கை: இராணுவத்தினர் அரச வைத்தியசாலைகளில் கடமையில் நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளில் சுகாதார தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தத்திற்கு பதிலடியாக, அத்தியாவசிய சேவைகளை பேணுவதற்கும் இடையூறு இல்லாத நோயாளர் பராமரிப்பை உறுதி செய்வதற்கும் இலங்கை இராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் கோரிக்கையின் அடிப்படையில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, பாதுகாப்புப் படைத் தளபதிகளுக்குத் தேவைக்கேற்ப படைகளை அனுப்புவதற்குத் தயார்படுத்துமாறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இராணுவத் தளபதியின் வேண்டுகோளுக்கு இணங்க, மேற்கு மற்றும் மத்திய பிராந்தியங்களுக்கான பாதுகாப்புப் படைத் தளபதிகள் கொழும்பு தேசிய வைத்தியசாலை, கண்டி பொது வைத்தியசாலை, களுபோவில போதனா வைத்தியசாலை, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை, மஹமோதர போதனா வைத்தியசாலை, குருநாகல் போதனா வைத்தியசாலை உள்ளிட்ட முக்கிய வைத்தியசாலைகளுக்கு இராணுவத்தினரை அனுப்பியுள்ளனர். , அத்துடன் மாத்தறை, பலாங்கொடை, எஹலியகொட, நாவலப்பிட்டி, பதுளை, கம்பளை, மற்றும் மீரிகம ஆகிய அரச வைத்தியசாலைகளிகளிலும் இராணுவத்தினர் கடமையில் உள்ளனர். கிட்டத்தட்ட 500 வீரர்கள் தற்போது முக்கியமான நடவடிக்கைகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். லெப்டினன்ட் ஜெனரல் லியனகே, விரைவான மற்றும் திறமையான நடவடிக்கையின் அவசியத்தை வலியுறுத்தினார், மேலும் இடையூறுகள் ஏற்படும் பட்சத்தில் பாதுகாப்புப் படைத் தளபதிகளை மேலதிக துருப்புக்களை அனுப்புவதற்கு தயார்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். தொழிற்சங்க நடவடிக்கை அமுலில் இருக்கும் காலப்பகுதியில் பொதுமக்களின் அசௌகரியங்களை குறைத்து, தடையற்ற மருத்துவ சேவையை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியுள்ளார். வேலை நிலைமைகளை மேம்படுத்துதல் மற்றும் சம்பள உயர்வு போன்ற சிறு ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/287827

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.