Everything posted by ஏராளன்
-
ஜனவரியில் இலங்கை வருகிறார் பிரித்தானிய இளவரசி ஆன்
கண்டிக்கு விஜயம் செய்தார் பிரித்தானிய இளவரசி Published By: DIGITAL DESK 3 11 JAN, 2024 | 04:06 PM இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான இராஜ்ஜிய உறவுகளின் 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதனை சிறப்பிக்கும் வகையில் பிரித்தானிய அரச குடும்பத்தைச் சேர்ந்த மரியாதைக்குரிய ரோயல் இளவரசி மற்றும் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோர் மூன்று நாட்கள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளனர். இந்நிலையில், இன்று வியாழக்கிழமை (11) கண்டியிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகைக்கும் சென்றுள்ளார். https://www.virakesari.lk/article/173699
-
யாழில் உள்ள ஐந்து உள்ளூராட்சி சபைகளுக்கு உத்தியோகபூர்வ இணையத்தளங்கள்
வலிகாமம்மேற்கு பிரதேச சபையின் இணையத்தளம் https://valikamamwest.ps.gov.lk/ வலிகாமம்மேற்கு பிரதேச செயலகத்தின் இணையத்தளம் http://www.valikamamwest.ds.gov.lk/index.php/en/
-
செங்கடல் பகுதியில் கப்பலை கைப்பற்ற முயன்ற ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் படகுகள் மீது அமெரிக்க ஹெலிகொப்டர்கள் தாக்குதல்
செங்கடல் பகுதியில் கப்பல்களை நோக்கி ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் கடும் ஏவுகணை ஆளில்லா விமான தாக்குதல்கள் Published By: RAJEEBAN 10 JAN, 2024 | 12:48 PM செங்கடல் பகுதியில் கப்பல்களை நோக்கி ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் பெருமளவு ஏவுகணை தாக்குதல்களைமேற்கொண்டனர் எனவும் இதனை தொடர்ந்து அமெரிக்காவும் பிரிட்டனும் பல ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழப்பு மற்றும்காயங்கள் குறித்த தகவல்களை கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யேமனின் துறைமுகநகரங்களான ஹெடெய்டா மொக்கா துறைமுக நகரங்களிலேயே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன என தனியார் பாதுகாப்பு அமைப்பான அம்பிரேய் தெரிவித்துள்ளது. ஹெடெய்டா சம்பவத்தில் கப்பல்கள் ஏவுகணைகள் ஆளில்லா விமான கப்பல்களை பார்ப்பதை அறிவித்துள்ளன. மொக்காவில் கப்பல்கள் ஏவுகணைகள் ஏவப்படுவதையும் ஆளில்லா விமானங்கள் தாக்குவதையும் அவற்றின் பின்னால் சிறிய படகுகள் காணப்படுவதையும் ; கப்பல்கள் பார்த்துள்ளன. குண்டுகளுடன் ஆளில்லா விமானங்களையும் குருஸ் ஏவுகணைகளையும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை ஒன்றையும்பயன்படுத்தி தாக்குதல்கள் இடம்பெற்றன என அமெரிக்காவின் மத்திய கட்டளைப்பீடம்தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/173593
-
ஜனவரியில் இலங்கை வருகிறார் பிரித்தானிய இளவரசி ஆன்
ஜனாதிபதி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்தித்தார் இலங்கை வந்த பிரித்தானிய இளவரசி ஆன் Published By: PRIYATHARSHAN 11 JAN, 2024 | 11:24 AM மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பிரித்தானிய இளவரசி ஆன் (Her Royal Highness Princess Anne,) மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லாரன்ஸ் (Vice Admiral Sir Timothy Laurence) ஆகியோர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். பிரித்தானியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு இராஜதந்திர உறவுகளின் 75 வருட பூர்த்தியை முன்னிட்டு, பிரித்தானிய இளவரசி ஆனின் உத்தியோகபூர்வ விஜயம் அமைந்துள்ளது. இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருக்கும் பிரித்தானிய ஆன் இளவரசி (Her Royal Highness Princess Anne, the Princess Royal) மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் (Vice Admiral Sir Timothy Laurence) ஆகியோர் புதன்கிழமை (10) கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினர். கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த இளவரசி ஆன் உள்ளிட்ட பிரித்தானிய தூதுக்குழுவுக்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியினால் வரவேற்பளிக்கப்பட்டது. அதனையடுத்து இளவரசி ஆன் உள்ளிட்ட தூதுக்குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடினர். இந்நிகழ்வை நினைவுக்கூறும் விதமாக ஜனாதிபதி மாளிகையிலிருக்கும் விருந்தினர் பதிவேட்டில் இளவரசி ஆன் நினைவுக் குறிப்பொன்றை பதிந்தார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்டவர்களும் இதன்போது கலந்துகொண்டனர். முன்னதாக விமான நிலையத்தை வந்தடைந்த பிரித்தானிய இளவரசி ஆன், மற்றும் கணவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்ட அரச தூதுக்குழுவினர் மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பட்ரிக் ஆகியோர் வரவேற்றனர். இதேவேளை, கட்டுநாயக்கவில் உள்ள MAS ACTIVE தயாரிப்பு உருவாக்கம் மற்றும் மேம்பாட்டு மையம் MAS Nirmaanaவிற்கு பிரித்தானிய இளவரசி ஆன், மற்றும் கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லாரன்ஸ் ஆகியோர் விஜயம் செய்தனர். இலங்கையில் பிரித்தானிய இளவரசி தங்கியிருக்கும் நாட்களில் கொழும்பு, கண்டி மற்றும் யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்யவுள்ளார். இதேவேளை, இலங்கையில் மனிதாபிமான தேவைகளை ஆதரிப்பதற்காக கொழும்பில் உள்ள சேவ் தி சில்ட்ரன் அலுவலக ஊழியர்களை இளவரசி ஆன் சந்தித்து நன்றி தெரிவித்ததுடன் அவர்களின் நடவடிக்கைகளை கேட்டு அறிந்துகொண்டார். மேலும் கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட இளவரசி ஆன், சேவ் தி சில்ட்ரன் அமைப்பின் நடவடிக்கைகளை பார்வையிட்டார். அத்துடன் குழந்தைகளின் உணர்ச்சி வளர்ச்சி மற்றும் தகவல் தொடர்பு தேவைகளை ஆதரிக்கும் சமூக-உணர்ச்சி கற்றல் கருவித்தொகுப்பான 'தில்லி' திட்டத்தின் அமர்வையும் அவதானித்தார். குறித்த வைத்தியசாலையில் உள்ள சிறுவர்களையும் இளவரசி ஆன் பார்வையிட்டார். https://www.virakesari.lk/article/173665
-
நாட்டின் வங்குரோத்திற்கு காரணமானவர்களென பெயரிட்டு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து 2மாதங்கள் கடந்தும் இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை - சஜித்
Published By: VISHNU 10 JAN, 2024 | 07:57 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) நாட்டை வங்குராேத்தாகுவதற்கு காரணமானவர்கள் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து 2மாதங்கள் கடந்தும் அவர்களுக்கு எதிராக ஜனாதிபதியோ அரசாங்கமோ எந்த நடவடிக்கையும் எடுக்க தவறி இருக்கிறது. அதனால் அவர்களுக்கு எதிராக எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன என கேட்கிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) நிலையியற் கட்டளை 27 2இன் கீழ் கேள்வி எழுப்பி உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டை பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு கொண்டு சென்றவர்கள் என முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ், பசில் ராஜபக்ஷ், அஜித் நிவார்ட் கப்ரால், எஸ்.ஆர்.ஆர்டிகல, டபிள்யூ.டி.லக்ஷ்மன்,பி.பி. ஜயசுந்தர மற்றும் சமந்த குமாரசிங்க ஆகியோரை பெயர் குறிப்பிட்டு உயர் நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கி இருந்தது. இந்த தீர்ப்பு வழங்கப்பட்டு 2 மாதங்கள் கடந்துள்ள போதிலும், இந்த பொருளாதாரக் கொலையாளிகளுக்கு எதிராக ஜனாதிபதியோ அரசாங்கமோ எந்த வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை . ஆனால் உயர் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் அரசாங்கம் கையாளப்போகும் விதம் தொடர்பாக எதிர்க்கட்சி போன்றே 220 இலட்சம் மக்களும் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இவர்களுக்கு எதிராக விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து,விசாரணைகளை மேற்கொண்டு,தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜனாதிபதியும் தற்போதைய அரசாங்கமும் ஏன் உத்தேசிக்கவில்லை என கேட்கிறோம். நாட்டை வங்குரோத்தடையச் செய்ததன் மூலம் குறித்த நபர்கள் தனிப்பட்ட நலன்களைப் பெற்றுள்ளார்களா என்பது பிரச்சினைக்குரிய விடயம். அதனால் இது தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்குப் பின்னர் அவர்களது குடியுரிமை தொடர்ந்து இருக்க இருக்க வேண்டுமா? 56 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு வங்கிகளில் வைப்பிலிடப்பட்டு நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தற்போதைய நீதி அமைச்சர் கூட தெரிவித்துள்ளார். ,இந்தப் பணத்தை மீளப் பெற்றுக்கொள்ள முடியுமென்றால் வற்வரியை அதிகரிக்க வேண்டிய ஏற்பட்டிருக்காது. அத்துடன் நனோ உர மோசடியாலும் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் மூலம் பொருளாதாரத்திற்கு சேதம் ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் என்ன? சேதன உர மோசடி காரணமாக நாட்டுக்கு 711.8 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. அனுபவமற்ற இந்நிறுவனம் கொள்முதல் வழிகாட்டுதல்களை விதிமுறைகளைக் கூட மீறியுள்ளது. விநியோகஸ்தருக்கு 711 மில்லியன் ரூபாவை அவ்வேளையிலயே பணமாக செலுத்தப்பட்டுள்ளது, அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு முன்னரோ அல்லது அங்கீகாரம் கிடைத்த அன்றோ உரங்களை விமானத்தில் ஏற்றி கொண்டு வரப்படுவது வழக்கத்திற்கு மாறான அதிசயமானதொரு விடயம். உரத் தொகையை பகுதி பகுதியாக இறக்குமதி செய்ய ஒப்புக்கொண்டு இருந்தும்,மொத்த பங்குகளின் மதிப்புக்காக ஒரு கடன் பத்திரத்தை திறந்ததன் காரணமாக 99 இலட்சம் தேவையற்ற செலவுகளை அரசாங்கம் சுமக்க நேரிட்டுள்ளது. அத்துடன் எரிவாயு மோசடியால் ஏற்பட்ட இழப்பு இதைவிடவும் அதிகமாகும். சியாம் கேஸ் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் குறைந்த விலையில் எரிவாயுவை வழங்க ஒப்புக்கொண்டாலும்,குறிப்பிட்ட நிறுவனத்தின் கோரிக்கையை அனுமதிக்காமல்,அதே நிபந்தனைகளின் கீழ் ஒகியு டிரேடிங் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து அதிக விலைக்கு கொள்வனவு செய்ததால், 1138 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் நாடு வங்குராேத்தாக காரணமானவர்கள் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தவர்களில் சிலர் இன்னும் அரசாங்கத்தில் இருக்கின்றனர். ஏன் அவர்களை அரசாங்கத்தில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டதன் ஊடாக,முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட அதிகாரிகள் சிலருக்கு நட்டஈடு செலுத்த நேரிட்டிருக்கிறது. இதன் பிரகாரம்,நாட்டை வங்குரோத்தாக்கியவர்கள் யார் என்பதை வெளிக்கொணர்ந்த தீர்ப்பின் மூலம் நாட்டின் 220 இலட்சம் மக்கள் இழப்பீடு கோரி வழக்குத் தொடரலாம். அதனால் இவர்களுக்கு எதிராக இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அதற்கான காரணம் என்ன என்பதை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/173642
-
தமிழகத்தில் அயலக தமிழர் விழா : செந்தில், மனோ, செல்வம், சாணக்கியன் பங்கேற்பு
Published By: VISHNU 10 JAN, 2024 | 07:36 PM ஆர்.ராம் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில், சென்னையில் 11,12 ஆம் திகதிகளில் நடைபெறும் அயலக தமிழர் விழாவில், பங்கேற்பதற்காக இலங்கையிலிருந்து முக்கிய தமிழ் அரசியல்வாதிகள் பயணமாகியுள்ளனர். அதனடிப்படையில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன், ரெலோ அமைப்பின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், மற்றும் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோர் சென்னை நோக்கி பயணமாகியுள்ளனர். இதேவேளை, கனடாவின் ஒன்றாரியோ மாகாண சபையின் மார்க்கம்- தோர்ன்ஹில் தொகுதி உறுப்பினருமான லோகன் கணபதியும் குறித்த நிகழ்வில் பங்பேற்பதற்காக வருகை தந்துள்ளார். மூன்றாவது தடவையாக முன்னெடுக்கப்படும் இவ்விழாவை தமிழக அரசானது, தமிழக எல்லையைத் தாண்டி, பரந்துபட்டு சர்வதேசங்களிலும் வசிக்கும் தமிழர்களை ஒன்று சேர்க்கும் வகையில் கொண்டாடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/173656
-
இஸ்ரேலை பாதுகாக்க கடற்படையை அனுப்புவதை நிறுத்திவிட்டு கிழக்கில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உதவிசெய்ய ஈடுபடுத்துக - ஹக்கீம்
Published By: VISHNU 10 JAN, 2024 | 08:52 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) செங்கடலில் இஸ்ரேலின் கப்பல்களை பாதுகாப்பதற்காக கடற்படையை அங்கு அனுப்புவதை விட்டு, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் கிழக்கு மாகாண மக்களுக்கு உதவிகளை செய்ய கடற்படையினரை ஈடுபடுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) இடம்பெற்ற நீதிமன்ற நியாயசபை மற்றும் நீதிமன்ற அவமதிப்பு சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில், கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக புல்மோட்டை தொடக்கம் பொத்துவில் பானமை வரையும் அனைத்து கரையோர மற்றும் தாழ்நிலப்பிரதேசங்களில் கடும் மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக அந்த பிரதேச மக்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நீர் வலிந்து ஓடமுடியாமல் பல இடங்களில் நீர் தேங்கி இருக்கிறது. அதனால் போக்குவர்தது பிரச்சினைகளும் மிகவும் பூதாகரமாக உருவெடுத்து வருகிறது. அத்துடன் மக்களின் வாழ்விட பிரதேசங்களில் இருந்து நீரை அகற்றவேண்டிய நிலையும் கிணறுகளை சுத்தப்படுத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. அதேபோன்று இந்த மோசமான காலநிலையால் பயிர் நிலங்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதுடன் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த மூன்று மாவட்டங்களிலும் உள்ள மக்களுக்கு சமைத்த உணவு வழங்க, அரசாங்க அதிபர்கள் அதற்கான கணக்கீடுகளை செய்து, அதற்கான தேவையான வசதிகளை, அந்த விடயங்களை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறேன். இந்த சந்தர்ப்பத்திலே அரசாங்கம் இஸ்ரேலின் கப்பல்களை பாதுகாப்பதற்காக செங்கமலுக்கு எமது கடற்படையினரை அனுப்புவதற்கு பதிலாக, கடற்படையினரை இவ்வாறான அனர்த்த நிலைமைகளில் ஈடுபடுத்துவதே மிகவும் உசித்தமான விடயம். இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி கவனம் செலுத்துவார் என எதிர்பார்கிறேன். செங்கடலுக்கு இஸ்ரேலின் கப்பல்களை பாதுகாக்க எமது கடற்படையினரை அனுப்புவதற்கு ஜனாதிபதி எடுத்திருக்கும் தீர்மானத்தை நான் கடுமையாக சபையில் விமர்சித்திருந்தேன். அதனால் இஸ்ரேலின் கப்பல்களை பாதுகாப்பதை விட்டு, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் கிழக்கு மாகாண மக்களுக்கு உதவிகளை செய்ய கடற்படையினரை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு மிகவும் வினயமாக ஜனாதிபதியிடம் இந்த கோரிக்கையை முன்வைக்கிறேன். அது அந்த மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்றார். https://www.virakesari.lk/article/173650
- வெத்து இலை - T. கோபிசங்கர்
- வெத்து இலை - T. கோபிசங்கர்
-
உடற்றும் பிணி – அருணா சிற்றரசு சிறுகதை
நன்றி அக்கா பகிர்விற்கு. பல இடங்களில் எங்கள் குடும்ப நிலையும் கதை தொட்டுச் சென்றது. 2011 இல் தம்பி 35 நாட்களுக்கு மேல் வென்ரிலேற்றர் மூலம் சுவாசித்துக் கொண்டிருக்கையில் அம்மாவும் நானும் பட்டபாடுகள் கனவு போல இருக்கிறது. அப்பா கவலையை வெளிக்காட்டவில்லை. இன்று தம்பி மீண்டு வந்து தன்னுடைய உடல் இயலாமையைத் தாண்டி பல சமூக சேவைகளை முன்னெடுக்கிறான். எனக்கும் சேவை செய்வதற்கு உந்துதலாக இருக்கிறான்.
-
செங்கடல் பகுதியில் கப்பலை கைப்பற்ற முயன்ற ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் படகுகள் மீது அமெரிக்க ஹெலிகொப்டர்கள் தாக்குதல்
செங்கடலில் தொடரும் ஹவுதி தாக்குதல் – 21 ஏவுகணைகளை வீழ்த்திய அமெரிக்கா Digital News Team மேற்கு ஆசியாவில் உள்ள அரபு நாடுகளில் ஒன்று ஏமன் (Yemen). 90களில் ஏமன் நாட்டில் உருவானது ஹவுதி (Houthi) எனப்படும் பயங்கரவாத அமைப்பு. கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினரிடையே தொடங்கிய போர் 90 நாட்களை கடந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏமன், கட்டார், லெபனான் மற்றும் ஈரான், ஹமாஸ் அமைப்பினரை ஆதரிக்கும் நாடுகள். செங்கடல் (Red Sea) பகுதியில் அமெரிக்கா மற்றும் 20க்கும் மேற்பட்ட உலக நாடுகள் “ஆபரேஷன் பிராஸ்பரிட்டி கார்டியன்” (Operation Prosperity Guardian) எனும் அப்பகுதி கடல் வழித்தடத்தில் செல்லும் அனைத்து கப்பல்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் பணியில் இணைந்துள்ளன. இந்நிலையில், நேற்று முன்னிரவு 09:15 மணியளவில் தெற்கு செங்கடல் பகுதியில் பல சர்வதேச சரக்கு கப்பல்கள் செல்லும் வழித்தடத்தை குறி வைத்து ஏமனின் ஹவுதி அமைப்பினர் 21 ஏவுகணைகளால் தாக்க முனைந்தனர். இவற்றில் 18 ஒரு வழி டிரோன்களும், 2 கப்பல்களை தாக்கும் க்ரூயிஸ் ஏவுகணைகளும் (cruise missiles) மற்றும் கப்பல்களை தாக்கும் பெரும் தொலைவு பாயும் ஏவுகணை ஒன்றும் அடங்கும். ஆனால், ஹவுதியின் இத்தாக்குதலை வெற்றிகரமாக எதிர்கொண்டு அந்த தொடர் ஏவுகணைகளை செயலிழக்க செய்ததாக அமெரிக்க கடற்படையின் மத்திய ஆணையம் தெரிவித்துள்ளது. மனித உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ இன்றி நடந்த இந்த தாக்குதல் முறியடிப்பு நடவடிக்கை எந்த கப்பலுக்கும் சேதமின்றி நடைபெற்றது. “டெஸ்ட்ராயர்” (destroyer) எனப்படும் போர்கப்பல்களும் இரண்டும், எஃப்-18 (F-18) ரக போர் விமானங்களும் இந்த முறியடிப்பில் அமெரிக்க கடற்படையால் ஈடுபடுத்தப்பட்டன. https://thinakkural.lk/article/287700
-
50 வருடங்களின் பின்னர் நிலவுக்கு பயணிக்கவுள்ள விண்வௌி வீரர்கள்
நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் 2026 வரை ஒத்திவைப்பு Digital News Team கடந்த 1969 ஆம் ஆண்டு அப்பல்லோ விண்கலத்தில் மனிதர்களை நிலவுக்கு அனுப்பி அமெரிக்கா சாதனை படைத்தது. நீல் ஆம்ஸ்ட்ராங், நிலவில் முதல் காலடியை வைத்தார். இதற்கிடையே 50 ஆண்டுகளுக்கு பிறகு நிலவுக்கு மீண்டும் மனிதனை அனுப்பும் திட்டத்தை அமெரிக்க விண்வெளி கழகமான நாசா தொடங்கியுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்குள் மனிதனை நிலவுக்கு அனுப்புவோம் என நாசா தெரிவித்தது. இதன் முதல்கட்ட விண்கலத்தையும் ஏவி சோதனை செய்தது. இந்த நிலையில் நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் 2026 ஆம் ஆண்டு வரை தள்ளி வைக்கப்படுவதாக நாசா அறிவித்துள்ளது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் நிலவை சுற்றி வர விண்வெளி வீரர்கள் 4 பேரை அனுப்ப நாசா திட்டமிட்டிருந்தது. ஆனால் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக அந்த விண்கலம் ஏவப்படுவது அடுத்த ஆண்டுக்கு (2025) தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நிலவுக்கு மனிதனை அனுப்புவது 2026 ஆம் ஆண்டுக்கு தள்ளி போயிருக்கிறது. https://thinakkural.lk/article/287680
-
பிரான்ஸ் வரலாற்றில் முதன் முறையாக!
பிரான்ஸ் பிரதமராகும் முதல் திருநர்! Digital News Team பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், வலதுசாரி கட்சிகளின் அழுத்தத்தில் இருந்து தனது மீதி பதவிக்காலத்தை காத்துகொள்ள புதிய தொடக்கமாக பிரான்ஸின் மிக இளவயது பிரதமரை அறிவித்துள்ளார். பிரான்ஸ் அரசியலமைப்பு சட்டத்தின்படி அதிபர், பிரதமரை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர். பிரதமர் உள்நாட்டு கொள்கைகளுக்கும் அமைச்சரவை ஒருங்கிணைப்புக்கும் பொறுப்பாவார். முன்பு இந்தப் பதவியில் இருந்த எலிசபெத் போர்ன் திங்கள்கிழமை பதவி விலகியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரான்ஸின் முதல் திருநர் பிரதமராகப் பொறுப்பேற்கவிருக்கும் கேப்ரியல், 2020 முதல் 2022 வரை அரசின் செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றினார். முன்பு பொதுவுடைமை கட்சியில் இருந்தவர், 2016-ல் மேக்ரான் தொடங்கிய அரசியல் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். பிரான்ஸின் கெளரவமிக்க பதவியான கல்வி அமைச்சராக இருந்தபோது பாடசாலைகளில் ஹிஜாப் போன்ற நீண்ட ஆடைகள் மாணவர்களிடையே மதச்சார்பின்மையைப் பாதிப்பதாகக் கூறி தடை செய்தார். பொது சீருடை திட்டத்தையும் முன்னெடுத்தார். https://thinakkural.lk/article/287667
-
Vijayakanth: தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்
விஜயகாந்த் நினைவிடத்திலும் வயிறார உணவு! Digital News Team விஜயகாந்த் மறைவின்போது அவருடைய உதவிகள் பற்றியெல்லாம் பலரும் நினைவுகூர்ந்து கண்ணீர் விட்டனர். ஆனாலும், அவருடைய உதவிகளிலேயே பேருதவியாக, பெரிய விஷயமாகப் பேசப்பட்டது அவருடைய உணவு உபசரிப்புதான். மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியாக உணவு விஷயத்தில் சிறப்பிடத்தைப் பெற்றவர் விஜயகாந்த் என்பதை அவருடைய மறைவுக் கால நினைவுகள் உறுதிப்படுத்தின. விஜயகாந்த் மறைவுக்குப் பிறகும் உணவும் உபசரிப்பும் தொடருகிறது. எங்கோ மதுரையில் பிறந்தவர் திரையுலகில் வளர்ச்சி அடையத் தொடங்கிய காலத்திலேயே மக்களுக்கு நல உதவிகள், உணவு வழங்குதல், கல்வி உதவிகள் என்று உதவிக்கரம் நீட்டினார். 2004-இல் அவர் தேமுதிகவைத் தொடங்கி, ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தாலும் எதிர்க்கட்சித் தலைவர் வரை உயர்ந்தார். உடல்நலம் குன்றியிருந்த விஜயகாந்த் மறைவின்போது ஜாதி, மத, அரசியல் பாகுபாடின்றி அனைவரும் நேரிலும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் தங்களின் வேதனைகளை வெளிப்படுத்தினர். இறுதி ஊர்வலத்திலும் அஞ்சலி நிகழ்வுகளிலும் மறைந்த தலைவர்கள் பலருக்கு இணையாக மக்கள் திரண்டனர். விஜயகாந்த் உடல் அவருடைய இல்லம், தேமுதிக அலுவலகம், தீவுத்திடல் என மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இறுதி ஊர்வலத்துக்குப் பிறகு, விஜயகாந்த்தின் திருமண மண்டபமாக இருந்த தேமுதிக அலுவலக வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது. இப்போது நாள்தோறும் விஜயகாந்த் நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காகத் தொடர்ந்து எண்ணற்ற மக்கள் வந்து கொண்டேயிருக்கின்றனர். மக்கள் வந்து செல்லும் வகையில் தனி வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. நாள்தோறும் விஜயகாந்த் சமாதியில் மலர் அலங்காரம் செய்யப்படுகிறது. நினைவிடம் அருகே தேமுதிக நிர்வாகிகள் நின்றுகொண்டு, மூட்டையில் வைக்கப்பட்ட ரோஜாக்களிலிருந்து மக்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்துவதற்காகப் பூக்களை அளிக்கின்றனர். வளாகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. நினைவிடத்தில் விஜயகாந்த் என்றதுமே நினைவுக்கு வருகிற உணவும் உபசரிப்பும் தொடருகிறது. வருவோருக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான மதிய உணவு சுடச்சுடத் தடையின்றி வழங்கப்படுகிறது. குடிநீர் பாட்டில்களும் வழங்கப்படுகின்றன. மக்களும் வரிசையில் நின்று உணவு பெறுகின்றனர். வீணாக்க வேண்டாம், சாப்பிட்டுவிட்டு எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள் என்று அங்கிருக்கும் தேமுதிக நிர்வாகிகள் கேட்டுக்கொள்கின்றனர். தீவிர ரசிகர்கள் சிலர் முடி காணிக்கை செலுத்தி, தங்களின் அபரிமிதமான பற்றை வெளிப்படுத்திக் கொள்கின்றனர். இதற்காகத் தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மக்கள் வரிசையாக நின்று சென்று நினைவிடத்தைப் பார்வையிடுவதை ஒழுங்குபடுத்த ஊழியர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். போலிஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இருந்தாலும் இறந்தாலும் ‘கேப்டன்’ பெயர் சொல்லும் இடத்தில் தொடருகிறது உணவும் உபசரிப்பும்! https://thinakkural.lk/article/287659
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
100 இல் ஒருவர் – இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழப்பு விகிதம் Digital News Team கடந்த 2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி 2000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர், தெற்கு இஸ்ரேலில் அதிரடியாக தரை, கடல் மற்றும் வான் வழியாக நுழைந்து, தாக்குதல் நடத்தி, 1500க்கும் மேற்பட்டவர்களை மிருகத்தனமாக கொன்று, மேலும் சுமார் 250 பேர்களை கடத்தி சென்றனர். உலகையே அதிர வைத்த இச்சம்பவத்தால் பெரும் ஆத்திரமடைந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி எடுத்து, போர் தொடுத்தது. இஸ்ரேலிய இராணுவ படை (IDF) அன்றிலிருந்து ஹமாஸ் அமைப்பினர் பெரும்பான்மையாக உள்ள பாலஸ்தீன காசா பகுதியில் தொடர் தாக்குதலை நடத்த தொடங்கியது. சில பணய கைதிகளை ஹமாஸ் அமைப்பிடம் இருந்து இஸ்ரேல் மீட்டாலும், இன்னும் பலர் அவர்களிடம் சிக்கி உள்ளதாக இஸ்ரேல் கூறி தேடுதல் வேட்டையை தொடர்ந்து வருகிறது. போர் நிறுத்தத்திற்கு பல உலக நாடுகள் விதித்த கோரிக்கையை புறக்கணித்து, மிக தீவிரமாக இஸ்ரேலிய படையினரால் நடத்தப்படும் இப்போர், 95 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. இப்போரில் ஏராளமான காசா மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், பாலஸ்தீன ரமல்லா பகுதியில் அந்நாட்டு சுகாதார துறை, போர் நிலவரம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், காசா மக்கள் தொகையில் 100 பேரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 58,416 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்திருக்கிறது. 2.27 மில்லியன் மக்கள் வசித்து வந்த பாலஸ்தீன காசாவில், போர் தொடங்கியதிலிருந்து இதுவரை 22,835 பேர் கொல்லப்பட்டதாகவும் கூறியுள்ளது. கடந்த மாதம் இஸ்ரேலிய இராணுவ படை, போரினால் உயிரிழந்தவர்களில் 8000 பேர் ஹமாஸ் அமைப்பினர் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/287602
-
நாய்களை கொல்லக் கூடாது – தென் கொரியாவில் புதிய சட்டம்
மனிதனின் உற்ற நண்பனை இனி கொல்லக் கூடாது – தென் கொரியாவில் புதிய சட்டம் Digital News Team நாய்களை “மனிதனின் உற்ற நண்பன்” (Man’s best friend) என அடைமொழியிட்டு கூறுவது வழக்கம். நாய்களை பாதுகாப்பிற்கு ஏற்ற காவலனாகவும், தோழமைக்கு ஏற்ற உயிரினமாக கருதி வளர்ப்பதில் ஆர்வம் காட்டுபவர்கள் அயல்நாடுகளில் அதிகம். தென் கொரிய மக்களில் ஒரு சிலர் நாய் இறைச்சி உண்ணுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இது உலகளவில் விலங்கின ஆர்வலர்களால் பெரிதும் விமர்சிக்கப்பட்டு வந்தது. தென் கொரியாவின் பல பகுதிகளில் நாய் இறைச்சி பிரியர்களுக்கென பல உணவகங்களில் அவை சமைக்கப்பட்டு, பரிமாறப்பட்டு வந்தது. இந்நிலையில், தென் கொரிய பாராளுமன்றம் நாய் இறைச்சியை தடை செய்து புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது. இத்தொழிலை சார்ந்துள்ள தொழிலாளர்களும், விற்பனையாளர்களும் வேறு தொழிலுக்கு மாறும் வகையில் 3-வருட-கால இடைவெளிக்கு பிறகே இச்சட்டம் 2027 இலிருந்து அமலுக்கு வரும். அத்தொழிலாளர்கள் புதிய தொழிலில் தங்களை ஈடுபடுத்தி கொள்ளும் வகையில் மானியம் வழங்கி உதவவும் எதிர்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. இச்சட்டத்தின்படி, இறைச்சிக்காக நாய்களை வளர்ப்பது, கொல்வது, இறைச்சியை பதப்படுத்தி விற்பனை செய்வது உள்ளிட்ட அனைத்தும் சட்டவிரோதம். இதனை மீறுவோருக்கு 2 வருட-கால சிறை தண்டனையும், பெரும் தொகை அபராதமும் விதிக்கப்படும். தென் கொரிய ஜனாதிபதியின் மனைவி இச்சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். பிராணிகள் வளர்ப்பில் மிகுந்த ஆர்வம் உடைய ஜனாதிபதியும் அவர் மனைவியும் தங்கள் இல்லத்தில் 4 நாய்களும் 3 பூனைகளும் வளர்த்து வருகின்றனர். நாய்களை கொன்று உண்பதை தடை செய்யும் சட்டத்தை வரவேற்றுள்ள பிராணிகள் ஆர்வலர்கள், பல வருடங்களாகவே அந்நாட்டில் நாய் இறைச்சி உண்ணும் பழக்கத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/287592
-
வறுமை நிலைக்குள்ளாகியுள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை 50 இலட்சத்தை தாண்டியுள்ளது
நல்ல விடயம் தான். கா.து முதல் அதிகாரிகள், அரசியல் வியாதிகள் வரை பரவி இருக்கும் ஊழல், இலஞ்சத்தை ஒழித்து உழைப்புக்கேற்ற ஊதியமும் அந்த ஊதியத்தில் வாழ்க்கை நடத்த முடிந்தால்.... கற்பனை கொஞ்சம் ஓவராத் தான் போகுதோ!🤭
-
2024 தொடங்கிய சில நாட்களில் பாபா வங்காவின் கணிப்பு அப்படியே நடக்குதே.. அடுத்தடுத்து நடந்த 2 அதிர்ச்சி சம்பவம்
2024இல் பல நாடுகளில் பெரிய அளவில் சுனாமி, நிலநடுக்கம் ஏற்பட போகிறது என்று பாபா வங்கா கணித்து இருக்கிறாராம்! அவரின் கணிப்பில் அடுத்தடுத்து 2 முக்கியமான சம்பவங்கள் நடந்து உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 2024இல் என்னென்ன நடக்கும் என்றும் பாபா வங்கா தனது கணிப்பில் எழுதி வைத்து இருக்கிறாராம். அதன்படி 2024இல் இந்தியாவின் வெப்பநிலை 50 டிகிரி செல்ஸியஸ் வரை உயரும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வெப்பநிலை காரணமாக அதிக அளவில் வெட்டுக்கிளிகள் வந்து தாக்கும் என்றும் இதனால் பயிர்கள் மொத்தமாக சேதம் அடைந்து மக்கள் பஞ்சத்தால் அழிய போகிறார்கள் என்று இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொந்த நாட்டுக்காரரின் கையால் ஒரு பெரிய ரஷிய தலைவர், கொலை செய்யப்படுவார். அவரது கொலை உலகத்தை நிச்சயமற்ற நிலைக்கு தள்ளியது என்று தெரிவித்துள்ளார். அதாவது புதின் மரணம் பற்றி கூறியுள்ளார். 2024 -ம் ஆண்டில் பெயரிடப்படாத “பெரிய நாடு” உயிரியல் ஆயுதத் தாக்குதல்களை உருவாக்கும். அதை வைத்து தாக்குதல்களை மேற்கொள்ளும் அதே வேளையில், ஐரோப்பா முழுவதும் வேறு விதமான பயங்கரவாதத் தாக்குதல்கள் நடக்கும் என்றுள்ளார். 2024 -ல் ஒரு பெரிய பொருளாதார நெருக்கடியை நாம் எதிர்கொள்ள உள்ளோம். இதற்கு பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்க வேண்டும். கடன் அளவுகள் உயரும் மற்றும் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்கள் உலகப் பொருளாதாரத்தை குழப்பத்தில் ஆழ்த்தும் அபாயம் இருப்பதாக கூறியுள்ளனர். புற்றுநோய் மற்றும் அல்சைமர் போன்ற குணப்படுத்த முடியாத நோய்களுக்கு புதிய சிகிச்சைகள் இருக்கும். உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த கூடிய போர் ஒன்று நடக்கும். இதே வருடம் நாம் ஏலியன்களை காண்போம் என்றும் அவர் கூறியுள்ளார். அடுத்தடுத்து நடந்த 2 அதிர்ச்சி சம்பவம் அவரின் கணிப்பில் அடுத்தடுத்து 2 முக்கியமான சம்பவங்கள் நடந்து உள்ளன. ஜப்பானில் புத்தாண்டு தினத்தில் சுனாமி ஏற்பட்டது. ஜப்பானில் கடற்கரையை ஒட்டி உள்ள பகுதிகளில் ஊருக்குள் கடல் நீர் வந்தது. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் பல இடங்களில் கடல் நீர் புகுந்தது. சுனாமி எச்சரிக்கையை அடுத்து கடல் நீர் அலை அலையாக புகுந்தது. ஜப்பானில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கை விடுத்தனர். அதன்பின் சிறிய அளவிலான சுனாமி ஏற்பட்டது. அதேபோல் அமெரிக்காவில் ப்ளோரிடாவில் உள்ள மியாமியில் இருக்கும் மால் ஒன்றில் ஏலியன்கள் இறங்கியதாக வெளியாகும் செய்திகள் இணையத்தை உலுக்கி உள்ளன. 10 அடி உயரமுள்ள வேற்றுகிரக ஏலியன் ஒன்று மியாமி ஷாப்பிங் மாலில் சுற்றித் திரிந்ததாக புகார்கள் வந்ததால், அப்பகுதியில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2 நாட்களுக்கு முன் நடந்த இந்த சம்பவம் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை மற்றும் சோதனையின் அடிப்படையில் இந்த வீடியோ மற்றும் ஏலியன் வருகை எல்லாமே சில விஷமிகள் கிளப்பிவிட்ட வதந்தி என தகவல் வெளியாகி உள்ளது. சிறுவர்கள் சிலர் பட்டாசு வெடித்ததாகவும் இதனால் ஏற்பட்ட வெளிச்சத்தை வைத்து ஏலியன்கள் புகுந்ததாக காட்டுத்தீ போல வதந்தி பரவியிருப்பதாகவும் மியாமி நகர பொலிஸார் கூறியுள்ளனர். https://thinakkural.lk/article/287522
-
வடக்கு காணி உரிமைப் பிரச்சினையை இரண்டு மாதங்களில் தீர்த்து வைப்பதாக பிரதமர் உறுதி
வடக்கில் வசிக்கும் அனைத்து மக்களின் காணி உரிமைப் பிரச்சினையை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் பாராளுமன்றத்தில் இன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். மத்தியதரக் காணித் திட்டத்தின் கீழ் நிரந்தரக் குடியிருப்பாளர்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் அரசாங்க நலத்திட்டங்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியுமா என பாராளுமன்ற உறுப்பினர் நிர்மலநாதன் கேள்வி எழுப்பினார். இது தொடர்பில் அரசாங்கம் ஏற்கனவே கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் இப்பிரச்சினையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்த அவர், சட்டவிரோதமாக குடியேறியவர்களைக் கண்டறிந்து, அந்தக் காணிகளில் குடியிருக்க அனுமதிப்பதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டறிந்து, அவர்களுக்குக் காணிகளின் ஆக்கிரமிப்புச் சான்றிதழ் வழங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். சில காணிகளின் ஆதிக்க உரிமையாளர்களுக்கும், அபகரிப்பாளர்களுக்கும் இடையில் உடன்பாடு ஏற்படக்கூடியதாக இருந்த போதிலும் அவ்வாறான உடன்படிக்கை ஏற்படாத இடங்களில் காணி உரிமை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார். வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்ட காணி உறுதித் திட்டத்திற்கும் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கும் முன்னுரிமை அளித்து வடக்கு மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் வலியுறுத்தினார். சட்டப்பூர்வ குடியிருப்பாளர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் தேவையான நலன்களை அல்லது உதவிகளை வழங்க அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது என்றும் பிரதமர் இதன் போது தெரிவித்தார். விவசாயம், மீன்பிடி அல்லது பிற துறைகளில் ஈடுபடும் அனைவருக்கும் அவர்களுக்குத் தேவையான மானியங்கள் மற்றும் நலன்புரி சேவைகள் வழங்கப்படும் என்றும், திட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கு புகார் அளிக்கலாம் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/287761
-
சுகாதார சேவைகளுடன் இணைந்த 10 தொழிற்சங்கங்கள் 48 மணித்தியால பணிப்புறக்கணிப்பு
நாடளாவிய ரீதியில் சுகாதார சேவைகளுடன் இணைந்த 10 தொழிற்சங்கங்கள் இன்று காலை 8 மணிமுதல் 48 மணித்தியால பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்து வருகின்றன. வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 35 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி, குறித்த 10 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன. பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம், அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம், அரச மருந்தாளர்கள் சங்கம், மருத்துவ ஆய்வக தொழில் வல்லுநர்கள் சங்கம் மற்றும் அகில இலங்கை தாதியர் சங்கம் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன. இதன்காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளுக்கு மருத்துவ சேவை மற்றும் சிகிச்சை பெற்றுக்கொள்ள சென்றுள்ள நோயாளர்கள் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. https://thinakkural.lk/article/287727
-
IMF பிரதிநிதிகள் குழு நாளை நாட்டிற்கு விஜயம்
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (10) இரவு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த பிரதிநிதிகள் நாளை (11) முதல் 17 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்கள் என்றும் நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொருளாதாரத்தின் அண்மைக்கால போக்குகளை ஆராய்வதற்காக இந்த குழு விஜயம் செய்யவுள்ளதுடன், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் வசதிகளைப் பெற்றுக் கொண்ட பின்னர், நாட்டின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுகளும் குறித்த குழுவினால் மேற்கொள்ளப்படும் என்றும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சுகள் மற்றும் மத்திய வங்கி அதிகாரிகளுடன் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் கலந்துரையாடல்களை முன்னெடுப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. https://thinakkural.lk/article/287721
-
இலங்கையில் 10 சதவீதமான குழந்தைகள் தொழுநோயினால் பாதிப்பு
தொழுநோயாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு Digital News Team நாட்டில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு நிலவுகிறது. அந்த வகையில் 2023 இல் மொத்தம் 1,550 தொழுநோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அவற்றில் 173 நோயாளர்கள் பாடசாலை மாணவர்களிடையே பதிவாகியுள்ளன. தொழுநோய் எதிர்ப்பு பிரசாரத்தின் படி, கொழும்பு மாவட்டத்திலிருந்து 315 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் . மேலும் முறையே 168 மற்றும் 151 நோயாளர்கள் கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் பதிவாகியுள்ளன. பாடசாலை மாணவர்களிடையே நோயாளர் அதிகரிப்பினால், தொழுநோய் தொற்றுகளைக் கண்டறியும் தேசிய அளவிலான திட்டம் பாடசாலை மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தொழுநோய் எதிர்ப்பு பிரசாரம் மேலும் கூறுகையில், நாட்டில் இரண்டு வகையான தொழுநோய் பரவுகிறது – தொற்றக்கூடியது மற்றும் தொற்றாதது. துரதிர்ஷ்டவசமாக, கண்டறியப்பட்ட நோயளர்களில், 60% தொடர்பு கொள்ளக்கூடியவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன, இது பரவுவதற்கான அதிக அபாயத்தைக் குறிக்கிறது. தொழுநோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், சுகாதார அதிகாரிகள் நிலைமையை மதிப்பிடுவதற்கும் நிர்வகிப்பதற்கும் பணிபுரிகின்றனர், நோய்த்தொற்று மற்றும் தொற்றாத வடிவங்கள் இரண்டிற்கும் தீர்வு காண ஒரு விரிவான அணுகுமுறையின் அவசியத்தை வலியுறுத்துகிறது. https://thinakkural.lk/article/287692
-
கப்பலில் விருந்து தொடர்பில் வெளியான செய்தியை இலங்கை துறைமுக அதிகாரசபை மறுப்பு
கொழும்பு துறைமுகத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழுவிற்கு கப்பலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்து தொடர்பான அண்மைய ஊடகச் செய்திகளை இலங்கை துறைமுக அதிகாரசபை மறுத்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எம்.பி.க்கள் கொழும்பு துறைமுகத்தில் கப்பலில் இருந்தபோது உபசரிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. சம்பவம் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்ட இலங்கை துறைமுக அதிகாரசபை, கொழும்பு துறைமுகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக அரசியல்வாதிகள், பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு வழக்கமான கப்பல் பயணங்களை மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளது. துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் குழுவிற்கு கப்பல் பயணத்தை ஏற்பாடு செய்துள்ளதாக துறைமுக அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது. ஊடக அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி உணவு அல்லது வேறு எந்த நடவடிக்கைகளுக்காகவும் தாம் செலவு செய்யவில்லை என்றும் துறைமுக அதிகாரசபை தெளிவுபடுத்தியுள்ளது. https://thinakkural.lk/article/287765
-
வறுமை நிலைக்குள்ளாகியுள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை 50 இலட்சத்தை தாண்டியுள்ளது
அரசை ஏமாற்றி அரச உதவி பெறுபவர்களை கண்டுபிடிக்கவும் TIN இலக்கம் கொண்டுவாறாங்களோ தெரியவில்லை!
-
4வது உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல்!
என்னுடைய அப்புவும்(அம்மப்பா) தப்பி வந்த கதைகளை எங்களுக்கு சொல்கிறவர்.