Jump to content

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    20094
  • Joined

  • Last visited

  • Days Won

    15

Everything posted by ஏராளன்

  1. இலங்கை கோட்டாபய ராஜபக்ஷ: மக்கள் மாளிகையான அதிபர் மாளிகை - 'எங்கள் பணத்தில் அவர் சொகுசாக இருந்திருக்கிறார்' எம். மணிகண்டன் பிபிசி தமிழ் 36 நிமிடங்களுக்கு முன்னர் பதவி விலகப் போவதாக அறிவித்திருக்கும் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ தற்போது எங்கிருக்கிறார் என்று உறுதியாகத் தெரியவில்லை. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலகத் தயார் என்று அறிவித்துவிட்டார். அனைத்துக் கட்சி அரசு அமையுமானால், அதற்கு வழிவிட்டு ஒட்டுமொத்தமாக ராஜிநாமா செய்யப் போவதாக அமைச்சர்களும் கூறியிருக்கிறார்கள். அதே நேரத்தில் சஜித் பிரேமதாச தலைமையில் புதிய அரசை அமைப்பதற்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம் அதிபருக்கும், பிரதமருக்கும் எதிரான மக்கள் போராட்டம் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது பெரும் பெரும் புதிராக இருக்கிறது. இப்படியொரு சூழலில் இலங்கையின் அதிபர் மாளிகை முன் எப்போதையும் விட இப்போதுதான் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் அந்த இல்லத்தில் இல்லை. அவருக்குப் பாதுகாப்பாக இருந்தவர்களும், பணியாளர்களும்கூட இப்போது வெளியேறிவிட்டார்கள். மக்கள் மாத்திரமே அங்கு இருக்கிறார்கள். கடந்த 9-ஆம் தேதி அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்த பிறகு சுற்றுலாத் தலத்துக்கு வருவது போல மக்கள் பல பகுதிகளில் இருந்தும் இங்கு வந்து கொண்டிருக்கிறார்கள். மாளிகைக்குள் நுழைவதற்கு மிக நீண்ட வரிசை காணப்படுகிறது. வீட்டில் இருந்து உணவுப் பொருள்களை எடுத்து வந்து அதிபர் மாளிகையின் புல்வெளியில் அமர்ந்து உண்ணும் காட்சிகளையும் பார்க்க முடிகிறது. கோட்டாபய, ரணில் இல்லாவிட்டால் இலங்கைக்கு உள்ள வாய்ப்புகள் என்ன? இலங்கை: ஜனாதிபதி மாளிகையில் பணம் - காவல்துறையிடம் திருப்பி கொடுத்த போராட்டக்காரர்கள் "என்ன ஆனாலும் பரவாயில்லை என்று அதிகாலை 2 மணிக்கு எழுந்து வந்திருக்கிறோம். பஸ்கூட கிடைக்காமல், நீண்ட நேரம் காத்திருந்து, நடந்து வந்து தொற்றிக் கொண்டு கொழும்பு வந்து சேர்ந்தோம். பின்னர் நீண்டதூரம் நடந்து இங்கு வந்திருக்கிறோம். பிள்ளைகளுக்கு இது நினைவுகூரத்தக்கதாக இருக்கும் என்பதால்தான் இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம்." என்றார் ஹார்ட்டன் நகரில் இருந்து வந்திருக்கும் சங்கீதா. மாளிகையில் சில மரப் பொருள்கள், கண்ணாடிகள் போன்றவை சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன. இப்போது 'இந்த மாளிகை மக்களின் சொத்து. அதனால் எதையும் சேதப்படுத்த வேண்டாம்' என்று கோரும் ஒரு அறிவிப்பு தொங்கவிடப்பட்டிருக்கிறது. அதிபர் மாளிகையின் இருக்கைகளில் அமர்ந்தும் முக்கியமான பகுதிகளில் நின்றும் மக்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கண்டி நகரில் இருந்து சில ஆயிரம் பேர் ரயில்களில் வந்திருப்பதாக அங்கிருந்து அதிபர் மாளிகையைப் பார்க்க வந்த வேல்ராஜா கூறினார். "இந்தச் சாலையில் பல முறை போயிருக்கிறோம். அதிபர் மாளிகைப் பக்கம் திரும்பிக் கூட பார்க்க மாட்டோம். செல்ஃபி எடுத்தால்கூட பிடித்துக் கொண்டு போய்விடுவார்கள். இப்போது வந்து பார்ப்பது மிகவும் சந்தோஷம். உள்ளே என்ன இருக்கிறதென்று பார்ப்பதற்கு மக்கள் மிகவும் ஆர்வமா இருகிறார்கள்" என்றார் அவர். பலருக்கு அதிபர் மாளிகையைப் பார்ப்பதென்பது உணர்வுப்பூர்வமானதாக இருக்கிறது என்பதை அவர் கடந்த வந்த தொலைவைக் கொண்டும், ஐந்தாறு மணி நேரம் வெயிலில் காத்திருக்கும் பொறுமையைக் கண்டும் புரிந்து கொள்ளலாம். நண்பகல் நேரத்தில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவு நீண்டிருந்த வரிசையில் மக்கள் காத்திருந்தார்கள். காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்களே மாளிகையை நிர்வகிக்கும் பொறுப்பை மேற்கொண்டு வருகிறார்கள். மக்களின் வருகையை ஒழுங்குபடுத்தும் பணியை அவர்கள் செய்து வருகிறார்கள். ஷிப்ட் முறையில் பணியாற்றுவதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள். காலி முகத்திடல் போராட்டத்தைப் போலவே இங்கும் தண்ணீரும் உணவுப் பொருள்களும் வாகனங்களில் வந்திறங்குகின்றன. தொழில் அதிபர்கள் சிலர் தங்களுக்கு உதவுவதாக போராட்டக்காரர்கள் கூறுகிறார்கள். "நாங்கள் அமைதியாகத்தான் போராட்டத்தைத் தொடங்கினோம். பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசிய பிறகுதான் உணர்வெழுச்சியில் அதிபர் மாளிகையில் நுழைந்தோம். அதைக் கைப்பற்றுவது எங்களது நோக்கமாக எப்போதும் இருக்கவில்லை" என்றார் போராட்டக்காரர்களில் ஒருவரான ஜவஹர்லால் நேரு. அதிபர் பதவி விலகினால் இந்தக் கட்டடத்தைவிட்டு போராட்டக்காரர்கள் வெளியேறிவிடுவார்கள் என்று பேசப்படும் நிலையில் அவர்களின் திட்டம் வேறுமாதிரியாக இருக்கிறது. கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினாலும் அதிபர் மாளிகையைவிட்டு உடனடியாக மக்கள் வெளியேறப் போவதில்லை என்கிறார் ஜவஹர்லால் நேரு. தீவிரமாகப் போராட்டத்தில் ஈடுபடுவோரைத் தவிர சாதாரணமான மக்களுக்கும் ஆட்சியாளர்கள் மீது கோபம் இருப்பதை, இங்கு வருவோரின் குரல்களில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. வெலிகாம நகரில் இருந்து வந்திருக்கும் ஷர்மிளாவின் பேச்சில் இந்தக் கோபம் தென்பட்டது. "நாங்கள் கஷ்டத்தில் இருக்கும்போது, அவர் சொகுசுசாக இருந்திருக்கிறார். மக்களின் இவ்வளவு கஷ்டத்துக்கும் காரணம் அவர்தான். எங்கள் ஜனாதிபதி ஜனாதிபதியாகவே இல்லை." என்றார் அவர். சில மாதங்களே ஆன கைக்குழந்தையுடன் அவர் நீண்ட பயணத்தை மேற்கொண்டு இங்கு வந்திருக்கிறார். தற்போது பாதுகாப்புக்கு இருந்த பெரும்பாலானவர்கள் இப்போது இல்லை. ஒரு சில ராணுவ வீரர்கள் மாத்திரம் மாளிகைக்கு உள்ளேயும் வெளியேயும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களும் வெறும் பார்வையாளர்கள் போலவே தென்படுகிறார்கள். இங்கிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள அதிபரின் செயலகம் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக பூட்டிக் கிடந்தது. அதன் வாயிலில்தான் அதிபர் கோட்டாபயவுக்கு எதிரான போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இப்போது இந்த அலுவலகத்துக்குள்ளும் மக்கள் மாத்திரமே இருக்கிறார்கள். அதிபர் மாளிகைக்கு வருவோர் பெரும்பாலும் இதையும் பார்த்துவிட்டுச் செல்கிறார்கள். பொருளாதார நெருக்கடிகளும், போராட்டங்களும் தொடர்ந்தாலும் அதிபர் மாளிகையை பார்த்துச் செல்வோர் வாழ்வின் முக்கியமான ஒன்றைச் சாதித்து விட்ட பெருமிதத்தை வெளிப்படுத்துகிறார்கள். https://www.bbc.com/tamil/sri-lanka-62105425
  2. நரேந்திர மோதி நாடாளுமன்றத்தில் திறந்த தேசிய சின்னத்தில் கோரைப்பல் சிங்கங்கள்: மாறுபடும் வடிவமைப்பும் விமர்சனங்களும் 4 மணி நேரங்களுக்கு முன்னர் புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு மேலே இந்தியாவின் தேசிய சின்னமான நான்கு சிங்கங்கள் கொண்ட முத்திரையின் வெண்கல சிலையை பிரதமர் நரேந்திர மோதி திறந்துவைத்தார். இந்த சிலையின் உயரம் 6.5 மீட்டர். வட்ட தட்டில் நான்கு சிங்கங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து நிற்பது போன்றான சிலை அது. ஆனால் கி.மு. 250ம் ஆண்டை சேர்ந்த சிங்க முத்திரை தற்போது புதிய வடிவமைப்பில் சிலையாக அமைக்கப்பட்டுள்ளது குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். சிங்கங்கள் தனது கோரைப் பற்களை ஆக்ரோஷமாக காட்டுவது தேவையற்ற சித்தரிப்பு என எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர். ஆக்ரோஷமாக காட்சியளிக்கும் இந்த நான்கு சிங்கங்கள் பழைய அசோகர் சிங்க முத்திரையில் இருந்து வேறுபட்டதாக காட்சியளிக்கிறது எனவும் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். மத்தியப் பிரதேசம்: 8 வயது அண்ணனின் மடியில் தம்பியின் சடலம் - நடந்தது என்ன? சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக தமிழ்நாடு முழுவதும் மோசடி - நடந்தது என்ன ? புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் நடுவில் அமைந்துள்ள 9,500 கிலோ எடையுள்ள அந்த சிலையை திறந்து வைக்கும் வீடியோவை திங்களன்று காலை பகிர்ந்திருந்தார் பிரதமர் நரேந்திர மோதி. Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 கி.மு. 250 காலப் பகுதியில் பேரரசர் அசோகர் காலத்தில் நிறுவப்பட்ட பல தூண்களின் மேல் பகுதியில் அமைக்கப்பட்ட அந்த சிங்க முத்திரையை அடிப்படையாகக் கொண்டே இந்த சிங்க சிலை வடிவமைக்கப்பட்டுள்ளதாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சிங்க முத்திரை நாடாளுமன்றக் கட்டடத்தில் நிறுவப்பட்டது, தலை நகரத்தில் காலனித்துவ அடையாள நீக்கத்தில் முக்கிய மைல்கல் ஆகும் என்றும் அவர் கூறினார். ஆனால் இந்த சிங்கங்கள் மாற்றி வடிவமைக்கப்பட்டது குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். புதியதாக வடிவமைக்கப்பட்ட சிங்கங்கள் 'இணக்கத்துடனும், மேண்மையுடன்' காணப்படுவதற்கு பதிலாக 'சீறிப்பாயும் ஒரு விலங்கை போல காட்சியளிக்கின்றன' என பலர் சமூக வலைத்தளங்களில் கருத்துப் பகிர்ந்து வருகின்றனர். இந்த புதிய நாடாளுமன்ற கட்டட திட்டம், டெல்லியில் உள்ள காலனித்துவ கட்டடங்களை நவீனமயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்டு வருகிறது. இதற்கான செலவு 20 ஆயிரம் கோடி ரூபாய். எதிர்க்கட்சியினர் இத்தனை பெரும் தொகையில் இந்த கட்டடம் கட்டப்படுவது குறித்து விமர்சித்தனர். மேலும் அந்த கட்டடத்தின் வடிவமைப்பு குறித்தும் கேள்வி எழுப்பினர். இந்நிலையில்தான் தற்போது சிங்க முத்திரை குறித்த விமர்சனங்கள் எழுந்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீத்தாரம் யெச்சூரி, "தேசிய சின்னத்தை திறந்து வைத்து, அரசமைப்புச் சட்டத்தை மோதி மீறியுள்ளார். தான் பிரதிநிதித்துவப்படுத்தும் நிர்வாகத் துறைக்கும் நாடாளுமன்றத்துக்கும் இடையிலான வேறுபாட்டை நரேந்திர மோதி அழித்துவிட்டார்," என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் இந்து மத முறையில் பூஜை செய்தது குறித்தும் யெச்சூரி கடுமையாக விமர்சித்துள்ளார். அதேபோல தாங்கள் இந்த சிலை திறப்பிற்கு அழைக்கப்படவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. Twitter பதிவை கடந்து செல்ல, 2 Twitter பதிவின் முடிவு, 2 "நாடாளுமன்றம், நிர்வாகம், நீதித்துறை ஆகியவற்றுக்கான எல்லைகளைப் பிரித்து வைக்கிறது நமது அரசமைப்புச் சட்டம். இந்தியப் பிரதமராக உள்ள மோதி, நாடாளுமன்ற கட்டடத்தின் மீது தேசிய சின்னத்தை திறந்து வைத்திருக்கக் கூடாது. மக்களவை சபாநாயகர் அரசின் உதவியாளர் அல்ல. பிரதமர் மோதி அனைத்து அரசியலமைப்பு விதிகளையும் மீறிவிட்டார்," என ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசிதெரிவித்துள்ளார். சிலை திறப்பின் போது மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Twitter பதிவை கடந்து செல்ல, 3 Twitter பதிவின் முடிவு, 3 "உண்மையை சொல்ல வேண்டுமானால் சத்யமேவ ஜெயதே என்பதிலிருந்து சிங்கமேவ ஜெயத்தேவிற்கு நாம் எப்போதோ மாறிவிட்டோம்," என திரிணமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார். Twitter பதிவை கடந்து செல்ல, 4 Twitter பதிவின் முடிவு, 4 "அசோக சிங்கங்கள் தற்போது பற்களை காட்டுகின்றன? மோதி அரசின் புதிய வரவாக இது உள்ளது" என தெலங்கானா ஆளும் கட்சியான ராஷ்டிர சமிதி சமூக ஊடக ஒருங்கிணைப்பாளர் ஒய். சதீஷ் ரெட்டி தெரிவித்துள்ளார். Twitter பதிவை கடந்து செல்ல, 5 Twitter பதிவின் முடிவு, 5 இந்த புதிய சிங்கங்கள் கருணையும் கம்பீரத்துடனும் இருப்பதை காட்டிலும் ஆக்ரோஷமாக தெரிகின்றன என எழுத்தாளர் கிரண் மன்ரால் தெரிவித்துள்ளார். Twitter பதிவை கடந்து செல்ல, 6 Twitter பதிவின் முடிவு, 6 இந்த புதிய நாடாளுமன்ற கட்டடம் இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தை ஒட்டி நிறைவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது வரும் அக்டோபரில்தான் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். https://www.bbc.com/tamil/india-62135460
  3. ஊரே கொண்டாடிய என் சாகித்ய அகடமி விருது | CWC-Social Talk | Writer S.Ramakrishnan Part 6
  4. சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக தமிழ்நாடு முழுவதும் மோசடி - நடந்தது என்ன ? மோகன் பிபிசி தமிழுக்காக 12 ஜூலை 2022, 00:49 GMT புதுப்பிக்கப்பட்டது 12 ஜூலை 2022, 03:51 GMT பட மூலாதாரம்,SEAN GLADWELL / GETTY IMAGES "எங்களை விமான நிலையத்துக்கு ஏற்றிச்செல்ல வண்டி வரும் என்றார்கள். ஆனால், ஏமாற்றம்தான் வந்தது" என்கிறார்கள், சிங்கப்பூர் வேலைக்காக சென்னை வருவதற்குத் தயாராக காத்திருந்த தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களிடம் இருந்து வந்த சொற்கள் இவை. நடந்தது என்ன? சிங்கப்பூரில் கட்டுமான நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. கோவை மாவட்டம் வடவள்ளியில் அஃபார்ட் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் என்கிற தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் வசூலித்துவிட்டு ஏமாற்றிவிட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் கோவை காவல் கண்கானிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இதில் வேலைக்கு செல்பவர்கள், சமீபத்தில் கல்லூரி படிப்பு முடித்த மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலரும் அடங்குவர். "விளம்பரத்தை நம்பி ஏமாந்தோம்" தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளாவைச் சேர்ந்த பலரும் இந்த நிறுவனத்தில் வேலைக்காக பதிவு செய்து பணம் செலுத்தியுள்ளனர். கேரளா, பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த மனோஜ் பிபிசி தமிழிடம் பேசுகையில், "சிங்கப்பூரில் கட்டுமான நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக அஃபார்ட் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் பல இடங்களில் விளம்பரம் செய்திருந்தனர். தினசரி நாளிதழ்களில் கூட விளம்பரங்கள் வந்திருந்தன. அதை நம்பி தான் நான் உட்பட பலரும் விண்ணப்பித்திருந்தோம். சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் எல்.எஸ் கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் என்கிற கட்டுமான நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறினார்கள். விண்ணப்பித்தவர்களின் தகுதிக்கேற்ப பொறியாளர், மேற்பார்வையாளர் எனப் பல வேலைகள் தருவதாக கூறியிருந்தார்கள். QR கோட் மோசடிகள்: கவனமாக இருக்க உதவும் கேள்வி பதில்கள் கடன் செயலிகளிடம் சிக்கி உயிர் பயத்தில் வாழும் இந்தியர்கள் சீனா முதல் சென்னை வரை விரியும் கிரிப்டோகரன்சி மோசடி வலை: தப்புவது எப்படி? இதற்கு ரூ.3 லட்சம் வரை செலவாகும், ரூ.1.5 லட்சத்தை முதல் தவனையாக செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகையை சிங்கப்பூர் சென்ற பிறகு செலுத்திக் கொள்ளலாம் என்றார்கள். அஃபார்ட் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் நிறுவனர் ராமமூர்த்தி, மேலாளர் மோகன், அலுவலக பணியாளர்கள் சரண்யா மற்றும் ஜோதி ஆகியோர் தான் இதில் சம்மந்தப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்திலிருந்து மூன்று லட்சம் வரை பலரும் கொடுத்திருந்தனர். சிலர் இணைய வழியாகவும், சிலர் ரொக்கமாகவும் பணம் செலுத்தியிருந்தனர். சரண்யா மற்றும் ஜோதி தான் அனைவருக்கும் தொடர்ந்து அழைத்துப் பேசினார்கள். ஆனால், கடந்த 6-ம் தேதியிலிருந்து ராமமூர்த்தி தான் அனைவரிடமும் பேசினார். படக்குறிப்பு, மேலாளர் மோகன் சிங்கப்பூரில் என்.எஸ் கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் என்கிற நிறுவனம் நிஜமாகவே உள்ளது. இணையத்தில் பார்த்து உறுதி செய்தோம். அந்த நிறுவனத்தின் சார்பில் வில்லியம் ஜார்ஜ் என்பவர் தான் விண்ணப்பித்தவர்களை சிங்கப்பூர் எண்ணில் தொடர்பு கொண்டு நேர்காணல் நடத்தினார். வாட்ஸ் ஆப் மூலமாக தான் அனைவரிடமும் பேசினார். அவர் எப்படி இருப்பார் என யாருக்கும் தெரியாது. சிங்கப்பூர் எண்ணாக இருந்ததால் உண்மையான எண்ணாக தான் இருக்கும் என நம்பினோம். என்.எஸ்.கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனத்தின் சார்பில் வேலை உத்தரவாதம் செய்த கடிதம் கூட வழங்கினார்கள். எல்லாம் முறையாக நடப்பதை போலத்தான் இருந்தது. ஜுலை 15-ம் தேதி சிங்கப்பூர் செல்ல விமான டிக்கெட் கூட பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனால் பார்த்துக் கொண்டிருந்த வேலைகளையும் விட்டுவிட்டோம். ஆனால், விசா யாருக்கும் வழங்கப்படவில்லை. கொரோனா பரிசோதனை முடிவுகள் நெகட்டிவ் என வந்தால் தான் விசா வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்கள். "பெயரைத் தவிர அனைத்தும் போலி" சிங்கப்பூர் செல்வதற்கு முன்பாக மூன்று நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதால் 10-ம் தேதி சென்னையில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 8-ம் தேதி எங்களை அழைத்துச் செல்ல வாகனம் வரும் என்றிருந்தார்கள். ஆனால், எந்த வாகனமும் வரவில்லை. ராமமூர்த்தி மற்றும் அலுவலக எண்களை தொடர்பு கொண்டபோது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் ஏற்பட்டு அவர்களுடைய அலுவலகம் சென்று பார்த்தபோது மூடப்பட்டிருந்தது. நால்வரும் தங்களுடைய செல்போன் எண்களை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டனர். அப்போது தான் என்னைப் போல நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதன் பிறகு தான் அனைவரும் இணைந்து வந்து தற்போது புகார் அளித்துள்ளோம். காவல்துறையினர் இரண்டு வாரங்கள் அவகாசம் கோரியுள்ளனர். என்.எஸ்.கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனத்தின் பெயரிலே போலியாக கடிதம், மின்னஞ்சல் முகவரி என அனைத்தும் தயார் செய்துள்ளனர்" என்றார். கவனம் தேவை - மாவட்ட எஸ்.பி இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், "இந்த வழக்கை விசாரிக்க துணை கண்காணிப்பாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. புகார் அளித்தவர்கள் போக வேறு யாரும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பது தெரியவில்லை. சென்னையில் புழக்கத்தில் போதை மாத்திரைகள் - மருத்துவர்களின் பெயரில் நடக்கும் மோசடி சைபர் மோசடிக் குற்றங்கள் கோவையில் அதிகரிக்கின்றனவா? ஆன்லைன் ரம்மி உங்களை அடிமைப்படுத்துவது எப்படி? அதில் பணம் சம்பாதிக்க முடியுமா? முழுமையான தகவல்கள் கிடைத்த பிறகு தான் எத்தனை பேரிடம், எவ்வளவு தொகை மோசடி நடைபெற்றுள்ளது என்பது தெரியவரும். வேலைவாய்ப்பு மோசடிகள் பெரும்பாலும் பணம் பெற்று அரசு வேலை வாங்கி தருவது, வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதை அடிப்படையாக வைத்து தான் நடைபெறுகின்றன. வெளிநாட்டு நிறுவனங்கள் உண்மையிலே வேலைக்கு ஆட்கள் எடுக்கின்றவா என்பதை அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி உறுதி செய்துகொள்ள வேண்டும். பெரும்பாலான நிறுவனங்கள் இது போன்ற மின்னஞ்சல்களுக்குப் பதிலளிப்பார்கள். அவ்வாறு இல்லையென்றால் சம்மந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்திய தூதரகங்களை தொடர்பு கொண்டு வேலைவாய்ப்பு தகவல்களை உறுதி செய்து கொள்ளலாம். வெளிநாட்டு நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் தான் வேலைக்கு ஆட்களை எடுப்பார்கள். வேலை வாங்கி தருவதாக கூறும் முகவர்களிடம் உரிமம் உள்ளதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும். இவற்றை செய்தாலே வேலைவாய்ப்பு தொடர்பான மோசடிகளை தவிர்க்கலாம்" என்றார். https://www.bbc.com/tamil/india-62127691
  5. மத்தியப் பிரதேசம்: 8 வயது அண்ணனின் மடியில் தம்பியின் சடலம் - நடந்தது என்ன? சுரையா நியாசி போபாலில் இருந்து பிபிசி இந்திக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,சுரையா நியாசி படக்குறிப்பு, மத்தியப் பிரதேசத்தின் மொரேனாவில், மடியில் தம்பியின் உடலுடன் அமர்ந்திருக்கும் சிறுவன். மத்திய பிரதேச மாநிலம் மொரேனாவில், எட்டு வயது சிறுவன் தனது தம்பியின் சடலத்தை மடியில் வைத்துக்கொண்டு அமர்ந்திருப்பதைக் காட்டும் புகைப்படம் வைரலாகி மக்கள் உள்ளத்தை உருக்கியது. அவனது தந்தை குழந்தையின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல குறைவான கட்டணத்தில் வண்டி கிடைக்குமா என்று தேடி அலைந்துகொண்டிருந்தார். இந்த காட்சியின் வீடியோ வைரலாகப் பரவியதும், ஆளும் பாரதிய ஜனதா கட்சியை மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்தது. இது குறித்து முதல்வர் சிவராஜ் சிங் செளஹானிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்க முயன்றபோது அவர் எதுவும் பேசாமல் சென்றுவிட்டார். ஆனால் மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஷ்ரா இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்தில் பின்னணி என்ன? தம்பியின் உடலுடன் அண்ணன் எட்டு வயது சிறுவன் ஒருவன் , தனது தம்பியின் சடலத்தை மடியில் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான். உயிரிழந்த குழந்தையின் வயது 2. அவனது உடல் வெள்ளைத் துணியால் போர்த்தப்பட்டிருந்தது. தந்தை தனது குழந்தையின் உடலை தனது கிராமத்திற்கு எடுத்துச் செல்வதற்காக வண்டி தேடிச் சென்றிருந்தார். பசில் ராஜபக்ஷ துபாய் செல்ல எதிர்ப்பு: விமான நிலையத்தில் நடந்த நள்ளிரவுப் போராட்டம் பேரண்டத்தின் ஆரம்ப காலத்தைக் காட்டும் புகைப்படத்தை வெளியிட்ட ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பூஜாராம் ஜாதவ், மகனின் உடலை மருத்துவமனையில் இருந்து தனது கிராமத்திற்கு எடுத்துச் செல்ல வண்டி கேட்டபோது மருத்துவமனை ஊழியர்கள் வண்டி இல்லை என்றும், வெளியே ஏற்பாடு செய்துகொள்ளுமாறும் கூறிவிட்டனர் என்றார் பூஜாராம். வெளியில் நின்றிருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களிடம் பூஜாராம் பேசியபோது அவர்கள் 1500 ரூபாய் வரை பணம் கேட்டுள்ளனர். பட மூலாதாரம்,சுரையா நியாசி படக்குறிப்பு, பூஜாராம் ஜாதவ் அதன் பிறகு மகனின் சடலத்துடன் வெளியே வந்த அவர் மருத்துவமனைக்கு வெளியே வண்டி கிடைக்காததால், நேரு பூங்கா அருகே இளைய மகனின் உடலை மூத்த மகனிடம் பார்த்துக்கொள்ளுமாறு கூறி, அங்கிருந்து சென்றார். நரோத்தம் மிஸ்ரா அறிக்கை குல்ஷன் தனது தம்பி உடலை மடியில் வைத்தவாறு அமர்ந்திருக்கும் காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா திங்கள்கிழமை தெரிவித்தார். "ஊரிலிருந்து வந்தபோது பூஜாராமின் குழந்தையின் உடல் நிலை கவலைக்கிடமாக இருந்தது. டாக்டர்கள் குழந்தை இறந்துவிட்டதாக அறிவித்ததும், குழந்தையின் உடலை மூத்த மகனிடம் ஒப்படைத்துவிட்டு அவர் உறவினர் வீட்டிற்கு சென்றார். இதை அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. மாவட்ட பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரி இது குறித்து விசாரணை நடத்துவார். மாலைக்குள் விசாரணையை முடிக்கும்படி அவரிடம் கூறப்பட்டுள்ளது," என்று அமைச்சர் குறிப்பிட்டார். மேலும், சிவில் சர்ஜனிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் அந்த குடும்பத்திற்கு அரசு சில உதவிகளை செய்துள்ளது. "சந்தையில் வண்டிகளுக்கு பஞ்சர் ஒட்டி பிழைப்பு நடத்துகிறேன். குழந்தையின் உடல்நிலை எப்படி மோசமடைந்தது என்று தெரியவில்லை. முதலில் அருகில் உள்ள மருத்துவரிடம் காட்டினேன். ஆனால் பலனில்லை. பின்னர் இங்கே அழைத்து வந்தேன்,"என்று தந்தை பூஜாராம் ஜாதவ் கூறினார். பூஜாராம் ஜாதவ் குடும்பம் ஜாதவ் குடும்பத்தை மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து வந்த ஆம்புலன்ஸ், அவர்களை விட்டுவிட்டுத் திரும்பிச்சென்றுவிட்டது. பூஜாராம் ஜாதவுக்கு மூன்று ஆண் குழந்தைகளும் ஒரு மகளும் உள்ளனர். அவர் மனைவி அவரைப் பிரிந்து சில காலமாக தாய் வீட்டில் வசிக்கிறார். பூஜாராம்தான் இந்த குழந்தைகளை கவனித்து வந்தார். சரியான உணவு கிடைக்காத காரணத்தினால் குழந்தையின் உடல் நிலை மோசமடைந்து அதுவே இறப்பிற்கு காரணமாக அமைந்தது என அக்கம்பக்கத்தினர் கருதுகின்றனர். குல்ஷன் தனது தம்பியின் உடலை மடியில் வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கும் செய்தி நகரின் கோத்வாலி காவல் நிலைய டவுன் இன்ஸ்பெக்டர் யோகேந்திர சிங் ஜாதோனுக்கு தெரியவந்தது. அவர் அந்த இடத்திற்குச் சென்று, இருவரையும் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அதன் பிறகு, ஆம்புலன்ஸ் ஏற்பாடுசெய்து குடும்பத்தை கிராமத்துக்கு அனுப்பி வைத்தார். அதே நேரத்தில், "இந்த விஷயம் எங்களுக்குத் தெரிந்ததும், நாங்கள் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து அவரை அவரது கிராமத்திற்கு அனுப்பினோம்."என்று தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி (CMHO) டாக்டர் ராகேஷ் ஷர்மா கூறுகிறார். பாஜக-காங்கிரஸ் மோதல் இந்த சம்பவம் காரணமாக காங்கிரசும், பாஜகவும் பரஸ்பரம் குற்றம் சாட்டுகின்றன. இந்த விஷயத்தில் அரசை கடுமையாக சாடிய முன்னாள் முதல்வர் கமல்நாத், கிராமப்புறங்களில் சுகாதாரம் மற்றும் ஆம்புலன்ஸ் பிரச்னைகள் குறித்து பல ட்வீட்களை பதிவுசெய்தார். இந்த விவகாரத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் பதிலளிக்கவில்லை. "மொரேனா விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்விகள் கேட்டனர். ஆனால் பதில் சொல்லாமல் அவர் ஒடிவிட்டார். சிவராஜ் அவர்களே, நீங்கள் எவ்வளவு ஓடுவீர்கள், எங்கு ஓடுவீர்கள், மக்கள் எல்லா இடங்களிலும் நிற்கிறார்கள்."என்று சிவராஜ் சிங் சௌஹானைப் பற்றி கமல்நாத் கூறினார். "சவால்களை எதிர்கொள்ளாமல் தப்பித்து உண்மையை மறுக்கும் நீங்களும் உங்கள் அரசும் மேற்கொள்ளும் இந்தப்போக்கு, மாநிலத்தின் ஒட்டுமொத்த மருத்துவ முறையையும் வெறுமையாகவும் உணர்வற்றதாகவும் ஆக்குகிறது," என்று அவர் ட்வீட் மூலம் தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான். இதற்குப் பிறகுதான் அரசு நடவடிக்கையில் இறங்கியது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவியும் வழங்கப்பட்டது. 3,400 பேருக்கு ஒரு மருத்துவர் இந்த மாநிலத்தில் இதுபோன்ற சம்பவம் அரங்கேறுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் இது போன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன. மாநிலத்தில் 77 ஆயிரம் மருத்துவர்கள் தேவை. ஆனால் 22 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர். அதாவது 3,400 பேருக்கு ஒரு மருத்துவர் மட்டுமே இருக்கிறார் என்று எம்.பி மருத்துவக் கல்லூரி கவுன்சிலின் அறிக்கை தெரிவிக்கிறது. மாநிலத்தில் உள்ள மருத்துவர்களின் சரியான எண்ணிக்கையை அறிய கவுன்சில் இந்த ஆண்டு மறுபதிவு செய்வதற்கான உத்தரவை அரசு வழங்கியது. கடைசி தேதி வரை, 22,000 டாக்டர்கள் மட்டுமே தங்களை பதிவு செய்துள்ளனர். இருப்பினும் இதற்கு முன்பு இருந்த ஆவணங்களின்படி 59,000 மருத்துவர்கள், மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 3,278 சிறப்பு மருத்துவர் பணியிடங்களில் 1,029 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், 1,677 மருத்துவ அலுவலர் பணியிடங்களும் காலியாக உள்ளன. இந்தப் புள்ளிவிவரங்கள் மாநில சுகாதாரத் துறையின் நிலையை படம்பிடித்துக்காட்டுகின்றன. https://www.bbc.com/tamil/india-62133583
  6. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வெளியிட்ட பேரண்டத்தின் ஆரம்ப காலத்தைக் காட்டும் புகைப்படம் - அறிவியல் அதிசயம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NASA பேரண்டத்தின் குழந்தைப் பருவத்தைக் காட்டும் வகையில், இதுவரை இல்லாத தெளிவோடு, ஆழத்தோடு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது அமெரிக்காவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா இந்த தொலை நோக்கியை கடந்த ஆண்டு டிசம்பர் 25ம் தேதி விண்ணில் ஏவியது. 'விண்வெளியில் உள்ள புவியின் கண்' என்று வருணிக்கப்படும் ஹபிள் விண்வெளி தொலைநோக்கியின் ஆயுள் முடிவை நெருங்கி வரும் நிலையில், ஜேம்ஸ் வெப் அதன் வாரிசாக இருக்கும் என்று கருதப்படுகிறது. 10 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 75 ஆயிரம் கோடி ரூபாய்) செலவில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விண்வெளியில் ஜேம்ஸ் வெப் எடுத்த முதல் முழு வண்ணப் புகைப்படம் ஒன்றை நாசா வெளியிட்டுள்ளது. ஒரு புகைப்படம்தானே. இதற்கு ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம் என்று தோன்றுகிறதா? விண்வெளியில் தொலைதூர உடுத் திரள்களை (நட்சத்திரக் கூட்டங்களை) படம் எடுப்பது என்பது கேமிராவை ஆன் செய்து, கிளிக் செய்வது போல சில விநாடி வேலை அல்ல. பேரண்டத்தின் தொலைதூரத்தைப் பார்ப்பதில் சிக்கல் என்னவென்றால், பேரண்டத்தின் தூசிப்படலம் ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் பார்க்க முடியாதபடி காட்சியை மறைத்துவிடும். எனவே எக்ஸ்ரே, அகச்சிவப்புக் கதிர்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி அதிநவீன கருவிகளின் உதவியோடு தரவுகளைத் திரட்டி அவற்றைப் படமாக தொகுத்தே வழங்குவார்கள். பேரண்டம் உருவானதன் ரகசியம் என்ன? புதுவகை அணுத் துகள் கண்டுபிடிப்பு விடை சொல்லுமா? 180 கோடி நட்சத்திரங்களை எண்ணி முடித்த விண்வெளி தொலைநோக்கி: வியப்பூட்டும் தகவல்கள் இப்படி பேரண்டத்தை காட்சிப் படுத்தி இதுவரை எடுக்கப்பட்ட படங்களில் இதுவரை இல்லாத அளவு ஆழத்தோடும், தெளிவோடும் அமைந்திருப்பதுதான் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வெளியிட்ட முதல் படத்தின் சிறப்பு என்கிறது நாசா. பேரண்டத்துக்கு 600 மில்லியன் வயது ஆனபோது... படக்குறிப்பு, ஜேம்ஸ் வெப் - ஹபிள் தொலைநோக்கிகள் எடுத்த ஆழ்புலப் புகைப்படங்களின் ஒப்பீடு. பெரு வெடிப்பின் மூலமாக 13.8 பில்லியன் (1380 கோடி) ஆண்டுகள் முன்பு இந்தப் பேரண்டம் உருவானது என்று கணிக்கிறார்கள் அறிவியலாளர்கள். பிறந்து 600 மில்லியன் ஆண்டுகள் மட்டுமே ஆனபோது பேரண்டத்தின் குறிப்பிட்ட பகுதி எப்படி இருந்தது என்பதைத்தான் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் முதல் படம் காட்டுகிறது. இதைவிட சுவாரசியம், இந்தப் படம் எப்படி எடுக்கப்பட்டது என்ற விவரம்தான். மேலே இருக்கும் ஜேம்ஸ் வெப் படத்தை பார்த்தீர்களா. அதில் உள்ள ஒவ்வொரு ஒளிப்புள்ளியும் ஒரு உடுத் திரள் ஆகும். நட்சத்திரங்களை தமிழில் உடு என்று அழைக்கிறோம். உடுக்கள் கூட்டமாக இருப்பதே உடுத்திரள். நமது சூரியன் இடம் பெற்றுள்ள உடுத்திரளின் பெயர்தான் பால்வெளி மண்டலம். இப்படி பல உடுத்திரள்கள் சேர்ந்த கூட்டத்தை ஆங்கிலத்தில் கிளஸ்டர் ஆஃப் கேலக்சிஸ் என்கிறார்கள். நாம் இதை உடுத்திரள் கூட்டம் என்று அழைக்கலாம். ஜேம்ஸ் வெப் வெளியிட்டுள்ள இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க புகைப்படம் காட்டுவது SMACS 0723 என்று பெயரிடப்பட்ட ஒரு உடுத்திரள் கூட்டம்தான். உண்மையில் இந்த உடுத்திரள் கூட்டம் 4.6 பில்லியன் ஒளியாண்டு தூரத்தில் உள்ள காட்சியைத்தான் இந்தப் படம் காட்டுகிறது. ஆனால், இந்த உடுத்திரள் கூட்டம் பின்னணியில் அதைத்தாண்டி நெடுந்தொலைவில் உள்ள உடுத்திரள்களின் ஒளியை வளைத்தும் பெரிதுபடுத்தியும் காட்டுகிறது. இதற்கு ஈர்ப்பு விளைவு என்று பெயர். நமது சாதாரண கேமிராவில் ஜும் லென்ஸ் எப்படி தொலைதூரக் காட்சியை இழுத்து பெரிது படுத்திக் காட்டுமோ அப்படி, நடுவழியில் உள்ள உடுக்களின், உடுத் திரள்களின் ஒளி விண்வெளி தொலைநோக்கிக்கு ஜும் லென்ஸ் போல செயல்பட்டு அதைவிட நெடுந்தொலைவில் உள்ள காட்சியை காண உதவி செய்வதே ஈர்ப்பு விளைவு எனப்படுகிறது. இப்படி இந்த ஈர்ப்பு விளைவின் உதவியோடு ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த இந்தப் படத்தின் பின்னணியில் உள்ள, மிக நெடுந்தொலைவில் உள்ள உடுத்திரளின் ஒளி, இந்தப் பேரண்டம் தோன்றி வெறும் 600 மில்லியன் ஆண்டுகளே ஆகியிருந்தபோது பிறந்தது ஆகும். அதாவது பேரண்டம் குழந்தைப் பருவத்தில் இருந்தபோது இந்த உடுத்திரள் எப்படி இருந்தது என்பதை இது காட்டுகிறது. இந்த தொலைவு என்பது இதுவரை காட்சிப் படுத்தப்படாத தொலைவு என்பதுதான் இந்தப் படம் வரலாற்று முக்கியத்துவம் பெறக்காரணம். இதுவரை எடுக்கப்பட்ட பேரண்டத்தின் புகைப்படங்களிலேயே, மிகவும் ஆழமான, விரிவான விவரங்களுடன் கூடிய அகச்சிவப்பு கோணமாக இந்த படம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஹபிளைவிட மிக விரைவாக.. இது போன்ற ஆழமான புலத்தை காட்சிப் படுத்துவதற்கு ஹபிள் தொலைநோக்கி பல வாரங்களுக்கு விண்வெளியை உற்றுநோக்க வேண்டியிருக்கும். ஆனால், ஜேம்ஸ் வெப் 12.5 மணி நேரம் மட்டுமே விண்வெளியை உற்றுநோக்கி இந்தப் புகைப்படத்தை உருவாக்கியுள்ளது. பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த முதல் ஆழ்புலப் புகைப்படம் வெளியிடப்படுவதை பார்வையிடும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். இந்தப் படம் முதல் படம்தான். இன்னும் ஆழமாக, மேலும் தொலைவாகப் பயணித்து 13.5 பில்லியன் ஆண்டு தொலைவுக்கு சென்று பார்க்க முடியும் என்கிறார் நாசா நிர்வாகி பில் நெல்சன். பேரண்டம் பிறந்ததே 13.8 பில்லியன் ஆண்டுகள் முன்புதான் என்பதைக் கணக்கில் கொண்டால் இது பேரண்டத்தின் தொடக்க காலத்துக்கு அருகே செல்வதற்கு ஒப்பானது. செவ்வாய்க்கிழமை மேலும் அதிகப் படங்கள் வெள்ளை மாளிகையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு இந்தப் படம் காண்பிக்கப்பட்டது. ஜேம்ஸ் வெப் எடுத்த கூடுதல் படங்கள், இன்று ஜூலை 12 செவாய்க்கிழமையன்று நடைபெறும் உலகளாவிய நிகழ்ச்சி ஒன்றில் நாசாவால் வெளியிடப்பட உள்ளன. இதுகுறித்து பேசிய ஜோ பைடன், "அமெரிக்கா பெரிய விஷயங்களைச் செய்ய முடியும் என்பதை இந்த படங்கள் உலகுக்கு நினைவூட்டுகின்றன, மேலும் அமெரிக்க மக்களுக்கு - குறிப்பாக எங்கள் குழந்தைகளுக்கு - எங்கள் திறனைத் தாண்டி எதுவும் இல்லை என்பதை நினைவூட்டுகின்றன" என்று குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், "இதுவரை யாரும் பார்த்திராத சாத்தியக்கூறுகளை நம்மால் பார்க்க முடிகிரது. இதுவரை யாரும் எட்டாத இடங்களையும் நம்மால் எட்ட முடியும்" என்றும் பேசினார். https://www.bbc.com/tamil/global-62131100
  7. கேரள தங்க கடத்தல் வழக்கு: இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சொன்ன கருத்து 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இன்று (12.07.2022) தமிழ்நாடு, இலங்கையின் நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளியான செய்திகளில் கவனிக்கத் தக்கவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம். கேரள தங்க கடத்தல் வழக்கில் உண்மை நிச்சயம் வெளிவரும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறியுள்ளதாக தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. திருவனந்தபுரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, "இலங்கையில் அதிபரை பதவி விலகக்கோரி மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். இது தீவிரம் அடைந்து உள்ளது. இதை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும். விரைவில் அங்கு நிலையான அரசு அமையும் என்ற நம்பிக்கை உள்ளது," என்று கூறினார். கேரள தங்க கடத்தல் வழக்கு விசாரணையின் முடிவில், உண்மை நிச்சயம் வெளிவரும். திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரசு அமீரக தூதரத்துடன் நடந்த இந்த வழக்கு தொடர்பான விவரங்கள் அனைத்தும், மத்திய வெளியுறவுத்துறைக்கு கிடைத்துள்ளது. இதில் நடக்கக்கூடாத சில சம்பவங்களும் நடந்து உள்ளது. கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதால், அதுபற்றி கூடுதலாக பேச விரும்பவில்லை. நுபுர் சர்மா விவகாரத்தில் வளைகுடா நாடுகளுடன் எந்த முரண்பாடும், அதிருப்தியும் இல்லை என்று அவர் கூறியதாக தெரிவிக்கிறது அந்த நாளிதழ் செய்தி. தங்க கடத்தல் வழக்கு என்றால் என்பதையும் அதன் பின்னணியையும் இந்த இணைப்பில் அறிந்து கொள்ளலாம். மக்கள்தொகை: 2023இல் இந்தியா சீனாவை முந்தும் - ஐ.நா பட மூலாதாரம்,GETTY IMAGES மக்கள்தொகை பெருக்கத்தில் 2023-ஆம் ஆண்டில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பெறும் என்று ஐ.நா கணித்துள்ளதாக தினமணி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. இது தொடா்பாக ஐ.நா. பொருளாதார, சமூக விவகாரத் துறையின் மக்கள்தொகை பிரிவு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்ததாவது: உலக மக்கள்தொகை நிகழாண்டு நவம்பா் 15-இல் 800 கோடியை எட்டும். 1950-க்குப் பின்னா் உலக மக்கள் தொகை மெதுவான வீதத்தில் வளா்ச்சியடைகிறது. 2030-ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 850 கோடியையும், 2050-ஆம் ஆண்டில் 970 கோடியையும் எட்டும். 2080-இல் உலக மக்கள்தொகை 1,040 கோடியாக இருக்கும். 2100 வரை இதே விகிதம் நீடிக்கும். 2023-இல் சீனாவை பின்னுக்குத் தள்ளி உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா விளங்கும். வரும் 2050-இல் இந்தியாவின் மக்கள்தொகை 166 கோடியாக இருக்கும். வெளிநாடு சென்றதை மனைவியிடம் மறைக்க பாஸ்போர்ட் பக்கங்களை கிழித்தவர் கைது கோட்டாபய, ரணில் இல்லாவிட்டால் இலங்கைக்கு உள்ள வாய்ப்புகள் என்ன? விம்பிள்டன்: வெள்ளை உடையும் மாதவிடாயும் - டென்னிஸ் வீராங்கனைகள் எழுப்பும் கேள்விகள் உலக மக்கள்தொகையில் 29 சதவீதத்துடன் அதாவது 230 கோடி மக்கள்தொகையுடன் 2022-இல் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட பிராந்தியமாக கிழக்கு மற்றும் தென்-கிழக்கு ஆசியா திகழ்கிறது. மத்திய, தெற்கு ஆசியா 210 கோடி மக்களுடன் உலக மக்கள்தொகையில் 26 சதவீதத்தைக் கொண்டுள்ளது.இந்த பிராந்தியத்தில் சீனாவும் இந்தியாவும் தலா 140 கோடி மக்கள்தொகையுடன் அதிக மக்கள்தொகையைக் கொண்ட நாடுகளாக விளங்குகின்றன. 2050-ஆம் ஆண்டுவரையிலான உலக மக்கள்தொகை பெருக்க கணக்கீட்டின்படி, காங்கோ குடியரசு, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பின்ஸ், தான்ஸானியா ஆகிய 8 நாடுகளும் 50 சதவீதத்துக்கும் அதிகமான பங்கு வகிக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலாளா் அன்டோனியோ குட்டெரெஸ் கூறுகையில், 'பூமியின் 800 கோடியாவது மக்களைப் பெற போவதால் நிகழாண்டு சா்வதேச மக்கள்தொகை தினம் (ஜூலை 11) முக்கிய மைல்கல்லாகும். நமது பன்முகத்தன்மை, மனிதாபிமானத்தை அங்கீகரிக்கவும், நீடித்த வாழ்நாளை உறுதிப்படுத்தி, தாய்-சேய் இறப்பு விகிதத்தை குறைக்க உதவிய மருத்துவத் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டாடவும் இது சரியான தருணம்' என்றார் என தினமணி நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது. https://www.bbc.com/tamil/global-62130850
  8. இலங்கை நெருக்கடி: பசில் ராஜபக்ஷ துபாய் செல்ல எதிர்ப்பு - விமான நிலையத்தில் நள்ளிரவுப் போராட்டம் பரணி தரன் பிபிசி தமிழ் 22 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, விமான நிலைய பட்டுப்பாதை சிறப்பு ஓய்வு அறை வளாகத்தில் பசில் ராஜபக்ஷ, நாள்: 11-07-2022 இலங்கை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பட்டுப்பாதை பயணிகள் அனுமதி முனையத்தின் வழியாக நாட்டை விட்டுச் செல்ல மேற்கொண்ட முயற்சி, பயணிகளின் கடும் எதிர்ப்பால் தோல்வியில் முடிந்தது. இவர் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தம்பி ஆவார். மேலும் இவர் முன்னர் நிதி அமைச்சராக இருந்தவர். தற்போது தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார். 2007 முதல் 2015 வரையில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இவர் இருந்துள்ளார். திங்கள்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் பண்டாரநாயக்க விமான நிலையத்துக்கு பசில் ராஜபக்ஷ வந்த தகவலை பிபிசியிடம் பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். ஆனால், விமான நிலையத்தில் பசில் ராஜபக்ஷவை பார்த்த பயணிகள், அவருக்கு சிறப்புச் சலுகை அளிப்பதை ஆட்சேபித்தனர். அவர் அந்த வளாகத்துக்கு வந்த காட்சிகள் இடம் பெற்ற காணொளி மற்றும் படங்கள் சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டன. இதேவேளை பசில் பயணிக்கத் திட்டமிட்டிருந்த விமானம் அதிகாலை 3.15 மணிக்கு துபாய்க்கு புறப்படுவதற்கு தயாராக இருந்தது. 'தீர்வு கிடைக்கும் வரை ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேற மாட்டோம்' - போராட்டக்காரர்கள் இலங்கை: ஜனாதிபதி மாளிகையில் பணம் - காவல்துறையிடம் திருப்பி கொடுத்த போராட்டக்காரர்கள் செல்ஃபி, ஜிம், நீச்சல்: இலங்கை ஜனாதிபதி மாளிகையில் மக்கள் உற்சாகம் பயணிகள் போராட்டம் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த நிலையில், பயணிகளின் எதிர்ப்பு மற்றும் அவர் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்று பலரும் ஆட்சேபம் தெரிவித்து குரல் எழுப்பினர். இதையடுத்து, பசில் விமானத்தில் செல்வதற்கும் அவரது பயண நடைமுறையை நிறைவேற்றுதவற்கும் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ஏற்பட்ட பதற்றமான சூழல் காரணமாக பசில் மீண்டும் விமான நிலையத்தை விட்டு வெளியே சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத்துறை அதிகாரிகள் சங்கம் (SLIEOA) நேற்று இரவு முதல் பட்டுப்பாதை பயணிகள் அனுமதி முனையத்தில் சேவை வழங்குவதில் இருந்து விலகிக் கொள்ள தீர்மானித்துள்ளது. இதனால் இன்று காலை இந்த முனையத்தில் பயணிகள் சிறப்புச் சலுகையுடன் பயண நடைமுறைகளை நிறைவேற்ற வாய்ப்பின்றி பிசினஸ் வகுப்பு பயணிகள், சாதாரண வகுப்பு பயணிகள் போல வரிசையில் காத்திருந்து விமான பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். கொழும்பு பண்டாரநாயக்க விமான நிலையத்தில் பிசினஸ் வகுப்பு மற்றும் முக்கிய பிரமுகர்களுக்காக பிரத்யேகமாக இந்த 'சில்க் ரூட் பேசஞ்சர் கிளியரன்ஸ் டெர்மினல்' என்ற பெயரிலான தனி பாதை மற்றும் விரைவு விமான பயண நடைமுறையை நிறைவேற்றும் வசதி செயல்பாட்டில் உள்ளது. Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 இது குறித்து இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத்துறை அதிகாரிகள் சங்கத் தலைவர் கே.ஏ.ஏ.எஸ். கனுகலா கூறும்போது, "நாட்டில் தற்போது நிலவும் ஸ்திரமற்ற சூழ்நிலை, நெருக்கடி மற்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் தலைவர்கள் மிகப்பெரிய அளவில் இந்த பட்டுப்பாதை அனுமதி முனையத்தை பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேறுவதற்கான பலமான சாத்தியக்கூறுகள் உள்ளன. அதைக் கருத்தில் கொண்டு எங்களுடைய சேவையை நிறுத்திக் கொள்ள தீர்மானித்துள்ளோம்," என்றார். பட்டுப்பாதை வசதி எப்படி இருக்கும்? பட மூலாதாரம்,BIA SRILANKA இந்த வசதியை பயன்படுத்த நாட்டின் அமைச்சர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண முதல்வர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசு உயரதிகாரிகள் தகுதி பெறுவார்கள். இவர்களுக்கு இந்த சேவை இலவசமாக கிடைக்கும். அதே சமயம், பிசினஸ் வகுப்பு பயணிகள் கட்டண முறையிலும் விமான நிறுவனங்களின் தனிப்பட்ட வாடிக்கையாளர் சேவை மேம்பாட்டு திட்டத்தின் கீழும் அவற்றின் கவனிப்பில் பட்டுப்பாதை முனைய சேவையை வழங்கலாம். இது தவிர, இந்த சேவையை பெற விரும்பும் பயணி ஆன்லைனில் கிரெடிட் கார்டு அல்லது டிபார்ச்சர் சில்க் ரூட் லவுஞ்ச் அல்லது வருகை முனையத்தில் உள்ள வெளிப்புற கவுன்ட்டரில் இந்த சேவைக்கான கட்டணத்தை செலுத்தி வசதிகளை அனுபவிக்கலாம். Twitter பதிவை கடந்து செல்ல, 2 Twitter பதிவின் முடிவு, 2 சோதனை நடவடிக்கையின்போது ஒரே நேரத்தில் அதிகபட்சமாக இரண்டு பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். தற்போது புறப்பாடுக்கான பட்டு பாதை ஓய்வறையில் குடியேற்ற வசதிகள் வழங்கப்படுவதில்லை. அதேசமயம், வருகை பட்டுப்பாதை வழியாக வெளியே வர அனுமதிக்கப்பட்ட பயணிகள் விமானத்தில் இருந்து இறங்கி நிலையத்துக்குள் நுழைந்ததுமே அவரை இந்த முனையத்தின் சேவைப்பிரிவு பிரதிநிதிகள் வரவேற்று அழைத்துச் செல்வர். இன்னொரு குழு பயணியின் உடைமைகளை துரிமாக எடுத்து வந்து பயணிகளிடம் ஒப்படைக்கும். இடைப்பட்ட நேரத்தில் சிறப்பு ஓய்வறையில் பயணிகள் தங்கி இளைப்பாறவும் அவர்களை உபசரிக்கவும் பிரதிநிதிகள் இருப்பார்கள். விமான நிலையத்தில் இருந்து அந்த பயணிகள் வாகனத்தில் புறப்படும்வரை அவர்களுடன் ஒரு பிரதிநிதி பிரத்யேகமாக இருந்து வழியனுப்பி வைப்பார். மக்களே உருவாக்கிய தணிக்கைச்சாவடிகள் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜூலை 13ஆம் தேதி பதவி விலகுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் தமது விலகல் கடிதத்தை இன்றே வழங்கி விட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளிவருகின்றன. இந்த நிலையில், இலங்கை ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை போன்றவற்றில் தொடர்ந்து மூன்றாவது நாளாக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மக்கள் அந்த மாளிகைகளை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இது தவிர, நாட்டின் அரசியல் தலைவர்களில் குறிப்பாக ராஜபக்ஷ குடும்பத்தினர் யாரும் நாட்டை விட்டு வெளியேறாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக போராட்டக்காரர்கள் தற்போது தாங்களாகவே பல முக்கிய பாதைகளில் சோதனைச் சாவடிகளை அமைத்து கண்காணித்து வருகின்றனர். அதே பகுதியில் உள்ளூர் போலீஸாரும் உள்ளனர். இந்த நிலையில், பசிலின் அண்ணன்களான முன்னாள் பிரதமர் மஹிந்த, ஜனாதிபதி கோட்டாபய ஆகியோரும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கொழும்பில் ரகசிய இடத்தில் பலத்த பாதுகாப்புடன் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்தப் பின்னணியில் ஜூலை 13ம் தேதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்கெனவே கூறியது போல முறைப்படி பதவியில் இருந்து விலகினால் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக அனைத்து கட்சித்த தலைவர்களுடன் பேசிய பிறகு நாடாளுமன்றத்தில் ஜூலை 20ஆம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று சபாநாயகர் கூறியுள்ளார். https://www.bbc.com/tamil/sri-lanka-62131361
  9. The Voice Teens: சிங்கள ரியாலிட்டி நிகழ்ச்சியில் தமிழ் சிறுமி முதலிடம் | Singer Pranisha Interview
  10. இன்றும் புதிதாக இருக்கும் இளையராஜாவின் பாடல்கள் |CWC-Social Talk| S.Ramakrishnan Part 5
  11. போலி ஐபிஎல்: ரஷ்ய சூதாட்டக்காரர்களை ஏமாற்றிய குஜராத் கிராமத்தினர் கைது 41 நிமிடங்களுக்கு முன்னர் காணொளிக் குறிப்பு, ஐபிஎல்: போலி கிரிக்கெட் போட்டியை நடத்தியவர்களை இந்திய போலீசார் கைது செய்தனர் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் (ஐபிஎல்) போலியான பதிப்பை உருவாக்கி, ரஷ்யாவில் சூதாட்டக்காரர்களை ஏமாற்றிய ஒரு கும்பலை இந்தியாவில் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த போலி ஆட்டம் மூலம் இந்திய ரூபாய் மதிப்பில் மூன்று லட்சத்துக்கும் மேல் (கிட்டத்தட்ட $4,000) அவர்கள் ஏமாற்றியதாக போலீசார் தெரிவித்தனர். இந்த மோசடிக்கு உயிர் கொடுக்க, பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே குரலில் ஒருவர் பேசுவது போலவும் இந்த கும்பல் ஏற்பாடு செய்திருந்தது. மீரட்டில் இருந்து ஒரு தொழிலாளி இந்த வேலைக்காக பிரத்யேகமாக அமர்த்தப்பட்டார். ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டித் தொடருக்காக பிரிட்டனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது, ஆனால் அதே நேரத்தில் குஜராத்தில் உள்ள ஒரு கிராமத்தில் போலியான ஐபிஎல் சீசன் நடந்தது. உண்மையான ஐபிஎல் மே மாதம் முடிவடைந்த மூன்று வாரங்களுக்குப் பிறகு இந்த போலியான போட்டி தொடங்கியது என்று போலீசார் தெரிவித்தனர். பட மூலாதாரம்,GUJARAT POLICE குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள மொலிபூர் கிராமத்தைச் சேர்ந்த சில தொழிலாளர்கள் பந்தயம் கட்டுவதில் ஆர்வமுள்ள ரஷ்ய சூதாட்டக்காரர்களை ஏமாற்ற முயன்றனர். 21 தொழிலாளர்கள் கொண்ட குழு, ஐபிஎல் சீசன் முழுவதையும் தாங்களாகவே போலியாக உருவாக்கியது, அவர்கள் வெவ்வேறு ஜெர்சிகளுடன் வீரர்களாக ஆடுகளத்தில் தோன்றினர். மகுடம் சூடியது குஜராத் டைட்டன்ஸ் - ஐபிஎல் கோப்பையை தட்டிப்பறித்த ஹர்திக் படை ஏலம் போகாத வீரரின் அதிரடி ஆட்டம்: எலிமினேட்டரில் லக்னோவை வென்றது ஆர்.சி.பி நவீன கருவிகளுடன் தொடங்கிய ஆட்டம் இந்த போலி ஷோவில் ஐந்து ஹெச்டி கேமராக்கள், வாக்கி டாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. போட்டிகளின் தரத்தை மேம்படுத்த இணையத்தில் இருந்து கூட்டத்தின் சத்தத்தை பதிவிறக்கம் செய்தனர். போட்டிகள் முடிந்தவரை உண்மையானதாக தோன்ற யூடியூப்பில் ஒளிபரப்பப்பட்டது. டெலிகிராம் தளம் மூலம் பணப்பரிவர்த்தனை நடந்தது. "இந்தியன் பிரீமியர் கிரிக்கெட் லீக்" என்று அழைத்துக் கொள்ளப்பட்ட இந்த ஆட்டம் காலிறுதிப் போட்டிவரை சென்றபோது, போலீசார் இதை கண்காணித்து இந்த மோசடி நபர்களை கைது செய்தனர். இந்த மோசடி தொடர்பாக நான்கு பேரை போலீசார் அதில் மூளையாக செயல்பட்ட நபரின் பெயர் ஷோயிப் தாவ்தா என்று தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீஸ் அதிகாரி பவேஷ் ரத்தோட் கூறும்போது, "ஷோயிப் குலாம் மாசியின் பண்ணையை வாடகைக்கு எடுத்து அங்கு ஹாலோஜென் விளக்குகளை நிறுவினார். ஒவ்வொரு ஆட்டத்துக்கும் தலா 400 ரூபாய் தருவதாக உறுதியளித்து 21 விவசாய தொழிலாளர்களை தயார்படுத்தினார்கள். அடுத்து, கேமராமேன்களை நியமித்து, ஐபிஎல் அணிகளின் டி-ஷர்ட்களை வாங்கினர்," என்றார்."ஷோயிப் டெலிகிராம் சேனலில் நேரடி பந்தயம் எடுப்பார். அவர் ஒரு வாக்கி-டாக்கியில் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை சிக்னல் செய்யும்படி நடுவரான கோலுவிடம் அறிவுறுத்துவார். பேட்ஸ்மேன் மற்றும் பந்து வீச்சாளரிடம் அதையே கொலு தெரிவித்தார். எல்லாம் பந்தயம் கட்டுபவரின் எண்ணப்படியே நடப்பதாக நம்ப வைக்க இந்த கும்பல் செயல்பட்டது. உத்தரவுகளுக்கு ஏற்ப பந்து வீச்சாளர் மெதுவாக பந்தை போடுவார். பேட்ஸ்மேன் அதை எளிதாக ஒரு பவுண்டரி அல்லது சிக்ஸருக்கு அடிக்க முடியும்," என்று ரத்தோட் கூறினார். ஒரு கட்டத்தில் ரஷ்ய சூதாட்டக்காரர்கள் கும்பல் அமைத்த டெலிகிராம் சேனலில் குஜராத் கும்பல் பந்தயம் கட்டினார்கள். பின்னர் போலி நடுவரை வாக்கி-டாக்கி மூலம் தங்களுடைய விருப்பத்துக்கு தக்க ஆட வைத்து மோசடி செய்தனர் என்றும் போலீஸ் ஆய்வாளர் பவேஷ் ரத்தோட் செய்தியாளர்களிடம் கூறினார். இந்தியாவில் கிரிக்கெட்டில் பந்தயம் கட்டுவது சட்டவிரோதமானது. தற்போது இந்த மோசடி ஆட்டத்தில் தொடர்புடையதாக பிடிபட்டுள்ள சந்தேக நபர்கள் மீது குற்றவியல் சதி மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. வியப்படைந்த ஹர்ஷா போக்லே Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 இந்த நிலையில், தன்னைப்போலவே வர்ணனை செய்து மோசடி செய்த கும்பல் கைது செய்த தகவலையறிந்து ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்ததாக கூறியிருக்கிறார் கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே. https://www.bbc.com/tamil/sport-62127563
  12. பொருளாதார மந்தநிலை எனும் 'பேய்' வரப்போகிறதா?: எச்சரிக்கும் சமிக்ஞைகள் அடஹோல்ஃபா அமெரிஸஸ் பிபிசி முண்டோ சேவை 10 ஜூலை 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES பொருளாதார மந்தநிலை என்று உலகம் அழைக்கும் அந்த 'பேய்' வரும் என்று கூறும் பொருளாதார நிபுணர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. பொருளாதாரத்தை விரைவுபடுத்தும் நோக்கில் பொருளாதார பேக்கேஜ் என்ற பெயரில் அதிக செலவு செய்வது, சீனாவில் இருந்து உலகிற்கு அனுப்பப்படும் பொருட்களின் விநியோகச் சங்கிலியில் தடங்கல், யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் மற்றும் பிற காரணங்கள் கடந்த பல தசாப்தங்களாக கண்டிராத நிலைக்கு பணவீக்கத்தை கொண்டுசென்றுள்ளன. இதைத் தடுக்க மத்திய வங்கிகள் கட்டாயத்தின் கீழ் வட்டி விகிதங்களை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்தது. மறுபுறம், உலகம் முழுவதும் பங்குச் சந்தைகளில் சரிவுப் போக்கு தொடர்கிறது. உதாரணத்திற்கு, அமெரிக்க குறியீடுகளை நம்மால் பார்க்கமுடிகிறது. அங்கு நீண்ட காலமாக சரிவு போக்கு நீடித்து வருகிறது. முதலீட்டாளர்களிடையே நம்பிக்கை இழப்பு ஏற்பட்டது போல காணப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில் நமக்காக பொருளாதார மந்தநிலை காத்திருப்பது போலத்தெரிகிறது. மந்தநிலை என்பது பொருளாதார நடவடிக்கைகளில் குறைவு மற்றும் அதன் விளைவாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) எதிர்மறையான (நெகட்டிவ்) வளர்ச்சி விகிதம் ஏற்படுவது ஆகும். பொதுவாக, ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்ந்து இரண்டு காலாண்டுகளுக்கு அழுத்தத்தில் இருந்தால், அது 'தொழில்நுட்ப மந்தநிலை' என்று அழைக்கப்படுகிறது. பத்து அமெரிக்கப் பொருளாதார நிபுணர்களில் ஏழு பேர், இந்த ஆண்டு இல்லாவிட்டாலும், அடுத்த ஆண்டு மந்தநிலை வரும் என்று பைனான்சியல் டைம்ஸ் மற்றும் ஷிகாகோ பல்கலைக்கழகத்தின் பூத் ஸ்கூல் ஆஃப் பிசினெஸ் நடத்திய கூட்டு ஆய்வில் கூறியுள்ளனர். பங்குச் சந்தைகளில் 'பிளாக் வீக்' மற்றும் வட்டி விகிதங்களை உயர்த்தும் முடிவு போன்றவைகளுக்கு முன்பாக, ஜூன் தொடக்கத்தில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. எனவே, மந்தநிலை நெருங்கிவிட்டதாகக்கருதும் பொருளாதார வல்லுனர்களின் எண்ணிக்கை இப்போது மேலும் அதிகரித்திருக்கும். மந்தநிலையின் பிடியில் சிக்கினால் பல ஆபத்தான விளைவுகள் ஏற்படலாம். முதலீட்டுச் சூழல் பாதிக்கப்படலாம். நுகர்வு மற்றும் பரிவர்த்தனைகள் குறைவதால் பல நிறுவனங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்படலாம். வேலைகள் குறையும். மக்களும் வணிக நிறுவனங்களும் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறுவார்கள். மேலும் பலர் திவாலும் ஆகலாம். இது குறித்து பிபிசி முண்டோ 4 பிரபல பொருளாதார நிபுணர்களிடம் பேசியது. எதிர்காலத்தில் அமெரிக்கா மற்றும் உலகின் பிற பொருளாதாரங்களில் மந்தநிலை ஏற்படும் அபாயத்தை அவர்கள் உண்மையில் காண்கிறார்களா என்று அவர்களிடம் கேட்டது. பட மூலாதாரம்,DAVID WESSEL படக்குறிப்பு, டேவிட் வெசல் '2023ல் மந்தநிலை ஏற்படும் சாத்தியகூறு 65 சதவிகிதம்' டேவிட் வெசல் வாஷிங்டன் டிசியில் உள்ள ப்ரூக்கிங்ஸ் இன்ஸ்டிடியூஷனின், நிதி மற்றும் பணக்கொள்கைக்கான ஹட்சின்ஸ் மையத்தின் இயக்குநராக உள்ளார். "மந்தநிலையை கணிப்பது கடினமான பணியாகும். பொதுவாக முன்கூட்டியே நீங்கள் எதிர்பார்க்காத சூழ்நிலைகளில் மந்தநிலை வரும். பொருளாதார வல்லுநர்கள் மந்தநிலை வரப்போகிறது என்று முழு நம்பிக்கையுடன் பல முறை கூறுவார்கள். பின்னர் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று நீங்கள் காண்பீர்கள்," என்று அவர் கூறுகிறார். "அமெரிக்காவில் 2023 ஆம் ஆண்டில் மந்தநிலை ஏற்படுவதற்கான உறுதியான வாய்ப்பை நான் காண்கிறேன். இது நிகழக்கூடிய சாத்தியகூறு 65 சதவிகிதம்தான் உள்ளது. இதற்கு காரணமும் இருக்கிறது. அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் ஜே.போவெல், முன்பு ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையை குறைத்து வெற்றிகரமாக சமாளித்தார். தனது முந்தைய வெற்றியை சீர்குலைத்தவராக மக்கள் அவரை நினைகூருவதை அவர் விரும்ப மாட்டார்,"என்று டேவிட் வெசல் குறிப்பிட்டார். இந்திய பொருளாதாரம் மந்தநிலைக்குச் செல்கிறதா? ஜிடிபி வளர்ச்சி பற்றி ஓர் அலசல் இலங்கை நெருக்கடி: பணத்தை அச்சிட்டால் பொருளாதார பிரச்னை முடிந்துவிடுமா? " தேவையை குறைக்க, விலை உயர்வு அழுத்தத்தை குறைக்க மற்றும் பணவீக்கத்தின் பிடி இறுகுவதைத்தடுக்க இப்போது ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டும். இருப்பினும், பொருளாதாரத்தை மெதுவாக்கி, பணவீக்க விகிதத்தை 2 சதவிகித இலக்குக்கு கீழே குறைக்க, வட்டி விகிதங்களை உயர்த்துவது அல்லது அப்படியே வைத்திருப்பது போன்ற விஷயங்களில், பெடரல் ரிசர்வ் மிகவும் கடினமான முடிவுகளை எடுக்கவேண்டியிருக்கும்."என்று அவர் கூறினார். "ஒவ்வொரு மாற்றுவழிக்கும் ஆதரவாக நல்ல வாதங்கள் இருக்கலாம். அவற்றை தளர்த்துவதற்கு பதிலாக விகிதங்களை கடுமையாக்கும் தவறை போவெல் செய்வார் என்று நான் எதிர்பார்க்கிறேன். இது மந்தநிலைக்கு வழிவகுக்கக்கூடும். ஆனால் இது ஒரு மிதமான மந்தநிலையாக இருக்கும். என் கணிப்பு தவறாக வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். உலகின் விநியோகச் சங்கிலிகளில் உள்ள எல்லா பிரச்சனைகளும் தீர்க்கப்பட வேண்டும். கொரோனாவின் மோசமான விளைவுகள் நீங்கவேண்டும். நமக்கும்,மத்திய வங்கிக்கும் அதிர்ஷ்டம் கைகொடுக்கவேண்டும்,"என்று வெசெல் குறிப்பிட்டார். "ஆனால் அப்படிப்பட்ட அதிர்ஷ்டம் வரக்கூடிய வாய்ப்பில்லை என்று நான் நினைக்கிறேன்."என்று அவர் சொன்னார். பட மூலாதாரம்,GABRIEL GASAVE படக்குறிப்பு, கேப்ரியல் கேஸ்வே 'அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மந்தநிலை வரலாம்' கேப்ரியல் கேஸ்வே இன்டிபென்டன்ட் இன்ஸ்டிடியூட் சென்டர் ஃபார் க்ளோபல் ப்ராஸ்பெரிட்டியில் ஒரு ஆராய்ச்சி அசோசியேட் மற்றும் Elindependent.org (ஓக்லாண்ட், கலிபோர்னியா) இன் இயக்குனர். "ஒருவேளை 2023 இன் ஆரம்பத்தில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் குறிப்பிடத்தக்க மந்தநிலையை நாம் சந்திக்க நேரிடும் என்று நான் கருதுகிறேன். கொரோனா தொற்றுநோய், விநியோகச் சங்கிலிகளில் இடையூறுகள், யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல், உணவு பற்றாக்குறை, அதிகரிக்கும் எரிபொருள் விலைகள் போன்றவற்றால் இது ஏற்படாது. அதன் மூல காரணம் வேறு ஏதோ ஒன்றாக இருக்கும்," என்று கேஸ்வே கூறுகிறார். "உலக உருண்டையின் வலதுபக்கத்தில் தற்போது நிலவும் கோடைக்காலம் மற்றும் ஆண்டு இறுதியில் வரும் திருவிழாக்கள், போன்றவற்றால், மந்தநிலை மிதமான இயல்புடையதாக இருக்கும் என்று நான் மதிப்பிடுகிறேன். இந்த நேரத்தில் மக்கள் பயணம் செல்வார்கள், செலவழிப்பார்கள் மற்றும் அரசுகள் வழங்கும் நிதி உதவி வசதிகளைப் பயன்படுத்திக் கொள்வார்கள். ஆனால் குதூகலமான காலம் எப்போதுமே தொடரமுடியாது," என்று கேஸ்வே விளக்குகிறார். " எப்போதோ ஒரு நேரத்தில் விஷயங்கள் பழையபடி ஆகிவிடும். விஷயங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பும்.பல பொருளாதார வல்லுநர்கள் அந்த இயல்பான நிலையை மந்தநிலை என்று அழைக்கிறார்கள். இப்போது அமெரிக்காவின் கடன் பத்திரங்களின் வருமானம் அதிகரித்து வருகிறது என்பதும் உண்மை. அதனால் சர்வதேச மூலதனம் அமெரிக்காவின்பால் ஈர்க்கப்படுவது அதிகரிக்கும்,"என்று அவர் கூறுகிறார்,. "எனவே உலகின் எவ்வளவு மூலதனம் அமெரிக்காவிற்குத் திரும்புகிறது என்பதைப் பார்ப்பது முக்கியம். மேலும் டாலர் எவ்வளவு வலுவடைகிறது மற்றும் பிற நாடுகளின் நாணயங்கள் எவ்வளவு வீழ்ச்சியடைகின்றன என்பதும் கண்காணிக்கப்படும். இவை அனைத்தும் பொருளாதாரம் மீது ஒரு விளைவை ஏற்படுத்துகின்றன,"என்று . கேஸ்வே குறிப்பிட்டார். பட மூலாதாரம்,LINDSEY PIEGZA படக்குறிப்பு, லிண்ட்சே பீயக்ஸா 'இந்த ஆண்டு இறுதிக்குள் மந்தநிலை வரலாம்' லிண்ட்சே பீயக்ஸா ஷிகாகோவின் ஸ்டிஃபெல் பைனான்சியலின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் முதன்மை பொருளாதார நிபுணர் ஆவார். "பெடரல் ரிசர்வ் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் தனது தீர்மானத்தை புதுப்பித்து பலப்படுத்தியுள்ளது. ஜூன் மாதத்தில் வட்டி விகிதத்தை 0.75 சதவிகிதம் உயர்த்தி, ஜூலையில் மீண்டும் 0.75 சதவிகிம் உயர்த்துவதற்கான வாய்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. ஃபெடரல் ரிசர்வ் மந்தநிலையைத் தூண்ட முயற்சி செய்யவில்லை என்று அதிபர் ஜோ பைடன் கடந்த வாரம் கூறியிருந்தார். இப்போது நடப்பதன் காரணமாக ஒரு வேளை இந்த ஆண்டு இறுதியில் எதிர்மறையான வளர்ச்சி விகிதம் அல்லது ஸ்டாக்ஃப்ளேஷன்(ஒரே நேரத்தில் மந்தநிலை மற்றும் பணவீக்கம்) வரக்கூடும்,"என்று பீயக்ஸா கூறுகிறார். சீனா: வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உலகின் மிகப்பெரிய சந்தையை விட்டு வெளியேறுவது ஏன்? - ஐந்து காரணங்கள் சீனாவில் குறைந்து வரும் மக்கள்தொகையால் என்னென்ன மாற்றங்கள் நிகழும்? "சப்ளை சங்கிலி சீர்குலைவுகள் மற்றும் தற்போதைய போரினால் விலைவாசி உயர்வு காரணமாக மக்கள் கஷ்டப்படுகின்றனர். இப்போது ஃபெடரல் ரிசர்வ் முன்மொழியப்பட்ட விகிதத்தில் அதாவது சுமார் 4 சதவிகிதம் அல்லது அதற்கும் அதிகமாக விகிதங்களை உயர்த்தி வருவதால், பொருளாதாரம் பலவீனமாகும் ஆபத்து உள்ளது,"என்கிறார் அவர். "வட்டி விகிதத்தை உயர்த்தும் உத்தியானது, சாதாரண மக்கள் மற்றும் அமெரிக்கப் பொருளாதாரத்தின் மீது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மூலதனத்தின் விலை உயர்ந்தால், நுகர்வு மற்றும் முதலீடு இரண்டும் குறைகிறது. இது தேவையையும் குறைக்கிறது. இது ஏற்கனவே நடந்துள்ளது. விற்பனை சரக்குகள் குறைந்து வருவதாகத் தெரிகிறது. ஆனால், கொரோனா மற்றும் யுக்ரேன் போரின் காரணமாக ஏற்பட்ட விநியோகத் தேக்கம் குறைவது போலத்தெரியவில்லை,"என்று அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,ANDRÉS MORENO JARAMILLO படக்குறிப்பு, ஆண்ட்ரிஸ் மொரேனோ ஜராமிலோ 'மந்தநிலை வராது' ஆண்ட்ரிஸ் மொரேனோ ஜராமிலோ, ஒரு பொருளாதார நிபுணர். அவர் ஒரு சுயாதீன நிதி ஆலோசகர் மற்றும் பங்கு சந்தை ஆய்வாளரும் ஆவார். " வளர்ச்சி விகிதம் வேகமாக குறைந்து வருவதால், நாம் மந்தநிலையை எதிர்கொள்வோம் என்று பல பொருளாதார வல்லுநர்கள் நம்புகிறார்கள். ஆனால் வட்டி விகித உயர்வால் இப்போது இந்த சுழற்சி தலைகீழாக மாறப் போகிறது என்று அப்படிப்பட்டவர்கள் நம்புகிறார்கள். நிச்சயமாக அது நடக்கலாம். ஆனால் எல்லா பிரச்சனைகளுக்குப் பிறகும், மந்த நிலை வரும் அளவிற்கு உலகின் புவிசார் அரசியல் நிலை மோசமடையவில்லை," என்று ஜராமிலோ கூறுகிறார். "இதுவரை மந்தநிலை பற்றித்தெரியவில்லை. மந்தநிலை ஏற்படாமல் இருக்கும் பொருட்டு தனது வட்டி விகிதங்களை உயர்த்தும் நடவடிக்கைக்கு அமெரிக்கா நீண்ட நேரம் எடுத்தது. பணவீக்கம் மிக அதிகமாக இருக்கும் நேரத்தில் அதிக வட்டி விகிதங்கள் சிறிய மந்தநிலையை ஏற்படுத்தக்கூடும்," என்று ஜராமிலோ தெரிவித்தார். "இது நடந்தாலும் மிகச்சிறிய தாக்கத்தையே ஏற்படுத்தும். மந்தநிலை வருவதைத் தடுக்க அரசு தன்னால் முடிந்தவரை முயற்சிக்கும் என்று நான் நினைக்கிறேன். பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த கண்ணோட்டத்தையும் மாற்றும் இதுபோன்ற பல சம்பவங்கள் அல்லது புவிசார் அரசியல்கள் உள்ளன. அதனால்தான் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உலகப் பொருளாதாரம் ஒரு சுழற்சியில் நகர்கிறது. வட்டி விகிதங்கள் மற்றும் பொருளாதார மந்தநிலை இரண்டும் அந்த சுழற்சியின் ஒரு பகுதியாகும். ஏற்ற இறக்கம் நீடிக்கும் வரை இது கடுமையாக இருக்கும். ஆனால் இதுவரை எந்த ஏற்ற இறக்கமும் காணப்படவில்லை,"என்கிறார் அவர். "இந்த விஷயங்களை முடிவு செய்வதற்கே மத்திய வங்கி மற்றும் பொருளாதாரக் கொள்கை உள்ளது. இவற்றின்மூலம் அந்த சுழற்சிகளை பூர்த்தி செய்யமுடியும். மேலும் பொருளாதாரம் பணவீக்கத்தை அதிகரிக்கும் அளவுக்கு வேகமாக வளரக்கூடாது. பொருளாதாரம் வேகமாக சரியவும் கூடாது. ஏனென்றால் இது வேலையின்மை, மனச்சோர்வு மற்றும் பிற விஷயங்களுக்கு வழிவகுக்கும்,"என்று குறிப்பிட்டார் ஜராமிலோ. "நாம் பார்த்த கொரோனாவின் மோசமான விளைவு உலகிற்கு முற்றிலும் புதியது. இது கிட்டத்தட்ட உலகம் முழுவதிலும் எதிர்மறையான வளர்ச்சி விகிதத்தை ஏற்படுத்தியது . அதன் பிறகு ஏற்பட்டுள்ள முன்னேற்றம் சிறிது ஏற்ற இறக்கத்துடன் உள்ளது. ஆனால் அது மிகவும் அதிகமாக இல்லை," என்று அவர் குறிப்பிட்டார். "மிக மோசமான காலம் முடிந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். மற்ற நாடுகளைப் போலவே அமெரிக்காவும் இப்போது விலைவாசி அதிகரிப்பை எதிர்கொள்கிறது. மேலும் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படுவதால், பொருளாதாரத்தில் சிறிது தொய்வு ஏற்படக்கூடும். ஒருவேளை இது நெகட்டிவ் வளர்ச்சியையும் ஏற்படுத்தலாம். ஆனால் அது அத்தனை மோசமான விஷயமும் அல்ல," என்று ஜராமிலோ சுட்டிக்காட்டினார். https://www.bbc.com/tamil/global-62055287
  13. இலங்கை நெருக்கடி: 'தீர்வு கிடைக்கும் வரை ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேற மாட்டோம்' - போராட்டக்காரர்கள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஜனாதிபதி பதவி விலக தயார் என்ற அறிவிப்பை விடுப்பதை விடுத்து, பிரதமரும் பதவி விலக வேண்டும் என கொழும்பு மாளிகையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். தான் முன்பு கூறியதை போன்றே, எதிர்வரும் 13ம் தேதி பதவி விலக தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரபூர்வமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் இன்று காலை தெரிவித்தது. இந்த நிலையில், பிரதமரும் பதவி விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். உரிய தீர்வு கிடைக்கும் வரை, தாங்கள் ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேற போவதில்லை என போராட்டக்காரர்கள் இன்று அறிவித்துள்ளனர். இந்த நிலையில், ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், நேற்றிரவு ஜனாதிபதி மாளிகையை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. பெரும் எண்ணிக்கையிலான ராணுவத்தினர், விசேட அதிரடிபடை உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர், ஜனாதிபதி மாளிகையை அண்மித்து, கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பதவி விலக தயார் - இலங்கை ஜனாதிபதி மீண்டும் வலியுறுத்தல் கோட்டாபய, ரணில் இல்லாவிட்டால் இலங்கைக்கு உள்ள வாய்ப்புகள் என்ன? எனினும், காலி முகத்திடல் போராட்டக்களத்திற்கு பெரும் எண்ணிக்கையிலான ராணுவத்தினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார். எவ்வாறாயினும், தொடர்ந்தும் ஜனாதிபதி மாளிகையை பார்வையிடுவதற்காக பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தொடர்ந்தும் வருகைத் தந்த வண்ணம் உள்ளனர். ஜனாதிபதி மாளிகை மாத்திரமன்றி, ஜனாதிபதி செயலகம், பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான அலரி மாளிகை ஆகியவற்றை பார்வையிடுவதற்கும் தொடர்ந்து மக்கள் வருகைத் தருகின்றனர். ஜனாதிபதி மாளிகையில் கடமைகளில் இருந்த ஊழியர்கள், ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேறியுள்ளதுடன், ஜனாதிபதி மாளிகையில் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினர் வெளியில் பாதுகாப்பில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES இதேவேளை, காலி முகத்திடலில் நடத்தப்பட்டு வரும் 'கோட்டா கோ கம' போராட்டம் 94வது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த காலங்களில் போராட்டத்திற்கு குறைந்த எண்ணிக்கையிலானோர் கலந்து கொண்டிருந்த நிலையில், கடந்த 9ம் தேதிக்கு பின்னரான காலப் பகுதியில் போராட்டம் மீண்டும் வலுப் பெற்றுள்ளது. ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் - ஒருவர் பணி நீக்கம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீடு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்தை பதிவு செய்வதற்காக சென்ற ஊடகவியலாளர்கள் 7 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீஸ் விசேட அதிரடி படையின் சிரேஸ்ட போலீஸ் அத்தியட்சகர் ரொமேஷ் லியனகே தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். உடன் அமலுக்கு வரும் வகையில் இந்த பணி நீக்கம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. தாக்குதல் நடத்தப்பட்டமை மற்றும் அந்த தாக்குதலை தடுத்து நிறுத்தாமை ஆகிய காரணங்களின் அடிப்படையில், போலீஸ் மாஅதிபருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய மற்றும் பொது சேவை ஆணைக்குழுவின் அனுமதியின் கீழ் இவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பிரதமரின் வீடு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்தை பதிவு செய்வதற்கு சென்ற ஊடகவியலாளர்கள் மீது, போலீஸ் விசேட அதிரடி படையினர் கடந்த 9ம் தேதி தாக்குதல் நடத்தியிருந்தனர். https://www.bbc.com/tamil/sri-lanka-62120338
  14. அதிமுக நெருக்கடி: "கட்சித் தலைவரே இப்படி செய்யலாமா?" - ஓபிஎஸ் மனு நிராகரிப்பு தீர்ப்பின் முழு விவரம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, கோப்புப்படம் அதிமுக பொதுக்குழு கூட்டம் அதன் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பப்படியே நடத்தப்பட திட்டமிடப்பட்டதால் அதில் தலையிட நீதிமன்றம் விரும்பவில்லை என்றும் அந்த கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி திருமண அரங்கில் அதிமுக பொதுக்குழுவை கூட்டுவது கட்சி விதிகளுக்கு எதிரானது என்று கூறி அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதே விவகாரத்தில் வைரமுத்து என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்களை கடந்த வாரம் விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி இன்று தமது தீர்ப்பை அளித்தார். அதன் விரிவான தகவலை இங்கே வழங்குகிறோம். இந்த நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டுள்ள முழு தகவலும் ஆய்வு செய்யப்பட்டது. மூத்த வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களை கருத்தில் கொண்டு, தற்போதைய மனுக்களில் கோரப்பட்டுள்ள இடைக்கால நிவாரணம் வழங்க முகாந்திரம் ஏதுமில்லை என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது. தற்போது நீதிமன்றம் முன் வைக்கப்பட்டுள்ள பிரச்னை, அதிமுகவின் விவகாரம். கட்சி உள் விவகாரங்கள் அல்லது எந்தவொரு விவகாரத்திலும் ஒரு கட்சியில் நிறைவேற்றப்படும் தீர்மானம், விதிகள் திருத்தம் போன்றவற்றில் நீதிமன்றத்தின் அதிகார வரம்பு நுழையக்கூடாது என்பதே சட்டம். நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லாததால், இது நீதிமன்றங்கள் தலையிடக் கூடாத விஷயமாக கருதப்படும். இவை நீதிமன்ற அதிகார வரம்புக்கும் அப்பாற்பட்டவை. சொந்த விதிகளுக்கு உள்பட்டு கட்சி விவகாரங்கள் நிர்வகிக்கப்படும்போது, அது பொதுக்குழுவில் உள்ள பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பப்படி நடக்கிறதா என்று பார்க்க வேண்டும். அதிமுக பொதுக்குழு: எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச் செயலாளராகத் தேர்வு அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ்: கல்வீசி மோதல், கதவு உடைப்பு - நடந்தது என்ன? ஜனநாயகமே பெரியது ஜனநாயக அமைப்பில் பெரும்பான்மையினரின் விருப்பமே மேலோங்கியிருக்க வேண்டும். உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால், பெரும்பான்மையாக இருப்பவர்களின் எண்ணிக்கையைக் கொண்டு முடிவு தீர்மானிக்கப்பட வேண்டும் என பொது விதி கூறுகிறது. ஒரு கட்சி/அமைப்பின் உள் நிர்வாக விஷயங்களில் பெரும்பான்மையினர் அதன் அதிகாரங்களைப் பயன்படுத்தினால், நீதிமன்றங்கள் பெரும்பான்மையினரின் முடிவில் தலையிடாது. நிர்வாகத்தின் செயல்கள் கட்சியின் அதிகார வரம்புக்குள்ளேயே இருந்தால், கட்சியின் தனிப்பட்ட உறுப்பினர்களுக்கும் அதற்குப் பொறுப்பானவர்களுக்கும் இடையிலான எந்தவொரு சர்ச்சையும் சம்பந்தப்பட்ட கட்சி அல்லது அமைப்புக்குள்ளாக இருக்கும் விதிகளின்படியே தீர்மானித்துக் கொள்ளப்பட வேண்டும். அவை நீதிமன்றத்தால் தீர்க்கப்படக் கூடிய விஷயங்கள் அல்ல. பொதுக்குழுவுக்காக விடுக்கப்பட்ட கட்சி நோட்டீஸ் கட்சி விதிகளின்படி செல்லுமா என்பதை ஆராய்ந்தபோது, உச்ச நீதிமன்றத்தில் அதிமுக அவைத் தலைவர் தாக்கல் செய்துள்ள மனுவில், பொதுக்குழுவில் உள்ள 2,665 உறுப்பினர்களில் 2,190 உறுப்பினர்கள் 23.06.2022 நடந்த கூட்டத்திலேயே அடுத்த பொதுக்குழுவைக் கூட்ட கையொப்பமிட்டுள்ளதாக கூறியுள்ளார். பொதுக்குழுவை கூட்ட முகாந்திரம் உண்டு அதே கூட்டத்தில் கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு, அடுத்த பொதுக்குழு கூட்டம் 11.07.2022 அன்று நடைபெறும் என்றும் கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கூட்டத்தை கூட்டுவது குறித்து ஊடகங்களிலும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் அதிமுக அவைத்தலைவர் கூறியுள்ளார். இத்தனைக்கும், கட்சி விதி 19(vii)-இன்படி அனைத்து உறுப்பினர்களுக்கும் 15 நாட்களுக்கு முன்கூட்டிய பொதுக்குழுவுக்கான முன்னறிவிப்பு தரப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், அத்தகைய அறிவிப்பை எழுத்துபூர்வமாக வழங்க வேண்டும் என்று விதிகளில் கூறப்படவில்லை. அந்த வகையில், 11.01.2022 அன்று பொதுக்குழுவை கூட்டுவதாக அறிவித்து 23.06.2022 அன்று அனைத்து உறுப்பினர்களுக்கும் விடுக்கப்பட்ட அறிவிப்பே நோட்டீஸாக கருதப்பட முகாந்திரம் உள்ளதாக நீதிமன்றம் கருதுகிறது. கட்சித் தலைவரே இப்படி செய்யலாமா? இந்த வழக்கில், மனுதாரர்கள் (ஓபிஎஸ், வைரமுத்து) நீதிமன்ற கதவுகளை தட்டியுள்ளனர். கட்சி உறுப்பினர்களின் ஆதரவையோ நம்பிக்கையையோ பெற முடியாத நிலையில் அவர்கள் நீதிமன்றங்களை தங்களுடைய கருவிகளாகக் கொண்டு தங்களை மீட்கக் கோரி தங்களுடைய சிறந்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஒரு தலைவர், பொதுக்குழுவை அணுகி, பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்று ஒவ்வொருவரையும் சமாதானப்படுத்தி கட்சியின் நலனுக்காகவும் வளர்ச்சிக்காகவும் தமக்குள்ள யோசனைகள் மற்றும் திட்டங்களை முன்வைப்பதற்குப் பதிலாக, மீண்டும் நீதிமன்றத்துக்கு விரைந்திருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. தன்னால் சாதிக்க முடியாத முடியாததை, நீதிமன்றத்தின் மூலம் அடைய மனுதாரர் விரும்பியிருக்கிறார். நிச்சயமாக, நீதிமன்றங்கள் கட்சியின் தனிப்பட்ட விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்க்கும். அதுவும் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களின் விருப்பங்களுக்கு முரணாக ஒன்று அல்லது இரண்டு உறுப்பினர்கள் எதிர்க்கும் விஷயத்தில் நீதிமன்றம் தலையிடாது. ஏதேனும் கட்சி விதி மீறல் மற்றும் விதிகளுக்கு எவரும் இணங்காத பட்சத்தில், பொதுக்குழுவால் அது நன்கு அங்கீகரிக்கப்பட்டால், பாதிக்கப்பட்டவர்கள் பொதுக்குழுவின் முன்பாக தமது குறைகளை முன்வைக்கலாம் அல்லது முடிவை ஏற்கக் கூடாது என்று கூறலாம். ஒருவேளை தமது குரலை முன்வைக்க வாய்ப்பு மறுக்கப்படும்போது அவர் தமது உரிமையை கேட்டுப்பெற சிவில் நீதிமன்றத்தை அணுகலாமே தவிர இந்த நீதிமன்றத்தை அல்ல. மனுக்கள் தள்ளுபடி மேலே குறிப்பிட்ட விவாதங்களின்படி கட்சி அல்லது சங்கத்தின் உள் விவகாரங்களில், நீதிமன்றங்கள் பொதுவாக தலையிடாது. கட்சி மற்றும் சங்கம் அதன் உறுப்பினர்களுக்கு என ஒரு குறிப்பிட்ட துணைச் சட்டம், விதி அல்லது ஒழுங்குமுறையை கொண்டு சிறந்த நிர்வாகத்தை வழங்கும். மேலும், கட்சியின் துணைச் சட்டங்களை உருவாக்குதல், திருத்துதல், மாற்றுதல், ரத்து செய்தல் ஆகியவற்றுக்கான அதிகாரம், சந்தேகத்திற்கு இடமின்றி, கட்சியின் பொதுக் குழுவிற்கு உள்ளது. அத்தகைய துணைச் சட்டங்களுடன் இணைக்கப்பட்ட எந்த சட்டப்பூர்வ அந்தஸ்தும் இல்லாத நிலையில் பெரும்பான்மை முக்கிய பங்கினர் முடிவெடுக்கும் உள்விவகார செயல்பாட்டில், இந்த நீதிமன்றம் தலையிட முடியாது. இந்த அம்சங்களின் அடிப்படையில் கோரப்பட்டுள்ள இடைக்கால நிவாரணங்களை பெறும் வகையிலான வாதங்களை மனுதாரர் முன்வைக்கவில்லை. அதன்படி, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அறிவுறுத்தியபடி, பொதுக்குழு கூட்டத்தை திட்டமிட்டபடி நடத்திக் கொள்ளலாம். இந்த விவகாரம் தொடர்பான மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/india-62118505
  15. இலங்கை நெருக்கடி: 'பதவி விலக தயார்' - ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மீண்டும் வலியுறுத்தல் 24 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தான் முன்பு அறிவித்ததை போன்று பதவி விலக தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளார். பிரதமர் ஊடக பிரிவு இந்த தகவலை வெளியிட்டது. ஜனாதிபதி மாளிகையை அண்மித்து நேற்று ராணுவ உறுப்பினர்கள் கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள். போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கிலேயே, ராணுவ உறுப்பினர்கள் கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பகிரப்பட்டன. எனினும், இந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என ராணுவம் நேற்றிரவு அறிவித்திருந்தது. இவ்வாறான பின்னணியிலேயே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது ராஜினாமா தொடர்பில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதி மாளிகை வசதிகளை அனுபவிக்கும் போராட்டக்காரர்கள் - பிபிசி தமிழின் கள அனுபவம் கோட்டாபய, ரணில் இல்லாவிட்டால் இலங்கைக்கு உள்ள வாய்ப்புகள் என்ன? தான் ஜூலை மாதம் 13ம் தேதி பதவி விலகுவதாக கோட்டாபய ராஜபக்ஷ, அறிவித்ததாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்திருந்தார். ஜனாதிபதியை பதவி விலக வலியுறுத்தி, கொழும்பு ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு, கடந்த 9ம் தேதி லட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தை நடத்தி, ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் என்ன நடக்கிறது? இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். எரிபொருள் வாங்க மிக நீண்ட வரிசையில் அவர்கள் காத்து கிடக்கும் சூழல் ஏற்பட்டது. இதனால் இலங்கையில் 100 நாட்களுக்கும் மேலாக ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்ற போராட்டங்கள் நடைபெற்று வந்தன. பின்பு அந்த போராட்டம் வன்முறையாக மாறியது. அதன்பின் நாட்டின் பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகினார். நாட்டின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரமராக பதவியேற்றார். நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க பல்வேறு நடவடிக்கைகளை தான் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார். இந்நிலையில் மூன்று தினங்களுக்கு முன்பு நாட்டின் அதிபர் பதவி விலக வேண்டும் என்று கோரும் போராட்டம் மீண்டும் தீவிரமடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நேற்றைய முன் தினம் போராட்டக்காரர்கள் காவல்துறையின் பாதுகாப்பை மீறி ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்தனர். இதுகுறித்த பல்வேறு புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன. ஜனாதிபதி மாளிகையில் உள்ள நீச்சல் குளத்தில் மக்கள் குளித்து விளையாடினர். சமையலறையில் உள்ள உணவுகளை உண்டனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் மக்கள் ஜனாதிபதி மாளிகையை பார்வையிட்டு வருகின்றனர். இதற்கிடையே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது. அதுகுறித்து சில சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அந்த வீட்டில் இருந்த புத்தகங்கள் எரிந்தது குறித்து ரணில் பெரும் வருத்தம் தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/sri-lanka-62119204
  16. "இலங்கைக்கு இந்தியா எப்போதும் ஆதரவாக இருக்கும்" - எஸ்.ஜெய்சங்கர் 10 ஜூலை 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எஸ். ஜெயங்கர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இந்திய அரசு இலங்கைக்கு எப்போதும் ஆதரவாக இருப்பதாகவும், தற்போதைய பொருளாதார நெருக்கடியில் அண்டை நாடு என்ற முறையில் அதற்கு உதவ முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், மூன்று நாள் பயணமாக திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்சங்கர், "நாங்கள் இலங்கைக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறோம். அந்நாட்டுக்கு நாங்கள் உதவ முயற்சிக்கிறோம், அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் நாங்கள் எப்போதும் மிகவும் உதவியாக இருக்கிறோம்," என்று கூறினார்."இப்போது இலங்கையில் அவர்கள் சொந்த பிரச்னைகளை தீர்க்க முற்பட்டுள்ளார்கள். எனவே அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தற்போதைக்கு இலங்கை அகதிகள் நெருக்கடி எதுவும் இந்தியாவுக்கு இல்லை," என்று ஜெய்சங்கர் தெரிவித்தார். முன்னதாக, இதே விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கைக்கு தேவையான எல்லா உதவிகளையும் இந்தியா வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். "இலங்கையில் உருவாகி வரும் அரசியல் சூழ்நிலையை காங்கிரஸ் கட்சி கவலையுடன் கவனித்து வருகிறது. கடுமையான நெருக்கடி நிலவும் இந்த தருணத்தில் இலங்கை மற்றும் அதன் மக்களுக்கு காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை வெளிப்படுத்துகிறது. இந்த சூழலை இலங்கையர்களால் சமாளிக்க முடியும் என்று நம்புகிறேன்," என்றும் அவர் கூறியுள்ளார். Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 "தற்போதைய சூழ்நிலையின் சிரமங்களைக் கையாள்வதில் இலங்கை மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இந்தியா தொடர்ந்து உதவி செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று சோனியா காந்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஜனாதிபதி மாளிகையை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் போராட்டக்காரர்கள் கொண்டு வந்த பிறகு, அங்கு பதற்றத்தைத் தணிக்க அரசியல் மற்றும் ராணுவ ரீதியிலான முன்னெடுப்புகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அங்குள்ள இன்றைய நிலவரத்தை இந்த பக்கத்தில் வழங்குகிறோம். இலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட தம்மிக்க பெரேரா தமது அமைச்சுப் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இலங்கை ஜனாதிபதி மாளிகைக்குள் முதலில் சென்ற மலையகத் தமிழர் - பிபிசி தமிழ் செய்தியாளரின் கள அனுபவம் இலங்கை ஜனாதிபதி ஜூலை 13இல் பதவி விலகுவார் - சபாநாயகர் தகவல் இலங்கை: ரணில் வீட்டை தீயிட்டுக் கொளுத்திய போராட்டக்காரர்கள் இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை (10) அவர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் நாட்டின் மீது கொண்டுள்ள அளப்பரிய நேசத்தை கருத்திற்கொண்டு அமைச்சர் பதவியை ஏற்றதாக கூறியுள்ளார். ஆனால், "பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதற்கும் நாட்டு மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும் இலங்கை ஒரு தீர்வை விரைவாகக் கண்டறிந்து செயல்படுத்த வேண்டும் என்று நான் இப்போது கருதுகிறேன்," என்று அவர் கடிதத்தில் கூறியுள்ளார். இலங்கையில் அமைச்சர் பொறுப்பு வகித்த ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார மற்றும் பந்துல குணவர்தன ஆகியோர் ஏற்கெனவே தங்களுடைய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துள்ளனர். இவர்கள் வரிசையில் நான்காவதாக தம்மிக்க பெரேராவும் பதவி விலகியுள்ளார். எல்பிஜி எரிவாயு விநியோகத்துக்கு நடவடிக்கை பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, கொழும்பில் உள்ள இலங்கை ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் இலங்கையில் தீவிரம் அடைந்துள்ள போராட்டங்கள் ஒருபுறமிருக்க அந்நாட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எங்கிருக்கிறார் என்ற விவரம் இதுவரை தெளிவாகவில்லை. இந்த நிலையில், அவரது செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் நாட்டுக்கு வருகை தரும் எல்பிஜி தொடர்பான தகவல்கள் பகிரப்பட்டுள்ளன. அதில், 3,700 மெற்றிக் தொன் எல்பி எரிவாயுவை ஏற்றிக் கொண்டு சரக்கு கப்பல் இன்று பிற்பகலில் வரவுள்ளது. அது வந்தவுடன் எல்பிஜி சிலிண்டர்களின் விநியோகம் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும், 3,740 மெட்ரிக் டன் எல்பி எரிவாயுவின் இரண்டாவது தொகுதி நாளை (ஜூலை 11) நாட்டிற்கு வரவுள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கப்பல் பிற்பகல் பிற்பகல் 3 மணியளவில் கெரவலப்பிட்டியை வந்தடைந்ததன் பின்னர் சிலிண்டர்களை இறக்கி விநியோக நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார் என்றும் அந்த செய்திக்குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல, 3,200 மெட்ரிக் டன் எல்பி எரிவாயுவை ஏற்றிக் கொண்டு மூன்றாவது சரக்கு கப்பல் ஜூலை 15 ஆம் தேதி நாட்டை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இந்த மாதத்துக்காக மட்டும் 33,000 மெட்ரிக் டன் அளவுக்கு சிலிண்டர்கள் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு படைத் தளபதி வேண்டுகோள் படக்குறிப்பு, ஜெனரல் ஷவேந்திர சில்வா, இலங்கை பாதுகாப்புப்படை தலைமைத் தளபதி தற்போதைய அரசியல் நெருக்கடியை அமைதியான முறையில் தீர்த்து வைப்பதற்கான சந்தர்ப்பம் தற்போது கிடைத்துள்ளதாகவும், இதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் இலங்கை பாதுகாப்புப் படை தலைமைத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா ஞாயிற்றுக்கிழமை கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அலுவல்பூர்வ மாளிகையை சனிக்கிழமை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு கைப்பற்றிய பிறகு, பிரதமர் ரணிலின் தனிப்பட்ட வீட்டுக்கும் ஒரு கும்பல் தீ வைத்தது. இந்த சம்பவத்தால் கொழும்பு நகரில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை செய்தித்தொடர்பாளர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை காலையில் கூறியுள்ளார். அந்த சந்தேக நபர்களின் விவரம் வெளியிடப்படவில்லை. இதற்கிடையே, இலங்கை எண்ணெய் கழகம், நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எண்ணெய் விநியோகத்தை மீண்டும் தொடங்கியிருப்பதாக தெரிவித்திருக்கிறது. இந்தப் பணிக்காக திருகோணமலையில் உள்ள முனையம் 24 மணி நேரமும் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை எண்ணெய் கழகம் கூறியுள்ளது. செல்ஃபி, ஜிம், நீச்சல்: இலங்கை ஜனாதிபதி மாளிகையில் மக்கள் உற்சாகம் கோட்டாபய, ரணில் இல்லாவிட்டால் இலங்கைக்கு உள்ள வாய்ப்புகள் என்ன? இலங்கை: சர்வதேச கவனத்தை ஈர்க்கும் மக்கள் போராட்டங்கள் சனிக்கிழமை நிகழ்வுகளுக்குப் பின்னர், நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு நடவடிக்கையில் விரைந்து செயற்படுமாறு இலங்கை தலைமையிடம் அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. காங்கிரஸ் அறிக்கை இலங்கையின் நெருக்கடி சூழல் குறித்து காங்கிரஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "இந்த நெருக்கடியான தருணத்தில் காங்கிரஸ் கட்சி இலங்கை மக்களுடன் துணை நிற்கிறது. இலங்கை மக்கள் இந்த சூழலை கடந்து வருவர் என காங்கிரஸ் நம்புகிறது. இந்தியா தொடர்ந்து இலங்கைக்கு உதவிகளை மேற்கொள்ளும் என நாங்கள் நம்புகிறோம்," என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவில் போலீஸ் கண்காணிப்பு முக்கிய சாலை சந்திப்புகளில் சனிக்கிழமை காலையில் நிலைநிறுத்தப்பட்டிருந்த போலீஸார் மற்றும் ராணுவத்தினரின் பெரும்பகுதியினர் தங்களுடைய முகாம்களுக்கும் நிலையங்களுக்கும் திரும்பியிருக்கின்றனர். வெகு சிலரே வழக்கமான போலீஸ் பாதுகாப்புப் பணியை ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டுள்ளனர். இலங்கை ஜனாதிபதி மாளிகையை சனிக்கிழமை பிற்பகலில் முற்றுகையிட்ட போராட்டக்காரர்களை, மேலும் முன்னேறாமல் தடுக்கும் நடவடிக்கையில் அதிரடிப்படையினர் ஈடுபட்ட காணொளி காட்சி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில் மாளிகையின் மதில் சுவருக்கு வெளியே போராட்டக்காரர்கள் குழுமியிருக்க அவர்களை நோக்கி மாளிகைக்குள் நின்றிருந்த அதிரடிப்படையினர் இயந்திரத் துப்பாக்கியால் சுடும் காட்சிகள் காணொளியில் உள்ளன. Twitter பதிவை கடந்து செல்ல, 2 Twitter பதிவின் முடிவு, 2 ஆனால், இடைவிடாது நடந்த துப்பாக்கி சூடுக்குப் பிறகும் போராட்டம் தணியாததால் காவல்துறையினர் ஒரு கட்டத்தில் மெல்ல, மெல்ல பின்வாங்கத் தொடங்கினார்கள். இதன் பிறகே போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகை நுழைவாயில் கேட் மீது ஏறிக் குதித்து கதவைத் திறந்து நுழைந்தது தெரிய வந்துள்ளது.நாட்டின் பொருளாதார நிர்வாகம் சீர்கேடு அடைந்ததாகக் கூறி கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்ற போராட்டங்கள் சனிக்கிழமை உச்சத்தைத் தொட்டது. ஜனாதிபதி கோட்டாபயவும் பிரதமர் ரணிலும் தங்களுடைய பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்ற குரலை ஒலித்தபடி பொதுமக்கள் வீதிகளில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இலங்கை ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ஷ ஜூலை 13ஆம் தேதி விலகுகிறார் என்று நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவித்துள்ளார். "அமைதியான வழியில் அதிகார பரிமாற்றம் நடைபெற அவர் உறுதி அளித்துள்ளார்" என்று சபாநாயகர் கூறியுள்ளார். ஆனால், இந்த தகவலை கோட்டாபய தரப்பு பொதுவெளியில் இதுவரை நேரடியாக உறுதிப்படுத்தவில்லை. போராட்டத்தைக் கைவிட மறுக்கும் மக்கள்இதற்கிடையே, ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலகுவார் என்ற அறிவிப்பு கொழும்பு நகர வீதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்தியில் உற்சாகத்தை கொடுத்துள்ளது. அவர்கள் பல இடங்களில் பாட்டுப்பாடியும் நடனமாடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆனால், தங்களுடைய போராட்டங்களை கைவிட அவர்கள் தயாராக இல்லை. https://www.bbc.com/tamil/sri-lanka-62111280
  17. இலங்கை நெருக்கடி: புத்தகங்கள் கொளுத்தப்பட்டது குறித்து ரணில் கண்ணீர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீடு போராட்டக்காரர்கள் சிலரால் தீக்கு இரையாக்கப்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தவில், கட்சி உறுப்பினர்களிடையே சிறப்பு கூட்டம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அதில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அதில் பேசிய அவர், "சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது குறித்து தான் எந்த விதத்திலும் கவலை கொள்ளவில்லை ஆனால் தாம் படித்த புத்தகங்கள் தீக்கிரையாக்கப்பட்டதை எண்ணிதான் கவலைக் கொள்கிறேன்," என தெரிவித்தார். தான் மூன்று தலைமுறைகளாக சேர்த்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை மூன்று அறைகளில் சேமித்து வைத்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த புத்தகங்கள்தான் நேற்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அவரின் அந்த வீட்டை அவர் ஏற்கனவே கொழும்புவில் உள்ள ராயல் கல்லூரிக்கு எழுதி வைத்துள்ளார். இந்த நிலையில்தான் இந்த வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. "இலங்கைக்கு இந்தியா எப்போதும் ஆதரவாக இருக்கும்" - எஸ்.ஜெய்சங்கர் இலங்கை ஜனாதிபதி மாளிகை வசதிகளை அனுபவிக்கும் போராட்டக்காரர்கள் - பிபிசி தமிழின் கள அனுபவம் அதுமட்டுமல்லாமல் இலங்கையில் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தான் எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எரிபொருள் விநியோகத்தை சரி செய்வதற்கு தான் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் , ஐஎம்எஃப் கடன் திட்டத்தை பெற்றுக் கொள்வதற்கான இறுதி கட்ட நடவடிக்கை வரை தான் பூர்த்தி செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுபோல நெருக்கடியை தீர்ப்பதற்கான நடவடிக்கையின் கடைசி கட்டத்தில்தான் அரசியல் பழிவாங்கல் நிகழ்வாக தனது வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரணிலின் வீடு இந்த நிலையில் நேற்றைய சம்பவம் தொடர்பான விசாரணை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக போலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதே நேரத்தில் இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் விவரங்களை வெளியிடவில்லை. அமைதியை கோரும் ராணுவம் இலங்கை பாதுகாப்புப் படை தலைமைத் தளபதி ஜெனரல் ஷெவேந்திர சில்வா, நாடு நெருக்கடியான சூழலை எதிர்கொண்டு வரும் சூழலில் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இலங்கையில் என்ன நடக்கிறது? இலங்கையில் 100 நாட்களை கடந்து ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்ற போராட்டங்கள் நடைபெற்று வந்தது. பின்பு அந்த போராட்டம் வன்முறையாக மாறியது. அதன்பின் நாட்டின் பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகினார். நாட்டின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரமராக பதவியேற்றார். நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க பல்வேறு நடவடிக்கைகளை தான் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு நாட்டின் அதிபர் பதவி விலக வேண்டும் என்று கோரும் போராட்டம் மீண்டும் தீவிரமடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நேற்று போராட்டக்காரர்கள் காவல்துறையின் பாதுகாப்பை மீறி ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES இதுகுறித்த பல்வேறு புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன. ஜனாதிபதி மாளிகையில் உள்ள நீச்சல் குளத்தில் மக்கள் குளித்து விளையாடினர். சமையலறையில் உள்ள உணவுகளை உண்டனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் மக்கள் ஜனாதிபதி மாளிகையை பார்வையிட்டு வருகின்றனர். இதற்கிடையே நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது. அதுகுறித்துதான் ரணில் விக்ரமசிங்க இன்று தனது கருத்தை வெளியிட்டுள்ளார். https://www.bbc.com/tamil/sri-lanka-62113528
  18. சர்வதேச திரைப்படங்களை தொடர்ந்து திரையிட தியேட்டர்கள் இல்லை |CWC-Social Talk| S.Ramakrishnan Part 4
  19. பேகம் ஹஸ்ரத் வரலாறு: ஆஃப்ரிக்க அடிமையின் மகள் ஆங்கிலேயர்களை அலற விட்ட வீரக்கதை ரெஹான் ஃபசல் பிபிசி செய்தியாளர் 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஜூலை 3, 1857. லக்னெளவில் உள்ள கைசர்பாக் அரண்மனை தோட்டத்தில் சாந்திவாலி பராத்ரியை நோக்கி ஒரு பெரிய ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. அந்த ஊர்வலத்தின் நடுவே, 14 வயதுடைய மெலிந்த, கருமை நிறமுள்ள சிறுவன் நடந்து சென்று கொண்டிருந்தான். பையனின் பெயர் பிர்ஜிஸ் கத்ரு. ஓராண்டு முன்பு நாடு கடத்தப்பட்ட நவாப் வாஜித் அலி ஷாவின் மகன். லக்னெளவை விட்டு வெளியேறுவதற்கு முன்பு வாஜித் அலி ஷா விவாகரத்து செய்த ஒன்பது பெண்களில் பிர்ஜிஸ் கத்ருவின் தாயார் பேகம் ஹஸ்ரத் மஹாலும் ஒருவர். ஊர்வலத்தின் நோக்கம், 14 வயதான பிர்ஜிஸ் கத்ருவை புதிய நவாபாக அறிவிப்பதாகும். இதுகுறித்து, ரோஸி லியோலின் ஜோன்ஸ் தனது 'The Great Uprising in India: Untold Stories Indian and British' என்ற புத்தகத்தில், 'தங்களுக்கு எதிராக கலகம் செய்பவர்கள் வெறுமனே அடையாள ஊர்வலத்தில் பங்கேற்பதாக ஆங்கிலேயர்கள் நம்பினர். ஆனால், இது உண்மையல்ல. அவுத் பகுதியை ஆங்கிலேயர்கள் இணைத்துக்கொண்ட பின்னர், ஓரங்கட்டப்பட்ட குழுவின் தலைவர்கள் ஒன்று கூடி பறிக்கப்பட்ட அரசை மீட்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்கிய புனிதமான தருணம் இது," என்று எழுதுகிறார். சாவர்க்கர்: இந்தியாவில் இவர் சிலருக்கு ஹீரோ, சிலருக்கு வில்லன் - ஏன்? எமர்ஜென்சி: இந்திரா காந்தி சிறையில் அடைத்த இரு ராணிகளின் வரலாறு இந்தியாவில் முஸ்லிம் சாம்ராஜ்ஜியத்திற்கு அடித்தளமிட்ட 'அடிமை' குத்புதீன் ஐபக் டெல்லி, மீரட் மற்றும் கான்பூருக்குப் பிறகு, 1857 ஆம் ஆண்டின் கிளர்ச்சியின் தீ லக்னெளவையும் அடைந்தது. கிளர்ச்சியின் முதல் தீப்பொறி 1857 மே 30 ஆம் தேதி அப்பகுதியை அடைந்தது. அன்று நகரின் மாரியன் கன்டோன்மென்ட்டில் அதிகாரிகளின் வீடுகளுக்கு தீ வைத்து மூன்று பிரிட்டிஷ் வீரர்களைக் கொன்றனர் கிளர்ச்சியாளர்கள். இப்படியான சூழலில் ஜூலை 3ஆம் தேதி, பிர்ஜிஸ் கத்ரு, அவத்தின் சிம்மாசனத்தில் அமர்த்தப்பட்டார். ஆனால், அப்போது அவருக்கு வயது குறைவென்பதால், நிர்வாகப் பொறுப்பு முழுமையும் அவரது தாயார் பேகம் ஹஸ்ரத் மஹால் மீது விழுந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஹஸ்ரத் மஹால் ஒரு ஆஃப்ரிக்க அடிமையின் மகள் வரலாற்றாசிரியர் ரோஸி லியோலின் ஜோன்ஸ் எழுதுகிறார், "ஹஸ்ரத் மஹால் மிகவும் எளிமையான பின்னணியில் இருந்து வந்தவர். அவரது தந்தை அம்பர் ஒரு ஆஃப்ரிக்க அடிமை. அவரது தாயார் அம்பரின் ஆசை நாயகியாக இருந்த மகேர் அப்சா ஆவார். ஹஸ்ரத் மஹால் லக்னெளவில் உள்ள பரிகானா சங்கீத் பள்ளியில் இசை கற்றுக்கொண்டார். எனவே, அவர் 'மெஹக் பரி' என்று அழைக்கப்பட்டார். அவர் தனது திறமை அல்லது நல்ல தோற்றம் அல்லது இரண்டின் காரணமாகவும் வாஜித் அலி ஷாவின் கவனத்தை ஈர்த்தார். மேலும் வாஜித் அலி ஷா ஹஸ்ரத் மஹாலை 'முத்தா' முறை (ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மனைவி ஆக்கிக்கொள்ளுதல்) மூலம் தனது தற்காலிக மனைவியாக்கிக் கொண்டார். 1845 ஆம் ஆண்டில் ஹஸ்ரத் மஹால் ஒரு மகனைப் பெற்றெடுத்தார். அதன் காரணமாக அவருடைய நிலை உயர்ந்தது. அரண்மனை அந்தஸ்து வழங்கப்பட்டது." ஆனால், அடுத்த 5 ஆண்டுகளில் நிலை மாறியது. வாஜித் அலி ஷா ஹஸ்ரத்தை விவாகரத்து செய்ததோடு தனது அந்தப்புரத்தில் இருந்தும் வெளியேற்றிவிட்டார். பட மூலாதாரம்,INDIAN POSTAL DEPARTMENT இதுகுறித்து ருத்ராங்ஷு முகர்ஜி தனது 'A Begum and the Rani Hazrat Mahal and Lakshmibai in 1857' என்ற புத்தகத்தில், 'வாஜித் அலி ஷா ஆங்கிலேயர்களால் லக்னெளவில் இருந்து வெளியேற்றப்பட்டு கல்கத்தாவுக்கு அனுப்பப்பட்டபோது, அவரது குழுவில் ஹஸ்ரத் மஹால் இல்லை என்பதே இதன் பொருள். அவர் இனி ஒரு பேகம் அல்ல, ஆனால் அவருடைய மகன் நவாப் மற்றும் முகலாய பேரரசரின் ஆளுநரானதும், தானாகவே மீண்டும் பேகம் என்ற பட்டத்தைப் பெற்றார். அவர் கிளர்ச்சியாளர்களுக்கு மட்டுமல்ல, சாதாரண மக்களுக்கும் தலைவியானார்," என்று எழுதியுள்ளார். 35000 கிளர்ச்சியாளர்களின் தலைவி 1857 ஜூலைக்குள் பிரிட்டிஷ் அதிகாரிகளைத் தாக்கியதற்காக சிப்பாய் மங்கள் பாண்டே பாரக்பூரில் தூக்கிலிடப்பட்டார். மீரட், கான்பூர் மற்றும் டெல்லி ஆகியவை கிளர்ச்சியின் நெருப்பில் எரிந்து கொண்டிருந்தன, ஜான்சியின் ஜோகுன் பாக் நகரில் பிரிட்டிஷ் பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்ட பிறகு ராணி லக்ஷ்மிபாய் ஜான்சியைக் கட்டுப்படுத்த முயன்றார். சின்ஹட்டில் ஆங்கிலேயர்களின் தோல்வி பற்றிய செய்தி பரவியதும், கிளர்ச்சி வீரர்கள் லக்னெளவை அடையத் தொடங்கினர். அடுத்த எட்டு மாதங்களுக்கு, அதாவது மார்ச் 1858 வரை, ஹஸ்ரத் மஹால் லக்னெளவில் கிளர்ச்சியாளர்களை வழிநடத்தினார். இதற்கிடையில் மூன்று மாதங்கள் வரை, 37 ஏக்கர் பரப்பளவுள்ள குடியிருப்பு, முற்றுகைக்கு உட்பட்டது. பிரிட்டிஷ் மகளிர், குழந்தைகள், வீரர்கள், இந்திய வீரர்கள், அவர்களின் ஆதரவாளர்கள் மற்றும் ஊழியர்கள் என மூவாயிரம் பேர் இருந்தனர். பட மூலாதாரம்,PENGUIN ரெசிடென்சி சுமார் 35,000 கிளர்ச்சியாளர்களால் சூழப்பட்டுள்ளது என்றும் ஒவ்வொரு நாளும் அவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது என்றும் ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. முகலாயர்களை வீழ்த்தி டெல்லியை கைப்பற்றிய ஹேமு விக்ரமாதித்யா வரலாறு பேரரசர் பிருத்விராஜ் சௌஹான் vs முகமது கோரி: வரலாற்றில் எது கற்பனை? எது உண்மை? ராஜேந்திர சோழன்: 1,000 ஆண்டுகள் முன்பு இந்தியா மற்றும் கீழை நாடுகளை வென்ற தமிழ் மன்னன் ஜேம்ஸ் நீல் என்ற ஆங்கிலேய அதிகாரி, லார்டு கேனிங்கிற்கு எழுதிய கடிதத்தில், 'குடியிருப்பின் உள்ளே நிலைமை மிகவும் மோசமாகிவிட்டதால், கிளர்ச்சியாளர்களுக்கு முன்னால், அதிகபட்சம் 15-20 நாட்கள்தான் தாக்குப்பிடிக்க முடியும் என்று லாரன்ஸ் நினைக்கத் தொடங்கினார்' என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் கிளர்ச்சி பற்றிய செய்திகளை திரட்ட அனுப்பப்பட்ட 'தி டைம்ஸ்' நாளிதழின் செய்தியாளர் விவியம் ஹாவர்ட் ரஸ்ஸல், தனது அறிக்கையில், 'மூன்று மாத முற்றுகையின் போது, மூவாயிரம் பிரிட்டிஷ் மக்களில் பலர் தப்பிக்க முடிந்தது. சிலர் கொல்லப்பட்டனர். பேகம், அற்புதமான ஆற்றலையும் திறமையையும் வெளிப்படுத்தி, தன் மகனின் உரிமைக்காகப் போராடும்படி ஆவாத் முழுவதையும் அணிதிரளவைத்தார்' என்று குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES லாரன்ஸ் குடியிருப்புக்குள்ளேயே இறப்பு 1857 ஜூலை மாத தொடக்கத்தில் ஒரு நாள், ஹென்றி லாரன்ஸ் எல்லா தளங்களையும் ஆய்வு செய்த பிறகு தனது குடியிருப்பு அறைக்குத் திரும்பினார். ஒரு நாள் முன்னதாக அவரது அறையில் ஒரு ஹோவிட்சர் ஷெல் வெடித்தது. ஆனால் அதில் லாரன்ஸ் காயமடையவில்லை. ருத்ராங்ஷு முகர்ஜி தனது 'டேட்லைன் 1857 ரிவோல்ட் அகென்ஸ்ட் தி ராஜ்' என்ற புத்தகத்தில், 'லாரன்ஸின் ஊழியர்கள் அவரை ரெசிடென்சியின் உட்புறம் நோக்கியிருந்த மற்றொரு அறைக்கு செல்லும்படி அறிவுறுத்தினர். மறுநாள் அறையை மாற்றலாம் என்று லாரன்ஸ் முடிவு செய்தார். ஒரே இடத்தில் இரண்டு முறை தாக்குதல் நடத்த நினைக்கும் வீரர் யாரும் இருக்க மாட்டார்கள் என்று அவர் நினைத்தார். ஆனால் எது நடக்காது என்று அவர் நினைத்தாரோ அது நடந்தது. லாரன்ஸ் கடிதம் எழுதிக் கொண்டிருந்த போது, அவரது அறையில் மற்றொரு குண்டு வெடித்தது. ஹென்றி லாரன்ஸ் படுகாயமடைந்தார். காயம் மிகவும் கடுமையாக இருந்ததால் அவரைக் காப்பாற்ற முடியாமல்போனது. அவர் ஜூலை 4ஆம் தேதி காலமானார். அவர் குடியிருப்புக்குள்ளே அமைதியாக அடக்கம் செய்யப்பட்டார். அடுத்த சில நாட்களுக்கு அவரது மரணம் பற்றி யாரும் அறிய அனுமதிக்கப்படவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES பேகம் ஹஸ்ரத் மஹாலின் அரசவை ஆங்கிலேயர்களை எதிர்ப்பதற்கான எல்லா முடிவுகளும் பேகம் ஹஸ்ரத் மஹாலின் அரசவையில் மேற்கொள்ளப்பட்டன. "பேகத்தின் இடத்தில் அரசவை கூடும்போது, அரசு உறுப்பினர்கள் மற்றும் தளபதிகள் அனைவரும் அதில் பங்கேற்பது வழக்கம். தாரா கோட்டியில் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இதுபோன்ற கூட்டங்கள் நடத்தப்பட்டன. 'தர்பார் பிர்ஜிஸ் கத்ரு' என்ற பெயரில் விளம்பரங்களை வெளியிடுவார்கள். மக்கள் தங்கள் மதத்தை காப்பாற்ற போராட வேண்டும் என்று அதில் கேட்டுக்கொள்ளப்பட்டனர். இந்த விளம்பரங்களில் ஆங்கிலேயர் ஆட்சியும் கடுமையான வார்த்தைகளில் கண்டிக்கப்பட்டது," என்று நேரில் பார்த்த சாட்சி ஒருவர் கூறியுள்ளார். இது தவிர, தர்பார் பிர்ஜிஸ் கத்ரு என்ற பெயரில் தாலுகாக்களின் தலைவர்களுக்கு ஹுகும்நாமா (உத்தரவு) வழங்கப்பட்டது. இந்த ஹுக்கும்னாமாக்கள் மக்களால் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டன என்பதும், மக்கள் மீதான அவற்றின் தாக்கமும், ஆங்கிலேயர்களை சாமானியர்கள் எதிர்த்தவிதத்தில் தெளிவாகத் தெரிந்தது. லக்னெள ரெசிடென்சியில் சிக்கியவர்களுக்கு உதவுவதற்காக கான்பூரில் இருந்து அனுப்பப்பட்ட ஹென்றி ஹேவ்லாக் மற்றும் ஜேம்ஸ் அவுட்ராம் ஆகியோரின் துருப்புக்கள் சாதாரண கிராமவாசிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டன. பட மூலாதாரம்,TWITTER சண்டை நடப்பதற்கு இடையிலும், லக்னெள தெருக்களில் கொண்டாட்ட சூழல் நிலவியது. மக்கள் ஒருவருக்கொருவர் ஹல்வா, பூரி மற்றும் இனிப்புகளை விநியோகித்தனர். டெல்லியில் தோற்கடிக்கப்பட்ட பின்னர் லக்னெளவை அடைந்த கிளர்ச்சியாளர்கள் 1857 செப்டம்பர் 25 ஆம் தேதி, ஹேவ்லாக் மற்றும் அவுட்ராமின் படைவீரர்கள் ரெசிடென்சிக்குள் நுழைந்தபோது கிளர்ச்சியாளர்களுக்கு முதல் பின்னடைவு ஏற்பட்டது. ஆனால் ஆங்கிலேய படைகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் அதை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES அவர்கள் உள்ளே சென்றபிறகு ஒரு வகையில் தனிமைப்படுத்தப்பட்டனர். தனது தோழர்களுடனான தொடர்பை இழந்தனர். சார்லஸ் பால் தனது 'ஹிஸ்டரி ஆஃப் தி இந்தியன் மியூட்டினி' புத்தகத்தில், 'அவுட்ராமின் ஒவ்வொரு சமரச முயற்சியும் பேகம் ஹஸ்ரத் மஹாலால் நிராகரிக்கப்பட்டது," என்று எழுதினார். ஏனெனில், அந்த நேரத்தில் டெல்லியை ஆங்கிலேயர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதால், அங்கிருந்த கிளர்ச்சியாளர்கள் அவத் கிளர்ச்சியாளர்களுக்கு உதவ லக்னெள வந்தடைந்தனர். ருத்ராங்ஷு முகர்ஜி தனது 'அவத் இன் ரிவோல்ட்' புத்தகத்தில், '1858 ஜனவரி வாக்கில், லக்னெளவில் கிளர்ச்சி வீரர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியது. ஆங்கிலேயர்கள் லக்னெளவை விட்டு வெளியேறினாலும், அவர்கள் விரைவில் திரும்பி வருவார்கள் என்பது அப்போதைய எண்ணமாக இருந்தது," என்று எழுதுகிறார். பேகம் ஹஸ்ரத் மஹால் லக்னெளவை வலுப்படுத்தி, ஆங்கிலேயர் அங்கு திரும்பிவருவதை முடிந்தவரை கடினமாக்க முயற்சி செய்தார். லக்னெளவின் பாதுகாப்பை வலுப்படுத்த சுமார் 15,000 தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். கோமதி ஆற்றின் தண்ணீரை அங்கு கொண்டு வருவதற்காக கைசர்பாக்கைச் சுற்றிலும் ஆழமான அகழி தோண்டப்பட்டது. பட மூலாதாரம்,ANTHEM PRESS ஹஸ்ரத்மஹாலின் வீரர்கள் 1857 நவம்பரில் கோலின் காம்ப்பெல் தலைமையில் பிரிட்டிஷ் துருப்புக்கள் ரெசிடென்சியில் சூழப்பட்ட பிரிட்டிஷ் மக்களையும் அவர்களின் ஆதரவாளர்களையும் வெளியேற்றினர். 'இந்த மோதலில் 3,000 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் அவர்களின் 80 பீரங்கிகள் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டதில் இருந்து ஆங்கிலேயர்கள் எவ்வளவு எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்பதை அறிய முடிகிறது,' என்று சார்லஸ் பால் எழுதுகிறார். இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற மூன்று பிரிட்டிஷ் பெண்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? குழந்தை கடத்தலால் திருடப்பட்ட தொல்குடித் தலைமுறைகள் - ஆஸ்திரேலியாவின் வலி நிறைந்த வரலாறு ஒரு வீரரைக் கூட இழக்காமல் முகலாயர்களை தோற்கடித்த ஷேர்ஷா: இந்திய நிர்வாகவியல் முன்னோடி 1857 டிசம்பர் மாத வாக்கில் காற்றின் திசை முற்றிலும் மாறத் தொடங்கியது. வாரணாசியில் கர்னல் ஜேம்ஸ் நீல் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களை மாமரத்தில் தூக்கிலிட்டு அப்பகுதி முழுவதும் பீதியை கிளப்பினார். அலகாபாத் நகரத்தில் தீயிடப்பட்டது. பீரங்கி வாயில் கட்டி மக்கள் சுடப்பட்டனர். 'பேகத்திற்கும் அவரது வீரர்களுக்கும் மிகவும் தொந்தரவாக இருந்தது ஜேம்ஸ் அவுட்ராம் மற்றும் அவரது வீரர்கள் ஆலம்பாக் அரண்மனையில் தொடர்ந்து இருந்ததுதான்," என்று இரா முகோட்டி தனது 'ஹீரோயின்ஸ் பவர்ஃபுல் இந்தியன் விமன் ஆஃப் மித் அண்ட் ஹிஸ்டரி' என்ற புத்தகத்தில் எழுதுகிறார். பேகத்தின் வீரர்கள் ஆலம்பாக் அரண்மனையை ஒன்பது முறை தாக்கினர். ஆனால், அவர்கள் ஆங்கிலேயர்களை அங்கிருந்து வெளியேற்றவோ அல்லது கான்பூரிலிருந்து அவர்களின் விநியோக பாதைகளை துண்டிக்கவோ முடியவில்லை. பேகம் ஹஸ்ரத் மஹால் தனது யானையின் மீது அமர்ந்து இதுபோன்ற ஒரு தாக்குதலில் ஈடுபட்டார். பட மூலாதாரம்,ALEPH BOOK COMPANY ஆனால், 'ஹஸ்ரத் மஹால் சண்டையில் பங்கேற்கவில்லை. அவர் அதைத் திட்டமிட்டதோடு கூடவே சண்டை தொடர்பான எல்லா உத்தரவுகளும் அவரது அரசவையில் இருந்தே வழங்கப்பட்டன. கிளர்ச்சியாளர்களின் மன உறுதியை உயர்த்த அவர் பெருமுயற்சி மேற்கொண்டார்," என்று ருத்ராங்ஷு முகர்ஜி குறிப்பிடுகிறார். 1856 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் அவத்தை தங்கள் ராஜ்ஜியத்துடன் இணைத்தபோது, அவர்கள் ஒரு தோட்டாவைக் கூட சுடவில்லை. ஆனால், 1858 இல் லக்னெளவை மீண்டும் கைப்பற்றுவதற்கு அவர்கள் தங்கள் முழு பலத்துடன் சண்டையிட வேண்டியிருந்தது. பேகமை எதிர்த்த மௌலவி அகமதுல்லா ஆனால், பேகம், பிரிட்டிஷாரை விட தனது சொந்த மண்ணைச் சேர்ந்த மௌல்வி அகமதுல்லா ஷாவிடமிருந்து அதிக எதிர்ப்பை சந்தித்தார். ஆங்கிலேயர்களை வீழ்த்த கடவுளிடம் இருந்து நேரடியாக தான் உத்தரவு பெற்றதாக ஷா கூறினார். மக்கள் மத்தியில் பிரபலமான மௌலவி, தான் குவாலியரின் மெஹ்ராப் ஷாவின் சீடர் என்று கூறினார். ருத்ராங்ஷு முகர்ஜி தனது 'அவத் இன் ரிவோல்ட்' புத்தகத்தில், 'அகமதுல்லா ஆக்ராவில் ஒரு ஃபக்கீராக வாழ்ந்தார். அவர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஜிஹாத் நடத்தினார். அப்போது அவருக்கு வயது நாற்பது. அவர் மிகக் குறைந்த கல்வியறிவு பெற்றவர். பாரசீக மற்றும் அரபு மொழிகளில் சிறிது பேசக்கூடியவர். சின்ஹட் போரின் போது அவர் உடனிருந்தார்," என்று எழுதியுள்ளார். பேகம் ஹஸ்ரத் மஹால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ,மெளல்வி லக்னெளவுக்குள் நுழைவதை விரும்பவில்லை. ஆனால், கிளர்ச்சியாளர்கள் மீது ஆங்கிலேயர்களின் அழுத்தம் அதிகரித்தபோது, மெளல்வியின் தீப்பறக்கும் பேச்சை அவர்களால் புறக்கணிக்க முடியவில்லை. கிளர்ச்சியாளர்கள் போரில் தோல்விகளை சந்திக்கத்தொடங்கியபோது, அவரை லக்னெளவுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டிய கட்டாயம் ஹஸ்ரத் மஹாலுக்கு ஏற்பட்டது. 1858 ஜனவரி மாதத்திற்குள் கிளர்ச்சியாளர்களின் இரண்டு குழுக்கள் உருவாயின. அவத்தின் வீரர்கள் பேகம் ஹஸ்ரத் மஹால் மற்றும் பிர்ஜிஸ் கத்ரு ஆகியோரை ஆதரித்தனர். மற்ற நகரங்கள் மற்றும் டெல்லியைச் சேர்ந்த வீரர்கள் மௌல்விக்கு ஆதரவாக இருந்தனர். பட மூலாதாரம்,ROLI BOOKS ஆங்கிலேயருக்கு ஆதரவாக நேபாள கூர்க்கா வீரர்கள் நேபாளத்தின் ஜங் பகதூர் ராணாவின் பயங்கரமான கூர்க்கா வீரர்கள் ஆங்கிலேயர்களுக்கு உதவ லக்னெளவை அடைகிறார்கள் என்ற செய்தி திடீரென்று வந்தது. 'கூர்க்கா வீரர்களுக்கு ஈடாக ஜங் பகதூருக்கு கோரக்பூர் நகரத்தையும், லக்னெளவை கொள்ளையடித்து அதில் ஒரு பகுதியையும் தருவதாக ஆங்கிலேயர்கள் கூறியிருப்பதை பேகம் அறிந்தார். இதை முறியடிக்க பேகம் ஹஸ்ரத் மஹால் ஜங் பகதூருக்கு மாற்று யோசனையை அளித்தார்," என்று ருத்ராங்ஷு முகர்ஜி எழுதுகிறார். ராணா ஆங்கிலேயர்களுக்கு உதவாவிட்டால், கோரக்பூரைத் தவிர ஆசம்கர், ஆரா மற்றும் வாரணாசியையும் அவரிடம் ஒப்படைப்பதாக பேகம் அவருக்கு செய்தி அனுப்பினார். ஆனால், ஃபக்கீர் வேடத்தில் அனுப்பப்பட்ட பேகத்தின் தூதர்கள் வழியில் ஆங்கிலேயர்களால் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இதன் விளைவாக ஆங்கிலேயர்களுக்கு ஆதரவளிக்க கூர்க்கா வீரர்கள் தொடர்ந்து லக்னெள நோக்கி அணிவகுத்துச் சென்றனர். ஆங்கிலேயர்கள் நுழைவதற்குள் தப்பிய ஹஸ்ரத் மஹால் 1858 பிப்ரவரியில் பேகம் தனது தாலுகா தலைவர்களில் ஒருவரான மான் சிங்கின் துரோகத்தையும் சந்திக்க வேண்டியிருந்தது. இதற்கிடையில், கேம்ப்பெல் தலைமையில், சுமார் 60,000 பிரிட்டிஷ் வீரர்கள் லக்னெளவை நோக்கி முன்னேறினர். இவர்களில் 40,000 வீரர்கள் சண்டையிடுவதற்காக ஐரோப்பாவில் இருந்து இந்தியா வந்தனர். கடைசியில் ஆங்கிலேயர்கள் கைசர்பாக்கை கைப்பற்றினர். ஹஸ்ரத் மஹாலை பாதுகாக்க கிளர்ச்சியாளர்கள் தங்கள் உயிரைக் கொடுத்துப்போராடினர். டபிள்யூ.ஹெச்.ரஸ்ஸல் தனது 'மை டைரி இன் இந்தியா' என்ற புத்தகத்தில், 'பேகம் இறுதிவரை மனம் தளரவில்லை. அவர் கைசர்பாக்கில் தொடர்ந்து தங்கினார். பிரிட்டிஷ் வீரர்கள் அரண்மனைக்குள் நுழைவதற்கு முன்பு அவர் 1858 மார்ச் 15 ஆம் தேதி தனது ஆதரவாளர்கள் சிலருடன் தப்பித்துச்சென்றார்" என்று குறிப்பிட்டுள்ளார். லக்னெளவுக்கு வெளியே உள்ள மூசா பாக் என்ற இடத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக இரண்டாவது போர்முனையைத் திறந்தார். அவர் 1858 மார்ச் 21 ஆம் தேதி மூசா பாக்கில் மௌல்வி அகமதுல்லாவுடன் ஆங்கிலேயருக்கு எதிரான கடைசி போரில் ஈடுபட்டார். ஆனால், இந்த போரில் ஆங்கிலேயர்கள் அவரை தோற்கடித்தனர். இதைத்தொடர்ந்து, கிளர்ச்சியாளர்கள் அனைவரும் கலைந்துவிட்டனர். மௌல்வி ரோஹில்கண்ட் நோக்கிச்சென்றுவிட்டார். அங்கு அவர் ஆங்கிலேயர்களை கொரில்லா போரால் திக்குமுக்காட வைத்தார். ஆனால், அவரது தோழர்களில் ஒருவர் அவருக்கு துரோகம் செய்து மெளல்வியின் தலையை வெட்டினார். பட மூலாதாரம்,GETTY IMAGES நேபாளத்தில் தஞ்சம் புகுந்த பேகம் பேகம் ஹஸ்ரத் மஹால் தனது மகன் மற்றும் ஆதரவாளர்களுடன் நேபாளத்தின் எல்லையை நோக்கிச் சென்றார். அவர் காக்ரா நதியைக் கடந்து, பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள பூந்தி கோட்டையைத் தனது தளமாக்கினார். பிரிட்டிஷ் ஜேம்ஸ் பாண்ட் அலெக்சாண்டர் பர்ன்ஸ் இப்படிப்பட்டவரா? ரவீந்திரநாத் தாகூர் 'ஜன கண மன' எழுதி பேரரசர் ஐந்தாம் ஜார்ஜை சிறப்பித்தாரா? - ஓர் அலசல் திப்பு சுல்தான் கொடுங்கோலனா? விடுதலைக்குப் போராடிய வீரனா? புந்தேல்கண்டிலிருந்து தப்பிய மராட்டியத் தலைவர் நானா சாஹேப்பும் அங்கு வந்தடைந்தார். லக்னெளவை விட்டு வெளியேறிய பிறகும் பேகத்துடன் 15,000 முதல் 16,000 வீரர்கள் இருந்தனர். அவரிடம் 17 பீரங்கிகளும் இருந்தன. இவ்வளவு தூரத்தில் இருந்தபோதிலும், அவத்தின் நிர்வாகத்தை நடத்தும் முயற்சிகளை அவர் கைவிடவில்லை. அங்கிருந்தும் பிர்ஜிஸ் கத்ரு என்ற பெயரில் ஆணைகள் வெளியிடப்பட்டன. வீரர்களுக்கு சம்பளமும் கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால், எல்லா நம்பிக்கைகளும் தீர்ந்து போகத் தொடங்கி ஆங்கிலேயர்கள் தங்களை பிடித்துவிடுவார்கள் என்று தோன்றியபோது, பேகம் நேபாளத்தில் தஞ்சம் அடைய முடிவு செய்தார். பேகம் ஹஸ்ரத் மஹால் நேபாளத்தில் அமைதியாக வாழ்வதாக உறுதியளித்தால், அவர் அங்கு தங்க அனுமதிக்கப்படுவார் என்றும், நேபாள நிலத்தில் தனக்கு எதிரான வன்முறை அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் நேபாளத்தைச் சேர்ந்த ஜங் பகதூர் ராணா அறிவித்தார். பின்னர் ஹஸ்ரத் மஹால் தனது வாழ்நாள் முழுவதையும் நேபாளத்தில் கழித்தார். பட மூலாதாரம்,HURST நேபாளத்தில் தனது இறுதிமூச்சை விட்ட பேகம் ஹஸ்ரத் மஹால் 1857 ஆம் ஆண்டு நடந்த முதல் சுதந்திரப் போரில் ஈடுபட்ட ஆங்கிலேயர்களால் பிடிக்க முடியாத ஒரே தலைவர் ஹஸ்ரத் மஹால்தான். இதற்கிடையில், அவரது முன்னாள் கணவர் வாஜித் அலி ஷா, கிளர்ச்சியில் ஹஸ்ரத் மஹாலின் பங்கைக் கண்டு மிகவும் கோபமடைந்தார். ஹஸ்ரத் மஹால் தனது பெயரைப் பயன்படுத்துவது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று அவர் கர்னல் கெவெனாக்கிடம் புகார் செய்தார். வாஜித் அலி ஷா தனது மீதமுள்ள வாழ்நாள் முழுவதையும் கல்கத்தாவிற்கு அருகில் உள்ள மத்தியா புர்ஜில் கழித்தார். பட மூலாதாரம்,PENGUIN பேகம் ஹஸ்ரத் மஹால் 1879 வரை உயிர் வாழ்ந்தார். இந்தியா திரும்பும் அவரது விருப்பத்தை கடைசி வரை ஆங்கிலேயர்கள் ஏற்கவில்லை. எஸ்.என்.சென் தனது '1857' புத்தகத்தில், "ஆங்கிலேயர்கள் அவருக்கு வாஜித் அலி ஷாவைப் போல ஓய்வூதியம் வழங்குவதாக தெரிவித்தனர். ஆனால், பேகம் அதை நிராகரித்தார். அவர் நேபாளத்தில் காலமானார். அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார். ஆனால், ஆங்கிலேயர்களுடன் நேருக்கு நேர் சமமாக போரிட்ட இந்தப் பெண்மணிக்கு வரலாற்றில் உரிய இடம் கிடைக்கவில்லை என்றே சொல்லலாம். விக்டோரியா மகாராணி அரியணை ஏறிய 50 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு பேகத்தின் மகன் பிர்ஜிஸ் கத்ருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது. அவர் இந்தியாவுக்குத் திரும்பி கல்கத்தாவில் வசிக்கத் தொடங்கினார். அங்கு அவர் 1893 ஆகஸ்ட் 14 ஆம் தேதி காலமானார். https://www.bbc.com/tamil/india-62107875
  20. அவங்கள் சுவருக்கு சுட்டு எச்சரிக்கிறார்கள் போல் இருக்கு.
  21. இலங்கை ஜனாதிபதி மாளிகை வசதிகளை அனுபவிக்கும் போராட்டக்காரர்கள் - பிபிசி தமிழ் செய்தியாளரின் கள அனுபவம் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 10 ஜூலை 2022, 01:31 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, இலங்கை ஜனாதிபதி மாளிகைக்குள் நாலாபுறமும் நிறைந்து கிடக்கும் போராட்டக்காரர்கள் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வசித்து வரும் மாளிகையின் வாழ்வை ஒரு சில நிமிடங்கள் அனுபவிக்க கிடைத்த வாய்ப்பை போராட்டக்காரர்கள் சனிக்கிழமை மாலையில் இருந்து தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். அந்த மாளிகையை தங்கள் வசம் கொண்டு வந்துள்ள போராட்டக்காரர்களில் பெரும்பாலானோர் இரவை அங்கே கழித்தனர். இதைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்து ஒவ்வொரு பிரிவாக போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையின் ஒவ்வொரு அறையையும் சுற்றால தலம் போல சுற்றிப்பார்த்து வருகின்றனர். அங்குள்ள கள நிலவரத்தை பிபிசி தமிழுக்காக செய்தியாளர் ரஞ்சன் அருண் பிரசாத் நேரில் பார்வையிட்டு வழங்கிய சிறப்புத் தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம். இலங்கை வரலாற்றிலேயே முதல் முறையாக போராட்டக்காரர்களால் நாட்டின் ஜனாதிபதி மாளிகை முற்றுகையிடப்பட்டு அதனுள்ளே போராட்டக்குழுவினர் நுழைந்துள்ளனர். அது மட்டுமின்றி பலத்த பாதுகாப்பு நிறைந்த அந்த மாளிகையின் கிட்டத்தட்ட எல்லா அறைகளிலும் போராட்டக்காரர்கள் நிரம்பியுள்ளனர். ஜனாதிபதி மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போராட்டக்காரர்கள், இன்றும் (ஜூலை 10) அங்கேயே உள்ளனர். முதன் முறையாக அந்த மாளிகைக்குள் நுழைவு வாயில் மீது ஏறிக் குதித்துச் சென்றவர் மலையகத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர் என்பதை அறிய முடிந்தது. அவரைத் தொடர்ந்து உள்ளே சென்றவர்கள், அங்குள்ள பொருட்களை தொட்டுப் பார்த்தனர். ஆரம்பத்தில் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்குழுவினர் ஜனாதிபதி மாளிகைக்குள் இருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தத் தொடங்கினார்கள். இலங்கை ஜனாதிபதி ஜூலை 13இல் பதவி விலகுவார் - சபாநாயகர் தகவல் இலங்கை: ரணில் வீட்டை தீயிட்டுக் கொளுத்திய போராட்டக்காரர்கள் கோட்டாபய, ரணில் இல்லாவிட்டால் இலங்கைக்கு உள்ள வாய்ப்புகள் என்ன? தற்போது கொழும்பில் நடைபெறும் போராட்டங்களை உள்ளூர் பெளத்த பிக்குகள், கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மத பெரியவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் சங்க பிரதிநிதிகள் போன்றோரே செல்வாக்குடன் கட்டுப்படுத்தி வருகிறார்கள். அவர்களில் சிலர் ஜனாதிபதி மாளிகையில் பொருட்களை சேதப்படுத்தியவர்களை கண்டித்ததுடன் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கக் கூடாது என்றும் எச்சரித்து அனுப்பி வைத்தனர். Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 ஜனாதிபதி மாளிகையில் உள்ள பொருட்களை பாருங்கள், ரசியுங்கள் - பிறகு வெளியே சென்று விட்டு இந்த வாய்ப்பை அனுபவிக்க மற்றவர்களுக்கும் வாய்ப்பளியுங்கள் என்று மத பெரியவர்கள் அறிவுறுத்தினர். பட மூலாதாரம்,SAJID NAZMI இதன் பின்னர், போராட்டக்காரர்கள் பலரும் மாளிகையின் ஒவ்வொரு அறையாக சென்றனர். அங்குள்ள சமையலறைக்கு சென்ற குழுவினர் அங்கு முன்தினம் சமைக்கப்பட்டு மீதமிருந்த உணவு வகைகளை சாப்பிட்டனர். சிலர் குளிரூட்டியில் இருந்த ஜூஸ், மதுபான வகைகளை எடுத்துப் பருகினர். Twitter பதிவை கடந்து செல்ல, 2 Twitter பதிவின் முடிவு, 2 Twitter பதிவை கடந்து செல்ல, 3 Twitter பதிவின் முடிவு, 3 வேறு சிலரோ, ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தாரால் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கழிவறையை பார்வையிட்டனர். அந்த அறையும் குளிர்சாதன வசதியுடன் இருந்ததைப் பார்த்த போராட்டக்காரர்கள் ஆச்சரியத்தில் அதனுள்ளே சென்று பார்ததனர். சிலர் கழிவறைக்குள் சிறுநீர் கழித்து விட்டு வந்தனர். அருகே இருந்த குளியலறையே மிகப்பெரிய அறை போல இருந்ததை பார்த்து மக்கள் வியந்தனர். Twitter பதிவை கடந்து செல்ல, 4 Twitter பதிவின் முடிவு, 4 இதேவேளை, வேறு சில போராட்டக்குழுவினர் ஜனாதிபதி பயன்படுத்தியதாக நம்பப்படும் அறைக்குள் சென்று அங்கிருந்த அலமாரிகளை திறந்தனர். அதனுள் இருந்த கோட் சூட் ஆடைகளை அணிந்து படம் எடுத்துக் கொண்டனர். இலங்கை பொருளாதார நெருக்கடி - ஜனாதிபதி வீடுவரை விரிவடைந்த போராட்டங்கள் - முழு விளக்கம் இலங்கை: சர்வதேச கவனத்தை ஈர்க்கும் மக்கள் போராட்டங்கள் இலங்கை நெருக்கடி: கோட்டாபய எங்கே? இதுவரை நடந்தது என்ன? ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் மிகப்பெரிய அறையில் உடற்பயிற்சி கருவிகள் உள்ளன. அந்த அறைக்குள் சென்ற சிலர், அங்கிருந்த கருவிகளை இயக்கி உடற்பயிற்சி செய்தனர். மற்றொரு அறையில் இருந்த சொகுசு மெத்தை படுக்கையில் குதித்தும் படுத்தும் ஆனந்தத்தில் சிலர் குரல் எழுப்பினர். இப்படியாக ஒவ்வொருவரும் அந்த படுக்கை மீது படுத்து உருண்டு புரண்டு சில நிமிடங்களுக்கு ஜனாதிபதி வாழ்ந்த வாழ்வை ரசித்து விட்டு வெளியே சென்றனர். ஜனாதிபதி மாளிகைக்கு பக்கவாட்டில் மிகப்பெரிய நீச்சல் குளம் உள்ளது. இந்த நீச்சல் குளத்தை பிரத்யேகமாக ஜனாதிபதியும் அவரது குடும்பத்தினர் மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளனர். Twitter பதிவை கடந்து செல்ல, 5 Twitter பதிவின் முடிவு, 5 அந்த நீச்சல் குளத்தைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கானோர் வேடிக்கை பார்க்க, ஒரு சிலர் அதனுள் ஆர்வ மிகுதியில் குதித்து நீச்சலடித்துக் குளித்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES Twitter பதிவை கடந்து செல்ல, 6 Twitter பதிவின் முடிவு, 6 இந்த நிலையில், ஜனாதிபதி மாளிகைக்குள் கட்டுக்கடங்காமல் பெருங்கூட்டம் வரத் தொடங்கியது. இதையடுத்து போராட்டக்காரர்களை ஒழுங்குபடுத்தும் பணியை தாமாக முன்வந்து ஏற்ற மாணவர்கள் மற்றும் சமயத் தலைவர்களின் பிரதிநிதிகள், மாளிகையின் பிரதான வாயில் பகுதியை மூடினர். அவர்களே தங்களுக்குள்ளாக கூட்டத்தை ஒழுங்குபடுத்தத் தொடங்கினர். Twitter பதிவை கடந்து செல்ல, 7 Twitter பதிவின் முடிவு, 7 பகுதி, பகுதியாக போராட்டக்காரர்கள் உள்ளே வந்து ஜனாதிபதி வாழ்ந்த சொகுசான வாழ்க்கை அனுபவத்தையும் வசதிகளையும் பார்த்து விட்டுச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இலங்கை ஜனாதிபதி மாளிகையின் தெருமுனை வரை கூட வழக்கமாக பொதுமக்கள் நடமாட முடியாத அளவுக்கு அந்த பகுதி கடுமையான பாதுகாப்பு வளையத்தில் இருக்கும். ஆனால், இலங்கையில் தீவிரமான மக்கள் போராட்டங்கள் காரணாக சனிக்கிழமை பிற்பகலுக்குப் பிறகு அந்த சாலைகள் முழுவதும் மக்கள் வெள்ளத்தால் நிரம்பியிருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES இதனால் போலீஸாரும் ராணுவத்தினரும் ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே ஒதுங்கிக் கொண்டனர். அவர்கள் மாளிகைக்கு வெளியேயும் அருகே இருந்த வீதிகளிலும் நடப்பதை வேடிக்கை பார்த்தபடி இருந்தனர். பெருங்கூட்டத்தால் ஏற்பட்ட களேபரங்களும் குதூகலமும் நிறைந்த சூழலில் தங்களுடைய ஜனாதிபதி இதுநாள் அனுபவித்து வந்த ஆடம்பர சொகுசு வாழ்வை சாமானியரான போராட்டக்குழுவில் இருந்த பொதுமக்களும் அனுபவித்தனர். அங்கிருந்து வெளியே சென்ற போராட்டக்காரர்கள் பலரும் தங்களுக்கு கிடைத்த அனுபவத்தை மற்றவர்களிடம் வியப்புடன் விவரித்துச் செல்வதை பார்க்க முடிந்தது. சனிக்கிழமை நள்ளிரவைக் கடந்த நிலையில், போராட்டக்காரர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக பல இடங்களில் பட்டாசுகளை வெடித்தனர். சிலர் பாட்டுப்பாடியும் நடனமாடியும் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தினர். ஜனாதிபதி மாளிகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒரு எதிர்ப்பாளர் பியோனா சிர்மானா, "கோட்டாபய மற்றும் ரணிலை பதவியில் இருந்து அகற்றிய பிறகு, இலங்கைக்கு புதிய சகாப்தத்தை உருவாக்குவதற்கான நேரம் இது" என்று கூறினார்."இந்த இருவரும் முன்பே செல்லவில்லை. அதுதான் எனக்கு மிகவும் வருத்தம் தந்தது. அவர்கள் முன்பே சென்றிருந்தால் எந்த அழிவும் ஏற்பட்டிருக்காது," என்று அந்த பெண் கூறினார். https://www.bbc.com/tamil/sri-lanka-62109838
  22. 'ஐ' சைத் தொட்டுப் பார்க்க காசு கொடுத்த காலம் |CWC - Social Talk| Writer S.Ramakrishnan Part 3
  23. ஷின்சோ அபேவை சந்தேக நபர் துப்பாக்கியால் சுட என்ன காரணம்? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் உடல் டோக்யோவில் உள்ள அவரது இல்லத்துக்கு சனிக்கிழமை கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. டோக்யோவின் ஆடம்பர குடியிருப்புப் பகுதியில் அவரது வடு உள்ளது. ஷின்சோ அபேயின் இறுதி நிகழ்வு, ஜூலை 12ஆம் தேதி செவ்வாய்கிழமை நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். முன்னதாக, வெள்ளிக்கிழமை காலையில், ஜப்பான் தெற்கில் அமைந்துள்ள நாரா நகரில், அந்நாட்டின் மேலவைக்கு போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தபோது அடையாளம் தெரியாத நபரால் ஷின்சோ அபே சுடப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார். அவருடைய கொலை குறித்து விசாரணை நடத்தும் போலீசார், அதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர், "குறிப்பிட்ட அமைப்புக்கு" எதிரான வெறுப்புணர்வுடன் இருந்ததாக கூறுகின்றனர். அந்த அமைப்பில் ஷின்சோ அபே அங்கம் வகித்ததால், குற்றம்சாட்டப்பட்டுள்ள 41 வயதான டெட்சுயா யமாகாமி, அவரை சுட்டதாக நம்புவதாக போலீசார் தெரிவித்தனர். ஷின்சோ அபேயை சந்தேக நபர் நாட்டுத்துப்பாக்கியால் சுட்டதாக ஒப்புக்கொண்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக்கொலை: யார் இவர்? முன்னாள் பிரதமர் சுட்டுக்கொலை: பாதுகாப்புக்கு பெயர்போன ஜப்பானில் குற்றம் நடந்தது எப்படி? மர்ம நபரால் சுடப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழந்தார் அஞ்சலிக்காக திரண்ட மக்கள் படக்குறிப்பு, கோப்புப்படம் ஷின்சோ அபேயின் உடலை தாங்கிய வாகனம் டோக்யோவில் உள்ள அவரது இல்லத்தை வந்தடைந்த நிலையில், ஆளும் சுதந்திர ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் கறுப்பு உடையணிந்து வரிசையில் நின்று மரியாதை செலுத்தினர். ஷின்சோ அபேயின் இறுதிச்சடங்கு செவ்வாய்க்கிழமை (ஜூலை 12) நடைபெறும் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானில் நீண்ட காலமாக பிரதமர் பதவி வகித்தவர் ஷின்சோ அபே. 67 வயதான அவர் கொல்லப்பட்டுள்ளது, துப்பாக்கி சார்ந்த குற்றங்கள் மிகவும் அரிதாக உள்ள ஜப்பான் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டு நாடாளுமன்றத்தின் மேலவை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அவர் கொல்லப்பட்டார். ஜப்பானின் தற்போதைய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவும் சுதந்திர ஜனநாயக கட்சியை சேர்ந்தவராவார். ஷின்சோ அபே கொலை குறித்து பேசிய அவர், தான் "வார்த்தைகள் அற்று இருப்பதாகவும்", ஜப்பானின் ஜனநாயகம் "வன்முறைக்கு எப்போதும் அடிபணியாது" என்றும் உறுதியளித்தார். சுட்டுவிட்டு தப்பியோடவில்லை ஷின்சோ அபே சுட்டுக் கொல்லப்பட்டது ஏன் என்பது குறித்தும் அவரை கொலை செய்தவர் தனிநபரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாரா நகரில் உள்ள சாலையின் சந்திப்பு ஒன்றில் வேட்பாளர் ஒருவரை ஆதரித்து அபே பேசிக்கொண்டிருந்த சமயத்தில்தான் அவர் பின்புறத்தில் இருந்து சுடப்பட்டார். அவரை சுட்டதாக சந்தேகிக்கப்படும் நபர், இச்சம்பவம் நிகழ்வதற்கு முன்பு, ஷின்சோ அபேவுக்கு நெருக்கமாக நின்றுகொண்டிருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. பெரிய துப்பாக்கியுடன் நின்றிருந்த அந்நபர் அபேவை சில மீட்டருக்கு நெருங்கி அவரை நோக்கி இருமுறை சுட்டதாக இக்கொலையை நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர். ஷின்சோ அபே உடனேயே கீழே விழுந்த நிலையில், இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து அலறினர். ஷின்சோ அபேயை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோட முயற்சிக்காத அந்நபரை பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்தனர். அபேவை சுடுவதற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி உலோகம் மற்றும் மரக்கட்டையால் ஆனது என்றும் அது டேப் மூலம் சுற்றப்பட்டிருந்தது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கை ஜனாதிபதி மாளிகையை வரிசைகட்டி சுற்றிப்பார்க்கும் போராட்டக்காரர்கள் - பிபிசி தமிழ் செய்தியாளரின் கள அனுபவம் இலங்கையில் தணியாத பதற்றம், தொடரும் போராட்டம் - இன்றைய நிலவரம் எண்ணூரில் தொடர்கதையாகும் அனல்மின் நிலைய கழிவு மாசுபாடு - கொந்தளிக்கும் மீனவர்கள் மேலும் பிடிபட்ட நபரின் வீட்டிலிருந்து இதேபோன்ற இன்னும் சில நாட்டுத்துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் பின்னர் பறிமுதல் செய்யப்பட்டன. அபேயின் கழுத்தில் இரண்டு துப்பாக்கி குண்டு காயங்கள் ஏற்பட்டிருந்தது, மேலும் இந்த தாக்குதலால் அவருடைய இதய செயல்பாடும் பாதிக்கப்பட்டது. தாக்குதலுக்குப்பின் சில நிமிடங்கள் அவர் சுயநினைவுடன் இருந்ததாகவும், பதிலளிக்கக்கூடியவராகவும் இருந்ததாக கூறப்படும் நிலையில், ஆனால், சிகிச்சைக்கு மாற்றப்பட்ட நேரத்தில் அதுபோன்று எந்த அறிகுறிகளும் தென்படவில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருடைய உயிரை காப்பாற்ற சில மணிநேரங்கள் மருத்துவர்கள் முயற்சித்த நிலையில், உள்ளூர் நேரப்படி மாலை 5 மணியளவில் அவருடைய மரணம் அறிவிக்கப்பட்டது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, சுட பயன்படுத்தப்பட்ட ஆயுதம் ஜப்பானிய சமூக ஊடகங்களில் வெள்ளிக்கிழமை முழுவதும் "We want democracy, not violence" ("எங்களுக்கு ஜனநாயகம் வேண்டும், வன்முறை அல்ல') என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனது. அதில் பலரும் இச்சம்பவத்திற்கு அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். ஜப்பானில் துப்பாக்கி வன்முறைகள் மிகவும் அரிதானது. ஜப்பானில் நாட்டுத் துப்பாக்கிகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது, மேலும் அரசியல் வன்முறைகள் இதுவரை பெரும்பாலும் கேள்விப்படாத ஒன்றாகவே உள்ளது. ஜப்பானில் கடந்த 2014ஆம் ஆண்டில் துப்பாக்கி சார்ந்த கொலைகள் ஆறு என்றளவிலேயே இருந்தது, இதே காலக்கட்டத்தில் அமெரிக்காவில் துப்பாக்கி சார்ந்த கொலைகள் 33,599 ஆக இருந்தது. ஜப்பானில் ஒருவர் துப்பாக்கியை வாங்குவதற்கு கடுமையான தேர்வுகள் மற்றும் மனநல பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதும், சிறிய ரக துப்பாக்கிகள் மற்றும் ஏர் ரைபில்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, சந்தேகத்துகிடமான நபர் க்ஷின்சோ அபேவுக்கு நெருக்கமாக நின்றுகொண்டிருக்கும் புகைப்படம் ஜப்பான் பிரதமராக முதன்முதலில் 2006 ஆம் ஆண்டில் பதவியேற்றார் ஷின்சோ அபே. பின் 2012 முதல் 2020 ஆம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்த அவர், பின்னர் உடல்நிலை காரணமாக அப்பதவியிலிருந்து விலகினார். பாதுகாப்பு மற்றும் வெளியுறவு விவகாரங்களில் தன் கடுமையான நிலைப்பாடுகளுக்காகவும் போருக்கு பிந்தைய ஜப்பானிய அரசியலமைப்பை திருத்த முயன்றதற்காகவும் இவர் அறியப்படுகிறார். அபே பிரதமராக இருந்த முதல் முறை அவரின் பொருளாதார கொள்கைகள் வளர்ச்சி பாதைக்கு நாட்டை அழைத்து சென்றன. அது 'அபேனோமிக்ஸ்' என்றும் அழைக்கப்பட்டது. அவருக்குப் பின் கட்சியில் அபேவுக்கு நெருக்கமான யோஷிடே சுகா பிரதமராக பதவியேற்றார், அவருக்குப் பின் ஃபுமியோ கிஷிடா பதவியேற்றார். பட மூலாதாரம்,ASAHI SHIMBUN/REUTERS 'வெறுக்கத்தக்க தாக்குதல்' உலகளவில் அறியப்பட்ட தலைவர்கள் பலரும் ஷின்சோ அபே கொலை செய்யப்பட்டதற்கு கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இதனை "வெறுக்கத்தக்க தாக்குதல்" என தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமரை தொடர்புகொண்டு வருத்தத்தைப் பகிருந்துகொண்டார். மேலும், "இச்சம்பவம் ஜப்பானுக்கும் அபேயை அறிந்தவருக்கும் சோகமானது" என தெரிவித்துள்ளார் அமெரிக்காவில் இவ்வார இறுதிநாட்களில் தேசிய கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட வேண்டும் என்றும் பைடன் உத்தரவிட்டுள்ளார். பிரேசிலில் மூன்று தினங்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என்று அதிபர் ஜேயர் போல்சனேரோ அறிவித்துள்ளார். மேலும் ஜப்பான் மக்களுக்கு தன் இரங்கலையும் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோதி, "ஷின்சோ அபே ஒரு உலகளாவிய அரசியல்வாதி" என தெரிவித்துள்ளார். தென் கொரிய அதிபர் யூன் சுக்-இயோல் இத்தாக்குதலை "ஏற்றுக்கொள்ள முடியாத குற்றம்" என தெரிவித்துள்ளார். சீன அதிபர் ஷி ஜின்பிங், ஜப்பான் பிரதமர் கிஷிடாவுக்கு இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், சீனா மற்றும் தென் கொரிய சமூக ஊடகங்களில் இத்தாக்குதல் குறித்த மகிழ்ச்சியான கருத்துகளும் ஆதிக்கம் செலுத்தின. சீனாவும் தென் கொரியாவும் வரலாற்று ரீதியாக ஜப்பானுடன் சிக்கலான உறவுகளைக் கொண்டுள்ளன. ராணுவப் புத்திசாலித்தனத்திற்கு பெயர் பெற்ற அபே, தனது பதவிக் காலத்தில் இரு நாட்டு குடிமக்களாலும் வெறுக்கப்பட்டவராக இருந்தார். https://www.bbc.com/tamil/global-62104279
  24. அந்தக் குரலுக்கு உரியவர் அவர் தான், வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பேசியது இத்தருணத்தில் பொருத்தமாக இருக்கிறது. அநேகமாக போர் முடிந்த பின் பேசியதாக இருக்கலாம்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.