Jump to content

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    22985
  • Joined

  • Last visited

  • Days Won

    16

Everything posted by ஏராளன்

  1. ரஷ்ய எண்ணெய் விலை வரம்பு : ஸ்திரத்தன்மை, விலை மலிவில் இந்தியா அக்கறை By DIGITAL DESK 2 08 DEC, 2022 | 01:40 PM ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்ய கடல்வழி எண்ணெய் மீதான விலை வரம்புக்கு ஒப்புக்கொண்ட சில நாட்களுக்குப் பிறகு, இந்த நடவடிக்கையின் தாக்கம் தெளிவாக இல்லை என்றும், எரிசக்தி சந்தைகளின் ஸ்திரத்தன்மை மற்றும் மலிவுத்தன்மை குறித்து கவலை கொண்டுள்ளதாக இந்தியா குறிப்பிட்டுள்ளது. இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் நாட்டின் நலனுக்காக சிறந்த ஒப்பந்தங்களைத் தொடர்ந்து தேடும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ரஷ்ய எண்ணெயை வாங்க நாங்கள் எங்கள் நிறுவனங்களைக் கேட்கவில்லை. எங்கள் நிறுவனங்களுக்கு எண்ணெய் கொள்வனவு செய்ய தேவையான சுதந்திரத்தை வழங்கியுள்ளோம். அவர்கள் பெறக்கூடிய சிறந்த விருப்பம் என்ன என்பதை அவர்களே தீர்மானிப்பார்கள். அது சந்தையின் தன்மையை பொறுத்தது. நாங்கள் ஒரு நாட்டிலிருந்து எண்ணெய் வாங்குவது மட்டுமல்ல. பல மூலங்களிலிருந்து எண்ணெயை வாங்குகிறோம். ஆனால் இந்திய மக்களின் நலன்களுக்காக சிறந்த ஒப்பந்தம் கிடைக்கும் இடத்திற்குச் செல்வது விவேகமான கொள்கையாகும். அதைத்தான் நாங்கள் முயற்சி செய்கிறோம். செய்ய வேண்டும் எனவும் ஜெயசங்கர் குறிப்பிட்டார். சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடான இந்தியா, உக்ரைன் மீதான மாஸ்கோவைத் தண்டிக்கும் வழிமுறையாக மேற்கில் சிலர் அதைத் தவிர்த்துவிட்டு தள்ளுபடியில் கிடைக்கும் ரஷ்ய எண்ணெயை பறித்துக்கொண்டனர். ரஷ்யா-உக்ரேன் மோதல் தொடங்குவதற்கு முன்பு இந்தியாவின் இறக்குமதியில் வெறும் 0.2 சதவீத சந்தைப் பங்காக இருந்த நிலையில், இந்தியாவின் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு அக்டோபர் மாதத்தில் 4.24 மில்லியன் டொன்கள் அல்லது ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 1 மில்லியன் பீப்பாய்கள் என உயர்ந்துள்ளது. எனது கவலை உண்மையில் எரிபொருள் சந்தைகளின் ஸ்திரத்தன்மை மற்றும் மலிவு விலைக்கு என்ன செய்யும் என்பதுதான். அது ஒரு கவலையாக உள்ளது என்றார். ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாகக் குழு அதன் 27 உறுப்பு நாடுகளை மாஸ்கோவின் எண்ணெய் வருவாயைக் தடுக்கும் மேற்கு நாடுகளின் முயற்சியின் ஒரு பகுதியாக ரஷ்ய எண்ணெயின் விலையை ஒரு பீப்பாய் 60 டொலர்களுக்கு கேட்டுள்ளது. ஆனால் டிசம்பர் 5 முதல், மேற்கத்திய கப்பல் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் விலை வரம்புக்கு மேல் விற்கப்படும் ரஷ்ய எண்ணெயைக் கையாளுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம், ஒரு உயர் அரசாங்க அதிகாரி, கப்பல்களை அனுப்பவும், காப்பீடு செய்யவும் மற்றும் பணம் செலுத்தும் முறையை வகுக்கவும் முடிந்தால், இந்தியா தொடர்ந்து ரஷ்ய எண்ணெயை வாங்க முடியும் என்று கூறினார். ரஷ்யா-உக்ரேன் மோதல் குறித்து குறிப்பிட்ட ஜெய்சங்கர், இது போர்க்காலம் அல்ல என்று இந்தியா பகிரங்கமாக கூறியுள்ளது என்றார். இந்திய மக்கள் அல்லது உலகின் பிற பகுதிகளில் போரின் தாக்கம் என்று வரும்போது, நாங்கள் அதைப் பற்றி சரியான விடயங்களைச் முன்னெடுத்துள்ளோம். எரிபொருளாக இருந்தாலும் சரி, உணவுப் பணவீக்கமாக இருந்தாலும் சரி, உரச் செலவாக இருந்தாலும் சரி, பாதிப்பைத் தணிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/142505
  2. தொடர்ச்சியாக 3 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் சதம் குவித்தார் லபுஸ்சேன் By SETHU 08 DEC, 2022 | 05:43 PM அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மார்னஸ் லபுஸ்சேன் தொடர்ச்சியாக 3 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் சதம் குவித்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 204 ஓட்டங்களையும் 2 ஆவது இன்னிங்ஸில் 104 ஓட்டங்களையும் அவர் குவித்திருந்தார். இந்நிலையில் இன்று ஆரம்பமான, மேற்கிந்திய அணியுடனான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மார்னஸ் லபுஸ்சேன் சதம் குவித்தார். அடிலெய்ட் நகரில் நடைபெறும் இப்போட்டி பகல் இரவு டெஸ்ட் போட்டியாக நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. நாணயச் சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இன்றைய ஆட்டமுடிவின்போது அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 330 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான டேவிட் வோர்ணர் 21 ஓட்டங்களுடனும் உஸ்மான் கவாஜா 62 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் ஓட்டமெதுவுமின்றி ஆட்டமிழந்தார். எனினும், மார்னஸ் லபுஸ்சேன் ஆட்டமிழக்காமல் 120 ஓட்டங்களையும் ட்ரேவிஸ் ஹெட் ஆட்டமிழக்காமல் 114 ஓட்டங்களையும் குவித்தனர். இவ்விருவரும் 4 ஆவது விக்கெட்டுக்காக வீழ்த்தப்படாத 199 இணைப்பாட்ட ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. மார்னஸ் லபுஸ்சேன் தொடர்ச்சியாக 3 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் சதம் குவித்தமை இது இரண்டாவது தடவையாகும். இச்சாதனையைப் புரிந்த 2 ஆவது அவுஸ்திரேலிய வீரர் இவராவார். டேவிட் வோர்ணர் மாத்திரமே இதற்குமுன் 2 தடவைகள் தொடர்ச்சியாக 3 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் சதம் குவித்த ஒரேயொரு அவுஸ்திரேலிய வீரராக விளங்கினார். https://www.virakesari.lk/article/142577
  3. பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவை கலைத்துவிட வேண்டும் - மறுசீரமைப்பு குழு சுட்டிக்காட்டியுள்ளது என்கிறார் காஞ்சன By DIGITAL DESK 2 08 DEC, 2022 | 01:39 PM (இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்) காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்கள், புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் மற்றும் நீர்மின்னுற்பத்தி நிலையங்களை தொடர்ந்து அரச வளங்களாக முன்னெடுத்து செல்ல பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவை கலைத்து வினைத்திறான முறையில் நிறுவன மட்டத்தில் கண்காணிப்பை மேற்கொள்ள மறுசீரமைப்பு குழு விசேடமாக சுட்டிக்காட்டியுள்ளது என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (டிச.08) பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க முன்வைத்த கேள்விகளுக்கு விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பது தொடர்பிலான அறிக்கை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அறிக்கையை முழுமையாக பரிசீலனை செய்யாமல் ஒருதலை பட்சமாக கருத்துரைப்பது கவலைக்குரியது. சமனலவெல,மகாலவி மின்னுற்பத்தி மையம்,லக்ஷபான, நுரைச்சோலை,காற்றாலையினால் செயற்படுத்தப்படும் சகல மின்நிலையங்களையும் வெற்வேறான நிறுவனங்களாக மாற்றியமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மின்னுற்பத்தி நிலையங்களின் செயற்திறனை அதிகரித்துக் கொள்வது பிரதான இலக்காக உள்ளது. காற்றாலை மின்நிலையங்கள், நீர்மின்னுற்பத்தி நிலையங்கள் தொடர்ந்து அரச வளங்களாக காணப்பட வேண்டும் என குழு பரிந்துரைத்துள்ளது. ஆகவே நாட்டில் உள்ள மின்நிலையங்களை அரச நிறுவனங்களாக முன்னெடுத்து செல்வது அரசாங்கத்தின் கொள்கையாக உள்ளது. ஆகவே இலங்கை மின்சார சபை தனியார் நிறுவனமயமாக்கப்படாது. வெளிப்படை தன்மையுடன் செயற்படும் வகையிலான பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆகவே இவ்விடயத்தில் நாட்டு மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம். இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவை கலைத்து வலுசக்தி மற்றும் மின்சாரத்துறையை கண்காணிப்பதற்கு பிரத்தியேக நிறுவனத்தை ஸ்தாபிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே ஒருசிலர் தற்போது கலக்கமடைந்துள்ளார்கள். இலங்கை மின்சார சபை இலாபமடைந்துள்ளதாக தேசிய சபையின் பொருளாதார மீட்சிக்கான திட்ட உபகுழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ள விடயம் அடிப்படையற்றதாகும. மின்கட்டணம் திருத்தம் செய்ததன் பின்னரும் மின்சார சபை கடந்த ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரை 111 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்கொண்டுள்ளது. இம்மாத காலப்பகுதியில் 152 பில்லியன் ரூபா நட்டத்தை சபை எதிர்கொள்ளும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நீர்மின்னுற்பத்தி ஊடாக நூற்றுக்கு நூறு சதவீதம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடிந்தால் ஒரு மின்னலகு கட்டணத்தை 3 ரூபாவாக நிர்ணயிக்கப்படும். ஆனால் தற்போது நீர்மின் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் ஊடாக 50 சதவீத மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. https://www.virakesari.lk/article/142514
  4. 6 கோடி ரூபா பெறுமதியான தேங்காய் எண்ணெய் மோசடி : கைதான ஊவதென்ன சுமன தேரருக்கு விளக்கமறியல்! By VISHNU 08 DEC, 2022 | 06:38 PM தனியார் நிறுவனமொன்றில் சுமார் 6 கோடி ரூபா பெறுமதியான தேங்காய் எண்ணெய்யைப் பெற்று மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஊவதென்ன சுமன தேரரை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுள ரத்நாயக்க இன்று (08) உத்தரவிட்டுள்ளார். தெமட்டகொடையில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் சந்தேக நபர், கடந்த ஜூலை மாதம் சுமார் 6 கோடி ரூபா பெறுமதியான 84,240 கிலோ தேங்காய் எண்ணெயைப் பெற்று, அதற்காக எட்டு காசோலைகளை வழங்கியதுடன், குறித்த காசோலை கணக்குகளில் இந்தப் பெருந்தொகை பணம் இல்லை என்பதும் தெரிய வந்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/142581
  5. சிறுநீரக விற்பனை விவகாரம் - குற்றம்சாட்டப்படும் வைத்தியசாலை தெரிவிப்பது என்ன? By RAJEEBAN 08 DEC, 2022 | 04:04 PM சிறுநீரக மோசடியில் தொடர்புபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பொரளை கொட்டா வீதியில் உள்ள தனியார் வைத்தியசாலை மனித உடற்பாகங்கள் கடத்தல் விற்பனை தொடர்பில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளது. மனித உடற்பாகங்களை கடத்தும் விற்பனை செய்யும் நடவடிக்கைகளில் நாங்கள் ஒருபோதும் ஈடுபடவில்லை ஒருபோதும் அதில் ஈடுபடமாட்டோம் என அந்த வைத்தியசாலைதெரிவித்துள்ளது. முக்கிய சூத்திரதாரி தற்போது கைதுசெய்யபபட்டுள்ளார் என்பதையும் வைத்தியசாலை சுட்டிக்காட்டியுள்ளது. விசாரைணையின் போது ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் பற்றிய உண்மை வெளிவரும் என கருதுகின்றோம் என வைத்தியசாலை தெரிவித்துள்ளது. கடந்த மூன்று தசாப்தகாலமாக செயற்பட்டு வருகின்றோம் இந்த காலப்பகுதியில் சர்வதேச தராதரம் பணியாளர்கள் சேவைகள் மூலம் வழங்கிய சேவைகளிற்காக சர்வதேச உள்ளுர் மக்களின் அபிமானத்தை பெற்றுள்ளோம் என குறிப்பிட்ட வைத்தியசாலையின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுவரை நாங்கள் 1200 சிறுநீரக மாற்று சத்திரகிசிச்சைகளை செய்துள்ளோம்,பத்தாயிரம் நோயாளிகளிற் மேல் நோயை கண்டுபிடித்துள்ளோம் என குறிப்பிட்ட மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதேவேளை பாராட்டுகளுடன் எதிர்ப்பையும் நாங்கள் சந்திக்கவேண்டிய நிலையேற்பட்டது, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் ஒரு முக்கிய அரசியல்வாதி நாங்கள் சஹ்ரானின் சகோதரருக்கு சிகிச்சை வழங்கினோம் என குற்றம்சாட்டினார் என வைத்தியசாலை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த செய்தி வேகமாக சமூக ஊடகங்களில் பரவி எங்களின் கௌரவத்திற்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது இந்த அறிக்கை முற்றிலும் தவறானது வைத்தியசாலைக்கு எதிராக அவதூறை கற்பிக்கும் நோக்கத்தில் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை காரணமாக சிஐடியினர் வைத்தியாசாலை குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர் எனவும் பொரளை வைத்தியசாலை தெரிவித்துள்ளது. இதேபோன்று வைத்தியசாலையை சிக்கவைக்க வேண்டுமென்ற மற்றும் ஒருங்கிணைந்த முயற்சி இடம்பெறுகின்றது. 2022 நவம்பர் 18 ம் திகதி சிறிய குழுவொன்று வைத்தியசாலை வளாகத்திற்குள் நுழைந்து தங்களின் சிறுநீரகத்தை வழங்கியமைக்கான பணம் எங்கே என கேட்டது என பொரளை வைத்தியசாலை தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட தொகை மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இவ்வாறான நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை எங்கள் பணியாளர்கள் அவர்களிடம் நீங்கள் உங்கள் உறுப்புகளை விற்பனை செய்ய முடியாது அது சட்டவிரோதமானது என தெரிவித்தனர் எனவும் பொரளை வைத்தியசாலை தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/142548
  6. மையம் கொண்டுள்ள மாண்டஸ் சூறாவளி By T. SARANYA 08 DEC, 2022 | 04:46 PM மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து 4 நாட்களாக மாலைவேளை வரையும் கடும் குளிருடன் கூடிய காலநிலை நிலவி வருவதோடு, ஓரளவான மழையும், பலத்த சுழல் காற்றும் வீசிவருதை அவதானிக்க முடிகின்றது. பலத்த சுழல் காற்றினால், மாவட்டத்தின் பல இடங்களிலும், மரங்கள் முறிந்துள்ளதையும், மக்களின் இயல்பு வாழ்வில் சற்று தளம்பல் நிலமை ஏற்பட்டுள்ளதையும் காணமுடிகின்றது. இந்நிலையில் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் காணப்பட்ட ஆழ்ந்த தாழமுக்கமானது, நேற்று புதன்கிழமை(07) இரவு 11.30 மணியளவில் சூறாவளிப் புயலாக தீவிரமடைந்துள்ளது. அச்சூறாவளிப் புயலுக்கு “மாண்டஸ்” என பெயரிடப்பட்டுள்ளது. இது திருகோணமலையிலிருந்து கிழக்காக 370 கிலோ மீற்றர் தூரத்திலும், நெட்டாங்கு 9.2 பாகை வடக்காகவும், அகலாங்கு 84.6 பாகை கிழக்காகவும், மையம் கொண்டுள்ளது. இப்புயல் மேற்கு, வடமேற்குத்திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேசக் கரையை 9 ஆம் திகதி இரவு ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் தாக்கத்தின் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், மேகமூட்டமான வானம் காணப்படும். வடக்கு வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். வட மாகாணத்திலும், மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களில், 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மணிக்கு 50 தொடக்கம், 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று அவ்வப்போது வீசக்கூடும். மேல் மாகாணத்திலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது சிறிதளவு மழை பெய்யக்கூடும். மன்னார் முதல் காங்கேசங்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற் பிராந்தியங்களிலும், தென்மேற்கு வங்காள விரிகுடா கடற் பிராந்தியங்களிலும், மீனவ சமூகத்தினரும் கடலில் பயணம் செய்வோரும், நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். மேற்குறிப்பிட்ட கடற் பிராந்தியங்களில் கடல் அலை 2.5 மீற்றரிலிருந்து, 3.5 மீற்றர் வரை எழக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டல திணைக்களத்தின் மட்டக்களப்பு நிலையப் பொறுப்பதிகாரி சுப்பிரமணியம் ரமேஸ் இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதான குளங்களின் நீர் மட்டமும் உயர்ந்துள்ளன. அந்த வகையில் உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் 26 அடி 10 அங்குலமும், உறுகாமம் குளத்தின் நீர்மட்டம் 11அடி 9 அங்குலமும், வாகனேரிக்குளத்தின் நீரமட்டம் 15 அடியும், கட்டுமுறிவுக்குளத்தின் நீர்மட்டம் 11 அடி 7 அங்குலமும், கித்துள்வெவ குளத்தின் நீர்மட்டம் 7 அடி 2 அங்குலமும், வெலிக்காக்கண்டிய குளத்தின் நீரமட்டம் 13 அடியும், வடமுனைக் குளத்தின் நீர்மட்டம் 8 அடி 7 அங்குலமும், நவகிரிக் குளத்தின் நீர்மட்டம் 23 அடி 8 அங்குலமும், தும்பங்கேணிக் குளத்தின் நீர்மட்டம் 12 அடி 6 அங்குலமுமாக உயர்ந்துள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர். https://www.virakesari.lk/article/142553
  7. முகக்கவசம் அணிந்து வெளியில் செல்லவும் - வடக்கு மாகாண ஆளுநர் அறிவிப்பு By T. SARANYA 08 DEC, 2022 | 03:20 PM வெளியில் செல்வோர் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து செல்லுமாறு வடக்கு மாகாண ஆளுநர் அவசர அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். தற்பொழுது நாட்டில் வளிமண்டலத்தில் தூசு அதிகரித்துள்ள சீரற்ற காலநிலையினால் இதய நோய் உள்ளவர்கள் மற்றும் சிறுவர்கள் முதியவர்களுக்கு வேறு பல நோய்கள் ஏற்படக்கூடிய சாத்திய கூறு காணப்படுவதனால் வட பகுதியில் வெளியில் பயணிப்போர் கட்டாயமாக முகக்கவசம் அணியுமாறுகோரிக்கை விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/142542
  8. திலினி பிரியமாலி மீது பாலியல் துன்புறுத்தல் : உண்மைகளை ஆராய்ந்து வருவதாக அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவிப்பு! By T. SARANYA 08 DEC, 2022 | 04:00 PM விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் உண்மைகளை ஆராய்ந்து வருவதாக சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் விஜேதாச ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை, திலினி பிரியமாலி சிறை வைக்கப்பட்டுள்ள பெண்கள் அறைக்கு அருகில் சிறைக்காவலர்களின் எண்ணிகை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், திலினி பிரியமாலியின் சிறை அறைக்குள் சிறைச்சாலை வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கு மட்டுமே செல்ல அனுமதி உள்ளதாக சிறைச்சாலை வைத்தியர் ஒருவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/142550
  9. கோன்ஸலோ ராமோஸ்: நாக் அவுட்டில் ரொனால்டோவையும் மெஸ்ஸியையும் முந்தியவர் பட மூலாதாரம்,GETTY IMAGES 8 டிசம்பர் 2022, 06:31 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்குப் பதிலாக களத்துக்குள் செல்லும்வரை, ராமோஸின் பெயரை கால்பந்து உலகில் பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்காது. ஏனென்றால் உலகக் கோப்பை போட்டிகளுக்குத் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பாக அவர் போர்ச்சுகலுக்காக சர்வதேசப் போட்டிகளில் முழுமையாக ஆடியது இல்லை. உலகக் கோப்பை போட்டிகளிலும் அவரை போர்சுகல் அணி பெரிதாகக் களமிறக்கவில்லை. கானா மற்றும் உருகுவே ஆகிய அணிகளுடனான போட்டிகளின்போது கடைசி நேர மாற்று ஆட்டக்காரராக களமிறங்கியதுதான் அவரது சர்வதேச அனுபவம். ஒட்டு மொத்தமாகவே உலகக் கோப்பைக்கு முன்னும் பின்னுமாக அவரது அனுபவம் 33 நிமிடங்கள்தான். உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்டபோது அவருக்கு 26-ஆம் எண் ஆடை வழங்கப்பட்டது. அணிக்காக மொத்தமாகத் தேர்வு செய்யப்பட்ட 26 பேரில் அது கடைசி எண். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால் சுவிட்சர்லாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை நாக் அவுட் போட்டியில் அவர் களமிறங்குவதற்கு முன்பாகவே சமூக வலைத்தளங்களில் வைராலாகி விட்டார். 5 உலகக் கோப்பைகளிலும் கோல் அடித்த உலகின் முன்னணி வீரருக்குப் பதிலாக தாக்குலை முன்னின்று நடத்துவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் சாதாரணமா? ரொனால்டோவுக்கு பதிலாக ராமோஸ் வந்து கோல் எதுவும் அடிக்காமல் போயிருந்தால் அவரது கால்பந்து வாழ்க்கை மாத்திரமல்லாமல், அவரை மைதானத்துக்குள் அனுப்பிய மேலாளர் சான்டோஸின் கால்பந்து வாழ்க்கையும் முடிவுக்கு வந்திருக்கும் அபாயம் இருந்தது. ஆனால் அவர் களமிறங்கிய பதினேழாவது நிமிடத்திலேயே தன்னைத் தேர்வு செய்ததற்கு நியாயம் கற்பித்தார். ரொனால்டோவால் செய்ய முடியாத சாதனையை அவர் படைத்தார். இந்த உலகக் கோப்பையில் யாரும் செய்யாத ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தி கால்பந்து உலகை வியப்புக்குள்ளாக்கினார். ராமோஸுக்கு 21 வயதுதான் ஆகிறது. போர்சுகல் அணிக்காக ரொனால்டோ களமிறங்கியபோது ராமோஸுக்கு இரண்டு வயதுதான் இருந்திருக்கும். இந்தப் போட்டிக்குப் பிறகு பேசிய ராமோஸ், ‘ரொனால்டோதான் தனக்கு ரோல் மாடல்’ என்று கூறினார். உலகக் கோப்பை போட்டிகளில் ஹாட்ரிக் கோல் அடித்த இரண்டாவது இளம் வீரர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் ராமோஸ். பட மூலாதாரம்,GETTY IMAGES ரொனால்டோவுக்கு அது இன்னும் கனவுதான்! ஐந்து உலகக் கோப்பை போட்டிகளில் 8 கோல்களை அடித்திருக்கிறார் ரொனால்டோ. இவற்றில் ஒன்றுகூட நாக் அவுட் போட்டிகளில் அடித்தவை அல்ல. அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி இந்த உலகக் கோப்பை போட்டியில்தான் தனது முதலாவது நாக் அவுட் கோலை அடித்தார். ஆனால், நாக் அவுட் போட்டிகளில் தாம் களமிறங்கிய முதல் உலகக் கோப்பை நாக் அவுட் போட்டியிலேயே 3 கோல்களை அடித்து போர்ச்சுகல் அணியின் அனைத்து வீரர்களின் சாதனைகளை தகர்த்துவிட்டார் ராமோஸ். ஸ்பெயினின் '1000 பெனால்ட்டி' பயிற்சியை பாய்ந்து தடுத்த மொரோக்கோவின் காப்பரண்7 டிசம்பர் 2022 கிலியன் எம்பாப்பே: மெஸ்ஸியை தொட்டவர், ரொனால்டோவை முந்தியவர்5 டிசம்பர் 2022 கத்தாரில் ஆஸ்திரேலிய அணியை சிலிர்க்க வைத்த ‘மந்திரக்காரர்’ மெஸ்ஸி4 டிசம்பர் 2022 உலகக் கோப்பை போட்டிகளில் அதிக கோல்களை அடித்த வீரரான ஜெர்மனியின் மிரோஸ்லவ் குலோஸ் தனது முதல் உலகக் கோப்பை தொடரில் ஹாட்ரிக் கோல்களை அடித்தார். அவருக்கு அடுத்ததாக அந்தப் பெருமை ராமோஸுக்கு கிடைத்திருக்கிறது. சுவிட்சர்லாந்துக்கு எதிராக மூன்று கோல்களை அடித்ததுடன் ஒரு கோலுக்கு உதவியும் செய்திருக்கிறார் ராமோஸ். இதுவும் உலகக் கோப்பை வரலாற்றில் இளம் வயது வீரர் என்ற வகையில் ஒரு சாதனைதான். பட மூலாதாரம்,GETTY IMAGES அடுத்த போட்டியில் ரொனால்டோவுக்கு வாய்ப்பு உண்டா? ரொனால்டாவுடன் ஏதாவது பிரச்னையா என்று சான்டோஸிடம் கேட்டபோது, “ரொனால்டோவுடன் எனக்கு நெருக்கமான உறவு இருக்கிறது. 19 வயதாக இருந்தபோதே அவரை எனக்குத் தெரியும். அணியில் ஒரு முக்கியமான ஆட்டக்காரர் என்றே அவரைக் கருதுவேன்” என்று பதிலளித்திருக்கிறார் போர்ச்சுகல் மேலாளர் சான்டோஸ். மொரோக்கோவுடனான காலிறுதிப் போட்டியில் ரொனால்டோ ஆடுவாரா என்ற கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்க சான்டோஸ் மறுத்துவிட்டார். “என்னிடம் உள்ள அனைத்து வீரர்களையும் பயன்படுத்துவேன். முதல் 11 ஆட்டக்காரர்களாக இல்லாவிட்டால் பின்னர் களமிறக்குவேன்” என்று கூறினார் சான்டோஸ். இதன் மூலம் மொரோக்கோவுடனான போட்டியிலும் தொடக்கத்தில் ரொனால்டோவை பெஞ்சில் அமர வைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவே கருதப்படுகிறது. இந்த உலகக் கோப்பை போட்டியே ரொனால்டோவுக்கு கடைசி உலகக் கோப்பை போட்டியாக இருக்கும் எனக் கருதப்படும் நிலையில், அவருக்கு இத்தகைய நெருக்கடி ஏற்பட்டிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதை சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES 37 வயதான ரொனால்டோ 5 உலகக் கோப்பை போட்டிகளில் கோல் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றவர். ஆனால் அவர் அணிக்காக போதிய பங்களிப்பைச் செய்யவில்லை என்ற புகார்கள் எழுவதைக் காண முடிகிறது. தென்கொரியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் அவரது மிக மோசமான தவறுகளை பலரும் சுட்டிக் காட்டுகிறார்கள். அப்போது சான்டோஸை எரிச்சலூட்டம் வகையில் ரொனால்டோவின் உடல் மொழி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்குப் பிறகே ரொனால்டோவை வெளியே அமர வைத்துவிட்டு பெரிதாக அனுபவம் இல்லாத இளம் வீரர் ராமோஸை களமிறக்குவது என சான்டோஸ் முடிவு செய்திருக்கிறார். இந்தப் போட்டியில் வெளியே இருந்தபோது ரொனால்டோவுக்கு இரண்டு வகையில் நெருக்கடி ஏற்பட்டது. ஒன்று தாம் இல்லாமல் போட்டியில் தோற்றுப் போனால் அணியுடன் சேர்ந்து வெளியேற வேண்டியிருக்கும். வெற்றிபெற்றால், அணிக்கு தனது தேவை இருக்காது. இப்போது ரொனால்டோவுக்கு மாற்றாக களமிறக்கிய வீரர் ஹாட்ரிக் கோல் அடித்திருப்பதன் மூலம் அடுத்து வரும் போட்டிகளில் ரொனால்டோவின் பங்களிப்பு தேவையில்லை என்ற கருத்தை சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES காலிறுதிப் போட்டிகள் எப்போது? கத்தார் உலகக் கோப்பை காலிறுதிப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்குகின்றன. முதல் போட்டியில் குரோஷியாவும் பிரேசிலும் மோதுகின்றன. இந்தப் போட்டி வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிக்கு நடக்கிறது. அடுத்த போட்டி அன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்கிறது. மொரோக்கோவுக்கும் போர்சுகலுக்கும் இடையே சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கும் இங்கிலாந்துக்கும் பிரான்ஸுக்கும் இடையேயான போட்டி அன்று நள்ளிரவு 12.30 மணிக்கும் நடக்கின்றன. https://www.bbc.com/tamil/articles/c0jg3n4v8j1o
  10. 'மேன்டோஸ்’ புயல் - எங்கு, எப்போது கரையைக் கடக்கும்? சென்னையில் மழை பெய்யுமா? பட மூலாதாரம்,IMD 8 டிசம்பர் 2022, 05:13 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில், நள்ளிரவு புயலாக வலுப்பெற்றது. இந்தப் புயலுக்கு மேன்டோஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் தற்போது காரைக்காலில் இருந்து 560 கி.மீ. தூரத்திலும், சென்னையில் இருந்து 640 கி.மீ. தூரத்திலும் மையம் கொண்டுள்ளது. நாளை நள்ளிரவு புதுச்சேரிக்கும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இன்று கடலோரப் பகுதிகளில் கன முதல் மிகக் கனமழை பெய்யும் என்றும் நாளை தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் கடலூர் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மழைநீர் சத்துகள் நிறைந்ததா? அதைச் சேமித்து குடிப்பது உடலுக்கு நல்லதா?4 நவம்பர் 2022 மழைக்காலப் பூஞ்சை: கட்டடங்களுக்கு என்ன பாதிப்பு? உடலுக்கு என்ன சிக்கல்?3 நவம்பர் 2022 மேற்குத்தொடர்ச்சி மலையில் ஆக்கிரமிப்புத் தாவரங்கள் பெருக கால நிலைமாற்றம் காரணமா?12 நவம்பர் 2022 கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்பும்படியும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. சென்னையில் தண்டையார் பேட்டை, திருவெற்றியூர் உட்பட பல்வேறு பகுதிகளில் லேசான சாரலுடன் கூடிய மழை பெய்துவருகிறது. புயல் எதிரொலியாக திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார். அதேபோல, வேலூர் மாவட்டத்தில் இன்று மதியமும் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னேற்பாடு நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு தலா ஒரு பேரிடர் மீட்புப் படை குழு அனுப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த தன்னார்வலர்களும் மீட்புப் பணிக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேன்டோஸ் புயலின் தாக்கம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், மேன்டோஸ் புயலின் விளைவாக காற்றின் வேகம் படிப்படியாக அதிகரிக்க தொடங்கும் என்பதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என்று தெரிவித்தார். ''வரும் 10ம் தேதி வரை கடல் கொந்தளிப்புடன் இருக்கும். கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் காற்றின் வேகம் இன்று 40கிமீ முதல் 50 கி மீவரை இருக்கும். ஒரு சில சமயம் காற்றின் வேகம் 60கிமீ வரை இருக்கும். சென்னை நகரத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யும். செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் புதுவை ஆகிய இடங்களில் அதிகனமழைக்கான வாய்ப்புகள் உள்ளன. திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்டங்களிலும் கனமழைக்கான வாய்ப்புகள் உள்ளன,'' என்றார் பாலச்சந்திரன். சென்னையில் மழை சாரலுடன் தொடங்கியிருந்தாலும், அடுத்த இரண்டு நாட்களில் மழையின் தாக்கம் அதிகரிக்கும் என்கிறார். வடக்கு திசையில் இருந்து காற்று வீசுவதால், சென்னை நகரத்தில் குளிர் அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். தற்போதுவரை பதிவாகியுள்ள வானிலை தரவுகளை கொண்டு பார்க்கையில், மேன்டோஸ் புயல், புயலாக மட்டுமே கரையைக் கடக்கும் என்றும் அவர் தெரிவித்தார். நாளை நள்ளிரவு நேரத்தில், புதுச்சேரிக்கும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடைப்பட்ட பகுதியில் 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார். மேலும் இன்று இரவு 11 மணிக்கு புயல் கரையை கடப்பது குறித்து தெளிவான தகவல்கள் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். பட மூலாதாரம்,IMD புயலுக்கு எப்படி பெயர் வைக்கப்படுகிறது? ஒவ்வொரு புயலுக்கும் ஒவ்வொரு பெயர் சூட்டப்படும் வழக்கம் உண்டு. அந்த வகையில் இந்த முறை உருவாகியிருக்கும் புயலுக்கு மேன்டோஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பெயரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சூட்டியுள்ளது. இதற்கு அரபு மொழியில் புதையல் பெட்டி என்று பொருள். புயலுக்கு யார் பெயர் வைக்கிறார்கள் என்ற பின்ணணி சுவாரஸ்யமானது. உலக வானிலை அமைப்பின் வழிகாட்டுதலின்படி, இயற்கை சீற்றங்களின் தகவல்களை பெறுவதில் குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக புயலுக்கும் பெயரிடும் வழக்கம் பின்பற்றப்படுகிறது. உலகம் முழுவதும், ஆறு பிராந்திய சிறப்பு வானிலை மையங்கள் மற்றும் ஐந்து பிராந்திய வெப்பமண்டல புயல் எச்சரிக்கை மையங்கள் இதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்கும், பெயரிடுவதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆறு பிராந்திய சிறப்பு வானிலை மையங்களில் இந்திய வானிலை ஆய்வு மையமும் ஒன்றாகும். இந்திய வானிலை ஆய்வு மையம் இந்தியா மற்றும் 12 நாடுகளுக்கு ஆலோசனைகளை வழங்குகிறது. அவை வங்கதேசம், இரான், மாலத்தீவு, மியான்மார், ஓமன், பாகிஸ்தான், கத்தார், செளதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஏமன் ஆகிய நாடுகள் ஆகும். பட மூலாதாரம்,GETTY IMAGES அதன்படி, ஏப்ரல் 2020ல் இந்திய வானிலை ஆய்வு மையம் புயலுக்கு பயன்படுத்தக்கூடிய 169 பெயர்களை அறிவித்துள்ளது. இந்தியா உள்பட 13 நாடுகள் தலா 13 பெயர்களை வழங்குகின்றன. மொத்தம் 169 பெயர்கள் கொண்ட அந்தப் பட்டியலின்படி இயற்கை சீற்றங்களுக்கு பெயர் சூட்டப்படுகிறது. பெயர் பட்டியல் தரும் நாடுகளின் பெயர்கள் அகரவரிசையில் வகைப்படுத்தப்படும். அந்த பட்டியலில் உள்ளபடி அவற்றின் பரிந்துரைக்கப்பட்ட தலைப்புகள் இந்திய பெருங்கடல் மற்றும் தெற்கு பசிஃபிக் பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கு வைக்கப்படுகின்றன. கடைசியாக கடந்த அக்டோபரில் உருவான புயலுக்கு சிட்ராங் எனப் பெயரிடப்பட்ட நிலையில், அந்த வரிசையில் அடுத்ததாக உள்ள மேன்டோஸ் என்ற பெயர் தற்போது சூட்டப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/articles/cmjy1dg2x40o
  11. ஜேர்மனியில் அரசை கவிழ்க்க சதி செய்த குற்றச்சாட்டில் 25 பேர் கைது By SETHU 07 DEC, 2022 | 02:14 PM ஜேர்மனியில் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு சதி செய்தனர் என்ற சந்தேகத்தில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வலதுசாரி குழுவொன்றையும், முன்னாள் இராணுவ அங்கத்தவர்களும், ஜேர்மனிய அரசாங்கத்தை கவிழ்க்க சதி செய்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நாடாளுமன்றக் கட்டடத்தை முற்றுகையிட்டு, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு இவர்கள் திட்டமிட்டனர் எனக் கூறப்படுகிறது. 13 ஆம் ஹெய்ன்றிக் இளவரசர் (Prince Heinrich XIII) எனக் கூறப்படும் 71 வயதான ஒரு நபர் இக்குழுவின் திட்டத்தில் முக்கிய நபராக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியின் 11 மாநிலங்களில் கைதுகள் இடம்பெற்றுள்ளன. அவர்களில் இரு குழுத் தலைவர்களில் ஒருவராக மேற்படி நபர் இருந்தார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/142433
  12. தற்போது பிரதேச சபை வீடு கட்ட அனுமதிக்கும் வரைபடத்தில் மலசல கூடத்திற்கு மூன்று தொட்டிகளை அமைத்து முதலாவதில் திண்ம கழிவாக தேக்கி 2வதிலும் 3வதிலும் தண்ணீரை தேக்க அனுமதிப்பதாக திட்டம். இதனை பொதுச் சுகாதார பரிசோதகர் உறுதிப்படுத்திய பின்னர் மூடலாம். சிலர் பரிசோதகர் அப்பாலே செல்ல அடிப்பகுதியை துளையிட்டு கழிவு நீரை மண்ணிலே கலக்க விடுகிறார்கள்.
  13. குடிநீரில் இத்தனை வகையா? சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆபத்தானதா? கட்டுரை தகவல் எழுதியவர்,லக்கோஜு ஸ்ரீனிவாஸ் பதவி,பிபிசி தெலுங்குக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இயற்கையான குழாய் நீரை அருந்துவது நல்லதா அல்லது மினரல் குடிநீரை அருந்துவது நல்லதா என்பது தொடர்பான விவாதம் நீண்ட காலமாக நடந்து வரும் நிலையில், மொத்தம் எத்தனை வகையான குடிநீர் உள்ளது, அவை எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன, அதில் எது உடல்நலத்திற்கு சிறந்தது என்பது குறித்து பார்ப்போம். இரண்டு ஹைட்ரஜன் மூலக்கூறுகளும் ஒரு ஆக்சிஜன் மூலக்கூறும் இணைந்து நீர் மூலக்கூறு உருவாகிறது. லட்சக்கணக்கான நீர் மூலக்கூறுகள் இணைந்து ஒரு துளி நீர் உருவாகிறது. பூமியில் 75 சதவிகிதம் தண்ணீரால் ஆனது. அதில் 96.5 சதவிகிதம் கடல் நீராகும். ஒரு சதவிகிதம் மட்டுமே புவிப்பரப்பில் இருக்கும் நல்ல தண்ணீராகும். இதையே மனிதர்கள் பருகுவது உள்ளிட்ட தேவைகளுக்குப் பயன்படுத்துகின்றனர். தண்ணீர் இல்லாமல் புவியில் மனிதர்களின் வாழ்க்கை சாத்தியமில்லை. உடலின் அனைத்து வளர்சிதை மாற்றகளும் முறையாக செயல்படுவதற்கு தண்ணீர் மிகவும் அத்தியாவசியம். மனிதனின் உடலானது 70 சதவிகிதம் தண்ணீரால் நிரம்பியுள்ளது. இவை எல்லாவற்றையும் பொது அறிவியல் புத்தகங்களில் இருந்து நாம் ஏற்கெனவே படித்து அறிந்திருக்கிறோம். குடிநீரின் பண்புகள் என்னவாக இருக்கின்றன? அந்த குடிநீர் என்னவாக இருக்க வேண்டும்? தாதுக்கள் கொண்ட குடிநீரை வாங்கிக் குடிக்கும் அளவுக்கு அதில் என்ன சிறப்புகள் உள்ளன.? எந்த மாதிரியான குடிநீர் பாதுகாப்பானது? என்பது போன்ற கேள்விகளுக்கான பதில்களை நாம் இப்போது பார்க்கலாம். எத்தனை வகையான தண்ணீர் உள்ளது? பிஎச் மதிப்பீடு 6.5 முதல் 7.5 வரை இருக்கும் எந்த ஒரு இயற்கையாக கிடைக்கும் தண்ணீரும் வழக்கமான தண்ணீர் என அழைக்கப்படுகிறது. பொதுவாக இந்த தண்ணீருக்கு எந்த ஒரு வண்ணமோ அல்லது சுவையோ இருக்காது. இதனை குடிப்பதற்காக பயன்படுத்த முடியும். சவ்வூடு பரவல் முறையைப் பயன்படுத்தி தண்ணீரில் இருக்கும் அசுத்தங்களை நீக்கி நீண்டகாலத்துக்கு கிடைக்கக் கூடிய குடிநீர். சில கூறுகள் மற்றும் தாதுக்கள் தண்ணீரில் சேர்க்கப்படும்போது அல்லது குறைக்கப்படும்போது அந்த தண்ணீர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீர், காய்ச்சி வடிகட்டிய குடிநீர், தாதுக்கள் கொண்ட தண்ணீர் என்று அழைக்கப்படுகிறது. அண்மையில் பிஎச் 8 முதல் 9 வரை உள்ள குடிநீர், கருப்பு தண்ணீர் என்ற பெயரில் சந்தைகளில் கிடைக்கின்றன என கரீம்நகர் சாதவாகனா பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறைத் தலைவர் பேராசிரியர் வொட்டிராஜு நம்ரதா பிபிசியிடம் தெரிவித்தார். "வழக்கமாக தண்ணீரானது மலைகள், ஆறுகள், குளங்கள், கிணறுகள், போல்வெல் ஆகியவற்றில் இருந்து கிடைக்கின்றன. இந்த தண்ணீர் குளோரின் அல்லது ஓசோனைஸ் செய்யப்பட்டு பாதுகாப்பான குடிநீராக மாற்றப்படுகிறது. இதன் பின்னர் பொதுமக்களுக்கு குழாய்கள், தண்ணீர் தொட்டிகள் மூலம் அரசாங்கங்களால் விநியோகிக்கப்படுகிறது. இந்த குடிநீர் தரமான குடிநீர் என்று அழைக்கப்படுகிறது. குழாய்கள் மூலம் சேகரிக்கப்படும் இந்த குடிநீர் பின்னர், வீடுகளில் சவ்வூடு பரவல் முறை மேற்கொள்ளும் இயந்திரங்கள் மூலம் சுத்திகரிக்கப்படுகின்றன. இதன் மூலம் தண்ணீரில் இருந்து அசுத்தங்கள் அகற்றப்படுகின்றன. இதன் மூலம் தரமான தண்ணீர் கிடைக்கிறது. இந்த தண்ணீர் ஆர்.ஓ குடிநீர் அல்லது சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று அழைக்கப்படுகிறது. இந்த தண்ணீர் பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி பாட்டில்கள், பிளாஸ்டிக் பாக்கெட்களில் அடைக்கப்பட்டு உபயோகிக்கப்படுகின்றன. இவை பேக்கேஜ்டு வாட்டர் என்று அழைக்கப்படுகின்றன. தவிர, தண்ணீரை சூடுபடுத்துவதன் மூலம் எதேனும் ஒரு வகையான உப்புகள், தாதுக்கள், கரிம உபபொருட்கள் ஆகியவை அகற்றப்படும்போது இந்த தண்ணீர் நீராவி வடிவில் பிடிக்கப்பட்டு சேமிக்கப்படுகிறது. இது காய்ச்சி வடிகட்டிய தண்ணீர் என்று அழைக்கப்படுகிறது. இந்த தண்ணீர் எந்த ஒரு கூறுகளையும் கொண்டிருப்பதில்லை. இந்த குடிநீரைக் குடிப்பதன் மூலம் உங்கள் தாகம் தணியும். ஆனால், உங்கள் உடலில் எந்த வித தாதுக்களும் சேராது. இதர கூறுகளுடன் இவை வினைபுரியாததால், இந்த தண்ணீரானது ஆய்வகங்கள், தொழிலகங்களில் உள்ள இயந்திரங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன என பேராசிரியர் நம்ரதா விவரிக்கிறார். தாதுக்கள் கொண்ட தண்ணீர் தண்ணீரில் தாதுக்கள் எதுவும் இல்லை எனில், அதனால் மனிதனின் உடலுக்கு எந்த ஒரு பலனும் இல்லை. தாதுக்கள் கொண்ட தண்ணீர் என்ற பெயரில் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரை நாம் குடிக்கிறோம். தாதுக்கள் கொண்ட தண்ணீர் என்பது புவியின் உள்ளே அல்லது புவிப் பரப்பின் மேலே கிடைப்பதாக மட்டுமே இருக்கிறது. இந்த தண்ணீர், சோடியம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாத்துக்களை கொண்டிருக்கின்றன. மனித உடலுக்குத் தேவைப்படுவதை விடவும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ அந்த தண்ணீரில் இந்த தாதுக்கள் இருக்கின்றன. இந்த தண்ணீரை குடிக்கும்போது உடல்நலக்கோளாறுகளை ஏற்படுத்தும். மழைநீர் சத்துகள் நிறைந்ததா? அதைச் சேமித்து குடிப்பது உடலுக்கு நல்லதா?4 நவம்பர் 2022 காலநிலை மாற்றத்துக்கு காரணமான பணக்கார நாடுகளை பணம் கொடுக்க வைக்கும் ஒப்பந்தம் கையெழுத்து20 நவம்பர் 2022 காலநிலை மாற்றத்தால் பெண்ணாக மாறும் ஆண் உயிரினங்கள் - ஆபத்தான அதிசயம்15 நவம்பர் 2022 எனவே, தாதுக்கள் கொண்ட தண்ணீரை நீங்கள் இந்திய தரநிலைகள் பணியகம்(Bureau of Indian Standards) வரையறுத்துள்ளபடி, உடலின் சமநிலையை உறுதி செய்யும் ஜீரனத்துக்கு போதுமான தாதுக்களை கொண்டிருப்பது அத்தியாவசியத் தேவையாகும். சில நிறுவனங்கள் கண்ணாடி பாட்டில்கள் அல்லது பிளாஸ்டிக் பாட்டில்களில் தாதுக்கள் கொண்ட குடிநீரை விற்பனை செய்கின்றன. பயணம் செல்லும்போது நம்மில் பலர் இந்த தண்ணீரை வாங்கிக் குடிக்கின்றோம். இந்த பாட்டில்களில் ஒட்டப்பட்டிருக்கும் லேபிளில் பட்டியலிடப்பட்டுள்ள தாதுக்கள், இந்திய தரநிலைகள் பணியகம் வரையறைக்குள் பொருந்திபோகிறதா என்பதைப் பார்க்க வேண்டும். ஆனால், அந்த தண்ணீரில் கரைந்திருக்கும் மொத்த திடப்பொருள்கள் 500 மில்லி கிராமுக்கு அதிகமாக இருக்கக்கூடாது என பேராசிரியர் நம்ரதா கூறுகிறார். TDS என்பது என்ன? தண்ணீரின் தரத்தை குறிப்பதற்கான இன்னொருமுறையாக TDS உள்ளது. தரமான தண்ணீர் என்பது, கரிம உப்பு, கால்சியம், பொட்டாஷியம், மேக்னீசியம், சோடியம், பைகார்பனேட், குளோரைட், சல்பைட்டுகள் மற்றும் குறைந்த அளவிலான கரிம பொருட்கள் ஆகியவை கொண்டதாக உள்ளது. இது ஒருபுறம் இருக்க, காட்மியம், ஈயம், நிக்கல் ஆகிய உலோகங்கள் மிக குறைந்த அளவில் கரைந்துள்ளன. தண்ணீரில் கரைந்துள்ள இந்த உப பொருட்களின் மொத்த தொகையானது மொத்த கரைந்த திடப்பொருள்கள் என அழைக்கப்படுகின்றன. இது லிட்டருக்கு 500 மில்லி கிராமுக்கு மேல் செல்லக்கூடாது. மேலும் இந்திய தரநிர்ணய துறை இதை 'லிட்டருக்கு 100 மில்லிகிராம் என்று குறைக்க வேண்டாம்' என்று முடிவு செய்துள்ளது. நாம் குடிக்கும் தண்ணீரில் TDS என்பது 100 மில்லிகிராமுக்கும் கீழே இருந்தால் அந்த தண்ணீர் போதுமான தேவைப்படும் தாத்துக்களை கொண்டிருக்கவில்லை என்பது பொருளாகும். தவிர, TDS அளவானது 500 மில்லிகிராமுக்கு அதிகமாக இருந்தால், அந்த தண்ணீர் கடின நீர் என்று அழைக்கப்படுகிறது. இவை இரண்டும் குடிப்பதற்கு உபயோகப்படாது. குடிநீரில் TDS என்பது 100 மற்றும் 500 மில்லிகிராமுக்கும் இடையில் இருந்தால் எந்தவித பிரச்னையையும் உருவாக்காது என்பதால் இந்த குடிநீரைக் குடிக்கலாம். நாம் குடிக்கும் தண்ணீரில் எந்த அளவுக்கு TDS இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள சந்தையில் கிடைக்கும் TDS மீட்டர்களை வாங்கி பயன்படுத்தித் தெரிந்து கொள்ளலாம். தண்ணீரின் தரம் எவ்வாறு அளவிடப்படுகிறது? தண்ணீரின் தரம் மற்றும் தண்ணீர் குடிப்பதற்கு உகந்ததுதானா என்பது குறித்து இந்திய தரநிலைகள் பணியகம்(பிஐஎஸ்) சில பரிசோதனைகளை செய்து தீர்மானிக்கும். இவை இந்திய தரநிலைகள் பணியகத்தின் குடிநீர் விவரக்குறிப்புகள்-10500 என்று அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் குடிநீரின் தரத்தை பரிசோதிக்கும் முறைகள் குறித்து பிபிசியிடம் பேசிய புத்தா ரவி பிரசாத், "சில பொருட்கள் , தனிமங்கள், தாதுக்கள் தண்ணீரில் இருக்கலாம் ஆனால் அவசியமில்லை," என்கிறார். தண்ணீரின் தரத்தை பரிசோதிக்கும் அரசின் அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் கடந்த 25 ஆண்டுகளாக மூத்த தண்ணீர் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். "தண்ணீரின் தரத்தை உறுதி செய்ய 60 பரிசோதனைகள் வரை இருக்கின்றன. ரசாயன பரிசோதனை, அதே போல நுண்ணுயிரியல் சோதனைகள் ஆகியவை உள்ளன. பிஎச், TDS, மொத்த காரத்தன்மை, கடினத்தன்மை, உலோகங்கள் போன்றவை ரசாயன சோதனைகள் மூலம் தீர்மானிக்கப்படுகின்றன... மொத்த கோலிஃபார்ம் மற்றும் இந்த கோலிஃபார்ம் போன்ற நுண்ணுயிரியல் சோதனைகள் தண்ணீரில் எச்சங்களாக உள்ள பாக்டீரியா, பூஞ்சை, பூச்சிக்கொல்லி ஆகியவற்றை பற்றி தெரிந்து கொள்ள மேற்கொள்ளப்படுகிறது. நீங்கள் முக்கிய சோதனைகளைப் பார்த்தால், pH 6.5 முதல் 7.5 வரை இருக்கலாம். மேலும் பை கார்பனைட்டுகள் லிட்டருக்கு 200மில்லிகிராம் , கால்சியம் லிட்டருக்கு 75மில்லிகிராம், மெக்னீசியம் லிட்டருக்கு 30மில்லிகிராம், நைட்ரேட் லிட்டருக்கு 45மில்லிகிராம், மொத்த ஆர்சனிக் லிட்டருக்கு 0.01மில்லிகிராம், காப்பர் லிட்டருக்கு 0.05மில்லிகிராம், குளோரைடுகள் லிட்டருக்கு 250மில்லிகிராம், சல்பேட்லிட்டருக்கு 200மில்லிகிராம், ஃபுளோரைட் லிட்டருக்கு 1 மில்லிகிராம், இரும்பு லிட்டருக்கு 0.3மில்லிகிராம், மெர்குரி லிட்டருக்கு 0.01மில்லிகிராம், ஜிங் லிட்டருக்கு 5மில்லிகிராம் என இருக்கலாம்,” என்கிறார் ரவி பிரசாத். சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறைக்கு இந்தியாவால் மாற முடியுமா?12 நவம்பர் 2022 காலநிலை மாற்றம் நமக்கு நன்மை பயக்கும் விஷயமா? - உண்மை என்ன?10 நவம்பர் 2022 இன்னொரு வெள்ளத்தை தாங்குவதற்கு தயாராக இருக்கிறதா சென்னை?1 நவம்பர் 2022 தண்ணீரின் தரத்தில் வித்தியாசம் இருந்தால் என்ன நேரும்? தண்ணீர் குடிப்பதற்கு உகந்ததா இல்லையா என்பதை தீர்மானிக்க பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. தண்ணீரின் தரம் நன்றாக இல்லாவிட்டால், என நேரும் என்பது குறித்து ஆந்திரா பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் துறையின் ஓய்வு பெற்ற பேராசிரியர் ரெட்டி பிபிசியிடம் தெரிவித்தார். "பிஐஎஸ் கூற்றின்படி, ஃபுளோரைடு 1க்கு அதிகமாக இருந்தால், பற்களில் புளோரோசிஸ் ஏற்படும். சோடியம் அதிக அளவு இருந்தால் ரத்த அழுத்தம் ஏற்படும். வயல்களில் பயிர்களுக்கு அளிக்கப்படும் உரங்கள் மூலம் நைட்ரேட் (நைட்ரேட்) குடிநீருடன் உடலுக்குள் சென்றால் நைட்ரைட்டாக (நைட்ரேட்) மாறுகிறது. இது ரத்தத்தில் ஆக்சிஜன் விநியோகத்தை குறைக்கிறது. அப்போது சுவாசக்கோளாறுகள், தலைச்சுற்றல் மற்றும் நீல கருவிழிகள் நேரிடும். இதற்கு 'ப்ளூ பேபி சிண்ட்ரோம்' என்று பெயராகும். அதிக அளவு ஆர்சனிக் சருமத்தில் வெள்ளை புள்ளிகளை ஏற்படுத்தும். குறைந்த கால்சியம் எலும்பு பிரச்னைகளை ஏற்படுத்தும். குறைந்த TDS கொண்ட தண்ணீர் குடிப்பது நரம்பு மண்டலத்தை பாதிக்கும். தண்ணீரின் சுவை நன்றாக இல்லையெனில், நிறம் மாறுபட்டால் தண்ணீரில் ஏதோ தவறாக உள்ளது என்பதைப்புரிந்து கொள்ள வேண்டும். இவை குடிப்பதற்கு உகந்த தண்ணீர் அல்ல. அரசு அல்லது அரசு அங்கீகரித்த ஆய்வகங்களில் உடனடியாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் விவரித்தார். எந்த நீரையாவது கொதிக்க வைத்தால் அது புதிய நீராக மாறுமா? சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், காய்ச்சி வடிகட்டிய தண்ணீர், தாதுக்கள் கொண்ட தண்ணீர் என பல வகையான தண்ணீர் உள்ளது. அது என்னவென்று தெரியாத போது ஒருவர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றால், எடுக்க வேண்டிய அடிப்படை முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஓய்வு பெற்ற பேராசிரியர் ரெட்டி விவரித்தார். “தரையில் மழைநீர் உயரமாக இருக்கும் போது காய்ச்சி வடிகட்டிய தண்ணீரைப் போல இருக்கும் , தரையை நெருங்கும்போது மாசுபாட்டைக் கொண்டு செல்கிறது. கார்பன் டை ஆக்சைடு, சல்பர் டை ஆக்சைடு போன்றவற்றால் காற்று மாசுபடுகிறது. இத்தகைய மாசுபாடு SPM (Suspended Particulate Matter) எனப்படும். தண்ணீர் மாசுபடுவதால் 250 வகையான நோய்கள் வர வாய்ப்புகள் உள்ளன. சவ்வூடு பரவல் முறையில் தண்ணீரை சுத்திகரிக்கும்போது, நுண்ணூட்ட சத்துகள் நீக்கப்படுகின்றன. மேலும் தண்ணீரைத் திரும்பத் திரும்ப வடிகட்டுவதும் நல்லதல்ல. குளிரூட்டப்பட்ட தண்ணீரில் கூட, பாக்டீரியாக்கள் விரைவாக குவிந்துவிடும். தண்ணீர் நல்ல தண்ணீர்தானா என்று தெரியாத போது அதைக் காய்ச்சி குடிக்க வேண்டும் என்பது ஒரு நல்ல நடைமுறையாகும். "மேலும், அல்ட்ரா வயலட் லைட் ஃபில்டர்களைப் பயன்படுத்தி, துணியை மடித்து வடிகட்டுவதன் மூலம் தண்ணீரை எளிதில் சுத்திகரிக்க முடியும்" என்று யுஇபி ரெட்டி கூறினார். சுறுசுறுப்பாக இருப்பவர்களுக்கு கறுப்பு தண்ணீர் பட மூலாதாரம்,EVOCUS பல்வேறு வகையான குடிநீர் பற்றி குறிப்பிட்டதையும் விட கூடுதலாக, அண்மைகாலமாக கறுப்பு தண்ணீர் அல்லது அல்கலைன் (காரமான தண்ணீர் என அழைக்கப்படுகிறது)தண்ணீர் மிகவும் பிரபலம் ஆகி வருகிறது. இந்த தண்ணீரை பெரும்பாலும் கிரிக்கெட் மற்றும் சினிமா பிரபலங்கள் பயன்படுத்துகின்றனர். நல்ல தரமான இந்த தண்ணீரில் பிஎச் 7 ஆக இருக்கிறது. இதனிடையே விசாகப்பட்டினத்தை சேர்ந்த டயட் நிபுணர் சுனிதா, கருப்பு தண்ணீரின் பிஎச் என்பது 8 மற்றும் 9க்கு இடையே இருக்கலாம் என்றார். நாம் என்ன உண்கின்றோம் என்பது விஷயமில்லை. நமது உடலில் அமிலம் உற்பத்தியாகிறது. அதனை சமநிலைப்படுத்த, அதிக அல்கலைன் அடர்த்தி கொண்ட கருப்பு தண்ணீர் அதனை சமநிலைப்படுத்தும். அப்போது அந்த மனிதர் சுறுசுறுப்பாக இருப்பார். ஆனால், உடலுக்கு வேலை கொடுக்கும் பணிகளை செய்யாதவர்கள் கருப்பு தண்ணீர் குடித்தால் உடல் நல குறைபாடுகள் ஏற்படும். உடல் சுறுசுறுப்பாக இல்லாத நிலையில் கறுப்பு தண்ணீர் குடிக்கும்போது உடலில் அல்கலைன் அறிகுறிகள் தோன்றும். இந்த கறுப்பு தண்ணீரில் சில தாது உப்புகள் சேர்ந்திருக்கின்றன. எனவே கறுப்பு தண்ணீரை அதிகமாகக் குடிப்பது உடல் நலத்துக்கு நல்லதல்ல," என்கிறார் சுனிதா. ஒவ்வோர் வீட்டுக்குமான குடிநீர் உடலுக்கு முக்கியமான ஆற்றலை அளிக்கக் கூடிய நீரின் வளங்களின் இருப்பு என்பது நாட்டில் குறைவாக இருக்கின்றன. இருக்கும் தண்ணீரும் பாதுகாப்பற்ற வகையில் உள்ளது. இதனால், மத்திய அரசானது குடும்பங்களுக்கு பாதுகாப்பான குடிநீர் அளிக்கும் வகையிலான சில திட்டங்கள், இயக்கங்களைக் கொண்டு வந்துள்ளது. ஜல் ஜீவன் இயக்கம் என்பது பிரதமர் நரேந்திர மோதியால் கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த இயக்கதின் வாயிலாக நாட்டின் கிராமங்களில் உள்ள ஒவ்வோர் குடும்பத்தினருக்கும் 2024ஆம் ஆண்டுக்குள் குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படும் என்றும் பிரதமர் கூறினார். கிராமங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் சுத்தமான குடிநீரை வழங்குவதற்காக தலா 50 சதவிகிதப் பங்களிப்புடன் மத்திய , மாநில அரசுகள் இந்த திட்டத்தை அ மல்படுத்தி வருகின்றன. 2021ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி அம்ரித் (நகர்பகுதி) 2.0 என்ற இயக்கத்தை மத்திய அரசு தொடங்கியது. 2021-22-2025-26ஆம் ஆண்டுகளுக்கு இடையே 5 ஆண்டு காலகட்டத்துக்குள் நாட்டில் உள்ள அனைத்து நகரங்களிலும் குடிநீர் வழங்கும்பணியை முழுமையாக நிறைவேற்றும் இலக்கை நோக்கமாக கொண்டிருக்கிறது. நீர் இருப்பு குறைந்து வரும் நேரத்தில், நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் நீர் ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் மறுசுழற்சி மூலம் நல்ல தண்ணீர் வழங்கப்படும் என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது். மறுபுறம், 2030 ஆம் ஆண்டில், நம் நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை 50 சதவீதம் வரை இருக்கும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி மதிப்பிட்டுள்ளது. https://www.bbc.com/tamil/articles/c88k1drpv1do
  14. IND vs BAN: முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய வங்கதேசம் பட மூலாதாரம்,MUNIR UZ ZAMAN/AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, விராட் கோலியின் விக்கெட் வீழ்ந்தபின் தமது அணியுடன் கொண்டாடும் ஷாகிப் அல் ஹசன் 4 டிசம்பர் 2022 வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியுள்ளது. 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 46 ஓவரில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி, ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேசம் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. டாக்காவில் உள்ள ஷேர்-ஈ-பங்களா தேசிய மைதானத்தில் உள்ளூர் நேரப்படி மதியம் 12 மணிக்கு இந்தப் போட்டி தொடங்கியது. உலகக் கோப்பைக்கு இந்திய அணியின் திட்டம் என்ன? - ரோகித் சர்மா பதில்3 டிசம்பர் 2022 கத்தாரில் ஆஸ்திரேலிய அணியை சிலிர்க்க வைத்த ‘மந்திரக்காரர்’ மெஸ்ஸி4 டிசம்பர் 2022 கத்தாரில் கால்பந்து உலகை மிரள வைத்த 3 நிமிடங்கள்2 டிசம்பர் 2022 பந்துவீச்சில் அசத்திய வங்கதேசம் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து முதலில் பேட் செய்த இந்திய அணி 41.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 186 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் நல்ல தொடக்கத்தைக் கொடுக்கவில்லை. ரோகித் சர்மா 31 பந்துகளில் 27 ரன்களும், தவான் 17 பந்துகளில் 7 எடுத்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலியும் 15 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஷாகிபின் பந்துவீச்சில் லிட்டன் தாசுக்கு கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்தவர்களில் விக்கெட்-கீப்பர் கே.எல். ராகுல் தவிர வேறு யாருமே சொல்லிக்கொள்ளும்படி விளையாடவில்லை. ராகுல் 70 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார். இந்திய பேட்ஸ்மேன்களில் இன்று இவரது ஸ்ட்ரைக் ரேட் மட்டுமே நூறைக் கடந்தது. தீபக் சாஹர் மற்றும் குல்தீப் சென் ஆகியோர் டக்-அவுட் ஆகினர். பட மூலாதாரம்,MUNIR UZ ZAMAN/AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, முஷ்ஃபிகர் ரஹீம் அவுட் ஆனதைக் கொண்டாடும் இந்திய பந்துவீச்சாளர் முகமது சிராஜ் மற்றும் விராட் கோலி. 12 வைடு உள்பட இந்தியாவுக்கு எக்ஸ்ட்ரா ரன்கள் மூலம் மட்டுமே 12 ரன்கள் கிடைத்தன. இல்லாவிட்டால் இந்தியாவின் ஸ்கோர் இன்னும் பரிதாபமாக இருந்திருக்கும். முதல் இன்னிங்சில் பந்துவீச்சைப் பொறுத்தவரை வங்கதேச அணி சார்பில் ஷாகிப் அல் ஹசன் ஐந்து விக்கெட்டுகளையும், இபாதத் ஹொசைன் நாக்கு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். மெஹுதி ஹசன் மிராஜ் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார். ஷாகிப் தாம் வீசிய 10 ஓவர்களில் 36 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இரண்டு ஓவர்களில் ஒரு ரன் கூட கொடுக்கவில்லை. எனினும், இந்தியாவுக்காக ஐந்து வைடு பால்களை வீசி எஸ்ட்ரா ரன்கள் கொடுத்தார். பட மூலாதாரம்,MUNIR UZ ZAMAN/AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, கே.எல். ராகுல் இன்று இந்தியாவுக்காக அதிகபட்ச ஸ்கோர் எடுத்தார் முதல் பந்திலேயே வங்கதேசத்துக்கு அதிர்ச்சி எளிதான இலக்குதான் என்றாலும் வங்கதேசம் இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கியபோது, முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் நஜ்முல் ஹொசைன் சாண்டோ, இந்தியாவின் தீபக் சாஹர் பந்துவீச்சில் ரோகித் சர்மாவுக்கு கேட்ச் கொடுத்து டக்-அவுட் ஆனார். வங்கதேச அணியின் இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் அந்த அணிக்காக அதிகபட்சமாக 63 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். அவர் ஆட்டமிழந்த பின்னர் ரன் எடுக்கவே திணறிய வங்கதேச பேட்ஸ்மேன்கள் 35வது ஓவருக்கு பின்னர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பேட்ஸ்மேன்களே ரன் எடுக்கத் திணறிய நிலையில், பேட்டிங் செய்ய வந்த பௌலர்கள் இபாதத் ஹொசைன் மற்றும் ஹசன் மஹ்மூத் ஆகியோர் டக்-அவுட் ஆகினர். எனினும், 24ஆம் ஓவரில் நான்காவது விக்கெட்டை இழந்த வங்கதேசம், 35வது ஓவரில்தான் அடுத்த விக்கெட்டை இழந்தது. 35வது ஓவரின் கடைசி பந்தில் இருந்து 40வது ஓவருக்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்த வங்கதேச அணி, ஆட்டம் முடியும் வரை தனது கடைசி விக்கெட்டை இழக்காமல் இருந்தது வெற்றிக்கு வழிவகுத்தது. இந்திய அணியின் முகமது சிராஜ் ஒரு மெய்டன் ஓவர் உள்பட 10 ஓவர்கள் வீசி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவரது எகானமி வெறும் 3.20 ஆகவே இருந்தது. குல்தீப் சென் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், தீபக் சாஹர் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்திய பந்துவீச்சாளர்கள் வங்கதேசத்துக்கு 17 எக்ஸ்ட்ரா ரன்களைக் கொடுத்து உதவினர். https://www.bbc.com/tamil/articles/c2x1km4n450o
  15. வெளியாகிறது 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' - வடிவேலு ரசிகர்களின் ஆவலை இந்த படம் தீர்க்குமா? பட மூலாதாரம்,NAAI SEKAR RETURNS - OFFICIAL TRAILER 2 மணி நேரங்களுக்கு முன்னர் நீண்ட நாட்களுக்குப் பிறகு வடிவேலுவின் நடிப்பில் உருவாகியிருக்கும் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமையன்று வெளியாகிறது. இந்தப் படம் அவரது ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றுமா?2017ஆம் ஆண்டில் விஜய்யுடன் இணைந்து வடிவேலு நடித்த மெர்சல் திரைப்படம் வெளியானது. இதற்குப் பிறகு ஐந்தாண்டுகளுக்கு அவர் நடித்து எந்தப் படமும் வெளியாகவில்லை. இம்சை அரசன் இருபத்து மூன்றாம் புலிகேசியின் அடுத்த பாகமான இம்சை அரசன் இருபத்து நான்காம் புலிகேசி படத்தை சங்கர் தயாரித்து வடிவேலு நடிப்பதாக இருந்தது. அந்தப் படத்திற்கான செட்கள் எல்லாம் அமைக்கப்பட்டுவிட்ட நிலையில், படத்தில் நடிக்க வடிவேலு மறுத்ததால், செட் அமைத்ததற்கான செலவைத் திருப்பித் தரும்படி சங்கர் கோரினார். அதை வடிவேலு ஏற்காததால், அவருக்கு 'ரெட் கார்ட்' விதிக்கப்பட்டது. பிரியங்கா சோப்ரா: 'நடிகர்களுக்கு இணையான சம்பளம் நடிகைகளுக்கு தரப்படுவது இல்லை'7 டிசம்பர் 2022 நாளைய தீர்ப்பு முதல் வாரிசு வரை: திரையுலகில் விஜய்யின் முப்பது ஆண்டுகள்6 டிசம்பர் 2022 வணங்கானை விட்டு சூர்யா விலகல்: என்ன பிரச்னை?5 டிசம்பர் 2022 முடிவுக்கு வந்த பஞ்சாயத்து சங்கரின் தயாரிப்பில் உருவாகவிருந்த திரைப்படம் முதல் காப்பி அடிப்படையில் லைகா நிறுவனத்திற்காகத்தான் தயாரிக்கப்பட இருந்தது. ஆகவே, அதற்குப் பதிலாக லைகாவுக்கு ஒரு படத்தை நடித்துக்கொடுக்க முன்வந்தார் வடிவேலு. இதன் மூலம் நான்கு ஆண்டுகளாக இருந்த வடிவேலு மீதான ரெட் கார்ட் விவகாரம் ஒரு முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் அவர் நடிப்பதாக செய்தி வெளியானபோது அவரது ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலைக்குப் போனார்கள். இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, தலைநகரம் படத்தில் வடிவேலு ஏற்று நடித்திருந்த நாய் சேகர் கதாபாத்திரம் பெரும் பிரபலமான ஒன்று என்பதோடு, நினைத்தாலே சிரிப்பு ஏற்படுத்தும் வகையில் அதில் நகைச்சுவைக் காட்சிகள் இருந்தன. இரண்டாவதாக, சுராஜுடன் வடிவேலு இணைந்த தலைநகரம், மருதமலை படங்களில் எல்லாம் அவரது காமெடி காட்சிகள் மிகச் சிறப்பாக அமைந்திருந்தன. கத்தி சண்டை படத்தில்கூட, முந்தைய அளவுக்கு இல்லாவிட்டாலும் நகைச்சுவை சிறப்பாகவே இருந்தது. ஆகவேதான், சுராஜும் வடிவேலுவும் இணையும் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. முதலில் இந்தப் படத்திற்கு நாய் சேகர் என்றுதான் பெயர் சூட்டப்பட்டிருந்தது. ஆனால், ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அதற்கு முன்பாகவே சதீஷை வைத்து நாய் சேகர் என்ற பெயரில் படத்தைத் துவங்கியிருந்தது. பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும், பெயரைத் தர ஏஜிஎஸ் விரும்பாத நிலையில், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என இந்தப் படத்திற்குப் பெயர் சூட்டப்பட்டது. இந்த படத்தில் வடிவேலுதான் கதாநாயகன். ஆனால், வடிவேலுவுடன் வழக்கமாக நடிக்கும் கூட்டணி இந்தப் படத்தில் இல்லை. முனீஸ்காந்த், ரெடின் கிங்க்ஸ்லி, 'லொல்லு சபா' மாறன், 'லொல்லு சபா' சேஷு, 'கலக்கப்போவது யாரு' ராமர், 'குக் வித் கோமாளி' சிவாங்கி ஆகியோர் நடித்திருக்கின்றனர். பட மூலாதாரம்,NAAI SEKAR RETURNS - OFFICIAL TRAILER லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.இந்தப் படம் நாளை வெளியாகிவிருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. ஆனால், டீசரில் இருந்த காட்சிகள், அவரது முந்தைய படங்களோடு ஒப்பிட்டால் பெரிதாக சிரிப்பை ஏற்படுத்தாத வகையிலேயே இருந்தன. இதற்கு முன்பும் கூட, இம்சை அரசன் இருபத்து மூன்றாம் புலிகேசி படத்தை விட்டுவிட்டால், வடிவேலு கதாநாயகனாக நடித்த இந்திர லோகத்தில் நா. அழகப்பன், தெனாலிராமன், எலி போன்ற திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பதோடு, ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு நகைச்சுவையும் இல்லை. மேலும், இந்திரலோகத்தில் நா. அழகப்பன், தெனாலிராமன் ஆகிய படங்களில் நிறைய அறிவுரை சொல்லும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. இந்த நிலையில், இந்தப் படத்தின் ட்ரெய்லர், டீசர் காட்சிகளும் ரசிகர்களிடம் கலவையான மனநிலையை ஏற்படுத்தியிருக்கின்றன. இதையெல்லாம் தாண்டி முந்தைய போக்கை முறியடித்து, மீண்டும் ஒரு கலகலப்பான வடிவேலு திரைக்குத் திரும்ப வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் விருப்பம். இது நிறைவேறியதா என்பது நாளை தெரிந்துவிடும். https://www.bbc.com/tamil/articles/cxerkz14jg1o
  16. 2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் 3 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை By DIGITAL DESK 2 07 DEC, 2022 | 04:04 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு வியாழக்கிழமை (டிச. 08) மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் 2023ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டத்தை கடந்த நவம்பர் மாதம் 14 ஆம் திகதி திங்கட்கிழமை பாராளுமன்றத்துக்கு முன்வைத்தார். அதன் பிரகாரம் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் கடந்த மாதம் 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரையிலான 7 நாட்கள் இடம்பெற்றன. செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது. இந்த வாக்கெடுப்பில் வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 121 பேரும் எதிராக 84 பேரும் வாக்களித்தனர். இதில் அரசுடன் இணைந்து எதிரணியில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எம்.பி.க்களான ஜீவன் தொண்டமான், ராமேஸ்வரன் ஆகியோரும் எதிரணியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த துமிந்த திசாநாயக்க, பிரியங்கர ஜயரத்ன, ஜோன் செவிரத்ன ஆகியோரும் வாக்களித்தனர். வரவு - செலவுத் திட்டத்திற்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் எதிர்க்கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி,தேசிய மக்கள் சக்தி (ஜே வி.பி.),கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி டலஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ச தலைமையிலான அணியினர் வாக்களித்தனர். அதேபோன்று எதிரணியில் உள்ள ஏ.எல்.எம்.அதாவுல்லா, அலி சப்ரி ரஹீம் ஆகியோரும் ஆதரவாக வாக்களித்தனர். அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிப்பில் கலந்துகொண்டிருக்கவி்ல்லை. என்றாலும் தமிழ் தேசிய மக்கள் கூட்டணி தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் சபையில் இருந்த போதும் வாக்களிப்பதில் தவிர்ந்துகொண்டார். இந்நிலையில் 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தில் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதம் கடந்த 23 ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகிய நிலையில் நாளை வியாழகிழைமை (டிச. 08) மாலை 5மணியுடன் நிறைவடைந்ததுடன் வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான (இறுதி) வாக்கெடுப்பு இடம்பெற இருக்கின்றது. https://www.virakesari.lk/article/142440
  17. பெண்களிடையே அதிகரித்து வரும் கோபம், மன அழுத்தம், கவலை – என்ன காரணம்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாதிரி படம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் கேல்லப்பின் வருடாந்திர கருத்துக்கணிப்பு, கடந்த 10 ஆண்டுகளில் உலகளவில் பெண்களிடையே கோபம் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கிறது. இதற்குக் காரணம் என்னவாக இருக்கும்? இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், தஹ்ஷா ரெனி தனது சமையலறையில் நின்று கொண்டிருந்தபோது, அவருடைய நுரையீரலின் ஆழத்திலிருந்து ஓர் ஆழமான, இருண்ட, வெற்று அலறல் வெளிப்பட்டது. அது அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. “கோபம், நான் எளிதில் அடையக்கூடிய உணர்ச்சியாக இருந்து வருகிறது,” என்று அவர் கூறுகிறார். ஆனால், இப்படி அவர் முன்பு உணராததைப் போல் இருந்தது. அப்போது பேரிடர்க்காலம். பொறுத்தது போதும் என்பதைப் போல் உணர்ந்தார். அதற்கு முந்தைய 20 நிமிடங்களில் அவருக்குக் கோபத்தை ஏற்படுத்திய அனைத்து விஷயங்களையும் உரக்கப் பட்டியலிட்டப்படி வீட்டைச் சுற்றி நடந்தார். ஆனால், வாய்விட்டு அலறிய பிறகு அவர் ஒருவித விடுதலையை உணர்ந்தார். ஹிப்னோதெரபிஸ்ட்டும் வாழ்வியல் பயிற்சியாளருமான தஹ்ஷா, உலகெங்கிலும் உள்ள பெண்களை ஜூம் செயலி மூலம் கூட்டினார். அவர்களுக்கு ஆத்திரத்தைத் தரும் அனைத்தையும் பேசவும், அதைப் பற்றிக் கத்தவும் செய்கிறார். கேல்லப் வேர்ல்ட் கருத்துக் கணிப்பின் 10 ஆண்டுக்கால தரவுகளில் பிபிசி பகுப்பாய்வின்படி, பெண்கள் அதிகம் கோபமடைந்து வருகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் கருத்துக்கணிப்பு 150க்கும் மேற்பட்ட நாடுகளில் 120,000க்கும் அதிகமான மக்களிடம் நடத்தப்படுகிறது. அதில் அவர்களிடம் கேட்கப்பட்ட பல கேள்விகளில் ஒன்று, “கருத்துகணிப்பு நடத்தப்படும் நாளுக்கு முந்தைய நாளில் எந்த உணர்ச்சியை குறிப்பாக, கோபம், சோகம், மன அழுத்தம், கவலை போன்ற எதிர்மறை உணர்வுகளில், அதிகமாக உணர்ந்தீர்கள்?” இதில் ஆண்களைவிட பெண்கள் இதை அடிக்கடி உணர்கிறார்கள். குடிநீரில் இத்தனை வகையா? சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆபத்தானதா?5 மணி நேரங்களுக்கு முன்னர் வழுக்கை தலை குறித்து நீங்கள் நம்பும் 3 கட்டுக்கதைகள்6 டிசம்பர் 2022 நடப்பதில் குறைபாடு உடையவர்களுக்காக சிறப்பு உடை6 டிசம்பர் 2022 பிபிசியின் பகுப்பாய்வு மூலம், 2012 முதல் இரு பாலர்களும் சீராக சோகம், கவலை போன்ற உணர்ச்சிகளை உணர்வது சீராக அதிகரித்திருந்தாலும், ஆண்களைவிட அதிகமான பெண்கள் சோகத்தையும் கவலையையும் உணர்கிறார்கள். கோபம், மன அழுத்தம் என்று வரும்போது, ஆண்களுடனான இடைவெளி அதிகரித்து வருகிறது. 2012ஆம் ஆண்டில் இருபாலர்களும் ஒரே அளவில் கோபத்தையும் மன அழுத்தத்தையும் வெளிப்படுத்தினர். ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, பெண்கள் ஆறு சதவீத வித்தியாசத்தில், ஆண்களை விடக் கோபமாக இருக்கிறார்கள், அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். அதிலும் தொற்றுநோய்ப் பேரிடர் காலத்தில் இதில் குறிப்பிடத்தக்க வேறுபாடு இருந்தது. இது அமெரிக்காவில் தெரபிஸ்டாக இருக்கும் சாரா ஹார்மனை ஆச்சர்யப்படுத்தவில்லை. 2021ஆம் ஆண்டின் முற்பகுதியில் அவர் தன்னிடம் ஆலோசனைக்கு வரும் பெண்கள் அடங்கிய ஒரு குழுவை வெளியே ஓரிடத்தில் நின்று, வாய்விட்டு சத்தம் போட வைத்தார். “நான் வீட்டிலிருந்தபடி வேலை செய்து கொண்டிருந்தேன். இரண்டு இளம் குழந்தைகளுக்குத் தாய். இந்தத் தீவிரமான விரக்தி தான் முழுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தியது,” என்று அவர் கூறுகிறார். ஓராண்டு கழித்து மீண்டும் முன்பைப் போலவே மீண்டும் களமிறங்கினார். “அதுதான் வைரலானது,” என்று அவர் கூறுகிறார். இது அவருடைய ஆன்லைன் அம்மாக்கள் குழுவிலுள்ள ஒரு செய்தியாளரால் எடுக்கப்பட்டது. திடீரென உலகம் முழுவதுமிருந்து செய்தியாளர்கள் அழைத்தனர். தொற்றுநோய்ப் பேரிடரின் சுமை அவர்கள் மீது விழுவதாக ஏற்பட்ட தீவிர விரக்தியைப் போன்ற அனைத்து பகுதிகளிலும் உள்ள பெண்கள் உணரக்கூடிய ஒரு விஷயத்திலேயே தான் கை வைத்துள்ளதாக சாரா நம்புகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES 2020ஆம் ஆண்டு, நிதி ஆய்வுகளுக்கான நிறுவனம், இங்கிலாந்தில் உள்ள எதிர்பாலின உறவுகளிலுள்ள கிட்டத்தட்ட 5,000 பெற்றோர்களிடம் நடத்திய ஆய்வில், தாய்மார்கள் ஊரடங்கு காலத்தில் தந்தையைவிட அதிகமான வீட்டுப் பொறுப்புகளை மேற்கொள்வதைக் கண்டறிந்தனர். இதனால், அவர்கள் தங்கள் பணி நேரத்தைக் குறைத்துக் கொண்டனர். குடும்பத்தில் அதிக வருமானம் ஈட்டுபவர்களாக இருந்தபோதும் இப்படித்தான் இருந்தது. சில நாடுகளில், கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நாளுக்கு முந்தைய நாளில் கோபத்தை உணர்ந்ததாகக் கூறும் பெண்கள் மற்றும் ஆண்களின் எண்ணிக்கையில் உள்ள வேறுபாடு உலக சாராசரியைவிட அதிகமாக உள்ளது. பெண்கள் முன்னேற்றம் காண்கின்றனரா? பிபிசி 100 பெண்களின் 10வது ஆண்டை ஒட்டி, 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையோடு இப்போதைய நிலையை ஒப்பிட்டுச் சொல்லுமாறு 15 நாடுகளைச் சேர்ந்த பெண்களிடம் கேட்கச் சொல்லி சவந்தா காம்ரெஸ்ஸிடம் பிபிசி கூறியது. ஒவ்வொரு நாட்டிலும் கணக்கெடுப்பட்ட பெண்களில் குறைந்தது பாதி பேர், தங்கள் சொந்த நிதிசார்ந்த முடிவுகளை 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட இப்போது எடுக்க முடிவதாகக் கூறுகிறார்கள். அமெரிக்கா, பாகிஸ்தான் தவிர ஒவ்வொரு நாட்டிலும் குறைந்தது பாதிப் பேர் தனது துணையுடன் தனது சம்மதம் குறித்து விவாதிப்பது பெண்களுக்கு எளிதாக இருப்பதாகக் கருதுகிறார்கள். பெரும்பாலான நாடுகளில், கணக்கெடுப்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள், சமூக ஊடகங்கள் தங்கள் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கூறினர். அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் இந்த அளவு 50 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது. 12 நாடுகளில் 40% அல்லது அதற்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தும் சுதந்திரம் குறித்த விஷயத்தில் தான் கடந்த 10 ஆண்டுகளில் தங்கள் வாழ்க்கை மிகவும் முன்னேறியுள்ளது எனக் கூறுகிறார்கள். அமெரிக்காவில் கணக்கெடுப்பட்டவர்களில் 46% பேர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட மருத்துவரீதியாகப் பாதுகாப்பான கருக்கலைப்பை அணுகுவது பெண்களுக்குக் கடினமாக இருப்பதாகக் கருதுகின்றனர். மனநல மருத்துவர் லக்ஷ்மி விஜயகுமார், இந்த நாடுகளில் அதிகமான பெண்கள் கல்வியறிவு பெற்றவர்களாகவும் வேலையிலும் பொருளாதார ரீதியாகவும் சுதந்திரமாகிவிட்டதால் ஏற்பட்ட பதற்றங்களின் விளைவு இது என்று நம்புகிறார். “அதேநேரத்தில் அவை பழைமையான, ஆணாதிக்க அமைப்புகள், கலாசாரத்தால் இணைக்கப்பட்டன. வீட்டில் ஓர் ஆணாதிக்க அமைப்புக்கும் வீட்டிற்கு வெளியே ஒரு விடுதலை பெற்ற பெண்ணுக்கும் இடையிலுள்ள முரண்பாடு மிகுந்த கோபத்தை ஏற்படுத்துகிறது,” என்று அவர் கூறுகிறார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையும் சென்னையில் அவர் இதைக் காண்கிறார். “ஆண்கள் சாவகாசமாகச் சென்று ஓய்வெடுப்பதையும் தேநீர் கடைகளுக்குச் செல்வதையும் புகை பிடிப்பதையும் பார்ப்பீர்கள். ஆனால், மறுபுறம் பெண்கள் பேருந்து அல்லது ரயில் நிலையத்திற்கு விரைந்து செல்வதைக் காண்பீர்கள். வீடு திரும்பியவுடன் என்ன சமைக்கலாம் என்று அவர்கள் சிந்திக்கிறார்கள்.” கடந்த காலத்தில், பெண்கள் கோபமாக இருப்பதாகச் சொல்வது பொருத்தமானதாகக் கருதப்படவில்லை. ஆனால் அது மாறி வருவதாகக் அவர் கூறுகிறார். மேலும், “இப்போது அவர்களுடைய உணர்ச்சிகளைக் கொஞ்சம் அதிகமாக வெளிப்படுத்த முடிகீறது. அதனால் கோபமும் அதிகமாக உள்ளது,” என்கிறார் அவர். பெண்களின் வேலையில் பெருந்தொற்று பேரிடரின் தாக்கமும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். ஐநா பெண்கள் பாதுகாப்பு அமைப்பின் தரவு ஆய்வாளர் ஜினெட் அஸ்கோனாவின் கூற்றுப்படி, 2020க்கு முன்பு பெண்கள் பொதுவெளி வேலைத்திறனில் பங்கெடுக்கும் முன்னேற்றம் மெதுவாக நடந்தது. ஆனால், 2020ஆம் ஆண்டில் அது நின்று போனது. இந்த ஆண்டு 169 நாடுகளில் பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டு இருந்த எண்ணிக்கைக்குக் கீழே இருக்குமென்று கணிக்கப்பட்டுள்ளது. “நம்மிடம் பாலினத்தை பிளவுபடுத்தும் வகையிலான தொழிலாளர் சந்தை உள்ளது,” என்று அமெரிக்காவை சேர்ந்த பெண்ணிய எழுத்தாளர் சோரயா செமலி கூறுகிறார். அவர் கோபத்தைப் பற்றி 2019ஆம் ஆண்டில் ரேஜ் பிகம்ஸ் ஹெர் என்ற நூலை எழுதியுள்ளார். பராமரிப்பு போன்ற பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் தொழில்களில் தொற்றுநோய்ப் பேரிடரால் வீழ்ச்சி ஏற்படுவதாகக் கருதுகிறார். “இது மிகக் குறைந்த ஊதியம் தரப்படும் வேலை. இந்த மக்களிடையே அடக்கி வைக்கப்பட்ட, திசைதிருப்பப்பட்ட அதிகளவு கோபத்தைக் கொண்டுள்ளனர். மேலும் எந்தவிதமான சட்டபூர்வ எல்லைகளுமின்றி அயராது உழைக்க வேண்டுமென்று எதிர்பார்க்கப்படுவதோடு இது அதிகத் தொடர்பு கொண்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES இதேபோன்ற இயக்கவியல் பெரும்பாலும் எதிர்பாலின திருமண உறவுகளில் காணப்படுவதாக அவர் கூறுகிறார். அமெரிக்காவில், பெண்கள் மீதான தொற்றுநோய்ப் பேரிடரின் சுமை குறித்து அதிகம் எழுதப்பட்டுள்ளது. ஆனால், கேல்லப் வேர்ல்டின் கருத்துக் கணிப்பு முடிவுகள் அங்குள்ள பெண்கள் ஆண்களைவிடக் கோபமாக இருப்பது குறிப்பிடப்படுவதில்லை. “அமெரிக்காவிலுள்ள பெண்கள் கோபத்தை மிகவும் அவமானமாக உணர்கிறார்கள்,” என்று சோரயா செமலி கூறுகிறார். மேலும், அவர்களுடைய கோபத்தை மன அழுத்தம் அல்லது கவலை எனப் பதிவு செய்ய அதிக வாய்ப்புள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், அமெரிக்க பெண்கள் ஆண்களைவிட அதிகளவு மன அழுத்தம், கவலை எனப் பதிவு செய்துள்ளனர். மற்ற இடங்களிலும் அதுதான் உண்மை. ஆண்களைவிட அதிகமான பெண்கள் பிரேசில், உருகுவே, பெரு, சிப்ரஸ், கிரேக்கம் ஆகிய நாடுகளில் மன அழுத்தத்திற்கு ஆளாவதாகக் கூறினர். பிரேசிலில் 10 ஆண்களில் நான்கு பேர் நாளின் பெரும்பகுதியில் மன அழுத்தத்தை உணர்ந்ததாகத் தெரிவித்தனர். அவர்களோடு ஒப்பிடுகையில் 10 பேரில் 6 பேர் அதைத் தெரிவித்தனர். பொலிவியா, பெரு, எக்வடோர் ஆகிய நாடுகளும் பாலினங்களுக்கு இடையே பெரிய வேறுபாட்டைக் கொண்டுள்ளன. பொலிவியா, எக்வடோரில் ஏறக்குறைய பாதி பெண்கள் முந்தைய நாளின் பெரும்பகுதியில் வருத்தத்தோடு இருந்ததாகக் கூறியுள்ளன. இது ஆண்களைவிட 15 சதவீதம் அதிகம். ஆண்களைவிட பெண்கள் எதிர்மறை உணர்ச்சிகளை அதிகமாக உணரும் போக்கு இந்த நாடுகளில் 2012 வரை செல்கிறது. மேலும் பல நாடுகளில் இது மோசமாகி வருகிறது. ஆனால், அமெரிக்காவிலும் பிற இடங்களிலும் உள்ள பல பெண்கள் “இனி பொறுக்க முடியாது” என்ற நிலைக்கு இப்போது வந்துள்ளனர் என்று தஹ்ஷா ரெனி கருதுகிறார். “ஒருவிதத்தில் அது மாற்றத்தை எளிதாக்குகிறது. அவர்கள் அதற்குத் தங்கள் கோபத்தைப் பயன்படுத்துகிறார்,” எனக் கூறுகிறார். “உங்களுக்கு ஆத்திரமும் கோபமும் தேவை. சில நேரங்களில் நிலையைச் சமாளிக்க, மக்கள் நீங்கள் சொல்வதைக் கவனிக்க வைக்க, இவை உங்களுக்குத் தேவை” என்று ஐ.நா பெண்கள் பாதுகாப்பு அமைப்பில் ஜினெட் அஸ்கோனா ஒப்புக் கொள்கிறார். தரவு செய்திப்பிரிவு: லியானா பிராவோ, கிறிஸ்டின் ஜீவன்ஸ், ஹெலினா ரோசிக்கா வலேரியா பெராசோ, ஜார்ஜினா பியர்ஸ் ஆகியோர் இதில் கூடுதல் செய்தியளித்துள்ளனர். கணக்கெடுப்பு முறைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES கேல்லப் ஆண்டுதோறும் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் 120,000 பேரிடையே ஆய்வு செய்கிறது. இது உலகின் வயது வந்தோரில் 98 சதவீதத்திற்கும் அதிகமான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய பிரதிநிதித்துவ மாதிரிகளைப் பயன்படுத்துகிறது. நேர்காணல்கள் நேருக்கு நேர் அல்லது தொலைபேசி மூலம் மேற்கொள்ளப்படுகின்றனர். இதில் கிடைக்கும் கண்டுபிடிப்புகளிலுள்ள பிசிறுகள், நாடு மற்றும் கேள்விக்கு ஏற்ப மாறுபடும். மாதிரி அளவுகள் சிறியதாக இருக்கும்போது, சான்றாக, பதில்களின் தொகுப்பைப் பாலினரீதியாகப் பிரிக்கும்போது, பிசிறு அதிகமாக இருக்கும். 2021 கேல்லப் கருத்துக்கணிப்பிற்கான முழு தரவு அட்டவணைகளை இங்கே பதிவிறக்கம் செய்யலாம். சவந்தா காம்ரெஸ், எகிப்து (1,067), கென்யா (1,022), நைஜீரியா(1,018), மெக்சிகோ (1,109), அமெரிக்கா (1,042), பிரேசில் (1,008), சீனா (1,025), இந்தியா (1,107) இந்தோனீசியா (1,061), பாகிஸ்தான் (1,006), சவுதி அரேபியா (1,012), ரஷ்யா (1,010), துருக்கி (1,160), பிரிட்டன் (1,067), யுக்ரேன் (1,009) ஆகிய நாடுகளில் 17 அக்டோபர் முதல் 16 நவம்பர் வரை 18 வயதுக்கு மேற்பட்ட 15,723 பெண்களை இணையவழியில் ஆய்வு செய்தது. வயது மற்றும் பிராந்தியத்தின் அடிப்படையில் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பெண்களை முன்னிறுத்தும் வகையில் தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. ஒவ்வொரு நாட்டின் முடிவுகளுக்குமான பிழை விளிம்பு, +/- 3. முழு தரவு அட்டவணைகளையும் இங்கே காணலாம். https://www.bbc.com/tamil/articles/c3gx4e4yx42o கணவர்கள் அவதானம்🤭
  18. முகப்புப் பகுதி இன்னும் வழமைக்கு திரும்பவில்லை போலுள்ளது. முகப்பை வடிவமைக்கும் போது பெட்டி(சதுரம்/செவ்வக வடிவம்) போல சதுரமாக வரும் பகுதிகளை நான்கு மூலைகளையும் சற்று வளைவாக அமைத்தால் அழகாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.
  19. வரி சலுகையின் பயனை நாட்டு மக்கள் பெறவில்லை : இறக்குமதியாளர்கள் மாத்திரம் திருப்தி - ரோஹினி கவிரத்ன By DIGITAL DESK 2 07 DEC, 2022 | 03:44 PM (இராஜதுரை ஹஷான்) குறுகிய காலத்தில் அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்ள நடுத்தர மக்களை நெருக்கடிக்குள்ளாக்காமல், தவறான தீர்மானங்களினால் இழக்கப்பட்ட வரி வருமானத்தை மீள பெற்றுக்கொள்ள அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும். 25 சதமாக காணப்படும் சீனிக்கான விசேட வரியை நீக்கி, வரி தொகை 50 ரூபாவாக அதிகரிக்க வேண்டும். வரி சலுகையின்பயனை நாட்டு மக்கள்பெறவில்லை, ஒருசில இறக்குமதியாளர்கள்மாத்திரம் திருப்தியடைந்துள்ளார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்தார். கொழும்பில் புதன்கிழைம (டிச.07) இடம்பெற்ற 'சர்வஜன நீதி'ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் தவறான பொருளாதார முகாமைத்துத்தினால் நாட்டு மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். பல்வேறு வழிமுறைகளில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கம் அரசாங்கத்திடம் கிடையாது. பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மென்மேலும்நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம்சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களை இலக்காக கொண்ட நேரடி வரி விதிப்பை தவிர்த்து அரச வருமானத்தை அதிகரித்துக்கொள்ள அரசாங்கத்திடம் எவ்வித திட்டமும் கிடையாது. 2023 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் ஊடாக 3415 பில்லியன் ரூபா அரச வருமானத்தை திரட்டிக் கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் அரச செலவினம் 5819 பில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது. அரச வருமானத்திற்கும், அரச செலவிற்கும் இடையிலான பற்றாக்குறை 2404 பில்லியன் ரூபாவாக காணப்படுகிறது. வருடாந்த அரசமுறை கடன்செலுத்தலுக்கு 2025 பில்லியன்ரூபா ஒதுக்கப்பட்டுள்ள நிலையில்அரச கடனையும்,வரவு -செலவுத் திட்ட பற்றாக்குறையையும் நிவர்த்தி செய்ய 4979 பில்லியன் ரூபா தேவைப்படும்.இந்த நிதியை திரட்டிக் கொள்ள அரசாங்கத்திடம் நடைமுறைக்கு சாத்தியமான எந்த திட்டமும் கிடையாது. பொதுஜன பெரமுன அரசாங்கம் 2019ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன் தமது சகாக்களை திருப்திப்படுத்துவதற்காக ஒருகிலோகிராம் இறக்குமதி சீனிக்கு 50 ரூபாவாக காணப்பட்ட வரியை 25 சதமாக குறைத்தது. இந்த வரி குறைப்பினால்ஒருகிலோகிராம் சீனி இறக்குமதியின்போது 49.75ரூபாவை அரசாங்கம்இழக்க நேரிட்டது. சீனி வரிகுறைப்பினால்அரசாங்கம்முதல்மூன்று மாதகாலப்பகுதியில் மாத்திரம் 16 பில்லியன்ரூபா வரி வருமானத்தை இழந்துள்ளது. 2020 ஆம்ஆண்டு ஒருகிலோகிராம் சீனி 110 ரூபாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு 125 ரூபாவிற்கும், 2021ஆம்ஆண்டு ஒரு கிலோகிராம் சீனி 103 ரூபாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு 128 ரூபாவிற்கும், 2022 ஆம் ஆண்டு 175 ரூபாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு 241 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சீனி வரி குறைப்பின் பயனை நாட்டு மக்களும் அரசாங்கமு பெற்றுக்கொள்ளவில்லை ஒருசில இறக்குமதி விநியோகஸ்தர்கள் மாத்திரம் இந்த நிவாரண சலுகையை முழுமையாக பெற்றுக்கொண்டுள்ளார்கள். 2020 ஆம்ஆண்டு செப்டெம்பர் மாதம்முதல்2022 ஆம்ஆண்டு வரையான காலப்பகுதியில் மாத்திரம் அரசாங்கம் 49 பில்லியன் ரூபா வரி வருமானத்தை இழந்துள்ளது. நாட்டில் நிதி நிலைமை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு தரப்பினரின் நலனுக்காக மாத்திரம் வரி விலக்கு வழங்குவது எந்த விதத்தில் நியாயமாகும். சீனி வரிகுறைப்பினால் இழக்கப்பட்டுள்ள வரி வருமானத்தை மீள பெற்றுக்கொள்ள அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். தற்போது 25 சதமாக காணப்படும்வரி வீதத்தை 50 ரூபாவாக அதிகரிக்க வேண்டும். 2023 ஆம் ஆண்டுக்காதன வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு 410 பில்லியன்ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. படையினரது உணவு மற்றும் சீறுடைக்காக 53பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் இராணுவத்தினருக்கு தரமான மற்றும் போசனையான உணவு வழங்கப்படுகிறதா என்பது குறித்து ஆராய வேண்டும். இராணுவத்தினரது உணவு வேளையில் சோறு,அன்னாசி பழத்துண்டு, முட்டை மற்றும் உருளை கிழங்கு மாத்திரமே உள்ளடக்கப்பட்டுள்ளது. சீனி வரிக்குறைப்பின் ஊடாக ஒரு சில இறக்குமதியாளர்கள் நன்மையடைந்ததை போன்று, இராணுவத்தினருக்கு தரமற்ற உணவை வழங்கி பிறிதொரு தரப்பினர் நன்மையடைகிறார்களா என்ற சந்தேகம் காணப்படுகிறது என்றார். https://www.virakesari.lk/article/142439
  20. அண்ணை அவை இரண்டு பேரும் முதல்வர்கள், நான் தான் துணை முதல்வர்!(எப்பிடியாவது ஒரு வாழ்த்தை கேட்டு வாங்குவம்)🤭😂
  21. போர்சுகலுக்கு 'தேவையில்லாமல் போன' ரொனால்டோ கட்டுரை தகவல் எழுதியவர்,எம். மணிகண்டன் பதவி,பிபிசி தமிழ் 7 டிசம்பர் 2022, 03:34 GMT பட மூலாதாரம்,GETTY IMAGES போர்சுகலின் நட்சத்திர வீரரான ரொனால்டோ தனது கால்பந்து வாழ்வில் பார்த்திராத கடுமையான நெருக்கடியைச் சந்தித்திருக்கிறார். உலகக் கோப்பை போட்டியில் முதல் முறையாக அவர் பெஞ்சில் அமர வைக்கப்பட்டது கால்பந்து உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுவிட்சர்லாந்துடனான நாக் அவுட் போட்டியில் முதல் 11 வீரர்களில் அவர் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக வெறும் 33 நிமிடங்கள் மட்டுமே சர்வதேசப் போட்டிகளில் ஆடிய அனுபவம் கொண்ட கோன்கலோ ராமோஸை களமிறக்கினார் போர்சுகல் அணியின் மேலாளர் ஃபெர்னாண்டோ சான்டோஸ். ரொனால்டோ இல்லாத நிலையில் போர்சுகல் அணி உலகக் கோப்பை போட்டிகளில் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றிருப்பதால் அது அவருக்கு மேலும் கூடுதலான நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. சுவிட்சர்லாந்துக்கு எதிரான போட்டியில் போர்ச்சுகல் அணி 6 கோல்களை அடித்தது. அதில் மூன்று கோல்களை ரொனால்டோவுக்குப் பதிலாகக் களமிறங்கிய ராமோஸ் அடித்ததுதான் யாரும் எதிர்பார்க்காத ஒன்று. பட மூலாதாரம்,GETTY IMAGES ரொனால்டோவுக்கு ஏற்பட்ட நெருக்கடி ரொனால்டோவின் ஆட்டம் என்பதற்காகவே இந்தப் போட்டியைப் பார்க்க வந்தவர்களும், தொலைக்காட்சிகளில் பார்த்துக் கொண்டிருந்தவர்களும் இந்த முடிவால் ஏமாற்றம் அடைந்திருப்பார்கள். உலகக் கோப்பை நாக் அவுட் போட்டியில் இப்படியொரு அக்கினிப் பரீட்சையை இதற்கு முன் எந்த மேலாளரும் செய்திருக்க மாட்டார். பெஞ்சில் அமர்ந்து ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ரொனால்டோ தனது அதிருப்தியை முகத்தில் வெளிப்படுத்தியைப் பார்க்க முடிந்தது. போட்டி முடிந்து தனது அணி 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற போதும் அவர் பெரிதாகக் கொண்டாட்டத்தில் ஈடுபடவில்லை. ஜெர்மனியை உலகக் கோப்பையில் இருந்து வெளியேற்றிய ‘பந்தின் வளைவு’2 டிசம்பர் 2022 20 அடி உயரத்தில் கேமரூன் வீரர் அடித்த நம்ப முடியாத கோல்29 நவம்பர் 2022 12 ஆண்டுகள் காத்திருந்து ‘வில்லன்’ சுவாரெஸை பழிவாங்கியதா கானா?3 டிசம்பர் 2022 முன்னதாக தென்கொரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டு பெரும் தவறுகளைச் செய்திருந்தார் ரொனால்டோ. அதில் ஒன்று தென் கொரியா அணி கோல் அடிப்பதற்கான வாய்ப்பை வழங்கியது. மற்றொன்று கோல் அடிப்பதற்கான வாய்ப்பை தாமே தவற விட்டது. அப்போது ரொனால்டோவுக்கு பதிலாக மாற்று வீரரை சான்டோஸ் களமிறக்கியபோதே, ரொனால்டோ தனது உடல்மொழி மூலமாக அதிருப்தியை வெளியிட்டார். இந்த முறை தொடக்கத்திலே அவர் களத்துக்குள் இறக்கப்படவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES அவர் பெஞ்சில் அமர்ந்து போட்டியை பார்த்துக் கொண்டிருந்தபோதும் அவர்தான் தொலைக்காட்சி கேமராக்களுக்கு நட்சத்திரமாக இருந்தார். அவரது முக பாவனைகளை அவ்வப்போது திரையில் காட்டப்பட்டன. 5 கோல்கள் அடித்து போர்சுகல் அணி வலுவான முன்னிலையில் இருந்த போதுதான் கடைசி நேரத்தில்தான் ரொனால்டோ களமிறக்கப்பட்டார். அதிலும் அவரால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. ஒரு முறை வலைக்குள் பந்தைத் தள்ளியபோதும் அது ஆப்சைட் என அறிவிக்கப்பட்டது. போட்டி முடிந்ததும் அரங்கில் இருந்த கூட்டத்தைப் பார்த்து கைதட்டிவிட்டு முதல் ஆளாக வெளியேறினார். போர்சுகல் வீரர்கள் தங்கள் அணி காலிறுதிக்குள் நுழைந்ததை கொண்டாடிக் கொண்டிருந்தபோதுகூட அவர் சேர்ந்து கொள்ளவில்லை. சில காலமாகவே மேலாளர் சான்டோஸுக்கும் ரொனால்டோவுக்கும் இடையே உரசல் இருப்பதாகப் பேசப்பட்ட நிலையில், சுவிட்சர்லாந்துக்கு எதிரான போட்டியில் அது மிகத் தீவிரமாக வெளிப்பட்டிருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ரொனால்டோ இனி தேவை இல்லையா? 37 வயதான ரொனால்டோ 5 உலகக் கோப்பை போட்டிகளில் கோல் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றவர். ஆனால் அவர் அணிக்காக போதிய பங்களிப்பைச் செய்யவில்லை என்ற புகார்கள் எழுவதைக் காண முடிகிறது. தென்கொரியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் அவரது மிக மோசமான தவறுகளை பலரும் சுட்டிக் காட்டுகிறார்கள். அப்போது சான்டோஸை எரிச்சலூட்டம் வகையில் ரொனால்டோவின் உடல் மொழி இருந்ததாகவும் கூறப்படுகிறது. கிலியன் எம்பாப்பே: மெஸ்ஸியை தொட்டவர், ரொனால்டோவை முந்தியவர்5 டிசம்பர் 2022 கத்தாரில் ஆஸ்திரேலிய அணியை சிலிர்க்க வைத்த ‘மந்திரக்காரர்’ மெஸ்ஸி4 டிசம்பர் 2022 தென்கொரியாவின் ‘மாரத்தான்’ கோலும் ரொனால்டோவின் தவறுகளும்3 டிசம்பர் 2022 இதற்குப் பிறகே ரொனால்டோவை வெளியே அமர வைத்துவிட்டு பெரிதாக அனுபவம் இல்லாத இளம் வீரர் ராமோஸை களமிறக்குவது என சான்டோஸ் முடிவு செய்திருக்கிறார். இந்தப் போட்டியில் வெளியே இருந்தபோது ரொனால்டோவுக்கு இரண்டு வகையில் நெருக்கடி ஏற்பட்டது. ஒன்று தாம் இல்லாமல் போட்டியில் தோற்றுப் போனால் அணியுடன் சேர்ந்து வெளியேற வேண்டியிருக்கும். வெற்றிபெற்றால், அணிக்கு தனது தேவை இருக்காது. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போது ரொனால்டோவுக்கு மாற்றாக களமிறக்கிய வீரர் ஹாட்ரிக் கோல் அடித்திருப்பதன் மூலம் அடுத்து வரும் போட்டிகளில் ரொனால்டோவின் பங்களிப்பு தேவையில்லை என்ற கருத்தை சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது. ரொனால்டாவுடன் ஏதாவது பிரச்னையா என்று சான்டோஸிம் கேட்டபோது, “ரொனால்டோவுடன் எனக்கு நெருக்கமான உறவு இருக்கிறது. 19 வயதாக இருந்தபோதே அவரை எனக்குத் தெரியும். அணியில் ஒரு முக்கியமான ஆட்டக்காரர் என்றே அவரைக் கருதுவேன்” என்று பதிலளித்திருக்கிறார். மொரோக்கோவுடனான காலிறுதிப் போட்டியில் ரொனால்டோ ஆடுவாரா என்ற கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்க சான்டோஸ் மறுத்துவிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES “என்னிடம் உள்ள அனைத்து வீரர்களையும் பயன்படுத்துவேன். முதல் 11 ஆட்டக்காரர்களாக இல்லாவிட்டால் பின்னர் களமிறக்குவேன்” என்று கூறினார் சான்டோஸ். இதன் மூலம் மொரோக்கோவுடனான போட்டியிலும் தொடக்கத்தில் ரொனால்டோவை பெஞ்சில் அமர வைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவே கருதப்படுகிறது. இந்த உலகக் கோப்பை போட்டியே ரொனால்டோவுக்கு கடைசி உலகக் கோப்பை போட்டியாக இருக்கும் எனக் கருதப்படும் நிலையில், அவருக்கு இத்தகைய நெருக்கடி ஏற்பட்டிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதை சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES காலிறுதிப் போட்டிகள் எப்போது? கத்தார் உலகக் கோப்பை காலிறுதிப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்குகின்றன. முதல் போட்டியில் குரோஷியாவும் பிரேசிலும் மோதுகின்றன. இந்தப் போட்டி வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிக்கு நடக்கிறது. அடுத்த போட்டி அன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்கிறது. மொரோக்கோவுக்கும் போர்சுகலுக்கும் இடையே சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கும் இங்கிலாந்துக்கும் பிரான்ஸுக்கும் இடையேயான போட்டி அன்று நள்ளிரவு 12.30 மணிக்கும் நடக்கின்றன. https://www.bbc.com/tamil/articles/c726lnl51j4o
  22. பணக்கார நாடான கத்தாரில் ஏன் இந்த அளவுக்கு வறுமை? பட மூலாதாரம்,AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, ஸ்டேடியங்களை கட்டும்போது உயிரிழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையை கத்தார் குறைத்தே சொல்வதாக ஐஎல்ஓ கூறுகிறது. 8 மணி நேரங்களுக்கு முன்னர் கத்தாரில் ஏழ்மையை காண்பதும் அதைப் பற்றிப் பேசுவதும் எளிதான காரியமல்ல. அதைப் பற்றிப் பேசுபவர்களும் மிகவும் கவனமாகவே பேசுகிறார்கள். "இது மிகவும் கடினமான பிரச்னை. முதலில் உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் நிர்வாகம் இதில் மிகவும் கண்டிப்பாக உள்ளது," என்று தன் பெயரை வெளியிட விரும்பாத ஒரு டாக்சி டிரைவர் பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார். கத்தார் உலகின் பணக்கார நாடுகளில் ஒன்று. ஆனால் அங்கும் வறுமை உள்ளது. அது பற்றி இங்கு வெளிப்படையாகப் பேசப்படுவதில்லை. ஏழ்மை இங்கு அதிக அளவிற்கு மறைக்கப்பட்டிருப்பதே அதற்குக் காரணம். வெளிநாட்டு தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட, மிகவும் தொலைதூர இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சுற்றுலாப் பயணிகள் வழக்கமாக வரும் பகுதிகளிலிருந்து வெகு தொலைவில் உள்ளனர். முக்கியமாக எண்ணெய் மற்றும் எரிவாயு மூலம் கிடைக்கும் வருமானம் காரணமாக கத்தாரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 180 பில்லியன் டாலர்களாக உள்ளது. பாலைவனத்தில் பெரிய அளவிலான கட்டுமானத் திட்டங்களில் வேலை செய்ய பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இங்கு ஈர்க்கப்படுவதற்கு இதுவே காரணம். திருமணத்துக்கு வெளியே உறவுகொண்டால் தண்டனை: இந்தோனீசியாவின் புதிய சட்ட வரைவு3 டிசம்பர் 2022 டாஸ்மேனிய புலியின் தொலைந்த எச்சங்கள் கண்டுபிடிப்பு: 85 ஆண்டுகால மர்மம் விலகியது6 டிசம்பர் 2022 இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த ஜனாதிபதி அனுமதியா? இலங்கை அமைச்சர் விளக்கம்6 டிசம்பர் 2022 கத்தாரில் சுமார் 30 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். ஆனால் இதில் 3.5 லட்சம் அதாவது மொத்த மக்கள் தொகையில் 10% மட்டுமே கத்தார் குடிமக்கள். மீதமுள்ளவர்கள் வெளிநாட்டினர். மேற்கத்திய நாடுகளில் இருந்து வரும் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு கத்தார் அதிக ஊதியம் மற்றும் சிறந்த சமூக பாதுகாப்பை வழங்குகிறது. கத்தார் வறுமையை ஒழித்துவிட்டது என்று அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தென்கிழக்கு ஆசியாவிலிருந்து வந்துள்ள பெரும்பாலான குடியேறியவர்களுக்கு உண்மை மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. "இந்தியா, நேபாளம், வங்கதேசம் அல்லது பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து வருபவர்களில் பெரும்பாலானவர்கள் படிக்காதவர்கள் மற்றும் அவர்களுக்கு ஆங்கிலமும் அவ்வளவு நன்றாகப் பேச வராது. இருப்பினும் தங்கள் சொந்த நாட்டை விட இங்கு அவர்களின் வாழ்க்கைத் தரம் சிறப்பாக உள்ளது. ஆனால் முக்கியமான விஷயம் குறைந்தபட்ச ஊதியம் தொடர்பானது. வீட்டிற்கு பணம் அனுப்பும்பொருட்டு, ஆறு பேர் கொண்ட அறையில் அவர்கள் வாழ்க்கை நடத்த வேண்டியுள்ளது,” என்று பாகிஸ்தான் டாக்சி டிரைவர் கூறினார். பட மூலாதாரம்,AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, பொதுவாக தென்கிழக்கு ஆசியாவிலிருந்து வரும் உயர் திறன் தேவைப்படாத வெளிநாட்டுத் தொழிலாளர்களிடையே வறுமை பரவலாக உள்ளது. அதிகமான பாகுபாடு கத்தார் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் பல சலுகைகளுடன் கூடவே ஆண்டுக்கு பல்லாயிரக்கணக்கான டாலர்களை சம்பாதிக்கும் நாட்டில், திறன் தேவைப்படாத பெரும்பாலான தொழிலாளர்கள் குறைந்தபட்ச ஊதியத்திற்கு அதாவது மாதத்திற்கு 275 டாலர்களுக்கு(சுமார் ரூ. 22,377) வேலை செய்கிறார்கள். 2020 ஆம் ஆண்டில் சர்ச்சைக்குரிய கஃபாலா (ஸ்பான்சர் செய்யப்பட்ட ஆட்சேர்ப்பு) முறையை முடிவுக்குக் கொண்டு வந்த முதல் அரபு நாடு கத்தார். கூடவே குவைத்துக்குப் பிறகு நாடு முழுவதும் ஒரே மாதிரியான குறைந்தபட்ச ஊதியத்தை அமல்படுத்திய இரண்டாவது நாடும் அதுதான். கஃபாலா அமலில் இருந்தபோது, ஒரு ஊழியர் தனது வேலையை அனுமதியின்றி மாற்றினால், அவர் குற்றவியல் வழக்கு, கைது மற்றும் நாடு கடத்தலை எதிர்கொண்டார். ஸ்பான்சர்கள் சிலநேரங்களில் அவர்களது பாஸ்போர்ட்டுகளை பறிமுதல் செய்து வைத்துக்கொள்வதால்,வேறு வழியின்றி அவர்கள் இந்த நாட்டில் காலவரையின்றி தங்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர். பெரும்பாலான புலம்பெயர்ந்தோர் வேலை வாய்ப்பு கட்டணமாக ஆட்சேர்ப்பு நிறுவனங்களுக்கு 500 முதல் 3,500 டாலர்கள் வரை (ரூ. 40,000 முதல் ரூ. 2.84 லட்சம்) செலுத்த வேண்டியிருந்தது. இதற்காக அவர்கள் அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய நிலை இருந்தது. இதனால் அவர்களது நிலைமை மேலும் கடினமானது. தொழிலாளர் சட்டங்களை சீர்திருத்துவதன் ஒரு பகுதியாக கத்தார், ஒப்பந்தத்தை முடித்த ஊழியர்கள் தங்கள் வேலையை மாற்ற அனுமதிக்கும் சட்டத்தை இயற்றியது. மேலும் ஊழியர்களின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்யும் நிறுவனங்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, கத்தாரில் கட்டுமானத் தொழிலாளர்களின் நிலை சர்ச்சைக்குரிய விஷயமாக உள்ளது. இருப்பினும் இந்த தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டு வருவதாக கத்தார் கூறுகிறது. ஆனால் இந்த சீர்திருத்தங்கள் இருந்தபோதிலும், ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் போன்ற மனித உரிமை அமைப்புகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கத்தாரில் நுழைவதற்கும் தங்குவதற்கும் வேலைவாய்ப்பிற்கும் தங்கள் முதலாளிகளையே இப்போதும் நம்பியிருப்பதாக குற்றம் சாட்டுகின்றன. அதாவது ஊழியர்களின் குடியிருப்பு, பணி அனுமதிகளைப் புதுப்பிக்கும் ரத்து செய்யும் உரிமை இன்னும் முதலாளிகளிடம் உள்ளது. "தங்கள் பக்கம் எந்தத் தவறும் இல்லாதபோதும் தொழிலாளர்களிடம் எந்த ஆவணங்களும் இல்லாமல் இருக்கிறது. தொழிலாளர்களின் விண்ணப்பங்கள் மீது முதலாளி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இதன் விளைவை தொழிலாளர்கள் சந்திக்க வேண்டியுள்ளதே தவிர முதலாளிகள் அல்ல,” என்று ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் 2020 அறிக்கை கூறுகிறது. தொழிலாளர்கள் இப்போதும் சட்டவிரோதமான, தண்டனை வடிவத்தில் ஊதிய வெட்டுக்களை எதிர்கொள்கின்றனர் என்று கடந்த ஆண்டு இந்த அமைப்பு கூறியது. மேலும், நீண்ட நேரம் உழைத்தாலும் சம்பளம் இல்லாமல் மாதக்கணக்கில் கஷ்டப்படவேண்டியுள்ளது. வேலைகளை மாற்றக்கூடாது என்று நிறுவனங்கள் இப்போதும் ஊழியர்கள் மீது அழுத்தம் கொடுக்கின்றன," என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவிக்கிறது. நாட்டில் கொண்டுவரப்பட்டுள்ள தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்கள் காரணமாக பெரும்பாலான வெளிநாட்டு தொழிலாளர்களின் வேலை நிலைமைகள் மேம்பட்டுள்ளன என்று கத்தார் அரசின் செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் கூறினார். "சீர்திருத்தங்களைத் திறம்பட செயல்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சீர்திருத்தங்கள் படிப்படியாக அமல்செய்யப்படும்போது சட்டத்தை மீறும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே போகும்," என்று அவர் மேலும் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக கத்தார் ஏழு மைதானங்கள், புதிய விமான நிலையம், மெட்ரோ, சாலைகள் மற்றும் ஹோட்டல்களை உருவாக்கியுள்ளது. லுஸால் ஸ்டேடியம் இறுதிப் போட்டிகளுக்காக கடந்த ஐந்து ஆண்டுகளில் கட்டப்பட்டது. 30,000 வெளிநாட்டு தொழிலாளர்கள் மைதானங்களை உருவாக்க பணியமர்த்தப்பட்டனர் என்று கத்தார் அரசு தெரிவித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் வங்க தேசம், இந்தியா, நேபாளம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். உலகக் கோப்பைக்கான ஏற்பாடுகளின் போது உயிரிழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்து பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. " 2010 இல் உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் பொறுப்பு கத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டதிலிருந்து, இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த 6,500 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்று கத்தாரில் அமைந்துள்ள பல்வேறு நாடுகளின் தூதரகங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன,” என்று பிரிட்டிஷ் செய்தித்தாள் கார்டியன் கூறுகிறது. ஆயினும் இந்த எண்ணிக்கை, ”கற்பனையானது மற்றும் தவறானது’ என்று கூறி கத்தார் அதை நிராகரித்தது. இறந்த தொழிலாளர்கள் அனைவரும் உலகக் கோப்பை திட்டங்களில் ஈடுபடவில்லை என்றும் அவர்களில் பெரும்பாலோர் வயது தொடர்பான நோய்கள் அல்லது இயற்கை காரணங்களால் இறந்தனர் என்றும் கத்தார் அரசு கூறுகிறது. படக்குறிப்பு, கத்தாரில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த நேபாளத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். பின்னர் உடல் அவரது நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. 2014 மற்றும் 2020 க்கு இடையில் மைதானத்தின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 37 தொழிலாளர்கள் இறந்துள்ளனர். மேலும் அவர்களில் மூன்று பேரின் மரணங்களே வேலை தொடர்பானவை என்று கத்தார் கூறுகிறது. ஆனால் கத்தார் அரசு அளித்துள்ள எண்கள் உண்மையைப் பிரதிபலிக்கவில்லை என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) கூறுகிறது. கத்தாரில் மாரடைப்பு அல்லது மூச்சுத்திணறல் காரணமாக ஏற்படும் இறப்புகள் வேலை தொடர்பான விபத்துக்களில் கணக்கிடப்படுவதில்லை. இது ஹீட் ஸ்ட்ரோக் மற்றும் தீவிர வெப்பநிலையில் அதிக சுமைகளைச் சுமந்து செல்வதாலும் ஏற்படலாம். 2021 இல் மட்டும் 50 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 500 பேர் படுகாயமடைந்தனர் என்றும் அதே நேரத்தில் 37,600 தொழிலாளர்கள் சிறிய அல்லது குணப்படுத்தக்கூடிய காயங்களுக்கு ஆளாகியுள்ளனர் என்றும் ILO தெரிவிக்கிறது. கத்தார் அரசு வெளிநாட்டுத் தொழிலாளர்களின் இறப்பைக் குறைத்துக்காட்டுவதாகக்கூறும் சில ஆதாரங்களையும் பிபிசி அரபிக் சேவை சேகரித்துள்ளது. சர்வதேச நெருக்குதல் அதிகமானதை அடுத்து,, ஸ்டேடியம் கட்டும் தொழிலாளர்களின் சிகிச்சை தொடர்பான தனது சீர்திருத்த திட்டங்களின் ஒரு பகுதியாக கத்தார், இந்த தொழிலாளர்களில் பெரும்பாலோர் தங்குவதற்கு ஒரு தொழிலாளர் முகாமை கட்டியுள்ளது. ஆனால் இந்த பல மில்லியன் டாலர் செலவிலான தொழிலாளர் முகாம் தோஹாவிற்கு வெளியே உள்ளது மற்றும் உலகக் கோப்பை போட்டியின் போது தொலைக்காட்சியில் காணப்படும் ஆடம்பர இடங்களிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. மேலும் அங்கு ஊடகங்கள் செல்வதற்கு அனுமதி இல்லை. (இந்தச் செய்தியில் கத்தாரில் உள்ள பிபிசி நியூஸ் வேர்ல்ட் சிறப்பு செய்தியாளர் ஜோஸ் கார்லோஸ் கியூட்டோவின் உள்ளீடும் உள்ளது.) https://www.bbc.com/tamil/articles/c5162r55vr8o
  23. சிறுநீர் கழிக்க மட்டும் பயன்படுமாறு செய்துவிடவேணும். யாரும் தற்காப்புக்கலை தெரிந்த பிள்ளைகள் துணிஞ்சு போய் கண்ணுக்கு பெப்பர் ஸ்பிறே அடிச்சிட்டு முழங்காலால ஒரு எத்து எத்தவேணும்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.