Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. நிலவின் சுற்றுப்பாதையில் சந்திராயன் - 3 : இஸ்ரோ தகவல் 06 AUG, 2023 | 09:57 AM சந்திரயான்-3 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதைக்குள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்தது. இந்த விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. தற்போது பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விண்கலத்தை இயக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் சந்திரயானை நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்லும் விதமாக அதன் புவி நீள்வட்ட சுற்றுப்பாதை தூரம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி சந்திரயான் புவி ஈர்ப்பு விசையில் இருந்துவிலக்கப்பட்டு நிலவை நோக்கிசெல்லும்படி அதன் பயணப்பாதை மாற்றப்பட்டது. 5 நாட்கள் பயணத்துக்குபின் நிலவுக்கு அருகே விண்கலம் நேற்றிரவு சென்றது. இதையடுத்து விண்கலத்தை நிலவின் வட்ட சுற்றுப்பாதைக்குள் செலுத்தும் முயற்சி 7.15 மணியளவில் மேற்கொள்ளப்பட்டது. அப்போது சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதைக்குள் உந்தி தள்ளப்பட்டது. இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பு: சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள திரவ எரிவாயு இயந்திரம் இயக்கப்பட்டு நிலவின் வட்ட சுற்றுப்பாதைக்குள் உந்தி தள்ளப்பட்டது. தற்போது நிலவின் சுற்றுப் பாதையில் விண்கலம் வலம் வருகிறது. அடுத்தகட்டமாக நிலவின் சுற்றுப்பாதை உயரத்தை குறைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. முதல்கட்டமாக இன்று (ஆக.6) இரவு 11 மணியளவில் விண்கலத்தின் நிலவு சுற்றுப்பாதை மாற்றப்பட உள்ளது. அதன்பின் படிப்படியாக அதன் உயரம் குறைக்கப்பட்டு திட்டமிட்டபடி ஆக.23-ம் தேதி விண்கலம் நிலவில் மெதுவாக தரையிறக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/161714
  2. வவுனியாவை அதிரவைத்த இரட்டை கொலை வழக்கு ; பிரதான சந்தேக நபருக்கு விளக்கமறியல் Published By: DIGITAL DESK 3 05 AUG, 2023 | 09:14 AM வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டதில் தம்பதிகள் மரணமடைந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை எதிர்வரும் 11 திகதி வரை அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்க வவுனியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை நேற்று வெள்ளிக்கிழமை (04) வவுனியா சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுதிய பின்னர் வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் குற்ற புலனாய்வுத்திணைக்களத்தின் கொலை விசாரணை பிரிவினர் ஆஜர்படுத்தினர். இதன்போதே, சந்தேக நபரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்க வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் அஹமட் ரசீம் உத்தரவிட்டார். கைதுசெய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் தொடர்பில், சட்டத்தரணி அருள்மொழிவர்மன் கொன்சியஸ் ஆஜராகி சந்தேகநபர் சம்பவம் நடைபெற்ற அன்று தனது பிள்ளைக்கு சுகயீனம் காரணமாக சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக, யாழ்பாணம் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றிறிந்ததாகவும், சம்பவதினத்தன்று கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் வவுனியாவில் இல்லை என்றும், சந்தேகநபரின் நலனுரித்துக்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் சந்தேகநபர் விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கியுள்ளார் எனவும் அவர் தெரிவித்திருந்தார். நீதவான் முன்னிலையில் சந்தேகநபரை குற்ற புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை விசாரனை பிரிவினரான பொலிஸ் பரிசோதகர் இக்பால், பொலிஸ் பரிசோதகர் பொல்வத்த, பொலிஸ் சார்ஜன்ட் சந்தரூவன், பொலிஸ்காஸ்டபிள் விஜரட்ண மதுசங்க பண்டார ஆகியோர் இணைந்து மன்றுக்கு முற்படுத்தினர். பின்னர் சந்தேகநபர் அனுராதபுரம் சிறைச்சாலை உத்தியோகத்திரிடம் ஒப்படைக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/161659
  3. ரஸ்யாவின் கருங்கடல் துறைமுகத்தின் தளத்தின்மீது உக்ரைன் ஆளில்லாவிமானதாக்குதல் Published By: RAJEEBAN 04 AUG, 2023 | 05:43 PM ரஸ்யாவின் கருங்கடல் துறைமுகத்தில் உள்ள தளத்தின் மீது உக்ரைன் கடல் ஆளில்லாத விமானதாக்குதலை மேற்கொண்டுள்ளது. ரஸ்யாவின் நோவோரோசிஸ்க் தளத்தின் மீதே உக்ரைன் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இரண்டு ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை முறியடித்துள்ளதாக ரஸ்யாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஆளில்லா விமானங்களை தளத்திறகு பாதுகாப்பை வழங்கிக்கொண்டிருந்த ரஸ்யாவின் போர்க்கப்பல்கள் கண்டு அவற்றை அழித்துள்ளன என ரஸ்யா தெரிவித்துள்ளது. ரஸ்யாவின் பாதுகாப்பு அமைச்சு சேதங்கள் குறித்து எதனையும்தெரிவிக்காத அதேவேளை தரையிறங்கும் கப்பல் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது செயற்படமுடியாத நிலையில் உள்ளது என ரொய்ட்டருக்கு ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/161628
  4. யுக்ரேன் ராணுவத்தின் துணிச்சலான முன்கள வீராங்கனைகளின் குரல்கள் கட்டுரை தகவல் எழுதியவர், ஓல்கா மல்செவ்ஸ்கா பதவி, பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ரஷ்யாவிற்கு எதிரான போரில் பங்கேற்று சண்டையிட யுக்ரேனிய பெண்கள் அதிக எண்ணிக்கையில் பதிவு செய்து வருகின்றனர். இப்படி பதிவு செய்து களத்தில் சண்டையிடும் 5,000 முன்னணி பெண் வீராங்கனைகளில் மூவருடன் பிபிசி பேசியது. அவர்கள் தங்கள் சொந்த ராணுவத்தில் பாலின சமத்துவம் உள்ளிட்ட கோரிக்கைகளை எழுப்பிப் போராடும் நிலையும் காணப்படுகிறது. மெலிந்த, நீல வண்ண கண்களைக் கொண்ட, அழகிய பெண் ஒருவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கிறார். ரஷ்ய ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளின்படி அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார். ஆனால் அவர் உயிர் பிழைத்து தற்போது அவர் உடற்பயிற்சி மேற்கொள்வது முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆண்ட்ரியானா அரேக்தா என்ற இந்த வீராங்கனை யுக்ரேனிய ஆயுதப்படையில் ஒரு சிறப்பு பிரிவு சார்ஜென்ட் ஆவார். மீண்டும் முன்வரிசையில் நின்று போர்புரியத் தன்னைத் தயார்படுத்திவருகிறார். டிசம்பரில் கெர்சன் பகுதியில் கண்ணிவெடியால் காயம் அடைந்த ஆண்ட்ரியானாவை யுக்ரேனில் உள்ள ஒரு மறுவாழ்வு மையத்தில் - அவரது பாதுகாப்பு கருதி பெயர் சொல்ல முடியாத இடத்தில் - சந்தித்து பிபிசி உரையாற்றியது. ரஷ்யாவில் வெளியாகும் ஏராளமான ஊடகங்கள் அவரது "மரணத்தைக்" கொண்டாடிவருகின்றன. "நான் கால்கள் மற்றும் கைகளை இழந்து ரஷ்ய ராணுவத்தால் கொல்லப்பட்டதாக அந்த ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன," என்கிறார் ஆண்ட்ரியானா. "அவர்கள் ஒரு விஷயத்தைப் பிரசாரம் செய்வதில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்களாக உள்ளனர்." படக்குறிப்பு, ஆண்ட்ரியானா உக்ரைனில் உள்ள ஒரு மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றுவருகிறார். மேலும், மீண்டும் ராணுவத்தின் முன்வரிசையில் இருந்து போரிடத் தேவையான பயிற்சியையும் பெற்றுவருகிறார். அந்தச் செய்திகளில் அவரைப் பற்றிக் குறிப்பிடுகையில் "கொலைகாரி" என்றும், "நாசிப்படையைச் சேர்ந்தவர் அழிக்கப்பட்டார்" என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. எந்த ஆதாரமும் இல்லாமல் 'அவர் கொடூரமானவர். பிறரின் துன்பங்களில் இன்பம் காண்பவர்' என்றெல்லாம் செய்திகள் வெளியாகியிருந்தன. யுக்ரேனிய இராணுவம் கெர்சனை விடுவித்தபின் இது போன்ற செய்திகள் வெளியாகத் தொடங்கின. "இது எனக்கு மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. நான் இங்கே உயிருடன் இருக்கிறேன். இனிவரும் நாட்களிலும் என் நாட்டை நான் பாதுகாப்பேன்," என்று அவர் கூறுகிறார். 18 மாதங்களுக்கு முன் ரஷ்யாவின் படையெடுத்தது. அதன் பின் தற்போது யுக்ரேன் நாட்டு ராணுவப் படைகளில் 60,000 பெண்கள் பணியாற்றி வருகின்றனர். 42,000 க்கும் அதிகமானோர் இராணுவ நிலைகளில் உள்ளனர் - களத்தில் 5,000 பெண் வீராங்கனைகள் போரிட்டு வருவதாக யுக்ரேன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. யுக்ரேன் சட்டத்தின் கீழ் எந்த பெண்ணையும் அவரது விருப்பத்திற்கு மாறாக கட்டாயப்படுத்தி பணியில் ஈடுபடுத்த முடியாது என்றும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தில் சில குறிப்பிட்ட போர் நடவடிக்கைகள் பெண்களால் சிறப்பாக மேற்கொள்ளப்படுகின்றன என்றும் சிலர் நம்புகிறார்கள். "நான் என் தளபதியிடம் வந்து, 'எனக்கு என்ன பணி ஒதுக்கப்பட்டுள்ளது ?' என்று கேட்டேன். 'நீங்கள் ஒரு துப்பாக்கி சுடும் வீராங்கனையாகப் பணியாற்றவேண்டும்,' என்று அவர் கூறினார்," என்று எவ்ஜெனியா எமரால்டு என்ற ராணுவ பெண் வீராங்கனை நினைவு கூர்ந்தார் - அவர் சமீப காலம் வரை யுக்ரேன் போர்க்களத்திலிருந்து போரிட்டு வந்தார். பட மூலாதாரம்,EURASIA DAILY படக்குறிப்பு, ஆண்ட்ரியானா அரேக்தா இறந்துவிட்டதாக ஏராளமான ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ராணுவத்தில் இணைந்து துப்பாக்கி சுடும் வீராங்கனைகளாகப் பணியாற்றுபவர்கள் அதிக அளவில் அனைவரையும் கவர்ந்துவருகின்றனர் என்று அவர் கூறுகிறார். அந்த அளவுக்கு அவர்களுக்கு நற்பெயர் கிடைக்க நடைமுறைக் காரணம் ஒன்று உள்ளது. "ஒரு ஆண் துப்பாக்கியை எடுத்து மற்றொருவரைச் சுடலாமா வேண்டாமா என யோசிக்கிறார் என்றால், அதே இடத்தில் ஒரு பெண் இருந்தால் அவர் அந்தச் செயலைச் செய்யவே மாட்டார்," என்கிறார் அவர். மூன்று மாத குழந்தையை தொட்டிலில் ஆட்டிக்கொண்டே பேசும் எவ்ஜெனியா, "அதனால்தான், ஆண்களைப் போல் இல்லாமல், பெண்கள் ஒரு உயிரை உருவாக்குபவர்களாக உள்ளனர்," என்கிறார். 31 வயதான அவர், ரஷ்யா கிரைமியாவை ஆக்கிரமித்த பின்னர் இராணுவப் பயிற்சி பெற்றவர். ஆனால் 2022 இல் மட்டுமே அவர் இராணுவத்தில் சேர்ந்தார். முழு அளவிலான தற்போதைய போருக்கு முன்பு ஒரு நகைக் கடையின் உரிமையாளராக இருந்தார். யுக்ரேனிய பெண் வீராங்கனைகளை பெருமளவில் அடையாளப்படுத்தும் விதமாக அவர் வலுவான சமூக ஊடகச் செயற்பாட்டாளராக இருந்து வந்துள்ளார். அவர் ஒரு தொழில் முனைவோராக இருந்த போது, தொழில் வாழ்க்கையின் அனுபவங்கள் மூலம் சமூக ஊடகங்களில் பெரும் செல்வாக்கு பெற்றவராக இருந்தார். படக்குறிப்பு, தனது மூன்று மாத குழந்தையுடன் புகைப்படத்தில் தோன்றும் எவ்ஜெனியா எமரால்டு, போருக்கு முன்பு நகை வியாபாரம் செய்தார். ஆண்ட்ரியானாவைப் போலவே, எவ்ஜெனியாவும் ரஷ்ய ஊடகங்களால் கொடூரமாக விமர்சிக்கப்பட்டவராக இருக்கிறார். அவரை "தண்டனை அளிப்பவர், நாசி" என்று ரஷ்ய ஊடகங்கள் பரவலாகக் குறிப்பிடுகின்றன. துப்பாக்கி சுடும் வீராங்கனையாக ஒரு பெண் முன்வரிசையில் நின்று போர்புரிவதை நூற்றுக்கணக்கான செய்திகளை ரஷ்ய ஊடகங்கள் வெளியிடுவது மட்டுமல்லாமல், அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன. ராணுவத்தில் துப்பாக்கி சுடும் வீராங்கனையாகப் பணிபுரிவது மிகவும் கொடூரமானது - உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பயங்கர கொடூரமானது என எவ்ஜெனியா கூறுகிறார். "ஏனென்றால் அங்கே என்ன நடக்கிறது என்பதை உங்களால் நேரடியாகப் பார்க்க முடியும். இலக்கை நீங்கள் தாக்குவதை நீங்கள் பார்க்கலாம். உங்களால் தாக்கப்படும் ஒருவரை நீங்கள் பார்க்கும் போது நீங்கள் நரகத்தில் இருப்பதைப் போன்ற உணர்ச்சிகளை அளிக்கும்." எவ்ஜெனியா மட்டுமல்லாமல், நாங்கள் சந்தித்துப் பேசிய மற்ற முன் வரிசை வீராங்கனைகளும் அவர்கள் தாக்கிய உயிர்களின் எண்ணிக்கையை நினைவுபடுத்த முடியாது. ஆனால் எவ்ஜெனியா தான் யாரையாவது கொல்ல வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்தபோது அவருக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களை நினைவு கூர்ந்தார். "குறைந்தது 30 வினாடிகள் நான் நடுங்கத் தொடங்குவேன். என் முழு உடலும் நடுங்கும். என்னால் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இப்போது திரும்ப மீட்கமுடியாத ஒரு செயலைச் செய்யப்போகிறேன் என்ற உணர்வு என்னுள் மேலோங்கும்," என்கிறார் எவ்ஜெனியா. "ஆனால் நாங்கள் ஒரு போதும் அவர்கள் மீது போர் தொடுக்கவில்லை. அவர்கள் தான் எங்கள் மீது போரைத் திணித்தார்கள்." பட மூலாதாரம்,ILLIA LARIONOV படக்குறிப்பு, எவ்ஜெனியா எமரால்டு, துப்பாக்கி சுடும் வீராங்கனையாகப் பணிபுரிவது குறிப்பாக கொடூரமான போர்முறை என்று கூறுகிறார் யுக்ரேனிய இராணுவத்தில் பெண்களின் சதவீதம் 2014 இல், முதன்முதலாக ரஷ்யா படையெடுத்த பின் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2020 இல் 15% ஐ எட்டியது. ஆனால் பல பெண் துருப்புக்கள் ரஷ்யாவிற்கு எதிரான தாக்குதல்களின் போது பாலியல் சமத்துவமற்ற மனப்பான்மையால் பாதிக்கப்பட்டதாகவும், அப்போது தங்கள் சொந்தப் படைகளுக்கு உள்ளேயே போரிடும் நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர். போர்க்களத்தில் முன் வரிசையில் இருந்து துப்பாக்கி சுடும் வீராங்கனையாகப் பணியாற்றிய போது, தனது அதிகாரத்தையும் நம்பிக்கையையும் நிலைநாட்டுவதற்கு முன்பாகவே இதை எதிர்கொண்டதாக எவ்ஜெனியா கூறுகிறார். "நான் சிறப்புப் படையில் சேர்ந்தபோது, ஒரு ஆண் வீரர் என்னிடம் வந்து, 'நீ இங்கே என்ன செய்கிறாய்? போய் ஒரு கப் சூப் சமைத்து அதை எடுத்துக்கொண்டு வா' என்றார். அந்த நேரத்தில் நான் மிகவும் புண்பட்டதாக உணர்ந்தேன். 'நீங்கள் என்னை கேலி செய்கிறீர்களா? நான் சமையலறையிலும் இருக்க முடியும். அதே நேரம், என்னால் உங்களைத் தாண்டி போரில் சாதிக்கவும் முடியும்' என்று சொன்னேன்." யுக்ரேனிய பெண் வீராங்கனைகளுக்கு உதவும் 'ஆர்ம் வுமன் நவ்' என்ற அமைப்பைச் சேர்ந்த மற்றொரு எவ்ஜெனியா (எவ்ஜெனியா வெலைகா) பேசும் போது, "பெண்கள் தங்கள் கணவர்களைக் கண்டுபிடிக்கவே ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றுவதாக பொதுமக்களிடம் ஒரு வலுவான கருத்து உள்ளது," என்கிறார். உடல் ரீதியான துஷ்பிரயோகங்கள் குறித்தும் பெண்கள் தன்னிடம் புகார் தெரிவித்ததாக அவர் கூறுகிறார். "பிரச்னையின் அளவை எங்களால் கற்பனை செய்து பார்க்க முடியாது. ஏனென்றால் ஒவ்வொரு பெண் சிப்பாயும் இதைப் பற்றி பேச விரும்பவில்லை," என்று அவர் கூறுகிறார். யுக்ரேனின் துணை பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மல்யார் பிபிசியிடம் பேசுகையில், "பல்லாயிரக்கணக்கான வீராங்கனைகள் ராணுவத்தில் சேர்ந்துள்ள நிலையில், மிகச்சில நேரங்களில் இது போன்ற புகார்கள் எழுகின்றன," என்று கூறினார். பட மூலாதாரம்,UKRAINE DEFENCE MINISTRY படக்குறிப்பு, 2021 ஆம் ஆண்டில், யுக்ரேன் இராணுவம் பெண் வீராங்கனைகள் 'ஹை ஹீல்ஸ்' ஷுக்களுடன் பயிற்சி செய்யும் படங்களை வெளியிட்டது பொதுமக்களின் சீற்றத்தைத் தூண்டியது யுக்ரேனிய இராணுவத்தில் பணியாற்றும் பெண்களுக்கு பாலினத்திற்கு ஏற்ற சீருடைகள் இல்லை. ஆண்கள் பயன்படுத்தும் உள்ளாடைகள், பொருத்தமான அளவுகளற்ற காலணிகள் மற்றும் குண்டு துளைக்காத உள்ளாடைகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. துணை பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மயிலர் கூட, தனக்கு வழங்கப்பட்ட ஃபீல்ட் யூனிபார்ம் ஒரு ஆணுக்காக வடிவமைக்கப்பட்டதாக கூறுகிறார் - அவர் "உயரம் குறைவாக" இருப்பதால் அதன் அளவுகளை மாற்ற வேண்டியிருந்தது என்கிறார். அங்கு முறைப்படி அணியவேண்டிய சீருடையில் 'ஹை ஹீல்ஸ்' கொண்ட காலணிகளும் அடங்கும் என்று அவர் கூறுகிறார். இராணுவத்தில் உள்ள பெண்கள், அவர்களுக்குப் பொருத்தமான சீருடைகளை, ஆடைகளை வாங்கவேண்டும் என்றால் அவர்கள் அவற்றை இணையதளம் மூலம் சொந்த பணம் செலுத்திவாங்கிக் கொள்ளலாம் அல்லது தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் வாங்கிக்கொள்ளலாம். வேறு வழியில்லை. இதனாலேயே ஆண்ட்ரியானா வெட்டரன்கா, யுக்ரேனிய பெண்கள் படைவீரர் இயக்கம் என்ற தொண்டு நிறுவனத்தை நிறுவினார். இது பெண் ராணுவ வீராங்கனைகளுக்கு சம உரிமைகள் மற்றும் நேட்டோவின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப யுக்ரேனிய ராணுவ சட்டத்தை சீர்திருத்துவதற்காக கோரிக்கை எழுப்பிவருகிறது. ஆனால், இந்த விஷயத்தில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், பெண் வீராங்கனைகளுக்கான சீருடை உருவாக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவை ஒட்டுமொத்தமாக தயாரிக்கப்படும் என்றும் அமைச்சர் மல்யார் கூறுகிறார். இருப்பினும், அவை எப்போது தயாரிக்கப்படும் என்ற விவரங்களை அவர் தெரிவிக்கமுடியவில்லை. இதுபோன்ற பிரச்சினைகள் இருந்தபோதிலும், "போருக்கு பாலினம் எதுவும் இல்லை" என்று துப்பாக்கி சுடும் வீராங்கனை எவ்ஜெனியா எமரால்டு கூறுகிறார். “போர்க்களம், ஆயுதமேந்தியவர்கள் ஆண்களா, பெண்களா என்பதைப் பொருட்படுத்தாது. ஒரு வீட்டில் ஏவுகணை தாக்கும் போது அங்கே ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் இருக்கின்றனர்." "போர்க்களத்தின் முன் வரிசையிலும் இந்த நிலையே காணப்படுகிறது. நீங்கள் ஒரு பெண்ணாக இருந்து திறம்பட செயல்படவேண்டும். பெண் என்ற இடத்திலிருந்து உங்கள் நாட்டையும் உங்கள் மக்களையும் ஏன் பாதுகாக்க மாட்டீர்கள்?" பட மூலாதாரம்,IRYNA படக்குறிப்பு, ரஷ்ய ராணுவத்தை எதிர்த்து போரில் தாக்குதல் நடத்தத் தயாராகும் பெண் வீராங்கனை. கிழக்கு டான்பாஸ் பகுதியில், தற்போது துப்பாக்கி ஏந்தி எதிர்த்தாக்குதலில் ஈடுபட்டு வரும் இரினாவுக்குக் கிடைத்த ஒரு சிறிய ஓய்வு நேரத்தில் நாங்கள் அவருடன் மிகவும் சுருக்கமான உரையாடல் ஒன்றை நடத்தினோம். . ராணுவத்தில் என்ன மாதிரியான மாற்றங்கள் நடக்கவேண்டும் என பெண் வீராங்கனைகள் போராடி வருகிறார்களோ, அந்த மாற்றங்களின் ஒரு எடுத்துக்காட்டாக அவர் திகழ்கிறார். அவர் தற்போது ஆண்கள் மட்டுமே இடம்பெற்றுள்ள ஒரு படைப்பிரிவின் தளபதியாகப் பணியாற்றிவருகிறார். "ஒரு துப்பாக்கி சுடும் வீராங்கனைனயின் பெயர் காதலுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. திரைப்படங்களில் இது போன்ற காட்சிகள் அழகாக இருக்கலாம். ஆனால், நடைமுறையில் எனது கடின உழைப்பின் காரணமாகவே இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறேன்." துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர் எப்படி ஆறு மணி நேரம் வரை தரையில் படுத்துக்கொண்டு எதிரிகளைச் சுடுகின்றனர்? அதுவும் அவர்களது நிலைகளை அதிவேகமாக மாற்றம் செய்துகொண்டே பணியாற்றவேண்டிய நிலையை அவர் விவரிக்கிறார். "இது மரணத்துடன் விளையாடுவது போன்றது," என்று அவர் மேலும் கூறுகிறார். சேவை செய்யும் ஆயிரக்கணக்கான பெண்கள் தொழில் மற்றும் அவர்களது குடும்பங்களை விட்டுவிட்டுச் சென்றுள்ளனர். யுக்ரேனிய படைவீரர் விவகார அமைச்சகத்தின் கீழ் பாலின சமத்துவம் குறித்த ஐ.நா. ஆலோசகராக இருந்த ஆண்ட்ரியானா தனது வேலையை விட்டுவிட்டு, கடந்த ஆண்டு ரஷ்யா படையெடுத்தபோது யுக்ரேனிய ராணுவத்தில் சேர்ந்தார். "அவர்கள் என் வாழ்க்கையின் சிறந்த காலத்தைப் பயன்படுத்திக்கொண்டனர்," என 35 வயதான அவர் கூறுகிறார். போருக்கு முந்தைய ஒரு காலத்தை நினைத்துப் பார்க்கையில், அவர் மேலும் கூறுகிறார்: "நான் சுற்றுப் பயணம் செய்து மகிழ்ச்சியாக இருந்திருக்க முடியும். மேலும் ஒரு தொழிலைக் கட்டியெழுப்பியிருக்க முடியும் அல்லது ஒரு சிறந்த வேலையில் அமர்ந்துகொண்டு ஒரு கனவுலகத்தில் வாழ்ந்திருக்கமுடியும்." ஆரம்பப் பள்ளிக்குச் செல்லும் வயதில் ஒரு மகனை வைத்திருக்கும் தாயான ஆண்ட்ரியானா தொடர்ந்து பேசும் போது, ஏழு மாதங்களுக்கும் மேலாக தனது மகனை பார்க்கமுடியவில்லை என்றும், மொபைல் ஃபோனில் தனது மகனுடைய படங்கள் தொடர்ந்து வரும் போது புன்னகையுடன் அவைற்றைப் பார்த்து மன நிறைவடைவதாகவும் கண்ணீருடன் குறிப்பிடுகிறார். தற்போதைய நிலையில், அவரது சொந்த நாட்டில் அமைதியான எதிர்காலத்தைப் பெற வேண்டும் என்ற விருப்பம் தான் அவருக்கு ஒரு உந்துதலாக இருக்கிறது. நாடு முழுவதும் அமைதி ஏற்பட்டுவிட்டால், தனது மகன், அவனது பெற்றோரைப் போல போராடி அவனது உயிரைப் பணயம் வைத்து வாழவேண்டிய அவசியம் இருக்காது. படக்குறிப்பு, 2014 இல் ரஷ்யா கிரிமியா மீது படையெடுத்தபோது ஆண்ட்ரியானா முதன்முதலில் ஆயுதப்படையில் சேர்ந்தார் கடந்த ஆண்டு ரஷ்யாவின் முழுப் படையெடுப்பிற்குப் பிறகு இணைந்த எவ்ஜெனியா எமரால்டு போலல்லாமல், ஆண்ட்ரியானாவுக்கு ஏற்கெனவே இராணுவத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. 2014 ஆம் ஆண்டில், ரஷ்யா முதன்முதலில் யுக்ரேனைத் தாக்கி, கிரைமியாவை இணைத்து, டான்பாஸை ஆக்கிரமித்தபோது, அவர் பிராண்ட் மேலாளராக தனது வேலையை விட்டுவிட்டு முதல் தன்னார்வ பட்டாலியன்களில் ஒன்றில் சேர்ந்தார். ஆயிரக்கணக்கான யுக்ரேனியர்களுடன். அந்த நேரத்தில், இராணுவம் இப்போது இருப்பதை விட சிறியதாக இருந்தது என்பது மட்டுமல்லாமல் போதுமான வசதிகள் இன்றித் தவித்துவந்தது. ஆண்ட்ரியானா பணியாற்றிய 'ஐடார் பட்டாலியன்', கிரெம்ளின் மற்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மனித உரிமை மீறல்களால் குற்றம் சாட்டப்பட்டது - ஆனால் யுக்ரேனிய இராணுவம் பிபிசியிடம் பேசிய போது, அந்த குற்றச்சாட்டுக்களை ஏற்க எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியது. அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு, யுக்ரேனிய தன்னார்வப் படைப்பிரிவுகளை பயனுள்ள வகையில் முறைப்படுத்த அந்நாட்டு அரசை வலியுறுத்தியது. ஆண்ட்ரியானா எந்த தவறான நடத்தையிலும் ஈடுபடவில்லை என்றாலும், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் 'ஐடாரை' விட்டு வெளியேறினார். ரஷ்ய ஊடகங்கள் எந்த ஆதாரமும் இல்லாமல் அவரை "துரதிருஷ்டம்" என்று தொடர்ந்து வர்ணித்துவந்தன. யுக்ரேனில், அவரது சேவைக்காக அவருக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன - ஒன்று "தைரியத்திற்காக", மற்றொன்று "மக்கள் ஹீரோ" என்பதற்காக வழங்கப்பட்டன. பிபிசியிடம் பேசிய ஆண்ட்ரியானா, தான் இனி ஐடாரின் ஒரு பகுதியாக இல்லை என்றும், ஏற்கெனவே போரில் அவருக்குப் போதிய முன்னனுபவம் இருந்ததால், 2022 ஆம் ஆண்டில் மீண்டும் இராணுவத்தில் சேர வேண்டிய கட்டாயம் இருப்பதாக உணர்ந்ததாகவும் தெரிவித்தார். படக்குறிப்பு, ஆண்ட்ரியானா மீண்டும் ராணுவத்தின் முன்வரிசைக்குத் திரும்புவதற்கான தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார் ரஷ்யாவுக்கு எதிரான போரில் யுக்ரேன் ராணுவ வீரர்களில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற கேள்விக்கு அந்நாட்டு அரசு ரகசியம் கருதி போதுமான தகவல்களை அளிக்கவில்லை. ஆனால், இதுவரை யுக்ரேன் ராணுவத்தினர் 93 பேர் உயிரிழந்திருக்கலாம் என பிபிசிக்குத் தகவல் கிடைத்துள்ளது. 'ஆர்ம் வுமன் நவ்' என்ற தொண்டு நிறுவனத்தின் தரவுகள், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கின்றன. ஆண்ட்ரியானாவின் மொபைல் ஃபோனில் பதிவு செய்துவைக்கப்பட்டிருந்த எண்கள், இறந்தவர்களின் பட்டியலாக மாறிவிட்டது. "நான் 100 க்கும் மேற்பட்ட நண்பர்களை இழந்துவிட்டேன். எத்தனை தொலைபேசி எண்களை நீக்க வேண்டும் என்று கூட எனக்குத் தெரியவில்லை." ஆனால் ஏற்கனவே கொடுக்கப்பட்ட விலை கைவிட முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளது, என்று கூறும் அவர், ஜிம்மில் தனது மறுவாழ்வு பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். https://www.bbc.com/tamil/articles/cj5ndv8qrrno குறிபார்த்துச் சுடுபவர்களையா(Sniper) துப்பாக்கி சுடுபவர்கள் என குறிப்பிடுகின்றது பிபிசி தமிழ்?
  5. தோணிக்கல் இரட்டை கொலை : பிரதான சந்தேகநபர் கைது வவுனியா – தோணிக்கல் பகுதியில் கடந்த மாதம் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் வவுனியா மாவட்ட நீதிமன்றில் தற்போது முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியா – தோணிக்கல் பகுதியில் கடந்த மாதம் பிறந்த நாள் நிகழ்வொன்று இடம்பெற்ற வீட்டுக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத சிலர் அங்கு வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டதுடன் வீட்டுக்கும் தீ வைத்தனர். இதன்போது, 21 வயதான யுவதி ஒருவர் உயிரிழந்ததுடன் அவரது கணவர் வைத்தியசாலையில் வைத்து உயிரிழந்தார். இந்தநிலையில், சம்பவம் தொடர்பில் கைதான 5 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு பணத்தை வழங்கி கொலை செய்யுமாறு பணித்த, பிரதான சந்தேகநபரே தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். https://thinakkural.lk/article/266663
  6. காங்கேசன்துறை - நாகபட்டினம் கப்பல் சேவை விரைவில் - யாழ் இந்திய துணைத்தூதுவர் Published By: VISHNU 02 AUG, 2023 | 08:58 PM இலங்கை யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் இந்தியா தமிழ்நாடு நாகபட்டினத்திற்கு இடையேயான கப்பல் சேவையினை விரைவில் ஆரம்பவுள்ளதாக யாழ் இந்திய துணைத்தூதுவர் ஸ்ரீமான் ராகேஷ் நடராஜ் தெரிவித்தார். வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ஆரம்பத்தில் காங்கேசன்துறை மற்றும் காரைக்கால் இடையே கப்பல் சேவை ஆரம்பிக்க திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையே குறித்த பயணப்பாதை மாற்றப்பட்டமையினாலேயே இவ் தாமதம் ஏற்பட்டது. குறித்த கப்பல் சேவை தொடர்பில் விரைவில் ஆரம்பிப்பதற்காக தமிழ்நாடு நாகபட்டினத்தில் பயணிகள் இறங்குமிடம் , சுங்கம் போன்ற அமைக்கும் பணிகளை இடம்பெற்று வருகின்றன. அப்பணிகள் நிறைவடைந்தமையுடன் கப்பல் சேவையினை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம். கப்பல் சேவை தொடர்பிலான நல்லதொரு செய்தியினை மக்களுக்கு விரைவில் அறிவிப்போம் என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/161514
  7. மொஸ்கோவிலுள்ள கட்டடத்தின் மீது 2 ஆவது தடவையாக ட்ரோன் தாக்குதல் Published By: SETHU 01 AUG, 2023 | 10:17 AM ரஷ்யாவின் மொஸ்கோ நகரிலுள்ள கட்டடமொன்று இரு தினங்கள் இடைவெளியில் இன்று இரண்டாவது தடவையாகவும் ட்ரோன் தாக்குதலுக்கு இலக்காகியது. மொஸ்க்வா சிட்டி கொம்பிளக்ஸ் எனும் கட்டடம் நேற்றுமுன்தினம் உக்ரேனின் ட்ரோன் தாக்குதலுக்குள்ளானது. இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் அக்கட்டடம் ட்ரோன் தாக்குதலுக்கு இலக்கானது என மேயர் சேர்ஜி சோபியானின் தெரிவித்துள்ளார். உக்ரேனின் பல ட்ரோன்களை ரஷ்ய படையினர் சுட்டுவீழத்தியதாகவும் ஆனால், ஒரு ட்ரோன் மேற்படி கட்டடத்தை தாக்கியதாவும் அவர் குறிப்பிட்டார். இக்கட்டத்தின் 21 ஆவது மாடி முகப்பு சேதமடைந்துள்ளதாகவும், இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை எனவும் அவர் கூறினார். இத்தாக்குதலுககு உக்ரேன் மீது ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது. ஆனால், பொதுவாக மொஸ்கோ மீதான ட்ரோன் தாக்குதல் தொடர்பில் உக்ரேன் நேரடியாக கருத்து தெரிவிப்பதில்லை. எனினும், நேற்றுமுன்தினம் நடந்த தாக்குதலின் பின்னர், யுத்தமானது ரஷ்யா பிராந்தியத்துக்கு திரும்புகிறது என உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, உக்ரேனின் கிறைவ்யி றிஹ் நகரில் ரஷ்யா நேற்று ஏவுகணைத் தாக்குதலில், 10 வயது சிறுமி உட்பட அறுவர் பலியானதுடன் மேலும் 75 பேர் காயமடைந்துள்ளனர்என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/161386
  8. தாய்லாந்தின் நன்கொடையான முத்துராஜா யானையை இலங்கை உரிய முறையில் பராமரிக்க இயலாத நிலைமை தொடர்பில் அதிருப்தி! 31 JUL, 2023 | 03:38 PM யானைகளுக்குப் புகழ் பெற்ற இலங்கை, தாய்லாந்தின் நன்கொடையாகப் பெற்ற முத்துராஜா யானையை உரிய முறையில் பராமரிக்க இயலாத நிலைமை ஏற்பட்டது. குறித்த சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான நாடாளுமன்ற மேற்பார்வைக் குழு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தின் மூலம் இலங்கைக்கு பெரும் அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாக மேற்படி குழுவின் தலைவரான கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென அஜித் மன்னப்பெரும சுட்டிக்காட்டினார். வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சு மற்றும் விலங்கியல் திணைக்களம் மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் வருடாந்த அறிக்கைகளை பரிசீலிப்பதற்காக கடந்த (18) நாடாளுமன்றத்தில் சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான நாடாளுமன்ற மேற்பார்வைக் குழு கூடியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/161335
  9. கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி : போராட்டம் முன்னெடுப்பு Published By: VISHNU 28 JUL, 2023 | 02:05 PM கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவம் மற்றும், கண்காணிப்பை வலியுறுத்தியும் தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை விவகாரம் உள்ளிட்ட தமிழர் தாயகத்தில் இடம்பெறும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இன்று வெள்ளிக்கிழமை (28) முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணியானது, இறுதிக்கட்ட போரின்போது தமிழ் மக்கள் மக்கள் இராணுவத்திடம் உறவுகளைக் கையளித்ததாகக் கூறப்படும் பகுதியான, முல்லைத்தீவு நீதிமன்றிற்கு அருகில் ஆரம்பமானது. இவ்வாறு ஆரம்பமான ஆர்ப்பாட்டப் போரணி தொடர்ந்து நீதிமன்றுக்கு முன்பாகச் சென்று மாங்குளம் முல்லைத்தீவு வீதியூடாக மாவட்ட செயலகத்தை வந்தடைந்து. அங்கு மிகப் பாரிய அளவில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. மேலும் இவ்வார்ப்பாட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தனியார் போக்குவரத்து சங்கங்கள், வர்த்தக சங்கங்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பெருந்திரளான பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வெள்ளிக்கிழமை (28) போராட்டம் மற்றும் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கமும், யாழ்ப்பாண வணிகர் கழகம், தனியார் பேரூந்து நிலைய உரிமையாளர்கள் சங்கம், முச்சக்கரவண்டிகள் சாரதிகள் சங்கம், வியாபார ஸ்தாபனங்கள், அங்காடி கடைத்தொகுதிகள் ஆகியன இணைந்து இன்றையதினம் பூரண ஹர்த்தலுக்கு ஆதரவு செலுத்தியுள்ளன. யாழ்ப்பாண மாநகர பகுதிகளிலும் வியாபார நிலையங்கள், அங்காடி கடைத்தொகுதிகள் என்பன பூட்டப்பட்டு இருந்ததன. ஹர்த்தலுக்கு ஆதரவு செலுத்தும் வகையில் தனியார் பேருந்துகள், முச்சக்கரவண்டிகள் என்பவற்றின் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/161132
  10. மனிதப்புதைகுழிகள் விடயத்தில் அரசு நீதியாக நடந்து கொள்ளவில்லை ; அருட்தந்தை மா.சத்திவேல் Published By: VISHNU 26 JUL, 2023 | 03:36 PM மனிதப்புதைகுழிகள் விடயத்தில் அரசு நீதியாக நடந்து கொள்ளவில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அருட்தந்தை மா.சத்திவேல் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் பாரிய மனிதப் புதைக்குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் காணாமலாக்கப்பட்ட தம் உறவுகளைத் தேடியும், நீதி கேட்கும் தொடர் போராட்டம் நடாத்தி வரும் வடக்கு- கிழக்கு காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்கம் சர்வதேச நீதி கோரி எதிர்வரும் 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடகிழக்கு முழுவதும் கடையடைப்பு ஹர்த்தால் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளது. அத்தோடு அன்றைய தினம் அவர்கள் பேரணியும் நடத்த ஒழுங்கு செய்துள்ளனர். இதற்கு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு ஒத்துழைப்பு நல்குவதோடு அரசியல் நீதிக்காக கொடுக்கும் அனைத்து சக்திகளையும் ஆதரவு நல்குமாறும் கேட்டுக்கொள்கின்றது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதை குழிகள் விடயத்தில் அரசு நீதியாக நடந்து கொள்ளவில்லை என்பதுவே உண்மை. குற்றவாளிகள் வெளியில் தெரியக்கூடாது. வெளியில் தெரிந்து நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டாலும் அவர்களுக்கு தண்டனை கிடைக்கக்கூடாது. தண்டனை கிடைத்தாலும் தண்டனையை முழுமையாக அனுபவிக்க கூடாது என்ற மனநிலையில் பேரினவாத ஆட்சியாளர்கள் மட்டுமல்ல அதே சிந்தனையுள்ள எதிரணியினரும் உள்ளனர். மனிதப்புதைகுழிகள் விடயத்தில் அரசியல் தலையீடு தொடர்ந்துள்ளது என்பதை அன்மையில் இது தொடர்பில் ஆராய்ந்த மூன்று அமைப்புக்களின் கூட்டு அறிக்கை வெளி கொண்டுவந்துள்ளது. இந்நிலையில் இறுதியாக கண்டுபிடிக்கப்பட்ட கொக்குதொடுவாய் மனித புதைகுழியில் சீருடைகளோடு மனித எச்சம் காணப்படுகையில் சர்வதேச சட்டதிட்டங்கள், நியதிகள் என்பவற்றோடும் சர்வதேச நிபுணர் குழுவினரின் வழிகாட்டலோடும் புதைகுழி அகலப்படவும் ஆய்வு செய்ய வேண்டும். இதற்கான அழுத்தமாகவே ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்து பேரணி நடத்துகின்றனர். இனவாத வன் செயல்களால் கொல்லப்பட்டு யுத்தத்தில் கொல்லப்பட்டோரை நினைவு கூரக்கூடாது நினைவு கூறினாலும் மீண்டும் அவர்கள் வரப்போவதில்லை என்பதுவே தெற்கின் சிந்தனை. கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மற்றும் எண்பத்திமூன்று கறுப்பு ஜூலை நினைவேந்தல் நடத்தப்பட்ட போது அங்கு குழப்புவதற்காக வந்த குண்டர்கள் கூறினர். அதுவே பேரினவாத மற்றும் மதவாத அரசியல் வாதிகளினதும் கருத்தியல். தமிழர்களுக்கு இனி எத்தகைய நீதியும் இலங்கையில் கிடைக்கப் போவதில்லை இதுவே இன்றைய சூழ்நிலை. இத்தகைய பின்னணியில் யுத்த குற்றங்களுக்கும், காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுக்கும், கண்டுபிடிக்கப்படும் மனித புதைக்குழிகளின் ஆய்விலும் இலங்கையில் நீதியை அடைய முடியாது. சர்வதேச தலையீடு அவசியம் என்பதை வலியுறுத்தி காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் நடத்தும் கடை அடைப்புக்கும், பேரணிக்கும் தாயக தமிழர்கள் ஆதரவு வழங்குவதே அரசியல் நீதி என்றார். https://www.virakesari.lk/article/160976
  11. வவுனியா, தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் வைபவ வீடொன்றில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல் மற்றும் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் பலத்த காயமடைந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார். தீக்காயங்களுக்கு உள்ளாகி வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த நபர், மேலதிக சிகிச்சைக்காக அவரது உறவினர்களால் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 23 ஆம் திகதி பிறந்தநாள் விழா நடைபெற்ற வீடொன்றுக்குள் புகுந்த 8 பேர் அங்கிருந்தவர்களை கூரிய ஆயுதங்களால் தாக்கியதுடன் குறித்த வீட்டுக்கு தீ வைத்ததில் 22 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் காயமடைந்திருந்த பெண்ணின் கணவரே இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/265202
  12. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதிகோரி எதிர்வரும் 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
  13. இந்தியா – இலங்கை பயணிகள் படகு சேவை இன்னும் 06 மாதங்களில் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் படகு சேவையை ஆரம்பிக்க இன்னும் 6 மாதங்கள் ஆகும் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாகப்பட்டினத்தில் பயணிகள் முனையம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கியுள்ளதாகவும், பணிகள் முடிவடைய இன்னும் 4 முதல் 5 மாதங்கள் ஆகும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், அக்டோபர் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் வடகிழக்கு பருவமழையின் நிலையைப் பொறுத்து கால அளவு மாறலாம் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://thinakkural.lk/article/264880
  14. ரஷ்ய தலைநகரில் உக்ரேனிய ட்ரோன்கள் தாக்குதல் Published By: SETHU 24 JUL, 2023 | 12:22 PM ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் உக்ரேனின் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) இன்று தாக்குதல் நடத்தியுள்ளன. மொஸ்கோவிலுள்ள இரு கட்டடங்கள் மீது உக்ரேனிய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதலில் எவரும் காயமடையவில்லை என் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொஸ்கோ வான்பரப்பில் உக்ரேனின் இரு ட்ரோன்களை தாம் சுட்டுவீழ்த்தியாகவும், அவற்றில் ஒன்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு கட்டடத்துக்கு அருகில் ஒரு ட்ரோன் வீழ்ந்ததாகவும் மற்றொரு அலுவலகக் கட்டடமொன்றின் மீது மோதியதாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரேனிடமிருந்து ரஷ்யா கைப்பற்றிய கிரைமியா பிராந்தியத்திலுள்ள ரஷ்ய ஆயுதக் களஞ்சியமொன்றின் மீதும் உக்ரேனிய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரேனின் ஒடிசா நகரில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என உக்ரேன் நேற்று சூளுரைத்த நிலையில் இத்தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. https://www.virakesari.lk/article/160783
  15. இந்தியா-இலங்கை இடையே பாலம் அமைக்கும் திட்டத்தால் 'ராமர் பாலம்' சேதமடையுமா? பட மூலாதாரம்,PMD SRI LANKA கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 23 ஜூலை 2023, 02:40 GMT இலங்கை, இந்தியாவை இணைக்கும் வகையில் பாலம் ஒன்றை அமைப்பது தொடர்பான பேச்சு மீண்டும் தொடங்கியுள்ளது. இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின்போது இந்த விஷயம் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தை அமைப்பது உண்மையில் சாத்தியமா? இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே பாலம் அமைப்பதால் 'ராமர் பாலம்' என்று நம்பப்படும் சுண்ணாம்புத் திட்டுகளுக்கு பாதிப்பு ஏற்படுமா? அரசியல்ரீதியாக இந்தப் பாலம் அமைக்கும் திட்டம் என்ன மாதிரியான தாக்கத்தை சர்வதேச அரசியலில் ஏற்படுத்தும்? பாஜக அரசு இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லுமா? அப்படிச் செய்வதால் இந்தியாவுக்கு என்ன பயன்? இவை குறித்து இங்கு விரிவாகப் பார்ப்போம். இரண்டு நாடுகளையும் இணைக்கும் வகையிலான பல்வேறு திட்டங்கள் தொடர்பாக, ரணில் விக்ரமசிங்கவின் இந்திய பயணத்தின்போது, இந்திய பிரதமர் நரேந்திர மோதி கலந்தாலோசித்துள்ளார். குறிப்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான படகு சேவையை மீள ஆரம்பித்தல், விமான சேவைகளை விஸ்தரித்தல், குழாய் மின் இணைப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் கலந்துரையாடினர். இதில் இரண்டு நாடுகளுக்கும் இடையே தரைவழிப் பாதையை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும் என இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார். இந்தியா - இலங்கைக்கு இடையே பாலம் அமைக்கும் திட்டம் இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் பாலம் அமைக்கும் திட்டம் தொடர்பில் பல ஆண்டு காலமாகப் பேசப்பட்டு வருகின்றது. இந்த பாலத்தை அமைப்பது தொடர்பில் 2015ஆம் ஆண்டு பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. தனுஷ்கோடி, தலைமன்னார் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் 35 கோடி ரூபாய் செலவில் இந்த பாலம் அமைக்கத் திட்டமிடப்பட்டு வந்ததாக அந்த காலப் பகுதியில் இந்திய ஆளும் கட்சி உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர். இதற்கான நிதியுதவிகளைப் பெற்றுக்கொள்ளும் திட்டங்கள் குறித்தும் அப்போது கலந்தாலோசிக்கப்பட்டிருந்தது. பட மூலாதாரம்,PMD SRI LANKA படக்குறிப்பு, தெற்காசியப் பிராந்திய போக்குவரத்து வழித்தடங்களை இணைக்கும் வகையில் இந்த திட்டத்தை முன்னெடுக்க அப்போது யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இலங்கையில் 2015ஆம் ஆண்டு பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க, இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்ட தருணத்தில் பிரதமர் நரேந்திர மோதி இந்த விடயம் குறித்து அப்போதும் கலந்துரையாடியுள்ளார். இந்தத் திட்டத்திற்கான நிதியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தயாராக இருந்தது என இந்தியாவின் அப்போதைய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அப்போது தெரிவித்திருந்தார். தெற்காசிய பிராந்திய போக்குவரத்து வழித்தடங்களை இணைக்கும் வகையில் இந்தத் திட்டத்தை முன்னெடுக்க அப்போது யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. எனினும், அதற்குப் பிறகு அந்தப் பேச்சுவார்த்தைகள் கைவிடப்பட்டன. ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த நேரத்தில், பிரதமர் நரேந்திர மோதியால் முன்வைக்கப்பட்ட அதே திட்டத்தை, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னரும், நரேந்திர மோதி முன்வைத்துள்ளார். ‘ராமர் பாலம்’ என்று அழைக்கப்படும் திட்டுக்கள் பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, ராமேஸ்வரம், மன்னார் பகுதிகளை இணைக்கும் வகையில் சுண்ணாம்புக் கற்களால் ஆன இந்த வடிவம் சுமார் 30 கி.மீ. தூரத்திற்கு அமைந்துள்ளது இலங்கை, இந்தியாவை இணைக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறப்படும் இயற்கையான வடிவங்கள் ‘இராமர் பாலம்’ அல்லது ‘ஆதாமின் பாலம்’ என அழைக்கப்படுகின்றது. ராமேஸ்வரம், மன்னார் பகுதிகளை இணைக்கும் வகையில் சுண்ணாம்புக் கற்களால் ஆன இந்த வடிவம் சுமார் 30 கி.மீ. தூரத்திற்கு அமைந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் பாலம் கட்டப்படும் என்றால், இந்தப் பாலத்தைச் சார்ந்து அமைக்கப்படுமா அல்லது வேறு விதமாக அமைக்கப்படுமா என இதுவரை உறுதி செய்யப்படவில்லை. நிலவியல் ரீதியாக பாலம் அமைப்பது சாத்தியமா? பட மூலாதாரம்,UNIVERSITY OF COLOMBO படக்குறிப்பு, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் பகுதியானது, மிகவும் ஆழம் குறைந்த பகுதி என்பதால் எளிதாகப் பாலம் அமைக்க முடியும் எனக் கூறுகிறார் பேராசிரியர் எஸ்.ஏ.நோர்பட். நிலவியல் ரீதியாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாலம் அமைப்பது சாத்தியம்தான் எனக் கூறுகிறார் பேராசிரியர் எஸ்.ஏ.நோர்பட். கொழும்பு பல்கலைக்கழகத்தின் நிலவியல் துறை முன்னாள் சிரேஷ்ட பேராசியரான இவர் பிபிசி தமிழிடம் பேசியபோது, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலுள்ள கடல் பகுதி மிகவும் ஆழம் குறைவானது என்பதால் மிக எளிதாகப் பாலம் அமைக்க முடியும் என்றார். சேது சமுத்திர திட்டம் பல ஆண்டுக்காலமாகப் பேசப்பட்டு வருகின்றது. ஆனால், அதிலுள்ள நடைமுறை சவால்களைப் போல் இந்தத் திட்டத்தில் ஏதேனும் சவால்கள் உள்ளனவா எனக் கேட்டபோது "இதில் அப்படியான சவால் ஏதும் இல்லை" என்கிறார் எஸ்.ஏ.நோபர். சேது சமுத்திர திட்டம் சாத்தியமில்லை என்ற போதிலும், இலங்கை - இந்தியாவுக்கு இடையில் பாலம் அமைப்பது சாத்தியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார். ''இந்தப் பாலம் அமைப்பது பெரிய விஷயம் இல்லை. இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையில் இருக்கும் கடல் பகுதி ஆழம் குறைவானது. அந்த ஆழம் குறைவான பகுதிகளின் ஊடாக காங்க்ரீட் தூண்களை நிறுத்தி, பாலம் அமைக்க முடியும். இதில் ஒரு பிரச்னையும் கிடையாது. அது பாலம் அமைப்பதற்குச் சாத்தியமான பகுதிதான்,” என்றார் நோபர்ட். ஆனால், இது புவியியல் ரீதியாக இலங்கையைப் படிப்படியாகத் தங்களுடைய பிரதேசமாக்குவதற்கான இந்தியாவின் முதல் படி என்றும் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, "தனுஷ்கோடியிலிருந்து கடலுக்குள் பாக் நீரிணையின் ஊடாகப் பாலம் அமைக்க முடியும்," என்று விளக்குகிறார் பேராசிரியர் எஸ்.ஏ.நோபர்ட் “பாலம் ஒன்று அமைக்கப்படும்போது, போக்குவரத்து உள்ளிட்ட அனைத்தும் தங்களுடைய கைக்குள் வந்துவிடும். சீனா உள்ளிட்ட பல நாடுகள் கடலுக்குள் பாலங்களை அமைத்துள்ளன. ஆகவே, தற்போதுள்ள தொழில்நுட்ப வசதிகளின் மூலம் இது சாத்தியப்படக்கூடிய விஷயம்தான்," என்கிறார் பேராசிரியர் எஸ்.ஏ.நோபர்ட். ''தனுஷ்கோடியிலிருந்து பாதை அமைப்பது இலகுவானது. அவ்வளவு தூரம் கிடையாது. தனுஷ்கோடியிலிருந்து கடலுக்குள் பாக் நீரிணையின் ஊடாகப் பாலம் அமைக்க முடியும். இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடைப்பட்ட பகுதியில் சுண்ணாம்புக் கற்கள் நிரம்பியுள்ளன. அந்தச் சுண்ணாம்புக் கற்களில்தான் தூண்களை இறக்கி பாலம் அமைப்பார்கள். தனுஷ்கோடியிலுள்ள ரயில் பாலத்தைப் போன்றதொரு பாலத்தை அமைப்பார்கள்," என்று அவர் விளக்கினார். சுண்ணாம்புக் கற்கள் சேதமாகுமா? இந்தப் பாலம் அமைக்கப்படும்போது, பாக் நீரிணையில் உள்ள சுண்ணாம்புக் கற்களுக்கு சேதங்கள் ஏற்படும் சாத்தியம் உள்ளதா? என கொழும்பு பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் எஸ்.ஏ.நோர்பட்டிடம் வினவினோம். இதுகுறித்து விளக்கமளித்த நோபர்ட், "அது மிகப்பெரிய சுண்ணாம்புத் திட்டு" என்றும் பாலம் அமைப்பதால் அதில் எந்தவித சேதமும் ஏற்படாது எனவும் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான இணைப்புகளை மேற்கொள்ளாது இருப்பதற்கே இந்தியா முயன்று வருவதாக சர்வதேச அரசியல் தொடர்பான செய்தியாளர் சதீஷ் கிருஸ்ணபிள்ளை கூறுகிறார். இந்திய - இலங்கை பாலம் சர்வதேச அரசியலில் தாக்கம் செலுத்துமா? இந்தியா, இலங்கைக்கு இடையில் பாலம் அமைக்கப்படாது என சர்வதேச அரசியல் தொடர்பான செய்தியாளர் சதீஷ் கிருஸ்ணபிள்ளை தெரிவிக்கின்றார். இரு நாடுகளுக்கும் இடையிலான இணைப்புகளை மேற்கொள்ளாது இருப்பதற்கே இந்தியா முயன்று வருவதாகவும் அவர் கூறுகிறார். ''உண்மையில் பாலம் அமைக்கமாட்டார்கள். இதுவரை படகு சேவைகூட ஆரம்பிக்கப்படவில்லை. ஏப்ரல் 28ஆம் தேதி படகு சேவை ஆரம்பிக்கப்படும் எனச் சொல்லியிருந்தார்கள். சிங்கப்பூரிலுள்ள ஒரு இலங்கை தமிழருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எனினும், இந்திய அரசாங்கம் அதைத் தடுத்தது. மத்திய அரசாங்கத்திற்கும், மாநில அரசாங்கத்திற்கும் இடையில் சிக்கல் இருக்கின்றது. இந்த அகண்ட பாரத கோட்பாடு, தேசிய கோட்பாடுகள் இருப்பதால், இதில் முரண்பாடுகள் இருக்கின்றன,” என்றும் அவர் தெரிவித்தார். இலங்கைக்கும், இந்தியாவிற்குமான எந்தவொரு தொடர்பும், இணைந்த வடக்கு, கிழக்கு தாயகத்தோடு இணையக்கூடிய ஒரு தொடர்பாகத்தான் இருக்கும் எனவும் சதீஷ் கிருஸ்ணபிள்ளை கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாலம் அமைத்தாலும் கூட தமிழர்கள் தமது தாயகமாகக் கருதக்கூடிய இணைந்த வடக்கு, கிழக்குடன் தொடர்புபடுமே தவிர, அது கொழும்பிற்கும், இந்தியாவிற்குமான தொடர்பாக இருக்காது என்கிறார் அவர். பாலம் அமைத்தாலும்கூட தமிழர்கள் தமது தாயகமாகக் கருதக்கூடிய இணைந்த வடக்கு, கிழக்குடன் தொடர்பு படுமே தவிர, அது கொழும்பிற்கும், இந்தியாவிற்குமான தொடர்பாக இருக்காது என்கிறார் அவர். அது இந்தியாவின் மத்திய அரசாங்கத்திற்கு ஒரு சிக்கல் எனக் கூறும் சதீஷ், “இலங்கை நிறைய திட்டங்களைச் சொல்லியிருக்கின்றது. தலை மன்னாருக்கும், தனுஷ்கோடிக்கும இடையில் ரயில் பாலம் இருந்தது. கப்பல் சேவை இருந்தது எனச் சொன்னார்கள். காங்கேசன்துறைக்கும், பாண்டிச்சேரிக்கும் இடையிலான படகு சேவை என இறுதியாகச் சொன்னார்கள். ஆனால், இன்று வரை அனுமதி வழங்கப்படவில்லை. எல்லா அனுமதியும் கிடைத்த பின்னர் இந்திய கப்பல்துறை அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளது. இப்போதும் நாம் நடக்காத விஷயத்தைத்தான் பேசுகிறோம். பாலம் அமைப்பதற்கு இந்திய அரசு விடவே விடாது," எனக் கூறுகிறார் சதீஷ் கிருஸ்ணபிள்ளை. பாஜக அரசுக்கு இந்தப் பாலம் அமைக்க விருப்பமில்லையா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இரண்டு நாடுகளுக்கும் இடையில் பாலம் அமைப்பதற்கு பாஜக விரும்பாது எனவும் சதீஷ் கிருஸ்ணபிள்ளை குறிப்பிடுகின்றார். இரண்டு நாடுகளுக்கும் இடையில் பாலம் அமைப்பதற்கு பாஜக விரும்பாது எனவும் சதீஷ் கிருஸ்ணபிள்ளை குறிப்பிடுகின்றார். 'இந்த மாதிரியான பாலங்கள் அமைப்பது என்பது மிகப்பெரிய அரசியல். பிரான்சுக்கும், பிரட்டனுக்கும் இடையில் பாலம் அமைக்கப்பட்டது. ஏதோவொரு தொழில்நுட்பத்தின் ஊடாக சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. ஆனாலும், இன்று எல்லைக் கட்டுப்பாடு மிகப்பெரிய பிரச்னையாக இருக்கின்றது. பிரான்ஸில் உள்ள சட்டவிரோத அகதிகள் அந்தப் பாலத்தின் வழியாகச் செல்கின்றார்கள். அது பிரான்ஸ் அரசாங்கத்திற்கும், பிரிட்டன் அரசாங்கத்திற்கும் இடையில் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கின்றது,” என்று அவர் விவரித்தார். ஐரோப்பிய யூனியனை எடுத்துக்கொண்டால், பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் இல்லை. அப்படியில்லாத சந்தர்ப்பத்தில் அவர்களின் விசா தயார்படுத்தலை எப்படிச் செய்வது என்ற சிக்கல் இருக்கின்றது. இந்நிலையில், “உச்ச சக்தி கொண்ட நாடான இந்தியா, பாலம் அமைத்து நாம் அங்கு இலவசமாகச் செல்வதைப் பெரிதாக விரும்பாது. குறிப்பாக பாஜக அரசாங்கம் அதைச் செய்யாது," என்று செய்தியாளர் சதீஷ் கிருஸ்ணபிள்ளை தெரிவிக்கின்றார். https://www.bbc.com/tamil/articles/cv2p4v0ngqvo
  16. NEW WORLD RECORD | Men’s Pole Vault | Mondo Duplantis, 6.22m (20ft 5in)!
  17. 2014இல் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் முக்கிய குற்றவாளியான ரஸ்ய இராணுவ அதிகாரியை கைதுசெய்தார் புட்டின் - புட்டினை விமர்சித்ததால் வந்த வினை! Published By: RAJEEBAN 22 JUL, 2023 | 02:21 PM 2014இல் உக்ரைன் வான்பரப்பிற்கு மேலாக மலேசியன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டமைக்கு காரணமானவர் என சர்வதேச நீதிமன்றத்தினால் குற்றம்சாட்டப்பட்ட ரஸ்யாவின் முன்னாள் இராணுவ அதிகாரி இகோர் கேர்கின் புட்டின் உக்ரைன் நடவடிக்கையை தொடர்ச்சியாக விமர்சித்து வந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார். தன்னை ரஸ்ய தேசியவாதி என அறிவித்த இகோர் கேர்கின் ரஸ்ய ஜனாதிபதியை தொடர்ச்சியாக விமர்சித்து வந்த நிலையில் தீவிரவாத குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 2014 இல் உக்ரைன் வான்பரப்பில் எம்எச் 17 சுட்டுவீழ்த்தப்பட்டதில் இவருக்கும் தொடர்புள்ளது அந்த சம்பவத்தின் பின்னர் மொஸ்கோ சென்ற இவர் தலைமறைவானார். உக்ரைன் மீதான போரை தீவிரமாக ஆதரித்த வந்த இவர் சமீபகாலங்களில் புட்டினின் நடவடிக்கையை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தார் – புட்டினின் வீழ்ச்சி குறித்து கடந்தவாரம் இவர்கருத்து வெளியிட்டிருந்தார். இதனை தொடர்ந்தே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் தனது கணவனை காணவில்லை என கேர்கினின் மனைவி சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். நான் வீட்டிற்கு வந்தவேளை அவரை காணவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தனது கணவர் எங்கிருக்கின்றார் என்பது தெரியவில்லை அவர் தெரிவித்துள்ளார் இந்த தகவல் வெளியான பின்னர் கேர்கின் ரஸ்ய நீதிமன்றமொன்றில் அதிர்ச்சியடைந்த நிலையில் காணப்படும் படம் வெளியாகியுள்ளது – அவருக்கு எதிராக தீவிரவாதத்தை தூண்டிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இகோர் கேர்கின் யார்? இகோர் கேர்கின் அதிகம் அறியப்படாத ஒரு நபர் அவரது கடந்த காலங்கள் குறித்து அதிக தகவல்கள் இல்லை, அவர் 1970 இல் மொஸ்கோவில் பிறந்தவர். செச்னியாவில் போரிட்ட ரஸ்ய சோவியத் படைகளை சேர்ந்தவரான இவருக்கு டெரிபில் என்ற பட்டப்பெயர் உள்ளது. 2001 இல் ஆறு செச்னியர்களை வீட்டிலிருந்து வெளியே கொண்டு சென்று கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டு இவர் மீது உள்ளது. 1992 இல் பொஸ்னிய நகரத்தில் முஸ்லீம்களை படுகொலை செய்த குற்றச்சாட்டும் இவருக்கு எதிராக உள்ளது. https://www.virakesari.lk/article/160643
  18. பாக்குநீரிணை ஊடாக நில இணைப்பை ஏற்படுத்தும் திட்டம் - இந்திய இலங்கை தலைவர்கள் சந்திப்பின் பின்னர் தகவல் Published By: RAJEEBAN 22 JUL, 2023 | 06:20 AM (AFP) இந்தியாவும் இலங்கையும் தங்களுக்கிடையில் நில இணைப்பை உருவாக்குவது குறித்து ஆராய்வதற்கு வெள்ளிக்கிழமை இணங்கியுள்ளன. இந்தியாவும் இலங்கையும் தங்களுக்கிடையில் நிலதொடர்பை ஏற்படுத்துவது குறித்து ஆராய்வதற்கு இணங்கியுள்ளதாக தெரிவித்துள்ளன. இலங்கை ஜனாதிபதியின் பிராந்திய வல்லரசிற்கான விஜயத்தின் போது இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. பாக்குநீரிணை ஊடாக நில இணைப்பை ஏற்படுத்துவது திருகோணமலை கொழும்பு போன்றவற்றை இந்தியா சென்றடைவதை இலகுவாக்கலாம் மில்லேனியம் வருட உறவுகளை வலுப்படுத்தலாம் என இரண்டு தலைவர்களும் இணைந்து வெளியிட்டுள்ள மூலோபாய ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரைப்பாலம் மற்றும் பெட்ரோலிய குழாய்களுக்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வுகள் இடம்பெறும் என இந்திய பிரதமர் நரேந்திரமோடி பேச்சுவார்த்தைகளின் பின்னர் தெரிவித்துள்ளார். இலங்கை எதிர்கொண்ட முன்னொருபோதும் இல்லாத பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அவருக்கு முன்னர் ஜனாதிபதியாக பதவிவகித்தவர் பதவியிலிருந்து அகற்றப்பட்ட நிலையில் ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க ஒருவருடகாலத்தின் பின்னர் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். உணவு எரிபொருள் மருந்துபோன்றவற்றிற்கான தட்டுப்பாடுகள் காரணமாக இலங்கை கடந்த வருடம் நாளாந்த ஆர்ப்பாட்டங்களை எதிர்கொண்டது,இலங்கை தனது 4.6 பில்லியன் டொலர் கடனை செலுத்த முடியாமல் வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்ட போதிலும் இந்தியா 4 பில்லியன் டொலர் நிதி உதவியை வழங்கியது. இலங்கை கடந்தவருடம் பல சவால்களை எதிர்கொண்டது ஆனால் நாங்கள் இலங்கை மக்களுடன் நெருங்கிய நண்பனை போல தோளோடு தோள் நின்றது என மோடி தெரிவித்தார். இலங்கை ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைகளில் சீனாவின் பிரசன்னம் குறித்த கரிசனையும் வெளியிடப்பட்டது என இந்தியாவின் வெளிவிவகார செயலாளர் தெரிவித்தார். இந்தியா இலங்கையை தனது கொல்லைப்புறமாக கருதுவதுடன் இலங்கையிலும் பிராந்தியத்திலும் சீனாவின் பிரசன்னம் குறித்து இந்திய அதிகாரிகள் அச்சமடைந்துள்ளனர். இலங்கைக்கு அதிகளவு கடன்களை வழங்கிய நாடாக சீனா காணப்படுகின்றது - இலங்கையால் மிகப்பெரிய கடனை சீனாவிற்கு திருப்பி செலுத்த முடியாத நிலையேற்பட்டதை தொடர்ந்து அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனம் 99 வருட குத்தகைக்கு எடுத்தது. கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் 1.4 பில்லியன் டொலர் திட்டத்தினை சீனா முன்னெடுத்துள்ளது-இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய வெளிநாட்டு முதலீடு இது – சீனா இதனை தனது வேவுநடவடிக்கைகளிற்கு பயன்படுத்தலாம் என இந்தியா அச்சமடைந்துள்ளது. https://www.virakesari.lk/article/160621
  19. பட மூலாதாரம்,PMD SRI LANKA படக்குறிப்பு, இந்திய பிரதமர் மோதியுடன் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க சந்திப்பு கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 21 ஜூலை 2023, 11:22 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் அதிகாரபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. புதுடெல்லியிலுள்ள பிரதமரின் அதிகாரபூர்வ வாசஸ்தலத்தில் இந்த சந்திப்பு இன்று காலை இடம்பெற்றது. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் இன்றுடன் பூர்த்தியாகின்ற நிலையில், இந்த விஜயமானது மிகவும் முக்கியத்துவமானதாக கருதப்படுகின்றது. இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. 5 ஒப்பந்தங்கள் கையெழுத்து இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் ஐந்து புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இந்தியா - இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் கால்நடை பராமரிப்புத்துறையில் கூட்டு நோக்கத்தின் பிரகடனம், இந்தியா மற்றும் இலங்கை இடையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை, திருகோணமலை மாவட்ட திட்டங்களின் பொருளாதார அபிவிருத்திக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை, இலங்கைக்குள் யூ.பி.ஐ டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல் முறையை மேம்படுத்தல் மற்றும் சம்பூர் சூரிய மின்சக்தி திட்டத்திற்கான எரிசக்தி அனுமதிப் பத்திரம் இலங்கையிடம் கையளிப்பு போன்ற உடன்படிக்கைகள் கைமாற்றப்பட்டுள்ளன. இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவுகளின் எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைப்பதே இந்த விஜயத்தின் நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கான தனது அதிகாரபூர்வ விஜயத்தின் போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மேம்படுத்தப்பட்ட பொருளாதார, உட்கட்டமைப்பு, தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பாராட்டியுள்ளார். இந்தியாவின் வளர்ச்சி அயல் நாடுகள் மற்றும் இந்து சமுத்திர வலய நாடுகளுக்கு சாதகமான தன்மையை ஏற்படுத்தும் என்று ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இலங்கை கடந்த ஆண்டுகளில் எதிர்நோக்கிய பாரிய பொருளாதார நெருக்கடியின் போது, இந்தியா வழங்கிய ஆதரவுக்கு இலங்கை ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார். படக்குறிப்பு, இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூவுடன் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க இலங்கையில் அதிகாரப் பகிர்வு பற்றி பேச்சு இலங்கையில் அனைவரும் பொருளாதார மறுமலர்ச்சி, நிலையான அபிவிருத்தி, நீதி ஆகியவற்றை அடைவதற்கான தனது அர்ப்பணிப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். நல்லிணக்கம், அதிகாரப் பகிர்வுக்கான விரிவான திட்டத்துடன் இணக்கத்தை எட்டுவதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். இந்த முயற்சிகளுக்கு பிரதமர் மோடி தனது ஆதரவையும், ஒத்துழைப்பையும் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றின் ஊடாக குறிப்பிடுகின்றது. இலங்கை பொருளாதார சீர்திருத்தங்களை சீராக அமல்படுத்தி வருவதாகவும், இந்தியப் பிரதமருடனான தூதுக்குழு மட்டத்தில் நடைபெற்ற கலந்துரையாடல்களின் மூலம் நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கான சாதகமான பெறுபெறுகளை வெளிப்படுத்தி வருவதாகவும் ஜனாதிபதி விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தம்மால் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் மூலம் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்த வழிவகுத்துள்ளதாக ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். கப்பல், விமான சேவைகளை அதிகரிக்க முடிவு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர பொருளாதார உறவுகள் குறித்து சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் எதிர்கால இந்திய - இலங்கை பொருளாதார பங்காளித்துவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இது எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறுகின்றது. பொருளாதாரப் பங்காளித்துவத்தின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் நவீன இணைப்பு முக்கியப் பங்காற்றுகிறது என்று தெரிவித்த ஜனாதிபதி, அண்மையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட சென்னை மற்றும் யாழ்ப்பாண விமானச் சேவைகள், இரு நாடுகளுக்கும் இடையிலான விமான இணைப்பில் ஒரு முக்கிய மைல்கல் என்று சுட்டிக்காட்டினார். இரு நாடுகளுக்கும் இடையில் விமான சேவைகளையும், கப்பல் சேவைகளையும் மேம்படுத்த உடன்பாடு காணப்படுவதாகவும், அது சுற்றுலா மற்றும் கலாச்சார உறவுகளை வலுப்படுத்துவதற்கும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். பட மூலாதாரம்,PMD SRI LANKA இந்தியா- இலங்கை இடையே பாலம் சாத்தியமா? சந்திப்பு தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையில் காங்கேசன்துறை இடையே பயணிகள் படகு சேவையை மீண்டும் தொடங்குதல் , ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் மற்றும் ஒப்புக்கொள்ளப்பட்ட பிற இடங்களுக்கு இடையே படகு சேவைகளை விரைவாக மீண்டும் தொடங்குவது தொடர்பாக பணியாற்றுவது குறித்து பேசப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், சென்னை - யாழ்ப்பாணம் இடையே விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டதன் மூலம் மக்களிடையே உறவுகள் மேம்படுத்துள்ளது. எனவே, இந்த விமான சேவையை கொழும்பு வரை விரிவுப்படுத்துவது குறித்தும் சென்னை மற்றும் திருகோணமலை, மட்டக்களிப்பு மற்றும் இலங்கையின் பிற இடங்களுக்கு இடையே விமான சேவையை ஏற்படுத்துவது குறித்து ஆராய்வது குறித்தும் சந்திப்பில் பேசப்பட்டது. இதேபோல் இந்தியாவின் ரூபாயில் வர்த்தகம் செய்வது, யுபிஐ முறையில் பணப்பரிமாற்றம் செய்வது போன்றவற்றுக்கும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. திருகோணமலை மற்றும் கொழும்பு துறைமுகங்களுக்கான நில அணுகலை மேம்படுத்துவதற்கும், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் பொருளாதார வளர்ச்சி மற்றும் செழிப்பை மேம்படுத்துவதற்கும், இரு நாடுகளுக்கிடையிலான பல்லாண்டு பழமையான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கும் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே தரைவழி இணைப்பை ஏற்படுத்துதல் குறித்து பேசப்பட்டது. அத்தகைய இணைப்புக்கான சாத்தியக்கூறு ஆய்வு விரைவில் நடத்தப்படும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,PMD SRI LANKA தமிழ்நாடு - இலங்கை இடையே மின்கம்பி வட இணைப்புத் திட்டம் இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையை மின்சக்தி மையமாக அபிவிருத்தி செய்வது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்துரையாடியுள்ளனர். இலங்கைக்கு மின்சக்தி வளங்களை, குறைந்த விலையிலும், நம்பகமான விநியோகத்தை உறுதி செய்யவும் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு குழாய்களை அமைப்பதற்கும் இதன்மூலம் மின்சக்தி ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையிலும் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறுகின்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயம், இரு தரப்பு நம்பிக்கையை வலுப்படுத்துவதையும், பசுமை மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களில் இந்தியாவுடன் ஒத்துழைத்துச் செயற்படுவதையும், இலங்கை - இந்திய உறவுகளின் எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைப்பதையும் நோக்கமாகக் கொண்டதாகும். புதுப்பிக்கத்தக்க மின்சக்தி ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் அதிக திறன் கொண்ட மின் கட்டமைப்பு, ஒன்றோடொன்று இணைக்கப்படுவதால், தடையற்ற இருவழி மின்சார வர்த்தகத்தை எளிதாக்குகிறது. அத்துடன், இது பிராந்தியத்தில் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தவும் நிலையான வளர்ச்சியையையும் ஊக்குவிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. திருகோணமலையை மின்சக்தி மையமாக மாற்றுவது பற்றி பேச்சு இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், மேம்படுத்தவும், தனது இந்திய விஜயம் நல்லதொரு வாய்ப்பாக அமைகிறது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். போட்டிமிகு உலகில் பரஸ்பர சுபீட்சத்தை நோக்கமாகக் கொண்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான புவியியல் மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவில் கல்வித் துறையின் வகிபாகத்தை எடுத்துரைத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்காக புதிய உயர்கல்வி நிறுவனங்களை நிறுவுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார். தலைமன்னார் - இராமேஸ்வரம் மற்றும் நாகபட்டினம் - காங்கேசன்துறை இடையேயான படகுச் சேவைகள் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் வழிப் போக்குவரத்தை மேலும் பலப்படுத்தும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஏனைய தொடர்புகளையும் ஆராய்வது பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க மேலும் ஊக்கமளிக்கும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையை மின்சக்தி மையமாக அபிவிருத்தி செய்வது குறித்து ஜனாதிபதி விக்ரமசிங்க மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் கலந்துரையாடினர். இலங்கைக்கு மின்சக்தி வளங்களை, குறைந்த விலையிலும், நம்பகமான விநியோகத்தை உறுதி செய்யவும் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு குழாய்களை அமைப்பதற்கும் இதன்மூலம் மின்சக்தி ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையிலும் கலந்துரையாடப்பட்டது. பட மூலாதாரம்,PMD SRI LANKA படக்குறிப்பு, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க. இந்திய வெளியுறவு அமைச்சருடன் ரணில் சந்திப்பு இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உயர்மட்ட கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெயசங்கரிற்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் நேற்றைய தினம் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்ட ரணில் விக்ரமசிங்கவிற்கு, வெளிவிவகார அமைச்சர் வரவேற்பளித்ததுடன், அவருடன் இருதரப்பு கலந்துரையாடல்களையும் நேற்றைய தினம் நடத்தியிருந்தார். இதேவேளை, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இரு நாட்டு பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அதானியுடன் ரணில் சந்திப்பு அத்துடன், அதானி குழுமத்தின் ஸ்தாபகத் தலைவர் கௌத்தம் அதானியுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார். இலங்கையில் அதானி குழுமத்தின் முதலீடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன. கொழும்பு துறைமுகத்தின் அபிவிருத்தி, காற்றாலை மின் உற்பத்தி திட்டம் உள்ளிட்ட அதானி குழுமத்தின் இலங்கை முதலீடுகள் குறித்து விரிவாக கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன. https://www.bbc.com/tamil/articles/c2x512501djo
  20. அமெரிக்கா வழங்கிய கொத்துக்குண்டுகளை உக்ரைன் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. 21 JUL, 2023 | 12:49 PM உக்ரைன் தான் வழங்கிய கொத்துக்குண்டுகளை பயன்படுத்துகின்றது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு பேச்சாளர் ஜோன்கிர்பி இதனை தெரிவித்துள்ளார். ரஸ்யாவின் பாதுகாப்பு முன்னரங்குகள் மற்றும் நடவடிக்கைகளிற்கு எதிராக உக்ரைன் கொத்துக்குண்டுகளை பயன்படுத்துகின்றது அது பலனளிக்கின்றது என ஜோன்கிர்பி தெரிவித்துள்ளார். உக்ரைன் உரிய விதத்தில் கொத்துக்குண்டுகளை பயன்படுத்துகின்றது என தெரிவித்துள்ள அவர்கள் அதனை பலன் அளிக்ககூடிய விதத்தில் பயன்படுத்துகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 100க்கும் மேற்பட்ட நாடுகள் கொத்துக்குண்டுகளை தடைசெய்துள்ளன. உக்ரைனின் வெடிபொருட்களை வலுப்படுத்துவதற்காக கொத்துக்குண்டுகளை அமெரிக்கா உக்ரைனிற்கு வழங்கியுள்ளது. ரஸ்ய படையினரின் நிலைகளை அழிப்பதற்கு மாத்திரம் கொத்துக்குண்டுகளை பயன்படுத்துவதாக உக்ரைன் உறுதியளித்துள்ளது. https://www.virakesari.lk/article/160571
  21. ரஸ்யாவின் உக்ரைன் மீதான சட்டவிரோத போரிற்கு ஆதரவளிப்பவர்களுக்கு எதிராக மேலும் தடைகள் - அவுஸ்திரேலியா அறிவிப்பு Published By: RAJEEBAN 20 JUL, 2023 | 12:19 PM உக்ரைன் மீது ரஸ்யா படையெடுப்பதற்கு உதவிய ரஸ்யாவை சேர்ந்த நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக அவுஸ்திரேலியா தடைகளை விதித்துள்ளது. ரஸ்யாவின் பாதுகாப்பு தொழில்நுட்பம் வலுச்சக்தி துறையை சேர்ந்த 35 அமைப்புகள் ரஸ்ய அமைச்சர்கள் சிரேஸ்ட அதிகாரிகள் பத்து பேருக்கு எதிராக அவுஸ்திரேலியா தடைகளை அறிவித்துள்ளது. சர்வதேச சகாக்களுடனான இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். உக்ரைன் விவகாரத்தில் ரஸ்யாவிற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவுபவர்களை இது தடுக்கும் என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. இன்றைய தடைகள் ரஸ்யாவின் மீதும் அதன் சட்டவிரோத ஒழுக்கநெறியற்ற யுத்தத்தை ஆதரிப்பவர்கள் மீது அழுத்தங்களை தொடர்வது குறித்த அவுஸ்திரேலியாவின் உறுதிப்பாட்டை இது வெளிப்படுத்தியுள்ளது என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த தடைகள் உக்ரைனிற்கும் அதன் இறைமை ஆள்புல ஒருமைப்பாட்டிற்குமான அவுஸ்திரேலியாவின் ஆதரவை வெளிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/160470
  22. கொக்குதொடுவாய் மனித புதைகுழியை மூடிமறைப்பதற்கு அரசாங்கத்திற்கு இடமளிக்கவேண்டாம் 20 JUL, 2023 | 02:57 PM கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியை மூடிமறைப்பதற்கு அரசாங்கத்திற்கு இடமளிக்கவேண்டாம் என சமூக ஆர்வலர் அசங்க அபேயரத்ன வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜூன் 29ஆம் திகதி முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் ஒரு குழுவினர் கால்வாய் ஒன்றை தோண்டும் போது மனித எலும்பு துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. கடந்த ஜூலை மாதம் 6ஆம் திகதி குறித்த இடத்தில் அகழ்வு பணி ஆரம்பிக்கப்பட்டதுடன் 12 புலி உறுப்பினர்கள் மற்றும் ஒருவரின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவர் விடுதலைப் புலிகளின் வதைமுகாமில் கொல்லப்பட்டு பின்னர் அங்கேயே புதைக்கப்பட்டார்கள் என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு ஆதாரங்களைத் திரித்து உண்மையான குற்றவாளிகளை மறைக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது. - அசங்க அபேரத்னஎன அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/160493
  23. உக்ரேன் போரின் போக்கை மாற்றுமா கொத்தணிக் குண்டுகள்? Published By: VISHNU 16 JUL, 2023 | 06:07 PM சுவிசிலிருந்து சண் தவராசா உக்ரேன் போரில் என்ன விலை தந்­தேனும் வெற்­றியைச் சுவைப்­பது எனத் திட­சங்கல்பத்­தோடு செயற்­படும் அமெ­ரிக்க ஏகா­தி­பத்­தியம் அடுத்த துருப்புச் சீட்­டாக தடை செய்­யப்­பட்ட கொத்­தணிக் குண்­டு­களை உக்ரேனுக்கு வழங்க முடிவு செய்­துள்­ளது. உலகின் 110 இற்கும் அதி­க­மான நாடு­களால் தடை ­செய்­யப்­பட்ட அத்­த­கைய குண்டை வழங்க வேண்­டிய தேவை என்ன என்­ப­தற்கு அமெ­ரிக்கத் தரப்பில் கூறப்­பட்­டுள்ள கார­ணமோ விசித்­தி­ர­மா­னது. ‘உக்ரேன் போரில் ரஷ்­யாவின் வெற்றி மனித குலத்­துக்கே ஒவ்­வா­தது. அத்­த­கைய வெற்­றியைத் தடுப்­ப­தாயின் கொத்­தணிக் குண்­டு­களை வழங்­கியே ஆக­வேண்டும்.’ இதுவே அமெ­ரிக்­காவின் நிலைப்­பாடு. அமெ­ரிக்கா கூறு­வதைப் போன்று போரில் ரஷ்­யாவின் வெற்றி என்­பது மனித குலத்­துக்கே எதி­ரா­னது என வைத்துக் கொண்­டாலும் கூட, அத்­த­கைய மனித குலத்­துக்கே எதி­ரான ஒன்றைத் தடுப்­ப­தற்­காக மனித குலத்­துக்கே விரோ­த­மா­னது என முடிவு செய்­யப்­பட்ட ஆயு­தங்­களைப் பயன்­ப­டுத்­து­வது எந்த வகையில் நியாயம் எனப் புரி­ய­வில்லை. இத்­த­னைக்கும், நேற்­று­வரை அதன் பாவ­னைக்கு எதி­ராகக் குரல் கொடுத்துக் கொண்­டிருந்த நாடு அமெ­ரிக்கா. உக்ரேன் போர் ஆரம்­ப­மான காலப்­ப­கு­தியில் போரில் ரஷ்யா கொத்­தணிக் குண்­டு­களைப் பாவிக்­கின்­றது என்ற குற்­றச்­சாட்டை வைத்து அதனை வன்­மை­யாகக் கண்­டித்­தி­ருந்­தது அந்­நாடு. ஆனால், ஒரு வருட இடை­வெ­ளி­யினுள் அதே கொத்­தணிக் குண்­டு­களை உக்ரேனுக்குப் பரி­ச­ளிக்­கின்­றது என்றால் அமெ­ரிக்­காவின் மனி­த­நே­யத்தின் அள­வீ­டுதான் என்ன என்ற கேள்வி எழு­கின்­றது. ‘சய’வும் ‘சய’வும் சேர்ந்தால் ‘சக’­வா­கி­விடும் எனக் கணி­தத்தில் ஒரு சமன்­பாடு இருக்­கி­றது. இரண்டு ‘மைனஸ்’கள் சேரும்­போது ஒரு ‘பிளஸ்’ வந்­து­விடும் என்­பது கணி­தத்தில் ஏற்றுக் கொள்­ளப்­படக் கூடி­ய­தாக இருக்­கலாம். அதற்­காக தீயதும் தீயதும் இணைந்தால் நல்­லது நடை­பெறும் என அதனை வியாக்­கி­யானம் செய்­வது தவறு. அமெ­ரிக்கா எது செய்­தாலும் அதனைச் சரி என ஏற்றுக் கொள்ளும் புத்­தி­சா­லிகள்(?) அநேகர் உலகில் உள்­ளனர். அவர்­களைப் பொறுத்­த­வரை ரஷ்ய அபா­யத்தில் (?) இருந்து உக்ரேனைப் பாது­காக்க ஒரே வழி இறுதி ஆயு­த­மான (?) கொத்­தணிக் குண்­டு­களை வழங்­கு­வதே. ஆனால், இதில் அறம், மனித மாண்பு என்­பவை எங்கே உள்­ளன? நவீன உலகில் அதி­க­மான நாடு­களில் போர்­களை நடத்­திய நாடு, தொடர்ந்தும் போர்­களை நடத்திக் கொண்­டி­ருக்­கின்ற நாடு எது­வெனக் கேள்வி கேட்டால் அது அமெ­ரிக்கா எனச் சிறு­பிள்ளை கூடச் சொல்­லி­விடும். அதுவே, அமெ­ரிக்­காவின் வர­லாறு. இன்று கூட உலகின் பல பாகங்­களில் நேர­டி­யா­கவும் மறை­மு­க­மா­கவும் அமெ­ரிக்­காவின் போர்கள் நடை­பெற்றுக் கொண்டே இருக்­கின்­றன. ஓய்­வில்­லாமல் தொடரும் இத்­த­கைய போர்­களில் அமெ­ரிக்­காவின் மீது பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் போர்க் குற்­றச்­சாட்­டுகள் முன் ­வைக்­கப்­பட்டு உள்­ளன. அவற்றுள் ஒரு சில­வற்றை மறு­த­லித்­துள்ள அமெ­ரிக்கா பல­வற்றைச் சட்டை செய்­த­தே­யில்லை. ஆனால், ஏனைய நாடுகள் குறிப்­பாகத் தனக்குப் பிடிக்காத நாடுகள் ஒரு சிறிய தவறை இழைத்தால் கூட அதனை ஊதிப் பெருப்­பித்து, மிகப் பாரிய குற்­ற­மாக உலகின் கண்­க­ளுக்குத் தெரிய வைப்­பதில் அமெ­ரிக்க அர­சாங்­கமும் அதன் ஊது­கு­ழல்­க­ளான ஊட­கங்­களும் வரிந்து கட்­டிக்­கொண்டு இருப்­ப­தையும் தொடர்ச்­சி­யாகப் பார்க்க முடி­கின்­றது. கொத்­தணிக் குண்­டு­களைப் பொறுத்­த­வரை அவை ஒரு குண்டில் இருந்து பல நூற்றுக் கணக்­கான சிறிய குண்­டு­களை வீசி அடிக்கக் கூடிய தன்மை வாய்ந்­தவை. அவ்­வாறு வீசி அடிக்­கப்­படும் சிறிய குண்­டுகள் அனைத்தும் உட­ன­டி­யாக வெடித்து விடாது. பல வரு­டங்கள் கூட வெடிக்­காமல் இருக்கும். அத்­த­கைய குண்­டு­களைக் கண்­டு­பி­டித்து அகற்­று­வதும் கடி­ன­மான விடயம். அவ்­வாறு வெடிக்­காத குண்­டுகள் எப்­போது வேண்­டு­மா­னாலும் வெடிக்­கலாம். போர் முடி­வுக்கு வந்து பல ஆண்­டு­களின் பின்பு கூட அவை வெடிப்­ப­தற்­கான வாய்ப்­புகள் உள்­ளன. இத்­த­கைய அம்­சத்தைக் கருத்தில் கொண்டே 2008ஆம் ஆண்டில் இத்­த­கைய குண்­டு­களின் பாவ­னையைத் தடுக்கும் ஐ.நா. பட்­டயம் வெளி­யி­டப்­பட்­டது. அதனை அப்­போது 110 நாடுகள் ஏற்­றுக்­கொண்டு அங்­கீ­க­ரித்­தி­ருந்­தன. அந்தப் பட்­ட­யத்தை ஏற்­றுக்­கொண்ட அமெ­ரிக்­காவின் நட்பு நாடு­க­ளான ஸ்பெயின், பிரித்­தா­னியா, கனடா, நியூ­சி­லாந்து மற்றும் அவுஸ்­திரேலியா ஆகி­யவை அமெ­ரிக்­காவின் தற்­போ­தைய முடிவைக் கண்­டித்­துள்­ளன. ஜேர்மனி நாடு அமெ­ரிக்­காவின் முடிவை நேர­டி­யாகக் கண்­டிக்­காத போதிலும் கொத்­தணிக் குண்­டு­களை தான் உக்ரே­னுக்கு வழங்கப் போவ­தில்லை எனத் தெரி­வித்­துள்­ளது. சர்­வ­தேச மன்­னிப்புச் சபை உள்­ளிட்ட மனித உரிமை அமைப்­புகள் ஒரு சிலவும் அமெ­ரிக்­காவின் முடி­வுக்குக் கண்­டனம் தெரி­வித்­துள்­ளன. எனி­னும், அவை யாவும் வழக்கம் போலவே அமெ­ரிக்­காவால் கண்டு கொள்­ளாமல் விடப்­படும் என்­பது தெரிந்­ததே. ஒரு வகையில் சொல்­வ­தானால் - அமெ­ரிக்­கா­வுக்­கான ரஷ்யத் தூதுவர் அனொட்­டலி அன்­ரனவ் கூறி­யதைப் போன்று - அமெ­ரிக்கா ஒரு கையறு நிலைக்குச் சென்­று­விட்­டது போலவே தென்­ப­டு­கின்­றது. மறு­புறம், ரஷ்யப் படைத்­துறை அமைச்சர் சேர்கை சொய்கு இது தொடர்பில் கார­சா­ர­மாகக் கருத்து வெளி­யிட்­டுள்ளார். கொத்­தணிக் குண்­டு­களை உக்ரேன் பாவித்தால் பதி­லுக்கு ரஷ்­யாவும் தன்­னிடம் உள்ள அத்­த­கைய குண்­டு­களைப் பாவிக்க வேண்­டிய நிலை உரு­வாகும் என அவர் எச்­ச­ரித்­துள்ளார். அதே­வேளை, கொத்­தணிக் குண்­டுகள் உக்ரேன் போரின் முடி­வு­களை மாற்ற மாட்­டாது என ரஷ்யா அழுத்தம் திருத்­த­மாகக் கூறி­யுள்­ளது. உக்ரேன் போர் ஆரம்­ப­மான நாள் முத­லா­கவே, இந்தப் போர் மூன்றாம் உலகப் போருக்கு வழி சமைக்கக் கூடும் என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றமையை முழு உலகுமே அறியும். உக்ரேன் போரில் எதனை இழந்தாவது வெற்றியை மாத்திரமே சுவைக்க வேண்டும் என நினைக்கும் அமெரிக்க ஏகாதிபத்திய மனோநிலை நாளை ரஷ்யாவுக்கு எதிராக படைகளை அனுப்பி வைப்பதற்கும், முடிவில் அணுகுண்டுகளைப் பாவிக்கும் நிலைக்கும் கூட வித்திடலாம். அத்தகைய ஒரு நிலை உருவானால் உலகம் முழுவதுமாக அழிந்தே போகும். பின்னர் உக்ரேன் போரைப் பற்றிக் கவலைப்பட அமெரிக்காவும் இருக்காது, மேற்குலகும் இருக்காது. https://www.virakesari.lk/article/160163
  24. கிரைமியாவின் ரஷ்ய இராணுவத் தளத்தில் பாரிய தீ: 2000 பேர் வெளியேற்றம் Published By: SETHU 19 JUL, 2023 | 02:01 PM ரஷ்யாவினால் இணைத்துக் கொள்ளப்பட்ட கிரைமியா பிராந்தியத்திலுள்ள ரஷ்ய இராணுவத் தளமொன்றில் இன்று பாரிய தீ பரவியுள்ளது. இதனால், இராணுவத் தளத்துக்கு அருகிலுள்ள பகுதிகளில் வசிக்கும் 2,000 இற்கும் அதிகமான மக்களை வீடுகளிலிருந்து தற்காலிகமாக வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என ரஷ்யாவினால் நியமிக்கப்பட்ட கிரைமியாவின் ஆளுநர் சேர்ஜி அக்சியோனோவ் தெரிவித்துள்ளார். கீரோவ்ஸ்கி மாவட்டத்திலுள்ள இராணுவப் பயிற்சித் தளத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தையடுத்து தவ்ரிதா நெடுஞ்சாலையின் ஒரு பகுதியும் மூடப்பட்டுள்ளது. இத்தீ எவ்வாறு ஏற்பட்டது என்பது தெரியவில்லை. இதேவேளை, தனது படையினர் கிரைமியா தீபகற்பத்தில் வெற்றிகரமான நடவடிக்கையொன்றை மேற்கொண்டதாக மேற்படி தீயின் பின்னர் உக்ரேன் தெரிவித்துள்ளது. 'ஆக்கிரமிக்கப்பட்ட கிரைமியாவில் வெற்றிகரமான நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டது. இதனால் ஏற்பட்ட சேதங்களும், ஆளணி இழப்புகளும் எதிரியினால் மறைக்கப்படுகின்றன' என உக்ரேனிய இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் கிலிலோ புதானோவ் தெரிவித்துள்ளார். உக்ரேனிய பிராந்தியமான கிரைமியாவை 2014 ஆம் ஆண்ட ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/160397
  25. ஆஸ்திரேலியாவில் கரையொதுங்கிய ‘மர்மப்பொருள்’ சந்திரயான் ராக்கெட்டின் பகுதியா? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவில் கரையொதுங்கிய பொருள் கட்டுரை தகவல் எழுதியவர், கீதா பாண்டே பதவி, பிபிசி நியூஸ் 8 நிமிடங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலிய கடற்கரையில் கரையொதுங்கிய ராட்சத உலோக உருளை போன்ற பொருள் இந்தியாவுக்குச் சொந்தமானதா என்று சந்தேகம் நிலையில் இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் விளக்கமளித்துள்ளார். இது ராக்கெட்டின் பகுதி என்று கூறப்படுகிறது. எனினும் “நாங்கள் அதை ஆய்வு செய்யாத வரை இது எங்களுடையது என்பதை உறுதிப்படுத்த முடியாது” என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு வடக்கே சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிரீன் ஹெட் கடற்கரையில் சில நாள்களுக்கு முன்பு ராட்சத உலோகப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் இருந்தே இந்தப் பொருள் பற்றிய ஊகங்கள் நிலவி வருகின்றன. இது கடந்த வெள்ளியன்று இந்தியா விண்ணுக்கு அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தை சுமந்து சென்ற ராக்கெட்டின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் அதை நிபுணர்கள் மறுத்தனர். சுமார் 2.5 மீட்டர் அகலமும், 2.5 மீட்டர் முதல் 3 மீட்டர் நீளமும் கொண்ட உருளை வடிவ பொருள், கிரீன் ஹெட் கடற்கரையில் வசிப்பவர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பொருள் காணாமல் போன MH370 மலேசிய விமானத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று கூட முதலில் ஊகங்கள் எழுந்தன. 2014-ஆம் ஆண்டு 239 பயணிகளுடன் இந்த விமானம் காணாமல் போனது. ஆனால் விமானப் போக்குவரத்து வல்லுநர்கள் இந்த பொருள் விமானத்தில் இருந்து வந்திருக்க முடியாது என்றும் அது ராக்கெட்டின் எரிபொருள் கலனாக இருக்கலாம் என்றும் கூறினர். பட மூலாதாரம்,GETTY IMAGES "வெளிநாட்டு விண்வெளி ஏவு வாகனத்தில்" இருந்து ராட்சத உருளை விழுந்திருக்கலாம் என்று ஆஸ்திரேலிய விண்வெளி நிறுவனம் கூறியது. இதைத் தொடர்ந்து, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு வழக்கமாக பயன்படுத்தும் பிஎஸ்எல்வி ராக்கெட்டின் எரிபொருள் கலன் என்று ஊகங்கள் எழுந்தன. கடந்த வெள்ளிக்கிழமை சந்திரயான்-3 விண்கலத்தை சுற்றுப்பாதையில் அனுப்ப இந்த வகை ராக்கெட் பயன்படுத்தப்பட்டால், அதன் எரிபொருள் கலனாக இது இருக்கலாம் என்று ஊகம் எழுந்தது. இந்தப் பொருள் பல மாதங்களாக நீரில் கிடந்திருக்கலாம் என்று கூறியிருக்கிறார்கள். ஆனாலும் ஊகங்கள் குறையவில்லை. எனினும் “இது ராக்கெட்டின் ஒரு பகுதி” என்று பிபிசியிடம் உறுதிப்படுத்திய சோம்நாத், “எந்த மர்மமும் இல்லை” என்று கூறினார். "இது பிஎஸ்எல்வி அல்லது வேறு ஏதேனும் ஒன்றின் பாகமாக இருக்கலாம், அதைப் பார்த்து பகுப்பாய்வு செய்யாவிட்டால், அதை உறுதிப்படுத்த முடியாது," என்று அவர் கூறினார். எனினும் ஆஸ்திரேலிய அதிகாரிகள் இன்னும் விவரங்களை வெளியிடவில்லை. https://www.bbc.com/tamil/articles/cev8gng087qo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.