Everything posted by ஏராளன்
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதிகோரி எதிர்வரும் 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
காங்கேசன்துறை - காரைக்கால் (பாண்டிச்சேரி) படகு சேவை ஏப்ரல் 28 இல் ஆரம்பம்
இந்தியா – இலங்கை பயணிகள் படகு சேவை இன்னும் 06 மாதங்களில் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் படகு சேவையை ஆரம்பிக்க இன்னும் 6 மாதங்கள் ஆகும் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாகப்பட்டினத்தில் பயணிகள் முனையம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கியுள்ளதாகவும், பணிகள் முடிவடைய இன்னும் 4 முதல் 5 மாதங்கள் ஆகும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், அக்டோபர் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் வடகிழக்கு பருவமழையின் நிலையைப் பொறுத்து கால அளவு மாறலாம் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://thinakkural.lk/article/264880
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ரஷ்ய தலைநகரில் உக்ரேனிய ட்ரோன்கள் தாக்குதல் Published By: SETHU 24 JUL, 2023 | 12:22 PM ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் உக்ரேனின் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) இன்று தாக்குதல் நடத்தியுள்ளன. மொஸ்கோவிலுள்ள இரு கட்டடங்கள் மீது உக்ரேனிய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதலில் எவரும் காயமடையவில்லை என் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொஸ்கோ வான்பரப்பில் உக்ரேனின் இரு ட்ரோன்களை தாம் சுட்டுவீழ்த்தியாகவும், அவற்றில் ஒன்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு கட்டடத்துக்கு அருகில் ஒரு ட்ரோன் வீழ்ந்ததாகவும் மற்றொரு அலுவலகக் கட்டடமொன்றின் மீது மோதியதாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரேனிடமிருந்து ரஷ்யா கைப்பற்றிய கிரைமியா பிராந்தியத்திலுள்ள ரஷ்ய ஆயுதக் களஞ்சியமொன்றின் மீதும் உக்ரேனிய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரேனின் ஒடிசா நகரில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என உக்ரேன் நேற்று சூளுரைத்த நிலையில் இத்தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. https://www.virakesari.lk/article/160783
-
தமிழ்நாடு - இலங்கை இடையே பாலமா? சாத்தியக்கூறுகளை விரைவில் ஆய்வு செய்ய திட்டம்
இந்தியா-இலங்கை இடையே பாலம் அமைக்கும் திட்டத்தால் 'ராமர் பாலம்' சேதமடையுமா? பட மூலாதாரம்,PMD SRI LANKA கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 23 ஜூலை 2023, 02:40 GMT இலங்கை, இந்தியாவை இணைக்கும் வகையில் பாலம் ஒன்றை அமைப்பது தொடர்பான பேச்சு மீண்டும் தொடங்கியுள்ளது. இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின்போது இந்த விஷயம் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தை அமைப்பது உண்மையில் சாத்தியமா? இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே பாலம் அமைப்பதால் 'ராமர் பாலம்' என்று நம்பப்படும் சுண்ணாம்புத் திட்டுகளுக்கு பாதிப்பு ஏற்படுமா? அரசியல்ரீதியாக இந்தப் பாலம் அமைக்கும் திட்டம் என்ன மாதிரியான தாக்கத்தை சர்வதேச அரசியலில் ஏற்படுத்தும்? பாஜக அரசு இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லுமா? அப்படிச் செய்வதால் இந்தியாவுக்கு என்ன பயன்? இவை குறித்து இங்கு விரிவாகப் பார்ப்போம். இரண்டு நாடுகளையும் இணைக்கும் வகையிலான பல்வேறு திட்டங்கள் தொடர்பாக, ரணில் விக்ரமசிங்கவின் இந்திய பயணத்தின்போது, இந்திய பிரதமர் நரேந்திர மோதி கலந்தாலோசித்துள்ளார். குறிப்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான படகு சேவையை மீள ஆரம்பித்தல், விமான சேவைகளை விஸ்தரித்தல், குழாய் மின் இணைப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் கலந்துரையாடினர். இதில் இரண்டு நாடுகளுக்கும் இடையே தரைவழிப் பாதையை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும் என இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார். இந்தியா - இலங்கைக்கு இடையே பாலம் அமைக்கும் திட்டம் இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் பாலம் அமைக்கும் திட்டம் தொடர்பில் பல ஆண்டு காலமாகப் பேசப்பட்டு வருகின்றது. இந்த பாலத்தை அமைப்பது தொடர்பில் 2015ஆம் ஆண்டு பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. தனுஷ்கோடி, தலைமன்னார் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் 35 கோடி ரூபாய் செலவில் இந்த பாலம் அமைக்கத் திட்டமிடப்பட்டு வந்ததாக அந்த காலப் பகுதியில் இந்திய ஆளும் கட்சி உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர். இதற்கான நிதியுதவிகளைப் பெற்றுக்கொள்ளும் திட்டங்கள் குறித்தும் அப்போது கலந்தாலோசிக்கப்பட்டிருந்தது. பட மூலாதாரம்,PMD SRI LANKA படக்குறிப்பு, தெற்காசியப் பிராந்திய போக்குவரத்து வழித்தடங்களை இணைக்கும் வகையில் இந்த திட்டத்தை முன்னெடுக்க அப்போது யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இலங்கையில் 2015ஆம் ஆண்டு பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க, இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்ட தருணத்தில் பிரதமர் நரேந்திர மோதி இந்த விடயம் குறித்து அப்போதும் கலந்துரையாடியுள்ளார். இந்தத் திட்டத்திற்கான நிதியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தயாராக இருந்தது என இந்தியாவின் அப்போதைய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அப்போது தெரிவித்திருந்தார். தெற்காசிய பிராந்திய போக்குவரத்து வழித்தடங்களை இணைக்கும் வகையில் இந்தத் திட்டத்தை முன்னெடுக்க அப்போது யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. எனினும், அதற்குப் பிறகு அந்தப் பேச்சுவார்த்தைகள் கைவிடப்பட்டன. ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த நேரத்தில், பிரதமர் நரேந்திர மோதியால் முன்வைக்கப்பட்ட அதே திட்டத்தை, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னரும், நரேந்திர மோதி முன்வைத்துள்ளார். ‘ராமர் பாலம்’ என்று அழைக்கப்படும் திட்டுக்கள் பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, ராமேஸ்வரம், மன்னார் பகுதிகளை இணைக்கும் வகையில் சுண்ணாம்புக் கற்களால் ஆன இந்த வடிவம் சுமார் 30 கி.மீ. தூரத்திற்கு அமைந்துள்ளது இலங்கை, இந்தியாவை இணைக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறப்படும் இயற்கையான வடிவங்கள் ‘இராமர் பாலம்’ அல்லது ‘ஆதாமின் பாலம்’ என அழைக்கப்படுகின்றது. ராமேஸ்வரம், மன்னார் பகுதிகளை இணைக்கும் வகையில் சுண்ணாம்புக் கற்களால் ஆன இந்த வடிவம் சுமார் 30 கி.மீ. தூரத்திற்கு அமைந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் பாலம் கட்டப்படும் என்றால், இந்தப் பாலத்தைச் சார்ந்து அமைக்கப்படுமா அல்லது வேறு விதமாக அமைக்கப்படுமா என இதுவரை உறுதி செய்யப்படவில்லை. நிலவியல் ரீதியாக பாலம் அமைப்பது சாத்தியமா? பட மூலாதாரம்,UNIVERSITY OF COLOMBO படக்குறிப்பு, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் பகுதியானது, மிகவும் ஆழம் குறைந்த பகுதி என்பதால் எளிதாகப் பாலம் அமைக்க முடியும் எனக் கூறுகிறார் பேராசிரியர் எஸ்.ஏ.நோர்பட். நிலவியல் ரீதியாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாலம் அமைப்பது சாத்தியம்தான் எனக் கூறுகிறார் பேராசிரியர் எஸ்.ஏ.நோர்பட். கொழும்பு பல்கலைக்கழகத்தின் நிலவியல் துறை முன்னாள் சிரேஷ்ட பேராசியரான இவர் பிபிசி தமிழிடம் பேசியபோது, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலுள்ள கடல் பகுதி மிகவும் ஆழம் குறைவானது என்பதால் மிக எளிதாகப் பாலம் அமைக்க முடியும் என்றார். சேது சமுத்திர திட்டம் பல ஆண்டுக்காலமாகப் பேசப்பட்டு வருகின்றது. ஆனால், அதிலுள்ள நடைமுறை சவால்களைப் போல் இந்தத் திட்டத்தில் ஏதேனும் சவால்கள் உள்ளனவா எனக் கேட்டபோது "இதில் அப்படியான சவால் ஏதும் இல்லை" என்கிறார் எஸ்.ஏ.நோபர். சேது சமுத்திர திட்டம் சாத்தியமில்லை என்ற போதிலும், இலங்கை - இந்தியாவுக்கு இடையில் பாலம் அமைப்பது சாத்தியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார். ''இந்தப் பாலம் அமைப்பது பெரிய விஷயம் இல்லை. இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையில் இருக்கும் கடல் பகுதி ஆழம் குறைவானது. அந்த ஆழம் குறைவான பகுதிகளின் ஊடாக காங்க்ரீட் தூண்களை நிறுத்தி, பாலம் அமைக்க முடியும். இதில் ஒரு பிரச்னையும் கிடையாது. அது பாலம் அமைப்பதற்குச் சாத்தியமான பகுதிதான்,” என்றார் நோபர்ட். ஆனால், இது புவியியல் ரீதியாக இலங்கையைப் படிப்படியாகத் தங்களுடைய பிரதேசமாக்குவதற்கான இந்தியாவின் முதல் படி என்றும் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, "தனுஷ்கோடியிலிருந்து கடலுக்குள் பாக் நீரிணையின் ஊடாகப் பாலம் அமைக்க முடியும்," என்று விளக்குகிறார் பேராசிரியர் எஸ்.ஏ.நோபர்ட் “பாலம் ஒன்று அமைக்கப்படும்போது, போக்குவரத்து உள்ளிட்ட அனைத்தும் தங்களுடைய கைக்குள் வந்துவிடும். சீனா உள்ளிட்ட பல நாடுகள் கடலுக்குள் பாலங்களை அமைத்துள்ளன. ஆகவே, தற்போதுள்ள தொழில்நுட்ப வசதிகளின் மூலம் இது சாத்தியப்படக்கூடிய விஷயம்தான்," என்கிறார் பேராசிரியர் எஸ்.ஏ.நோபர்ட். ''தனுஷ்கோடியிலிருந்து பாதை அமைப்பது இலகுவானது. அவ்வளவு தூரம் கிடையாது. தனுஷ்கோடியிலிருந்து கடலுக்குள் பாக் நீரிணையின் ஊடாகப் பாலம் அமைக்க முடியும். இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடைப்பட்ட பகுதியில் சுண்ணாம்புக் கற்கள் நிரம்பியுள்ளன. அந்தச் சுண்ணாம்புக் கற்களில்தான் தூண்களை இறக்கி பாலம் அமைப்பார்கள். தனுஷ்கோடியிலுள்ள ரயில் பாலத்தைப் போன்றதொரு பாலத்தை அமைப்பார்கள்," என்று அவர் விளக்கினார். சுண்ணாம்புக் கற்கள் சேதமாகுமா? இந்தப் பாலம் அமைக்கப்படும்போது, பாக் நீரிணையில் உள்ள சுண்ணாம்புக் கற்களுக்கு சேதங்கள் ஏற்படும் சாத்தியம் உள்ளதா? என கொழும்பு பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் எஸ்.ஏ.நோர்பட்டிடம் வினவினோம். இதுகுறித்து விளக்கமளித்த நோபர்ட், "அது மிகப்பெரிய சுண்ணாம்புத் திட்டு" என்றும் பாலம் அமைப்பதால் அதில் எந்தவித சேதமும் ஏற்படாது எனவும் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான இணைப்புகளை மேற்கொள்ளாது இருப்பதற்கே இந்தியா முயன்று வருவதாக சர்வதேச அரசியல் தொடர்பான செய்தியாளர் சதீஷ் கிருஸ்ணபிள்ளை கூறுகிறார். இந்திய - இலங்கை பாலம் சர்வதேச அரசியலில் தாக்கம் செலுத்துமா? இந்தியா, இலங்கைக்கு இடையில் பாலம் அமைக்கப்படாது என சர்வதேச அரசியல் தொடர்பான செய்தியாளர் சதீஷ் கிருஸ்ணபிள்ளை தெரிவிக்கின்றார். இரு நாடுகளுக்கும் இடையிலான இணைப்புகளை மேற்கொள்ளாது இருப்பதற்கே இந்தியா முயன்று வருவதாகவும் அவர் கூறுகிறார். ''உண்மையில் பாலம் அமைக்கமாட்டார்கள். இதுவரை படகு சேவைகூட ஆரம்பிக்கப்படவில்லை. ஏப்ரல் 28ஆம் தேதி படகு சேவை ஆரம்பிக்கப்படும் எனச் சொல்லியிருந்தார்கள். சிங்கப்பூரிலுள்ள ஒரு இலங்கை தமிழருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எனினும், இந்திய அரசாங்கம் அதைத் தடுத்தது. மத்திய அரசாங்கத்திற்கும், மாநில அரசாங்கத்திற்கும் இடையில் சிக்கல் இருக்கின்றது. இந்த அகண்ட பாரத கோட்பாடு, தேசிய கோட்பாடுகள் இருப்பதால், இதில் முரண்பாடுகள் இருக்கின்றன,” என்றும் அவர் தெரிவித்தார். இலங்கைக்கும், இந்தியாவிற்குமான எந்தவொரு தொடர்பும், இணைந்த வடக்கு, கிழக்கு தாயகத்தோடு இணையக்கூடிய ஒரு தொடர்பாகத்தான் இருக்கும் எனவும் சதீஷ் கிருஸ்ணபிள்ளை கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாலம் அமைத்தாலும் கூட தமிழர்கள் தமது தாயகமாகக் கருதக்கூடிய இணைந்த வடக்கு, கிழக்குடன் தொடர்புபடுமே தவிர, அது கொழும்பிற்கும், இந்தியாவிற்குமான தொடர்பாக இருக்காது என்கிறார் அவர். பாலம் அமைத்தாலும்கூட தமிழர்கள் தமது தாயகமாகக் கருதக்கூடிய இணைந்த வடக்கு, கிழக்குடன் தொடர்பு படுமே தவிர, அது கொழும்பிற்கும், இந்தியாவிற்குமான தொடர்பாக இருக்காது என்கிறார் அவர். அது இந்தியாவின் மத்திய அரசாங்கத்திற்கு ஒரு சிக்கல் எனக் கூறும் சதீஷ், “இலங்கை நிறைய திட்டங்களைச் சொல்லியிருக்கின்றது. தலை மன்னாருக்கும், தனுஷ்கோடிக்கும இடையில் ரயில் பாலம் இருந்தது. கப்பல் சேவை இருந்தது எனச் சொன்னார்கள். காங்கேசன்துறைக்கும், பாண்டிச்சேரிக்கும் இடையிலான படகு சேவை என இறுதியாகச் சொன்னார்கள். ஆனால், இன்று வரை அனுமதி வழங்கப்படவில்லை. எல்லா அனுமதியும் கிடைத்த பின்னர் இந்திய கப்பல்துறை அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளது. இப்போதும் நாம் நடக்காத விஷயத்தைத்தான் பேசுகிறோம். பாலம் அமைப்பதற்கு இந்திய அரசு விடவே விடாது," எனக் கூறுகிறார் சதீஷ் கிருஸ்ணபிள்ளை. பாஜக அரசுக்கு இந்தப் பாலம் அமைக்க விருப்பமில்லையா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இரண்டு நாடுகளுக்கும் இடையில் பாலம் அமைப்பதற்கு பாஜக விரும்பாது எனவும் சதீஷ் கிருஸ்ணபிள்ளை குறிப்பிடுகின்றார். இரண்டு நாடுகளுக்கும் இடையில் பாலம் அமைப்பதற்கு பாஜக விரும்பாது எனவும் சதீஷ் கிருஸ்ணபிள்ளை குறிப்பிடுகின்றார். 'இந்த மாதிரியான பாலங்கள் அமைப்பது என்பது மிகப்பெரிய அரசியல். பிரான்சுக்கும், பிரட்டனுக்கும் இடையில் பாலம் அமைக்கப்பட்டது. ஏதோவொரு தொழில்நுட்பத்தின் ஊடாக சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. ஆனாலும், இன்று எல்லைக் கட்டுப்பாடு மிகப்பெரிய பிரச்னையாக இருக்கின்றது. பிரான்ஸில் உள்ள சட்டவிரோத அகதிகள் அந்தப் பாலத்தின் வழியாகச் செல்கின்றார்கள். அது பிரான்ஸ் அரசாங்கத்திற்கும், பிரிட்டன் அரசாங்கத்திற்கும் இடையில் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கின்றது,” என்று அவர் விவரித்தார். ஐரோப்பிய யூனியனை எடுத்துக்கொண்டால், பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் இல்லை. அப்படியில்லாத சந்தர்ப்பத்தில் அவர்களின் விசா தயார்படுத்தலை எப்படிச் செய்வது என்ற சிக்கல் இருக்கின்றது. இந்நிலையில், “உச்ச சக்தி கொண்ட நாடான இந்தியா, பாலம் அமைத்து நாம் அங்கு இலவசமாகச் செல்வதைப் பெரிதாக விரும்பாது. குறிப்பாக பாஜக அரசாங்கம் அதைச் செய்யாது," என்று செய்தியாளர் சதீஷ் கிருஸ்ணபிள்ளை தெரிவிக்கின்றார். https://www.bbc.com/tamil/articles/cv2p4v0ngqvo
-
களைத்த மனசு களிப்புற ......!
NEW WORLD RECORD | Men’s Pole Vault | Mondo Duplantis, 6.22m (20ft 5in)!
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
2014இல் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் முக்கிய குற்றவாளியான ரஸ்ய இராணுவ அதிகாரியை கைதுசெய்தார் புட்டின் - புட்டினை விமர்சித்ததால் வந்த வினை! Published By: RAJEEBAN 22 JUL, 2023 | 02:21 PM 2014இல் உக்ரைன் வான்பரப்பிற்கு மேலாக மலேசியன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டமைக்கு காரணமானவர் என சர்வதேச நீதிமன்றத்தினால் குற்றம்சாட்டப்பட்ட ரஸ்யாவின் முன்னாள் இராணுவ அதிகாரி இகோர் கேர்கின் புட்டின் உக்ரைன் நடவடிக்கையை தொடர்ச்சியாக விமர்சித்து வந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார். தன்னை ரஸ்ய தேசியவாதி என அறிவித்த இகோர் கேர்கின் ரஸ்ய ஜனாதிபதியை தொடர்ச்சியாக விமர்சித்து வந்த நிலையில் தீவிரவாத குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 2014 இல் உக்ரைன் வான்பரப்பில் எம்எச் 17 சுட்டுவீழ்த்தப்பட்டதில் இவருக்கும் தொடர்புள்ளது அந்த சம்பவத்தின் பின்னர் மொஸ்கோ சென்ற இவர் தலைமறைவானார். உக்ரைன் மீதான போரை தீவிரமாக ஆதரித்த வந்த இவர் சமீபகாலங்களில் புட்டினின் நடவடிக்கையை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தார் – புட்டினின் வீழ்ச்சி குறித்து கடந்தவாரம் இவர்கருத்து வெளியிட்டிருந்தார். இதனை தொடர்ந்தே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் தனது கணவனை காணவில்லை என கேர்கினின் மனைவி சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். நான் வீட்டிற்கு வந்தவேளை அவரை காணவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தனது கணவர் எங்கிருக்கின்றார் என்பது தெரியவில்லை அவர் தெரிவித்துள்ளார் இந்த தகவல் வெளியான பின்னர் கேர்கின் ரஸ்ய நீதிமன்றமொன்றில் அதிர்ச்சியடைந்த நிலையில் காணப்படும் படம் வெளியாகியுள்ளது – அவருக்கு எதிராக தீவிரவாதத்தை தூண்டிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இகோர் கேர்கின் யார்? இகோர் கேர்கின் அதிகம் அறியப்படாத ஒரு நபர் அவரது கடந்த காலங்கள் குறித்து அதிக தகவல்கள் இல்லை, அவர் 1970 இல் மொஸ்கோவில் பிறந்தவர். செச்னியாவில் போரிட்ட ரஸ்ய சோவியத் படைகளை சேர்ந்தவரான இவருக்கு டெரிபில் என்ற பட்டப்பெயர் உள்ளது. 2001 இல் ஆறு செச்னியர்களை வீட்டிலிருந்து வெளியே கொண்டு சென்று கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டு இவர் மீது உள்ளது. 1992 இல் பொஸ்னிய நகரத்தில் முஸ்லீம்களை படுகொலை செய்த குற்றச்சாட்டும் இவருக்கு எதிராக உள்ளது. https://www.virakesari.lk/article/160643
-
தமிழ்நாடு - இலங்கை இடையே பாலமா? சாத்தியக்கூறுகளை விரைவில் ஆய்வு செய்ய திட்டம்
பாக்குநீரிணை ஊடாக நில இணைப்பை ஏற்படுத்தும் திட்டம் - இந்திய இலங்கை தலைவர்கள் சந்திப்பின் பின்னர் தகவல் Published By: RAJEEBAN 22 JUL, 2023 | 06:20 AM (AFP) இந்தியாவும் இலங்கையும் தங்களுக்கிடையில் நில இணைப்பை உருவாக்குவது குறித்து ஆராய்வதற்கு வெள்ளிக்கிழமை இணங்கியுள்ளன. இந்தியாவும் இலங்கையும் தங்களுக்கிடையில் நிலதொடர்பை ஏற்படுத்துவது குறித்து ஆராய்வதற்கு இணங்கியுள்ளதாக தெரிவித்துள்ளன. இலங்கை ஜனாதிபதியின் பிராந்திய வல்லரசிற்கான விஜயத்தின் போது இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. பாக்குநீரிணை ஊடாக நில இணைப்பை ஏற்படுத்துவது திருகோணமலை கொழும்பு போன்றவற்றை இந்தியா சென்றடைவதை இலகுவாக்கலாம் மில்லேனியம் வருட உறவுகளை வலுப்படுத்தலாம் என இரண்டு தலைவர்களும் இணைந்து வெளியிட்டுள்ள மூலோபாய ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரைப்பாலம் மற்றும் பெட்ரோலிய குழாய்களுக்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வுகள் இடம்பெறும் என இந்திய பிரதமர் நரேந்திரமோடி பேச்சுவார்த்தைகளின் பின்னர் தெரிவித்துள்ளார். இலங்கை எதிர்கொண்ட முன்னொருபோதும் இல்லாத பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அவருக்கு முன்னர் ஜனாதிபதியாக பதவிவகித்தவர் பதவியிலிருந்து அகற்றப்பட்ட நிலையில் ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க ஒருவருடகாலத்தின் பின்னர் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். உணவு எரிபொருள் மருந்துபோன்றவற்றிற்கான தட்டுப்பாடுகள் காரணமாக இலங்கை கடந்த வருடம் நாளாந்த ஆர்ப்பாட்டங்களை எதிர்கொண்டது,இலங்கை தனது 4.6 பில்லியன் டொலர் கடனை செலுத்த முடியாமல் வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்ட போதிலும் இந்தியா 4 பில்லியன் டொலர் நிதி உதவியை வழங்கியது. இலங்கை கடந்தவருடம் பல சவால்களை எதிர்கொண்டது ஆனால் நாங்கள் இலங்கை மக்களுடன் நெருங்கிய நண்பனை போல தோளோடு தோள் நின்றது என மோடி தெரிவித்தார். இலங்கை ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைகளில் சீனாவின் பிரசன்னம் குறித்த கரிசனையும் வெளியிடப்பட்டது என இந்தியாவின் வெளிவிவகார செயலாளர் தெரிவித்தார். இந்தியா இலங்கையை தனது கொல்லைப்புறமாக கருதுவதுடன் இலங்கையிலும் பிராந்தியத்திலும் சீனாவின் பிரசன்னம் குறித்து இந்திய அதிகாரிகள் அச்சமடைந்துள்ளனர். இலங்கைக்கு அதிகளவு கடன்களை வழங்கிய நாடாக சீனா காணப்படுகின்றது - இலங்கையால் மிகப்பெரிய கடனை சீனாவிற்கு திருப்பி செலுத்த முடியாத நிலையேற்பட்டதை தொடர்ந்து அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனம் 99 வருட குத்தகைக்கு எடுத்தது. கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் 1.4 பில்லியன் டொலர் திட்டத்தினை சீனா முன்னெடுத்துள்ளது-இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய வெளிநாட்டு முதலீடு இது – சீனா இதனை தனது வேவுநடவடிக்கைகளிற்கு பயன்படுத்தலாம் என இந்தியா அச்சமடைந்துள்ளது. https://www.virakesari.lk/article/160621
-
தமிழ்நாடு - இலங்கை இடையே பாலமா? சாத்தியக்கூறுகளை விரைவில் ஆய்வு செய்ய திட்டம்
பட மூலாதாரம்,PMD SRI LANKA படக்குறிப்பு, இந்திய பிரதமர் மோதியுடன் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க சந்திப்பு கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 21 ஜூலை 2023, 11:22 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் அதிகாரபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. புதுடெல்லியிலுள்ள பிரதமரின் அதிகாரபூர்வ வாசஸ்தலத்தில் இந்த சந்திப்பு இன்று காலை இடம்பெற்றது. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் இன்றுடன் பூர்த்தியாகின்ற நிலையில், இந்த விஜயமானது மிகவும் முக்கியத்துவமானதாக கருதப்படுகின்றது. இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. 5 ஒப்பந்தங்கள் கையெழுத்து இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் ஐந்து புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இந்தியா - இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் கால்நடை பராமரிப்புத்துறையில் கூட்டு நோக்கத்தின் பிரகடனம், இந்தியா மற்றும் இலங்கை இடையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை, திருகோணமலை மாவட்ட திட்டங்களின் பொருளாதார அபிவிருத்திக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை, இலங்கைக்குள் யூ.பி.ஐ டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல் முறையை மேம்படுத்தல் மற்றும் சம்பூர் சூரிய மின்சக்தி திட்டத்திற்கான எரிசக்தி அனுமதிப் பத்திரம் இலங்கையிடம் கையளிப்பு போன்ற உடன்படிக்கைகள் கைமாற்றப்பட்டுள்ளன. இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவுகளின் எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைப்பதே இந்த விஜயத்தின் நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கான தனது அதிகாரபூர்வ விஜயத்தின் போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மேம்படுத்தப்பட்ட பொருளாதார, உட்கட்டமைப்பு, தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பாராட்டியுள்ளார். இந்தியாவின் வளர்ச்சி அயல் நாடுகள் மற்றும் இந்து சமுத்திர வலய நாடுகளுக்கு சாதகமான தன்மையை ஏற்படுத்தும் என்று ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இலங்கை கடந்த ஆண்டுகளில் எதிர்நோக்கிய பாரிய பொருளாதார நெருக்கடியின் போது, இந்தியா வழங்கிய ஆதரவுக்கு இலங்கை ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார். படக்குறிப்பு, இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூவுடன் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க இலங்கையில் அதிகாரப் பகிர்வு பற்றி பேச்சு இலங்கையில் அனைவரும் பொருளாதார மறுமலர்ச்சி, நிலையான அபிவிருத்தி, நீதி ஆகியவற்றை அடைவதற்கான தனது அர்ப்பணிப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். நல்லிணக்கம், அதிகாரப் பகிர்வுக்கான விரிவான திட்டத்துடன் இணக்கத்தை எட்டுவதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். இந்த முயற்சிகளுக்கு பிரதமர் மோடி தனது ஆதரவையும், ஒத்துழைப்பையும் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றின் ஊடாக குறிப்பிடுகின்றது. இலங்கை பொருளாதார சீர்திருத்தங்களை சீராக அமல்படுத்தி வருவதாகவும், இந்தியப் பிரதமருடனான தூதுக்குழு மட்டத்தில் நடைபெற்ற கலந்துரையாடல்களின் மூலம் நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கான சாதகமான பெறுபெறுகளை வெளிப்படுத்தி வருவதாகவும் ஜனாதிபதி விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தம்மால் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் மூலம் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்த வழிவகுத்துள்ளதாக ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். கப்பல், விமான சேவைகளை அதிகரிக்க முடிவு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர பொருளாதார உறவுகள் குறித்து சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் எதிர்கால இந்திய - இலங்கை பொருளாதார பங்காளித்துவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இது எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறுகின்றது. பொருளாதாரப் பங்காளித்துவத்தின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் நவீன இணைப்பு முக்கியப் பங்காற்றுகிறது என்று தெரிவித்த ஜனாதிபதி, அண்மையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட சென்னை மற்றும் யாழ்ப்பாண விமானச் சேவைகள், இரு நாடுகளுக்கும் இடையிலான விமான இணைப்பில் ஒரு முக்கிய மைல்கல் என்று சுட்டிக்காட்டினார். இரு நாடுகளுக்கும் இடையில் விமான சேவைகளையும், கப்பல் சேவைகளையும் மேம்படுத்த உடன்பாடு காணப்படுவதாகவும், அது சுற்றுலா மற்றும் கலாச்சார உறவுகளை வலுப்படுத்துவதற்கும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். பட மூலாதாரம்,PMD SRI LANKA இந்தியா- இலங்கை இடையே பாலம் சாத்தியமா? சந்திப்பு தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையில் காங்கேசன்துறை இடையே பயணிகள் படகு சேவையை மீண்டும் தொடங்குதல் , ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் மற்றும் ஒப்புக்கொள்ளப்பட்ட பிற இடங்களுக்கு இடையே படகு சேவைகளை விரைவாக மீண்டும் தொடங்குவது தொடர்பாக பணியாற்றுவது குறித்து பேசப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், சென்னை - யாழ்ப்பாணம் இடையே விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டதன் மூலம் மக்களிடையே உறவுகள் மேம்படுத்துள்ளது. எனவே, இந்த விமான சேவையை கொழும்பு வரை விரிவுப்படுத்துவது குறித்தும் சென்னை மற்றும் திருகோணமலை, மட்டக்களிப்பு மற்றும் இலங்கையின் பிற இடங்களுக்கு இடையே விமான சேவையை ஏற்படுத்துவது குறித்து ஆராய்வது குறித்தும் சந்திப்பில் பேசப்பட்டது. இதேபோல் இந்தியாவின் ரூபாயில் வர்த்தகம் செய்வது, யுபிஐ முறையில் பணப்பரிமாற்றம் செய்வது போன்றவற்றுக்கும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. திருகோணமலை மற்றும் கொழும்பு துறைமுகங்களுக்கான நில அணுகலை மேம்படுத்துவதற்கும், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் பொருளாதார வளர்ச்சி மற்றும் செழிப்பை மேம்படுத்துவதற்கும், இரு நாடுகளுக்கிடையிலான பல்லாண்டு பழமையான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கும் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே தரைவழி இணைப்பை ஏற்படுத்துதல் குறித்து பேசப்பட்டது. அத்தகைய இணைப்புக்கான சாத்தியக்கூறு ஆய்வு விரைவில் நடத்தப்படும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,PMD SRI LANKA தமிழ்நாடு - இலங்கை இடையே மின்கம்பி வட இணைப்புத் திட்டம் இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையை மின்சக்தி மையமாக அபிவிருத்தி செய்வது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்துரையாடியுள்ளனர். இலங்கைக்கு மின்சக்தி வளங்களை, குறைந்த விலையிலும், நம்பகமான விநியோகத்தை உறுதி செய்யவும் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு குழாய்களை அமைப்பதற்கும் இதன்மூலம் மின்சக்தி ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையிலும் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறுகின்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயம், இரு தரப்பு நம்பிக்கையை வலுப்படுத்துவதையும், பசுமை மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களில் இந்தியாவுடன் ஒத்துழைத்துச் செயற்படுவதையும், இலங்கை - இந்திய உறவுகளின் எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைப்பதையும் நோக்கமாகக் கொண்டதாகும். புதுப்பிக்கத்தக்க மின்சக்தி ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் அதிக திறன் கொண்ட மின் கட்டமைப்பு, ஒன்றோடொன்று இணைக்கப்படுவதால், தடையற்ற இருவழி மின்சார வர்த்தகத்தை எளிதாக்குகிறது. அத்துடன், இது பிராந்தியத்தில் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தவும் நிலையான வளர்ச்சியையையும் ஊக்குவிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. திருகோணமலையை மின்சக்தி மையமாக மாற்றுவது பற்றி பேச்சு இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், மேம்படுத்தவும், தனது இந்திய விஜயம் நல்லதொரு வாய்ப்பாக அமைகிறது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். போட்டிமிகு உலகில் பரஸ்பர சுபீட்சத்தை நோக்கமாகக் கொண்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான புவியியல் மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவில் கல்வித் துறையின் வகிபாகத்தை எடுத்துரைத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்காக புதிய உயர்கல்வி நிறுவனங்களை நிறுவுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார். தலைமன்னார் - இராமேஸ்வரம் மற்றும் நாகபட்டினம் - காங்கேசன்துறை இடையேயான படகுச் சேவைகள் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் வழிப் போக்குவரத்தை மேலும் பலப்படுத்தும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஏனைய தொடர்புகளையும் ஆராய்வது பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க மேலும் ஊக்கமளிக்கும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையை மின்சக்தி மையமாக அபிவிருத்தி செய்வது குறித்து ஜனாதிபதி விக்ரமசிங்க மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் கலந்துரையாடினர். இலங்கைக்கு மின்சக்தி வளங்களை, குறைந்த விலையிலும், நம்பகமான விநியோகத்தை உறுதி செய்யவும் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு குழாய்களை அமைப்பதற்கும் இதன்மூலம் மின்சக்தி ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையிலும் கலந்துரையாடப்பட்டது. பட மூலாதாரம்,PMD SRI LANKA படக்குறிப்பு, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க. இந்திய வெளியுறவு அமைச்சருடன் ரணில் சந்திப்பு இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உயர்மட்ட கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெயசங்கரிற்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் நேற்றைய தினம் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்ட ரணில் விக்ரமசிங்கவிற்கு, வெளிவிவகார அமைச்சர் வரவேற்பளித்ததுடன், அவருடன் இருதரப்பு கலந்துரையாடல்களையும் நேற்றைய தினம் நடத்தியிருந்தார். இதேவேளை, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இரு நாட்டு பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அதானியுடன் ரணில் சந்திப்பு அத்துடன், அதானி குழுமத்தின் ஸ்தாபகத் தலைவர் கௌத்தம் அதானியுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார். இலங்கையில் அதானி குழுமத்தின் முதலீடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன. கொழும்பு துறைமுகத்தின் அபிவிருத்தி, காற்றாலை மின் உற்பத்தி திட்டம் உள்ளிட்ட அதானி குழுமத்தின் இலங்கை முதலீடுகள் குறித்து விரிவாக கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன. https://www.bbc.com/tamil/articles/c2x512501djo
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
அமெரிக்கா வழங்கிய கொத்துக்குண்டுகளை உக்ரைன் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. 21 JUL, 2023 | 12:49 PM உக்ரைன் தான் வழங்கிய கொத்துக்குண்டுகளை பயன்படுத்துகின்றது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு பேச்சாளர் ஜோன்கிர்பி இதனை தெரிவித்துள்ளார். ரஸ்யாவின் பாதுகாப்பு முன்னரங்குகள் மற்றும் நடவடிக்கைகளிற்கு எதிராக உக்ரைன் கொத்துக்குண்டுகளை பயன்படுத்துகின்றது அது பலனளிக்கின்றது என ஜோன்கிர்பி தெரிவித்துள்ளார். உக்ரைன் உரிய விதத்தில் கொத்துக்குண்டுகளை பயன்படுத்துகின்றது என தெரிவித்துள்ள அவர்கள் அதனை பலன் அளிக்ககூடிய விதத்தில் பயன்படுத்துகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 100க்கும் மேற்பட்ட நாடுகள் கொத்துக்குண்டுகளை தடைசெய்துள்ளன. உக்ரைனின் வெடிபொருட்களை வலுப்படுத்துவதற்காக கொத்துக்குண்டுகளை அமெரிக்கா உக்ரைனிற்கு வழங்கியுள்ளது. ரஸ்ய படையினரின் நிலைகளை அழிப்பதற்கு மாத்திரம் கொத்துக்குண்டுகளை பயன்படுத்துவதாக உக்ரைன் உறுதியளித்துள்ளது. https://www.virakesari.lk/article/160571
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ரஸ்யாவின் உக்ரைன் மீதான சட்டவிரோத போரிற்கு ஆதரவளிப்பவர்களுக்கு எதிராக மேலும் தடைகள் - அவுஸ்திரேலியா அறிவிப்பு Published By: RAJEEBAN 20 JUL, 2023 | 12:19 PM உக்ரைன் மீது ரஸ்யா படையெடுப்பதற்கு உதவிய ரஸ்யாவை சேர்ந்த நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக அவுஸ்திரேலியா தடைகளை விதித்துள்ளது. ரஸ்யாவின் பாதுகாப்பு தொழில்நுட்பம் வலுச்சக்தி துறையை சேர்ந்த 35 அமைப்புகள் ரஸ்ய அமைச்சர்கள் சிரேஸ்ட அதிகாரிகள் பத்து பேருக்கு எதிராக அவுஸ்திரேலியா தடைகளை அறிவித்துள்ளது. சர்வதேச சகாக்களுடனான இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். உக்ரைன் விவகாரத்தில் ரஸ்யாவிற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவுபவர்களை இது தடுக்கும் என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. இன்றைய தடைகள் ரஸ்யாவின் மீதும் அதன் சட்டவிரோத ஒழுக்கநெறியற்ற யுத்தத்தை ஆதரிப்பவர்கள் மீது அழுத்தங்களை தொடர்வது குறித்த அவுஸ்திரேலியாவின் உறுதிப்பாட்டை இது வெளிப்படுத்தியுள்ளது என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த தடைகள் உக்ரைனிற்கும் அதன் இறைமை ஆள்புல ஒருமைப்பாட்டிற்குமான அவுஸ்திரேலியாவின் ஆதரவை வெளிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/160470
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
கொக்குதொடுவாய் மனித புதைகுழியை மூடிமறைப்பதற்கு அரசாங்கத்திற்கு இடமளிக்கவேண்டாம் 20 JUL, 2023 | 02:57 PM கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியை மூடிமறைப்பதற்கு அரசாங்கத்திற்கு இடமளிக்கவேண்டாம் என சமூக ஆர்வலர் அசங்க அபேயரத்ன வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜூன் 29ஆம் திகதி முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் ஒரு குழுவினர் கால்வாய் ஒன்றை தோண்டும் போது மனித எலும்பு துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. கடந்த ஜூலை மாதம் 6ஆம் திகதி குறித்த இடத்தில் அகழ்வு பணி ஆரம்பிக்கப்பட்டதுடன் 12 புலி உறுப்பினர்கள் மற்றும் ஒருவரின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவர் விடுதலைப் புலிகளின் வதைமுகாமில் கொல்லப்பட்டு பின்னர் அங்கேயே புதைக்கப்பட்டார்கள் என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு ஆதாரங்களைத் திரித்து உண்மையான குற்றவாளிகளை மறைக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது. - அசங்க அபேரத்னஎன அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/160493
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
உக்ரேன் போரின் போக்கை மாற்றுமா கொத்தணிக் குண்டுகள்? Published By: VISHNU 16 JUL, 2023 | 06:07 PM சுவிசிலிருந்து சண் தவராசா உக்ரேன் போரில் என்ன விலை தந்தேனும் வெற்றியைச் சுவைப்பது எனத் திடசங்கல்பத்தோடு செயற்படும் அமெரிக்க ஏகாதிபத்தியம் அடுத்த துருப்புச் சீட்டாக தடை செய்யப்பட்ட கொத்தணிக் குண்டுகளை உக்ரேனுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. உலகின் 110 இற்கும் அதிகமான நாடுகளால் தடை செய்யப்பட்ட அத்தகைய குண்டை வழங்க வேண்டிய தேவை என்ன என்பதற்கு அமெரிக்கத் தரப்பில் கூறப்பட்டுள்ள காரணமோ விசித்திரமானது. ‘உக்ரேன் போரில் ரஷ்யாவின் வெற்றி மனித குலத்துக்கே ஒவ்வாதது. அத்தகைய வெற்றியைத் தடுப்பதாயின் கொத்தணிக் குண்டுகளை வழங்கியே ஆகவேண்டும்.’ இதுவே அமெரிக்காவின் நிலைப்பாடு. அமெரிக்கா கூறுவதைப் போன்று போரில் ரஷ்யாவின் வெற்றி என்பது மனித குலத்துக்கே எதிரானது என வைத்துக் கொண்டாலும் கூட, அத்தகைய மனித குலத்துக்கே எதிரான ஒன்றைத் தடுப்பதற்காக மனித குலத்துக்கே விரோதமானது என முடிவு செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம் எனப் புரியவில்லை. இத்தனைக்கும், நேற்றுவரை அதன் பாவனைக்கு எதிராகக் குரல் கொடுத்துக் கொண்டிருந்த நாடு அமெரிக்கா. உக்ரேன் போர் ஆரம்பமான காலப்பகுதியில் போரில் ரஷ்யா கொத்தணிக் குண்டுகளைப் பாவிக்கின்றது என்ற குற்றச்சாட்டை வைத்து அதனை வன்மையாகக் கண்டித்திருந்தது அந்நாடு. ஆனால், ஒரு வருட இடைவெளியினுள் அதே கொத்தணிக் குண்டுகளை உக்ரேனுக்குப் பரிசளிக்கின்றது என்றால் அமெரிக்காவின் மனிதநேயத்தின் அளவீடுதான் என்ன என்ற கேள்வி எழுகின்றது. ‘சய’வும் ‘சய’வும் சேர்ந்தால் ‘சக’வாகிவிடும் எனக் கணிதத்தில் ஒரு சமன்பாடு இருக்கிறது. இரண்டு ‘மைனஸ்’கள் சேரும்போது ஒரு ‘பிளஸ்’ வந்துவிடும் என்பது கணிதத்தில் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாக இருக்கலாம். அதற்காக தீயதும் தீயதும் இணைந்தால் நல்லது நடைபெறும் என அதனை வியாக்கியானம் செய்வது தவறு. அமெரிக்கா எது செய்தாலும் அதனைச் சரி என ஏற்றுக் கொள்ளும் புத்திசாலிகள்(?) அநேகர் உலகில் உள்ளனர். அவர்களைப் பொறுத்தவரை ரஷ்ய அபாயத்தில் (?) இருந்து உக்ரேனைப் பாதுகாக்க ஒரே வழி இறுதி ஆயுதமான (?) கொத்தணிக் குண்டுகளை வழங்குவதே. ஆனால், இதில் அறம், மனித மாண்பு என்பவை எங்கே உள்ளன? நவீன உலகில் அதிகமான நாடுகளில் போர்களை நடத்திய நாடு, தொடர்ந்தும் போர்களை நடத்திக் கொண்டிருக்கின்ற நாடு எதுவெனக் கேள்வி கேட்டால் அது அமெரிக்கா எனச் சிறுபிள்ளை கூடச் சொல்லிவிடும். அதுவே, அமெரிக்காவின் வரலாறு. இன்று கூட உலகின் பல பாகங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் அமெரிக்காவின் போர்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. ஓய்வில்லாமல் தொடரும் இத்தகைய போர்களில் அமெரிக்காவின் மீது பல்வேறு சந்தர்ப்பங்களில் போர்க் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு உள்ளன. அவற்றுள் ஒரு சிலவற்றை மறுதலித்துள்ள அமெரிக்கா பலவற்றைச் சட்டை செய்ததேயில்லை. ஆனால், ஏனைய நாடுகள் குறிப்பாகத் தனக்குப் பிடிக்காத நாடுகள் ஒரு சிறிய தவறை இழைத்தால் கூட அதனை ஊதிப் பெருப்பித்து, மிகப் பாரிய குற்றமாக உலகின் கண்களுக்குத் தெரிய வைப்பதில் அமெரிக்க அரசாங்கமும் அதன் ஊதுகுழல்களான ஊடகங்களும் வரிந்து கட்டிக்கொண்டு இருப்பதையும் தொடர்ச்சியாகப் பார்க்க முடிகின்றது. கொத்தணிக் குண்டுகளைப் பொறுத்தவரை அவை ஒரு குண்டில் இருந்து பல நூற்றுக் கணக்கான சிறிய குண்டுகளை வீசி அடிக்கக் கூடிய தன்மை வாய்ந்தவை. அவ்வாறு வீசி அடிக்கப்படும் சிறிய குண்டுகள் அனைத்தும் உடனடியாக வெடித்து விடாது. பல வருடங்கள் கூட வெடிக்காமல் இருக்கும். அத்தகைய குண்டுகளைக் கண்டுபிடித்து அகற்றுவதும் கடினமான விடயம். அவ்வாறு வெடிக்காத குண்டுகள் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம். போர் முடிவுக்கு வந்து பல ஆண்டுகளின் பின்பு கூட அவை வெடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இத்தகைய அம்சத்தைக் கருத்தில் கொண்டே 2008ஆம் ஆண்டில் இத்தகைய குண்டுகளின் பாவனையைத் தடுக்கும் ஐ.நா. பட்டயம் வெளியிடப்பட்டது. அதனை அப்போது 110 நாடுகள் ஏற்றுக்கொண்டு அங்கீகரித்திருந்தன. அந்தப் பட்டயத்தை ஏற்றுக்கொண்ட அமெரிக்காவின் நட்பு நாடுகளான ஸ்பெயின், பிரித்தானியா, கனடா, நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகியவை அமெரிக்காவின் தற்போதைய முடிவைக் கண்டித்துள்ளன. ஜேர்மனி நாடு அமெரிக்காவின் முடிவை நேரடியாகக் கண்டிக்காத போதிலும் கொத்தணிக் குண்டுகளை தான் உக்ரேனுக்கு வழங்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் ஒரு சிலவும் அமெரிக்காவின் முடிவுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன. எனினும், அவை யாவும் வழக்கம் போலவே அமெரிக்காவால் கண்டு கொள்ளாமல் விடப்படும் என்பது தெரிந்ததே. ஒரு வகையில் சொல்வதானால் - அமெரிக்காவுக்கான ரஷ்யத் தூதுவர் அனொட்டலி அன்ரனவ் கூறியதைப் போன்று - அமெரிக்கா ஒரு கையறு நிலைக்குச் சென்றுவிட்டது போலவே தென்படுகின்றது. மறுபுறம், ரஷ்யப் படைத்துறை அமைச்சர் சேர்கை சொய்கு இது தொடர்பில் காரசாரமாகக் கருத்து வெளியிட்டுள்ளார். கொத்தணிக் குண்டுகளை உக்ரேன் பாவித்தால் பதிலுக்கு ரஷ்யாவும் தன்னிடம் உள்ள அத்தகைய குண்டுகளைப் பாவிக்க வேண்டிய நிலை உருவாகும் என அவர் எச்சரித்துள்ளார். அதேவேளை, கொத்தணிக் குண்டுகள் உக்ரேன் போரின் முடிவுகளை மாற்ற மாட்டாது என ரஷ்யா அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளது. உக்ரேன் போர் ஆரம்பமான நாள் முதலாகவே, இந்தப் போர் மூன்றாம் உலகப் போருக்கு வழி சமைக்கக் கூடும் என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றமையை முழு உலகுமே அறியும். உக்ரேன் போரில் எதனை இழந்தாவது வெற்றியை மாத்திரமே சுவைக்க வேண்டும் என நினைக்கும் அமெரிக்க ஏகாதிபத்திய மனோநிலை நாளை ரஷ்யாவுக்கு எதிராக படைகளை அனுப்பி வைப்பதற்கும், முடிவில் அணுகுண்டுகளைப் பாவிக்கும் நிலைக்கும் கூட வித்திடலாம். அத்தகைய ஒரு நிலை உருவானால் உலகம் முழுவதுமாக அழிந்தே போகும். பின்னர் உக்ரேன் போரைப் பற்றிக் கவலைப்பட அமெரிக்காவும் இருக்காது, மேற்குலகும் இருக்காது. https://www.virakesari.lk/article/160163
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
கிரைமியாவின் ரஷ்ய இராணுவத் தளத்தில் பாரிய தீ: 2000 பேர் வெளியேற்றம் Published By: SETHU 19 JUL, 2023 | 02:01 PM ரஷ்யாவினால் இணைத்துக் கொள்ளப்பட்ட கிரைமியா பிராந்தியத்திலுள்ள ரஷ்ய இராணுவத் தளமொன்றில் இன்று பாரிய தீ பரவியுள்ளது. இதனால், இராணுவத் தளத்துக்கு அருகிலுள்ள பகுதிகளில் வசிக்கும் 2,000 இற்கும் அதிகமான மக்களை வீடுகளிலிருந்து தற்காலிகமாக வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என ரஷ்யாவினால் நியமிக்கப்பட்ட கிரைமியாவின் ஆளுநர் சேர்ஜி அக்சியோனோவ் தெரிவித்துள்ளார். கீரோவ்ஸ்கி மாவட்டத்திலுள்ள இராணுவப் பயிற்சித் தளத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தையடுத்து தவ்ரிதா நெடுஞ்சாலையின் ஒரு பகுதியும் மூடப்பட்டுள்ளது. இத்தீ எவ்வாறு ஏற்பட்டது என்பது தெரியவில்லை. இதேவேளை, தனது படையினர் கிரைமியா தீபகற்பத்தில் வெற்றிகரமான நடவடிக்கையொன்றை மேற்கொண்டதாக மேற்படி தீயின் பின்னர் உக்ரேன் தெரிவித்துள்ளது. 'ஆக்கிரமிக்கப்பட்ட கிரைமியாவில் வெற்றிகரமான நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டது. இதனால் ஏற்பட்ட சேதங்களும், ஆளணி இழப்புகளும் எதிரியினால் மறைக்கப்படுகின்றன' என உக்ரேனிய இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் கிலிலோ புதானோவ் தெரிவித்துள்ளார். உக்ரேனிய பிராந்தியமான கிரைமியாவை 2014 ஆம் ஆண்ட ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/160397
-
சந்திரயான்-3: நாசா நிலவில் கால் பதித்துவிட்ட பிறகு ஆளில்லா ரோவர்களை அனுப்புவதால் என்ன பயன்?
ஆஸ்திரேலியாவில் கரையொதுங்கிய ‘மர்மப்பொருள்’ சந்திரயான் ராக்கெட்டின் பகுதியா? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவில் கரையொதுங்கிய பொருள் கட்டுரை தகவல் எழுதியவர், கீதா பாண்டே பதவி, பிபிசி நியூஸ் 8 நிமிடங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலிய கடற்கரையில் கரையொதுங்கிய ராட்சத உலோக உருளை போன்ற பொருள் இந்தியாவுக்குச் சொந்தமானதா என்று சந்தேகம் நிலையில் இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் விளக்கமளித்துள்ளார். இது ராக்கெட்டின் பகுதி என்று கூறப்படுகிறது. எனினும் “நாங்கள் அதை ஆய்வு செய்யாத வரை இது எங்களுடையது என்பதை உறுதிப்படுத்த முடியாது” என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு வடக்கே சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிரீன் ஹெட் கடற்கரையில் சில நாள்களுக்கு முன்பு ராட்சத உலோகப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் இருந்தே இந்தப் பொருள் பற்றிய ஊகங்கள் நிலவி வருகின்றன. இது கடந்த வெள்ளியன்று இந்தியா விண்ணுக்கு அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தை சுமந்து சென்ற ராக்கெட்டின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் அதை நிபுணர்கள் மறுத்தனர். சுமார் 2.5 மீட்டர் அகலமும், 2.5 மீட்டர் முதல் 3 மீட்டர் நீளமும் கொண்ட உருளை வடிவ பொருள், கிரீன் ஹெட் கடற்கரையில் வசிப்பவர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பொருள் காணாமல் போன MH370 மலேசிய விமானத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று கூட முதலில் ஊகங்கள் எழுந்தன. 2014-ஆம் ஆண்டு 239 பயணிகளுடன் இந்த விமானம் காணாமல் போனது. ஆனால் விமானப் போக்குவரத்து வல்லுநர்கள் இந்த பொருள் விமானத்தில் இருந்து வந்திருக்க முடியாது என்றும் அது ராக்கெட்டின் எரிபொருள் கலனாக இருக்கலாம் என்றும் கூறினர். பட மூலாதாரம்,GETTY IMAGES "வெளிநாட்டு விண்வெளி ஏவு வாகனத்தில்" இருந்து ராட்சத உருளை விழுந்திருக்கலாம் என்று ஆஸ்திரேலிய விண்வெளி நிறுவனம் கூறியது. இதைத் தொடர்ந்து, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு வழக்கமாக பயன்படுத்தும் பிஎஸ்எல்வி ராக்கெட்டின் எரிபொருள் கலன் என்று ஊகங்கள் எழுந்தன. கடந்த வெள்ளிக்கிழமை சந்திரயான்-3 விண்கலத்தை சுற்றுப்பாதையில் அனுப்ப இந்த வகை ராக்கெட் பயன்படுத்தப்பட்டால், அதன் எரிபொருள் கலனாக இது இருக்கலாம் என்று ஊகம் எழுந்தது. இந்தப் பொருள் பல மாதங்களாக நீரில் கிடந்திருக்கலாம் என்று கூறியிருக்கிறார்கள். ஆனாலும் ஊகங்கள் குறையவில்லை. எனினும் “இது ராக்கெட்டின் ஒரு பகுதி” என்று பிபிசியிடம் உறுதிப்படுத்திய சோம்நாத், “எந்த மர்மமும் இல்லை” என்று கூறினார். "இது பிஎஸ்எல்வி அல்லது வேறு ஏதேனும் ஒன்றின் பாகமாக இருக்கலாம், அதைப் பார்த்து பகுப்பாய்வு செய்யாவிட்டால், அதை உறுதிப்படுத்த முடியாது," என்று அவர் கூறினார். எனினும் ஆஸ்திரேலிய அதிகாரிகள் இன்னும் விவரங்களை வெளியிடவில்லை. https://www.bbc.com/tamil/articles/cev8gng087qo
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
அண்ணை புத்தகத்திற்கு பக்கத்தில தட்டில் இருக்கும் உள்ளூர் பேக்கரி பிஸ்கற்றைத் தான் ஆட்டுக்கால்/மடத்தல் என்று சொல்வார்கள். தேநீரில் நனைத்து 5/6ஐ சாப்பிட்டால் பசி அடங்கிவிடும்
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
உக்ரைனுடனான தானிய விநியோக உடன்படிக்கையிலிருந்து ரஸ்யா வெளியேறியுள்ளதை தொடர்ந்து சர்வதேச உணவு விநியோகத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இந்த உடன்படிக்கை சர்வதேச அளவில் உணவுப் பொருட்களின் விலைகளின் ஸ்திரதன்மையை பேணுவதற்கு மிகவும் முக்கியமானதாக காணப்பட்டது. உக்ரைனின் ஏற்றுமதிகளை நம்பியிருக்கும் மூன்றாம் உலக நாடுகளிற்கும் நன்மையளிப்பதாக காணப்பட்டது.
-
வெம்பக்கோட்டையில் பழங்காலத்தில் இருந்த தொழிற்சாலை: அகழாய்வில் தெரியவந்த புதிய தகவல்கள்
17 ஜூலை 2023 விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள வெம்பக்கோட்டையில் இரண்டாம் கட்ட அகழாய்வில் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட அரிய வகை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என தெரியவந்துள்ளது. சுடுமண்ணால் செய்யப்பட்ட பொம்மை, யானை தந்தத்தான் ஆன பதக்கங்கள், சூதுபவள மணிகள் போன்ற பல்வேறு பொருட்கள் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன. கீழடியில் தொழிற்சாலை இருந்ததற்கான சான்று பொருட்கள் கிடைத்துள்ளது போன்று வெம்பக்கோட்டையிலும் சங்கு தொழிற்சாலை இருந்ததற்கான சான்றுகள் உள்ளன என்று கூறுகிறார் வெம்பக்கோட்டை அகழாய்வு இயக்குநரான பாஸ்கர். தங்கம், செப்பு நாணயங்கள் போன்றவையும் கண்டறியப்பட்டுள்ளதாக கூறும் அவர், இதுவரை எழுத்து குறியீடு எதுவும் தென்படவில்லை என குறிப்பிடுகிறார். வெம்பகோட்டை அகழாய்வில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் கலைநயத்துடன் இருப்பதால் அக்காலத்தில் இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் கலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது. இப்பகுதியில் கிடைத்த பொருட்களின் அடிப்படையில் வைப்பாற்றங்கரையில் இருந்து தூத்துக்குடி கடல் வழியாக வணிகம் நடந்ததற்கான சான்று தெரிய வருகிறது. (முழு தகவல் காணொளியில்) தயாரிப்பு மற்றும் ஒளிப்பதிவு: பிரபுராவ் ஆனந்தன் எடிட்டிங்: ஜனா https://www.bbc.com/tamil/articles/c2jrnx7k510o
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
அப்புசாமியும் மடத்தலும்!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
முகப்பில் தமிழகச் செய்திகள், நலமோடு நாம் வாழ, சமூகவலை உலகம், விளையாட்டுத் திடல் போன்ற பகுதிகள் மேம்படுத்தப்படவில்லை. நிர்வாகிகள் கவனியுங்கோ. @நியானி, @இணையவன், @நிழலி, @nunavilan
-
ஊழலில் ஈடுபட்ட சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் ஈஸ்வரன் கைது
ஊழலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சிங்கப்பூர் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதையடுத்து, விசாரணை முடியும் வரை அவரை அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. போக்குவரத்து அமைச்சர் மற்றும் கோடீஸ்வர தொழிலதிபர் ஓங் பெங் மீதும் இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அமைச்சர்,தொழிலதிபர் கைது கடந்த 11ஆம் திகதி அந்நாட்டு ஊழல் புலனாய்வுப் பிரிவினர் அமைச்சர் மற்றும் தொழிலதிபரை கைது செய்தனர். ஊழலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக சிங்கப்பூரில் அமைச்சர் ஒருவருக்கு அதிக சம்பளம் வழங்கப்படுவதாகவும், அப்படியானால் அமைச்சர் ஒருவர் ஊழலில் ஈடுபடுவதை மன்னிக்கவே முடியாது என்றும் ஊழல் புலனாய்வுப் பணியகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டதன் பின்னர், விசாரணைகள் நிறைவடையும் வரை அமைச்சரை பிணையில் விடுவிக்க ஊழல் புலனாய்வுப் பணியகம் ஏற்பாடு செய்துள்ளதுடன் அவரது கடவுச்சீட்டை பணியகம் கையகப்படுத்தியுள்ளது. விசாரணைக்கு ஆதரவளித்த அமைச்சர் ஊழல் தொடர்பான விசாரணைக்கு போக்குவரத்து அமைச்சர் ஆதரவு அளித்ததாகவும், அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாகவும் சிங்கப்பூர் ஊழல் புலனாய்வுப் பிரிவு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளது. கடந்த 5ஆம் திகதி ஊழல் விசாரணைப் பணியகம் அந்நாட்டு பிரதமர் லீ சியாங் லாங்கிற்கு, ஊழல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரனிடம் விசாரணை நடத்த விரும்புவதாக அறிவித்தது. கோரிக்கையை அனுமதித்த பிரதமர், 6ஆம் திகதி போக்குவரத்து அமைச்சரிடம் விசாரணை நடத்த ஊழல் புலனாய்வுப் பிரிவினருக்கு அனுமதி வழங்கியுள்ளார். பிரதமர் வெளியிட்ட அறிக்கை இதுகுறித்து பிரதமர் லீ சியாங் லாங் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 5ஆம் திகதி ஊழல் புலனாய்வுப் பிரிவினரால் போக்குவரத்து அமைச்சரிடம் விசாரணை நடத்தக் கோரி விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், விசாரணை முடியும் வரை கட்டாய விடுப்பில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், மூத்த இராஜாங்க அமைச்சர் சீ ஹாங் டாட், போக்குவரத்து துறையின் தற்காலிக அமைச்சராக செயல்படுவார் என்றும் பிரதமர் கூறியுள்ளார். விசாரணை முடியும் வரை அவரை அனைத்து பதவிகள் மற்றும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்குமாறு அந்நாட்டு அரசுக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://ibctamil.com/article/singapore-transport-minister-arrested-for-fraud-1689545269
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ஒரே நாளில் 83 இராணுவ பட்டாலியன்களை இழந்துள்ளதா ரஷ்யா! வாக்னர் வாடகை இராணுவத்தினருடன் தொடர்புக்களை மேற்கொண்டு வந்ததாக கூறி ரஷ்ய இராணுவத்தின் உயரதிகாரிகள் சிலர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் வாக்னர் வாடகை இராணுவதினரால் இடம்பெற்ற இராணுவ புரட்சியில் இவர்களுக்கும் பங்கு இருப்பதாக கூறியே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. கடந்த வருடம் வாக்னர் படையின் இராணுவ புரட்சி நடவடிக்கை குறித்து ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. அப்படியானால் வாக்னர் படைக்கும் ரஷ்ய இராணுவத்திற்கும் இடையிலான தொடர்பை அந்நாட்டு புலனாய்வு பிரிவு அறிந்து வைத்திருக்கவில்லையா என்ற கேள்வி தற்போது உலக அரங்கில் எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரஷ்ய புலனாய்வு பிரிவின் பலவீனங்கள் பற்றி கடந்த வருடம் ரஷ்ய ஆதரவாளர்கள் பல்வேறான முறைப்பாடுகளை முன்வைத்தனர். இவ்வாறு ரஷ்யாவின் இராணுவ புரட்சி தொடர்பிலான விடயங்கள் குறித்து அந்நாட்டு ஊடகங்களில் மாத்திரம் இல்லாது சர்வதேச ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்துகொண்டு இருக்கின்றன. ஆனால் ரஷ்யாவினதும் புடினினதும் உக்ரைன் மீதான வெற்றி ஆரவாரங்களுக்கு மத்தியில் நாம் கவனத்தில் எடுக்க தவறிய விடயங்களை அலசி ஆராய்கிறது இன்றைய உண்மையின் தரிசனம். https://tamilwin.com/article/ukraine-russia-war-latest-update-1689579175
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
கிரைமியாவையும் ரஷ்யாவையும் இணைக்கும் பாலம் சேதமடைந்தது: இருவர் பலி Published By: SETHU 17 JUL, 2023 | 11:17 AM ரஷ்யாவினால் இணைத்துக்கொள்ளப்பட்ட, உக்ரேனின் கிரைமியா பிராந்தியத்தையும் ரஷ்ய பெருநிலப்பரப்பையும் இணைக்கும் பிரதான பாலத்தில் இடம்பெற்ற சம்பவத்தினால் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று திங்கட்கிழமை காலை கிரைமியா பாலத்தில் அவசர நிலையொன்று ஏற்பட்டதாக தகவல் கிடைத்தது என ரஷ்யாவின் பெல்கோரொட் பிராந்திய ஆளுனர் வியாசேஸ்லாவ் கிளாட்கோவ் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் ஒரு தம்பதியினர் கொல்லப்பட்டதாகவும், அவர்களின் மகள் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இப்பாலத்தின் கிரைமியா பகுதி சேதமடைந்துள்ளது என ரஷ்ய போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இசம்பவம் தொடர்பான விபரங்களை அவ்வவமைச்சு தெரிவிக்கவில்லை. கிரைமியாவையும் ரஷ்யாவின் க்ராஸ்னோடார் பிராந்தியத்தையும் இணைக்கும் இப்பாலத்தில் மேற்படி சம்பவத்தைடுத்து, போக்குவரத்து நிறத்தப்பட்டுள்ளது என ரஷ்ய அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/160195
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அண்ணை ஒருக்கா சரி பாருங்கோ.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
எனக்கென்னமோ ரஸ்யாவும் மேற்கும் உக்கிரேனில் தங்கட ஆயுதங்களை பரீட்சிப்பதாகப்படுகின்றது.
-
சந்திரயான்-3: நாசா நிலவில் கால் பதித்துவிட்ட பிறகு ஆளில்லா ரோவர்களை அனுப்புவதால் என்ன பயன்?
50 ஆண்டுகளுக்கு முன்பே நாசா அனுப்பிய விண்கலம், நான்கே நாட்களில் நிலவை அடைந்த நிலையில், தற்போது இஸ்ரோ அனுப்பும் ஆளில்லா விண்கலம் நிலவை சென்றடைய 40 நாட்கள் எடுப்பது ஏன்? நிலவை நோக்கிய சந்திரயான்-3 இன் பயணத்துக்கு இவ்வளவு நாட்கள் தேவைப்படுவது எதனால்?