Jump to content

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    22987
  • Joined

  • Last visited

  • Days Won

    16

Everything posted by ஏராளன்

  1. கனேடிய தேர்தல்களில் சீனா தலையீடு : ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டு By DIGITAL DESK 3 08 NOV, 2022 | 12:58 PM கனேடிய தேர்தல்களில் தலையீடு செய்வதற்கு சீனா முயற்சிப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருரோனா குற்றம் சுமத்தியுள்ளார். கனேடிய நிறுவனங்களை இலக்கு வைத்து, ஜனநாயகத்துடன் ஆக்ரோஷாமான விளையாட்டு நடத்துவதாக பிரதமர் ட்ரூடோ விமர்சித்துள்ளார். கனடாவில் அண்மைக்கால தேர்தல்களில் சீனாவின் ஆதரவு பெற்ற வலையமைப்பு ஒன்றை கனேடிய புலனாய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளதாக செய்தி வெளியானதையடுத்து பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ இவ்வாறு கூறியுள்ளார். 2019 ஆம் ஆண்டு கனடாவின் சமஷ்டி தேர்தல்களில் குறைந்தபட்சம் 11 பேர் சீனாவின் ஆதரவைப் பெற்றிருந்தனர் என ஜஸ்டின் ட்ரூடோவிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என செய்தி வெளியாகியுள்ளது. பல வேட்பாளர்களுக்கு சீனா பணம் வழங்கியதகாவும், சில வேட்பாளர்களின் பிரச்சார ஆலோசகர்களாக சீனர்கள் செயற்பட்டதாகவும் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர் என கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒன்டாரியோவை தளமாகக் கொண்ட மாகாண சட்டசபை உறுப்பினர் ஒருவருககு ஊடாக 250,000 கனேடிய டொலர் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டொரண்டோவிலுள்ள சீனத் தூதரகத்திலிருந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், கொள்கைளில் செல்வாக்கு செலுத்துவதற்காக, பதவியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களின் தமது செயற்பாட்டாளர்களை வைப்பதற்கு முயற்சிக்கப்பட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. https://www.virakesari.lk/article/139427
  2. தனுஸ்க விவகாரத்தில் மூன்றாம்தரப்பின் தலையீடு எதுவுமில்லை - ஸ்ரீலங்கா கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை By RAJEEBAN 08 NOV, 2022 | 01:30 PM பாலியல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஸ்க குணதிலகவின் சட்டரீதியான செலவுகளை ஸ்ரீலங்கா கிரிக்கெட் பொறுப்பேற்கவேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் மிக முக்கிய பிரமுகர் வேண்டுகோள் விடுத்துள்ளார் என நன்கறியப்பட்ட விளையாட்டு வீரர் ஒருவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவை முற்றுமுழுதாக நிராகரிப்பதுடன் கண்டிப்பதாக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட டுவிட்டின் உண்மை தன்மையை முற்றுமுழுதாக நிராகரிப்பதாக தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட் தனுஸ்க குணதிலக தனக்கு உள்ள சட்டரீதியான உரிமைகளை பயன்படுத்துவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளில் மூன்றாம் தரப்பின் செல்வாக்கிற்கு எந்த வகையிலும் உட்படவில்லை என தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இந்த டுவிட் ஆதாரமற்றது தீயநோக்கத்துடன் எழுதப்பட்டு பிரசுரிக்கப்பட்டுள்ளது ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் நற்பெயருக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தை கொண்டது பொதுமக்கள் மத்தியில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் குறித்து வெறுப்பை தூண்டும் நோக்கத்தை கொண்டது எனவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சு விளையாட்டுத்துறை அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து தனுஸ்க குணதிலகவின் சட்டரீதியான உரிமைகளை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது இந்த விடயம் மூன்றாம் தரப்பின் தலையீடு இன்றி கையாளப்படுகின்றதுஎனவும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/139432
  3. விழுங்கப்பட்ட பற்றரி வெடித்ததால் 2 வயது சிறுவன் உயிருக்குப் போராட்டம் By DIGITAL DESK 3 08 NOV, 2022 | 12:13 PM மெக்ஸிகோவைச் சேர்ந்த 2 வயதான சிறுவனொருவன் விழுங்கிய பற்றரி, வயிற்றுக்குள் வெடித்ததால் அச்சிறுவன் உயிருக்குப் போராடி வருகிறான். அச்சிறுவன் சுவாசிப்பதற்கு சிரமப்படுவதாகக் கூறி, இச்சிறுவனை அவனின் தாயார் கெனானியா நகரிலுள்ள வைத்தியசாலைக்கு ஒக்டோபர் 23 ஆம் திகதி அழைத்துச் சென்றார். அச்சிறுவன் பற்றரியை விழுங்கியிருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். அதன்பின், ஹேர்மோசிலோ நகரிலுள்ள வைத்தியசாலைக்கு அச்சிறுவன் அனுப்பப்பட்டான். அச்சிறுவனை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்துவதற்கு முன்னர், அந்த பற்றரி வெடித்துவிட்டதாகவும், இதனால், சிறுவனின் உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. https://www.virakesari.lk/article/139422
  4. உங்கள் கண்கள் உங்களுடைய உடல் ஆரோக்கியத்தை சொல்லும் - ஓர் அலசல் பார்பரா பியர்சியோனெக் ㅤ 47 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சான் டியாகோவில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள், ஒரு ஸ்மார்ட் போன் செயலி ஒன்றை முன்னெடுத்திருக்கின்றனர். அது அல்சைமர் நோயின் ஆரம்ப கட்ட அறிகுறிகள் மற்றும் இதர நரம்பியல் பிரச்னைகளை கண்டறிய முடியும். செல்போனின் அருகாமை அகச்சிவப்பு கேமராவை உபயோகித்து இந்த செயலி ஒருவரின் கண்ணில் உள்ள கண்மணியின் அளவில் ஒரு துணை மில்லிமீட்டர் அளவுக்கு ஏற்படும் மாற்றத்தை கண்டறிய முடியும். இந்த ஆய்வை ஒரு நபரின் புலனுணர்வு நிலையை மதிப்பீடு செய்ய உபயோகிக்க முடியும். தொழில்நுட்பம் வளர்ச்சியடையும்போது, அனைத்து வகையான நோய்களையும்,நிலையையும் கண்டறியமுடியும் என்ற பொருளில் கண்கள் அதிக அளவில் உபயோகமாக இருக்க முடியும். வெளிப்படையாக இருக்கிறது என்பதால், அவைகளை உடலின் இதர பாகங்களை விடவும் குறைவான சோதனை முறைகளுக்கு உட்படுத்த வேண்டிய தேவையே இருக்கும். ஆனால், தொழில்நுட்பம் இல்லாவிட்டாலும், வெறுமனே உங்கள் கண்களை பார்த்து மட்டுமே கூட குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உடல் நலக்கோளாறுகளை கண்டறிவது சாத்தியமாகும். இவையெல்லாம் சில எச்சரிக்கை அறிகுறிகளாகும் கண்மணியின் அளவு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, "கண்களின் வெண்மை" மஞ்சள் நிறமாக மாறுவது எரிச்சல் அல்லது தொற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். வெளிச்சமான சூழல்களில் கண்ணின் மணிகள் உடனடியாக லேசாக, சிறியதாக இருக்கும். குறைவான வெளிச்சம் இருக்கும் சூழல்களில் கண்ணின் மணிகள் பெரியதாக இருக்கும். கண்மணிகளின் அளவில் மெதுவான அல்லது தாமதமான வெளிப்பாடு அல்சைமர் நோய் போன்றவற்றின் தீவிரத்தன்மை உள்ளிட்ட பல்வேறு உடல் நலக்கோளாறுகளை சுட்டிக்காட்டுவதாக இருக்கும். அதே போல போதை மருந்து உபயோகத்தின் ஆதாரமாக மற்றும் மருந்துகளின் பக்கவிளைவுகளை சுட்டிக்காட்டுவதாகவும் இருக்கும். கொக்கைன் மற்றும் ஆம்பெடமைன் போன்ற ஊக்கமருந்துகளை உபயோகிப்பவர்களின் கண்மணிகள், பொதுவாக விரிவடைந்து காணப்படும். ஹெராயின் உபயோகிப்பவர்களின் கண்கள் மிகவும் சிறிய கண்மணிகளைக் கொண்டதாக இருக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இது எரிச்சல் தந்தாலும், கண்ணில் சிவப்பு புள்ளிகள் ஒரு சிறிய உடைந்த ரத்த நாளத்தின் காரணமாக இருக்கலாம். சில நாட்களுக்குப் பிறகு அது மறைந்துவிடும். சிவப்பு அல்லது மஞ்சள் நிற கண்கள் வெள்ளைப்பகுதியில்(கண்களின் வெள்ளைப்பகுதியில்) நிறம் மாறியிருந்தால் ஏதோ தவறான கோளாறு இருக்கிறது என்று பரிந்துரைக்க முடியும். சிவப்பான, ரத்தம் தோய்ந்தது போல கண்கள் காணப்பட்டால் அதிக அளவு மது உபயோகம் அல்லது போதை மருந்து உபயோகித்ததற்கு அறிகுறியாகும். பெரும்பாலான தருணங்களில் சில நாட்கள் கடந்த பின்னர் கண்களில் தொற்று ஏற்படுவதற்கும் அல்லது எரிச்சல் ஏற்படுவதற்கும் காரணமாக இருக்கும். கண்ணின் நிற மாற்றம் தொடர்ச்சியாக இருந்தால், மேலும் தீவிர தொற்றுக்கான அறிகுறி, கட்டிகள் அல்லது கான்டாக் லென்சின் எதிரொலியாக அல்லது தீர்வின் எதிர்வினைகளைக் குறிப்பதாக இருக்கலாம். அதீத நிகழ்வுகளில் சிவப்பான கண்கள், கண்பார்வை குருடாவதற்கு வழிவகுக்கும் குளுக்கோமா அறிகுறியை குறிப்பதாக இருக்கலாம். விழி வெண் கோளத்தைச் சுற்றி உள்ள sclera எனும் தோல் பகுதி மஞ்சள் நிறமாக மாறினால், இது பொதுவான வெளிப்படையான மஞ்சள் காமாலை மற்றும் நோய்வாய்பட்ட கல்லீரல் அறிகுறியை குறிப்பதாக இருக்கும். மஞ்சள் காமாலையின் அடிப்படையான காரணங்கள் பரவலாக வேறுபடுகின்றன. கல்லீரலில் (ஹெபடைடிஸ்) கட்டி, மரபணு அல்லது நோய் எதிர்ப்பு சக்தியில் தொற்று, மற்றும் சில மருந்துகள், வைரஸ்கள் அல்லது டியூமர் எனப்படும் கட்டிகள் உள்ளிட்ட காரணங்களை கொண்டிருக்கின்றன. சிகப்பு கறை கண்ணின் வெள்ளை பகுதியில் சிவப்பான ரத்தம் போன்ற புள்ளி பார்ப்பதற்கு எப்போதும் பயங்கரமான தோற்றத்தை தரும். கண்பகுதிக்குள் உள்ள சிறிய, ரத்த நாளம் வெடித்ததன் விளைவாக இது ஏற்பட்டிருக்கும். பெரும்பாலான சமயங்களில் வெளியே தெரிந்த காரணங்களால் நேரிடாது. சில நாட்களில் இந்த சிவப்பு புள்ளி மறைந்து விடும். எனினும், இது உயர் ரத்த அழுத்தம், நீரழிவு நோய், அதீத ரத்தப் போக்கு ஏற்படக் கூடிய ரத்தம் உறைதல் கோளாறுகள் போன்றவற்றுக்கான அறிகுறிகளை குறிப்பதாகவும் இருக்கலாம். தவிர, ரத்தத்தை மெலிய வைக்கும் ஆஸ்பரின் போன்ற மருந்துகள் காரணமாக இருக்கலாம். பிரச்னை அடிக்கடி இருந்தால், இந்த அறிகுறிகளை கொண்டவர்கள், மருத்துவர்களிடம் தங்களுக்கு தரப்படும் மருந்துகளின் அளவை பரிசீலனை செய்யக் கோரலாம். சிப்ஸ் மட்டுமே சாப்பிட்ட 17 வயது இளைஞருக்கு கண் பார்வை பறிபோனது குழந்தைகள் இடையே கிட்டப்பார்வை குறைபாடு அதிகரிக்கிறதா? விழியின் வெண்படலத்தை சுற்றி வளையம் பட மூலாதாரம்,GETTY IMAGES விழியின் வெண்படலத்தை சுற்றி வெள்ளையான அல்லது சாம்பல் நிற வளையம் காணப்படுவது பெரும்பாலும் உயர் கொழுப்பு மற்றும் இதயநோய் அபாயத்தை அதிகரிக்கும் அறிகுறியாக இருக்கலாம். இது மது பழக்கத்தையும் சுட்டிக்காட்டுகிறது. சில நேரங்களில் முதியவர்களின் கண்களில் இது போன்று காணப்படும். இது ஆர்கஸ் செனிலிஸ் என்ற மருத்துவப் பெயரால் அழைக்கப்படுகிறது. கொழுப்புக்கட்டி சில நேரங்களில் மிகவும் அபாயகரமான அம்சங்கள் கண்களில் தோன்றக்கூடும். அவை பெரும்பாலும் உண்மையில் தீங்கற்றதாக, எளிதாக சிகிச்சை அளிக்கக் கூடியதாக இருக்கும். பிங்குகுலா என்பது, கண்ணின் வெள்ளைப் பகுதியில் தோன்றும் மஞ்சள் நிறமான கொழுப்பு கட்டியாகும். இது புரதம் மற்றும் கொழுப்பு கொண்ட சிறிய கட்டியாகும். கண்களில் சொட்டு மருந்து விடுதல் அல்லது சிறிய எளிதான ஆபரேஷன் மூலம் இதனை சரி செய்ய முடியும். முன்தோல் குறுக்கம் (pterygium) எனப்படுவது கண்ணின் வெள்ளைப் பகுதியில் தோன்றும் இளம் சிவப்பு வளர்ச்சியாகும். விழியின் வெண்படலத்தில்(கண்ணின் நிறப்பகுதி) வளரத்தொடங்காத வரை இது பார்வைக்கு தீங்கிளைக்காது. எதிர்பாராத விதமாக பிங்குகுலாவைப் போல pterygium மிகவும் மெதுவாக வளரும். எளிதாக அதனை அகற்ற முடியும். எனினும், இது விழி வெண்படலத்தைத் தொடுவதற்கு நீண்ட நாட்களுக்கு முன்பே அவசியம் அகற்றப்பட வேண்டும். இதனை வளர அனுமதித்து விட்டால், pterygium என்பது வெண் விழிப்படலத்தில் மேடமூட்டமான படமாக மாறிவிடும். இது பார்வையில் தடையை ஏற்படுத்தும். பிங்குகுலா, pterygium இரண்டும் நேரிடுவதற்கு, சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதா ஒளிக்கதிர்களின் நாள்பட்ட வெளிப்பாடுகள் முக்கியமான பாதிப்பு காரணிகளில் ஒன்றாக இருக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வீங்கிய கண்களுக்குப் பின்னால் தைராய்டு சுரப்பியில் பிரச்னை இருக்கலாம். கண்கள் வீக்கம் கூக்ளி கண்கள் என்று அழைக்கப்படும் சுழன்று கொண்டிருக்கும் கண்கள் என்பவை சாதாரண முக அம்சத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம். ஆனால், முன்னர் வீக்கம் இல்லாமல் இருந்த கண்கள், முன்னோக்கி வீங்கத்தொடங்கும். இது பெரும்பாலும் பொதுவாக தைராய்டு சுரப்பி பிரச்னையால் இருக்கலாம். இதற்கு உடனே மருத்துவ கவனிப்புத் தேவை. ஒற்றை கண் வீக்கம் என்பது, காயம், தொற்று அல்லது மிகவும் அரிதாக, கண்ணுக்குப் பின்னால் ஒரு கட்டி ஏற்பட காரணமாக இருக்கலாம். புடைப்பான அல்லது வெட்டி இழுக்கும் கண் இமைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES இது தவிர, வெட்டி இழுக்கும் கண் இமைகள் பல நோய்களுக்கான அறிகுறிகளை குறிப்பதாக இருக்கும். இவைகள் முக்கியமாக கண்இமைகளில் உள்ள சுரப்பிகளின் சிறிய பிரச்னைகளுடன் தொடர்புடையவையாக இருக்கலாம். கண்இமை வீக்கம் ஒரு பொதுவான நிலையாக இருக்கிறது. மேல் பகுதியில் ஒரு சிவப்பான கட்டியாக மற்றும் கண் இமையின் கீழ் (பொதுவாக மிகவும் குறைவாக)பகுதியில் இது தோன்றும். எண்ணைய் சுரபி தடுக்கப்படுவதால் இது நேரிடுகிறது. இந்த இமை வீக்கமானது தானாகவே அல்லது வெப்ப அழுத்தங்களால் சரியாகிவிடும். இது பெரிதாகும் பட்சத்தில், எளிதான ஒருமுறையின் மூலம் அகற்றப்பட வேண்டும். கண் இமை வெட்டி இழுப்பது போன்ற குறைபாடானது (கண் மயோக்கிமியா) எரிச்சல், வெப்பமான ஒளிக்கீற்று போன்றவற்றால் ஏற்படலாம், பார்வைக்கு சிறியதாக தோன்றினாலும், மேலும் மோசமாக உணரப்படலாம். பெரும்பாலான நிகழ்வுகளில் தீங்கு அளிக்கக்கூடியதாக இருக்காது. அழுத்தம் காரணமாகவோ, சரிவிகித ஊட்டசத்து இல்லாததன் காரணமாகவோ அல்லது அதிக அளவு காஃபி போன்ற பானங்கள் அருந்துவதாலோ ஏற்படலாம். இந்தக் கட்டுரை ஒரு வழிகாட்டி மட்டுமே. உங்கள் உடல்நலம் குறித்து சந்தேகம் இருந்தால், ஒரு நிபுணரை அணுகவும். பார்பரா பியர்சியோனெக், ஆங்கிலியா ரஸ்கின் பல்கலைக்கழகத்தில் (பிரிட்டன்) ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான பேராசிரியர் மற்றும் துணை முதல்வர் ஆவார். https://www.bbc.com/tamil/science-63548984
  5. பாபரிடமிருந்து மிக விசேடமான ஒன்றை காண்போம்: மெத்யூ ஹைடன் By DIGITAL DESK 3 08 NOV, 2022 | 05:42 PM 2022 ஐசிசி உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியின் மிகச் சிறந்த ஆட்டம் இன்னும் வெளிப்படவில்லை எனவும் அணித்தலைவர் பாபர் அஸாமிடமிருந்து மிகச் சிறந்த ஆட்டமொன்றை நாம் காணப்போகிறோம் என தான் எண்ணுவதாகவும் அவ்வணியின் ஆலோசகரான அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மெத்யூ ஹைடன் கூறியுள்ளார். இத்தொடரின் முதலாவது அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானும் நியூ ஸிலாந்தும் நாளை புதன்கிழமை மோதவுள்ளன. இந்நிலையில், சிட்னியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றுகையில் மெத்யூ ஹைடன் இவ்வாறு கூறினார். இத்தொடரில் பாகிஸ்தான் அணி நெருக்கடியிலிருந்த நிலையில், சுப்பர் 12 கடைசி நாள் போட்டியொன்றில் தென் ஆபிரிக்காவை எதிர்பாராத விதமாக நெதர்லாந்து தோற்கடித்தமை பாகிஸ்தானின் அரை இறுதி வாய்ப்பை இலகுவாக்கியது. இது குறித்து மெத்யூ ஹைடன் கூறுகையில், அது ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டிருந்தது. ஆனால், நாம் (பாகிஸ்தான் அணி) எமது சிறப்பான ஆட்டத்தை ஆடவில்லை என நான் உண்மையாக நம்புகிறேன். அது எதிரணிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும்' என்றார். 103 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 161 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடிய மெத்யூ ஹைடன், ஆக்ரோஷமான ஆரம்ப துடுப்பாட்ட வீரராக விளங்கியவர். இந்நிலையில், பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அஸாமின் ஆற்றல் குறித்து ஹைடன் நம்பிக்கை தெரிவித்தார். இத்தொடரின் 5 போட்டிகளில் 39 ஓட்டங்களையே பாபர் அஸாம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. பாபர் அஸாம் குறித்து ஹைடன் கூறுகையில், 'பாபர் சில கஷ்டங்களை எதிர்கொள்கிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அது அவரை மேலும் சிறந்த வீராகவே உருவாக்கும். வானிலை அமைதியாக இருந்தால், அடிக்கடி அதைத் தொடர்ந்து புயல் வரும், எனவே பாபரிடமிருந்து மிக விசேடமான ஒன்றை நாம் பார்க்கவுள்ளோம் என எண்ணுகிறேன்' என்றார். பங்களாதேஷ் அணியை பாகிஸ்தான் அணி வென்ற பின்னர், அணி வீரர்கள் மத்தியில் உரையாற்றிய மெத்யூ ஹைடன், பாகிஸ்தான் அணி இப்போது மிக ஆபத்தானது. ஏனைய அணிகள் அதைப் பார்த்து பயப்படுகின்றன என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை நியூஸிலாந்து அணி குறித்து மெத்யூ ஹைடன் இன்று கூறுகையில், எதிரணிகளை துடுப்பாட்டத்தினால் அழுத்தத்துக்கு உள்ளாக்கக்கூடிய வீரர்கள் நியூ ஸிலாந்து அணியில் உள்ளனர். அவர்களிடம் சிறந்த சமநிலையான பந்துவீச்சு வரிசையும் உள்ளது. சிறந்த வேகப்பந்துவீச்சு வரிசையும் உள்ளது. அனுபவம் மிக்க வீர்ரகள், போட்டிகளை வெல்லக்கூடிய வீரர்கள் அவர்களிடம் உள்ளனர் என்றார். https://www.virakesari.lk/article/139486
  6. தனுஷ்க குறித்து விசாரணைகளை மேற்கொள்ள மூவர் கொண்ட குழு நியமனம் By T. SARANYA 08 NOV, 2022 | 04:33 PM பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு அவுஸ்திரேலியாவில் சிறை வைக்கப்பட்டுள்ள தனுஷ்க குணதிலக தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சிசிர ரத்நாயக்க தலைமையில் மூவர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை செயலாளர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார். சட்டத்தரணிகளான நிரோஷன பெரேரா மற்றும் அசேல ரகவே ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கும் ஏனைய அங்கத்தவர்கள் எனவும் இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை அணியின் முகாமையாளர் மற்றும் வீரர்களிடம் வாக்குமூலம் பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் கிரிகெட் அணியின் அதிகாரிகள் உட்பட எவரேனும் பொறுப்பை புறக்கணித்திருந்தால் அவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார். https://www.virakesari.lk/article/139428
  7. கிளிநொச்சி - புதுமுறிப்பில் வெட்டுக் காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு By T. SARANYA 08 NOV, 2022 | 04:50 PM (கரைச்சி நிருபர்) கிளிநொச்சி புதுமுறிப்பு குளத்தின் நீர்ப்பாசன வாய்க்காலில் வெட்டுக் காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று (08) காலை வீதியால் சென்றவர்கள் சடலம் வாய்க்காலில் இருப்பதனை அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். கிளிநொச்சி கோணாவில் ராஜன் குடியிருப்பை சேர்ந்த ப.சத்தியராஜ் வயது 36 என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட பின்னர் புதுமுறிப்பு குளத்தின் கீழ் உள்ள நீர்பாசன வாய்க்காலில் சடலத்தை வீசியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் நீதிபதி பார்வையிட்ட பின்னர் சடலம் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும். இது தொடர்பாக மேலதிக விசாரணை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/139478
  8. நடுக்கடலில் இலங்கை தமிழர்களுடன் தத்தளித்துக்கொண்டிருந்த படகை காப்பாற்றிய ஜப்பான் கப்பல் - வெளியாகின புதிய தகவல்கள் By RAJEEBAN 08 NOV, 2022 | 12:08 PM நடுக்கடலில் 300க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்களுடன் தத்தளித்துக்கொண்டிருந்த படகை ஜப்பானின் கப்பலொன்றே மீட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 300க்கும் மேற்பட்ட இலங்கை தமிழ் அகதிகள் பயணித்துக்கொண்டிருந்த மீன்பிடிப்படகு சேதமடைந்து ஸ்பிராட்லி தீவுகளில் தத்தளித்துக்கொண்டிருந்தது என விஎன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. மியன்மார் கொடியுடன் பயணித்துக்கொண்டிருக்கும் லேடிஆர்3 படகு ஆபத்தில் சிக்கியுள்ளது இந்த படகு 303 இலங்கையர்களுடன் கனடா செல்ல முயல்கி;ன்றது என தகவல் கிடைத்ததாக வியட்நாமின் கடல்சார் மீட்பு மற்றும் ஆராய்ச்சி ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது. நவம்பர் ஐந்தாம் திகதி குறிப்பிட்ட கப்பல் தென்கரையோரத்தில் உள்ள வுங் டாவுவில் இருந்து 258 கடல்மைல் தொலைவில் காணப்பட்டது . படகின் இயந்திர அறைக்குள் நீர் சென்றதால் அந்த கப்பல் தத்தளிக்க தொடங்கியது கடல் கொந்தளிப்பாக காணப்பட்டுள்ளது. வியட்நாமின் கடல்சார் மீட்பு மற்றும் ஆராய்ச்சி ஒருங்கிணைப்பு நிலையம் கப்பலை தொடர்புகொள்ள முயற்சித்துள்ளது,அந்த பகுதியில் உள்ள ஏனைய கப்பல்களிற்கு அவசர சமிக்ஞையை அனுப்பியுள்ளது. திங்கட்கிழமை அந்த பகுதியில் ஜப்பான் கொடியுடன் ஹெலியோஸ் லீடர் என்ற கப்பல் காணப்பட்டுள்ளது,படகில் தத்தளித்துக்கொண்டிருந்தவர்களை காப்பாற்றுமாறு அந்த கப்பலிற்கு உத்தரவு வழங்கப்பட்டது. ஜப்பான் கப்பல் உடனடியாக தத்தளித்துக்கொண்டிருந்த படகைநோக்கி சென்றுள்ளது படகில் இருந்தவர்கள் மிகுந்த பதட்டத்துடன் காணப்பட்டுள்ளனர். ஜப்பான் கப்பல் படகில் இருந்தவர்களை மீட்டு அவர்களிற்கு மருத்துவகிசிச்சைகளை வழங்கியுள்ளது. வியட்நாம் மேலும் ஐந்து கப்பல்களை அந்த பகுதிக்கு அனுப்பியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளன. 20 சிறுவர்கள் 19 பெண்கள் உட்பட 303 பேரும் இன்றும் வுங் டாவுவை சென்றடைவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. https://www.virakesari.lk/article/139418
  9. சரிந்த சுரங்கம், காபி தூளை சாப்பிட்டு 9 நாட்களாக உயிரைப் பிடித்திருந்த தொழிலாளர்கள் - எங்கே? பென் டொபையாஸ் பிபிசி நியூஸ் 7 நவம்பர் 2022 பட மூலாதாரம்,NEWS1 தென் கொரியாவில் இடிந்து விழுந்த துத்தநாக சுரங்கத்தில் ஒன்பது நாட்களாகச் சிக்கி, காபி பவுடரைச் சாப்பிட்டு உயிர் பிழைத்துக் கொண்டிருந்த சுரங்கத் தொழிலாளர்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளனர். 62, 56 வயதுடைய ஆண்கள், நெருப்பு மூட்டி, நெகிழியால் கூடாரம் அமைத்து வெப்பத்தைத் தக்க வைத்து இருந்ததாக நம்பப்படுகிறது. அவர்களுடைய உடல்நிலை சீராக இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த வாரம் தலைநகர் சியோலில் ஏற்பட்ட நெரிசலில் 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதற்கு தென் கொரியா தேசிய துக்கம் கடைபிடித்து வரும் காலகட்டத்தில் இது நடந்துள்ளது. நாட்டின் கிழக்கில் உள்ள போங்வாவில் அக்டோபர் 26ஆம் தேதியன்று அவர்கள் பணியாற்றிக் கொண்டிருந்த துத்தநாக சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் இரண்டு சுரங்கத் தொழிலாளர்கள் நிலத்தடியில் கிட்டத்தட்ட 200 மீட்டர் (650 அடி) ஆழத்தில் சிக்கித் தவித்தனர். அவர்கள் இறுதியாக நவம்பர் 4ஆம் தேதி இரவு மீட்கப்பட்டனர். அவர்களுக்கான தேடுதல் தொடங்கி ஒன்பது நாட்களுக்கும் மேலானது. இருவரும் சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் பூரண குணமடைவார்கள் என்று மருத்துவர் கூறினார். அதிபர் யூன் சுக்-யோல் அவர்கள் மீட்கப்பட்டது "உண்மையில் அதிசயம் தான்" என்று கூறினார். 13 ஆயிரம் கோடி ரூபாய் பரிசு அறிவித்து அசர வைத்த லாட்டரி: 37 முறை யாரும் வெல்ல முடியாதது ஏன்? நீங்கள் சாதாரணமாக பயன்படுத்தும் ‘க்ளா ஹேர் க்ளிப்’ எப்படி கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா? புல்லாங்குழல் செய்ய கரடியின் தொடை எலும்பை பயன்படுத்திய நியாண்டர்தால்கள் "வாழ்க்கைக்கும் மரணத்திற்கு நடுவில் இருந்து பாதுகாப்பாக மீண்டு வந்ததற்கு உங்களுக்கு மிக்க நன்றி," என்று அவர் ஃபேஸ்புக்கில் எழுதினார். சுரங்கத் தொழிலாளர்கள் கூரையிலிருந்து விழுந்த தண்ணீரைக் குடித்தும் உடனடி காபி மிக்ஸ் பவுடரை உணவாகப் பயன்படுத்தியும் உயிர் பிழைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தென் கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனத்தின்படி, சுரங்கத் தொழிலாளர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அவசரக்கால பணியாளர்கள் வியாழக்கிழமையன்று நிலத்தடியில் துளையிட்டு சிறிய கேமராவை செருகியபோது மீட்பு நடவடிக்கை தொடங்கியது. பல சுரங்கப் பாதைகள் சந்திக்கும் ஒரு விசாலமான அறையில், வெப்பநிலையைத் தக்க வைக்க தோளோடு தோளாக அவர்கள் அமர்ந்திருந்தது இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. தப்பிப் பிழைத்தவர்களில் ஒருவரின் உறவினர், அவர் மீட்கப்பட்டு வெளியே வந்தபோது அடையாளம் காண முடியவில்லை என்று விவரித்தார். ஏனென்றால், அவர் இருட்டில் கிட்டத்தட்ட பத்து நாட்களாக இருந்ததால், வெளியே வரும்போது கண்களை மறைத்திருந்தார். ஏஎஃப்பி செய்தி முகமை, அந்த உறவினர் அவர் மீட்கப்பட்டதை "கனவில் நடப்பதைப் போன்ற விசித்திரமான நிகழ்வு" என்று விவரித்தார் எனத் தெரிவித்துள்ளது. https://www.bbc.com/tamil/global-63539214
  10. விபத்தில் உயிரிழந்த யாசகரிடமிருந்து ஒரு இலட்சம் ரூபா பணமும் 5 வங்கி புத்தகங்களும் மீட்பு By T. SARANYA 08 NOV, 2022 | 11:58 AM புத்தளம் - சிலாபம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த யாசகர் ஒருவர் 135,000 ரூபா பணத்தை வைத்திருந்ததாகவும் அவரது பெயரில் ஐந்து வங்கிக் கணக்கு புத்தகங்கள் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் - சிலாபம் வீதியில் ஆணைவிழுந்தான் பகுதியில் சனிக்கிழமை (05) மோட்டார் சைக்கிளொன்று மோதியதில் உடப்பு பிரதேசத்தைச் சேர்ந்த கதிரேசன் பாலமுருகன் (வயது 49) என்பவரே உயிரிழந்துள்ளார். ஆணைவிழுந்தான் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிலாபம் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். அவரது பையை சோதனை செய்ததில் 135,000 ரூபாய் பணமும் மற்றும் 47,000 ரூபாய் மதிப்புள்ள அவரது கணக்குகளின் வங்கி புத்தகங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. விசாரணையில் அவர் பல வருடங்களாக யாசகராக வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பான விசாரணைகளை ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என்.கீர்த்திபால மேற்கொண்டு வருகிறார். https://www.virakesari.lk/article/139409
  11. மன்னாரில் இடம்பெற்ற கௌரவமான அரசியல் தீர்வு கோரிய 100 ஆவது நாள் செயல் முனைவு போராட்டம் By DIGITAL DESK 5 08 NOV, 2022 | 02:07 PM வடக்கு - கிழக்கு மக்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வு கோரிய 100 ஆவது நாள் செயல் முனைவின் மக்கள் குரல் பிரகடனத்தின் 100 ஆம் நாள் பிரகடன ஒன்று கூடலானது இன்று செவ்வாய்க்கிழமை (08) காலை 11 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் கடந்த 99 நாட்கள் சுழற்சி முறையில் மக்கள் போராட்டங்கள் இடம் பெற்று வந்தது. குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தின் போது வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்' , நாங்கள் நாட்டை துண்டாட வோ தனியரசு கேட்கவில்லை.இலங்கை நாட்டுக்குள் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வையே கேட்கிறோம் ' வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் என்பது ஒரு ஜனநாயக உரிமையாகும் 13வது திருத்தச் சட்டமானது அரசியலமைப்பு ரீதியாக அதிகாரப் பரவலாக்கதுக்கான உரிமையை உறுதிப்படுத்துகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்போம்' எங்கள் நிலம் எமக்கு வேண்டும்,நடமாடுவது எங்கள் உரிமை,பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை,ஒன்று கூடுவது எங்கள் உரிமை,மத வழிபாடு எங்கள் சுதந்திரம், எமது மத தளங்களின் புனிதத்தை கொச்சைப்படுத்தாதே,இந்து மத ஆலயங்களின் இடங்களை திட்டமிட்டு அபகரிக்காதே என பல கோரிக்கைகளை முன் வைத்தனர். குறித்த நூறு நாள் மக்கள் செயவ்முனைவின் இறுதி நாள் மக்கள் பிரகடனம் மன்னார் மாவட்டத்தில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் வடமாகாண இணைப்பாளரும் மன்னார் மாவட்ட மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளருமான ஜே.யாட்சன் பிகிராடோ தலைமையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் மத தலைவர்கள்,மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணியாளர்கள்,மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணைய பிரதிநிதிகள்,உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்,பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். இதன் போது 'புரையோடிக் கிடக்கும் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான சமஷ்டி அரசியல் தீர்வு ' வேண்டிய மக்கள் பிரகடனம் இடம் பெற்றது. https://www.virakesari.lk/article/139434
  12. தமிழ்நாட்டு பெண்களிடையே உடல் பருமன் அதிகரித்து வருவது ஏன்? கட்டுரை தகவல் எழுதியவர்,சுசீலா சிங் பதவி,பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சில தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் டெல்லியில் உள்ள பெண்களிடையே உடல் பருமன் அதிகரித்துள்ளதாக தேசிய குடும்ப சுகாதார ஆய்வு NFHS-5 தெரிவிக்கிறது. NFHS-5 மற்றும் NFHS-4 தரவுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், புதுச்சேரி மற்றும் டெல்லியில் உள்ள பெண்களிடையே உடல் பருமன் அதிகரித்துள்ளது தெரியவருகிறது. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட கவுன்சில் ஃபார் சோஷியல் டெவலப்மென்ட் அமைப்பு, NFHS-5 தரவுகளின் அடிப்படையில் ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளது. ”NFHS-4 மற்றும் NFHS-5 ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது இந்த புள்ளிவிவரங்கள் மிகவும் கவலையளிக்கின்றன. பல இடங்களில் பெண்களின் உடல் பருமன் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 40.5%, கேரளாவில் 38.2%, ஆந்திராவில் 36.3%, புதுச்சேரியில் 46.3% அதிகரிப்பு காணப்படுகிறது,” என்று சமூக மேம்பாட்டு கவுன்சிலில் ஆராய்ச்சி உறுப்பினராக பணிபுரியும் முகமது ஷாஹித் கூறுகிறார். அதே நேரத்தில், 15-49 வயதுக்குட்பட்ட ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களிடையே உடல் பருமன் அதிகரித்துள்ளதாகவும் தரவு கூறுகிறது. ஆனால் தென் மாநில பெண்களிடையே மட்டும்தான் உடல் பருமன் அதிகரித்துள்ளது என்று சொல்லமுடியாது. டெல்லியில் 41.4% ஆகவும், பஞ்சாபில் 44% ஆகவும் இது அதிகரித்துள்ளது. பணிச்சுமை, நீண்ட நேர வேலை செய்தால் இந்த நோய் வரும்5 நவம்பர் 2022 டைனோசர் குட்டிகளை விழுங்கிய சனாஜே பாம்புகளை இந்தியாவில் கண்டுபிடித்தது எப்படி?2 நவம்பர் 2022 மனச்சோர்வுக்கு உண்மையில் மருந்துகள் தீர்வு அளிக்குமா? - ஆய்வு எழுப்பும் கேள்விகள்8 ஆகஸ்ட் 2022 ஒரு நபர் அதிக எடை கொண்டவரா,அதிக பருமன் கொண்டவரா என்பதை எப்படி அறிவது? Body mass index (பிஎம்ஐ), உடல் எடை மற்றும் உயரத்தைக்கொண்டு அளவிடப்படுகிறது. பிஎம்ஐ 25க்கு மேல் இருந்தால் அதிக எடை என்றும் 30க்கு மேல் இருந்தால் உடல் பருமன் என்றும் கருதப்படுகிறது. உடல் பருமனுக்கு காரணம்? சென்னையில் உள்ள ஒரு அரசு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் டயட்டீஷியனாக பணிபுரியும் டாக்டர் மீனாட்சி பஜாஜ், இந்த மருத்துவமனையின் தொழில்நுட்ப பேரியாட்ரிக் குழுவில் உறுப்பினராகவும் உள்ளார். இங்கு வரும் நோயாளிகளுக்கு பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை தேவையா இல்லையா என்பதை கமிட்டி உறுப்பினர்களுடன் சேர்ந்து அவர் முடிவு செய்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES இது ஒரு பக்கம் என்றாலும், தென்னிந்தியாவில் கார்போஹைட்ரேட் உட்கொள்ளல் அதிகமாக உள்ளது என்று அவர் கூறுகிறார். நகர்ப்புறங்களில் பாலீஷ் செய்யப்பட்ட அரிசியை அதிகம் உண்ணும் பழக்கம் உள்ளது. அதே வேளையில், கிராமப்புறங்களில் கம்பு, கேழ்வரகு, அரிசி போன்ற பல்வேறு விதமான தானியங்கள் உண்ணப்படுகின்றன. அவை பாலிஷ் செய்யப்பட்டவை அல்ல. அதே நேரத்தில், இந்தியா முழுவதையும் ஒப்பிடும்போது தென் மாநிலங்களில் இறைச்சி, முட்டை, மீன் மற்றும் கடல் உணவுகளின் நுகர்வு அதிகம் என்றும் இதுவும் உடல் பருமனுக்கு ஒரு பெரிய காரணம் என்றும் ICMR தரவு கூறுகிறது. அதே நேரத்தில், பழங்கள், காய்கறிகள் மற்றும் நார்ச்சத்து குறைவாக உட்கொள்ளப்படுகிறது. NFHS இன் முதன்மைஆராய்ச்சியாளர்களில் ஒருவரான டாக்டர் சஹாரன் பெட்கான்கர், தென் மாநிலங்களை மக்கள்தொகை அடிப்படையில் பார்த்தால், அதிக வளர்ச்சி மற்றும் நகரமயமாக்கல் ஏற்பட்டுள்ளது என்று கூறுகிறார். போக்குவரத்து வசதிகள் உள்ள இடங்களில், தூரத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வர வேண்டிய அவசியமில்லை. அத்தகைய சூழ்நிலையில் தினசரி உடல் செயல்பாடு குறைகிறது. இரண்டாவதாக அங்கு நலத் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் கிடைக்கின்றன. இது பெண்களிடையே உடல் பருமனை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில், 35 வயது அல்லது நடுத்தர வயதிற்குப் பிறகு, உடலில் வளர்சிதை மாற்றம்(metabolism) குறைகிறது, இது எடை அதிகரிப்புக்கு ஒரு காரணியாகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES நகர்ப்புறங்களில் உள்ள பெண்களிடையே உடல் பருமன் அதிகரித்து வருவதாகவும், உணவு மற்றும் வாழ்க்கை முறை இதில் பெரும் பங்கு வகிக்கிறது என்றும் சர்வதேச மக்கள்தொகை அறிவியல் கழகத்தின் பேராசிரியர் எஸ்.கே.சிங் கூறுகிறார். “பிராஸஸ் செய்யப்பட்ட அல்லது பதபடுத்தப்பட்ட உணவுகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதை ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளோம். சர்க்கரை மற்றும் உப்பின் அளவு இதில் அதிகமாக உள்ளது. இது போன்ற உணவுகளுக்கான, தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி செலவு கடந்த பத்து ஆண்டுகளில் பத்து மடங்கு அதிகரித்துள்ளதை எங்கள் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இப்போது மக்கள் வெளியே சென்று உணவு உண்பதை தேர்வு செய்கிறார்கள். இந்தப்பழக்கம், தென்னிந்தியா மட்டுமல்ல, வட இந்தியாவிலும் காணப்படுகிறது,” என்று அவர் தெரிவித்தார். தென்னிந்தியாவில் அரிசி அதிகமாக உட்கொள்ளப்படும் அதே நேரம் வட இந்தியாவில் கோதுமை, மசாலா உணவுகள் மற்றும் எண்ணெய் அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்று பேராசிரியர் எஸ்.கே.சிங் மற்றும் டாக்டர் சஹாரன் பெட்கோன்கர் ஆகிய இருவரும் கூறுகிறார்கள். சமீப காலமாக பெண்களிடையே மது அருந்தும் பழக்கம் அதிகரித்து வருவதையும் பார்க்க முடிகிறது. பேலியோ உணவு முறையை பின்பற்றுவதால் நீரிழிவு நோய் ஏற்படுமா?1 நவம்பர் 2022 முன்பின் தெரியாத நபர்களிடம் பழகுவதில் இவ்வளவு நன்மைகள் உள்ளனவா?1 நவம்பர் 2022 மன அழுத்தம் எதனால் ஏற்படுகிறது? சில புரிதல்களும் விளக்கங்களும்21 ஆகஸ்ட் 2021 ஆரோக்கியத்தில் தாக்கம் டெல்லியின் கிளவுட் நைன் மருத்துவமனையில் பணிபுரியும் மகளிர் மருத்துவ நிபுணர் டாக்டர் பிரதீபா சிங்கல், பெண்களுக்கு ஏற்படும் PCOD பிரச்சனைகள் பற்றி விளக்குகிறார். "பிசிஓடியில், பெண்ணின் உடலில் ஹார்மோன்கள் சமச்சீரின்மை ஏற்படுகிறது. இதன் காரணமாக கருமுட்டைப்பையில் பல நீர்க்கட்டிகள் ஏற்படுகின்றன, இதன் காரணமாகவும் உடல் பருமன் அதிகரிக்கிறது. உடல் எடையை குறைப்பது கடினமாகிறது. டெல்லி மற்றும் தென்னிந்திய பெண்களிடையே எடை அதிகரிப்பதற்கு இது ஒருமுக்கிய காரணமாக இருக்கலாம்,” என்று அவர் தெரிவித்தார். "இளம் பெண்களின் எடை 65 முதல் 70 கிலோ இருப்பது இப்போது சாதாரண விஷயமாகிவிட்டது. கர்ப்பம் தரிக்க திட்டமிடும் அல்லது கர்ப்பமான 30 வயதுடைய பல இளம் பெண்கள் என்னிடம் வருகின்றனர். அவர்களின் எடை 85 கிலோவுக்கு மேல் இருக்கிறது. இளம்பெண்கள் மத்தியில் உடல் பருமன் அதிகரித்து வருவதையும், சிறு வயதிலிருந்தே ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுகளை உட்கொள்வதே இதற்கு முக்கியக் காரணம் என்பதையும் நாம் பார்க்கிறோம்,” என்று அவர் குறிப்பிட்டார். "இதுதவிர வேலை செய்யும் பெண்கள் பெரும்பாலும் உட்கார்ந்து வேலை பார்க்கிறார்கள். வீட்டு வேலைகளுக்கு பணியாட்களை வைத்துக்கொள்கிறார்கள். நேரமின்மை காரணமாக நடை பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்ய முடியாமல் அவர்கள் உள்ளனர். கூடவே ஜங்க் ஃபுட் மற்றும் வெளி உணவு ஆகியவையும் பெண்களின் உடல் பருமனுக்கு முக்கிய காரணமாகிறது,”என்று டாக்டர் பிரதீபா கூறினார். ”உடல் பருமன் பல நோய்களுக்கு வழிவகுக்கிறது. பல உடல் மற்றும் மன நோய்கள் இதன் காரணமாக ஏற்படுகின்றன. உடல் பருமன் காரணமாக, நடக்கும்போது அல்லது படிக்கட்டுகளில் ஏறும்போது மூச்சுவாங்கல் ஏற்படுகிறது,”என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES உடல் பருமனால் ஏற்படும் நோய்கள் உயர் இரத்த அழுத்தம் நீரிழிவு நோய் இதய நோய்கள் - மாரடைப்பு மற்றும் ஹார்ட் ஸ்ட்ரோக் கொலஸ்ட்ரால் மலட்டுத்தன்மை புற்றுநோய் உடற்பயிற்சியைக் குறைப்பது அல்லது மூட்டுகளில் அதிக எடை வருவதன் காரணமாக ஆஸ்டியோபோரோசிஸ் அதாவது எலும்பு தேய்மானம் மற்றும் ஆட்ர்த்ரைட்டிஸ் அதாவது மூட்டு அழற்சியின் அபாயம் அதிகரிக்கிறது. https://www.bbc.com/tamil/articles/c29ew271w59o
  13. மேலும் சில வீரர்களிற்கு எதிராக முறைப்பாடுகள் By RAJEEBAN 08 NOV, 2022 | 01:54 PM உலககிண்ண தொடருக்காக அவுஸ்திரேலியா சென்ற இலங்கை அணியின் மேலும் சில வீரர்கள் குறித்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவுஸ்திரேலியாவி;ற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அணியில் இடம்பெற்றிருந்த மேலும் சில வீரர்கள் குறித்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அமல் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/139429
  14. இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் இல்லத்தில் 100 கோடி ரூபா பெறுமதியான பொருட்கள், பணம் திருட்டு! 08 NOV, 2022 | 01:31 PM கொழும்பு 7 இல் அமைந்துள்ள இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் போஜ் ஹன்போலின் உத்தியோகபூர்வ இல்லத்துக்குள் நுழைந்து திருடிய சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து சுமார் 100 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.00 மணிக்கும் 7.00 மணிக்கும் இடையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், திருட்டுச் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருடப்பட்ட பொருட்களில் கையடக்கத் தொலைபேசி, நினைவுப் பரிசு, தாய்லாந்து மற்றும் இலங்கை நாணயத்தாள்கள் என்பன உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/139431
  15. 300 இலங்கை அகதிகளுடன் நடுக்கடலில் தத்தளித்த கப்பல் மீட்பு கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES 300 அகதிகளுடன் பயணித்த கப்பல் ஒன்று மூழ்கும் தறுவாயில் இருந்த நிலையில், அந்த கப்பலில் பயணித்த அகதிகளை சிங்கப்பூர் அதிகாரிகள் மீட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது. இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா இதனை பிபிசி தமிழுக்கு உறுதிப்படுத்தினார். வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளை அண்மித்த கடற்பரப்பில், தாம் பயணிக்கும் கப்பல் மூழ்கும் அபாயத்தில் உள்ளதாக, அந்த கப்பலிலிருந்து தமது கடற்படையின் மீட்பு நிலையத்திற்கு நேற்றைய தினம் தகவலொன்று கிடைத்துள்ளதாக அவர் கூறுகின்றார். இதையடுத்து, இலங்கை அதிகாரிகள் வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் கடற்படையின் மீட்பு நிலையங்களுக்கு தகவலை பரிமாறியுள்ளனர். இந்த நிலையில், 300 அகதிகளுடன் பயணித்த கப்பலில் இருந்தவர்களை தமது முயற்சியில் மீட்க முடிந்தாக சிங்கப்பூர் அதிகாரிகள், இலங்கை கடற்படைக்கு அறிவித்துள்ளனர். இலங்கை புனர்வாழ்வு நிலையத்திலிருந்து 50க்கும் அதிகமான கைதிகள் தப்பியோட்டம் - என்ன நடந்தது?7 நவம்பர் 2022 இலங்கையில் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமராக முயற்சியா?7 நவம்பர் 2022 ரணில் அரசாங்கம் 8 அரசியல் கைதிகளுக்கு வழங்கிய பொது மன்னிப்பு - முழு விவரம்25 அக்டோபர் 2022 சிங்கப்பூரை அண்மித்த கடலில் பயணித்த மற்றுமொரு கப்பலின் உதவியுடன், இந்த அகதிகள் மீட்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் அதிகாரிகள், இலங்கைக்கு அறிவித்துள்ளனர். இந்த கப்பலில் இலங்கையர்கள் பயணிப்பதாக நேற்றைய தினம் சமூக வலைத்தளங்களில் குரல் பதிவொன்று பகிரப்பட்டு வந்தது. கப்பலில் பயணிக்கும் ஒருவர், தம்மை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கும் குரல் பதிவொன்றை இவ்வாறு பகிரப்பட்டது. ''பிலிப்பைன்ஸ் கடலில் 317 அகதிகளுடன் பயணித்த கப்பலொன்று மூழ்கும் அபாயத்தில் உள்ளது. குழந்தை பிள்ளைகள் இருக்கின்றார்கள். பெண்கள் இருக்கின்றார்கள். வயதானவர்கள் இருக்கின்றார்கள். அகதிகளுடன் வந்த கப்பலொன்று மூழ்க போகின்றது என செய்திகளுக்கு அறிவியுங்கள். 317 பேரின் உயிர்களை காப்பாற்றி விடுங்கள். கப்பல் மூழ்குகின்றது. நாங்கள் பிலிப்பைன்ஸிற்கும், வியட்நாமிற்கும் இடையில் நிற்கின்றோம்" என கப்பலில் பயணித்த அகதியொருவர் தொலைபேசியூடாக கருத்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில், குறித்த கப்பலில் இலங்கையர்கள் இருக்கின்றார்களா என, பிபிசி தமிழ், கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வாவிடம் வினவியது. பட மூலாதாரம்,GETTY IMAGES அகதிகள் இருப்பதாகவே தமக்கு தகவல் கிடைக்கப் பெற்ற போதிலும், அதில் இலங்கையர்கள் இருக்கின்றார்களா என்பது தொடர்பில் தமக்கு தெரியாது என அவர் பதிலளித்தார். மூழ்கும் அபாயத்திலுள்ள கப்பல் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அல்லது இலங்கையிலிருந்து பயணத்தை ஆரம்பித்த கப்பல் கிடையாது என்பது உறுதி எனவும் அவர் கூறினார். வெளிநாடொன்றிலிருந்து பயணித்த கப்பலிலேயே இந்த. அகதிகள் பயணித்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். இந்த கப்பலில் இலங்கையர்கள் இருக்கின்றார்களா என்பது தொடர்பில் இதுவரை தமக்கு அறிவிக்கப்படவில்லை என இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்தார். இலங்கையின் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த சூழ்நிலையில், இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு கடல்மார்க்கமாக பலர் சட்டவிரோதமாக சென்றுள்ளனர். அத்துடன், இலங்கையிலிருந்து அகதிகளாக செல்ல முயற்சித்த பலரை, இலங்கை அதிகாரிகள் கடந்த காலங்களில் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cv29yxdrm7mo
  16. நானும் முதலாவதாம்!😀 கொஞ்சநாளா கிருபன் அண்ணையும் ஈழப்பிரியன் அண்ணையும் சொல்லிக் கொண்டிருக்கினம்.🤭
  17. அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்க வேண்டும் - வடமாகாண பட்டதாரிகள் ஒன்றிய தலைவர் By DIGITAL DESK 2 07 NOV, 2022 | 03:12 PM பட்டதாரி நியமனத்தில் 35 வயதிற்கு மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குமாறு வடமாகாண பட்டதாரிகள் ஒன்றிய தலைவர் சிவசுப்பிரமணியம் லோகதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை (நவ.07) ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு கோரிக்கை விடுத்தார். மேலும் தெரிவிக்கையில், 35 வயதிற்கு மேற்பட்ட 8000 பட்டதாரிகள் பாடசாலை ஆசிரியர் பயிற்சிக்காக காத்திருக்கிறார்கள். அரசாங்க சேவையில் 35 வயதிற்கு மேற்பட்ட பட்டதாரிகளை நியமனத்திற்கு உள்வாங்கியது போல 35 வயதிற்கு மேற்பட்ட பட்டதாரிகளாக இருக்கின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இந்த சந்தர்பத்தில் உள்வாங்கப்பட வேண்டும். ரணில் விக்கிரமசிங்க வின் ஆட்சிக்காலத்தில் தொண்டராசிரியர்கள் நூறு நாட்கள் பாடசாலையில் தேசிய பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பயிற்சியின் பின்னர் சட்டப்பிரமாணங்களின் படி ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கப்பட்டார்கள். அதேபோல் 2018ஆம் ஆண்டு தேசிய பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நேர்முக மற்றும் பரீட்சை மூலமும் உள்வாங்கப்பட்டார்கள். இந்நிலையில் எம்மை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குவதற்கு பரீட்சை ஒன்றை வைத்து அதன் மூலம் ஆசிரியர் சேவைக்கு உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால் தற்போது அரசாங்கம் இருக்கும் சூழ்நிலையில் எம்மை பரீட்சை மூலம் உள்வாங்குவதற்கு நிதி உட்பட பல இடர்பாடுகள் காணப்படுகின்றது. அதனை சமாளிப்பதற்காக எமது அரசாங்கத்திற்கு நாம் செய்யும் தியாகமாக எம்மை ஒரு வருடகாலத்திற்கு அபிவிருத்தி உத்தியோகத்தராக இருந்து அதன் பின் எம்மை ஆசிரியர் சேலைக்குள் உள்வாங்கினால் அரசாங்கத்திற்கு செய்யும் தியாகமாக அமைவதுடன் அரசாங்கத்தின் நிதி பிரச்சினைக்கும் தீர்வாக அமையும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/139360
  18. சட்ட ரீதியாக திருமணம் செய்யாத மனைவிக்கு கடும் சித்திவதைகளை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள அரச நிறுவனம் ஒன்றில் உதவிப்பணிப்பாளராக தொழில் புரியும் நபரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா பதில் நீதவான் வசந்தா குணசேகர இன்று உத்தரவிட்டுள்ளார். சமிந்த குருப்பு நாணயக்கார என்ற நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்ப்டுள்ளார். சட்ட ரீதியாக திருமணம் செய்துக்கொண்ட தம்பதியினர் அல்ல கம்பஹா பிரதேசத்தில் வீடொன்றில் மேல் மாடியில் இருந்து குதித்த நிலையில் காயமடைந்த 40 வயதான பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த பெண் கொழும்பில் உள்ள நிறுவனம் ஒன்றில் உயர் பதவியை வகித்து வருவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. சந்தேக நபரும், காயமடைந்த பெண் சட்ட ரீதியாக மணம் செய்துக்கொண்ட தம்பதியினர் அல்ல என்பது ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பெண்ணை அயன் பெட்டியால் சுட்ட சந்தேக நபர் சந்தேக நபருக்கும் காயமடைந்த பெண்ணுக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையின் போது, சந்தேக நபர் துணிகளை அயன் செய்யும் அயன் பெட்டியால் சுட்டு, சித்திரவதை செய்த போது, பெண் உயிர் தப்புவதற்காக வீட்டின் மேல் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் பெண் மேல் மாடியில் இருந்து குதித்தாரா அல்லது சந்தேக நபர் தள்ளி விட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்துவதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். காயமடைந்த பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதால், அவரிடம் இதுவரை வாக்குமூலம் பெறவில்லை எனவும் பொலிஸார் நீதிமன்றத்திடம் கூறியுள்ளனர். https://tamilwin.com/article/the-reason-behind-the-woman-jumping-from-the-floor-1667820867
  19. கடந்த மாதத்தில் யாழில் போதைக்கு அடிமையான 183 பேர் அடையாளம்! By VISHNU 07 NOV, 2022 | 03:10 PM யாழ்ப்பாணத்தில் கடந்த ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 183 பேர் ஹெரோயின் போதைப்பொருளை அடிமையானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறைச்சாலைகளில் இருந்து மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டவர்களில் 155 பேர் ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையானர்வர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேவேளை நீதிமன்றங்களினால் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டவர்களில் 28 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/139358
  20. யாழின் முக்கியமான இடங்களில் இராணுவ சோதனை சாவடிகள் யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் முயற்சியாக இன்றிலிருந்து முக்கியமான இடங்களில் இராணுவ சோதனை சாவடிகள் அமைத்து வீதியால் பயணிப்போரை சோதனையிட உள்ளதாக யாழ்ப்பாண ராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் போதை பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து இந்த போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பில் பொதுவெளியில் அதிகளவாக பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேற்படி விடயம் தொடர்பில் அண்மையில் விஜயம் மேற்கொண்ட நீதி அமைச்சர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநரால் போதை பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் முகமாக யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் இடம்பெற்றிருந்தது. வடக்கு மாகாண ஆளுநரின் பரிந்துரைக்கு அமைய சோதனைச் சாவடி வடக்கு மாகாண ஆளுநரின் பரிந்துரைக்கு அமைய இன்று முதல் யாழ்ப்பாணத்தின் முக்கியமான இடங்களில் இராணுவத்தினரால் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு போதை பொருள் விநியோகம் மற்றும் போதை பொருள் பாவிப்போர் கைது செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் போதை பொருள் விற்பனை செய்வோர் மற்றும் போதை பொருள் பாவிப் போர் தொடர்பில் ஏதாவது தகவல்கள் தெரிந்தால் பொதுமக்கள் அருகில் உள்ள ராணுவ முகாமில் தகவல்களை தெரிவிக்கும் இடத்தில் குறித்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்ய உதவியாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் போதை பொருளை கட்டுப்படுத்த மக்களின் உதவி எனினும் இன்றிலிருந்து யாழ்ப்பாணத்தில் போதை பொருளை கட்டுப்படுத்தும் முகமாக இராணுவத்தினரால் யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடும் இராணுவம் பொதுமக்கள் இந்த விடயத்திற்கு தமக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். எதிர்கால சந்ததியினரை போதைக்கு அடிமையாக்குவதற்கு நாங்கள் இடமளிக்காது போதைப்புக்கு அடிமையானவர்களை இனம் கண்டு அவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கவே இன் நடவடிக்கை றே்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. போதை பொருள் பாவனையினை குறைப்பதற்கு ஒத்துழைப்பு இவ்வாறான காரணங்களால் சோதனை சாவடிகள் அமைக்கப்படுகின்றன எனவே பொதுமக்கள் யாழ்ப்பாணத்தில் போதை பொருள் பாவனையினை குறைப்பதற்கு எமக்கு முழு ஒத்துழைப்பினையும் வழங்க வேண்டும் என இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது. இராணுவத்தின் இவ்வாறான சோதனைச்சாவடி அமைக்கும் திடீர் நடவடிக்கை மக்கள் மத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. https://tamilwin.com/article/sudden-military-raids-on-booths-1667830568?itm_source=parsely-detail
  21. துப்பாக்கியை எடுத்துச்சென்ற சட்டத்தரணி கைது 07 NOV, 2022 | 10:04 PM அனுமதிப்பத்திரமற்ற துப்பாக்கி ஒன்றை வேனில் எடுத்துச் சென்ற குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவர் புத்தளம் குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் இன்று (07) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகத்துக்குரிய சட்டத்தரணி தனது வேனில் சாலியவெவ கலவெவ பகுதிக்குச் சென்று கொண்டிருந்த போது வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோதே துப்பாக்கி கைப்பற்றப்பட்டது. https://www.virakesari.lk/article/139387
  22. இலங்கை அணியின் களத்தடுப்பில் கவனம் செலுத்தவேண்டியுள்ளது - பயிற்றுநர் சில்வர்வூட் 07 NOV, 2022 | 10:01 PM (நெவில் அன்தனி) ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியிலிருந்து நிறைய நேர்மறையான விடயங்களை எடுத்துக் கொண்டதாகவும் ஆனால், சில அம்சங்களில் குறிப்பாக களத்தடுப்பில் முக்கிய கவனம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுநர் கிறிஸ் சில்வர்வூட் தெரிவித்தார். இங்கிலாந்துக்கு எதிரான சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் தோல்வி அடைந்த பின்னரே இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுநர் கிறிஸ் சில்வவூட் இதனைத் தெரிவித்தார். இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் எந்த அணிகளை இலங்கை வென்றெடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டதோ அவற்றில் ஐக்கிய அரபு இராச்சியம், நெதர்லாந்து ஆகிய அணிகளை முதல் சுற்றிலும் அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை சுப்பர் 12 சுற்றிலும் இலங்கை வெற்றிகொண்டது. மிகப் பெரிய அல்லது பிரபல்ய அணிகளான அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளிடம் இலங்கை தோல்வி அடைந்தது. முதல் சுற்றில் நமிபியாவிடம் இலங்கை அடைந்த தோல்வி கிறிஸ் சில்வர்வூடை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் என்பது நிச்சயம். அதேவேளை அந்தப் போட்டியில் அடைந்த தோல்வி இலங்கை அணிக்கு மாத்திரம் அல்ல முழு இலங்கைக்கும் பெரும் ஏமாற்றதைக் கொடுத்துள்ளது. இங்கிலாந்துடனான கடைசிப் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றிருந்தால் குழு 1க்கான அணிகள் நிலையில் இலங்கை மூன்றாம் இடத்திற்கு முன்னேறி இருக்கும். ஆனால், இங்கிலாந்திடம் கடைசி ஓவர் வரை போராடி தோல்வி அடைந்த இலங்கையினால் அணிகள் நிலையில் 4ஆம் இடத்தையே பெற முடிந்தது. எவ்வாறாயினும் இங்கிலாந்தை கடைசி ஓவர்வரை இலங்கை போராட வைத்தது சில்வர்வூடுக்கு திருப்தியைக் கொடுத்துள்ளது. 'இங்கிலாந்துடனான போட்டியில் தோல்வி அடைந்தது ஏமாற்றதைக் கொடுக்கிறது. ஆனால். எனது வீரர்கள் பெருமளவு திறமையை வெளிப்படுத்தினர். இங்கிலாந்துடன் எவ்வாறு விளையாடவேண்டும் என்பது குறித்து விரிவாக திட்டமிட்டோம். அதன் பலனாக இங்கிலாந்தை கடைசிவரை போராட வைத்தோம்' என இங்கிலாந்தின் முன்னாள் பயிற்றுநர் சில்வர்வூட் தெரிவித்தார். அப் போட்டியில் இலங்கையின் சுழல்பந்துவீச்சில் இங்கிலாந்தின் மத்தியவரிசை ஆட்டங்கண்டது. ஆனால், பென் ஸ்டோக்ஸின் ஆட்டமிழக்காத 42 ஓட்டங்களின் உதவியுடன் 2 பந்துகள் மீதமிருக்க வெற்றியீட்டிய இங்கிலாந்து அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது. அவுஸ்திரேலியாவில் பெயர் பெற்ற அணிகளை இலங்கை வெற்றிகொள்ளாதபோதிலும் தான் பயிற்றநராக பொறுப்பேற்றதிலிருந்து அணியில் முன்னேற்றதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது என கிறிஸ் சில்வர்வூட் கூறினார். 'ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு செல்வதற்கு முன்னர் வெள்ளைப் பந்து (மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் வகை) கிரிக்கெட் போட்டிகளில் நாங்கள் ஆரம்பித்த சில முறைமைகளில் முன்னேற்றத்தை காணலாம். எப்போது தாக்க வேண்டும், எப்போது தாக்கக்கூடாது, எப்போது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தவேண்டும் என்பதை உறுதிசெய்யும்வகையில் நாங்கள் எமது கூட்டுமுயற்சியை கட்டியெழுப்பிவருகிறோம். அதுதான் எனக்கு தேவை. அவர்கள் அவர்களாகவே இருக்கவேண்டும். ஆடுகளத்தினுள் சென்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி முன்னேற்றத்தை தொடரவேண்டும்' என்றார் சில்வர்வூட். இங்கிலாந்துடனான போட்டியில் களத்தடுப்பு சற்று சிறப்பாக இருந்தபோதிலும் அவுஸ்திரேலியாவில் பொதுவாக இலங்கையின் களத்தடுப்பு சிறப்பாக அமையவில்லை என்பதை சில்வர்வூட் ஒப்புக்கொண்டார். 'களத்தடுப்பு விடயத்தில் நாங்கள் அதிகமாக கவனம் செலுத்தி கடுமையாக பயிற்சியில் ஈடுபடவேண்டும். அதிலிருந்து நாங்கள் ஒதுங்க மாட்டோம். இது நாங்கள் செய்யவேண்டிய ஒரு தொடர்ச்சியான செயல்முறை. அதில் நாங்கள் முன்னேறவேண்டும்' என அவர் கூறினார். இதேவேளை, குசல் மெண்டிஸ், பெத்தும் நிஸ்ஸன்க, வனிந்து ஹசரங்க டி சில்வா ஆகியோர் குறித்து சில்வர்வூட் தனது திருப்தியை வெளியிட்டார். 'சில மாதங்களுக்கு முன்னர் குசல் மெண்டிஸை விக்கெட்காப்பாளராகவும் ஆரம்ப வீரராகவும் நாங்கள் அறிவித்தபோது அவர் அதனை சிறப்பாக நிறைவேற்றிக்காட்டினார். அவரை குறித்தும் முன்வரிசை (முதல் மூன்று துடுப்பாட்ட வீரர்கள்) துடுப்பாட்டம் குறித்தும் நான் திருப்தி அடைகிறேன். அவர்கள் சிறந்த ஆரம்பங்களை இட்டுக்கொடுத்தனர். 'வனிந்து ஹசரங்க ஒரு வெற்றிவீரர் அல்லவா? அவர் ஒரு சிறந்த வீரர். அதேபோன்று பெத்தும் நிஸ்ஸன்க கடந்த 12 மாதங்களில் படிப்படியாக முன்னேறியுள்ளார். அவரது திறமை என்னை மிகவும் கவர்ந்துள்ளது. அவருக்கு எப்போதும், எதுவும் இலகுவாக அமையவில்லை. அதற்காக அவர் கடுமையாக பயிற்சியில் ஈடுபடுவார். வலைப்பயிற்சியில் சிறப்பாக ஈடுபாடுவார். அவர் துடுப்பெடுத்தாடிவரும் விதம் அவருக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது' என்றார் சில்வர்வூட். இந்த வருட இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்த மூவருடன் தனஞ்சய டி சில்வா, சரித் அசலன்க, மஹீஷ் தீக்ஷன, மாற்றுவீரர் லஹிரு குமார ஆகியோரே தங்களாலான அதிகப்பட்ச பங்கிளிப்பை இலங்கை அணிக்கு வழங்கியிருந்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அணித் தலைவர் தசுன் ஷானக்க, பானுக்க ராஜபக்ஷ, சாமிக்க கருணாரட்ன ஆகியோர் பிரகாசிக்காதது இலங்கை அணிக்|கு பாதககத்;தை ஏற்படுத்தியது. 8 போட்டிகளில் விளையாடிய குசல் மெண்டிஸ் 2 அரைச் சதங்களுடன் 223 ஓட்டங்களையும் 7 போட்டிகளில் விளையாடிய பெத்தும் நிஸ்ஸன்க 2 அரைச் சதங்களுடன் 214 ஓட்டங்களையும் 8 போட்டிகளில் விளையாடிய தனஞ்சய டி சில்வா ஒரு அரைச் சதத்துடன் 177 ஓட்டங்களையும் 7 போட்டிகளில் விளையாடிய சரித் அசலன்க 131 ஓட்டங்களையும் பெற்று துடுப்பாட்டத்தில் திறமையாக செயற்பட்டனர். ஆனால், 8 போட்டிகளில் விளையாடிய பானுக்க ராஜபக்ஷ, தசுன் ஷானக்க, 7 போட்டிகளில் விளையாடிய சாமிக்க கருணாரட்ன ஆகியோர் பிரகாசிக்கத் தவறினர். பந்துவீச்சில் 8 போட்டிகளிலும் விளையாடிய வனிந்த ஹசரங்க டி சில்வா 15 விக்கெட்களையும் மஹீஷ் தீக்ஷன 9 விக்கெட்களையும் தனஞ்சய டி சில்வா 6 விக்கெட்களையும் மாற்று வீரராக அணியில் இணைந்து 6 போட்டிகளில் விளையாடிய லஹிரு குமார 6 விக்கெட்களையும் கைப்பற்றி திறமையை வெளிப்படுத்தியிருந்தனர். இது இவ்வாறிருக்க, 'அடுத்த வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெறுவதால் அந் நாட்டு சூழ்நிலை இலங்கை வீரர்களுக்கு பழக்கப்பட்டது. அது எமது வீரர்களுக்கு அனுகூலமாக அமையும். ஆனால், சில விடயங்களை கட்டியெழுப்பவேண்டியுள்ளது' என கிறிஸ் சில்வர்வூட் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/139386
  23. விலை சூத்திரத்திற்கமைவான எரிபொருள் விலை திருத்த முறைமையில் மாற்றம் இல்லை - வலு சக்தி அமைச்சு By VISHNU 07 NOV, 2022 | 08:07 PM (எம்.மனோசித்ரா) விலை சூத்திரத்திற்கமைய எரிபொருள் விலை திருத்தங்களை மேற்கொள்வதில் எவ்வித மாற்றங்களும் இடம்பெறாது என்று வலு சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. உலக சந்தையில் காணப்படும் விலைக்கு ஏற்பவே உள்நாட்டிலும் எரிபொருள் விலை திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. மாதாந்தம் முதலாம் திகதி மற்றும் 15 ஆம் திகதிகளில் விலை சூத்திரத்திற்கமைய எரிபொருள் விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். எனினும் இது நியாயமான விடயமல்ல என்று எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் மற்றும் விநியோகத்தர்களினால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இவ்வாறான நிலைமைக்குள் எரிபொருள் விலை குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் எரிபொருளுக்கான முற்பதிவுகள் மிகக் குறைவாகவே கிடைக்கப் பெற்றன. எரிபொருள் நிரப்பும் நிலைய உரிமையாளர்களின் இந்த செயற்பாட்டினால் கடந்த வாரம் சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடும் , அதன் காரணமாக வாகன வரிசையும் ஏற்பட்டது. எவ்வாறிருப்பினும் எரிபொருள் விலைகளில் மாற்றங்கள் ஏற்படாது என்று வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்ததையடுத்து , நிரப்பு நிலைய உரிமையாளர்களால் வழமையைப் போன்று முற்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. அதற்கமைய தற்போது எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/139375
  24. துட்டன்காமூன் மட்டுமே தனது ஆட்சிக்கு அப்பால், தனது நாட்டைப் பாதுகாத்து கவனித்துக்கொண்ட ஒரே பார்வோ மன்னன். துட்டன்காமூன் மட்டுமே தனது ஆட்சிக்கு அப்பால், தனது நாட்டைப் பாதுகாத்து கவனித்துக்கொண்ட ஒரே பார்வோ மன்னன்., ஏனெனில் அவர் தொடர்ந்து கொடையளிப்பவராக இருந்தார். 2022 துட்டன்காமுனின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்ட 100 வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. இவை அனைத்தும் 1922ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதிதான் தொடங்கியது. எகிப்தின் லக்சரில் உள்ள கிங்ஸ் பள்ளத்தாக்கில் பிரிட்டிஷ் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஹோவர்ட் கார்ட்டர் மற்றும் அவரது குழுவினருக்கு தண்ணீர் எடுக்கும்போது ஒரு சிறுவன் கல் தடுக்கி விழுந்தான். அந்த செயல்தான், கார்ட்டர் மற்றும் அவரது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு கிமு1332க்கும் கிமு1323க்கும் இடையில் ஆட்சி செய்த எகிப்திய மன்னரான துட்டன்காமுனின் கல்லறையைக் கண்டுபிடிக்க வழிவகுத்தது. https://www.bbc.com/tamil/science-63540136
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.