Everything posted by ஏராளன்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
முகப்பில் புதிய பதிவுகள்(Update) தோன்றாமல் இருப்பதாகப்படுகிறது. நிர்வாகிகள் கவனியுங்கோ. @நியானி, @இணையவன், @நிழலி, @nunavilan
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
ஐநாவும் உலக நாடுகளும் இனியாவது தாமதிக்காமல் மனித உரிமை விசாரணைகளை நடத்த முன்வரவேண்டும் - மனித புதைகுழிகள் குறித்து வேல்முருகன் Published By: RAJEEBAN 12 JUL, 2023 | 02:46 PM கொக்குதொடுவாயில் மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இனியாவது தாமதிக்காமல் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்த ஐநாவும் உலக நாடுகளும் முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் உலக நாடுகளை ஒன்றுதிரட்ட மத்திய அரசாங்கத்திற்கு தமிழக அரசாங்கம் போதிய அழுத்தம் கொடுக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது தமிழீழத்தில் 2008-2009-ம் ஆண்டில் லட்சக்கணக்கான தமிழர்களைச் சிங்கள படை கொன்று குவித்தது. குறிப்பாக, சிங்களப்படையின் குண்டு வீச்சிலிருந்து உயிர்தப்ப, பதுங்கு குழிகளுக்குள் ஒன்றன் மேல் ஒன்றாகப் பலநாள் படுத்திருந்த சிறுவர்கள் பட்டினியால் துடித்துத்துடித்துச் செத்துப்போனார்கள். உயிர் பிழைக்க வெட்டப்பட்ட பதுங்கு குழிகள் அவர்களின் மரணக் குழிகள் ஆயின. அடுக்கப்பட்டது போல், கிடந்த அச்சிறுவர்களின் பிணங்களை அப்படியே மண் போட்டு மூடினார்கள். சிறுவர்கள் மட்டுமல்ல, பெரியவர்களும் இப்படித்தான் பதுங்கு குழிகளுக்குள் படுத்து மரணத்தைத் தழுவினர். வெற்றிவாகை சூடிக்கொண்டதாக இராசபட்சே அறிவித்த அந்தக்கடைசி இருநாட்களில் (16, 17.05.2009), உயிர்காக்க அங்குமிங்கும் அலமந்து ஓடிய மக்களை எறிகணைகளாலும் எந்திரத் துப்பாக்கிகளாலும் குறி இலக்கு எதுவுமின்றி கைபோன போக்கில், கண்போன போக்கில் சுட்டுப் பல்லாயிரக்கணக்கானோரைப் பிணமாக்கினர். படுகாயமுற்று மருந்தின்றி துடித்துத் துடித்துச் செத்தோர் பல ஆயிரம் பேர். இத்துயரத்தை எண்ணி கலங்கிய உலகெங்கும் வாழும் தமிழர்கள், தமிழீழ மக்களுக்கு எதிரான இனப்படுகொலைப் போர் குறித்தும், அதன் விளைவுகள் குறித்தும், உலக அளவில் ஏற்புடைய புகழ்பெற்ற நீதிபதிகள் குழு ஒன்றின் தலைமையில் புலனாய்வும், விசாரணையும் நடத்த ஐ.நா முன் வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனாலும், ஐ.நாவும் முன் வரவில்லை; வழக்கம் போல் இந்திய ஒன்றியும் கவலைக்கொள்ளவில்லை. ஏனென்றால், செத்தவர்கள் தமிழர்கள்; காணாமல் போனவர்கள் தமிழர்கள். இந்நிலையில், முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியில் கடந்த 29ம் தேதி குழாய் நீர் பொருத்தும் பணிகளுக்காக குழியொன்று தோண்டப்பட்ட போது, கொத்து கொத்தாக பெண்களின் உள்ளாடைகள் மற்றும் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே, இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கண்டுபிடிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட 'மனித புதைக்குழிகள்' தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதி என்பது, 1984ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையான காலம் வரை முழுமையாக ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தவை. இறுதி போரின் போது, பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ராணுவத்திடம் சரணடைந்ததாகவும், அவ்வாறு சரணடைந்தவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் அச்சமயத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டுக்களை ராணுவம் தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றது. இச்சூழலில், முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியில், மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது வாயிலாக, சிங்கள பௌத்த பேரினவாத அரசின் இரத்த வெறி அம்பலப்பட்டுள்ளது. எனவே, இனியாவது தாமதிக்காமல், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்த ஐ.நாவும், உலக நாடுகளும் முன் வர வேண்டும். உலக நாடுகளை திரட்ட ஒன்றிய அரசுக்கு, தமிழ்நாடு அரசு போதிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது. இது ஒருபுறம் இருக்க, அறிவாற்றல், போராற்றல் அர்ப்பணிப்பு, விடுதலை வேட்கை ஆகியவற்றின் உருவமாகத் திகழும், உலகத் தமிழர்கள், ஈழம் தனி நாடாவதற்கான புரட்சியை முன்னிலும் பல மடங்கு வேகமாக முன்னெடுக்க வேண்டிய நேரமிது. ஆயுதக் குழுப்போராட்டம் என்பது மக்களை ஈர்க்காது; ஈழம் தனி நாடாவதற்கான கோரிக்கையை எழுப்பும், இலட்சிய இளைஞர்கள் ஒன்று திரள வேண்டும். எல்லாமே முடிந்துவிட்டது என்று நம் எதிரிகள் கருதுகிறார்கள்; எல்லாமே புதிய திசையில் இனிமேல் தான் தொடங்குகிறது என்று அவர்களுக்கு நாம் பறைசாற்ற வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்டுகிறேன். https://www.virakesari.lk/article/159838
-
சமுர்த்தி, ஏனைய நலன்புரி நன்மைகளைப் பெற மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு அறிவிப்பு
அஸ்வெசும கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு வலியுறுத்தியே ஆட்சேபனைகள் - பந்துல 12 JUL, 2023 | 10:01 AM (எம்.மனோசித்ரா) அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பில் ஆட்சேபனைகளை சமர்ப்பித்துள்ள 968 000 நபர்களில், 6 இலட்சம் பேர் தகுதியுடையோர் பெயர் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளவர்களாவர். இவர்கள் தமக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு வலியுறுத்தியே ஆட்சேபனைகளை சமர்ப்பித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க அமைச்சரவைக்கு தெளிவபடுத்தியதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். எவ்வாறிருப்பினும் ஆட்சேபனைக்கான கால அவகாசம் நிறைவடைந்துள்ள போதிலும் , தாம் கொடுப்பனவுகளைப் பெற தகுதியானவர்கள் என எண்ணுபவர்கள் ஜனாதிபதி செயலகம் , பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட அதிபர் அலுவலகத்துக்கு எழுத்து மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்கிழமை (11) இடம்பெற்ற பொது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , அஸ்வெசும தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து அமைச்சரவையில் விரிவாக அவதானம் செலுத்தப்பட்டது. எவ்வாறான பிரச்சினைகள் காணப்பட்டாலும் அங்கவீனமுற்றோருக்கு , நீரிழிவு நோயாளர்களில் இதுவரை கொடுப்பனவு வழங்கப்பட்டவர்களுக்கு மாத்திரமின்றி , காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களுக்கும் உரிய கொடுப்பனவுகளை வழங்குமாறு ஜனாதிபதி இதன் போது ஆலோசனை வழங்கினார். இதற்கு மேலதிகமாக ஆட்சேபனைக்காக வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் நிறைவடைந்தாலும் , எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நலன்புரி கொடுப்பனவுகளை இழந்துள்ளவர்களுக்கு ஜனாதிபதி செயலகத்துக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுக்க முடியும். அதே போன்று மாவட்ட அதிபர்கள் , பிரதேச செயலாளர்களிடமும் நலன்புரி திட்டத்துக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க முக்கிய விடயங்களை அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தினார். அதற்கமைய இதுவரை அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் 968,000 ஆட்சேபனைகளும் , 17,500 எதிர்ப்புக்களும் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இவை சகல பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட அதிபர்கள் உள்ளிட்டோரடங்கிய குழுக்களால் மீளாய்வு செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டார். எனினும் கிடைக்கப் பெற்றுள்ள 968 000 ஆட்சேபனைகளில் சுமார் 6 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் ஏற்கனவே பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளவர்களாவர். இவர்கள் தமக்கான நலன்புரி கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு கோரி ஆட்சேபனைகளை சமர்ப்பித்துள்ளனர். மாறாக இவர்கள் நலன்புரி கொடுப்பனவுகளை இழந்து ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கவில்லை. எனவே 968,000 பேருக்கு சமூர்த்தி கிடைக்கவில்லை என அரசியல் பிரசாரங்களை முன்னெடுப்பது பொறுத்தமானதல்ல. இவர்களில் 6 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொடுப்பனவுகளைப் பெற தகுதியானவர்கள் என்பதோடு , சுமார் 3 பேர் தகுதியற்றவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே வேளை பொறுத்தமற்றவர்கள் இந்த திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து 17,500 எதிர்ப்புக்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அடுத்த மாதமளவில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று நாம் நம்புகின்றோம் என்றார். இதேவேளை அஸ்வெசும வேலைத்திட்டத்தின் கீழ் நலன்புரி நன்மைகளைப் பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பித்துள்ள முதியோர், சிறுநீரக நோயாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கொடுப்பனவுகளைப் பெறுபவர்கள் மிகவும் பொருத்தமான குறிகாட்டிகள் மற்றும் வழிகாட்டிகளைப் பயன்படுத்தி தீர்மானிக்கும் வரைக்கும், இதுவரைக்கும் நன்மைகளைப் பெற்றுவந்த குறித்த 03 சமூகக் குழுக்களுக்கும் தற்போது வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள நலன்புரி நன்மைக் கொடுப்பனவுகளை செலுத்துவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://www.virakesari.lk/article/159787
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
மனித புதைகுழிகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் Published By: RAJEEBAN 12 JUL, 2023 | 07:27 AM கொக்குதொடுவாய் மனித புதைகுழி குறித்து எதுவும் தெரியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மனித புதைகுழி விடயம் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக டெய்லிமோர்னிங்கிற்கு தெரிவித்துள்ளார். எனக்கு மனித புதைகுழி குறித்து எதுவும் தெரியாது எந்த தரப்பும் அது குறித்து எந்ததகவலையும் வழங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை மனித புதைகுழி தொடர்பில் கருத்துக்களை பெறுவதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நீதியமைச்சர் ஆகியோரை தொடர்புகொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை என மோர்னிங் தெரிவித்துள்ளது. இதேவேளை முல்லைத்தீவு மனித புதைகுழியை மீண்டும் அகழ்வது குறித்து ஆராய்வதற்கு தொடர்புபட்ட அனைத்து தரப்பினரையும் முல்லைத்தீவு நீதிமன்றம் அழைத்துள்ளது. இந்த கலந்துரையாடல் நாளை இடம்பெறவுள்ளது. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிகளை அகழும் பணிகள் நீதவானின் உத்தரவின் பேரில் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள போதிலும் அவைமீண்டும் ஆரம்பமாகும் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை; பாரிய மனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகள் சமீபத்தில் இடம்பெற்றிருந்தவேளை அது சர்வதேச தராதரங்களின் அடிப்படையில் இடம்பெறவில்லை என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்திருந்தாh. இது குறித்து மோர்னிங்கிற்கு கருத்து தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர் இதுமுன்கூட்டியே அவசரப்பட்டு வெளியிடப்பட்ட கருத்து புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகள் சர்வதேச தராதரங்கள் மற்றும் உரிய தரப்பினரின் பங்களிப்புடன் ஆரம்பமாகவுள்ளன என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/159783
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
லண்டனில் உள்ள ரஷ்ய துப்பறியும் நிறுவனம் டோசியர் சென்டர் (Dossier Center). நாடு கடத்தப்பட்ட ஒரு முன்னாள் ரஷ்ய எண்ணெய் அதிபரும், தற்போதைய ரஷ்ய விமர்சகருமான மைக்கேல் கோடோர்கோவ்ஸ்கி என்பவரால் இந்த நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிறுவனம் புட்டினின் ரகசிய தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சில பல ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களின் தொகுப்பினை தற்போது பகிர்ந்து கொண்டிருக்கிறது.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
உக்ரைனிற்கான விநியோகங்களை கண்காணிக்க விசேட கண்காணிப்பு விமானத்தை வழங்குகின்றது அவுஸ்திரேலியா 11 JUL, 2023 | 02:18 PM அவுஸ்திரேலியா உக்ரைன் நடவடிக்கைகளிற்கு ஆதரவாக ஜேர்மனிக்கு விசேட கண்காணிப்பு விமானத்தை வழங்கவுள்ளது. உக்ரைனிற்கு இராணுவ மனிதாபிமான உதவிகள் சென்றடைவதை கண்காணிப்பதற்காக அவுஸ்திரேலியா கண்காணிப்பு விமானத்தை வழங்கவுள்ளது. ஜேர்மன் சான்சிலருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பின்னர் அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் இதனை அறிவித்துள்ளார். அவுஸ்திரேலிய விமானப்படை ஈ-7ஏ வெட்ஜ்டெய்ல் விமானத்தை ஒக்டோபர் முதல் ஆறு மாதங்களிற்கு வழங்கவுள்ளது. உக்ரைனிற்கு மிகவும் அவசியமான பன்னாட்டு விநியோகத்தை பாதுகாப்பதற்காக இந்த விமானங்களை அவுஸ்திரேலியா வழங்கவுள்ளது. ஜேர்மனியிலிருந்து இயங்கும் இந்த விமானம் முன்கூட்டியே எச்சரிக்கைகளை வழங்குவதன் மூலம் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்யும். https://www.virakesari.lk/article/159745
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
புட்டின் வாக்னர் குழுவின் தலைவரை சந்தித்தார் - பிபிசி Published By: RAJEEBAN 11 JUL, 2023 | 10:51 AM வாக்னர் கூலிப்படையின் புட்டின் அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சி இடம்பெற்று ஐந்து நாட்களின் பின்னர் கூலிப்படையின் தலைவரை ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் சந்தித்தார் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. வாக்னர் புட்டின் கதையின் மிகச்சமீபத்தைய பரபரப்பு குறித்து பிபிசியின் ரஸ்யாவிற்கான பிரிவின் ஆசிரியர் இவ்வாறு தெரிவிக்கின்றார். ஆகவே நான் இதனை உங்களிற்கு மிக தெளிவாக தெரிவிக்கின்றேன். 24ம் திகதிஜூன் அதிகாலை கலகத்தின் போது புட்டின் வாக்னர் குழுவின் தலைமை துரோகம் இழைத்துவிட்டதாகவும் முதுகில் குத்திவிட்டதாகவும் புட்டின் குற்றம்சாட்டினார், பின்னர் அன்றைய தினம் ரஸ்ய விமானங்களை வாக்னர் குழுவினர் சுட்டுவீழ்த்தி விமானிகளை கொன்றனர். அதன் பின்னர் கூலிப்படையினர் மொஸ்கோவிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் காணப்பட்டவேளை கிரெம்ளினும் வாக்னரும் உடன்பாட்டிற்கு வந்தனர், கலகம் முடிவிற்கு வந்தது எவரும் கைதுசெய்யப்படவில்லை தண்டிக்கப்படவில்லை. யெவ்ஜென்சி பிரிகோசின் கைதுசெய்யப்பட்டு விலங்கிடப்படவில்லை, கிளர்ச்சிக்காக பொலிஸ்நிலையத்தின் முன் நிறுத்தப்படவில்லை. புட்டினிற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு ஐந்து நாட்களின்பின்னர் வாக்னர் குழுவின் தலைவர் தனது தளபதிகளுடன் புட்டினுடன் ஒரே மேசையில் அமர்ந்து உரையாடினார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பது எங்களுக்கு தெரியாது அந்த சந்திப்பு எவ்வாறு முடிவடைந்தது என்பதும் எங்களுக்கு தெரியாது. சமீப நாட்களாக வாக்னர் குழுவின் தலைவரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் ரஸ்ய ஊடகங்கள் செயற்பட்டு வருகின்றன. சென்பீட்டர்ஸ்பேர்க்கில் உள்ள வாக்னர் தலைவரின் மாளிகையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது எடுக்கப்பட்ட படங்களை ரஸ்ய அதிகாரிகள் சமூக ஊடகங்களுக்கு வழங்கியுள்ளனர். தங்கக்கட்டிகள் ஆயுதங்கள் விக்குகள் போன்றவற்றை ரஸ்ய தொலைக்காட்சிகள் காண்பித்துள்ளன. பிரிகோஜின் அவர் தெரிவிப்பது போல ரொபின்கூட் இல்லை, அவர் குற்றபின்னணி கொண்ட வர்த்தகர் அவரது செயற்பாடுகள் சந்தேகத்திற்கு இடமானவை என சட்டவிரோதமானவை என ரஸ்ய ஊடகமொன்று தெரிவித்துள்ளது. 24ம் திகதி கலகத்தை முடிவிற்கு கொண்டு வருவதற்காக புட்டினிற்கும் வாக்னர் குழுவிற்கும் இடையில் ஏற்பட்ட இணக்கப்பாடு என்ன? அந்த உடன்படிக்கையின் அடிப்படையில் வாக்னர் குழுவின் தலைவர் பெலாரசிற்கு செல்லவேண்டும். கடந்த வாரம் பெலாரஸ் ஜனாதிபதி வாக்னர் குழுவின் தலைவர் தனது நாட்டில் இல்லை என தெரிவித்தார். அவர்கள் பெலாரஸ் வந்துசேரக்கூடும் ஆனால் இன்னமும் வரவில்லை என்பதே அதுவே அதன் அர்த்தம். வாக்னர் எங்கே பிரிகோஜின் எங்கே அவர்களின் திட்டம் என்ன அவர்களுக்கும் புட்டினிற்கும் இடையிலான இணக்கப்பாடு என்ன? எனக்கு தெரிந்திருந்தால் நல்லது என நான் நினைக்கின்றேன், தற்போது நான் தெரிவிப்பது இதுதான் - ரஸ்யாவின் அடுத்த தவிர்க்க முடியாத அத்தியாயத்திற்காக காத்திருங்கள். https://www.virakesari.lk/article/159699
-
சந்திரயான்-3: நாசா நிலவில் கால் பதித்துவிட்ட பிறகு ஆளில்லா ரோவர்களை அனுப்புவதால் என்ன பயன்?
சந்திரயான்-3: நிலவில் என்னென்ன ஆய்வுகளை மேற்கொள்ளும்? அதன் முக்கிய 10 கட்டங்கள் என்ன? பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, விண்கலத்தில், உந்துகலம், தரையிறங்கி கலம் என இரண்டு முக்கியப் பகுதிகள் உள்ளன கட்டுரை தகவல் எழுதியவர், முனைவர்.த.வி.வெங்கடேஸ்வரன் பதவி, முதுநிலை விஞ்ஞானி, விஞ்ஞான் பிரசார் அமைப்பு 10 ஜூலை 2023, 14:02 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் சந்திரயான் 3 விண்கலத்தை வருகின்ற ஜூலை 14ஆம் தேதியன்று இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது. நிலவில் சந்திரயான் 3 பத்திரமாகத் தரையிறங்குவதில் முக்கியமான பத்து கட்டங்கள் உள்ளன. இந்தப் பத்து கட்டங்களும் வெற்றிகரமாக நடந்தால்தான், சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்க முடியும். அவை குறித்து இங்கு விரிவாகப் பார்ப்போம். அதற்குள் செல்வதற்கு முன்பாக, சந்திரயான் 3 விண்கலத்தில் என்ன இருக்கும், அதைச் சுமந்து செல்லப்போகும் ராக்கெட் எப்படிச் செயல்படும் என்பது பற்றியும் சுருக்கமாகத் தெரிந்துகொள்வோம். சந்திரயான் 3 விண்கலம் எப்படி இருக்கும்? இந்த விண்கலத்தில் மூன்று பகுதிகள் உள்ளன. அதில் முதல் பகுதி ஒரு பொம்மை கார் போல இருக்கும். அதற்கு ஊர்திக்கலம்(Rover) என்று பெயர். இந்த ஊர்திக்கலம் அதன் நகர்வு மற்றும் இயக்கத்தின்போது, நிலவின் மேற்பரப்பில் ரசாயன பகுப்பாய்வை மேற்கொள்ளும். பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, உச்சியில் உள்ள கூம்பு போன்ற பகுதி திறந்து, சந்திரயான் 3 விண்கலம் விண்வெளியை அடைந்த பிறகு வெளியே வரும். இந்த ஊர்திக்கலம், தரையிறங்கிக் கலம்(Lander) எனப்படும் இரண்டாவது பகுதியின் வயிற்றுக்குள் இருக்கும். இது நிலவின் தரைப்பரப்பில் மென்மையாக, பாதிப்பு ஏதுமின்றி தரையிறங்கி, அதன் வயிற்றுக்குள் இருக்கும் ஊர்திக்கலத்தை வெளியே அனுப்பும். இந்த இரண்டும் சேர்ந்து, மூன்றாவது பகுதியான உந்துக்கலம்(Propulsion unit) என்ற பகுதியின் தலைக்கு மேலே இருக்கும். இந்தப் பகுதிதான், நிலவின் சுற்றுவட்டப்பாதையில் 100 கி.மீ தொலைவு வரைக்கும் தரையிறங்கி கலம், ஊர்திக்கலம் இரண்டையும் கொண்டு செல்லும். இந்த மூன்றும் சேர்ந்ததுதான் விண்கலம். இந்த அமைப்பைக் கொண்ட சந்திரயான் 3 விண்கலம்தான், எல்.வி.எம் 3 என்ற ராக்கெட்டின் தலைக்குமேல் ஒரு கலசம் போல் தெரியும் பகுதியில் வைக்கப்பட்டிருக்கும். உச்சியில் உள்ள கூம்பு போன்ற பகுதி திறந்து, சந்திரயான் 3 விண்கலம் விண்வெளியை அடைந்த பிறகு வெளியே வரும். சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் ஏவுவது எப்படி? பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, விண்கலம் புவியின் தரைப்பரப்பில் இருந்து 170 கி.மீ உயரத்திற்குச் சென்றதும், விண்வெளியில் அதற்கு ஓர் உந்துதலை வழங்குவார்கள் முந்தைய சந்திரயான் விண்கலங்களை சுமந்து சென்ற ராக்கெட்டுகளை ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 என்று அழைத்தார்கள். தற்போது சுமந்து செல்லும் ராக்கெட்டுக்கு எல்.வி.எம் 3 என்று இஸ்ரோ பெயரிட்டுள்ளது. இந்த ராக்கெட் மூன்று அடுக்குகளைக் கொண்டது. அதன் இருபுறமும் இரண்டு தூண்களைப் போல் தெரிவது S200 இன்ஜின். அவற்றில் திட எரிபொருள் நிரப்பப்பட்டிருக்கும். இரண்டுக்கும் நடுவே பெரிய ஒற்றைத் தூணாக இருப்பது, திரவ எரிபொருள் கொண்ட இன்ஜின். அதன் பெயர் L110. அதற்கு மேலே தெரியும் இரண்டு கருப்பு பட்டைகளுக்கு இடையில்தான் உறைகுளிர் இன்ஜின் (Cryogenic Engine) இருக்கிறது. உறைகுளிரில் ஆக்சிஜன், ஹைட்ரஜன் இரண்டுமே தண்ணீரை போன்ற திரவமாக மாறிவிடும். அந்த இரண்டையும்தான் அதில் வைத்துள்ளார்கள். அவைதான் அதில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படும். அதற்கும் மேலே கலசம் போல் இருக்கும் இடத்தில்தான் விண்கலம் இருக்கும். இந்த இன்ஜின்கள் ஒவ்வொன்றாக எரிந்து ராக்கெட் விண்வெளிக்குச் செல்லும். பட மூலாதாரம்,ISRO/TWITTER படக்குறிப்பு, நிலவில் சந்திரயான் 3 பத்திரமாகத் தரையிறங்குவதில் முக்கியமான பத்து கட்டங்கள் உள்ளன முதலில், திட எரிபொருள் இன்ஜின்கள் எரிந்து ராக்கெட்டை மேலெழும்பச் செய்யும். அதன் வேலை முடிந்ததும் அது கழன்று கீழே விழுந்துவிடும். இரண்டாவதாக, திரவ எரிபொருள் எரிந்து இன்னும் உயரச் செல்ல உதவும். அதன் வேலை முடிந்ததும் அதுவும் கழன்றுவிடும். இந்த இரண்டின் செயல்பாடும் ராக்கெட்டை விண்வெளிக்குக் கொண்டு சென்றுவிடும். பிறகு விண்வெளியில், உறைகுளிர் இன்ஜின் தனது வேலையைச் செய்யும். இந்தச் செயல்முறைகளின் மூலமாக எல்.வி.எம் 3 ராக்கெட், பூமியின் தரைப்பரப்பில் இருந்து 170 கி.மீ உயரத்திற்கு சந்திரயான் 3 விண்கலத்தைக் கொண்டு சென்று நிறுத்தும். அதுதான் முதல் கட்டம். பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, எல்.வி.எம் 3 ராக்கெட், பூமியின் தரைப்பரப்பில் இருந்து 170 கி.மீ உயரத்திற்கு சந்திரயான் 3 விண்கலத்தைக் கொண்டு சென்று நிறுத்தும். அதுதான் முதல் கட்டம் விண்வெளிக்குச் சென்ற பிறகு என்ன நடக்கும்? விண்கலம் புவியின் தரைப்பரப்பில் இருந்து 170 கி.மீ உயரத்திற்குச் சென்றதும், விண்வெளியில் அதற்கு ஓர் உந்துதலை வழங்குவார்கள். அதைத் தொடர்ந்து, விண்கலம் புவியின் நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும். அந்த நீள்வட்டப் பாதையில் பூமிக்கு மிக அருகில் இருக்கும்போது தரைப்பரப்பில் இருந்து 170 கி.மீ தூரத்தில் விண்கலம் இருக்கும். அதுவே தொலைவில் இருக்கும்போது, 36,500 கி.மீ. தூரத்தில் இருக்கும். விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்தை இந்தப் பாதையில் சுற்ற வைப்பதுதான் இரண்டாவது கட்டம். பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, ராக்கெட்டின் மேலே கலசம் போல் இருக்கும் இடத்தில்தான் விண்கலம் வைக்கப்பட்டிருக்கும் புவியின் நீள்வட்டப் பாதையில் சுற்ற வைப்பது எப்படி? அடுத்ததாக, புவியின் நீள்வட்டப் பாதையில் சுற்ற வைத்தால் மட்டும் போதாது, அந்தப் பாதையில் பூமிக்கு நெருக்கமான தூரத்தில் இருந்து, நெடுந்தொலைவுக்கு விண்கலத்தைத் தள்ளிவிட்டால்தான், நிலவின் சுற்றுப்பாதைக்கு அதைக் கொண்டுசெல்ல முடியும். அதுதான் மூன்றாவது கட்டம். இதை ஓர் எடுத்துக்காட்டு மூலம் எளிமையாக விளக்கலாம். தினசரி வீடுகளுக்கு நாளிதழ்களை விநியோகிப்பவரை சான்றாக எடுத்துக்கொள்வோம். அவர் ஒரு கட்டடத்தின் தரைத் தளத்தில் இருக்கும் வீட்டிற்கு நாளிதழைப் போடும்போது இயல்பாக கையை வீசி கதவுக்குள் எறிந்துவிடுவார். அதுவே வீடு இரண்டாவது மாடியில் இருந்தால், இரண்டாவது மாடிக்கே சென்று கொடுக்கமாட்டார், அதையும் கீழிருந்துதானே வீசுவார். அப்போது, தரைத்தள வீட்டிற்குள் நாளிதழை வீசும்போது எடுத்துக்கொண்ட ஆற்றலைவிட அதிக ஆற்றலைச் செலவழித்து, கையை நன்றாகச் சுழற்றி வீசுவார். நாளிதழ் இரண்டாவது மாடியில் வந்து விழும். இதேபோன்ற நுட்பத்தைப் பயன்படுத்தி தான் சந்திரயான் 3 விண்கலமும் நிலவுக்குச் செல்லப் போகிறது. இந்த மூன்றாவது கட்டத்தை ‘பாதை உயரம் உயர்த்து கட்டம்(Orbit raising)’ என்பார்கள். அதாவது விண்கலம் பயணிக்கும் சுற்றுப்பாதையின் உயரத்தை உயர்த்திக்கொண்டே போக வேண்டும். அப்படி உயரத்தை உயர்த்துவதற்கு, விண்கலம் பூமிக்கு மிக நெருக்கமான இடத்தில், அதாவது 170 கி.மீ தொலைவுக்கு ராக்கெட் வந்ததும், அதை எரித்து உந்துவிசை கொடுக்க வேண்டும். அப்படிச் செய்யும்போது முந்தைய சுற்றில் இருந்ததைவிட இன்னும் கூடுதலான உயரத்திற்கு விண்கலம் தள்ளப்படும். அதேபோல் ஒவ்வொரு முறை சுற்றுவட்டப் பாதையில் புவிக்கு நெருக்கமான தொலைவுக்கு வரும்போதும் ராக்கெட்டை தொடர்ந்து எரித்து உந்துவிசை கொடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும். இப்படியாக சுமார் 20 நாட்களுக்கு பாதையை விண்கலத்தின் உயர உயர உயர்த்தும் வேலையைச் செய்வார்கள். சந்திரயான் 3 விண்கலம் பாதை மாறிவிடாமல் தடுக்க வேண்டும் நான்காவது கட்டம் மிகவும் சுவையானது. பூமி, நிலா இரண்டையும் கற்பனையாக ஒரு நேர்கோட்டில் வைத்துக்கொள்ளுங்கள். இதில், பூமிக்கும் ஈர்ப்புவிசை உள்ளது, நிலவுக்கும் குறிப்பிட்ட அளவிலான ஈர்ப்புவிசை உள்ளது. அப்படியென்றால், இரண்டுக்கும் இடையே ஏதாவது ஒரு புள்ளியில் பூமியின் ஈர்ப்புவிசையும் நிலவின் ஈர்ப்புவிசையும் சரிசமமாக இருக்கவேண்டும். அந்த சம ஈர்ப்பு விசைப் புள்ளி, நிலவில் இருந்து சுமார் 62,630 கி.மீ தொலைவில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பூமி, நிலா ஆகிய இரண்டுக்கும் இடையே ஏதாவது ஒரு புள்ளியில் பூமியின் ஈர்ப்புவிசையும் நிலவின் ஈர்ப்புவிசையும் சரிசமமாக இருக்கவேண்டும் அந்தப் புள்ளிக்கு சந்திரயான் 3 விண்கலத்தைச் செலுத்துவதான் நான்காவது கட்டம். ஆனால், இது அவ்வளவு எளிதானதல்ல. இதை மிக மிகத் துல்லியமாகச் செய்யவேண்டும். அதற்குத்தான் ஐந்தாவது கட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதாவது, அந்த சம ஈர்ப்புவிசை புள்ளியை நோக்கிய பாதையில் பிசிறுகள் ஏற்பட்டு, விண்கலம் பாதை மாறிவிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அப்படி மாறாமல் இருக்க, அந்தப் பிசிறுகளைச் சரிசெய்துகொண்டே இருக்கவேண்டும். இதுதான் ஐந்தாவது கட்டம். புவியின் ஈர்ப்புவிசைப் பிடியில் இருந்து சந்திரயான் 3 விடுபட வேண்டும் சந்திரயான் 3 விண்கலம் புவியின் நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும்போதெல்லாம், கொஞ்சம் கொஞ்சமாகத் தூரத்தை அதிகரித்து தொலைவாகச் செல்கிறது. ஆரம்பத்தில் கூறிய இரண்டாவது, மூன்றாவது கட்ட செயல்முறைகள் அப்படி பூமியை விட்டு தூரமாகச் செல்ல மட்டும்தான் வழி வகுத்தன. ஆனால் பூமியைவிட்டுத் தொலைவாகச் சென்றுகொண்டிருந்தாலும், விண்கலம் பூமியின் ஈர்ப்புவிசைப் பிடியில்தான் இன்னமும் இருக்கிறது. பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, ஒவ்வொரு முறை சுற்றுவட்டப் பாதையில் புவிக்கு நெருக்கமான தொலைவுக்கு வரும்போதும் ராக்கெட்டை தொடர்ந்து எரித்து உந்துவிசை கொடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும் இப்போது பூமியை சுற்றி வந்த விண்கலத்தை, நான்காவது, ஐந்தாவது கட்ட செயல்முறைகளின் மூலமாக பூமிக்கும் நிலவுக்கும் இடையில் உள்ள சம ஈர்ப்புவிசைப் புள்ளிக்கு விண்கலத்தை அனுப்பிவிட்டோம். ஆனாலும், அது இன்னமும் பூமியுடைய ஈர்ப்புவிசைப் பிடியில்தான் இருக்கிறது. ஆகவே மேல்நோக்கி வீசிய கல் கீழே விழுவதைப் போல், அந்த சம ஈர்ப்புவிசைப் புள்ளிக்குச் சென்ற விண்கலம் மீண்டும் பூமியை நோக்கித் திரும்பிவிடக்கூடும். இந்த நிலையில், அந்தப் புள்ளிக்குச் சென்றதும் அங்கிருந்து உந்துவிசை கொடுத்து அதைத் தள்ளிவிட்டால், அதுவரைக்கும் அது இருந்த புவியின் ஈர்ப்புவிசைப் பிடியிலிருந்து விடுபட்டு, நிலவின் ஈர்ப்புவிசை வட்டத்திற்குள் சென்றுவிடும். இதுதான் ஆறாவது கட்டம். நிலாவின் நீள்வட்டப் பாதையில் விண்கலத்தை எப்படி செலுத்துவது? ஆறாவது கட்டத்தின் முடிவில், சந்திரயான் 3 நிலவின் ஈர்ப்புவிசை வட்டத்திற்குள் வந்துவிடுகிறது. இப்போது, அதை நிலவின் நீள்வட்டப் பாதையில் சுற்ற வைக்கவேண்டும். அப்படிச் செய்யவில்லை என்றால், நிலவுக்கு அருகில் சென்றுவிட்டு பிறகு விலகி விண்வெளியில் சென்றுவிடும். அப்படிச் சென்றுவிடாமல், அதை நெறிப்படுத்தி நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சுற்ற வைக்கவேண்டும். அந்த நேரத்தில் விண்கலம் பயணிக்கும் நீள்வட்டப் பாதையைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சரிசெய்து, நிலவின் தரைப்பரப்பில் இருந்து சுமார் 100கி.மீ தொலைவில் விண்கலத்தைக் கொண்டு வந்து நிறுத்தவேண்டும். அப்படிக் கொண்டுவந்து, அதே தொலைவில் நிலவைச் சுற்றி வட்டமாகச் சுற்ற வைப்பதுதான் எட்டாவது கட்டம். விண்கலத்தில், உந்துகலம், தரையிறங்கி கலம் என இரண்டு முக்கியப் பகுதிகள் உள்ளன. இதில் உள்ள தரையிறங்கி கலத்தில்தான் ஊர்திக்கலமும் அமைந்துள்ளது. இவற்றை அப்படியே தரையிறக்க முடியாது. உந்துகலத்தையும் தரையிறங்கி கலத்தையும் பிரிக்க வேண்டும். அப்படிப் பிரித்து, தரையிறங்கி கலத்தை அதிகபட்சமாக 100 கி.மீ முதல் குறைந்தபட்சமாக 30 கி.மீ வரை நீள்வட்டப் பாதையில் செலுத்துவார்கள். நிலாவில் சந்திரயான் 3 எப்படி தரையிறங்கும்? இதுவரை நாம் பார்த்த எட்டு கட்ட செயல்முறைகளை வெற்றிகரமாகக் கடந்த பிறகுதான், இந்த முயற்சியிலேயே மிக முக்கியமான சவால் தொடங்குகிறது. நிலாவில் சந்திரயான் 3 விண்கலத்தைத் தரையிறக்குவதுதான் அந்தச் சவால். இந்த ஒன்பதாவது கட்ட செயல்முறை எடுத்துக்கொள்ளும் நேரம், வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே. ஆனால், அந்தப் பதினைந்து நிமிடங்களில்தான் இந்த முழு திட்டமும் வெற்றி பெறுமா இல்லையா என்பதே அடங்கியுள்ளது. இருப்பதிலேயே மிகவும் கடினமான அம்சம் இதுதான். கடந்த முறை சந்திரயான் 2 திட்டம் தோல்வியடைந்ததும் இந்த இடத்தில்தான். பட மூலாதாரம்,ISRO/TWITTER படக்குறிப்பு, இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்த முறை தரையிறங்கி கலத்தில் முன்பு நடந்த தவறுகளுக்கான காரணங்களைச் சரிசெய்து பல மேம்படுத்தல்களைச் செய்துள்ளார்கள் இதற்காக, தரையிறங்கி கலத்தின் கீழே நான்கு குட்டி ராக்கெட்டுகள் உள்ளன. அந்த ராக்கெட்டுகளை எரித்து, தரையிறங்கி கலத்தை மெல்ல மெல்லத் தரையிறக்க வேண்டும். கடந்த முறை சந்திரயான் 2 திட்டத்தின்போதும் எட்டாவது செயல்முறை வரைக்கும் இதேபோலத்தான் சென்றது. ஆனால், ஒன்பதாவது கட்டத்தில் தரையிறங்கி கலத்தை நிலவின் தரைப்பரப்பில் இறக்கும்போதுதான் தவறு நிகழ்ந்து, தரையிறங்கி கலம் மெதுவாக இறங்காமல், கீழே விழுந்து உடைந்துவிட்டது. ஆனால், இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்த முறை தரையிறங்கி கலத்தில் முன்பு நடந்த தவறுகளுக்கான காரணங்களைச் சரிசெய்து பல மேம்படுத்தல்களைச் செய்துள்ளார்கள். ஆகவே, பத்திரமாகத் தரையிறங்கும் என்று நம்புகிறார்கள். இந்தத் திட்டத்தின் இறுதிக்கட்டமாக, தரையிறங்கி கலத்தின் வயிற்றுக்குள் இருக்கும் ஊர்திக்கலத்தை வெளியே எடுத்து நிலாவின் தரையில் இயக்கவேண்டும். அதற்கு, தரையிறங்கி கலம் நிலவின் தரையில் இறங்கியதும், அதைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் சுவர்களில் ஒன்று சாய்வுப் பலகையைப் போல் திறந்து கீழ்நோக்கி இறங்கும். அந்த சாய்வுப் பலகையின் வழியே உருண்டு இறங்கி, நிலவின் தரையில் தடம் பதிக்கும் ஊர்திக்கலம் தனது வேலையைத் தொடங்கும். இதுதான் பத்தாவது கட்டம். இந்த பத்து கட்டமும் கச்சிதமாக நடந்தால் மட்டுமே சந்திரயான் 3 திட்டம் முழு வெற்றியைப் பெறும். இந்த நீண்ட பயணத்திற்கான முதல் அடி வரும் ஜூலை 14ஆம் தேதியன்று தொடங்குகிறது. https://www.bbc.com/tamil/articles/cy0p93lzem0o
-
களைத்த மனசு களிப்புற ......!
அந்த 24வது செக்கன்ல இருக்கிறது நீங்களும் உங்கடை நாயும் தானே அண்ணை?
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
புட்டின் தலைமைக்கு ஆபத்தா? : மொஸ்கோவில் மீண்டும் நெருக்கடி! Published By: VISHNU 09 JUL, 2023 | 03:59 PM ஐங்கரன் விக்கினேஸ்வரா புட்டினுக்கு எதிரான விமர்சனங்களை கடுமையாக அள்ளிவீசும் தீவிர தேசியவாதி ‘இகோர் கிர்கினால்’ மீண்டும் மொஸ்கோவில் நெருக்கடி உருவாகியுள்ளது. புட்டினின் அதிகாரம் பரிமாற்றப்பட வேண்டும் என்ற தொனியில் இகோர் கிர்கினால் மொஸ்கோவில் மீண்டும் ஊடகங்களின் கழுகுப் பார்வை திரும்பியுள்ளது. கடந்த வாரம் யெவ்ஜெனி பிரிகோசின் தலைமையில் வாக்னர் குழுவினரின் ஆயுதமேந்திய கிளர்ச்சியில் சில நாட்கள் சூடுபிடித்த மொஸ்கோ விவகாரம், மற்றொரு ரஷ்ய அதி தீவிர தேசியவாதியின் உரையால் மீளவும் மேற்குலக ஊடகங்களுக்கு பெருந்தீனியை போட்டுள்ளது. உக்ரேனிய போரில் வெற்றிபெற முடியாவிட்டால், புட்டின் தனது போர் அதிகாரங்களை 'பரிமாற்றம்' செய்ய வேண்டும் என்று மற்றொரு ரஷ்ய தீவிர தேசியவாதியான முன்னாள் ரஷ்ய தளபதி இகோர் கிர்கின்னின் உரையால் மீண்டும் மொஸ்கோவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மொஸ்கோ மீதான முற்றுகை நடக்கலாம் என ஐரோப்பிய ஊடகங்கள் பலவும் எதிர்பார்த்திருந்தபோதும், அவர்களின் கிளர்ச்சி இலகுவாக பிசுபிசுத்துப் போனது. இதன் பின் அதி தீவிர தேசியவாதிகள் தலைநகரில் கூடி அதிபர் புட்டினால் உக்ரேனில் வெற்றி பெற முடியாவிட்டால், "அவர் தனது அதிகாரங்களை சட்டப்பூர்வமாக மாற்ற வேண்டும்" என்று வாதிட்டனர். போர்க்கால ரஷ்யாவில் அசாதாரணமான விமர்சனத்திற்கு சமமானதைப் பகிர்ந்து கொள்ள அல்ட்ரா நேஷனலிஸ்டுகள் குழுவினர்கள் ஒன்றுகூடினர். அவர்களின் பார்வை அப்பட்டமாக புட்டினை நோக்கியே இருந்தது. உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினால் வெற்றி அடைய முடியாவிட்டால், அவர் அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும் என வாதிட்டனர். தற்போதைய அமைப்பு முழுவதும் உயரடுக்கினரின் பொறுப்பற்ற தன்மையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் ரஷ்ய தளபதி இகோர் கிர்கின் சில வாரங்களுக்கு முன்பு பேட்ரியாட்ஸ் கிளப் கூட்டத்தில் கூறியிருந்தார். ஜனாதிபதி போருக்குப் பொறுப்பேற்கத் தயாராக இல்லை என்றால், அவர் தனது அதிகாரங்களை சட்டபூர்வமாக மாற்ற வேண்டும் என்றார் அவர். கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் மொஸ்கோவில் நடைபெற்ற இந்த சந்திப்பு டெலிகிராமில் ஒளிபரப்பப்பட்டது. புட்டின் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் அதிகாரத்திற்கு வந்தார். ரஷ்யாவில் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த முழுமையான சக்தியைப் பயன்படுத்தத் தயாராக இருக்கும் ஒரு நபராக உருவாகினார். ஆனால், அவரது உக்ரேன் படையெடுப்பிற்கு ஒன்றரை வருடங்களில் அந்த ஸ்திரத்தன்மைக்கான அச்சுறுத்தல்கள் பெருகி வருகின்றன. பெருகிவரும் போர் இழப்புகள் மற்றும் இராணுவத் திறமையின்மை, எல்லை தாண்டிய தாக்குதல்கள் ரஷ்ய சமூகங்களை பயமுறுத்துகின்றன. யார் இந்த இகோர் கிர்கின்? முன்னர் ரஷ்யாவின் ஃபெடரல் செக்யூரிட்டி சேர்வீஸில் அதிகாரியாக இருந்தவர், கிர்கின் ஸ்ட்ரெல்கோவ் என்றும் அழைக்கப்படுகிறார். மேலும் 2014 இல் கிரிமியாவை மொஸ்கோ இணைத்ததிலும், உக்ரேனின் டான்பாஸ் பிராந்தியத்தில் ஏற்பட்ட மோதலிலும் முக்கிய பங்கு வகித்தவர் ரஷ்ய தேசபக்தர்கள் அமைப்பாளரான கிர்கின், வாக்னர் குழு தலைவர் பிரிகோசினுக்கு நண்பர் அல்ல. ஆனால், கிர்கின் - முன்னாள் பாதுகாப்புப் பணியாளர் ஆவார். வாக்னர் குழு புட்டினுக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று முன்பு எச்சரித்திருந்தார். பிரிகோசினைப் போலவே, அவரும் சில சமயங்களில் புட்டினை விமர்சிப்பதற்கு தயங்கவில்லை. ரஷ்யாவின் இந்தப் போரை எவ்வளவு சிறப்பாக நடத்த முடியும் என்று அடிக்கடி வாதிடும் இவர், புட்டின் இந்தப் போரை வெல்லப் போவதில்லை என்றும் எச்சரித்துள்ளார். முன்னாள் இராணுவ அதிகாரியான இகோர் கிர்கின், உக்ரேன் மீதான தனது முழு அளவிலான படையெடுப்பில் ரஷ்ய படைகளுக்கு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தலைமை தாங்கியதற்கு மேலும் கடுமையான விமர்சனங்களை அளித்துள்ளார். முன்னாள் தளபதியான இவர் சமூக ஊடகங்களில் மிகப் பெரிய அளவில் செயற்பாட்டில் இருப்பவர். ரஷ்ய ஜனாதிபதி மற்றும் அவரது தளபதிகளின் போர்க்கால நடத்தைகள் குறித்த அதிருப்திகளை பற்றி அடிக்கடி கடுமையான விமர்சனங்கள் மூலம் கூறுபவர். தென்கிழக்கு உக்ரேனின் வரலாற்றுப் பெயரான நோவோரோசியாவில் ஒரு வருடத்திற்கு முன்பு "எதிரிகள் எங்கும் தாக்கவில்லை, ரஷ்யாவின் இதயத்தை அழிக்க முன்முயற்சி செய்கிறது. இப்போது நாம் என்ன செய்கிறோம் பாருங்கள் ’ என விமர்சித்தவர். எம்.ஹெச் 17 விமான வழக்கில் இகோர் கிர்கின் கிழக்கு உக்ரேனில் 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் விழுந்து நொறுங்கிய மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக நான்கு பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இகோர் கிர்கின், செர்கெய் டுபின்ஸ்கி மற்றும் ஒலெக் புல்டோவ் ஆகிய மூன்று ரஷ்யர்களும் லியோனிட் கார்சென்கோ என்னும் ஒரு உக்ரேன் நாட்டவரும் விமானத்தை எரிகணைகள் மூலம் சுட்டு வீழ்த்தி, பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 298 பேரை கொலை செய்ததாக நெதர்லாந்து விசாரணையாளர் குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பான நீதிமன்ற வழக்கு நெதர்லாந்தில் 2020 மார்ச்சில் நடந்தது. இவ்விமானம் ரஷ்ய, - உக்ரேன் எல்லையில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வான்வெளியில் பறந்து கொண்டிருந்தபோது தொடர்பை இழந்தது. அது உக்ரேன் அரசு மற்றும் ரஷ்ய ஆதரவு பெற்ற உக்ரேன் பிரிவினைவாத குழுக்கள் ஆகியோர் இடையே மோதல் நிலவி வந்த நேரம். அப்போது உக்ரேன் இராணுவ விமானங்கள் பலவும் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தன. உக்ரேனிய கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இவ்விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு நான்கு பேருக்கு எதிராக சர்வதேச கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்த நால்வரில் ஒருவரான இகோர் கிர்கின் ரஷ்ய உளவுத்துறையின் முன்னாள் கேர்னல் ஆவார். அவருக்கு கிழக்கு உக்ரேனின் கட்டுப்பாட்டில் இருந்த டோனெட்ஸ்க் என்ற நகரத்தின் பாதுகாப்பு அமைச்சர் எனும் அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது. ரஷ்ய கூட்டமைப்பின் உயரிய இராணுவ அதிகாரி என மதிக்கப்படுபவர் கிர்கின். இந்த முன்னாள் உயர் இராணுவ அதிகாரி கிர்கினே, அதிபர் புட்டினால் உக்ரேனில் வெற்றி பெற முடியாவிட்டால், அவர் தனது அதிகாரங்களை சட்டப்பூர்வமாக மாற்ற வேண்டும் என்று பகிரங்கமாக விமர்சித்துள்ளார். இவர் பின்னால் படை பல சக்திகள் இல்லாவிடினும், புட்டினுக்கு இன்னொரு பாரிய தலையிடியாக இவர் உள்ளார் என்றே கருதலாம். https://www.virakesari.lk/article/159589
-
காங்கேசன்துறை - காரைக்கால் (பாண்டிச்சேரி) படகு சேவை ஏப்ரல் 28 இல் ஆரம்பம்
இந்திய-இலங்கை படகுச் சேவைக்கு விடுதலைப் புலிகளின் கப்பலைப் பயன்படுத்தவும் தயார் – நிமல் இந்தியா அனுமதித்தால் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து விடுதலைப் புலிகளின் கப்பல்களைப் பெறுவதற்குத் தயாராக இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று தெரிவித்துள்ளார். தென்னிந்தியாவுக்கும் (பாண்டிச்சேரி) காங்கேசன்துறைக்கும் (கேகேஎஸ்) எந்த நேரத்திலும் படகுச் சேவையைத் தொடங்க இலங்கை தயாராக இருப்பதாகவும், ஆனால் இந்தியா அனுமதி வழங்காததால்தான் இந்தச் சேவையைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2011ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி ஒரு கூட்டுக் குழு உள்ளது. “இதுவரை எந்த பிரச்சினையும் இல்லை, ஆனால் எங்களுக்கு படகு சேவை வேண்டும். KKS துறைமுகத்தில் பயணிகள் முனையம் மற்றும் பிற வசதிகளை நாங்கள் அமைத்துள்ளோம். இந்தியாவுடன் எங்களுக்கு கிடைத்த சமீபத்திய தகவல்களின்படி, அவர்கள் படகு சேவையை மட்டுமே தொடங்க முடியும் என சொன்னார்கள். தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திலிருந்து, வேறு எந்த துறைமுகத்திலிருந்தும் அல்ல” என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். “இந்தியாவுடனான பாதுகாப்பு மதிப்பீட்டின்படி, இலங்கைக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இந்த திட்டத்திற்கு யார் ஒப்புதல் அளித்தாலும், நாங்கள் அதை ஏற்றுக்கொள்வோம்,” என்றார். “படகு நடத்துநர்கள் இந்திய அரசாங்கத்தைத் தொடர்புகொண்டு, தங்களின் நற்சான்றிதழ்கள் மற்றும் அவர்களின் உண்மையான தன்மையை நிரூபித்து, நாகப்பட்டினத்திலிருந்து படகு தொடங்குவதற்கு இந்தியாவிடம் அனுமதி பெற வேண்டும். இந்திய அரசாங்கம் பச்சை கொடி காட்டிய தருணத்திலிருந்து, எந்தவொரு கப்பலையும் அல்லது ஏதேனும் ஒன்றைப் பெறுவதற்கு நாங்கள் அனுமதி வழங்குவோம். என்றார். படகு நடத்துனர்களை இந்தியாவிற்கு வந்து படகு நடத்துனர்களாக அங்கீகரிக்குமாறு அமைச்சர் கேட்டுக் கொண்டார். படகு நடத்துனர்களிடம் இருந்து பதினைந்து விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் கூறினார். இந்தியாவில் சில தெரிவு நடைமுறைகள் இருக்கும். படகு நடத்துனர்களுக்கான 15 விண்ணப்பங்களையும் இந்திய அரசாங்கம் அங்கீகரித்தால் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/262346
-
சந்திரயான்-3: நாசா நிலவில் கால் பதித்துவிட்ட பிறகு ஆளில்லா ரோவர்களை அனுப்புவதால் என்ன பயன்?
படக்குறிப்பு, சிவன், முன்னாள் தலைவர், இஸ்ரோ கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி செய்தியாளர் 9 ஜூலை 2023, 12:16 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் வரும் ஜூலை 14ஆம் தேதி சந்திரயான் -3 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது. இந்தத் திட்டத்தின் பின்னணி, முந்தைய தோல்வியிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள், இஸ்ரோவின் எதிர்காலத் திட்டங்கள் போன்றவை குறித்து, பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் தலைமையகத்தில் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் விரிவாகப் பேசினார் இஸ்ரோவின் முன்னாள் தலைவரான டாக்டர் கே. சிவன். பேட்டியிலிருந்து: கே. இந்திய விண்வெளி ஆய்வுத் திட்டத்தில் சந்திரயான் - 3ன் முக்கியத்துவம் என்ன? ப. சந்திரயான் திட்டத்தின் மிக முக்கியமான நோக்கம் இந்தத் தொழில்நுட்பத்தை நிகழ்த்திப் பார்ப்பது. இது மிகப் புதிய தொழில்நுட்பம். நாம் இஸ்ரோவைத் துவங்கியபோது நம்மிடம் இருந்த தொழில்நுட்பம் மிகச் சிறியது. ஆனால், தற்போது நிறைய தொழில்நுட்பங்களை உருவாக்கியிருக்கிறோம். சந்திரயான் திட்டத்தின் முக்கிய நோக்கம், சந்திரனில் போய் தரையிறங்கக்கூடிய தொழில்நுட்பத்தை உருவாக்கி, அதைச் செயல்படுத்திப் பார்ப்பதுதான். கே. புவிசார் அரசியலிலும் தனிப்பட்ட முறையிலும் இந்தத் திட்டம் எவ்வளவு முக்கியமானது? ப. இஸ்ரோவைப் பொறுத்தவரை, இது ஒரு புதிய சோதனை, புதிய முயற்சி, புதிய தொழில்நுட்பம். பட மூலாதாரம்,TWITTER/ISRO கே. சந்திரயான் 1, 2ல் நமக்குக் கிடைத்த படிப்பினைகள் என்ன? அந்தப் படிப்பினைகள் இந்தத் திட்டத்திற்கு எந்த விதத்தில் உதவும்? ப. சந்திரயான் -1ஐப் பொருத்தவரை, சந்திரனைச் சுற்றும்படி ஒரு விண்கலத்தை ஏவுவதுதான் அதன் நோக்கம். அது தவிர, Moon Impact probe என்று பெயரிடப்பட்ட சிறிய சோதனை முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, ஒரு சிறிய பொருள் சந்திரனில் தரையிறக்கிப் (crash landing) பார்க்கப்பட்டது. இதுதான் அந்தத் திட்டத்தின் முழுமையான நோக்கம். சந்திரயான் - 2ஐப் பொறுத்தவரை 3 நோக்கங்கள் இருந்தன. முதலாவதாக, சந்திரனைச் சுற்றிவரும் ஒரு செயற்கைக்கோளை ஏவுவது. அது சந்திரனைச் சுற்றிவந்து, சில அறிவியல் தகவல்களை அளிக்கும். இரண்டாவதாக, அந்த விண்கலத்தில் இருந்து ஒரு பகுதி பிரிந்து தரையிறங்க வேண்டும். அது லேண்டர் என்று அழைக்கப்படும். மூன்றாவதாக அந்த லேண்டரில் இருந்து ஒரு ரோவர் தரையிறங்கி, நிலவை ஆராய வேண்டும். இதில் முதலாவது கட்டம் சரியாக நிறைவேறி செயற்கைக்கோள் நிலவைச் சுற்ற ஆரம்பித்தது. இரண்டாவது கட்டத்தில், லேண்டர் மெதுவாக தரையிறங்குவதற்குப் பதிலாக வேகமாகத் தரையிறங்கி, நொறுங்கியது. இதனால், அதிலிருந்து கிடைக்க வேண்டிய சமிக்ஞைகள் கிடைக்கவில்லை. சந்திரயான் 3ஐப் பொறுத்தவரை, சந்திரயான் -2ல் தோல்வியடைந்த பகுதியைச் சரிசெய்திருக்கிறார்கள். பட மூலாதாரம்,TWITTER/ISRO கே. முந்தைய சந்திரயான் திட்டத்தில் எந்த இடத்தில் பிரச்சனை ஏற்பட்டதால், லேண்டர் வேகமாகத் தரையிறங்கி மோதியது? இப்போது அது எப்படி எதிர்கொள்ளப்பட்டிருக்கிறது அல்லது சரிசெய்யப்பட்டிருக்கிறது? ப. சந்திரயான் 2ல் இருந்த லேண்டர் வேகமாக தரையிறங்கி மோதியபோது, அதிலிருந்து கிடைத்த தகவல்கள் ஆராயப்பட்டன. அதில் என்ன தவறு நடந்தது என்பதை அறிந்து, இப்போது அதனைச் சரிசெய்திருக்கிறார்கள். கே. முந்தைய திட்டத்தில் விக்ரம் லாண்டர் தரையிறங்குவதில் பிரச்சனை ஏற்பட்டது. அது ஏன் என்பது கண்டறியப்பட்டதா? ப. அதில் இரண்டு, மூன்று பிரச்சனைகள் இருந்தன. ராக்கெட்டின் உந்துவிசை ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் செயல்பட வேண்டும். இதை propulsion band என்று சொல்வார்கள். போன முறை இந்த உந்துவிசை குறிப்பிட்ட அளவைத் தாண்டி செயல்பட்டது. அதனால், அந்த அளவு வேகத்தைக் கையாளும் திறன் வழிகாட்டும் அமைப்புக்கு இல்லை. இதனைக் கட்டுப்படுத்தும் அமைப்புக்கும் ஒரு வரையறை உண்டு. அந்த வரையறையையும் தாண்டி அது செயல்பட்டது. இந்தக் குறைபாடுகளையெல்லாம் இந்தத் திட்டத்தில் சரிசெய்திருக்கிறார்கள். கே. 1960களிலேயே அமெரிக்கா போன்ற நாடுகள் சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பியிருக்கின்றன. ஆட்களே சென்றுவந்து இத்தனை வருடங்கள் கழிந்த பிறகும் ஆளில்லாத ரோவர்களை நாம் அனுப்புவது அவசியம்தானா? ப. நம்முடைய விண்வெளித் திட்டத்தில் 1960களில் தொழில்நுட்பத்தை மேம்படுத்த ஆரம்பித்தோம். அதன் பலனைத்தான் இப்போது அனுபவிக்கிறோம். அதுபோலவே, இப்போது நாம் செய்யும் முயற்சிகள் பிற்காலச் சந்ததிகளுக்குப் பயன்தரும். அதில் ஒரு திட்டம்தான் சந்திரயான் திட்டம். கே. அடுத்ததாக இஸ்ரோ ஆதித்யா எல் - 1 என்ற பெயரில் சூரியனுக்கு ஆய்வுக் கோளை அனுப்பவிருக்கிறது. அதன் முக்கியத்துவம் என்ன? ப. சூரியன் பூமிக்கு மிக முக்கியமானது. பூமியின் வாழ்வைக் கட்டுப்படுத்துவது சூரியன்தான். ஆனால், சூரியனைப் பற்றி அறிய வேண்டியது நிறைய இருக்கிறது. உதாரணமாக, அதன் வெளிப்பகுதியின் வெப்பநிலை 5,700 டிகிரிதான் தான் இருக்கும். ஆனால், சூழலின் வெப்ப நிலை மிகப் அதிகமாக இருக்கும். அது ஏன் என்பதற்கான விடை கிடைக்கவில்லை. சூரியனின் நடக்கும் மாற்றத்தால் பூமியில் ஏற்படும் சூழல் மாற்றம் பற்றியும் அறிந்துகொள்ளவே ஆய்வுக் கோளை அனுப்புகிறோம். பட மூலாதாரம்,NASA கே. 2025ல் விண்வெளிக்கு ஆட்களை அனுப்பும் ககன்யான் திட்டம் எந்தக் கட்டத்தில் இருக்கிறது.. இதில் எந்தக் கட்டத்தில் ஆபத்து இருக்கும்? ப. விண்ணுக்கு மனிதரை அனுப்பும் திட்டத்தைப் பொறுத்தவரை, ஒரு விண்கலத்தில் 450 கி.மீ. உயரத்திற்கு மனிதனை அனுப்புவார்கள். பிறகு, மீண்டும் அவரைப் பாதுகாப்பாக பூமிக்கு திரும்ப அழைத்து வருவதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம். மனிதனை சுமந்து செல்லும் ராக்கெட்டைப் பொறுத்தவரை, செயற்கைக் கோள்களைச் சுமந்து செல்லும் ராக்கெட்களைவிட கூடுதல் செயல்திறனை, நம்பகத்தன்மையைக் கொண்டதாக இருக்க வேண்டும். ஆகவே தற்போதைய ராக்கெட்டுகளை அதற்கேற்றபடி மாற்ற வேண்டும். அடுத்தபடியாக, மனிதர்கள் பூமியில் இருக்கும்போது என்னவிதமான சூழலில் இருந்தார்களோ அதேபோன்ற சூழலில் விண்ணிலும் இருப்பதற்கேற்றபடி சிறு அறைகளை (module) உருவாக்கவேண்டும். Environment Controlled Life support System என்று இதை அழைப்பார்கள். மனிதர்களை திரும்ப அழைத்துவரும்போது, பல கட்ட வெப்ப மாறுபாட்டை விண்கலம் எதிர்கொள்ள வேண்டும். அதற்கேற்றபடி அந்த விண்கலத்தை வடிவமைக்க வேண்டும். அதேபோல, திரும்பிவரும் விண்கலம் நாம் நினைத்த இடத்தில் துல்லியமாக தரையிறங்க வேண்டும். அதற்கும் சில தொழில்நுட்பங்கள் தேவைப்படும். இதுதொடர்பான சோதனைகள் நடந்துகொண்டிருக்கின்றன. அடுத்ததாக சோதனை ஓட்டம் நடைபெறும். இதற்குப் பிறகு மனிதர் இல்லாத ரோபோக்களைக் கொண்ட ராக்கெட் அனுப்பப்படும். இப்படியான இரண்டு - மூன்று சோதனைகளுக்குப் பிறகு மனிதர்கள் விண்கலத்தில் விண்ணுக்கு அனுப்பப்படுவார்கள். பட மூலாதாரம்,TWITTER/ISRO கே. அடுத்ததாக, செவ்வாய் கோளுக்கு விண்கலத்தை அனுப்புவதற்கான சுக்ரயான் திட்டத்திலும் இஸ்ரோ ஈடுபட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது... வேறு எந்தெந்த கிரகங்களையெல்லாம் அடைய இஸ்ரோ திட்டமிட்டிருக்கிறது? அதனால், என்ன பலன் கிடைக்கும்? ப. அடுத்ததாக செவ்வாய்க்கு ஒரு விண்கலத்தை அனுப்பும் திட்டம் தயாராகிவருகிறது. அதற்கடுத்து வெள்ளி கிரகத்திற்கு ஆளை அனுப்பும் திட்டம் இருக்கிறது. ஆனால், அது அனுமதி பெறும் கட்டத்தில்தான் இருக்கிறது. இந்தப் பிரபஞ்சத்தின் துவக்கம், பூமியின் துவக்கம் ஆகியவற்றை அறிவதுதான் இந்தத் திட்டங்களின் நோக்கம். விண்வெளித் திட்டங்களைப் பொறுத்தவரை அதற்குப் பல்வேறு பலன்கள் இருக்கும். ஒன்று மக்களுக்கு நேரடியாகப் பலனளிக்கும் திட்டங்கள். மற்றொன்று, வேறு கட்டமைப்புக்கு உதவும் தகவல்களைத் தரும் திட்டங்கள். மூன்றாவதாக, முழுக்க முழுக்க விண்வெளி அறிவியலுக்கு உதவும் திட்டங்கள். இந்தத் திட்டம் அதுபோன்ற ஒரு திட்டம்தான். கே. சந்திரயான் 1 ஏவப்பட்டு 15 ஆண்டுகள் கழிந்துவிட்டன. அந்தத் திட்டத்திற்குப் பிறகு நம்முடைய விண்வெளித் திட்டம் எந்த அளவுக்கு மாற்றமடைந்திருக்கிறது...? ப. சந்திரயான் திட்டத்திற்கும் விண்வெளி வளர்ச்சிக்கும் இடையில் பெரிய தொடர்பு கிடையாது. இது ஒரு காலகட்டத்தைக் குறிக்கிறது, அவ்வளவுதான். ஆனால் இந்த காலகட்டத்தில் பெரிய வளர்ச்சி அடைந்திருக்கிறோம். கிரையோஜெனிக் எஞ்சின் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஜிஎஸ்எல்வி மார்க் - 3 ராக்கெட் உருவாக்கப்பட்டிருக்கிறது. புதிய செயற்கைக்கோள்கள் உருவாகியிருக்கின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரோ நுழைவு வாயில் கே. சீனாவும் ரஷ்யாவும் இணைந்து நிலவில் ஒரு ஆய்வு நிறுவனத்தைக் கட்ட நினைக்கின்றன. இந்தியா இது போன்ற திட்டங்களில் ஈடுபட எவ்வளவு காலம் பிடிக்கும்? ப. இந்தியா இப்போதுதான் மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதற்குப் பிறகு வேண்டுமானால், இதுபோன்ற திட்டங்களைப் பற்றி யோசிக்கலாம். கே.. இஸ்ரோவின் திட்டங்கள் அனைத்தும் மிகக் குறைந்த செலவில் செய்யப்படுகின்றன. இஸ்ரோவைப் பற்றித் திரைப்படம் எடுப்பதைவிட குறைவான செலவில் இஸ்ரோ ராக்கெட்களை அனுப்புவதாகக்கூட வேடிக்கையாகச் சொல்வார்கள்.. இது எப்படி சாத்தியமாகிறது? ப. குறைந்த செலவு என்பது ஒரு ஒப்பீட்டுப் பார்வைதான். நாம் சிறப்பு முயற்சி எதையும் அதற்காக மேற்கொள்வதில்லை. விண்வெளித் திட்டங்களுக்கான பொருட்களையும் கருவிகளையும் நாம் நம்முடைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இங்கேயே உருவாக்குவதால் செலவு குறைவாக இருக்கிறது. இதனை வெளிநாடுகளில் வாங்கினால், விலை அதிகமாக இருக்கும். செலவு குறைவாக இருக்க அது ஒரு காரணம். அதேபோல, இங்கே தயாரிப்புச் செலவு, தொழிலாளர்களுக்கான ஊதியம் போன்றவை குறைவு. மற்றபடி, இதற்கென சிறப்பு முயற்சிகள் எதையும் இஸ்ரோ செய்வதில்லை. கே. சந்திரயான் - 3 ஏவப்பட்டு எத்தனை நாட்களுக்குப் பிறகு, இந்தத் திட்டம் முழுமையான வெற்றி பெற்றுவிட்டதாக சொல்ல முடியும்? ப. இந்தத் திட்டம் முழுமையடைய 45 நாட்களாகும். சந்திரயான் ஏவப்பட்ட பிறகு, 45 நாட்களுக்குப் பிறகுதான் லாண்டர் சந்திரனில் தரையிறங்கும். ஜூலை மாத மத்தியில் சந்திரயான் ஏவப்பட்டால் ஆகஸ்ட் மாத இறுதியில் லாண்டர் தரையிறங்கும். அதற்குப் பிறகுதான் அந்தத் திட்டம் முழுமையடையும். கே. விண்வெளி ஆய்வுத் துறையில் நாம் மேலும் திறன்களை வளர்த்தெடுக்க என்ன செய்ய வேண்டும்? ப. விண்வெளித் துறையில் தேவைகள் அதிகரித்துவருகின்றன. வெளிநாட்டு சந்தையைக் கைப்பற்ற வேண்டுமென்றால் நம் நடவடிக்கைகள் அதிகரிக்க வேண்டும். இந்திய அரசைப் பொறுத்தவரை 2021ல் விண்வெளித் துறை தனியாருக்கும் திறக்கப்பட்டது. இப்போது தனியாரும் விண்வெளித் திட்டங்களை நிறைவேற்ற முடியும். நிறைய ஆரம்ப நிலை நிறுவனங்கள் இந்தத் திட்டத்தில் ஈடுபடுகின்றன. நிறைய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டத்திலும் நாம் ஈடுபட வேண்டும். அதற்கு இஸ்ரோ தயாராகிக்கொண்டிருக்கிறது. கே. இந்தியா போன்ற ஒரு வளரும் நாட்டுக்கு, காலநிலைகளை கண்காணிக்கும் செயற்கைக்கோள்கள், ரிமோட் சென்சிங் செயற்கைக்கோள்கள் போன்ற ஆய்வு கோள்களைத் தவிர மங்கள்யான், சந்திரயான், ககன்யான் போன்ற திட்டங்கள் தேவையா என்ற கேள்வி அடிக்கடி எழுப்பப்படுகிறதே? ப. காலநிலை கண்காணிப்பு, ரிமோட் சென்சிங் எல்லாம் தேவை என இப்போது சொல்கிறார்கள். ஆனால், 1960களில் இஸ்ரோ தனது ஆய்வுகளைத் துவங்கியபோது, இதெல்லாம் தேவையா என்றுதான் சொன்னார்கள். ஆனால், அப்போது துவங்கியதன் பலன்களைத்தான் இப்போது அனுபவிக்கிறோம். அதேபோல இப்போது சந்திரயான் போன்ற திட்டங்களைத் துவங்கினால்தான், அதன் பலன்களை வரும் சந்ததியினர் அனுபவிப்பார்கள். தொழில்நுட்பத்தை நாம் தொடர்ந்து வளர்த்தெடுக்க வேண்டும். பட மூலாதாரம்,TWITTER/ISRO கே. நிலவுக்கு ஆட்களை அனுப்பும் திட்டம் ஏதும் இஸ்ரோவுக்கு உள்ளதா, அது சாத்தியமா? ப. இப்போதைக்கு அப்படித் திட்டம் ஏதும் இல்லை. பிற்காலத்தில் நடக்கலாம். கே. தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை, ராக்கெட்களை ஏவுவது என்பது உச்சபட்ச தொழில்நுட்பங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இருந்தபோதும், அம்மாதிரி நிகழ்வுகளுக்கு முன்பாக விஞ்ஞானிகள் வழிபாட்டுத் தலங்களுக்குப் போகிறீர்கள்.. ராக்கெட் மாதிரிகளை வைத்து பூஜை செய்கிறீர்கள்... அறிவியலும் நம்பிக்கையும் எந்த இடத்தில் சந்திக்கின்றன? ப. இதெல்லாம் தனி நபர்களின் நம்பிக்கை. அதில் சொல்வதற்கு ஏதுமில்லை. ராக்கெட்களைப் பொறுத்தவரை, எத்தனையோ பிரச்சனைகள் வரலாம். இம்மாதிரி பிரச்சனை வரலாம் என்பதே முதலில் புரியாது. அம்மாதிரி நிலையில், சிலர் வழிபடுகிறார்கள். அவ்வளவுதான். https://www.bbc.com/tamil/articles/crgk0144p12o
-
தாய்லாந்து வழங்கிய யானை இலங்கையில் மோசமான நிலையில் - 700000 டொலர் செலவில் யானையை மீள பெற தாய்லாந்து தீர்மானம்
அண்ணை முத்துராஜாவை திரும்ப தரவேண்டும் என கூறியே தாய்லாந்திடம் வழங்கியதாக அதனை பராமரித்த விகாரைக்குரிய தேரரின் பேட்டி ஒன்று இருந்ததாக நினைவு. இவங்கள் அதனுடைய பெரிய தந்தத்துடனான தோரணைக்காகவே அதனை திரும்ப கேட்கிறதாக நினைக்கிறேன்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
உக்ரைனுக்கு கொத்துக்குண்டுகளை வழங்குவதற்கு அமெரிக்காவின் நேச நாடுகள் எதிர்ப்பு Published By: RAJEEBAN 09 JUL, 2023 | 10:15 AM உக்ரைனுக்கு கொத்துக்குண்டுகளை வழங்கும் அமெரிக்காவின் முடிவுக்கு அதன் நேச நாடுகள் பல கண்டனத்தை வெளியிட்டுள்ளன. உக்ரைனுக்கு கொத்துக்குண்டுகளை வழங்கவுள்ளதை உறுதிசெய்துள்ள அமெரிக்க ஜனாதிபதி இதனை மிகவும் கடினமான முடிவு என தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள கனடா பிரிட்டன் ஸ்பெயின் நியுசிலாந்து ஆகிய நாடுகள் கொத்துக்குண்டுகளை பயன்படுத்துவதை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளன. கொத்துக்குண்டை தடைசெய்யும் உடன்படிக்கையில் கைசாத்திட்டுள்ள 123 நாடுகளில் பிரிட்டனும் ஒன்று என்பதை பிரிட்டிஸ் பிரதமர் ரிசிசுனாக் சுட்டிக்காட்டியுள்ளார். கொத்துக்குண்டினை தடை செய்யும் உடன்படிக்கையை கொண்டுவருவதில் தீவிர ஆர்வத்தை வெளிப்படுத்திய நியுசிலாந்து கடும் கருத்தினை வெளியிட்டுள்ளது. கொத்துக்குண்டுகள் கண்மூடித்தனமானவை அவை பொதுமக்களிற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தக்கூடியவை நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை என நியுசிலாந்து பிரதமர் கிறிஸ் கிப்ஹின்ஸ் தெரிவித்துள்ளார். உக்ரைனிற்கு கொத்துக்குண்டுகளை வழங்குவது குறித்த எதிர்ப்பை நியுசிலாந்து அமெரிக்காவிற்கு தெரியப்படுத்தியுள்ளது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். சிலவகையான ஆயுதங்களை உக்ரைனிற்கு அனுப்பகூடாது என்பது குறித்து தனது நாடு உறுதியாக உள்ளது என ஸ்பெய்ன் பாதுகாப்பு அமைச்சர் மார்கரிட்டா ரொப்லெஸ் தெரிவித்துள்ளார். கொத்துக்குண்டினால் எற்படக்கூடிய தாக்கம் குறித்து ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளதாக கனடா தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/159553
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
Sri Lanka: மனித புதைகுழியில் கிடைத்தது விடுதலை புலிகளின் எச்சங்களா? ராணுவம் என்ன சொல்கிறது? Human Remains Found in Mullaitivu - இலங்கை முல்லைத்தீவு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது மனித புதைகுழிதானா என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில், ஜூலை 6ஆம் தேதி வியாழக்கிழமையன்று நடந்து முடிந்த அகழ்வுப் பணிகள் முறையாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, முல்லைத்தீவு பகுதியில் இன்று மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ்விவகாரம் தொடர்பான விசாரணையில் சர்வதேச தலையீடு வேண்டும் என்ற கோரிக்கையும் ஆர்ப்பாட்டக்காரர்களால் முன்வைக்கப்பட்டது.
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
கொக்குத்தொடுவாயில் காணப்படுவது இறுதிப்போரில் சரணடைந்த விடுதலைப்புலிகளின் சடலங்களே : இரு பக்கமும் அடுக்கடுக்காக சீருடைகள் : சர்வதேச சமூகம் கண்காணிக்க வேண்டும் - சமூக ஆர்வலர் பீற்றர் இளஞ்செழியன் Published By: RAJEEBAN 05 JUL, 2023 | 12:12 PM (நேர்காணல் - ரஜீபன்) கொக்குத்தொடுவாயில் காணப்படுவது சரணடைந்த விடுதலைப்புலிகள் இயக்க போராளிகளின் சடலங்களே பொலிஸ் பாதுகாப்பில் நம்பிக்கையில்லை. விசாரணைகள் அகழ்வை சர்வதேச சமூகம் கண்காணிக்கவேண்டும்... கொக்குத்தொடுவாயில் காணப்படுவது படையினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் போராளிகளின் சடலங்களே என கருதுவதாக புதைகுழியை நேரில் சென்று பார்வையிட்ட சமூக ஆர்வலர் இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். அதன் அருகாமையில் இரண்டு பக்கங்களும் அடுக்கடுக்காக விடுதலைப்புலிகள் இயக்க போராளிகளின் சீருடைகள் போன்றவை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நேர்காணலின்போது இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் கூறியதாவது, கேள்வி : மனிதபுதைகுழிகள் காணப்படும் பகுதியை பார்வையிட்டவர்களில் நீங்களும் ஒருவர். நீங்கள் அவதானித்தவற்றை தெரிவிக்க முடியுமா? பதில் : கொக்குத்தொடுவாயில் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியை நாங்கள் சென்று பார்வையிட்டபோது மனித எச்சங்களின் எலும்புகள் மேல் நோக்கி காணப்பட்டன. விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் பயன்படுத்தியிருக்கக்கூடிய அணிந்திருக்கக்கூடிய சேர்ட்கள், மேலாடைகள் காணப்படுகின்றன. பெண்கள் பயன்படுத்தக்கூடிய மேலாடைகளும் காணப்பட்டன. உதாரணமாக, இந்த மனித எச்சங்கள் நீண்ட காலமாக இருந்ததாக கருத முடியாதவண்ணம் காணப்படுகின்றன. அது ஒரு மீற்றர் ஆழமான பகுதியிலேயே காணப்பட்டது. அதன் மூலம் எங்களுக்கு தோன்றுவது என்னவென்றால், இது 10 தொடக்கம் 15 வருட காலத்துக்குட்பட்டதாக இருக்கலாம். இறுதிப்போரில் - இறுதிப்போர் நடைபெற்ற காலத்தில் புதைக்கப்பட்டதா அல்லது கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதா என்ற கேள்விகள் எங்களுக்கு எழுந்துள்ளன. இது இறுதிப்போரில் சரணடைந்த விடுதலைப்புலிகள் இயக்க போராளிகளின் உடல் எச்சங்கள் என்பதே உண்மையில் எங்கள் கண்முன் நிற்கின்றது. பெண்களின் உள்ளாடைகளும் காணப்படுவதால் இது இறுதிப்போரில் சரணடைந்த முன்னாள் போராளிகளின் உடல்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நானும் அவ்வாறே நம்புகின்றேன். கேள்வி : அவை விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்களின் உடல்கள் என்ற கருத்து காணப்படுகிறது. அதனை உறுதி செய்யும் விதத்தில் எதனையாவது அவதானித்தீர்களா? பதில் : ஆம். அவை விடுதலைப்புலிகளின் உடல்கள் என்றே நாங்கள் நம்புகின்றோம். காரணம், விடுதலைப்புலிகளின் சீருடையாகவே அதனை நாங்கள் பார்க்கின்றோம். அது 1984ஆம் ஆண்டுக்குப் பின்னர் விடுதலைப்புலிகள் எவரும் நடமாடாத இடம் இது. முல்லைத்தீவிலிருந்து கொக்கிளாய் செல்கின்ற ஒரு நேரடிப்பாதை. குறுக்குப்பாதையும் இல்லை. இந்த புதைகுழி பிரதான வீதியில் உள்ளது. இது விடுதலைப்புலிகளின் உடல்களா என சொல்வதற்கு அவர்களின் சீருடைகளை ஒத்த சீருடைகளை நாங்கள் அவதானித்திருந்தோம். இந்த உடல்கள் இராணுவத்தினருடையவை என்றால் அவர்கள் அங்கு அதனை தாண்டியிருக்கமாட்டார்கள். கொழும்புக்கு அவர்களின் வீட்டுக்கு கொண்டு சென்று கொடுத்திருப்பார்கள். இது விடுதலைப்புலிகளின் மனித எச்சங்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இறுதிப்போரில் சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளது எங்கள் உறவுகளின் உடல்களாகவே இந்த மனித எச்சங்களை நாங்கள் பார்க்கின்றோம். அதனை உறுதி செய்ய விரும்புகின்றோம். இது விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களின் உடல்களாக நம்புவதற்கான காரணம் ஒன்று உள்ளது. இதனை நாளை மறுதினம் நீதிமன்றம் அகழ்வு செய்து ஆராயவுள்ளது அதன்போது விடுதலைப்புலிகள் பயன்படுத்தக்கூடிய இலக்கத்தகடுகள் உடைகள் போன்றவற்றின் மூலம் உண்மை தெரியவரலாம். மேலும் அகழ்வு இடம்பெறுகின்றபோதே உண்மை தெரியவரலாம். கேள்வி : குறிப்பிட்ட பகுதி யுத்த காலத்தில் யாருடைய கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்டது? பதில் : இந்த பகுதியிலிருந்து 1984ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் மக்களை அவசரமாக வெளியேற்றியது. அதன் பின்னர் 2009 வரை இந்த பகுதி இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. எங்கள் பொதுமக்கள் எவரும் அங்கு வாழவில்லை. இராணுவத்தினரின் முழு கட்டுப்பாட்டில் அந்த பகுதி காணப்பட்டது. நாயாற்றுப்பாலத்துக்கு அப்பால் இராணுவத்தினரின் முழு பாதுகாப்பில் அந்த பகுதி காணப்பட்டது. ஆகவே இந்த மனித எச்சங்கள் அதற்கு முன்னர் இடம்பெற்ற போரில் அல்லது மோதலில் கொல்லப்பட்டவர்களுடையது என கருதுவதற்கான வாய்ப்பு இல்லை. அந்த சந்தேகம் எங்களுக்கு எழவில்லை. ஆனால், ஒன்றை மாத்திரம் தெரிவிக்க முடியும். இவை கடத்தப்பட்ட அல்லது சரணடைந்த விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களின் உடல்களாக இருக்கலாம். தற்போது காணப்படுகின்ற சீருடைகள் விடுதலைப்புலிகளுடைய சடலங்களாக இருக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. மேலும், அகழ்வுகள் இடம்பெறுகின்றபோதுதான் அவற்றில் பொதுமக்கள் காணாமலாக்கப்பட்டவர்களின் உடல்கள் உள்ளனவா என்பது தெரியவரும். கேள்வி : நீதிபதியின் உத்தரவில் பொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மனித புதைகுழிக்கு பாதுகாப்பு அளிக்கும் விதம் குறித்து உங்கள் அபிப்பிராயம் என்ன? பதில் : நீதிபதியின் உத்தரவின் பேரில் மனித எச்சங்கள் காணப்பட்ட பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு வழங்குகின்றனர். ஆனால், பொலிஸார் மீது எங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லாதபடியினால் நாங்கள் அந்த பிரதேச மக்களை உள்வாங்கி சுழற்சி முறையிலான அவதானிப்பு குழுக்களை நிறுத்தியுள்ளோம். இராணுவத்தினர் அரசாங்கத்தின் துணையுடன் பொலிஸார் அந்த பகுதியிலிருந்து சான்றுப் பொருட்களை அகற்றக்கூடிய நிலை உருவாகலாம் என்பதற்காகவும், தடயப்பொருட்களின் சாட்சிப்பொருட்கள் ஒருபோதும் அழியக்கூடாது என்பதற்காகவும் சமூக செயற்பாட்டாளர்களான நாங்கள் அந்த கிராமக்களுடன் சேர்ந்து அவற்றை மறைமுகமாக அவதானித்துக்கொண்டிருக்கின்றோம். பொலிஸார் எதை செய்தாலும், வரலாறே சொல்கின்றது பொலிஸார் ஒரு வழக்கை தொடர்ந்தால் அதில் நூறு பொய் இருக்கும். பொலிஸாரின் வழக்குகள் பெரிதாக வென்றதும் இல்லை. இது ஒரு மனித எச்சம். அதன் சான்றுப்பொருட்களை அழித்துவிடுவார்கள் என்ற அச்சம் என்னிடமும் பொதுமக்களிடம் காணப்படுகின்றது. ஆகவே அதனை கருதி நாங்கள் சுழற்சி முறையிலே சிறு சிறு குழுக்களாக நாங்கள் அவதானித்து வருகின்றோம். பொலிஸார் சான்றுகளை அழித்துவிடுவார்கள் என்ற அச்சம் காரணமாக நாங்கள் இவ்வாறான குழுக்களை அமைத்து அவற்றை அவதானித்து வருகின்றோம். கேள்வி : இந்த மனித புதைகுழி விடயத்தில் அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் - சர்வதேச சமூகம் எடுக்கவேண்டிய நடவடிக்கை என்ன என நீங்கள் நினைக்கின்றீர்கள்? பதில் : வடக்கில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகள் தொடர்பில் அரசாங்கம் கரிசனை கொண்டதும் இல்லை. கரிசனை செய்யப்போவதுமில்லை. மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிக்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. இதேபோல வடக்கிலே அடுத்து அகழப்படக்கூடிய இடமாக இது கருதப்படுகின்றது. நீர் விநியோக குழாய்க்காக தோண்டப்பட்ட பகுதியில் இரண்டடி அகலம் ஓரடி ஆழத்தில் தோண்டப்பட்ட குழியில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், அதன் அருகாமையில் இரண்டு பக்கங்களும் அடுக்கடுக்காக உடுப்புகள் அதாவது விடுதலைப்புலிகளின் சீருடைகள் போன்ற சீருடைகள் இருப்பதற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. அவற்றை அகழ்வு செய்கின்ற போதுதான் எத்தனை உடல்கள், மனித எச்சங்கள் உள்ளன என்பதை கண்டுபிடிக்கக்கூடியதாக இருக்கும். ஆனால் இலங்கை அரசாங்கம் இது குறித்து கரிசனை கொண்டு சரியான தீர்வினை வழங்கப்போவதில்லை. காரணம், ஜனாதிபதியும் நீதியமைச்சரும் தெளிவாக சொல்லிவிட்டனர். இந்த வழக்கு நீதிமன்றத்திலே உள்ளதால் நாங்கள் அது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என நீதியமைச்சர் தெரிவித்துவிட்டார் உண்மையில் இந்த மனித புதைகுழிகள் என்பது இறுதிப்போரில் சரணடைந்த ஆண், பெண் போராளிகளுடையனவாக இருக்கலாம் என்ற சந்தேகம் காணப்படுகின்றது. பகுப்பாய்வு முடிவுகள் போன்றவை வந்த பின்னர்தான் அவற்றை உறுதி செய்ய முடியும். அனைத்தும் அரசாங்கத்தின் கரங்களில் உள்ளதால் பொலிஸார், இது தொடர்பான திணைக்களங்கள் அனைத்தும் பொலிஸாரின் கரங்களில் உள்ளதால் அவர்கள் சரியான அறிக்கையை கூட மாற்றியமைக்கக்கூடியவர்கள். ஆகவே இந்த அகழ்வுகளும் விசாரணைகளும் சர்வதேச கண்காணிப்பின் கீழ் இடம்பெற வேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோள். இந்த செய்தி ஊடாக நாங்கள் உலக நாடுகளை பகிரங்கமாக கேட்டுக்கொள்வது என்னவென்றால், இந்த புதைகுழி அகழ்வும் விசாரணையும் இடம்பெறும்போதும் உலக நாடுகள் தங்கள் கண்காணிப்பாளர்களை அனுப்ப வேண்டும். அப்போதுதான் இந்த விசாரணை திருப்திகரமாக இருக்கும். இதிலே ஒரு பகுதியினருக்கு பல சந்தேகங்கள் உள்ளன. காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு பெரும் சந்தேகம் உள்ளது. புதைகுழியில் காணப்படுவது சீருடையாக இருந்தாலும் சரி, காணாமல்போன பொதுமக்களும் இதற்குள் இருக்கலாம் என அவர்கள் சந்தேகிக்கின்றனர். இதேபோல இறுதிப்போரில் பெற்றோர் பிள்ளைகளையும், மனைவி கணவரையும், கணவர் மனைவியையும் இராணுவத்தினரிடம் ஒப்படைத்த சம்பவங்கள் உள்ளன. அந்த முன்னாள் போராளிகளின் உடல்களாக இவை இருக்கலாம் என்ற சந்தேகங்களும் உள்ளன. ஆகவே இந்த விசாரணைக்கு சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பு மிக அவசியம். இந்த மனிதப்புதைகுழிகள் குறித்த விசாரணைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் விரைந்து உங்கள் கண்காணிப்பாளர்களை அனுப்புங்கள் என சர்வதேச சமூகத்தை, உலக நாடுகளை கேட்டுக்கொள்கின்றோம். https://www.virakesari.lk/article/159242
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ஆபத்தான க்ளஸ்டர் வெடிகுண்டுகளை யுக்ரேனுக்கு வழங்கும் அமெரிக்கா பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டான்பாஸ் பகுதியில் க்ளஸ்டர் குண்டுகளால் தனது வீட்டை இழந்த பெண் கட்டுரை தகவல் எழுதியவர், ஃபிராங்க் கார்ட்னர் பதவி, பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் மிக ஆபத்தான ‘க்ளஸ்டர் வெடிகுண்டுகள்’ என்று அழைக்கப்படும் கொத்து குண்டுகளை யுக்ரேனுக்கு அமெரிக்கா வழங்கவுள்ளது. கடந்த வெள்ளியன்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், கொத்துக் குண்டுகளின் ஆபத்து காரணமாகவே யுக்ரேன் நாட்டுக்கு அவற்றை அளிப்பதை இத்தனை மாதங்களாக தாமதப்படுத்தியதாக தெரிவித்தார். "இருப்பினும் யுக்ரேன் நாட்டில் ஆயுத பற்றாக்குறை நிலவ அமெரிக்கா ஒருபோதும் விரும்பாது." என்றும் அவர் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கொத்துக் குண்டுகள் ஆபத்தானவை என்பதால் தான் அவற்றை யுக்ரேனுக்கு அளிக்க அதிக காலதாமதம் செய்ததாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் வெள்ளியன்று தெரிவித்தார் மேலும், யுக்ரேனுக்கு அனுப்பப்படும் அமெரிக்க கொத்து குண்டுகள் ரஷ்யாவால் ஏற்கனவே யுக்ரேன் மீதான போரில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளை விட மிகவும் பாதுகாப்பானவை என்றார். இதற்கிடையே, அமெரிக்காவின் இந்த முடிவு "சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு" என யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி பாராட்டியுள்ளார். ஆனால் அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதர், இது அமெரிக்காவின் மோசமான நிலையைக் காட்டுவதாக கடுமையாக சாடியுள்ளார். கொத்து குண்டுகள் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன. அடுத்த வாரம் லிதுவேனியாவில் நடைபெறவுள்ள நேட்டோ உச்சி மாநாட்டிற்கு முன்னதாக எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவைப் பற்றி நட்பு நாடுகளுடன் கலந்தாலோசித்ததாக வெள்ளிக்கிழமை சிஎன்என் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் ஜோ பைடன் தெரிவித்திருந்தார். கொத்துக் குண்டுகள் என்றால் என்ன? கொத்துக் குண்டுகள் என்பவை ராக்கெட், ஏவுகணை அல்லது பீரங்கி போன்ற உபகரணங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சிறிய குண்டுகளை சிதறடிக்கும் ஒரு தாக்குதல் முறையாகும். இந்த தாக்குதலில் ஒரு பெரிய குண்டின் உள்ளே பல சிறிய குண்டுகளை வைத்து ராக்கெட், ஏவுகணை, பீரங்கி அல்லது விமானத்தில் இருந்து குண்டு வீசப்படுகிறது. இலக்கை நோக்கி ஒரு குண்டுதான் எறியப்படும் என்றாலும், அந்தப் பெரிய குண்டு வெடித்தபின், அதிலிருந்து வெளியாகும் பல சிறிய குண்டுகள் தாக்குதலுக்கு உள்ளாகும் ஒரே இலக்கின் பரந்த பகுதியைத் தாக்கும் தன்மை உடையவை. இந்த பெரிய குண்டில் இருந்து வெளியேறும் சிறிய குண்டுகள் வெடிக்கும் தன்மை உடையவை என்றாலும், ஈரமான அல்லது மென்மையான நிலத்தை அடைந்தால் அவை வெடிக்காது. இதனால் தாக்குதல் நடக்கும் போதும் இந்த குண்டுகள் ஆபத்தானவை, தாக்குதலுக்குப் பின் வெடிக்காமல் இருக்கும் குண்டுகளும் ஆபத்தானவையாக இருக்கின்றன. இவற்றை வானில் இருந்து இலக்கை நோக்கி வீசவும் முடியும். தரையில் இருந்து மற்றொரு இலக்கை நோக்கி தாக்குவதற்கும் பயன்படுத்த முடியும். தரையை அடைந்த பின்னரும் வெடிக்காமல் இருக்கும் குண்டுகள் 'டட்ஸ்' என அழைக்கப்படுகின்றன. இந்த வெடிக்காத குண்டுகள், பின்னர் ஏதோ ஒரு நேரத்தில் வெடித்து, அப்பகுதியில் இருக்கும் பொதுமக்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தலாம், அல்லது பலத்த காயங்களை ஏற்படுத்தலாம். ராணுவக் கண்ணோட்டத்தில் பார்த்தால், அகழிகள் மற்றும் பதுங்கு குழிகளில் மறைந்திருக்கும் ராணுவத்தினர் மீது இது போன்ற குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்படுகிறது. இத்தாக்குதலில், அந்த பதுங்கு குழிகளைச் சுற்றிலும் வெடிக்காமல் கிடக்கும் குண்டுகளை கவனமாக அகற்றாவிட்டால் அங்கிருந்து யாரும் பிற பகுதிகளுக்குச் செல்ல முடியாது. அந்த அளவுக்கு அவை ஆபத்தானவை. படக்குறிப்பு, பெரிய குண்டில் இருந்து வெளிப்பட்டு பின்னர் சிதறி பரந்த நிலப்பரப்பைத் தாக்கும் குண்டுகள் தான் கொத்துக் குண்டுகள் க்ளஸ்டர் குண்டுகள் ஏன் தடை செய்யப்பட்டுள்ளன? பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உட்பட 100க்கும் மேற்பட்ட நாடுகள், ஒரு சர்வதேச உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன. இதன்படி, பொது மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துவதன் காரணமாக இந்த வகையான குண்டுகளைப் பயன்படுத்துவதை அல்லது சேமித்து வைப்பதை அந்த உடன்படிக்கை சட்டவிரோதமாக்குகிறது. கொத்து குண்டுகளின் ஆபத்தில் சிக்கும் பொதுமக்களில் ஏராளமானோர், குறிப்பாக குழந்தைகள் படுகாயமடைந்து வாழ்க்கையில் பெரும் துயரங்களை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். குடியிருப்புக்கள் மற்றும் வேளாண் நிலங்களில் வெடிக்காமல் கிடக்கும் இந்த குண்டுகள் சாதாரண பொம்மையைப் போல் இருப்பதால், பெரும்பாலும் ஆர்வத்தின் காரணமாக அவற்றை அப்பாவி பொதுமக்கள் கைகளில் எடுக்கின்றனர். கொத்து குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்துவது ஒரு "வெறுக்கத்தக்க" செயல் என்று மனித உரிமை அமைப்புக்கள் கூறுகின்றன. பட மூலாதாரம்,JOEL GUNTER/BBC படக்குறிப்பு, கார்கிவ் நகரில் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தின் அருகே க்ளஸ்டர் குண்டுகளால் தாக்கப்பட்ட காரில் உள்ள அடையாளங்கள் இன்னும் யார் அவற்றைப் பயன்படுத்துகிறார்கள்? பிப்ரவரி 2022 இல் ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு தொடங்கியதில் இருந்து ரஷ்யா மற்றும் யுக்ரைன் ஆகிய இரண்டு நாடுகளும் கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்துகின்றன. இவற்றைத் தடை செய்யும் உடன்படிக்கையில் இந்த இரு நாடுகளும் கையெழுத்திடவில்லை. அமெரிக்காவும் இந்த உடன்படிக்கையில் கையெழுத்திடவில்லை என்றாலும், முன்னர் ரஷ்யா அதிக எண்ணிக்கையிலான கொத்து குண்டுகளைப் பயன்படுத்திய போது அது குறித்து கடுமையாக விமர்சித்தது. ரஷ்யாவின் கொத்து குண்டுகளில் 40% குண்டுகள் வெடிக்காத "டட்" களாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இது தரைப்பகுதியில் ஒரு பெரிய ஆபத்தாகவே உள்ளது. ஆனால் சராசரியாக 20% அளவுக்கே இந்த "டட்"கள் இருப்பதாக நம்பப்படுகிறது. அமெரிக்க அரசு அதன் சொந்த கொத்துக் குண்டுகள் 3% க்கும் குறைவான "டட்" வீதத்தைக் கொண்டிருப்பதாக மதிப்பிடுகிறது. யுக்ரேன் ஏன் அவற்றைக் கேட்கிறது? யுக்ரேனிய படைகளிடம் பீரங்கி குண்டுகள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன. பெரும்பாலும், ரஷ்யர்களைப் போலவே, யுக்ரேனிய ராணுவமும் அவற்றை அசாதாரணமாக அதிக எண்ணிக்கையில் பயன்படுத்துகிறது. மேலும், யுக்ரேனின் மேற்கத்திய நட்பு நாடுகள் அந்த எண்ணிக்கையிலான ஆயுதங்களை அவர்களுக்குத் தரமுடியாது. யுக்ரேனின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகள் பெரும்பாலும் பீரங்கிகளைப் பயன்படுத்தும் நிலையே காணப்படுகிறது. 1,000 கிமீ (621 மைல்) நீளத்திற்கு கிணறு போன்ற தற்காப்பு நிலைகளில் இருந்து தாக்குதல் நடத்தும் ரஷ்யர்களை வெளியேற்றும் முயற்சியில் யுக்ரேனியர்கள் இப்போது ஒரு சவாலான பணியை எதிர்கொள்கின்றனர். போதுமான பீரங்கி குண்டுகள் இல்லாத நிலையில், அந்த தற்காப்பு அகழிகள் அனைத்தையும் நிர்வகிக்கும் ரஷ்ய காலாட்படையை குறிவைக்க, கொத்துக் குண்டுகளை அளித்து உதவுமாறு அமெரிக்காவிடம் யுக்ரேன் கேட்டுள்ளது. ஆனால் இது வாஷிங்டனுக்கு அவ்வளவு எளிதான வேண்டுகோளாக இருக்கவில்லை. மேலும் அமெரிக்காவில் உள்ள பல ஜனநாயகவாதிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் இதை ஏற்கமாட்டார்கள். எனவே யுக்ரேனின் இந்த வேண்டுகோள் குறித்து குறைந்தது ஆறு மாதங்களாக விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. பட மூலாதாரம்,JOEL GUNTER/BBC படக்குறிப்பு, கார்கிவ் நகரில் நடந்த ஒரு கொத்துக் குண்டு தாக்குதலின் போது பாதிக்கப்பட்ட பகுதி க்ளஸ்டர் குண்டுகளை யுக்ரேனுக்கு அமெரிக்கா வழங்கினால் அதன் விளைவு என்னவாக இருக்கும்? இந்தப் போரில் தார்மீக அடிப்படையில் யுக்ரேனுக்கு உதவி வரும் அமெரிக்காவை, அந்த இடத்திலிருந்து அகற்றுவதே உடனடி விளைவாக இருக்கும். ரஷ்யாவின் போர்க்குற்றங்கள் அனைத்தும் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன, ஆனால் அமெரிக்கா யுக்ரேனுக்கு கொத்துக் குண்டுகளை அளித்தால், அமெரிக்கா மீதும் குற்றச்சாட்டுக்கள் எழும். இது ரஷ்யாவுக்கு சாதகமான ஒரு நிலையை அளிக்கும். கிளஸ்டர் வெடிமருந்துகள் ஒரு பயங்கரமான, கண்மூடித்தனமான ஆயுதங்களாக இருக்கின்றன. ஒரு நல்ல நோக்கத்திற்காக இந்த வகை குண்டுகள் உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவின் தற்போதைய முடிவு காரணமாக, க்ளஸ்டர் குண்டுகளைத் தடை செய்துள்ள மேற்கத்திய நாடுகளுடன் முரண்பாடுகள் ஏற்படும் நிலையும் உருவாகும். இந்த ஒரே காரணத்தினால் அது போல் முரண்கள் ஏற்பட்டு, அந்நாடுகளின் ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படுமானால், அது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் விருப்பதை நிறைவேற்றுவதற்கு சமம் என்பதை விட வேறு எதுவும் கூறமுடியாது. கொத்து குண்டுகளைப் பயன்படுத்தியதாக ரஷ்யா மீது ஏற்கெனவே உலக அளவிலான மனித உரிமை அமைப்புகள் குற்றம் சுமத்திவரும் நிலையில், அந்த குற்றச்சாட்டுக்கள் யுக்ரேன் மற்றும் அமெரிக்கா மீதும் சுமத்தப்படும் நிலை உருவாகும். https://www.bbc.com/tamil/articles/c4n3ddz347do
-
தமிழ்நாட்டில் உள்ள அதிகம் அறியப்படாத சுற்றுலா தளங்கள்
குற்றாலம் செல்கிறீர்களா! ஆர்ப்பரிக்கும் அருவிகள் பற்றி அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மதுரையிலிருந்து 165 கி.மீ. தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 59 கி.மீ. தொலைவிலும் குற்றாலம் அமைந்துள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 6 மணி நேரங்களுக்கு முன்னர் அரபிக் கடலுடன் இணைந்து குஜராத் முதல் கன்னியாகுமரி வரை பரந்து விரிந்து கிடக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை தமிழ்நாட்டிற்கும் கேரளாவிற்கும் ஒரு வரப் பிரசாதம் என்று சொன்னால் மிகையாகாது. அரபிக் கடலில் இருந்து வரும் குளிர்ந்த காற்று இந்த மலைகளால் தடுக்கப்பட்டு பருவமழை பொழியக் காரணமாகிறது. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழை காலத்தின்போது இந்த மலைத் தொடர்களில் அமைந்துள்ள ஏராளமான நீர் வீழ்ச்சிகளும், ஆறுகளும் நிரம்பி வழியும். அதில் முக்கியமானவை குற்றால அருவிகள். உங்கள் குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் குறைந்த செலவில் ஒரு நிறைவான சுற்றுலா செல்லத் திட்டமிடுகிறீர்கள் என்றால் உங்களுக்காகத்தான் இந்த சிறப்பு கட்டுரை. குற்றாலம் செல்வது எப்படி? படக்குறிப்பு, குற்றால நுழைவு வாயில் தென்காசி, செங்கோட்டை ரயில் நிலையங்கள் குற்றாலத்திற்கு அருகில் அமைந்துள்ளன. சென்னையிலிருந்து குற்றாலம் செல்ல விரும்புவோருக்கு எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருச்சி, மதுரை வழியாக தென்காசிக்கு பொதிகை எக்ஸ்பிரஸ், கொல்லம் எக்ஸ்பிரஸ் போன்றவை தினசரி ரயில்களாக இயக்கப்படுகின்றன. சிலம்பு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் புதன், வெள்ளி, ஞாயிற்று ஆகிய கிழமைகளில் இயக்கப்படுகிறது. கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தென்காசி மற்றும் செங்கோட்டைக்கு தினமும் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மதுரையிலிருந்து 165 கி.மீ. தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 59 கி.மீ. தொலைவிலும் குற்றாலம் அமைந்துள்ளது. இந்த மாவட்டங்களில் இருந்து தென்காசி மற்றும் செங்கோட்டைக்கு பயணிகள் ரயில்களும் அரசுப் பேருந்துகளும் தினமும் இயக்கப்படுகின்றன. படக்குறிப்பு, குற்றாலப் பேரருவி குற்றால அருவிகள் ஊரின் நுழைவுவாயிலை கடக்கும்போதே பிரமாண்டமான மேற்குத் தொடர்ச்சி மலை உங்களை வரவேற்கும். இங்குள்ள அருவிகளில் விழும் தண்ணீர், பொதிகை மலைகளில் உள்ள பல்வேறு மூலிகைச் செடிகளைக் கடந்து வருவதால், அருவி நீரிலும் மூலிகை குணங்கள் நிறைந்துள்ளதாக நம்பப்படுகிறது. இங்குள்ள ஐந்து பிரதான அருவிகளான பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலி அருவி, சிற்றருவி ஆகிய அருவிகளில் மக்கள் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். பருவமழைக் காலங்களின்போது இந்த அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளிப்பதற்குத் தடை விதிக்கப்படும். சில நிமிடங்களில்கூட இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுவிடும். எனவே இந்த அருவிகளில் குளிப்பவர்கள் காவல்துறை எச்சரிக்கை விடுத்தவுடன் அருவி பகுதியிலிருந்து வெளியேறிவிட வேண்டும். இந்த அருவிகளில் சோப்பு, ஷாம்பூ போன்றவற்றைப் பயன்படுத்தி குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. படக்குறிப்பு, பருவமழை காலத்தில் பேரருவியில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு பேரருவி பேரருவி என்று சொல்வதைவிட “மெயின் அருவி” என்று சொன்னால்தான் பலருக்கும் தெரியும். குற்றாலத்தின் முதல் பிரதான அருவியான பேரருவியின் அருகில்தான் தேவாரப் பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றான திருக்குற்றாலநாதர் கோவில் அமைந்துள்ளது. ‘குற்றால சீசன்’ என்று அழைக்கப்படும் பருவமழைக் காலங்களின்போது பிற அருவிகளைவிட பேரருவியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். 60 மீட்டர் உயரத்திலிருந்து இந்த அருவியில் தண்ணீர் விழுகிறது. இடையே உள்ள பொங்குமாக்கடல் எனும் 19 மீட்டர் ஆழமுள்ள குழி போன்ற அமைப்பில் முதலில் தண்ணீர் விழுந்து, பொங்குமாக்கடல் நிரம்பிய பிறகு தண்ணீர் குளிக்கும் பகுதியில் விழுகிறது. இந்த பொங்குமாக்கடல் என்ற அமைப்பு இல்லையென்றால், பேரருவி மக்கள் குளிப்பதற்கு ஏற்ற இடமாக இருந்திருக்காது, காரணம் அதிக உயரத்திலிருந்து தண்ணீர் விழுவதால் அழுத்தமும் அதிகமாக இருந்திருக்கும். படக்குறிப்பு, குற்றால கடை வீதிகளில் கிடைக்கும் இரம்புட்டான், மங்குஸ்தான், முட்டைப் பழம், பன்னீர் கொய்யா உள்ளிட்ட அரிய வகை பழங்கள் கடைவீதி உலா ஆசை தீர குளித்து முடித்துவிட்டு பேரருவிக்கு அருகிலுள்ள கடை வீதியில் ஒரு சிறு உலா வந்தால் தேங்காய் எண்ணெயில் பொரித்த வாழைக்காய் சிப்ஸ், சூடான ரவை அல்வா, மிளகாய் பஜ்ஜி, பாதாம் பால் எனப் பல்வேறு வகையான சிற்றுண்டிகளைச் சுவைக்கலாம். குற்றாலத்தில் கிடைக்கும் துரியன், இரம்புட்டான், மங்குஸ்தான், முட்டைப் பழம், பன்னீர் கொய்யா, ஸ்டார் பழம், பிளம்ஸ் போன்ற அரிய வகை பழங்களைச் சுவைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது. அருவிகள் மட்டும் அல்லாது இத்தகைய அரிய பழங்களுக்கும் குற்றாலம் மிகவும் பிரசித்தம். படக்குறிப்பு, புலியருவியில் ஆனந்தமாய் குளிக்கும் சுற்றுலா பயணிகள் புலியருவி குற்றாலம் பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கி.மீ. தொலைவில் பழைய குற்றால அருவிக்குச் செல்லும் சாலையில் அமைந்துள்ளது புலியருவி. மிகச் சிறிய அருவியான இது, குழந்தைகளும் பெரியவர்களும் குளிப்பதற்கு ஏற்ற அருவி எனச் சொல்லலாம். ஒரே நேரத்தில் ஐந்து அல்லது ஆறு பேருக்கு மேல் நின்று குளித்தாலே, அருவியில் நிற்க இடம் இருக்காது. அருவிக்கு முன் இருக்கும் சிறு தடாகம், குழந்தைகளுக்கான ஒரு சிறிய நீச்சல் குளம் போலக் காட்சியளிக்கிறது. பிற பிரதான அருவிகளில் தண்ணீரின் வேகமும் அழுத்தமும் அதிகமாக இருக்கும். அதை விரும்பாதவர்களுக்கு இதுபோன்ற சிறிய அருவிகளில், குறைவான உயரத்திலிருந்து விழும் மிதமான தண்ணீரில் குளிப்பது நிச்சயம் ஓர் அழகான அனுபவமாக இருக்கும். படக்குறிப்பு, பளழய குற்றால அருவியில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள் பழைய குற்றால அருவி குற்றால அருவிகளில் இந்த அருவி சற்றுத் தனித்துவமானது. இங்கு விழும் தண்ணீரின் வேகமும் அழுத்தமும் அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம். பேரருவியிலிருந்து 6 கி.மீ. தூரத்தில் உள்ள இந்த அருவிக்கு குற்றால பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நுழைவு வாயிலில் இருந்து அருவிக்குச் செல்லும் பாதை மிகவும் அழகாக இருக்கும். வாகனத்தை நிறுத்திவிட்டு படிக்கட்டுகளில் ஏறி அருவியின் அழகை ரசித்துக்கொண்டே நடந்தால், நம் மீது விழும் சாரல் மூலமாகவே தண்ணீரின் வேகத்தையும் புரிந்து கொள்ளலாம். இந்த அருவியின் பாறையில் மிகப் பெரிய படிக்கட்டுகள் போல செதுக்கப்பட்டு, அந்த ஒவ்வொரு படிக்கட்டிலும் தண்ணீர் விழுந்து பிறகு குளிக்கும் பகுதியில் விழுகிறது. முடிந்தளவு தண்ணீரின் வேகத்தை குறைக்கவே இதைச் செய்துள்ளார்கள். ஆண்களுக்கும் பெண்களுக்குமான அருவியின் இரு பிரிவுகளின் முன்பு அதிக ஆழமில்லாத சிறு தடாகங்கள் உள்ளன. அருவியின் முன்பகுதியில் குழந்தைகள் விளையாடுவதற்கென்று ஒரு சிறிய நீச்சல் குளம் கட்டப்பட்டுள்ளது. பிற அருவிகளுடன் ஒப்பிடும்போது விடுமுறை அல்லாத நாட்களில் இங்கு மக்கள் கூட்டம் சற்று குறைவாகவே இருக்கும். படக்குறிப்பு, பருவமழை காலங்களின்போது தண்ணீர் ஐந்து கிளைகளாகப் பிரிந்து விழுவது தான், ஐந்தருவி எனப் பெயர் வரக் காரணம். ஐந்தருவி வழக்கமாக ஐந்தருவிகளில் குளிப்பவர்களுக்குத் தெரியும், பிற அருவிகளின் நீரைவிட இங்கு விழும் நீரின் குளிர்ச்சி சற்று அதிகமாகவே இருக்கும். பருவமழை காலங்களின்போது தண்ணீர் ஐந்து கிளைகளாகப் பிரிந்து விழுவது தான், ஐந்தருவி எனப் பெயர் வரக் காரணம். இதில் ஆண்களுக்கு மூன்று பிரிவுகளும், பெண்களுக்கு இரண்டு பிரிவுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரே இடத்தில் பல பிரிவுகளில் குளித்து மகிழ வாய்ப்பு கிடைப்பதால் இங்கு வழக்கமாகவே மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். பேரருவியிலிருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ள இந்த அருவிக்கு குற்றால பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஐந்தருவிக்கு செல்லும் வழியில் தமிழ்நாடு சுற்றுலா துறையின் படகு குழாம் அமைந்துள்ளது. ஒவ்வோர் ஆண்டும் குற்றால சீசனுக்கும் சுற்றுலாத் துறை சார்பாக படகு சவாரி ஏற்பாடு செய்யப்படுகிறது. சிறிய படகு குழாம்தான் என்றாலும் மலைகளை ரசித்தவாறே, குற்றால சாரலில் உங்கள் குடும்பத்துடன் படகு சவாரி செய்வது ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். படக்குறிப்பு, குற்றாலத்தில் காணக் கிடைக்கும் அரிய வகை இரம்புட்டான் பழ மரம் சுற்றுச்சூழல் பூங்கா இந்த அருவிக்கு அருகிலுள்ள மற்றொரு முக்கியமான இடம், தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறையின் சார்பாக ஐந்தருவியின் மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் பூங்கா. முப்பது ஏக்கர் பரப்பளவில் இந்தப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. நீருற்றுப் பூங்கா, ரோஜா தோட்டம், வண்ணத்துப் பூச்சி தோட்டம், மரப்பாலம் எனப் பல அம்சங்கள் உள்ளன. தோட்டக்கலைத் துறையின் சார்பாக அமைக்கப்பட்டுள்ள நர்சரியில் மா, பலா, இரம்புட்டான், மலை வாழை, மங்குஸ்தான் போன்ற பழக் கன்றுகளையும், மிளகு, கிராம்பு போன்ற செடிகளையும் குறைந்த விலைக்கு வாங்கலாம். வாரத்தில் ஏழு நாட்களும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த குற்றால சுற்றுச்சூழல் பூங்காவை சுற்றுலா பயணிகள் பார்வையிடலாம். செண்பகாதேவி அருவி இந்த அருவியை அதிகமானோர் பார்த்திருக்க வாய்ப்பில்லை. சில ஆண்டுகளாகவே இங்கு செல்ல பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்படுவது இல்லை. வனத்துறையிடம் சிறப்பு அனுமதி பெற்று வனக்காவலர் ஒருவருடன் சேர்ந்து இந்த அருவிக்குச் செல்லலாம். பேரருவிக்கு மேலே அமைந்திருக்கும் மலையில் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. அருவியின் அருகே உள்ள செண்பகா தேவி அம்மன் கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கும் வனத்துறையிடமிருந்து சிறப்பு அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் இந்த அருவியில் குளிப்பதற்கு மட்டும் யாருக்கும் அனுமதி கிடையாது. படக்குறிப்பு, தண்ணீர் கொட்டும் செண்பகாதேவி அருவி பேரருவியிலிருந்து ஐந்தருவிக்கு செல்லும் சாலையில் உள்ள சிற்றருவியைக் கடந்து ஒரு காட்டுப் பாதையின் வழியாகவே இந்த அருவிக்குச் செல்ல முடியும். பார்ப்பதற்கு எளிதான பாதை போலத் தெரிந்தாலும், காட்டுயிர்களின் நடமாட்டம் இந்தப் பாதையில் அதிகமாக உள்ளது. இது அகத்திய முனிவர் நடந்து சென்ற பாதை எனவும் நம்பப்படுகிறது. செண்பகாதேவி அருவிக்குச் செல்லும் வழியில் பேரருவிக்கு நீர் செல்லும் பாதையைப் பார்க்கலாம். இவ்வாறு பாயும் நீர்தான் பொங்குமாக்கடலில் விழுந்து பிறகு மெயின் அருவியாக விழுகிறது. மழைக் காலங்களின்போது இந்தப் பாதையில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால் இங்கு செல்லும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செண்பகாதேவி அருவிப் பகுதியில் இருந்துதான் குற்றாலத்தைச் சுற்றியுள்ள ஊர்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மக்கள் நடமாட்டம் இல்லாத, நெகிழிக் குப்பைகள் இல்லாத, ஒரு தூய்மையான அழகான அருவியைக் காண விரும்பினால் செண்பகாதேவி அருவிதான் சிறந்த இடம். இதற்கு மேலே உள்ள தேனருவிக்குச் செல்ல யாருக்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை. குற்றால அருவிகளின் தனிச் சிறப்பு மற்ற சுற்றுலா தலங்கள், நீர்வீழ்ச்சிகளுக்கு இல்லாத ஒரு சிறப்பு குற்றால அருவிகளுக்கு உண்டு. இங்குள்ள அனைத்து பிரதான அருவிகளும் மக்கள் எளிதாக செல்லக்கூடிய வகையில் அமைந்துள்ளன. பருவமழை காலங்களின்போது அருவிகளில் குளித்து மகிழ உயரமான மலைகளில் ஏற வேண்டாம். ஆபத்தான காடுகளின் வழியே பயணம் செய்ய வேண்டாம். உங்கள் வாகனங்கள் மூலமாகவே அருவியை அடைந்து, சில நிமிடங்கள் நடந்தாலே குற்றாலத்து அருவிகளின் சாரலில் நனையலாம். https://www.bbc.com/tamil/articles/c72mv381jgpo
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
பொதுமக்களிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கொத்துக் குண்டுகளை உக்ரைனிற்கு வழங்குவது குறித்து ஆராய்கின்றது அமெரிக்கா- நியுயோர்க் டைம்ஸ் Published By: RAJEEBAN 07 JUL, 2023 | 09:17 AM அமெரிக்காவின் நேசநாடுகள் உட்பட பல உலக நாடுகள் தடை செய்துள்ள ஆயுதங்களை உக்ரைனிற்கு வழங்குவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் ஆராய்ந்து வருகின்றார். உக்ரைனிடம் வெடிபொருட்கள் மிகவும் குறைவாக காணப்படுவதால் அந்த நாடு பொதுமக்களிற்கு கடும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய கொத்துக்குண்டுகளை கோரியுள்ளது. கடந்த ஆறு மாதங்களாக அமெரிக்க ஜனாதிபதியும் அவரது சகாக்களும் உக்ரைன் யுத்தம் தொடர்பான மிக முக்கியமான கேள்வியுடன் போராடுகின்றனர். ரஸ்யாவுடனான போரில் உக்ரைனிற்கு மிகவும் அவசிய தேவையாகவுள்ள ஆட்டிலறி வெடிபொருட்கள் முற்றிலும் தீர்ந்துபோவதற்கு அனுமதிப்பதா அல்லது கொத்துக் குண்டுகளை வழங்குவதா என்பதே இந்த கேள்வி. தடைசெய்யப்பட்ட இந்த ஆயுதம் பொதுமக்களிற்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது- குறிப்பாக சிறுவர்களிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. வியாழக்கிழமை உக்ரைனிற்கு கொத்துக்குண்டுகளை வழங்குவது என்ற தீர்மானத்தை பைடன் எடுத்துள்ளார் போல தோன்றுகின்றது. பைடனின் இந்த நடவடிக்கை அவரது நெருங்கிய சகாக்கள் பலரிடமிருந்து அவரை தனிமைப்படுத்தலாம். அமெரிக்காவின் நட்பு நாடுகள் பல கொத்துக்குண்டுகளை பயன்படுத்துவது சேமிப்பது ஏனைய நாடுகளிற்கு வழங்குவதை தடை செய்யும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் உட்பட பைடன் நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் உக்ரைனிற்கு கொத்துக்குண்டுகளை வழங்குவது குறித்து தயக்கம் கொண்டுள்ளனர், எனினும் இது குறித்து இறுதி முடிவை எடுக்கும் பொறுப்பை அமெரிக்க ஜனாதிபதியிடம் அவர்கள் ஒப்படைத்துள்ளனர் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உக்ரைனிற்கு கொத்துக்குண்டுகளை வழங்கும் முயற்சிகளிற்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களமே பெரும் அதிருப்தியை வெளிப்படுத்திவருகின்றது -தடையாக காணப்படுகின்றது. மனிதாபிமான காரணங்களிற்காகவும்,அமெரிக்கா தனது நேசநாடுகளின் பாதையிலிருந்து விலகிச்செல்லவேண்டிய நிலையேற்படலாம் என்ற அச்சம் காரணமாகவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இதனை எதிர்க்கின்றது. ஆனால் தற்போது பைடனின் சகாக்கள் கொத்துக்குண்டுகளை வழங்குவதை தவிர வேறு வழியில்லை என கருதுகின்றனர். கொத்துக்குண்டுகளை வழங்குமாறு உக்ரைன் ஜனாதிபதி பைடனிற்கு தொடர் அழுத்தங்களை கொடுத்துவருகின்றார். கொத்துக்குண்டுகளே பதுங்குழியிலிருந்து போரிடும் ரஸ்ய படையினரை கொலை செய்வதற்கான சிறந்த ஆயுதங்கள் என உக்ரைன் ஜனாதிபதி வாதிடுகின்றார். போர்கள தேவைகளிற்கு கொத்துக்குண்டுகள் மிகவும் அவசியமானவை என்பது தற்போது 100 வீதம் உறுதியாகிவருகின்றது என அமெரிக்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/159403
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி : உண்மை, நீதி, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தக்கோரி முல்லையில் கவனயீர்ப்பு 07 JUL, 2023 | 05:33 PM "இலங்கை அரசே கொக்குத்தாடுவாய் மனிதப் புதைகுழி உண்மை, நீதி, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துக" எனும் தொனிப் பொருளில் முல்லைத்தீவு மாவட்டசெயலகத்திற்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை (07) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்த்தீவு மாவட்ட பொதுமக்கள் மற்றும், பொது அமைப்புக்கள், சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனம் என்பன இணைந்து முன்னெடுத்த இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பிரதானமாக சர்வதேச நிபுணத்துவத்தின் அடிப்படையில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் அகழ்வுப்பணிகள் இடம்பெறவேண்டும் என்பதனை வலியுறுத்தியிருந்தனர். அதேவேளை இலங்கை அரசே உன்கையில் ஒப்படைத்த உறவுகள் எங்கே, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிவேண்டும், கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வில் கண்காணிப்பு வேண்டும், உள்ளிட்ட பதாதைகளைத் தாங்கியவாறும் கோசங்கைளை எழுப்பியும் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர். மேலும் இவ்வார்ப்பாட்டத்தில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் இ.சத்தியசீலன், சமூகசெயற்பாட்டாளர் அன்ரனி ஜெயநாதன் பீற்றர்இளஞ்செழியன், சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தினர், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/159472
-
சமுர்த்தி, ஏனைய நலன்புரி நன்மைகளைப் பெற மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு அறிவிப்பு
அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் புதிய தகவல் ! சிறுநீரக நோயாளர்கள், விசேட தேவையுடையோர் மற்றும் முதியோர்களுக்கான கொடுப்பனவுகளை நடைமுறையில் உள்ள முறைமையின்கீழ் தொடர்ச்சியாக வழங்க ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். புதிய அடிப்படை விதிகள் அறிமுகப்படுத்தப்படும் வரையில் இந்த முறைமை நடைமுறையில் இருக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், நிலைமாறக்கூடிய, பாதிப்புக்குள்ளான, வறிய மற்றும் மிகவும் வறிய முதலான நான்கு சமூகக் குழு வகைப்படுத்தல்களின் கீழ் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை வழங்கும் முறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் எதிர்வரும் 10 ஆம் திகதி வரையில் மேன்முறையீடுகளை மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரையில், 7 இலட்சத்து 60 ஆயிரத்துக்கும் அதிகமான மேன்முறையீடுகளும், சுமார் 10 ஆயிரம் ஆட்சேபனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://thinakkural.lk/article/261887
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி : உண்மை, நீதி, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தக்கோரி முல்லையில் போராட்டம் ! 07 JUL, 2023 | 09:15 AM விஜயரத்தினம் சரவணன் இலங்கை அரசே கொக்குத்தாடுவாய் மனிதப் புதைகுழி உண்மை, நீதி, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துக" எனும் தொனிப் பொருளில் முல்லைத்தீவு மாவட்டசெயலகத்திற்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை காலை 10.00மணியளவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது. இவ்வார்ப்பாட்டத்தினை முல்லைத்த்தீவுமாவட்ட பொதுமக்கள் மற்றும், பொது அமைப்புக்கள் என்பன இணைந்து முன்னெடுக்கவுள்ளன. எனவே குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு அனைவரையும் வருமாறு முல்லைத்தீவு மாவட்ட பொதுமக்கள் மற்றும், பொது அமைப்புகள் அழைப்புவிடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/159402
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
வாக்னர் குழுவின் தலைவர் ரஸ்யாவில் - பெலாரஸ் ஜனாதிபதி Published By: RAJEEBAN 06 JUL, 2023 | 02:41 PM வாக்னர் குழுவின் தலைவர் ரஸ்யாவிலேயே உள்ளார் என பெலாரஸின் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகங்களுடனான கருத்துப்பகிர்வின்போது சிஎன்என்னிற்கு பெலாரஸ் ஜனாதிபதி அலக்ஸாண்டர் லுகன்ஸ்கோ இதனை தெரிவித்துள்ளார். யெவ்ஜெனி பிரிகோசினை பொறுத்தவரை அவர் சென்பீட்டர்ஸ்பேர்க்கில் உள்ளார். இன்று காலை அவர் மொஸ்கோவிற்கோ அல்லது வேறு எங்கோ செல்லக்கூடும் என பெலாரஸ் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் பெலாரஸில் இல்லை என லுகன்ஸ்கோ தெரிவித்துள்ளார். வாக்னர் குழுவினர் எங்குள்ளனர் என்பது குறித்து என்னிடம் கேள்வி எழுப்பக்கூடாது, ஏன் என்றால் அது ரஸ்ய நிறுவனம் அவர்கள் தங்கள் முகாம்களிலேயே உள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/159358
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
ஆச்சி ஒரு வடைப் பிரியை போல!
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
முல்லைத்தீவில் தோண்டப்படும் மனித புதைகுழி - கிடைத்தது விடுதலை புலிகளின் எச்சங்களா? ராணுவம் என்ன சொல்கிறது? கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியைத் தோண்டும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகின. முல்லைத்தீவு நீதவான்(நீதிபதி) முன்னிலையில் இன்று முற்பகல் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியில் குடிநீர் குழாய் பொருத்தும் நடவடிக்கைகளுக்காக கடந்த 29ஆம் தேதியன்று ஒரு குழி தோண்டப்பட்டுள்ளது. குறித்த இடத்தில் மனித எச்சங்கள் மாத்திரமன்றி, ஆடைகள் சிலவற்றையும் காணக்கூடியதாக இருந்தது என அந்த இடத்திலிருந்தவர்கள் கூறினர். வீதியோரத்தில் தோண்டப்பட்ட குழியிலிருந்து மனித எச்சங்கள், பெண்களின் ஆடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆடைகளில் பெண்களின் உள்ளாடைகள், விடுதலைப் புலிகளின் சீருடையை ஒத்த உடைகள் காணப்பட்டதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். இதையடுத்து, இன்று குறித்த பகுதி தோண்டப்பட்டதுடன், அதிலிருந்த எலும்பு எச்சங்களும் ஆடைகளும் மீட்கப்பட்டு வருகின்றன. அந்த எச்சங்கள் மூலம் என்ன தெரிய வந்துள்ளது? ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசத்தில் புதைகுழி எப்படி வந்தது? குறித்த மனித எச்சங்கள் மற்றும் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கு சொந்தமானதாக இருக்கலாம் என சந்தேகம் எழுப்பப்பட்டது. பாதுகாப்பு பிரிவினர், ரசாயன பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள், மருத்துவர்கள், சட்டத்தரணிகள், நிலஅளவை திணைக்கள அதிகாரிகள், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், நீர் வழங்கல் திணைக்கள அதிகாரிகள், தொலைபேசி நிறுவன அதிகாரிகள், மின்சார சபை ஊழியர்கள் எனப் பலரும் இந்த இடத்திற்கு இன்று வந்திருந்தனர். புதைகுழி கண்டறியப்பட்ட நேரத்தில் அங்கு நேரில் கண்டது குறித்து நம்மிடம் வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் விவரித்தபோது, "அந்த இடத்தில் ஒன்று இரண்டு பேர் இல்லை. அதற்கும் கூடுதலானோரின் எலும்பு எச்சங்கள் காணப்படுவதாக" கூறினார். படக்குறிப்பு, மனித எச்சங்கள் மற்றும் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினருக்குச் சொந்தமானதாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்படுகின்றது. "ஆடைகள், பெண்களின் உள்ளாடைகள் காணப்பட்டதை அவதானித்து, மக்கள் கவலையடைந்திருந்தார்கள். அது விடுதலைப் புலிகளுடையது என்ற உறுதிப்பாட்டுடன் இருக்கின்றோம். இறுதி யுத்தத்தின்போது 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் வட்டுவால் பகுதியில் சரணடைந்த ஆட்களாக இருக்கலாம் எனச் சந்தேகம் உள்ளது," எனவும் தெரிவிக்கின்றார் துரைராசா ரவிகரன். இன்று, புதைகுழி அகழ்வு நடந்த இடத்திற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் வருகை தந்திருந்தது அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இறுதிக்கட்ட யுத்தம் முடிவடைந்த சந்தர்ப்பத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தனது கணவரைப் பல ஆண்டுகளாகத் தேடி வரும் மரியசுரேஷ் ஈஸ்வரி பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார். ''தொடர்ந்து 14 ஆண்டுகளாகத் தேடிக் கொண்டிருக்கிறோம். ராணுவத்திடமும் இந்த அரசிடமும் நம்பி ஒப்படைத்த எமது உறவுகள் வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டார்கள். ஆனால் அவர்கள் இன்று வரை கிடைக்கவில்லை. இந்நிலையில், இந்தப் புதைகுழி மனதில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புதைகுழியில் பெண் போராளிகளின் சீருடைகள் கிடைத்ததாகக் கூறுகிறார்கள். இந்தப் பிரதேசம் 24 ஆண்டுகளாக மக்கள் நடமாட்டமின்றிக் காணப்பட்டது. அப்படியிருக்க, இந்தப் புதைகுழி எப்படி வந்தது என்பது சந்தேகத்திற்குரிய விஷயம்," என்கிறார் மரியசுரேஷ் ஈஸ்வரி. ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தப் பிரதேசத்தில் இந்தப் புதைகுழி எப்படி வந்தது, என்ற கேள்விகளோடு இன்று இந்த இடத்திற்கு வந்திருப்பதாகவும் அவர் கூறுகிறார். "இறுதி யுத்தத்தில் வட்டுவாலில் ஏற்றப்பட்ட எமது உறவுகளோடு பின்னர் எந்தத் தொடர்புகளும் இல்லை. எங்கு கொண்டு போனார்கள் என்றும் தெரியவில்லை. அரசாங்கத்தின் எந்தப் பதிலும் தெளிவுபடுத்தவில்லை," என்று தனது கணவரை தேடும் மரியசுரேஷ் ஈஸ்வரி தெரிவித்தார். ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசம் இறுதி யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் கட்டப்பட்டுள்ள பெரிய விஹாரைகளுக்குக் கீழேயும் உடல்கள் இருக்கக்கூடும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவிக்கின்றார். கடந்த 2009ஆம் ஆண்டு ராணுவத்திடம் சரணடைந்த ஆட்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்றைக்கும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்று கூறுகிறார் துரைராசா ரவிகரன். இந்தப் புதைகுழி வெளியே தெரிய வந்த நேரத்தில் நேரில் பார்த்ததை விவரித்தபோது, விடுதலைப் புலிகளின் ஆடைகள் என்பது தம்மால் உறுதிப்படுத்தக்கூடியதாக இருந்ததாக ரவிகரன் குறிப்பிட்டார். "விடுதலைப் புலிகளின் ஆடை என்பதை என்னால் உறுதிப்படுத்தக் கூடியதாக இருந்தது. பச்சை நிற உடுப்பு. ராணுவ ஆடையிலிருந்து வேறுபட்டதாக உள்ளது. பெண்களின் ஆடைகளும் காணப்பட்டன. குறிப்பாக பெண்களின் உள்ளாடைகள் காணப்பட்டன," என்றும் அவர் விளக்கினார். தற்போது நடந்துவரும் அகழ்வில் கிடைத்துள்ள எச்சங்கள் குறித்துப் பேசியவர், ''இந்த பிரதேசமானது 1984ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை சூனிய பிரதேசமாக(இந்தக் காலகட்டத்தில் மக்கள் அந்தப் பகுதிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. ராணுவம் மாத்திரமே பயன்படுத்தியது) ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. கடந்த 2009ஆம் ஆண்டு சரணடைந்தவர்களை இந்த இடத்திற்குக் கொண்டு வந்து, கொன்று விட்டு, அல்லது அடித்து விட்டு புதைகுழி வெட்டிப் புதைத்துள்ளனர்," என்று அவர் குற்றம் சாட்டுகிறார். ஏனென்றால், இந்த இடத்தில் அப்போது மக்கள் இருக்கவில்லை. ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. இறுதி யுத்தம் இடம்பெற்ற இடங்களில் மக்கள் சரணடைந்த பகுதிகளில் கட்டப்பட்டுள்ள விஹாரைகளின் கீழும் சடலங்கள் இருக்கக்கூடும் என்ற அச்சத்தை அவர் வெளிப்படுத்துகிறார். "வட்டுவால் பகுதியில் பெரிய விஹாரை கட்டப்பட்டுள்ளது. அதேபோல கேப்பாபிலவு பகுதியில் பெரிய விஹாரை கட்டப்பட்டுள்ளது. இந்த பெரிய விஹாரைகளின் கீழ் ஏன் சடலங்கள் இருக்க முடியாது என்ற ஐயப்பாடு இந்த மக்கள் மத்தியில் தற்போது தோன்றுகின்றது. உடல்களைப் புதைத்து, அதற்கு மேல் விஹாரைகளை கட்டியிருக்கலாம்," என்ற ஐயப்பாடு காணப்படுவதாக அவர் கூறுகிறார். சர்வதேச நியதிகள் பின்பற்றப்படவில்லையா? இந்த மனித புதைகுழி சர்வதேச நியதிகளுக்கு அமைவாகத் தோண்டப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார். ''இந்த அகழ்வுகள் குறித்த முறைப்படி செய்யப்படுவதாகத் தெரியவில்லை. சர்வதேச ரீதியில் இது எப்படி செய்யப்பட வேண்டும் என்ற பல நியதிகள் காணப்படுகின்றன. அது பின்பற்றப்படுவதாகத் தெரியவில்லை. மருத்துவர் இருக்கின்றார், ஒரு குழியை தோண்டி ஒரு சடலத்தை எடுத்து செய்கின்ற பரிசோதனைகளிலும், இவ்வாறான மனித புதைகுழியைத் தோண்டிச் செய்கின்ற பரிசோதனைகளிலும் வித்தியாசம் காணப்படுகின்றது. சர்வதேச நியதிகள் பின்பற்றப்படுவதில்லை," என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார். இவ்வாறான சாட்சியங்கள் வருகின்றபோது, அது சர்வதேச நியமங்களுக்கு அமைய விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார். பட மூலாதாரம்,SRI LANKA ARMY இலங்கை ராணுவத்தின் மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுகள் குறித்து பிபிசி தமிழ், ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத்திடம் வினவியது. ''எம்மால் அப்படிக் கூற முடியாது. ஏனெனில், அதை உறுதிப்படுத்தும் சாட்சியங்கள் இல்லை. மக்கள் குற்றம் சுமத்துவதில் அர்த்தம் கிடையாது. யுத்தத்தின்போது உயிரிழந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் மாத்திரம் அல்ல, ராணுவத்தினரின் உடல்களும் தற்போது கிடைக்கின்றன," என்கிறார் அவர். மேலும், சரியான விசாரணைகள் மற்றும் ஆய்வுகளுக்குப் பிறகே இது எந்த காலப்பகுதியைச் சேர்ந்த எச்சங்கள் என்பதைக் கூற முடியும் என்றார் பிரிகேடியர் ரவி ஹேரத். அடுத்ததாக, "இது மனித எலும்பு எச்சங்களா என்பதைத் தெளிவுப்படுத்திக் கொள்ளவேண்டும். விசாரணைகளுக்குப் பிறகே சரியான தீர்மானத்திற்கு வர முடியும்," என ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவிக்கின்றார். https://www.bbc.com/tamil/articles/c72v251ln27o