Everything posted by putthan
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
உண்மை ...இதை வெற்றியடைய பண்ண பல முயற்சிகள் நடைபெறுகிறது .... குட்டிமணி இவரின்ட தலைவருக்கு (தோழர் எண்டு சொல்ல வேணும் கண்டியளோ ) தோழர் ரோகண விஜய வீராவுக்கு உடுக்க தன்னுடைய சாரத்தை கிழித்து கொடுத்தவராம் என பாடுகிற யூ டியுப் தோழர்களும் உண்டு....
-
முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் தேடி அகழ்வுப் பணி
இதை விடபெரிய தோண்டல் எல்லாம் இருக்கு ஏன் இப்ப இதை அந்தரப்பட்டு தோண்டுகிரார்.... ஈஸ்டர் குண்டு தாக்குதல் விசாரணை தொடங்கிய படியால் ....இதையும்தொடங்குகின்றார் போல...
-
மதுபான சாலை இருப்பதை நிரூபித்தால் விலகிக் கொள்வேன்! - செல்வம் அடைக்கலநாதன்
நீண்ட நாள் யாழ் கள வாசகர் என்ற முறையில் உங்கள் ஆதங்கம் புரிகின்றது...நீங்கள் கூறுவதுதான் உண்மையும்...
-
தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி
புலிகளினால் மாமனிதர் பட்டம் பெற்ற ஒருவரின் மனைவி தேர்தல் களத்திலா? அதுவும் சிறிலங்கா தேசியத்தை விரும்பும் சுமத்திரனை எதிர்த்தா ?பொங்கி எழுங்கள் சிறிலங்கா தேசியவாதிகளே....கிளறுங்கள் அவரது பழைய சரித்திரத்தை....
-
ஜே.வி.பி.தமிழ் மக்களின் இனப் பிரச்சினையை தீர்த்து விடும் என்கிற நம்பிக்கை எனக்கில்லை ; ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்!
மீண்டும் பழையபடி ஆரம்பத்திலிருந்தா .....ஐயோ சாமி ஆளைவிடுங்கோ..... தப்பி தவறி நடக்கவிடாமல் தடுக்க சிங்களவர்களில் அதிகபேர் இருக்கினம் ..சிங்கள் ஒட்டுண்ணிகளும்,ஆய்வாளர்களும் ,பட்டாசுகோஸ்டிகளும்,வெசாக் வெளிச்சவீட்டு கோஸ்டிகளும் தாராளமாக இருக்கினம்.....ஆகவே என்னை போன்ற தமிழ் கோஸ்டிகளின் காட்டில மழை தான் 😅
-
இஸ்ரேல்-காசா போர்; ஒரு வருடத்தில் உருத்தெரியாமல் அழிந்த சோகம்
ஈரானின் புரொக்சியாக செயல் பட்ட கமாஸ் இயக்கம் அபிவிருத்தி செய்ததாம் ...ஈரானிடமிருந்து வரும் பணத்தில் நிலக்கீழ் சுரங்கங்களை கட்டி பயங்கரவாத செயல்களில் இடுபட்டவையள் அபிவிருத்தியை பற்றி பேசுகின்றனர் ... இஸ்லாமிய பத்திரிகையாளர் கமாஸுக்காக கட்டுரை எழுதியுள்ளார் ...
-
தமிழரசுக்கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் துறக்கிறார் மாவை!
யூ டியுப்பில் போடுவார் நாங்கள் பார்க்கலாம் ,கேட் கலாம்
- பார் பெர்மிற் – நிலாந்தன்
-
தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புக்கள் தொடர்பிலும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவின் அதிரடி முடிவு
வரிசையில் நிற்க வேண்டிய நிலை வரலாம் ...இடதுசாரி கொள்கை சிறிலங்காவில் நிலைத்து நிற்குமோ தெரியவில்லை ...காலம் பதில் சொல்லட்டும்... காவடி தூக்காத தமிழர்களும் இருக்க தான் செய்வார்கள் ...52 வருட போராட்டத்தின் பின் இடதுசாரி ஆட்சிக்கு வந்துள்ளனர் அவர்களும் வலதுபாதி இடதுபாதி சேர்ந்த கவையாக தான் ஆட்சி செய்ய வேண்டி வரும்
-
தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புக்கள் தொடர்பிலும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவின் அதிரடி முடிவு
உண்மை ....தமிழனை வைத்தே தமிழ் தேசியத்தை அழிக்க முயல்கின்றனர் ....... ஜெ.வி.பி க்கு பின் சென்று எமது அடையாளங்களை இழந்த பின்பு ஜெ.வி.பி யினரை தோற்கடிக்க சிங்கள வலதுசாரி இனவாதிகள் என்ன செய்வார்கள் என தெரியவில்லை... மீண்டும் வலதுசாரிகள் ஆட்சிக்கு வந்தால்...எம் இனத்தின் இருப்பு கேள்விக்குறி தான் ... ஜெ.வி.பி யினர் எந்த வித சட்டபூர்வமான அங்கிகாரமும் எமக்கு தரப்போவதில்லை என தெரிகிறது
-
தமிழரசுக்கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் துறக்கிறார் மாவை!
உறுப்பினராக இருப்பது சரி ....இனியாவது சும்மா இருக்காமல் நீங்கள் இளமைக்காலத்தில் தமிழ்தேசியத்திற்கு செய்த நல்ல விடயங்களை சொல்லி இளைஞர்களை தமிழ்தேசிய அரசியல் மயப்படுத்துங்கள்...பதவி இல்லாமல் செயல் படுவது இலகுவான காரியம்...
-
தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புக்கள் தொடர்பிலும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவின் அதிரடி முடிவு
2010 க்கு தமிழ் தேசியபரப்பு செயல்பாட்டாளர்கள் தங்கள் பதவிகள் நிரந்தரமானது என்ற நினைப்பில் இளைஞ சமுதாயத்தை கண்டு கொள்ளாமல் விட்டதின் விளைவு இன்று அந்த இளைய சமுதாயம் முக்கியமாக பல்கலைகழக இளைய சமுதாயத்தை கண்டுகொள்ளவில்லை...அந்த வெற்றிடத்தை யாழ் பல்கலைகழகத்தில் ஜெ.வி.பி நன்றாக பயன்படுத்தியுள்ளனர்...ஜெ,வி,பி யினர் சித்தாந்த/கொள்கை வகுப்புக்களை எடுத்துள்ளனர் ..இது எமது போராட்ட காலத்தில் 77களில் பின் நடந்த விடயங்கள். 2010 க்கு பின்பு சிங்கள இளைஞர்களின் வரவு அதிகமானது அவர்களுடன் ஜெ.வி,பி கொள்கையும் உள்வர தொடங்கிவிட்டது. எமது போராட்டம் மெளனிக்கப்பட்ட பின் எமது அரசியல் போராட்டத்தை இளைஞர்கள் மத்தியில் எடுத்து செல்லாமல் விட்டது எமது பிழை ..அந்த வெற்றிடத்தை ஜெ.வி.பி நன்றாக பயன்படுத்தியுள்ளனர்... மருத்துவர் அருள் சொல்கின்றார் தான் 2016 யாழ் மருத்துவ பீடத்திற்கு சென்றராம் ,ஜெ.வி.பியினரின் வகுப்புக்களுக்கு சென்று அந்த கொள்கைகள் தனக்கு பிடித்தமையால் முழுநேர அரசியல் செயல் பாட்டில் இறங்கி விட்டாராம்...
-
தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புக்கள் தொடர்பிலும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவின் அதிரடி முடிவு
அதே கொள்கையை தான் ஜெ.வி.பி யினர் தமிழர் விடயத்தில் விரும்புகின்றனர்...ஜெ.வி.பியின் யாழ் பிராந்திய செயல் பாட்டாளர் மருத்துவர் அருள் இள்ங்கோவன் ஒர் பேட்டியில் சொல்கின்றார் மாகாணசபை தேர்தலை அடுத்த வ்ருடம் நடத்தி அதன் பின்பு 13 ஆம் திருத்தசட்டத்தை அகற்ற முயற்சிப்பார்களாம்...காரணம் அது வெளிநாட்டின் உதவியுடன் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட விடயமாம்...
-
நம்ம அணுரா அலையும் கொமேனி அலையும்
அண்மையில் ஒர் வீடியோ பார்த்தேன் ....மதவாதி ஒருவர் நாட்டில் தனது கொள்கைகளை எப்படி பரப்பி இன்று அது உலகத்துக்கே சவாலாக உள்ளது...இதை பார்க்கும் பொழுது சித்தாந்தவாதிகளும் ஒர் நீண்ட திட்டத்துடன் தான் உள்ளே வருவார்கள் பறகு ....அவர்களின் சித்தாந்தத்தை பரப்ப இப்படி செயல் படுவார்கள் என்ற கேள்வி எழுந்தது.... அணுராவின் தூர நோக்கு.....சிங்கள மக்களுக்கு நன்மை பயக்குமா
-
விண்ணைத் தொடும் தேங்காய் விலை
யூ டியுப் போராளிகளே உடனே கிளிப் தாயரித்து அணுராவுக்கு அனுப்புங்கோ,,,,இது தான் தேங்காய் தமிழ்தேசியவாதிகள் தான் காரணம் இந்த தேங்காய் விலை உயர்வுக்கு
-
இந்தியா வழங்கும் பாரியளவு நிதியில் விஸ்தரிக்கப்படவுள்ள காங்கேசன்துறை துறைமுகம்
கட்டுங்கோ கட்டுங்கோ வருமானம் வர முதல் உங்களை வெளியேற்றுவார்கள் சிங்கள ஆட்சியாளர்கள் ....போர் என்று வந்தால் நீங்கள் கட்டிகொடுத்த துறைமுகத்திலிருந்து உங்கள் நாட்டை தாக்க சீனாவுக்கு முன்னுரிமை கொடுப்பார்கள்...
-
அநுரா குமார திசாநாயக்க; இலங்கை வானில் 'இடதுசாரி' நட்சத்திரம்
ஆஹா ஆஹா ....கட்டுரையாளர் ஆட்டைக்கடித்து மாட்டைகடித்து ஜெ.வி.பி...நற்சான்றிதழ் வழங்கின்றார்....இந்த 83 இனக்கலவரத்திற்கு முக்கிய பங்கு அவர்களுக்கும் உண்டு....உயிர்களுக்கு சேதம் விளைவிக்கவில்லை ஆனால் உடமைகள் ,வியாபார ஸ்தாபனங்கள் ...மற்றும் இந்திய வியாபார கொம்பனிகள் போன்றவற்றை திட்டமிட்டு அழித்த பெருமை ஜெ.வி.பி இனருக்கு உண்டு
-
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முதலாவது வெளிநாட்டு பயணமாக இந்தியா செல்வார் என தகவல்
அனுமான்+ராமன் = அனுரா பாரத்தின் எல்லை காவலன் நீங்கள் ....இராவண வம்சத்தை லங்காபுரியிலிருந்து அழித்த அழிக்க துணை போகும் உங்களுக்கு எனது பாத நமஸ்காரம் என காலில் விழுந்து இருப்பார்....அனுமானும் ராமரும் சேர்ந்த கலவை நீங்கள் ...அனுரா பகவானுக்கு ஜெ...லங்கா மாதாவுக்கு ஜெ...
-
13வது திருத்தம் - மீனவர்கள் விவகாரம் குறித்து இலங்கை ஜனாதிபதியுடன் ஜெய்சங்கர் பேச்சு – இந்திய வெளிவிவகார அமைச்சு
உண்மை ...தமிழ் தேசியத்தை தொடர்ந்து அழிப்பதில் ஜெ.வி.பினர் காய்களை நகர்த்துகின்றது...இனவாதம் பேசி தமிழ் தேசியத்தை அழித்தார்கள் ...இப்பொழுது ஊழல் ஊழல் என சொல்லி தமிழ் தேசியத்தை அழிக்கின்றனர்
-
13வது திருத்தம் - மீனவர்கள் விவகாரம் குறித்து இலங்கை ஜனாதிபதியுடன் ஜெய்சங்கர் பேச்சு – இந்திய வெளிவிவகார அமைச்சு
இந்த இரண்டையும் வைத்து உங்கன்ட ராஜதந்திர நகர்வுகளை(கொள்கை வகுப்புக்கள்) எவ்வளவு காலத்துக்கு செய்யப்போறீயல்...இவ்வளவு காலமும் வலதுசாரிகள் இருந்திச்சினம் இப்ப இடதுசாரிகள் வந்திருக்கினம் கொஞ்சம் நீங்களும் மாறுங்கோ... அதுகளை பற்றி இவருக்கு தெரியுமோ ....சிறிலங்காவுக்கு வரும் சகல இந்தியா ராஜத்ந்திரிகளுக்கு இந்த இரணடையும் பற்றி கதையுங்கோ ஆனால் அதை நடைமுறை படுத்துவது பற்றி முயற்சிக்க கூடாது என கல்வெட்டில் எழுதி வைச்சிருக்கினம் போல ...
-
சிறீதரன் தொடர்பாக திடீரென பரவிய அவதூறு தகவல்: விசாரணையில் வெளிவந்த உண்மை.
அனுராவின் வெற்றியில் சமுக ஊடகங்கள் முக்கிய பங்காற்றியுள்ளது,அரகலய போராட்டம் வெற்றியடைய இந்த யூப்டியுப் போராளிகள் முக்கிய பங்கு வகித்துள்ளார்கள்...சில தமிழ் யூ டியுப் போராளிகள் தற்பொழுது தமிழ் தேசியத்தை கொச்சைப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகின்றனர் ...பின்பு ஊழல் பற்றி பேசுகின்றனர்... லணடனிலிருந்தும் ஒர் யூ டியுப்பர் செயல்படுகிறார் போல தெரிகின்றது ... அரச அதிகாரிகளின் கடமை யாருக்கு பார் பெர்மிட் கொடுக்க வேணும் என விசாரிப்பது...
-
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முதலாவது வெளிநாட்டு பயணமாக இந்தியா செல்வார் என தகவல்
ஜெய்சங்கர் வந்து காலில் விழுந்திருப்பாரோ? நீங்கள் முதலில் எங்கன்ட நாட்டுக்கு வாங்கோ..இது எங்கன்ட மானப்பிரச்சனை தயவு செய்து சீனாவுக்கு சென்று எங்களிடம் உள்ள கொஞ்ச மான்த்தை கெடுத்து போடாதையுங்கோ என்று கேட்டிருப்பார்
-
மதுபான நிலைய அனுமதிப்பத்திர விவகாரத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் பெயர்களை அரசாங்கம் வெளியிடவேண்டும் - சுமந்திரன்
அவரின் குருவை தான்
-
பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ள கருணா அம்மான்
அப்படி சேர்க்காவிடில் அனுராவுக்கு இரண்டு புள்ளிகள் அதிகமாக கொடுக்கலாம்
-
மக்கள் விருப்பப்படி பொதுத்தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி ஆற்றல் மிக்க புதுமுகங்களைக் களமிறக்கவேண்டும் - சுமந்திரன்
வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் போட்டியிடுவது பற்றி சொல்லியிருக்கின்றீர்கள்... நீங்கள் கொழும்பில் போட்டியிடுவது சிறப்பாக இருக்கும் சிறிலங்கா தேசியத்தை கட்டியெழுப்ப அது தான் சிறந்த வழி ...தமிழரசுக்கட்சியில் போட்டியிடுங்கள்....ஏனைய தமிழ்தேசிய கட்சிகளுடன் கூட்டு சேர வேண்டாம் ...காரணம் அவர்களின் கட்சி பெயரில் "தமிழ் தேசியம்" உண்டு...தமிழ் தேசியம் சோசலிஸ்ட் தோழர்களுக்கு பிடிக்காது