Everything posted by putthan
-
எமது தரப்பில் ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்குவோம் - மஹிந்த ராஜபக்ஷ
டாம் .டும் .......பொட்டாக் தன்னத்த ...
-
உலக வங்கியின் விசேட அறிவிப்பு!
சொர்க்கபுரியில் சொல்ல வேண்டிய புரிதலும் உண்டு , சொல்ல வேண்டாத புரிதலும் உண்டு... இராணுவ ஆய்வாளர்கள் அதிகமாக சொல்வார்கள் ஒர் விமானதாங்கி கப்பலை பராமரிப்பதை விட பல மடங்கு இலாபகரமானதாம் ஒர் தீவை தமது பூரண கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பது...அதிலும் பல கப்பல் துறைமுகங்களை கொண்ட தீவு சிறப்பாம் ....200 வருடங்களுக்கு மேலாக ஆக்கிரமித்து இருக்கும் ஒர் கூட்டத்திடமிருந்து இந்த தீவு சொர்க்காபுரியாக வருவது என்பது இலகுவான விடயமே ...அதில வேற இந்த கூட்டத்திடம் அடிமையாக இருந்த சில கூட்டங்கள் இப்ப சண்டித்தனம் பண்ண வெளிக்கிட்டுதுகள்.... உலக வங்கிக்கே செக் வைக்கிற அளவுக்கு முன்னாள் அடிமைகள் உசாராக இருக்கிறாங்கள் ...
-
தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
கண்ணை மூடிக்கொண்டு பூனை பால் குடிக்கும் பொழுது உலகம் இருட்டு என் நினைக்குமாம் .... அதுபோல சுமத்திரன் விளக்கம் கொடுக்கிறாராம் அதை நாங்கள் நம்ப வேணுமாம்... மற்றவருக்கு(அனுராவுக்கு) இந்த மொழிவாரியான மாகாண அமைப்பு நல்லது என்ற விடயம் தெரியாது என காதில பூ வேற.அவர் சார்ந்த இடதுசாரி பிதாமக்களின் கொள்கையே சிறுபான்மை மக்களின் அடையாளங்கள் காப்பாற்ற பட வேணும் என்பது தானே....போற போகை பார்த்தால் ...இலங்கை கம்னியுஸ்ட் கட்சி தோழர் சண்க்கு,பாலாவுக்கு எல்லா பாடம் எடுத்தவர் என அறிக்கை விட்டாலும் விடுவார். அரசியல் சாணாக்கியம் ....83 ஆம் ஆண்டு திட்டமிட்டு இன கலவரம் செய்த கோஸ்டிகள் இப்ப அரசியல் பாடம் எடுக்கினம் ...அன்றைய யு.என்.பி கட்சியை பலவீன படுத்த அவர்கள் இதை செய்தார்கள்....தங்களது கொள்கையை நிலை நாட்ட எதுவும் செய்வார்கள் இது மற்றுமோர் உதாரணம்
-
யாழ். அனலைதீவில் இந்திய மின் உற்பத்தி நிறுவனம் வேலைகளை ஆரம்பித்தது
தனியார் நிறுவனம் என்ற காரணத்தால் அமைச்சர்கள்,எம்பிக்கள் வரவில்லை போல் இருக்கு ....சீனாக்காரன் வந்தா தான் அவ்ர்கள் வருவினம் போல...
-
ஏப்ரல் 18ஆம் திகதி இலங்கையில் ‘முருங்கை தினம்’!
இவர் இப்ப தான் பாக்கியராஜ் இன் படம் பார்க்கின்றார் போல் ....நாங்கள் (ஜாவ்னா மக்கள்)இவையள் பிறக்க முதலே வீட்டில இரண்டு மூன்று மரம் வைத்து முருங்கை இலை வறை,சொதி,என சாப்பிட்டு வந்த ஆட்கள்
-
முஸ்லிம்களிடம் அரசு முறையாக மன்னிப்புக்கோரும் விதத்திலான அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்படும் – அமைச்சர் ஜீவன்
தேர்தல் வருகிறது முஸ்லீம்,மற்றும் கிறிஸ்தவ வாக்குகள் தேவைப்படுகிறது ,சிங்கள அமைச்சர் சொல்ல வில்லை தமிழ் அமைச்சர் தான் சொல்கின்றார்
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
அப்படி நாங்கள் நினைக்கிகிறோம்....ஆனால் அவர்கள் எங்கள் நிலங்களை ஆக்கிரமித்து தங்கள் ஐக்கிய இலங்கை என்ற இலட்சியத்துக்காக உயிர் நீத்தார்கள் .... இன்று அதே சமுகத்தினர் இரு வேறு நாட்டுக்காக எதிர் எதிராக ஆயுதம் ஏந்தி போரிடுகிறார்கள்..மிகவும் வருந்த வேண்டிய விடயம்... உசுப்பேத்திய சிங்கள தலைவர்கள் ஆடம்பர வாழ்க்கை ....மீண்டும் ஜனாதிபதியாக வர துள்ளுகின்றனர் ...இந்த இளைஞர்களுக்கு எதுவும் செய்யவில்லை அரசாங்கத்தை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.... 35000 ரூபாவுக்கு வேலை செய்கின்றனர் என்றால் இவர்களை புலிகள் தங்கள் படையணியில் சேர்த்து இருந்திருக்கலாம்😁
-
வடமாகாண இப்தார் நிகழ்வு ஒஸ்மானியாக் கல்லூரியில்!!
எங்களுக்கு ஒர் நல்ல குணம் இருக்கு ...மற்றவனின்ட பாசையில் பேசி மற்றவர்களை மகிழ்வித்து....எங்களுக்கு உங்கன்ட பாசையும் தெரியும் என்று சொல்லி அவையளை குசிப்படுத்தும் செயல்...
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு இந்தியாவே காரணம் என குற்றம் சாட்டிய சிறிசேன
https://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/மூவரையும்-கைது-செய்தால்-உண்மை-வெளிவரும்/73-335493 வாய் திறந்திருக்கிறார்
-
வடமாகாண இப்தார் நிகழ்வு ஒஸ்மானியாக் கல்லூரியில்!!
இத் முபாராக்
-
வடக்கு ரயில் மார்க்கத்தை ஜனவரி முதல் மூட நடவடிக்கை
வெள்ளைக்காரன் போட்ட பாதையில் கிட்ட தட்ட 30 வருடங்களுக்கு மேலாக எந்த வித புனரமைப்பு வேலைகளும் இல்லாமல் மெயில் வண்டி,யாழ்தேவி என எந்த தடைகளுமின்றி போய் வந்தோம்....ஆனால் இன்று இந்தியா போடும் ரயில் பாதை இரண்டு வருடத்திற்கு ஒருக்கா 6 மாதங்கள் மூடப்படுகிறது ...முக்கியமாக வட பகுதி பாதைகள் ... இது என்ன அரசியல்
-
பொருளாதாரம் உறுதியாக இருந்தாலும் இலங்கையில் வறுமைநிலை உயர்வாகவே காணப்படுகின்றது - உலக வங்கி
உலக வங்கி இதை தொடர்ந்து இன்னும் 50 வருடம் சொல்லி கொண்டே இருக்கும்...காரணம் சிறிலங்காவில் பொருளாதார அபிவிருத்தியை விட இனவாத ,மதவாத அபிவிருத்திற்கு முன்னுரிமை வழங்குவதால்
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு இந்தியாவே காரணம் என குற்றம் சாட்டிய சிறிசேன
நீங்கள் கூறிய கருத்துக்கள் 200% சரியானது ...இதில் இந்தியாவுடன் சேர்ந்து பல மேற்கு நாடுகளும் செயல் படுகின்றது. சிறந்த உதாரணம் இனப்படுகொலை சிறிலங்காவில் நடந்த பொழுது பெரிதாக அலட்டி கொள்ளாத அவர்கள் ஈஸ்டர் படு கொலை நடந்த வேளை சிறுபான்மை மதங்களின் உரிமைகள் பாதுகாக்க பட வேணும் என பக்கம் பக்கமாக அறிக்கை விட்டனர் .. சாள்ஸ் அன்டணி என தனது மகனுக்கு பெயர் வைத்து தமிழர்கள் என்றால் கிறிஸ்தவர்களும்,சைவர்களும் என உலகுக்கு சொன்ன போராட்ட தலைவர் வாழந்த மண் தமிழ் கிறிஸ்தவர்களின் போராட்ட பங்களிப்பு என்பது அளப்பரியது
-
ரஷ்ய மற்றும் உக்ரேன் படைகளுடன் இணைய வேண்டாம்! – பாதுகாப்பு அமைச்சு
குடியுரிமை கொடுக்க முதலே அவர்களை காணாமல் ஆக்கிவிடுவார்கள் ...ரஸ்யாவின் சரித்திரத்தில் தெற்காசியவிலிருந்து படைக்கு ஆள்கள் சேர்தமை இதுதான் முதல் தடவை என நினைக்கிறேன்... ஒரு காலத்தில் தமிழர்கள் பணத்திற்காக அலை அலையாக குடிபெயர்ந்தார்கள் ... இன்று சிங்களவர்களும்,தமிழர்களும் உயிரை பணயம் வைத்து குடியுரிமைக்காக வெளியேறுகின்றனர் சொந்த நாட்டில் வாழ தமிழர்கள் பயந்து ஓடினார்கள் ...அன்று விரட்டியவர்களை இன்று இயற்கை பொருளாதரம் என்ற வகையில் விரட்டியடிக்கின்றது. இயற்கை பெரியவன்
-
ரஷ்ய மற்றும் உக்ரேன் படைகளுடன் இணைய வேண்டாம்! – பாதுகாப்பு அமைச்சு
குடியுரிமை கிடைக்குமாம் ஒருவருடம் பணிபுரிந்தால் ....ஒரு சில சிறிலங்கா இராணுவத்தினர் ரஸ்யாவுக்கும்,இன்னுமொரு பகுதியினர் யுக்கிரைனுக்கும் போராடுகிறார்கள் ...அதாவது பணத்திற்காக ,குடியுரிமைக்காக...
-
தமன்னாவை... பார்க்க ஏறிய பனைமரம் வெட்டி வீழ்த்தப்பட்டது.
அந்த ஒற்றை பனையின் கள் நல்ல ருசி ...அதை போய் வெட்ட எப்படி உங்களுக்கு மனசு வந்தது ....ஒர் பனங்காட்டான் இப்படி செய்ய மாட்டான் ...
-
தந்தை செல்வாவின் 126வது பிறந்த தினம் இன்று அனுஷ்டிப்பு!
இன்னும் தமிழினம் சிறிலங்காவில் முற்றாக அழியவில்லை ...அதற்கு முதல் நீங்கள் எப்படி இந்த தீர்மானத்திற்கு வரலாம?
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு இந்தியாவே காரணம் என குற்றம் சாட்டிய சிறிசேன
முன்னாள் ஜனாதிபதியின் புலனாய்வு அதிகாரி சு.சா குண்டு வெடிப்பு காலத்தில் இந்தியாவில் தான் இருந்திருக்கின்றார்...சிறிலங்காவின் படைகளின் உதவியின்றி இந்த குண்டு தாக்குதல் சாத்தியமில்லை ...சிறுபான்மையினரின் ஆதரவின்றி ஜனதிபதியாக வருவதற்கு அவர்கள் மற்றும் வெளிநாட்டு சக்திகள் நடத்திய குண்டு தாக்குதல் ... இந்தியாவின் ஹொட்டலுக்கு குண்டு வைக்காமல் திரும்பி போன குண்டுதாரியை சிறிலங்கா பொலிசார் திசை மாற்றியிருக்கலாம்...இந்தியாவுக்கு செக் வைப்பதற்காக அதை அவர்கள் செய்திருக்கலாம்...அதை தான் முக்கிய சாட்சியாக சொல்கின்றனர் இந்தியாவின் பங்களிப்பு உண்டு என்பதற்கு.... புலனாய்வு,சதிகள் என்பவற்றில் எதுவும் நடக்கும்
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு இந்தியாவே காரணம் என குற்றம் சாட்டிய சிறிசேன
இனிவரும் காலங்களில் தமிழ் கிறிஸ்தவர்கள் ,சிங்கள கிறிஸ்தவர்கள் .என்ற பிரிவினையை விட சிறிலங்கா கிறிஸ்தவர்கள் என்ற அடையாளத்தை நிலைநாட்ட முயற்சிகள் எடுப்பார்கள் ..ஏற்கனவே அது நடைமுறையில் உள்ளதுதான் ... சிறிலங்கா தேசிய கொடியில் கிறிஸ்தவர்களுக்கு இடம் வேண்டும் என சில கோரிக்கை வந்தாலும் வரும்... இந்த கோரிக்கையை நிறைவேற்ற அதிகார வர்க்கமும் ,அந்நிய சக்திகளும் உதவ முன் வரலாம் இந்திராவும் சிறிலாங்கா விடயத்தில் தோல்வியை தழுவிய பிரதமர் ...சீனா இந்தியாவின் தென் முனையில் கூடாரம் அமைத்து அந்த நாட்டை நன்றாகவே உளவு பார்க்கின்றனர்...இந்தியா சிங்கள ஆட்சியாளர்களிடம் படு தோல்வியை சந்தித்து வருகின்றது
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு இந்தியாவே காரணம் என குற்றம் சாட்டிய சிறிசேன
தேசிய இனங்களுக்கு பாதகமாய் முடியும் ,முக்கியமாக சிறிலங்கா தேசிய இனங்களுக்கு .....ஆசியாவில் தேசிய இனங்கள் தங்கள் தனித்துவத்தை இழக்க வேணும் என்பது நீண்ட நாள் திட்டம்...இரண்டாம் உலக போரின் பின்பு வடிவமைக்கப்பட்ட உலக ஒழுங்கில் முக்கியமாக ஆசிய பிராந்தியத்தில் மதங்களுக்கு முன்னுரிமை கொடுத்து தான் எல்லைகளை வகுத்துள்ளனர்... மத முரண்பாடுகளுடன் போர் நடத்துவது வல்லாதிக்க சக்திகள் எடுத்த முடிவு... இந்தியா குண்டு வெடிப்பை செய்திருக்கின்றது என்றாலும் இலங்கையின் அதிகாரா வர்க்கம் இதற்கு பல விதங்களில் உதவி செய்துள்ளது ...இந்தியா தனித்து அந்த குண்டு வெடிப்பை செய்திருக்க முடியாது ...ஆகவே இந்தியா மீது கையை காட்டி விட்டு சிறிலங்கா அதிகார வர்க்கம் தப்பித்து கொள்ள முடியாது...ஆனால் மக்கள் இதையெல்லாம் அலசி ஆராயமாட்டார்கள் ...மக்கள் வெறுப்புணர்வுடன் வாக்கு போட முன்னிற்ப்பார்கள் ... அந்தவகையில் இந்திய எதிர்ப்பு (முஸ்லீம்,கிறிஸ்தவ வாக்குகள்) ,தமிழ் எதிர்ப்பு(சிங்கள இனவாதிகளின் வாக்குகள் ) மேற்குலகு ஆதரவு அணி வெற்றி பெற வாய்ப்பு உண்டு ... தமிழர்களின் வாக்குகள் இனிவரும் ஜனாதிபதி தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கப்போவதில்லை...பொது வேட்பாளரை வைத்தால் என்ன? விரும்பியவர்களுக்கு வாக்குகளை போடுங்கள் என் சொன்னால் என்ன ? இந்துக்களின் வாக்குகள் என இனிவரும் காலங்களில் பிரச்சாரம் செய்வதை அவதானிக்கலாம்... நிச்சயமாக அது சிங்கள ஜனாதிபதிகளுக்கு ஆதரவாக முடியும்....அத்துடன் மேற்கத்தைய கலாச்சாரத்துடன் ,அதாவது பிரித்தானியா காலத்தில் பெயர்களை மாற்றி அரசியல் செய்த அரசியல்வாதிகள் போன்ற அரசியல் வாதிகளின் பரம்பரை ஆட்சி அதிகாரத்தில் இருப்பார்கள் ...கிராமிய மைந்தர்கள் ஜனாதிபதியாக தொடர்ந்து ஆட்சி செய்ய முடியாமல் இருக்கும்.... அதாவது வைன் குடிக்கிறவர்கள் ஆட்சி செய்வார்கள். கள்ளு குடிப்பவர்கள் ஆட்சியை தொடர்வது கடினம்
-
கருணா VS பிள்ளையான் – ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் – அனைத்து உண்மைகளும் விரைவில் வௌிவரும்!
ரணிலை ஜனதிபதியாக்க பல முனைகளில் செயல்படுகின்றனர் ....மைத்திரி முதல் கருணாவரை.... ராஜபக்ச குடும்பம் பாராளுமன்ற தேர்தலில் அதிக அக்கறை காட்டுவார்கள் போல
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு இந்தியாவே காரணம் என குற்றம் சாட்டிய சிறிசேன
ஒரு நாட்டின் இறையாண்மையில் நாங்கள் தலையிடுவதில்லை என இந்தியா அறிக்கை விடும் திருச்சி சிறப்பு முகாமில் சிறிலங்காவின் மூவின மக்கள் பிரதிநிதிகளும் இருக்கின்றனர் ...அவர்களுக்கு தான் தெரியும்...
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு இந்தியாவே காரணம் என குற்றம் சாட்டிய சிறிசேன
இந்தியாவின் ஆதாரவு பெற்ற ஜனாதிபதி இலங்கையில் வெற்றியடையாமல் இருப்பதற்காக இந்த வாக்குமூலத்தை சிறிசேனா வழங்கியுள்ளார்.. நிச்சயமாக ஜனாதிபதி தேர்தல் நடை பெற போகின்றது ...கிறிஸ்தவ மக்களுக்கு இந்தியா மீது ஏற்கனவே வெறுப்புணர்வு ,இஸ்லாமிர்களும் இந்தியா மீது அதே வெறுப்புணர்வுடன் தான் இருக்கின்றனர் .. இந்த இரு சிறுபான்மை சமுகத்தின் வாக்குகளும் முக்கிய பங்கு வகிக்கப்போகிறது ...இது ஜனாதிபதி யாக ரணில் வருவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுக்கும்... அனுராவின் வாக்கு வங்கி நிச்சயமாக வீழ்ச்சியடைய வாய்ப்பு உண்டு அவர் தனது இடது சாரி கொள்கையை புறந்தள்ளி இந்தியா,அமெரிக்கா மீது மோகம் கொண்டமை.... நாட்டின் முன்னெற்றத்தை விட வெறுப்புணர்வு வாக்குகளை பெற்று அரசியல் தலைவராக வருவதை சிறிலங்கா அரசியல் வாதிகள் விரும்புகின்றனர்... ரணில் ஜனாதிபதியாக வந்தால் அமெரிக்கா மகிழ்ச்சியடையும்..இந்தியா விரும்பாவிட்டாலும் சகித்து கொள்ளும். மைத்திரி தேர்தல் வரும் வேளையில் ,ஈஸ்டர் குண்டு வெடிப்பு நடை பெற்ற நினைவு தினத்தில் இந்த அறிவிப்பு செய்தமை நிச்சயமாக முஸ்லீம் ,கிறிஸ்தவ வாக்குகளை அவர் சார்ந்த கட்சிக்கு பெற்று கொள்வதற்கே...