Everything posted by விசுகு
-
இஸ்ரேலின் வான்வழி தாக்குதல் - ஹமாஸ் அரசியல் தலைவர் உயிரிழப்பு!
அரசியல் தலைவர்களை கொல்வது கண்டிக்கத்தக்கது
-
யாழ்.மாவட்டத்தில் அதிகரித்துள்ள ஒலிபெருக்கித் தொல்லை
நாங்கள் இன்னும் கனக்க முன்னேறணும்.....😭
-
பிரிந்திருந்த கருணா பிள்ளையான் மீண்டும் இணைவு
நல்லதற்கல்ல....
-
லண்டன் பெண்ணுக்கு யாழில் நேர்ந்த துயரம் - நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!
நாம சொன்னா யார் கேட்கிறார்கள்???😂
-
அவளைத்தொடுவானேன்....???
நன்றாக கவனித்து பட்டங்களை கொடுங்கள்.😋 என் அனுபவத்தில் கண்ட உண்மை என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன் 🤣
-
அப்பா......
அண்மையில் ஊரில் நடந்த திருமணம் ஒன்றிற்கு பரிசாக பணம் அனுப்பியிருந்தேன். பெண்ணின் தகப்பனார் பெயருக்கே பணத்தை அனுப்பி அவருடன் தொலைபேசியில் சொன்னேன். பணம் அனுப்பி இருக்கிறேன். மணமக்களுக்கு திருமண பரிசாக கொடுங்கள் என்றேன். பக்கத்தில் நின்ற எனது மனைவி மறக்காமல் கொடுங்கள் என்றார். அவருக்கு அது கேட்க கூடாது என்று உடனேயே தொலைபேசியில் இருந்து விடை பெற்றுக் கொண்டேன். மனைவியிடம் அவ்வாறு சொல்லக் கூடாது சொல்ல காரணம் என்ன என்று கேட்டபோது அவர் பிள்ளைகளுக்கு பணத்தை கொடுப்பதில்லையாம். பிள்ளைகளின் சம்பளத்தில் பெரும் பகுதியைக் கூட அவரே வாங்கிக் கொள்கிறாராம் என்றார். எனக்கு தெரிந்து அவர் கமத்தை தோட்டத்தை நம்பி மட்டுமே வாழ்பவர். எந்தவகையான கெட்ட பழக்கங்களும் இல்லாதவர்.. மிகுந்த நாட்டுப்பற்றாளர். எனவே பெரிதாக வருமானம் அற்றவர். எனக்கு தெரிந்து அவர் தனக்கு என்று எதையுமே இதுவரை சேர்த்து வைக்கவில்லை. நான் உட்பட அநேகமான அப்பாக்களின் நிலை இது தான். எமக்கென்று எதுவும் நாம் செய்வதில்லை. சேர்ப்பதில்லை. எமக்கென்று எந்த தனிப்பட்ட சுய தேவைகளோ ஆசைகளோ விருப்பு வெறுப்புகளோ ஏன் தனிப்பட்ட சேமிப்புகளோ கூட இருப்பதில்லை இருக்கவும் முடியாது. ஆனால் மாத முடிவில் வரக் கூடிய கட்டணங்கள் பணக்கொடுப்பனவுகள் செலவுகள் என்று அத்தனையையும் சமாளித்தபடி அத்தனைக்கும் முகம் கொடுத்தபடி அவற்றை எவருக்கும் காட்டிக் கொள்ளாமல் மௌனமாக அழும் அப்பாக்கள் இவ்வுலகில் அதிகம். அதற்கு நன்மை சொல்லாவிட்டாலும் இதனைப் போல் வார்த்தைகளை கேட்கும் போது நெஞ்சு வெடிக்கக்கூடும். அப்பாக்களுக்கு சமர்ப்பணம். முற்றும்.
-
அவளைத்தொடுவானேன்....???
ஆரம்பிக்கிறேன் அண்ணா. அந்த கருவுக்கும் பிள்ளையார் சுழி போட்டது நிழலி தான்.
-
அவளைத்தொடுவானேன்....???
ஆண்மை என்பது ஆண்கள் பல பெண்களை தொடுவது என்று தான் நினைத்துக்கொண்டு இருக்கிறோம்?? என் அனுபவத்தில் கண்ட உண்மை என்னவென்றால் சந்தர்ப்பம் கிடைத்தும் எவன்/எவள் அதை தவிர்க்கிறானோ அதுவே ஆண்மை.
-
அவளைத்தொடுவானேன்....???
அவளின் பரிசம் பட்டதும் உடல் முழுவதும் சில்லிடுகிறது. கண்களை இறுக மூடி திறந்து அவளது கண்களை பார்க்கிறேன் அது கலங்கி இருக்கிறது. அவள் வாய் திறக்கிறாள். அதே என்னை மயக்கிய குரல் அழகு தமிழ். அவள் பேசும் விடயத்தை என் மூளை உணராத அளவுக்கு அந்த குரலுக்குள் அவளின் தமிழுக்குள்ளும் உச்சி முதல் உள்ளங்கால் வரை குளிர்ந்து நான் 80 களுக்கு சென்று மூழ்கத்தொடங்கினேன்..... திடீரென ஒரு பொறி மனதில் நீ யார் இப்பொழுது என்று? கனவில் எங்கோ சென்று மீண்டும் முழிப்போமே அதைப் போன்றதொரு பதட்டம். அவள் கைகளை பிடித்துக் கொண்டு இருப்பதால் அதை பிடுங்கவும் முடியாமல் கனவை தொடரவும் முடியாமல்...... இந்த மனித மூளையின் வேகம் மற்றும் ஞாபக சேமிப்பு கண்டு வியந்ததுண்டு. ஒரு சில செக்கன்களில் 25 வருடங்கள் பின்னால் அழைத்து சென்று அத்தனையும் படங்கள் மற்றும் உணர்வுகளுடன் இரைமீட்டிவிட்டு ஒரு சில செக்கன்களில் மீண்டும் களத்தில் வந்து நிற்கும் விந்தையை என்னவென்று வர்ணிப்பது? எதனுடன் ஒப்பிடுவது? மீண்டும் அவளது கண்களை பார்க்கிறேன் அதில் எந்த வித சலனமோ சபலமோ இல்லை. ஒரு வித ஆழ்ந்த நட்பு மட்டுமே எனக்கு தெரிகின்றது. என் கண்களை பார்த்தவள் நான் கைகளை விடுவிக்க நினைப்பதை புரிந்து கொண்டாள் என்று நினைக்கிறேன். கைகளை விட்டு விட்டு என் குடும்பத்தை பார்க்கணும் என்றாள். அழைத்து சென்று காட்டினேன். எனது மனைவிக்கு இவளைப் பற்றி திருமணத்திற்கு முன்பே சொல்லி இருந்தேன். இருவரும் நட்பாக சுகம் விசாரித்து கொண்டார்கள். பிள்ளைகளையும் அரவணைத்து கொஞ்சி மகிழ்ந்தாள். இங்கே ஒன்றை சொல்ல வேண்டும். பிள்ளைகளை கண்காணிப்பவர்களாக அல்லது வழி நடாத்துபவர்களாக பெற்றோர்கள் இருப்பார்கள் இருக்கிறார்கள். அப்படியானால் பெற்றோரை கண்காணிப்பது வழி நடாத்துபவர்கள் யார் என்ற கேள்விக்கு விடை எங்கள் சமூகம் அதன் கட்டுப்பாடுகள் மதிப்பு மரியாதை எல்லாமே தான். இந்த சமூக கட்டமைப்பை எல்லோராலும் உதறிவிட முடியாது. இதற்கெல்லாம் கட்டுப்பட தேவையில்லை என்பவர்கள் கூட சில முடிவுகளை எடுக்க முன் நிதானிப்பர். ஏனெனில் நாம் செய்யும் தவறுகள் அல்லது சமூகம் ஏற்காத முடிவுகள் எமது பல தலைமுறைகளுக்கு கொண்டு செல்லப்படும். இந்த சமூக கட்டமைப்பு பல தவிர்க்க வேண்டியதை தன்னுள் இன்றும் சுமந்து கொண்டு இருந்தபோதும் நன்மைகளும் இருக்கின்றன. அவை எம் வாழ்க்கையை நல்வழிப்படுத்தி வருகின்றன. இது தமிழர்களுக்கானது என்று இல்லை ஐரோப்பியர்கள் ஏன் உலகுக்கே பொருந்தும். அவள் விடைபெறும் முன் தனது இன்றைய வாழ்க்கை நிலைமை பற்றி சொன்னாள். மிகவும் அடிமட்ட நிலை. முன் பின் முகமே தெரியாத எத்தனையோ மக்களுக்கு உதவி இருக்கிறேன். தூக்கி விட்டிருக்கிறேன். துணையாக இருந்திருக்கிறேன். ஆனால் ஒரு நாள் என் உயிரில் கலந்த இவளுக்கு என்னால் எதுவும் செய்து தர முடியவில்லை. தரவும் கூடாது. இங்கே எனது பள்ளித் தோழிகள், வகுப்புத் தோழிகள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் என்னை கண்டதும் ஓடி வந்து கட்டியணைத்து முத்தம் தருவார்கள். எனக்கு பக்கத்திலேயே உட்கார்ந்து கொள்வார்கள். அதில் என் வகுப்புத் தோழி ஒருத்தி டேய் என்று என்னை கூப்பிடுவாள். ஆரம்பத்தில் எனது மனைவி பிள்ளைகள் இதனைக் கேட்டு முகம் சுழித்தபோது அவள் கொஞ்சம் பின் வாங்கினாள். ஆனால் பின்னர் என் மனைவி மக்களே அவளை மீண்டும் மீண்டும் அப்படி கூப்பிடும்படி சொல்வார்கள். இவரை டேய் என்று கூப்பிட்டு நாங்கள் கேட்பது நீங்கள் மட்டும் தான் என்பார்கள். அவை எதுவும் என் மனைவி பிள்ளைகள் உட்பட எவராலும் தவறாக பார்க்கப்படுவதில்லை. ஆனால் இவளுடன் அப்படி பேசமுடியாது முத்தம் கொடுக்க முடியாது உட்கார்ந்து சாப்பிட முடியாது அவளது தொலைபேசியை எடுத்து அவளுடன் தொடர்பு கொள்ள முடியாது. எந்த நேரத்திலும் அவளுக்கு உதவ முடியாது. காரணம் தொட்டது. அவளைத் தொடுவானேன் கவலைப் படுவானேன்....????? முற்றும் (யாவும் கற்பனை அன்று)
-
எங்கள் பாசமிகு தந்தையார் மறைவு.
உங்கள் துயரில் நாமும் பங்கு கொள்கின்றோம் தம்பி நெடுக்ஸ் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்
-
ஏ.ஆர்.ரஹ்மான் வைத்தியசாலையில் அனுமதி!
தமிழரின் பெருமை. நீடூழி வாழவேண்டும்..
-
‘பரமசிவன் பாத்திமா’: டிரைலரை வெளியிட்ட சீமான், அண்ணாமலை
ஒரு நாள் வரும் அந்த நாள் நானும் @goshan_che சந்தித்த நாள். யாழ் களம் அதிரும். இவர்கள் எப்படி கட்டியணைத்து முத்தம் கொடுக்கலாம் கொடுக்க முடியும் என்று.? அண்ணன் தம்பிடா ராசாக்கள் அண்ணன் தம்பிடா. ❤️🤣
-
அமெரிக்க, ஆஸி. தூதுவர்களுடன் சுமந்திரன் தனித்தனியாகச் சந்திப்பு
லண்டனில் சந்தித்தவர் ஒரு தூதுவராக கணிக்கப்பட்டிருக்கத்தான் அன்றைய சூழ்நிலை காரணமாக இருக்கலாம். இன்று இவர் தனியே என்பது தான் கேள்வி. சும்மா எல்லாவற்றிலும் குற்றமும் குறையும் காணும் அவசரத்தில் எழுதாமல் கொஞ்சம் காலம் எடுத்துக் கொண்டு சுயமாக கருத்து எழுதுங்கள். ஒன்றும் அவசரமில்லை.. நான் இங்கே தான் நிற்பேன்.
-
அமெரிக்க, ஆஸி. தூதுவர்களுடன் சுமந்திரன் தனித்தனியாகச் சந்திப்பு
உங்கள் அளவுக்கு எனக்கு விளங்கிக் கொள்வது கடினமாக உள்ளதால் யார் யாரை அவ்வாறு சந்தித்தார்கள் என்று சொல்லமுடியுமா? மேலும் ஒருவரை மட்டுமே சந்தித்தல் எங்காவது நடந்திருந்தால் போனஸ் தகவலாக அதையும் குறிப்பிடவும்.
-
அமெரிக்க, ஆஸி. தூதுவர்களுடன் சுமந்திரன் தனித்தனியாகச் சந்திப்பு
ஒருவர் மக்களால் வெளியேற்றப்படுகிறார். அவரை மட்டும் தனியே உலகம் சந்திக்கிறது. அவ்வளவு அக்கறை இரு பகுதிக்கும் மக்கள் மேல்....?
-
ராமநாதன் அர்ச்சுனா என்னும் விசச்செடி..
சாக்கடைக்குள் தலைவர்களை தேடும் இனத்தின் இன்றைய நிலை. அந்தந்த ஊர்களில் சேவை செய்பவர்களை தெரிவு செய்யாமல் இவ்வாறு படித்தவன் பட்டம் பெற்றவன் என்று தூக்கிப் பிடித்து நம்பி வாக்குபோட்ட மக்கள் மீண்டும் மீண்டும் ஏமாற்றப்பட்டு அவமானங்களை சுமந்து நிற்கிறார்கள்.
-
ஊழல் எதிர்ப்பு அணி வன்னி என்னும் அவதூறு பரப்பிகளும் அதை பகிரும் மூடர்கூடமும்..…
இதில் எதிலும் ஒரு போதும் இணைந்தில்லை. ஆதரித்ததில்லை.
-
வடக்கில் 16ஆயிரம் ஏக்கரில் தென்னை முக்கோண வலயம் இலவசமாக தென்னங்கன்றுகள், உரம் வழங்குவதற்கும் நடவடிக்கை; அமைச்சர் சமந்த வித்யாரத்ன
நல்ல வரவேற்கத்தக்க முயற்சி. வாழ்த்துக்கள்
-
கண் கண்ட தெய்வம்
அருமையான கதை சொல்லி.... இந்த கோயிலுக்கு சென்றிருந்தோம். இங்கே இளம் வயதினரை அதிகம் கண்டபோது அது பற்றி விசாரித்தபோது இந்தியாவில் இருந்து படிப்பு விசாவில் வரும் இளசுகளுக்கு இக்கோயிலில் வழங்கப்படும் தொடர் அன்னதானம் பெரிய பேறு என்று சொன்னார்கள். இது சரி என்றால் நீங்கள் சொல்லும் கோயிலும் ஒன்றே. தொடர்ந்து எழுதுங்கள்.
-
பிரான்சின் மருத்துவத்துறையில் புதிய கருவியொன்றினை உருவாக்கி கவனத்தை பெற்றுள்ள ஈழத்தமிழன்; தேர்வு வாக்குக்கு அழைப்பு
வாக்களியுங்கள் உறவுகளே..
-
அவளைத்தொடுவானேன்....???
புதிய நாடு, நகரம், புதிய புரியாத மொழி, தெரியாத அனுபவமற்ற வேலை, புதிய உறவுகள், நண்பர்கள் என வாழ்க்கை திசை மாறி தன் வழியில் என்னை உள்வாங்கி வழி நடாத்துகிறது இல்லை துரத்துகிறது. அநேகமாக ஊர் நினைவுகள் அனைத்தும் மறந்து போய் விட்டநிலை இல்லை மரத்துப் போன நிலை. கடமைகளும் பொறுப்புகளும் சுமைகளும் சுய வாழ்வை கடந்து அழுத்த நாட்கள் வாரங்களாகி மாதங்களாகி வருடங்கள் பல பறந்து விட ... திருமண வயதென்பது நினைவிற்கு வருகின்றபோது அவள் நினைவு மீண்டும் பற்றிக் கொள்கிறது. விசாரித்ததில் எல்லாமே காலதாமதமாகியிருந்தது. சரி நம் வாழ்க்கை எம்மை ஓட்ட திருமணம் பிள்ளைகள் என காலம் தடம் பதித்து செல்ல .. நாம் எல்லோரும் நினைத்து கொண்டு இருக்கிறோம். நாம் நினைத்ததை நாம் விரும்பிய வாழ்வை இலக்கை அடைந்து வருவதாக. ஆனால் உண்மையில் வாழ்க்கை தான் எம்மை வழி நடாத்துகிறது. அதில் முட்டி மோதி அலக்கழிக்கப்பட்டு பிரிக்கப்பட்டு தூக்கி எறியப்பட்டு வதைக்கப்பட்டு குட்டப்பட்டு வளைந்து நெளிந்து கொண்டே தான் வாழ்வை வாழ்ந்து முடிக்கிறோமே தவிர அது அவ்வளவு இலகுவானதில்லை. இலகுவாக வாழ்வு கிடைப்பதுமில்லை. இப்படித்தான் வாழ்வேன் என்பவர்கள் தோற்றுப் போக வாழ்வின் இயல்போடு வாழ்பவர்கள் வாழ முயல்பவர்களே ஓரளவேனும் வாழ்வை சந்தோஷமாக ஓடி முடிக்க முடிகிறது. கிடைக்காததை நினைந்து உருகுபவர்களும் கிடைத்ததை வைத்து வாழத்தெரியாதவர்களுமே இவ்வுலகில் அதிகம். ஒரு நாள் ஒரு திருமண இரவு விருந்தில் அவள் என்னை கண்டு கொண்டு ஓடி வந்தவள் அன்றே போல் என் கைகளை பிடித்துக் கொண்டாள்.... தொடரும் (அடுத்த கிழமையுடன் இவளை தொட சீ... தொடரமாட்டேன்)
-
மீனவர்கள் பிரச்சனை: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக வெற்றிக் கழகம்!
நான் சொன்னது பணம் லஞ்சம் பெரிய கோடீஸ்வர முதலாளிகளுக்கு பக்க பலமாக மற்றும் அவர்களே செய்யும் களவாடித்தனம் இது. பணம் பாதாளம் வரை மத்திய அரசு எந்த மட்டில்...?
-
சிம்பொனி என்றால் என்ன?
1- நாம் நண்டுகள் கூட்டம் சகோ. நமக்கு வெளியே எதிரி இல்லை. 2- அவர் அதை செய்யவில்லை. ரசிகர்கள் தமிழர்கள் செய்கிறார்கள். 3- திறமைக்கு அகங்காரம் இருக்கும். அதேநேரம் இது பற்றி மேலே நீங்கள் குறிப்பிட்டதற்கு விருப்பு வாக்கு போட்டுள்ளேன். நான் ஆரம்பத்தில் விஸ்வநாதன் இசையை வீட்டில் கேட்டு வளர்ந்ததால் இளையராஜாவின் இசையை பெரிதாக இரசித்ததில்லை. இளையராஜாவின் இசையை விட ரி. ராஜேந்தரின் பிடிக்கும் ஒரு காலத்தில். அப்படியே ரகுமான் உட்பட பல இசையமைப்பாளர்கள் மக்கள் மனதை இசையால் சீராட்டி செல்கிறார்கள் வரலாறு நீளமானது. நன்றி.
-
பெரியாரின் எழுத்துகளும் காப்புரிமையும் - அருண்மொழிவர்மன்
நன்றி பதிவுக்கு கிருபன் ஆனால் திக் இதை வைத்து தங்களுக்குள் ஒழித்து விளையாடுவது தற்போது சீமானால் வெளியே வந்து நிற்கிறது.
-
மீனவர்கள் பிரச்சனை: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக வெற்றிக் கழகம்!
ஆட்சி அதிகாரம் தரும் வலுவான பாதுகாப்பு இருக்கும் வரை இந்த கொள்ளையை எவராலும் ஏன் மத்திய அரசால் கூட ஒன்றும் செய்துவிட முடியாது.