விசுகு
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Forums Index
Everything posted by விசுகு
-
கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கோரி பேரணி
எப்போழுதெல்லாம் தமிழர்களுக்கு சாதகமான சூழல் உருவாகிறதோ அப்பொழுதெல்லாம் இந்த *** ****** தமது சுயரூபத்தை காட்ட தொடங்கி விடுவார்கள்.....
-
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!
அப்படியா? பாராளுமன்ற மன்றத்தில் நான் பிரபாகரனின் ஆள் என்றும் நான் பிரபாகரனின் வீரத் தமிழன் என்றும் பேசமுடியும் என்றால் பிரபாகரனுக்கு அஞ்சலி என்றால் சிறை என்பது உங்கள் கற்பனை மட்டுமே. பிரபாகரனைப்போல மாவீரர் நாளில் விளக்கேற்றி மாவீரர் நாள் பாடலுக்கு அஞ்சலி செய்யமுடியும் தேசத்தில் பிரபாகரனுக்கும் அஞ்சலி என்பது சிறை தண்டனை என்பதும் உங்கள் கற்பனை மட்டுமே. உண்மையில் உண்மையை தரிசிக்க எந்த ஆதாரமும் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள நாம் தயாராக இல்லை என்பது மட்டுமே உண்மை.
-
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!
நீங்கள் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறீர்கள். அங்கே நடக்கும் மாவீரர் நாளும் சரி மற்றும் நினைவு எழுச்சி நினைவுகளும் சரி அசலான புலிகளின் நிறம் மற்றும் பாணியிலேயே நடைபெறுகின்றன. என்னதான் அரசு இவற்றை எச்சரித்த போதும்....
-
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!
இது வெறும் புரட்டு மட்டுமே. மக்கள் எழுச்சியுடன் மாவீரர் நாள் மற்றும் எழுச்சி நினைவுரைகள் தாராளமாகவே நடைபெறும் தாயகத்தில் ஏனைய மாவீரர்கள் மற்றும் தளபதிகள் போன்று பிரபாகரனுக்கும் அஞ்சலி என்பது சாதாரணமாக கடந்து போகக்கூடியதே. பாராளுமன்றத்திலேயே பிரபாகரன் பற்றி பலமுறை பலமணி நேரம் பேசமுடிகிறது என்றால் கொல்லப் பட்டுவிட்டார் என்று அரசாலேயே அறிவிக்கப்பட்ட ஒருவருக்கு அஞ்சலி செலுத்துவது எப்படி குற்றமாகும்?????
-
காதலன் மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை களவெடுத்து கொடுத்த யுவதி உள்ளிட்ட 07 பேர் கைது
நானும் எவ்வளவு காலமாக யாழிலும் முகநூலிலும் கொடி கட்டிப் பறக்கிறன். ஆகக் கூடியது வடை பிளேன் ரீக்கு மேல ஒன்றையும் காணோம்....🤣
-
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!
என்னுடைய இந்த கேள்விக்கு ஏன் எவரிடமும் இருந்து பதில் வரவில்லை.......????
-
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!
அப்படியானால் அங்கே இருந்து தான் தலைவருக்கான அஞ்சலி தொடங்கி இருக்கவேண்டும். ஏன் இதுவரை எவருமே தாயகத்தில் அதை செய்யவில்லை...?
-
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!
அது ஒரு ஆதாரம் என்பதிலிருந்து தொடங்கலாமே தவிர அதனூடான கேள்விகள் சந்தேகங்கள் மற்றும் சாட்சியங்கள் இதுவரை இல்லை இனியும் கிடைக்கப்போவதுமில்லை. ஆகையால் இப்போது தொடங்கப்பட்டவை அனைத்தும் இனி பைலை மூடுவோம் என்பதற்கானது மட்டுமே. என்னைப் பொறுத்தவரை மூடுவதாலோ மூடாமல் விடுவதாலோ எதுவும் மாறப் போவதில்லை. கடவுளாக்கி மக்கள் தொழுவது தொடரும். அதில் நானும் ஒருவன். இத்தனைக்கும் தனது உடலை மக்கள் பார்க்கவேண்டும் என்ற தலைவரின் தீர்க்க தரிசனத்தை உணர்ந்தவனான போதும்.
-
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!
வணக்கம் செலுத்துபவர்களிடமும் சரி செலுத்த வேண்டாம் என்று சொல்பவர்களிடமும் சரி இருக்கிறார் என்று சொல்பவர்களிடமும் சரி இல்லை என்று சொல்பவர்களிடமும் சரி நிரூபிக்க தகுந்த எந்த ஆதாரமும் இல்லை. எனவே கண்டதை சொல்லி மக்களை ஏமாற்றாமல் மக்களின் தெரிவு எதுவோ அவர் அதுவாகவே இருக்கட்டுமே.
-
ரஷ்யாவில் நிலநடுக்கம்: அமெரிக்கா, ஜப்பானுக்கும் சுனாமி எச்சரிக்கை - ஃபுகுஷிமாவில் என்ன நடக்கிறது?
ரசியாவில் நடுங்கினா அமெரிக்கா ஜப்பானில் மக்கள் ஓடுகிறார்கள். இதில் நான் பெரிசு நீ பெரிசு நாங்கள் தான் வீரர்கள் என்றபடி...
-
நாமலுக்கு எதிராக பிடியாணை உத்தரவு!
இங்கே தான் கிடக்கிறார்கள். ஆனால் உங்களுக்கு பதில் வராது
-
புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது
இதைத் தான் ஆரம்பத்திலேயே நான் குறிப்பிட்டேன்
-
புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது
ஒரு தவறை சுட்டிக்காட்ட ஒரு பண்பு இருக்கிறது. அது உங்கள் சுட்டிக்காட்டலில் அறவே இல்லை. தவறை சுட்டிக்காட்டுவதை விட அதை வைத்து ஒருவரை கோபப்படுத்துவது அல்லது குத்திக் குத்திக் காட்டுவது அல்லது சறுக்கி விட்டார் என்பதை வைத்து அவரது தேசியம் சார்ந்த பக்கத்தை பந்தாடுவது மட்டுமே இங்கே நான் காண்பது. யாழ் களத்தை அறிவூட்டுகிறோம் அல்லது தவறை சுட்டிக்காட்டி நேர்வழிப்படுத்துகிறோம் என்றபடி யாழில் தற்போது படித்தவர்கள் என்ற ஒரு சிலரது கம்பு சுத்துதல் மட்டுமே என்னால் காணக்கிடைக்கிறது. அதனால் தான் நானே யாழை விட்டு தள்ளிச்சென்று கொண்டிருக்கிறேன். இது தொடர்வதை காண்கிறேன். என் கண்முன்னே இது நடப்பதால் ஒரு அளவுக்கு மேல் கடந்து செல்ல முடியவில்லை
-
புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது
என்னுடைய கோபம் அதுவல்ல. இந்த சிறிய கணக்கு சிறிக்கு தெரியாது அல்லது வேண்டும் என்றே செய்யக்கூடியவர் சிறி என்கிற உங்கள் கலாய்ப்பு தான். இது இரண்டுமே தவறு.
-
புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது
நீங்கள் வேற.. இப்பொழுதெல்லாம் யாழில் ஆராய்ச்சி மட்டுமே நடக்கிறது. அவை கருத்தாளரின் (மங்கிய) மூளை வளர்ச்சி கணக்கில் அவரது தராதரம் அவர் பார்க்கும் படிக்கும் பத்திரிகை மற்றும் பார்க்கும் தொலைக்காட்சி சார்ந்த மட்டமான அறிவுரை அதையும் தாண்டி விட்டால் தேசியப்பற்றாளர் என்று நளினம். 😡
-
ஈழத்தமிழர்களின் அரசியற் தலைவரான சம்பந்தனின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது
என்னை பொறுத்தவரை, என் அனுபவத்தில் அவர் ஒரு வெற்றிடத்தை மிகவும் சுயநலமாக ஆனால் மிகவும் அளவுக்கு அதிகமாக பயன் படுத்தி கொண்டார். அதுவே அவரது சாணக்கியம்.
-
மேலும் 40 நாடுகளுக்கு விசா விலக்கு!
அப்படியே இலவசம் என்று போட்டு விடலாமே... இனி எந்த நாடு தான் பாக்கி???
-
ஈழத்தமிழர்களின் அரசியற் தலைவரான சம்பந்தனின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது
ஒன்றுமே செய்யாது இருப்பதும் நன்மை பயக்கும் என்கிறார். அப்படியானால் சாணக்கியர் என்பது.....??
-
சங்கிலியுடன் எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழைந்தவர் மரணம் - நொடி நேரத்தில் எந்திரத்துக்குள் இழுத்த காந்தபுலம்
நன்றி சின்மயி....😛
-
ஐரோப்பாவில் விமானி உரிமம் பெற்ற மன்னார் இளைஞன்!
1- ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான மகிழ்ச்சி சந்தோசம் திருப்பி மற்றும் சந்ததி பற்றிய தூர நோக்கு இருக்கும். எனது சந்ததி விருத்தி சார்ந்த பயமே அவனை தடுக்க காரணம் 2- அது பரதேசி வாழ்க்கை அல்ல அது வேறு ஓர் வாழ்க்கை பரிமானம். எமது அடுத்த அடுத்த தலைமுறை அதற்குள் தான் பயணிக்கும். என்னால் முடிந்த வரை ஒரு தலைமுறையை தள்ளிவிட்டு உள்ளேன். அவ்வளவு தான்.
-
ஐரோப்பாவில் விமானி உரிமம் பெற்ற மன்னார் இளைஞன்!
எனது இரண்டாவது மகன் இதில் பறக்க விரும்பி படிக்க கேட்டான். மறுத்து விட்டேன். அதற்கு நான் சொன்ன காரணம் அவனுக்கு அதிசயமாக இருந்தது. அப்பா இப்படி எல்லாமா யோசிப்பீங்க என்றான். இப்பொழுது வேறு துறையில் படித்து குடும்பம் குழந்தை என்று நல்ல நிலையில் உள்ளான். இப்ப அப்பா அன்று சொன்னது சரி என்று உணர்ந்து உள்ளான். நான் சொன்னது : விமானிகளுக்கு குடும்பம் பிள்ளை குட்டிகள் சரிவராது. நீ படித்து திருமணம் செய்து பேரப் பிள்ளைகளை பெத்து தரும் எல்லைக்குள் இருந்தால் போதும் என்பது.
-
இனக்கலவரம் யூலை 1983 - ஒரு சாட்சி
இனக்கலவரம் யூலை 1983 - ஒரு சாட்சி ஆமர்வீதிச்சந்தியில் கீழே அண்ணரின் உணவகம் மேலே நாலாம் மாடியில் எனது வசிப்பிடம். யூலை 23 இல் தெற்கின் பல பாகங்களிலும் கலவரம் உச்சமடைந்த போதிலும் இதன் முன்னர் பல இனக் கலவரங்கள் வந்தபோதிலும் எமது உணவகமோ எமது கட்டிடமோ தாக்கப் பட்டிருக்கவில்லை என்ற அதீதமான நம்பிக்கை கைகொடுக்க யூலை 24 அதிகாலை வரை நாம் இருப்பிடத்தில் இருந்து நடப்பவைகளை அவதானித்தபடி.... யூலை 24 அதிகாலையில் மொட்டை மாடியில் நின்றபடி பார்த்தபோது தெமட்டகொட பக்கமாக இருந்து சில குழுக்கள் (அநேகமான பதின்ம வயதினர்) வீதியில் இருந்த தமிழ் கடைகளை உடைத்தும் நெருப்பு வைத்தபடியும் ஆமர்வீதி சந்தி நோக்கி வந்து கொண்டிருந்தனர். ஆனாலும் எமக்கு எந்த பயமோ பதட்டமோ ஏற்படவில்லை. காரணம் எமக்கு கீழே ஆமர்வீதி சந்தியில் இருந்து பொலிஸ் நிலையம் வரை வீதியின் நடுவில் 30க்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கிய காவல்துறையினர் காவலில் இருந்தனர். அத்தனை பேரும் தெரிந்தவர்கள் அனைவரும் எமது உணவக இலவச வாடிக்கையாளர்கள். ஆமர்வீதிச்சந்தியில் இருந்து ஒரு நூறு மீட்டர் தூரத்தில் குழுக்கள் வந்து கொண்டிருந்த போது அவர்கள் எம்மை நோக்கி வர வழி விடும்படியாக காவலுக்கு நின்ற காவல் துறையினர் திரும்பி செல்ல திரும்பி காவல் நிலையம் நோக்கி நகரத் தொடங்கிய போது தான் நெஞ்சு சுவாசம் ஓங்கி அடிக்க தொடங்கியது. தப்பி ஓடக்கூட நேரம் சுருங்கி விட்டிருந்தது. நாலாம் மாடியில் இருந்து கீழே இறங்கி வருகிறோம் கீழே இரும்பு கதவை உடைத்து தோற்ற கூட்டம் முதலாம் மாடிக்கு பெற்றோல் குண்டுகளை வீசிக் கொண்டிருக்கு அங்கே தீப்பிடிக்க ஆரம்பிக்கிறது.. முதலாம் மாடியின் பின் புறத்திற்கு ஓடி வருகிறோம் அருகில் இருந்த மரக்கடை எரியத் தொடங்கி இருந்தது. உடுத்தியிருந்த சறம் மற்றும் சேட்டை சிங்களவன் அணிவது போல் மாற்றி கட்டியபடி எங்கள் முதலாம் மாடியில் இருந்து பக்கத்து வீட்டு கூரைகளின் நடந்து பின்னால் இருந்த சிங்கள பாடசாலைக்குள் குதித்து அதே குழுக்களுடன் கலந்து வெளியேறி இன்று உயர் வாழ்கிறேன். ஆனாலும் எப்படி தப்பினேன் என்பது இன்றும் அதிசயமாகவே...... அன்று தெரிந்து கொண்டவை. இது எனது நாடல்ல இது எனது அரசல்ல இது எனது காவல்படை அல்ல. சிங்களவர்கள் எமது சகோதரர்கள் அல்ல.
-
புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது
புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர் என்பதால் அவரை அவர்களே இருக்கமுடியும். அதற்கான பயிற்சி மற்றும் செயற்பாடுகள் அங்கிருந்தே தொடங்கி இருக்கவேண்டும்.
-
ஐரோப்பாவில் விமானி உரிமம் பெற்ற மன்னார் இளைஞன்!
டென்மார்க் காரர் இப்போது பேனையை தூக்கி எறிந்து பிடித்து செய்தி வாசிப்பதில் பிசியாக இருக்கிறார்🤣 அவரது குறும்படம் ஒன்றின் தெரிவின் போது அவருக்கு பலமாக குட்ட வேண்டியதாயிற்று. அப்புறம் வரதரின் மகளும் தான் தான் முதலாவது ஈழத்து விமானி என்று சொன்னதாக ஞாபகம்.
-
சங்கிலியுடன் எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழைந்தவர் மரணம் - நொடி நேரத்தில் எந்திரத்துக்குள் இழுத்த காந்தபுலம்
அந்தாள் அப்பாவி மனைவி சொல் தட்டாமல் பழகிவிட்டது. என்ன செய்யும்?🤣