Everything posted by nedukkalapoovan
-
இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் ஜூலி சங்! - சரத் வீரசேகர
இப்ப தலைவரையே உண்மையோ போலியோன்னு கேக்க வைக்கிற அளவுக்கு இருக்கு.. எம்மவர்கள் மத்தியில் விதைக்கப்பட்டுள்ள நச்சு விதைகள். உளவியல் போரின் உச்சக்கட்டங்கள் அரங்கேறுகின்றன. அதுக்கு இன்னும் இன்னும் உயிர்ப்பூட்ட இங்கையும் ஆக்கள் இருக்கினம்... எழுதினம். தமிழகத்தில் போலித் திராவிடம் மும்மரமா இயங்குது. கிந்தியா சிதைவதை விட திராவிடம் அழிவது தமிழர்களின் இருப்புக்கு மிக அவசியம் என்றாகி வருகிறது. சிங்கள பெளத்த பேரினவாதத்தை விஞ்சும் அளவுக்கு தமிழர்கள் அழிப்பில் திராவிட மேலாதிக்க பாசிச சிந்தனை இருக்குது.
-
தலைகீழாக மாறப் போகும் இலங்கையின் எதிர்காலம்!- ரணில் கூறிய இரகசிய ஆரூடம்
அனுர அரசு தமிழர்களுக்கு அள்ளி வழங்கும் முஸ்லிம்களுக்கு முக்கி வழங்கும் என்று எதிர்பார்பவர்களுக்கு.. முன்னைய எந்த சிங்கள அரசுகளுக்கும் விதிவிலக்கானது அல்ல அனுர அரசு,.. தமிழர்கள் விடயத்தில். (இதனையே அனுர அரசு ஆட்சிக்கு வர முன் இருந்து சொல்லி வாறம்.) ஆனால் ஒட்டுமொத்த சிங்கள தேசத்தின் தேவைகளுக்காக சிலதை உருப்படியாகச் செய்வார்கள்.. மற்றைய ஆட்சியாளர்களை விட. அதன் பலன் தமிழர்களுக்கும் பொசியும். வயலில் நெல்லுக்கு பாய்ச்சுவது புற்களுக்கு பொசிவது போல. அவ்வளவும் தான். அதுக்கு மேல கனவு காணாதீர்கள்.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
1987 இல் கொஞ்சப் பேருக்கு பிரபாகரன் இருக்கிறரோ என்ற சந்தேகம். ஏன் இப்பவும் பிரபாகரன் அல்ல அது போலி என்று நம்பிறவை இருக்கினம். அந்தளவுக்கு தமிழின எதிரிகளும் கிந்திய உளவு அமைப்புக்களும் ஒட்டுக்குழுக்களும் போடுற விச விடய விதைகள் உளவியல் போருக்கான ஆணிவேராகும். சீமான் குறித்த சர்ச்சைகள் கட்டுமரம் கருணாநிதி வாரிசுகள் சீமானின் அரசியலை கொள்கை ரீதியாக எதிர்கொள்ள முடியாமைக்கு காட்டும் எதிர்வினை நச்சு விதைகள். மக்கள் தான் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும். கேவலம்.. நம்மவர்களே.. அந்த நச்சு விதைகளை விருட்சமாக்கி காட்டுவது தான். வைகோ வன்னி சென்று தலைவரை சந்தித்த போதும் அப்போதும் இதையே தான் விதைத்தார்கள். இப்பவும் அதுதான். காரணம் பிரபாகரன் என்பது வெறும் பெயரல்ல.. தமிழர்களின் பலம் என்று எதிரிகள் நினைக்கிறார்கள். அவ்வளவும் தான். அதே எதிரிகள் எடுபிடிகள் இங்கும் உள்ளனர். எங்கும் உள்ளனர்.
-
இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் ஜூலி சங்! - சரத் வீரசேகர
2006-9 வரை இனிச்சவை இப்ப கசக்கினமோ..??! நம்மவர் பலருக்கே இந்தக் காட்சிகள் மறந்திட்டுது. சிங்களவனுக்கு..??! Visit of 'strategic partners' [TamilNet, Thursday, 18 December 2008, 12:19 GMT] The Defense Advisers/Attaches of seven countries, USA, UK, Japan, India, Pakistan, Bangladesh and Maldives were taken on a one day tour to Vanni by the Colombo government on Monday. Suffering from heavy military debacles and facing serious economic crisis, the Colombo government is badly in need of parading strategic partners and abettors to attract means and justification for its genocidal war before time runs out, note political observers. The visitors represented three of the Co-Chair countries, USA, UK and Japan and four South Asian countries having maritime boundaries. https://www.tamilnet.com/art.html?catid=79&artid=27771&fbclid=IwY2xjawIc3cFleHRuA2FlbQIxMQABHfTl9GDzCbfij-4Zjiv0q8EoeXif9qZYvjfrq9RC1XnxOhFjYYYKZ5W1og_aem__WGlpt68U5jJqbJo8WYVyA
-
வாங்குற காசுக்கு மேல கூவுறாரே.. சீமானை விளாசிய 'ராஜீவ் கேஸ்' பேரறிவாளன் தந்தை குயில்தாசன்!
எழுவர் விடுதலைக்காக உண்மையில் உரக்க குரல் கொடுத்தவர்கள்.. அதற்கான அழுத்தங்களை மத்திய அரசுக்கு மாநில அரசு ஊடாக வழங்கத் தூண்டியவர்கள் யார் யார் என்பதும்... பேரறிவாளனோடு சிறையில் இருந்த காலம் கூட அவரின் விடுதலைக்கு நற்பத்திரம் வழங்கியது உட்பட... சீமான் ஆற்றிய பங்களிப்பை பேரறிவாளனின் ஒளிந்து கிடந்த தந்தை மறக்கலாம்.. நிச்சயமாக பேரறிவாளனின் விடுதலைக்காக அலையோ அலை என்று அலைந்த அவரின் தாய் மறக்கமாட்டார். எத்தனையோ ஆபத்தான தருணங்களில்.. யாருமே பேச முன்வராத காலங்களில்.. சீமான் மக்களை கூட்டி இவர்களுக்காகப் பேசியதை மறந்த உங்களைப் போன்ற நன்றி கெட்டதுகளை விட ஈனத்தமிழர்கள் யாருமே இருக்க முடியாது. இதனை உங்களிடம் காண்பது வியப்பல்ல. உங்கள் இயல்பே இதுதானே. காட்டிக் கொடுப்பதும்... இகழ்ந்து தள்ளுவதும்.
-
பெரியார் தொடர்பான லண்டன் கூட்டத்தை குழப்ப முயன்று தோற்றுப் போன சீமானின் காட்டுமிராண்டிக் கூட்டம்
கன்னட ஈவே ரா திராவிடப் பொய்யர்களுக்கு எப்படி தந்தை.. பெரியார் ஆனார் என்று ஈவே ராவுக்கு சீமான் சொம்பு தூக்கிய காலத்தில் இருந்தே இதே யாழில் பக்கம் பக்கமாக விவாதிச்சு முடிஞ்சுது. இப்ப சீமானுக்கு தமிழக மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் தெளிவே போதும். இதுக்கு மேல் இந்தக் காலத்தின் இந்தச் செல்லாக் காசுகளை பற்றி விவாதித்து ஒரு பயனும் இல்லை. இதற்காகவே யாழில் முன்னர் மட்டுறுத்தினராக இருந் த இளைஞன்.. வலைஞன் நமக்கு அதிக தண்டனைப் புள்ளிகளை வழங்கினவர். அவரும் ஒரு ஈ வே ரா விசுவாசியாக தன்னைக் காட்டுக்கொண்டிருந்ததால். அது வேற கதை.
-
அர்ச்சுனா எம்.பி.யின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் படுகாயம்!
அண்மையில் இந்த உணவகத்திற்கு சென்று கையோடு கொண்டு செல்ல உணவு வாங்கிய போது,.. ஒன்றிற்கு சம்பல் வைத்து இன்னொன்றிற்கு வைக்காமல் அனுப்பினவை. வீட்ட போய் பார்த்த போது தான் விளங்கியது இவர்களின் தில்லாலங்கடி. இங்க வாற கூட்டம் எல்லாமே ஒரு மாதிரியாத்தான் இருக்குது.
-
புட்டினுடன் டிரம்ப் தொலைபேசி உரையாடல் - உக்ரைனிற்கு துரோகமிழைக்கின்றதா அமெரிக்கா என சர்வதேச அரசியல் அரங்கில் கேள்வி
இந்தப் போரை நடத்தினதே அமெரிக்கா தலைமையில் நேட்டோ. இப்ப அவையே போரை நிறுத்தவும் சொல்லினம். இதில் துரோகத்திற்கு என்ன இருக்கு. உக்ரைன் மக்களுக்கு துரோகம் இழைத்தது.. அவர்களின் கோமாளி சனாதிபதி தான். உக்ரைன் தானும் தன்பாடும் என்றிருந்தால்.. இந்தப் போரே உருவாகி இராது. டான்பாஸ் மக்களின் சுயநிர்ணய உரிமை பிரச்சனையும் உருவாகி இராது.
-
பெரியார் தொடர்பான லண்டன் கூட்டத்தை குழப்ப முயன்று தோற்றுப் போன சீமானின் காட்டுமிராண்டிக் கூட்டம்
தமிழனுக்கு எப்பவும் தன் சிந்தனையில் நம்பிக்கை இல்லை. அடுத்தவன் மீது சவாரி செய்வதிலேயே பிரியம். இன்னும் எத்தனை காலம் தான் கன்னட ஈ வே ராவை தூக்கிச் சுமக்கப் போகிறாய்ங்களோ.. சுய இலாபத்துக்கும் சுய விளம்பரத்துக்கும். ஈ வே ரா தமிழ் மொழியை இகழ்ந்த ஒரு கன்னட வெறியர் அவ்வளவு தான்.
-
வாங்குற காசுக்கு மேல கூவுறாரே.. சீமானை விளாசிய 'ராஜீவ் கேஸ்' பேரறிவாளன் தந்தை குயில்தாசன்!
இப்ப கூவுவாங்க. இவ்வளவு காலமும் மனைவியை முன்னுக்கு தள்ளிட்டு பின்னால ஒளிந்து கிடந்த இவர் எனிக் கூவி என்ன கூவாலம் விட்டென்ன. சீமான் பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலைக்கான கொடுத்த குரலை உலகம் மறக்காது. இந்த நன்றி கெட்டதுகள் மறக்கலாம்.
-
இராஜன் (சோழியன்) அண்ணாவின் மனைவி சிவபுஸ்பா காலமானார்
ஆழ்ந்த இரங்கல்கள்.
-
நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்
ஆழ்ந்த இரங்கல்கள் நுணா.
-
கட்டுத்தொகையை இழப்பதையே தேர்தல் வியூகமாகக் கொண்ட...' - சீமானுக்கு தவெக பதில்!
திராவிடப் பண நாயகத்தின் முன் சீமான் என்ன சிவாஜி ரஜனி கமல் விஜய காந்த் எல்லாருமே கட்டுக்காசை இழந்திருக்கினம்.. அரசியல் கனவை இழந்திருக்கினம். அண்ணர் விஜய் இதனை உணர இன்னும் காலம் இருக்கு. ஆனால் கட்டுக்காசை இழந்தாலும் பணநாயகத்தையோ... அண்ணா ஆட்டிக்குட்டி ஈ வே ரா என்று புலம்பாமல்... தெளிவான தமிழ் தேசியக் கொள்கையோடு தனித்துப் பயணிக்கும் சீமான் சனநாயகத்தின் அடையாளம் எனலாம். அது சிறப்பு தானே.
-
அர்ச்சுனா எம்.பி.யின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் படுகாயம்!
டாக்டர் அர்ச்சுனாவை கோர்னர் செய்வதை சிங்கள ஊடகங்களை விட தமிழ் தூசண ஊடகங்கள் சிறப்பாகச் செய்கின்றன. தமிழினன் எப்பவும் நாய் போல. தன் இனத்தை கண்டால் கொஞ்சம் அதிகமாவே குலைப்பான்.
-
தையிட்டி விகாரை இடிக்கப்பட வேண்டும்! -சிவஞானம் ஸ்ரீதரன்
கட்டும் வரை... ஆளாளுக்கு சாராயக் கடைக்கு அனுமதி பெற அலையா அலைஞ்சாங்கள். கட்டி முடிஞ்சப்போ.. உடைக்கனுமாம். அப்படி சொறீலங்கா வரலாற்றில் நடந்திருக்கா. இங்க மட்டுமல்ல.. புங்குடுதீவிலும் புத்தர் முளைச்சிட்டார். குறிக்காட்டுவானில் சிங்களவர்கள் சிங்கள கடற்படை இணைந்து பெரும் விடுதிகளை அமைத்து விட்டார்கள்.. எம்மவர்கள் என்ன செய்யினம்..???! புலம்பெயர் வெட்டிப் பெருமிகள்.. அங்கு நிற்கும் சிங்களச் சிப்பாய்க்கு கைலாகு கொடுப்பது பெருமை என்று அலைகிறார்கள். என்னத்தை சொல்ல....! அசைலம் அடிச்சதே அவன் கொல்லுறானுன்னு,.. இப்ப கைலாகு கேக்குதாம்.
-
பாலச்சந்திரனின் மரணச் செய்தி கேட்டு மனமுடைந்தாராம் மகிந்த! இப்படிக் கூறுகிறார் நாமல்
கொல்லச் சொன்னதே சித்தப்பா. இதில் அப்பா மயங்கி விழுந்தாராம். இந்த கும்பலுக்கு இன்னும் யுத்தக் கதையே அரசியல் மூல தனம். அதுதான் விட்டு விட்டு விடுகதைகள் அளந்து கொண்டிருக்கினம். சிங்கள மக்களுக்கே இதைக் கேட்டு கேட்டு காது புளிச்சு ஜே வி பிக்கு வாக்குப் போட்டிருக்குது.
-
நாட்டில் ஏற்பட்ட மின் தடைக்கு, குரங்கே காரணம் !
ஒரு நாட்டின் முக்கிய இயங்கு மையங்களில் மின் உற்பத்தி விநியோக மையங்களும் அடங்கும். அதனை குரங்கு.. குளறுபடிகள் இன்றி அனுர அரசாலும் செயற்படுத்த முடியாமலா இருக்கிறது, இவர்களும் பழைய அரசுகளின் பாதையில் தான் ஆட்சி செய்கிறார்கள் போல. ஒரு மணி நேர மின் வெட்டால் கூட கெவ்வளவு பொருண்மிய இழப்பு என்பதை ஜே வி பி கணக்கிட முடியாமலா இருக்கிறது...?
-
காஸா: அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியது ஏன்? பாலத்தீனர்களை வெளியேறச் சொல்கிறாரா?
ரம் சொல்லி இருப்பது அமெரிக்கா காசாவை நீண்ட கால ஒழுங்கில் பொறுப்பெடுத்து அபிவிருத்தி செய்து வேலை வாய்ப்புக்களை உருவாக்கி தரும் என்று. பலஸ்தீனர்களிடம் இருந்து காசா பறிக்கப்படும் என்றில்லை. இந்த நடவடிக்கைக்கு வசதியாக காசாவில் வாழும் பலத்தீனர்களை எகிப்து மற்றும் ஜோடானில் வசிக்க செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. காசா தொடர்ந்து இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாதத்தின் உற்பத்தி கூடமாக இருந்து இப்படி தொடர்ந்து அழிவதிலும் பலஸ்தீனர்கள் சாகடிக்கப்படுவதிலும்.. தனது முன்மொழி எவ்வளவோ மேல் என்பதுதான் ரம்பின் வாதம்..??! ஈரான் ஆதரவு காமாசின் தேவை என்ன...???! பலஸ்தீனியர்களின் செழிப்பான வாழ்வா.. இஸ்ரேலை ஆக்கிரமிப்பதா..??! இங்கு தான் ரம்பின் செயலுக்குரிய பதில் உள்ளதே தவிர.. பலஸ்தீன மக்கள் அப்பாவிகள்.
-
அமெரிக்கா: சட்டவிரோத குடியேறிகளை இந்தியா கொண்டு வரும் ராணுவ விமானம் - நிலவரம் என்ன?
கிந்தியாவில் இருந்து இப்படி களவாக மேற்கு நாடுகளில் தஞ்சம் புகுபவர்களால் கிந்தியா பல பொருண்மிய நன்மைகளை அடைகிறது. அதனால் தான் இதனை தடுக்காமல்.. தொடர்ந்து வருகிறது. சட்ட விரோத குடியேறிகளுக்கு எதிரான ரம்பின் முடிவுகள் வரவேற்கத்தக்கவை. கிந்தியவோ எந்த நாடோ சட்டவிரோத குடியேறிகளை.. பொய் அகதிகளை வெளியேற்றுவது நல்லது. உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டியவற்றை பொய்யும் புரட்டும் செய்து சம்பாதித்தவர்கள் தண்டனை அனுபவிக்கத்தானே வேண்டும்.
-
தலைவர்களை இழந்த தமிழ்த்தேசிய அரசியல்!
சும்மா செயலற்று,, செயலூக்கமில்லாமல்.. செயலுக்கும் சொல்லுக்கும் அர்த்தம் புரியாமல் இயங்குபவர்கள் எல்லாம் தமிழ் தேசிய தலைவர்கள் என்றிருப்பதிலும்.. ஓய்வெடுப்பது எவ்வளவோ மேல். இளையவர்களை செயல்வீரர்களாக்கி தலைவர்களாக ஏற்றுக் கொள்ளும் நிலை மக்களிடம் வரனும். அதற்கேற்ப இளையவர்களும் இன்னும் இன்னும் தமிழ் தேசிய அரசியலை நோக்கி வரனும். குறிப்பாக தெளிந்த மாணவ சமூகத்திடம் இருந்து. அவர்களை தமிழ் தேசியம் தொடர்பில் தெளிவு படுத்துவது மக்களின் பொறுப்பு.
-
சீமானின் மொழியாடல் சாமானியர்களின் ‘கவனம்’ ஈர்ப்பது ஏன்?
ஒரு காலத்தில் ஈவே ரா பேசிய பேச்சுக்களை விட சீமானின் மொழியாடல்கள் எவ்வளவோ மேல். சீமானின் மொழியாடல்களில் மிகுதிகள் குறைகள் இருப்பினும் மக்களின் எண்ணப் பிரதிபலிப்புக்கள் இலகு வடிவில் இருப்பதால்.. மக்களிடம் எடுபடுகிறது என்பதே உண்மை.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
தி மு க.. அதிமுக ஆட்சி காலங்களில் இடைத்தேர்தல்களில் எதிர்கட்சிகள் வெற்றி பெற்றதுண்டா..?! சனநாயகம் செத்து பணநாயகம்.. ரவுடிசம் ஆட்சி செய்யும் தமிழகத்தில் சீமானின் துணிச்சல் பாராட்டத்தக்கது. ஏனையவை எதிர்கட்சிகளாக இருக்கவே தகுதி அற்றவை. ஏனெனில் மக்களுக்கான சனநாயகம் என்றால் மக்களின் விருப்புக்கு மதிப்பளிச்சு களத்தில் நிற்கனும். மாறாக வெல்வமா தோற்பமா என்பதல்ல சனநாயகம். அதுசரி.. கிந்தியாவில் சனநாயகம் இருந்தால் தானே..?! சீமானின் துணிச்சல் வாக்கு சதவீத வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள். ஈவே ராமசாமி ஒரு கன்னடப் பொய்யர். தமிழ் மொழி வெறுப்பாளர். தமிழீழ வெறுப்பாளர். ஈழத்தில் அவருக்கு முக்கியத்துவம் எதுவும் இருந்ததில்லை.. புலிகள் காலத்தில் கூட. கறுப்புச் சட்டைகள் சில தமிழீழத்தை ஆதரித்திருப்பினும்.. புலிகள் ஈ வே ராவை தூக்கிப் பிடித்ததே இல்லை. உண்மையில் ஈழத்தில் பலருக்கு ஈவே ராவை யாரென்றே தெரியாது. இப்ப சில ஈழ புலம்பெயர் அடிபொடிகள் தாங்கள் தங்கள் சுயவிளம்பரம்... சுயதேவைகள்.. புலி துதிபாடலுக்காக ஈவே ராவை தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். சீமானும் ஒரு காலத்தில் ஈவே ரா பக்தர் தான். இப்போ புத்தி தெளிந்திருப்பது நல்லது. ஈவே ராவை கடந்து நவீன ஏ ஐ காலத்துக்குரிய அரசியல் செய்யாவிடில்.. சீமான் அல்ல.. எவருமே வளரும் சந்ததியிடம் செல்வாக்கு செய்ய முடியாது.
-
கஜகஸ்தானில் பயணிகள் விமானம் வெடித்து சிதறியது
புட்டின் தனது நாட்டு வான்பரப்பில் விமானத்துக்கு நேர்ந்த துரதிஷ்ட சம்பவத்துக்கே தன் அனுதாபத்தை வெளிக்காட்டி இருக்கிறார். இந்த விமானத்தை தனது ரோனை வைச்சு மோதி வெடிக்க வைச்சு ரஷ்சியாவுக்கு சிக்கலை உருவாக்க உக்ரைன் பயங்கரவாத நாடு மேற்குலக ஆலோசனையின் பேரில் செயற்பட்டிடுக்கலாம். ஏனெனில் மேற்குலக ஊடகங்கள் கூவிற கூவல் அப்படி. ஆனால் ஈரானில் வைச்சு உக்ரைன் விமானத்தை சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க வான் காப்பு பொறிமுறை சுட்டி வீழ்த்தியை இட்டு மேற்குலகம் மற்றும்.அமெரிக்கா ஒரு இரங்கலும் இல்லை. ஆதில்.நெதர்லாந்து பயணிகளே அதிகம் கொல்லப்பட்டிருந்தனர்.
-
2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துங்கள்
நினைவஞ்சலி. இந்த சுனாமியில் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு வந்த சர்வதேச நிதி உதவிகளை அந்த மக்களுக்கு போய் சேர்வதை அன்று தடுத்த ஜேவிபி யே இன்று ஆட்சியில். ஜே வி பி சிந்தனையில் பெரிய மாற்றம் இருப்பதாகத் தெரியவில்லை. இலங்கை வாழ் சிறுபான்மை மக்கள் சிங்கள ஆட்சியாளர்களை சார்ந்தே வாழ வேண்டும் என்பதே ஜே வி பியின் சித்தாந்தம்.
-
இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளி சிறிதரன்!
யாழ் மாவட்டம் நன்னீர் தேவைக்கு வன்னியை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் வராது சரியான மழை நீர் சேமிப்பு.. குளங்கள் ஏரிகள் நீரை சேமிச்சு பாவிக்கவும் நிலத்தடி நீர்பிடிப்பை தக்க வைக்க கூடிய நீர் முகாமைத்துவம்.. மற்றும் கடல் நீரை நன்னீராக்கும் திட்டங்கள் என்று ஒருங்கிணைந்த திட்டங்களை பாவிப்பின். வீணான அரசியல் சண்டை இங்கு அவசியமில்லை. அது தமிழ் மக்களை மேலும் பிளவுபடுத்தி ஆதாயம் தேட நினைப்போருக்கே நன்மையாக அமையும். மக்களுக்கு அல்ல.