Everything posted by Justin
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
22 ஆசனங்கள் கூட்டமைப்பிற்குக் கிடைத்த போது "பின் கதவால்" (தேசியப் பட்டியலின் இன்னொரு பெயர்!) புலிகளால் உள்ளே கொண்டு வரப் பட்டவர் தற்போது அமரராகி விட்ட ஈழவேந்தன். சம்பந்தர் நாட்டிலேயே இருந்து செய்யக் கூடிய விடயங்களைச் செய்து கொண்டிருந்தார், இதற்குப் பயன் இருந்ததா இல்லையா என்பது வேறான ஒரு விவாதம். அமரர் ஈழவேந்தன், பா. உக்களுக்கான விசேட சலுகைகளைப் பாவித்து உலகம் சுற்றினார். "உலகம் சுற்றும், விடு முறையில் நிற்கும் பா.உவுக்கு விடுதி எதற்கு?" என்று சிங்கள அரசு பறித்துக் கொள்ள முயன்ற போது விடுதிக்காகவும் போராடினார். பின்னர் "அளவுக்கதிகமாக விடுமுறை எடுத்துக் கொண்டார்" என்று பதவியைப் பறித்த போது ஈழவேந்தன் கனடாவில் செற்றிலாகி விட்டிருந்தார். சம்பந்தன் காலமாகிய திகதிக்கு அண்மையாக இவரும் காலமானார். "சம்பந்தர் இறந்தது நல்லது" எனக் கொண்டாடிய புலம் வாழ் தேசிய வீரர்கள் பலர் ஈழவேந்தன் கனடாவில் பரத நாட்டிய அரங்கேற்றங்களில் ஆற்றிய வீராவேச உரைகள் காரணமாக அவரைப் போற்றிப் புகழ்ந்தனர். எங்கள் ஆட்களுக்கு, பேச்சுத் தான் முக்கியம்! வாய் மட்டும் இருந்தால் எங்கள் புலத் தமிழர்கள் பலரைப் பேய்க்காட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் இந்த சம்பந்தர் ஈழவேந்தன் ஒப்பீடு!
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
புலிகள் இல்லாமல் போனது சம்பந்தருக்கு ஏன் கவலையைக் கொடுக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்? சம்பந்தர் போன்ற ஆயுத வழியை எட்ட நின்று பார்த்த அரசியல் வாதிகளும், சில சமயங்களில் எட்டி நின்றாலும் சுடப் பட்ட சிவ சிதம்பரம் போன்றவர்களும் புலிகள் இல்லாமல் போனால் ஒப்பீட்டளவில் நல்லதென நினைத்திருப்பர் தான். இந்த நினைப்பின் தோற்றுவாய் சம்பந்தரிடம் இல்லை, அமிர், யோகேஸ்வரன் சுடப் பட்ட காலத்தில் இருக்கிறது. இதன் பிறகு எதை எதிர்பார்த்து, யார் சம்பந்தருக்கு தொலை பேசி எடுத்தார்களாம்?
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
இறுதியில் கண் விழிக்கும் போது முன்னே நிற்கும் எருமை இருக்கிறதே? அது தான் cherry on the top! சான்சே இல்லை😂!
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
புலவர் இனிப் போய் விடுவார்! வேறெங்காவது மீண்டும் வருவார், கேள்வி கேட்டால் மீண்டும் போய் விடுவார்😎! "சிவப்பு, பச்சை, நாவல்" என்று கலர் அடித்து விளையாடும் "முதிர்ந்தும் வளராத" பெரிசுகளுக்குரியவை தான் இது போன்ற திரிகள்😂! உண்மையா, திரிப்பா என்று உரசிப் பார்த்து வாசகர்களுக்கு தகவல் தெளிவை உருவாக்கும் பதிவர்களுக்குரியவையல்ல!
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
இதில் மூன்றாவது கருத்து மட்டும் பாதி உண்மை. ஏனைய இரண்டு கருத்துக்களும் முழுமையான உண்மைகள் தானே? உண்மையான ஒரு விடயத்தைச் சொன்னதற்கா சம்பந்தனுக்கு இவ்வளவு எதிர்ப்பு😂?
-
திருகோணமலை , முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்!
இது நிச்சயம் பெரிய அவியலாகத் தான் இருக்கும்! பேராசிரியர் சொல்லியிருக்க மாட்டார், வேறு எவராவது அவித்திருப்பர். இயற்கை அனர்த்தங்களில் இன்று வரை எதிர்வு கூர முடியாத ஒன்றாக இருப்பது நில நடுக்கம். இன்ன பிரதேசம் நில நடுக்கத்திற்கு அதிக வாய்ப்புள்ள இடம் என்று சொல்லலாம், ஆனால் எப்போது நிலம் நடுங்குமென எதிர்வு கூரும் தொழில் நுட்பம் எதுவும் இது வரை உருவாகவில்லை.
-
இந்தியா - ஐரோப்பிய ஒன்றியத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்!
அமெரிக்கா வசிப்பதற்கு நல்ல நாடு தான். ஆனால், 2016 இலும், பின்னர் 2024 இலும் கிடைத்த பாடங்களின் படி அமெரிக்காவின் கட்டமைப்பில் ஒரு பாரிய "ஓட்டை (vulnerability)" இருப்பது தெளிவாகி விட்டது: ட்ரம்ப் போன்ற உள்ளூரில் பிறந்த எந்த ஒரு பன்னாடையும் கொஞ்சம் காசைச் சேகரித்தால் அமெரிக்காவில் அதிபராகலாம் என்பது தான் அந்த ஓட்டை. இது போன்ற ஒரு ஓட்டையை 1780 களில் அமெரிக்க அரசியல் சாசனத்தை எழுதிய மூத்தோர் குழு எதிர்பார்க்கவில்லை. இனி இந்த ஓட்டையை அடைக்கவும் முடியாது. எனவே, படிப்படியாக அமெரிக்க டொலர், அமெரிக்க பங்குச் சந்தை, அமெரிக்க தொழில் நுட்பம் என்பவற்றில் இருந்து நாடுகள் விலகிச் செல்ல ஆரம்பிக்கும். கனடாவே இனி அமெரிக்காவுடன் பழைய நிலை உறவை நிலைநாட்டப் போவதில்லை எனும் போது, வேறு நாடுகள் விலகி ஓடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
சீவகன் அவர்களின் "அரங்கம்" தளத்தில் எழுதுவோரில், கருணாகரன் சுமந்திரன் சார்பாகவும், அழகு குணசீலன் சுமந்திரன், சாணக்கியன் எதிர்ப்பாகவும் எழுதுவர்.ஆனால், இருவரும் இந்த வாரம் எழுதியிருக்கும் ஆக்கங்களில், சுமந்திரனைத் தவிர நிர்வாக ஆளுமையும், தொடர்பாடல் இயலுமையும் உடைய இன்னொருவர் கட்சிக்குள் இல்லையென்ற அவதானிப்பைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். இந்த தகுதிகளுக்காக சுமந்திரன் செய்யும் எல்லாவற்றையும் ஆதரித்து ஊக்குவிக்க வேண்டுமென்பதில்லை, ஆனால் சுமந்திரனை ஒரேயடியாக தமிழ் அரசியலில் இருந்து அகற்றும் எண்ணத்தை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். 2020 தேர்தல் காலத்தில், சுமந்திரனுக்கு எதிராக புலம் பெயர் முகநூல் "போராளிகளும்", யோதிலிங்கம் போன்ற உள்ளூர் பத்திரிகையாளர்களும் முன்னெடுத்த எதிர்ப்புப் பிரச்சாரத்தின் போதே இதைச் சிலர் சுட்டிக் காட்டினார்கள். அந்த ஆண்டில் மகிந்த கட்சியின் அங்கஜன் யாழ்ப்பாணத்தில் பாரிய வெற்றி பெற்றார். இப்படியான நிலை 2024 இலும் தொடர்ந்தது. சிங்களக் கட்சியின் சார்பில் இன்று பல தமிழ் பா.உக்கள் உருவாகி விட்டார்கள்! "நமக்குத் தலை போனாலும் பரவாயில்லை, நாம் எதிர்க்கும் சுமந்திரன், சாணக்கியன் போன்ற தீவிர தேசியம் பேசாதோருக்கு மூக்குப் போக வேண்டுமென்ற" மன நிலை இருக்கும் வரை, சிங்களக் கட்சியிடம் மாகாணசபை கூடப் போகலாம்!
-
யாழ்ப்பாண கோட்டை மீளமைப்பு தொடர்பில் சுமந்திரன் நேரில் ஆய்வு!
ஏன், விபுலானந்தன் போல ஒரு மாணவன் இறந்து கிடப்பதாகவும் சீன் காட்டலாம். ஆனால், உல்லாசப் பயணிகளாக வருவோர் உங்களை விட வரலாற்றுக்கு மரியாதை கொடுப்போராக இருப்பர் என நினைக்கிறேன்😎. அதனால் தகவல் பலகைகளே போதும் அவர்களுக்கு!
-
சுவிற்சர்லாந்து மாநிலமொன்றின் முதல்வராக ஈழத்தமிழர்.
புலம் பெயர்ந்த தமிழர்கள் உயர் பதவிகளில் அமர்வது இன்னும் உங்கள் போன்றோருக்கு ஆச்சரியமாகத் தெரிவது தான் ஆச்சரியமான விடயம். இப்படியான பின்னணியில், ஒற்றை எஞ்சின் செஸ்னாவை ஓட்டி விட்டு "முதல் தமிழ் விமானி" என்பதும், உள்ளூராட்சி சபையில் தவிசாளர் பதவியைப் பெற்று விட்டு, "மாநில முதல்வர்" என்று பெருப்பிப்பதும் நகைப்பிற்குள்ளாக்கப் படுவது நடக்கும் தானே? தமிழர்கள் மட்டுமல்ல, இலங்கையில் இருந்து குடிபெயர்ந்த (உங்கள் பாசையில்) "மோட்டுச்" சிங்களவர்களும் வெளிநாடுகளில் உச்ச நிலைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவின் பிரபல ஆய்வுப் பல்கலைக் கழகமான Caltech இன் அடுத்த தலைவர் ஒரு இலங்கை சிங்களவர்! California Institute of TechnologyRay Jayawardhana Appointed Caltech's Tenth PresidentThe Johns Hopkins University provost, renowned astrophysicist, and award-winning author will begin as the Institute's leader on July 1, 2026.
-
யாழ்ப்பாண கோட்டை மீளமைப்பு தொடர்பில் சுமந்திரன் நேரில் ஆய்வு!
துரத்தப் பட்ட இராணுவம் எதிர்காலத்தில் திரும்பவும் வந்து குந்தி விடக் கூடாதென்ற பாதுகாப்புக் காரணம் தான் கோட்டை மிகக் கஷ்டப் பட்டு பகுதி பகுதியாக உடைக்கப் படக் காரணம். கோட்டைக்கு அண்மையில் இருந்த பாரிய யாழ் பிரதான தபாலகக் கட்டிடம், தளபாடங்கள் எல்லாம் புலிகளால் அகற்றப் பட்ட பின்னர் எரியூட்டப் பட்டும், உடைக்கப் பட்டும் யாரும் பயன்படுத்த இயலாத நிலையில் கைவிடப் பட்டதும் இதே பாதுகாப்புக் காரணமாகத் தான். அடிமைச் சின்னம் தான் கோட்டை என்றால், அதைப் பார்வையாளர்களுக்கு சுட்டிக் காட்டும் படியான தகவல் பலகைகள் வைத்து எங்கள் வரலாற்றை பிறர் அறியச் செய்த படியே சுற்றுலாப் பயணிகளிடம் பணமும் வசூலிக்கலாம். அல்லது, எங்களுக்கு உள்ளூர் மக்களுக்கு உதவக் கூடிய சுற்றுலாத் துறை வருமானத்தை விட "உணர்ச்சி பூர்வமான சாகசங்கள்" தான் முக்கியம் என்றால் பகுதி பகுதியாக உடைத்து அகற்றி விட்டு, அதை சிங்களவர் வந்து விகாரை கட்ட அனுமதிக்கலாம்😇!
-
🚀 அதிசயம் ஆனால் உண்மை – விண்வெளியில் ஒரு வரலாற்று சாதனை: பூமியிலிருந்து ‘ஒரு ஒளி நாள்’ தொலைவில் வொயேஜர் 1!
வொயேஜர்- 1, 1977 செப்டெம்பர் மாதம் செலுத்தினார்கள். வோயேஜர் 2 என்ற இன்னொரு கலத்தை '77 ஆகஸ்ட் மாதம் செலுத்தினார்கள். இரண்டுமே, பூமியில் இருந்தும், சூரியனில் இருந்தும் மிகத் தொலைவிற்குப் போய், யுரேனஸ், நெப்ரியூன் ஆகிய இரு கிரகங்களையும் கடந்து பறந்து படங்களைப் பூமிக்கு அனுப்பிய பின்னர், தற்போது அகிலப் பெருவெளியில் இன்னும் தகவல்களை அனுப்பியவாறு பறந்து கொண்டிருக்கின்றன. உண்மையிலேயே சாதனை தான். இரண்டு கலங்களினதும் செயல்பாடுகளை நாசா தளத்தில் பின் தொடர முடியும். NASA ScienceWhere Are Voyager 1 and 2 Now? - NASA ScienceBoth Voyager 1 and Voyager 2 have reached "interstellar space" and each continue their unique journey deeper into the cosmos.
-
கிரீன்லாந்து - ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்கா விதிக்க இருந்த மேலதிக வரி நீக்கம்
பன்னாடைக்கு உரிய வரவேற்புக் கிடைத்திருக்கிறது👍. பேச்சின் போது கிறீன்லாந்தையும், ஸ்கன்டினேவிய நாடான "ஐஸ்லாந்தையும்" 4 தடவைகள் போட்டுக் குழப்பிப் பேசி அமெரிக்காவில் தனக்கு வாக்குப் போட்ட முட்டாப் பீசுகளுக்கு தான் உரிய தலைவர் தான் என நிரூபித்து விட்டு வந்திருக்கிறது பன்னாடை😂! நான் ஏற்கனவே சுட்டிக் காட்டியது போல, "பல் துருவ உலகம்" உருவாக வேண்டும். ஆனால், ஐரோப்பியம், கனடா, அவுஸ்திரேலியா- நியூசிலாந்து ஆகிய துருவங்கள் தான் எதிர் துருவங்களாக வளர வேண்டும்.
-
யாழ். பல்கலைக்கழகத்தில், மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே 2 மாத காலம் கற்ற யுவதி.
வகுப்பிற்குப் பதிவு செய்த மாணவர்களே வந்திருந்து குறட்டை விட்டுத் தூங்கும் விரிவுரைகளில் பதிவு செய்யாத வெளியார் ஏன் தான் வந்திருக்கப் போகிறார்கள் என்ற எண்ணம் தான் இந்த நெகிழ்வுப் போக்கிற்குக் காரணம்😂. இது திறந்த வகுப்பறை - Open classroom என்ற கொள்கையினால் வந்த நடைமுறையல்ல. இப்படி விரிவுரை மண்டபங்களைத் திறந்து வைத்திருந்த சில இடங்களில் பாதுகாப்பு பிரச்சினையும் ஏற்பட்டிருக்கிறது. அண்மையில், பிறவுண் பல்கலையினுள் சனிக்கிழமை நடந்து கொண்டிருந்த ஒரு வகுப்பிற்குள் நுழைந்த மாணவரல்லாத ஒரு லூசுப் பயல் சுட்டதில் இருவர் உயிரிழந்தார்கள். இப்படி பட்ட சவால்கள் இந்த திறந்த வகுப்பறைகளில் இருக்கின்றன.
-
யாழ். பல்கலைக்கழகத்தில், மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே 2 மாத காலம் கற்ற யுவதி.
ஓம். இங்கே இணைப்புத் தர முடியாத செய்தியென்பதால் வட்சப் செய்தியாக இருக்கலாம்!
-
யாழ். பல்கலைக்கழகத்தில், மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே 2 மாத காலம் கற்ற யுவதி.
செய்தியின் மூலம் என்ன? முகநூலா? அல்லது அல்வாயன் யாழ் பல்கலை மருத்துவ பீடத்தில் பணியாற்றுவதால் "அமுக்கப் பட்ட" தகவல்களும் தெரிய வந்திருக்கின்றனவா😇? 2023/24 இல் யாழ் பல்கலை மருத்துவ பீடம் முஸ்லிம் மாணவிகள் முக்காடு போட்ட படி பரீட்சை எழுத அனுமதி மறுத்து, கண்டனங்களின் பின்னர் பின் வாங்கியது. இதை வைத்துக் கொண்டு அல்வாயன் போன்ற "இஸ்லாமின் நண்பர்கள்" முகநூலில் கதைகள் பரப்புகிறார்கள் என ஊகிக்கிறேன்.
-
📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –
கோடை காலம் வருகுதெல்லோ😎? நல்லூர்க் கொடியேற்றம் திடு திப்பென்று வந்து நிக்கும்!
-
இருதய சத்திரசிகிச்சைக்காக வரும் 25 - 30 வயதுக்குட்பட்ட இளையவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு
மேலே 👆 இருப்பது, இலங்கையில், 2013 - 2023 இல் இறுதியாக தரவுகள் சேகரிக்கப் பட்ட போது அதிக மரணங்களை ஏற்படுத்தும் காரணங்களாகக் கண்டறியப் பட்டவை. மாரடைப்பினால் ஏற்படும் மரணம் 43% வீத அதிகரிப்பு, மூளை இரத்த அடைப்பி(Stroke) னால் ஏற்படும் மரண வீதம் 26% அதிகரிப்பு. அடுத்த தரவு சேகரிப்பில், இந்த வீதங்கள் இன்னும் அதிகரித்திருக்கும். தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணை, பொரித்த/கரித்த உணவுகளின் பிரபலம், உடலுழைப்பின்மை, ஆண்கள் 30 தாண்டும் முன்பே பெற்றுக் கொள்ளும் "மாறாத தொப்பை"- இவையெல்லாம் தான் காரணங்கள். பாடசாலை மட்டத்திலேயே ஏதாவது செய்ய வேண்டும். இல்லா விட்டால் இதை மாற்ற வழிகள் இல்லை! தரவு மூலம்: https://www.healthdata.org/research-analysis/health-by-location/profiles/sri-lanka
- GBD-IHME-Sri Lanka
-
ஏழு கோடித் தமிழர்களுடனும் உறவைப் பேணத் தவறியது ஏன்?; கஜேந்திரகுமார் எம். பி. கேள்வி
2020 இல் இரண்டு பா.உக்கள் (ஒன்று வாக்குகள் மூலம், ஒன்று "பின் கதவு" 😎எனப்படும் தேசியப் பட்டியல் மூலம்) கொண்டிருந்த கஜேந்திரகுமாரும் தான் ஏழு கோடி தமிழக தமிழர்களின் தலைவர்களைச் சந்திக்கவில்லை. இப்போது ஒற்றை ஆசனமாகக் குறைந்த பின்னர் தான் புதிய ஞானங்கள் பிறந்திருக்கிறதா? கீழே 👇 இருக்கும் செய்தி யாழில் பகிரப் பட்ட போது, எழுந்த எதிர்ப்போடு எப்படி இந்த கஜேந்திரகுமாரின் ஆதங்கத்தை இணைத்துப் பார்ப்பது? Gold FM NewsSri Lankan MPs attend World Tamil Diaspora Day celebratio...Sri Lankan MPs attend World Tamil Diaspora Day celebrations in Chennai. Most visited website in Sri Lanka.
-
பிரான்ஸில் நாடு கடத்தப்படலாம் என்ற அச்சம் ; இலங்கைத் தமிழர் செய்த செயலால் ஒரு வருட சிறை
செய்தியிலேயே குற்றவாளியின் குற்றப் பொறுப்பை நிராகரித்து வெள்ளையடித்திருக்கிறார்கள் போல தெரிகிறது! குடிவரவு நிலை பற்றிய மன அழுத்தம் இருந்தால் தண்ணியப் போட்டு விட்டு தனது பொறுப்பில் இருக்கும் அப்பாவிப் பெண்களைத் தாக்கலாம் போல, பிரச்சினை தீர்ந்து விடும்! இவர் போன்றவர்களை பிரான்சில் வைத்து சாப்பாடு போடாமல், சிறிலங்கா ஜெயிலுக்கு அனுப்பி வைப்பது தான் நல்ல தெரிவாக இருக்கும்!
-
யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
மோகன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களும், பிரார்த்தனைகளும்!
-
சற்று முன்னர் கிளிநொச்சியில் பரபரப்பு.. பேருந்துடன் கார் மோதியதில் இருவர் பலி
காற்றுப் பை விரிவடைந்தமைக்கான எந்த அறிகுறிகளையும் காணவில்லை. இத்தகைய வாகனங்களை நம்பி எப்படிப் பயணம் செய்கிறார்கள்?
-
இயற்கையைப் போற்றுகின்ற தைத்திருநாளில் மண்பானைகளில் பொங்கல் இடுவோம் - பொங்கல் பொதிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஐங்கரநேசன் அழைப்பு
உணவுப் பாத்திரத்தில் இருக்கும் அலுமினியம் அமில உணவுகளைச் (தேசிக்காய்ப் புளி, மரப்புளி) சமைக்கும் போது சிறிது உணவுடன் சேரலாம். இதை leeching என்பார்கள். ஆனால், அப்படி உணவுடன் சேரும் அலுமினியம் உடலில் இருந்து அகற்றப் படும் அளவுக்கு மிகவும் குறைவான அளவு தான். இந்த அலுமினியத்தால் மூளை, நரம்பியல் பாதிப்புகள் ஏற்படுமென்பதற்கு ஆதாரங்கள் இல்லை. இன்னொரு விடயம், அலுமினியம் மண்ணிலும், தண்ணீரிலும் கூட இயற்கையாக இருக்கும் ஒரு உலோகம். மண்பானையில் இருந்து அலுமினியம் உணவுக்குள் கசியாதா? யாராவது இதை ஆராய்ந்து பார்த்திருக்கிறார்களா? மற்றபடி, மண்பானையில் சமைப்பதும் தண்ணீர் பரிமாறுவதும் தனிப் பட்ட விருப்பங்கள்.
-
காயங்களுடன் நியூயார்க் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட மதுரோவின் மனைவி சிலியா புளோரஸ்!
செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கி ஒருவர் பரப்பிய ஒரு படத்தைக் கூடச் சரி பார்க்காமல் அப்படியே இணையத்தில் இருந்து உருவிப் போட்டிருக்கிறது குளோபல் "ரொய்லெற்" ஊடகம்😂! பின்னணி: சிலியா மதுரோவின் முகத்தில் உராய்வுக் காயங்கள் (bruises) இருந்து உண்மை. கைதின் போது அவை ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் இந்தப் போலிப் படத்தில் இருப்பது போல அடி காயங்கள் இருக்கவில்லை. அவர் இவ்வாறு கோர்ட் சூட் அணிந்து நியூயோர்க் நீதிமன்றில் ஆஜராகவும் இல்லை! LatestLYDid Cilia Flores, Wife of Venezuela Leader Nicolas Maduro...A viral photo of Cilia Flores, the wife of Venezuela leader Nicolas Maduro, appearing in the New York court with bruises around her eye and a bandage on her forehead has surfaced on social media, spar