Everything posted by Justin
-
அமெரிக்காவின் அவலம்
2000 களில் மாணவனாக வந்த, ஒற்றையாளாக இருந்த எனக்கும் இதே அனுபவம் தான். ரியூசன் இலவசம் (50% பணி செய்த காரணத்தால்), மருத்துவ காப்புறுதி 90% இலவசம். வீட்டு வாடகையும், உணவும் தான் செலவு. அமெரிக்காவின் வறுமைக் கோட்டிற்குக் கீழானது என்று எனக்கும் அன்று தெரியாமல் வந்த சம்பளத்தில் ஊருக்கு அப்பாவின் செலவுக்கும் அனுப்பி, எஞ்சிய சேமிப்பில் முதல் வாகனமாக மூவாயிரம் டொலர்களுக்கு ஒரு பழைய காரை வாங்கி அதில் பழகி சாரதி அனுமதிப் பத்திரம் எடுக்கவும் முடிந்தது. இத்தனைக்கும் நான் மாநில அரசின் உணவு உதவியைக் கூட பெற்றுக் கொள்ள முயலவில்லை (ஒரு கௌரவ கவரி மான் சின்ட்றோம் தான்😂!). இப்படி குடியேறிகளாக வந்த என்னையும் உங்களையும் போன்ற பலரை இலவசங்கள், சலுகைகள் கொடுத்து நிமிர்த்தி விட்டிருக்கிறார்கள். அதே உதவிக் கரங்களை இனி வரும் குடியேறிகளுக்கும் ஓரளவு கொடுப்பதற்கு நாம் ஆதரவாக இருக்கிறோம். ஆனால், எம்மிடையேயும் சிலர் விசித்திரமாக இருக்கிறார்கள். உதாரணமாக, "பெரும்பாலான அமெரிக்கர்களின் வரியை உயர்த்தாமலே, படிப்புக் கடன் -student loan பெற்றவர்களுக்கு அரசு ஒரு பகுதிக் கடனைக் கட்டி அவர்களை மீட்கும்" என்று பைடன் அறிவித்த போது, எதிர்ப்புக் காட்டிய என் ஈழத்தமிழ் அமெரிக்க நண்பர்கள் பலர், இதே சலுகையெல்லாம் அனுபவித்து தற்போது செல்வந்தர்களாக இருப்போர் தான்! "என்ன டிசைனோ?" என்று அடிக்கடி நான் யோசிப்பதுண்டு😂!
-
கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறை வரலாற்றில் தமிழனுக்கு கிடைத்த முதல் அங்கீகாரம்!
பேராசிரியருக்கு வாழ்த்துக்கள் நிச்சயம் உரித்தாக வேண்டும்! ஆனால், தமிழரசு ஏன் இதை "வரலாற்று சாதனை,தமிழனுக்கு முதல் அங்கீகாரம்" என்று தலைப்புப் போட வேண்டி வந்திருக்கிறதென விளங்கவில்லை😂. இலங்கையின் கல்விப் புலத்திலும், தற்போது உலகத்தில் இருக்கும் கல்வி நிறுவனங்களிலும் பல ஈழத்தமிழர்கள் தலைமை பொறுப்புகளில் சத்தமில்லாமல் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவை சாதனைகள், நல்ல விடயங்கள். ஆனால், யூ ரியூபர்களின் அலட்டல் வீடியோக்களுக்கு இத்தகைய கல்விப் புல ஆளுமைகள் சில்லறைக் காட்சிப் பொருளாவதில் உடன்பாடில்லை!
-
அமெரிக்காவின் அவலம்
ஏராளனுக்கு இவை தெரிந்தே இருக்குமென நம்புகிறேன். ஊரில் இருப்போருக்கு பெரும்பாலானோருக்கு தற்போது நிலைமை விளங்கியிருக்கலாம் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், போன ஆண்டு இறுதியில் ஒரு நிகழ்வில் ஒருவரைச் சந்தித்த போது அப்படியல்ல என்று புரிந்தது. இலங்கையில் வங்கியில் ஒரு நல்ல வேலையில் இருந்த ஒருவர், அமெரிக்காவிற்கு வந்து சேர்ந்திருந்தார். எப்படி வந்தார் என்று நான் கேட்கவில்லை, ஆனால் குடும்பத்தோடு வந்திருந்தார். வேலை கிடைக்கவில்லை, மருத்துவக் காப்புறுதி இல்லை. நேரடியாக வங்கித் துறையில் வேலை கிடைத்து விடும் என்ற தவறான புரிதலில் வந்தாரோ தெரியவில்லை. மிகவும் கஷ்டப் பட்டார், என்ன செய்தார் என்று தெரியவில்லை.
-
ஜனாதிபதியை சந்தித்தது இலங்கை தமிழரசுக்கட்சி
கடந்த காலங்களில் சுமந்திரனும் தமிழரசுக் கட்சியும் இதைக் கோரிக்கையாக வைத்த ஆதாரங்களை இங்கே முன் வைத்தால், என்ன செய்து விடப் போகிறீர்கள்? வழமை போலவே நைசாக கடையை மூடி விட்டுப் போய் விடுவீர்கள்😂. பின் அடுத்த படத்தைக் கண்டதும் வந்து ஏதோ அலட்டுவீர்கள்! ஒவ்வொரு முறையும் ஒன்றைச் சொல்வீர்கள், அதற்கு படங்கள் இணைத்துக் கூட ஆதாரங்கள் தந்தால் "எஸ்" ஆவதைத் தவிர நீங்கள் ஒன்றும் உருப்படியாக விமர்சனம் வைப்பதில்லை. இதை வாசகர்கள் கவனிக்க வேண்டுமென்பதற்காகவே இங்கே அழைத்தேன்!
-
அமெரிக்காவின் அவலம்
எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை, அமெரிக்காவில் (அல்லது எந்த மேற்கு நாட்டிலும்) வருமானம் இல்லா விட்டால் வாழ முடியாது. வருமானம் வேலையின் மூலம் பெற்றுக் கொள்ள முடியாதோர், அல்லது வரும் வருமானம் போதாமல் இருப்போர் ஆகிய தரப்பினருக்காக 60 களில் உருவாக்கப் பட்ட SNAP உணவுத் திட்டத்தைப் பற்றி அபிலாஷ் நுனிப்புல் மேய்ந்திருக்கிறார். இது பணவீக்கம் அதிகரித்தமையால் மக்கள் பட்டினி கிடக்க ஆரம்பித்த பின்னர் உருவான திட்டமல்ல. வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்போருக்கான உதவித் திட்டம் அவ்வளவு தான். வறுமை இல்லையானால் பெற்றுக் கொள்ள முடியாது. மற்றபடி இது மட்டுமே அமெரிக்காவில் உணவு உதவி புரியும் திட்டம் என்றும் சொல்ல முடியாது. பல்வேறு தொண்டு அமைப்புகளும், உள்ளூர் அரசு அமைப்புகளும், பள்ளிக் கூடங்களும் கூட குழந்தைகள் பட்டினி கிடக்காமல் இருக்க திட்டங்கள் வைத்திருக்கிறார்கள். தெருவில் நிற்கும் இந்தியர்களை மாடமாளிகையில் வாழும் இந்தியர்கள் பார்த்துக் கொள்வதை விட சிறப்பாக இங்கே வாழும் மக்கள் இத்தகைய திட்டங்களுக்கு நன்கொடை வழங்கி ஏனையோரின் பசி தீர்க்க உதவுகிறார்கள்.
-
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
இலங்கையிலும் பாராளுமன்றத்திற்கு வெளியே இதைச் செய்ய முடியாது. அர்ச்சுனா மட்டுமல்ல, கஜேந்திரகுமார் போன்றோர் கூட பாராளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி உள்ளே பேசலாம். அதற்கும் கட்டுப் பாடுகள் உண்டு - பேசி ஒலி/ஒளி போடலாம். ஆனால், கட்டுப் பாடுகளை மீறினால் அப்படியொரு உரை நிகழ்ந்ததற்கான அடையாளமே இல்லாமல் ஹன்சாட்டிலிருந்து உரையை அகற்றி விட முடியும். இதை விட நுணுக்கமான வேறு விடயங்களும் உண்டு. இலங்கை அரசியலைமைப்பின், "பிரிவினை கோருதல் குற்றம்" என்று சொல்லும் "6 வது திருத்தச் சட்டத்தை ஏற்றுக் கொள்கிறேன்" என்று சத்தியப் பிரமாணம் எடுத்துத் தான் பா.உ க்கள் எல்லோரும் பதவியேற்றிருக்கிறார்கள். ஆனால், அனல் பறக்கும் பேச்சுக்களை மட்டும் கவனமாகப் பேசுவர்!
-
ஜனாதிபதியை சந்தித்தது இலங்கை தமிழரசுக்கட்சி
சுமந்திரனின் படம் போட்டு 3 மணி நேரமாகிறது! @satan நலமாக இருக்கிறாரா? எங்கே காணவில்லை😇?
-
கோடி ரூபாயில் யாழில் உருவாகப்பட்ட சொகுசுப்படகு! வெள்ளோட்டம் குறிகட்டுவானில் | Luxury tourist Ship
என்னது? காசு ..இல்லையா? சரி போகட்டும்! "Money is not everything" credit cards, letter of credit, unlimited credit line..என்று பல விடயங்கள் இருக்கே? அதில ஒன்றை எடுத்து "வியாபாரக் காந்தமாக" வலம் வரலாமே😂?
-
ஹிட்லரின் ரத்தக்கறை படிந்த துணியை மரபணு ஆய்வு செய்ததில் கிடைத்த முடிவு என்ன?
இது முற்றிலும் சரியான தகவல் அல்ல. "யூதம்" ஒரு மதம் என்பது சரி. ஆனால் யூத மக்களின் வாழ்க்கை முறை, மணம் முடிக்கும் முறைகள் காரணமாக jewishness என்பது அவர்களது தாய்வழியின் (matrilineal) ஊடாகப் பேணப் பட்டு வரும் ancestry உதாரணங்கள் இருக்கின்றன. உதாரணமாக மத்திய, கிழக்கு ஐரோப்பிய யூதர்களை அஷ்கெனாசி (Ashkenazi) யூதர்கள் என்பார்கள். இவர்களின் சிறுமணி டி.என்.ஏ (mitochondrial DNA) யில் அவர்களின் தாய்வழி அஷ்கெனாசி டி.என்.ஏ பண்பு இருக்கிறது என்று நிரூபித்திருக்கிறார்கள். பல ஆண்டுகள் முன்னர், இந்தியாவின் கிழக்கு மாநிலத்தில் இருந்து "நாம் கிழக்கு நோக்கி குடிபெயர்ந்த போது தொலைந்து போன யூத கோத்திரங்களில் (tribe) இருந்து வந்தவர்கள்" என்று ஒரு இந்திய யூதர்கள் சமூகம் இஸ்ரேலுக்குச் சென்று டி.என்.ஏ பரிசோதனையை கோர்ட்டில் சமர்ப்பித்து இஸ்ரேல் குடியுரிமையைப் பெற்றார்கள். "யூத ஜீன்" என்ற ஒன்று இல்லை, ஆனால் ancestry இன் வழியாக யூதப் பின்னணியைக் கண்டறியலாம், நிரூபிக்கலாம்.
-
கோடி ரூபாயில் யாழில் உருவாகப்பட்ட சொகுசுப்படகு! வெள்ளோட்டம் குறிகட்டுவானில் | Luxury tourist Ship
அப்படி வாங்கினால் இரண்டு விடயங்களை நிச்சயம் செய்யுங்கள். பள பள (satin) வெள்ளையாக இருக்கும் உள் வர்ணத்தை off white ஆக, அல்லது வேறொரு வெளிர்நிறமாக மாற்றி விடுங்கள். தரையை இப்படி வளுக்கல் தரையாக வைத்திருக்காமல், எங்கள் ஊர் லேலண்ட் பஸ்களில் இருக்கும் உராய்வு கொண்ட (friction) தரையாக மாற்றுங்கள். இல்லா விட்டால், கனடா இலண்டனில் இருந்து இதற்காகவே கூட்டமாக பிளைற் பிடித்து வந்து படகில் வழுக்கி விழுந்த பின்னர் நஷ்ட ஈடு கேட்டு வழக்குப் போடுவார்கள்😂. நீங்கள் நஷ்ட ஈடு கொடுக்க இயலாமல் படகை நீங்களே மூழ்கடித்து விட்டு அதற்குரிய காப்புறுதியை எடுத்துக் கொண்டு பிரிட்டனுக்கு வந்து விட வேண்டியிருக்கும்! பிகு: இப்படித் தப்பிப் போவது தவறென்று யோசிக்காதீர்கள்! பிரிட்டன் சட்டங்களில் இதற்குரிய ஓட்டைகள் சலுகைகள் உங்களுக்கு இருக்கும், யாழ் களத்திலேயே உங்களுக்கு லோயரைப் பிடிக்கலாம்😎!
-
கோடி ரூபாயில் யாழில் உருவாகப்பட்ட சொகுசுப்படகு! வெள்ளோட்டம் குறிகட்டுவானில் | Luxury tourist Ship
பாராட்டுக்கள்! ஆனால், சரியாக ஒரு வருடம் கழித்து இந்த யூ ரியூபர் இதே படகைச் சென்று பார்த்து வீடியோ போட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். படகின் உள்ளக வர்ணத்தை நம் ஊரின் சூழ்நிலை தெரியாமல் வெள்ளையாக ஆக்கியிருக்கிறார்கள். என்ன ஆகுமோ தெரியவில்லை😂!
-
கழிவிலிருந்து மின்சார உற்பத்தி திட்டத்தை முன்வைத்த வடக்கு ஆளுநர்!
இந்த கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நுட்பம் எப்படி வேலை செய்கிறது என்று யாருக்காவது தெரியுமா? கழிவிலிருந்து உயிர்வாயு (Biogas) எனப்படும் மீதேன் வாயுவை உற்பத்தியாக்கி, அதன் மூலம் நீராவி உருவாக்கி மின்சாரமா? மீதேன் வாயு, காபனீரொட்சைட்டை விட 6 மடங்கு மோசமான ஒரு பச்சை வீட்டு விளைவு வாயு. இதனால் சூழல் மாசடைதல் மோசமாகாதா?
-
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் எழுதிய “சட்டத்தின் ஆட்சி” என்ற நூல் சொல்லும் செய்தி!
ஈழத்தமிழர்களும் அவர்களது பிரச்சினையும் தான் "உலகத்தின் மையம்" என்ற நினைவில் நிக்சன் சீனாவில் நடக்கும் "சட்ட ஆட்சி"😎 யை விபரித்திருக்கிறார் என நினைக்கிறேன். நிக்சனின் இந்த விதந்துரைப்பை திபெத்தியர்களிடமும், சிங்ஜியாங் பிரதேச முஸ்லிம் சீனர்களிடமும் காட்டினால் சக துவாரங்களாலும் சிரிப்பார்கள் என நினைக்கிறேன்!
-
கட்டு வரியன் பாம்பு கடித்தால் தூக்கத்திலேயே மரணம் ஏற்படுமா?
பாம்புக் கடி வைத்தியம் பற்றிப் பேசும் போது இந்த தொடர்பு பட்ட செய்தி கண்ணில் பட்டது. சஹாரா பாலைவனத்திற்குக் கீழான ஆபிரிக்க நாடுகளில் பாம்புக் கடி மரணங்கள் அதிகம். அங்கே காணப்படும் மாம்பா போன்ற கொடிய விசப் பாம்புகளும், வைத்திய வசதிகள் இன்மையும் பிரதான காரணங்கள். அண்மையில், இந்தப் பகுதியில் காணப்படும் 18 விசப் பாம்புகளுள், 17 இற்கெதிராக வேலை செய்யக் கூடிய வகையில் ஒற்றை விச முறிப்பு மருந்தைப் (Polyvalent antivenom) பரீட்சித்திருக்கிறார்கள். வழமையாக குதிரைகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஒரு பாம்பினத்தின் விசத்தை ஏற்றி, குதிரையில் நோயெதிர்ப்பை உண்டாக்கி, அதன் பின்னர் அதன் இரத்தத்தில் இருந்து அந்தப் பாம்பினத்திற்கெதிரான விசமுறிப்பு மருந்து எடுக்கப் படுவதே வழமை. இந்த ஆய்வாளர்களோ, அல்பகா (Alpaca), லாமா (Lama) ஆகிய ஒட்டக விலங்குகளில் 18 பாம்புகளின் விசத்தைப் படிப்படியாக ஏற்றி, அவற்றின் இரத்தத்தில் இருந்து 17 பாம்புகளுக்கெதிரான விச முறிப்பு மருந்தை வெற்றிகரமாகப் பிரித்தெடுத்திருக்கிறார்கள். https://www.nature.com/articles/d41586-025-03541-3 இலங்கையிலும் இந்தியாவிலும் பயன்படும் விச முறிப்பு மருந்துகள் நாகம், முத்திரைப் புடையன், சுருட்டை விரியன், கண்டங் கருவளை ஆகிய 4 பாம்புகளுக்கெதிராகவும் வேலை செய்யக் கூடியவை . இவை இந்தியாவில் உற்பத்தியாகும் மருந்துகள்.
-
21ஆம் திகதி பேரணியில் என்னால் கலந்து கொள்ள முடியாது – மஹிந்த
சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன் போன்ற நம் இன பா.உக்கள் ஊழலே அற்றவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்! உண்மை தான் போலிருக்கு😂!
-
மன்னிப்புக் கோரல் எல்லோருக்கும் பொதுவானதுதானா?
பாதிக்கப் பட்டவன் வலியை நினைவுகூர்கிறான், அதையொட்டி "ஏன் இன்னும் நினைவு கூருகினம்? இவர்களை வெளியேற்றியதில் இருந்த நன்மைகளையும்😂 பார்க்க வேண்டாமா?" என்று லக்ஸ்மன் எழுதுவது வெறும் கருத்தாக, பாராட்டுக்குரிய கருத்தாக உங்களுக்குத் தெரிகிறது. பலருக்கு அப்படியில்லை, முக்கியமாக தலை விறைத்தவர்கள் பலருக்கு அப்படியில்லை!
-
மன்னிப்புக் கோரல் எல்லோருக்கும் பொதுவானதுதானா?
நீங்கள் ஒப்புக் கொள்வது போல அதில் தவறில்லையென்றால் லக்ஸ்மன் ஏன் எழுதுகிறார்? இதே கருத்தைச் சொல்லும் நான் எப்படி தலை விறைத்தவனாகத் தெரிகிறேன்? ஒன்று "வலியை வெளிப்படுத்துவது தவறில்லை" என்ற உங்கள் கருத்து நடிப்பாக இருக்க வேண்டும், அல்லது இங்கே பெயின்ற் வாளி காவுவோரை கண்டிக்கும் ஆட்கள் என்ன சொல்கிறார்கள் என்பது உங்களுக்குப் புரியாமல் இருக்க வேண்டும். உங்களுக்கே வெளிச்சம்😂!
-
சிறுநீரக நோய் பாதிப்பு அதிகரிப்பு - அறிகுறிகளும் தடுக்கும் வழிகளும்
இலங்கையின் வடக்கு, மற்றும் வடமத்திய மாகாணங்களில் பரவலாகக் காணப்படும் "நாள்பட்ட சிறுநீரக வியாதி-CKD" பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வூட்ட வேண்டும். கீழே இது பற்றி அமெரிக்க பல்கலையொன்றின் ஆய்வு இருக்கிறது. Think Global HealthThe Mysterious Kidney Illness Rising Among Sri Lankan Far...Are pesticides in drinking water to blame for kidney disease among young farmers? சுருக்கமாக, கல்சியமும், மக்னீசியமும் உயர்வாக இருக்கும் தண்ணீரில், கிளைபொசேற் , பராகுவாட் போன்ற களை கொல்லிகள் நீண்டகாலம் தங்கி நிற்பதால் நாள்பட்ட சிறுநீரக வியாதி உருவாகலாம் என ஊகிக்கிறார்கள். எளிமையான வழிகளாக, வரட்சிப் பிரதேசங்களில் வாழ்வோர் நீரிழப்பைக் குறைப்பதும், சுத்திகரித்த தண்ணீரைக் குடிப்பதும் சிறுநீரக நலனுக்கு உதவலாம்!
-
மன்னிப்புக் கோரல் எல்லோருக்கும் பொதுவானதுதானா?
வலி இருப்பவன் நினைவுகூர்வதில், மீட்டுப் பார்ப்பதில் தவறில்லை - இதைத் தான் மீள மீள பலர் இங்கே சொல்லி வருகிறார்கள். தான், அல்லது தன் கட்சி எரிக்காத யாழ் நூலகத்திற்காக, சந்திரிக்கா மன்னிப்புக் கேட்டார் என நினைக்கிறேன். நாம் வலியை மறந்து சிரித்துக் கொண்டிருக்கிறோமா? இல்லையல்லவா? எனவே, அவர்களைப் பொறுத்த வரை ஒரு பாரிய சமூக அவலத்தை முஸ்லிம்களும் நினைவு கூர்வர். நியாயத்தைப் புரிந்து கொள்ளும் தமிழ் தரப்பினர் அவர்களைப் புரிந்து கொள்வர். பெயின்ற் வாளியோடு அலையும் லக்ஸ்மன் தரவழிகளும் தொடர்ந்து எழுதிக் கைதட்டு வாங்குவர்! இது ஒரு வட்டம்!
-
பெண்ணால் ஏற்பட்ட சர்ச்சை ;செல்வம் அடைக்கலநாதனின் தலைமை பதவிக்கு நெருக்கடி!
இவரையெல்லாம் "கள்ள மௌனத்தோடு மொள்ளக் கடந்து" போய் விடுவீனம் எங்கள் பட்டாசு உறுப்பினர்கள்😂! ஆனால் சுமந்திரன் அல்லது சாணக்கியன் ஒரு போட்டோவுக்கு போஸ் கொடுத்தாலே மூத்திரம், சீ ஆத்திரம் வந்து வெடித்துத் தள்ளி விடுவார்கள்😎!
-
அரசியற் தீர்வும் – பொறுப்புக் கூறலும் : ஓர் எண்ணிம ஆவணக் காப்பக அறிமுக நிகழ்வு !
😂"சட்டத்திற்கும் கொள்ளைகளுக்குமான" - அததெரணவிற்குத் தான் தமிழ் எழுத்துக் கருத்துப் பிழைகள் கண்டறிய முடியவில்லையென்றால், குளோபல் தமிழ் செய்திகளுக்கும் தமிழ் பிழைகள் தெரியவில்லையா? இரண்டுமே ஒரே ஆட்களால் நடத்தப் படும் தளங்களா?
-
கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு; சந்தேக நபர்கள் யாழில் கைது!
இது American Pit Bull Terrier வகை நாய். சரியான போசணை, பராமரிப்பு இல்லாமல் இப்படியான தோற்றம் காட்டுகிறது. ஆனால் இந்த வகை நாய்க் குட்டிகளின் விலை இங்கே 500 முதல் 2000 டொலர்கள் வரை இருக்கும்.
-
காணாமற் போனவர்கள் இறந்து விட்டார்கள் எனக் கருதப்படுகிறது
தியா, நிகே ஆகியோர் வசிக்கும் மினசோட்டா மாநிலத்தில் இருந்து, ஆங்கிலத்தில் எங்கள் கதைகளை எழுதுபவர் வி.வி. கணேஷானந்தன். 2023 இல் வெளிவந்த "Brotherless Night" என்ற நாவல் ஜூலைக் கலவரம், சகோதரப் படுகொலைகள், ராஜினி திராணகம கொலை, ஆனந்தராஜா மாஸ்ரர் கொலை ஆகிய விடயங்களை உள்ளடக்கிய ஒரு அருமையான நாவல். தற்போது ஆமை வேகத்தில் வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஏனையோரும் வாசிக்க வேண்டிய ஒரு அரிய நாவல். https://www.amazon.com/Brotherless-Night-Novel-V-Ganeshananthan/dp/0812997158
-
கட்டு வரியன் பாம்பு கடித்தால் தூக்கத்திலேயே மரணம் ஏற்படுமா?
தாயகத்திலிருந்த போது இலங்கை சுகாதார அமைச்சு, புலிகளின் சுகாதாரப் பிரிவு, டொக்ரர் முருகானந்தனின் வெளியீடுகள் என்பன பாம்புக் கடியின் போது செய்ய வேண்டிய முதலுதவிகள் பற்றி பிரசுரங்கள் வெளியிட்டிருக்கிறார்கள், கண்டிருக்கிறேன். ஆனால், மக்களைச் சென்றடைவதில் சிக்கல்கள் இருக்கின்றன. சுருக்கமாக: செய்ய வேண்டியவை: 1. பாம்பு கடித்தவர் பதற்றமடையாமல் வைத்திருக்க வேண்டும். சுற்றியிருப்போர் குய்யோ முறையோ என்று குழம்பினால் கடிக்காளானவரும் பதற்றமாவார் - நஞ்சு விரைவாக உடலில் பரவும். 2. ஓய்வு நிலையில் படுக்க வைத்திருப்பது சிறந்தது. 3. கடி காயத்தில் ஏதாவது மண், அழுக்கு இருந்தால் சுத்தமான நீரும் சவர்க்காரமும் பாவித்துக் கழுவலாம். இதில் ஒரு விடயம் கவனிக்க வேண்டும்: புடையன் (viper) பாம்பு கடித்திருந்தால், கடந்து விட்ட நேரத்தைப் பொறுத்து காயத்தில் இருந்து இரத்தம் உறையாமல் வடிய ஆரம்பித்திருக்கும். இப்படியான நிலையில், கழுவுவதை விட்டு விட்டு, ஒரு சுத்தமான துணி அல்லது gauze பாண்டேஜினால் அழுத்தம் கொடுக்கலாம். 4. பாம்பை படம் எடுத்து மருத்துவமனைக்கு செல்வோருடன் அனுப்பலாம். பாம்பை அடித்துக் கொன்று எடுத்துச் செல்லலாம், ஆனால் அதற்காக நேரம் செலவழிக்கக் கூடாது. கடி பட்டவரைக் கவனிப்பதே முக்கியம். 5. உடனடியாக மருத்துவ மனைக்குக் கொண்டு செல்ல வேண்டும். செய்யக் கூடாதவை: 1. கடிகாயத்திலிருந்து இதயம் நோக்கிச் செல்லும் இரத்தத்தை நிறுத்துவதற்காக இறுக்கக் கயிறு, பட்டி ஆகியவற்றால் கட்டுதல் கூடாது. இது பழைய கால நம்பிக்கை, ஆனால் இது தவறானதும் ஆபத்தானதுமான செயல். 2. கடிகாயத்தை அல்ககோல் போன்ற எரிவூட்டும் பதார்த்தங்களால் சுத்திகரிக்கக் கூடாது. 3. கடிகாயத்தை கீறுதல், வாயால் (80 களில் தமிழ் திரைப்படங்களின் கதாநாயகன் செய்வது போல😂) கடித்து உறிஞ்சுதல் என்பன செய்யக் கூடாது. 4. நாட்டு வைத்தியம், மந்திரம் என்ற பெயரில் கடி பட்டவர் மருத்து மனைக்குச் செல்வதைத் தாமதிக்கக் கூடாது. விசத்தை உறிஞ்சும் கல் என்பதெல்லாம் போலி மருத்துவங்கள். பயனற்ற நேர விரயங்கள்.
-
கட்டு வரியன் பாம்பு கடித்தால் தூக்கத்திலேயே மரணம் ஏற்படுமா?
இலங்கையில் கட்டு வரியனை கண்டங் கருவளை என்பார்கள். முத்திரைப் புடையன் , கண்ணாடி விரியன் இரண்டும் Russel's viper எனப்படும் மூர்க்கமான புடையன் பாம்பின் தமிழ் பெயர்கள். கட்டுரையில் இருக்கும் கட்டு வரியன் இந்தியாவிலும் இலங்கையிலும் இருக்கின்ற வகை (common krait - Bungarus caeruleus). இதை விட இலங்கைக்கே உரித்தான கட்டு வரியன் பாம்பினம் Ceylon krait (Bungarus ceylonicus) இலங்கையில் மட்டும் காணப்படுகிறது. பெரிதாக வித்தியாசம் சாதாரண மக்களால் இந்திய இலங்கை கட்டு விரியன்களிடையே காண முடியாது. தமிழில் இரண்டும் கண்டங் கருவளை என அழைக்கப் படும். ஆனால், சிங்களத்தில் இந்தியக் கட்டு விரியனை "தெல் கரவலா" என்றும், இலங்கையின் கட்டு விரியனை "முது கரவலா" என்றும் அழைப்பார்கள். இந்தியாவில் உற்பத்தி செய்யப் படும் இந்தியக் கட்டு வரியனுக்கெதிரான விஷ முறிப்பு மருந்து, இந்திய, இலங்கை கட்டு வரியன் பாம்புகள் இரண்டிற்கெதிராகவும் வேலை செய்யும் என்பது ஆறுதலான செய்தி!