Everything posted by பெருமாள்
-
சம்பந்தர் காலமானார்
துரோகம் செய்தவர்களை துரோகி என்றுதானே அழைப்பது வழமை மாறாக சந்தியில் வைத்து அடிப்பது எல்லாம் எந்த வகையில் சேர்த்தி ?
-
சம்பந்தர் காலமானார்
ஒன்றையும் தமிழருக்கு பெற்று தரவில்லை பரவாயில்லை சிங்களத்தின் குணம் அப்படி திருமலையை சிங்களமாக மாற்றும் திட்டத்துக்கு கண்டும் காணமால் இருதவர்தானே கொழும்பு வீட்டுக்கு ஆசைபட்டு இந்த வயதிலும். இப்படி சொந்த இனத்துக்கு கேடு விளைவித்த கருணா இறந்தால் ஆழ்ந்த அனுதாபம் இரங்கல் தகுதி உடையவரா ? இல்லையே அது போலத்தான் . லண்டனில் சம்பந்தர் இறந்த செய்தி கேட்டு வெடி கொளுத்தி கொண்டாடினார்கள் வடகிழக்கு தமிழர்கள் என்ற செய்தி வராத மட்டும் சந்தோசபடுங்க . பலவருடகால அனுபவம் எல்லாம் இருந்தும் ஒன்றுமே தமிழருக்கு கிடைக்கவில்லையே ?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துகள் பிரியன் அண்ணை
-
Abdul Hameed: "இப்படிச் செத்துப் பிழைப்பது எனக்கு மூன்றாவது அனுபவம்!"- பி.எச்.அப்துல் ஹமீது உருக்கம்
தமிழும் தமிழர்க்கும் தனது உச்சரிப்பு மூலம் தமிழை வளர்த்த தமிழ் வைரம் ஐய்யா நீங்கள் நீடூழி வாழ அந்த அல்லா அருள் புரியட்டும் .
-
பூமியைத் தாக்கப் போகும் சிறுகோள்!
தொடங்கிட்டாங்க .......................😀
-
நீண்ட நெடிய இடைவெளிக்கு பிறகு உறவுகளுக்கு வணக்கம்!
வணக்கம் சுண்டல். உங்களை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி.
-
இந்துஜா குடும்பத்தினருக்கு 4.5 வருட சிறை தண்டனை
அந்த மேல் தட்டு கொள்கை வகுப்பாளர்களின் முடிவே நாம் இப்படி நாடிழந்து தெரு தெருவாய் அலைவதுக்கு ஒரு காரணம் .
-
இலங்கையில் அவசர தரையிறக்க தளம் அமைக்க தயாராகும் அமெரிக்கா
இலங்கை புவிசார் அரசியல் போட்டி நாடாக இருக்கும் நிலையில் இலங்கையில் அவசர தரையிறக்க தளம் அமைக்க அமெரிக்கா தயாராகும் என அரசியல் ஆய்வாளர் வேல் தர்மா தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார். அதாவது மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இது தொடர்பில் இரகசிய ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டதாகவும், பின்னர் மைத்திரி,ரணில் ஆட்சிக்காலத்தில் நீடிக்கப்பட்ட நிலையில் கோட்டாபய ராஜபக்ச அதற்கு தடையேற்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆசியாவில் தான் ஒரு வளர்ந்து வரும் வல்லரசு நாடு என்ற அடிப்படையில் இந்தியா தன்னுடைய கட்டுப்பாட்டில் இலங்கை இருக்க வேண்டும் என்று நினைக்கின்றது. அதற்கும் மேலாக அமெரிக்காவும் பல முயற்சிகளை செய்து வருகின்றது. இந்த விடயத்தில் இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான ஒரு முறுகல் திரைமறைவில் மறைமுகமாக இருக்கத்தான் செய்கின்றது. இந்த நிலையில், இலங்கையில் அமெரிக்காவும் இந்தியாவும் போட்டி போட்டால் அது இரு தரப்பு போட்டியல்ல. அது முத்தரப்பு போட்டி. அதில் சீனாவின் கையே ஓங்கியிருக்கும். இலங்கையை பொறுத்தமட்டில் மகா சங்கத்தினர் பலம் அதிகம். அவர்கள் சீனாவுக்கே தங்களது ஆதரவு கொடுப்பர். குறிப்பாக, இலங்கையில் அரகலய போராட்டத்தின் போது மகா சங்கத்தினர் ஓரங்கட்டப்பட்டனர். https://tamilwin.com/article/america-new-project-in-srilanka-1719067659
-
மரணத் தருவாயில் நம் மூளையில் மகிழ்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்கள் சுரக்கின்றனவா?
நாம் வாழ்வது ஒரு Simulation உலகம் என்கிறார்கள் நான் முதலில் நம்பவில்லை ஆனால் நடக்கும் செயல்கள் அதை உறுதி படுத்துவது போல் உள்ளது .
-
மரணத் தருவாயில் நம் மூளையில் மகிழ்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்கள் சுரக்கின்றனவா?
கொஞ்ச நாளா இந்த தமிழ் பிபிசி இருக்கும் இல்லையா எடுக்கும் இல்லையா இப்படித்தான் செய்தி போடுகிறது லேபர் வரட்டும் இருக்குது கைமா .
-
மருந்துகள், எரிபொருள், உரம் கிடைக்காமல் துன்பப்பட்ட கடந்த காலத்தை யாரும் மறக்கக் கூடாது! - ஜனாதிபதி ரணில்
ஒரு மாதம் வாகன இறக்குமதி தடுப்பை எடுத்து விட்டு பாருங்க ரணில் கட்டியிருக்கும் .............. களவாடபட்டு இருக்கும் .
-
மீண்டும் தமிழக மீனவர்கள் இலங்கையில் கைது; ஸ்டாலின் சீற்றம்; ஜெய்சங்கருக்கு கடிதம்
இந்த படம் போட்ட தே ????
-
ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி
https://www.courrierinternational.com/depeche/dupes-des-sri-lankais-combattent-en-ukraine-et-n-en-reviennent-pas.afp.com.20240611.doc.34vj969.xml. நன்றி இணையவனுக்கு சிங்களம் படும் பாடை விளக்கமாக சொல்லியுள்ளார்கள் .
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
அந்த விபரம் யாழில் பலமுறை பதில் அளிக்கபட்டு விட்டது தேடி படித்து கொள்ளுங்க மீண்டும் மீண்டும் எழுத லண்டன் யுனிவேர்சளில் இருக்கும் ஆள் நான் அல்ல கொஞ்சம் பிழை விட்டாலும் லண்டன் hmrc காரன்கள் கண்ணுக்குள் ரில்லர் விடுவார்கள்.
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
அந்த தளர்வுகள் சமஸ்ட்டியை விட கூடவாக இருக்குமா ? அதனால் 3௦ வருட போராட்டத்துக்கு தீர்வு வரும் என்று நினைகிறீர் களா ? அதனால் என்பது ரணிலால் என்று புரிந்து கொள்ளனும் .
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
அப்படியா ரணில் வந்து இருந்தால் தமிழர்களுக்கு நல்லது அப்ப புலி இல்லாத இந்த கால கட்டத்தில் ரணில் தமிழருக்கு செய்த ஒரு நல்ல வேலை ஒன்றை சொல்லுங்கள் ? கேள்வி உங்களுக்கானது அல்ல உங்களுக்கானது ..........வேறு இடத்தில்
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
அப்போதைய புலிகளின் முடிவில் எதை செய்து இருந்தால் சரியாகி இருக்கும் என்று சொல்ல வருகிறீர்கள் ?
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
கவி ஐய்யா கேட்கிறேன் என்று குறை நினைக்க கூடாது நீங்கள் இன்னும் ஊரிலா அதாவது இலங்கையிலா உள்ளீர்கள் ?
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
உருப்பட வெளிகிட்டாலும் சுத்து மாத்து சுமத்திரன் போன்றவர்கள் விடமாட்டார்கள் அண்ணா .
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
அவரே துரோகி என்று எவன் சொன்னாலும் தனக்கு கவலையில்லை என்பவர் மூன்று சிங்கள வேட்பாளர்களில் ஒருத்தரை கை காட்ட வேண்டியதுதானே ?
-
இலங்கை தமிழர்களுக்காக தனி நாடு அமைக்க வேண்டுமென விரைவில் பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை விடுக்க உள்ளேன்-மதுரை ஆதீனம்!
இன்னமுமா நம்புறாங்கள் ஈழத்தில் சிவன் ஆலயங்கள் இடிக்கப்பட்டு புத்த கோவில் அமைக்கும் போது கூட தடுக்க வக்கற்ற அந்த மோடியா தனிநாடு அமைக்கப்போறார் ஆதீனத்தை மன நல விடுதியில் சேர்ப்பது இருக்கிற தமிழ் மக்களுக்கு நல்லது .
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
பொது தமிழ் வேட்பாளரை வேணாம் என்று சுடுதண்ணியை குடித்தவர் போல் மேடையில் உணர்ச்சி வசப்பட்டு கத்துகிறவர் மூன்று சிங்கள வேட்பாளர்களில் யாரையுமே அவர் சார்பில் தெரிவிக்கவில்லை இதுதான் சுத்து மாத்து வழக்கம்போல் தமிழர்களை குழப்பி அடிப்பதுதான் அவரின் (அவர் என்று மரியாதை கொடுத்து எழுதுவதுக்கு கூட தகுதி அற்றவர் ) ஒரே தொழில் .
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
- தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
சிரிப்பு சிரிப்பாய் வருகிறது ஏற்கனவே அவர் தமிழர்களுக்கு துரோகி தானே போர் குற்றம் தொடர்பில் . தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தினால் தோற்கடிப்பேன்! துரோகி பட்டம் தாருங்கள்! சுமந்திரன் ஆவேசம். தேர்தலிலே வாக்குகளை புறக்கணிப்பதாலும் வேறு ஒருவருக்கு வாக்களிப்பதால் ஏற்படும் விளைவுகளை நாம் சந்தித்திருந்த நிலையில் தமிழர்களுடைய வாக்குகளை நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலில் தீர்மானம்மிக்க வாக்குகளாக மாற்றியமைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M.A.Sumanthiran) தெரிவித்துள்ளார். “மக்கள் மன்றில் ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமை பொது நிலைப்பாடும் பொது வாக்கெடுப்பும்” எனும் தலைப்பில் அறிவோர் ஒன்றுகூடும் அரசியல் கருத்துக் கள நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மக்களுக்கு ஆர்வம் மேலும் தெரிவிக்கையில், “2005 இல் இடம்பெற்ற தேர்தலில் வாக்குகளை புறக்கணித்திருந்த நிலையில் அதன் விளைவுகளை சந்தித்திருந்தோம். ஆகையினால் இந்த வாக்கை பிரயோசனமான முறையிலே நாங்கள் ஒரு ஜனநாயக சூழலிலே மற்றவர்கள் மூன்றாகப் பிரிந்து இருக்கிற போது நாங்கள் தீர்மானிக்கிற சக்தியாக எங்களுடைய வாக்கை திரட்ட முடியும் என்றால் அது எங்களுக்கு மிகவும் பலமானதாக இருக்கும். அதை நாங்கள் செய்வது நல்லது என்ற என்னுடைய கருத்தை சொல்லி வைக்கிறேன். இப்படியாக இதுபோன்ற கருத்துக்கள் வெளிப்படுத்தும் கலந்துரையாடல்களை பல இடங்களிலும் நடத்தப்பட வேண்டும். தற்போது வவுனியாவிலும் மன்னாரிலும் கிழக்கு மாகாணத்திலும் இருந்து நடத்த வேண்டும் என்று கேட்கப்பட்டிருக்கின்றது. என்னைப் பொறுத்தவரையில் இப்படியாக பேசுவது நல்லது. இந்த விடயங்களை பகிரங்கமாக மக்களோடு சேர்ந்து பேசுவது நல்லது என்பதுடன் மிகவும் ஆரோக்கியமானது. அதை தவிர்க்கிறவர்கள் தவிர்க்கலாம். ஆனால் மக்களுக்கு ஆர்வம் இருக்கிறது என்று இன்று திரளாக வந்த உங்களுடைய வருகை எங்களுக்கு எடுத்துக்காட்டி இருக்கின்றது. ரஷ்யா பயணமாகும் அலி சப்ரி பொதுத்தேர்தல் இந்நிலையில் 2010ஆம் ஆண்டு தேர்தலில் எங்களுடைய மக்கள் 3 இலட்சம் பேருக்கு அண்மித்ததாக முட்கம்பி வேலிகளுக்குள் இருக்கிற பொழுது கூட வாக்களித்தார்கள். அதன் பின்னர் மூன்று மாதங்களில் பிறகு நடைபெற்ற பொதுத்தேர்தலில் எங்களுக்கு கிடைத்த வாக்கைவிட போரில் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவிற்கு இரண்டு மடங்கு வாக்குகள் கொடுத்தார்கள். அடுத்த தடவை நாங்கள் ஒரு நிலைப்பாட்டை எடுத்து மைத்திரிபால சிறிசேனாவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று சொன்னபோது எங்களுடைய மக்கள் வாக்களித்தார்கள். இந்த இடத்தில் மைத்திரிக்கு வாக்களித்து அதனால் என்ன நடந்தது என்று சிலர் கேட்கின்றார்கள். ஆனால் அதில் ஆனது என்னவென்று எங்களில் பலருக்கு தெரியும். ஆனால் முடிவு ஒன்றும் பெறவில்லை என்பதை தவிர நடந்த பல விஷயங்கள் பலருக்கு தெரியும். புதிய அரசியலமைப்பு இதில் விசேஷமாக எங்களுடைய நிலங்கள் விடுவிக்கப்பட்டது ஒரு பெரிய விஷயம். அந்த காலகட்டத்தில் எங்கெங்கு எவ்வளவு விடுவிக்கப்பட்டது என்ற புள்ளி விவரங்கள் இருக்கின்றன அதனைச் சொல்லி நான் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை . குறித்த காலகட்டத்தில் தான் எங்களுடைய பல நிலங்கள் விடுவிக்கப்பட்டது. அது எங்களுடைய இருப்புக்கு அத்தியாவசியமானது. எங்களுடைய சுயநிர்ணய உரிமை என்று நாங்கள் சொல்லுவதற்கு அடிப்படையானது. அப்படி காணி விடுவிப்பு பெரியளவில் நடந்தது. அதேபோன்று ஒரு புதிய அரசியலமைப்புக்கான முயற்சியும் நடந்தது. ஆனால் அது நிறைவு பெறவில்லை. இந்நிலையில், அடுத்த தேர்தலில் மக்கள் தாங்கள் தீர்மானமாக வாக்குகளை அளித்திருந்தார்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/votes-tamils-converted-decisive-votes-sumanthran-1717999137- இந்திய அமைதிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல்!
கண்ணீர் அஞ்சலிகள். - தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
Important Information
By using this site, you agree to our Terms of Use.