Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. விரல் அளவே உள்ள நடராஜர் கருங்கல் சிலை.
  2. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது வளைகுடா சுற்றுப்பயணத்தின் 2 வது நாளான நேற்று, புதன்கிழமை கத்தார் சென்றடைந்தார். ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் டிரம்ப் தரையிறங்கினார், அங்கு கத்தார் எமிர் ஷேக் தமீம் அவரை வரவேற்றார். Jaffna Muslim
  3. கத்தார் ஏர்வேஸுக்காக.... அமெரிக்க நிறுவனமான போயிங்கிடம், 200 பில்லியன் டாலர் மதிப்புள்ள 160 விமானங்களை கத்தார் ஆர்டர் செய்துள்ளது. Jaffna Muslim
  4. கட்டார் நாடு.... ட்ரம்புக்கு, 3400 இந்திய கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு விமானம் ஒன்றை அன்பளிப்பாக கொடுத்தது. பரிசாக வரும் சொகுசு விமானத்தை வேண்டாம் என கூற... நான் என்ன முட்டாளா?: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கேள்வி Polimer News Digital
  5. உள்ளூராட்சி உறுப்பினர் பட்டியலை சமர்ப்பிக்க அரசியல் கட்சிகளுக்கு அறிவிப்பு! உள்ளூராட்சி மன்றங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் விவரங்களை இந்த வார இறுதிக்குள் சமர்ப்பிக்குமாறு இலங்கைத் தேர்தல் ஆணையகம் அனைத்து அரசியல் கட்சிகளையும் சுயேச்சைக் குழுக்களையும் கேட்டுக் கொண்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் அந்தந்த கட்சிகள் மற்றும் குழுக்களிடமிருந்து தகவல் கிடைத்தவுடன் வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க குறிப்பிட்டார். மே 6 அன்று நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் வென்ற இடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உறுப்பினர்களை நியமிப்பதற்கான நடைமுறையை கோடிட்டுக் காட்டும் முறையான எழுத்துப்பூர்வ அறிவிப்பு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கும் வெளியிடப்பட்டுள்ளது. ஆணையத்தின் கூற்றுப்படி, அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து ஒரு வாரத்திற்குள் அந்தந்த உள்ளூராட்சி அமைப்புகளுக்கு தங்கள் பிரதிநிதிகளை பரிந்துரைக்க வேண்டும். மேலதிகமாக உள்ளூராட்சி அமைப்புகளில் 50% க்கும் அதிகமான இடங்களைப் பெற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் மேயர் அல்லது தலைவர் பதவிகளுக்கு தங்கள் வேட்பாளர்களை பரிந்துரைக்குமாறு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. வேட்புமனுக்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டவுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் பெரும்பான்மையைக் கொண்ட மன்றங்களின் மேயர்கள் அல்லது தலைவர்களின் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று ஆணையம் மேலும் கூறியது. https://athavannews.com/2025/1431909
  6. துருக்கியில் இன்று உக்ரேன்- ரஷ்யா நேரடிப் பேச்சுவார்த்தை! போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக, துருக்கியில் இன்று (15) உக்ரேன்- ரஷ்யா நேரடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ரஷ்யா- உக்ரைன் இடையே போர் இடம்பெற்று வரும் நிலையில், அதை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இரு தரப்பிலும் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன் இன்று (15) நேரடி பேச்சுவார்த்தை நடத்தலாம் என உக்ரேனுக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து ”மே 15ம் திகதி வியாழக்கிழமை துருக்கியில் புடினுக்காக தான் காத்திருக்கப் போவதாகவும், தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார். இந்நிலையில் போர் நிறுத்தம் ஒப்பந்தம் தொடர்பாக, துருக்கியில் இன்று ( 15) உக்ரைன்- ரஷ்யா நேரடி பேச்சுவார்த்தை நடத்த வுள்ளது. எவ்வாறு இருப்பினும் குறித்த பேச்சுவார்த்தைக்கு புடின் தனது பிரதிநிதிகளை அனுப்பி வைக்கவுள்ளதாக, ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளது. இது குறித்து, உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”ரஷ்யா போரையும், கொலைகளையும் நீட்டித்து வருகிறது. போர் நிறுத்தம் கொண்டு வர ரஷ்யா மீது அழுத்தம் கொடுக்கும் ஒவ்வொரு நாட்டிற்கும், ஒவ்வொரு தலைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அமைதி மற்றும் ராஜதந்திரத்திற்கு உதவும் அனைவருக்கும் நன்றி” இவ்வாறு பதிவிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1431905
  7. வீதி விபத்துக்களில் 965 பேர் உயிரிழப்பு! இந்த ஆண்டு முழுவதும் பதிவான வீதி விபத்துக்களில் மொத்தம் 965 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் மே 13 ஆம் திகதி வரை நாடு முழுவதும் வீதி விபத்துகளில் இந்த இறப்பு எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்தக் காலகட்டத்தில், 902 போக்குவரத்து விபத்துகளும் பதிவாகியுள்ளன. இதன்போது, 1,842 பேர் கடும் காயங்களுக்கு உள்ளாகியும் உள்ளனர். கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் முறையற்ற வாகன பராமரிப்பு ஆகியவை பல விபத்துகளுக்குக் காரணம் என்று பொலிஸார் கூறுகின்றனர். போக்குவரத்து விபத்துகளைக் குறைப்பதற்காக நாடு முழுவதும் ஒரு சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது. மேலும் அதன் கீழ் சாரதி விழிப்புணர்வு திட்டங்களும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன. https://athavannews.com/2025/1431900
  8. ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலம் இன்று! ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26 வாகனங்கள் இன்று (15) ஏலமிடப்படவுள்ளன. விற்பனை செய்யப்படவிருக்கும் அனைத்து வாகனங்களும் பத்து வருடங்களுக்குள் உற்பத்தி செய்யப்பட்டவை என்பதுடன் அதற்கமைவான விலைக் கோரல் நேற்று (14) முடிவுற்றது. இன்றைய தினம், பீ.எம்.டபிள்யூ.மோட்டார் வாகனம் 01, போர்ட் எவரெஸ்ட் ஜீப் 01, ஹுண்டாயி டெரகன் ஜீப் 01, லேண்ட் ரோவர் ஜீப் 01, மிட்சுபிஷி மொண்டெரோ ஜீப் 01, நிசான் பெற்றல் ஜீப் 03, நிசான் வகை மோட்டார் கார்கள் 02, போர்ஷ் (Porsche) கெயின் மோட்டார் வாகனம் 01, சென்யோன் ரெக்ஸ்டன் வகை ஜீப் 05, லேண்ட் குரூஷர் சஹரா வகை ஜீப் 01, வீ 08 வாகனங்கள் 06 மற்றும் மிட்சுபிஷி ரோசா வகை குளிரூட்டப்பட்ட பஸ் ஒன்றும் ஏலமிடப்படவுள்ளன. ஜனாதிபதி அலுவலகத்தின் அதி சொகுசு வாகன ஏளத்தின் முதல் கட்டத்தின் கீழ் இதற்கு முன்னதாக 14 சொகுசு வாகனங்கள், பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 06 வாகனங்கள் மற்றும் உதிரிப் பாகங்களை விற்பனை செய்வதற்கு அமைவான ஏளம் நடத்தப்பட்டது. அரசாங்கத்தின் செலவுக் குறைப்பு மற்றும் நிதிப் பொறுப்புக்கூறலை பலப்படுத்தும் நோக்கில் இந்த வாகனங்களை விற்பனை செய்ய தீர்மானித்திருப்பதோடு, முன்னைய ஏளத்தில் 09 டிபெண்டர்கள் உள்ளடங்களாக பல்வேறு வகையான 15 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்தின் நிரந்தர பணிக்குழுவினருக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதோடு, முன்னாள் ஜனாதிபதியால் தனது பதவிக் காலத்தில் அரசியலமைப்பின் 41 (1) உறுப்புரைக்கு அமைவாக பணியமர்த்தப்பட்ட ஆலோசகர்கள் மற்றும் பணிக் குழாமிற்காக வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1431897
  9. ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு; பயங்கரவாதி மரணம்! ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் டிரால் பகுதியில் அமைந்துள்ள நாதிர் கிராமத்தில் இன்று (15) அதிகாலை இந்திய பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளுடன் பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 48 மணி நேரத்திற்குள் யூனியன் பிரதேசத்தில் நடக்கும் இரண்டாவது என்கவுன்டர் இதுவாகும். ஜெய்ஷ்-இ-மொஹமட் அமைப்பைச் சேர்ந்த மேலும் இரண்டு முதல் மூன்று பயங்கரவாதிகள் அந்தப் பகுதியில் சிக்கியிருப்பதாக நம்பப்படுகிறது. மேலும், தொடர்ச்சியான தேடல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. ஷோபியன் மாவட்டத்தின் கெல்லர் பகுதியில் நடந்த ஒரு அதிரடி நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் மூன்று லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்ற இரண்டு நாட்களுக்குப் பின்னர் இந்த சம்பவம் வந்துள்ளது. செவ்வாய்க்கிழமை (13) கொல்லப்பட்ட மூன்று பயங்கரவாதிகளில், இரண்டு பயங்கரவாதிகள் ஷாஹித் குட்டாய் மற்றும் அட்னான் ஷாஃபி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருவரும் சோபியானைச் சேர்ந்தவர்கள். 2023 ஆம் ஆண்டு லஷ்கரில் இணைந்த குட்டாய், கடந்த ஆண்டு ஏப்ரல் 8 ஆம் திகதி டேனிஷ் ரிசார்ட்டில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்டார். இதில் இரண்டு ஜெர்மன் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஒரு சாரதி காயமடைந்தனர். கடந்த ஆண்டு மே மாதம் ஷோபியானில் உள்ள ஹீர்போராவில் பாஜக சர்பஞ்ச் ஒருவரைக் கொன்றதிலும் அவருக்கு தொடர்பு இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2024 ஆம் ஆண்டு பயங்கரவாதக் குழுவில் சேர்ந்த ஷாஃபி, ஷோபியனில் உள்ள வாச்சியில் உள்ளூர்வாசி அல்லாத ஒரு தொழிலாளியைக் கொன்றதில் ஈடுபட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. ஷோபியனில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து மூன்று ஏகே-47 துப்பாக்கிகள் மற்றும் பிற ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1431867
  10. உக்ரேன் அமைதிப் பேச்சுவார்த்தை; பங்கெடுக்காத ட்ரம்ப், புட்டின். மூன்று ஆண்டுகளில் மொஸ்கோவிற்கும் கியேவிற்கும் இடையிலான முதல் நேரடி அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் வியாழக்கிழமை (15) குறிப்பிட்டனர். அதற்கு பதிலாக கிரெம்ளின் அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவை அனுப்பியது. ஞாயிற்றுக்கிழமை, “எந்த முன்நிபந்தனைகளும் இல்லாமல்” இஸ்தான்புல்லில் உக்ரேனுடன் நேரடி பேச்சுவார்த்தைகளை நடத்த புட்டின் முன்மொழிந்தார். புதன்கிழமை (14) தாமதமாக, கிரெம்ளின் குழுவில் ஜனாதிபதி ஆலோசகர் விளாடிமிர் மெடின்ஸ்கி மற்றும் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அலெக்சாண்டர் ஃபோமின் ஆகியோர் இடம்பெறுவார்கள் என்று கூறியது – ஆனால் புட்டினின் பெயர் பட்டியலில் இல்லை. கிரெம்ளினின் தூதுக்குழு அறிவிப்புக்குப் பின்னர், மத்திய கிழக்கில் மூன்று நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ட்ரம்ப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள மாட்டார் என்று ஒரு அமெரிக்க அதிகாரி தெரிவித்தார். பங்கேற்பதற்கான விருப்பத்தை பரிசீலித்து வருவதாக அமெரிக்கத் தலைவர் முன்னதாகவே கூறியிருந்தார். பேச்சுவார்த்தையில் புட்டின் நேரில் கலந்து கொள்வார் என்று ஒருபோதும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், ரஷ்ய மற்றும் அமெரிக்க ஜனாதிபதிகள் இல்லாதது, 2022 பெப்ரவரியில் ரஷ்யா தொடங்கிய போரில் ஒரு பெரிய திருப்புமுனைக்கான எதிர்பார்ப்புகளைக் குறைக்கிறது. உக்ரேன் அல்லது ரஷ்யாவை விட அமைதியை அதிகம் விரும்பும் ட்ரம்பிற்கு காட்டும் ஒரு வெளிப்படையான போட்டியில், உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, “அவர் பயப்படவில்லை என்றால்” பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளுமாறு புட்டினுக்கு சவால் விடுத்தார். புதன்கிழமை இரவு ஜெலென்ஸ்கி துருக்கிக்குச் சென்றிருந்தபோது, புட்டின் கலந்து கொண்டால் மட்டுமே பேச்சுவார்த்தையில் பங்கேற்பேன் என்று அவர் கூறியதாக உக்ரேன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். புதன்கிழமை தனது இரவு காணொளி உரையில், புட்டினின் பங்கேற்பு குறித்து தெளிவு ஏற்பட்டவுடன் துருக்கியில் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான நடவடிக்கைகள் குறித்து உக்ரைன் முடிவு செய்யும் என்று ஜெலென்ஸ்கி கூறினார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவின் மிகப்பெரிய நிலப் போரை நிறுத்த இரு தரப்பினரும் 30 நாள் போர் நிறுத்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று ட்ரம்ப் விரும்புகிறார். உடனடி 30 நாள் போர் நிறுத்தத்தை ஜெலென்ஸ்கி ஆதரிக்கிறார், ஆனால் அத்தகைய போர் நிறுத்தத்தின் விவரங்கள் விவாதிக்கப்படக்கூடிய பேச்சுவார்த்தைகளை முதலில் தொடங்க விரும்புவதாக புடின் கூறியுள்ளார். https://athavannews.com/2025/1431887
  11. இவர் வெளியுறவுத்துறை அமைச்சரானது இன்னும் இந்திய ஊடகங்களுக்கு தெரியாதா? தெரிந்திருந்தால்…. அலுப்பு அடிக்கும் மட்டும் அவவின் பூர்வீகத்தை நோண்டி எடுத்திருப்பார்களே. இல்லாவிடில்…. போருக்கு பாகிஸ்தான் போன நிருபர்கள், இன்னும் திரும்பி வரவில்லையா. 😂🤣
  12. அர்ச்சுனாவிற்கு அடுத்து தங்கம்தான் அதிக வாக்குகளை எடுத்ததாக நினைக்கின்றேன். ஆனபடியால்…. தங்கத்துக்கு பாராளுமன்ற உறுப்பினராகக் கூடிய சந்தர்ப்பம் கிடைக்கும். தங்கம் விரும்பாவிடில் மூன்றாவது மயூரன். அதற்கு அந்தக் குழுவின் தலைவர் என்ற முறையில் அர்ச்சுனா சம்மதிப்பாரோ தெரியாது. இவர்களுக்குள் நிறைய பிரச்சினை உள்ளது. எல்லாம் வெட்டி ஆடுவதற்குள்… அடுத்த தேர்தல் வந்து விடும். 😂
  13. அரசியலில் தமக்குத் தேவை என்றால், தலைகீழாக மாறி விடுவார்கள். டக்ளஸ் தேவானந்தாவும் 1986’ம் ஆண்டு ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தமைக்கும், நான்கு பேரை காயப்படுத்தியமைக்குமாக இந்தியப் பொலிசாரால் அறிவிக்கப் பட்ட குற்றவாளியாக இருந்த போதும்… அப்போது ஜனாதிபதியாக இருந்த மகிந்தவுடன் டில்லி வரை சென்று இந்தியப் பிரதமரை சந்தித்து விட்டு வந்தவர்கள். சட்டம் என்பது…. ஏழைகளுக்கு மட்டும் தான். அரசியல்வாதிகளுக்கு அது வளைந்து கொடுக்கும் கேவலம் அவ்வப்போது நடந்து கொண்டு இருப்பதை கண் முன்னால் காண்கின்றோம்.
  14. 👉 https://www.facebook.com/watch?v=496717103435171 👈 எத்தனை பாதுகாப்பு கவசம் கட்டியும்... ரயருக்கு, தேசிக்காய் வைத்தும்.... "ரபேல்" இப்பிடி கருகிப் போச்சே.... 😂
  15. வழக்கு தொடுத்துள்ள ஒசல ஹேரத் இதேபோல கடந்த ஆண்டு டயானா கமகேவை தகுதி நீக்கம் செய்யும் வழக்கில் வென்றிருந்ததுடன், டயானா கமகே பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Vaanam.lk
  16. இலங்கை மீன் சந்தையும், தமிழ் நாட்டு மீன் சந்தையும் ஒரே ரூல்ஸ் தானே... பாஸ். 😂
  17. ஒரு நிமிட காணொளி: 👉 https://www.facebook.com/100076314756096/videos/1198119368777102 👈 பாம்பு புற்றுக்குள் கைவிடும் அதிசய மனிதன். காணொளியில் இறுதியில் அதிர்ச்சி காத்துள்ளது. 🤣
  18. அவர்களின் பேச்சை கேட்பதற்காகவே... வேண்டும் என்று எதையாவது வில்லங்கமாக கேட்டு, ரசிப்பதுண்டு. 😂
  19. அலை பேசி பயன்படுத்துபவர்களே...தொலைந்த மொபைலை ஒரே நிமிடத்தில் நாமே கண்டுபிடிக்கலாம்.... அனைத்தையும் லாக் கூட செய்யலாம்... செல்போன் தவறவிட்டால் பதறாமல் இருந்த இடத்திலிருந்தே கண்டுபிடித்து விடலாம். அதுமட்டும் இல்லாமல்,நம்முடைய தனி மனித ரகசியத்தை பற்றி கவலை கொண்டால், அல்லது மிக முக்கிய செய்திகள் மற்றும் பைல்ஸ் யாரேனும் திருட முடியும் என்று பயந்தாலோ இனி அந்த கவலையை விட்டு விடுங்கள்..... அந்த போனில் உள்ள முக்கிய தகவல்களை லாக் செய்ய முடியும். தவறவிட்ட, திருடப்பட்ட செல்போனில் உள்ள முக்கிய தகவல்களை அழிக்க முடியும். ஆச்சரியமாக இருக்கிறதா. இது உண்மை. இந்த அத்தனை வசதிகளையும் எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம். find my device find my device மூலம்இதை எளிதான செய்ய முடியும். முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find என டைப் செய்யுங்கள்.. பிறகு உங்கள் கூகுள் அக்கவுண்டை log in செய்ய வேண்டும். உங்களின் email and password கொடுத்த பின்பு லாக் இன் ஆகும். அப்போது ஸ்க்ரீனின் இடது புறம் நாம் தவறவிட்ட செல்போன் மாடல் எண் மற்றும் அதற்கு கீழே play sound,lock ,erase என்ற 3 தகவல்கள் இருக்கும். ஸ்கிரீன் வலது புறம் தற்போது அந்த செல்போன் எந்த இடத்தில் உபயோகத்தில் உள்ளது என்பது map மூலமாக தெரியவரும். play sound கிளிக் செல்தால் செல்போன் 5 நிமிடம் ஒலிக்கும். lock ஆப்சனை கிளிக் செல்தால் செல்போன் லாக் ஆகி விடும். erase ஆப்சனை கிளிக் செல்தால் செல்போனில் உள்ள தகவல் அனைத்தும் அழிந்து விடும். இந்த அற்புதமான செய்தியை நாம் ஒவ்வொரு வரும் தெரிந்து வைத்துகொண்டால், என்றோ ஒரு நாள் நமக்கே பயன்படும். அதுமட்டும் இல்லாமல் மிக எளிதில் எந்த இடத்தில் அந்த மொபைல் இயங்கி கொண்டிருகிறது என்பதையும் தெரிந்துகொள்ள முடியும். Prikshanan

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.