Everything posted by தமிழ் சிறி
-
யாழ். உடுப்பிட்டியில் மூன்று கன்றுகளை ஈன்ற பசு!
தவிடும், புண்ணாக்கும் கொண்டு போய் கொடுக்கலாம். பசு… சந்தோசப் படும். 😂 🤣 இலங்கையிலேயே மூன்று கன்று ஈன்ற… தமிழ்ப் பசுவிற்கு வாழ்த்துக்கள். 👍🏼 🐄 🥰
-
சிறைக்கே மீண்டும் சென்றார் வியாழேந்திரன்
வியாழேந்திரனுக்கு… சனி மாற்றம் போட்டு, சிப்பிலி ஆட்டுது போலை. 😂 கையுக்கு எட்டினது, வாய்க்கு எட்டவில்லை. பிள்ளையான், கருணாவுடன் கூட்டுச் சேர்ந்த நேரம் சரியில்லை. 🤣
-
இந்தியப் பிரதமர் மோடி இன்று இலங்கை வருகை!
புத்தன்… சரியாக சொன்னீர்கள். எந்த விடயத்தையும் சூட்டோடு செய்யாமல் ஆறப் போட்டதால் வந்த வினை.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
அட…. ஆமா. நானும் இப்போதான் முகத்தை கவனித்தேன்.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- குருநாகல் எரிவாயு விற்பனை நிலையத்தில் தீ விபத்து-நால்வர் உயிரிழப்பு!
- கொஞ்சம் ரசிக்க
- சிரிக்கலாம் வாங்க
- பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் விடுவிப்பு: வழக்கறிஞர் வில்சன்
பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் விடுவிப்பு: வழக்கறிஞர் வில்சன். சென்னை: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து, தமிழ்நாட்டில் உள்ள மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் இன்று முதல் விடுவிக்கப்படுவதாக திமுக மாநிலங்களவை எம்பியும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான வில்சன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்துவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (ஏப். 4) அளித்துள்ள தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது. துணை வேந்தர் நியமனம், கைதிகளுக்கான தண்டனை குறைப்பு, டிஎன்பிஎஸ்சி பணி நியமனம் உள்பட எந்த மசோதாவை அனுப்பினாலும் அவற்றுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் இருந்தார். இதை எதிர்த்துதான் வழக்கு தொடரப்பட்டது. இப்படி ஒரு வழக்கை தொடர எங்கள் தலைவர் ஸ்டாலின் ஆலோசனை வழங்கினார். அவர் வழங்கிய ஆலோசனையின் படி தொடரப்பட்ட இந்த வழக்கில் இன்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாது, நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தக்கூடியதாக உள்ளது. இதன்மூலம், அனைத்து மாநிலங்களின் சுயாட்சியை முதல்வர் ஸ்டாலின் நிலைநாட்டி இருக்கிறார். நாங்கள் 2023-ல் வழக்கு தாக்கல் செய்தோம். அதற்கு முன்பே 2 ஆண்டுகாலமாக 10 மசோதாக்கள் நிலுவையில் இருந்ததால், உச்ச நீதிமன்றமே 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, அந்த மசோதாக்கள் இன்று முதல் நடைமுறைக்கு வரும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இனி இதற்கு ஆளுநர் ஒப்புதல் தேவையில்லை. மேலும், இனி எந்த ஒரு ஆளுநரும் அமைச்சரவையின் ஆலோசனையின்படிதான் நடந்து கொள்ள வேண்டும் என்றும், அதை மீறி நடந்துகொள்ளக்கூடாது என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த கட்டத்தில் ஆளுநர் மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பிவைக்கலாம் என்பதையும் தீர்ப்பில் தெரிவித்திருக்கிறார்கள். மசோதாக்கள் மீது முடிவெடுப்பதற்கு கால நிர்ணயம் செய்திருக்கிறார்கள். ஒரு மசோதா ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டால், அதன் மீது அவர் 30 நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும். அந்த மசோதாவை குடியரசு தலைவருக்கு பரிந்துரைக்கும் முடிவை ஆளுநர் எடுத்தால் அதனை 3 மாத காலத்துக்குள் அனுப்பிவைக்க வேண்டும். பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநரை விடுவிக்க வேண்டும் என்ற மசோதாவுக்கும் உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது. எனவே, இன்று முதல் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் விடுவிக்கப்படுகிறார். இனி தமிழ்நாடு அரசு யாரை முன்மொழிகிறதோ அவர்தான் வேந்தராக இருப்பார்" என தெரிவித்தார். https://www.hindutamil.in/news/tamilnadu/1357391-governor-ceases-to-be-the-chancellor-of-state-universities-in-tamil-nadu-wilson-1.html- சீனா மீது புதிய 50% வரிகளை விதிக்கப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தல்!
அமெரிக்க பொருட்களுக்கு சீனா விதித்த வரியை நீக்காவிடில், மேலும் 50 சதவீத வரி விதிப்பு - ட்ரம்ப் எச்சரிக்கை!- நட்டத்தில் இயக்கும் இ.போ.ச.வின் 55 டிப்போக்கள்!
நட்டத்தில் இயக்கும் இ.போ.ச.வின் 55 டிப்போக்கள்! இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) மொத்தம் 55 டிப்போக்கள் தற்போது நஷ்டத்தில் இயங்கி வருவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இன்று (08) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், 54 இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்கள் மட்டுமே செயல்பாடுகள் மூலம் இலாபம் ஈட்டுவதாகவும் குறிப்பிட்டார். நஷ்டத்தில் இயங்கும் 55 டிப்போக்களுக்கு பல புதிய நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது விளக்கினார். திறமையற்ற முகாமையாளர்களை திறமையான முகாமையாளராக மாற்றுதல், பேருந்து அட்டவணைகளை திருத்துதல், பேருந்து பயணங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், பயணிகளுக்கு கல்வி கற்பிப்பதன் மூலம் மோசடி நடவடிக்கைகளைக் குறைத்தல், ஊழியர்களை ஊக்குவிக்க ஊழியர்களின் சம்பளத்தை திருத்துதல், தொழிலாளர்களுக்கு பயிற்சி பட்டறைகளை ஏற்பாடு செய்தல், ஒவ்வொரு டிப்போவிற்கும் தினசரி இலக்குகளை நிர்ணயித்தல், பேருந்துகளில் எரிபொருள் நிர்வாகத்தை மேம்படுத்துதல், விநியோகங்களின் தரத்தை தொடர்ந்து ஆய்வு செய்தல், டிப்போ செலவுகளைக் கட்டுப்படுத்த தெளிவான வழிகாட்டுதல்களை வழங்குதல், எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிட மாதாந்திர நிதிக் கணக்குகளை மதிப்பாய்வு செய்தல் மற்றும் டிப்போக்களில் கூடுதல் வருமானம் ஈட்டும் செயல்பாடுகளை ஆராய்தல் ஆகியவை இந்த நடவடிக்கைகளில் அடங்கும். இலங்கை போக்குவரத்து சபையில் 7,137 பேருந்துகள் உள்ளன, ஆனால் அவற்றில் 5,182 மட்டுமே தற்போது செயல்பாட்டில் உள்ளன என்று அமைச்சர் மேலும் கூறினார். அதன்படி, இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 1,955 பேருந்துகள் தற்போது சேவையில் இல்லை. இலங்கை போக்குவரத்து சபையில் தற்போது மொத்தம் 25,384 பேர் பணிபுரிவதாகவும் அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2025/1427930- கொழும்பு மேற்கு சர்வதேச முனைய பணிகள் ஆரம்பம்
கொழும்பு முனைய செயல்பாடுகள் தொடங்கியவுடன் அதானி பங்குகள் உயர்ந்தன! அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல லிமிடெட் (APSEZ), இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் அமைந்துள்ள அதன் புதிய கொழும்பு மேற்கு சர்வதேச முனையத்தில் (CWIT) அதிகாரப்பூர்வமாக செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளது. அதானி குழுமம் துறைமுக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பின்னர், 2022 முதல் இந்த முனையம் கட்டுமானத்தில் உள்ளது. 35 ஆண்டுகால கட்டமைத்தல், இயக்குதல் மற்றும் பரிமாற்றம் (BOT) ஒப்பந்தத்தின் கீழ், APSEZ, இலங்கை கூட்டு நிறுவனமான ஜான் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் இலங்கை துறைமுக அதிகார சபை (SLPA) ஆகியவற்றைக் கொண்ட ஒரு கூட்டமைப்பால் CWIT உருவாக்கப்பட்டது. $800 மில்லியன் செலவில் தொடங்கப்பட்ட இந்த CWIT திட்டம் 1,400 மீட்டர் நீளமும் 20 மீட்டர் ஆழமும் கொண்டது. இதனால் முனையம் ஆண்டுதோறும் சுமார் 3.2 மில்லியன் கொள்கலன்களை கையாள முடியும். இந்த திறன் தெற்காசியாவின் முக்கிய டிரான்ஷிப்மென்ட் மையமாக கொழும்பு துறைமுகத்தின் நிலையை உயர்த்தும். APSEZ இன் படி, CWIT என்பது கொழும்பில் முழுமையாக தானியங்கிமயமாக்கப்பட்ட முதல் ஆழ்கடல் முனையமாகும், இது பொருட்கள் கையாளுதல் மற்றும் கப்பல் திரும்பும் நேரத்தை மேம்படுத்துகிறது. இந்த திட்டம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, CWIT-ல் செயல்பாடுகள் தொடங்குவது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பிராந்திய ஒத்துழைப்பில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கிறது. இந்தத் திறப்பு விழா இலங்கைக்கு பெருமை சேர்க்கும் தருணமாகும், இது உலக கடல்சார் வரைபடத்தில் உறுதியாக இடம்பிடித்துள்ளது – என்றார். கடந்த ஆண்டு, அமெரிக்க சட்டத்தரணிகள், கௌதம் அதானி மீது இலஞ்சம் வாங்கியதாகக் குற்றம் சாட்டியதை அடுத்து, CWIT திட்டம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதானி இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். ஆனால் கென்யா உட்பட சில நாடுகள் அவரது நிறுவனங்களுடன் தொடர்புடைய ஒப்பந்தங்களை இரத்து செய்ய வேண்டியிருந்தது. CWIT திட்டம் முன்னேறிய போதிலும், அது அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து $500 மில்லியன் கடன் உத்தரவாதம் இல்லாமல் தொடர்ந்தது. 2023 நவம்பரில் அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிதி நிறுவனம், CWIT திட்டத்திற்கு ஆதரவளிக்கும் கடனை அறிவித்தது. டிசம்பரில் அதானி குழுமம் கடன் ஒப்பந்தத்திலிருந்து விலகிய நேரத்தில் நிதியுதவி செயல்படுத்தப்படவில்லை. அந்த நேரத்தில், நிறுவனத்தின் உள் திரட்டல்கள் மற்றும் மூலதன மேலாண்மைத் திட்டத்தின் மூலம் முனையத்திற்கு நிதியளிப்பதாக அதானி குழுமம் கூறியது. CWIT இப்போது திறக்கப்பட்டுள்ளதால், கொழும்பில் உள்ள பிற முக்கிய முனையங்களுடன் பொருட்கள் வணிகத்திற்காக அது போட்டியிட வேண்டியுள்ளது. சீனாவின் ஆதரவு பெற்ற கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையம் (CICT) துறைமுகம் வழியாக செல்லும் கொள்கலன்களில் மிகப்பெரிய பங்கைக் கட்டுப்படுத்துகிறது. கடந்த ஆண்டு, CICT 3.3 மில்லியன் கொள்கலன்களை கையாண்டது. இலங்கை துறைமுக அதிகார சபையின் இரண்டு கட்டுப்படுத்தப்பட்ட முனையங்களான ஜெய் கொள்கலன் முனையம் மற்றும் ஆழமான நீர் கிழக்கு கொள்கலன் முனையம் 2.4 மில்லியன் கொள்கலன்களை கையாண்டன. ஜான் கீல்ஸ் ஹோல்டிங்ஸால் இயக்கப்படும் தெற்காசிய கேட்வே முனையம் (SAGT) 2 மில்லியன் கொள்கலன்களை கையாண்டது. மொத்தத்தில், கொழும்பு துறைமுகம் 7.7 மில்லியன் கொள்கலன்களை கையாண்டது. இது 2023 உடன் ஒப்பிடும்போது 12.3 சதவீதம் அதிகம். இதனிடையே, CWIT செயல்பாடுகளைத் தொடங்குவதாக APSEZ நிறுவனம் திங்களன்று அறிவித்ததைத் தொடர்ந்து, அதன் பங்குகள் வலுவான மீட்சியைக் கண்டன. அமர்வின் தொடக்கத்தில் சரிந்த இந்தப் பங்கு, குறைந்த விலையிலிருந்து 6.5 சதவீதம் உயர்ந்து, இறுதியில் 3.30 சதவீதம் நிறைவடைந்து 1,110 கோடி இந்த ரூபாவில் முடிவடைந்தது. https://athavannews.com/2025/1427889- கனடா அரசியலில் கலக்கும் குஜராத் வம்சாவளியினர்: 4 பேர் வேட்பாளர்களாக போட்டி!
கனடா அரசியலில் கலக்கும் குஜராத் வம்சாவளியினர்: 4 பேர் வேட்பாளர்களாக போட்டி! கனடாவின் பாராளுமன்ற தேர்தலில் முன் எப்போதும் இல்லாத வகையில் பஞ்சாபிகளை பின்தள்ளி குஜராத் வம்சாவளியினர் வேட்பாளர்களாக களத்தில் ஆதிக்கம் செலுத்த தொடங்கி உள்ளனர். கனடாவில் 2025ம் ஆண்டு அக்டோபரில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், பிரதமராக பதவியில் இருந்த ஜெஸ்டின் ட்ரூடோவுக்கு ஆளும் லிபரல் கட்சியில் கடும் எதிர்ப்பு எழவே அரசியல் காட்சிகள் மாறின. தனது பதவியை ஜெஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்துவிட பெரும்பான்மை ஆதரவுடன் கட்சியின் தலைவர் மற்றும் பிரதமராக மார்க் கார்னி தெரிவு செய்யப்பட்டார். அதன் பின்னர் பாராளுமன்றத்தை கலைத்த அவர், ஏப்ரல் 28ல் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்தார். பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஒரு பக்கம் வேகமாக நடைபெற்றுக் கொண்டு இருக்க, மறுபக்கம் வேட்பாளர்கள் பற்றிய விவரங்களும் வெளியாகி வருகின்றன. அதில் குறிப்பிடத்தக்க அம்சமாக வழக்கத்தை விட இம்முறை கனடா தேர்தலில் பஞ்சாபிகளை பின்தள்ளி குஜராத் வம்சாவளியினர் அதிகம் பேர் போட்டியிடுகின்றனர். பல ஆண்டுகளாக தெற்காசிய நாடுகளின் அரசியல் களத்தில் பஞ்சாப்-கனடா அரசியல்வாதிகள் அறிமுக முகங்களாக இருந்த நிலையில் இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்த குஜராத்தியர்கள் தற்போது ஆதிக்கம் செலுத்தும் இத்தகைய நிகழ்வு ஒரு புதிய அம்சமாக பார்க்கப்படுகிறது. பிராம்ப்டன் தொகுதி முதல் கால்கரி வரை, 4 குஜராத் வம்சாவளி வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். இவர்கள் முதல் தலைமுறை குடியேறியவர்கள், முதல்முறையாக பாராளுமன்ற தேர்தல் களத்தில் நுழைகின்றனர். https://athavannews.com/2025/1427912- வவுனியா பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடம் ஆரம்பிப்பதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை கே.மஸ்தான் தலைமையில் நடைபெற்றது
வவுனியாவில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இல்லையா?- இலங்கையின் சனத்தொகை விபரம் வெளியீடு : வடக்கில் குறந்தளவு சனத்தொகை!
காத்தான்குடியில்… சனத்தொகை கூடியிருக்கிறதா, குறைந்து இருக்கின்றதா. 🧐😇😎- தாயகத்திற்கு "ஹொலிடே" போவோர்... செய்யக் கூடியவையும், கூடாதவையும்.
உங்களுக்கு தெரிந்த செய்யக் கூடியவைகளையும், கூடாதவைகளையும் கீழே பதியவும். பலருக்கு உதவலாம். You Tube காரருக்கு பணம் அனுப்ப வேண்டாம். நீங்கள் கஸ்ரப் பட்டவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால்... உங்களுக்கு நம்பிக்கையானவர்கள் மூலம் பணத்தை அனுப்பி, அந்தப் பணம் அல்லது உதவி சம்பந்தப் பட்டவர்களுக்கு போய் சேர்ந்து விட்டதா என உறுதிப்படுத்தவும்.- தாயகத்திற்கு "ஹொலிடே" போவோர்... செய்யக் கூடியவையும், கூடாதவையும்.
தாயகத்திற்கு "ஹொலிடே" போவோர்... செய்யக் கூடியவையும், கூடாதவையும். ✅தாயகத்திற்கு ஹொலிடே போவோருக்கான ✅✅"செய்யவேண்டியதும் செய்யக்கூடாததும் பட்டியல்" (Dos and Don'ts list)✅✅ ✅வட- கோடைக்காலம் வருகின்றது, ஐரோப்பா, அமேரிக்கா, கனடா வாழ் புலம்பெயர் தமிழர் பலர் தாயகம் விஜயம் செய்யும் நேரம். உங்கள் உறவுகளின் மோசமான கல்வி நிலைக்கு நீங்கள் காரணம் ஆகாதீர்கள். நீங்கள் செய்யவேண்டியதும் செய்யக்கூடாததும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. தயவுசெய்து கவனமெடுங்கள். இன்றைய மோசமான கல்வி நிலைக்கு நீங்களும் முக்கிய ஒரு காரணம் என்ற குற்றச்சாட்டு வலுப்பெற்று வருவதை அவதானியுங்கள். ✅செய்ய வேண்டியவை (Do's) 1. உங்கள் நாடுகளில் சாதாரணமாக உள்ள கஷ்டங்களை அவர்களுக்கு புரியும் மாதிரி சொல்லுங்கள். 2.இரண்டு ஷிப்ட் வேலை, மூன்று ஷிப்ட் வேலை செய்வோரின் அவலங்களை விளக்கிச் சொல்லுங்கள். 3.கடும்பனியில் வேலைக்கு போகும் கஷ்டத்தை, நடைபாதையில் ஸ்னோ வளிக்கும் கஷ்டத்தை புரியவையுங்கள். 4. Refugee claim அடிக்கமுடியாத உண்மை நிலையை விளங்கப்படுத்துங்கள். 5. students Visa என்றால் படிப்பதற்கு 3-5 மடங்கு tuition fee கட்டவேண்டும் என்பதை விளங்கப்படுத்துங்கள். இதனால் அவர்களின் உறவினர்களுக்கு எவ்வளவு கஷ்டம் என்பதை புரியவையுங்கள். 6. முடியுமானால் Kindle reader வாங்கி கொடுங்கள். வாசிப்பதற்கு e-book தரவிறக்கி கொடுக்க மறக்காதீர்கள். 7. முடியுமானால் கணினி, அத்துடன் படிப்பதற்கு தேவையான offline e-lessons தரவிறக்கி கொடுங்கள். Web Address : a. நூலகம் : https://noolaham.school/ b. e-books: http://www.e-thaksalawa.moe.gov.lk/web/ta/ c. https://tamilkalvi.online d. https://aki.coach/ e. http://www.edudept.np.gov.lk/eLessonPortel/index.html 8. முக்கியமாக பெற்றோருக்கு தொலைபேசி, கணினி சம்பந்தமான தொழில்நுட்பத்தில் பயிற்சி கொடுங்கள். எப்படி சிறுவர்களை கண்காணிப்பது என்று உங்களுக்கு தெரிந்ததை சொல்லி கொடுங்கள். ❌செய்யக்கூடாதவை (Don'ts) 1. புலம் பெயர் நாடுகளில் பாலாறு தேனாறு ஓடுகின்றது என்று புளுகாதீர்கள். 2. மாணவர்களுக்கு smartphone வாங்கி கொடுக்கவேண்டாம் 3. மாணவர்களுக்கு Motorbike வாங்கிக்கொடுக்கவேண்டாம். 4. பகட்டாக உடுத்தவோ, ஆடம்பரமாக நடக்கவோ வேண்டாம். 5.உங்கள் குழந்தைகள் விளையாடுவதற்கு Game consoles கொண்டுபோகாதீர்கள். 6. Duty free liquor வாங்கிப்போகாதீர்கள். (edited) Kumaravelu Ganesan- கருத்து படங்கள்
- இந்தியப் பிரதமர் மோடி இன்று இலங்கை வருகை!
- பொலிஸ் காவலில் இளைஞன் உயிரிழப்பு; சட்டத்தரணிகள் சங்கம் கவலை!
- சீனா மீது புதிய 50% வரிகளை விதிக்கப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தல்!
- இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு அதிகரிப்பு!
இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு அதிகரிப்பு! இலங்கையின் உத்தியோகப்பூர்வ வெளிநாட்டு கையிருப்பு கடந்த மார்ச் மாதத்தில் கடுமையாக உயர்ந்துள்ளது. அதன்படி, அந்த தொகை 6.51 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்ட அண்மைய தரவுகள் தெரிவிக்கின்றன. இது பெப்ரவரி மாத இறுதியில் பதிவான 6.08 பில்லியன் அமெரிக்க டொலர்களிலிருந்து 7.1% அதிகரிப்பைக் குறிக்கிறது. கையிருப்பு வளர்ச்சி நாட்டின் வெளிப்புற நிலையை வலுப்படுத்துவதைக் குறிக்கிறது. மத்திய வங்கி இந்த அதிகரிப்பின் ஒரு பகுதியை உள்நாட்டு சந்தையில் அதன் வெளிநாட்டு நாணய கொள்முதல்களுக்குக் காரணம் என்று கூறுகிறது. மார்ச் மாதத்தில், உள்நாட்டு அந்நியச் செலாவணி சந்தையில் இருந்து CBSL 401.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றது. இது கையிருப்பு சொத்துக்களின் ஒட்டுமொத்த அதிகரிப்புக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்ததாக CBSL மேலும் குறிப்பிட்டுள்ளது. https://athavannews.com/2025/1427851- குருநாகல் எரிவாயு விற்பனை நிலையத்தில் தீ விபத்து-நால்வர் உயிரிழப்பு!
குருநாகல் எரிவாயு விற்பனை நிலையத்தில் தீ விபத்து-நால்வர் உயிரிழப்பு! குருநாகல் வெஹெர பிரதேசத்தில் எரிவாயு விற்பனை நிலையமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு 11 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிவாயு குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1427845- சீனா மீது புதிய 50% வரிகளை விதிக்கப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தல்!
சீனா மீது புதிய 50% வரிகளை விதிக்கப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தல்! உலக சந்தைகள் தொடர்ந்து சரிந்து வருவதால், சீனா தனது 34% எதிர் வரியை திரும்பப் பெறாவிட்டால், அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மேலதிகமாக 50% வரி விதிக்கப்படும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ளார். கடந்த வாரம் ட்ரம்ப், சீன இறக்குமதிகள் மீது 34% வரி விதிக்க முடிவு செய்ததைத் தொடர்ந்து, பீஜிங் ஞாயிற்றுக்கிழமை பதிலடி கொடுத்தது. அதன்படி, இது அமெரிக்காவின் கிட்டத்தட்ட அனைத்து வர்த்தக பங்காளிகள் மீதும் குறைந்தபட்சம் 10% வரியை நிர்ணயித்தது. திங்களன்று (07) ஒரு சமூக ஊடகப் பதிவில், ட்ரம்ப் சீனாவிற்கு அதன் எதிர் நடவடிக்கையை கைவிட அல்லது 50% வரியை எதிர்கொள்ள செவ்வாய்க்கிழமை (08) வரை அவகாசம் அளித்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, அமெரிக்காவில் உள்ள சீன தூதரகம் வொஷிங்டனை “பொருளாதார கொடுமைப்படுத்துதல்” என்று குற்றம் சாட்டியது. மேலும், பீஜிங் “அதன் சட்டபூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களை உறுதியாகப் பாதுகாக்கும்” என்றும் கூறியது. ட்ரம்ப் தனது அச்சுறுத்தலின் பேரில் செயல்பட்டால், அமெரிக்க நிறுவனங்கள் சீன இறக்குமதிகள் மீது மொத்தம் 104% வரியை எதிர்கொள்ள நேரிடும் – இது மார்ச் மாதத்தில் ஏற்கனவே அமுலில் இருந்த 20% வரிகளுக்கும், கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட 34% வரிகளுக்கும் கூடுதலாக வருகிறது. இது உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களுக்கும் உலகளாவிய போட்டியாளர்களுக்கும் இடையே ஒரு வர்த்தகப் போரை ஆழப்படுத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனிடையே, சமூக ஊடகத் தளமான ட்ரூத்தில் ட்ரம்ப் வெளியிட்ட ஒரு பதிவில், “சீனாவுடன் அவர்கள் கோரிய சந்திப்புகள் [கட்டணங்கள் குறித்து] அனைத்து பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்படும்!” என்றும் எச்சரித்தார். மேலும் திங்களன்று, அமெரிக்க ஜனாதிபதி, ஏனைய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உலகளாவிய இறக்குமதி வரிகளை இடைநிறுத்துவது குறித்து பரிசீலிக்கவில்லை என்று கூறினார். அத்துடன், கூடுதல் வரிகளை விதிப்பதன் மூலம் அமெரிக்காவிற்கு எதிராக பழிவாங்கும் எந்தவொரு நாடும், உடனடியாக புதிய மற்றும் கணிசமாக உயர்ந்த வரிகளை எதிர்கொள்ளும் என்ற எனது எச்சரிக்கையை மீறி, சீனா தனது எதிர் நடவடிக்கையை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டார். இதற்கு பதிலளிக்கும் விதமாக சீன தூதரக செய்தித் தொடர்பாளர் லியு பெங்யு ஒரு அறிக்கையில், சீனாவுக்கு அழுத்தம் கொடுப்பதோ அல்லது அச்சுறுத்துவதோ சரியான வழி அல்ல. “‘பரஸ்பரம்’ என்ற பெயரில் அமெரிக்காவின் மேலாதிக்க நடவடிக்கை, மற்ற நாடுகளின் நியாயமான நலன்களைப் பலி கொடுத்து அதன் சுயநல நலன்களுக்கு சேவை செய்கிறது மற்றும் சர்வதேச விதிகளை விட ‘அமெரிக்காவை முதன்மைப்படுத்துகிறது – என்று குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், புதிய வரிகளானது சீனாவின் உற்பத்தியாளர்களுக்கு பெரும் அடியாக இருக்கும், ஏனெனில் அமெரிக்கா அவர்களுக்கு ஏற்றுமதிக்கான முக்கிய சந்தையாகும். அமெரிக்காவிற்கு சீனாவின் அதிக ஏற்றுமதிகளில் மின்சார பொருட்கள் மற்றும் பிற இயந்திரங்கள், கணினிகள், தளபாடங்கள், பொம்மைகள், வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் அடங்கும். அமெரிக்கா சீனாவிற்கு அதிக ஏற்றுமதி செய்வது எண்ணெய் வித்துக்கள் மற்றும் தானியங்கள், விமானங்கள், இயந்திரங்கள் மற்றும் மருந்துகள். இதனிடையே, கட்டணங்களைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மை உலகளாவிய பங்குச் சந்தைகளில் ஒரு கொந்தளிப்பான நாளுக்கு வழிவகுத்தது. ட்ரம்ப் உலகளாவிய கட்டணங்களை அறிவித்ததிலிருந்து உலகளவில் சந்தைகள் சரிந்துள்ளன. திங்கட்கிழமை திறந்தவுடன் அமெரிக்க பங்குச் சந்தைகளின் மதிப்பு மீண்டும் கடுமையாக சரிந்தது, அதே நேரத்தில் லண்டனின் FTSE 100 உட்பட ஐரோப்பாவின் மிகப்பெரிய சந்தைகள் 4% க்கும் அதிகமாக சரிந்தன. ஆசிய பங்குச் சந்தைகள் திங்கட்கிழமை சரிந்தன. ஹாங்கொங்கின் ஹேங் செங் குறியீடு 13% க்கும் அதிகமாக சரிந்தது, இது 1997 க்குப் பிறகு அதன் மிகப்பெரிய ஒரு நாள் சரிவு. எனினும் பெரும்பாலானவை செவ்வாயன்று ஒரு சிறிய திருத்தத்தைக் காட்டின, பெரும்பாலான பங்குச் சந்தைகள் உயர்ந்தன. https://athavannews.com/2025/1427859- இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! இந்தோனேசியாவின் மேற்கு ஆச்சே (Aceh) மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், கடலில் சுனாமி அலைகள் எதுவும் எழவில்லை என்று இந்தோனேஷியாவின் நாட்டின் வானிலை மற்றும் புவியில் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில், நிலநடுக்கத்தின் அளவு 6.2 ஆக இருந்ததாக நிறுவனம் அறிவித்தது, பின்னர் அதை கீழ்நோக்கி திருத்தியது. இந்த நிலநடுக்கம் செவ்வாய்க்கிழமை ஜகார்த்தா நேரப்படி அதிகாலை 2:48 மணிக்கு ஏற்பட்டது. இதன் மையம் சிமியூலு ரீஜென்சியில் உள்ள சினாபாங் நகரிலிருந்து தென்கிழக்கே 62 கி.மீ தொலைவில், கடற்பரப்பிலிருந்து 30 கி.மீ ஆழத்தில் அமைந்துள்ளது. நிலநடுக்கம் பெரிய அலைகளை உருவாக்க வாய்ப்பில்லை என்பதால், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. தீவுக்கூட்டங்களைக் கொண்ட நாடான இந்தோனேசியா, நில அதிர்வு மிகுந்த பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ளதால், பூகம்பங்களுக்கு ஆளாகிறது. இந்த நாட்டில் 127 செயலில் உள்ள எரிமலைகள் மற்றும் அடிக்கடி டெக்டோனிக் செயல்பாடுகளும் உள்ளன. https://athavannews.com/2025/1427868Important Information
By using this site, you agree to our Terms of Use.
- குருநாகல் எரிவாயு விற்பனை நிலையத்தில் தீ விபத்து-நால்வர் உயிரிழப்பு!
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.