Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. ஏங்க..வண்டில என் பேர எழுதுங்க. Ok.. இனிசியலோட எழுதிடுறேன் ... 🤣
  2. வாகன இறக்குமதியை எளிதாக்க தயார் நிலையில் ஹம்பாந்தோட்டை துறைமுகம்! 2025 பெப்ரவரி 01 ஆம் திகதி முதல் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டுள்ள வாகன இறக்குமதியை இலகுபடுத்துவதற்கு இலங்கையின் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக நிர்வாகம் தயாராக உள்ளது. 2024 இல், ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் 579,362 வாகனங்களை விடுவித்துள்ளது, இது 2023 இல் 238,997 ஆக இருந்தது. இறக்குமதி மற்றும் டிரான்ஸ்ஷிப்மென்ட் வாகனங்கள் இரண்டையும் கையாளும் வகையில் குறைந்தபட்சம் 4,000 வாகனங்களை சேமிக்கும் திறன் கொண்ட முற்றம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி வில்சன் கியூ குறிப்பிட்டார். வாகனம் கையாளும் செயல்முறையின் ஒவ்வொரு கட்டத்திலும் பாதுகாப்பு மற்றும் பொறுப்புணர்வை பராமரிக்க மொபைல் மற்றும் ரோந்து பணிகளும் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2025/1419506
  3. காற்றின் தரக்குறியீடு தொடர்பான முக்கியத் தகவல்! நாட்டின் பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரக் குறியீடு எதிர்வரும் 24 மணிநேரத்திற்கு மிதமான நிலையில் காணப்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நுவரெலியா நகரில் காற்றின் தரம் ஆரோக்கியமான நிலையில் காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை நாட்டில் நேற்றைய தினம் பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம் மிதமான நிலையை பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பாக கொழும்பு 07, குருணாகல், வவுனியா, கண்டி, கேகாலை, நுவரெலியா, எம்பிலிப்பிட்டிய, களுத்துறை மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் சீரான நிலையிலும் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் காணப்படும் வேளைகளில காற்றின் தரக் குறியீடு ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரக் குறியீடு அடுத்த 24 மணிநேரத்துக்குள் ஒரு நல்ல நிலைக்கு மேம்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1419505
  4. தமிழகத்தின், ராணிப்பேட்டையில் உள்ள பொலிஸ் நிலையத்தின் மீது பெற்றோல் குண்டு வீச்சு! தமிழகத்தின், ராணிப்பேட்டையில் உள்ள சிப்காட் பொலிஸ் நிலையத்தின் மீது பெற்றோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் மோட்டார் சைக்கிளில் வந்த இரு மர்ம நபர்கள் இவ்வாறு பொலிஸ் நிலையத்தின் மீது பெற்றோல் குண்டுகளை வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்த தீவிர விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2025/1419446
  5. ட்ரம்பின் கட்டண உயர்வால் சரிவை சந்தித்த ஆசிய சந்தைகள்! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடா, மெக்சிகோ மற்றும் சீனா மீது வரி விதிப்பதாக அளித்த வாக்குறுதியை தொடர்ந்து திங்கள்கிழமை (03) காலை ஆசிய பங்குகள் சரிந்தன. பெரிய நிறுவனங்களின் வருவாயை பாதிக்கும் மற்றும் உலகளாவிய வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய சாத்தியமான வர்த்தகப் போருக்கு முதலீட்டாளர்கள் தயாராகி வருகின்றனர். கனடாவும் மெக்சிகோவும் அமெரிக்காவின் பதிலடி கொடுக்கும் கட்டணங்களுடன் பதிலடி கொடுப்பதாகக் கூறியுள்ளன, அதேநேரத்தில் சீனா “தொடர்பான எதிர் நடவடிக்கைகளுக்கு” உறுதியளித்தது மற்றும் உலக வர்த்தக அமைப்பில் ட்ரம்பின் நடவடிக்கைக்கு சவால் விடுவதாக உறுதியளித்தது. அமெரிக்காவில் சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் குடியேற்றத்தை தடுக்க இந்த வரிகள் அவசியம் என்று ட்ரம்ப் கூறியுள்ளார். ஹொங்கொங்கின் ஹாங் செங் குறியீடு 1.3%, ஜப்பானின் நிக்கேய் 225 2.4%, தென் கொரியாவின் கோஸ்பி 3% மற்றும் அவுஸ்திரேலியாவின் ASX 200 1.8% திங்களன்று குறைந்தது. சந்திர புத்தாண்டு விடுமுறைக்காக சீனாவின் பிரதான நிலப்பரப்பில் சந்தைகள் மூடப்பட்டுள்ளன. இதற்கிடையில், அமெரிக்க டொலர் வலிமையைக் காட்டியது, சீனாவின் யுவானுக்கு எதிராக சாதனையாக உயர்ந்தது, அதே நேரத்தில் கனேடிய டொலர் 2003 க்குப் பிறகு மிகக் குறைந்த நிலைக்குச் சரிந்தது. ட்ரம்ப் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது “மிக விரைவில்” வரிகளை விதிக்கவுள்ளதாகவும் ஞாயிற்றுக்கிழமை வொஷிங்டனில் உறுதிபடுத்தியுள்ளார். குறுகிய காலத்தில் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு கட்டணங்கள் பயனளிக்கும் அதே வேளையில், நீண்ட காலத்திற்கு அவை கணிசமான அபாயங்களை ஏற்படுத்தும் என்று அமெரிக்க நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கட்டணங்களை திரும்பத் திரும்பப் பயன்படுத்துவது அமெரிக்காவை நம்புவதைக் குறைக்க மற்ற நாடுகளை ஊக்குவிக்கும், டொலரின் உலகளாவிய பங்கை பலவீனப்படுத்தும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். செவ்வாய்கிழமை நள்ளிரவில் அமலுக்கு வரவுள்ள கட்டணங்கள் குறித்து திங்கட்கிழமை கனடா மற்றும் மெக்சிகோ தலைவர்களிடம் பேசவுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இரு நாடுகளும் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு 25% வரியை எதிர்கொள்கின்றன, அதே நேரத்தில் சீனப் பொருட்களுக்கு 10% கூடுதல் வரி விதிக்கப்படும். https://athavannews.com/2025/1419456
  6. ஏனைய நாடுகளுடனான வர்த்தகப் போரில் அமெரிக்கர்களும் பாதிக்கப்படலாம் – ட்ரம்ப். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மெக்சிகோ, கனடா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் மீது விதித்துள்ள கடுமையான கட்டணங்கள் அமெரிக்கர்களுக்கு “குறுகிய கால” வலியை ஏற்படுத்தக்கூடும் என்று ஞாயிற்றுக்கிழமை (02) தெரிவித்தார். ஏனெனில் உலக சந்தைகளில் வரிகள் வளர்ச்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்தலாம் மற்றும் பணவீக்கத்தை மீண்டும் தூண்டலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். புதிய வரி விதிப்புகள் குறித்து கனடா மற்றும் மெக்சிகோ தலைவர்களுடன் திங்களன்று பேசுவேன் என்றும் ட்ரம்ப் கூறினார். புளோரிடாவில் உள்ள தனது மார்-ஏ-லாகோ தோட்டத்தில் இருந்து வொஷிங்டனுக்குத் திரும்பிய ட்ரம்ப் செய்தியாளர்களிடம் உரையாற்றும் போதே இதனைக் கூறினார். ஐரோப்பிய ஒன்றியத்துடன் கட்டணங்களும் “நிச்சயமாக நடக்கும்” என்று இதன்போது கூறிய டரம்ப், ஆனால் எப்போது என்று சுட்டிக்காட்டவில்லை. கனடா மற்றும் மெக்சிகோ மீது 25% வரியும், சீனா மீது 10% வரியும் விதிக்கும் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதியின் திட்டம் உலகளாவிய வளர்ச்சியைக் குறைக்கும் மற்றும் அமெரிக்கர்களுக்கு விலையை உயர்த்தும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கவும் உள்நாட்டுத் தொழில்களை ஊக்குவிக்கவும் அவை தேவை என்று ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2025/1419450
  7. யார்… அந்த சார்…? இன்னும் அந்த சாரை, தி.மு.க. அரசு கண்டு பிடிக்காததால்… அவங்க கட்சி ஆள்தான் என்று உறுதியாகி விட்டது. இடுப்பை கிள்ளுறது, பிரியாணி களவெடுக்கிறது, பாலியல் சில்மிஷம் செய்யுறவன் எல்லாம்…. தீம்கா கட்சியில்தான் இருக்கிறாங்கள். தலைவன் எவ்வழியோ… தொண்டனும் அவ்வழிதான். (200 றுப்பீஸ்) 😂 🤣
  8. காற்றின் தரத்தை வெறும் கண்ணாலேயே பார்க்கும் அளவுக்கு புகை மூட்டமாக உள்ளது. இது மிகவும் ஆபத்தானது. இதனால் நாட்டு மக்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டால் அதில் இருந்து மீள முடியாது. வாகனங்கள், தொழிற்சாலைகள், குப்பைகளை சகட்டு மேனிக்கு எரித்தல் போன்றவற்றில் கூடிய கவனம் எடுக்க வேண்டும். ஜேர்மனியில் 49, 000, 000 கார்கள் உள்ளன. பார ஊர்திகள் வேறு. இவை வெளியேற்றும் புகைகளை கடினமான சோதனைக்குப் பின்பே, வீதியில் ஓட அனுமதிப்பதால் காற்றின் தரம் மாசு படுவது தவிர்க்கப் படுகின்றது. நல்ல தண்ணீர், நல்ல காற்று போன்றவற்றை கொடுப்பதும்…. அரசாங்கத்தின் பொறுப்புத் தான்.
  9. மிகப் பெரிய தொழில் அதிபர் என்றுபத்திரிகையில் உள்ளது. பெயரைப் பார்க்க, தமிழாராகவும் இருக்குது. ஆனால்… இவரின் பெயரை முன்பு கேள்விப் பட்டதே இல்லை. அனுதாபங்கள்.
  10. சரியாக சொன்னீர்கள் குமாரசாமி அண்ணை. 👍🏽 தலையை மண்ணில் புதைக்கும்… தீக்கோழிகளுக்கு இது புரியாது. 🤣
  11. இப்ப ஆச்சி அரசியல் செய்தால்தான்... ஆட்சியில் இருக்கலாம் போலுள்ளது. 😂 முதலாவது சிங்கள ஆச்சி, மற்றது தமிழ் ஆச்சி. 🤣
  12. சம்பந்தரின் ஆவி.... மாவையரின் செத்த வீட்டுக்கு வந்த பிரபலங்களையும், மக்களையும் பார்த்து பொறாமை பட்டிருக்கும். அதுகும் சம்பந்தரின் பூதவுடல் தந்தை செல்வா கலையரங்கில் வைக்கப் பட்டிருந்த போது 50 பேருக்கும் குறைவானவர்களே வந்திருந்தார்கள். இரவில்... அந்தப் பிணத்தின் அருகே 5 பேர் கூட நிற்கவில்லையாம்.
  13. மாவையின் புகழுடல் தீயுடன் சங்கமம்! மறைந்த இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் புகழுடல் இன்று தகனம் செய்யப்பட்டது. மாவிட்டபுரத்தில் உள்ள அன்னாரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது புகழுடல் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாவிட்டபுரம் தச்சன்காடு இந்துமயானத்தில் அன்னாரது பூதவுடல் தகனம் செய்யப்பட்டது. இறுதி நிகழ்வில் அரசியல்வாதிகள், பொது அமைப்பினர் , மத குருமார்கள் , சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் , என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர். 1942ஆம் ஆண்டு ஒக்டோபர் 27ஆம் திகதி பிறந்த மாவை சேனாதிராஜா, வீட்டில் தவறி விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 29ஆம் திகதி காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1419369
  14. சிவமோகன் குறிப்பிடும் மும்மூர்த்திகள். 1) சுமந்திரன். 2) சிவஞானம். 3) சத்தியமூர்த்தி. என நினைக்கின்றேன்.
  15. தில்லை அண்ணா….உங்களின் இளைய மகளுக்கு, உளம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். 🙏
  16. சிலவேளை இவை வெளிநாட்டு பன்றிகள் என்ற படியால்… நம் ஊர் வைரசுகளை தாங்கும் சக்தி இல்லாமல் இருக்கலாம்.
  17. வேலையற்ற பட்டதாரிகளும் தமிழ்ச் சமூகமும் – நிலாந்தன். வேலை தேடும் பட்டதாரிகள்,ஜனாதிபதியின் வருகையையொட்டி, யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அருகே ஓர் ஆர்ப்பாட்டத்தை ஒழுங்குபடுத்தியிருந்தார்கள்.போலீசார் அவர்களை கச்சேரியை நோக்கி வர விடவில்லை.அவர்களை கண்டி வீதியில்,கச்சேரிக்கு அருகே அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலைய சூழலில் வைத்து மறித்து விட்டார்கள். அதேசமயம் ஜனாதிபதி அவர்களுடைய கண்ணில் படாமல் பழைய பூங்கா வீதி வழியாக வெளியேறிச் சென்று விட்டார்.பட்டதாரிகள் தங்களுடைய முறைப்பாட்டை ஜனாதிபதியிடம் கையளிக்க முடியவில்லை. தமிழ்ப்பகுதிகளில் மட்டும் 3000த்துக்கும் குறையாத பட்டதாரிகள் நிரந்தர வேலையின்றி இருக்கிறார்கள். நாடு முழுவதும் சுமார் 30,000 பட்டதாரிகள் அவ்வாறு உண்டு என்று ஒரு பட்டதாரி சொன்னார். இவர்களில் 80 வீதத்திற்கும் குறையாதவர்கள் எங்கேயோ ஒரு தனியார் துறையில் ஏதோ ஒரு வேலையைச் செய்கிறார்கள். சிலர் நல்ல சம்பளத்துக்கும் வேலை செய்கிறார்கள். வேலை தேடும் பட்டதாரிகளின் ஒன்றுகூடல்களில் ஒரு விடயத்தைக் கவனிக்கலாம். அங்கே முப்பது வயதைக் கடந்தவர்களும் உண்டு.அதாவது பல ஆண்டுகளாக அவர்கள் போராடி வருகிறார்கள் என்று பொருள்.அவர்களுக்கும் வயது ஏறிக்கொண்டு போகிறது. வேலை தேடித் தேடி வயதுகள் வீணாகிவிட்டன. ஆனால் அவர்கள் எந்த வேலையைத் தேடுகிறார்கள்? அரச உயர் அதிகாரியான எனது நண்பர் ஒருவர் சொல்வார், அவர்களை வேலையற்ற பட்டதாரிகள் என்று அழைக்கக்கூடாது. “அரச வேலையற்ற பட்டதார்கள்” என்றுதான் அழைக்க வேண்டும் என்று.ஏனென்றால் அவர்கள் அரச வேலைக்காகத்தான் போராடுகிறார்கள். தனியார் துறையில் வேலை செய்வதற்கோ அல்லது தாமாக ஒரு தொழில்துறையை தொடங்குவதற்கோ தயாரில்லை என்றும் அவர் கூறுவார். அவர்கள் ஏன் அரச வேலையை நாடுகிறார்கள் என்று கேட்டால்,அதற்கும் அவர் பதில் சொல்வார். ஏனென்றால் அது சுகமானது. கஷ்டப்படத் தேவையில்லை. தடைதாண்டல் பரீட்சைகளின்மூலம் பதவி உயர்வுகளைப் பெறலாம். கஷ்டப்பட்டு வேலை செய்து பதவி உயர்வுகளைப் பெற வேண்டிய தேவை இல்லை. பணி நேரத்தில் ஓய்வாக இருக்கலாம். ஓய்வூதியம் கிடைக்கும். அரசு ஊழியர் என்ற சலுகைகள் கிடைக்கும். எனவே ஒப்பீட்டளவில் ரிஸ்க் இல்லாத, கஷ்டப்படுத்த தேவையில்லாத, பாதுகாப்பான பிற்காலத்தைக் கொண்ட ஒரு தொழில், என்பதனால் பெரும்பாலானவர்கள் அரச ஊழியத்தை நாடுகிறார்கள் என்று எனது நண்பர் சொல்வார். ஆனால் அரசு ஊழியத்தின் தொடக்க காலம் அப்படியொன்றும் செழிப்பானதோ மகிழ்வானதோ அல்ல.யாழ்ப்பாணத்தில் ஓர் அரசு ஊழியருக்கு முதலில் கிடைக்கும் நியமனம் பெரும்பாலும் தூரப் பிரதேசங்களுக்கே கிடைக்கும். தூர மாவட்டங்களுக்குத்தான் கிடைக்கும்.கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் அங்கே அவர் சேவை புரிய வேண்டும்.அரசியல் செல்வாக்கு இருந்தால் தீவுப் பகுதிக்கோ அல்லது பளைப் பிரதேசத்துக்கோ நியமனத்தை எடுக்கலாம்.ஆனால் அது எல்லாருக்கும் கிடைப்பதில்லை. இவ்வாறு 8 ஆண்டுகள் கட்டாயமாக கஷ்டப் பிரதேசத்தில் வேலை செய்யவேண்டி வரும்பொழுது,அது முதல் நியமன அனுபவத்தை துன்பகரமானதாக மாற்றுவதுண்டு. தூர மாவட்டத்தில் அங்குள்ள அரச ஊழியருக்கான விடுதியில் தங்கினால் அது வேறு விடயம். அதல்லாமல் ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து வேலைக்குப் போய் மாலையில் வருவது என்று சொன்னால் அது மிகத் துன்பம்.வேலை வெறுக்கும் அளவுக்குத் துன்பம். அதிகாலையில் எழ வேண்டும். எழுந்தால்தான் அரச ஊழியர்களுக்கான பஸ்ஸைப் பிடிக்கலாம்.வேலை முடிந்து வீடு திரும்பும்போது கிட்டத்தட்ட நான்கு மணிக்கு மேல் ஆகிவிடும். அது நியமனம் கிடைத்த இடத்தின் தூரத்தைப் பொறுத்த விடயம். இவ்வாறு நியமனம் கிடைத்த அதே காலப்பகுதியில்தான் பெரும்பாலும் திருமணமும் நடக்கும். திருமணம் செய்த நபரும் முதல் நியமனம் பெறும் அரசு ஊழியர் என்றால் தேனிலவுக் காலம் பயணத்திலேயே கழியும்.காலையில் எழுந்து பரக்கப்பரக்க ஓட வேண்டும்.காலையில் எழுவதற்காக இரவு முன்கூட்டியே நித்திரைக்குப் போக வேண்டும்.புதுமணத் தம்பதிகள் உல்லாசமாகத் திரிவதற்கு கிடைக்கும் நேரம் மிகச் சில மணித்தியாலங்கள்தான்.அதற்குள் பிள்ளையைப் பெற்றால் அது அடுத்த துன்பம்.பிள்ளையைப் பராமரிக்க அம்மம்மா,அப்பம்மா யாராவது இல்லையென்றால், அதற்கு வேலைக்கு ஆள் தேட வேண்டும். அநேகமாக ஆட்கள் கிடையாது. வேலை நேரத்தில் பிள்ளையின் முகம் அல்லது துணையின் முகம் கண்ணுக்கு முன்வரும்.அது வேலை செய்யவிடாது. இப்படித்தான் 8 ஆண்டுகளும் கழியும். பொதுவாக திருமணத்தை உடனடுத்து வரும் காலப் பகுதியானது வாழ்வில் மகிழ்ச்சியாக,ஃப்ரீயாகக் கழிக்க வேண்டிய ஒரு காலம். ஆனால் முதல் நியமனம் பெறும் நகரப் பகுதி அரசு ஊழியர்களுக்கு அதுதான் துன்பகரமான, வெறுப்பான ஒரு காலமாகவும் அமைவதுண்டு.குடும்பத்தைப் பிரிந்து பயணம் செய்து கொண்டே இருக்க வேண்டும்.எந்தக் காலகட்டத்தில் வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கழிக்க வேண்டுமோ அதே காலகட்டம் பயணத்தில் கழிந்து போகும்.அந்த அரசு ஊழியர் மகிழ்ச்சியான அரசு ஊழியராகவும் இருக்கப் போவதில்லை;மகிழ்ச்சியான குடும்பத் தலைவராகவோ தலைவியாகவோ இருக்கப் போவதும் இல்லை. படிப்பு எதற்கு? பட்டம் எதற்கு? தொழில் எதற்கு? மகிழ்ச்சியாக இருப்பதற்குத்தானே?ஒரு தம்பதி மகிழ்ச்சியாக உல்லாசமாகக் கழிக்க வேண்டிய காலத்தில் பெரும் பகுதியை பயணத்தில் கழிப்பது என்பது வாழ்க்கையின் பொருளை, கல்வியின் பொருளைக் கேள்விக்கு உள்ளாக்கும். ஆனால் யாழ்ப்பாணத்தில் இருந்து முதல் நியமனம் பெறும் பெரும்பாலான அரசு ஊழியர்களின் வாழ்க்கை அப்படித்தான் இருக்கிறது.அந்த எட்டு ஆண்டுகளையும் பல்லைக் கடித்துக்கொண்டு கடந்துவிட்டால் அதன் பின் ரிலாக்ஸாக இருக்கலாம் என்று பலரும் கருதுகிறார்கள். இவ்வாறாக அரச ஊழியத்துக்காகக் காத்திருக்கும் பட்டதாரிகளின் தொகை ஆயிரக்கணக்கில் வந்துவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக அவர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.ஆனால் யாரும் அவர்களைக் கண்டு கொள்வதில்லை. குறிப்பாக பொருளாதார நெருக்கடியின் பின்னணியில் புதிய நியமனங்கள் ஒத்திவைக்கப்பட்டு கொண்டே போகின்றன. இது ஒரு காட்சி.இதற்கு நேர் எதிரான மற்றொரு காட்சி உண்டு. 3000த்துக்கும் அதிகமான பட்டதாரிகள் வேலைகேட்டு போராடும் ஒரு நாட்டில் கூலி வேலைக்கு ஆட்கள் இல்லை. நான் வாழும் கிராமத்தில் படித்தவர்கள், பெரிய உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உண்டு. ஆனால் இங்கு கூலி வேலைக்கு ஆள் கிடையாது. முன்பு ஒரு முதியவர் இருந்தார்.அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்.ஒரு கோவில் தாழ்வாரத்தில் உறங்குவார். அவரை வேலைக்கு பிடிப்பதே கஸ்ரம். வேலைக்கு வந்தாலும் அவருக்கு விருப்பமான நேரம்தான் வருவார்.விரும்பின வேலையைத்தான் செய்வார்.அதிகம் சாப்பிடமாட்டார்.அவரும் ஒரு கடுமையான மழை நாளில்,கோவில் தாழ்வாரத்தில் இறந்துவிட்டார். இப்பொழுது வேலைக்கு ஆட்கள் இல்லை. கூலி வேலைக்கும் துப்புரவு வேலைகளுக்கும் தேங்காய் பிடுங்குவதற்கும் ஆட்கள் இல்லை.தேங்காய் பிடுங்குவதற்கு முன்பு கேட்கப்பட்ட கூலி சில தேங்காய்கள். இப்பொழுது ஒரு மரத்துக்கு 300 ரூபாய். அது பரவாயில்லை. ஏனென்றால் ஒரு பெரிய தேங்காய் 200 ரூபாய்க்கு மேல் போகிறது. ஒருபுறம் ஆயிரக்கணக்கான பட்டப்பட்டதாரிகள் வேலை கேட்டுப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு புறம், கூலி வேலைகளுக்கு, சாதாரண சிறிய வேலைகளுக்கு ஆட்கள் இல்லை.முதியவர்களைப் பராமரிக்க, இயலாதவர்களைப் பராமரிக்க, சமைக்க, வீட்டு வேலைகளைச் செய்ய, பிள்ளை பெற்ற பெண்ணைப் பராமரிக்க,ஆட்கள் இல்லை. இதற்கு அரசாங்கம் மட்டும் பொறுப்பல்ல.தொழில் தொடர்பாக,தொழில் ஸ்தலத்தில் மகிழ்ச்சியாக இருப்பது தொடர்பாக,தொழில் பாதுகாப்பு தொடர்பாக,தமிழ்மக்கள் மத்தியில் காணப்படும் அளவுகோள்களும் நம்பிக்கைகளும்கூட இதற்குக் காரணம்தான். அவ்வாறு அரசு ஊழியத்துக்காக காத்திருக்கும் பட்டதாரிகளைத் தயார்ப் படுத்திய கல்விமுறையும் பல்கலைக்கழகங்களும் காரணம்தான்.அரச தொழில்துறைக்கு வெளியே தாமே சுயமாக தொழில் துறைகளை தொடங்கத் தேவையான தொழில் முனைவோர்களை நமது கல்விமுறை உற்பத்தி செய்ய தவறிவிட்டதா? ஒருபுறம் சாதி சார்ந்த தொழில் பிரிவுகள்.இன்னொரு புறம் தொழில் முனைவோரை உருவாக்காத கல்வி.யாழ்ப்பாணத்தின் கரையோரப் பகுதிகளில் மீனவ சமூகங்கள் மத்தியில் இருந்துவரும் பட்டதாரிகள் கடற்தொழிலை திரும்பிப் பார்ப்பதில்லை.அதுபோல வலிகாமத்தின் மையப் பகுதிகளில் விவசாயக் குடும்பங்களில் இருந்து வந்த பட்டதாரிகள் விவசாயத்தைத் திரும்பிப் பார்ப்பதில்லை.ஆனால் வன்னியில் பெரும்பாலான பட்டதாரிகள் விவசாயத்தை ஒரு உப தொழிலாக மேற்கொள்வார்கள். முதலீட்டுத் துறையைச் சேர்ந்த ஒரு விற்பனர் ஒருமுறை என்னிடம் கேட்டார், ஒரு வாகனம் திருத்துபவரின் மகன் முகாமைத்துவப் பட்டதாரியாக வந்தபின் தன்னுடைய தகப்பனின் சிறிய வாகனம் திருத்தும் கடையை பெரிய அளவில் விஸ்தரித்து முகாமைத்துவம் செய்வதற்கு முயற்சிப்பதில்லை.அவர் தன் தகப்பனின் தொழிலைத் திரும்பிப் பார்க்காத ஒரு நிலைமைதான் உண்டு. ஒருபுறம் சாதி ஏற்றத்தாழ்வுகள் காரணமாக ஒரு புதிய தலைமுறை தமது பரம்பரை தொழிலை கைவிடுகின்றது. அதில் ஒரு நியாயம் உண்டு. அதே சமயம் அந்த தொழில்களை நவீனமாக்கி எந்திரமயப்படுத்துவதன்மூலம் அவற்றின் சாதி அடையாளங்களை அகற்றலாம். ஆனால் கல்விமுறை அதற்கு வேண்டிய தொழில் தரிசனங்களைக் கொடுக்கவில்லை. புலம்பெயர்ந்த தமிழர்கள் அனுப்பும் காசும் இந்த விடயத்தில் இளையவர்களைக் கெடுக்கிறது என்று ஒரு மதகுரு சொன்னார்.ஆனால் 2009க்கு உடனடுத்த ஆண்டுகளில் அவ்வாறு உதவிய பலரும் இப்பொழுது உதவுவதில்லை. அதேசமயம் புலம்பெயர்ந்த தமிழர்கள் சிலரின் நிதி உதவிகளை வைத்துத் தொழில் முனைவோராக மேலெழுந்த பலர் உண்டு.இங்கு பிரச்சனை என்னவென்றால், இவை எவையும் ஒரு மையத்தில் இருந்த திட்டமிடப்படாத உதிரிச் செயற்பாடுகளே. இப்பொழுது மூன்றாவது புலப்பெயர்ச்சி அலை நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதில் படித்தவர்கள், பட்டதாரிகள், நல்ல தொழில் பார்த்தவர்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.இவர்களில் ஒரு பகுதியினர் திரும்பி வருகிறார்கள் என்பதும் உண்மை. ஆனால் வெளியேறத் துடிக்கும் அனைவரும் வாழ்க்கை இங்கு கடினமானது, மகிழ்ச்சியற்றது என்று கருதுகிறார்கள் என்பது மட்டும் உண்மை. அல்லது புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் வாழ்க்கை ஒப்பீட்டளவில் வசதியானது, பாதுகாப்பானது என்று நம்புகிறார்கள் என்பது மட்டும் உண்மை. தமிழ்த் தேசியவாத கட்சிகளிடம் இது தொடர்பான பொருத்தமான பொருளாதாரத் தரிசனங்கள் இல்லை.அவர்களுக்கு தேசியவாத அரசியல் என்றாலே என்ன என்று தெரியவில்லை. ஒரு மக்கள் கூட்டத்தைத் தேசமாக வனையும் அம்சங்களில் ஒன்று பொதுப் பொருளாதாரம் ஆகும். ஆனால் தமிழ்க் கட்சிகளில் யாரிடமாவது பொருத்தமான பொருளாதாரத் தரிசனங்கள் உண்டா? இல்லை.ஒருபுறம் நல்ல பதவிகளை வகிக்கும் பட்டதாரிகள் புலம் பெயர்கிறார்கள்.இன்னொருபுறம்,வேலை கேட்டுப் போராடும் பட்டதாரிகள். அதேசமயம் கூலி வேலைக்கு ஆள் இல்லாமல்,முதியோரை, இயலாதவர்களைப் பராமரிப்பதற்கு ஆள் இல்லாமல்,சமைப்பதற்கு ஆள் இல்லாமல் தவிக்கும் நடுத்தர வர்க்கக் குடும்பங்கள்.ஒரு தேசமாகத் தமிழ் மக்கள் தமது பொதுப் பொருளாதாரத்தை எப்படிக் கட்டியெழுப்பப் போகிறார்கள்? https://athavannews.com/2025/1419349
  18. கொள்ளுப்பிட்டியில் வெளிநாட்டுப் பெண் திடீர் மரணம்! கொள்ளுப்பிட்டி ஆர்.ஏ. டி மெல் மாவத்தையில் உள்ள விடுதியில் தங்கியிருந்த இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்ணொருவர் திடீர் சுகவீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேற்படி விடுதியில் தங்கியிருந்த மூன்று வெளிநாட்டினர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 24 வயதுடைய குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏனைய இருவரும் ஜேர்மனைச் சேர்ந்த தம்பதியினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2025/1419355
  19. மிகவும் சோகமான செய்தி. பாவம் அந்த பண்ணை உரிமையாளர். நோய்த் தொற்று ஏற்பட முதல், அதற்குரிய தடுப்பூசிகளை போட்டிருந்தால் இழப்பு, குறைவாக இருந்திருக்கும் என நினைக்கின்றேன்.
  20. விளக்கமறியலில்... ஐந்து நட்சத்திர விடுதியின், உபசரிப்பு கிடைக்கும் என எதிர்பார்த்துள்ளார் போலுள்ளது. அப்பன்,சித்தப்பன்... பதவி இருக்கும் போது, பணிவாக நடந்திருந்தால்... ஏன் இந்த வில்லங்கம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.