Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. @ரசோதரன் இது தான்… கட்டுப் பணத்தை விகாரையில் விட்டுட்டு வந்த தேரரின் செய்தி. 😂
  2. மற்றப் பக்கம்… காப்பு கை ஒண்டு தெரியுது 😂. யாராய்… இருக்கும் 🤔, தெரியாட்டி தலை வெடிச்சிடும் போலை இருக்கே.. 🤣 கட்சியில் தனி ஒரு ஆளாக நின்று, ஜனாதிபதி ஆகிய பெருமை… உலகத்தில் எவருக்குமே கிடைக்காது. ஶ்ரீலங்கா ஒரு விசித்திரமான நாடு. 😂
  3. ஒரு தேரரும்… ஜனாதிபதி வேட்பாளாராக போட்டி போடுவதற்கு, கடந்த வெள்ளிக்கிழமை தேர்தல் ஆணையத்துக்கு சென்ற போதுதான் தெரிந்தது… அவர் கட்டுக்காசு பணத்தை விகாரையில் மறந்து போய் விட்டு விட்டு வந்து விட்டாராம். 😂 திங்கள்கிழமை (இன்று) கட்டுவதாக சொல்லிவிட்டு வந்து விட்டாரம். இன்று கட்டினாரோ தெரியவில்லை. 🤣
  4. ஒருவரும் சேர்க்கவில்லை. 😂 போற இடம் எல்லாம் கட்சிகளை பிளந்து கொண்டு இருந்தால், யார்தான் பக்கத்தில் வைத்திருப்பார்கள். 🤣
  5. ஐரோப்பியன் வாள்வெட்டு கோஷ்டி. 😂 எதை விதைத்தாயோ… அதைத்தான் அறுவடை செய்வாய்.
  6. நிழல் தரும் மரத்தை வெட்டி விட்டு, இப்போ அந்த மரத்திலேயே குடை பிடிக்கின்றார்கள்.
  7. ஓடுவதாக இருந்தால் துரத்திக்கொண்டு ஓடுங்கள். நிற்பதாக இருந்தால் எதிர்த்து நில்லுங்கள். பதுங்குவதாக இருந்தால் பாய்வதற்காக பதுங்குங்கள். ஆனால் ஒருபோதும் அடிமையாகவே வீழ்ந்து கிடந்துவிடாதீர்கள். (இன்று சர்வதேச புலிகள் தினம்.) தோழர் பாலன்
  8. ஆதவன் போட்ட படம் என்ற படியால்... நீங்கள் சொன்ன மாதிரியும் இருக்கும். 😂
  9. ஈழப்பிரியன்... தமிழரசு கட்சியின் சுமந்திரன் பிரிவு நடத்திய கூட்டத்துக்கு இவ்வளவு ஆக்கள் வந்ததே பெரிய விஷயம். சம்பந்தர் அய்யாவின் மரணச் சடங்குக்கு வந்தவர்களை விட, இங்கு ஆட்கள் அதிகமாக நிற்கிறார்கள்.
  10. சிங்கத்துக்கு... மாடு மாதிரி, நாலு காம்பு இருக்கும் என இவ்வளவு நாளும் நினைத்திருந்தேன். 😂 "டவுட்"டை... கிளியர் பண்ணினத்துக்கு, நன்றி சுவியர். 🤣
  11. பையா... எனக்கும் சிங்களம் புரியவில்லைத்தான். ஆனால்... கேலிசித்திரத்துக்கு மொழி புரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. படத்தைப் பார்த்தே... ஓரளவு ஊகிக்கலாம். 🙂 எனக்கு விளங்கியபடி... பல நோய்களால் பீடிக்கப் பட்டு, நடக்கவே... முடியாத ஸ்ரீலங்காவுக்கு... மகளிர் அணியினர் ஆசிய கிண்ணத்தை எடுத்துக் கொடுத்ததன் மூலம், மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீரை வரவழைத்துள்ளனர். 😂 உங்களுக்கு இன்னும் புரிய வேண்டும் என்றால்... @விசுகு, @புங்கையூரன், @ரஞ்சித் ஆகியோர் உதவுவார்கள். 😂
  12. மாவை, ஸ்ரீதரன் போன்றோரின் படங்களை காணவில்லை. தமிழரசு கட்சி இரண்டாக பிரிந்து விட்டது போல் தெரிகின்றது.
  13. அமலநாயகிக்கு அழைப்பு விடுத்த பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு! மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகியை பயங்கரவாத தடுப்பு பிரிவில் இன்று முன்நிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவின், அலுவலகத்திற்கு இன்று காலை 10.00மணிக்கு சமுகமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் தொடர்ச்சியாக மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவிக்கு இவ்வாறு புலனாய்வுப் பிரிவினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமது உரிமைக்காக போராடுவோரை அச்சுறுத்தும் வகையில் இவ்வாறான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1393930
  14. கறுப்பு யூலை படுகொலையின் 41 ஆம் ஆண்டு நினைவேந்தல்! கறுப்பு யூலை படுகொலையின் 41 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழில் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது. யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்க மண்டபத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில், 1983 ஆம் ஆண்டு ஜூலை படுகொலை செய்யப்பட்டவர்கள் மற்றும் வெலிக்கடைச் சிறையில் படுகொலை செய்யப்பட்ட 53 அரசியற் கைதிகள் உள்ளிட்ட அனைவரையும் நினைவுகூர்ந்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. நினைவேந்தல் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாணக்கியன், வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் மற்றும் யூலை கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1393922
  15. ஜனாதிபதி வேட்பாளர் குறித்து 31 ஆம் திகதி அறிவிக்கப்படும்! -மஹிந்த அமரவீர. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் வேட்பாளர் யார் என்பதை எதிர்வரும் 31ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார். இதேவேளை இன்றையதினம் தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது. இன்று இடம்பெறவுள்ள அரசியல் குழுக் கூட்டத்தின்போது, வேட்பாளரை தீர்மானிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ரஜபக்சவிற்கும் இடையில் நேற்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. கொழும்பு – விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நேற்று மாலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இதற்கு முன்னரும் இவ்வாறான பல சந்திப்புகள் இடம்பெற்ற நிலையில் அவை இணக்கப்பாடின்றி நிறைவடைந்திருந்தன. அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுயாதீன வேட்பாளராகத் தேர்தலில் களமிறங்கியுள்ள நிலையில், தமது கட்சியின் வேட்பாளர் தொடர்பான அறிவிப்பை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று வெளியிடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1393921
  16. இரண்டாவது சீனா, மூன்றாவது அவுஸ்திரேலியா, நான்காவது பிரித்தானியா, ஐந்தாவது பிரான்ஸ், ஆறாவது ஜேர்மனி, ஏழாவது கனடா, எட்டாவது ஜப்பான், ஓன்பதாவது கொரியா பத்தாவது இத்தாலி…. வரும் என்பது எனது கணிப்பு. 😁
  17. கட்டுப்பணத்தை... விகாரையில் மறந்து போய் விட்டு விட்டு வந்த ஆமத்துறு. 😂 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருக்கும் சீலரத்ன தேரர், கடந்த வெள்ளிக்கிழமை கட்டுப்பணம் செலுத்துவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு சென்ற நிலையில்... தனது கட்டுப் பணத்தை விகாரையில் மறந்து போய் விட்டு விட்டு வந்ததால்... வருகின்ற திங்கள்கிழமை கட்டுப்பணம் செலுத்துவார் என எதிர்பார்க்கப் படுகின்றது. 🤣 அடுத்த ஜனாதிபதியாக வர இருக்கும் இவருக்கு... கட்டுப் பணம் செலுத்தாமலே, தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும். 🤣
  18. ❤️ காதலிப்பவர்கள் எல்லோருக்கும் கவிதை எழுதும் திறமை உள்ளதை பல இடங்களில் அவதானித்து உள்ளேன். 💗 நல்ல ஒரு கவிதைக்கு நன்றி. 👍🏽
  19. எனக்கென்னவோ…. நாமல் அல்லது தம்மிக்க பெரேராவைத்தான் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவார்கள் போலுள்ளது.
  20. மகிழ்ச்சியான நல்ல செய்தியை முதலில் சொல்லி விட்டு, கடைசியில்… பூமியில் தயாரிக்கப்படும் விண்கலத்தில் அங்கு செல்வது கடினம் என்று சொல்லி விட்டார்கள். 😁 மினைக்கெட்டு வாசிச்சது… சப்பெண்டு போச்சுது. 😂 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.