Everything posted by தமிழ் சிறி
-
இங்கிலாந்து - இலங்கை கிரிக்கெட் தொடர் செய்திகள்
சரி… சரி… எத்தனை பேர் திரும்பி ஊருக்கு போறாங்கள் என்று பார்ப்போம். 😂
- சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
-
குளியலறையில்
புத்தன் ஏமாந்தது காணாது என்று… “குளியலறையில்” என்ற தலைப்பை போட்டு எங்களையும் ஏமாற்றி விட்டார். 😂 🤣
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
திரு ரணில் விக்ரமசிங்க அதிகாரத்திலிருந்த போது தான்... மாமனிதர் ரவிராஜ் படு*கொ*லை வழக்கின் சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். திருகோணமலை குமரபுரத்தில் 24 பொதுமக்களை படு*கொ*லை வழக்கின் சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்ட 6 இராணுவ அதிகாரிகள் விடுதலை செய்யப்பட்டார்கள். திருகோணமலை கடற்கரையில் படு*கொ*லை செய்யப்பட்ட 5 மாணவர்கள் தொடர்பான வழக்கின் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்ட 13 இராணுவ அதிகாரிகள் விடுதலை செய்யப்பட்டார்கள். யாழ்ப்பாணத்தில் கூட்டு பலா*த்*காரத்தின் பின் கொ*லை செய்யப்பட்ட ரஜினி வேலாயுதம்பிள்ளை என்கிற 24 வயது பெண் தொடர்பான வழக்கின் குற்றவாளிகளான 2 இராணுவத்தினர் விடுவிக்கப்பட்டனர். அக்சன் பாம் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனத்தின் பணியாளர்கள் 17 பேர் படு*கொ*லை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகள் மீதான விசாரணைகள் முடக்கப்பட்டன. 1996 ஆம் ஆண்டு நாவற்குழிப்பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆட்கொணர்வு வழக்கினை தாக்கல் செய்தவர்கள், அவர்களின் சார்பிலான ஆஜரான சட்டத்தரணிகள் புலனாய்வாளர்களால் நீதிமன்ற வளாகத்திலேயே அச்சுறுத்தப்பட்டு குறித்த வழக்கு முடக்கப்பட்டது. திருகோணமலை ஸ்ரீமலை நீலியம்மன் கோயில் தீயிடப்பட்டவழக்கில் அங்கு அத்துமீறி கட்டப்பட்டுள்ள பாசன பப்பாத ராஜமஹா விகாரையை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு வழக்கு பதியப்பட்ட போதும் அவர் விடுவிக்கப்பட்டு வழக்கும் கை விடப்பட்டது. அதே போல தற்போது கொழும்பில் இருந்து கடத்தி திருகோணமலையில் வைத்து படு*கொ*லை செய்யப்பட்ட 11 தமிழ் மாணவர்கள் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கடற்படை தளபதி Wasantha Karannagoda மீதான குற்றச்சாட்டை வாபஸ் பெற சட்டமா அதிபர் திணைக்களம் முயன்று வருகின்றது. இது போதாதென்று திரு ரணில் விக்ரமசிங்கே அவர்களின் அதிகாரத்தின் போது தான் யாழ்ப்பாண பல்கலை கழக துணைவேந்தர் காலம் சென்ற பேராசிரியர் விக்கினேஸ்வரன் இராணுவத்தினரின் வற்புறுத்தலில் பதவி பறிக்கப்பட்டார். இவ் விவகாரத்தில் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தலைவர் நீதிமன்றிற்கு வழங்கிய சத்தியக் கூற்றில் புலனாய்வு முறைப்பாட்டின் பேரிலேயே அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக கூறிய விளக்கத்தை ஏற்று நீதிமன்றம் பேராசிரியர் விக்கினேஸ்வரனின் பதவி நீக்கத்தை சவாலுக்கு உட்படுத்திய மனுவை தள்ளுபடி செய்திருந்தது. குருந்தூர் மலை பௌத்த ஆக்கிரமிப்பை கையாண்ட முல்லைத்தீவு நீதிவான் திரு சரவணராஜா அச்சறுத்தல் மூலம் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோவில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையின் விகாராதிபதி கோலம்பே மேதாலங்காதர தேரரின் உடலை முல்லைத்தீவு நீதிமன்ற உத்தரவை மீறி ஆலய தீர்த்தக் கேணியில் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது. Nellai Nellaiyaan
-
ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவின் பரிதாப நிலை.
பொன்ஸ்... கொண்டு வந்த காரை பார்த்திட்டு... சனம் பயத்திலை கூட்டத்திற்கு வரவில்லையோ... சொந்த செலவிலை... சூனியம் வைத்த கதையாய் போய் விட்டது. 😂
-
வட மாகாண வைத்தியசாலைகளுக்கு அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஆளுநர்
வட மாகாண வைத்தியசாலைகளுக்கு அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஆளுநர். வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் முறைப்பாடுகளுக்கான தொடர்பிலக்கங்கள் அடங்கிய அறிவிப்பு பதாதை காட்சிப்படுத்தப்பட வேண்டும் என வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார். வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகள், அரச மருந்தகங்கள் ஆகியவற்றில் முன்னெடுக்கப்படும் சேவைகள் தொடர்பான தகவல் அடங்கிய பாதாதைகள் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மாகாண சுகாதார அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நோயாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகள், நோயாளர்களும், வைத்தியர்களும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், சேவையை பெற்றுக் கொள்வதில் தாமதம் அல்லது சிக்கல்கள் ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய உயர் அதிகாரிகளின் தொடர்பு இலக்கங்கள் ஆகியன குறித்த பதாதையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனவும் ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாவட்ட, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரின் தொலைபேசி இலக்கங்கள் அறிவித்தல் பதாதையில் கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டும் எனவும், பொதுமக்களிடம் இருந்து கிடைக்கும் முறைப்பாடுகள் தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் சுகாதார துறை உயர் அதிகாரிகளுக்கு வடக்கு மாகாண ஆளுநர் கூறியுள்ளார். அத்துடன் ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் “அபயம்” பிரிவின் தொலைபேசி இலக்கமும் அறிவித்தல் பதாதையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1396617 நோயாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதோடு, அவர்களுக்கான சேவையை உறுதிப்படுத்த சுகாதார துறையினர் மேலும் அர்ப்பணிப்போடு செயற்பட வேண்டும் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் சுட்டிகாட்டியுள்ளார். https://athavannews.com/2024/1396617
-
புளொட் – ஸ்ரீ ரெலோ முக்கியஸ்தர்கள் ஜனாதிபதி ரணிலுடன் விசேட சந்திப்பு!
புளொட் – ஸ்ரீ ரெலோ முக்கியஸ்தர்கள் ஜனாதிபதி ரணிலுடன் விசேட சந்திப்பு! தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமான புளொட் அமைப்பின் முக்கியஸ்தரும் முன்னாள் வவுனியா நகர சபை தலைவராகவும் மாகாண சபை உறுப்பினராகவும் இருந்த ஜி.ரி.லிங்கநாதன் இன்று ஸ்ரீ டெலோ அணியினருடன் இணைந்து ஜனாதிபதியைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் ஸ்ரீ டெலோ கட்சியின் செயலாளர் நாயகம் உதயராசா உட்பட முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் புளொட் முக்கியஸ்தருமான ஜி. ரி. லிங்கநாதன் உள்ளிட்ட பல முன்னாள் உள்ளூராட்சி உறுப்பினர்களும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர். https://athavannews.com/2024/1396668
-
மன்னாரில் இளம் தாய் மரணமடைந்த விவகாரம்: வைத்தியர் பணி இடை நீக்கம்!
மன்னாரில் இளம் தாய் மரணமடைந்த விவகாரம்: வைத்தியர் பணி இடை நீக்கம்! மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்தியர்களின் கவனயீனத்தால் சிந்துஜா எனும் இளம்தாய் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக குறித்த வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அண்மையில் குழந்தையைப் பிரசவித்த 27 வயதான மரியராஜ் சிந்துஜா எனும் இளம் தாய், அதிக இரத்தப்போக்கு காரணமாக கடந்த மாதம் 28 ஆம் திகதி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார். அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோது, அங்கிருந்த வைத்தியர்கள் அவருக்குரிய முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்றும் வைத்தியர்களின் இந்த அசமந்த போக்கு காரணமாக அவர் உயிரிழந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய ஏற்கனவே, இரண்டு தாதியர்களுக்கும் இரண்டு குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்களுக்கும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது சம்பவத்துடன் தொடர்புடைய வைத்தியர் ஒருவரும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான கடிதம் மத்திய சுகாதார அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1396667
-
ரணிலுக்கு வாக்களிக்காததே நெருக்கடிக்கு காரணம் – விஜயகலா!
ரணிலுக்கு வாக்களிக்காததே நெருக்கடிக்கு காரணம் – விஜயகலா! 2005ல் ரணிலுக்கு வாக்களிக்காததால் இத்தனை இழப்புக்களையும் சந்தித்தோம் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தெரிவிக்கையில், கொரோனா மற்றும் பொருளாதாரத்தினால் வீழ்ச்சியைடைந்திருந்த இந்த நாட்டை கடந்த இரண்டு வருடங்களில் எவ்வாறு நாட்டை மீட்டார் என்பதை இந்த நாடும் உலகமும் அறிந்த பெருமைக்குரிய நல்ல தலைவராக ரணில் விக்ரமசிங்க உள்ளார். அது மாத்திரமல்ல, ஆசியாவிலேயே சிறந்த தலைவராக ரணில் விக்கிரமசிங்க விளங்குவதாக அமெரிக்க தூதுவர் கூறியிருக்கின்றார். 2005ம் ஆண்டு வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் இன்றைய ஜனாதிபதிக்கு வாக்களிக்க முடியாத சூழல் ஏற்பட்டிருந்தது. அன்று மக்கள் வாக்களித்திருந்தால் இன்று எமது மக்கள் இழப்புக்களை சந்தித்திருக்கமாட்டார்கள். யுத்த இழப்புக்கள், உயிரிழப்புக்கள், சொத்திழப்புக்களை தடுத்திருக்கலாம். அந்த பிழையை இனியும் விடாது அனைத்து தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும், மலையக மக்களும், சிங்கள மக்களும் ரணில் விக்ரமசிங்கவிற்கு வாக்களிக்க வேண்டும். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாக்களித்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு யாருக்கும் இருக்கின்றது. அண்மையில் பங்களாதேசில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி காரணமாக அந்த பிரதமரை நாட்டை விட்டே வெளிேயேற்றியிருக்கிறார்கள். அதே போல இந்த நாட்டின் ஜனாதிபதியையும் துரத்தி ரணில் விக்ரமசிங்கவை கொண்டு வந்தார்கள். அவ்வாறான நிலையில் நாட்டை மீட்டுத் தந்த பெருமை ரணில் விக்கிரமசிங்கவையே சாரும்” என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மேலும் தெரிவித்தார். https://athavannews.com/2024/1396652
-
10 மணி நேர ரயில் பயணம் – உக்ரைன் , போலந்து செல்லும் மோடி
10 மணி நேர ரயில் பயணம் – உக்ரைன் , போலந்து செல்லும் மோடி இந்திய பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுப் பயணமாக இன்று காலை டெல்லியில் இருந்து போலந்துக்கு விஜயம் செய்துள்ளார். சுமார் 45 வருடங்களுக்கு முன் இந்திய பிரதமர் மொரார்ஜி தேசாய் போலந்து சென்றிருந்தார். அதன்பின் போலந்து செல்லும் முதல் பிரதமர் மோடி ஆவார். போலந்து பயணத்தை முடித்துக் கொண்டு உக்ரைன செல்ல இருக்கிறார். உக்ரைனுக்கு சுமார் 10 மணி ரெயில் பயணம் மூலமாக போலந்தில் இருந்து செல்லவிருப்பதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அந்நாட்டின் பிரதமர் மற்றும் அதிபரை சந்தித்து பேசும் மோடி, வர்சாவில் இந்திய வம்சாவளியினர் மற்றும் தொழிலதிபர்களை சந்தித்து உரையாடவுள்ளார். போலந்து- இந்தியா தூதரக உறவின் 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் மோடி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பிரதமரின் இந்த பயணத்தின்போது, புவிசார் அரசியல் பிரச்சினைகள், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. https://athavannews.com/2024/1396653 @குமாரசாமி
-
கருத்து படங்கள்
- உயிர்த்த ஞாயிறு தாக்குதல்! மைத்திரியின் அறிவிப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்! மைத்திரியின் அறிவிப்பு. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு செலுத்தப்பட வேண்டியிருந்த 100 மில்லியன் ரூபா நட்டஈடுத் தொகையை அவர் செலுத்தி முடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய அவர் செலுத்த வேண்டியிருந்த எஞ்சிய தொகையான 12 மில்லியன் ரூபாவை அவர் 16.08.2024 அன்று செலுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1396556- உ.பி: மருத்துவமனையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செவிலியர்... மருத்துவர் உட்பட மூவர் கைது!
உண்மை. அண்மைய செய்திகளில் இதனை அதிகம் அவதானிக்க முடிகின்றது. பெரும்பாலானவை சிறிய தந்தை போன்ற நம்பிக்கையான உறவினர்களால் நடத்தப் பட்டுள்ளமை அருவருக்கத்தக்கதும் கொடுமையானதுமான செயல். அதுகும் கூட்டுப் பாலியல் வன்கொடுமையையும் மாதக் கணக்கில் செய்கின்றார்கள். 😡- உ.பி: மருத்துவமனையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செவிலியர்... மருத்துவர் உட்பட மூவர் கைது!
கடந்த பத்து நாட்களில்... மருத்துவத்துறை சம்பந்தப் இடத்தில் நடந்த மூன்றாவது பாலியல் வன்கொடுமை இது. வெளியில் தெரியாமல் எத்தனையோ...- உ.பி: மருத்துவமனையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செவிலியர்... மருத்துவர் உட்பட மூவர் கைது!
பாலியல் வன்புணர்வுக்கு... பெயர் பெற்ற நாடு இந்தியா. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடு இந்தியா.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சிலருக்கு ஆறு விரல் உள்ளது போல, இவருக்கு இரண்டு பொக்கிள். 😂 🤣- சிரிக்கலாம் வாங்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
😂 🤣- கருத்து படங்கள்
- அர்ஜுனன் மகேந்திரனை சட்டத்தின் முன் நிறுத்துவேன்! -அநுர
- வாக்காளர் ஒருவருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகையை! வர்த்தமானி வெளியீடு!
@குமாரசாமி மைண்ட் வாய்ஸ் : 109 ரூபாய்க்கு, ஒரு போத்தில் கள்ளு கூட வாங்க முடியாதே...- வடக்கு, கிழக்கினை இணைப்பதற்கு ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது! -நாமல் ராஜபக்ச.-
வடக்கு, கிழக்கினை இணைப்பதற்கு ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது! -நாமல் ராஜபக்ச.- ”வடக்கு கிழக்கினை இணைப்பதற்கு ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார். பேலியகொட வித்யாலங்கார பிரிவேனாவிற்கு நேற்று விஜயம் மேற்கொண்டு ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளதாவது” ஏனைய அரசியல் கட்சிகளைப் போன்று, தேர்தல் நேரத்தில் ஆதாயம் பெறுவதற்காக நாங்கள் எங்கள் கொள்கைகளை மாற்றுவதில்லை. மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்க முடியாது. வடக்கு கிழக்கையும் இணைக்க முடியாது. அவ்வாறு செய்தால் நாடு பிளவடையும் எனவே இந்த நாட்டை பிரிக்க நான் அனுமதிக்கமாட்டேன். வெளிப்படையாக அதனையே கூறுகிறேன். 2015ம் ஆண்டு நாட்டின் வளர்ச்சி நிறுத்தப்பட்டது. ஆட்சியில் இருந்தது நல்லாட்சி அரசாங்கம். எனவே எங்கு நாட்டில் வளர்ச்சி தடைப்பட்டதோ அங்கிருந்து எனது பயணத்தை ஆரம்பிப்பேன். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வது எமது பொறுப்பு” இவ்வாறு நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1396492- அரச ஊழியர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவு 25 ,000 ரூபாயாக அதிகரிக்கப்படும்!
அரச ஊழியர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவு 25 ,000 ரூபாயாக அதிகரிக்கப்படும்! “எதிர்வரும் ஆண்டு முதல் அரச பணியாளர்களின் மாதாந்த கொடுப்பனவு 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக” நிதிராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார் தேர்தல் பிரசார பணிகள் நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் ஷெஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இந்த நாட்டில் பொருளாதார மீட்சிக்கான பயணத்தின் போது அனைத்து தரப்பினரையும் ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க அழைப்பு விடுத்திருந்தார். அப்போது அவர்கள் முன்னிலையாகவில்லை.ஆனால் ஜனாதிபதி பாதகம் ஏற்படாதவாறு பொருளாதார அபிவிருத்தி நோக்கிய பயணத்திற்கு நாட்டை இட்டுச் சென்றுள்ளார். கடன்மறுசீரமைப்பு நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இன்று அதன்நன்மைகளை மக்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.அரச பணியாளர்களின் சம்பளத்தை அடுத்த ஆண்டு முதல் 25 ஆயிரம் ரூபாவாக கொடுப்பனவை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுதிட்டத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ளது. சிறந்த பொருளாதார முகாமைத்துவம் காரணமாகவே எம்மால் அதனை செய்யமுடிந்தது. அநுரவாலும் சஜித்தாலும் இதனை செய்யமுடியுமா என நான் கேட்கின்றேன். அரச ஊழியர்களின் சம்பளத்தை அவர்களால் இந்த அளவு அதிகரிக்க முடியுமா? வாழ்க்கை செலவினை அதிகரிப்பது எமது நோக்கமல்ல. நாம் மக்களுக்கு போலி வாக்குறுதிகளை வழங்கமாட்டோம். தேர்தலை இலக்காக கொண்டு நாம் அதனை செய்யவில்லை. நடைமுறையில் செயற்படுத்த இயலுமான விடயங்களையே நாம் கூறுவோம்.அடுத்த ஆண்டு வருமான வரி விலக்குவழங்குவதற்கு நாம் எதிர்ப்பார்த்துள்ளோம்.நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தலாகவே எதிர்வரும் தேர்தல் இடம்பெறவுள்ளது. இது தனிநபர் ஒருவரின் வெற்றியை தீர்மானிப்பதல்ல . நாட்டை நெருக்கடிக்கு இட்டுச்செல்லாமல் அபிவிருத்திபாதைக்கு இட்டுச் செல்வதற்கான பயணமாகவே புதிய ஆட்சி அமைய வேண்டும் நெருக்கடியை கண்டு ஓடி ஒழிந்தவர்கள் இன்று ஜனாதிபதியாகும் கனவில் உள்ளனர்” இவ்வாறு ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1396436- வாக்காளர் ஒருவருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகையை! வர்த்தமானி வெளியீடு!
வாக்காளர் ஒருவருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகையை! வர்த்தமானி வெளியீடு! எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக ஒரு வாக்காளர் ஒருவருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகையை குறிப்பிடும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு வாக்காளருக்கு அதிகபட்சமாக 109 ரூபாய் செலவழிக்க முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் நிர்ணயித்த தொகையை விட அதிகமாக செலவு செய்வது சட்டவிரோத செயல் என்றும் இதன் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1396461- நான் சிலிண்டரைத் தெரிவு செய்தமைக்கு காரணம் இதுதான்!
நான் சிலிண்டரைத் தெரிவு செய்தமைக்கு காரணம் இதுதான்! ”Ask Ranil” நிகழ்ச்சியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சமூக வலைத்தளங்கள் ஊடாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஜனாதிபதி பதில் வழங்கியிருந்தார். அந்தவகையில் ” இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு சிலிண்டர் சின்னத்தை தெரிவு செய்துள்ளீர்கள் ‘யானை’ இல்லாமல் ‘சிலிண்டர்’ தெரிவு செய்யப்பட்டதன் காரணம் என்ன?” என ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அதற்கு பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க ”இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட தீர்மானித்தேன். கட்சி சாராமல் செயற்பட வேண்டும் என்ற வலுவான கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. அதற்கேற்ப அரசியல் ரீதியாக புதிதாக சிந்திக்க வேண்டும். பல குழுக்களுடன் இணைந்து செயற்பட்டதால் இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட தீர்மானித்தேன். சுயேட்சை வேட்பாளர் எந்த சின்னத்தையும் தேர்வு செய்யலாம். இந்த தருணத்தில் சிலிண்டர் சின்னமே மிகப் பொருத்தமானதாகும். அதனால் தான் சிலிண்டரைத் தெரிவு செய்தேன்” இவ்வாறு தெரிவித்திருந்தார். https://athavannews.com/2024/1396471 - உயிர்த்த ஞாயிறு தாக்குதல்! மைத்திரியின் அறிவிப்பு
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.