Everything posted by தமிழ் சிறி
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இணையத்திலை... பொண்ணு பார்க்கிறது தப்பில்லை. அதுக்கு முன்னாடி... 😂
-
பாஞ்ச் தம்பதியினருக்கு இனிய 53´வது திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.
ரெலிபோனுக்கு பக்கத்திலைதான்... இருக்கிறன். 🤣 இந்த நிமிடம் வரை அழைப்பு வரவில்லை. 😂
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நம்மளைப் போல்... அரைகுறையாக இருந்திட்டால் எப்பவும் பாதுகாப்புதான். 😂 🤣
-
நன்றி கெட்ட உலகமிது 😡
பெரும்பாலான ஜேர்மனியர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் அதிக விருப்பு உடையவர்கள். அவர்களிடம் இந்த சிரிய, ஆப்கானிய முஸ்லீம் குரங்குகள்... தகாத முறையில் நடப்பது மிகவும் கண்டிக்கப் பட வேண்டிய விடயம். துருக்கியர் கூட... இதனை கண்டிக்காதது அவர்கள் இதனை ஆதரிக்கின்றார்கள் என்றே கருத வேண்டி உள்ளது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஊருக்கு உபதேசம் சொல்லும் பல்லி, கூழ் பானைக்குள்ளை விழுந்த கதையாய் கிடக்கு. 😂
-
"திருமதி ஜெயக்குமாரி தில்லைவிநாயகலிங்கம் / MRS JEYAKUMARY THILLAIVINAYAGALINGAM [17 ஆவதுநினைவு நாள்: 08/06/2024]"
17 ஆவது நினைவு நாள் வணக்கம். 🙏
-
பாஞ்ச் தம்பதியினருக்கு இனிய 53´வது திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.
இன்று 53´வது திருமணநாள் காணும் திரு, திருமதி பாஞ்ச் தம்பதியினருக்கு, உளம் கனிந்த இனிய திருமணநாள் வாழ்த்துக்கள். இருவரும் நீண்ட ஆயுளுடனும், தேக ஆரோக்கியத்துடனும் பல்லாண்டு, பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றோம். 🙏
-
கருத்து படங்கள்
- இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
- யாழில் தமிழ் மக்கள் பொதுச்சபையின் அங்குரார்ப்பண நிகழ்வு!
யாழில் தமிழ் மக்கள் பொதுச்சபையின் அங்குரார்ப்பண நிகழ்வு! குடிமக்கள் சமூகக் கூட்டிணைவின் இரண்டாவது பொதுச்சபைக் கூட்டம் நேற்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதன்போது ”இதுவரை காலமும் வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்களின் கூட்டிணைவு என்று அழைக்கப்பட்ட தமிழ் குடிமக்கள் சமூகத்தின் கட்டமைப்பை இனிமேல், “தமிழ் மக்கள் பொதுச்சபை” என அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் ”ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ்ப் பொதுவேட்பாளர் விடயத்தில் அரசியல் கட்சிகள் தங்கள் முடிவுகளை உத்தியோகபூர்வமாக அறிவித்து முடித்தவுடன் பரஸ்பர புரிந்துணர்வு அடிப்படையில் ஒரு பொதுக்கட்டமைப்பை உருவாக்கி செயற்படுவது குறித்தும் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது. மேலும், ஒவ்வொரு மாதத்தின் இறுதி சனிக்கிழமைகளிலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழ் மக்கள் பொதுச்சபை கூடி தேவையான முடிவுகளை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1386322- யாழில். பொது வேட்பாளர் தொடர்பில் கருத்து பரிமாற்ற நிகழ்வு – சிவில் சமூகம் புறக்கணிப்பு!
பொது வேட்பாளர் குறித்த முக்கிய கலந்துரையாடல்! ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் இன்று சிவில் சமூகத்தினர் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் காலை 11 மணியளவில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரியக்க ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள், இணை ஒருங்கிணைப்பாளர் சீலன், அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம், பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். https://athavannews.com/2024/1386392- போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலத்தில் விண்ணுக்கு பயணமானார் சுனிதா வில்லியம்ஸ்!
போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலத்தில் விண்ணுக்கு பயணமானார் சுனிதா வில்லியம்ஸ்! இந்திய வம்சாவளியான அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் 3 ஆவது முறையாக, உயர் ரக விண்கலமான “ஸ்டார்லைனரில்” விண்வெளிக்கு பயணம் செய்துள்ளார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து, போயிங் நிறுவனத்தின், ‘ஸ்டார்லைனர்’ என்று பெயரிடப்பட்டுள்ள ரொக்கெட் நேற்று (05) வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. ‘அட்லஸ் 5’ விண்கலம் மூலம் விண்ணில் ஏவப்பட்ட போயிங் ஸ்டார்லைனர் விண்கலம், இன்றிரவு (ஜூன் 6) இரவு 9.45 மணி அளவில் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடையும் என நாசா தெரிவித்துள்ளது. இதில், 58 வயதுடைய இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ், மற்றும் நாசாவின் மூத்த விண்வெளி வீரரான 61 வயதுடைய புட்ச் வில்மோர் பயணித்துள்ளனர். போயிங் நிறுவனத்தின், போயிங் ஸ்டார்லைனர் விண்கலம், ஆட்களை சுமந்து செல்லும் முதல் விண்வெளி பயணம் இதுவாகும். அதன்படி, போயிங் நிறுவனத்தால் ஏவப்பட்ட புதிய ஸ்டார்லைனர் விண்கலத்தில் பயணம் செய்யும், முதல் விண்வெளி வீரர்கள் என்ற சாதனையை இவர்கள் படைத்துள்ளனர். இவர்கள், 25 மணி நேர பயணத்திற்குப் பின்னர் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் ஒரு வாரம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி, ஆய்வு மேற்கொண்டு எதிர்வரும் ஜூலை 14 ஆம் திகதி மீண்டும் பூமிக்கு திரும்புகிறார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2024/1386395- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
இந்திய தேர்தல் ஆணையத்தில் எமக்கு நம்பிக்கை இல்லை கண்டியளோ. 😂 வீரப் பையன் சொன்னால் சரியாக இருக்கும். நன்றி பையா.... 👍🙂- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஒரே இடத்தில் இருந்தால்…. இடம் பிடிபட்டு, ஒளிக்க வசதியாய் போய்விடும் என்று போட்டி நடத்துபவர்களுக்கு தெரிந்து இருக்கு. சில காலத்துக்கு முன் அமெரிக்கா பாவித்த சிறிய போர்க் கப்பல் ஒன்றை ஶ்ரீலங்காவுக்கு அன்பளிப்பாக கொடுத்தது. அந்தக் கப்பலை அமெரிக்காவில் இருந்து ஶ்ரீலங்காவுக்கு கொண்டு வர அங்கிருந்து 32 கப்பல் படையினர் போனவர்கள். அதில் அரைவாசிக்கு மேல் அமெரிக்காவில் காணாமல் போய் விட்டார்கள். 😂🤣- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
விளையாட்டுப் போட்டி முடிவதற்குள்… ஶ்ரீலங்கா வீரர்கள் ஊருக்கு திரும்பிப் போகாமல் அமெரிக்காவில் தங்க ஒளித்து திரிவார்கள். பார்த்துக் கொள்ளுங்கோ….- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இல்லயெண்டால்.... கப் ஸ்ரீலங்காவுக்குத்தான். 🤣- யாழ்ப்பாணத்தில் 2001ம் ஆண்டு பேரணியில் இடம்பெற்ற வன்முறை தொடர்பில் லண்டனில் ஒருவர் கைது
இலங்கை போர் தொடர்பாக பிரித்தானியா விடுத்துள்ள வேண்டுகோள்! இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது, இடம்பெற்ற போர் குற்ற சம்பவங்கள் குறித்து இதுவரை தெரிவிக்கப்படாத தகவல்களை கொண்டிருப்பவர்கள், பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு பிரித்தானிய பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையில் 2000ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் உள்நாட்டுப் போருடன் தொடர்புடைய போர்க்குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் பிரித்தானிய பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினர், தங்கள் விசாரணைக்கு உதவக்கூடிய தகவல்களைக் கொண்டவர்கள் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். நடைபெற்று வரும் பயங்கரவாத எதிர்ப்பு விசாரணையின் ஒரு பகுதியாக பிரித்தானியாவை தளமாகக் கொண்ட இரண்டாவது நபர் கைது செய்யப்பட்டதையடுத்து, இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கொமாண்டர் டொமினிக் மர்பி (Commander Dominic Murphy) தெரிவித்துள்ளார். தமது விசாரணையின் ஒரு பகுதியாக தற்போது இரண்டு பேரை கைது செய்துள்ளதாகவும், இந்த மிகக் கடுமையான குற்றங்களை விசாரிக்கும் அதிகாரிகளின் முன்னேற்ற செயற்பாடுகளின் அடையாளமாக இது கருதப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, தகவலை வழங்க போர் குற்றங்கள் குழுவின் மின்னஞ்சல் முகவரியான SO15Mailbox.WarCrimesTeam@met.police.uk. அனுப்பி வைக்க முடியும் எனவும் அல்லது +44 (0)800 789 321 என்ற இலக்கங்களின் மூலம் பொலிஸாரை தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்ததாக சந்தேகத்தின் பேரில் 2023ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் திகதியன்று தெற்கு லண்டனில் உள்ள முகவரியில் 60 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். https://athavannews.com/2024/1386255- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
- பொன் சிவகுமாரனின் 50வது நினைவேந்தல்
ஆழ்ந்த நினைவஞ்சலிகள். 🙏- இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
கூட்டணி ஆட்சியில் தங்கியுள்ள பாஜக – நிபந்தனை இந்திய மக்களை தோ்தலின் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான கூட்டணி மூன்றாவது முறையாகவும் ஆட்சியமைக்கவுள்ளது. எனினும், இந்த தேர்தலில் பா.ஜ.க விற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பா.ஜ.க ஆட்சியமைப்பதில் கூட்டணிகளின் ஆதரவையே தங்கியிருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், பா.ஜ.க விற்கு கூட்டணி கட்சிகள் சில நிபந்தனைகளை விதித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி, மத்தியில் 3 ஆவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், ஆந்திர மாநிலத்தின் சந்திரபாபு நாயுடுவின் சரத்பவார் தெலுங்குதேசம் மற்றும் பீகார் மாநிலத்தின் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கூட்டணி கட்சிகள் நிபந்தனைகள் விதிப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறிப்பாக இந்த இரு மாநிலங்களும் சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வரும் நிலையில், இந்த கோரிக்கையை, தற்போது ஆட்சிக்கு ஆதரவு தெரிவிக்க நிபந்தனைகளாக விதித்து வருவதாக கூறப்படுகிறது. தெலுங்கானாவில் 16 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 12 தொகுதிகளிலும் வென்றுள்ளது. இதனை தொடர்ந்தே இவர்களின் ஆதரவுடன் மத்தியில் 3 ஆவது முறையாக பாஜக ஆட்சி அமைக்க முனைப்பு காட்டி வருகிறது. https://athavannews.com/2024/1386184- கருத்து படங்கள்
- இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
மக்களவைத் தேர்தல் : கூட்டணியின் தயவில் ஆட்சியமைக்கும் மோடி! மக்களவைத் தேர்தலில் இம்முறை தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) கட்சிகளுடன் கைகோா்த்து, மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலை பா.ஜ.கவுக்கு ஏற்பட்டுள்ளது. எனினும், அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று (240) தனிப்பெரும் கட்சி என்ற நிலையை பா.ஜ.க பெற்றிருக்கின்றது. இதேவேளை எதிர்க்கட்சிகளின் ”இந்தியா கூட்டணி” கடந்த தேர்தலைவிட அதிக இடங்களில் வெற்றிபெற்று, முன்னேற்றப் பாதையில் பயணித்திருக்கின்றது. இந்தியாவிலேயே அதிபட்சமாக 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த முறை 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற அகிலேஷ் யாதவின் சமாஜவாதி கட்சி, இந்த முறை 37 தொகுதிகளில் வென்றுள்ளார். ஆனால், கடந்த முறை 62 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, இந்த முறை 33 இடங்களில் மட்டுமே வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி, முதல் 3 சுற்று வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவைச் சந்தித்து பின்னர் அடுத்தடுத்த சுற்றுகளில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவரை விட 1.52 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றி பெற்றார். மறுபக்கம், அமேதி தொகுதியில் கடந்த முறை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை தோற்கடித்த பா.ஜ.க வேட்பாளரும் மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இரானி, இந்த முறை காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் சர்மாவிடம் தோல்வியைச் சந்தித்துள்ளார். ரேபரேலியில் ராகுல் காந்தி, லக்னௌவில் ராஜ்நாத் சிங் மற்றும் கன்னௌஜில் அகிலேஷ் யாதவின் வெற்றி உறுதியாகியுள்ளதுடன், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றிருக்கின்றார். இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த முறை 18 இடங்களில் வெற்றி பெற்ற பாஜகவுக்கு, இம்முறை 12 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கின்றது. மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 29 தொகுதிகளிலும், குஜராத்தில் மொத்தமுள்ள 26-இல் 25 தொகுதிகளிலும் பாஜக வென்றுள்ளதுடன், பிகாரில் பாஜக 12 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சியான மாநில முதல்வர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களில் வெற்றி பெற்றிருக்கின்றது. மேலும், ராஜஸ்தானில் கடந்த முறை 25 இடங்களிலும் வெற்றி பெற்ற பா.ஜ.க, இந்த முறை 14 இடங்களிலும், ஹரியாணாவில் கடந்த முறை மொத்தமுள்ள 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற பாஜக, இம்முறை 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கின்றது. இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் பா.ஜ.க 9 இடங்களிலும், கூட்டணிக் கட்சியான சிவசேனை 7 இடங்களை கைப்பற்றியுள்ளதுடன், காங்கிரஸ் 13 இடங்களிலும், சிவசேனை (உத்தவ் தாக்கரே பிரிவு) 9 இடங்களிலும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 8 இடங்களிலும் வெற்றி உறுதி செய்துள்ளதால் பா.ஜ.கவுக்கு அங்கும் பின்னடைவு ஏற்பட்டிருக்கின்றது. எனினும், ஒடிஸாவில் மொத்தமுள்ள 21 தொகுதிகளில் 20-ல் பா.ஜ.க சிறப்பான வெற்றி பெற்றுள்ளதுடன், காங்கிரஸ் ஒரு தொகுதியை மாத்திரம் கைப்பற்றியுள்ளது. கர்நாடகத்தில் கடந்த முறை 25 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜ.க இம்முறை 17 தொகுதிகளிலும், கடந்த முறை ஓரிடத்தில் மட்டுமே வெற்றி பெற்ற ஆளும் காங்கிரஸ், இம்முறை 9 இடங்களிலும் வெற்றியைப் பெற்றிருக்கின்றது. கேரளத்தில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபியின் வெற்றிபெற்றுள்ளதுடன், காங்கிரஸ் கூட்டணி 18 தொகுதிகளிலும், ஆளும் மார்க்சிஸ்ட் ஓரிடத்திலும் வெற்றி பெற்றிருக்கின்றன. மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ஆம் திகதி தொடங்கி ஜூன் 1-ஆம் திகதி வரை 7 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணும் பணிகள் நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டிருந்தன. முதலில் தபால் வாக்குகளும், பின்னர் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டன. தொடக்கத்தில் பா.ஜ.க கூட்டணி முன்னிலை வகித்து வந்த நிலையில், பின்னர், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் பா.ஜ.க கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டிருந்தது. மொத்தம் 543 தொகுதிகள் உள்ள நிலையில், ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 272 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில், பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளிலும், அதன் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) 292 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கின்றது. எனினும், கடந்த தேர்தலில் பாஜக 303 இடங்களிலும், அதன் தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியுடன் இணைந்து 350 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை 300 இடங்களைக்கூட பெற முடியவில்லை. https://athavannews.com/2024/1386139- இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
நாம் தமிழர் கட்சி... புதிய சின்னத்தில், குறுகிய காலத்தில்போட்டியிட்டே... 8சத வீதத்தை வாக்கைப் பெற்று அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக வந்திருக்கின்றார்கள் என்றால் பழைய சின்னத்தில் போட்டியிட்டு இருந்தால்... தமிழகத்தின் இரண்டாவது, மூன்றாவது கட்சியாக வந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அமைதியாக ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது என்பதே உண்மை.- பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை!
பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை! உயர்கல்வி பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை தவிர்க்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பல மாணவர்கள் தங்கள் பரீட்சை முடிவுகளை முகநூலில் பதிவிடுவதைப் பார்க்கிறோம். அதை செய்யக்கூடாது. அந்த பரீட்சை எண்ணில் இருந்து வேறு ஒருவரின் விண்ணப்பம் அல்லது தேசிய அடையாள அட்டையின் எண் யாருக்காவது தெரிந்தால், அந்த விண்ணப்பத்தை நிரப்பினால், மீள்பாிசீலணை செய்யும் மாணவருக்கு அதை மீண்டும் நிரப்ப இரண்டாவது வாய்ப்பு கிடைக்காது. அது நடந்தால், நீண்ட காலத்திற்குப் பிறகு, முழு கணினி செயல்முறையையும் மாற்றிய பின்னரே சட்டப்பூர்வ உரிமையாளரால் இந்த அணுகலைப் பெற முடியும். அப்படி நடந்தால், அந்த மாணவர்களை ஆணைக்குழு பார்த்துக்கொள்ளும். ஆனால் தயவு செய்து உங்களது பரீட்சை எண்ணை து சமூக ஊடகங்களில் வெளியிடுவதைத் தவிர்க்கவும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். https://athavannews.com/2024/1385960- இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
நடிகை ரோஜாவும் பின்னடைவு என்று செய்தி வந்தது. வென்று விட்டாரா, தோற்று விட்டாரா என்று தெரியவில்லை. அவரைப் பற்றிய தகவல்கள் கிடைத்தால்.. படத்துடன் பகிரவும். 😂 🤣 - இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.